( இந்தக் கடிதம் பல்வேறு ஊடகங்களில் சுருக்கியும், சிலவற்றில் முழுமையாகவும் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. இந்தகத் கடிதத்தின் கையெழுத்து இளவரசனுடையதுதானா என்று உறுதி செய்வதற்கு தடயவியில் துறைக்கு அனுப்பியிருப்பதாக காவல் துறை கூறியிருக்கிறது.  – வினவு )

ன் அன்பு காதலி திவ்யாவுக்கு, நீ என்னுடன் இருந்த நாட்கள் என் வாழ்நாளில் மறக்க முடியாது. ஆனால் நீ என்னை விட்டு பிரிந்த நாட்களில் இருந்து என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. காரணம் எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும். ஜூலை 1-ம் தேதி வரை நான் நீ வருவாய், என்னுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வாய் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

ஒருவேளை நீ அன்று என்னுடன் வரவில்லை என்றால் கண்டிப்பாக நான் இந்த உலகத்தில் இருக்க மாட்டேன். நீ ஏற்கனவே உன் அப்பா இறந்ததற்கு காரணம் நீதான் என்று நினைத்து கஷ்டப்படுகிறாய். நீ அடிக்கடி என்னிடம் சொல்வாய். என் அப்பா உண்மையிலேயே என் மேல் பாசம் வைத்தவராய் இருந்தால் என்மேல் கொலைப் பழியை போட்டு விட்டு என் வாழ்க்கையை இப்படி செய்திருக்க மாட்டார் என்று சொல்வாய்.

திவ்யா - இளவரசன்
திவ்யா – இளவரசன்

அதே போல நீ என்னிடம் கேட்பாய் என்று எனக்குத் தெரியும். ஆனால், உண்மையாகவே என்னால் உன்னை விட்டு வாழ முடியவில்லை. ஏனெனில் அந்த அளவுக்கு நம்ம இரண்டு பேரும் இருந்தோம். எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும். திவ்யா, எனக்கு உன்னன ரொம்ப புடிக்கும்.

நான் உனக்கு என்ன துரோகம் செஞ்சேன், ஏன் என் கூட வாழ வர மாட்டேங்கறனு கண்டிப்பா எனக்குத் தெரியல.

நம்ம இரண்டு பேரும் எவ்வளவு கஷ்டத்திற்கு மேல ஒன்னு சேர்ந்தோம்னு உனக்கு நல்லா தெரியும்.

எனக்கு ரொம்ப ஆசை திவ்யா நம்ம இரண்டு பேரும் நல்லா வாழனும், நம்மள கேவலமா பார்த்தவங்க முன்னாடி பொறாமைப் படும் அளவுக்கு உன்ன அழகா, கண் கலங்காம வெச்சுக்கனும்னு எனக்கு ரொம்ப ஆசை.

உனக்கு ஒன்னு தெரியுதா நீ என்னோட எல்லா விஷயத்திலும் சேர்ந்திருந்து ஆனா இப்போ எதிலும் நீ என்கூட இல்ல. ரொம்ப கஷ்டமா இருக்குடா.

Please திவ்யா என்ன வெறுக்காத, எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்.

தயவு செய்து என்னை மன்னித்து விடு. நீ என்னிடம் கேட்கலாம், உண்மையாகவே நீ என்மேல் பாசம் வைத்தவனாக இருந்தால் ஏன் என்ன விட்டு போகனும்னு.

கண்டிப்பா சொல்றேன், நான் உன்னை விட்டு போகனும்னு நினைக்கல. எனக்கு உன்னோட சேர்ந்து வாழணும்னு ரொம்ப ஆசை, ஆனால் என்னால உன்னை பிரிந்து வாழ முடியல திவ்யா என்னை மன்னிச்சுடு, நான் இந்த உலகத்த விட்டு போறேன்.

இன்னொரு ஜென்மம் இருந்தா நீயும், நானும் ஒரே சாதியில பொறந்து பெத்தவங்க சம்மதத்தோடு கல்யாணம் பண்ணிக்கனும்னு எனக்கு ஆசையா இருக்குடா திவ்யா.

I LOVE YOU SO MUCH BABY
I LOVE YOU SO MUCH

எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும் திவ்யா

__________________

ன் பாசத்திற்கு உரிய அப்பாவிற்கு,

என்னை மன்னிச்சிடுங்க. அப்பா அம்மாவையும், பாலாஜி, அக்கா எல்லோரையும் பார்த்துகோங்க. தயவு செஞ்சி அம்மாவ கஷ்டப்படுத்தாதிங்கபா.
__________________

ன் நேசமிகு அம்மாவிற்கு, அம்மா என்னை மன்னிச்சிடு. எனக்கு உன்னை நல்ல வெச்சி பாக்கனும்னு ஆசை.

நீயும் அப்பாவும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீங்க என்ன வளர்த்து, படிக்க வைக்க, ஆனால் என்னால உங்களுக்கு எதுவுமே செய்ய முடியல. என்ன மன்னிச்சிருங்க.

அடுத்து ஜென்மத்துல நீயும், அப்பாவும் எனக்கு குழந்தையா பிறக்கணும். இந்த ஜென்மத்துல பட்ட கடனை நான் உங்களுக்கு அடுத்த ஜென்மம் தீர்க்கணும்.
__________________
ன்னோட Best friend என் அண்ணன் பாலாஜிக்கு, என்னை மன்னிச்சிறு பாலா. நீ எனக்கு எப்பவோ சொன்ன தப்பான முடிவு எடுக்காதன்னு. ஆனா என்னால முடியல பாலா. I am really sorry Bala.
__________________
ன்னோட இறப்புக்கு யாரும் காரணமில்லை. இது என் சுயமான முடிவாகும்.

என்னுடைய கடைசி ஆசை, நான் இறந்த பின்பு என்னை பார்க்க திவ்யா வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படி திவ்யா வந்தால் யாரும் அவளை திட்ட வேண்டாம். Please அவளை யாரும் கோவமாக பேச வேண்டாம். திவ்யா ரொம்ப நல்ல பொண்ணு, எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும். என்னால அவ கஷ்டப்படறது எனக்கு பிடிக்கல. அவளாவது வாழ்க்கையில் சந்தோஷமா இருக்கட்டும்.

I Love you so much da Baby Dhivya.
__________________

பின் குறிப்பு: இந்தக் கடிதம் ஒரு காதலனது ஏக்கத்திலிருந்து எழுதப்பட்டிருக்கிறது. எவ்வளவு கஷ்டத்திற்கு இடையில் நாம் ஒன்று சேர்ந்தோம் என்று இளவரசன் எழுதியிருப்பதன் பொருள் நாம் அறிந்ததே. பாமக சாதிவெறியர்கள் நத்தம் காலனியில் நடத்திய சூறையாடல் துவங்கி திவ்யாவின் தந்தை தற்கொலை வரை அதன் இழப்புகளும், துயரமும் அதிகம்.  அடுத்த ஜன்மத்தில் ஒரே சாதியில் பிறந்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்வோம் என்ற வரிகள் சாதிவெறியர்களின் முகத்தில் காறி உமிழ்கிறது. வேறு வேறு சாதியில் பிறந்தால் காதலிக்கவோ, திருமணம் செய்யவோ முடியாது என்பது சாதி வெறியர்களின் அட்டூழியத்திற்கு மக்கள் பயப்படுவதையே காட்டுகிறது. அதன் படி இந்த சம்பவத்திற்கு காரணமாக பாமக சாதிவெறியர்களை தண்டிப்பதன் மூலமே சாதிகளை மறுத்து வரும் காதல் திருமணங்கள் சாத்தியமாகும். ஆனால் அந்த சாதி வெறியர்கள் தண்டிக்கப்பட்டு தனது காதல் நிறைவேறாது என்று விரக்திக்கு ஆளானதாலேயே இளவரசன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இனி காதலிக்கும் இளவரசன்கள் தற்கொலை செய்யக்கூடாது என்றால் சாதிவெறியர்கள் இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இறுதியாக ஜீன்ஸ் பாண்ட், கூலிங்கிளாஸ், நாடகக் காதல், பணம் பறிப்பது என்று சாதித்திமிருடன் கொச்சைப்படுத்திய ராமதாஸின் அவதூறுகளுக்கு தனது உயிரை பதிலாய் தந்து விட்டு மரித்திருக்கிறார் இளவரசன். இது உண்மையான காதல் என்பதை இந்த காட்டுமிராண்டிகளுக்கு உணர்த்துவதற்கு அவர் தனது உயிரையே பறித்திருக்கிறார். மேலும் இத்தகைய சூழ்நிலையை உருவாக்கி திவ்யாவை பிரித்த பாமக சாதிவெறியர்களை கடிதத்தில் அவர் குறிப்பிடவில்லை.  ஒருவேளை அப்படி குறிப்பிட்டிருந்தால் திவ்யாவின் நிலை இன்னும் மோசமாகிவிடும் என்று கூட அவர் பயந்திருக்கலாம்.  அதனால்தான் தான் இறந்த பிறகு வரும் திவ்யாவை யாரும் திட்டதீர்கள் என்று வேண்டுகோள் வைக்கிறார். என்னால் அவள் கஷ்டப்பட்டது போதும் என்றும் இனிமேலாவது அவள் சந்தோஷமாக இருக்கட்டும் என்று கடிதத்தை முடித்துக் கொள்கிறார். நாம் பாமக சாதிவெறியர்களை தனிமைப்படுத்தி தண்டிப்பதற்கு தொடர்ந்து போராடுவோம்.

– வினவு
_____________________________