privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅன்புமணி ராமதாஸ் கைது : ஆதிக்க சாதி தலைவர்கள் ஓட்டம் !

அன்புமணி ராமதாஸ் கைது : ஆதிக்க சாதி தலைவர்கள் ஓட்டம் !

-

மிழகத்தின் ஆண்ட பரம்பரை, வீரப் பரம்பரை என்று அப்பாவி மக்களை உசுப்பேத்தி ஆதாயம் அடையப் பார்க்கும் ஆதிக்க சாதி தலைவர்கள் ஒரு புறம். மறு புறம் இவர்களது ‘வீரம்’ என்பது பொதுக்கூட்ட மேடைகளில் அதிகபட்ச டெசிபல்களில் கத்தும் ஊளைச் சத்தம் மட்டும்தான் என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.

வில் ஏந்திய அன்புமணி ராமதாஸ்
வில் ஏந்திய அன்புமணி ராமதாஸ்

மருத்துவர் ராமதாஸ் நிலைமை வண்டு முருகன் என்றால் அன்புமணியின் நிலைமை கைப்புள்ளையின் கண்றாவி கண்டிசனையும் விஞ்சி விட்டது. சென்னை தி.நகர் வீட்டில் அவர் கைது செய்யப்படும் போது அழவில்லையே தவிர அவ்வளவு சோகம். அரற்றியவாறு ஜெயலலிதாவுக்கு சாபம் விடுகிறார். அதுவும் அடுத்த தேர்தலில் அவர் வெற்றிபெற மாட்டார் என்று. தனது கைதை கருணாநிதியின் “ஐயோ” கைதுடன் வேறு ஒப்பிடுகிறார். ஆனாலும் இந்த கைப்புள்ளையின் கைது குறித்து தி.நகரில் ஒரு காக்கா கூட கத்தவில்லை.

மாமல்லபுரம் கூட்டத்தில் நான் கண்ணசைத்தால் என்ன நடக்கும் தெரியுமா என்று ராமதாஸ் வெட்டி வீரம் பேசினார். இவர் சிமிட்டி, காடுவெட்டி குரு, பி.டி அரசகுமார் போன்ற ‘வீரர்கள்’ பொங்கினால் தமிழ்நாடு தாங்காதாம். கடைசியில் என்ன ஆயிற்று? மாமல்லபுரம் முழு நிலவு கூட்டத்தில் சாதித் திமிர் கக்கிய கொங்கு வேளாளக் கவுண்டர், பார்ப்பனர், செட்டியார், கோனார், தேவர் முதலிய காமடி பீஸ்கள் சட்டையைக் காணாம், ஜட்டியைக் காணோம் என்று தலைமறைவாக ஓடியபடியே இருக்கிறார்கள். யாரும் ராமதாஸ் கைது குறித்து மூச்சே விடவில்லை என்பதும் முக்கியம்.

தமிழ்நாட்டை ஆண்ட எல்லா மன்னர்களும் எங்களது தேவர் சாதி முன்னோர்கள்தான் ஏன்று ஏகத்துக்கும் ஊசிப்போன பீலா விடும் முறுக்கு மீசை தேவர் சாதி அரசகுமார் அன்றைய கூட்டத்தில் குருவையும் விஞ்சி தாழ்த்தப்பட்ட மக்களை வன்மத்துடன் குதறி எடுத்தார். ஆனால் பழைய வழக்குகளை தூசி தட்டி ஜெயா அரசு பாமகவை பதம் பார்க்கும்போது இந்த சூராதி சூரர் அம்மா படத்தின் முன் விழுந்து பதிவு செய்து அதிமுக வட்டச் செயலாளர் முன் தோப்புக்கரணம் போட்டு கைதாவதில் இருந்து தப்பிக்க அம்மாவுக்கு நேர்ந்து இருக்கிறார்.

ராமதாஸ் , ஜெயலலிதாசோதனையான நேரத்தில் திருச்சி சிறையில் “சத்திய சோதனை” படிக்கும் ராமதாஸ் கூட ஜெயலலிதாவை நேரடியாக கண்டிக்க வில்லை. யாரோ சில வீணாப்போன போலீஸ் அதிகாரிகள் தவறாக அறிக்கை கொடுத்ததால்தான் அம்மா இப்படி பத்ரகாளியாக ஆடுகிறார் என்று அறிக்கை விடுத்தார். காடு வெட்டி குரு அளவுக்கு கூட மக்கள் முன் நாலு வார்த்தைகளை சேர்த்து பேசத்தெரியாத அன்புமணி கூட அப்பா கைதிற்காக அஹிம்சைப் போராட்டத்தின் மூலம்தான் எதிர்ப்பை காட்டி வருவதாக கூறினார்.

மாமல்லபுரம் கூட்டத்தின் அடுத்த நாள் சட்டசபைக்கு வந்த காடுவெட்டி குரு கூட அம்மா முன் பவ்யமாகத்தான் பேசினார். மரக்காணம் கலவரத்திற்கு வி.சி மற்றும் தலித்துக்கள்தான் காரணம் என்று சொல்வதைக்கூட அம்மா மனம் நோகாமல் எப்படி கூறுவது என்று தவித்தார்.

ஆக கூட்டி கழித்துப் பார்த்தால் ஜெயலலிதா அரசு என்று அல்ல, உறுதியான நடவடிக்கை எடுக்கும் எந்த அரசும் கூட இந்த காமடி பீஸ்களை உண்டு இல்லையென்று முடித்து விடலாம். இவர்களிடம் வீரம் மட்டுமல்ல விவேகமும் கிடையாது. ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த பெரும்பான்மை மக்கள் கூட இவர்களது சாதிவெறிக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை, எதிர்க்கவே செய்கிறார்கள்.

இந்நிலையில் தலித் மக்கள் மீது வன்மம் பொழியும் இத்தகைய ஆதிக்க சாதி தலைவர்கள் மீது வன்கொடுமை மற்றும் குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுத்தால் தமிழகத்தில் இவர்களது அத்தியாயத்தை முடித்து விடலாம். ஆனால் ஜெயலலிதா அதற்கு தயாராக இல்லை. அதனால்தான் இத்தகைய சாதி வெறியர்கள் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் இப்படி சவுண்டு விட்டு கோஷ்டி சேர்க்கிறார்கள்.

தற்போது ராமதாஸ் கைதை ஒட்டி இரவில் யாருக்கும் தெரியாமல் பஸ்களை எரித்தும் கல்வீசியும் ‘வீரம்’ காட்டும் வன்னியர் சங்க, பாமக குண்டர்களை சமாளிக்க ஒரு வழியிருக்கிறது. சேதப்பட்ட பேருந்துகளுக்கு நட்ட ஈடு கேட்டு அதற்கான தொகை கேட்டு தைலாபுரத்திற்கு தினமும் கூரியர் அனுப்பினால் கண்மூடித் திறக்கும் நேரத்தில் வட மாநில சாலைகளில் அமைதி திரும்பிவிடும். மருத்துவர் ராமதாஸுக்கு காசை வீட மீசை பெரிதில்லை. அங்கு அடித்தால் இங்கு வலிக்கும். நோயும் குணமாகும்.

ராமதாஸை குண்டர்கள் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வினவு நேற்று வெளியிட்ட கட்டுரைக்காக ஒரு சில ‘வன்னிய குல ஷத்திரியர்கள்’  அடிக்கடி தொலைபேசியில் ஆபாச அர்ச்சனை செய்து வருகிறார்கள்.  எதையும் பேசி விவாதிப்பதற்கு தயாராக இல்லை. அதேநேரம் திட்டுவதில் இருக்கும் ரோசம் முகவரியை தா என்று கேட்டால் குபீரென்று மறைந்து விடுகிறது. முகவரி இல்லாமல், அனாமதேயமாக திட்ட மட்டும்தான் இவர்களது ஷத்திரிய வீரம் அனுமதிக்கிறது. குண்டர்களே இப்படி என்றால் இந்த குண்டர்களது தலைவர்கள் மட்டும் எப்படியாம்?