privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்கும்பமேளா: இந்தியாவின் புனிதமா, அழுக்காŸ?

கும்பமேளா: இந்தியாவின் புனிதமா, அழுக்காŸ?

-

ட இந்தியாவைப் போல தமிழகத்தில் கும்பமேளா குறித்து அத்தனை ஆர்வம் இருப்பதில்லை. ஒருவேளை குடந்தை குளத்தில் அம்மா கைங்கைரியத்தில் சில பல தமிழர்கள் முக்தி அடைந்ததின் கசப்பான நினைவுகள் தமிழ் மக்களை கிலியடைச் செய்திருக்குமோ தெரியவில்லை.

அலகாபாத், நாசிக், உஜ்ஜையினி, ஹரித்துவார் நான்கு நகரங்களிலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த கும்பமேளா நடக்கிறது. கும்பமேளா தோன்றிய புராணக்கதையே நம்மூர் எச்சக்கலை கதைகளை விஞ்சி விடும் தரம் கொண்டது.

தன்னை மதிக்காத இந்திரனைக் கண்டு கோபமடையும் துர்வாசர் அவனை பிச்சைக்காரனாக ஒழிந்து போ என்று சாபம் கொடுக்கிறார். இதனால் இந்திரன் மட்டுமல்ல, தேவர்கள் அத்தனை பேரும் தங்களது சுகமான தேவலோக வாழ்க்கையை இழந்தனர். அது என்ன சுக போகம்? ரம்பா, ஊர்வசி, மேனகைகளால் ஆடப்படும் இந்திர லோகத்து குத்தாட்டங்களை இனி பார்த்து மகிழ முடியாது.

இதனால் அசுரர்கள் கை ஓங்கியதாம். இதனால் கலங்கிய தேவர்கள் பிரம்மா தலைமையில் சிவனிடம் புகார் கொடுத்தார்களாம். அவர் கொடுத்த ஆலோசனையின் படி விஷ்ணுவிடம் வழி கேட்க, அவரோ பாற்கடலை கடைந்து அமுதத்தை எடுத்து அருந்தினால் இழந்த சுகபோக வாழ்க்கை, பலம் அனைத்தும் கிடைக்கும் என்றாராம்.

ஆனால் அமுதத்தை தனியாக கடைந்து எடுக்க முடியாது என்பதால் அசுரர்களையும் துணைக்கழைத்துக் கொண்டு தேவர்கள் பாற்கடலை கடைய இறுதியில் தன்வந்திரி அமுதக் கலசத்துடன் தோன்றுகிறார். கடைவதற்கு துணை நின்ற அசுரர்களுக்கு பாதி பங்கை கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள் தேவர்கள். இதற்காகவே விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அமுதக் குண்டானை எடுத்துக் கொண்டு ஓடுகிறார். அசுரர்கள் துரத்துகிறார்கள். இந்த ஓட்டம் தேவலோக கணக்குப்படி 12 நாளுக்கு நடந்ததாம். நமது கணக்கின் படி 12 ஆண்டுகளாம். இந்த ‘சேசிங்கில்’ அமுதக் குண்டானிலிருந்து நான்கு துளிகள் மேற்படி கும்பமேளா இடங்களில் விழுந்ததாம். இதனால் அந்த தலங்கள் புனிதமடைந்து அமுதத் துளி விழுந்த தினத்தில் கும்பமேளா நடக்கிறதாம்.

அமுதத் துளி விழுந்த நீர்நிலைகளில் நீராடினால் சகல பாவங்களும் நீங்கி முக்தி அடையப் பெறுவார்களாம். ஆக சிந்திய நான்கு துளிகளுக்கு இப்படி ஒரு நிகழ்வை நடத்தி அதையும் உலகில் அதிகம் மக்கள் ஒன்றுகூடும் மதத்திருவிழா என்று வேறு பெருமை பேசி திரிகிறார்கள். அந்த அமுதத்தின் பிறப்பே ஒரு மோசடியில் குடிகொண்டிருக்கிறது எனும் போது அதன் எச்சில் துளிகள் எப்படி பாவத்தை போக்கும்?

மூன்று கோடி மக்கள் நீராடினார்கள், அரசு ஆயிரம் கோடி செலவழித்தது, வர்த்தக முதலாளிகள் பத்தாயிரம் கோடிகளை அள்ளினார்கள் என்று கும்பமேளாவின் கணக்குகள் எல்லாம் கோடிகளில்தான். கூடவே அலகாபாத் ரெயில் நிலைய நெரிசலில் முப்பது, நாற்பது பேர் இறந்து போயிருக்கின்றனர் என்ற கணக்கும் உண்டு. மதக்கூடல் நடக்கும் மெக்காவோ இல்லை கங்கையோ எங்கும் இத்தகைய பலிகளை ஆண்டுதோறும் பார்க்கிறோம்.

அலகாபாத் கங்கையில் குளித்தால் ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள் விலகி பிறப்பில்லா முக்தி நிலை கைவரப்பெறுமாம். இந்த குறுக்கு வழி முக்தியில் பெரிய அளவு சிரமப்படத் தேவையில்லை என்பதால் வட இந்தியாவில் இருக்கும் எல்லா வகை சாமியார்களும் கும்பமேளாவில் ஆஜராகிறார்கள். பாவத்தையே தொழிலாகக் கொண்ட நித்தியானந்தா, ஜெயேந்திரன் போன்ற தென்னிந்திய மோசடி சாமியார்களும் கூட கும்பமேளாவில் குளிக்கிறார்கள். பாவம் கங்கை!

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்)

வாழ்நாள் முழுக்க மௌன விரதம் இருக்கும் பரிவாஜக சாமியார்கள் தங்கள் வருகையை மணி அடித்து தெரிவிப்பார்களாம். தங்களது உடலை வருத்தி முக்தியடையலாம் எனும் ஊர்த்துக வாஹூர சாமியார்கள், தலைகீழாக தவம் செய்யும் சிரசாசன சாமியார்கள், திசைகளை ஆடையாகத் தரித்த திகம்பர சாமியார்கள், நிர்வாணிகள், அப்புறம் நிர்வாண நாகா சாமியார்கள் என்று கும்பமேளாவில் கவர்ச்சியே இத்தகைய வேடிக்கை சாமியார்கள்தான்.

இவர்கள் அனைவரும் பிரம்ம முகூர்த்தமான அதிகாலையில் கங்கையில் குளிப்பார்களாம். இவர்களை பார்ப்பதற்கென்றே பெரும் கூட்டம் கும்பமேளாவிற்கு வருகிறது. விளம்பர நடிகை பூனம் பாண்டே கூட இந்த ஆண்டு கும்பமேளா சென்று குளித்து சாமியார்களின் ஆசிகளை வாங்கியிருக்கிறாராம். இருவரது தொழிலும் உடை குறைவு என்பது ஒரு ஒற்றுமை.

வண்டலூர் உயிரியில் பூங்கா போல தினுசு தினுசான இந்த சாமியார்களுக்கும் ஒரு மிருகக் காட்சி சாலை திறந்தால் நாட்டு மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் இந்த ஜந்துக்களை பார்க்கலாம். நிர்வாண சாமியார்கள் பணம் கொடுத்தால்தான் ஆசிர்வாதம் மட்டுமல்ல, காமராவுக்கு போசே கொடுப்பார்களாம். இவர்களில் சிலர் பைக்கெல்லாம் வைத்து ஓட்டுகிறார்கள். சமயங்களில் நவநாகரிக அடைகளும் அணிகிறார்கள். காமராவைத் திறந்தால் உடன் ஆடைகளை களைந்து கொண்டு ரெடியாகிறார்கள்.

கஞ்சா முதலான போதை பொருட்கள், மக்கள் கொடுக்கும் பணம் என்று சாமியார்களின் வாழ்க்கை பேஷாகவே கழிகிறது. அரசர்களைப் போல அலங்காரத்துடன் உருத்திராட்சக் கொட்டை, காவிப்பட்டையுடன் வரும் சாமியார்களும் இங்கு உண்டு. இவர்கள் கார்ப்பரேட் சாமியார்கள் போல பரிவாரங்களுடன் வருவார்கள். அடுத்து கும்பமேளாவின் விசித்திரக் காட்சிகளை பார்ப்பதற்கென்றே வெளிநாட்டாரும் கணிசமாக வருகின்றனர். அவர்களில் சிலர் இந்தியாவில் ஏதோ ஆன்மீக மர்மம் குடிகொண்டிருக்கிறது அதை கண்டு கொண்டால் நிம்மதி என்று அறியாமையிலும் வருகிறார்கள்.

இருப்பினும் இந்தியா பாம்பாட்டிகளின் தேசம் என்று வெளிநாட்டவர்களால் கேலி செய்யப்படுகிறது என்று சங்கபரிவார பக்தர்கள் சினமுறுவார்கள். ஆனால் அந்த கேலி போதாது என்பதைத்தானே கும்பமேளா காட்டுகிறது?

– வேல்ராசன்
________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மார்ச் 2013
________________________________________________________________________________

  1. உண்மையை தோலுரித்து காட்டியுள்ளீர்கள். 12 வருடங்கள் செய்யும் பாவங்களை தொலைக்க கும்பமேளாவில் கூடிக்கூத்தடிக்கிறார்கள். இதை மீடியாக்களும் முக்கியப்படுத்தி வெளியிடுவதனால் தான் செய்தால் பாவம் குளித்தால் தீரும் என்று 5 வயது சிறுமிகளையும் சூறையாடுகிறார்களோ?

  2. முதல்ல இந்த மூட நம்பிக்கையை ஒழிக்கனும். (எதல்லாம் மூட நம்பிக்கைன்னு வினவு ஒரு போஸ்ட் போட்டா தேவலை)

    • இங்கன வினவு என்னென்ன போஸ்ட் போடுதோ அனைத்து மாற்றங்களும் உடனுக்குடன் நாட்டில் சட்டமாக்க படுவது உமக்கு தெரியாதா?இன்னா பாஸு இம்புட்டு வெள்ளந்தியா இருக்கீக…சரி சரி நாட்டில் என்னென்ன மாற்றம் வேணும்னு இங்கன ஒரு பட்டியலே கொடுங்க நாளை மாலைக்குள் அவை நிறைவேற்றப்படும்

  3. மதத்தின் பெயரால் நடக்கும் இது போன்ற காட்டு மிராண்டி பழக்கஙளை வோட்டு கட்சிகளால் ஒழிக்க முடியாது! நம்ம ஊர் தீ மிதித்தல், அலகு குத்தி காவடி எடுத்தல் முதலியவை உட்பட! மலேசிய முருகனுக்கு அஙகுள்ள தமிழர்கள் எடுக்கும் காவடி விழா காண ஏராளமான வெளினாட்டினர் குவிகிரார்களாம்! (அந்தமான் ஆடையற்ற காட்டுவாசிகளை கான அதைவிட அதிக வெளினாட்டினர்!)

    • குளிப்பது காட்டுமிராண்டித்தனம் இல்லை…ஆனால் இந்த காட்டுமிராண்டி சாமியார்களோடு சேர்ந்து குளிப்பது காட்டுமிராண்டித்தனம்தான்

      • kattu mirandi saamiyara?

        avuru enna unga munnadi vanthu prachanai senjara?

        Illa oorula ulla mollamaari,mudichavukki,kozhandaiya rape pannuravan ivana maadhiri antha samiyaru thollai kuduthaara.

        • நாகரீகம் இல்லாம இப்படி கும்பலா வந்து அழுக்கு தண்ணியில குளிக்கிறவன் மறை கழண்ட காட்டுமிராண்டியாத்தான் இருக்கவேண்டும்..இதற்கு நம் மக்களும் துணைபோவது கொடுமையின் உச்சக்கட்டம்..

          • azhukku thanniya?

            oorula koovam naatham kettu naarudhu,kosu vandhu malaria,filaria ellam kudukutthu?

            adha pathi ellam inga pesa aalu illa,gangaiyila kulikiravanukku andha viyaadhi ellam varadhu illaye?

            oorula ulla kaalvai saakadai aakunavana ellam vuttutaaru,saamiyar kulikiradhu prachanayamam.

        • மனிதன் வாழ அடிப்படை தேவைகளான உணவு, உறைவிடம், உடை, வசதியை மேம்படுத்தும் அனைத்தும் மனித உழைப்பு மற்றும் உழைப்பின் மூலம் விளைந்த அறிவால் மட்டுமே சாத்தியம். ஆகையால் மனிதனாக பிறந்தவன் எதாவது ஒரு வழியில் தன் உழைப்பை கட்டாயமாக கொடுத்தே ஆக வேண்டும்.

          ஆனால் எதற்கும் பயனற்ற இந்த பயத்துக்கார கூட்டத்தை என்ன செய்யலாம்? அடுத்தவன் உழைப்பில் வாழும் ஜந்துக்களால் இந்த சமூகத்திற்கு என்ன பயன்? இவர்கள் வாழும் தகுதியை இழந்தவர்கள்.

          வேண்டுமென்றால் ஒன்று செய்யலாம், இவைகளை கட்டிகொண்டுப்போய் ஆள் நடமாட்டமே இல்லாத தீவில் விட்டுவிட்டு வந்து விடலாம்.

          • appo vayasanavunga,seekka irukkiravunga,manamilai baadhikka pattavungala ellam enna seyyalam?

            avunga enna unga kitta nithamum biryaniya kettanga,illa neenga sondha kaasula avungalukku aaki podureengala?

            edho kanjiyum,kaaikariyum thinnu vaazhuraanga,idhukku sambandame illadha aal ellam koralu kudukkuran.

            appadiye avunga ellam 1,76,000 koi muzhunguna maadhiri.

        • “Illa oorula ulla mollamaari,mudichavukki,kozhandaiya rape pannuravan ivana maadhiri antha samiyaru thollai kuduthaara..”
          இதையெல்லாம் அவர்கள் செய்யாமலா இருக்கிறார்கள்? உண்மையை நீங்கள் எங்கே ஒத்துக் கொள்ளப்போகிறீர்கள்? மேற்படி செயலில் ஒன்றை மட்டும் செய்திருந்தால் அவர் சிறிய சாமியார். எல்லாவற்றையும் ஆசிரமம் வைத்து அமோகமாக செய்து கொண்டிருந்தால் அவர் பலே சாமியார் என்று சொல்லி தவறாது சென்று காலில் விழுந்து குட்டிக்கரணம் அடித்து வருவீர்கள். இவ்வளவு பேசுகிறீர்களே, அந்த சாமியாரை ஒரு நாள் இல்லை வேண்டாம் ஒரு வேளை உங்கள் வீட்டில் வைத்து பூஜை செய்வீர்களா?

            • அரிக்கி (எ) சூப்புறமணீ. டாக்டர் என்று போர்டு போட்டுக்கொண்டு போலி டாக்டர்கள் இருக்கலாம். அவர்கள்தான் போலி டாக்டர்கள். படித்து பட்டம் வாங்கிய டாக்டர்கள் போலிகள் ஆக முடியாது. ஆனால் சாமியார் ஆவதற்கு எந்த தகுதியும் தேவையில்லை. போலியாக இருந்தால் மட்டுமே போதுமானது. சாமியார்கள் அனைவருமே போலிகள்தான்.

              • periyavan,

                padichu pattam vaanguna doctornnu neenga eppadi kandupudipeenga?

                poli pathiram tayaricha telgi ellam iruntha pozhuthu,MBBS certificate emathiram?

                Maathiraiya vaangi muzhunga mattum thaana ungalala mudiyum.

                mokkai badhila pottuputtu periyavannu peru vera,

                moolai thavira ellathulayum periyavaru pola.

          • Btw,

            Thamizh,

            Poli elathulayum thaan irukku,

            Enga veetukku mariyadhaikuriya gnani ponra saamiyar vandhu poosai seidhu ullar,engalukku yaarayum naada vendiya avasiyam illa.

            • டாக்டருக்கென்று ஒரு படிப்பு, என்ஜினியருக்கென்று ஒரு படிப்பு இருப்பது போல மரியாதைக்குரிய ஞானி போன்ற சாமியாருக்கென்று ஏதேனும் படிப்பு இருக்கிறதா? மரியாதைக்குரிய சங்கரன் போன்ற சாமிகளெல்லாம் திடீரென்று புரட்சி செய்து காமக் களியாட்டம், கொலை என்று களத்தில் இறங்குவதால் சந்தேகம் ஏற்படுகிறது. கொஞ்சம் தெளிவுபடுத்துங்களேன்.

              • irukku,adharku pala peedangalaum ullana.

                jayendra sarawati ellam andha gnana oliyin munnal summa oru kosu,inaikki ulla news flavour avlo thaan.

                evalavu nalla vilachalayum kedukka oru poochi pothumanathu,adhu maadhiri thaan jayendran,sankarannu solladheenga.

                • அந்த பீடங்களுக்கு டைரக்ட்டா கடவுள் அப்ரூவல் கொடுத்தாரா? இல்லை அரசாங்கம் கொடுத்திருக்கிறதா? வேந்தர், துணை வேந்தர் எல்லாம் இருக்காங்களா?

            • நான் கேட்ட கேள்வி :- “இவ்வளவு பேசுகிறீர்களே, அந்த சாமியாரை ஒரு நாள் இல்லை வேண்டாம் ஒரு வேளை உங்கள் வீட்டில் வைத்து பூஜை செய்வீர்களா? ”

              நீங்கள் கொடுத்த பதில்:-“Enga veetukku mariyadhaikuriya gnani ponra saamiyar vandhu poosai seidhu ullar, ”

              அப்படீன்னா நீங்களே ஒத்துக்கிறீங்க, “கும்பமேளாவிற்கு மணி ஆட்டிக்கொண்டு வருபவனெல்லாம் அயோக்கியர்கள்” என்பதை. அதை மக்களிடம் எடுத்துச் சொல்லாலாமே. அங்கேயெல்லாம் போய் அயோக்கியர்கள் ஆட்டிக் கொண்டு வரும் மணியைப் பார்க்காதீர்கள். மரியாதைக்குரிய ஞானி போன்ற சாமியார்களை நான் அறிமுகப்படுத்துகிறேன் என்று அந்த பெண்ணை அழைத்துச் செல்லும் அவளின் மானெங்கெட்ட கணவன், தம்பி, அப்பா ஆகியோரிடம் சொல்லலாமே.

              • enga grandparents 4 perum kaasiku poi vandhirukkanga,avunga thappana vishayangal irunthatha enakku solla villai,irunthalum odhukki vittu nalla vishayatha mattum thaan sonnanga.

                Naanum personala rishikesh,haridwar poirukkiren,amarnath yatra poi irukken,naan andha saamiyar ellam ayokkiyannu eppo sonnen?

                avunga,gangaiya vitto kaasiya vitto varave mattanga,poosai seyyura aalum kedayathu.

                veembukkaga avungala ivalavau thooram kooti varanuma?

                BTW,neenga podhuva nirvana saamiyarnnu solreenga,neenga solradhu naaga saamiyara pathi mattum thaan,avungalala yaarukkavadhu thondharavu iruntha inneram anga prachanai varum,thindharavu ellam muzhusa thuni potta aalungalala thaan.

              • unmai manam ulla thamizh annan,appan solla vendiyathu pengalai izhivu seyyum urine saamiyar periyarin ezhuthukkal,pengalain vaazhvu murai patriya avradhu karuthukkal,kalyanam seyya vendam endra avarathu karuthu,annathurai,mu karunanidhi ponravargalin matter puthhagangal/ezhuthukkal/oru manaivi pala thunaivi vaithu kondu irukkum vaazhkai ithai ellam merkol katti,stalin ponravargal 1970/80 kalil seidha attagasangal,eve teasing ithai ellam thaan modhalla sollanum,enna avungalukku thollai ellam ingu irunthu thaan.

                  • உண்மையான மானம் உள்ள தமிழன் தன வீட்டு பெண்களுக்கு திராவிட கழகம் மற்றும் கட்சியினரின் வரலாறையும் , அண்ணாதுரை ராமசாமி கருணாநிதி போன்றவர்களின் நடத்தையையும் சொல்ல வேண்டும் .

                    பெரியார் அவர்களின் பெண் திருமணம் குறித்த கருத்துக்களும் , கற்பு குறித்த கருத்துக்களும் ,அண்ணாவின் நாடகங்களும் கருணாநிதியின் ஒரு மனைவி ஆயிரம் துணைவி தத்துவத்தையும் அனைத்தையும் கூற வேண்டுகிறேன்

                    பிரச்சனை செய்யாத ஒருத்தரை வைய தேவை இல்லை .

                    • நான் காண்பது கனவா.. அல்லது நனவா..

                    • ஒன்றுமில்லை திரு. அம்பி, அவருக்கு இப்படி ஒவ்வொன்றிற்கும் கார்த்திக் போல் தூண்டுவதற்கு ஒரு ஆள் தேவைப்படுகிறது அவ்வளவு தான். சுயமாக எதுவும் செய்வதற்கு வராது போல் இருக்கிறது.
                      அப்புறம் திரு. சுப்ரமணிய ஹரி மணி குமார் அவர்களே, என்னமோ நாங்கள் கருணாநிதியும், அண்ணாதுரையும் சொன்னதை வேதவேக்காக எடுத்து நடப்பது போல் அல்லவா இருக்கிறது நீங்கள் சொல்வது. அடுத்து மடச்சாம்பிராணி மன்னிக்கவும் மட பீடாதிபதிகளின் மேன்மைமிகு தத்துவங்களில் மூழ்கி முத்தெடுத்த உங்களுக்கு பெரியார் அவர்கள் சொன்னதை உல்டாவாகத் தானே புரிந்து கொள்ள முடியும்.

                    • //பிரச்சனை செய்யாத ஒருத்தரை வைய தேவை இல்லை //

                      பொது இடத்தில் அம்மணமாக திரிவது பிரச்சனை இல்லையா? அதை பற்றி பேசுபவர்களிடம்தான் பிரச்சனை உள்ளதா?

                    • திரு. ஹரி அவர்களே, அண்ணாதுரையையும் கருணாநிதியையும் உதாரணம் காட்டிய நீங்கள், எம்.ஜி.ஆரையும், உங்களின் தானைத் தலைவி, கலியுகப் புரட்சித் தாயான செல்வி. ஜெயலலிதாவையும் விட்டு விட்டீர்களே. மறந்து விட்டீர்களா? அல்லது இனப் பாசமா?

              • எங்க தாதா பாட்டி 4 பெயரும் காசிக்கும் காயவிற்கும் போயிட்டு வந்திருக்காங்க.

                அவுங்க யாரும் எனக்கு எதையும் தப்ப சொல்லல,தப்பான விஷயம் எல்லா எடதல்யும் ஒர்ர்லையும் இருக்கு.

                அந்த சாமியார் எல்லாம் எந்த பொண்ணையும் பிரச்சனை செய்யல,செஞ்சா அவுங்களுக்கும் பிரச்சனை வரும் .

                நீங்க ஒரு தடவை அந்த ஊருக்கு போகி போகி வாங்க.

                பொறவு பேசுங்க.

                • போட்டோவில் பார்க்கும் போதே ஏதோ ஜூராஸிக் பார்க்கில் உள்ளது போல், இல்லை இல்லை அதைவிட மிக கேவலமாக தெரியும் இந்த ஜந்துக்களை நேரில் போய் வேறு நாங்கள் பார்க்க வேண்டுமா? நிர்வாணமாகத் திரிவது இந்து மதப்படி சாலச் சிறந்தது என்றால், நீங்களும் அப்படியே போய் தெருத்தெருவாகப் பிரச்சாரம் செய்து பாருங்களேன். வெளியில் தெரியாதது வரைக்கும் எதுவும் பிரச்சனையில்லைதான். இப்ப்டித்தானே நித்தியானந்தாவும் சொல்லிக் கொண்டிருந்தான். “ஜன்னலைத் திற காற்று வரும்” என்றவன், காமக்களியாட்டத்தில் நடிகையுடன் இருக்கும் போது காற்றுக்காக ஜன்னலைத் திறந்ததால், எல்லாம் வெட்ட வெளிச்சமாக வில்லையா?

                  • சரி ஒன்னும் பிரச்சனை இல்லை.நீங்க இப்படியே இருங்க,என்னுடைய நேரத மிச்ச படுத்துனதுக்கு மிக்க நன்றி .

                  • நீங்க இன்னும் ஒன்று சொனீங்க.

                    கார்த்திக் சுட்டி குடுத்து நான் தமிழ்ல டிபே செஞ்சதாக , நீங்க இவளவு நாட்களாக நான் ஆங்கிலத்துல எழுதுனாலும் பதில் சொல்லுவீங்க , இப்ப வரைக்கும் ஜால்ரவ தாண்டி உருபடிய சுயமா யோசிச்சு எதையுமே சொனனது இல்ல.

                    எங்க அப்பா பெரியப்பா எல்லாம் பெரியார் பிரசாரத நேர்லயே கேட்டிருக்காங்க,அவுங்க சொனனது இது தான் ,மக்கள் ஆர்வமா உக்காந்து கை தட்டி ரசிச்சு கேட்ட பெச்ஹளர் ரெண்டு பேரு ஒன்னு பெரியார் ரெண்டு தீபொறி ஆறுமுகம்.

                    இத வச்சே தெரிஞ்சிருக்கும் அவரோட கூட்டாளி யார்ன்னு.

  4. “மதக்கூடல் நடக்கும் மெக்காவோ இல்லை கங்கையோ எங்கும் இத்தகைய பலிகளை ஆண்டுதோறும் பார்க்கிறோம்” வினவின் உண்மை ரூபம் தெறீகிரது- பாவ மன்னிப்பு , கன்னியாஸ்திரிகள் தற்கொலைகள் பற்றீ பதிவு உண்டா ?

  5. ஆடையில்லாமல் கும்பலாக குளிக்கிறது காட்டுமிராண்டிதனமா என்று கேட்டிருக்கனும் ஹரிகுமார்.

    • நாங்கள் உற்றுப் பார்ப்பது இருக்கட்டும். பெண்கள் உற்றுப் பார்த்து, அது என்னவேணும் என்று கேள்வி கேட்டால் பிரச்சனையில்லையா? பிரச்சனை ஆக்கி பார்க்க வேண்டும் என்பதற்காக பெண்கள் பார்ப்பது உங்களுக்கு பிரச்சனையில்லையென்றாலும், அதைப் பார்க்கும் நாகரீகமுள்ள எவர்க்கும் பிரச்சனைதான்.

      • pala 1000 varushama indha prachanai varala,aana ungalukku mattum thaan varudhu.

        ungalukku nagareegam irukku,neenga poga dheenga.

        avlo thaana.

        pengal ellam avunga appa,annan,kanavan kooda thaan varanga,suyama mudivu edukkuranga poi kulikkanuma,venamannu

  6. கூட்டத்தை கூட்டி, சந்தடி சாக்கில் கந்தபொடி வியாபாரம் செய்ய வாய்ப்பு தேடும் சுரண்டல் கும்பலின் ஏற்பாடுகளே இந்த மேளாக்கள்! ஆஙகிலேயர் ஆட்சியில் தான், குறைந்த பட்ச சுகாதார ஏற்பாடுகளாவது செய்யபட வேண்டும் என்ற சட்டம் வந்தது! இன்னமும் மதுரை, சீரஙகம் முதலிய தெய்வீக நகரஙகளில், திருவிழா காலத்தில் காலரா மோட்ச மடைவோர் பலர்! முன்பு நிர்வாண சாமியார்கள் கூட்டமாக தமிழ்னாட்டுக்கும் வருவார்கள் ! ஏழைகளின் ரத்தம் குடிக்கும் வடனாட்டு வியாபாரிகள் குடும்பத்துடன், இந்தநிர்வாண சாமியார் காலில் விழுவார்கள்! பக்தி காட்டுமிரான்டித்தனத்தை வளர்க்கிறது !

    • // முன்பு நிர்வாண சாமியார்கள் கூட்டமாக தமிழ்னாட்டுக்கும் வருவார்கள் ! ஏழைகளின் ரத்தம் குடிக்கும் வடனாட்டு வியாபாரிகள் குடும்பத்துடன், இந்தநிர்வாண சாமியார் காலில் விழுவார்கள்! பக்தி காட்டுமிரான்டித்தனத்தை வளர்க்கிறது ! //

      அவர்களெல்லாம் சமணா முனிகளல்லவா கருத்துப் பெட்டகமே..

  7. இந்திய தீபகர்ப்பத்தில் தோன்றிய சமண, புத்த மற்றும் பிராமண மதஙகளில் மூட பழக்கஙகள் மட்டும் தொடர்கின்றன! கடைசியாக வந்த பிராமண மதம் மட்டும் மற்ற மூடநம்பிக்கைகளுடன் சுயனலமான வருணாச்ரமத்தையும் சேர்த்துக்கொண்டது! அம்பி அறியாததா என்ன!

    • இந்திய தீபகர்ப்பத்தில் சமண,புத்த மதங்களுக்குப் பின் கடைசியாக வந்தது பிராமண மதம் என்று நீங்கள் கூறுகிறீர்கள்.. ஆனால் பலர் சமண, புத்த மதங்கள் வைதீக மதத்திற்கு எதிராகவே தோன்றின என்று கூறுகிறார்கள்.. அது பற்றி தங்கள் கருத்து என்னவோ..

  8. இந்திய நாத்திக வாதமான ‘சார்வாகம்’ பற்றிய தமிழ் கட்டுரை, முனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் விடுதலையில் எழுதியதை படித்து வியந்தேன்! அவர் கொடுத்த சில ஆதாரஙகள்:
    1.(திகாரிகாயா 1.55 மொழி பெயர்ப்பு ஆங்கிலத்தில் ஏ.எல். பாஷாம், தி ஒண்டர் தேட் வால் இண்டியா, பக்.296).
    2.டேல்ரீப் என்பவர் எழுதிய எழுதிய The Naturalistic Tradition of Indian Thought.

  9. அம்பி அவர்களே! நிர்வாண சாமியார்கள் சாதரண காலங்களில் இமய மலை குகைகளில் இருப்பர்! கும்ப மேளா தினத்தன்று குளிப்பதற்கு கீழே வருவர்! அன்று குளித்தால் மட்டுமே பாவம் தீரும் என்று பாமர மக்கள் முண்டியடித்து நதியில் வீழ்வர்! இடையில் கஞசா முதல் எல்லா கருமாதி வியாபாரமும் நடக்கும் ! காலரா கட்டாயம் வரும் ! பலருக்கு மோட்சம் கிட்டும்! கும்பகோனம் மகாமகம் போல!

    • கங்கையிலிருந்து ஒரு காவாய் வெட்டி இமயமலைக் குகைகள் முன்பாக ஓட விட்டால் மேற்படி சாமியார்கள் எப்போது வேண்டுமென்றாலும் குகையிலிருந்து வெளியே வந்து கால்வாயில் விழுந்து, எழுந்து மீண்டும் குகைக்குள்ளே புகுந்து விடுவார்கள்.. இப்படியாக இந்தப் பெரும் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணலாமல்லவா.. தங்கள் கருத்து என்ன..

      • விவசாயத்திற்கு கால்வாய் வெட்டவில்லையெனிலும் பரவாயில்லை, இந்த சாமியார்கள் நாற்றம் தீர ஒரு கால்வாய் வெட்டுங்கப்பா.

        இந்த சாமியார்கள் வந்து அம்பிக்கு உணவு தருவார்கள். எந்த விவசாயி விளைவித்த உணவையும் அம்பி சாப்பிடமாட்டார். அப்படி சாப்பிட்டால் தீட்டு வந்து விடும்.

  10. இந்திய நாத்திக வாதமான ‘சார்வாகம்’ பற்றிய தமிழ் கட்டுரை, முனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் விடுதலையில் எழுதியதை படித்து வியந்தேன்! எனும அஜாதசத்ருவே
    மற்ற பதிப்புகலனா டார்வின்சி கோட் பொண்ரவகலை படித்து இன்னும் ஏன் வியக்கவில்ல்லை?

  11. டாவின்சி கொட் கண்டு வியக்கவில்லை என்று உஙகளுக்கு யார் சொன்னது? எது எதற்கு மதவாதிகளின் எதிர்ப்பு ஏற்படுகிறதோ அந்த கருத்துக்களை ஆராய்ந்து பார்க்க தயஙகியதே இல்லை! யேசுவின் வரலாற்றை ஒடுக்கப்பட்ட மக்களின், ஆதிக்க சக்திகளுக்கு எதிரான போராட்டமாகத்தான் கருதுகிறேன் ! மற்றபடி மோசசு ஆரம்பித்தது யேசு பலியிடுதலுடன் முடிந்தது! மீண்டும் பூசாரிகள் புதிய வேடத்தில் உலவினர்! கிருத்துவ மதம் பரவிய ஒவ்வொரு நாட்டிலும், ஆதிக்க சக்திகளை ஒட்டியே மதம் வளர்த்தனர்! ஆதிக்கசக்திகள் பலவீனப்படும்போது, எதிர்வரும் புதிய சக்தியை வளைக்க புறப்பட்டுவிடுவர்! பூசாரிகளின் இந்த திறமையே மதவாத சக்திகளின் பலம்! மற்றபடி மத போதனைகள் எல்லாம், இந்திய காம்ரேடுகளின் சோசலிசம் போலத்தான்!

  12. அம்பியே சொல்லிவிட்ட பிறகு அப்பீல் ஏது? இப்பொது கருத்து பெட்டகம் யார்? சரி, உஙகளது முந்தைய கேள்விக்கு பதில்: பிராமண கோட்பாடுகளை எதிர்த்து வந்தது புத்த மதமே! ஜைன மதம், பிராமண கருத்துக்கள் தோன்றுவதற்கு முன்னதாகவே தோன்றி கொஞசம் கொஞசமாக பிராமண மத விரிவாக்கத்தால் அரச ஆதரவை இழந்தது; மக்களும் பூசாரிகளின் வழியே சென்றனர்! காண்க: http://en.wikipedia.org/wiki/Jainism

  13. இந்தியா பாம்பாட்டிகளின் தேசம் என்று வெளிநாட்டவர்களால் கேலி செய்யப்படுகிறது என்று சங்கபரிவார பக்தர்கள் சினமுறுவார்கள். ஆனால் அந்த கேலி போதாது என்பதைத்தானே கும்பமேளா காட்டுகிறது?

    மிகச்சரியான Question

    • வெளிநாட்டவருக்கு இந்தியா பற்றிய ஒரு சில விஷயங்கள் மட்டுமே தெரியும். இன்னும் தீண்டாமை சுவர், இரட்டை டம்ளர் முறை, சேரி மக்கள் பார்ப்பன தெருவுக்கு வருதல் கூடாது போன்ற விஷயங்கள் தெரிந்தால் என்னவெல்லாம் சொல்வார்களோ?

      இதில்வேறு நமது ஊடகங்கள் இடையிடையே “உலகமே இந்தியாவை திரும்பிபார்ப்பதாக” சொல்கின்றன. ஆம் உலகமே இந்தியாவை திரும்பி பார்க்கின்றது, இந்த மக்களின் உழைப்பை எப்படி திருடலாம் என்று. இது ஊடகங்களின் உலகமகா நடிப்பு.

Leave a Reply to jaisankar jaganathan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க