privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்திவ்யா - இளவரசனைப் பிரித்த பாமக சாதி வெறியர்கள் !

திவ்யா – இளவரசனைப் பிரித்த பாமக சாதி வெறியர்கள் !

-

‘தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்கள் ஜீன்ஸ் பேன்ட், கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு வன்னியர் பெண்களை திட்டம் போட்டே மயக்கி விடுகிறார்கள். வன்னியர்களின் சொத்துக்களை கைப்பற்ற இப்படி சதி செய்கிறார்கள். திருமணம் செய்து சில மாதங்களில் பெண்ணை கொடுமைப்படுத்தி துரத்தி விடுகிறார்கள். பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். அப்படி ஆயிரக்கணக்கான சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த நாடகக் காதல்களை எதிர்த்து நாங்கள் போராடுகிறோம்.’

என்று தமிழ் நாடு முழுவதும் ஆதிக்க சாதிவெறிச் சங்கங்களை கூட்டி இயக்கம் நடத்தினார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ். நாடகக் காதல் மூலம் பெண்களையும், சமூகத்தையும் சீரழிக்கும் இளைஞர்களை தடுப்பதற்காக வன்னிய சங்கத்தின் மூலம் மாமல்லபுரத்தில் சித்திரை நிலவு கூட்டம் நடத்தினார்.

தற்போது இளவரசன், திவ்யா ‘பிரிவை’ வைத்து ராமதாஸ் தலைமையிலான சாதி வெறியர்கள் கும்மாளம் போடுகிறார்கள்.

தருமபுரி மாவட்டம் நாய்க்கன் கொட்டாயில் உள்ள நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் என்ற தாழ்த்தப்பட சாதி இளைஞரும், செல்லன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த திவ்யா என்ற வன்னியர் சாதி பெண்ணும் காதலித்தனர். திவ்யாவின் அப்பா நாகராஜனும், இளவரசனின் அப்பா இளங்கோவும் நண்பர்கள் என்ற முறையில் அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நர்சிங் படித்துக் கொண்டிருந்த திவ்யா, இளவரசனின் குடும்பப் பின்னணியை நன்கு தெரிந்தே அவர் மீது காதல் கொண்டிருக்கிறார்.

இளவரசன், திவ்யா
இளவரசன், திவ்யா (படம் : நன்றி விகடன்)

திவ்யாவின் வீட்டுக்குத் தெரியாமல் அவரை ஏமாற்றி இளவரசன் அழைத்துக் கொண்டு ஓடி விடவில்லை. காதல் பற்றி தெரிந்த திவ்யாவின் தந்தை நாகராஜ் மகளுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

“இந்த வயசுல காதல் வர்றது சகஜம் தான். ஆனா இந்த ஊருக்கு அது ஒத்து வராதது . நான் ஏத்துக்கிட்டாலும் இந்த சமுதாயம் ஏத்துக்காது. சென்னை மாதிரி வெளியூரைச் சேர்ந்த தலித் பையனா இருந்தாக்கூட எனக்கு பிரச்னை இல்லை. நானே கல்யாணம் பண்ணி வைப்பேன். ஆனா நம்ம பக்கத்து ஊர் தலித் பையனை நீ கல்யாணம் பண்ணினேனா எனக்கு ஊர்ல மரியாதை இருக்காது. அதனால இந்த காதல் வேணாம்” என்று அறிவு கூறியிருக்கிறார்.

திவ்யாவின் தந்தை நாகராஜனுக்கு பெரும்பான்மை வன்னியர் உழைக்கும் மக்களைப் போலவே தனது மகளின் காதலை அங்கீகரிப்பதில் பிரச்சனை இல்லை. ஆனால், ஊரில் நிலவிய ஆதிக்க சாதி சமூகச் சூழல்தான் அவரை தயங்க வைத்திருக்கிறது. ஆனால், திவ்யா தனது காதலை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. நாகராஜூக்கு காதலை பிரிக்க விருப்பம் இல்லை என்றாலும், வன்னியர் சாதி வெறியை தூண்டி விட்டு அரசியல் செய்பவர்களுக்கு பயந்து திவ்யாவுக்கு வேறு திருமணம் செய்து கொடுக்க அவசர ஏற்பாடு செய்திருக்கிறார். திவ்யா வேறு வழியில்லாமல் இளவரசனுக்கு போன் செய்து தன்னை அழைத்துச் சென்று விடும்படி அழுதிருக்கிறார். அதைத் தொடர்ந்து இளவரசனும், திவ்யாவும் திருப்பதிக்குப் போய் திருமணம் செய்து கொண்டனர்.

இது வரை, பாமக சாதி வெறியர்கள் சொல்வது போல இளவரசன் சதித் திட்டம் தீட்டும் தந்திரசாலியாகவோ, திவ்யா உலகம் தெரியாமல் ஏமாந்து விட்டதாகவோ எதுவும் இல்லை.

தான் திருமணம் செய்து வைக்க முடியா விட்டாலும் தன் மகள் அவளுக்கு விருப்பமான வாழ்வைத் தேடிக் கொண்டதில் நாகராஜூக்கு மறுப்பு எதுவும் இருந்திருக்கவில்லை. திவ்யாவின் அம்மா திவ்யாவுடன் தொடர்ந்து பேசிக் கொண்டு இருந்திருக்கிறார். ஆனால், ஊரில் உள்ள சாதி வெறி அரசியல்வாதிகளால் இதை சகித்துக் கொள்ள முடியவில்லை. சம்பந்தமில்லாத ஆட்கள் எல்லாம் வந்து நாகராஜ் வீட்டு முன்னாடி நின்னு அசிங்கமாக திட்டி விட்டுப் போவார்களாம்.

தாக்கப்பட்ட வீடுகள்
தாக்கப்பட்ட வீடுகள் (படம் : நன்றி தி ஹிந்து)

இந்த கட்டத்தில் நாகராஜ் மர்மமான முறையில் இறந்து போகிறார். அவரது உடலை திவ்யாவின் அம்மா, நாகராஜின் மனைவி தேன்மொழியிடமிருந்து பறித்துக் கொண்டு போய் அதை வைத்து நத்தம் காலனியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் வீடுகளை அடித்து உடைத்து, தீ வைத்துக் கொளுத்தினர் சாதி வெறி பிடித்த பாமக கட்சியினர். திவ்யா-இளவரசன் தம்பதியினரின் வாழ்க்கை, நாகராஜனின் உயிர், அவரது குடும்பத்தின் அமைதி அனைத்தையும் குலைத்தாவது தமது அரசியலை வளர்த்துக் கொள்வதில் குறியாக இருந்திருக்கின்றனர் சாதி வெறியர்கள்.

அடுத்தவர்களின் சொத்துக்களை அழிப்பதும், வாழ்க்கையை குலைப்பதும் வன்னிய சாதி வெறி பிடித்த பாட்டாளி மக்கள் கட்சியினர்தான் என்பதையும் அவர்கள் நிரூபித்தார்கள்.

அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து ஆதிக்க சாதி சங்கத் தலைவர்களை சந்தித்து, தமிழகம் தழுவிய ஆதிக்க சாதி கூட்டணியை உருவாக்க முயற்சித்து வந்தார் ராமதாஸ். தமிழக அரசு அதை வேடிக்கை பார்த்து வந்தது. கடலூர், இராமநாதபுரம் உள்ளிட்ட சில ஆட்சியர்கள் மூலம் தடுப்பாணை பிறப்பித்து ராமதாசை எதிர்ப்பது போல தமிழக அரசு பாவ்லா காட்டி வந்தது. அதையும் நீதிமன்றங்கள் மூலம் உடைத்து வெள்ளை வேட்டி உடுத்திய ரவுடியாக உலா வந்தார் ராமதாஸ்.

ராமதாசும் அவரது கட்சியும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்யும் அந்த கட்சியின் திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் அனைவரையும் கைது செய்ய மறுத்த தமிழ்நாடு அரசின் கையாலாகத்தனம் அவர்களது கிரிமினல் நடவடிக்கைகளை மேலும் மேலும் செய்ய சாத்தியங்களை ஏற்படுத்திக் கொடுத்தது. சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியினரை மிரட்டுவது, அடிப்பது, கொலை செய்வது என்று பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்தன.

இந்தச் சூழலில், திவ்யாவுடன் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வந்த, ஓரிரு முறை திவ்யா-இளவரசன் வீட்டிற்கு போயிருக்கிற திவ்யாவின் தாயார் தேன்மொழியின் பெயரில் பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர் அணி சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தது. கடந்த மார்ச் 27-ம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே என் பாஷா, பி தேவதாஸ் ஆகியோரிடம் திவ்யா, “நான் விரும்பித்தான் இளவரசனுடன் சென்றேன். என்னை யாரும் துன்புறுத்தவில்லை” என்று கூறினார். அதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி திவ்யா இளவரசனுடன் தொடர்ந்து வாழ்ந்து வந்தார்.

இந்தக் கட்டத்திலும், திவ்யா-இளவரசன் தம்பதியினரை பிரிக்க முயற்சி செய்தது பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சாதி வெறியர்கள்தான். இளவரசனும் திவ்யாவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

கடந்த 4-ம் தேதி திவ்யாவின் பெரியம்மா திவ்யாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “உங்க அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை. ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளோம். உன் நெனைப்பாகத்தான் புலம்பிக்கிட்டு இருக்கா. நீ வந்து பார்த்துட்டுப் போ” என்று கூறியுள்ளார். தந்தையின் அகால மரணத்தாலும், தாய், தம்பி ஆகியோரை பிரிந்திருந்ததாலும் பாதிக்கப்பட்டிருந்த திவ்யா தன் தாயை பார்க்க போயிருக்கிறார். திரும்பி வரவில்லை.

திவ்யா
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெளியில் வழக்கறிஞர்கள் சூழ திவ்யா (படம் : நன்றி தி ஹிந்து)

திவ்யாவை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்ற இளவரசனிடம் திவ்யாவின் தாயார் தேன்மொழி, “எங்களைத் தேடி எங்க பொண்ணு வந்துட்டா. இனி நீ அவள தொந்தரவு பண்ணாத.. சுமுகமா பேசித் தீர்த்துக்கலாம். உனக்கு என்ன வேணுமோ நாங்க செஞ்சு தர்றோம்” என்று கூறியிருக்கிறார்.

காதலர்களை பிரிப்பது வன்னிய சாதி வெறியர்களின் சதித்திட்டம்தான் என்பது தெளிவாகிறது. அப்படியாவது சாதிப் ‘பெருமையை’ மீட்பதற்கு திட்டம் போடும் காட்டுமிராண்டிகள்தான் பாட்டாளி மக்கள் கட்சியின் சாதி வெறியர்கள்.

இதுபற்றி தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் இளவரசனும் அவரது பெற்றோரும் புகார் செய்தனர். இது தொடர்பாக போலீசார், பெண் மாயம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதன் பிறகு 6-ம் தேதி தேன்மொழி தாக்கல் செய்திருந்த இன்னொரு ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது திவ்யா தேன்மொழியுடன் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார்.

“நான் செய்த தவறால் என் தந்தையை இழந்து விட்டேன். இனிமேலும் எதையும் இழக்கத் தயாரில்லை. தற்போது கொஞ்சம் காலம் தாயுடன் கழிக்கவே விரும்புகிறேன்” என்று நீதிபதிகளிடம் கூறியிருக்கிறார் திவ்யா. திவ்யாவுடன் பேசுவதற்கு இளவரசன் முயற்சித்த போது அதை பாமக வக்கீல்கள் தடுத்திருக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து இளவரசன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு, “இளவரசனுடன் சிறிது நேரம் பேசுவதற்கு திவ்யாவை அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டதை நீதிபதிகள் தாமாகவே மறுத்திருக்கின்றனர். “திவ்யாவை அழைத்துப் பேசினோம். யாருடன் வசித்தார்? எங்கிருந்து யார் அழைத்து வந்தார்? என்பதையெல்லாம் கேட்டோம். திவ்யா தனது தாயாருடன் செல்வதற்குத்தான் விரும்புகிறார். தாயாருடன் செல்லப்போகிறேன் என்றும், மனக்குழப்பமாக இருக்கிறது” என்றும் தெரிவித்ததாக கூறினர்.

திவ்யா கடத்தப்பட்டிருக்கிறார் என்று பதிவு செய்யப்பட்ட புகாரை விசாரிக்க வேண்டும் என்ற வாதத்தையும் “திவ்யாவிடம் அதுபற்றியும் விசாரித்தோம். தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், தானாகவே தாயாரிடம் சென்றதாகவும் தெரிவித்தார்.” என்று கூறி நீதிபதிகள் நிராகரித்திருக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து நீதிமன்றம் பின்வருமாறு உத்தரவு பிறப்பித்திருக்கிறது:

“இந்த வழக்கு விசாரணைக்காக திவ்யா தனது தாயாருடன் (மனுதாரர்) ஆஜரானார். இளவரசனும் ஆஜராகி இருந்தார். திவ்யாவிடம் பேசியபோது, சமீபத்தில் நடந்த சம்பவங்களால் தனது மனம் மிகவும் குழம்பிப்போய் உள்ளது என்று பதில் அளித்தார். எனவே, தகுந்த முடிவு எடுப்பதற்கு முன்பு தனது தாயாருடன் தங்க விரும்புவதாக திவ்யா கூறினார். மேலும், இளவரசனுடன் இப்போது பேச விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தாயாருக்கு உடல்நலன் சரியில்லை என்று தகவல் கிடைத்ததால் அவரை பார்ப்பதற்காக தனது சொந்த விருப்பத்தின்பேரில் சென்றதாகவும் திவ்யா கூறி உள்ளார்.

இளவரசன்
உயர்நீதிமன்றத்துக்கு வெளியே இளவரசன் (படம் : நன்றி தி ஹிந்து)

திவ்யா இப்படி வாக்குமூலம் கொடுத்துள்ளதை அடுத்து, அவர் தனது தாயாருடன் தங்கிக்கொள்ளலாம். திவ்யாவும், இளவரசனும் தங்களுக்கு பாதுகாப்பு தேவை என்றால் சம்பந்தப்பட்ட போலீசிடம் கேட்கலாம். அவர்கள் பாதுகாப்பு கேட்டால், அவர்களின் விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும். விசாரணை ஜூலை 1–ந் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது”.

“திவ்யா விரும்பினார், அதனால் அவரது தாயுடன் தங்கிக் கொள்ளலாம்” என்பதுடன் நீதிமன்றம் தனது பொறுப்பை முடித்துக் கொண்டிருக்கிறது. திவ்யா-இளவரசன் காதலைத் தொடர்ந்து நடந்த அரசியல்/சமூக நிகழ்வுகளையோ, அவர்கள் பிரிவதில் பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு இருக்கும் அரசியல் ஆதாயங்களைப் பற்றியோ அவர்கள் கணக்கில் எடுக்க வில்லை. ஏனென்றால் சட்டம் அதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.

காதலை பிரிப்பது, அடுத்தவரின் சொத்துக்களை அழிப்பது, தலித் மக்கள் மீது துவேசத்தை கிளப்புவது என்று அனைத்து சமூக விரோதச் செயல்களுக்கும் முதல் பொறுப்பாளிகள் ஆதிக்க சாதி வெறியைத் தூண்டி அரசியல் செய்ய முயற்சிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியினர்தான்.

திவ்யா-இளவரசனுக்கு இருப்பதாகச் சொல்லப்படும் அடிப்படை ஜனநாயக உரிமையை அவர்கள் சுதந்திரமாக அனுமதிப்பதற்கான சூழலோ, சட்டங்களோ நம் நாட்டில் இல்லை என்பதுதான் நிதர்சனம். சட்டங்களும் அரசமைப்பும் சாதி வெறிக் கட்சிகள் தமது நோக்கங்களுக்காக தனி நபர்களின், குடும்பங்களின், ஒட்டு மொத்த சமூகத்தின் வாழ்க்கையையே அழித்து வெறியாட்டம் போடுவதை தடுத்து நிறுத்தப் போவதில்லை என்பதோடு அவற்றை பாதுகாத்து நிற்கின்றன என்பதை திவ்யாவுக்கு நிகழ்ந்திருக்கும் இந்த வன்கொடுமை நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

பாமக சாதிவெறியர்களுக்கு பயந்தும் பணிந்தும் திவ்யா தனது காதலை துறக்கச் செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார். அந்த நிர்ப்பந்தத்தை முறியடித்து அவர் இளவரசனோடு சேர்ந்து வாழ்வதே உண்மையில் வன்னிய, தலித் மக்களுக்கு செய்யப்படும் உதவியாகும். திவ்யா அப்படி தைரியம் கொள்ளும் சூழ்நிலையை குறிப்பாக பாமக வன்னிய சாதிவெறியர்களை தனிமைப்படுத்தும் நிலையை நாம் ஏற்படுத்த வேண்டும்.

– செழியன்

    • அப்பாவி வன்னியர்கள் நல்லவர்களே, அவர்கள் பா.மா.க போன்ற ஜாதிவெறிக் கட்சிகளால் அடக்கப்படுகின்றன்ர் என்று கட்டுரை சொல்கிறது. இது புரியலயா “சீ”னு?

    • தப்பு இங்க ஒரு சாராருடையது தானே பக்கி, ஆமா வினவு எது எழுதினாலும் உனக்கு ஏன் சீனு _____ எரியுது.

  1. அந்த பையன பார்த்தேலே தெரியுது ரோமியோ போல இருக்கான கையுல காப்பு இதுபோல றோமிய தனம் பண்ணி படிக்கிற பொன்ன அசை மடக்கி அவ குடும்த குலசிட்டு இதுல நீங்க ஜாதி பேசுறிங்க ஏன் அந்த பையனுக்கு தெயர்யாத சமுகத்தில் உள்ள பிரச்சனை ஏன் அதே ஜாதியில் ஒரு பெண்ணும் இல்லியா என்ன

    • என்னா ஒரு அறிவுடா சாமி. நீ ஏன் இங்க எழுற , உங்க வீட்டுல எழுத பேப்பரே இல்லையா.?

      • பார்ப்பன பத்திரிகைகளை எல்லாம் அக்கிரகாரத்துல உட்கார்ந்து தான் எழுதுறாங்க ஆனா அக்கிரகாரத்துல மட்டுமா விக்கிறாய்ங்க ?

    • ஏன் அந்தப் பொண்ணுக்குத் தெரியாதா அவ சாதியில இருக்கற பையன்களா??

    • உன்னை பார்க்காமலே தெரியுது நீ பா.ம.க ஆளுன்னு. என்னா கண்ணா பொது இடத்துல சாதி வெறியை தூண்டுறியா, தேசிய பாதுகாப்புச் சட்டத்துல உள்ள போக ஆசை இருக்கா ?

      • பாண்டியராசு-விவசாயி, பெரம்பலூர் மாவட்டம் பாண்டியராசு-விவசாயி, பெரம்பலூர் மாவட்டம்

        ஏன் நீங்க கைது செய்ய சிபாரிசு செய்யற அளவுக்கு பெரிய அப்பா டக்கரா? யம்மாடியோ ரொம்ப பயந்து வருது.

    • அட கண்ணா…அந்த பெண்ணு குலத்துள்ள ஓரு வீர சீர சத்திரிய பையன் கூடவா இல்ல…

  2. பார்ரா வினாவுக்கு எல்லாம் தெரியுது ….. சும்மா அடுத்தவரின் மீது குற்றம் சுமத்தியே பழக்கப்பட்ட உங்களுக்கு இது ஒன்றும் புதுசு அல்ல ….. பாமக வுக்கு அப்பவே பயப்படாத பெண்ணா இப்ப பயந்து வரப்போகுது ….. புளுகரத்துக்கும் ஒரு அளவு வேணாம் …. மேலும் பாமக வினர் இப்போது இருக்கிற நிலைமையில் அந்த பெண்ணை மிரட்டி பனியவைதுள்ளனர் என்பதெல்லாம் கடைந்தெடுத்த பொய் … உங்கள் முற்போக்கு தனத்தை வெளிப்படுத்த அடுத்தவர்களை பகடைக்காயாக ஆக்க வேண்டாம் …. மேலும் திவ்யாவும் அவரது தந்தையும் பேசிய போது நீங்கள் பக்கத்தில் இருந்த மாதரியே எழுதறிங்களே இதெல்லாம் ரொம்ம்ப ஓவரா தெரியல …. ஏன் இந்த மாதரி கட்டுக்கதைகளை எழுதி உங்களின் தரத்தை மேலும் குறைத்து கொள்கிறீர்கள் …

    • ஏய் ரொம்ப தான் நல்லவன் மாதிரி நடிக்காதீங்கய்யா ஏற்கெனவே அந்த பொண்ணோட அப்பாவ கொலை பண்ணீங்க, அதான் தற்கொலைக்கு தூண்டினீங்க இப்ப அந்த பொண்ண தனியா பிரிச்சிட்டீங்க. நாளைக்கு அந்த பொண்ணுக்கு எதுனா ஆச்சின்னா அதுக்கு நீங்கதான் பொறுப்பு.

      • பாண்டியராசு-விவசாயி, பெரம்பலூர் மாவட்டம் பாண்டியராசு-விவசாயி, பெரம்பலூர் மாவட்டம்

        இத பார்ரா! இப்பவே அடுத்த பிளான் ரெடி பண்ராக. சும்மா சரக்கடிச்சுட்டு ஒளராத அப்பு. இவ்ளோ பிரச்சனைக்கும் காரணமே நீங்கதானே. பொண்ண கெடுத்து குட்டுச்சவரக்கனதும் இல்லாம இப்போ புது கத வேற எழுதறீங்க.

  3. // //திவ்யாவுடன் பேசுவதற்கு இளவரசன் முயற்சித்த போது அதை பாமக வக்கீல்கள் தடுத்திருக்கின்றனர்.// //

    நீதிபதிகளே ‘அந்தப் பையனிடன் பேசுகிறாயா?’ என்று கேட்ட போது, திவ்யாதான் ‘பேசு விரும்பவில்லை’ என்று தெளிவாக கூறியிருக்கிறார். பத்திரிக்கைகளை சரியாக படிக்கவும்.

    • வந்துட்டாருய்யா வண்டுமுருகன், இவரு பேசுறது பூரா பொய்யி இந்த இலட்சணத்துல நாம ஒழுங்கா பத்திரிகைய படிக்கலையாம். போங்க அருள் போய் வன்னிய சாதிவெறியர்களை ஆதரிச்சு கூவுங்க, அதான் பதிவு போடுங்க. என்னைக்கு உங்களுக்கு தே.பா.சட்டம்னு தெரியல.

      • பாண்டியராசு-விவசாயி, பெரம்பலூர் மாவட்டம் பாண்டியராசு-விவசாயி, பெரம்பலூர் மாவட்டம்

        உங்கள மாதிரி ஆளுங்க வெளிய இருக்கும் போது அருள் ஏன் உள்ள போகணும்? ஒழுங்கா ஆபீசுல வேல பண்ணுங்க. சும்மா பின்னூட்டம் போட்டு பொலப்ப விட்டுடாதீங்க.

  4. பா.ம.க, விடுதலை சிறுத்தைகள் மாதிரியான ஜாதிக் கட்சிக்கு சப்போர்ட் பண்ணுற நிறைய _______ ஏதாவது ஒரு காரணம் சொல்லுதுங்க. முற்போக்கு பிற்போக்கு ஜாதிப் பெருமை, ஒடுக்கப்பட்டவங்க அது இதுனு…. இந்த மாதிரி _________ இருக்கிறதுனால தான் இப்படியெல்லாம்நடக்குது…..

  5. கட்டுரையில் உங்கள் வழக்கமான காரம் கொஞ்சம் குறைவாக இருக்கிறது. படிக்கிறவங்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கிறமாதிரி, இன்னும் கொஞ்சம் வன்னிய சாதி எதிர்ப்பை சேருங்கள்.

    உங்களை விட விடுதலை சிறுத்தைகள் தீவிரமாக இருக்கக் கூடாது. நீங்கள் அவர்களை வெல்ல வேண்டும்.

    • நேரில் அவர்களை சந்தித்து பேசியதிலிருந்து நிச்சயமாக சொல்வேன்.. இருவரும் நல்ல ஜோடி. அந்த பெண் நல்ல புத்திசாலி. இந்த காதல் திருமண பஞ்சாயத்தால் இளவரசன் தனக்கு கிடைத்த காவலர் வேலையையும் பறிகொடுக்க வேண்டியிருந்தது. மூன்று கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

      கேடுகெட்ட சாதியால் திவ்யா இளவரசனின் கனவு தற்காலிகமாக பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது. அந்த பெண்ணை சாதி பெருமிதத்திற்காக கொலைக் கூட செய்வார்களே தவிர மீண்டும் கணவனிடம் அனுப்பி வைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை..

      இப்போதைக்கு என் கவலை திவ்யா உயிர் குறித்ததே.. கொலை செய்துவிட்டு, “மன உளைச்சல் காரணமாக திவ்யா தற்கொலை செய்து கொண்டார்.. ” என்று செய்தியை வெளியிடுவது ஒன்றும் சாதிவெறியர்களுக்கு பெரிய விசயமாக இருக்காது என்ற எதார்த்தமே அந்த பயத்திற்கு காரணம்..

      பாவம் அந்த பெண் சாதிவெறிக்கு இரையாகாமல் இருக்க வேண்டும்..



      – முகநூலில் பத்திரிகையாளர் கார்ட்டூனிஸ்ட் பாலா

      • //இப்போதைக்கு என் கவலை திவ்யா உயிர் குறித்ததே.. கொலை செய்துவிட்டு, “மன உளைச்சல் காரணமாக திவ்யா தற்கொலை செய்து கொண்டார்.. ” என்று செய்தியை வெளியிடுவது ஒன்றும் சாதிவெறியர்களுக்கு பெரிய விசயமாக இருக்காது என்ற எதார்த்தமே அந்த பயத்திற்கு காரணம்..//

        அந்த பழிய பா ம க மேல போடுங்கடா.

        வினவு நீ பேசாம செக்ஸ் கத எழுத ஆரம்பி. உனக்கு அதுதான் சரியா இருக்கும்.

        • அதான் அன்புமணியும் ராமதாசும் கதை கதையா எழுதுறாங்களே அது போதாதா வன்னிய குருமா ?

      • /////- முகநூலில் பத்திரிகையாளர் கார்ட்டூனிஸ்ட் பாலா///// முதலில் 300 வீடுகள், 40 மரங்கள் முறித்தார்கள் என்று சொன்ன பதிவுக்கு அதரம் கட்ட முடியுமா என்ன???? முதலில் நடு நிலை யுடன் பேசுங்கள்……… எதனை பேர் நேரில் பார்த்து விட்டு வந்து உங்கள் கருத்துகளை பதிவு வைக்ரீகள் முதலில்????? காதலித்து வந்த ஜோடிகளை வைத்து கட்ட பஞ்சயாத்து பண்ணி பணம் பரிக்ரர்கள் என்று செய்தி வருகிறது அதன் பதில் என்ன “”வினவு””??? நியாயம் என்றால் எல்லாருக்கும் சமம்….

        • ஒரு எழை பெண்ணின் வாழ்க்கையை சீரழிக்கும் உங்களுக்கெல்லாம் நியாயத்தை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது ராஜ்.

          • சும்மா கொலைகாத சரியா…. எவன் அந்த பெண்ணை கலியாணம் பண்ணுனவன் என்று அந்த பெண்ணை பற்றி கேவலமாக் பதிவு இட்ட்டது நீயா நானா??? முதலில் உன் நவை நீ அடுக்கு சரியா….

    • வி.சி யும் உங்களை மாதிரி பொறுக்கித்திங்கிற ஓட்டுப்பொறுக்கி கட்சி தானே அருள் உங்களுக்கும் அவங்களுக்கும் என்ன வித்தியாசம். நீங்க ஆதிக்க சாதின்னு சொல்லிக்கிற பாப்பானுக்கு அடிமை சேவகம் செய்கிற ஓட்டுப்பொறுக்கிகள், அவங்க தலித் மக்கள் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்துகிற ஓட்டுப்பொறுக்கிகள். மொத்தத்துல ரெண்டு பேரும் உழைக்கும் மக்களை ஏய்க்கிற பிழைப்புவாதிகள். இதில் புரட்சிகர அமைப்பான ம.க.இ.க வை ஏன் பேசுகிறீர்கள்.

    • சத்திரியன் என சொல்லி கொண்டு கலவரம், கொலை, வழிபறி செய்யும் பேர்வழிகள், கிரிமினல்கள் எல்லாம் மன்னர் பரம்பரை ஆகிறார்கள்.

      சத்திரியன் என்பது பார்ப்பன வர்ணாசிரமத்தின் படி நிலையை நிறுவி, பார்ப்பனியத்திற்கு அடியாள் வேலை செய்வதே, அந்த பார்ப்பனியத்தின் அடியாள் வேலை செய்யும் வன்னிய சாதி வெறியர்கள் ஆகிய சமூக விரோதிகள் சூத்திரனுக்கான இட ஒதுக்கீடு கேட்பது பொறுக்கிதனம்.

      தர்மபுரியில் குஜராத் மோடி பாணியில் கலவரம் செய்து கொள்ளை அடித்த வன்னிய சாதி சமூக விரோதிகளை விட ஆபத்தனாவர்கள் அருள் போன்ற சாதி வெறி அடியாள்கள்.

  6. காதலை வைத்து கட்டப் பஞ்சாயத்து செய்பவர்களும், காதலை மையப்படுத்தி பிரச்சினை உண்டாக்கி குடிசை கொளுத்துறவனும் இருக்கும்வரையில் இந்த சமூகம் உருப்படாது.

    இருவர் காதலுக்குள் தேவையில்லாமல் சாதி அரசியல் செய்யப்படுவதே அனைத்திற்கும் காரணம்.

    அந்தப் பெண்ணின் தாயையும் தம்பியையும் கொன்றிவிடுவதாக சாதி வெறியர்கள் மிரட்டியிருப்பார்கள். ஏற்கனவே தந்தையை இழந்த பெண் அதை கேட்டு பயந்து மனக் குழப்பம் அடைந்திருப்பார்.

    அந்த சகோதரியின் மனக்குழப்பம் தீர்ந்து அவர்கள் இணைந்து வாழ வேண்டும். அவர்களை சுற்றி இருக்கும் சாதி வெறியர்கள் விலகி ஓடட்டும்.

  7. அந்தப் பெண் தனது காதலன் மீது குற்றம்சாட்ட விரும்பவில்லை. அதே நேரத்தில் அவனுடன் சேர்ந்து வாழவும் விரும்பவில்லை. அவன் கட்டிய தாலியை தானாகவே தான் கழற்றி எறிந்தார்.

    தன்னோடு இருந்தவனை தானே தவறாக பேசக்கூடாது என்று நினைக்கும் அந்தப் பெண்ணின் நல்ல மனதை ‘புரச்சியாளர்கள்’ தமக்கு சாதகமாக திருப்புகின்றனர்.

    நீதிமன்ற விவாதத்தின் போது உடனிருந்தவன் நான். அந்தப் பெண்ணிடமும் நடந்ததை நேரில் கேட்டுள்ளேன்.

    • “என் அப்பாவுக்கு நான் இப்படி கல்யாணம் பண்ணிக்கிட்ட வருத்தமிருந்தது சார். மத்தபடி அவர் தற்கொலை எல்லாம் பண்ணிக்கிற அளவு கோழை இல்ல சார். அம்மா மட்டும் என் கூட பேசிட்டு தான் இருந்தாங்க. அப்பாவுக்கும் அது தெரியும். அம்மா சொல்வாங்க.. சம்பந்தமில்லாத ஆட்கள் எல்லாம் வந்து வீட்டு முன்னாடி நின்னு அசிங்கமா திட்டிட்டு போவாங்களாம். அவர் மரணத்தில் எனக்கு சந்தேகமிருக்கு. அவரை கொலை தான் செஞ்சுருப்பாங்கனு சந்தேகமிருக்கு.

      அவர் உடலை என் அம்மாக்கிட்ட இருந்து பிடிங்கிட்டுப்போய் அதை வைச்சு அரசியல் செஞ்சுட்டாங்க.. நவம்பர் 7 தேதி அப்பா இறந்த கொஞ்ச நேரத்துக்குள்ள எப்படி இவ்வளவு ஆட்கள் வர முடியும்.. மூணு ஊரை எரிக்க முடியும். எல்லாமே திட்டமிடப்பட்டதா எனக்கு தோணுது. பிரச்னை இவ்வளவு பெருசானதுக்கு எங்க உறவினர் ஒருத்தர் காரணமா இருக்கார். அவருக்கும் எங்க அப்பாவுக்கும் கொஞ்சம் பிரச்னை இருந்துச்சு. அதை மனசுல வச்சுதான் இப்படி பெருசாக்கிவிட்டுட்டார்னு நினைக்கிறேன் ” என்றார் திவ்யா.

      பேட்டியின்போது இருவரும் என்னிடம் பேசியதன் முக்கியமான சாராம்சம் இவை.

      அதோடு அந்த பெண்ணுக்கு தன் அம்மா மற்றும் தம்பியின் உயிர் குறித்த பயம் இருந்தது. “அவங்களையும் எங்க சாதிக்காரங்க எதுவும் பண்ணிருவாங்களோனு பயம் இருக்கு சார்.. அப்பாவை இழந்தது போல் அம்மாவையும் தம்பியையும் இழக்க விரும்பவில்லை.. ” என்று பேட்டியின்போதே அதை பலமுறை வெளிப்படுத்தினார்.

      திவ்யா, இளவரசனை அவர்களது ஊருக்குச் சென்று பத்திரிகையாளர் கார்ட்டூனிஸ்ட் பாலா எடுத்த நேர்காணலில் இருந்து…

      • /////திவ்யா, இளவரசனை அவர்களது ஊருக்குச் சென்று பத்திரிகையாளர் கார்ட்டூனிஸ்ட் பாலா எடுத்த நேர்காணலில் இருந்து…///////// http://iniyavanentrum.blogspot.com/2012/11/blog-post_6786.html இதில் வரும் சம்பவர்த்திக்கு எல்லாம் என்ன பதில் சொல்ல போறீங்க வினவு????

          • நீங்க விடுற கதைக்கு எவன் பதில் சொல்லுவான்… விடுதலை சிறுத்தைகள் செய்த கட்ட பஞ்ச்யது எல்லாம் எங்களுக்கு தெரியாது என்று நினைக்காத சரியா…. உங்கள் பதியாகரா தனத்தினால் அவ்பவி மக்கள் தான் கொடுமை படுத்த படுகிறார்கள்…

          • கதையே இப்படி பதிவாக ஆகும் போது, பதில் சொல்றதா கஷ்டம்? எத்தனை மல்டிபள் பர்சனாலிட்டிஸ்… 😀

    • குற்றம் கூறவும் விரும்பவில்லையாம், சேர்ந்து வாழவும் விரும்பவில்லையாம் என்னய்யா கதை விடுகிறீர்கள். அருளைப் போல நாலு வன்னியர்கள் பின்னால் இருந்து கொண்டு பேசவிடாமல் மிரட்டிக்கொண்டிருந்தால் தவிர ஒரு பெண் இப்படி பேசமாட்டாள், அதுவும் தான் காதலித்த ஒருவனை, தனது தந்தையின் மரணத்திற்கு பிறகும் பிரிய விரும்பாத ஒருவனைப் பற்றி இப்படி பேசியிருக்கவே முடியாது. வன்னிய சாதிவெறியர்களின் அச்சுறுத்தலால் தான் அந்த பெண் இப்படி கூறுகிறார், அவர் இப்படி கூறுவதிலேயே அவரின் அழுகுரல் கேட்கிறது. இளவரசன் மீது அவர் குற்றஞ்சாட்ட விரும்பவில்லை என்றால் அவருடன் வாழ விரும்புகிறார் ஆனால் உங்களைப் போன்ற சாதிவெறியர்களுக்கு அஞ்சி வாழ விரும்பவில்லை என்கிறார். இதை வைத்துக்கொண்டு கதை கட்டுகிறீர்களா கதை. உழைக்கும் மக்களை மோதவிட்டு இரத்தம் குடிக்கும் உங்களைப் போன்ற சாதிவெறி ஓநாய்களுக்கு தமிழகத்தில் என்ன ஆகப்போகிறது என்பதை பொருத்திருந்து பாருங்கள்.

    • அட வன்னிய சாதி வெறி அயோக்கியர்களா,

      நீங்க நீதிமன்றத்திற்கு சென்றதில் இருந்தே தெரியவில்லையா? அந்த பெண் சாதி வெறி ஓநாய்களின் கட்டுபாட்டில் இருப்பது.

      ஏதோ தர்மபுரியில் ஒரு வீட்டின் குடும்ப பிரச்சனையில் வன்னிய சாதி வெறி ஓநாய்களுக்கு என்ன வேலை? இதே போல சன் டிவி நியுஸ் மகாலட்சுமி குடும்பத்திலும் பிரச்சனையாம், கொஞ்சம் உங்க மூக்கை நீட்ட முடியுமா? மகாலட்சுமியின் செருப்பு உங்கள் வக்கில் பாலுவை பதம் பார்த்திருக்கும், அதே செருப்பு அருளையும் கவனித்திருக்கும்.

    • பாண்டியராசு-விவசாயி, பெரம்பலூர் மாவட்டம் பாண்டியராசு-விவசாயி, பெரம்பலூர் மாவட்டம்

      அருள் தேவை இல்லாமல் இந்த ஈன பசங்ககிட்ட வேண்டாம். நாம நம்மளோட பொலப்ப பாக்கலாம். தலித் என்னிக்கும் இப்படித்தான் இருப்பாக. நாம்தான் பொட்ட புள்ளைய சூதனமா வளக்கணும்.

  8. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தனது மனைவியுடனான 30 ஆண்டுகால திருமண வாழ்க்‌கையிலிருந்து விவாகரத்து பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    //எந்தப் புரிதலும் இல்லாமல் இந்த வயதிலேயே(?) புடின் காதல் திருமணம் செய்து விட்டார். அதனால்தான் இந்த பிரச்சினை.

    மருத்துவரின் கைத்தடிகள் இது பற்றியும் பேச வேண்டும்.
    இந்த சாதி வெறியர்கள் சொல்லுறபடி பார்த்தால் திருமணமே செய்ய முடியாது போல…அவ்வ்வ்வ்வ்

  9. அந்தப் பெண் தனது காதலன் மீது குற்றம்சாட்ட விரும்பவில்லை. அதே நேரத்தில் அவனுடன் சேர்ந்து வாழவும் விரும்பவில்லை. அவன் கட்டிய தாலியை தானாகவேதான் கழற்றி எறிந்தார்.

    நீதிபதிகளே ‘அந்தப் பையனிடன் பேசுகிறாயா?’ என்று கேட்ட போது, திவ்யாதான் ‘பேசு விரும்பவில்லை’ என்று தெளிவாக கூறியிருக்கிறார்.

    தெய்வத்திருமகள் படத்தில் விக்ரம் நடிப்பது போல – நீதிமன்றத்தில், தன்னுடன் வந்துவிடுமாறு அந்த பையன் விதவிதமான சைகைகள், முகநடிப்புகளை நடத்திக்காட்டிய போதும் எதற்கும் எதிர்வினை இல்லாமல் அந்தப் பெண் சும்மாவேதான் இருந்தார்.

    ‘தன்னோடு இருந்தவனை தானே தவறாக பேசக்கூடாது’ என்று நினைக்கும் அந்தப் பெண்ணின் நல்ல மனதை ‘புரச்சியாளர்கள்’ தமக்கு சாதகமாக திருப்புகின்றனர்.

    நீதிமன்ற விவாதத்தின் போது உடனிருந்தவன் நான். அந்தப் பெண்ணிடமும் நடந்ததை நேரிலும் கேட்டுள்ளேன்.

    • தாலியை திவ்யாவின் கைகள் கழட்டவில்லை வன்னிய வெறியர்களின் கைகள் தான் கழட்டியுள்ளன.

      திவ்யா இளவரசனுடன் பேச அல்ல வாழவே விரும்பினார் இந்த சாதிவெறியர்கல் தான் பேச கூட விடாமல் திவ்யாவை ஊமையாக்கிவிட்டீர்கள்.

      அந்த பையன் வருமாறு அழைத்த போது எந்த எதிர்வினையும் ஆற்றவிடாமல் திவ்யாவை ஜடமாக்கியது இந்த வில்லன்கள் தான்.

      இன்று திவ்யாவுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் இந்த வன்னிய முதலைகள் எல்லாம் ஏற்கெனவே கல்யாணமான அந்த பெண்ணை நாளை யாராவது ஒரு கூலி வேலை செய்யும் வன்னிய பையனுக்கு தான் கட்டி வைப்பார்களே தவிர பணக்கார வன்னியனுக்கு கட்டித்தர மாட்டார்கள். ராமதாசுக்கு சாதி தான் முக்கியம்னா ராமதாஸ் குடும்பத்துலயே திவ்யாவை மருமகளா ஏத்துக்கலாமே ஏத்துக்குவாங்களா? அல்லது தமிழ்நாட்டில் உள்ள யாராவது ஒரு கோடீஸ்வர வன்னிய பையனுக்கு கட்டித்தருவீங்களா ? இப்படி திவ்யாவுக்கு நல்ல வசதியான வாழ்க்கையை உங்களால ஏற்படுத்தி தர முடியுமா ? திவ்யாவை நான் கட்டிக்கிறேன்னு நாளைக்கே ஒரு பணக்கார வன்னியன் வரட்டும் அப்ப நீங்க இல்ல நாங்களே கல்யாணத்தை மின் நின்று நடத்தி வைக்கிறோம். வன்னிய சிங்கங்கள் தயாரா ?

      • ////தாலியை திவ்யாவின் கைகள் கழட்டவில்லை வன்னிய வெறியர்களின் கைகள் தான் கழட்டியுள்ளன./// ஒரு பெண் தன் கணவர் கட்டின தாலியை எப்படி அடுத்தவன் சொல்லி கலதா முடியும்… வாய்பே இல்லை… இது அந்த பெண் எடுத்த முடிவாக தன் இருக்கும்…… ////////////திவ்யாவை நான் கட்டிக்கிறேன்னு நாளைக்கே ஒரு பணக்கார வன்னியன் வரட்டும் அப்ப நீங்க இல்ல நாங்களே கல்யாணத்தை மின் நின்று நடத்தி வைக்கிறோம். வன்னிய சிங்கங்கள் தயாரா ?////// உனக்கு என்ன பிரச்னை ஒரு பெண்ணின் வாழ்கையை உன் கருத்து என்று சொல்லி சாதிஇன் பெயர் சொல்லி கூறு போட்டு கேவல படுத்தாதே…

          • இப்படி பட்ட முட்டாள் கேள்வியை உன்னை மாத்ரி சாதி வெறி புடிச்வனகிட்ட போய் கேளு ???

          • அது என்ன சூத் கவ்வும் , கவனமா இரு _______ கவ்விட போவுது , அது என்ன கல்யாண புரோக்கராநீங்க , எப்படியும் கல்யாணம் முடின்சா சாப்பாடு போடுவாங்கனுநம்பிக்கை , எத்தனைநாளைக்குத்தான் ஜீன்ஸ் பேன்ட் கூலிங் கிளாஸ் போட்டுகினு போயி சம்பந்தமில்லாதவன் வீட்டு கல்யாணத்துல யாராவது கண்டுபிடிச்சிடப்போறாங்கனு பயந்துகிட்டே சாப்பிடறதுனு இப்படி ஆரம்பிச்சிட்டீஙகளோ .மா. குமார் , விழுப்புரம்

      • அது என்ன எல்லா தலித் தாந்தோன்றிகளுக்கும் வன்னிய பெண்தான் கேட்கிறது ,உங்கள் இன பெண்களை பார்த்தால் உங்களுக்கு குமட்டிகிட்டு வருகிறதோ ! இல்ல வேறு காரணமோ ? காரணம் என்னனு எனக்கு தெரியும் !! இந்த ஓடுகாளிக்கு பிறந்ததில் இருந்து இதுக்கு என்ன துணி எடுத்துக்கொடுக்கனும் , என்ன படிக்கவைக்கனும்-னு பார்த்துப்பார்த்து செஞசும் ,தனக்கு ஒருநல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பாங்கனு பொறுமையில்லாம ஓடுதுன்னா ஒருநல்ல அப்பனாத்தாவா இருந்தா தலையில தண்ணிய ஊத்திகினு காரியம் பண்ணிட்டு வேலைய பார்த்திருக்கனும் ,இவனுஙளும் போனதுபோவட்டும் பொறம்போக்குனு இருந்து இருக்கனும் ,இவனுங்களா ______ தெரிஞசும் தொட்டதுமில்லாம முகர்ந்தும் பார்த்து தங்கள மீண்டும் மீண்டும் ஏந்தான் அசிங்கப்ப்துத்திகிறாங்களோ . இப்படி சொல்றதால என்ன பிற்போக்குவாதின்னு பொறம்போக்குவாதிகள் பேசும் .தெருநாய் குலைக்கிறதுன்னுநாமலும் குலைச்சாஅதுக்கும்நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிடும்னு இவனுங்களுக்கு தெரியல .குமார் ,விழுப்புரம் ,thangamaangani@gmail.com .

    • மிஸ்டர் அருள், இது ரெண்டு பேமிலி சம்பந்தப்பட்ட மேட்டர்தானே. அவங்களுக்குள்ள பேசித் தீத்துக்கறத விட்டுட்டு எதுக்கு இங்க ஜாதி வெறி ஓநாய்கள்லாம் உள்ள நுழையணும்??

  10. இது கட்டுரையா ? ஒரு ஈன பயலோட புலம்பல். ஏன்டா நீ பா ம க வ குத்தம் சொல்லற. இத தான அய்யா அப்பவே சொன்னாரு. ரோமியோ மூஞ்ச பாரு , எழுது ஒட்டி இருக்குல்ல. போ போய் புள்ளைய படிக்க வை . இழுத்து கிட்டு ஓடினா சாதி மறையாது .
    அந்த பொண்ணுக்கு இப்பவாவது புத்தி வந்துச்சே.

    • ஈனப்பயல்னா யாருய்யா ராமதாசா, காடுவெட்டி குருவா, அன்புமணியா இல்லை மூன்று பேருமா ?

      • ராமதாஸ் , காடுவெட்டி குரு லாம் ஆண்டைங்க. ஆண்ட பரம்பரை.
        தன்ன விட தாழ்ந்த சாதி , பிச்ச எடுக்குற பொண்ணுங்க இவங்க மேலேயெல்லாம் காதல் வராம , தேடி பிடிச்சி பன்னாட குருமா பேச்ச கேட்டு காதல் நாடகம் போடுற இழி பிறப்புகள் தான் , ஈன பயலுவ. உதாரணம் சொல்லன்னும்ம்னா உன்ன மாதிரி .

        • சூப்பர், இதுமாதிரி சாதிவெறியை கக்குற பின்னூட்டங்களை இன்னும் நிறைய போடுங்கய்யா அது தானே ப்ரூப், கமான்…

        • உங்க ஆண்ட பரம்பரைக்கு கோயம்புத்தூர் கொங்கு மண்டலத்துல இருக்க கவுண்டனுங்க பொண்ணு குடுப்பாய்ங்களா, அங்க உங்களை எல்லாம் என்னன்னு சொல்றாங்கன்னாவது தெரியுமா ஒனக்கு.

      • பாண்டியராசு-விவசாயி, பெரம்பலூர் மாவட்டம் பாண்டியராசு-விவசாயி, பெரம்பலூர் மாவட்டம்

        சொல்ல வேண்டியது இல்லை. காலம் காலமா சொல்லராங்க இல்ல. போயிட்டு உங்க பாட்டிகிட்ட கேளுங்க சொல்லுவாங்க யாரு ஈன பயன்னு.

  11. நல்ல கற்பனை! இந்த சிறுகதை புதிய ஜனநாயகத்தில் வருமா?

    • வன்னிய சாதி வெறி கிரிமினல்களுக்கு தோஸ்த் ஆகி முஸ்தபா, முஸ்தபா பாட்டு பாடிகிட்டே வந்துட்டார்.

    • காடுவெட்டி குருவும், மற்ற சாதிவெறியர்களும் தே.பா.சட்டத்துல உள்ள இருக்கிறது கற்பனை இல்ல தானே தியாகு.

  12. நாங்க தான் அப்பவே சொன்னோம்ல இதெல்லாம் விளங்காதுன்னு…. யோவ் சிலதெல்லாம் ஜூல இருக்குற விலங்கு மாதிரி அதையெல்லாம் பாத்துட்டு வந்துடனும்… குடும்பம் நடத்த ஆசைப்பட்டா இப்படித்தான்….. இன்னும் நூறு வருஷம் ஆனாலும்… பா.மா.க இல்லைனாலும் தலித்தும், பிற சாதியும் ஒத்துப் போக வாய்ப்பும், வழியும் இல்லை…. உங்கள மாதிரி ஆளுங்க இரண்டு நூற்றாண்டா கத்தி ஏதாவது சாதிக்க முடியுதா… சாதிய காட்டி வேலை வாங்கலாம், காலேஜ் சீட் வாங்கலாம், அரசாங்கத்தோட எல்லா சலுகையும் பெறலாம், ஆனா இதெல்லாம் ஓட்டு வாங்க அரசியல் வாதிங்க குடுக்கறது… சமுதாயத்துல சம உரிமை எப்போதும் இவர்களுக்கு கிடைக்காது….

    • எரிகிற தீயில் எண்ணையை வார்க்கின்ற, சாதிவெறியை தூண்டிவிடுகின்ற பார்ப்பன சொம்பைகள். இவர்கள் எந்த காலத்திலும் மக்களுக்கு ஆதரவாக பேசியதே இல்லை. முதலாளிகள், ஏகாதிபத்தியவாதிகள், இந்துமதவெறியர்கள், போலீசு கும்பல் என்று பிற்போக்குகலுக்கு ஜால்ரா தட்டுபவர்கள் சாதிவெறியர்களை ஆதரிக்காவிட்டால் தான் ஆச்சரியம்.

  13. ஆரம்பத்திலிரிந்து இந்த விசயத்தில் பாமாகாவை குறை சொல்லலாம் ஆனால் இப்போது அந்தக்காதலன் டார்ச்சர் செய்யாமல் அந்தப்பெண் விலக வாய்ப்பில்லை…தன் தந்தை இறந்த போதும் பல கலவரங்கள் நடந்த போதும் பாமாக்காவிற்க்கு பயப்படாதவள், இப்போது அனைத்து சப்போர்ட்டும் உள்ளப்போதா பயப்படுவாள்????

    இந்த காதல் திருமணம் தோல்வியில் முடிந்தது என்பதை ஏற்றுகொள்ள துணிவு இல்லாமல் திரும்பவும் பாமாகாவை குறை சொல்வது தவறு…

    இப்பத்தான் அந்தப்பெண்ணிற்க்குத் தெரிந்திருக்கிறது உண்மை…

    • சும்மா சொம்பத்தூக்கீட்டு வந்து தலீத், அடக்குமுறை அது இதூன்னு பிதற்றக்கூடாது…

      இது உண்மையான காதலுக்கு அர்த்தம் தெரியாத வயசு……

      • எந்த வயசில் இருந்து காதலித்தால் அது உண்மையா பொய்யா எனத் தெரியும் பையா?

  14. ஜின்ஸ் பாண்ட்.கூலிங்கிளாஸ் க்கு மயங்காமல் இருப்பது எப்படி என்று ராமதாஸ் உயர்சாதி பெண்களுக்கு வகுப்பு எடுக்கலாம்.

      • Divya has seen the real face of Ilavarasan and his family,she no longer wants to live in that gutter.

        come on guys,accept reality.

        edhukku ivlo alapparai,freeya vidu,innum pala divyakkal irukkanga,pala vetti ilavarasangalum irukkanga.

    • ஏனுங்கண்ணா? துடைச்ச செருப்பாலதான் அடி வாங்கிக்குவீங்களாண்ணா?

    • நீ மொதல்ல கோமனத்த கட்டு. மனுஷனா இருக்க கத்துக்கோ! இன்னும் காட்டானாவே இருக்க? அது என்ன உன் பெரு? “படை”ஆச்சீ? படை ஆச்சினா மருந்து போடு இல்லாட்டி சொவத்துல தேச்சு சொரிஞ்சிக்கோ! இங்க வந்து எதுக்கு கமெண்ட் போடுற?

  15. தலித்கள் வாட்ட சாட்டமாய் இருக்கிறார்கள்,ஜீன்ஸ் டீஷர்ட், கூலிங் க்ளாஸ் போட்டுக்கொண்டு பைக்கில் சுற்றுகிறார்கள்.எங்கள் சாதி பெண்கள் அவர்கள் பின்னாலேயே போய் விடுகிறார்கள் அதைதான் நாடகக்காதல் என்கிறோம்………மருத்துவர் அய்யா.அவர் சொன்னதில் என்ன தப்பு?

    • ஏனுங்கண்ணா! உங்க பசங்களுக்கும் கொஞ்சம் சாப்பாடு கொடுத்து வாட்டசாட்டமாய் வளர்த்துவிட வேண்டியதுதானே? பைக்கு, ஜீன்ஸ், டீஷர்ட், கூலிங்-க்ளாஸ் எல்லாம் வாங்கி மாட்ட உங்க பசங்ககிட்ட பணம் இல்லீங்களாண்ணா?
      ரொம்பவே பாவப்பட்ட ஆட்களாய் இருக்கீகளேண்ணா 🙁

  16. இதை பார்க்கும் பொழுது , “நாடோடிகல்” படம் மாதிரி இருக்கு…

    • இருந்துட்டுப் போவட்டுமே! அப்போ அது ரெண்டு பேமிலி சம்பந்தப்பட்ட மேட்டர். அவங்களுக்குள்ள பேசித் தீத்துக்குவாங்க. அல்லது அத்து விட்டுட்டு போயிட்டே இருப்பாங்க. எதுக்கு இங்க ஜாதி வெறி ஓநாய்கள் உள்ள நுழைஞ்சதுன்னுதான் கேள்வி.

  17. எல்லா தலித் பையன்களுகும் வசதியன பெண்கள் எப்படி காதலிப்பார்கள்.
    இது திட்டமிட்ட செயல்
    தலித்து பையங்கள் செய்த கலப்பு திருமண ஜோடி எதனை சிரப்பக வழ்கின்றர் என்ற புள்ளி விவரம் எடுக்க இயலுமா

  18. தாழ்த்தப்பட்ட இளைஞன் சற்று அழகாய் தெரிந்தால்கூட கண்ணனைப் போன்றவர்களுக்கு அடிவயிறு பற்றி எரிகிறதோ ?

  19. எப்போதுமே ஆதிக்கசாதிக்காரன் மட்டும்தான் தப்புச் செய்வான். தலித்கள் அனைவரும் உத்தமர்கள். பத்தரை மாற்றுத் தங்கங்கள்.

    • பரவாயில்லையே, குண்டர் சட்டம், தேசியப் பாதுகாப்பு சட்டம், சிறை வெயில் என்று பம்மியிருந்த சிங்கங்கள் இப்போது தைரியமாக எழுந்து நின்று வேட்டைக்கு கிளம்பியிருக்கின்றன. ஆனாலும் ஒரு பெண்ணை கடித்துக்குதறுவதில்தான் என்ன வீரம், மகிழ்ச்சி, களிப்பு!

      • பாண்டியராசு-விவசாயி, பெரம்பலூர் மாவட்டம் பாண்டியராசு-விவசாயி, பெரம்பலூர் மாவட்டம்

        இழப்பு வன்னிய பெண்ணுக்கு. ஏற்படுத்தியது இளவரச பறையன்.

    • வன்னியனுக்கு ஆதரவா ? உங்க ஆதரவை வேற மாதிரி காட்டலாமே பெருமாள் மாமா. உங்க வீட்டுப் பொண்ணுங்களை வன்னிய பசங்களுக்கு கட்டி குடுப்பீங்களா. அதே மாதிரி, வன்னிய மச்சான்களே நீங்க போய் இவங்க வீட்ல உங்க பசங்களுக்கு பொண்ணு கேப்பீங்களா ?

      நொடிக்கொருதரம் வன்னியர்குல சத்திரியர்கள், தேவர்குல சிங்கங்கள் என்று காட்டுவிலங்குகளை போல முகத்தை வைத்துக்கொண்டு பெருமைப்பட்டுக்கொள்ளும் நீங்க ரெண்டு பேரும் ஒரே கூட்டம் தானே. அப்புறம் என்ன பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்க வேண்டியது தானே.

      • பாண்டியராசு-விவசாயி, பெரம்பலூர் மாவட்டம் பாண்டியராசு-விவசாயி, பெரம்பலூர் மாவட்டம்

        தேவை பாட்ட பெண் எடுப்போம் கொடுப்போம். ஒங்களை மாதிரி பன்னாடைக்கு புரியாது. இளவரசன்-திவ்யா கல்யாணம் பாக்கும் போதே தெரியுது ஊங்க யோக்கிதை.

      • ஐய்யயோ நீங்க ஆண்ட பரம்பரையை ( 1 கோடி வன்னிய குடும்பம் அதாவது 4 கோடி வன்னியர், 2 கோடி தேவர், இதர ஆண்ட பரம்பரை 1 கோடி) பத்தி சொல்லதீங்க அப்பறம் ஊளை இட அரம்பிச்ருவாங்க….
        இவர் தான் அண்ணல் அம்ப்தேகார் அவர்களையே “wasted his time in copying other countries laws” என்று சொன்ன உலக மகா அறிவாளி… அவரு தக்க சமயத்தில் ஓரு புக் போடுவார், இந்திய சட்ட புத்தகத்தில் உள்ள அனைத்திற்கும் மறுமொழி போடுவாராம் (இதை அவரே சொன்னது)
        இவருக்கு தான் உலகத்தில் இருக்கிற அனைத்தும் தெரியும் என்ற விதத்தில் பேசுவார்..

      • சாதி ஒழிப்புக்கு ஒரு கருவியாக வினவு தோழர்கள் என்றுமே தலித் சாதி அரசியலை முன்னிறுத்தியது இல்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிழைப்புவாதத்தை ஏற்கனவே பலமுறை அம்பலபடுதியுள்ளனர்.இதற்காக பு ஜா தொ மு மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் விடுதலை சிறுத்தைகள் ரௌடிகளால் தாக்கப்பட்டார். வர்க்க போராட்டம் என்பது தான் தோழர்கள் முன்னெடுக்கும் முழக்கம்.அப்போராட்டம் அனைத்து சாதியிலும் உள்ள உழைக்கும் மக்களை ஒன்றுபடுத்தி தான் நடத்த முடியும்.

  20. வெயில் ராஜாக்களும் பார்ப்பன சொம்புகளும் ரெம்ப புத்திசாலித்தனம்கிற நெனப்புல ஒரு கேள்வி கேக்குறாங்கோ.

    \\…தன் தந்தை இறந்த போதும் பல கலவரங்கள் நடந்த போதும் பாமாக்காவிற்க்கு பயப்படாதவள், இப்போது அனைத்து சப்போர்ட்டும் உள்ளப்போதா பயப்படுவாள்????//

    திவ்யாவோட அம்மா .கூடவே இருக்கும் மகளை கண்டுபிடித்து தர சொல்லி ஆட் கொணர்வு மனு போட்டுருக்காங்க.அவங்க கொடுத்த புகார்ல தனது மகள் கடந்த ஆறேழு மாதமா எங்கே இருக்கிறாள் என்றே தெரியாதுன்னும் திடீர்னு நாலஞ்சு நாளுக்கு முன்னால திவ்யா போன் பண்ணி தனது உயிருக்கு ஆபத்துன்னு சொன்னதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.

    நல்ல மனநிலையில் இருப்பவர்களுக்கு இதையெல்லாம் பாத்தா மாத்திரத்திலேயே அந்த அப்பாவி விதவை தாய் எந்த அளவுக்கு மிரட்டப்பட்டிருக்கிறார் எனபது விளங்கும்.சாதி வெறி கிறுக்கு பிடித்த லூசு பயலுகளுக்கு வேணா விளங்காம போகலாம்.

  21. பாமாக்கும், தலித்துகளுக்கும் உடலமைப்பு ரீதியாக (physically) என்ன வித்தியாசம்? பார்க்க எல்லோரும் ஒரே மாதிரி தானே இருக்கிறார்கள்,தென் இந்தியாவிற்கே உரித்தான உடலமைப்பு மற்றும் நிறத்தில். சாதி என்பது ஒரு “கருத்து” என்பதை தவிர வேறு எந்த ஸ்தூலமான மதிப்பும் மரியாதையும் அற்றது. காதல் என்பது இருவரின் தனி நபர் விருப்பமும் உரிமையும் ஆகும். இதில் இரு வீட்டார் தலையிடலாம் அது கூட காதலர்கள் அனுபவம் அற்றவர்களாக இருந்தால் மாத்திரம்.. இங்கு பாமா,விசி களுக்கு என்ன மாமா வேலை?

    தமிழ் நாட்டில் ஏன் இப்படி இல்லாத சாதியின் பெயரில் விலைமதிப்பற்ற மனித உயிர்களை காவு வாங்குகிறீர்கள்?

    • பிளான் பண்ணி செய்யறதுக்கு பேரு காதல் இல்ல. இந்த ஈன பயலுவ ஒரு வேலையாவே செய்றானுங்க.

      • வினவு தோழர்களுக்கு,

        குறிப்பிட்ட பிரிவு மக்களை ஈன சாதியினர் என்று இழிவுபடுத்தும் படையாச்சி என்கிற இந்த நபரை வண்கொடுமைச் சட்டத்தில் கைது செய்ய எல்லா நியாயங்களும் உள்ளன. அவர் இங்கு போட்டுள்ள பல பின்னூட்டங்களே அதற்கு சான்று. இவருடைய IP நம்பரை வெளியிடுங்கள். இவர் மீது நான் ஒரு புகார் மனுவை கொடுக்கலாம் என்று இருக்கிறேன்.

        • நண்பர்களே இந்தக் கட்டுரைக்கு சாதிவெறியர்களது மனநிலையை தெரிவிக்க வேண்டுமென்பதற்காகவே இத்தகைய பின்னூட்டங்களை வெளியிடுகிறோம். இது இவர்களை மேலும் அம்பலப்படுத்துவதற்கும் இத்தகைய சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் இந்த வெறியர்களை புரிந்து கொள்வதற்கு உதவி செய்யும் என்பத்தாலும் வெளியிடுகிறோம். நமது நோக்கம் இந்த வெறியர்களை அந்தந்த சாதி மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவதுதான். நன்றி

          • வினவு,
            இந்த மாதிரி மிரட்டும் முதிர்ச்சி அடையதவர்களை எல்லாம் ஏன் பின்னூட்டம் செய்ய விடுறீங்க. இது பொது இடம் , மனதில் பட்டதை சொல்லும் இடம். இது குறிப்பிட்ட சில மனிதர்களுக்கான பதிவாக மட்டும் இருந்தால் , அதை பதிவிலும் உங்கள் தளத்திலும் தெளிவாக சொல்லிவிடுங்கள்.

            • ஒ.கே.படைசொறி,

              நானும் மனசுல பட்டத சொல்லிர்றேன்.தலித்கள் உன்னோட வார்த்தைகள்ல ஈனப்பயலுவ ஜீன்ஸ் கூலிங் கிளாஸ் போட்டுட்டு வந்தா உங்க பொண்ணுங்க அவனுங்க பின்னாலயெ போயிருதுங்கன்னு சொல்றீங்கோ.அப்படி புறம்போக்கா புள்ளைங்கள வளத்து வச்சுருக்குற உன்னிய செருப்பால அடிச்சா என்ன.

              இதை வன்னிய சாதி பெண்கள் படித்தால் என்னைய மன்னிக்கணும்.உங்கள் மீதும் உங்கள் ஒழுக்கத்தின் மீதும் எனக்கு பெரிய மரியாதை உண்டு.தீ சொன்னாலே நாக்கு வெந்துராது.அதுனால உங்க சாதில இருக்குற கிறுக்குப் பயலுகளுக்கு ஒறைக்கிற மாதிரி சொல்லனும்னுதான் இப்படி.

              • உன் கிட்ட பேசறதும் ஒன்னு , அண்ணாந்து பாத்து கரி துப்பறதும் ஒன்னு.

                கடைசியா அறிவுரை சொல்லிட்டு கடைய காலி பண்றேன்.
                1) காதல சாக்கா வச்சி காசு சம்பதிக்குறது ஈன செயல்.
                2) கரு வளர்கிற ஐடியா வ திருட்டுமாமா பாத்துகிட்டும் , அது உனக்கு வேணாம், புள்ள குட்டிகளை படிக்கவச்சி , அவங்க அறிவ வளர்கிற வேலைய பாரு

                ரொம்ப முக்கிய அறிவுரை,
                3) மிரட்டுற வேலைய அறவே விட்டுரு , சமமா நின்னு விவாதம் கூட பண்ண நினைக்க மாட்டோம். தனியாதான் பொலம்பி கிட்டு இருக்கணும்.

            • சாதி வெறியோடு பதிவு போடுகிறவர்கள் மட்டும்தான் தனிமைபடுவாங்கண்ணு சொல்லுது வினவு….

              • காவல்நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

                மதுரை அவனியாபுரம் காவல்நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்து, பாதுகாப்பு கேட்டுள்ளது.

                பனையூரைச் சேர்ந்த கண்ணனின் மகன் அழகர்சாமி (21). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவருக்கும் காரைக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த இப்ராகிம் மகள் அப்துல்லா பீவிக்கும் செல்போன் மிஸ்டுகால் மூலம் காதல் மலர்ந்தது. இவர்களின் காதல் இரு வீட்டாருக்கும் தெரிய வந்ததும், திருமணம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

                இதையடுத்து இவரும் வீட்டை விட்டு வெளியே திருமணம் செய்து கொண்டு, மதுரை அவனியாபுரம் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர். தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு இருவரும் மனு கொடுத்துள்ளனர்.

          • ஆமாமா, இவங்க அம்பலப்படுத்தி தலித்களின் உதவியோடு ஆட்சியைப் பிடித்து தலித் அரசு அமைப்பார்கள்.

            உங்களால் ஆயிரம் சாதி வெறிக் கட்டுரைகளை எழுதினாலும் தலித் அரசாங்கம் அமைக்க முடியாது. சர்வாதிகார அரசாங்கத்தை நீங்கள் உருவாக்கினால் மட்டுமே உங்கள் விருப்பப்படி ஆட்சியாள முடியும்.

      • பாண்டியராசு-விவசாயி, பெரம்பலூர் மாவட்டம் பாண்டியராசு-விவசாயி, பெரம்பலூர் மாவட்டம்

        சரியா சொன்னீக அப்பு.

  22. இனி வன்னியப் பையனை மணந்துகொண்டு அப்பெண் நிம்மதியாக வாழ்வாளா?

  23. Anbu vinavuku
    Nalla katturai ethil erukum members sela per jathi veri pedichavanga oru vela avanga thalitha piranthu eruntha adanki povangala nenga evolo katturaikala unmaya solli erukinga ana athuku ethula pathi peru maru moli gudukarathu eilla thalith jathiya elivu paduthavum apuram penkala pathi ethavathu katturai gudutha mattum maru moli gudukuranga so evangala erukara vara jathi oliyathu pen adimaiyum oliyathu

  24. நாடகக் காதலால் உயர் சாதிப் பெண்களின் வாழ்க்கை நடுத் தெருவிற்கு வருகிறது என கூப்பாடு போட்டவர்கள் திவ்யா-இளவரசன் காதல் நாடகக் காதல் இல்லை என்று தெரிந்தும் – இவர்கள் கூற்றுப்படி இது ஒரு மைனர் திருமணமே – இன்று திவ்யாவை நடுத்தெருவில் நிறுத்தியவர்கள் யார்? இளவரசனா? இல்ல காதலை வைத்து அரசியல் நடத்தும் பாட்டாளி மக்கள் கட்சியினரா?

    பணக்காரப் பையன்கள் ஏழைப் பெண்களை காதலித்து கர்ப்பமாக்கி கைவிடுவது பா.ம.க வினருக்கு தெரியாதா? எதிர் காலத்தை இழந்து நிற்கும் இத்தகைய ஏழைப் பெண்களின் அழுகைக் குரல் பா.ம.க வினருக்கு கேட்பதில்லையா?

    ஏழைப் பையன்கள் பணக்காரப் பெண்களை காதலிக்கும் போது பையனுக்கு பணம் கொடுத்து சரிகட்டி கட்ட பஞ்சாயத்து செய்வதெல்லாம் நாடகக் காதலாகத் தெரிவதில்லையா?

    இவை எல்லாம் கண்ணுக்கும் தெரியாது. கசக்கவும் கசக்காது. ஆனால் திவ்யா-இளவரசன் காதல் மட்டும் கசப்பதற்குக் காரணம் இது பறையனின் காதல். தீண்டத்தகாதவனின் காதல். சாதி எனும் சாக்கடையை – சாதி ஏற்றத்தாழ்வு எனும் பார்ப்பனியத்தை அடித்து நொறுக்கும் காதல். இப்படிப்பட்ட காதல் திருமணங்கள் வெற்றி பெற்றுவிட்டால் பார்ப்பனியமும் நொறுங்கத் தொடங்கும். இந்தப் பயம்தான் சாதியப் படிநிலையில் மேலே உள்ள எல்லாச் சாதியினரையும் கிலி கொள்ள வைத்திருக்கிறது. அதனால்தான் இதற்கு மட்டும் இராமதாஸோடு கைகோர்க்கிறார்கள் பிற உயர் சாதியினர். மற்றபடி தேர்தல் வரும் போது பா.ம.க வை வேறு உயர் சாதிக்காரன் எவனும் கைதூக்கி விடப் போவதில்லை.

    பாவம் பா.ம.க. என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்ல?

    பொதுவில் பார்ப்பனர்களை எதிர்க்கும் பார்ப்பனரல்லாத பிற உயர் சாதியினரின் பார்வைக்கு:

    பார்ப்பனியம் பிறவிக் குணமா? — தொடர்
    http://hooraan.blogspot.com/2013/04/blog-post_19.html

    • பாண்டியராசு-விவசாயி, பெரம்பலூர் மாவட்டம் பாண்டியராசு-விவசாயி, பெரம்பலூர் மாவட்டம்

      நீங்கள் கை தூக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. காலை வாரும் போது காக்கவும் தயாராகவே இருக்கிறோம்.

  25. காதல் ஒரு பெருங்குற்றம்
    காதல் ஒரு பாவச்செயல்
    காதல் ஒரு மனித தன்மையற்ற செயல்…

  26. The reasons of love drama cannot be accepted. The separation of Divya and Ilavarasan are not correct. Divya and Ilavarasan are subjected to severe mental torture by casteist society. Sinners will only take birth in India. The real hell is India. We are experiencing the hell in our life itself.I have a feeling I am living in the midst of animals not human beings.

  27. சாதிகள் இல்லயடி பாப்பா குலம் தாழ்த்தி சொல்லல் பாவம்.என்றான் பாரதி.பா மா க சொல்றான் நாம என்ன சாதி, எரியும் இதுல இருந்து வந்தவங்க எந்த இதுலயும் கலக்கக்கூடாது பள்ளிக்கு போகும் குழந்தைக்கு சொல்லி வலங்க என் கிறான் பாமாக (பாட்டாளி மாமா கட்சி) இவனுங்க சொந்த சாதி மக்களுக்கே கேடு. என்வே வன்னிய சாதி மக்கள் இன்னும் இருக்கும் சுயமரியாதையை காக்க பாமாக வை தூக்கி எரிய வேண்டும்.

  28. “”பாமக சாதிவெறியர்களுக்கு பயந்தும் பணிந்தும் திவ்யா தனது காதலை துறக்கச் செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார். “”

  29. பாண்டியராசு-விவசாயி, பெரம்பலூர் மாவட்டம் பாண்டியராசு-விவசாயி, பெரம்பலூர் மாவட்டம்

    வினவு என்ன கூவினாலும் நடக்க போவது ஒன்றும் இல்லை. ஒரு வன்னிய ஜாதி பெண்ணை ஒரு வேலை இல்லா வெட்டி தலித் பயலால காப்பத்த முடியாது. கலவி முடிந்தது, பெண் தவறை உனர்ந்து திரும்ப தாயாருடன் சேர்ந்து இருக்கிறாள். ராமதாஸ் சொன்னது 100% உண்மை. தலித் திட்டம் போட்டுத்தான் பிற இன பெண்களை கவர்கிறார்கள். பெண் தெளிவடையும் போது காதல் நிலைப்பது இல்லை. தருமபுரி கலவரத்துக்கு காரணமான இளவரசன்-திவ்யா திருமணம் நீதி மன்றம் சென்று தற்போது திவ்யா தாயாருடன் இருக்கிறார். நல்ல விசயத்தை யார் சொன்னாலும் ஏற்கும் பக்குவம் இல்லாதவரை நாம் நடுநிலையாளர்கள் என தம்பட்டம் அடித்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. முற்போக்கு வாதிகளாக காட்டி கொள்ள நினைக்கும் முன்பு சமுதாயத்தில் ஜாதி களைய வழி காண வேண்டும். இல்லை என்றால் இப்படி அரை வேக்காட்டு காதல் நடக்கும், அதே போல பிரியும். ஜாதிக்கேத்த புத்தியை மாற்ற முடியாது. பா. ம. க வை விமர்சிக்க வினவுக்கு தகுதி கிடையாது. ஒரு சில விசயத்துக்காக ஒட்டு மொத்தமாக அணைத்து இன மக்களையும் கேவலமாக விமர்சிப்பதால் எந்த இன மக்களின் அடி மயிரும் வினவின் கருத்தை மதிக்க போவது இல்லை.

  30. பாண்டியராசு-விவசாயி, பெரம்பலூர் மாவட்டம் பாண்டியராசு-விவசாயி, பெரம்பலூர் மாவட்டம்

    பா.ம.க இப்படி ஒட்டுமொத்த தமிழகத்தின் நலனில் அக்கறை கொண்டு கருத்து சொன்னால் கூட அதை கேலி செய்வது முட்டாள் தனமானது.நல்ல கருத்தாக இருந்தால் அதை பாராட்டவும், கெட்டவையாக இருந்தால் அதை விமர்சிப்பதுதான் நடுநிலையாளர்களின் நல்ல எண்ணம். இப்படி ராமதாசு,பா.ம.க எதை சொன்னாலும் அதை கண்மூடி தனமாக எதிர்ப்பது நமக்குள் இருக்கும் சாதிவெறியின் வெளிப்பாடு மட்டுமே. தருமபுரி கலவரத்துக்கு காரணமான இளவரசன்-திவ்யா திருமணம் நீதி மன்றம் சென்று தற்போது திவ்யா தாயாருடன் இருக்கிறார். நல்ல விசயத்தை யார் சொன்னாலும் ஏற்கும் பக்குவம் இல்லாதவரை நாம் நடுநிலையாளர்கள் என தம்பட்டம் அடித்து கொள்ள வேண்டியது இல்லை.

  31. தலித்களை எல்லாம் கேரளா, கர்நாடகா, ஆந்திரானு அனுப்பி அங்கே உள்ள பெண்களை காதலித்து திருமணம் செய்தால், தமிழகத்திற்கு தண்ணீராவது கிடைக்கும்.

    • ஏன் பெருமாள் பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கிறீர்கள்? இங்கேயே தலித்துக்கள் அனைத்து ஆதிக்க சாதி பெண்களையும் அதாவது தேவர், வன்னியர், நாடார், கவுண்டர், செட்டியார்,கோனார், மற்றும் விட்டுப்போன அனைவரிடத்திலும் பெண் கொடுத்து எடுத்தால் தமிழகத்தில் சாதி கலவரம் நிற்குமில்லையா? இங்கேயே சமாதானக்கொடி பூத்துக் குலுங்கும் வாய்ப்பு இருக்கும்போது ஏன் மற்ற மாநிலங்களுக்கு போக வேண்டும்? தண்ணீரை விட மன நிம்மதிதானே நமக்கு முக்கியம்?

      • இங்கு ஜாதி வெறி எந்த அளவிற்கு வேரூன்றியுள்ளது என்பதற்கு சில தகவல்களை பதிவு செய்ய ஆசைபடுகிறேன்.முக்கலத்தோர் பிரிவில் உள்ள (கள்ளர், மறவர், அகம்படியர்)ஒருவருடன் ஒருவர் மண உறவு வைத்து கொள்ள மாட்டார்கள்.இதுல நீங்க மித்த சாதி கூட….. என்ன பாஸ் நீங்க!!!!! கொங்கு கவுண்டர் வீட்டு பெண்ணை ஒரு வன்னிய இளைஞன் திருமணம் செய்தால் என்னாகும் என்பதற்கு ஒரு எடுத்துகாட்டு – http://www.thehindu.com/todays-paper/tp-national/caste-pride-in-tamil-nadu-does-not-spare-even-an-unborn-child/article4352007.ece

      • வினவுக்கு ஒரு வேண்டுகோள். ஒரு சமூகத்தை சாடும் போது அது எத்தகைய ஆதிக்க சமூகமாக இருப்பினும் அதனுள்ளும் இடதுசாரி சிந்தனையுள்ள மனிதர்கள் இருப்பார்கள் என்ற உணர்வுடன் அணுக வேண்டுகிறேன். தேவர் சாதி வெறியர்கள் என்ற சொல்லாடல் மொத்த சமூகத்தையும் குறிப்பிடுவது போல் உள்ளது. தென் தமிழகத்தில் உள்ள மிக பெரும் சமூகங்களான தேவர் மற்றும் தேவேந்திர (பள்ளர்) இன மக்களின் வாழ்கை தரங்கள் பெருமளவில் மாறுபடாத போதிலும் சாதிய அமைப்புகள் அம்மக்களை வர்க்கமாக ஒன்றிணைய விடாமல் தடுக்கின்ற காலத்தில் இத்தகைய சொல்லாடல் அம்மக்களை சாதிய அமைப்புகளை நோக்கி தள்ளி விடும் வாய்ப்பு உள்ளது. இக்கருத்தை ஒரு சக தோழராக பரிசீலனை செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.

        • கார்த்திக், கட்டுரையிலேயே ” தலித் மக்களின் சுயமரியாதையை அனைத்து சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்களும் ஓரணியாய் சேர்ந்து மீட்க போராட வேண்டும்.” என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரம் குறிப்பிட்ட பிரிவு மக்களின் மௌனத்தை வைத்தே அந்தந்தப் பிரிவுகளில் உள்ள ஆதிக்க சக்திகள் தங்களை குலப் பெருமை மீட்க வந்த வீரர்களாகவும், அதனால் களத்தில் இறங்கி சண்டை போடும் முன்னோடிகளாகவும் கற்பித்துக் கொள்கிறார்கள். 2002 குஜராத் கலவரத்தில் பெரும்பான்மை இந்துக்களின் தார்மீக ஆதரவை வைத்தே இந்துமதவெறியர்கள் இசுலாமிய மக்களை கொன்றார்கள். அப்போது நாம் குஜராத் இந்துக்களின் மௌனத்தை, அவர்கள் இந்துமதவெறியர்களுக்கு கொடுக்கும் அங்கீகாரத்தை கேள்வி கேட்க வேண்டும், இடித்துரைக்க வேண்டும். எல்லா சாதிகளிலும் உள்ள உழைக்கும் மக்களை நாம் அணிதிரட்டுவது எவ்வளவு முக்கியமோ அதே முக்கியம் குறிப்பிட்ட வன்கொடுமைக்கு எதிராக குறிப்பிட்ட சாதிப்பிரிவு மக்களை கேள்வி கேட்கும் விதத்தில் விமரிசக்க வேண்டும். இதில் ஒன்றை மட்டும் செய்வது சரியாக இருக்காது என்பதே எமது கருத்து. தென்மாவட்டங்களில் தேவர் சாதி பெருமிதத்தை வைத்து பல கொடுமைகள் நடந்திருக்கின்றன. மேலவளவு முருகேசன் கொலை முதல் நேற்றைய உசிலை சிறுவன் செருப்பு அணிந்தது வரை பல நடந்திருக்கின்றன. இதை தேவர் சாதியில் பிறந்தோர் கண்டிப்பதோடு குறிப்பிட்ட கொலைகாரர்களை தேவர் சாதியிலிருந்து நீக்குகிறோம் என்று கூட சொல்லவில்லையே, ஏன்?

      • வினவு, நமக்கு காதல்தானே முக்கியம்? சாதிகளிடையே அமைதி நிலவினால் என்ன? கலவரம் வெடித்தால் என்ன? அதுதானே நமது நிலை. அப்படி இல்லாமலா, இப்படி சாதிவெறிக் கட்டுரையை வெளியிடுகிறீர்?

        காதல் உண்மை என்றால் அவர்கள் ஆப்பிரிக்கா சென்று கூட காதலிக்கலாம். இல்லை, சமநிலை பெற காதல்தான் சரியான வழி என்றால், சலுகை என்ற ஒன்று தேவையே இல்லை. ஒவ்வொருவரும் இந்தந்த சாதிப் பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்று சட்டம் போட்டுறலாம்.

        எதைச் செய்யலாம்? சொல்லுங்க.

        உண்மைக் காதலா? இல்லை காதல் மூலம் சமநிலையா?

  32. திவ்யாவுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டது முதல் அவள் தன் அம்மாவிடம் சேர்ந்தது வரை எந்த ஊடகமும் திவ்யாவின் படத்தை வெளியிடவில்லை.

    ஆனால் அவள் தன் கணவன் வீட்டில் நடந்த கொடுமைகளிலிருந்து தப்பிக்க அம்மாவிடம் போய் சேர்ந்ததும் திவ்யாவின் படங்களை ஊடகங்கள் வெளியிடுகின்றன.

    இது மறைமுகமாக ஒரு பெண்ணை அவளின் அச்சுறுத்தும் செயல். மானத்திற்கு பயந்து அந்தப் பெண் வெளியுலகிற்கு தலை காட்டக் கூடாது. தலித்துகளின் முகமூடியைக் கிழிக்கக் கூடாது என்பதற்காக விரட்டப்படும் மிரட்டல்.

    திவ்யாவை மிரட்டுவதற்காக இளவரசன் வைத்திருந்த செக்ஸ் ஸ்கேண்டலுடன் திவ்யா வீட்டை விட்டு ஓடி வந்திருக்கிறார். இது நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்படலாம். விரைவில் இது நடைபெறும்.

    திருட்டுமாமா டவுசர் கழண்டுச்சி.

    • Suresh

      If you can prove this convincingly,you have to take it up and shut up a lot of mouths including newspapers like The Hindu.

      It ll make the society view the fraud/conversion agenda of these murpokku mokkaiyaans.

      But proof is important.

      if Divya wants other innocent girls like her to not suffer,she has to do it openly.

  33. எழுந்து நிற்கவே இடஒதுக்கீடு வேண்டும் என்பவர்கள்தான் அதிகமாக புரட்சியைப் பற்றி பேசுகிறார்கள்.

    – அவதானிப்புதான்.

  34. அப்பாடா எங்கள் தொகுதியில் முழுமையாக ஜாதி ஒழிந்து விட்டது ….

    எப்படி பார்ப்போமா ?

    1. எங்கள் நாடாளுமன்ற தொகுதி ( சிதம்பரம் தனி தொகுதி )
    2.எங்கள் சட்டமன்ற தொகுதி ( காட்டுமன்னர் கோவில் தனி தொகுதி )
    3. எங்கள் பேரூராட்சி( காட்டுமன்னர்கோவில் தனி தொகுதி பேரூராட்சி )
    4.எங்கள் ஊராட்சி ( வெகு ஊருக்களில் தனி தொகுதி ஊராட்சி தலைவர் )

    இந்த பகுதியில் உண்மையில் யார் ஓதுக்க பட்டோர் என்றே புரியவில்லை
    எனக்கு ஆசை எப்படியாவது ஜாதியை ஒழிக்கணும் நிச்சயம் ஜாதி ஒழிய வேண்டும் …

  35. சாதி பிரச்சனை குறித்து வெளிப்படையா பேசுறவன் சாதி வெறியன் என்றால்..

    இனப்பிரச்சனை குறித்து பேசுபவன் எல்லாம் இன வெறியன் என்று சொல்லலாமா இனிமேல்… ??

  36. மற்ற மதங்களில் சாதி இல்லை அதனால் யாரும் விலங்குகள் போல உறவு கெட்டு நடந்து கொள்வதில்லை.

    Raavan Nan சாதி இல்லாத மத்த நாட்டுக்காரன் எப்படி இருக்கான், நான் இத்தாலிக்கு போனப்போ பாத்தேன், தன்னோட சொந்த தாய் மாமன் வீட்டுக்கு பொய் அஞ்சி வருஷம் ஆச்சின்னு சொன்னாரு என் நண்பர், இத்தனைக்கும் அவர் சொந்த தாய்மாமன் வீடு அவர் வீட்டிலிருந்து நாலாவது வீடு தான். என்ன கொடுமை பாருங்க அந்த சாதி இல்லாத நாட்டுல, ஆக இங்கு உறவுகளுக்கு மத்தியில் ஒரு பிணைப்பை ஏற்ப்படுத்தி வைத்திருப்பதே சாதி தான். இந்த வீணாப்போன தீண்டாமை தான் இப்போ பிரச்சனையே !!

  37. இந்தியாவில் குறிப்பாக நம் தமிழ்நாட்டில் சாதிசார்பான பிரச்சனைகள் அதிகமாகி விட்டது என்ற செய்தி ஊடகங்களில் வந்து கொண்டிருக்கிறது …

    //இந்தியாவில் எந்த மாநிலமும் சாதிகள் அழியவேண்டும் என்று சொல்லவில்லை ,மாறாக மற்ற மாநிலத்தார் தன் பெயரின் பின்னால் சாதியை வைத்துகொண்டு எதார்த்தமாக பிரச்னை இல்லாமல் இருக்கிறார்கள் .இந்த மாண்புமிகு திராவிட திருடர்களால் விதைக்கப்பட்ட சாதி ஒழிப்பு கொள்கையால்தான் இங்கே பிரச்னை நடந்து கொண்டிருக்கிறது

  38. perumal thevan……ithu thaan un piravi puthiyaa?…pls sent ur family ladies to neighbouring states,they will give not only the water …they will give cash ,etc…..pls sent immediately ..implement ur thougts within ur family members as soon as possible.once it will success….then u can think about daliths.

    • வந்துட்டாருப்பா மனுசன். இவர் மட்டும்தான் மனுசன் மற்றவங்க எல்லாரும் மிருகம் என்ற நினைப்பு இவருக்கு. காதல் உண்மை என்று சொல்லிக் கொண்டு அலைபவர்களுக்கு ஏன் அண்டை மாநிலப் பெண்கள், அல்லது அண்டை நாட்டுப் பெண்கள் மீது காதல் வர மறுக்கிறது. அங்கே போய் காதலிக்க வேண்டியதுதானே?

      உண்மையான காதல் என்றால் ஆப்பிரிக்கா போய்க் கூட காதலிக்கலாம். ஆனால் உண்மையான காதலா இருந்தாலும் கூட அரேபியாவுல மட்டும் சொல்லவே மாட்டாங்க.

  39. RC, Anglican, Protestant, Pentecostal, Methodist, Lutheran, Baptist, Presbytarian, Brethren என்று பல பிரிவுகளும், நூற்றுக்கணக்கான உட் பிரிவுகளும் அவற்றுக்குள் வரைமுறைகள் கடந்த அரசியலும், அடிதடியும் தினம் தோறும் நடந்த வண்ணமே உள்ளன.. எந்த ஊரில் எந்த வகை சர்ச்சு அதிகம் உள்ளது என்பதிலேயே எந்த சர்ச்சுக்கு எந்த சாதிக்காரன் போவான் என்பது முடிவாகிவிடும்.. இன்னும் ஒரு படி மேலே போய், இந்த ஏரியாவில் உள்ள RC சர்ச்சுக்கு இந்த சாதிகாரனும், அதே ஊரில் உள்ள இன்னொரு RC சர்ச்சுக்கு அந்த சாதிக்காரனும் போவது இங்கே நடந்த வண்ணமே உள்ளது..

    அனைத்தையும் கடந்ததாக சொல்லும் இஸ்லாம் மட்டும் விதிவிலக்கல்ல.. சன்னி, ஷியா, சூபிசம் போன்ற உயர்மட்ட பிரிவுகளும், மத குருமார்களின் போதனைகள் அடிப்படையில் பலநூறு உட்பிரிவுகளும் உலக அளவில் இருக்கையில், உள்ளூரில் பட்டாணி, லப்பை, ராவுத்தர், மரைக்காயர், இதில் எதிலுமே சேர்க்கப்படாத புதிய converts என்று ஓராயிரம் பிரிவுகள் அடக்குமுறைகள்..

    இந்தியாவில் எந்த மதமும் அதன் ஜீவநாடியான கொள்கைகளை தாங்கி நிற்பதில்லை.. எல்லாமே இந்து மதத்தின் சாயல்களை, தீய குணங்களை வெவ்வேறு வடிவங்களில் தாங்கிய படியே உள்ளன.. எந்த சாதிக்காரனும் இந்தியாவில் இன்னொரு மதத்திற்கு செல்வதன் மூலம் தங்களது சாதிய அடையாளங்களை தொலைக்கவும் முடிவதில்லை..

    சொல்லப்போனால் மதங்களும் (அவற்றை பரப்பும் நிறுவனங்கள் என்று கொள்க), தாழ்த்தப்பட்டவரிடத்தில் “சாதியை ஒழித்து விடுவோம்” என்றும், உயர்சாதி convertகளிடம் “உங்கள் சாதிய அந்தஸ்து பாதுகாக்கப்படும்” என்கிற இரட்டை நிலைப்பாட்டை கொண்டே இயங்குகின்றன.. இது கைப்புண் இதை காண்பதற்கு கண்ணாடி எல்லாம் தேவை இல்லை.. கண்ணும், பார்க்க கொஞ்சம் மனமும் இருந்தால் போதும்..

  40. காதல் ,காமம் ,அன்பு என்று தெளிவாக பிரிக்க தெரிந்த
    அதே தமிழன் தான்

    சாதியை ஏற்று கொண்டான்

  41. பாண்டியராசு-விவசாயி, பெரம்பலூர் மாவட்டம் பாண்டியராசு-விவசாயி, பெரம்பலூர் மாவட்டம்

    தற்போதைய கால கட்டத்தில் காதலுக்கு ஜாதி பிரச்சனை. பொருளாதாரம் தான் பிரச்சனை. திருமா அவர்கள் நினைத்தால் சுலபமாக எந்த இன மக்களிடம் பெண் எடுக்க முடியும். முதலில் வினவு ஜாதியை மையமாக வைத்து கூவுவதை நிறுத்தி விட்டு பொருளாதார முன்னேற்றம் அடைய வழி காட்டுங்கள். திவ்யா நர்சிங் மாணவி, இளவரசு MBBS மாணவனாக இருந்து இருந்தால் இப்படி பிரச்சனை வர வாய்ப்புகள் இருந்து இருக்காது. பொருளாதாரம் முன்னேற்றம் கண்டவர்கள் எளிதாக காதல், கல்யாணம் எல்லாமே செய்ய முடியும். திரு மு.க குடும்பமே அதற்க்கு எடுத்துகாட்டு. என்னுடைய கிராமத்தில் ரெட்டியார் பெண்(Bsc) -தலித் பையன்(SW Enggr ) , வன்னியர் பெண்(+2) -தலித் பையன்(Govt Bus. Driver), ரெட்டியார் பெண்(Bcom ) – வன்னியர் பையன்(Mech Enggr) , கவுண்டர் பெண்(+2)-நாய்டு பையன்(Electrical Contractor) இப்படி பல திருமனம் நடந்து இருக்கிறது. நான் மேற்கோள் கட்டிய அணைத்து ஜோடிகளிலும் ஆண் வீடுதான் பொருளாதரத்தில் சிறப்பு. நாங்களும் காதல் கலப்பு திருமணம் செய்தவர்கள் தான். பெண் உயர் வகுப்பு, நாங்கள் பெண் கேட்ட போது பெண் தயாரும், அண்ணனும் எதிர்ப்பு செய்ய வில்லை. பெண்ணின் தாய் மாமாவின் கோவத்தையும் என்னுடைய சம்பளம் வாயடைக்க வைத்தது. காதலுக்கு எதிரி பொருளாதாரமே அன்றி ஜாதி இல்லை. நீங்கள் இது போன்ற பதிவுகளை போட்டு அனைவரின் மனதிலும் ஜாதியை விதைக்க வேண்டாம். பணக்கார தலித் ஏழை வீட்டு பிற இன பெண்ணை காதலித்தால் சொல்லுங்கள் நானும் உங்களுடன் கை கோர்க்க தயாராக இருக்கிறேன். __________வக்காலத்து வாங்க வந்தா நாங்க கை கட்டி வேடிக்க பாக்க மாட்டோம்.

    • சரியாய் சொன்னீங்க பாண்டி. பொருளாதார முன்னேற்றம் மட்டுமே ஜாதியை ஒழிக்கும்.
      மொதல்ல சோத்துக்கு வழி, அடுத்து தலைமுறையை காக்க தேவையான வழி . அதுக்கு அப்புறம் உன் ஆண்மைக்கு வழிய பாரு. 20 வயசுல எல்லாத்துக்கும் கிளம்பும் மோக வெறி. அதுக்கு மொதல்ல முன்னுரிமை குடுத்தா அதுக்கு பேர் காதல் இல்ல.

      என்னடா பெரிய காதல் , கல்யாணம் பண்ணிட்டு பொண்டாட்டிய காதலிக்க முடியாதா? ____________காதலுக்கு சப்போர்ட் பண்ணல , புதுசா விஞ்ஜானி ஒருத்தர் , கரு வளர்கிற ஐடியா குடுத்து இருக்கார். அதுக்கு சப்போர்ட் பண்றானுங்க. பாவம் இன்னும் எத்தனை பெண்கள் இப்படி நாடகத்தில் மாட்டி சீரழிய போறாங்களோ. அரசாங்கமும் , அய்யாவும்தான் இந்த கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

    • அப்படி கேளுங்க, ஒரு பய வாயைத் திறக்க மாட்டான்.

  42. பிறந்தது முதல் சாதிப் பேரைச் சொல்லி மற்ற சாதியினர் செலுத்தும் வரிப்பணத்தில் படித்து, சாதிப் பேரைச் சொல்லி வேலை வாங்கி பிழைப்பும் நடத்தும் ஆசாமிகள் சாதி வெறி பற்றி பேசுவதுதான் ஆச்சரியம்.

    • பெருமாள் கள்ளா…நீயும் (டீ என் சீ/எம் பீ சீ) கோட்டால படிச்சவந்தான? எங்க வரிப்பணத்துல எதுக்குடா படிச்ச? உன் சாதிக்காரன சலுகை வேணாம்னு சொல்ல சொல்லு. உனக்கும் உன் சாதிக்கூட்டத்துக்கும் தலித்துகள் பற்றிப் பேச என்ன தகுதி உள்ளது?

      • அவன்பாதம் தலித் அவர்களே,

        எத்தனை தலித்கள் வரிப்பணம் கட்டுகிறார்கள்? எங்களிடம் ஒன்றுமே இல்லை, நாங்கள் போண்டியானவர்கள் என்பீர்கள், பின்னர் வரிக்கட்டினோம் என்பீர்கள்? என்னத்தச் சொல்ல?

        எல்லாம் ஆதிக்க சாதிகள் கட்டும் வரிப்பணத்தில் படித்து விட்டு சவடாலைப் பாரு?

  43. //மொதல்ல சோத்துக்கு வழி, அடுத்து தலைமுறையை காக்க தேவையான வழி //

    சோத்துக்கு வழிதேடி சம்பாதித்து அடுத்த தலைமுறைக்கு தேவையான வழியை பார்த்து போய்க்கொண்டிருக்கும்போதுதான் ஊர் ஊரா போய் எல்லாத்தையும் கொள்ளையடிச்சு கொளுத்துரீங்களப்பா.

  44. சாதி வெறியர்கள் , பார்ப்பன குடுமிகள், தமிழ் தேசியம் – இந்த மூன்றின் கருத்தும் ஒரே மாதிரி இருக்கிறது.

    • பெண்ணின் கற்பை சாதி ஒழிப்பு இடமாக பயன்படுத்தும் ஒரு ஈன செயலை எந்த ஒரு பண்பட்ட தாய்க்கு பிறந்தவனும் செய்ய மாட்டான். இங்கு சட்டத்தை சொல்லி மிரட்டிய ஒரு சிலருக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்கிறேன்.அரைகுறை சட்டம் படித்தவரே!, சட்டம் எல்லா எல்லைக்கும் வராது.சட்டம் மட்டுமே மக்களை நன்னெறிபடுத்தும் ஆயுதம் என சொல்ல முடியுமா?. பல ஆயிரம் ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட பண்பாடு.அதை யாராலும் மாற்ற முடியாது. படித்துவிட்டு சீன் போடும் பக்கிகளுக்கும் இதை சொல்லிக்கோள்ள விரும்புகிறேன். தண்ணி தலைக்கு மேல் போகிறது. அது ஜான் போனால் என்ன மொழம் போனால் என்ன. தன் சமுதாயத்தின் பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும் காப்பது ஒவ்வோருவரின் கடமை. அப்படி ஒன்று இல்லாதவர்களுக்கு எதை பற்றியும் கவலை இல்லை. அதை பற்றி அவர்களிடம் பேசி பயனில்லை.

      • Thats the problem.

        Thats the reason why these people got their low caste status as they were not able to convince the others of their uniqueness or speciality in anyway.

        Some of them converted and they behave like big lords now.

      • //பெண்ணின் கற்பை சாதி ஒழிப்பு இடமாக பயன்படுத்தும் ஒரு ஈன செயலை எந்த ஒரு பண்பட்ட தாய்க்கு பிறந்தவனும் செய்ய மாட்டான்//

        முரளி ஓந்திரியர்,

        நீங்கள் கூறியதில் ஆதிக்கசாதிகள் தாழ்த்தப்பட்ட பெண்களை பெண்டாண்ட சங்கதிகள் எல்லாம் அடங்குமா?

    • தமிழ் தேசியம் பற்றி பேசும் நீங்கள் திராவிடத்தை சொல்லாதது ஏனோ???? தமிழ் தேசியம் பற்றி பேசும் நீங்கள், சதி மதம் இவைகளை ஏற்காத கட்சிகள், இயக்கங்கள் இருபது உங்கள் கண்ணனுக்கு தெரியாதது ஏனோ?????

    • புரட்சியாளர்கள், முற்போக்கு ஆசாமிகள், தலித்கள், கம்யூனிஸ்ட்கள் இவர்கள் பேசுவதும் ஒரேமாதிரி இருக்கும்.

    • எந்த அடிப்படையில் இக்கட்டுரை ஒரு பக்க சார்பு என விளக்கி சொல்லாமல் இவ்வளவு மறுமொழிகள் – விவாதங்களுக்கு இடையில் ஒரு வரியில் ஐ கேட் என சொன்னால் எப்படி பீர் மூசா நைனா சரியாகும்..?

  45. எந்தக் கட்சி சாதி மதம் பார்க்காத கட்சியாக இருக்கிறது? சாதி மத துவேஷத்தை தூண்டியவையே நீங்கள் சொல்லும் அந்த நட்ட நடு சென்டர் கட்சிகள்தான். எந்த கட்சியையாவது சாதி பார்க்காமல் வேட்பாளரை நிறுத்தச் சொல்லுங்கள் பார்ப்போம். பெரிசா பேச வந்துட்டாங்க. பகுத்தறிவாளர்கள்.

    • நீங்க ஏன் அன்புமணிக்காக அப்பாவி உழைக்கும் மக்களிடம் சாதிவெறியை தூண்டுகிறீர்கள் என்றால் அவன் என்ன யோக்கியமா… அவனெல்லாம் சாதிபார்க்கிறான்…. என்னை சொல்றே? என பேசுவது எப்படி சரியாகும்?

      ஆனால் நாளை அமையபோகும் மக்கள் சர்வாதிகார மன்றத்தில் இப்படியெல்லாம் தப்பிக்க முடியாது. உடனே தீர்ப்புதான் பெருமாள் தேவன்.

  46. ஐயா அறிவாளி அவன் பாதம்,

    நீங்க என்றைக்கு வரிப்பணம் கட்டினீங்க? எல்லாம் உயர்ந்த சாதிக்காரன் கட்டுற வரிப்பணத்துலதான் படிக்கிறீங்க. ஆமாமா தலித்கள் பற்றி பேச லண்டன்ல போய் படிச்சுட்டு வரணும்.

    நீங்கள் எல்லாம் படிச்சுட்டு வந்துதானே மற்ற சாதிகளைப் பத்தி பேசுறீங்க.

  47. ஐயா அறிவாளி அவன்பாதம்,

    பெருமாள் தேவன் என்று சொல்ல ரொம்ப கஷ்டமா இருக்கோ? ஹாஹாஹா

  48. வினவு ஒரு சாதிவெறி இணையம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. வாழ்த்துக்கள்.

    • வினவையே சாதிவெறி இணையம் என சொல்லும் பெருமாள்

      அருளின் பசுமை பக்கங்கள் இணையத்தை

      தப்பி தவறி படிக்க நேர்ந்தால்….

      பாவம் அருள்..!

      • அந்த லிங்க போடுங்க, பார்ப்போம், அந்த பஹூத்தறிவாளி யார் என்று.

      • நீங்க மூச்சுக்கு முன்னூறு தடவை சாதி வெறி என்று கூக்குரலிடுவீர்கள் ஆனால் உத்தம புத்திரர்களாக இருப்பீர்கள். நாங்கள் ஏதாவது பேசிவிட்டால் சாதிவெறியர் ஆகிவிடுவோம்.

        நல்லா இருக்குய்யா உங்க நியாயம்

  49. The girl ran away with lover, Vinavu accepted it.
    Now the girl wants to go back to her parents. Vinavu opposes it. Why?

    Another case of love marriage turning sour. You can find hundreds of love marriages ending up in Divorce courts. This is also like that.

  50. இவங்க மட்டும் இவங்க சாதிவெறியை பத்திரமா சான்றிதழ்ல வாங்கி லாக்கர்ல வைச்சுக்குவாங்களாம். மத்தவங்க யாரும் சாதி வெறியோட இருக்கக் கூடாதாம்.
    நல்லா இருக்குய்யா உங்க நியாயம்.

    • சாதி என்று வந்தது, எப்படி வந்தது,
      சாதி சான்றிதழ் என்று வந்தது ஏன் வந்தது… என்று கூட தெரியாமல்
      சாதி அதில இருக்கு, இதுல இருக்கு என பேசுவதை முதலில் தயவு செய்து நிறுத்தவும்.

      சாதி என்ன பிளட் குருப்பா, மாற்ற முடியாததற்கு.

      • அது எப்படி வந்தா என்னங்க அறிவாளி? அதை எப்படி போக்குவீங்கன்றதுதான் கேள்வி. சாதிச் சான்றிதழ் கொடுத்தே சாதியை ஒழிப்பீங்களா? அப்படினா உங்களையே இந்த நாட்டின் பிரதமர் ஆக்கிடலாம்.

  51. சாதியின் பெயரால் கொடுக்கப்படும் சலுகைகளை தூக்கி எறியத் தயாராக இல்லாத வரை சாதி பற்றி பேச தலித்களுக்கு தகுதி இல்லை.

  52. நாங்கள் எந்த சாதிக்கும், மதத்திற்கும் எதிரிகள் இல்லை. ஆனால் எங்களை யாராவது எதிரியாக நினைத்தால் அவர்களின் கருத்தை மதித்து நாங்களும் எதிரிகளாகவே இருப்போம்.

  53. திருவாளர் அவன்பாதம்,

    நான் என் சாதிப் பெயரைச் சொல்லி சலுகை வங்கிப் படித்தவன்தான். என் சாதிப் பெயரைச் சொல்லி சான்றிதழ் வாங்கி வைத்திருக்கிறேன். நான் என் சாதியிலேயே இருக்கிறேன்.

    அதனால் நான் சாதியை ஆதரிக்கிறேன். நீங்கள் அப்படியா?

    • I have not used my caste to get any reservation or scholarship. But myself and my dad all are paying tax. My dad is a caste-less DK supporter and myself a caste-less Christian. So caste supporters like you are wasting our money. We are giving tax so that it will help really oppressed castes like Dalits. But you people are telling you are MBC/DNC in schools and colleges to get reservation and say that you are ruling caste and suppress Dalits in social life. Why you are cheating our tax money like this and also oppressing other castes?

    • பெருமாள் அவர்கள் அறிவது சாதி என்பது நால்வர்ணத்தொடு சரி.தலித் அதாவது பஞ்சமர்கள் இந்த பிராமன வைஸ்ய ஷத்ரிய சூத்ரர்களில் வரமாட்டார்கள் அதாவது OUTCASTE .அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து நிலமற்ற கூலித் தொழிலாளர்களாய் ஏனைய சமூகத்தினர் வைத்திருந்தனர் என்பதையாவது மறுக்க மாட்டீர் என நம்புகிறேன்.இன்றும் பல ஊர்களில் நிலவரம் அதுதான்.அவர்களுக்கான உரிமைகள் பட்டியல் இனத்தவர்(scheduled castes)என்றுதான் தரப்படுகிறது அவர்கள் நம்மை போல் மேலே வருவதற்கு அந்த சான்றிதழை வைத்து தானே இட ஒதுக்கீடு தர முடியும். நாம் தான் சாதி இந்துக்கள்,அவர்கள் சாதியும் இல்லை இந்துவும் இல்லை.1910,1920,1930 மக்கள் கணக்கெடுப்பில் அவர்களை நாம் தான் பிரிட்டிஷாரிடம் ஆலயப்ரவேசம் எல்லாம் செய்ய வைத்து hindu-pariyar,hindu-arunthathiyar,hindu-devendrakulathaar என்று தக்க வைத்தோம்.

  54. //I have not used my caste to get any reservation or scholarship. But myself and my dad all are paying tax. My dad is a caste-less DK supporter and myself a caste-less Christian.//

    இதுல சாதியில்லாத கிறிஸ்தவராம்.

    // So caste supporters like you are wasting our money.//

    நாங்க வேஸ்ட் பண்றோம்னா தலித்களை என்ன சொல்வீர்கள்?

    // We are giving tax so that it will help really oppressed castes like Dalits. But you people are telling you are MBC/DNC in schools and colleges to get reservation and say that you are ruling caste and suppress Dalits in social life.//

    நாங்க ஆண்ட பரம்பரைனா கஷ்டமா இருக்கு, ஆனா இப்ப நாங்கதான் ஆண்டோம் அடிமைப்படுத்தினோம் என்று சொல்கிறீர்கள். நல்லா இருக்கு.

    // Why you are cheating our tax money like this and also oppressing other castes?//

    நான் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் வரிக் கட்டி வருகிறேன். நாங்கள் எந்த சாதியையும் கொடுமைப்படுத்துவது கிடையாது. ஆனால் தலித்கள் இன்று எல்லா சாதிகளுக்கும் எதிரிகளாகி வருகிறார்கள்.

    //I am not a dalit. I am not an upper caste.//
    இங்கே இவர் தலித் இல்லை என்று சொல்கிறார். ஆனால் உயர்ந்த சாதியும் கிடையாதாம். இவருக்குள்ள சாதியே கிடையாதாம்.

    // I am a Christian.//

    ஏசுவின் சீடர்களின் வாரிசா நல்லது.

    // Ok, we are educated for many generations than you. Even my grandpa’s father is educated.//

    உலகத்திலேயே உங்க குடும்பம்தான் முதல் எஜுகேடர் ஃபேமிலினு சொல்றீங்க..

    //unna maathiri palathaaram pannavan vamsamilla naanga!//

    நாங்க யாரை பலாத்காரம் செய்தோம். இப்படிப் பேசிப்பேசித்தான் இன்னைக்கு எல்லாத் தலித்தும் உயர்ந்த சாதிப் பெண்களை கர்ப்பமாக்க வேண்டும் என்ற சிந்தனைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதற்கு தகுந்த பலனையும் அவர்கள் அனுபவித்து வருகிறார்கள். ஆனா உங்க முகமூடி நல்லா இருக்கு. உங்களை மாதிரியான ஆட்கள்தான் அபாயகரமானவர்கள்.

    • //இப்படிப் பேசிப்பேசித்தான் இன்னைக்கு எல்லாத் தலித்தும் உயர்ந்த சாதிப் பெண்களை கர்ப்பமாக்க வேண்டும் என்ற சிந்தனைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.//

      http://www.youtube.com/watch?v=WsXDjJYF01I

      தலித் இளைஞர்கள் அனைவரும் வன்னிய சாதி பெண்களை காதலிப்பது போல நடித்து லாட்ஜில் ரூப் போட்டு உடலூறவு கொண்டு அதனை படமாக்கி பின்னர் பளாக்பெயில் செய்தோ, அல்லது திருமணம் என்ற பெயரிலோ அப்பெண்ணின் சொத்துகளை அபகரித்து பின்னர் நடுத்தெருவில் அப்பணை விட்டுவிடுவது என்பதை வழக்கமாக் கொண்டு உள்ளனர். அதனை ஒரு க்ட்சியே தலைமையேற்று நடத்தி வருகிறது என காடுவெட்டி குரு மீண்டும் மீண்டும் சிவராஜ் சித்தவைத்தியர் மாதிரி தான் குரு முதல் அடிமட்ட ஆட்கள் பேச்சு வரை இருக்கு. நல்ல டிரெனிங்.

      //அதற்கு தகுந்த பலனையும் அவர்கள் அனுபவித்து வருகிறார்கள். //
      இதை விட சாதிவெறி திமிரை வெளிப்படுத்த முடியாது.

      **********
      ஆனால்

      சேர்த்து நாலு வார்த்தை பேசத்தெரியாத அப்பாவும்-பையனும் அவர்கள் குடும்பமும் கொள்ளையடிக்க சாதீ வெறியாட்டம் போட எத்தணிக்கும் உங்கள் முகத்திரை வன்னிய சாதிமக்களிடம் அம்பலமாகி வருகிறது என்பது மட்டும் நிச்சியம்.

      • நீங்க மூச்சுக்கு முன்னூறு தடவை சாதி வெறி என்று கூக்குரலிடுவீர்கள் ஆனால் உத்தம புத்திரர்களாக இருப்பீர்கள். நாங்கள் ஏதாவது பேசிவிட்டால் சாதிவெறியர் ஆகிவிடுவோம்.

        நல்லா இருக்குய்யா உங்க நியாயம்

  55. //அவர்கள் நம்மை போல் மேலே வருவதற்கு அந்த சான்றிதழை வைத்து தானே இட ஒதுக்கீடு தர முடியும். //

    ஐயா அறிவுறுதல் அவசியம்,

    அப்படி மேலே வரும்வரை சாதி அவசியம் என்று எத்தனை முற்போக்கு முகமூடிகள் ஒப்புக் கொள்கிறார்கள். இவர்கள் இன்றே சாதியை அழித்து ஒழித்து விடுவதைப் போல வீரவசனம் பேசுவதை எவ்வாறு ஏற்க முடியும்?

  56. //பெருமாள் அவர்கள் அறிவது சாதி என்பது நால்வர்ணத்தொடு சரி.தலித் அதாவது பஞ்சமர்கள் இந்த பிராமன வைஸ்ய ஷத்ரிய சூத்ரர்களில் வரமாட்டார்கள் அதாவது OUTCASTE .அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து நிலமற்ற கூலித் தொழிலாளர்களாய் ஏனைய சமூகத்தினர் வைத்திருந்தனர் என்பதையாவது மறுக்க மாட்டீர் என நம்புகிறேன்.//

    அப்படி சாதியே இல்லாத இந்த பகுத்தறிவாளர்களுக்கு, சாதி இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? அதைப் பற்றி கூப்பாடு போட வேண்டிய அவசியம் என்ன?

  57. தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற வேண்டுமானால் சாதி அடிப்படையில்தான் முன்னேற வேண்டும். அப்படி அந்த முன்னேற்றத்தை எட்டும் வரை சாதி தேவை. அதற்கு முன்னறே சாதியை ஒழிப்போம் என்பது வீண் பிதற்றல். முதலில் சாதி அடிப்படையில் தலித்கள் முன்னேறி விட்டார்களா இல்லையா? அவர்கள் முன்னேற இன்னும் எத்தனை ஆண்டுகாலம் பிடிக்கும்? அதுவரை சாதி தேவை என்பதை தலித்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு அறிவுப் பூர்வமாக வாதாடுகிறோம் என்று பிதற்றினால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

    சாதி இல்லாமல் முன்னேற எத்தனை தலித்கள் தயார்?

  58. எங்களுக்கு கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.

    சாதியும் வேணும் சலுகையும் வேணும்.

    உங்களுக்கு…..???

  59. இவங்களுக்கு மட்டும் செத்துச் சுன்னாம்பாகும் வரை சாதிச் சான்றிதழ் வேணுமாம். மத்தவனுக்கு அது இருக்கக் கூடாதாம். கேட்டா உரிமையாம், கடமையாம். யார்கிட்டே கதை விடுறீங்க..

  60. நாங்க ஆண்ட பரம்பரைனா கஷ்டமா இருக்கு, ஆனா இப்ப நாங்கதான் ஆண்டோம் அடிமைப்படுத்தினோம் என்று சொல்கிறீர்கள். நல்லா இருக்கு..////
    very true

    • ரொம்பச் சரி. அவங்க இஷ்டத்திற்கு மாற்றிக் கொள்வார்கள். இப்போது அவர்கள்தான் குறைவான ஒதுக்கீடு பெறுவதாக ஒரு வாதத்தை முன் வைக்கிறார்கள்.

    • யாரப்பா ஆண்ட பரம்பரை?. வன்னியர்களுக்கு வேட்டுவர்(வடுகர்) என்ற பெயரும் உண்டு தெரியுமோ?வடுகர் என்றால் நாகரீகமற்றவர்(காட்டுமிராணடி) என்று பொருள் . பிறகு எப்படி ஆண்ட பரம்பரை ( சாதி வெறி——– மட்டும்)

  61. ஆனா ஒன்னு, சாதிக்கொடுமைன்னு பேசுற அனேக பேர் தான் கோட்டா சிஸடத்துல்ல சீட் வாங்கிட்டு அப்புறம் தான் சீறுகிறார்கள்

  62. open 31%
    Bc -27%
    BC M – 3%
    MBC -20%
    SC -18%
    sT-1%
    இதில் யார் சாதியை வைத்து அதிக ஆதாயம் அடைகிறார்கள்??

    • ஐயா வாகை, ரொம்ப அறிவுப்பூர்வமான பதிலை கொடுத்திருக்கிறீங்க. இது ஓபன்ல எத்தனை சாதி இருக்கு? மற்ற பிரிவுகள்ல எத்தனை சாதி இருக்குனு பட்டியல் போடுங்க உங்களை நான் பாராட்டுறேன்.

      • open அப்படீன்னா open to all அதாவது எல்லோரும் போட்டியிடலாம் என்று அர்த்தம்.அதுல எத் தனை சாதின்னு கேட்டுட்டு ஒம்பாட்டுக்கு ஜாலியா வாழ்ந்துட்டு இருக்க நீ? எத்தனை தடவை எவ்வளோ பேர் வண்ட வண்டயா கேட்டும் விளக்கியும் தெளிவாக கிளாஸ் எடுத்தும் உன் ஆட்டு மூளைக்கு ஒண்ணுமே புரியாமல் வரிக்கு வரி கப்பித்தனமா பதில் சொல்லிக்கிட்டு வெறிய ஏத்திகிட்டு இருக்க பெருமாளு,தப்ப நீ செய்ற ஆனா ப்ரெஷர் எனக்கு ஏறுது நான்சென்ஸ்.

        • முருகா முடியலனா மலையேறிக்கணும். ஒப்பாரி வைக்கக் கூடாது.

          உங்களுக்கு பிரஷர் ஏறுனா வினவுக்கு வரக் கூடாது. டாக்டர்கிட்டே போகணும்.

      • அதாவது தேவர் ஓப்பன் அப்படீன்னா எல்லா சாதிக்கும் ஓப்பன் என்று அர்த்தம் அதுல போய் எத்தனை சாதீனெல்லாம் கேக்கப்டாது.எல்லாம் ஏன் ஒன்னை கண்டபடி திட்றால்ன்னுட்டு இப்பதான் புரியறது.எதையும் யோசிச்சு விஷயம் அறிந்து பேசணும்.பதிலுக்கு பதில் தட்டிண்டே இருக்கப்டாது கீபோர்டை.

        • பாவம், பெயரை மாத்திக்கிட்டு பிராமணா மாதிரி பேசப் பார்க்கிறா. நல்லா இருக்கு. எல்லாச் சாதியும் (எண்ணிக்கை), தலித்களும் சமமா?

          • தேவர் அவர்களே open competition என்றால் அதில் எந்த சாதிக்கும் reservation இல்லை அது 31%. மீதம் உள்ள 69% தில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இனத்தார்க்கு ஓரளவு மக்கள் தொகைக்கு ஏற்ப reservation செய்யப்படுகிறது.

            • ஐயா நாராயண் அவர்களே, அது எனக்கும் தெரியும்.

              என்னுடைய கேள்வி என்னவென்றால் அந்த 31% இடங்களை 69% ஒதுக்கீடு பெற்றோர் பெற முடியுமா? முடியாதா என்பதுதான். முடியும் என்றால் 100% சாதிகளும் அதற்குள் நுழையலாம் என்றுதானே அர்த்தம்.

              • ஸ்ஸ்ஸ்…அப்பப்பா முடியுமா என்று ஏன் என்னை கேட்கிறீர்? நான் சொன்னால் முடியும் முடியாது என்கிற விஷயம் அல்ல இது.சட்டம் ஐய்யா சட்டம்.31றில் எல்லா சாதியையும் போட்டியிடமுடியும் 69ல் அந்தந்த சாதி மட்டுமே போட்டியிடமுடியும்…..புரிஞ்சிட்டாலும்.

                  • 31%ல் சாதியோ மதமோ எதுவுமே இல்லையென்றாலும் no problem, அங்கே மார்க் மட்டும் தான் அதாவது only merit no reservations. படிச்சவங்க யாரிடமாவது sslc யாக இருந்தாலும் போதும் ஏன் பேப்பர் படிக்கிற யாருக்கும் கூட தெரியும்.

                    • ஐயா அறிவாளிகளா, 69%-ஐ சேர்ந்த ஒருவரால் 31%-க்குள் செல்ல முடியும். ஆனால் எந்தக் காலத்திலும் 31%-ஐச் சேர்ந்தவரால் 69%-க்குள் செல்ல முடியாது என்பதுதான் என் வாதம்.

  63. 20% தலித்களுக்கு 18% சலுகை. ஆக நீங்க 90% சலுகை வாங்குறீங்க.

  64. காதலை ஆதரிப்பவர்களில் எத்தனை பேர் தங்கள் சகோதரிகள் காதலிக்கத் தயாராக இருக்கிறார்கள் என்ற பட்டியலை வெளியிட முடியும்.

  65. பேசாம வினவு தன்னை ஒரு டேட்டிங் இணையமாக மாற்றிக் கொண்டால் இன்னும் வசதியாக இருக்கும். யார் யாருக்குத் தேவையோ அவர்களை சேர்த்து வைக்கலாம். அது ஒரு சிறந்த சமூக சேவையாக இருக்கும்.

    • //பரவாயில்லையே, குண்டர் சட்டம், தேசியப் பாதுகாப்பு சட்டம், சிறை வெயில் என்று பம்மியிருந்த சிங்கங்கள் இப்போது தைரியமாக எழுந்து நின்று வேட்டைக்கு கிளம்பியிருக்கின்றன. ஆனாலும் ஒரு பெண்ணை கடித்துக்குதறுவதில்தான் என்ன வீரம், மகிழ்ச்சி, களிப்பு!//

      இந்த வரிகளுக்கு அர்த்தம் தெரிந்து பின்பு தான் மற்ற வரிகளை எழுதிக்கொண்டு இருக்கீர்களா? மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்… //ஆனாலும் ஒரு பெண்ணை கடித்துக்குதறுவதில்தான் என்ன வீரம், மகிழ்ச்சி, களிப்பு!//

    • சாதிக்கு ஒரு இணையதளம் என மேட்ரிமோனி நடத்தும் சாதிவெறியர்களும் சாதிமறுப்பாளர்களுக்கு கூட வித்தாயசம் தெரியாமல் இங்க வந்து கேட்கிறீர்கள்.

      தங்கள் முகத்திரை கிழிந்து வருவதை உங்கள் வார்த்தைகளிலேயே பார்க்க முடிகிறது.

      • அடப்பாவிகளா, கல்யாணம் முடிச்சி வைக்கிறவன் சாதிவெறியன்னா, உங்களை என்னவென்று சொல்வது?

  66. ///அப்படி சாதியே இல்லாத இந்த பகுத்தறிவாளர்களுக்கு, சாதி இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? அதைப் பற்றி கூப்பாடு போட வேண்டிய அவசியம் என்ன?////
    பெருமாளு அப்படி அவர்களை வறுமையில் வைத்து இழி தொழில்களை சுமத்தியது சாதியம் தானே?அதாவது சனாதன முறை எனப்படும் சாதிய கட்டுமானம் தானே?அதுதானே உன்னையும் சூத்திரன் அதாவது வேசிமகன் என்கிறது?அதை முற்றாக ஒழித்துக்கட்ட வேண்டாமா?நான் எவனுக்கு கீழே எந்த பெயரில் அழைக்கப்பட்டாலும் கவலை இல்லை, எனக்கு கீழே உள்ள தலித்கள் முன்னேறி விடக்கூடாதுஅதுதானே உங்கள் கொள்கை?

    • shudran is not vesi magan.

      Nobody is vesi magan,only a vesi’s magan is vesi magan,infact to go further,a child who is born out of lust alone is a vesi magan.

  67. A comment posted by Mr.Ganesan

    குடிபோதைக்கு அடிமையானவன் போதைக் குறைந்ததும் மீண்டும் போதை ஏற்றிக்கொள்ள எதையும் செய்யவும், இழக்கவும் துடியாய் துடிப்பான். அதைப்போல சாதி திமிரும்/அதிகாரப் போதையும் குறைந்து போனதால் எதையாவது செய்து/ இழந்து மீண்டும் போதை ஏற்றிக்கொள்ள துடிக்கிறவர்கள் செய்கிற சாதி வெறியாட்ட அரசியலில் அப்பாவி மக்கள் தான் அடிப்பட்டு சாகிறார்கள். காடுவெட்டியில் உள்ள படையாட்சியையும் , பறையனையும் ஊருக்கு வெளியே ஒன்றாக ஓரிடத்தில் நிற்கவைத்து ஒரு சிறுவனிடம் காட்டி இவர்களிடையே ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா என்று கேட்டால் அந்த சிறுவன் ஒரு வித்தியாசமும் இல்லை என்று தான் சொல்லுவான். இந்த உண்மையை உணராமல் சாதி பெருமை பேசுவது வேதனையானது.
    திருமாவளவன் தான் பறையனுக்கு காதலிக்க கற்றுக்கொடுத்தான் என்று சொல்லுவதும், இராமதாஸ் பயமுறுத்தினால் எந்த வன்னியப் பொண்ணும் காதலிக்காமல் உணர்ச்சியற்ற பிண்டமாக இருப்பாள் என்று கனவுகானுவதும் மிகக் கேவலமான பித்தலாட்டம். நான் ஆண்ட சாதி (அரசு கேஸ் போட்டால் அடுப்பங்கரையில் பேன்ட சாதி ) என்று
    சாதி அமைப்பு வைத்து அரசிடம் கல்வி வேலைவாய்ப்புக்கு இட ஒதுக்கீடு கேக்கிற எல்லா சாதிக்காரனும் தாழ்த்தப் பட்ட சாதிக்காரன் பெற்று வருகிற கல்வி, வேலை வாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டை கிண்டல் செய்வதற்காக வெக்கப்பட வேண்டும்.
    ஆண்ட சாதிக்கே இட ஒதுக்கீடு தேவைப்படும்போது அடிமை சாதிக்கு இட ஒதுக்கீடு தேவையில்லையா? அடுத்தவனின் வாழ்க்கையை ஆட்டையப் போட்டதைப் போல போலியாக
    தாழ்த்தப்பட்ட சாதி சான்றிதழ் பெற்று மருத்துவர், பொறியாளர் அரசுப் பணி என வாழ்க்கையில் உயர்ந்தவர்கள் சாதி வெறியாட்டம் நடத்துகிறபோது வேடிக்கையாக இருக்கிறது.
    இடையில் நாலுமுழ வேட்டியும் , தோளில் ஒரு துண்டையும் போட்டுக் கொண்டு கிராமத்தில் வலம் வந்த நம் தாதாக்களும், இரவிக்கை அணியாத பின்கொசவம் வைத்து சேலைக் கட்டிவந்த நம் பாட்டிகளும், காலையில் பழைய சோறும் நீராகரமும் சாப்பிட்ட நம் உணவும், ஏத்தம் வைத்து கிணற்றில் நீரிறைத்து, எரு, தழை போட்டு செய்த விவசாயம் என எல்லாமும் மாறி ரசாயன உரம், பூச்சிக் கொல்லி மருந்து என விவசாயம் செய்து சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்ளும் விவசாயம் நம் மீது திணிக்கப்பட்டுள்ளது. அழையாத விருந்தாடியாய் , அடாவடி ரவுடியாய் நம் வீட்டுக்கு உள்ள புகுந்து நாம் என்ன சாப்பிட வேண்டும், நம் வீட்டுப் பிள்ளைகள் என்ன உடைஉடுக்க வேண்டும், நம் வீட்டில் என்ன சமைக்க வேண்டும், நம் வீட்டுப் பெண்கள் என்ன சேலை, நகை அணியவேண்டும் , காலையில் நாம் என்ன குடித்தால் பேஷாக இருக்கலாம் என்று நம்மை மூளை சலவை செய்கிற கார்பரேட் நிறுவனங்கள் ஆட்சி செய்கிற காலமிது.
    நாம் விரும்பாமல் நம் வீட்டுக்குள் கட்டாய மாற்றம் வந்ததைப் போல இராமதாஸ், திருமாவளவன் போன்றவர்கள் விரும்பினாலும் விரும்பாமல் போனாலும் சாதி மறந்து காதல் வரும், சாதிமறுப்புத் திருமணம் நடக்கும். கௌரவ கொலைகள் கணக்கை கழித்துப் பார்த்தாலும் சாதி கட்டமைப்பை உரசிப்பார்க்கும் சாதிமறந்த காதல் பெருகும். இது காலம் நம் மீது திணிக்கும் முடிவு.
    வயலில், வாய்க்கா வரப்பில், ஓடையில், தோப்பில், ஆற்றில் மேல்சாதி கீழ் சாதி என சாதிப்பார்க்காமல் பிறர் மனைவியோடும்,கணவனோடும் படுக்கும்போது குறுக்கே வராத சாதி, காதலித்து முறையாக திருமணம் செய்யும்போது குறுக்கே வருவது வெக்கமாக இருக்கிறது.

    அடிமைப்பட்டவன் விடுதலை பெறுவதும், அடிப்பட்டவன் திருப்பி அடிப்பதும் இயற்கையின் விதி. என்னதான் அறிவியல் வளர்ந்து நாம் விமானம், ராக்கெட் என புவிக்கு மேலே பறக்கவிட்டாலும் அது புவியீர்ப்பு விசையால் மீண்டும் புவிக்கு வந்தாக வேண்டும். அதுதான் இயற்க்கை. இந்திய- அமெரிக்க ராக்கெட் மேலே பறக்கிற நேரம் வேறுபடலாம். ஆனால் இரண்டும் பூமிக்கு தான் திரும்பும்.
    சாதிவெறியால் இயற்கையான காதல் உணர்வை ஒழிக்க முடியாது. ஜீன்ஸ் பேன்ட், டி சர்ட் & கூலிங் கிளாஸ் விற்பனையை குறைக்க முடியாது.
    சாதிப் பெருமை பேசுகிற யாரும் தத்தம் குலத் தொழிலை மட்டுமே செய்ய வேண்டும். அதன் பிறகே வெட்டியான், பறையன், சக்கிலியன் அவனின் குலத் தொழில் செய்து தங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டுமென என்ன வேண்டும்.
    விவசாயத்தை தொழிலாக கொண்ட சாதி வீட்டுப் பிள்ளை விவசாயத்தை விட்டு விட்டு படித்து மருத்துவர், வழக்கறிஞர், பொறியாளார் என தொழிலை மாற்றும் போது அடிமை சாதி வீட்டுப் பிள்ளைகள் மட்டும் தொடர்ந்து அடிமையாக இருக்கனுமா?
    சாதிப் பெருமை பேசுகிற யாருக்கும் பெரியார் பற்றியோ, மார்க்ஸ் பற்றியோ, விடுதலை புலிகள் பற்றியோ, சமுக சமத்துவம் பற்றியோ & தமிழ் தேசியம் பற்றியோ பேசுகிற தகுதி இல்லாதவர்கள்.
    இன்றைய கால சூழல் சமுகத்தின் அடித்தட்டில் உள்ள பெரும்பாலான வீட்டுப் பிள்ளைகள் போதைக்கும், எதிர்பாலினக் கவர்ச்சிக்கும் ஆட்பட்டு “பிஞ்சிலே வெம்பிவிடுகிறன”.
    அரசு குற்றவியல் வழக்குப் பதிவு ஆவணங்கள் ஆராய்ந்தால் அதில் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிக்காரன் தான் அதிகமாக இடம்பெற்றுல்லான்.
    இது புரிந்தால் அப்புறம் நாம் ஏன் மதுபோதையில் சென்று மது ஒழிப்பு போராட்டம் நடத்துகிறோம். விலங்குகள் கூட அதன் வாழ்க்கை முறையில் மனிதன் குறுக்கிட்டால் வேகமாக எதிர்க்கிறது. குட்டிப் போட்டுள்ள நாய், பூனை, பன்றி களின் அருகில் நாம் சென்றாலே நம்மீது சீறிக் கொண்டு சண்டைப் போட வரும். ஆனால், ஒரு மனிதன் சக மனிதனால் அடக்கப்பட்டால், ஒடுக்கப் பட்டால் அதை சகித்துக் கொண்டுவாய் மூடி இருக்க வேண்டும் என்று நினைப்பது எவ்வளவு மூடத்தனம். ?

  68. அகிடிசித்தர்,

    சூத்திரன் என்பதற்கு உழைப்பாளி என்று பொருள். உங்களுக்கு கற்றுக் கொடுத்தவர்கள் மனு திரித்ததை மையமாக கற்றுக் கொடுத்தால் அதற்கு இந்து மதமோ, சாதிய அமைப்போ பொறுப்பாகாது.

  69. சாதிதான் மோசமானது,கெட்டது.

    அப்புறம் எதற்காக அதைப் பிடித்து தொங்கி, அதில் சலுகை வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

    அந்த சாதியை விட்டு வெளியேறிவிட வேண்டியதுதானே?

    உங்களுக்கு சாதி முக்கியமா? சலுகை முக்கியமா?

  70. சாதி அடிப்படையிலதான் சலுகை வேண்டும் என்றால், அப்புறம் ஏன் குத்துது குடையதுனு சொல்லணும்.

  71. //எனக்கு கீழே உள்ள தலித்கள் முன்னேறி விடக்கூடாதுஅதுதானே உங்கள் கொள்கை?//

    அகிடிசித்தர்,

    அதைப்பற்றியெல்லாம் எங்களுக்கு கவலையில்லை. உங்கள் சாதியை விட்டு வெளியேறி முன்னேறுங்கள் உங்களை பாராட்டுகிறோம். சாதியை வைத்தே முன்னேறுவோம், ஆனால் சாதியை திட்டுவோம் என்பதைத்தான் ஏற்க முடியாது.

  72. சாதிப் பெருமை பேசுவது வீணானது என்றால் சாதிச் சிறுமை பேசி அதற்காக சலுகை கொடுத்தால்தான் உயர முடியும் என்று பேசுவது மட்டும் எவ்வளவு முக்கியமானது.

  73. //சாதி அமைப்பு வைத்து அரசிடம் கல்வி வேலைவாய்ப்புக்கு இட ஒதுக்கீடு கேக்கிற எல்லா சாதிக்காரனும் தாழ்த்தப் பட்ட சாதிக்காரன் பெற்று வருகிற கல்வி, வேலை வாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டை கிண்டல் செய்வதற்காக வெக்கப்பட வேண்டும்.//

    இதை ஏன் தன்னை தாழ்த்தப்பட்ட சாதி என்று கூறிக்கொள்பவனும் செய்யக் கூடாது?

  74. //ஆண்ட சாதிக்கே இட ஒதுக்கீடு தேவைப்படும்போது அடிமை சாதிக்கு இட ஒதுக்கீடு தேவையில்லையா? //

    அப்போ ஆண்ட சாதியும் இருக்கு, அடிமை சாதியும் இருக்கு. ஆண்ட சாதிக்கும் வெறி இருக்கு, அடிமை சாதிக்கும் வெறி இருக்கு என்பதையும் ஒத்துக்கங்க.

  75. // அடாவடி ரவுடியாய் நம் வீட்டுக்கு உள்ள புகுந்து நாம் என்ன சாப்பிட வேண்டும், நம் வீட்டுப் பிள்ளைகள் என்ன உடைஉடுக்க வேண்டும், நம் வீட்டில் என்ன சமைக்க வேண்டும், நம் வீட்டுப் பெண்கள் என்ன சேலை, நகை அணியவேண்டும் , காலையில் நாம் என்ன குடித்தால் பேஷாக இருக்கலாம் என்று �®
    �ம்மை மூளை சலவை செய்கிற கார்பரேட் நிறுவனங்கள் ஆட்சி செய்கிற காலமிது.//

    இதையே தலித்கள் மற்ற சாதிகள் மீது திணிக்க முடியாது அல்லவா?

  76. //நாம் விரும்பாமல் நம் வீட்டுக்குள் கட்டாய மாற்றம் வந்ததைப் போல இராமதாஸ், திருமாவளவன் போன்றவர்கள் விரும்பினாலும் விரும்பாமல் போனாலும் சாதி மறந்து காதல் வரும், சாதிமறுப்புத் திருமணம் நடக்கும். கௌரவ கொலைகள் கணக்கை கழித்துப் பார்த்தாலும் சாதி கட்டமைப்பை உரசிப்பார்க்கும் சாதிமறந்த காதல் பெருகும். இது காலம் நம் மீது திணிக்கும் முடிவு.//

    கனி தானாக பழுப்பதற்கும் அடித்துப் பழுக்க வைப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. நீங்கள் உங்கள் விருப்பத்தை மற்றவர்கள் மீது திணிக்காமல் இருந்தால் சரி.

  77. //வயலில், வாய்க்கா வரப்பில், ஓடையில், தோப்பில், ஆற்றில் மேல்சாதி கீழ் சாதி என சாதிப்பார்க்காமல் பிறர் மனைவியோடும்,கணவனோடும் படுக்கும்போது குறுக்கே வராத சாதி, காதலித்து முறையாக திருமணம் செய்யும்போது குறுக்கே வருவது வெக்கமாக இருக்கிறது.//

    அதே சாதி இடஒதுக்கீட்டிலும் ஏன் குறுக்கே வருது? அங்கேயும் சாதி பார்க்காமல் ஒதுக்கீடு கொடுக்க வேண்டியதுதானே?

    • யப்பா ராசா செல்லம் பெருமாளு, சமூகத்துல நீ எத்தனை சதம் இருக்கியோ அதே அளவு படிப்பிலும் அரசு வேலையிலும் இருக்க வேண்டும் என்பது தான் இட ஒதுக்கீடு,ஏனென்றால் அங்கே 90 பேர் பாப்பானாய் இருந்ததால் சட்டம் வகுத்தவர் அதை சரி செய்த ஏற்பாடு.கொஞ்சம் கூட அறிவே இல்லாமல் அதை கொடுக்க கூடாது என்று ஏம்பா சொல்ற?

      • ஆட்டுமூளைக்காரா, ஹாஹாஹா பேரு சூப்பரு அப்பு.

        அதெல்லாம் சரி, இப்போ 90% தலித்தாக இருக்க வேண்டும் என்று ஏன் ஆசைப்படுகிறீர்கள்? இதில் நான் உங்க பெயரை சம்பந்தப்படுத்த விரும்பவில்லை.

  78. காதல், கல்யாணம், கத்திரிக்காய் இப்படி எதிலுமே சாதி பார்க்கக் கூடாது.

    ஆனால்,

    இட ஒதுக்கீட்டில் மட்டும் கண்டிப்பா சாதி பார்க்கணும்.

    எப்பூடி…..?

  79. //அடிமைப்பட்டவன் விடுதலை பெறுவதும், அடிப்பட்டவன் திருப்பி அடிப்பதும் இயற்கையின் விதி.//

    அது மாறியும் நடக்கும் அல்லவா?

  80. ஒரு நண்பர் சொன்னார், தலித்களின் வளர்ச்சியைக் கண்டு நான் பொறாமைப் படுகிறேனாம்.

    அவர்கள் வளர்ச்சி அடைந்தது உண்மையானால் அவர்கள் பெறும் சலுகையை நிறுத்தி விடலாமா? என்று கேட்டேன்.

  81. தலித் வளர்ந்து விட்டார்களாம். ஆனால் இன்னமும் வளரணுமாம். ஏம்பா அதுக்கு ஏதாவது அளவு இருக்கானு கேட்டா…

    அது ரொம்……………….ப இருக்காம்.

  82. சாதி மறுப்பாளர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்கள் யார்? அதற்கான புள்ளி விவரம் எதுவும் இருக்கா என்ன?

    சாதிச் சான்றிதழை பத்திரப்படுத்தியவர்கள்தான், இங்கே தங்களை சாதி மறுப்பாளர்கள் என்று காட்டிக் கொள்கிறார்கள்.

  83. ஒன்றும் வேண்டாம், வினவுவில் வேலை பார்ப்பவர்கள் மட்டும் தங்களை சாதி-மத மறுப்பாளர்கள் என்று ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்.

    • வினவு நண்பர்களில் சாதி வெறியர்களை இனம் கண்டு அம்பல படுத்தினால் நம் தமிழ் நாட்டின் விடியலுக்கு வழி வகுத்த பெருமாள் என்று எல்லாரோலும் அன்போடு அழைக்கபடுவீர்……..

  84. தான் சாதிவெறியனா இருந்துக்கிட்டு மற்றவனை சாதி வெறியன் என்று சொல்பவன் என்ன சொல்வது?

  85. சாதிவெறி வினவு, வர்க்கம் என்று பிதற்றி கம்யூனிஸ முகமூடியையும் மாட்டிக்கொள்ள முயற்சிக்கிறது. கம்யூனிஸ்ட்கள்தான் உலகமகா ஃபிராடுகள். அவர்களின் முன்பு சாதிவெறி என்பது ஒரு தூசு மாதிரி. இதுக்கு கம்யூனிஸ புரட்சி நடந்த அந்த மாபெரும் நாடுகளே சாட்சி. இவர்கள் யாரிடம் கூலி பெற்றுக் கொண்டு எழுதுகிறார்களோ? அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

  86. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் காதலித்து கல்யாணம் செய்தால், என்தான் இந்த ஜாதி வெறியர்களுக்கு பைத்தியம் பிடிக்கின்றதோ தெரியவில்லை. இதைப் போன்ற ஒரு சூழ்நிலையில் எனது தம்பியும் எனது தோழியும் மதம் மாறி ஜாம் ஜாம் என்று சந்தோஷமாக இருக்கிறார்கள். இதை ஏன் மற்றவர்களூம் செய்யக் கூடாது? ஜாதித்”தீ” ஒழிக. காதல் வாழ்க

    • அதே காதலை நீங்கள் ஏன், கர்நாடகாவிலோ ஆந்திராவிலோ செய்யக் கூடாது?

    • தலித்கள் எல்லாரும் மதம் மாறிவிட்டார்கள் என்றால், நிம்மதியாக இருக்கலாம். செய்வார்களா?

  87. வினவு ரொம்ப நல்ல இணையம். இது எல்லா சாதிவெறியையும் கண்டிக்கும். தேவர் சாதி, வன்னிய சாதிகளை அடிக்கடி கண்டிக்கும்.

    தலித் சாதி வெறியை ஆடிக்கொருமுறையும் அமவாசைக்கு ஒருமுறையும் கண்டிக்கும். இதுக்குப் பேருதான் சாதிப் பாசம்.

    நமக்கு நம்ம சாதி மேல பாசம் இருக்கக் கூடாதா? இருக்கலாம். ஆனால் அது சாதிவெறியாத்தான் இருக்கும்.

    எப்பூடி…..?

  88. தலித்கள் மட்டும்தாம் புத்திசாலிகளாக இருக்க முடியும். மத்தவங்களுக்கு புத்தி இருக்கா, என்ன?

  89. நல்லா கவனிச்சுப் பாருங்க. இந்த தலித்களின் பெயரெல்லாம் வித்தியாசமா இருக்கு. மாட்டுமூளை, ஆட்டுமூளை இந்த மாதிரி.

  90. பேருல என்ன இருக்கு பெருமாளு. மண்டைக்குள்ள இருந்தா சரிதான்.

  91. பேருல ஒண்ணும் இல்லை என்றால் 123 என்று பெயர் வைக்க வேண்டியதுதானே? எதற்கு மாட்டு மூளை, ஆட்டு மூளை என்று பெயர் வைக்க வேண்டும்?

    • தேவன்னு பேரு வைக்கிறதுக்கு அது எவ்ளோ பரவாயில்ல ன்றது என்னோட அபிப்ராயம்.

      • ஆமாம், தலைகீழாக நின்றாலும் தேவன்னு பேரு வைக்க முடியாது. மாட்டு மூளை, ஆட்டு மூளைனு எது வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.

  92. சாதி என்பது குடும்பத்தை அமைத்துக் கொள்வதற்கான ஒரு சிறந்த சமூக கட்டமைப்பு. அந்த கட்டமைப்பை உடைப்பவர்கள் தங்கள் திறமைக்கேற்ப அதன் பலன்களை அனுபவிக்கிறார்கள்.

    • இப்படி பல நுணுக்கமான அரிய கண்டுபிடிப்புகளை எப்படித்தான் கண்டுபிடிக்கிரீன்களோ, போங்க பெருமாளு!

      • சார் நீங்க வேற அவர் சிறந்த அறிவாளி, indian constitution ஐயே வரிக்கு வரி திருத்த கிளம்பியவர்.அறிவுஜீவிகள் அவரை பின்பற்றவேண்டும் வேண்டும்.

        • ஆமாமா, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை கண்ணில் ஒத்திக்கலாம். உங்க ஆளு எழுதினார் என்கிறதுக்காக அந்த சட்டம் சிறப்பானது என்று தலையில் தூக்கி வைத்து ஆடிக்கலாம். வேறு ஒன்றும் செய்ய முடியாது. மீண்டும் தலித்களுக்கு சட்டம் எழுதுற வாய்ப்பு கனவுல கூட கிடைக்காது.

  93. காவல்நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

    மதுரை அவனியாபுரம் காவல்நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்து, பாதுகாப்பு கேட்டுள்ளது.

    பனையூரைச் சேர்ந்த கண்ணனின் மகன் அழகர்சாமி (21). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவருக்கும் காரைக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த இப்ராகிம் மகள் அப்துல்லா பீவிக்கும் செல்போன் மிஸ்டுகால் மூலம் காதல் மலர்ந்தது. இவர்களின் காதல் இரு வீட்டாருக்கும் தெரிய வந்ததும், திருமணம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து இவரும் வீட்டை விட்டு வெளியே திருமணம் செய்து கொண்டு, மதுரை அவனியாபுரம் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர். தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு இருவரும் மனு கொடுத்துள்ளனர்.

Leave a Reply to அருள் படையாண்டவர் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க