privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஅமெரிக்காவை மண்டியிட வைத்த வெனிசுலாவின் வீரப்புதல்வன்!

அமெரிக்காவை மண்டியிட வைத்த வெனிசுலாவின் வீரப்புதல்வன்!

-

ஹியுகோ சாவேஸ்

ஹியுகோ சாவேஸ் 1954-2013: அமெரிக்காவை மண்டியிட வைத்த வெனிசுலாவின் வீரப்புதல்வன்!

வெனிசுலாவின் அதிபர் ஹியுகோ சாவேஸ் மார்ச் 5-ஆம் தேதியன்று மறைந்தார். அவருக்கு வயது 58. “யோ ஸா சாவேஸ்” (நானே சாவேஸ்) என்று கண்களில் நீர் வழிய முழங்கியபடியே இருபது இலட்சம் மக்கள் தங்களுடைய தேசத்தின் வீரப்புதல்வனது உடலை ஏந்திச் சென்றனர். “வாழ்வதும் மரிப்பதும் வேறுவேறல்ல. வாழ்தலின் மரித்தல் சிறந்ததாகவும் இருக்கலாம் – வாழும் காலத்தில் செயவேண்டியதை ஒருவன் செய்திருந்தால்” என்று கூறினான் கியூபாவின் மறைந்த விடுதலைப் போராளியும் கவிஞனுமான ஜோஸ் மார்ட்டி. செய்ய வேண்டியதைச் செய்தவர்தான் சாவேஸ் என்ற போதிலும், அரியதொரு தலைவனைத் திடீரென்று இழந்த அதிர்ச்சியில் தவிக்கின்றனர் வெனிசுலா மக்கள்.

“அவர் மீது புற்றுநோய் ஏவப்பட்டிருக்கிறது என்றும், அந்தச் சதியை விரைவில் கண்டுபிடிப்போம்” என்றும் கூறியிருக்கிறார் கூறுகிறார், சாவேஸிற்குப் பின் பொறுப்பேற்றிருக்கும் நிக்கோலஸ் மாதுரோ. “விரைவிலேயே இந்த மர்மம் வெளியே வரும்” என்கிறார் பொலிவிய அதிபர் இவா மொரேல்ஸ். தென் அமெரிக்க கண்டத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்த்து நிற்கும் தலைவர்கள் 6பேர் அடுத்தடுத்து புற்றுநோய்க்கு ஆட்பட்டிருக்கின்றனர். உணவு, பரிசுப் பொருட்கள், உள்ளாடைகள் போன்றவற்றை இரகசியமாக கதிரியக்கத்துக்கு ஆளாக்குவதன் மூலம், தமது அரசியல் எதிரிகளைக் கொலை செய்வதாக சி.ஐ.ஏ – வைப் பலரும் குற்றம் சாட்டுகின்றனர். பிடல் காஸ்டிரோவைக் கொல்வதற்குப் பல வழிகளில் முயன்று தோற்ற இழிபுகழ் பெற்றதுதான் சி.ஐ.ஏ. என்பதால் இந்தக் குற்றச்சாட்டு அலட்சியப்படுத்தக் கூடியது அல்ல.

சாவேஸின் மீது கொலைவெறி கொள்வதற்கான எல்லா முகாந்திரங்களும் அமெரிக்காவுக்கு இருந்தன. அமெரிக்க மேலாதிக்க எதிர்ப்பின் வலிமையான குறியீடாக சாவேஸ் இருந்தார். 2001-இல் இராக்கிற்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதித்து, சதாமுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று உலக நாடுகள் அனைத்தையும் அமெரிக்கா மிரட்டி வைத்திருந்தபோது, சாவேஸ் இராக் சென்றார். புஷ் கண்டனம் தெரிவித்தபோது, “வெனிசுலா இறையாண்மை கொண்ட ஒரு நாடு என்பதை புஷ்ஷுக்கு நினைவுபடுத்துகிறேன்” என்று அலட்சியமாக பதிலளித்தார். ஆப்கான், இராக் ஆக்கிரமிப்புகளை வெளிப்படையாக எதிர்த்துக் குரல் கொடுத்தார். 2008-இல் காசாவின் மீது இசுரேல் படையெடுத்த மறுகணமே, தூதரக உறவைத் துண்டித்துக் கொண்டார்.

சாவேஸ் இறப்பு துயரம்
தமது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய அதிபர் ஹியுகோ சாவேஸின் மரணச் செய்தியைக் கேள்வியுற்றுக் கதறியழும் வெனிசுலா மக்கள்.

2006-ஆம் ஆண்டு ஐ.நா.-வில் உரையாற்றிய சாவேஸ், “நேற்று சாத்தான் இங்கே வந்திருந்தது. இதே இடத்தில், இதோ நான் நிற்கிறேனே இதே இடத்தில் நின்றிருந்தது. கந்தக நெடிகூட இன்னும் போகவில்லை” என்று ஐ.நா.-வில் முந்தைய நாள் உரையாற்றிச் சென்றிருந்த போர்வெறியன் ஜார்ஜ் புஷ்ஷை எள்ளி நகையாடினார். அது அவை நாகரிகத்தில் பொருந்திய ராஜதந்திர மொழியன்று. ஆனால், அமெரிக்காவின் நடத்தைக்குப் பொருந்திய மொழி. ஆகவேதான் சங்கடத்தில் நெளிந்தாலும் அவையோரால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

1954-இல் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்து பிழைப்புக்காக இராணுவத்தில் சேர்ந்தவர் சாவேஸ். இராணுவத்தில் சேர்ந்தவுடன், செங்கொடி இயக்கம் என்றழைக்கப்பட்ட மாவோயிஸ்டு கொரில்லாக்களை ஒடுக்குவதற்கான படைப்பிரிவுக்குத்தான் அனுப்பப்பட்டார். ஏழைகளுக்காகப் போரிட்ட மாவோயிஸ்டுகள் மீது அரசு ஏவிய சித்திரவதைகளும் படுகொலைகளும் அவரைச் சிந்திக்கத் தூண்டின. 1989-இல் சர்வதேச நாணய நிதியத்தின் ஆணைக்கேற்ப வெனிசுலாவில் அதிரடியாக அமல்படுத்தப்பட்ட மானியவெட்டுகள் மற்றும் தனியார்மய நடவடிக்கைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மக்கள் போராட்டம் ஒடுக்கப்பட்டு, நாடு முழுவதும் 3000 பேர் கொல்லப்பட்டனர்.

சாவேஸ்

1973-இல் சிலியில் நிகழ்ந்த ஆட்சிக்கவிழ்ப்பு, அலண்டே கொலை, இலத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்திலும் அமெரிக்காவால் திணிக்கப்பட்ட இராணுவ சர்வாதிகார ஆட்சிகள் என்ற பின்புலத்தில் தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும், அமெரிக்க எதிர்ப்பும் சோசலிச நாட்டமும் கொண்ட பலவிதமான ஆயுதக் குழுக்கள் தோன்றியிருந்தன. அத்தகைய குழுவொன்றை இராணுவத்திற்குள் சாவேஸும் உருவாக்கியிருந்தார். 1992-இல் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பை நடத்த முயன்று தோற்றார். “தோழர்களே, துரதிருஷ்டவசமாக எங்கள் இலட்சியத்தில் வெற்றி பெற இயலவில்லை – இப்போதைக்கு” என்று தொலைக்காட்சியில் பேசினார் சாவேஸ். “இப்போதைக்கு” என்ற அந்த ஒரு சொல் மக்கள் நினைவில் பதிந்திருந்தது. சிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்த பின்னர், 1998-ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட சாவேஸ் வெற்றி பெற்றார்.

வெனிசுலாவின் எண்ணெய் வளம் முழுவதையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்காவின் எக்சான் மொபில் உள்ளிட்ட நிறுவனங்கள் தம் இலாபத்தில் ஒரு விழுக்காட்டை மட்டுமே ராயல்டியாக கொடுத்து வந்ததை 13 சதவீதமாக உயர்த்திச் சட்டமியற்றியவுடன், சாவேஸுக்கு எதிரான இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை அமெரிக்கா அரங்கேற்றியது. ஆனால், உலகம் முழுவதும் பல நூறு ஆட்சிக்கவிழ்ப்புகளை நடத்திய அனுபவம் கொண்ட அமெரிக்கா, வெனிசுலாவில் மண்ணைக் கவ்வியது. பல்லாயிரக்கணக்கான மக்கள், குறிப்பாகப் பெண்கள் இராணுவத்தை முற்றுகையிட்டுப் பணிய வைத்தனர். 28 மணி நேரத்தில் ஆட்சிக்கவிழ்ப்பு தோற்றது. சாவேஸ் மீண்டும் பதவியில் அமர்ந்தார். தமக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களில் வேலை நிறுத்தத்தை அமெரிக்க முதலாளிகளே தூண்டிவிட்டனர். பொருளாதாரம் நிலைகுலைந்தது. உள்நாட்டிலேயே மக்களுக்கு எரிபொருள் இல்லை. “முதலாளிகளிடம் பணியாதே சாவேஸ். நாங்கள் தாக்குப்பிடிக்கிறோம்” என்று கூறி அத்தனை துன்பங்களையும் சகித்துக் கொண்டார்கள் மக்கள்.

சாவேஸ் இறுதி ஊர்வலம்
பல இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட சாவேஸின் இறுதி ஊர்வலம்.

நாட்டின் எண்ணெய் வளம் தந்த வருவாயை மக்கள் நலத்துக்குப் பயன்படுத்தி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியதுதான் சாவேஸின் வெற்றிக்கு காரணம். 2005-இலேயே நூறு விழுக்காடு கல்வியறிவு சாதிக்கப்பட்டுவிட்டது. மக்களுக்கு உணவு உத்திரவாதம் செயப்பட்டிருக்கிறது. சுமார் 3 இலட்சம் பேருக்கு நிலம் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான கூட்டுறவுக் கழகங்கள் எல்லாத் துறைகளிலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கியூபாவிலிருந்து சுமார் 25,000 மருத்துவர்கள் பணியிலமர்த்தப்பட்டு மக்களுக்கு தரமான மருத்துவம் இலவசமாக வழங்கப்படுகிறது. முதல் வகுப்பு முதல் பல்கலைக் கழகம் வரையில் கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது. வீடற்றவர்களுக்கு 5 இலட்சம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. வெனிசுலாவில் வீடற்றவர்களே இல்லை என்று கூறும் விதத்தில், அடுத்த 6 ஆண்டுகளில் மேலும் 20 இலட்சம் வீடுகள் கட்டப்படுகின்றன. மற்ற உற்பத்தி சார்ந்த உழைப்புகளைப் போலவே பெண்களின் குடும்ப உழைப்புக்கும் ஊதியம் வழங்கப்படவேண்டும் என்று கூறி, குடும்ப உழைப்பில் ஈடுபடும் பெண்களுக்கு அரசு ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது.

ஏழை, எளிய உழைக்கும் மக்கள் மீது இயல்பிலேயே அவரிடம் ததும்பிய நேசத்தையும், உண்மையான அக்கறையையும் அவரது எதிரிகள்கூட மறுக்க முடிந்ததில்லை. சாவேஸ் மக்களுடன் நேருக்குநேர் உரையாடி, அவர்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் “ஹலோ பிரசிடென்ட்” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி இதற்கு சான்றாக அமைந்தது.

கல்வி, மருத்துவம் போன்றவற்றை மக்களின் அடிப்படை உரிமைகளாக சாவேஸ் மாற்றியதை எதிர்க்கவும் முடியாமல், இத்துறைகளிலிருந்து தனியார் முதலாளிகள் விரட்டப்பட்டதை ஏற்கவும் முடியாமல் தவித்தனர் அமெரிக்க சார்பு முதலாளிகள், “மாதம் 25,000 ரூபாய் (450 டாலர்) தருகிறோம். நீங்கள் விரும்பிய வண்ணம் தரமான சேவையை விலை கொடுத்து வாங்கிக்கொள்ளலாம்” என்று ‘உங்கள் பணம் உங்களை கையில்‘ திட்டத்தைப் போலவே தனியார்மயத்தின் தந்திரத்தை கடைவிரித்துப் பார்த்தனர். மக்கள் மசியவில்லை.

வெனிசுலா மருத்துவத் துறை
இந்தியா உள்ளிட்ட பல்வேறு ஏழை நாடுகளில் மருத்துவமும், பொது சுகாதாரமும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு வரும் வேளையில் சாவேஸ் அச்சேவைகளைத் தேசியமயமாக்கினார். கியூபா நாட்டைச் சேர்ந்த மருத்துவர்களால் பரிசோதிக்கப்படும் வெனிசுலாவின் ஏழைக் குழந்தைகள் (கோப்புப் படம்).

சாவேஸின் திட்டங்கள் வெனிசுலாவின் கஜானாவைக் காலியாக்கிவிடும் என்றும் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் முதலாளித்துவ ஊடகங்கள் கடந்த பத்தாண்டுகளாகக் கூக்குரலிட்டுப் பார்த்தன. வெனிசுலாவின் பொருளாதாரம் கடந்த பத்து ஆண்டுகளில் சராசரியாக 5.8 % வளர்ச்சியைக் கண்டது. மானியவெட்டு, மக்கள் மீது வரிவிதிப்பை அதிகப்படுத்துவது, தனியார்மயம் போன்ற வழிமுறைகள் மூலம்தான் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியும் என்ற சர்வதேச நிதி நிறுவனங்களின் தீர்வை சாவேஸ் பொய்ப்பித்தார். இதன் காரணமாக வெனிசுலாவின் முன்னுதாரணத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற குரல்கள் நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஐரோப்பிய நாடுகளில் எழத்தொடங்கின.

எண்ணெய், மின்சாரம், தொலைபேசி, சிமென்டு உற்பத்தி உள்ளிட்ட கேந்திரத் தொழில்துறைகளை பொதுச்சொத்தாக்குவது, மற்ற தென் அமெரிக்க நாடுகள் மற்றும் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுடனான வணிகத்துக்கு முதன்மை முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் வணிகத்துக்கு அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களைச் சார்ந்திருப்பதிலிருந்து விடுவிப்பது, தென் அமெரிக்காவைத் தனது சுதந்திர வர்த்தக வலையத்துக்குள் கொண்டு வர முயன்ற அமெரிக்காவின் சதியை முறியடித்து, தென் அமெரிக்கக் கண்டத்தின் நாடுகளுக்கான தனி வர்த்தக வலையத்தை உருவாக்கியது, உலக வங்கிக்குப் போட்டியாக தென் அமெரிக்க நாடுகளுக்கான ஒரு பொது வங்கியை உருவாக்கியது, தேசிய எல்லைகளைக் கடந்து தென் அமெரிக்கக் கண்டம் என்ற முறையில் ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு எதிராக நாடுகளை ஒன்றுபடுத்தியது, வணிகம்-இலாபம் என்ற முதலாளித்துவ அளவுகோல்களை நிராகரித்து வெனிசுலாவின் எண்ணெய், எரிவாயுவை கியூபாவுக்கும் பிற தென் அமெரிக்க நாடுகளுக்கும் மலிவு விலையில் வழங்கியது  போன்றவையெல்லாம் மிகவும் குறுகிய காலத்தில் சாவேஸ் நிகழ்த்திய சாதனைகள்.

வெனிசுலா ஆட்சிக் கவிழ்ப்பு
அமெரிக்க ஆதரவுடன் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்து வெனிசுலா மக்கள் கார்கஸ் நகரில் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலம் (இடது); வெனிசுலா இராணுவத்தால் கைது செய்யப்பட்டிருந்த சாவேஸ், மக்களின் போராட்டத்தையடுத்து விடுதலை செய்யப்படுகிறார் (கோப்புப் படம்).

இவையனைத்தும் வெனிசுலாவின் முதலாளித்துவ அரசமைப்புக்கு உட்பட்டு, முதலாளித்துவக் கட்சிகளையும், பெரும் தனியார் முதலாளிகளையும், அவர்களால் அவர்களுக்காக உருவாக்கப்பட்ட அரசு எந்திரத்தையும், 95% அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்களையும் வைத்துக்கொண்டே செயப்பட்ட சீர்திருத்தங்கள். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் இவர்கள் தடைக்கற்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

மென்மேலும் மக்களிடம் செல்வதன் மூலமும், தங்களுடைய கோரிக்கைக்கான போராட்டத்தில் அவர்களையும் ஈடுபடுத்துவதன் மூலமும் சாவேஸ் அவற்றை எதிர்கொண்டிருக்கிறார். முதலாளித்துவத்தைக் கட்டுப்படுத்துகின்ற, அதிகாரவர்க்கத்தின் அதிகாரங்களைக் குறைத்து மக்களின் அதிகாரத்தை அதிகப்படுத்துகின்ற சட்டங்கள், திட்டங்களைக் கொண்டுவரும்போது, அவை குறித்துத் தேசம் தழுவிய வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுப்பது என்ற முறையின் மூலம், எதிரிகளை அரசியல்ரீதியில் பலமிழக்கச் செய்திருக்கிறார்.

தேர்ந்தெடுத்தவர்களைத் திருப்பி அழைக்கும் உரிமை என்பதை வெனிசுலாவின் அரசியல் சட்டத்தில் சாவேஸ்தான் அறிமுகப்படுத்தினார். சாவேஸ் ஒரு சர்வாதிகாரி என்ற அவதூறு பிரச்சாரத்தில் தொடங்கி ஆட்சிக்கவிழ்ப்பு வரையில் அனைத்தையும் முயன்று பார்த்த அமெரிக்க அடிவருடிகள், திருப்பி அழைக்கும் உரிமையையும் பயன்படுத்திப் பார்த்தனர். அதிலும் தோற்றனர்.

மாதுரோ
வெனிசுலாவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சாவேஸின் உற்ற தோழர் நிக்கோலஸ் மாதுரோ.

சாவேஸ் தன்னை ஒரு சோசலிஸ்டு என்றும் கிறித்தவர் என்றுமே சொல்லிக் கொண்டார். அவருடைய கட்சி பல்வேறு விதமான குட்டி முதலாளித்துவ, தேசியவாத, சோசலிச சக்திகளின் கூட்டணியாகவே இருந்தது. 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வெனிசுலாவின் விடுதலைப் போராளியான சைமன் டி பொலிவாரையே தனது வழிகாட்டியாக அவர் அறிவித்துக் கொண்டிருந்தார். ஏகாதிபத்திய எதிர்ப்பு, தென் அமெரிக்க ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவை இணைந்த, கம்யூனிசத்தின்பால் பெருமதிப்பு கொண்ட ஒரு கண்ணோட்டம் சாவேஸை வழிநடத்தியது. தான் படைக்க விரும்புவது 21-ஆம் நூற்றாண்டின் சோசலிசம் என்று அவர் கூறிக்கொண்டபோதும், அதனை அவர் விளக்கவுமில்லை. ரசிய – சீன சோசலிசங்களுக்கு எதிராக நிறுத்தவுமில்லை.

“சாவேஸ் ஒரு புரட்சிகரமான தேசியவாதி. அவருடைய ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியத்தின் புரட்சிகரமான தன்மை அவரை சோசலிசத்தை நோக்கித் தள்ளிக்கொண்டே இருந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, தேசிய எல்லை கடந்து தென் அமெரிக்க கண்டத்தை ஒற்றுமைப்படுத்த முயன்ற பொலிவார், ஜோஸ் மார்டி ஆகியோர் விதைத்த மரபு சாவேஸின் பின்புலமாக அமைந்தது” என்று மதிப்பிடுகிறார் அஜாஸ் அகமது.

தனது கொல்லைப்புற சோதனைச்சாலையாக தென் அமெரிக்க நாடுகளைப் பயன்படுத்தி வரும் அமெரிக்கா, 1970-களில் தனது கைப்பாவை ஆட்சிகளைப் பல நாடுகளில் நிறுவியதுடன், 1980-களிலேயே தனியார்மய தாராளமயக் கொள்கைகளை அந்த நாடுகளில் சோதிக்கத் தொடங்கியது. இதன் விளைவாக, 1980-களின் இறுதியில், ஆசிய நாடுகளில் புதிய தாராளவாதக் கொள்கை தீவிரமாக கடைவிரிக்கப்பட்ட காலத்தில், அங்கே “ஏகாதிபத்தியங்களின் கடையை மூடுவதற்கான” மக்கள் கலகங்கள் வெடிக்கத் தொடங்கி விட்டன.

இந்தப் பின்புலம் வலிமையானதொரு கம்யூனிஸ்டு கட்சியை அதிகாரத்துக்குக் கொண்டுவரும் அளவுக்கு மக்களைப் புரட்சிகரமான மாற்றத்துக்கு உள்ளாக்கவில்லை என்ற போதிலும், சாவேஸ் என்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆளுமையைத் தோற்றுவித்திருக்கிறது. “நானே சாவேஸ்” என்ற கதறியபடியே அவரது உடலைப் பின்தொடர்ந்து செல்லும் வெனிசுலாவின் உழைக்கும் மக்கள், சாவேஸ் தங்களைக் காலத்தால் முந்திக் கொண்டுவிட்டதைத் தம் கண்ணீரால் உணர்த்துகிறார்கள்.

அமெரிக்காவில் இருக்கும் வெனிசுலா அரசின் வழக்குரைஞர், சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்கிறார். வெனிசுலாவில் பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்றிருந்த சாவேஸ், நிகழ்ச்சி முடிந்த பின் மேடையேறி, ஒரு சிறுமியிடம்

“நீ அணிந்திருப்பது என்ன உடை கண்ணு?” என்று கேட்க, நான் ஒரு மாஜிக் நிபுணர்” என்று பதிலளித்தாள் அந்தச் சிறுமி.
“அய்யோ, அப்படியானால் என்னை காணாமல் போக வைத்து விடுவாயா?” என்றாராம் சாவேஸ்.
“இல்லை. உங்களைப் போலவே பல பேரை உருவாக்கிக் காட்டுவேன்” என்றாளாம் அந்தச் சிறுமி.

அந்தச் சிறுமி சொன்னதைத்தான் வெனிசுலா மக்கள் எதிரொலிக்கிறார்களோ!

– சூரியன்

___________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2013
___________________________________________________________________________________

  1. “நீ அணிந்திருப்பது என்ன உடை கண்ணு?” என்று கேட்க, நான் ஒரு மாஜிக் நிபுணர்” என்று பதிலளித்தாள் அந்தச் சிறுமி.
    “அய்யோ, அப்படியானால் என்னை காணாமல் போக வைத்து விடுவாயா?” என்றாராம் சாவேஸ்.
    “இல்லை. உங்களைப் போலவே பல பேரை உருவாக்கிக் காட்டுவேன்” என்றாளாம் அந்தச் சிறுமி.

    அந்தச் சிறுமி சொன்னதைத்தான் வெனிசுலா மக்கள் எதிரொலிக்கிறார்களோ!

    he is a real HERO

  2. உலகத் தொழிலாளார்களின் ஒரு தோழன் மறைந்து விட்டான் !!!!

    உலத தொழிலாளர்களின் அனைவருக்கும் அனைத்துமான சமத்துவ உலகில் சூரிய சந்திரர்களாக சாவேஸ் திகழ்வார்.

    ஆதவன்.

  3. இந்தக் கட்டுரையை படிக்கும் போது உருவான ஒரு துளி கண்ணீரையும் என்னுள் எழுந்த உணர்வையும் வெனிசுலா மக்களின் தோழர் சவேஸ்ற்க்கு சமர்பிக்கிறேன்.

  4. இந்த கட்டுரை ஒரு துதிபாடும் செயலைத்தான் காட்டுகிறது. ஒரு ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளன் ட்ரோட்ஸ்கி என்று உங்கள் எழுத்துக்களில் இருக்கின்ற வன்மத்திற்கும் கீழ்கண்ட ட்ரோஸ்கிச தளத்தில் ஷாவேசைப் பற்றிய ஆழமான ஆய்வும் தங்களுக்கு இருக்கும் ஏதோ பற்றாக்குறையைத்தான் காட்டுகிறது. அந்த தளம் இதுதான் http://www.wsws.org/tamil/articles/2013/mar/130312_hugo.shtml இதற்கு பதில் ஏற்கனவே தாங்கள் தீர்மானித்திருக்கின்ற எதிர்ப்பு பதிலைத்தான் வைப்பீர்கள் என்று தெரியும். ஆனால் அந்த தளத்தில் எழுதப்படுகின்றவைகள் ஆங்கில மொழிபெயர்ப்பானாலும் உண்மைகளை எழுதுகிறார்கள் என்றே தெரிகிறது.

  5. //மெரிக்காவை மண்டியிட வைத்த //
    அப்படி என்ன மண்டி இட செய்துவிட்டார்கள் ? பிறருடைய வரிப்பானத்தில் அலல்து அரசாங்க பணத்தில் இலவசம் பெரும் கூட்டம் ஒன்றை உருவாக்கி விட்டு இருக்கிறார். இதைத்தானே திராவிட காட்சிகள் செய்துள்ளன

  6. வெனிசுலாவின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது என்பதை பற்றி ஒரு கட்டுரை எழுதுங்களேன்.
    சாவேஸ் அமல்படுத்திய முட்டாள்தனமான ‘சோசியலிச’ பாணி கொள்கைகளினால் இன்று வெனிசுலா திவாலாகி, உணவு பஞ்சத்தில், 46 சத விலைவாசி உயர்வில் மக்கள் பெரும் துன்பத்தில் வாடுகிறார்கள். இதை பற்றி எனது சமீபத்திய பதிவு :

    http://nellikkani.blogspot.in/2015/03/blog-post.html
    வெனிசுலா என்னும் நரகம்

    • Well said. I only wish to ship “Thenral, Tamil, Sooriyan, Pk (Univerbuddy?),Nandhan” to their utopia Venezuela.

      Sooriyan will be ready to walk to Texas in few months of his stay, But will still claim he did this to meet family and walking is good for environment 🙂

      Tamil will believe in Maduro and will live his life blaming America for the spoil

      Thenral will try to convince Venezuela citizens that their country at that pathetic state is indeed utopia and their life style is far greater than Americans.

      Nandan will show how Singapore badly treats labors in open lorry and will try to convince the Venezuela citizens that they are living in heaven.

      🙂 🙂

      • இராமன், நல்ல கற்பனை வளத்தோடு ஒவ்வொருவரும் வெனிசுலாவைப் பற்றி என்ன சொல்வார்கள் என்று முயற்சி செய்திருக்கிறீர்கள். ஆனால் இங்கு அது பிராதனமல்ல.

        முதலில் உங்களுக்கு முதலாளித்துவம் பற்றியே ஒன்றும் தெரியவில்லை என்பதையும் அது பற்றி புரிந்துகொள்ள யாதொரு முயற்சியும் எடுக்கவில்லை என்பதையும் தாழ்மையுடன் கூறிக்கொள்ள விழைகிறேன்.

        ஏற்கனவே கியுபா போன்ற நாடுகளை சுருட்டு, சரக்கு லாரி என்ற அளவிற்குத்தான் தெரிந்துவைத்திருக்கிறீர்கள். இதை அமெரிக்காவின் செல்போன், கம்பூயுட்டர் அளவிற்கு மட்டுமே ஒப்பிடுகிற உங்கள் மனநிலை லாலிபாப்பிற்காக அழுகும் குழந்தையைப் போன்றதாக இருக்கிறது. பழகு தமிழில் இத்தகையவர்களை ‘சில்லுண்டிகள்’ என அழைப்பர்.

        இதில் அதியமான் அவர்களை நம்பி களத்தில் குதிப்பது பரிதாபகரமான நிலையாகும். இவர் சாவேஸை பற்றி பல அந்தர் பல்டிகளை அடித்திருக்கிறார். இவரது முந்தைய நிலைப்பாடும் தற்போதைய நிலைப்பாடும் முற்றிலும் ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை.

        ‘அதியாமனின் பேச்சு அடுத்த பின்னூட்டம் வந்தால் போச்சு’ என்ற கதைதான் எங்கும் நிலவுகிறது. நெல்லிக்கனியில் வெளிவந்துள்ள வெனிசுலாவும் அத்தகையதுதான்.

        சரி, இப்பொழுது என் தரப்பில் அதியமானும் தாங்களும் எப்படிபட்டவர்கள் என்பதை முன்வைக்கிறேன்.

        தாங்கள் இருவருமே கைக்கூலி நரசிம்மராவின் தரகுமுதலாளித்துவக் கொள்கைகளை ஆதரிப்பவர்கள் என்ற முறையில் முதலாளித்துவத்தின் வரலாற்று காலகட்டத்தையே நிராகரிப்பவர்களாக அதன் மீது காறித்துப்புகிறவர்களாக இருக்கிறீர்கள். உங்கள் கருத்துப்படி இந்தியாவிற்கோ வெனிசுலாவிற்கோ தேசிய முதலாளித்துவம் தேவையில்லை; எங்க முதலீடு வருகிறதோ அங்கு முந்தி விரி என்பதாகத்தான் இருக்கிறது.

        உங்கள் பார்வைப்படி இந்திய விடுதலைப்போராட்டமட்டுமின்றி எந்த விடுதலைப்போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவீர்கள்.

        உங்களது பார்வையை Interpolate செய்தால் வெள்ளைகாரன் இந்தியாவிற்கு எவ்வளவு செய்திருக்கிறான் தெரியுமா? ரோடு போட்டிருக்கிறான்; அணை கட்டியிருக்கிறான்; ஆங்கிலம் கற்றுக்கொடுத்து இருக்கிறான். ஜட்டி போட கற்றுக்கொடுத்திருக்கிறான்; இதையெல்லாம் மறந்துவிட்டு ஆடையற்ற பக்கிரிகள் விடுதலைக்காக போராடுவது சரியா என்று கேட்பதைப் போல் இருக்கிறது.

        வெள்ளைக்காரன் பருத்திக்கு கஷ்டப்பட்டு பம்பாய் மில்லில் முதலீடு போட்டு 600 பேருக்கு வேலை கொடுக்கிற பொழுது விவசாயிகள் தங்களது பருத்திக்காக போராடுவது நியாயமா என்று தரகு வேலை பார்க்கிற தாங்கள் கேட்கிறீர்கள்.

        உங்களது மனவக்கிரமே இதுதான் என்கிற பொழுது ஒரு நாட்டின் தேசிய முதலாளித்துவத்திற்கான அம்சங்கள் குறித்து அதன் அடியோ முடியோ தெரியாத பொழுது இந்தியாவே தங்களது ஆட்டையில் இல்லை என்கிற பொழுது வெனிசுலாவை பற்றி பேசுவதற்கு உங்களுக்கு ஏதேனும் அருகதை இருக்கிறதா?

        தரமுமுதலாளித்துவத்தைத் தூக்கிப்பிடிக்கிறோமே என்பதற்கு என்றைக்காவது வெட்கப்பட்டிருக்கிறீர்களா?

        இதில் மற்றொரு நாட்டு விடுதலைப்போராட்டம் குறித்தோ உழைப்பைச் சுரண்டலுக்கு எதிரான அவர்களின் தன்மானம் குறித்தோ ஏதேனும் புரிந்துகொள்ள இயலுமா?

        இந்தக் கோணத்தில் சிந்தியுங்கள். பிறகு வெனிசுலா என்ன? எந்த நாட்டைப்பற்றி வேண்டுமானாலும் கதைக்கலாம்.

        • தோழர் தென்றல் ,

          தொடர்ந்து இடைவெளி இன்றி வினவில் எழுதுங்கள். வாசகர்களுக்கு மிக்க பயன் அளிக்கும்.[வார்தையில் சிக்கனமும் ,கருத்துகளில் எளிமையும் தேவை என்பதை உணர்ந்து எழுதுங்கள் ]தரகு முதலாளித்துவம் ,தேசிய முதலாளித்துவம் பற்றி எல்லாம் இவர்களிடம் பலமுறை பேசியாயிறு தோழர் தென்றல். வரலாற்று வளர்ச்சி போக்கில் ஒரு நாடு பொருளாதார ரீதியாக முன்னேற தேசிய முதலாளித்துவத்தின் அவசியத்தையும் இவர்களிடம் பலமுறை கூறியாயிற்று தோழர் தென்றல்.ஆனாலும் அப்போது கூட தேசிய முதலாளித்துவத்தை பற்றி விவாதிக்காமல் கள்ள மொவுனம் சாதித்தவர்கள் தான் இந்த இரு தரகு முதலாளித்துவத்தின் அடிவருடிகளான அதியமானும் ,இராமனும். எனவே 1991க்கு பின் வந்த அரசுகள் [இன்றைய மோடி அரசு உட்பட ] எப்படி எல்லாம் தரகு முதலாளிகளுக்கு சாதகமாக அரசியல்,பொருளாதார முடிவுகளை அரசு அதிகாரத்தில் இருந்து எடுத்துள்ளார்கள் என்பதனை விளக்கி நாம் வினவில் தொடராகவோ அல்லது பின்னுட்டமாகவோ எழுதவேண்டிய அதிமுக்கிய தேவை ஏற்பட்டுள்ளது என்பதை நான் உணருகிறேன்.

          //தாங்கள் இருவருமே கைக்கூலி நரசிம்மராவின் தரகுமுதலாளித்துவக் கொள்கைகளை ஆதரிப்பவர்கள் என்ற முறையில் முதலாளித்துவத்தின் வரலாற்று காலகட்டத்தையே நிராகரிப்பவர்களாக அதன் மீது காறித்துப்புகிறவர்களாக இருக்கிறீர்கள். உங்கள் கருத்துப்படி இந்தியாவிற்கோ வெனிசுலாவிற்கோ தேசிய முதலாளித்துவம் தேவையில்லை; எங்க முதலீடு வருகிறதோ அங்கு முந்தி விரி என்பதாகத்தான் இருக்கிறது.//

          • என்னடா இப்பத்தான் தென்றல் வீசுதுன்னு பார்த்தால் பின்னாடியே செந்தில் குமரனும் வாட்டுராறே!

            அய்யா செய்தில் குமரன் அவர்களே, தென்றலுக்கு அட்வைசு சொல்வது இருக்கட்டும். உங்களுக்கு ஆலோசனை சொன்னா கேப்பீங்களா? நீங்கள் எய்தறதும், தென்றல் எழுதறதும் ஒண்ணு இல்லை சார். ரெண்டுக்கும் ஏகப்பட்ட வேறுபாடு இருக்கு. நல்லா படிச்சு பாருங்க! பெறவு தென்றல்கிட்ட அவரு எழுதினதை ஏற்கனவே நீங்க எழுதினதா சொல்றீங்க பாருங்க அங்தான் சிரிப்பு வருது!

          • நண்பர் தமிழ் அவர்களுக்கு,

            இடைவெளியின்றி எழுத முயற்சி செய்கிறேன். வேலைப் பளு என்று சொல்லி தப்பிக்க இயலாது என்பதை அறிவேன். ஏனெனில் “எது வேலை?” என்பதை நாம் ஒவ்வொருவருமே சிந்திப்பதற்கும் விவாதிப்பதற்கும் உரிய கட்டாயமான கேள்வியாகும்.

            சுருக்கமாக எழுதுவதையும் கவனத்தில் கொள்கிறேன். நாம் அதிகமான போராட்டங்களில் நம்மை இணைத்துக்கொள்கிற பொழுது கச்சிதமாகவும் காத்திரமாகவும் எழுதுவதும் மற்றும் வளவள தன்மை நீங்குவதும் இன்னும் சாத்தியமென்று கருதுகிறேன். அந்த வகையில் நாம் புரட்சிகர இயக்கங்கள் நடத்தும் மக்கள் திரள் போராட்டங்கள், வினவு நடத்தும் வாசகர் வட்டங்கள், குழு விவாதங்களில் கலந்து கொள்வது பயனளிக்கும் என்று கருதுகிறேன்.

            மக்கள் விரோதிகளை வீழ்த்துவது தங்களது கடமை என்று குறிப்பிட்டுள்ளது குறித்து மிக்க மகிழ்ச்சி. அதே சமயம் ஒரு பொது விவாதத்தில் தாங்கள் தீவிரமாக பங்கெடுக்கிற பொழுது, உங்கள் மீது விமர்சனம் வந்துவிட்டால் பிரச்சனை திசை திரும்பி விடுகிறது. செந்தில் குமரனை நாங்கள் இப்படித்தான் இழந்தோம்! ஏனெனில் அவர் தன்னைத் தனிநபராகக் கருதிக்கொண்டார். சரவணன் இன்னும் சிலவிசயங்களை தீர்க்கமாகச் செய்தார். ஆனாலும் மாற்றுக்கருத்தாளர்களின் விமர்சனங்களை அதிகம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. தமிழாகிய தாங்கள் இது பற்றிய பரிசீலனை ஏதும் முன்வைக்க விரும்புகிறீர்களா?

            • செந்தில்குமரன் ,சரவணன் ஆகியோர் மீதான விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்வது பொருத்தமாக இருக்காது.அதே நேரத்தில் என்மீது உண்மையான , பொறுப்புணர்வுடன் விமர்சனங்கள் வைக்கப்படும் எனில் அவற்றுக்கு நான் பதில் சொல்வதே பொருத்தமாக இருக்கும். வெற்றிவேல் கூறும் “எடுகட்டை” நையாண்டிகளுக்கு பதில் கூறவேண்டிய அவசியம் சிறிதும் எனக்கு இல்லை அல்லவா ?

        • வேறு வழியின்றி அறிவிலி அதியமானையும், அக்கப் போர் ராமனையும், எட்டுக்கட்டை தமிழையும் படித்து காய்ந்து கிடக்கும் நமக்கு எப்போதாவதுதான் தென்றல் வீசுகிறது!

          ஒவ்வொன்றும் நச் நச் ரகம்!

          //ஏற்கனவே கியுபா போன்ற நாடுகளை சுருட்டு, சரக்கு லாரி என்ற அளவிற்குத்தான் தெரிந்துவைத்திருக்கிறீர்கள். இதை அமெரிக்காவின் செல்போன், கம்பூயுட்டர் அளவிற்கு மட்டுமே ஒப்பிடுகிற உங்கள் மனநிலை லாலிபாப்பிற்காக அழுகும் குழந்தையைப் போன்றதாக இருக்கிறது. பழகு தமிழில் இத்தகையவர்களை ‘சில்லுண்டிகள்’ என அழைப்பர்.//

          //அதியாமனின் பேச்சு அடுத்த பின்னூட்டம் வந்தால் போச்சு//

          //முதலாளித்துவத்தின் வரலாற்று காலகட்டத்தையே நிராகரிப்பவர்களாக அதன் மீது காறித்துப்புகிறவர்களாக இருக்கிறீர்கள். உங்கள் கருத்துப்படி இந்தியாவிற்கோ வெனிசுலாவிற்கோ தேசிய முதலாளித்துவம் தேவையில்லை; எங்க முதலீடு வருகிறதோ அங்கு முந்தி விரி//

        • @தென்றல்

          நீங்கள் ஆராய்ச்சி படிப்பு படித்து கொண்டிருக்கும் மாணவன் . யதார்த்த வாழ்க்கை புரியாமல் உளறுகிறீர்கள் . இதற்கு முன்னரே கற்றது கையளவு கூறி இருந்ததி நினவு படுத்துகிறேன் . ரச்யாகாரனிடமே கம்யூனிசம் வந்தால் சந்தொசபடுவீர்களா என்று கேட்டால் ஐயோ போதும்டா சாமி என்று ஓடிவிடுகிறான் . கற்பனை உலகமும் நிஜ உலகமும் வேறு வேறு .

          நான் ஏற்கனவே கூறியபடி போலந்து ஆர்மீனிய ரஷ்யா உக்ரைன் என்று நான்கு நாட்டு ஆட்களிடம் விரிவாக பேசி இருக்கிறேன் .

          வெனிசூலா காரன் தான் கிடைக்கமாட்டேன் என்கிறான் .
          நீங்கள் வேலை கிடைத்து சக மனிதர்களின் வித்தைகளை பார்த்து புரிந்து கொண்டால்தான் ஏதேனும் நடக்கும் .

          அடுத்து உளவியல் ரீதியாக , அரைகுறையாக புரிந்து கொண்டவர்களுக்கு முற்றும் புரிந்து கொண்டோ என்கிறே அதீத கான்பிடன்சு உண்டு . அதை உங்களிடம் பார்கிறேன் .

          • @இராமன்

            \\ நீங்கள் ஆராய்ச்சி படிப்பு படித்து கொண்டிருக்கும் மாணவன் . யதார்த்த வாழ்க்கை புரியாமல் உளறுகிறீர்கள்\\

            ஆராய்ச்சிப் படிப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களால் மட்டுமல்ல. இந்த உலகம் படித்தவர்களால் இயங்குவதில்லை. படிச்சவனை வெச்சு பத்து சட்டி மண் அள்ளுவதைக் கூட தடுக்கமுடியாதுன்னு நிரூபிச்சவக வெள்ளாறு கிராம மக்கள். அவகளுக்கு புரிஞ்ச யாதர்த்த வாழ்க்கை பட்டப்படிப்பு படிச்சுட்டு கேபின்ல புழுக்க வேல பாக்கிற உங்களைபோல என்னப்போல இருக்கிற ஆட்களுக்கு புரியாதுன்றது நிசம் தான்.

            அதனாலதான் ‘பாட்டாளிகளே சகலவர்க்கங்களுக்கும் தலைமையேற்கும் வர்க்கமுன்னு’ மார்க்சிய ஆசான்கள் சொல்றாங்க! தரகு முதலாளிகள் தூக்கி எறிகிற ரொட்டித் துண்டை கவ்விக்கொள்ளும் உங்களைப்போன்ற வர்க்கங்களுக்கு இதுபுரியுமான்னுதான் தெரியல!

            \\ இதற்கு முன்னரே கற்றது கையளவு கூறி இருந்ததி நினவு படுத்துகிறேன் . ரச்யாகாரனிடமே கம்யூனிசம் வந்தால் சந்தொசபடுவீர்களா என்று கேட்டால் ஐயோ போதும்டா சாமி என்று ஓடிவிடுகிறான் . கற்பனை உலகமும் நிஜ உலகமும் வேறு வேறு .\\

            இந்தியாவிலேயே காந்திய தேசப்பிதான்னு சொல்ற தெள்ளவாரிகள் இருக்கும் பொழுது, ஒரு காலத்துல கோழி சண்டை பாத்துட்டு திரிஞ்ச உங்கள மாதிரி ஆட்கள் கோககோலாவிற்காக மண்டியிடுகிற பொழுது ரசியாவில் கம்யுனிசத்தப் பாத்து போதும்டா சாமின்னு ஓடுறவன் இருக்கக் கூடாதா இராமன்? இதை ஒரு ஆதாரமுன்னு வெட்கமில்லா சொல்றீகளே இராமன்?

            கற்பனை உலகமும் நிஜ உலகமும் வேறு வேறுங்கிறத இப்பவாது புரிஞ்சுக்குங்க இராமன். வெளிநாட்டுக்காரன் உங்கள மாதிரி ஆட்கள் கிட்ட பேட்டி எடுத்தா கோகோ கோலாவினால் வாழ்க்கை செழித்திருக்கிறதுன்னு சொல்வீக! ஆனா நீங்க ஒரு கைக்கூலின்றது தண்ணீருக்காக போராடுகிற மக்களுக்கு தெரியும்! உங்க பேட்டிய காப்பி பேஸ்ட் செய்கிற ஆளும் வர்க்கங்கள் இந்தியாக்காரன் கோக கோலாவைப் புகழ்கிறான்னு போடுவாங்க! இதை நம்பறதுக்கு உங்கள மாதிரி மான ரோசம் இல்லாதவங்க நாங்க கிடையாது. ஆக நாலு நாட்டுக்காரன பாத்தாலும் நாப்பது நாட்டுக்காரனாலும் பாத்தாலும் எங்க தாய் பத்தினின்றது எங்களுக்கு தெரியும்! இதை கேட்டுத் தெரிஞ்சுக்கிற அளவுக்கு நாங்க ஒன்னும் கூட்டிக்கொடுக்குற வாழ்க்கைய வாழலையே! இனியும் எந்த மூஞ்சிய வெச்சுக்கிட்டு கொரியக்காரன் சொன்னான், சீனாக்காரன் சொன்னான்னு சொல்வீக?

            Our Ideology is Our legitimacy இதுக்கு உங்களுக்கு அர்த்தம் தெரியலைன்னாலும் இந்த உணர்விற்கு பெயர் வர்க்க உணர்வுன்னு புரிஞ்சுங்குங்க. அதனால தான் கம்யுனிஸ்ட் கட்சி அறிக்கையில் ‘சர்வதேச பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்’ என்று சொல்கிறார்கள். உங்கள மாதிரி ஆன்சைட் போய்ட்டு பீசா திங்கிற கூட்டத்துக்காக சொல்லப்பட்டது இது கிடையாது!

            \\ நான் ஏற்கனவே கூறியபடி போலந்து ஆர்மீனிய ரஷ்யா உக்ரைன் என்று நான்கு நாட்டு ஆட்களிடம் விரிவாக பேசி இருக்கிறேன் . வெனிசூலா காரன் தான் கிடைக்கமாட்டேன் என்கிறான் .\\

            உலகக் கண்ணோட்டம் என்பது வேறு! உலகத்துல நாலு நாட்டுக்காரன பார்க்கிறேன் என்பது வேறு!

            என்னோட பார்வையிலே உங்களோட உலக அனுபவம் நிழலில் குழிபறிச்சு படுத்துக் கிடக்கிற நாய்கள் காஞ்ச பீ திங்கறதுக்காக காடுமேடு எல்லாம் சுத்திவருவதற்கு சமமான ஒன்று! இதை ஏற்கனவே பெருமாள் முருகனோட எழுத்து வாயிலா கற்றது கையளவு அவர்களிடம் விவாதித்திருக்கிறேன். இப்படி சொல்லும் பொழுது தயவு செய்து உங்களை நாய்கள் அளவிற்கு தரம் தாழ்த்திவிட்டதாக கருதிக்கொள்ளாதீர்கள். ஏனெனில் நாய்களை நான் அசிங்கப்படுத்த விரும்பல!

            தரகு முதலாளித்துவம் கொடுத்திருக்கிற சூட்டில் வாழும் இரண்டு கால் பிழைப்புவாதிகளுக்கு நாலுகால் சீவன்கள் மேலானவை என்பது எனது தாழ்மையான கருத்து.

            \\ நீங்கள் வேலை கிடைத்து சக மனிதர்களின் வித்தைகளை பார்த்து புரிந்து கொண்டால்தான் ஏதேனும் நடக்கும் .\\

            நீங்க எங்கம்மா பார்த்த சித்தாளு வேலையப் பார்த்ததான் ரியல் எஸ்டேட்டுன்னா என்னான்னு தெரியும். விவாசயம் பொய்த்துப்போன இரண்டு லட்சம் விவசாயிகளோட குடும்பத்துல நீங்க பிறந்திருந்தீகன்னா முதலாளித்துவ வித்தை புரியும். இதைவிட கோககோலா தயாரிக்கிற பரவை தொழிற்சாலை கிட்டயோ சூரியூர் தொழிற்சாலை பக்கத்துலயோ வாழ்ந்திருந்தீகன்னா நல்லதண்ணீகாவும் உப்புத்தண்ணிக்காகவும் நாய அலையற கஷ்டம் புரிஞ்சுருக்கும். ஆனா கனடா போற ஆன்சைட் ஆப்பர உங்க குரூப் லீடர் தடுத்துட்டான்ற அளவுக்குத்தான் உங்களுக்கு வாழ்க்கையப் பத்துன கண்ணோட்டமே இருக்கு! You never lived your life so far and you won’t!

            \\ அடுத்து உளவியல் ரீதியாக , அரைகுறையாக புரிந்து கொண்டவர்களுக்கு முற்றும் புரிந்து கொண்டோ என்கிறே அதீத கான்பிடன்சு உண்டு . அதை உங்களிடம் பார்கிறேன் .\\

            இது ஒரு பக்கம் இருக்கட்டும். அடிக்கடி வெளிநாடு போனதையே பெருமையா சொல்லிக்கிறீங்களே! உங்கள் நண்பர்களிடத்தும் காதலியிடத்தும் இந்த அளவுகோல வைச்சுத்தான் பழகுவீங்களா? அப்படி இருந்தா உங்களோட பழக அவங்க எவ்வளவு கஷ்டமா பீல் பண்ணியிருப்பாங்க! இதுல நீங்க உளவியல் பத்தியெல்லாம் பேசுறீங்க!

            • கிணற்று தவளைக்கு கடல் எவ்வளவு பெரியது என்று எப்படி சொல்லி புரிய வைப்பது

            • தென்றல் அவர்களுக்கு,

              மிகவும் உணர்ச்சி பூர்வமாக பேசியிருக்கிறீர்கள். ஆனால் நீங்களே கூறியுள்ள படி ராமன்களுக்கு இந்த உணர்வு புரிவதில்லை. துடைத்து விட்டு போகிறார் பாருங்கள்.

      • திரு.அதியமான் & திரு.ராமன்…..

        தாங்கள் தோழர்.தென்றல் கூறிய கருத்தினை சற்று தீர்க்கமாக சிந்திக்க வேண்டும். ஒரு தேசத்தின் வளர்ச்சியை செல்லரிக்க செய்யும் கொடிய விஷம் போன்றது தான் தரகு முதலாளித்துவம். அதற்க்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டு கோக் குளிர்பான நிறுவனம். இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் தான் அதன் இலக்கு. அப்போது தானே கேட்பார் இன்றி வகை தொகை இல்லாமல் நாட்டை, நாட்டின் இயற்க்கை வளங்களை சுரண்டலாம். எடுத்துக்காட்டாக, அமெரிக்காவை சேர்ந்த கோக் நிறுவனம் சர்வதேச அளவில் அதிகம் லாபம் ஈட்டுவது நம் நாட்டில் தான் என்று ஏதோ ஒரு பத்திரிக்கையில் படித்ததாக நினைவு. நமது நீர் ஆதாரங்களை உறிஞ்சி, நம் மக்கள் தலையிலேயே கட்டி, வரி என்கிற பெயரில் சில எலும்பு துண்டுகளை இந்திய அரசிடம் எரிந்து விட்டு,மொத்த லாபத்தையும் அமெரிக்காவிற்கு சுருட்டி கொண்டு ஓடுவதை வேடிக்கை பார்க்கும் நமக்கு(நான் உட்பட) வெனிசுலாவையோ, சீனத்தையோ, கியூபா தேசத்தையோ குறை கூறும் அருகதை எங்கே இருக்கிறது.

        டெக்னாலஜி சொந்த நாட்டில் இருந்து வளர வேண்டும். இது வரை தொழில்நுட்ப ரீதியாக புதிய கண்டுபிடிப்புகள் (Innovations ) என்ன நடந்திருகிறது இந்தியாவில். ஒன்றுமே இல்லை பூஜ்யம். அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் நம் நாடு படு மோசமான தேக்க நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணமே இந்த நாசக்கார தரகு முதலாளித்துவ கொள்கைகளினால் தான். ஆகவே, பிறந்த நாட்டை திறந்து விட்ட புலிகேசிகளாக இருக்கும் நம் கைக்கூலி அரசியல் வாதிகளையும், அரசியல் அமைப்பையும், அம்பானி,அதானி, டாடா போன்ற வைரஸ் கிருமிகளையும் ஒழித்து கட்டி நாட்டை சுய சார்புள்ள தேசிய முதலாளித்துவ பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.

        அதே நேரத்தில் தேசிய முதாலாளித்துவமாக இருந்தாலும் கணக்கில்லாமல் அனைத்திலும் நுழைய அனுமதிக்க கூடாது. முதாலாளித்துவத்தின் எல்லை என்பது Automobiles , Electronics இந்த இரண்டையும் தாண்டி வேறு எதிலும் போக கூடாது. அபோல்லோ ரெட்டி போன்ற மருத்துவ முதாலாளிகளை எல்லாம் உருவாக்கும் கொடூரத்தை அனுமதிக்க கூடாது.அறிவை வழங்கும் கல்வி, உயிர் காக்கும் மருத்துவம், பொது சுகாதாரம், போக்குவரத்து போன்ற அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். சுருக்கமாக கூறவேண்டுமானால், சேவை துறைகளில் முதலீட்டை எக்காலத்திலும் அனுமதிக்கவே கூடாது. இதற்காக தான் நாம் முதலில் குரல் கொடுக்க வேண்டுமே ஒழிய, எப்போது பார்த்தாலும் கம்யுனிசதிர்க்கு எதிராக பேசி கொண்டிருப்பதால் யாதொரு பயனும் இல்லை என்பதை உணர்ந்து தெளியவும்.

        உலகமயமாக்கல் என்கிற பெயரில் lewis jean பேண்டை அணிந்து , கையில் கோக்குடன் kfc சிக்கனை கொறித்துக் கொண்டு, மோடிப் போன்ற ஒரு கோமாளி தரகனை பிரதமராக வைத்துக் கொண்டு நாம் வெனிசுலாவின் பொருளாதார கொள்கையைப் பற்றியோ, சாவேசை பற்றியோ விமர்சித்து பேசுவது கடைந்தெடுத்த அயோக்கிய தனமாகும்.

        வெனிசுலா, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் ஒரு நாடு என்று இந்த கட்டுரையின் வாயிலாக தெரிந்து கொண்டேன். இதை நாம் பாராட்ட வேண்டும். வறுமை என்பது ஒரு நாட்டின்(அமெரிக்காப் போன்ற) ஏகாதிபத்தியதிற்கு அடி பணிய மறுப்பதால் தான் ஏற்படுகிறது என்றால் அதை நாம் துணிந்து ஏற்கலாம். அந்த வறுமையினால் இழிவொன்றுமில்லை. பண்ணையாரின் காலை நக்கி பட்டுத் துணி அணிந்து கொள்வதை விட, தன்மானத்திற்கு கோவணம் தான் பரிசு என்றால் அதை பெருமையோடு அணிந்துக் கொள்ளலாம்.

        • @Rebecca Mary

          //ரு தேசத்தின் வளர்ச்சியை செல்லரிக்க செய்யும் கொடிய விஷம் போன்றது தான் தரகு முதலாளித்துவம். அதற்க்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டு கோக் குளிர்பான நிறுவனம்//

          ஜப்பான் என்னும் நாடு எப்படி வளந்து இருக்கிறது , உலகமே இன்றைக்கு நவீன மயமாக முதலீட்டு தத்துவம் தான் காரணம் . சிவப்பு சட்டை காரர்கள் பெண் விடுதலை பற்றி பேசினார்கள் வாசிங் மெசின்,டிஷ் வாசற் என்று பல பொருட்கலைஉர்பதி செய்து விடுதலி செய்தது முதலீட்டு தத்துவம் தான் .

          நீங்கள் எந்த ஒரு தொழில் இலும் பங்கு பெறலாம் . முதலீடு செய்யலாம் . ஏதோ ஒரு சிலருக்கு மட்டும் லாபம் போவது இல்லை . பங்கு விதிர்க்கும் யாவருக்கும் லாபம் கிடைக்கும் .

          உங்களுடை வாசகத்தை இணையத்திற்கு பொருத்தி எழுதுகிறேன்
          இணையம் கொடிய விஷம் போன்றது தான். அதற்க்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டு ஆபாச தளங்கள் .

          நன்மை தீமை சீர் தூக்கி பார்த்து பழக வேண்டும்.

          //டுத்துக்காட்டாக, அமெரிக்காவை சேர்ந்த கோக் நிறுவனம் சர்வதேச அளவில் அதிகம் லாபம் ஈட்டுவது நம் நாட்டில் தான் என்று ஏதோ ஒரு பத்திரிக்கையில் படித்ததாக நினைவு. நமது நீர் ஆதாரங்களை உறிஞ்சி, நம் மக்கள் தலையிலேயே கட்டி, வரி என்கிற பெயரில் சில எலும்பு துண்டுகளை இந்திய அரசிடம் எரிந்து விட்டு,மொத்த லாபத்தையும் அமெரிக்காவிற்கு சுருட்டி கொண்டு ஓடுவதை வேடிக்கை பார்க்கும் நமக்கு//

          கோக் குடிக்க வேண்டும் எனபது கட்டாயமா ? தலையில் கட்டிவிட்டார்கள் என்று ஒப்பாரி வைக்கிறீர்கள் ? தண்ணீர் கூட சரிவர கொடுக்க முடியாத அரசாங்கத்தில் கின்லே என்று பெயர் போட்டு நமக்கு தண்ணீர் விற்கிறான் . அரசாங்கம் சரியாக நடந்தால் அவன் எப்படி தொழில் நடத்த முடியும் ? நீர் ஆதாரங்களை கோக் நிறுவனம் அல்ல , நமது ரியல் எஸ்டேட்டு நிறுவனங்கள் தான் அழித்துவிட்டன . அண்ணா காலத்திலேயே அரசாங்கமே ஒரு ஏரியின் நடுவில் கல்லூரி கட்ட ஆரம்பிதிவிட்டனர் . மக்களும் தமது பங்கிற்கு போர் போட்டு உருஞ்சுகிரார்கள் . எல்லோ தவறையும் செய்துவிட்டு உலக மகா உத்தமனகள் போல வெளிநாட்டு கம்பெனிகள் மீது கல்லெறிவார்கள்

          //டெக்னாலஜி சொந்த நாட்டில் இருந்து வளர வேண்டும். இது வரை தொழில்நுட்ப ரீதியாக புதிய கண்டுபிடிப்புகள் (Innovations ) என்ன நடந்திருகிறது இந்தியாவில். ஒன்றுமே இல்லை பூஜ்யம். அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் நம் நாடு படு மோசமான தேக்க நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணமே இந்த நாசக்கார தரகு முதலாளித்துவ கொள்கைகளினால் தான். //
          மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடுசுபோடுவதை நிறுத்துங்கள் . இன்னோவாசன் வராததிற்கு காரணமே சொசியளிசம்தான் . ஒரு கண்டுபிடிப்பாளன்(தாமஸ் ஆல்வா எடிசன் ) முதலீட்டலன் ( ஜெ பீ மார்கன் ) இரண்டையும் இணைத்து புதிய தொழில் உருவாவது முதலீட்டு தத்துவத்தில் மட்டும்தான் சாத்தியம். உங்களுடைய புதிய கண்டுபிடிப்பை பற்றி கேட்க அரசாங்கத்திற்கு நேரமில்லை

          //
          அபோல்லோ ரெட்டி போன்ற மருத்துவ முதாலாளிகளை எல்லாம் உருவாக்கும் கொடூரத்தை அனுமதிக்க கூடாது.அறிவை வழங்கும் கல்வி, உயிர் காக்கும் மருத்துவம், பொது சுகாதாரம், போக்குவரத்து போன்ற அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். சுருக்கமாக கூறவேண்டுமானால், சேவை துறைகளில் முதலீட்டை எக்காலத்திலும் அனுமதிக்கவே கூடாது..//

          நல்லது . உங்களுக்கு தெரிந்து எந்துணை பேர் அரசாங்க மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகிறார்கள் ? நீங்கள் போவீர்களா ? அரசாங்கம் என்பதன் இன்னொரு பொருள் இன் எபீசியன்சி. கன்ஸ்யூமர் சேவை எதையும் உருப்படியாக செய்யமாட்டார்கள் .

          சொசியளிசதின் கொடுமை எனபது காசு இருப்பவனக்கு கூட தேவை படும் சிகிச்சை கிடைக்காது .

          போக்குவரத்து அரசாங்கதைடமிருப்பதால்தான் உருப்படாமல் இருக்கிறது . ஊழல் ஊழல் .
          அத்துணை நஷ்டத்தையும் வரி செலுத்துவோ தலையில் விடிகிறது

          //உலகமயமாக்கல் என்கிற பெயரில் lewis jean பேண்டை அணிந்து , கையில் கோக்குடன் kfc சிக்கனை கொறித்துக் கொண்டு, மோடிப் போன்ற ஒரு கோமாளி தரகனை பிரதமராக வைத்துக் கொண்டு நாம் வெனிசுலாவின் பொருளாதார கொள்கையைப் பற்றியோ, சாவேசை பற்றியோ விமர்சித்து பேசுவது கடைந்தெடுத்த அயோக்கிய தனமாகும்.
          //

          கஷ்டகாலம்ட சாமி , தென்றல் தமிழுக்கு இருக்கும் வியாதி வந்துவிட்டது .யதார்த்த வாழ்கையை புரிந்து கொள்ள இயலாமல் கற்பனை உலகில் வாழ ஆயத்தமாகிவிட்டீர்கள் போல் இருக்கிறது . அந்த உலக மயமாக்கல் வந்ததால் தான் அணைத்து விதமான உணவு பொருட்களையும் சுவைக்க முடிகிறது . அவன் kfc வைத்தால் நீங்கள் சரவணா பவன் காட்டுங்கள் . அவன் என்ன வேண்டாம் என்றா தடுதுவுட்டான் .

          மோடி ஒரு மோசமான பிரதமர் அல்ல . இலவசம் வாங்கி பழகி இருக்கும் நமக்கு புரிவது கஷ்டம் தான் . அவர் இல்லை என்றால் எஸ் அண்ட் பி தரம் தாழ்த்தப்பட்டு பிச்சை எடுத்து கொண்டு இருப்போம்

          //வெனிசுலா, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் ஒரு நாடு என்று இந்த கட்டுரையின் வாயிலாக தெரிந்து கொண்டேன். இதை நாம் பாராட்ட வேண்டும். வறுமை என்பது ஒரு நாட்டின்(அமெரிக்காப் போன்ற) ஏகாதிபத்தியதிற்கு அடி பணிய மறுப்பதால் தான் ஏற்படுகிறது என்றால் அதை நாம் துணிந்து ஏற்கலாம். அந்த வறுமையினால் இழிவொன்றுமில்லை. பண்ணையாரின் காலை நக்கி பட்டுத் துணி அணிந்து கொள்வதை விட, தன்மானத்திற்கு கோவணம் தான் பரிசு என்றால் அதை பெருமையோடு அணிந்துக் கொள்ளலாம்.
          //

          இதைதான் இரண்டாம் வகுப்பு மாணவனுக்கு உள்ள அறிவுடன் சிந்திப்பது எனபது!
          அமேரிக்கா என்ன ஏகாதிபத்தியம் செய்துவிட்டது ? பெட்ரோல் எடுக்கதேரியாத காட்டு மிராண்டிகளின் நாட்டில் பெட்ரோல் கம்பெனி அமைத்தது . அந்த கம்பெனிகளை பிடுங்கி கொண்டார்கள் . அதன் லாபத்தில் இதுநாள் வரையில் முத்து குளித்தார்கள் . இன்றைக்கு பிச்சை எடுக்கிறார்கள் . உலகில் பாதி மக்கள் கால் வயிறும் அரை வயிறும் உண்கிறார்கள் என்றால் அமேரிக்கா தான் காரணம் . அவன் சார்ந்த தொழில் தான் செய்து கொண்டு இருகிறார்கள் .

          • Rebecca Mary,Do not take Raman seriously.He is just faithful to America.Just because,Chavez has nationalized American oil companies,this “Indian”has became desperate.He is `going on giving “curses”like Durvasa.
            He is calling Venezuelans as barbarians not capable of extracting oil.Let him spend some time in reading Venezuela”s oil history.When the oil companies were originally nationalized on 1-1-1976 and the national company PDVSA was born,all Venezuelans who occupied leading positions in those MNCs took over leading positions in the new company.Have you ever heard barbarians given leading positions in MNCs?PDVSA subsequently bought refineries in USA and Europe.How those barbarian officials managed to do that?Chavez conducted OPEC summit in Caracas and coordinated the activities of member countries.In 2005,PDVSA opened its first office in China and announced plans to triple its fleet of oil tankers in that region.This Chavez has done to come out of the clutches of USA.At that time USA accounted for 65% of Venezeuela”s exports.In 2007,Chavez struck a deal with the Brazilian oil company-Petrobras to build an oil refinery in north eastern Brazil,where crude oil will be sent from both Brazil and Argentina.A similar deal was struck with Equador where Venezeuela agreed to refine 100000 barrels of crude oil from Equador at discount prices.Cuba has agreed with Chavez to let thousands of Venezuelans be received medical treatment and health programs,and in return,Venezeuela agreed to sell several thousands of barrels to Cuba at 40% discount under Petrocariba program.Chavez has survived a coup engineered by foreign powers and brought to end the two months old “oil strike”After the failure of the coup also,there was an “indefinite national strike”by some business groups.In this “historic”strike,there was a forced “bosses lock out”where the workers were prevented from working.Chavez was able to overcome that “strike”also.This champion of the poor,during his 14 years rule,tunnelled billions of dollars of Venezuela”s oil wealth into social programs.His problem with PDVSA started with his insisting to earmark 10% of its annual budgets for social spending.The poverty rate in Venezuela was brought down from 62% in 2003 to 25% in 2012,(Chavez”s last full year in power).Many Venezuelans remain deeply committed to Chavismo,despite the economic hardship.On Mar5,thousands of admirers filled the streets of Caracas waiting for hours in a different kind of line to pay respects at Chavez”s tomb on the two year anniversary of his death.Have you heard of any other “barbarian”to achieve so many feats and still command respect?
            “The government of Venezuela has room to survive the economic turbulance”says Mark Weisbrot,Cordinator of the Washington-based Centre for Economic and Policy Research.

            • //Do not take Raman seriously.He is just faithful to America//

              Yes, Take Mr.Sooriyan seriously who has his clan under the safe hands of capitalism and preaching Socialism.

              //Free medical//

              Every one knows how govt “free” works!

              //“The government of Venezuela has room to survive the economic turbulance”says Mark Weisbrot,Cordinator of the Washington-based Centre for Economic and Policy Research.//

              But people will have to go through hell. In 20 years people of Venezuela will be on streets fighting for free speech and capitalism.

              @Rebecaa Mary

              Read two books
              1. Marx for beginners. This is a cartoon book and has social history for 5000 years.
              http://www.amazon.com/Marx-Beginners-Rius/dp/0375714618/ref=sr_1_1?ie=UTF8&qid=1428328024&sr=8-1&keywords=marx+by+rius
              2.Fatal-Conceit-Errors-Socialism. Why societies cannot sustain such an idea
              http://www.amazon.com/Fatal-Conceit-Errors-Socialism-Collected/dp/0226320669/ref=sr_1_2?ie=UTF8&qid=1428328151&sr=8-2&keywords=fatal+conceit

              Dont learn from forum.

              • Free medical insurance either in the name of Kalaignar Kaappeettu Thittam or Mudhalamaichar Kaappeettu Thittam saved thousands of poor people in TN.Let Raman state what wrong happened in these schemes with proof.Simply because he has a cushy and safe job he need not look at these schemes with scorn.But poor families with just 72000/- only as annual income were immensely benefited by these schemes.Even Obama advocates Obamacare in USA.My son got a job purely on his merit in USA and just because he works there,no law` prohibits me from advocating socialism.This opinion itself reveals the silly thinking of Raman.Let him not repeat this mistake of quoting about my son”s job again.Let him answer my comments on their merits.Do not side track.It is childish.My son”s job is not the alms given by USA.
                By the by,he has not proved that Venezuelans are barbarians.Some months back,the same Raman was telling Iranians as barbarians incapable of refining crude oil.When Thippu reeled out statistics showing Iran”s refinery industries,this man ran away.He may be an intelligent guy.But,he should have humanism as his basic quality.and sense of national pride. Some weeks back,when I talked about the technical expertise of our ICF coach factory,he brushed away that information, advising me to visit at least Singapore to know about technological advancement in the developed countries.I have visited Singapore and Thailand in 1998.I do appreciate the technological advancement displayed in these countries.But that does not mean that I should denounce the capabilities of Indian industries.I am quoting the news about ICF again for his knowledge separately.Of course Indian public sector has the evil of corruption and lethargy.But the entire population of Mumbai and Chennai depend greatly on rail and road transport.Even if a rich man contracts H1N1,he can not take treatment in a private hospital in Chennai.Similarly,a person who got involved in a road accident should get treatment only from Govt hospital.At least for that purpose,let Raman stop looking at Govt facilities with scorn and do his best to correct the wrongs there by involving himself in any struggle of the public.

                • //.My son got a job purely on his merit in USA and just because he works there,no law` prohibits me from advocating socialis//

                  Sir, Your son benefited from the economy built by capitalism in America. He did not go to Russia/Venezuela/Bolivia or at-least China…

                  Ask your son if Venezuelan company offers him job because he is so talented, will he take it?
                  He will say “No” in .0001 milliseconds.

                  Truth is sir,Your son sees opportunity to showcase his talent in capitalist environment. He has the same Job protection offered by TCS, but still he will like to work in America.

                  And you sir, after protecting your clan under capitalism , guiding the people in wrong direction.

                  However I will not bring this family matter to discussion again.I apologize..

                  //ICF? //
                  They should have moved us to bullet train. Selling to some poor countries and claiming we are making stuff doesnt count

                  Now Govt has to spend in billions to get next level of bullet train technology.

                  //Venezuelans are barbarians.Some months back,the same Raman was telling Iranians as barbarians incapable of refining crude oil.W//

                  Who is leading the pack? You use all american technology. anything from Iran/Venezuela/Russia ?
                  Taking oil is american technology. Air India running airlines does not mean flights are made by India.

                  //Raman stop looking at Govt facilities with scorn and do his best to correct the wrongs there by involving himself in any struggle of the public.//

                  Question is not whether I am using the facility, it is about you guys. Are you using it? if not why?

                  • First of all,whether bullet trains are necessary for India?Raman may not know that 50% of Tatkal seats are sold at market rates by our railways.And Premier train fare is equivalent to air-fares.Premier trains could not be run in TN since there is`no demand.In the Railway budget,the Railway Minister”s only promise for the poor passengers(especially migrant labourers from other states)is to issue their tickets quickly at the ticket counters.These migrant labourers from UP,Bihar,Nort East travel in unreserved compartments since they cannot afford to buy even a sleeper ticket to go to their place.Railway minister never bothered to increase unreserved compartments in existing trains or introduce new trains with more number of such compartments.To understand the people”s misery travelling by unreserved compartments,at least read an article by Vinavu,currently available under the heading,”Maanavargaludan oru payanam”.When ordinary Indians cannot afford to travel in the existing trains,why there should be bullet trains?For whom?Railway Minister announced speeding up of Delhi-Mumbai Rajadhaani.He wants those passengers reach Mumbai overnight.He hopes to lure air-passengers.But,these passengers will never prefer rail travel since they can reach Mumbai in the late night flight after finishing their work at Delhi till the evening hours.Does Raman know that more than 27 Railway projects in TN got wound-up for want of fund allocation.Ordinary Indians will watch”bullet”train from the road near the station since they cannot afford to buy even a platform ticket.Modi has plans to hand over railway stations to corporates for maintenance.When the stations come under corporates,ordinary Indians cannot enter railway stations at all.Does Raman know the cost of laying tracks for bullet trains and high speed trains.All these tracks are going to be built by Chinese and Japanese MNCs under PPP model.Indian road users,right now pay the toll fees thro” their noses.The private contracters who built our highways under PPP model and maintain them as bad as possible are collecting toll fees for indefinite period,long after the stipulated period.Let Raman read Railway budget,especially,the cost of building tracks for bullet trains and high speed trains before talking about bullet trains..Who told you that Mayanmar is a poor country?Do you know that Mayanmar has a capital city built at enormous cost,remains as a ghost city?And our Chandrababu Naidu wants to build such a city in 50000 acres by snatching fertile agricultural lands from the farmers near Vijayawada and Guntur.Farmers are right now cultivate three crops a year there.

                    Raman must also know that even a rich person,if he is afflicted with H1N1 flu or if he meets with a road accident in India has to go to a Govt hospital only for treatment.

                    Let oil extracting be American technology.What do you want?Every other country should enter into agreement to be slaves of America for ever?

                    • //First of all,whether bullet trains are necessary for India? //

                      Do we need to grow sugarcane since so many people cant even get rice?

                      //When ordinary Indians cannot afford to travel in the existing trains,why there should be bullet trains//

                      ordinary indians use post office, do we need banks?

                      //Does Raman know that more than 27 Railway projects in TN//

                      I do know. Karnataka paid 7000 crores for their part and implemented their projects. TN refused to pay its share and spent for freebies.

                      //The private contracters who built our highways under PPP model and maintain them as bad as possible are collecting toll fees for indefinite period,long after the stipulated period.//

                      We have roads now , during socialist period we had only pot holes

                      //All these tracks are going to be built by Chinese and Japanese MNCs under PPP model//

                      Why not ICF ? 😉

                      //Mayanmar is a poor country?//

                      Richest nation on earth. ROFL

                • Sooriyan,

                  I have seen the “efficiency” of ICF Employees. I was living near perambur ICF factory for more than 20 years. Many ICF employee’s sons were my friends. Some of them also joined ICF. Their efficiency can be improved far more. There is potential to earn much more in ICF if all the resources are utilized properly.

              • See mr.raman am not a great fan of socialism, but the economic policy which modi’s government trying to advance will certainly lead our country to a pathetic situation. when comparing with “compradorism” , Socialism seems far better to our people. But definitely I’ll surely undergo the books which you have prescribed, especially “Fatal-Conceit-Errors-Socialism. Why societies cannot sustain such an idea”. pls try to understand our nation’s present economic policy will never ever bring any remarkable progressive status to our society. This will be nurturing for corporate entrepreneurs and for american multi billion capitalists, whose only task is to loot our nations wealth.

                • The reason for the failure of communism and socialism are:

                  1. Each and Every Individual has his own Aspirations and Motivations. Putting all in one group will not work as the person with more ambitions will not want to be tied down.

                  2. You cannot “CONTROL” the mass public for a long time. People hate to be controlled on what they will get to eat, what they need to buy, what standard of living they have to live with, etc.

                  3.Once in Power, it will intoxicate the rulers, irrespective of whether it is Democracy or Communism. In Communism, the power is more ruthless. Once a ruler tastes absolute power, he will not want to leave it and will not entertain any opposition in the name of democracy.
                  Atleast in Democracy, there is some chance for the public to show the door if there is a misrule (Our politicians are mainly surviging because the other alternatives are equally bad), but in communism, there is no chance of throwing them out of power.

                  I agree, the Ideals of Communism are lofty. But not Practical in the long run. This is the reality. People can show brief periods of glory from the past history, but in the long run, they are failing. Reasons for failure are mentioned above.

                  • கற்றது கையளவு அவர்களே, சோசலிசம் குறித்து தாங்கள் வைத்த மூன்று அவதூறுகளுமே காறித்துப்பவும் தகுதியில்லாத பொய்கள். இதை ஏற்கனவே விளக்கியிருக்கிறேன் என்றாலும் மீண்டும் ஒரு முறை பார்த்துவிடுவோம்.

                    \\1. Each and Every Individual has his own Aspirations and Motivations. Putting all in one group will not work as the person with more ambitions will not want to be tied down. \\

                    அடிப்படையில் முதலாளித்துவ உற்பத்தி முறை அறிவியலாளர்களையும், சட்டத்தரணிகளையும், உழைப்பாளிகளையும், சிறுபண்ட உற்பத்தியாளர்கள் அனைவரையுமே கூலியாளர்களாகத்தான் கருதுகிறது. இதன்படி அனைவரையுமே அவர்களின் இலட்சியங்களுக்கு எதிராக ஒரே பட்டியில் அடைத்து உழைப்புச் சுரண்டலில் உள்ளிழுப்பது முதலாளித்துவம் தான் என்பது தெள்ளிதின் விளங்கும். இப்படி சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் மூலதன தாக்கத்தின் பிடியில் இருத்திவைப்பதன் மூலமாக சவளைப்பிள்ளைகளாக வைத்திருக்கிறது முதலாளித்துவம்.

                    சிறு பண்ட உற்பத்தியாளர்களை அழித்தது யார்?
                    விவசாயிகளை கொன்றது யார்?
                    மாணவர்களின் கல்வி, கடைச்சரக்காக விற்கப்பட்டது எந்த உற்பத்தி முறை?
                    மருத்துவம் காசாகிப்போனதால் இச்சமூகத்தின் எந்தப்பிரிவினரின் இலட்சியங்களும் குறிக்கோள்களும் நிறைவேறியிருக்கின்றன??

                    இவர்களுக்கெல்லாம் இலட்சியங்கள், வாழ்வின் விழுமியங்கள், குறிக்கோள்கள் ஏதும் கிடையாதா? யோக்கியவானாக இருந்தால் சான்றுடன் விளக்குவீர்களா?

                    மனிதவளங்களை சூறையாடியது இந்த முதலாளித்துவம்.
                    ஆனால் சோசலிசத்தின் முதல் நோக்கமே மூலதனத்தின் பிடியில் இருந்து அனைவரையும் விடுவிப்பதாகும். இதன் அர்த்தம் என்னவென்றால் வாழ்க்கை என்பது சம்பாரிப்பதற்காக அல்ல என்பதை நடைமுறையில் நிரூபித்துக்காட்டுவது.

                    சான்றாக ஒரு மனிதர், தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்கே தையல்காரராக, வழக்கறிஞராக, மருத்துவராக, பொறியாளராக நாயாய் கசக்கிப்பிழியப்பட்டால் தாங்கள் சுட்டிக்காட்டும் இலட்சியங்களும், குறிக்கோள்களும் அடைவது சாத்தியமல்ல.

                    முதலில் ஒருவர் சம்பாரிக்கிற தொகை எதற்கு என்று பட்டியலிடும் கோமானே! பிறகு இலட்சியம் குறித்து வாய் கிழிய பேசலாம்.

                    இன்றைக்கு 40000 ஆயிரம் சம்பாரிக்கும் மென்பொறியாளர்களே நடுத்தெருவிற்கு வந்திருக்கின்றனர். ஏன்?

                    ஒரு பிழைப்புவாதி தெரிந்தே தன் வாழ்கிற சமூகத்திற்கு மனதறிந்து செய்கிற துரோகம் தான் உங்களது முதல் கருத்து.

                    உங்களைப்பொறுத்தவரை இலட்சியம் குறிக்கோள் என்பதெல்லாம் தாங்கள் பதுக்கியிருக்கிற மூலதனம் மட்டுமே.

                    இதை என்றைக்கு மக்கள் முன் மக்களுக்காக விடுவிக்கிறோமோ அன்றைக்குதான் தனிமனித இலட்சியங்களை நோக்கி மக்களால் பீடு நடை போட முடியும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

                    இதுதவிர தாங்கள் ஏதாவது ஒரு துறையைச் சுட்டிக்காட்டினால் தனிமனிதனின் இலட்சியங்கள் சோசலிச சமூகத்தில் எவ்வாறு நிறைவேற்றப்பட்டன? புதிய ஆளுமைகள் எவ்வாறு உருவாகின்றன என்பதைச் சான்றுடன் விளக்குவோம்.

                    பெட்ரோ கெமிக்கல் துறை குறித்த வரலாற்று சாதனைகளை ஏற்கனவே நான் முன் வைத்த பொழுது அதை மேற்கொண்டு படித்து அதன் உண்மையைச் சரிபார்க்கவோ, அதை மறுத்து எழுதவோ துணியாமல் ஓடிப்போன பயந்தாங்கோழிதான் தாங்கள் என்பதை நினைவுபடுத்தவிரும்புகிறேன். பிறகு இப்படி ஒரு இழிபுகழ் பொய்க்கு என்ன அவசியம் க.கை?

                  • க.கையின் இரண்டாவது பாயிண்டு

                    \\ 2. You cannot “CONTROL” the mass public for a long time. People hate to be controlled on what they will get to eat, what they need to buy, what standard of living they have to live with, etc. \\

                    கட்டுப்படுத்துவர்கள் யார்? கட்டுப்படுபவர்கள் யார்? என்பதை சொல்லி விளக்கியிருந்தீர்களேயானால் உங்களது இக்கருத்து கொஞ்சம் எடுபட்டிருக்கும் க.கை.
                    ஏனெனில் சோசலிசத்தை நிர்மாணிப்பது பாட்டாளிகள். இங்கு முழுச்சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி முதலாளி வர்க்கம் மூர்க்கமாகத் தாக்கப்படுவது எங்களின் விடுதலைக்கான முன் நிபந்தனையாகும்.

                    எனவே சோசலிச சமூகத்தில் இதுவரை உண்டு கொழுத்த முதலாளிகள், பூர்ஷ்வாக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை சர்வாதிகாரமாக முன்வைக்கிறோம்.

                    அவர்களுக்காக பாட்டாளிகளான நாங்கள் உழைப்பு முகாம்களைத் திறந்து இனிமேலும் சுரண்டி வாழ முடியாது எனச்சொல்லி நையப் புடைக்கிறோம்! அவர்களுக்கு சோசலிச வாழ்வு குறித்து வகுப்பெடுக்கிறோம்!

                    உழைத்தால் தான் சோறு என்பதை ஆணையில் வைக்கிறோம். சீனாவின் கடைசி மன்னன் தன் துணியை தானே துவைத்துக்கொள்ள நாங்கள் படாதபாடு படவேண்டியிருந்தது!

                    அப்படி வாழ்வைக் கற்றுக்கொள்ள கடினப்பட்டவர்கள் எல்லாம் மக்களைக் கொடூரமாக கட்டுப்படுத்துகிறார்கள் என்று உங்களைப்போல நீலிக்கண்ணீர் வடித்தார்கள்; வடிக்கிறார்கள்; வடிப்பார்கள். இதற்கு எல்லாம் நாங்கள் சளைத்தவர்கள் அல்லர்.

                    இதற்கு மேலும் மக்கள் என்ற பெயரில் தாங்கள் ஒளிந்துகொள்ள முயல்வீர்களேயானால் அது ஓபிஎஸ் செயலலிதாவைப் பார்த்து ‘மக்கள் முதல்வர்’ என்று சிங்கி அடிக்கிற நக்கத்தனத்தைவிட மோசமாக அம்பலப்பட்டுபோவீர்கள் என்பதைச் சொல்லிக்கொள்ள விழைகின்றேன். அப்புறம் உங்கள் விருப்பம்!

                  • க கை,

                    முதல் புள்ளியில் அதிக ஆம்பிஷன் உள்ளவர்கள் தான் கம்யூனிச அமைப்பை தகர்ப்பார்கள் என்று ஒத்துக்கொண்டிருக்கிறீர்கள். (அவர்களின் சுயநல ஆம்பிஷனை நிறைவேற்றிக்கொள்ள முடியாத போது கம்யூனிச அமைப்பை தகர்ப்பதே அவர்களின் வாழ்நாள் ஆம்பிஷன் ஆகிவிடுவதும் உன்மைதான்.)

                    இரண்டாவது புள்ளியில் பொது மக்களைக் கட்டுப்படுத்தமுடியாது என்கிறீர்கள். ஆனால் உன்மையில் நீங்கள் சொல்லவருவது இந்த ஆம்பி களைக் கட்டுப்படுத்தமுடியாது என்பது தான். ஆனாலும் அவ்வளவு தெளிவாக எழுதுவதற்கு உங்களால் முடியவில்லை.

                    மூன்றாவது புள்ளியில் சர்வாதிகாரத்தைப் பற்றி பேசுகிறீர்கள். நீங்கள் கம்யூனிச சர்வாதிகாரத்ததில் எந்த வகையான இழப்புகளை சந்திக்க வரும் என்று முன்னொரு விவாதத்தில் கேட்டிருந்தேன். அதற்கு நீங்கள் பதில் தரவில்லை. இப்போதேனும் கொடுத்தாக வேண்டும். அப்போதுதான் விவாதம் அடுத்த கட்டத்திற்கு நகரும். இல்லையென்றால் தனியாக சுற்றிச்சுற்றி வரவேண்டியதாகி விடும்.

                    நீங்கள் கூறும் ஜனநாயகத்தில் அரசியல்வாதிகள் எல்லோருமே மோசமானவர்களாக இருக்கிறார்கள் என்று ஒத்துக் கொண்டுவிட்டு அவர்களை 5 வருடத்திற்கு ஒரு முறை மாற்றுவதால் மட்டும் என்ன பயன் என்பதை நீங்கள் விளக்கவேண்டும். நாங்கள் புதிய ஜனநாயகம் வேண்டும் என்கிறோம். இதில் தலைவர்கள் மாற்றப்பட முடியாது என்பது முற்றிலும் உன்மையில்லை.

                  • க.கையின் மூன்றாவது கருத்து (அடிப்படையில் இது பித்தலாட்டமாகும்).

                    \\ Once in Power, it will intoxicate the rulers, irrespective of whether it is Democracy or Communism. In Communism, the power is more ruthless. Once a ruler tastes absolute power, he will not want to leave it and will not entertain any opposition in the name of democracy.
                    Atleast in Democracy, there is some chance for the public to show the door if there is a misrule (Our politicians are mainly surviging because the other alternatives are equally bad), but in communism, there is no chance of throwing them out of power.\\

                    க.கை தங்களது இந்த மூன்றாவது பொய்யுரையை பித்தலாட்டம் என்று வகைப்படுத்தியிருக்கிறேன். அது எப்படியென்று பார்ப்போம்.

                    முதலில் சனநாயகம் என்ற வார்த்தை தனித்து கிடையாது. பாராளுமன்ற சனநாயகம் என்பது முதலாளிக்கு சனநாயகத்தையும் மக்களின் மீது சர்வாதிகாரத்தையும் திணிப்பதாகும்.

                    சோசலிசம் என்பது மக்களுக்கு சனநாயகமும் முதலாளிகளின் மீது சர்வாதிகாரத்தைப் பயன்படுத்துவதாகும்.

                    இரண்டிலுமே சனநாயகம் என்ற வார்த்தை தொட்டு நக்கும் ஊறுகாயாக முன்னிறுத்தப்படுவதில்லை. அது கணக்காகவும், கறாராகவும் இன்ன பிரிவினருக்கு எனவும் வரையறுக்கப்படுகிறது.

                    இதை மறந்துவிட்டு இதயக்கனி ஆட்சி, நேரு மாமா சாட்சி என்பதெல்லாம் கடைந்தெடுத்த பித்தலாட்டமாகும்.

                    இப்பொழுது பாராளுமன்ற சனநாயகத்தில் மக்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றிருக்கின்றனர் என்று சொல்கிறீர்கள்.

                    ஆனால் இதுவல்ல நாங்கள் முன்னிறுத்துவது.

                    உற்பத்திச் சக்திகள் யார் பக்கம் இருக்க வேண்டும் என்கிற போரைப் பற்றியது எங்களது சித்தாந்தம். உங்களது தேர்தல் இதற்கு என்றைக்கும் பதில் சொல்லியதில்லை.

                    காங்கிரசு வந்தாலும் பிஜேபி வந்தாலும் உற்பத்திச் சக்திகள் என்றைக்கும் முதலாளிகளின் கையிலே தான் இருந்துவருகிறது. இதனால் தான் அம்பானி இரு கூட்டத்திற்கும் படியளக்கும் பகவானாக இருக்கிறார். இதை சனநாயகம் என்று யார் சொல்வார்? சாட்சாத் உங்களைப்போன்ற முதலாளிகளும் முதலாளித்துவ கைக்கூலிகளும் தான் இப்படிக் கதைப்பர்.

                    ஆனால் ஆட்சி அதிகாரம் என்பது வரலாறு இதுவரை கண்டிருக்கிற எல்லா உற்பத்தி முறையிலும் உற்பத்திச் சக்திகளை தன்னகத்தே கொண்டிருப்பவர்களின் கைகளில் தான் இருந்திருக்கிறது. இருக்கிறது.

                    ஆக, சோசலிச நிர்மாணம் என்பது பாட்டாளிகளின் கையில் உற்பத்திச் சக்திகளைக் கொண்டுவருவதற்கான இடையறாத போராகும்.

                    புயலுக்குப் பின் அமைதி என்பது இயற்கை நியதியாக இருக்கலாம். ஆனால் சோசலிச நிர்மாணித்தலுக்குப் பின் பாட்டாளிகளுக்கு ஓய்வு என்பது எமது விடுதலைக்கான எதிரான ஒன்று. இன்னும் மூர்க்கமான போரே இங்கிருந்துதான் தொடங்குகிறது.

                    இங்கு சமூகம் தலை கீழாக மாற்றி அமைக்கப்படுகிறது. இங்கு ஆட்சியில் இருப்பவர் நல்லவர் கெட்டவர் என்று புனித நீர் தெளிப்பதன் மூலமாக தாங்கள் திட்டமிட்டு இந்தப்போர் எதற்கானது என்கிற நடைமுறை யதார்தத்தை மறைக்கிறீர்கள்.

                    ரசியா வீழ்ந்தது. சீனா வீழ்ந்தது என்று சொல்கிற பொழுதெல்லாம் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்னவானது என்பதற்கு பதில் சொல்லாமல் மக்களை ஓட்டுப்போடும் மந்தைகளாக கீழ்த்தரமாக சித்தரிப்பதுடன் அதுதான் வாழ்வு என்று வாய்பிளக்கிறீர்கள்.

                    ஆனால் இன்னும் எத்துணை குருசேவ், எல்ட்சின் போன்றவர்கள் வந்தாலும் கூட பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்திற்கான போர் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கும். இதுதான் ஆட்சி அதிகாரத்தைப் பற்றிய எமது புரிதலும் கோட்பாடும்.

                    ஆகையால் ஆட்சி என்பதை குடியரசு தினத்தில் ஆரஞ்சு மிட்டாய் சப்புகிற அளவிற்கு சுருக்காதீர்கள்.

                  • Well said கற்றது கையளவு

                    4. Welfare schemes need money. Taxing the people is not an option in socialism. Till the resources are available,it will have a good run. All the resources which are supposed to be invested for future will be spent. Once the resources are gone,reality will surface.
                    It will result in bankruptcy ie currency losing value and riots/revolution/military coup.

                    http://coppolacomment.blogspot.com/2015/01/a-latin-american-tragedy.html

                • @Rebecca Mary

                  //Socialism seems far better to our people.//

                  Before you jump into conclusion and solution,you have to align your thinking.

                  Problem Domains

                  Innovation
                  ———-

                  1.New Technology innovation
                  2.Technology to business transformation
                  3.Governance assistance to business

                  Analyse your Japanese answer. Analyse the history. Compare socialist vs capitalist countries

                  Health care
                  ———–
                  1.Health care need for poor and rich
                  2.Research
                  3.Research to product
                  4.Education needs
                  5.CT scan like facilities infrastructure

                  If you want all these for free,how will your govt sustain the cost?
                  Compare Canada,USA and India. Compare the corruption culture and the tax payers count.
                  Why not Cuba maintain its innovation?
                  Who gets to decide, number of facilities required to your city? Compare it with our railway system.

                  Globalization
                  ————
                  1.Is it avoidable? How long you can keep the population from not wearing the jeans they wanted?
                  2.Who gets to decide what others should drink?
                  3.How long population can tolerate your environment?

                  America
                  ——–
                  When you spoke about them , you judged them with coca cola.

                  1.What about phase makers for heart?
                  2.Why not about their weather prediction?
                  3.Why not with computer software and its improvement on human society?

                  Remember even your marriage invitation will be printed with American technology.
                  Analyse what made them successful? Did it happen overnight?
                  After switching to capitalism how long it is reasonable to expect a change ?

                  //american multi billion capitalists, whose only task is to loot our nations wealth//

                  who are those american multi billion capitalists?
                  Who owns the american companies?

                  How did you decide that they looting your country ?
                  If selling their product and services in your country is looting,Why are you expecting we have to innovate and sell our services overseas ?

                  Will banning their business all together help your country? I mean preserve the wealth?
                  Has India done such thing in the past? How was the quality of life?
                  What will be the quality of life by avoiding american product?

                  Before preaching others,Live with all non american inventions

                  I will rewrite the statement

                  American multi billion corporations only task is to sell their products and services and improve the quality of life to the society which is currently not capable of producing one and aspiring to

                  • @ராமன்,

                    \\Before you jump into conclusion and solution,you have to align your thinking.\\

                    அடுத்தவர்களுக்கு சிந்தனையை ஒருமுகப்படுத்தச் சொல்வதற்கு முன்பாக, தாங்கள் முதலில் சிந்தித்தால் தேவலை!

                    Problem Domains

                    Innovation

                    1.New Technology innovation

                    அமெரிக்காவிடம் இருக்கிற ஒரே தொழில் நுட்பம் ஏகாதிபத்தியம். அது நாடுபிடிப்பது.
                    ஆட்சியைக் கவிழ்ப்பது, பண மதிப்பை புரட்டுவது, வாங்கிய கடன்பத்திரங்களைச் சமாளிக்கவும் மதிப்பே இல்லாத வெற்றுக்காகிதமான டாலரைச் சரிகட்டவும் போர் புரிவது, தான் ஒரு தீவிரவாதியாக இருந்துகொண்டு தீவிரவாதத்தை ஒழிப்பதாகக் கூறுவது, 9/11 போன்ற தாக்குதல்களை திட்டமிட்டு நடத்துவது, சொந்த நாட்டு மக்களைக் கொல்வது. இது தான் அமெரிக்க டெக்னாலஜி மற்றும் இன்னோவேசன்.

                    2.Technology to business transformation

                    மக்களின் உழைப்பை கார்ப்பேரட்டுகளை களவாட அனுமதிப்பது. இதை அமெரிக்க மக்களே முறியடித்திருக்கிறார்கள். ஆதாரம் இதோ: அமெரிக்க சட்டத்தின் படி, அறிவியல் ஆய்வுகளின் முடிவுகளும் ஆராய்ச்சிக்கட்டுரைகளும் பொதுமக்கள் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் எல்சிவியர் கம்பெனி அமெரிக்க செனட்டில் இதைத்தடுக்கும் பொருட்டு சட்டம் கொண்டு வந்தது. ரிப்பளிக்கன் மற்றும் டெமாகரடிக் உறுப்பினர்களிடம் லாபி நடைபெற்று கோடிக்கணக்கான டாலர்கள் கைமாற்றம் செய்யப்பட்டது. இது குறித்த மக்கள் திரளின் வீச்சான போராட்டங்களுக்குப் பிறகு அமெரிக்க அரசு பின்வாங்கியது. இது தான் அமெரிக்க நிதர்சனம். கொஞ்சமாவது நாட்டுநடப்பை வாசியுங்கள். கிணற்றுத் தவளைகளான எங்களுக்குத் தெரிந்தது கூட நிறம் மாறும் பச்சோந்தியான உங்களுக்குத் தெரிவதில்லை.

                    3.Governance assistance to business

                    கார்ப்பேரட்டுகளுக்கு ஏற்றவாறு வளைந்த கொடுத்த அரசுகள் இன்றைக்கு நடுத்தெருவில் நிற்கின்றன. ஐரோப்பிய அடுத்தடுத்த வரிச்சீர்திருத்தங்களை அறிவிப்பதன் நோக்கமே கார்ப்பரேட்டுகளிடமிருந்து அரசை எப்படிக் காப்பாற்றுவது என்பதுதான். இதற்காகக் தான் சென்றவருடம் ஜின் டைரோல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசையே பெற்றார். அவருடைய ஆய்வு சந்தையின் ஆதிக்கம் மற்றும் அதைக் கட்டுப்படுத்துவது. மூன்றாம் உலக நாடுகளில் தான் இத்தகையப்போக்கு நடைபெற்றுவருகிறது. நாட்டுவளங்களை விற்றுத்தீர்க்கிற இச்செயலை வளர்ந்த நாடுகள் செய்வதில்லை. இதற்காகத்தான் முதலாளித்துவ நாடுகளைப்பற்றி தெரிந்துகொள்ளச் சொன்னது. ஆனால் உங்களைப்போன்ற ஓர் அடிமைக்கு இது தேவையாக இருக்கவில்லை!

                    \\Analyse your Japanese answer. Analyse the history. Compare socialist vs capitalist countries\\

                    ஜப்பானின் பொருளாதாரம் விழுந்து இருபது வருடங்கள் ஆகிறது! மிகச் சமீபத்திய இரு சீர்திருத்தங்கள், பொது மக்களின் சேமிப்பை சந்தையில் திறந்துவிடுவது, இரண்டாவது; மூன்றாம் உலக நாடுகளான இந்தியா போன்றவற்றை மேலும் சுரண்டுவது.

                    ஆதாரம்: சீனாவில் இதுவரை ஜப்பானின் உற்பத்தி யூனிட்டுகள் 20,000க்கும் மேல் உள்ளன. இவற்றை இந்தியாவிற்கு மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறது ஜப்பானிய ஏகாதிபத்தியம். ஏனென்றால் தற்போதைய பொருளாதார தேக்க நிலையில் யுவானைக் கணக்கிடுகிற பொழுது ரூபாயின் மதிப்பு பத்து மடங்கு குறைவு.

                    மிகக் குறைந்த கூலியில் உற்பத்தியைப் பெறுவதன் மூலமாகத்தான் ஒரு நாட்டின் பொருளாதாரமே நிற்குமென்றால் ஜப்பானைப் பற்றியோ அமெரிக்காவைப்பற்றியோ பேச இராமனுக்கு எந்த அருகதையாவது இருக்கிறதா? இதற்குப் பெயர் முதலீட்டுத் தத்துவமா?

                  • @இராமன்
                    Health care
                    ————————-
                    1.Health care need for poor and rich

                    காசுள்ளவனுக்குத் தான் மருத்துவம் என்பது கேலிக்கூத்து. எந்த நாட்டு மருத்துவரின் உறுதிமொழியிலும் இது போன்ற அசிங்கமான வார்த்தைகள் இருப்பதில்லை. மருத்துவம் என்பது அது தேவைப்படுவோருக்கு என்பது தான் சரியான வாசகம் மற்றும் வாழ்க்கை. அது சோசலிசத்தில் மட்டுமே சாத்தியம்.

                    ஹைத்தி தீவுகளில் அமெரிக்காவிற்கு முந்தி கியுபா மருத்துவம் பார்த்தன் மூலமாக ஒட்டுமொத்த முதலாளித்துவத்தின் மீது காறி உமிழ்ந்ததை நினைவுபடுத்திப் பார்க்கவும். மருத்துவச் சேவை என்ற வார்த்தையைப் பயன்படுத்த வக்கற்றவர்கள் முதலீட்டுவாதிகள். கொடிய நோய்களைப் பரப்புவதற்கும் காசுபார்ப்பதற்கும் தான் மருத்துவத்தை ஒரு முதலீட்டுத் துறையாக பார்க்கிறது குள்ள நரிக்கூட்டங்கள்!!!!

                    2. Research

                    ஆந்திராவில் உள்ள ஏழைப்பெண்கள் தான் கருப்பை வாய் புற்று நோயை சோதித்து அறிவதற்கு வயக்காட்டு எலிகளாக பயன்படுத்தப்பட்டனர். ஏன் பன்னாட்டு கம்பெனிகளாலும், ஏகாதிபத்திய நாடுகளாலும், தங்கள் நாட்டில் இப்படியொரு சோதனையை நிகழ்த்தமுடிவதில்லை? காரணம் அங்கெல்லாம் இதை வளர்ச்சி என்று பேசும் உங்களைப்போன்ற கைக்கூலிகள் கிடையாது. அப்படியும் பேசினால் தெருவில் நாயைச் சுடுவதைப்போன்று சுட்டிருப்பர்! அவர்கள் நாட்டு சட்டமே அதைச் செய்திருக்கும்!

                    3. Research to product

                    ஒரு வேளை போலியோவை இவர்கள் ஆய்விலிருந்து உற்பத்திப் பொருட்கள் என்று சொல்லியிருப்பார்களேயானால் ஒட்டுமொத்த உலகமும் ஒச்சமாகத்தான் இருந்திருக்கும். இன்றைக்கு நிறைய பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிற பொழுது, அதற்குண்டான மருந்து தயாரிப்பதற்கான வேதி வினைகளைக் கூட மார்க்கெட் பொருளாக மாற்றி வைத்திருக்கின்றன முதலாளித்துவ நாடுகள். அதாவது உப்பு காய்ச்சினால் கூட அத அமெரிக்காரனுக்குத் தான் சொந்தமாம்.

                    சென்னை உயர் நீதி மன்றத்தில் கேன்சர் மருந்து தொடர்பான வழக்கு வந்த பொழுது, பன்னாட்டுக்கம்பெனிகளுக்கு சாதகமான இந்திய சட்டத்தை எள்ளி நகையாடியவர் வேறு யாருமல்ல. நமது நீதிபதி! இந்தியாவின் இறையாண்மையை பன்னாட்டு கம்பெனிகளின் மருத்துவ விதிகள் மலம் துடைத்த காகிதமாக பயன்படுத்துகின்றன என்று வெளிப்படையாக அறிக்கை விடுகிறார் என்றால் இராமனின் ‘ரிசர்ச் டூ புராடெக்டு’ என்பது எத்துணை புல்லுருவித்தனமானது என்பது புரியும்.

                    4. Education needs

                    உலகில் அதிக அளவில் அறிவியல் ஆய்வுகளுக்கான பிரத்யேக ஆய்வுக்கூடங்களும், அதே சமயம் கிராமங்களில் அதிக அளவிலான ஆரம்பப் பள்ளிக்கூடங்களிலும் கல்வியைக் கொண்டு சேர்த்திருப்பது சோசலிச நாடுகள் தான். அல்லது முதலாளிகளுக்கு புரியும்படி சொன்னால் சமூகத்தில் தனிமனிதன் தான் மிகச்சிறந்த முதலீடு! ஒருவருக்கு கற்றுக்கொடுத்தால் அதனால் சமூகமே சுபிட்சமாக இருக்கும் என்கிற பொழுது சோசலிசம் தான் கல்வியின் தேவையை நூறு சதவீதம் முனைப்பாக செயல்படுத்துகின்றன. மற்றபடி கல்வியை கடைச்சரக்காக்கி விற்பவர்கள், கல்வியின் தேவை என்று பேசுவது எவ்வளவு இலாபம் என்பதன் அடிப்படையில் தான். இந்த வகையில் முதலாளித்துவாதிகள் முதலில் அழிப்பது மொழியை. இரண்டாவது அழிப்பது கலை, கலாச்சாரத்தை, பண்பாட்டு, நாகரிகத்தை. மொத்தத்தில் முதலாளித்துவம் மனிதர்களை பண்பாடு நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளைத் தான் உருவாக்கும்.

                    5. CT scan like facilities infrastructure

                    இரும்புச் சத்து மாத்திரை வழங்கத் துப்பில்லாதவர்கள் சி.டி ஸ்கேன் எடுக்கிறார்களாம். இவர்கள் சி.டி ஸ்கேன் வசதி வைத்திருப்பதன் நோக்கமே ஏழை எளியவர்களிடம் இருந்து உள்ளுறுப்புகளைப் பிடுங்கி பணக்காரர்களுக்கு பொறுத்துவதற்குத்தான்!

                    வினவில் ஸ்கார்ட் கார்னியின் தி ரெட் மார்கெட் புத்தகம் குறித்தும் உடல் உறுப்புகளுக்கான சந்தை குறித்த கட்டுரை வந்துள்ளது. ஒவ்வொரு உறுப்பிற்கும் எவ்வளவு தொகை என்பதை மான ரோசம் உள்ளவர்கள் கண்டிப்பாக பார்த்துப் படிக்க வேண்டிய கட்டுரை அது!
                    https://www.vinavu.com/2012/04/30/the-red-market/

                    அமெரிக்க மருத்துவ பல்கலைக்கழகங்களுக்கு இந்தியர்கள் தான் எலும்பு அளிக்கின்றனர். சென்னையில் கிட்னிவாக்கம் என்ற ஊரே இருக்கிறது.

                    ஒரு வேளை இராமன், முதலாளித்துவத்தின் மருத்துவ வசதி காரணமாகத்தான் ஏழைகளால் தங்களது கிட்னியையாவது விற்று பிழைத்துக்கொள்ள முடிகிறது என்று கூறுவார் போலும்!

                    If you want all these for free,how will your govt sustain the cost?

                    இது அடிப்படையில் தரகனின் மொழியாகும். இங்கு யாரும் இலவசமாக எதையும் கேட்கவில்லை. உழைப்பின் பலனை எடுத்துக்கொள்கிறோம். இந்தியாவில் வரிபிடுங்குகிற அரசு, முதலில் அதை மக்களுக்காக செலவிடுவதில்லை. கார்ப்பரேட்டுகளுக்குத்தான் அள்ளிக்கொடுக்கின்றன.

                    இந்தியா போன்ற நாடுகளிலேயெ தொழிலாளர்களுக்காக தொழிலாளர்களின் பணத்தால் நடத்தப்படுகிற மருத்துவமனைகள் இ.எஸ்.ஐ மருத்துவமனைகள் ஆகும். தற்பொழுது இ.எஸ்.ஐயிடம் உபரியாக இருக்கும் தொழிலாளர்களின் தொகை மட்டும் 30,000 கோடிக்கும் மேல். அனைத்தையும் விற்றுத் தீர்க்கும் இந்தியாவில் தொழிலாளர்களின் பங்களிப்பே இவ்வளவு என்கிற பொழுது சோசலிச சமூகத்தில் மக்கள் தங்களின் மருத்துவத்திற்காகவும் கல்விக்காகவும் கையந்தே வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?
                    எந்த அருகதையில் இராமன் போன்ற கைக்கூலிகள் மருத்துவச் சேவையை இலவசம் என்றும் அரசு அதைச் சமாளிக்கிறது என்றும் சொல்கிறார்?

                    Compare Canada,USA and India. Compare the corruption culture and the tax payers count.

                    இம்மூன்று நாடுகளிலுமே ஏழைகளுக்கு மருத்துவம் மிகக் கடினம். மிசினரிகள் நடத்தும் மருத்துவமனைகளில் இம்மூன்று நாடுகளிலுமே மக்கள் கால் கடுக்கத்தான் நிற்கின்றனர். இம்மூன்று நாடுகளிலுமே ஊழல் தலைவிரித்துதான் ஆடுகிறது. இம்மூன்று நாடுகளிலுமே காப்பீடு என்பதன் பெயரில் மக்கள் பணம் அளவில்லா முறையில் சுரண்டப் படுகிறது. இம்மூன்று நாடுகளிலும் கார்ப்பரேட்டுகள் வரி ஏய்ப்பு செய்கின்றனர். இதிலிருந்து தப்பிப்பதற்குத்தான் மொரிசியஸ், சிங்கப்பூர் போன்ற வரி ஏய்ப்பு உலகம் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

                    Why not Cuba maintain its innovation?

                    ஏற்கனவே சொல்லியதுபடி இன்னவேசன் இருக்கிறவன் ஹைதியில் ஓடி ஒளிந்தது ஏன்? எபலோவைக் கண்டு தொடைநடுங்கியாக இருந்தது ஏன்? இதன் இரண்டிற்கும் பதிலடிகொடுத்ததன் மூலமாக உலகில் இன்று தலைநிமிர்ந்து நிற்பது கியுபா தான். ஒரு விசயத்தில் தான் கியுபா தவறிவிட்டது. மிகவும் சக்தி வாய்ந்த விசத்தைக் கண்டுபிடித்திருந்தால் மானமற்றவர்கள் அருந்தி பசிபிக் பிராந்தியத்தில் மிதந்திருந்தக்கலாம். அந்தவகையில் கியுபா பின்னுக்குப் போய்விட்டது. ஆனால் என்ன?
                    கார்ப்பரேட் அமெரிக்கா உலகின் ஓர் அவமானச் சின்னம்!!! என்பதற்கு வேறு சான்றுகள் என்ன வேண்டும்?

                    Who gets to decide, number of facilities required to your city? Compare it with our railway system.

                    மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். சான்றாக மன்னார் குடியில் இரயில்கள் புறப்பட வேண்டும் என்று மன்னார்குடி வியாபாரிகள் சங்கம் போராட்டம் நடத்தினர். ஆனால் இலாபம் பார்க்கும் கைக்கூலிகள் இரயில்வேயை தனியாருக்கு தாரை வார்த்தனரே யாரை கேட்டு தாரை வார்த்தனர்? யாரை கேட்டு இலாபத்தில் இயங்கும் ஐசிஎப்பின் ஒரு பகுதியை தனியாருக்குக் கொடுத்தனர்? இராமன் பதில் சொல்வாரா?

                    • Capitalism is not perfect. yes Capitalist countries have debt . but Are they rioting for food?

                      Cuba went with buckets to wash Ebola 🙂 what was the use? American an canadian had some kind of vaccine

                      Compare all your answers with Venezuela . Watch the video , ask yourself why such utopia dint last

                    • @இராமன்

                      \\Capitalism is not perfect. yes Capitalist countries have debt . but Are they rioting for food?\\

                      முதலாளித்துவம் சிறப்பானது அல்ல என்பதோ முதலாளித்துவ நாடுகள் கடனில் மூழ்கியிருக்கின்றன என்பது மட்டுமோ விவாதம் ஆகிவிடமுடியாது. இங்கு இன்னொரு உண்மையை மறைக்கிறீர்கள். ஒரு நாடு கடனில் மூழ்கியிருக்கிற பொழுது, அந்நாட்டில் மூட்டைப்பூச்சிகளாய் வாழும் செல்வந்தர்களின் சொத்து மதிப்பு வீழ்வதற்குப் பதில் உயர்ந்து தான் வந்திருக்கிறது. இதைத் தாமஸ் பிக்கெட்டியின் ஆய்வு எடுத்துக்காட்டுகிறது (இதற்கு எதிராக அதியமான் கொடுத்த சுட்டி அத்துணைக் கேலிக்கூத்தாக இருந்தது. தாங்கள் அண்ணலில் வழியில் அங்கிருந்து கூட தொடங்கலாம்!). இப்பொழுது விசயத்திற்கு வருவோம்.

                      1950-80 களின் கால கட்டங்களில் ஒரு நாட்டின் பொருளாதாரம் ஒன்று அல்லது இரண்டு சதவீதமாக அதிகரித்திருக்கிற பொழுது குறுங்குழுவின் சொத்து மதிப்போ ஏழு மடங்கு அதிகரித்திருக்கிறது. இன்றைய நிலையில் நெதர்லாந்து நாட்டில் 15%சதவீதத்தினரின் கையில் அந்நாட்டின் 65% சொத்துக்கள் இருக்கின்றன. ஒரு நாட்டின் முகவரியே அழிந்தாலும் கூட இவர்களின் சொத்து அழியாது. முதலீட்டுவாதம் என்று சொல்கிற உங்களைப்போன்ற பிழைப்புவாதிகள் அல்லது முன்யோசனையற்ற தற்குறிகள் அம்பலப்படுகிற இடம் இது!. இதைச் சேர்த்துப் பரிசீலித்து ஒரு நாட்டில் முதலீட்டுத் தத்துவத்தைப் பின்பற்றுவதால் யாருக்கு சுபிட்சம் வருகிறது என்பதை மேற்கொண்டு சொல்லவேண்டும்.

                      இதில் தாமஸ் பிக்கெட்டி கம்யுனிஸ்டுகளின் புரட்சியைக் கண்டு அலறுபவர். புரட்சி ஏதும் இன்றி அவருடைய மொழியில் சொல்வதென்றால் வன்முறையின்றி முதலாளிகளுக்கு பங்கமின்றி இந்நாற்றத்தைப் போக்க விரும்புகிறார். அதற்கு முன்வைக்கும் தீர்வு Global Tax. ஒருவர் ஈட்டும் வருமானத்திற்கு வரி அறவிடுவதற்குப் பதிலாக சொத்துக்களின் அடிப்படையில் வரி அறவிடவேண்டும் என்று சொல்கிறார். முதலாளித்துவவாதிகள் இதைத்தான் உடோப்பியா என்று கதறினார்கள். நாங்களும் அப்படித்தான் சொல்கிறோம். பாட்டாளி வர்க்கப்புரட்சி தான் ஒரு நாட்டிற்கு தீர்வை மட்டுமல்ல முகவரியையே கொடுக்கவல்லது. இது தான் நிதர்சனம்.

                      —————–

                      முதலாளித்துவ நாடுகளில் உணவிற்காக மக்கள் கலகமிடுகிறார்களா என்று ஒரு கேள்வியை கேட்டிருக்கிறீர்கள்.

                      இங்கிலாந்து மக்களுக்கு கலவரத்தைத் தடுக்கும் பொருட்டு கஞ்சித் தொட்டி திறந்திருப்பது தங்கள் காதுகளுக்கு எட்டவில்லையோ?

                      ஐந்தில் ஒரு அமெரிக்கன் பரம ஏழை. இவர்களின் இதயங்களை கிழித்துவிட்டுத்தான் அமெரிக்கா பேஸ்மேக்கர் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கிறது போலும்!

                      இலத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே முதலாளித்துவ நாடான கோண்டூராஸில் மக்கள் கல்விக்காக வீதியில் இறங்கி போராடி வருகிறார்கள். பொது உளவியலை கட்டமைக்கும் முதலாளித்துவ ஊடகங்கள், உங்களைப்போன்ற அறிவுக்கொழுந்துகளின் பார்வையில் இருந்து இதை மறைப்பது ஏன்? ஏன் காலில் வெந்நீர் ஊற்றியவர்கள் போல வெனிசுலாவையே சுற்றிவருகிறீர்கள்? மர்மத்தை விளக்குவீரா இராமன்?

                      இன்றைக்கு கூட சீனாவில் குவாங்டாங் மகாணத்தில் சிமெண்ட் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாக ஆளும் வர்க்கத்தை எதிர்த்துப் போராடி செய்தி வெளிவந்திருக்கிறது. தொழிற்சாலை அமைவதன் பொருட்டு தங்களைப்போன்றவர்கள் இன்னேரம் சீனாவை ஆதரித்து இருக்கவேண்டும் இல்லையா? ஏன் முதலாளித்துவ ஊடகங்களும் இதைத் திட்டமிட்டு மறைக்கின்றன? காரணம் சொல்வீரா? பொது உளவியலை விளக்குவீரா?

                      (குறிப்பு: தாமஸ் பிக்கெட்டி, கோண்டூராஸ், சீன சிமெண்ட் ஆலைப் போராட்ட தகவல்கள் கலையகத்தில் இருந்து எடுத்தாளப்பட்டிருக்கின்றன). மேற்கொண்டும் அங்கு சென்று வாசிக்கலாம்.

                      1. அப்போது அங்கே பிக்கெட்டி தோன்றினார்… kalaiy.blogspot.com/2015/01/blog-post_21.html

                      2. ஹொண்டூரஸ் ஏழை மாணவர்களின் கல்வி உரிமைக்கான போராட்டம் kalaiy.blogspot.com/2015/03/blog-post_31.html

                      3. மாசுபடுத்தும் சீமெந்து தொழிற்சாலையை மூட வைத்த சீன மக்களின் போராட்டம் kalaiy.blogspot.com/2015/04/blog-post_9.html

                      ————————————-

                      \\Cuba went with buckets to wash Ebola what was the use? American an canadian had some kind of vaccine\\

                      அப்படியானால் உங்கள் பார்வையின் படி முதலீட்டு ஜாம்பவான்களான அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிடம் வாளி கூட இல்லையா?:) மருந்து இருந்தும் களத்தில் இறங்காத தொடைநடுங்கிகளுக்குப் பின்னால் வாளியே இல்லாத சோகக் கதைதான் உள்ளதோ?! அதனால் தான் இராமன் கார்ப்பரேட் அமெரிக்காவை, உலகின் ஓர் அவமானச் சின்னம் என்று கூறுகிறோம்!!! புரிகிறதா?

                      \\Compare all your answers with Venezuela . Watch the video , ask yourself why such utopia dint last\\

                      தற்பொழுது தாங்கள் தான் பதில் கூற வேண்டும். கோண்டூராஸில் கல்விக்கான கலகத்தை மறைக்கிற முதலாளித்துவ ஊடகங்கள் வெனிசுலாவில் 24*7 என பிலாக்கணம் வைத்து ஒளிபரப்புவது ஏன்? ஏன் என்றால் முதல்போட்டு நடத்துகிறவர்கள் அவர்களாயிற்றே! இதுபோன்ற நாடகங்கள் போனியாக வேண்டாமா? பொது உளவியல் பற்றி வகுப்பெடுக்கும் உங்களைப்போன்ற தற்குறிகளுக்குத்தான் இது புரிவதில்லை!

                    • To Raman :

                      எல்போ வைரஸ் தொற்றை பொறுத்தவரையில் கையில் மருந்து இருந்தும் முன்றாம் உலக நாடுகளுக்கு உதவாத அமெரிக்காவை பார்த்து காறித்துப்ப உங்களுக்கு மணம் இல்லையே இராமன். அதே நேரத்தில் கியுபாவின் மருத்துவ-மனித நேய முயற்சிகள் எல்போ வைரஸ் மேலும் பரவுவதை தடுக்கும் என்ற அறிவு கூட உங்களுக்கு இல்லையே !//Cuba went with buckets to wash Ebola 🙂 what was the use? American an canadian had some kind of vaccine//

                      வெனிசுலாவிற்கு வந்து உள்ளது உப்புக்கு ஏற்பட்ட பஞ்சம் போன்றது தான் என்பதை உணர்ந்து கொள்ள உமக்கு இன்னும் அறிவு தேவை அல்லவா ? கச்சா எண்ணை விலை குறைவை தொடர்ந்து வெனிசுலா கச்சா எண்ணை ஏற்றுமதியை குறைத்து கொண்டது , அவர்களின் எதிர்கால பொருளாதார நலனை அடிபடையாக கொண்ட நடைமுறையே தவிர உள்நாட்டில் உணவு பற்றாகுறையை ஏற்படுத்தும் நோக்கம் அல்ல. வெனிசுலாவை பற்றிய அவதுருகளை பரப்ப மொக்கையான விடியோ கிளிப் மட்டும் போதாது இராமன். ஒரு விடியோ கிளிப்பை வைத்துக்கொண்டு ஒன்பது கதை அளக்க கூடாது இராமன் // Compare all your answers with Venezuela . Watch the video , ask yourself why such utopia dint last//

                      முதலாளித்துவம் கட்டமைத்து உள்ள பொருளாதார சீர்குலைவுகள் இன்று உலகம் எங்கும் பாதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டு உள்ள நிலையில் குறிப்பாக கிரிஸ் தேசத்தில் மாபெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டு உள்ள நிலையில் அந்த நாட்டு மக்கள் சோசியலிச கட்சியை தேர்தல் மூலம் தேர்வு செய்து உள்ளது முதலாளித்துவ நக்கி இராமனின் கண்களுக்கு தெரியாதது ஒன்றும் வியப்பு இல்லை.முதாலாளித்துவ கிரிஸ் நாட்டில் மக்கள் உணவுக்காக தெருவுக்கு வந்து போராடிய வரலாறு எல்லாம் இராமனுக்கு மறந்தது ஏன் ? // Capitalism is not perfect. yes Capitalist countries have debt . but Are they rioting for food?//

                    • பின்னுட்டம் 8.1.2.1.1.1.3.2.2.2 மற்றும் 8.1.2.1.1.1.3.2.2.3 ஆகியவற்குக்கு பதில் சொல்ல வக்கற்ற இராமன் _____ ICF மீது அவதூறுகளை கழிந்து கொண்டு உள்ளது.

          • திரு. ராமன் ….

            அதிக வேலை பளுவினால் தங்களின் மறுமொழிகளை தற்போதுதான் காண நேர்ந்தது. சும்மா சொல்ல கூடாது, அமெரிக்காவிற்கு சொம்படிப்பதில் கை தேர்ந்த வல்லுநர் மோடியா? ராமனா?என்கிற ரீதியில் ஒரு பட்டி மன்றமே வைக்க வேண்டும் போல் இருக்கிறது!!! அந்த அளவிற்கு இருக்கிறது தங்களின் அமெரிக்க எஜமான பாசம். அமெரிக்காவின் மீதும் தரகு முதாலாளித்துவத்தின் மீதும் தங்களுக்கு அப்படி என்ன தான் பெருந்திணை உறவோ தெரியவில்லை. கொஞ்சம் கூட மனதில் ஈரமே இல்லாமல் உங்கள் கருத்துகளை பதிவு செய்கிறீர்கள்

            முதலில் நான் கூறியது என்ன, முதலாளித்துவம் கூடாது என்றா? நாட்டை விலை பேசும், கூறுப் போடும், நாட்டின் அனைத்து வித வளர்சிகளையும் முடமாக்குகின்ற இந்த கேடுகெட்ட அடிமைத் தனமான தரகு முதலாளித்துவத்தை தான் வேண்டாம் என்று எதிர்க்கிறேன்.. இந்த 20 வருட காலத்தில் தரகு முதலாளிதுவத்தினால் இந்தியாவிற்கு ஏற்பட்ட நன்மைகள் என்னென்ன என்று பட்டியலிட முடியுமா? கூறினால் அதன் அடிப்படையில் நாம் அதை பற்றி மேலும் விவாதிக்க எதுவாக இருக்கும்..

            //ஜப்பான் என்னும் நாடு எப்படி வளந்து இருக்கிறது , உலகமே இன்றைக்கு நவீன மயமாக முதலீட்டு தத்துவம் தான் காரணம் . …….//

            முதலில் ஜப்பான் ஒன்றும் சாதாரண முதலாளித்துவ நாடு கிடையாது அது ஒரு ஏகாதிபத்திய நாடு என்பதை மனதில் கொள்ளவும். இரண்டாவது அவர்கள் தங்களின் நாட்டை முன்னெற்ற தரகுத் தனமான கொள்கைகளை கடைப்பிடிக்கவில்லை என்பதையும் நினைவில் கொள்ளவது நல்லது.சப்பான் மக்கள் யாரும் அமெரிக்க நாட்டு முதலாளிகளின் முன்னேற்றத்திற்க்காக அடிமைகளாக உழைத்து கொட்டவில்லை. உலக புகழ் வாய்ந்த ஜப்பானிய தொழில் நுட்பம் என்பது அந்த மக்களின் சுயமான ஒன்று, எந்த அந்நிய மூலதனமும் வழங்கிய பிச்சையல்ல.

            தொழில்நுட்பத்தை எந்த நாடும் பிச்சையாக வழங்காது, அப்படியே வழங்கினாலும் அது அவர்கள் நாட்டில் காலாவதியான ஒன்றாக இருக்கும் அல்லது தங்கள் நாட்டில் பயன்ப்படுத்த முடியாத அளவிற்கு சுற்றப்புற சுழலுக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடியதாக இருக்கும். அதை அப்படியே இந்தியா போன்ற 3ஆம் உலக நாடுகளின் தலையில் கட்டி இங்கிருக்கும் மக்களின் அழிவில் இருந்து லாபம் பார்ப்பார்கள். இது தான் மறுக்க முடியாத உண்மை. இத்தனை ஆண்டுகளாக வளர்ச்சி என்கிற பெயரில் இந்த கொடுமை தான் நடந்து கொண்டிருக்கிறது . அத்தகைய கொடுரத்திற்க்கும் சொந்த நாடு மக்களின் அழிவிற்கும் பேருதவியாக இருப்பது தரகு முதலாளித்துவமும் அதனை தாங்கி பிடிக்கும் மோடி போன்ற எச்சில் எடுப்பிடிகளும் தான்.

            //உங்களுடை வாசகத்தை இணையத்திற்கு பொருத்தி எழுதுகிறேன்
            இணையம் கொடிய விஷம் போன்றது தான். அதற்க்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டு ஆபாச தளங்கள்………//
            நன்மை தீமை சீர் தூக்கி பார்த்து பழக வேண்டும்.//

            புற்று நோயில் சீர்த்தூக்கி பார்க்க என்ன இருக்கிறது. சீர்தூக்கி பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில் அதன் நாசக்கார கிருமிகள் நாட்டையே செல்லரித்து உருக்குலைத்து விடும் … அறுவை சிகிச்சை செய்து அதை அறுத்து எறிவது தான் இப்போது தேவை.

            //மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடுசுபோடுவதை நிறுத்துங்கள் . இன்னோவாசன் வராததிற்கு காரணமே சொசியளிசம்தான் .//

            கபள சோற்றில் முழு பூசணிக்காயை மறைப்பது தாங்கள் தான். இந்தியாவில் எப்போது சோஷியலிச ஆட்சி இருந்தது. இங்கிருக்கும் நேரு, இந்திராகாந்தி முன்னெடுத்து சென்றது சோஷியலிசமே அல்ல. அதை கூட 1991 ஆண்டிலேயே நரசிம்ம ராவ் தலைமையில் கொன்று புதைத்து விட்டு தனியார் மயம், தாராள மயம் என்கிற பெயரில் இந்தியாவை திறந்த வேட்டைக்காடாக மாற்றி விட்டார்களே. இத்தோடு கால் நூற்றாண்டு முடியபோகிறது, இந்த 25 ஆண்டுகளில் கார் வேண்டாம், ஒரு குண்டூசி செய்யும் தொழில் நுட்பம் கூட இங்கு உருவாகவில்லை.

            தொடரும்………………..

            • //நல்லது . உங்களுக்கு தெரிந்து எந்துணை பேர் அரசாங்க மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகிறார்கள் ? நீங்கள் போவீர்களா ? அரசாங்கம் என்பதன் இன்னொரு பொருள் இன் எபீசியன்சி.//

              அதாவது காசு இருப்பவன் மட்டும் உயிரோடு இருந்தால் போதும் என்று கூற வருகிறீர்கள் அப்படித் தானே. ஏன் என்றால், அபோல்லோவிற்கு சென்று அனைவராலும் மருத்துவம் பார்க்க முடியுமா? நீங்கள் போவீர்களா? ஒரு வேளை உங்களிடம் கோடிகணக்கில் பணம் இருக்கிறதோ என்னவோ? ஆனால், என்னால் சத்தியமாக முடியவே முடியாது. ஒரு வேளை நாளையே எனக்கு புற்று நோய் போன்ற பெரும் பாதிப்பு ஏற்ப்பட்டால் சாவதை தவிர எனக்கு வேறு வழி இல்லை. என் குடும்பத்தாரால் தற்பொழுது உள்ள நிலைமையில் என்னை காப்பாற்றுவதற்கு 5 முதல் 10 லட்சம் வரை வேண்டுமானால் செலவு செய்யலாம். அதற்க்கு மேல் நினைத்தாலும் புரட்ட முடியாது. அவ்வளவு செலவு செய்த பின்னரும் நான் பிழைகிறேனோ இல்லையோ, என் குடும்பம் அனைத்தையும் இழந்து நடு தெருவிற்கு வந்து விடும் என்பது மட்டும் உண்மை. நீங்கள் கூறுகிறபடி நான் அபோல்லோவிற்கு செல்ல வேண்டுமானால் ஒரு கோடி ரூபாயை வைத்து கொண்டு போனால் தான் என்னை உள்ளே விடுவார்கள்.

              ஆகவே, கல்வி, மருத்துவம் போன்ற அனைத்து முக்கிய சேவைகளும் அரசின் கட்டுபாட்டில் தான் இருக்க வேண்டும். தனியார் முதலீட்டை நிச்சயம் மேற்படி சேவைகளில் அனுமதிக்க கூடவே கூடாது. பிரிட்டன், scandinavian nationsகளில் இருப்பதைப் போன்ற போன்ற அனைத்து நாடுகளிலும் மருத்துவ சேவை அரசின் கைகளில் தான் இருக்கிறது. அவ்வளவு ஏன், அமெரிக்காவின் அடிமை நாடு என்று கூறப்படும் சவுதி அரேபியாவில் கூட மருத்துவமும் சுகாதாரமும் முழுமையாக அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது.

              //அரசாங்கம் என்பதன் இன்னொரு பொருள் இன் எபீசியன்சி//

              அப்படியா.. அப்படி என்றால் பேசாமல் ராணுவம், போலிஸ், நீதிமன்றம் போன்ற அனைத்தையும் நாம் தனியார் வசமே ஒப்படைத்து விடலாமே. ஈனெப்பிcஇஎண்ட் அரசாங்கம் என்று ஆன பிற்ப்பாடு பாராளுமன்றம் எதற்கு பேசாமல் அதையும் முதலாளிகளின் வசம் ஒப்படைத்து விடலாமே. ஏற்கனவே மறைமுகமாக அப்படித் தான் இருக்கிறது!!!! பேசாமல் அதை நேரடியாக செய்து விட்டால் நல்லது. ஒரு மருத்துவமனை கட்டி தன சொந்த மக்களுக்கு நல்ல சிகிச்சை கொடுக்க வக்கில்லாத Inefficient அரசாங்கத்தால் எப்படி ராணுவத்தை மட்டும் வழி நடத்த முடியும்?

              இப்போதும் சொல்கிறேன் எளிய மக்களின் துன்பம் தெரியாத விவசாயிகளின் கஷ்டங்களை புரிந்துகொள்ளத, புழு பூச்சியை விட கேவலமான ஒரு ஜென்மத்தை
              பிரதமராக வைத்துக் கொண்டுள்ள நமக்கு சாவேசை பற்றியோ ஸ்டாலினை பற்றியோ விமர்சித்து பேசுவதர்ற்கு எந்த அருகதையும் கிடையாது. நமக்கு மட்டுமல்ல மோடியை ஆதரிக்கும் எந்த அறிவு ஜீவிக்கும் அந்த தகுதி கிடையாது, மன்னிக்கவும்.

              மேலும், தாங்கள் தென்றல் அவர்கள் கூறிய இந்த விடயத்தை நன்கு பரிசீலியுங்கள்..

              //நீங்க எங்கம்மா பார்த்த சித்தாளு வேலையப் பார்த்ததான் ரியல் எஸ்டேட்டுன்னா என்னான்னு தெரியும். விவாசயம் பொய்த்துப்போன இரண்டு லட்சம் விவசாயிகளோட குடும்பத்துல நீங்க பிறந்திருந்தீகன்னா முதலாளித்துவ வித்தை புரியும். இதைவிட கோககோலா தயாரிக்கிற பரவை தொழிற்சாலை கிட்டயோ சூரியூர் தொழிற்சாலை பக்கத்துலயோ வாழ்ந்திருந்தீகன்னா நல்லதண்ணீகாவும் உப்புத்தண்ணிக்காகவும் நாய அலையற கஷ்டம் புரிஞ்சுருக்கும். ஆனா கனடா போற ஆன்சைட் ஆப்பர உங்க குரூப் லீடர் தடுத்துட்டான்ற அளவுக்குத்தான் உங்களுக்கு வாழ்க்கையப் பத்துன கண்ணோட்டமே இருக்கு! You never lived your life so far and you won’t!//

              கடைசியாக, ஏதோ ஒரு ஏகாதிபத்திய நலனிற்கு நம் இரவையும் பகலையும் தொலைப்பதை விட பேசாமல் நாம் சோஷலிச உற்பத்தி முறையில் உழைப்பது எவ்வளவோ நல்லது. நம் உழைப்பின் பயன் அனைத்தும் நாட்டிற்க்கும், நாட்டு மக்களுக்கும் செல்லும். ஒன்று நம் நாட்டை வளபடுத்தும் சுய தேசியம் சார்ந்த தேசிய முதலாளிதுவதிற்க்கு உழைப்போம், இங்கிருக்கும் innovators inventionists களை ஊக்கப்படுத்தி புதிய தொழில் நுட்பத்தை உருவாக்குவோம். அப்படி முடியவில்லை என்றால் நாம் சோஷலிச உற்பத்தி முறையை பற்றி பரிசீலிக்கும் நேரம் வந்து விட்டது என்று நினைக்கிறன். இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுங்கள் ராமன். தேசியம் சார்ந்த முதலாளித்துவமா அல்லது சோஷலிசமா என்று

              • ரெபக்கா மேரி,

                நம்ம மேரியா இது என்று நம்பவே முடியவில்லை. கிள்ளிப்பார்த்துக் கொள்கிறேன். இது ஏப்ரல் மாத விளையாட்டா.

                எப்படியோ, உங்கள் பதில்களுக்கு நிறைய லைக் போடுகிறேன்.

              • @Rebeccaa Mary

                ஏழை ஏழை , அமேரிக்கா திருடுறான் போன்ற வசன்கங்கள் கேட்டு காது புளித்து பொய் விட்டது .

                ஏழைகளோடு அச்சொசியடே செய்து நன்றாக நடிகிறீர்கள். காஇஷல் தலைவலிக்கு கூட அரசாங்க மருத்துவமனை , bsnl போன்ற அரசாங்க சேவை மட்டும் இப்போது உபயோக்யுங்கள். அப்புறம் வந்து பேசுங்கள் !

                இருபது வருடத்தில் என்ன ஆகிவிட்டது என்று உளறல் வேறு!

                அமேரிக்கா என்பதை “புதிய உலகம்” என்பார்கள். மனித குலத்தின் திறமைகளை ஒருங்கிணைத்து இந்த உலகத்தை அவர்கள் தான் வழி நடத்துகிறார்கள் .அமெரிக்கர்கள் என்பதில் உலகின் அணைத்து விதமான மக்களும் அடங்கியுள்ளார்கள்.

                இதை புரிந்து கொள்ளும் அறிவோ பக்குவமோ உங்களுக்கு இல்லை !

                சோசியலிச குட்டையில் விழுந்துவிட்டீர்கள். வெனிசூலா மக்கள் இன்னும் இருபது வருடத்தில் சோசியலிசத்தில் இருந்து புரட்சி செய்து வெளியே வருவார்கள். அப்போதும் அமெரிக்க சதி என்று புலம்பி ஒப்பாரி வைத்து கொண்டு இருப்பீர்கள்

              • //இதைவிட கோககோலா தயாரிக்கிற பரவை தொழிற்சாலை கிட்டயோ சூரியூர் தொழிற்சாலை பக்கத்துலயோ வாழ்ந்திருந்தீகன்னா நல்லதண்ணீகாவும் உப்புத்தண்ணிக்காகவும் நாய அலையற கஷ்டம் புரிஞ்சுருக்கும்//

                எங்க ஊரில் இருந்த அணைத்து கிணறுகளிலும் தண்ணீர் வற்றிவிட்டது .
                காரணம் ஊர் குளத்தை கம்யூனிஸ்டுகள் ஏழைகளுக்கு கொடுத்தது
                போர் போடுவது வீட்டுக்கு வீடு பேசன் ஆனது.

                இதெற்கெல்லாம் கோகோ கோலாக்காரன் வந்து செய்யவில்லை . சூரியூர் தெரியும் எனது கிராமம் போல பல கிராமங்கள் உள்ளன

                சும்மா கோகோ கோலா மீது மட்டும் பழி போடுவது .

                சுற்று சூழல் மீது அக்கறை உள்ள புண்ணியவான்கள் பெட்ரோல் வாகனமே பயன்படுத்த கூடாது. தண்ணீர் மறு சுழற்சியாகும் . பெட்ரோல் ? அது வெளி இடும் புகை ?

                • \\ எங்க ஊரில் இருந்த அணைத்து கிணறுகளிலும் தண்ணீர் வற்றிவிட்டது .
                  காரணம் ஊர் குளத்தை கம்யூனிஸ்டுகள் ஏழைகளுக்கு கொடுத்தது\\

                  ஊர் குளத்தை ஏழைகளுக்கு கொடுத்தால் அனைத்து கிணறுகளிலும் தண்ணீர் வற்றிவிட்டது என்பது மகா மட்டமான புலம்பல். ஜாகையை மாற்றுங்கள்.

                  நிதர்சனத்தில் ஏரிகளை அழித்தது தனியார் மயம். அனைத்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் ஏரிகளை வளைத்து தான் கட்டப்பட்டிருக்கின்றன.

                  ஆதாரம் இதோ: தாங்கல் என்பது ஏரி. சென்னையில் மட்டும் தாங்கல் என்ற பெயரில் எத்துணை ஏரிகள் இருந்திருக்கின்றன என்று கணக்கெடுத்துப்பாருங்கள். வளர்ச்சியடைந்த எந்த நாடுகளும் தனது நாட்டு நீர் ஆதாரங்களை கைவைத்ததில்லை. அதே சமயம் மக்கள் வாழ்விடங்களை அழித்து செயற்கையான நீராதாரங்களை உருவாக்கியதும் இல்லை.

                  இந்தியா போன்ற நாடுகளில் இது சர்வசாதாரணமாக நடைபெறும். அது உங்களைப்போன்ற புல்லுருவிகளுக்கு புரிவதில்லை.

                  Energy auditing கேள்விபட்டிருக்கிறீர்களா? வளர்ந்த நாடுகளில் ஒரு தொழிற்சாலையை ஆரம்பிக்கிற பொழுது காரோ, மோட்டாரோ உருவாக்குவதற்குப் பயன்படும் தண்ணீர், மின்சாரம், ஆகியவை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். தாங்கள் அடிமையாக இருக்கும் அமெரிக்க ஆண்டையின் டெட்ராய் நகரம் இப்போது இல்லையே ஏன்? அதே சமயம் ஸ்ரீபெரும் புதுரில் கார் தொழிற்சாலைகள் வரிசை கட்டி நிற்பது ஏன்?

                  ஏனெனில் வளர்ந்த நாடுகள் எல்லாம் உற்பத்தி ஆலைகளை குறைவான கூலிக்கு இருக்கும் இடத்திற்கு மாற்றியதற்காக மட்டுமல்ல, தன் நாட்டு வளங்களை மேற்கொண்டு பாதுகாத்துக் கொள்வதற்கும் தான். உமக்கு அதில் ஒரு மேனஜர் போஸ்ட் கிடைச்சா வாலை ஆட்டிக்கொண்டு தூக்கி எறிவதைக் கவ்விக் கொள்வீர். ஆனால் சுயமரியாதையும் தன்மானம் உள்ள மக்கள் அப்படி இருக்க முடியுமா இராமன்? கொஞ்சம் யோசியுங்கள்.

                  \\ போர் போடுவது வீட்டுக்கு வீடு பேசன் ஆனது.\\

                  இப்பதான் உங்க பங்காளி, மக்கள் தங்கள் விருப்பப்படி சோசலிசம் வாழ அனுமதிப்பதில்லை என்று சொன்னார். ஆனால் முதலாளித்துவாதிகளான தாங்கள் மக்கள் தங்கள் நாட்டில் தன் வீட்டில் போர் போட்டுக்கொள்வதற்கு இவ்வளவு அங்கலாய்க்கிறீர்களே! மக்கள் யாரும் பாட்டில் பாட்டிலா விக்கலையே! போர் போடுகிற மக்களும் கோக கோலாவும் ஒன்னு சொல்றதுக்கு உங்க உடம்புல ஓடுவது இரத்தமா? சாக்கடையா?

                  கெட்டிக்காரன் புளுகு எட்டுநாளைக்குன்றது எம்புட்டு சரின்னு இதுல இருந்தாவது தெரிஞ்சுங்க! இதுல வெட்கமில்லாம சோசலிசம் மக்களைக் கட்டுப்படுத்துகிறதுன்னு அவதூறு வேற!

                  \\ சும்மா கோகோ கோலா மீது மட்டும் பழி போடுவது\\

                  கோகோ கோலா எப்படி இந்தியாவில் இருக்கலாம்? முதல்ல இதுக்கு பதில் சொல்லுப்பா?

                  \\ சுற்று சூழல் மீது அக்கறை உள்ள புண்ணியவான்கள் பெட்ரோல் வாகனமே பயன்படுத்த கூடாது. தண்ணீர் மறு சுழற்சியாகும் . பெட்ரோல் ? அது வெளி இடும் புகை ?\\

                  எல்லா வளர்ந்த நாடுகளிலுமே பொதுப்போக்குவரத்து மக்கள் பயன்படுத்தும் படிதான் இருக்கு. ஆனா ரோடே இல்லாத இந்தியாவுல அவ்வளவு கார் கம்பெனிகள்! கேட்டா முதலீட்டுத்துவம் காரை கண்டுபிடித்ததுன்னு அலம்பிட்டு இப்ப வந்து வெளிவிடும் புகைன்னு சொன்னா என்னப்பா அர்த்தம்? உங்கள மாதிரி அடிமைகள் ஒரு பக்கம் ஆடி கார் பேசன் சொல்லிட்டு வெளிவிடும் புகைன்னு சொன்னா அது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?

                  • //இப்பதான் உங்க பங்காளி, மக்கள் தங்கள் விருப்பப்படி சோசலிசம் வாழ அனுமதிப்பதில்லை என்று சொன்னார். ஆனால் முதலாளித்துவாதிகளான தாங்கள் மக்கள் தங்கள் நாட்டில் தன் வீட்டில் போர் போட்டுக்கொள்வதற்கு இவ்வளவு அங்கலாய்க்கிறீர்களே! மக்கள் யாரும் பாட்டில் பாட்டிலா விக்கலையே! போர் போடுகிற மக்களும் கோக கோலாவும் ஒன்னு சொல்றதுக்கு உங்க உடம்புல ஓடுவது இரத்தமா? சாக்கடையா?//
                    சூப்பரான கேள்வி தென்றல் நம்ம நாட்டுல உள்ள நீர் ஆதாரெமெல்லாம் எப்பிடி பறி போகுதுனு தெரியாமல் உளரும் முட்டாளாகத்தான் ராமனை பார்க்க தோண்றுகிறது ஏன்டா நொன்னை விவசாயி போர் போட்டா அந்த தண்ணிய தன் நிலத்துலதான் விடுவான் வீட்டுல போர் போட்டா குளிக்க ,துவைக்கத்தான் பயன் படுத்துவான் அது திரும்பவும் என் பூமிக்கே வந்து சேரும் அனா வண்டி வண்டியா டேங்கர் டேங்கரா எடுத்துட்டு போயி அடுத்தவனுக்கு 12 ரூபாய்னு விக்க மாட்டான்டே லூஸு இது கூட தெரியாமயா இருக்க உனக்கெல்லாம் சோறு தின்னுறதுக்கு கிடைக்காம போற காலம் வரும்டா லூஸி அப்ப உன்ன அமெரிக்கா காரன் காப்பாத்துறான இல்ல இந்த சொந்த சனம் காப்பாதுமானு யோசி ….

                    • //வண்டி வண்டியா டேங்கர் டேங்கரா எடுத்துட்டு போயி அடுத்தவனுக்கு 12 ரூபாய்னு விக்க மாட்டான்டே//

                      அதுவும் மக்கள் குடித்து பின்னர் பூமிக்கு தான் செல்கிறது ஐய்யா 🙂

                • One mistake will not justify another mistake.Communists giving village tanks to poor cannot justify exploitation of our water resources by COCO-COLA.

                  Let the Govt encourage public transport as in the case of many European countries instead of encouraging foreign car companies especially American car companies to manufacture cars in India.

                  Water can be recirculated only if concerted efforts are taken by Govt.It is not only the concern for the environmental pollution,my friend.There is`acute water scarcity.Even in this issue also,you show your shallow thinking and throwing challenges to the “concerned”people.

            • ரெபேக்கா மேரி அவர்களே,

              நம் நாட்டில் தொழில்நுட்பம் மேற்கத்திய நாடுகளை போலோ இல்லாது தென்கிழக்காசிய நாடுகளைப்பொலோ வளராமல் இருப்பதற்கு சோசலிசமோ அல்லது முதலாளித்துவமோ காரணம் என்று பொத்தாம் பொதுவாக கூற முடியாது.

              முக்கிய காரணம் நம்மவர்களிடையே பணம் – இலாபம் – உடனடி இலாபம் இவை தான் குறிக்கோளே தவிர, புதிய தொழில்நுட்பத்தினை அறிய பெரும் ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை. நம் நாட்டில் தொழில் முனைவோர் அந்த தொழில்நுட்பத்தினை முழுவதுமாக அறியும் செயலை செய்யாமல் நோகாமல் நோன்பு கும்பிட வேண்டும் என்ற பேராசையில் முக்கால்வாசி பாகங்களை சீனாவில் இருந்து எளிதில் கொணர்ந்து இங்கு டப்பா மட்டும் செய்து விற்று வருகிறார்கள். பின் எப்படி தொழில் வளரும், டப்பா செய்யும் தொழில் தான் வளரும், டப்பாவுக்குள் இருக்கும் மின்னணு உபகரணங்கள் சீனாவிலிருந்தோ, கொரியாவிளிருந்தோ தான் கொண்டு வந்து தொழிலை நடத்துகிறார்கள்.

              பணம் பண்ணும் ஆர்வம் மட்டுமே நம்மவர்களிடம் உள்ளது.
              தொழில்நுட்பத்தினை கற்பதில் இல்லை.

              பொறியியல் கல்லூரிகளை எடுத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு வருடமும் இலட்ச இலட்சியமான பொறியியல் மாணவர்கள் இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல், கட்டிடவியல், வேதியஈயல் தொழில்நுட்பம், என்று பல்வேறு பொறியியல் துறைகளிலிருந்தும் படித்து வெளியே வருகிறார்கள். வந்த உடன் என்ன செய்கிறார்கள்? அவர்கள் படித்த படிப்பை கொண்டு புதிதாக தொழில்நுட்பத்தை உருவாக்குகிறார்களா? இல்லை. அனைவரும் ஆட்டு மந்தை போல அப்படியே ஐ.டி. துறைக்கு ஓடுகிறார்கள். என்ன காரணம்? ஐ.டி. துரையின் தொழில்நுட்பத்தின் மேல் உள்ள ஆர்வமா? இல்லை. பணம். பணத்தின் மேல் ஆர்வம். படிப்பாவது தொழில்நுட்பமாவது, பணம் எங்கே கிடைக்குமோ, அங்கே ஓடலாம் என்று எண்ணுகிறார்கள்.

              இதற்கு ஒரே வழி, மற்ற வேலை செய்பவர்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்க வழி செய்ய வேண்டும். வெளிநாடுகளில் பிளம்பர், எலக்ட்ரிசியன், பெயிண்டர் போன்ற வேலை செய்பவர்களுக்கு கூலி அதிகம். அவர்கள் அந்த வருமானத்திலேயே வசதியாகவே வாழ முடியும். நம்ம ஊரில், இத்தகைய வேலை செய்பவர்களுக்கு கூலி என்று ஐந்தும் பத்தும் கொடுத்து அத்தகைய வேலை செய்பவர்களை இழிவு செய்கிறோம். பெப்சி கோக் குடிக்கவும், பர்கர் பீட்சா சாப்பிடவும் வெளிநாட்டுக்காரனை காப்பி அடிக்கும் நம்மவர்கள் எங்கு உழைக்கும் மக்களுக்கு கொடுக்கும் கூலி என்று வரும்போது மட்டும் அக்மார்க் இந்தியனாக மாறி விடுகிறார்கள்.

              • க கை,
                பணம் – இலாபம் – உடனடி இலாபம் என்பதும் ஆம்பிஷன் தானே? இந்த ஆம்பிக்கள் தொழில் நுட்பத்தை வைத்து என்ன செய்யப் போகிறார்கள். டப்பா செய்தே இலாபம் பார்ப்பதும் ஆம்பிஷன் தானே. இவர்களை மற்றவர்களுடன் கட்டிப்போட முடியாது என்றல்லவா சொல்லியிருக்கிறீர்கள்.

                பிளம்பர், எலக்ட்ரிசியன், பெயிண்டர் போன்ற வேலை செய்பவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்கிறீர்கள். எப்படி? வசதியாக வாழ முடிந்த அளவுக்கான சம்பளத்தை குறைந்த பட்ச சம்பளமாக்கி சட்டம் இயற்றலாமா? இது ஆம்பி க்களின் ஆம்பிஷனில் குறுக்கே நிற்பதாக உங்களுக்குத் படவில்லையா? ஆம்பிக்களுக்கு இது சர்வாதிகாரமாக படாதா?

                வெளிநாடுகளில் தங்களுக்குத் தேவையான எல்லா பொருள்களையும் மலிவாக நம்மை போன்ற நாடுகளில் இருந்து செய்வித்துப் பெற்றுக்கொள்ள முடிவது தானே அங்கே பிளம்பர், எலக்ட்ரிசியன், பெயிண்டர்களுக்கு அதிக சம்பளமும் அதே சமயம் இங்கே மிகக்குறைவாகவும் இருப்பதற்கு முக்கிய காரணம் என்பதை அறியாதவரா நீங்கள்? அப்போது தானே தரகு ஆம்பிக்கள் தங்கள் ஆம்பிஷனை அடைய முடியும்?

                • pk அவர்களே,

                  ஆசைப்படலாம். பேராசை படுவது தவறு. இதைத்தான் சொன்னேன்.
                  ஆம்பிஷன் என்பது பேராசை ஆகும்போது தவறுகள் நடக்க ஆரம்பிக்கிறது.
                  டப்பா மட்டுமே செய்பவர்களை தடுப்பது அல்ல என் நோக்கம். டப்பாவோடு மொத்த கருவியையும் செய்பவர்களை எப்படி ஊக்குவிக்க வேண்டும் என்று யோசிக்கலாம் என்று தான் கூறுகிறேன். இன்னொரு நாட்டிற்கு ஏற்றுமதி செய்தும் ஒரு பொருளை சீனாகாரனால் விலை குறைவாக கொடுக்க முடியும் போது அதே பொருட்கள் நம் நாட்டிலும் கிடைக்கையில் நம்மவர்கள் அதனை சீனாகாரனை விட மலிவாக உருவாக்க முடியும். ஆனால் முயற்சி தான் செய்வதில்லை. நம் நாட்டிலேயே உருவாக்கிய ஒரு கருவியை நல்ல தரத்தோடும், மலிவு விலையிலும் உருவாக்க நினைப்பதும் ஆம்பிஷன் தான். திருடியோ, அடுத்தவனை கெடுத்தோ, ஒரே நாளில் கோடி ரூபாய்க்கு சொந்தக்காரனாக நினைப்பதும் ஆம்பிஷன் தான். நான் எந்த வகை ஆம்பிஷனை பற்றி கூறுகிறேன் என்று தங்களுக்கு இன்னும் விளங்கவில்லையா. ஏன் எல்லாவற்றையும் தவறான கண்ணோட்டதோடே பார்க்கிறீர்கள்?

                  உடல் உழைப்புக்கு குறைந்த அளவு கூலி கொடுக்கும் நிலையை நான் எப்போதிருந்தோ எதிர்த்து தான் வந்துள்ளேன்.உழைப்புக்கேற்ற ஊதியம் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. நீங்கள் சமீபத்தில் தான் வினவுக்கு வந்துள்ளீர்களா, தெரியவில்லை.

                  தெருவோர நடைபாதை, தள்ளுவண்டி வியாபாரிகளிடம் இரண்டு ரூபாய்க்கு மல்லுகட்டி பேரம் பேசும் நம் மக்கள் ரிலையன்ஸ், நீல்கிரீஸ் சூப்பர்மார்க்கெட்டில் அவன் என்ன விலை வைத்தாலும் வாய் மூடி கொடுக்கிறோம். பெரிய ஓட்டல்களில் கவுரவத்திற்காக என்ற பெயரில் நூற்றுக்கணக்கில் டிப்ஸ் கொடுக்கும் கனவான்களை கண்டு பொங்கி இருக்கிறேன்.

                  வினவில் நான் பதிவிட்ட காலத்திலிருந்து பார்க்கிறேன். எல்லா பிரச்சினைகளுக்கும் குறை சொல்கிறார்களே தவிர அதற்கு சரியான தீர்வு என்ன என்று அலசி ஆராய்வதில் கவனம் செலுத்துவதில்லை. பெரும்பாலும் வினவில் நண்பர்கள் சொல்லும் தீர்வு என்பது நடைமுறையில் சாத்தியப்படாத ஒன்றாகவே உள்ளது. ஆதாவது ஒட்டு மொத்த உலகில் உள்ள அனைத்து நாடுகளுமே சோஷலிச நாடுகளாக மாறும் பட்சத்தில், உலகில் இண்டு இடுக்கில், சந்து போனதில் ஒளிந்திருக்கும் அனைத்து முதலாளிகளையும், முதலாளித்துவத்தை ஆதரிக்கும் அனைத்து மனிதர்களையும் அழித்தால் தான் தாங்கள் விரும்புகிற சோசலிசம், கம்மயுநிசம் மலரும். இது சாத்தியமா?

                  நடைமுறையில் சாத்தியப்படும் தீர்வு என்ன, அதை பற்றி யோசிக்கலாம் நண்பர்களே.
                  ஜனநாயக ரீதியில் தொழிலாளிகளை பாதுகாக்கும் சட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றுவதற்கு போராடினால் அதற்கு என் ஆதரவு என்றும் உண்டு.

                  கோக் மற்றும் பெப்சி குடிப்பது தான் பேஷன் என்று 90 களில் இளைஞர்களை வசீகரப்படுத்தினார்கள். இப்போது இளநீர், பழரசம் குடிப்பது தான் பேஷன் என்று இளைஞர்களை எப்படி வசப்படுத்துவது என்று பிரச்சாரம் செய்யலாம். கோக் பெப்சி போன்ற சக்கரை குளிர்பானம் தான் குடிப்பேன் என்று அடம் பிடிப்பவர்களுக்கு காளி மார்க் போன்ற இந்திய தயாரிப்புகளை குடிக்க சொல்லலாம்.

                  ஆக்கப்பூர்வமான தீர்வுகள், விவாதங்களை எப்போதும் வரவேற்கிறேன்.
                  நல்ல ஆலோசனைகள் இருந்தால் பகிரவும்.

                  • க கை,

                    எனது பின்னூட்டம் 8.1.2.1.1.1.3.1.3 றில் இரண்டு கேள்விகளைக் கேட்டிருக்கிறேன். அதற்கு பதில் கூறினால் அதிலிருந்து விவாதத்தை தொடரலாம். இல்லையென்றால் நான் உங்களிடம் ஒரு இலக்கில்லாமல் சுற்றிச்சுற்று விவாதிப்பதை தவிர்க்க விரும்புகிறேன்.

        • மேரி அவர்களே! மாறுபட்ட கருத்து கொண்டவர் எனினும் மிகச் சிறப்பான முயற்சியை முன்வைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்! தொடர்ந்து எழுதுங்கள்!

    • அதியமான்,

      தலைப்பிலேயே பெரிய வார்த்தையில் தான் தொடங்குகிறீர்கள். அடுத்து பல பத்து வரிகளை அள்ளித் தெளித்து விட்டு அதை ஒரு பதிவாக்கி விட்டீர்கள். நீங்கள் கொடுத்திருக்கும் இரண்டு தொடுப்புகளும் கூட உங்கள் பதிவின் தரத்தில் தான் உள்ளன. கள்ளப் பரப்புரைகளைப் பற்றி மிகவும் காலம் கடந்து தான் நான் புரிந்து கொண்டேன்.

      வெனிசுவேலாவுக்கு நேரில் போய் விசாரித்தால் இவற்றிற்கு பதில் கூற ஏதுவாக இருக்கும்.

      பொறுத்திருந்து பார்ப்போம்.

    • அதியமான் ,வார இறுதியில் வினவு அலுவலகத்துக்கு வரேன் என்று சொல்லி ஏமாற்றிவிட்டிர்களே அதியமான். சனி கிழமை உங்களுக்காக காத்திருந்து நீங்கள் வராமையால் அசோக்பிள்லரில் இருந்து நடைபயணமாக மேற்கு மாம்பலம் சென்று ரயில்வே ஸ்டேஷன் ஓரத்தில் உள்ள புதிய ,பழைய புத்தக கடைகளில் புத்தகங்கள் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினேன். இந்த வார தொடக்க நாளான ஞாயிறு அன்று வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு குடும்பத்தை அழைத்து செல்லும் வேலை இருந்தமையால் ஞாயிறு அன்று வினவு அலுவலகத்துக்கு நான் வரவில்லை. இந்த வார இறுதி நாளிலாவது[சனி] சந்திக்கலாமா அதியமான் ? மேலும் உங்கள் கட்டுரை ” வெனிசுலா என்னும் நரகம் ” குப்பையாக உள்ளது.

  7. pk,

    //கள்ளப் பரப்புரைகளைப் பற்றி மிகவும் காலம் கடந்து தான் நான் புரிந்து கொண்டேன்.
    வெனிசுவேலாவுக்கு நேரில் போய் விசாரித்தால் இவற்றிற்கு பதில் கூற ஏதுவாக இருக்கும்.///

    இங்கு பேசுபவர்களில் ஓரளவு நிதானாமாகவும், தெளிவாகவும் உரையாடுபவர் என்று உங்களை கருதியிருந்தேன். may be i am mistaken. தரவுகளுக்குள் போகாமல், வெளியே நின்று கொண்டு
    ‘கள்ள பரப்புரை’ என்று சொல்வது தான் மார்க்சிய மெய்யில் முறையா என்ன ? 🙂

    வெனிசுலாவிற்க்கு சென்று பார்க்கவும்.

    • அதியமான் இப்படியே எல்லாரையும் கூறிக்கொண்டு இருந்தால் கடைசியில் மிஞ்சப்போவது யாரு என்றால் அதியமான் மட்டுமே ! அதனால் அவரே அவரைநோக்கி அவர் விரலை சுட்டி கூறுவாறு:
      “””ஹும் எல்லாரையும் முட்டாளுங்க என்று கூறியாயிற்று. இனி முட்டாளுனு திட்ட நீ மட்டும் தான் மிச்சம் அதியமான் “””
      //இங்கு பேசுபவர்களில் ஓரளவு நிதானாமாகவும், தெளிவாகவும் உரையாடுபவர் என்று உங்களை கருதியிருந்தேன். may be i am mistaken. //

      ஆமாம் அதியமான் அப்படி என்ன பெரிய தரவுகளை அந்த கட்டுரையில் கொடுத்து வினவை கெதிகலங்க வைத்துவிட்டிர்கள் அதியமான் ?
      // தரவுகளுக்குள் போகாமல், வெளியே நின்று கொண்டு
      ‘கள்ள பரப்புரை’ என்று சொல்வது தான் மார்க்சிய மெய்யில் முறையா என்ன ?//

    • அதியமான்,

      நீங்கள் எங்கே எந்தவகையான தரவுகள் கொடுத்திருக்கிறீர்கள் என்று எனக்கு சரியாக தெரியவில்லை. கொடுக்க மறந்திருந்தால் இப்போது இங்கே கொடுங்கள். பரிசீலிக்கிறேன். நன்றி.

  8. அதியமான் ,இராமன் போன்ற அமெரிக்க விசிறிகளுக்கு புரியும் படியாக சில புள்ளிவிவரங்களிடன் விவாதத்தை தொடங்குகின்றேன்.

    வெனிசூலா : Year 2014
    ————————————–

    GDP[PPP] per Capita : $17,917

    HDI : 0.764 [67th]

    இந்தியா : year 2014
    ———————————

    GDP{PPP] per Capita : $$5,777

    HDI : 0.586 [135th]

    முதலாளித்துவ தரகர்களின் தேசமான இந்தியாவில் உள்ள பொருளாதார நிலைமை வெனிசூலாவுடன் ஒப்பிட்டு செய்யும் போது வெனிசூலா தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்[GDP per Capita], மனித மேம்பாட்டு குறியீடு [HDI] ஆகிய பொருளாதார அளவீட்டுகளில் மிகவும் நல்ல முன்னேறிய நிலையில் உள்ளது. உப்புக்கு பஞ்சம் வந்தா [விலை ஏறிவிட்டால்]நாடு முன்னேறும் என்று சொல்லுவாங்க. அதுமாதிரி வெனிசூலாவில் ஒரு முறை tolet paper க்கு தட்டுப்பாடு வந்த போது 6 மாதத்துக்கு தேவையான stock வாங்கி வைத்துகொண்டார்கள். அதை தான் அதியமானும் ,இராமனும் வெனிசுலாவுக்கு வந்த சோசியலிச பிரச்சனையாக கூறுகிறார்கள். அதியமான் , இராமன் வெண்ணைகலே, குழந்தைகளுக்கு ,பெண்களுக்கு இருப்பு சத்து குறைபாடு இல்லாத தேசம் அது.

      • இராமனின் மரமண்டைக்கு எத்துனை முறை கூறினாலும் புரியமாட்டேன் என்கின்றது. இராமன் என்ன சொல்கின்றார் என்றால் எண்ணை வளம் உள்ள நாடுகளின் GDP தான் அதிகமாக இருக்கும் என்று. கச்சா எண்ணை , இரும்பு தாது போன்ற raw materials அய் அப்படியே ஏற்றுமதி செய்வதால் எந்த பயனும் இல்லை. அவற்றை மதிப்பு கூட்டபட்ட பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்தால் மட்டுமே நல்ல இலாபம் கிடைக்கும். இதை தான் வளர்ந்த நாடுகள் செய்கின்றது.

  9. வெற்றி வேலுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை செந்தில் குமரனையும் ,தென்றலையுமே சேரும். கருத்தியல் தளத்தில் மக்கள் விரோதிகளை வீழ்த்துவதில் எனக்குறிய கடமையை மட்டுமே நான் செய்கின்றேன். இதில் அற்பவாத,குறுங்குழுவாத ,குழப்பவாதியாக காட்சி அளிக்கும் குடிகாரனை போன்று உளறும் வெற்றி வேலுக்கு எனது பதில் ஏதும் இல்லை.கருத்து இன்றி பேசும் _____ எல்லாம் என்னிடம் பதில் ஏதும் இல்லை.

  10. அடடா.. இந்த முதுமொழி இங்கு மெய்பிக்கபட்டதே :

    ‘Never argue with stupid people, they will drag you down to their level and then beat you with experience.’ – Mark Twain

    நான் ’தோற்றுவிட்டேன்’ மார்க் !! 🙂

  11. இந்தக் கட்டுரையின் அடிப்படையில், இதே பாணியில் (style) மகிந்த ராஜபக்சவைக் கூட ‘அமெரிக்காவை எதிர்த்த இலங்கையின் வீரப்புதல்வன்’ என்று புகழ்ந்து கட்டுரை எழுதலாம் என்பதை நினைத்த போது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. எப்படியான சர்வாதிகாரியாக இருந்தாலும், அமெரிக்காவை எதிர்த்தால், அவர்களை எல்லாம் அந்தந்த நாட்டின் வீரப்புதல்வர்களாக்க வினவு இலுள்ள ‘முற்போக்கு’ எழுத்தாளர்கள் எல்லாம் முந்தியடிப்பதைப் பார்க்க இங்கு பதிலெழுதவே எனக்குப் பயமாக இருக்கிறது. 🙂

  12. //நான் ’தோற்றுவிட்டேன்’ மார்க்// Mark alias Athiyaman this is not the first time you are failing miserably.

    • அஞ்சுமணி சார் ,

      அதியமானின் கட்டுரையை அவரின் இணையதளத்தில் படித்தேன். விவாதிக்கும் அளவுக்கு எந்த விவரமும் அதில் இல்லை. கச்சா எண்ணை விலை குறைந்ததால் வெனிசூலாவில் சோசியலிசம் அழிந்தது என்ற அளவில் அதியமான் அவதூரு பிட் நோட்டிஸ் போட்டு உள்ளார். அவர் எழுப்பும் மற்றுமொரு கேள்வி வேடிக்கையாக உள்ளது. கச்சா எண்ணை விலை குறைவு மற்ற கச்சா எண்ணை ஏற்றுமதி நாடுகளை பொருளாதார ரீதியில் பாதிக்காத போது வெனிசூலாவை மட்டும் அது ஏன் பாதிக்கின்றது என்ற கேள்வியை எழுப்பி அதற்கு காரணம் வெனிசூலவின் சோசியலிச பொருளாதார கொள்கைகள் தான் காரணம் என்று எவ்வித தரவுகளும் இன்றி சோசியலிசத்தை அவதூரு செய்கின்றார்.வெறும் வெற்று புலம்பலாக ,அவதூருகளாக மட்டுமே உள்ளது அதியமானின் கட்டுரை

    • Socialism keeps people healthy by making them run miles before food. 🙂

      Oh I forgot! These are american propaganda video 🙂 Real heavenly videos are available in Thenral/Tamil’s mind.

  13. @Raman,
    /we have roads now,during socialist period we had only pot holes/
    Do you mean to say that all highways in the country were built only during previous NDA regime and after Modi became PM?During previous NDA regime,they were busy in introducing Saraswathivandana in all schools and in the present NDA regime,they are busy with cow protection act,Sanskrit Week,Ghar vapsi,writing new history of India like “airplanes were there in vedic period itself,Vinayaka got his elephant head through plastic surgery”etc.
    /why not ICF?
    You told Rebecca Mary that she should not think as a second grader.But you do not know the expansion for ICF.ICF means Integrated Coach Factory.It has got nothing to do in laying railway tracks.

      • என்ன பேரா இருந்தா என்ன சார் , தகர டப்பா பண்ற கம்பெனி !

        அந்த டப்பாவையும் மியன்மார் மாதிரி வளர்ந்த?!! நாடுகளுக்கு ஏற்றுமதி பண்றீங்க , சூப்பர் சார்.
        சோசியலிசம் பிரமாதம் . அதே மாதிர் HPF உடைய ப்ளாக் அண்ட் ஒயிட் பிலிம் ரோலை உகாண்டாவுக்கு ஏற்றுமதி பண்ணலாமே 🙂

        தங்க நாற்கர சாலை திட்டம் யார் தொடங்கியது சார் ?

        • எதற்காக இந்த புலம்பல் இராமனிடம் இருந்து வருகின்றது என்றால், அவ-ருக்கு இருக்கும் திமிர், ,அமெரிக்காவின் மீதான கள்ள காதல் ,ஏகாதிபத்தியம் மீதான தாய் நாட்டை அடகு வைக்கும் ஆசை தான் காரணம். சென்னை மின்-ரயில் பயணம் செய்வர்கள் அனைவருமே ICF உற்பத்தி செய்த கோச்களில் தான் பயணம் செய்கின்றார்கள். ICF நிறுவனம் இந்தியா பெருமை படுவதற்கான ஒரு மத்திய அரசு நிறுவனம். மூன்றாம் உலக நாடுகள் ICF உற்பத்தி செய்த கோச்களை வாங்குகின்றது என்றால் cost ,efficiency, reliabilityஆகியவை காரணமாக இருக்க , அமெரிக்கனின் shoe வை நக்கிக்கொண்டு இருக்கும் இராமன் என்னத்துக்கு போட்டு உள்ள கோர்ட் சூட்டிலேயே முத்திரம் போக வேண்டும் ? ___________________________________

          • @Thamil

            தத்துவ ரீதியாகவே தர்க்கம் புரிகிறேன். ஆசிரிய பணியாற்றும் நீங்கள், அதே அளவில் தர்க்கம் புரிந்து கண்ணியமாக பொது இடத்தில் நடந்து கொள்ளுங்கள்

            • Raman, தகர டப்பா தத்துவத்துடன் பேசும் உமக்கு எல்லாம் நான் கொடுத்து உள்ள பதில் குறைவு தான். இன்னும் உமது சூடு சுரனைக்கு உறைக்கும் படியாக தான் பதில் கொடுத்தாக வேண்டியுள்ளது. உள்நாட்டு தயாரிப்பான ICF ன் ரயில் பெட்டிகள் தான் இந்தியாவெங்கும் பயன்பாட்டில் உள்ளது . பயன் படுத்தும் எங்களுக்கு பெருமிதமே . மெட்ரோ ,மோனோ ரயில்களுக்கும் பெட்டிகள் இந்தியாவிலேயே செய்யவேண்டும் என்றும் கோருகின்றேம். அதர்க்கான R & D முயற்சிகளும் ICF க்கு தேவை என்று வளியுருத்துகின்றேம். ஆனாலும் காங்கிரஸ் அரசும் சரி ,மோடியின் அரசும் சரி சுய சார்பு உடைய தொழில் நுட்பத்தை அந்நிய நேரடி முதலீடு மூலம் குழிதோண்டி புதைக்க தான் முயலுகின்றது. நீர் எங்கள் இந்தியர்களின் தொழில்நுட்ப முன் முயற்சிகளை தகர டப்பா என்று ஏளனம் செய்யும் போது ஏற்படும் தார்மிக கோபத்தின் வெளிப்பாடு தான் இது :

              அதே நேரத்தில் அமெரிக்கனின் தத்துவார்ந்த கள்ள காதலின் பிறப்பான உமக்கு எல்லாம் அமெரிக்கனின் shoe வை நக்குவதில் தான் சுய இன்பம் என்றால் அதற்கு பெயர் தான் ஏகாதிபத்திய அடிவருடி தனம் என்பது. உம்மை போன்றோருக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கழிவு கூட இனிக்கும் என்றால் அதனை சொல்லிதானே ஆகவேண்டும். அதில் உமக்கு எதற்கு கோபம் வரவேண்டும் ?

              //தத்துவ ரீதியாகவே தர்க்கம் புரிகிறேன். ஆசிரிய பணியாற்றும் நீங்கள், அதே அளவில் தர்க்கம் புரிந்து கண்ணியமாக பொது இடத்தில் நடந்து கொள்ளுங்கள்
              //

              • சோசியலிச தத்துவத்தால் ஏற்பட்ட விளைவை நையாண்டி செய்கிறேன் . இனிமேலும் செய்வேன் . தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதும் பண்பற்ற உம்மோடு இனி உரையாட போவது இல்லை …

                • இராமன் ,

                  இந்தியர்களாகிய நாங்கள் விடுதலைக்கு பின்பு வந்த நேரு ,சாஸ்திரி ,இந்திரா அரசுகளின் சாதகமான கொள்கை முடிவுகள் காரணமாக சில துறைகளில் [விண்வெளி ,இராணுவம் ,பால்உற்பத்தி] செய்து சாதனைகளை கண்டு நாங்கள் மகிழும் அதே தருணத்தில், இன்றைய தரகு முதலாளித்துவ இந்திய அரசின் கொள்கை முடிவுகள் இந்திய பொருளாதரத்தை சீர் குலைப்பதை கண்டு ஏகாதிபத்திய அடிவருடியான உன்னை போன்று இன்புராமல் ,சோசியலிசத்தை முன்னெடுக்கும் நாங்கள் எதிப்பு குரலை கொடுத்துக்கொண்டும் ,மக்களிடம் இந்த நாசகார அரசை அம்பல படுத்திகொண்டும் தான் இருப்போம்.

                • மேதகு. வினவு நிர்வாகிகளுக்கு….

                  தங்களின் இணையதளத்தில் வெளியாகும் கட்டுரைகளை கடந்த 4 ஆண்டுகளாக வாசித்து வருகிறேன். மேலும் கடந்த ஓராண்டாக தங்களின் இணையத்தில் என்னுடைய கருத்தினை மறுமொழிகளின் வாயிலாக பதிவு செய்து கொண்டு வருகிறேன்.தங்களின் வினவு தளத்தில் தாங்கள் அளித்திருக்கும் மறுமொழி என்கிற கருத்து சுதந்திரம் நாளுக்கு நாள் தனி நபர் தாக்குதலுக்கு உரிய களமாகவும் , பண்பாடற்ற வார்த்தைகளின் புகலிடமாகவும் மாறி வருகிறது என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

                  தங்களின் இணையத்தில் ஒரு கட்டுரையை வெளியிட்டு அது சார்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொள்ள எல்லா தரப்பினரையும் தாங்கள் அழைக்கிறீர்கள், அதில் தங்களின் பொதுவுடைமை கொள்கை சார்ந்து இருப்போர், மாற்றுக் கருத்துக் கொண்டோர் என்று அனைவரும் தான் அடக்கம். இதில் ஒரு தரப்பினர் இன்னொரு தரப்பினரை தர குறைவாக தாக்கும் போக்கு அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது, இதனை தாங்களும் கண்டுக்கொள்ளாமல் இருப்பது அவ்வளவாக நல்லதல்ல.

                  தங்களின் மறுமொழி குறித்த கொள்கைகளில் இவ்வாறு கூறி உள்ளீர்கள்..

                  //ஆனால் எல்லா விவாதத்திலும் கருத்தற்ற தனிநபர் தாக்குதல், வசைச்சொற்கள், அநாகரீக மொழிகளை தவிர்க்க வேண்டும். அத்தகைய பின்னூட்டங்கள் பகுதி அளவிலோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்…//

                  ஆனால், நிதர்சனத்தில் இதை நீங்கள் கடைப்பிடிப்பதாக தெரியவில்லை. நான் யாரையும் பெயர் குறிப்பிட விரும்பவில்லை, இங்கு தங்களை பொதுவுடமையின் காவலர்களாக நினைத்துக் கொள்பவர்கள் மாற்றுக் கருத்து கொள்பவர்களை வகை தொகை இல்லாமல் தரம் தாழ்ந்து பேசுவது, விமர்சிப்பது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுப்படுவது மிகவும் மன உளைச்சலை எற்ப்படுத்துவதாக இருக்கிறது. ஆகவே, இதை தாங்கள் கவனத்தில் கொண்டு எதிர்க்காலத்தில் இது போன்ற அனநாகரீக சொல்லாடல்கள் நிகழா வண்ணம் மாற்றுக் கருத்து கொண்டவர்களின் கண்ணியத்தை காக்கும் பொறுட்டு நடவடிக்கை எடுக்கும் படி தங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். வினவின் மறுமொழி நாகரீகத்தை காக்கும் பொறுட்டு தாங்கள் செயல்ப்படுவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி

                  • இராமனின் கீழ் கண்ட பிறர் [Rebecca Mary,தென்றல் ,தமிழ் ] மீதான பொன்மொழிகளை[தனிநபர் தாகுதல்களை] எல்லாம் தனிநபர் தாக்குதல்களாக நினைக்காதவர்களுக்கு, தமிழ் திருப்பி தர்க்க ரீதியாக தாக்கும் போது மட்டும் ஏன் கோபம் வரவேண்டும். ? தமிழின் வார்த்தைகளில் மட்டும் அப்படியென்ன பண்பாடு அற்ற சொற்களை க்ண்டுவிட்டிங்க Rebecca Mary? “போட்டு உள்ள கோர்டு சூட்டில் ஏன் மூத்திரம் போகவேண்டும் என்பதோ , அமெரிக்கனின் தத்துவார்ந்த கள்ள காதலின் பிறப்பான,அமெரிக்கனின் shoe வை நக்குவதில் தான் சுய இன்பம் என்றால்,அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கழிவு கூட இனிக்கும் ” இவை எல்லாம் இராமனின் மீதான அரசியல் ரீதியிலான தாக்குதல்கள் தான் என்று என்னால் நிருபிக்க முடியும்.

                    ***இருபது வருடத்தில் என்ன ஆகிவிட்டது என்று உளறல் வேறு!

                    ***இதை புரிந்து கொள்ளும் அறிவோ பக்குவமோ உங்களுக்கு இல்லை !

                    ***அப்போதும் அமெரிக்க சதி என்று புலம்பி ஒப்பாரி வைத்து கொண்டு இருப்பீர்கள்

                    ***கஷ்டகாலம்ட சாமி , தென்றல் தமிழுக்கு இருக்கும் வியாதி வந்துவிட்டது .யதார்த்த வாழ்கையை புரிந்து கொள்ள இயலாமல் கற்பனை உலகில் வாழ ஆயத்தமாகிவிட்டீர்கள் போல் இருக்கிறது

                    ***இதைதான் இரண்டாம் வகுப்பு மாணவனுக்கு உள்ள அறிவுடன் சிந்திப்பது எனபது!

                    ***கிணற்று தவளைக்கு கடல் எவ்வளவு பெரியது என்று எப்படி சொல்லி புரிய வைப்பது

                    ***அடுத்து உளவியல் ரீதியாக , அரைகுறையாக புரிந்து கொண்டவர்களுக்கு முற்றும் புரிந்து கொண்டோ என்கிறே அதீத கான்பிடன்சு உண்டு . அதை உங்களிடம் பார்கிறேன் .

                    மேல் உள்ள இராமனின் புண்ணாக்கு மொழிகளுக்கு எல்லாம் Rebecca Mary பதில் கூறுவாரா ?

                  • மேரி அவர்களுக்கு

                    மறுமொழி விவாதத்தில் நீங்கள் கூறும் அளவில் அநாகரிகமாக எழுதுபவர் இந்தியன் போன்றோர் என நினைக்கிறோம். வினவில் எமது கொள்கைகளை கட்டோடு எதிர்ப்போருக்கே அதிக சுதந்திரம் உள்ளது. அதனால்தான் இந்தியன் போன்றோர் அப்படி எழுதுகிறார்கள். இதை வெளியிடுவதற்கு காரணம் ஒரு சமூகப்பிரச்சினை, அல்லது கருத்து சார்ந்து எதிர்ப்போரின் தரம் மற்றும் மனநிலை குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் எமது கொள்கை சார்ந்து பேசுவோருக்கு அத்தகைய ‘சுதந்திரத்தை’ நாங்கள் வழங்குவதில்லை.

                    மேலும் எமது இயக்கம் சார்ந்து விவாதிக்கும் தோழர்கள் இங்கே அதிகமில்லை. தமிழ் போன்றோர் எமது இயக்கம் சார்ந்த தோழரல்ல. வினவின் சில கருத்துக்கள் குறித்து வேறுபாடும், எதிர்ப்பும் கொண்டவர்தான் அவர். கடுமையான வார்த்தைகளைப் போட்டு அவர் எழுதுவதில் எமக்கு உடன்பாடில்லை. ராமன், அதியமான் போன்றோர் கடுமையான வார்த்தை போட்டு எழுதுவது பிரச்சினை இல்லை. முதலாளித்துவமே கொடூரமானது எனும் போது அதை ஆதரிப்போர் பேசுவது நாகரீகமாக இருக்க வேண்டியதில்லையே? அரவிந்தன் நீலகண்டன் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அபிமானிகளது கருத்துக்கள் கூட இங்கே தணிக்கையின்றி வெளியிடப்பட்டுள்ளது.

                    மேலும் எமது தோழர்கள் சிலர் கூட கடந்த காலத்தில் நிதானமாக எழுத வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறார்கள். பொதுவில் கம்யூனிசத்தை ஆதரித்தாலும், எமது நிலைப்பாடோடு கடும் வேறுபாடு கொண்டு அநாகரிகமான வார்த்தைகளோடு விவாதித்து வந்த செந்தில் குமரன் போன்றோரை குறிப்பிட்ட காலம் தடையே செய்திருக்கிறோம்.வேறு பெயர்களில் அதியமான் வரும்போது அவரது பேரை மாற்றாமல் போடுமாறு கோரியிருக்கிறோம். அவர் மறுக்கும் போது நாங்களே அவரது பெயரை பினாமி பெயரோடு சேர்த்து வெளியிட்டு வந்தோம்.

                    குறிப்பிட்ட கட்டுரைகளுக்கு தொடர்பில்லாத கருத்துக்கள், முழுப்பொய்கள், சம்பந்தமே இல்லாமல் மதவெறி, சாதிவெறியைக் கக்குவது போன்றவற்றை இப்போதும் வெளியிடுவதில்லை. மற்றபடி இவற்றை காரண காரியத்தோடு குறிப்பிட்ட கட்டுரைகளில் வரும் போது அனுமதிக்கிறோம்.

                    பொதுவில் வினவில் இருக்கும் சுதந்திரம் வேறு எங்கேயும் இருப்பதாக தெரியவில்லை. பல தளங்களில் மறுமொழியே போட முடியாது. இதற்கு மேல் இங்கே நீங்கள் எதிர்பார்க்கும் ‘நாகரீகம்’வருவது எங்கள் கையில் இல்லை. வாசகர்களே அத்தகைய போராட்டத்தில் இதை கொண்டு வர முடியும். இறுதியாக அநாகரிகமான கருத்துக்கள் என்று நீங்கள் கருதுவதை எங்களது கவனத்திற்கு கொண்டு வரலாம். நன்றி

                    • //அதியமான் போன்றோர் கடுமையான வார்த்தை போட்டு எழுதுவது பிரச்சினை இல்லை. முதலாளித்துவமே கொடூரமானது எனும் போது அதை ஆதரிப்போர் பேசுவது நாகரீகமாக இருக்க வேண்டியதில்லையே? ///

                      @வினவு : இது மிகவும் ஒரு தலைபட்சமான குற்றச்சாட்டு. தமிழ் போன்றவர்கள் மிக இழிவாக பேசும் போது, ‘எதிர்வினையாக’ தான் நானும் ‘கடுமையாக’ பேச வேண்டிய கட்டயத்தில் தள்ளபடுகிறேன். மற்றபடி நண்பர் திப்பு போன்றவர்களிடம் பல வருடங்களாக இது போன்ற பிரச்சனைகள் எதுவுமில்லாமல் உரையாடுவதை மறந்துவிட்டு பேச வேண்டாமே.

                      //முதலாளித்துவமே கொடூரமானது எனும் போது அதை ஆதரிப்போர் பேசுவது நாகரீகமாக இருக்க வேண்டியதில்லையே? ///// 🙂

                      இல்லை. காலனியாதிக்க முதலாளியம், ஃபாசிச வடிவ முதலாளியத்தையும், ‘தூய’ முதலாளிய வடிவத்தையும் குழப்பி கொள்வதால் இப்படி கருத்துகிறீர்கள். ’தூய’ கம்யுனிசம் சாத்தியம் என்று நீங்க நம்புவதை போல் ’தூய முதலாளியம்’ சாத்தியம் என்று நான் நம்புகிறேன். குறைந்தபட்சம் லிப்ரல் பாணி ஜனனாயக வடிவ முதலாளியம் இன்று பல வளர்ந்த நாடுகளில் ஓரளவு (ஓரளவு தான்) சாத்தியமாக்கியுள்ளது. எல்லாவற்றையும் எளிமைபடுத்தி, கருப்பு/வெள்ளையாகவே பார்க்க பழகிய உங்களுக்கு மேலும் விளக்க முடியாது. over simplification and ill informed view points…

                    • @வினவு மற்றும் @அதியமான் ,

                      தரகு முதலாளித்துவ அடிவருடிகளான இராமனையும் ,அதியமானையும் அழைப்பதற்கு நான் பயன் படுத்திய வார்த்தைகள் கடுமையானவை தான் என்பதை ஒத்துகொள்கின்றேன். ஆனாலும் எனக்கு அவை மிக குறைந்த அழுத்தம் உள்ள வார்த்தைகளாகவே தெரிகின்றன. எனக்கு அவை முழு திருப்தியை அளிக்கவில்லை. இன்னும் அழுத்தம் அதிகமான ஆற்றல் உள்ள வார்த்தைகளை இந்த தரகு முதலாளித்துவ அடிவருடிகளை விளிர்க்க பயன் படுத்த முயற்சிக்கின்றேன். நன்றி .

                      வினவு வாசகர் பயன்படுத்திய நேரு மாமாவுக்கு எதிர்வினையாக அதியமான் பயன் படுத்திய “”தெ..””” என்ற வார்த்தை அதியமானுக்கு அதிக கிளர்சியை அளித்திருக்கும் என்ற நிலையில் ,இவரை போன்றவரை எல்லாம் எவ்வளவு மட்டமான அரசியல் ரீதியான வார்த்தைகளை கொண்டு வேண்டுமானாலும் அழைக்கலாம். அதில் தவறே இல்லை. ஆமாம் கடுமையான வார்த்தைகளை மக்களை தரகு முதலாளிகளிடம் பினைவைக்க பாடுபடும் இந்த இழிசெயலாளர்களுக்கு எதிராக பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை .

                      அப்புறம் அதியமான் , ஒவொரு சனி கிழமையாக போய்கொண்டு உள்ளது. எப்போது எம்மை சந்திபதாக உத்தேசம் ?

                  • ***இதைதான் இரண்டாம் வகுப்பு மாணவனுக்கு உள்ள அறிவுடன் சிந்திப்பது எனபது!

                    கூற்று :- எம் ஜி ஆர் நல்லவர்
                    இது எவ்வாறு அப்படி ஒருவர் கூறுகிறார் என்றால் , பிறர் சொல்ல கேட்டு அதை ஆராயாமல் அப்படியே ஏற்று திரும்ப கூறுதல்.

                    மேரியின் பதில் (Hearsay ) போன்று இருந்ததால் அப்படி சொல்லி இருந்தேன் . அதுவும் அவருடைய அந்த கூற்றிற்கு அவ்வாறு சிந்திதிருகிறார் எனபது தான் பொருள்.It is applicable to only that answer. அவரையே இரண்டாம் வகுப்பு மாணவன் என்று மட்டம் தட்டும் எண்ணம் இல்லை அந்த பொருளும் இல்லை .

                    ஆனாலும் சற்று கடுமையான வார்த்தை பிரயோகம் தான். ஒப்பு கொள்கிறேன்.பொது புத்தி என்று வினவு பயன்படுத்தும் வார்த்தையை பயன்படுத்தி இருந்திருக்கலாம்.கனி இருப்ப காய் கவர்ந்தற்று.

                    மற்ற கருத்துகள் கடுமையான விமர்சனம் என்ற அளவில் தான் வரும், தர குறைவான விமர்சனம் என்று வராது .

                    17.1.1.1.1.1.1.2.1 சகிக்க வில்லை

                    • ராமன்….

                      //***இதைதான் இரண்டாம் வகுப்பு மாணவனுக்கு உள்ள அறிவுடன் சிந்திப்பது எனபது//

                      நீங்கள் கூறியதை நான் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை… அதில் எந்த வித கடுமையான வார்த்தை பிரயோகங்களும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.அப்படி எடுதுக்கொண்டிருந்தல் அதற்க்கு நான் அப்போதே பதில் எழுதி இருப்பேன்.

                    • இராமன் ,

                      உமக்கு சகிக்கின்றதா இல்லையா என்பது பிரச்சனை இல்லை இராமன். உண்மை எதுவென்பது தான் முக்கியம். அடுத்தவரை பார்த்து நீர் கூறும் வார்த்தைகள் [ உளறல், அறிவோ பக்குவமோ இல்லை, புலம்பி ஒப்பாரி வைத்து ,வியாதி வந்துவிட்டது, இரண்டாம் வகுப்பு மாணவனுக்கு உள்ள அறிவுடன்,கிணற்று தவளை, அரைகுறையாக புரிந்து கொண்டவர்களுக்கு] எல்லாம் உம்மை பொறுத்தவரையில் கடுமையான விமர்சனம் என்ற அளவில் மட்டும் தான் வரும் என்றால் , அவை தனிநபர் தாக்குதல் இல்லையென்றால் எம்முடைய கருத்துகளும் உம்மீதான மிக கடுமையான அரசியல் ரீதியான் விமர்சனங்கள் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இத்தகைய உமது வார்த்தைகள் எல்லாம் சமுகத்தில் பழக்கத்தில்,புழக்கத்தில் உள்ள வார்த்தைகள் என்பதாலேயே அவைகள் எல்லாம் பண்பட்ட ,பண்பாடு உடைய வார்த்தைகள் ஆகிவிடாது. உமக்கு என்னுடைய விமர்சனங்கள் விளங்கவில்லை என்றால் விளக்குகின்றேன் .., புரிந்து கொள்ள முயலவும்.

                      போட்டு உள்ள கோர்டு சூட்டில் ஏன் மூத்திரம் போகவேண்டும்—>நீர் அணிந்து உள்ள உடை , உடம்பில் ஓடும் ரத்தம் இந்தியாவினுடையது என்னும் போது இந்தியாவை பற்றி என்ன மயிற்றுக்கு தகர டப்பா என்று அவதூரு செய்யவேண்டும். உம்மை பார்த்து நான் இந்தியன் இல்லை எனக்கு இந்திய பார்போர்ட் வேண்டாம் என கூறிவிட்டு வேண்டுமானாலும் அமெரிக்கனுக்கு அடிவருடி தனத்துடன் அடிமையாய் இருக்கலாமே ! மேலும் விளக்குவது என்றால் , இரண்டு வயது குழந்தை தான் தன்னை அறியாமல் அது அணிந்து உள்ள உடையிலேயே ஆய் மற்றும் சிறுநீர் கழிக்கும். அதற்காக தான் அதற்கு hugis போன்ற நாப்கின் அணிவிக்கின்றோம். நீரும் அந்த இரண்டு வயது குழந்தையின் மனோ நிலையில் தான் இந்தியாவின் மீதும் ,சோசியலிச கொள்கைகள் மீதும் அவதூரு செய்கின்றீரோ ?

                      அமெரிக்கனின் தத்துவார்ந்த கள்ள காதலின் பிறப்பான–> ஆம் ஆப்தே கட்சிக்கும் அதன் தலைவருக்கும் என்ன அரசியல் சிருஷ்டியின் ரகசியம் உள்ளதோ அதுவே உமக்கும் பொருந்தும். என்ன ஆம் ஆப்தே கட்சிகாரன் தன் அரசியல் பிறப்பை பற்றி வெளியே வெளிப்படையாக பேசமாட்டான். ஆனால் நீர் அமெரிக்கனின் மீது உள்ள பாசத்தை நேரடியாகவே வெளியே காட்டிகொள்வீர். இந்தியனா பிறந்துட்டு அமெரிக்கனுக்கு சொம்படிகின்றீர் அல்லவா அதற்கு தான் உம்மை பார்த்து அமெரிக்கனின் தத்துவார்ந்த கள்ள காதலின் பிறப்பான இராமன் என்று விளிகின்றேன்.

                      அமெரிக்கனின் shoe வை நக்குவதில் தான் சுய இன்பம் என்றால்–> மேலே உள்ள இரு விளக்கத்தையும் ஒன்றாக சேர்த்து படியுங்கள் இதற்கு பொருள் புரியும்.

                      அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கழிவு கூட இனிக்கும்—> மன்னிக்கவும் இராமன் உண்மையில் நான் கூற வந்தது ஏகாதிபத்திய அமெரிக்கனின் கழிவு கூட உமக்கு இனிக்கும் என்பது தான்.இப்போது பொருள் மிக சரியாக உமக்கு பொருந்துகின்றது அல்லவா ?

                    • //மக்களை தரகு முதலாளிகளிடம் பினைவைக்க பாடுபடும்///

                      இல்லை. உழைக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முதலாளித்த்வத்தை சரியாக, ஒழ்ங்காக செயல்படுத்துவது தான் சரியான வழிமுறை என்று நான் நம்புவதால், ’முதலாளிகளை’ ஆதரிக்கிறேன். பாட்டளி வர்கத்தில் ‘எதிரிகள்’ அவர்கள் என்று வெறுப்பை கட்டமைப்பது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்துகிறது என்பதே வரலாறு. மாற்றாக முதலாளிகளை (தொழில் முனைவோர்கள் என்ற சொல்லாடலே சரி, முதலாளி என்பதை விட) சுதந்திரமாக தொழில் செய்ய அனுமதித்த நாடுகளில் தான் பாட்டாளி வர்கத்தின் வாழ்க்கை தரம் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. வட மற்றும் தென் கொரியாவின் கடந்த 60 ஆண்டு கால வரலறாறே சாட்சி.

                      உலகில் மிக அதிக எண்ணை வளத்தை வைத்து கொண்டு இன்று வெனிசுலா கடுமையான உணவு தட்டுபாட்டில், மிக கடும் விலைவாசி உயர்வில் திண்டாட தவறான பொருளியல் கொள்கைகளே காரணம். மாற்றாக அதன் அண்டை நாடான சிலே கடந்த 40 ஆண்டுகளாக மாற்று பாதையில் சென்று இன்று வளமாக, ஸ்திரமாக உள்ளது. Facts speak for themselves.

        • The coaches manufactured by ICF are so sturdy that they withstand the overload (about 300-400 passengers in a Mumbai fast suburban train coach-which is meant to carry only 50-70 passengers).It is learned that after initial purchase of coaches for Chennai Metro Rail from Brazil,orders will be placed with ICF for further supply.About 80 lakhs people travel by suburban trains in Mumbai.

          • சூரியன்,

            50-70 பயணிகள் பயணிக்க கூடிய பெட்டியில் 300-400 பயணிகளை அடைத்து அனுப்புவது அந்த பெட்டியின் உறுதிக்கு சாட்சியாக இருக்கலாம். ஆனால் அது நமக்கு பெருமையான காரியம் அல்ல. மக்கள் தொகை அதிகரிக்க அதற்கேற்ற வகையில் அதிக எண்ணிக்கையில் வண்டிகள், பெட்டிகள், வசதிகள் செய்து தரவேண்டியது அரசின் கடமை. ஆனால் ஆட்சியாளர்கள் கமிஷன் எங்கு கிடைக்கும் என்று தான் அலைகிறார்கள்.

            யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்..

        • Golden Quadrilateral Project-First Phase-5846 km-connecting four metros in four lanes-was of course launched by A.B.Vajpayee in 2001.It was estimated to cost Rs600 billion (US$9.4 billion)It was planned to complete by Jan,2012.

          The project was completed within the original deadline.Govt of India announced the completion on 7th Jan,2012.Not only that,the project was executed within Rs324.92 billion(that is slightly above 50% of the original project cost)

          So,Mr Raman,even though the project was launched during NDA regime,major part of the project was executed by UPA 1 and UPA 2 regimes.In Sep,2009,it was announced that the existing four laned highways would be converted to six lane highway.The expansion project was in progress.

          In Aug,2003,Satyendra Dubey,a Jharkhand based project director wrote a letter directly to the Prime Minister alleging sub-contracting of the highway work by the contractors to small builders with no technical expertise in a segment of the highway in Bihar.Dubey was transferred to Gaya against his wishes and was murdered on 27th Nov,2013.The NHAI eventually admitted that Dubey”s charges were substantiated and implemented “radical reforms”in selection and contract procedures.After a lengthy CBI investigation into Dubey”s murder,Mantukumar and three accomplices were arrested and charged with murder.Even though Mantu escaped from court on 19th Sep,2005,he was recaptured after a month.In 2010,Mantu and two others were convicted of murder and other offenses and sentenced to life in prison.

          My point is that not only the major part of GQ Project was executed during UPA regimes but also effective follow up action in the whistle-blower”s murder case was also taken by that regime and the culprits were sentenced.

            • UPA regime,had a streak of socialist ideals,even though it followed reform oriented policies.That is why,they brought Food Security Act and undiluted Land Acquisition Act with due provisions to safeguard the interests of the farmers.It brought Mahatma Gandhi Rural Employment Guarantee Scheme and millions of rural poor were benefited.

              • //It brought Mahatma Gandhi Rural Employment Guarantee Scheme and millions of rural poor were benefited./

                What was achieved? For that 1.5 lakhs crores Govt could have built so many things and still have generated jobs. Only benefit from that project is AADHAR. Other than that value addition of that project is zero

                • As usual,Raman NUNIPPUL MEYGIRAAR.How he says that MGNREGA”s value addition is zero?Where from he got this mis-information?Only from the mass-media.Mass-media controlled by big industries will give the mis-information only since this formal sector is greedy in grabbing all wealth including the savings of workers.They want to grab even from NPS and EPF.This formal sector (big industries including hospitality sector)could utilize domestic and foreign capital and credit to the tune of 54 lakh crore during the past 2 decades.In turn, they could generate employment opportunities to 21 lakh persons only.But,the much neglected SME sector besides small business (including our Annaachi Kadais)even with inadequate capital or credit support,could generate crores of job opportunities.This view was not expressed by communist leaders.The above view was expressed by none other than Gurumurthi.Tax concessions and subsidies to the tune of about Rs540000 crores are extended to big industries every year.All inclusive subsidies to social sector is only about Rs200000 crore every year.Even from this allocation of Rs 200000 crore,Jetley has effected massive cuts in his recent budget.

                  Out of assets created under MGNREGA, highest assets were created in the area of Water Conservation and Water Harvesting (25%) followed by Rural Connectivity(16%),Provision of Irrigation to lands owned by Backward Classes(16%)Land Development(15.5%)Renovation of Traditional Waterbodies(7.5%)Micro Irrigation Works(6%)Drought Proofing(5%)Flood Control and Protection(4.5%)and any other activity approved by Ministry of Rural Development(1.8%).Top 15 States in creation of assets under this scheme are AP,UP,MP,Gujarat,WB,Karnataka,Rajasthan,Jharkhand,Kerala,Chhatisgargh,Bihar,Tripura,Orissa and Uttarakhand.
                  UP created highest number of assets under Rural Connectivity.Kerala tops in creation of assets under Flood Control and Protection.AP tops in Water Conservation and Harvesting,MP tops in Drought Proofing,AP again tops in Micro Irrigation Works.MP again tops in Provision of Irrigation facilities to the land owned by SC/ST,AP again leads in Renovation of Traditional Water Bodies and in Land Development.UP again leads in other activities approved by the Ministry.
                  According to a study made on assets created under this scheme in MP,Rajasthan,Karnataka and AP,MP has fared better in terms of physical asset creation (wells,ponds etc) on lands/farms of poor and marginal farmers.The study examined 580 structures created by MGNREGA and found that they are sustainable and will last for the designed period.Particularly,wells,check-dams and Anicuts have been built with rigid quality and technical inputs.These structures have design life of 10-15 years and through physical verification,they did appear sound enough to last for their designed life.In MP, most of the wells have been constructed on the private properties of poor and marginalized farmers,which have directly affected their agricultural productivity and livelihood.It has not only assured water supply to their crops but also facilitating for more than one crop.Around the wells,compulsory tree plantation and sock pit construction has ensured vegetation and fruit bearing garden,which shall be additional source of income for poor and marginalized farmers.Similarly,the new road connectivity has been developed for greater village-to-village interaction and cooperation.These all weather roads have improved connectivity although mostly used by animal carts and pedestrians
                  The above study was undertaken on projects implemented during the period-2008-2010.
                  To know more about the study click http://www.ressindia.org/main/online/files/journals/1/articles/44/submission/original/44-85-1-SM.pdf
                  Ministry of Rural Development maintains a site(2015) which contains a photo documentation of sustainable assets created under the MGNREGA.Click nrega.nic.in/netnrega/writerreaddata/circulars/Photobook_Documentation_Sustainable_Assets_Created.pdf.There are more than 450 photographs.

                • While thanking President for his address to the Joint Session of the Parliament,PM Modi described the MGNREGA Scheme of UPA as the worst monument on rural development.But why Jetley retained this Scheme and allotted funds for continuation in his budget?Raman should explain.

                  • //To know more about the study click http://www.ressindia.org/main/online/files/journals/1/articles/44/submission/original/44-85-1-SM.pdf//

                    Instead of saying zero, I will rephrase the question, Is it worth the cost? Here and there happened is not useful. It happened everywhere money spent is important.

                    I have cleaned drainage’s as part of NSS. I know how it will work.

                    //.But why Jetley retained this Scheme and allotted funds for continuation in his budget?Raman should explain.//

                    Freebies are like opium, it cannot be removed just like that.

                    Anyway, I thought they closed that project already

                    • It has not happened here and there.It was successfully implemented in 15 States and brought some marked difference in the lives of poor and marginalized farmers.It was worth the cost in those States.Since the other States,the backward districts were less,those States were not taken for study.As a result of this project,the minimum wages of agricultural labourers have increased.

  14. Raman says that ICF manufacture only “thagara dabba”.But the entire Indian population as well as in the importing countries travel by these coaches only.I do not know how Raman used to reach Chennai from his native village/town?Probably,he travels by “pushpaga vimanam”invented during the vedic period.

  15. கண்ணுக்கு முன்பு இவ்வளவு தரவுகள் Venezulaவின் பிரச்சனைகளை காட்டும்போதே அங்கே communist பாலாறும் தேனாறும் ஓடுதுன்னு சொல்றீய. உங்க மூளை எவ்வளவு மழுங்கடிக்கப்பட்டுள்ளது?

  16. சூரியன்,

    தகர டப்பா என்று ஏளனம் செய்வது எளிது.
    ஆனால் தகர டப்பாவை தாண்டி, அயல்நாட்டு வண்டிகளை மிஞ்சிய எஞ்சின் தொழில்நுட்பத்தை நம்மவர்கள் ஏன் வளர்த்து கொள்வதில்லை என்ற வருத்தம் என்னிடம் எப்போதும் உள்ளது.

    மூன்றாம் உலக நாடுகளுக்கு பெட்டிகளை அனுப்புவதில் மாறுமே திருப்தி அடைந்து விடுகிறோமே, ஏன் வளர்ந்த நாடுகள் நம் பொருட்களை வாங்கும் அளவுக்கு சிறந்த பெட்டிகளை உருவாக்க நம்மால் முடியாதா?

    The main reason for this problem is that as Indians, we are so much comfortable with mediocrity and average performance and not interested to strain ourselves more towards Excellence.

    • கற்றது கையளவு,

      முதலில் உள்நாட்டு தேவைக்கு ஏற்ற கோச்சுகளை செய்வது என்பது முக்கியமானது. அத்தகைய கோச்சுகளை I C F தரத்துடன் தான் [according to standards ] உற்பத்தி செய்து கொண்டு உள்ளது. மேலும் நம்மிடம் இருந்து கோச்சுகளை வாங்கும் நாடுகளும் அவர்களின் தேவை அறிந்து தானே வாங்க போகின்றார்கள். வெளிநாட்டில் இருந்து மெட்ரோ ,மொனோ ரயில்களுக்கு தேவையான கோச்சுகளை வாங்குவது என்றும் , உள்நாட்டில் உற்பத்தி செய்ய தேவை இல்லை என்று மத்திய ,மாநில அரசுகள் முடிவு செய்துவிட்டபின்பு ICF ன் தொழில் நுட்பம் எப்படி வளரும்? நேருவின் அரசாங்கம் சுயசார்புடன் இந்தியா இருக்க வேண்டும் என்ற கொள்கை முடிவை எடுத்தால் தான் இன்று ICF இருக்கிறது. ஒருவேலை இன்றைய பிஜபி , நேற்றைய காங்கிரஸ் அரசுகளை போல் நேருவும் வெளிநாட்டில் இருந்து கோச்சுகளை வாங்கிக்கொள்ளலாம் என்று முடிவு எடுத்து இருந்தால் ICF கூட கானல் நீராக தான் போயிருக்கும். எனவே ICF அதன் தொழில் நுட்பத்தை மேன்படுத்தி கொள்ள வேண்டுமானால் அதற்கு சாதகமான கொள்கை முடிவை மத்திய அரசு தான் எடுக்க வேண்டும். அதாவது ICF மெட்ரோ ,மொனோ ரயில்களுக்கு தேவையான கோச்சுகளை உற்பத்தி செய்ய தேவையான தொழில் நுட்பத்தை சுயமாக பெருவதற்கு தேவையான R & D கான நிதி உதவிகள், அனுமதி மத்திய அரசால் கொடுக்க படவேண்டும் . சும்மாவே ஊர் சுற்றி வெளிநாட்டில் இருந்து பன்னாட்டு முதலாளிகளை அழைத்து வரும் பிரதமருக்கு உள்நாட்டு தொழில் நுட்ப மேன்பாடு பற்றி கவலை ஏதேனும் இருக்குமா ?

    • கற்றது கையளவு,

      தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னேறாதமைக்கு காரணம் இந்தியர்கள் முழுமையான திறனுடன் வேலை செய்யவில்லை என்று பிரச்சனையை பொதுமைபடுத்துவது[generalization ] என்பது திர்வை நோக்கி நம்மை அழைத்துச்செல்லது.இந்தியாவின் தொழில் நுட்பம் வளர வேண்டும் என்றால் அதற்கு என்ன செய்யவேண்டும். அப்படி தொழில் நுட்பம் வளர இந்தியாவிலேயே ஏதேனும் உதாரணங்கள் உண்டா என்று பார்க்க வேண்டும். எனக்கு தெரிந்த உதாரணம் ISRO மற்றும் DRDO. இந்திரா காந்தியின் முன்முயற்சியில் தொடங்க பட்ட இவை இரண்டுமே இந்திய வானியல் மற்றும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனங்கள். அவற்றின் சாதனைகள் இந்தியாவை உலகில் வானியல் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தில் 6ஆவது இடத்தில் இன்று நிறுத்தியுள்ளது. GSLVக்கான கிரயோஜெனிக் இன்ஜின், உலகிலேயே மிகவிரைவாக செல்லும் BRAMAS ஏவுகணை இவைகள் எல்லாம் எப்படி இந்தியாவிற்கு எப்படி சாத்தியம் ஆனது. சுய தொழில் நுட்ட்பத்தை நோக்கி நாம் சென்றதால் தானே ?

      சுய தொழில் நுட்ட்பத்தை முன்னெடுத்து செல்லவேண்டும் என்று கொள்கை முடிவை எடுக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது ? சிந்தியுங்கள் .

      //The main reason for this problem is that as Indians, we are so much comfortable with mediocrity and average performance and not interested to strain ourselves more towards Excellence.//

      • தமிழ்,

        ISRO, DRDO சாதனைகளை ஒத்துக்கொள்கிறேன்.
        ஆனால் சில இடங்களில் இன்னும் நாம் பின்தங்கியே இருக்கிறோம்.

        சில காலம் முன்பு முழுக்க முழுக்க 1௦௦ சதவீதம் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் விமானங்கள் பற்றிய அறிவிப்புகள் வந்தன ஞாபகம் உள்ளதா? அதன் பின் என்ன ஆனது? விமானத்தின் டப்பா பகுதிகள் முதலில் எளிதில் செய்யப்பட்டன. விமானத்தின் முக்கிய பகுதிகளான எஞ்சின், புரோபல்லர் ஆகியவை தயாரிக்கும்போது தான் பிரச்சினை ஆரம்பமானது. நம் விஞ்ஞானிகள் பல முறை மீண்டும் மீண்டும் முயன்றும் தோல்வியே கிட்டியது. முடிவில் எஞ்சின், puropallar பகுதிகளை GE கம்பெனியிடம் வாங்கி பொருத்தி முடித்தார்கள். முடிவில் டப்பா பகுதியை மட்டும் செய்யப்பழகியவர்களாக நாம் அவமானப்படுகிறோம்.

        இன்னொரு வருத்தமான விடயம்.
        விடுதலை அடைந்து இத்தனை காலம் ஆகிய பின்னரும் நமது ரயில் வண்டி பெட்டிகளில் கழிவறை எப்படி இருக்கிறது பாருங்கள். மனித கழிவுகள் அனைத்தும் இன்னும் ரயில்வே டிராக்கில் தானே விழுகிறது. வண்டி சில நேரம் ஒரு ஊரில் நிற்க நேர்ந்தால் வண்டி கிளம்பிய பின் தண்டவாளத்தை பாருங்கள், எல்லாம் மனித கழிவுகள். இதெல்லாம் சுகாதாரத்திற்கு மிகவும் கெடுதி. மக்களின் சுகாதாரத்தின் மேல் ஆள்பவர்களுக்கு அவ்வளவு அக்கறை!

        இதற்கு ஒரு விடிவு காலம் எப்போது கிடைக்குமோ தெரியவில்லை.

        மக்களின் குறைகளை அரசு கேட்டு நிறைவேற்ற ஏதாவது தீர்வு உண்டா, யோசிக்கலாம்.
        முழு சோசலிசம் தான் தீர்வு என்ற ஒற்றை வரியில் நின்று விடாமல், இப்போது இருக்கும் நிலையிலேயே அரசை நம் கோரிக்கைகளுக்கு செவிமடுக்க என்ன வழி என்று யோசிக்கலாம்.

        வங்கிகளுக்கு, இன்சுரன்சு கம்பெனிகளுக்கு ஒரு ஒம்புட்ஸ்மன் (OMBUDSMAN) அமைப்பு உள்ளதை போல ஆள்பவர்களை கடிவாளம் கொண்டு அடக்க ஒரு மக்கள் அமைப்பு இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

        சமீப காலங்களில் சில நேர்மையான நீதிபதிகள் அரசின் குறைகளை சுட்டிக்காட்டி தெளிவான தீர்ப்புகளை வழங்குகிறார்கள். அதனால் நீதித்துறையே இதில் மக்களின் பிரதிநிதியாக இருந்தால் நன்றாக இருக்கும்.

        • கற்றது கையளவு, தொடக்கத்திலேயே வெகு எச்சரிக்கையாக சோசியலிசம் தான் ஒரே தீர்வு என்ற பதிலை கொடுக்காதிங்க என்று முன் நிபந்தனையை வைத்துவிட்டு விவாதத்தை தொடங்குகின்றிர்கள் கற்றது கையளவு. ரொம்ப சந்தோஷாமாக இருக்குங்க உங்களின் மனநிலையை நினைக்கும் போது. சரி பரவாயில்லை வேறு மாற்று வழியை பற்றி யோசிப்போம் ! நீங்க இன்னும் நாம வானியல் மற்றும் இராணுவ ஏவுகணை உற்பத்தியில் சாதித்தமைக்கான காரணத்தை புரிந்து கொள்ளவே இல்லை. 100% அந்நிய முதலீடு தவிர்க்கபட்ட துறைகள் இவை. [ஆனால் நளைக்கு எப்படியோ எனக்கு தெரியாது]. அதனால நம்முடைய தேவைக்காக நாமே நம்முடைய அறிவையும் உழைப்பையும் செலுத்தி கிரியொஜெனிக் எஞ்சின் , ஏவுகணை என்று ஆராய்ச்சி செய்து அதன் பின்பு சுயமாக உற்பத்தி செய்ய முடிந்தது. காரணம் இந்திரா காந்தியின் முன் முயற்சி. அப்துல் கலாமின் அக்கினி சிறகுகளை படித்து பாருங்க அவரு முழுமையாக அந்த திட்டங்களை பற்றி கூறியிருப்பாரு. அந்த திட்டங்கள் எல்லாம் ஏதே ஓராண்டு ,ஈராண்டு திட்டங்கள் கிடையாது. கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக நாம முயன்றதன் பலனாக தான் இன்றைக்கு அக்னி ஏவுகணையும் ,கிரியொஜெனிக் எஞ்சினும் நமக்கு சாத்தியம் ஆகியிருக்கு. இப்படி திட்டம் போட்டு சொந்தமாக தயாரிப்பதற்கு பெயர் தான் சுய சார்பு என்று உலகம் முழுக்க கூறுவாங்க.

          அதே நேரத்தில் விமானத்துக்கு தேவையான எஞ்சின்,புரோபல்லர் ஆகியவறை நம்மால சுயாமாக செய்ய முடியவில்லை என்று கூருகின்றிர்கள். அதற்கு காரணம் என்ன என்று பார்ப்போமா ? அதற்கும் பதில் அப்துல் கலாம் புத்தகத்திலேயே இருக்கு. அவர் முதலில் ஈடுபட்ட ஆராய்ச்சி எதுவென்றால் சுயமாக நாமே விமானங்களை தாயாரிப்பது பற்றியது. ஆனால் ஒரு சில ஆண்டுகளிலேயே அந்த ஆராய்சிக்கான நிதி உதவியை மத்திய அரசு நிறுத்திவிட்டு அந்த ஆய்வையே மண் தோண்டி புதைத்துவிட்டது. ஒரு வேலை நம்ம அப்துல் கலாம் அந்த ஆய்வில் தன் வாழ்நாளை கழித்து இருந்தால் உலக தரம் வாய்ந்த போக்குவரத்து மற்றும் இராணுவ விமானங்களை தயாரித்து இருக்க முடியும் . பிரச்சனை எங்க இருக்கு ,யார்கிட்ட இருக்கு கற்றது கையளவு?

          மேலும் ரயில் பெட்டிகளில் டாயிலட் செப்டி டெங்க் செய்வதற்கு எல்லாம் பெரிய தொழில் நுட்பம் தேவையில்லை என்று நினைக்கின்றேன். I will speck about regulatory system tomorrow.

        • கற்றது கையளவு,

          நீங்க ரெகுலேஷன் அதாரிட்டி இருந்தா அவிங்க எல்லாத்தையும் சரி செய்துவிடுவார்கள் என்று கூருகின்றிர்கள். அதனையும் நான் எந்த முன் நிபந்தனையும் இல்லாம ஆய்வு செய்கிறேன்.

          தொலைபேசி நிறுவனங்களை முறை படுத்த இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்[Telecom Regulatory Authority of India (TRAI) ] என்று ஒன்று இருக்கு. அவிங்க வேலை என்ன வென்றால் இந்திய பாராளுமன்றத்தில் தொலைபேசி தொடர்பாக இயற்றப்படும் சட்டங்களை அப்படியே தொலை தொடர்பு நிறுவனங்கள் பின்பற்றுகின்றனவா என்று கண்காணிப்பது மட்டும் தான். அவிங்க சொந்தமாக எதுவும் செய்ய முடியாது. இன்றைக்கு 100 % அந்நிய நேரடி மூலதானத்தை{FDI } தொலை தொடர்பு நிறுவனங்கள் தொடங்க வெளிநாட்டுக்கு அனுமதியை இந்திய அரசு வழங்கி உள்ளது. அப்படி இருக்கும் நிலையில் இந்தியாவின் சுயசார்பான Telecom technology எப்படி வளருங்க ?

          காப்பிட்டு நிறுவனங்களை முறைபடுத்த காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் இந்திய மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏ) [Insurance Regulatory and Development Authority of India (IRDA)] என்ற அமைப்பை இந்திய அரசு 1999 ஆவது ஆண்டே சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி தொடங்கி உள்ளது.அதற்கு பின்னால நிறைய அந்நிய காப்பிட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு வந்து நமக்கு ஆப்பிட்டுவிட்டு சென்று விட்டன.அதே நேரத்தில் இந்திய அரசு காப்பிட்டு நிறுவனமான LIC மட்டும் அதன் ஏமாற்றாத சேவை காரணமாக நல்ல முறையில் செய்ல்ப்ட்டுகொண்டு உள்ளது. குறைந்தது 6% வட்டியாவது LIC மூலம் நமக்கு கிடைகின்றது. [நமக்கு காப்பிடும் இருப்பதை கருத்தில் கொள்ளும் போது 6% வட்டி ஒன்றும் குறைவு கிடையாது ]இந்த IRDA இருக்கும் சட்டங்களை மட்டும் தான் ஒழுங்குமுறை படுத்தும். அதற்கு எத்துனை % அந்நிய நேரடி முதலீடு காப்பிட்டு துறையில் இன்டியாவிற்கு வரலாம் என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் எல்லாம் துளியும் கிடையாது. அத்தகைய அதிகாரம் எல்லாம் நம்மை ஆள்பவன் கையில் தான் குரங்கு கையில் உள்ள பூமாலை போன்று உள்ளது.

          அப்புறம் எப்படி ஒழுங்குமுறை ஆணையங்கள் எல்லாம் இந்தியாவை சுயசார்பு உடைய நிலைக்கு அழைத்து செல்லும் என்று கூறியுள்ளிர்கள் கற்றது கையளவு. மறுபடியும் பந்து உங்கள் ஆடுகளத்தில் தான் உள்ளது கற்றது கையளவு. சோசியலிசம் இல்லாம இந்த பிரச்சனைக்கு தீர்வு கொடுங்கள் பார்ப்போம் ?

          //வங்கிகளுக்கு, இன்சுரன்சு கம்பெனிகளுக்கு ஒரு ஒம்புட்ஸ்மன் (OMBUDSMAN) அமைப்பு உள்ளதை போல ஆள்பவர்களை கடிவாளம் கொண்டு அடக்க ஒரு மக்கள் அமைப்பு இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். //

        • கற்றது கையளவு, இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்[ HAL ] எஞ்சின், புரோபல்லர் என்று ஒன்றுமே செய்யவில்லை ,என்று தாழ்வு மனப்பான்மையில் புலம்புவதற்கு பதிலாக சர்வதேச விண்வெளி சமூகத்துக்கு இதுவரைக்கும் HAL என்ன என்ன பங்களிப்பை செய்து உள்ளது என்று பார்ப்போமா ?

          [We can achieve every thing when our hands are freed from these Indian politicians and bureaucracy with Lack of patriotism]

          Some of the HAL work packages for renowned international aerospace leaders include :-

          Airbus A320 Forward Passenger Doors

          Boeing 777 Uplock Box Assembly

          Boeing 737 Freighter Conversion Kits

          Boeing F/A 18 Gun Bay Door

          Boeing P-8 I Weapon Doors & Tailcone

          Eurocopter Ecureuil composites

          Boeing -3D-Modelling / Digitisation of Drawings

          //சில காலம் முன்பு முழுக்க முழுக்க 1௦௦ சதவீதம் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் விமானங்கள் பற்றிய அறிவிப்புகள் வந்தன ஞாபகம் உள்ளதா? அதன் பின் என்ன ஆனது? விமானத்தின் டப்பா பகுதிகள் முதலில் எளிதில் செய்யப்பட்டன.//

          • மங்கலாயன் திட்டத்தின் மொத்த செலவே RS 450 கோடிகள் தான். இது ஒட்டுமொத்த இந்தியர்களின் ஒரு நாள் காலை உணவுக்கான செலவை விட குறைந்த செலவு தான். மூன்றில் ஒரு பங்கு தான்.

            120 கோடிமக்கள் * 10 ரூபாய் = Rs 1,200 கோடிகள் காலை உணவுக்கான செலவு

            விண்வெளி ஆய்வுக்காக இந்தியா செலவு செய்யும் பணம் எல்லாம் வீண் போகாது. அமெரிக்கர்கள் அதி சக்தி உள்ள Geosynchronous Satellite Launch Vehicle [GSLV] with cryogenic engine ஏவுகலன் மூலம் செலுத்திய செவ்வாய் கிரகத்துக்கான துணைக்கோளை இந்தியா மிக குறைந்த சக்தி உள்ள Polar Satellite Launch Vehicle[PSLV ] with out cryogenic engine ஏவுகலன் மூலம் செலுத்தி சாதனை படைத்து உள்ளது.

            இது தாண்டா இந்தியா. !

            உலகத்தில் எந்த நாடு இந்தகைய சிக்கனமான தொழில் நுட்பத்தில் செவ்வாய்க்கு இவ்வளவு குறைந்த செலவில் துணைக்கோளை செலுத்தியுள்ளது .?

            Note:

            Remarkably, the entirety of India’s Mangalyaan mission cost just 4.5 billion rupees — or about $74 million. Compare this to NASA’s own MAVEN Mars orbiter, which has a total mission cost of around $672 million.

            • //சிக்கனமான தொழில் நுட்பத்தில்//

              Sling shot technique was in use for long time. When IBM software engineer discovered the alignment of planets when solving N-body problem, voyager project was born.
              FYI, he used recursive method call to solve the equation.

              http://www.bbc.com/news/science-environment-20033940

              //Remarkably, the entirety of India’s Mangalyaan mission cost just 4.5 billion rupees — or about $74 million. Compare this to NASA’s own MAVEN Mars orbiter, which has a total mission cost of around $672 million.//

              It is about same cost per Kg. India sent around 20kg payload (US Sent around 200kg) and its intention is to see if it can reach Mars which has around 50% probability of success. India still has to master GSLV. Once done, sending man to orbit will happen.

              When Kalam and Team visited NASA during sixties, they observed NASA working culture/organisation structure and built that culture here.US inspiration is still at work here 🙂

              More food for you to blame me.

              • இராமன் , தாய்நாட்டுக்கு எதிரா அதிகமாக பொய் சொன்னால் உமக்கு போஜனம் கிடைக்காது .இந்தியாவிடம் GSLV தொழில்நுட்பம் இல்லை , மற்றும் payload விடயங்களில் எவ்வளவு பெரீய பொய்களை சொல்லியிருக்கிங்க! கீழ் நான் உணமையான விவரங்களை கொடுத்து உள்ளேன். உலகத்திலேயே இந்தியா தான் முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு துணைக்கோள் அனுப்பி சொல்லி அடித்து உள்ளது. நம்முடன் போட்டிபோட்ட சைனா காரன் கூட முதல்முயற்சியிலேயே தோற்று போயிட்டான். மங்கலாயன் I சும்மா ஒரு ட்ரைலர் தான்,அடுத்ததா 2018ல் மங்கலாயன் I I விடுவோம் அப்ப வந்து பாருங்க அதில் இருக்கும் lander and rover செவ்வாயின் நிலப்பரப்பில் ஜகுஜகுனு ஓடி அமெரிக்கா காரனுக்கு சவால் விடும் பாருங்க .

                ***GSLV-D5, launched on January 5, 2014, was the first successful flight of the GSLV Mark.II using the indigenously developed cryogenic engine named CE-7.5.

                ***The first sub-orbital flight of the GSLV Mark III was successfully launched on 18 December 2014.

                //India still has to master GSLV.//

                ***The 15 kg (33 lb) ISRO-Mangalyaan scientific payload consists of five instruments.

                ***NASA-MAVEN Payload mass 65 kg (143 lb)

                //India sent around 20kg payload (US Sent around 200kg)//

              • இராமன் , மீண்டும் மீண்டும் அமெரிக்க அடிவருடிதனத்துடன் , அமெரிக்கவிற்க்கு ஆதரவாக சொம்படித்துக்கொண்டு , பொய் பேசிக்கொண்டு உள்ளீர்கள். அமெரிக்க *நாசாவில் அப்துல் கலாம் காண்ட காட்சி நாம் யார், இந்தியர்கள் எத்தகைய ஆற்றல் பெற்றவர்கள் என்பதை உலகுக்கு காட்டிவிடும். இந்திய சுதந்திர போராட்ட மாவீரன் திப்புவின் படத்துடன் அவன் ஆங்கிலேயருக்கு எதிராக பயன் படுத்திய ஏவுகணை இன்னும் நாசாவில் காட்சி அளித்துக்கொண்டு தான் உள்ளது.அதனை பார்த்து வியந்த அப்துல் கலாம் தனது அங்னி சிறகுகள் என்ற புத்தகத்தில் இந்த உண்மையை எழுதியுள்ளார். ஏகாதிபத்திய அமெரிக்கனுக்காவது வரலாற்றை திரிக்க கூடாது என்ற எண்ணமாவது இருக்கிறது. ஆனால் அமெரிக்கனுக்கு சொம்படிக்கும் உமக்கு இந்தியாவின் பெருமைகளை கூட திரித்து அதன் மூலம் சுய இன்பம் காண்பது உமது பிழைப்பாக மாறிவிட்டது.

                *நாசா->NASA-> National Aeronautics and Space Administration (NASA) of USA.-> தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் [USA]

                //When Kalam and Team visited NASA during sixties, they observed NASA working culture/organisation structure and built that culture here.US inspiration is still at work here//

                • அமேரிக்கா கண்டுபிடித்த கணினியால் வேலை செய்கிறேர்கள்
                  அமேரிக்கா கண்டுபிடிதா ஜாவா சொல்லி தருகிறீர்கள்
                  அமேரிக்கா செல்லும் கனவுடன் மாணவர்கள் வருவதால் தான் தனியார் கல்லூரி அந்த பிரிவு வைத்துள்ளது , அதனால் தான் உங்களுக்கு வேலையே
                  தனியுடமை காரணத்தால் தான் தனியார் கல்லூரி வேலை
                  அட ,தமிழில் டைப் அடிப்பதற்கு கூட அமெரிக்கா கம்பெனியின் உதவியால் தான்

                  படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் 🙂

                  • இராமன் என்ன சொல்ல வருகின்றார் என்றால்

                    @@@”இந்தியர்களும் அரேபியர்களும் கண்டு பிடித்த எங்களை 0,1,2,3,…. என்ன மயித்துக்கு அமெரிக்கர்கள் பயன்படுத்தி கணினியில் பயன்படுத்துகின்றார்கள் என்று “,

                    @@@இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜார்ஜ் பூலியன் அவர்கள் 1847ல் கண்டு உணர்ந்த பூலியன் அல்ஜிப்ரா என்ற எண்கணித முறையை அமெரிக்கர்கள் என்ன மயித்துக்கு கணினியில் பயன்படுத்துகின்றார்கள் என்று “,

                    @@@இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சார்லஸ் பெபெஜீ அவர்கள் கண்டு பிடித்த கணினி கண்டுபிடிப்புகளை அடிப்படையாக கொண்டு என்ன மயித்துக்கு அமெரிக்கர்கள் பயன்படுத்தி கணினியில் பயன்படுத்துகின்றார்கள் என்று”

                    ஒரு நாட்டில் கண்டுபிடிக்க பட்டதொழில் நுட்பம் உலகம் முழுவதும் பரவும் , உதாரணமாக சுதந்திர போராட்ட மாவீரன் திப்பு ஏவுகணை தொழில் நுட்பம் உலகம் முழுவதும் பரவியது போன்று என்ற அடிப்படை உண்மை கூட தெரியாமல் என்னத்துக்கு இராமன் உளறிக்கொண்டு உள்ளார் ?

    • கற்றது கையளவு ,

      இந்தியாவின் தொழில் நுட்ப சாதனைகள் எப்ப எல்லாம் அரசியல் ரீதியான கொள்கை முடிவுகள் தொழில் நுட்ப வளர்சிக்கு சாதகாமாக எடுக்க படுகிறேதோ, சாத்தியம் ஆகின்றதோ அப்போது எல்லாம் நிகழ்த்தப்பட்டே உள்ளது. இந்தியாவின் வெண்மை புரசியின் காரணமாக உற்பத்தி செய்யபட்ட பால் உற்பத்தியின் அளவு உலகையே இந்தியாவை நோக்கி திருப்பி பார்க்க வைத்ததை மறந்து இருக்க மாட்டிர்கள் என்று நம்புகிறேன். எமது மதிப்பிற்குரிய லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் பிரதமராக இருந்த ஆண்டுகள் அவை.ஒரு பக்கம் பாகிஸ்தான் போர் .மறுபக்கம் இதியாவில் உணவு தட்டுபாடு. ஒருவேலை உணவை குறைதுகொள்ளுங்கள் என்று இந்திய மக்களிடம் சாஸ்திரி அவர்கள் வேதனையுடன் கோரிக்கை விடுத்த நேரம் அது. [ஒரு எளிய பிரதமருக்கு மக்களை நோக்கி அத்தகைய கோரிக்கை விடுக்கும் போது ஏற்படும் வலி மிகு மன உணர்வுகளை உங்களால் புரிந்து கொள்ள இயலும் அல்லவா ?] என்ன செய்வது என்று யோசித்தவர்…திரு குரியனை அழைதார் . அவரை National Dairy Development Board (NDDB)ன் தலைவராக பதவி ஏற்க்க வைத்து பால் உற்பத்தியை பெருக்கச்சொன்னர்.

      திரு குரியன் அவர்களின் முயற்சிகள் வீண் போகவில்லை. 1998ஆம் ஆண்டுகளில் இந்தியா USA வை வென்று உலகிலேயே பால் உற்பத்தியில் முதன்மையான தேசமாக பெருமித பட்டுக்கொண்டது. 2010–11ஆண்டுகளில் இந்தியாவின் பால் உற்பத்தி உலக பால் உற்பத்தியில் 17% அளவுக்கு அதிகமானது. இந்தியர்களின் பால் பயன் பாட்டு அளவு 30 ஆண்டுகளில் இரு மடங்கானது.இந்திய கிராம பொருளாதாரத்தை மேம்படுத்தியது.

      இத்தகைய சாதனைகளுக்கு எல்லாம் அடிபடை காரணம் என்ன ? ஆம் அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் மக்களின் வறுமையை நீக்கவும் ,உணவு பற்றாக்குறையை நீக்கவும் எடுத்த அரசியல் ரீதியான கொள்கை முடிவு தான். அவர் இந்திய தேவைக்கு பாலை பொருட்களை இறக்குமதி செய்து கொள்ளலாம் என்று கொள்கை முடிவு எடுத்து இருந்தால் இந்தியா பால் உற்பத்தியில் தன்னிறைவு பெற்று உலகை வென்று இருக்க முடியுமா ? எனவே தான் கூறுகின்றேன் அரசியல் ரீதியான சுயசார்பு உடைய கொள்கை முடிவுகள் தான் எந்த துறையிலும் இந்தியாவை முன்னேற்றும் என்பது 100% உணமையானது.

      • தமிழ்,

        தங்களது மேற்கூறிய கருத்துக்களுக்கு 1௦௦ சதவீதம் உடன்படுகிறேன். நன்றி.

        நம் மக்கள் தேவையில்லாத மத சண்டை, சாதி சண்டை, வம்புகளில் ஈடுபடாமல் அவரவர் துறைகளில் நாடும் மக்களும் முன்னேற என்ன வழி என்று யோசித்தோமானால் அளவில்லா சாதனைகளை படைக்க முடியும்.

        எல்லா விடயங்களுக்கும் அரசையே நம்பி இராமல் சில முடிவுகளை மக்கள் ஒட்டுமொத்தமாக செயல்படுத்தினால் முடியும்.

        வெளிநாடுகளில் பணக்காரர்களில் VENTURE CAPITALISTS (VC) இருப்பார்கள். அவர்கள் நல்ல பயனுள்ள ஐடியாக்கள் உள்ள இளைஞர்களுக்கு முதலீடு கொடுத்து ஊக்குவித்து அறிவியல் தொழில்நுட்பம் அந்நாடுகளில் வளர துணை புரிவார்கள். ஒவ்வொரு தொகுதியிலும், ஒவ்வொரு வார்டிலும் உள்ள முக்கிய பணக்காரர்களிடம் நம்மவர்கள் திருவிழா, கோவில் கும்பாபிஷேக நிதி, என்று அவ்வப்போது வாங்கிக்கொண்டு தான் இருக்கிறார்கள். சிறு துளி பெருவெள்ளம் என நம் ஆட்கள் கோவில் உண்டியலில் அவ்வப்போது காசை போட்டு வருகிறார்கள். இது போல கடவுள் பெயருக்கு செலுத்தப்படும் பணத்தை நாட்டில் இல்லாதவர்களின் வாழ்க்கை மேம்பட கேட்கலாம், புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க நினைக்கும் இளைஞர்களாய் ஊக்குவிக்கலாம். தவறில்லை.

        தண்ணீர் தண்ணீர் நாடகத்தில் மக்களே தங்களுக்கு தேவையானவற்றை அரசாங்கத்தை நம்பி உக்கார்ந்து கொண்டிராமல் ஆக்கபூர்வமாக முயல்வதை போல செய்யலாம்.
        ஒவ்வொரு வார்டிலும் உள்ள முக்கிய பிரச்சினைகளை லிஸ்ட் எடுத்து ம.க.இ.க குழுவினர் அந்த ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்த்து அதை மக்களுக்கு தெளிவாக தெரியப்படுத்தினால் தானாக அவர்களின் கவனம் ம.க.இ.க பக்கம் திரும்பும்.

        போராட்டம் என்றால் திரும்பி பார்ப்பார்கள், பின் அவரவர் வேலையை செய்ய கிளம்பி விடுவார்கள். ஆனால் தீர்வு கிடைத்தது என்றால் அவர்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை பன்மடங்கு பெருகும்.

        விவசாயத்திலும் நாம் பல ஆண்டுகள் பின்னோக்கியே இருக்கிறோம். இயற்கை உரங்கள் மூலம், ஜெனடிக் எஞ்சினீரிங் செய்யாமல், அதே சமயம் தண்ணீரை மறுசுழற்சி முறையில் செயல்படுத்தி பயிர்கள் வாடாமல் இயற்கை வகையில் பயிர் செய்யப்பட ஆர்கானிக் காய்கறிகளுக்கு அதிகம் விலை கொடுத்து வாங்க மக்கள் தயாராகவே உள்ளனர். இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளின் பொருட்கள் மக்களை நேரடியாக வந்தடைய ஒரு எளிய வழி கண்டால் உழவருக்கும் அதிக இலாபம், மக்களுக்கும் குறைந்த விலையில் நல்ல ஆரோக்கியமான காய்கறிகள் கிடைக்கும்.

        • கற்றது கையளவு ,

          நமது நாட்டின் ஒவொரு துறையும் முன்னேரவேண்டுமானால் அதற்கு அரசாங்கம் எடுக்கும் அனுக்கமான , சாதகமான கொள்கை முடிவுகள் மிக அவசியம் என்று மூன்று துறைகளில் நாம் முன்னேறிய உதாரணத்தை கொடுத்து உள்ளேன் . விண்வெளி துறை [ISRO],இராணுவம் [DRDO] மற்றும் பால் உற்பத்தி. இதுபோன்று அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேரவேண்டுமானால் அத்தகைய சாதகாமான அரசியல் ரீதியான கொள்கை முடிவுகள் மிகவும் தேவை. அத்தகைய சாதகமான கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு இன்றைய மோடியின் அரசு தயாராக உள்ளதா ? இந்த அரசு make in India என்ற பெயரில் கோமாளித்தனமான , நமது சுய பொருளாதாரத்தை சீரழிக்கும் கொள்கை முடிவுடன் செயல்படுகிறது. பன்னாட்டு அந்நிய நிறுவனங்களை இந்தியாவிற்கு அழைத்து வந்து அவர்கள் மூலம் இந்திய தேவைக்கான பொருட்களை உற்பத்தி செய்ய போகின்றார்களாம். அதற்கு பெயர் make in India என்பதாம். தேச துரோக நாசகார இந்த கொள்கை முடிவின் காரணமாக இறுதியில் நாம் அடைய போகும் தீமைகள் என்ன என்று சிறிதாவது சிந்தனை செய்திர்களா ? அந்நிய நிறுவனங்களை இந்தியாவிற்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்ய மோடி அழைப்பதன் மூலம் இந்தியாவில் உள்ள நமது சுயமான பொருள் உற்பத்திக்கான நிருவன்ங்கள் குழிதோண்டி புதைக்க படும். பிரான்சு சென்ற மோடி அங்கிருந்து இந்தியாவிற்கு தேவையான போர் விமானங்களை வாங்குவதாக அறிவித்து இருக்காரு. இந்தியாவின் வான் பாதுகாப்புக்கு தேவையானது தான் அதனால இன்றைய காலகட்டத்தில் நவீன போர் விமானங்களை இந்தியா செய்யும் தொழில் நுட்பம் இல்லாத நிலையில் பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்குவது என்பது சரியான முடிவுதான். அத்துடன் விட்டு இருந்தா பரவாயில்லை .அடுத்ததா அவரின் வரவேற்பு அந்த போர்விமானங்களை செய்யும் நிறுவனங்களுக்கு இருக்கு. அவர்கள் இந்தியாற்கு வந்து போர்விமானங்களை உற்பத்தி செய்யணுமாம். அதற்கான அழைப்பாம். அதற்கு பெயர் make in India வாம். மாப்பள இவரு தான் ஆனா அவரு போட்டு இருக்க சட்டை என்னிது என்ற காமெடி மாதிரியில்ல இருக்கு மோடியின் நாசகார சிந்தனை ,கொள்கை ! [ @ ^&*%**^%%$%$*(&&^%%.]

          சரிங்க அவரு முயற்சி படி அந்த அன்னிய நிறுவனம் இன்டியாவிர்ற்கு வருது என்று வைத்துகொள்வோம் ! அப்புறம் எதுக்கு இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் [HAL] ? அங்கு இருக்கும் அறிவியல் ஆளர்கள் என்னத்துக்கு என்று கேட்கிறேன்.

        • கற்றது கையளவு,

          உள்நாட்டில் பொருள் உற்பத்திக்கான சாதகமான கொள்கை முடிவுகளை அரசு எடுக்காமல் என்ன தான் சிறு தொழில்களில் நாம இறங்கினாலும் அதனால எந்த பயனும் ஏற்பட போவது கிடையாது. ஒரு பக்கம் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்து விட்டு அவர்களுக்கு தடையில்லாத மின்சாரம் , தடையிலாத குடிநீர் சப்பளை , வரியில்லாத பொருள் உற்பத்தி என்று சலுகைகளை காட்டும் , செய்யும் அரசு , அந்நிய சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு இந்தபக்கம் இருக்கும் இந்திய சிறுதொழில்களுக்கு 6 மணி நேர மின்தடையுடன் மின்சாரமும் , நீர் தட்டுப்பாட்டை அளித்தால் எப்படிங்க நாட்டில் உள்ள சுய தொழில் முன்னேறும் ? இந்தியாவின் தேசிய முதலாளித்துவம் வளரனும் என்றால் ,இந்த அரசு முதலில் தரகு முதலாளித்துவத்துக்கு சாதகமான கொள்கைகளை மாற்றனும்.

          வினவில் பின்னுட்டம் இடும் நண்பர் சுசிலாவின் ஒரு கருத்து மிகவும் எனது கவனத்தை கவர்ந்தது. அவர் என்ன சொன்னார் என்றால் :

          “”””நான் படித்த படிப்புக்கு [B.Pharm ] என்னுடைய நிலத்தில் ஒரு இரும்பு சத்து டானிக் உற்பத்தி செய்யும் மருத்துவ தொழில் சாலை தொடங்கலாம் என்று இருந்தேன். ஆனால் எங்க நிலத்தை எல்லாம் அடிமாட்டு விலைக்கு இந்த தமிழ் நாடு அரசு பிடிங்கி கார் உற்பத்தி செய்யும் பன்னாட்டு கம்பெனி போர்ட் க்கு [FORD ]கொடுதுடிச்சி. “”””

          இப்படி நம்ம மக்களின் வாழ்க்கையை அழித்து,அவர்களை தொழில் செய்ய விடாம பன்னாட்டு கம்பெனிகளை இந்தியாவிற்கு கொண்டு வருவதால் எப்படிங்க நமது நாட்டின் தேசிய முதலாளித்துவம் வளரும். கொஞ்சம் மோடி கிடையும் சோனியா கிட்டையும் கேட்டு பதில் சொல்லுங்க கற்றது கையளவு .

  17. தமிழகத்தின் சோசியலிச திட்டங்களால் கடனில் மூழ்குத்தாமே

    மக்களை குடிகாரர்களாக மாற்றுத்தாமே

    தமிழக மின்வாரியம் ஒன்னரை லட்சம் கோடி கடன் ஆமே

    மாதுரோ பார்முலா ஒர்க்அவுடாகுமோ

    http://tamil.oneindia.com/news/tamilnadu/freebies-pushing-up-state-s-debt-224534.html

    • இராமன் ,

      தமிழ் நாடு அரசின் திட்டங்கள் [ TASMAC] , செயல்பாடுகள் [மின்வாரியம் சீர்குலைவுகள் ]அதனால் நுகர்வோர் அதிக மின் கட்டணம் செலுத்துவது எல்லாம் உம்மை பொறுத்தவரையில் சோசியலிச திட்டங்கள் ,செயல்பாடுகள் என்று நீர் கூருகின்றிர் என்றால் ,அதற்கு மூல முதல் காரணம் உனது மூளையில் உள்ள செல்களின் செயல்பாட்டில் ஏற்பட்டு உள்ள சீர்குலைவு தான்.

  18. @Indecent Tamil

    //எல்போ வைரஸ் தொற்றை பொறுத்தவரையில் கையில் மருந்து இருந்தும் முன்றாம் உலக நாடுகளுக்கு உதவாத அமெரிக்காவை பார்த்து காறித்துப்ப உங்களுக்கு மணம் இல்லையே இராமன். அதே நேரத்தில் கியுபாவின் மருத்துவ-மனித நேய முயற்சிகள் எல்போ வைரஸ் மேலும் பரவுவதை தடுக்கும் என்ற அறிவு கூட உங்களுக்கு இல்லையே
    //

    உங்களுக்கு மகனுக்கு எபோல வந்தால் , க்யூபாவின் மனித நேய பக்கெட் டாக்டரிடம் போவீர்களா , காசு பிடுங்கும்(?!) அமேரிக்கா டாக்டரிடம் போவீர்களா ?
    வசனம் பேசுவது கை தட்டுவது எல்லாம் தனக்கு என்று வரும் போது தெரியும்

    //கச்சா எண்ணை விலை குறைவை தொடர்ந்து வெனிசுலா கச்சா எண்ணை ஏற்றுமதியை குறைத்து கொண்டது , அவர்களின் எதிர்கால பொருளாதார நலனை அடிபடையாக கொண்ட நடைமுறையே தவிர உள்நாட்டில் உணவு பற்றாகுறையை ஏற்படுத்தும் நோக்கம் அல்ல. //

    சோசியலிசம் வேலை செய்ய இது போல எதையாவது விற்று தான் பண்ண முடியும் . இந்தியாவில் எதை விற்று சோசியலிசம் பண்ணுவீர்கள் ? சாராயம் வித்தே சொசியைசம் கொண்டாடுவீர்களோ

    //குறிப்பாக கிரிஸ் தேசத்தில் மாபெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டு உள்ள நிலையில் அந்த நாட்டு மக்கள் சோசியலிச கட்சியை தேர்தல் மூலம் தேர்வு செய்து உள்ளது //

    கிரீஸ் தேசம் கடன் வாங்கி சோசியலிச திட்டங்கள் போட்டது . கிரீஸ் தேசத்தில் நமது நாட்டை போலவே வரி எய்ப்பு செய்பவர்கள் அதிகம் . பென்சன் , இலவச ரயில் பயணம் போன்று பல சோசியலிச காரனகலலேயே அழிந்தது .

    • Raman, எனக்கு என்று இல்லை ,என்னை போன்ற நடுத்தர வர்க ,கிழ் நடுத்தரவர்க , வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள இந்தியர்களுக்கு , யாருக்கு எல்போ வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் இந்தியாவில் என்ன மருத்துவ வசதி இருக்கிறதோ அதை தான் பெறுவோம் ,அதைத்தான் பெற முடியும். இந்த எளிய மருத்துவ பொருளாதாரம் சார்ந்த உண்மை கூட தெரியாமல் வினவுக்கு வந்து உனது வக்கிர கசடு தத்துவங்களை நீர் எடுத்து விடுவது ஏன் ?//எபோல வந்தால் , க்யூபாவின் மனித நேய பக்கெட் டாக்டரிடம் போவீர்களா , காசு பிடுங்கும்(?!) அமேரிக்கா டாக்டரிடம் போவீர்களா ?//

      என்னமோ ஏற்றுமதியை சோசியலிச நாடுகள் மட்டும் செய்து அந்நிய செலவாணியை உயர்திகொள்வது போன்று பெனாத்தும் உனக்கு முதலாளித்துவ நாடுகளும் ஏற்றுமதியை அந்நிய செலவாணியை உயர்திகொள்வதற்கான வழிமுறையாகவே கொண்டு உள்ளன என்பதை அறிய ஏன் உமது அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடி மூளை இடம் கொடுக்க மாட்டேன் என்கின்றது.//சோசியலிசம் வேலை செய்ய இது போல எதையாவது விற்று தான் பண்ண முடியும் . இந்தியாவில் எதை விற்று சோசியலிசம் பண்ணுவீர்கள் ? //

      கிரிஸ் மட்டுமா ? ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலானவை [UK ,France உட்பட ] சமுக பாதுகாப்பு திட்டத்துடன் தான் செயல்பட்டு கொண்டு உள்ளன . அது தான் அரசின் கடமையாகும். பென்சன் என்பது இலவசம் அல்ல .அது மக்கள் உழைக்கும் பொது PF EPF ஆகிய கணக்குகளில் சேமிக்கும் தொகையாகும். உதார் விடாத ராமா ,உன்னைவிட பல பல பலான அதி அதிசயமான மான்களை, அதியமான்களை வினவில் நான் பார்த்தாகிவிட்டது. சனிகிழமை பார்க்கலாம் வாங்க என்றவரை பார்க்க போனேன் . அவரு வராமல் ஓஓஓஓடிபோயிட்டாறு //கிரீஸ் தேசம் கடன் வாங்கி சோசியலிச திட்டங்கள் போட்டது //

  19. @வினவு ,

    1990களின் ஆரம்பகட்டத்தில் ” என்ன அரிசனனு அழைக்க நீ யாரடா நாயே ” என்ற தமிழக கத்தரின் பாடல்கள் , வார்த்தைகள் ஊடாக மார்சியம் கற்றவன் நான். எனவே வர்க்க எதிரிகளை விளிக்கும் போது எமது வார்த்தைகளில் கடுமை சற்று கூடுதலாகத்தான் இருக்கும். மன்னிக்கவும் வினவு .., எம்மை மாற்றிக்கொள்வதற்க்கு சாத்தியம் சிறிதும் இல்லை.

  20. அதியமான் அவர்களின் புதிய கண்டுபிடிப்பு

    \\வட மற்றும் தென் கொரியாவின் கடந்த 60 ஆண்டு கால வரலறாறே சாட்சி.\\ \\மாற்றாக அதன் அண்டை நாடான சிலே கடந்த 40 ஆண்டுகளாக மாற்று பாதையில் சென்று இன்று வளமாக, ஸ்திரமாக உள்ளது\\

    முன்பெல்லாம் அதியமான் அவர்கள் வழமையாக தைவான் தைவான் என்று தையத்தக்க தையத்தக்க என்று குதித்தவர் இப்பொழுது முத்தாய்ப்பாக மூன்று நாடுகளை வடகொரியா, தென்கொரியா, சிலே என்று கண்டுபிடித்திருக்கிறார்!!! இனி அவரது முதலாளித்துவ வளர்ச்சி நாடுகளில் ‘வாடிகனும்’ வந்து சேரும்!

    இதில் என்ன கூத்து என்றால் ‘சுதந்திரமாக தொழில் செய்யவிட்ட வடகொரியா தென்கொரியா’ என்கிறார். திறந்துவிட்ட புலிகேசி என்று மேரி அவர்கள் தன்னளவில் சுயசார்பு பொருளாதாரம் பற்றி சரியாகச் சுட்டிக்காட்டுகிற பொழுது முதலாளித்துவாதிகள் ஏன் இன்னும் இத்துணை மழுங்கியவர்களாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

    சாம்சங் இருக்கிற தென்கொரியாவில் சுதந்திரமாக தொழில் தொடங்குவது என்றால் என்ன அர்த்தம்? சாம்சங்கை எதிர்த்து தென் கொரியாவில் ஒரு பொட்டிக்கடை நடத்தி முதலாளி ஆக முடியும் என்கிறாரா?

    சான்றாக சீனாவின் அருகில் இருக்கும் மாக்கோ தீவுகளில் பொருளாதார வளர்ச்சி பத்து சதவீதம். அத்தீவின் ஒரே ஒரு தொழில், சூதாட்டம் மற்றும் சூதாட்டத்தைச்சுற்றிய வர்த்தகம். அத்தீவில் வாழும் நான்கில் ஒருவர் ஸ்டாலின் கோவின் சூதாட்டக் கம்பெனியில் வேலை பார்க்கிறார்களாம். அதியமான் சொல்வதன் படி பார்த்தால் உலகிலேயே திடமான பொருளாதாரம் இது ஒன்று மட்டும் தானே?

    பீயில ஈ மொச்சா கூட வளர்ச்சின்னு எழுதுறவர நம்பி முதலாளித்துவம் இருக்கிறப்ப தொன் கொரியா, சிலே என்பதெல்லாம் உலக உருண்டைய உருட்டி உருட்டி நாடு பிடிக்கிற நாய் சண்டையன்றி வேறல்ல!! உருண்டைய ஒழுங்கா சுத்தி விளையாடுங்கப்பு!

    • தென்றல்,

      The Arduous March: growing up in North Korea during famine
      http://www.theguardian.com/world/2014/jun/13/arduous-march-north-korea-famine

      Based on the North Korean standard, there are not many people suffering from malnutrition. Or, I should put it this way: the North Korean people do not have any standard when it comes to malnutrition. That’s because it is such a common condition, for in North Korea you cannot get any medical support, even medicine for a cold.

      • அதியமான்,

        இந்த கதையில் எந்தளவுக்கு உன்மையிருக்கிறது என்று தெரியவில்லை. இங்கே இந்த விவாதத்திற்காக உன்மை என்றே எடுத்துக் கொள்வோம்.

        இது போன்ற நிலைமைகளுக்கு, பொதுவுடமை அமைப்பை சீர்குலைக்க நடத்தப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சதிவேலைகள் மற்றும் பொருளாதாரத் தடைகள் போன்றவற்றை வைத்துத்தான் பதில் கூறமுடியும்.

        முதலாளித்துவத்தில் இதேபோன்ற கொடூரமான கதைகள் பலமடங்கு அதிகமாகவே இருந்திருக்கின்றன, இருக்கின்றன. ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மலைவாழ் தொழிலாளர்களின் கதைகள் இவற்றில் சில.

      • அதியமான்,

        பஞ்சங்கள் கொடூரமானவை. மனிதனால் உருவாக்கப்பட்ட பஞ்சங்கள் அதனினும் கொடியவை.

        அமெரிக்காவிலும் 30களில் பாட்டாளி மக்கள் இதே போன்ற துயரங்களை சந்தித்திருக்கிறார்கள். இன்றும் அங்கே ‘கஞ்சி தொட்டிகள்’ இருக்கின்றன. அதெல்லாம் உங்களைப் போன்றோரின் கண்களுக்கு விழுவதில்லை.

        இந்தியாவிலும் பஞ்சம் இருக்கிறது. இன்றும் எலிவளையை நோண்டி தாணியத்தை தேடும் நிலையிலும் மாங்கொட்டைகளை சாப்பிடவேண்டிய நிலையிலும் மக்கள் இருக்கிறார்கள். அவர்களும் நாட்டின் வேறு பகுதிகளுக்கு பஞ்சம் பிழைக்க போகிறார்கள்.

      • வட கொரியாவில் சாப்பிடிற்கு ஒன்றும் இல்லை , பேச்சு சுதந்திரம் இல்லை , அட அதுவா முக்கியம் . அவன் அமெரிக்காவை எதிர்க்கிறான்.

        தென் கொரியா கார் ,டிவி ,வாசிங் மெசின் , போன் செய்தால் என்ன ? அதெல்லாம் பெரிது இல்லை . தென் கொரியாவில் சாம்சங்கை எதிர்த்து பொட்டி கடை நடத்த வேண்டுமாம் 🙂

        க்யூபா ரஷ்யாவிடம் பிச்சை எடுத்தது
        க்யூபா வேநிசூலாவிடம் பிச்சை எடுத்தது
        க்யூபா, இப்போது பிச்சை போடா யாரும் இல்லாததால் அமெரிக்காவின் காலடியில் பொய் விழுந்துவிட்டது

        அதனால் என்ன க்யூபா டாக்டர்கள் அறம் செய்கிறார்கள் என்று மகிழ்வோம்

        இவங்களை திருத்த முடியாது சார் .

        • அமெரிக்கா ஈராக்கை திருடித்தின்றது (பிச்சையெடுக்குமாம் பெருமாளு, அதப் புடுங்கித் திங்குமா அனுமாரு என்பது இங்கு பொருந்தும்).

          அமெரிக்கா இரண்டு உலகபோர் நடத்தி மனித கவுச்சி வியாபாரம் செய்தது.

          அமெரிக்கா நேட்டோ நாடுகள் என்பதன் பெயரில் கூலிப்படையை உருவாக்கி ஐரோப்பிய நாடுகளை மிரட்டி பணிய வைக்கிறது.

          அமெரிக்கா டாலரை அச்சடித்து விளையாடுகிறது.

          அமெரிக்க உலகத் தீவிரவாதியாக இருந்துகொண்டு தீவிரவாத நாடுகளின் பட்டியலை வெளியிடுகிறது.

          இதில் உலக மாக 420யாக இருக்கிற அமெரிக்காவை கியுபாவோடு ஒப்பிடலாமா அறிவாளி இராமன் அவர்களே!

          இவங்களை திருத்தவெல்லாம் முடியாது ஒழிக்கணும் சார்!!!

          • //அமெரிக்கா ஈராக்கை திருடித்தின்றது (//

            இல்லை. http://swaminomics.org/it-wasnt-all-about-oil/

            Many Indians, including respected foreign policy analysts, believe that the US invaded Iraq and ousted Saddam Hussein in 2003 simply to grab his oilfields. “Its all about oil,” they said.

            Well, it’s now four years since the invasion. Yet, we see no sign of the US grabbing Iraq’s oilfields. Indeed, the new law under discussion in the Iraqi legislature says, “Ownership of oil and natural gas is vested in the entire Iraqi people in all provinces and regions.”

            ll parties have now agreed that oil will be produced by a national oil company with revenues shared by all regions and people.

            However, the northern Kurds have insisted on limited autonomy for regional oil companies (subsidiaries of the national oil company) in signing contracts. Iraq’s oilfields are in bad shape after years of neglect, and need modern technology to enhance oil recovery from existing fields, and to find new fields.

            The Kurds want to give production-sharing contracts to foreign companies. Some such contracts have already been signed. This has been denounced by Iraqi radicals as a sellout to foreigners. The radicals nostalgically recall Saddam’s nationalisation of oil in the 1970s. Yet, Saddam himself had signed deals with Russia’s Lukoil and France’s Total.

            • காப்பி-பேஸ்ட்-மான் [ K.R.Athiyaman ],

              காபி பேஸ்டு பண்ணுவதையே ஒரு பாலிசியாக வைத்து இருந்தால் எப்படி ?

              சொந்தமாக சிந்தனை செய்து ஒரு வாக்கியம் கூட எழுத முடியாதா உங்களால் ?

            • அதியமான் அவர்களே, சுவாமியானோமிக்ஸை நம்புகிற அளவிற்கு இங்கு யாரும் முட்டாள் கிடையாது. சதாம் உசேன் குறித்து போர் தொடுத்ததாக சொல்லப்படும் அமெரிக்கா, தற்பொழுது இசிஇசிசை மட்டும் வேடிக்கை பார்ப்பது ஏன்? இரண்டாவது புஸ் மற்றும் ரைஸ் பேமிலிக்கு ஈராக்கில் சொத்து இருக்குன்னு புரூவ் காட்ட முடியுமான்னு உங்கள மாதிரி அறிவுஜீவிகளும் அடிவருடிகளும் கேட்டா நாங்கெல்லாம் எங்க போறது? எங்களது கையறு நிலையை நினைத்துப் பார்க்கவேண்டாவா? சான்றாக அம்பானி கோதாவாரி ஆற்றுப்படுகைக்காக சண்டைபோட்டா அதுக்குப் பின்னாடி அமெரிக்கா கிடையாதுன்னு சுவாமியானோமிக்ஸ் கூட சொல்லலாம் என்று வைத்துக்கொள்ளுங்களேன். ஆனால் இப்படியொரு செல்லரித்துப்போன வாதங்களை காப்பி பேஸ்ட் செய்தவற்கு தாங்கள் கிஞ்சித்தும் வெட்கப்படவில்லையா?

            • அதியமான் அந்த கட்டுரையில் இருந்து காபி பேஸ்ட் கூட ஒழுங்கா பன்ன தெரியவில்லை என்றால் எப்படி ? நீங்க தெரிந்தோ /தெரியாமலோ,அறிந்தோ/ அறியாமலோ விட்டுட்டா பகுதிகளை உங்களுக்கு அளிக்கின்றேன் . படித்து பயன் பெறுங்கள் . அறிவு வீரியம் பெறுங்கள்.

              But typically the winning bidder whether Indian or foreign first gets enough oil to recover costs of production and exploration (called cost oil); then gets two to three times as much as profit oil; and then hands over most or all of the residual production to the government.

              ஈராக் மக்கள் உங்களிடமும் , முட்டாள் ,கொலைகார புஸ் இடமும் போன் செய்து இந்த நாசகர,ஏமாற்று உடன்படிக்கைக்கு சம்மதம் தெரிவித்தார்களா ?

            • வினவு ,

              வாசகர்கள் தம் கருத்துகளை வெளியிடும் போது முதலில் தம் கருத்துகளை வெளியிடுவதும் அதன் தொடர்ச்சியாக அக்கருத்துகளின் நம்பகத்தன்மையை அதிகபடுத்த தரவுகளை மற்ற இணைய தளத்தில் இருந்து பகிர்வதும் இயல்பு தான். அதே நேரத்த்தில் அதியமான் மட்டும் அவரின் கருத்தாக வேறு இணைய தளங்களை சுட்டிக்காட்டிவிட்டு [web linking ] செல்கின்றாறே ! அது அப்படி வினவுக்கு உடன் பாடானது என்று நான் அறிந்து கொள்ளலாமா ? அதியமான் சொந்த கருத்துகள் இன்றி இப்படி பின்னுடங்களில் பிற இணைய தளங்களை web linking செய்து அவரின் கருத்து என்று பகிர்வது வினவு பின்னுட்ட கொள்கைக்கு உடன்பாடானது தானா ? [I am not now fighting with vinavu but just i like to know the fact. That is why I am asking this question]

  21. அதியமானின் இரண்டாவது கண்டுபிடிப்பு

    \\தொழில் முனைவோர்கள் என்ற சொல்லாடலே சரி, முதலாளி என்பதை விட\\

    யார் முதலாளி? என்பதை ராகுல் சாங்கிருத்தாயன் மிக எளிமையாக வரையறுத்திருக்கிறார். இல்லை. அம்பலப்படுத்தியிருக்கிறார் இப்படி;

    “ஒரு மனிதன் வேறு எந்தத் தகுதி அற்றவனாயிருந்தும் கேவலம் தனது முதலின் பலத்தினால் பொருள்களை உற்பத்தி செய்யும் விலையுயர்ந்த சாதனங்களைப் பெற்று, அதன் மூலம் ஏராளமான மக்களுடைய உழைப்பின் பெரும் பகுதியைத் தனது சொந்த இலாபத்திற்காகவும், தனக்கு உதவி செய்யும் முதலைப் பெருக்குவதற்காகவும் உபயோகித்துப் பணம் சம்பாதிப்பதற்குச் சிறந்த வழி முதலாளிக்கொள்கை” (ஆதாரம்: பக்கம்-1, பத்தி-ஒன்று, பொதுவுடமைதான் என்றால் என்ன?)

    இதில் யார் முதலாளி என்பது தெள்ளிதின் விளங்கும். இந்நிலையில் தொழில் முனைவோர் என்று பித்தலாட்டமாடுகிறார் அதியமான். மேற்கொண்டு சான்றுடன் விவாதிப்போம்.

    அண்ணனின் தொழில் முனைவோர் லிஸ்டில் முதலில் வருபவர் ஸ்டீவ் ஜாப் ஆவார். இந்த அயோக்கியன் சுரண்டியது தொழிலாளிகளை மட்டுமல்ல தொழிலாளிகளைச் சுரண்டிய பெரிய பெரிய கம்பெனிகளையும் (சோனியையும்) சேர்த்துதான். இதுதவிர ஒரு தொழில் முனைவோர் உருவாக்குற உபரி என்பது என்ன? என்று சம்பிரதாய கேள்விகேட்ட அதியமானுக்கு, ஒரு தொழில் முனைவோர் உருவாக்குகிற ஐடியாவிற்கு மதிப்பை உருவாக்குவதே தொழிலாளிதான் என்று வினவு வாசகர் பிராபகரன் அவர்கள் சிறப்பாக பதிலளித்திருந்தார் இப்படி;

    “தொழில் முனைவோரின் உபரி மதிப்பு செயல்பாடாக/பயன்பாடாக ஆகும்போது தான் அதிலிருந்து மதிப்பும், உபரி மதிப்பும் பிறக்கிறது. உதாராணமாக ஒருவர் செவ்வாய்க்கு ராக்கெட் விடுவது போல கற்பனை செய்யலாம், மிக டீட்டெய்லாக ப்ளான் செய்யலாம். ஆனால் நிஜமாக ராக்கெட் செய்யப்பட்டு (உழைப்பாளிகளின் உழைப்பால்) அது பயணப்படும்போது தான் அவரது (தொழில் முனைவோரது) சிந்தனைக்கு மதிப்பும், உபரி மதிப்பும் உண்டாகிறது.”

    இதனடிப்படையில் ஸ்டீவ் ஜாப்சை தொழில் முனைவோர் என்று கருதுகிற கடைசி முட்டுச் சந்தையும் உடைக்கிறது பாக்ஸானின் தொழிலாளர் மீதானச் சுரண்டல். ஆப்பிளின் மதிப்பு, பல நாடுகளில் குறைந்த கூலிக்கு கொத்தடிமையாகச் சுரண்டப்படும் பல்வேறு தொழிலாளர்களின் இரத்தால் உருவாக்கப்பட்டவை என்கிற பொழுது அதியமானின் தொழில்முனைவோர் வரையறை வாசகர்களை எந்தளவிற்கு முட்டாளாகக் கருதிக்கொள்கிறது என்பது மேலும் விளங்கும்.

    இந்தவகையில் உலகின் நம்பர் ஒன் தரகு முதலாளி, முதல் போடாமலேயே கமிசன் அடிக்கிற ஒரு 420க்கு பெயர் தொழில் முனைவோர் என்றால் அதியமானே முதலாளித்துவத்திற்கு சமாதி கட்டிவிட்டார் போலத் தெரிகிறதே!!!!! இதில் தொழில் முனைவோர் என்பது இனியும் தூக்கிச் சுமப்பது எவ்வளவு சில்லுண்டித்தனமாக இருக்கிறது என்பதை யோசிக்க வேண்டாவா?!

    • Chile was proof that freeing markets and curbing state control could generate broad-based prosperity, which socialist policies could only promise.

      If that experiment weren’t sufficient, it got another try on a much bigger scale when China’s Deng Xiaoping abandoned the disastrous policies of Mao Zedong and veered onto the capitalist road. The result was an economic miracle yielding growth rates that averaged 10 percent per year.

      Economic growth, not redistribution, has been the surest cure for poverty, and economic freedom has been the key that unlocked the riddle of economic growth.

      http://reason.com/archives/2012/03/29/toward-the-conquest-of-world-poverty

      • \\Chile was proof that freeing markets and curbing state control could generate broad-based prosperity, which socialist policies could only promise.\\

        இது அவதூறான வாதமாகும். முதலில் வெனிசுலாவை பார்ப்போம். எண்ணெய் வயல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதன் மூலமாக இதுவரை வரி ஏய்ப்பிலும் நாட்டை ஒட்டச் சுரண்டியதிலிருந்தும் வெனிசுலா இறையாண்மையையும் முகவரியையும் உலகிற்கு அளித்திருக்கிறது. வெனிசுலாவில் பஞ்சம் என்று கதறும் உங்களைப்போன்ற யோக்கியர்கள் முதலில் மறுக்க வேண்டியது நாட்டுடைமையாக்கப்பட்டது தவறு என்பதாகும். இதனால் நமது வாசகர்கள் தங்களின் நேர்மையையும் அறிவு நாணயத்தையும் எளிதில் புரிந்துகொள்வார்கள்.

        சான்றாக கோதாவரி ஆற்றுப்படுகையில் எரிவாயுவைச் சுரண்டும் அம்பானி இருப்பதால் தான் இந்தியா சுபிட்சமாக இருக்கிறது என்று சொல்ல வருகிறது தங்கள் வாதம். ஆனால் இந்திய மக்களின் நிலைமையில் கோதாவரி ஆற்றுப்படுகையின் வளங்களின் மீதான சுரண்டல் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு ஓர் அப்பட்டமான ஆதாரமாகும். இதை நாட்டுடமையாக்குவதன் மூலமாக மக்கள் பஞ்சத்தில் சாவார்கள் என்று யாரால் கூற இயலும்? சந்தேகத்திற்கிடமின்றி இது ஒரு தரகனின் மொழி என்பது எனது கருத்து.

        இரண்டாவதாக, இன்றும் வெனிசுலாவில் தேசிய முதலாளிகளின் பிடியில் தான் பெரும்பாலான நாட்டு வளங்கள் உள்ளன. இதற்கெதிரான போரில் எமது பாட்டாளி மக்கள் பின் தங்கியிருக்கிறார்கள் என்பது நிதர்சனம். இதில் ஏகாதிபத்திய எதிர்ப்பு பேசிய பொழுது குளிர் காய்ந்த குள்ள நரிகள், இன்றக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்திடத்திடம் மண்டியிட்டு கைக்கூலிகளாக நிற்பதை திட்டமிட்டு மறைத்துவிட்டுத்தான் பஞ்சம் என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறது தங்கள் வாதம்.
        இந்த இருபோக்குகளும் கடைந்தெடுத்த கயமைத்தனம் என்பதை வாசகர்கள் பார்வைக்குக் கொண்டு வருகிறேன்.

        ஆக நாட்டுடைமையாக்கப்பட்டதால் ஒரு நாடு பஞ்சத்திற்கு இழுத்துச் செல்லப்படுகிறது என்று முடிவாக புரிந்து கொள்ளலாமா அதியமான் அவர்களே?

        ஏனெனில் தாங்கள் கூறிய கீழ்க்கண்ட கருத்தும் தவறான ஒன்று.

        \\ If that experiment weren’t sufficient, it got another try on a much bigger scale when China’s Deng Xiaoping abandoned the disastrous policies of Mao Zedong and veered onto the capitalist road. The result was an economic miracle yielding growth rates that averaged 10 percent per year.\\

        \\Economic growth, not redistribution, has been the surest cure for poverty, and economic freedom has been the key that unlocked the riddle of economic growth.\\

        வளங்கள் பங்கீடு பொருளாதார வளர்ச்சிக்கு வழிகோலுவதில்லை என்று போகிற போக்கில் அடித்துவிட்டிருக்கிறீர்கள். இது முதலில் முதலாளித்துவம் அன்று. இது தவறான வாதம் ஆகும். இதைச் சான்றுடன் விளக்குவதற்கு தாங்கள் அதே சீனாவின் சென்யாட்-சென்னின் தேசியப்புரட்சியை கவனிக்க வேண்டும். மன்னர்களின் கைகளில் இருந்த நாட்டின் பாரிய வளங்கள் என்னவானது? இதில் redistribution என்பது இல்லாமல் பொருளாதாரம் எப்படி சாத்தியம். அல்லது யாருடைய பொருளாதார வளர்ச்சியைப் பற்றி பேசுகிறீர்கள் அய்யா?

        இதில் தன்னை ஒரு முதலாளித்துவாதியாக நிறுத்திக்கொண்டு தெங்சியோ பிங்கை ஆதரிப்பதே கடைந்தெடுத்த பித்தலாட்டம் ஆகும். உங்களது வாதம் சீர்திருத்தங்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதன் மூலமாக முதலாளித்துவம் ஓர் உற்பத்தி முறையாக நிற்பதற்கு லாயக்கற்ற ஒன்று என்பதை இதன் மூலமாக காட்டிவிடுகிறது. ஆளும் வர்க்கங்களை அண்டிப்பிழைக்கிற அடிவருடித்தனம் தானே இதில் இருக்கிறது. இதில் எங்கே பொருளியல் இருக்கிறது?

        தெங்சியோபிங்கின் சீர்திருத்தம் நாட்டில் சீனனை ஓர் உள்நாட்டு அகதியாக மாற்றியிருக்கிறது. வேலை வாய்ப்பின்மையை அதிகரித்திருக்கிறது. கட்டுமான துறைகள் ஊதிப்பெருக்கப்பட்டிருக்கின்றன. பத்து சதவீத வளர்ச்சி என்பது யாருக்கு என்பதை தெளிவாக பேசவும்.

        மக்கோவ் தீவுகளில் கேசினோவின் பத்து சதவீத வளர்ச்சியை பொருளாதார வளர்ச்சி என்று ஒருவரால் பேச முடிந்தால் அவர் தெங்சியோபிங்கின் சீர்திருத்தையும் வளர்ச்சி என்றே பேசுவார். என்ன ஒன்று? இப்படிப்பட்ட பேச்சில் பொருளாதாரமோ, முதலாளித்துவமோ இருப்பதில்லை என்பது தான் நிதர்சனம். ஆக பகல் கொள்ளைக்கு பேரு சீர்திருத்தமா? ஏய்யா கொல்றீக!

        —————————————————-

        பின் குறிப்பு: சிலியை தாங்கள் தொட்டது வெங்கல்ராவின் மண்டையில் வடிவேலு கைவைத்ததைப்போன்றதாகும். கல்வியில் கைவத்த முதலாளிகளின் கொள்ளைக்காக அந்நாட்டு மாணவர்கள் களத்தில் இறங்கி சமர் புரிந்திருக்கிறார்கள் (https://www.vinavu.com/2012/08/31/chile-students-struggle/). எந்த வெனிசுலா நாடு ஆரம்பகல்வியில் தன்னிறைவு அடைந்ததோ, எந்த வெனிசுலா நாடு கல்வியில் மக்கள் நலங்களில் அக்கறை கொண்டதோ அதே ஒன்றை அமல்படுத்த சிலியின் ஆளும் வர்க்கத்தை அம்பலப்படுத்திப்போராடியது அந்நாட்டு இளைஞர் வர்க்கம். மக்கள் எல்லா நாடுகளிலுமே வர்க்கமாகத்தான் இருக்கின்றனர்.

        இதில் வளர்ச்சியைப் பற்றிபேசுகிறவனின் நெஞ்சாங்குலை ஏர்போர்ட்டை பார்த்து வாய் பிளந்து நிற்கும், கொண்டூராஸ் என்றால் வாய்மூடிக்கொள்ளும், நமது இராமன் மற்றும் அதியமான் போல!!!

        • அந்த நார்த் கொரியாவின் உணவு பஞ்சம் போல , தென்றல் தட்டில் சாப்பாடு இல்லை என்ற பின்னர் ஒரு வேளை உரைக்கலாம் . அதுவும் சந்தீக்ம் தான் . ஒரு வேளை அவர் குழந்தை சாப்பாடு வேண்டும் என்று கேட்கும் பொது குடுக்க முடியாமல் உணரலாம் .

          அது வரைக்கும் ஏகடியம் பேசி திரிவார் இந்த (Animal Farm) குதிரை

          • பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவானாம் முதலாளித்துவவாதி. பஞ்சத்தை உருவாக்கி பதுக்கலில் ஈடுபட்ட பச்சோந்திகள் பாட்டாளிகளுக்கு புத்தி உரைக்க பாடம் எடுக்கிறார்களாம்.

            நார்த் கொரியா வளர்ந்திருக்கிறது என்று அடித்துவிட்ட அதியமான் அடுத்த ஐந்து நிமிடத்தில் பஞ்சம். சளிக்கு மருந்துகிடையாது என்று ‘ஒற்றை முதலாளித்துவ ஆட்சியின் அவலங்களை’ கார்டியனை காப்பி பேஸ்ட் செய்து அழுதுகாண்பித்தார். அடுத்தவரிசையிலே ஜார்ஜ் ஆர்வெல்லின் புத்தக இடுக்கில் ஒளிந்து வாழும் இராமன் போன்ற மூட்டைப்பூச்சிகள் நார்த் கொரியாவில் பஞ்சம் என்று பிலாக்கணம் வைத்து அழுகிறார்கள்.

            இலவச மிக்சி கிரைண்டர் தருவதையே சோசலிசம் என்று புரிந்து வைத்திருக்கிற தற்குறிகளுக்கு நார்த் கொரியாவின் அரசியல் என்ன புரிந்துவிடப்போகிறதா? சரி இராமனுக்கு பதில் சொல்லிவிடுவோம்.

            இராமன் அவர்களே! நார்த் கொரியாவில் பஞ்சம் என்றால் பாட்டாளிகள் செய்ய வேண்டியது அரசை நொறுக்கி தங்களது சர்வாதிகாரத்தை நிறுவுவது தான். இதனால் நார்த்கொரிய மக்கள் தென் கொரிய பாட்டாளிகளுக்கு மட்டுமல்ல உலக பாட்டாளிகளுக்கே ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருக்க முடியும். அமெரிக்க சீன ஏகாதிபத்தியங்களுக்கு செருப்படியும் தரமுடியும்!

            அதைவிடுத்து பசி என்பதற்காக முதலாளிக்கு முந்தி விரிக்க உங்களால் இயலும். நாங்கள் அதற்கு துணிய இயலாது.

            சான்றாக ரசியாவின் அக்டோபர் புரட்சியில் முதலாளித்துவத்தை நொறுக்கி சோசலிசத்தை கட்டமைத்த பொழுது உணவிற்காவும் பொருட்களுக்காவும் ஜாரின் கூலிப்படையோடு, ஏகாதிபத்தியத்தோடு, குலாக்குகளோடு என பலமுனைகளில் தாக்குதலைச் சந்தித்தார்கள் எமது பாட்டாளிகள். கடுங்குளிரில் மரத்திலான காலணிகளை வைத்தே சோசலிசத்தை கட்டமைத்தார்கள். அப்பொழுதும் கூட உங்களைப்போன்ற வைத்தி மாமாக்கள், பல மோகனாக்களை ஜமீன்தாரின் ஆசைக்கு இணங்குமாறு துண்டு போட்டு வியாபாரம் செய்தார்கள். ‘அப்புறம் உன் இஷ்டம்’ என்று வெத்தலைக்கு சுண்ணாம்பு தடவிக்கொண்டே சீவலை வாயில் போட்டு கொதப்பினார்கள். சமயத்தில் இலக்கியமும் படைத்தார்கள் ஆர்வெல்லைப்போன்று.

            இப்பொழுது அதே தொழிலை தாங்களும் சிரமேற்கொண்டு எங்களுக்கு உரைப்பது என்ன மாதிரியானது என்பதை யோசிக்க வேண்டாவா? கமிசன் கிடைக்கிறது என்பதற்காக கம்யுனிசத்திற்கு எதிராக பேசி மேக்கப் கலைந்த ஆர்வெல்லை உலகம் காறித்துப்பவில்லையா? யோசியுங்கள்.

      • அதியமான்,

        // Economic growth, not redistribution, has been the surest cure for poverty//

        இது பித்தலாட்டமானது.

        இவர்கள் பயன்படுத்தும் ஏழ்மையை கணக்கிடும் முறையும் நம்பகத்தன்மையற்றது தான். ஏழைகளை இல்லாமல் செய்து விடுவதன் மூலம் வறுமையை ஒழித்து விடலாம் என்பதைப் போன்றதுதான் இவர்களின் செயல்திட்டங்கள். வறுமையும் வளமையும் ஒப்பீட்டளவிலானது எனும் போது, இன்றைய சராசரி ஏற்றத்திற்கும் தாழ்வுக்கும் இடையே இருக்கும் தூரத்தைப் பார்க்கும் போது கூட இன்றைய வறுமை நிலையின் பரவலை விளங்கிக்கொள்ள முடியும்.

        உலகில் அன்றாடங்காய்ச்சும் மக்களின் தொகை குறைந்திருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் இதற்கு முதலாளித்துவம் சொந்தம் கொண்டாடுவது எவ்வாறு?

        • //// Economic growth, not redistribution, has been the surest cure for poverty//

          இது பித்தலாட்டமானது.////

          இல்லை. இந்தியாவில் 80கள் வரை redistribution தான் முக்கியம் என்ற கருத்தியல் மிக மிக பலமாக நிலவியதால் உருவான லைசென்ன்ஸ் ராஜ்ஜியம், மிக மிக மிக அதிக வரி விகிதங்களினால் உருவான தேக்கம், மிக கடுமையான விலைவாசி உயர்வு, கடும் வேலையின்மை பற்றி பல முறை பேசியாச்சு. 1991க்கு பிறகு இந்த கருதியல் மாறியபின் ஏற்பட்ட வளர்ச்சியால் ஏழ்மை அழிப்பு எத்தனை சதவீதம் என்பதை பற்றியும் ஏராளமன தரவுகள் உள்ளன.
          reason.com பதிவை மேலே சுருக்கமாக மேற்கோள் காட்டியிருந்தேன். அதை முழுவதுமாக படித்து (முக்கியமாக சீனா பற்றி) உள்ள வாங்கியவர்களுக்கு புரியும்.

          ஆதாரங்களுக்கு உள்ளே சென்று விவாதிக்காமல் வெளியே இருந்து கொண்டு வறட்டு வாதம் மட்டும் பேசுபவர்களிடம் விவாதம் செய்ய முடியாது.

          • //// Economic growth, not redistribution, has been the surest cure for poverty//

            redistribution from the rich to the poor thru ‘progressive taxation’ என்ற பெயரில் 70களில் உச்சபட்டமாக 98 சதவீத வருமான வரி விதிக்கபட்டது. விளைவு கடுமையான வரி ஏய்ப்பு, தேக்கம், வறுமை ; we redistributed poverty and not wealth !!

            http://indiatoday.intoday.in/story/a-50-year-trend-of-indian-personal-tax-rates/1/131008.html

            In 1970-71, the personal income tax had 11 tax brackets with the tax rates progressively rising from 10 per cent to 85 per cent. When the surcharge of 10 per cent was taken into account, the maximum marginal rate for individuals was a mind boggling 93.50 per cent In 1973-74 the highest tax rate applicable to an individual could have gone up to an astronomical level of 97.50 per cent!

            The Direct Taxes Enquiry Committee, 1971 attributed the large scale tax evasion to the exorbitant tax rates and recommended reduction in the marginal tax rate to 70 per cent. This change was implemented in 1974-75, when the marginal rate was brought down to 77 per cent, including 10 per cent surcharge. In 1976-77, the marginal rate was further reduced to 66 per cent. A major simplification and rationalization initiative came in 1985-86, when the number of tax brackets were reduced from eight to four and the highest marginal rate was brought down to 50 per cent.

          • தங்கள் வாதப்படி, நாட்டு வளங்களை நாட்டுடமையாக்குவது பஞ்சத்தை உருவாக்குமா என்பதற்கு பதிலே சொல்லாமல் அர்த்தமற்று உளறுவது எதற்காக? லைசென்ஸ் ராஜ்ஜியம் என்பதற்கும் வரி விதிப்பிற்கும் இங்கு என்ன சம்பந்தம்? தற்பொழுது வரை சோசலிச கொள்கை மீதான ஒரு அறிவுப்பூர்வமான, நியாயமான வாதம் என்று ஒன்றுமே வரவில்லையே அதியமான் அவர்களே! கொஞ்சம் முயற்சி செய்யுங்கள்!

            • // நாட்டு வளங்களை நாட்டுடமையாக்குவது பஞ்சத்தை உருவாக்குமா ///

              ஆம். வேண்டுமானால் இந்தியாவில் ஒரு forced collectivisation செய்து பார்க்கவும்.

              //லைசென்ஸ் ராஜ்ஜியம் என்பதற்கும் வரி விதிப்பிற்கும் இங்கு என்ன சம்பந்தம்? //
              redistribution of wealth from rich என்ற கருத்தியலின் அடிப்படையில் தான் இவை அனைத்தும் அன்று உருவாக்கபட்டன. இதை சரியாக புரிந்து கொள்ள இயலாமல் நான் ‘உளருவதாக’ சொல்வது வேடிக்கை !! 🙂

              • வாசகர்களுக்கு,

                /collectivisation செய்து பார்க்கவும்/ என்று அதியமான் சவால் விடுகிறார்.

                ரஸ்யாவில் இவர்களின் சகாக்கள் டிராக்டர்களை ஏரியில் மூழ்கடித்து நாசப்படுத்துதல் போன்ற நாசவேலைகளை செய்திருக்கிறார்கள்.
                விதைப்பதை சில நாட்களுக்கு தள்ளிவிட்டாலே போதும் விதைகள் முளையாமல் போய்விடும். வளரும் பயிருக்கு ஒரிரு நாட்கள் தண்ணீர் போய்ச்சேராமல் பார்த்துக் கொண்டாலே போதும் அந்த பயிர்கள் அழிவதற்கு. கணிசமான பரப்பளவை இப்படி வெவ்வேறு விதத்தில் நாசப்படுத்தி விட்டால் பஞ்சம் வருவதை யார் தடுக்க முடியும். அதியமான்களும் ராமன்களும் எல்லோரையும் சமமாக நிம்மதியாக வாழ விடுவார்களா.

          • அதியமான்,

            Redistribution என்பதை முதலைகளுக்கு வரி விதித்து பொதுகாரியங்களுக்கு செலவு செய்வது என்று புரிந்து வைத்திருக்கிறீர்கள். உங்கள் புரிதல் வேடிக்கையாக இருக்கிறது.
            நிலங்களை மற்றும் இயற்கை வளங்களை மக்களுக்கிடையில் பிரித்துக்கொள்வது அல்லது பொதுவுடமையாக்குவது என்பதுதான் உன்மையான Redistribution.

            முதலைகளுக்கு வரிவிதிப்பு என்பது மூன்றாம் தர distribution. கண்துடைப்பு. உன்மையான Redistribution நடக்கும் போது, இது போன்ற வழிகள் தேவையற்ற ஒன்று.

            • Redistribution என்ற வரையறையில் மட்டுமல்ல அதியமானின் மோசடி. சோசலிச கொள்கையை விமர்சிப்பதற்கு இந்தியாவின் 1970 களில் வரி விதிப்பை மேற்கோள் காட்டுகிற அளவிற்கு பித்தலாட்டம் புரிகிறார். அன்னாரது கருத்துப்படி 70களில் 98% வருமான வரி விதிக்கப்பட்டது என்று எழுதுகிற பொழுது ஓர் அயோக்கியத்தனத்தையும் திட்டமிட்டு மறைக்கிறார்.

              அது 1965-70களில் அமெரிக்க நிர்பந்தத்திற்கு இணங்க, இந்தியா தனது பண மதிப்பில் 39% குறைத்துக்கொண்டது. என்ன காரணத்திற்காக ஒரு நாடு தன் நாட்டு பண மதிப்பை வலுவிலக்கச் செய்ய வேண்டும். ஒரு நாடு ஏற்றுமதியை மட்டுமே தன் பொருளாதாரத்திற்கு நம்பியிருக்குமாயின் பண மதிப்பை வலுவிலக்கச்ச்செய்வது வசதியானது. ஆனால் 98% இறக்குமதியை நம்பியிருக்கிற இந்தியா ஏன் வலுக்கட்டாயாமாக 1965இல் தன் நாட்டு பண மதிப்பை வலுவிலக்கச் செய்ய வேண்டும்? முதலீட்டுத்தத்துவம் பேசும் அயோக்கியர்கள் இக்கேள்விக்கு பதில் சொல்லும்படி கேட்டுக்கொள்கிறேன். இதக்குப் பின்னாடிதானே வரிவிதிப்பு லொட்டு லொசுக்கு எல்லாம் வரவேண்டும்.

              இதுபோக பிகே அவர்கள் பொதுவுடமையாக்குவது என்பதுதான் பங்கீடு என்று சரியாகச் சொல்லியிருக்கிறார்.

              இதை இன்னும் ஒரே செயல் தந்திரமாக அடக்க வேண்டுமென்றால்
              உழுபவனுக்கு நிலம். உழைப்பவனுக்கு அதிகாரம்.

              இதற்கான போர்தந்திரம் கைக்கூலிகளை இனங்கண்டு அடித்துவிரட்டுக!

      • தென்றல்,

        //ஆக நாட்டுடைமையாக்கப்பட்டதால் ஒரு நாடு பஞ்சத்திற்கு இழுத்துச் செல்லப்படுகிறது என்று முடிவாக புரிந்து கொள்ளலாமா அதியமான் அவர்களே? //

        வினவு ஆரம்பித்த காலத்திலிருந்து பல பேர் இப்படி , ராமன் – அதியமான் போன்றவர்களுக்கு புரிய வைக்க முயற்ச்சித்து தோற்று போயுள்ளார்கள். அவர்களிடமிருந்து நேரிடையான பதில் ஒரு போதும் வராது. வக்கிர புத்தி உடையவர்கள். “தரகு” முதலாளியத்தில் மூடநம்பிக்கை கொண்டவர்கள்.

        அதிலும் ராமன் இவ்வளவு தூரம் அம்பலப்பட்டு போனப்பின்னும், (பேசி பேசி தொடர்ந்து அம்பலப்படுகிறார்), தேய்ந்த கீறல் விழுந்த ரெகார்டு போல சொன்னதையே சொல்லி மீண்டும் மீண்டும் முதலிலிருந்து நம்மை ஆரம்பிக்க வைக்கிறார்.

        பின் குறிப்பு: அதியமான் அடிக்கடி கூறுவது “இங்கு படிக்கும் சாதாரண வாசகர்களுக்கு தெரியும்”, அதுபோல் நான் பின்னூட்டம் அதிகம் இடாத சாதாரண வாசகன்தான்.

  22. அதியமான் ,

    இந்தியாவில் தேசிய முதலாளித்துவம் என்ற ஒன்று இருந்தால் தானே அதனை வளர்தெடுத்து ,செழுமை படுத்தி நாட்டின் பொருளாதாரத்தையும் அதன் ஊடாக தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் “சிறிதாவது” முன்னேற்ற முடியும் ? இந்தியாவில் இன்று செயல்பாட்டில் இருப்பதோ கயமையான தரகு முதலாளித்துவம் மட்டும் தானே ! மத்திய மாநில அரசுகளும் தரகு முதலாளித்து அரசுகளாக தானே இருகின்றன. நாட்டின் நிலைமை அப்படி இருக்கும் போது கற்பனையில் முதலாளித்துவத்தை வளர்கின்றேன் என்று நீர் ஒப்பாரி வைப்பது ஏனோ ? 1990க்கு பின் வந்த எந்த அரசு தேசிய முதலாளித்துவத்தை ஆதரித்து இருக்கிறது. 1990க்கு பின் வந்த அரசுகள் முழுமையாக பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவிற்குள் வருவதை அனுமதிக்கும் பொருட்டு FDI % லெவலை அதிகப்படுத்திக்கொண்டு தானே உள்ளன. ஒரு பக்கம் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்து விட்டு அவர்களுக்கு தடையில்லாத மின்சாரம் , தடையிலாத குடிநீர் சப்பளை , வரியில்லாத பொருள் உற்பத்தி என்று சலுகைகளை காட்டும் , செய்யும் அரசு , அந்நிய சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு மறுபக்கம் இருக்கும் இந்திய சிறுதொழில்களுக்கு 6 மணி நேர மின்தடையுடன் மின்சாரமும் , நீர் தட்டுப்பாட்டை அளித்தால் எப்படிங்க நாட்டில் உள்ள சுய தொழில் முன்னேறும் ? இந்தியாவின் தேசிய முதலாளித்துவம் வளரனும் என்றால் ,இந்த அரசு முதலில் தரகு முதலாளித்துவத்துக்கு சாதகமான கொள்கைகளை மாற்றனும். அந்நிய நேரடி முதலிட்டின் % அதிகரிக்க அதிகரிக்க நம்முடைய தேசிய பொருளாதாரமும் , உள்நாட்டின் தேசிய ,சுய தொழில் நுட்பமும் ,தேசிய முதலாளித்துவமும் எப்படி வளரும் ? உங்கள் கருத்துகள் உங்களுக்கே முர்ணபாடாக இல்லையா அதியமான் ? கீழ் உள்ள கேள்விகளுக்கு முடிந்தால் பதில் அளியுங்கள் அதியமான்.

    [1] இந்தியாவில் முதலாளித்துவம் வளரனும் என்று சொல்கின்றிர்கள். அதனை நான் தேசிய முதலாளித்துவம் என்று எடுத்துகொண்டால் கூட 1990க்கு பின் வந்த அனைத்து அரசுகளும் அந்நிய நேரடி முதலிட்டின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிறப்பு பொருளாதார மண்டலங்களை திறந்து விட்டு அதன் மூலம் தரகு முதலாளித்துவத்தை தானே வளர்கின்றன. அதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் தானே பயன் அடைகின்றன. இந்தகைய சுழலில் தேசிய முதாலாளித்துவத்தை வளர்ப்பது எப்படி ?

    [2] மத்திய அரசின் disinvestment policy பற்றி என்ன கருத்து வைத்து உள்ளிர்கள் . அரசு முதலாளித்துவம் சார்ந்த லாபத்தில் இயங்கும் பொது துறை நிறுவனங்களின் பங்குகள் பங்கு சந்தையில் விற்க படுவது பற்றிய உங்கள் கருத்து என்ன ? disinvestment policy சரி/தவறு என்றால் அது ஏன் சரி என்று விளக்குங்கள்.

    [3]பன்னாட்டு நிறுவனங்களை FDI அந்நிய நேரடி முதலிட்டின் மூலம் அனுமதிப்பதன் மூலம் இந்தியாவின் சொந்த தொழில் நுட்பம் வளருமா ? விழுமா ? வளரும் அல்லது வீழும் என்றால் அது எப்படி என்று விளக்குங்கள் .

    மேலே உள்ள கேள்விகளுக்கு பதில் அளித்திர்கள் என்றால் உங்களுக்கே உங்கள் கருத்துகளில் உள்ள முரண்பாடுகள் விளங்கும்.

    //உழைக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முதலாளித்த்வத்தை சரியாக, ஒழ்ங்காக செயல்படுத்துவது தான் சரியான வழிமுறை என்று நான் நம்புவதால், ’முதலாளிகளை’ ஆதரிக்கிறேன்//

  23. அதியமான் ,

    எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போனாரு என்ற அளவில் தான் உங்கள் விவாதங்கள் இருக்கு. ஏதோ பெயருக்கு பின்னுடங்ககளை copy past முறையில் அளித்து கொண்டு இருகின்றிர்கள். உங்கள் கருத்துகளில் சுய சிந்தனையோ , தகுந்த தரவுகளோ சிறிதும் இல்லை அதியமான். வினவில் உள்ள உங்கள் கருத்துகள் மட்டும் அல்ல …, உங்கள் இணைய தள கட்டுரைகளும் மிகவும் மேம்போக்காவும் , வற்றிப்போன அறிவாற்றல் உடனும் , தகுந்த விளக்கங்கள் இல்லாமலும் உள்ளன. கல்லூரியில் என்னுடன் பணியாற்றிய பொருளாதார துறை ஆசிரியர் [ நண்பன்] அடிக்கடி கூறுவான் : பொருளாதாரமே மிகுந்த விவாதத்துக்கு உரிய சப்ஜெட் என்று . ஆனால் உங்கள் விவாதங்களில் பருண்மையான கருத்துகளோ , விவாதத்தை விறுவிருப்பாக்கும் ,விவாதத்தை அடுத்தகட்டத்துக்கு முன்னேற்றும் Plot Points கள் சிறிதும் இல்லை. உங்கள் விவாதங்கள் வழக்கம் போன்றே வெகு தட்டையாக இருக்கிறது.

    • உற்பத்தியே இல்லாமல் வருமானம் ஈட்டுவது எப்படி என்று சேலம் சிவராஜ் சித்தவைத்தியர் போன்று ராமன் பிளாக்கைச் சுட்டிக்காட்டுவது கேலிக்கூத்தாக உள்ளது. அமெரிக்கா காரனைப்போல டாலர் நோட்டு அச்சடிக்கும் இரண்டு மிசின் வாங்கிப்போட்டு, கடன் பத்திரத்தில் கைநாட்டுபோட்ட அமெரிக்க காரனின் ஐடியா இராமனுக்கு தெரியாது போல! இது ஒரு பிளாக்கு வேறு! கெரகம்!

      • தென்றல்,

        அது பேரு தாங்க அமெரிக்கனின் Quantitative easing 3[QE 3] என்ற ஏமாற்று வித்தை. ஒரு மாதத்துக்கு அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கி [Federal Reserve] $40 பில்லியன் வெளியிடனும். அதுவும் நோட்டாக கூட வெளியிட மாட்டாங்க. இந்த சீரியல் நம்பரில் இருந்து அந்த சீரியல் நம்பர் வரைக்கும் அமெரிக்க டாலரை வெளியிட்டதாக கணக்கில் வைத்துகொள்வாங்க. [எல்லாமே ஆன்லைன் பரிமாற்றம் தானே ] நீங்க அமெரிக்காவிடம் கடன் வாங்கினாலோ அல்லது ஏற்றுமதி வர்த்தகம் செய்தாலோ அந்த அச்சடிக்கபடாத நோட்டுகளை ஆன்லைன் மூலம் நம்ம கணக்கில் சேர்த்து விடுவாங்க. ஆனாலும் அமெரிக்கா இப்படி செய்வதை கண்டு அதியமான் வாயை திறந்து ஒரு வார்த்தை பேசமாட்டாரு. உலகம் முழுக்க வர்த்தகத்துக்கு அமெரிக்க டாலர் பயன்பாட்டில் உள்ள நிலையில் , அதனால டாலரின் தேவையும் அதிகம் உள்ள நிலையில் அமெரிக்கர்கள் அதனை பயன் படுத்திக்கொண்டு ,அவர்கள் டாலரை பில்லியன் பில்லியனாக வரிசை எண்கள் மூலம் வெளியிட்டு பொருளாதார சூதாட்டம் ஆடுவதை எல்லாம் பத்தி ஒரு வார்த்தை பேசமாட்டாங்க இந்த தரகு முதாளித்துவ அடிவருடிங்க இராமனும் ,அதியமானும் .

        Note: A third round of quantitative easing, “QE3”, was announced on 13 September 2012. In an 11–1 vote, the Federal Reserve decided to launch a new $40 billion per month, open-ended bond purchasing program of agency mortgage-backed securities.

    • ஹையோ .. ஹையோ … அட ராமா! ஏன் இப்படி எல்லாம்.. காமெடி பண்ணிக்கிட்டு திரியறிக?

Leave a Reply to தமிழ் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க