privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்ராமதாஸ் - குருவை சிறையிலடை ! வன்னியர் சங்கத்தை தடை செய் ! !

ராமதாஸ் – குருவை சிறையிலடை ! வன்னியர் சங்கத்தை தடை செய் ! !

-

மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய கலாச்சார விழா என்ற பெயரில் ஆண்டு தோறும் நடத்தப்படும் பா.ம.கவின் வன்னிய சாதிவெறியூட்டல் அரசியல் விழாவிற்கு இவ்வாண்டு சென்ற பா.ம.க வன்னியர் சங்க குண்டர்களின் அராஜக நடவடிக்கையின் விளைவாக நடைபெற்றதே மரக்காணம் கலவரம் ஆகும்.

பாமக இராமதாசின் தலித் மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதி வெறியர்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சார்பாக இன்று உயர்நீதிமன்ற ஆவின் கேட்டிற்கு முன்பாக மதியம் 1.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளை ஒருங்கிணைத்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50 மேற்பட்ட வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் துவக்கமாக மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு, மரக்காணம் பகுதிக்கு தாங்கள் உண்மை அறியும் குழுவாக சென்று கண்டறிந்த விஷயங்களை முன்வைத்து உரையாற்றினார்.

”பா.ம.கவினர் குடிவெறியுடன் வாகனங்களின் மேலே ஏறி சென்ற போது செல்லுமிடங்களில் எல்லாம் சாதாரண மக்களிடம் வம்பிழுத்துள்ளனர். சித்திரை திருவிழாவில் பேசிய இராமராசு, காடுவெட்டி குருவின் பேச்சுகள் தலித் மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதியினரை திரட்டும் வகையில் அமைந்துள்ளன. குஜராத்தில் முசுலீம்களை எதிரிகளாக சித்தரித்து 2000 முசுலீம்களை கொன்று குவித்து அவர்களின் பிணங்களின் மேல் ஏறி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த நரேந்திர மோடி போன்று தமிழகத்தில் தலித் மக்களை எதிரிகளாக்கி வருகிறார்கள் இராமதாசும் பா.ம.கவும்.

ஜனநாயகப்பூர்வமான அம்சங்களுடன் வளரவேண்டிய நாகரீக சமூகத்தினை பின்னோக்கி காட்டுமிராண்டித்தனமாக நடத்த வன்னிய இளைஞர்களை தூண்டிவிடுகின்றனர். இது தலித் மக்களுக்கு எதிரான பிரச்சினை மட்டுமல்ல, அனைத்து மக்களுக்கும் எதிரானது. இராமதாசின் சாதி வெறி அரசியலுக்கு எதிராக வழக்குரைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் போராட வேண்டியது அவசியமாகியுள்ளது”

குடிவெறி காலித்தனத்தில் ஈடுபட்ட பா.ம.க குண்டர்களை கூனிமேட்டில் உள்ள வன்னிய சாதி மக்களே இஸ்லாமியர்களுடன் சேர்ந்து கண்டித்து திருப்பி தாக்கியுள்ள செய்திகள் குறித்தும், பா.ம.க இராமதாசின் சாதி வெறி அரசியலால் தலித் மக்கள் மட்டுமல்ல, வன்னிய மக்களும் பாதிக்கின்றனர் என்பதை அம்பலப்படுத்தி ராமதாசை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்த வேண்டியதையும் முன்வைத்து கூர்மையான முழக்கங்கள் எழுப்பட்டன. காவல் துறையினரும், வழக்கறிஞர்களும், பொது மக்களும் ஆர்வமுடன் நின்று முழக்கங்களை கேட்டனர்.

மரக்காணம் மக்கள் மீது
பா.ம.க.வன்னியர் சங்க
குடிகார சாதி வெறியர்களின்
கொலை வெறி தாக்குதலை
கண்டித்து ஆர்ப்பாட்டம்!

தமிழக அரசே! காவல் துறையே!
கட்டையன் தெரு, கழிக்குப்பத்தின்
தாழ்த்தப்பட்ட மக்கள் மீது
கொலை வெறி தாக்குதல் நடத்திய
பா.ம.க., வன்னியர் சங்க
குடிகார பொறுக்கிகளை
கைது செய்! சிறையிலடை!
ஆதிக்க சாதிவெறி அமைப்புகளை தடைசெய்!

தடைசெய்! தடைசெய்!
தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராய்
சாதிவெறியை பரப்புகின்ற
வன்னியர் சங்கத்தையும்
சித்திர திமிர் விழாவையும்
தமிழக அரசே! தடைசெய்!

——

ஓட்டுப் பொறுக்கி அரசியலில்
சுயலாப நோக்கத்திற்கு
தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராய்
வன்னிய-சாதி மக்களை
கேடாக பயன்படுத்தி
சாதிவெறியை பரப்புகின்ற
ராமதாசின் அயோக்கியத்தனத்தை முறியடிப்போம்!

சித்திரை பெருவிழாவில்
பீர், பிராந்தி பாட்டிலோடு
குடிகார பொறுக்கிகளை
அணிதிரட்டும் ராமதாஸ்
குடியால் நாடு சீரழிவதாய்
ஊருக்கு உபதேசிப்பது
மோசடி! ஏமாற்று!

——

ராமதாசின் அரசியலுக்கு
ஆதிக்க சாதிவெறிக்கு
பாதிக்கப்படுவது
தலித் மக்கள் மட்டுமல்ல
வன்னிய சாதி மக்களுமே
தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராய்
ஆதிக்க சாதிவெறியை
பரப்புகின்ற ராமதாசை
காடுவெட்டி குருவை
கைது செய்! சிறையிலடை!

—–

கூனிமேடு கிராமத்தில்
குடிகார பொறுக்கிகளை
வன்னியசங்க பா.ம.க
ரவுடிகளை விரட்டியடித்தது
வன்னிய சாதி மக்களே!

வன்னியர் சங்க, பா.ம.க ரவுடிகளை
சாதிவெறி குடிகார பொறுக்கிகளை
வன்னிய சாதி மக்கள்
கூனிமேடு கிராம மக்கள்
அம்பலப்படுத்தி விரட்டியதை
தமிழகமெங்கும் பரப்புவோம்!

ராமதாஸ் உள்ளிட்ட
ஆதிக்க சாதிவெறி
பிழைப்புவாதிகள் அனைவரையும்
அரசியல் அனாதையாய்
தமிழகத்தில் மாற்றுவோம்!

—-


(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்)
தகவல் : மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை