privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஆடிட்டர் ரமேஷ் கொலை : தயாராகும் இந்துமதவெறியர்கள் !

ஆடிட்டர் ரமேஷ் கொலை : தயாராகும் இந்துமதவெறியர்கள் !

-

மிழகத்தில் கடந்த ஓராண்டாக இந்து இயக்கங்களின் தலைவர்கள் மீது தொடர்ந்து நடந்து வரும் தாக்குதல்கள், படுகொலைகளைக் கண்டித்து பாஜக திங்கள் கிழமை பந்த் நடத்தியது. கோவை, குமரி மாவட்டங்களைத் தவிர பிற இடங்களில் பந்த் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் தமிழகத்தில் ஆங்காங்கே கடை அடைப்பு நடந்திருக்கிறது. திண்டுக்கல், நாகப்பட்டினம், ராமநாதபுரம், பூந்தமல்லி, சென்னை, நாகர்கோவில், கோவை போன்ற இடங்களில் மறியல் செய்ய முயன்ற அக்கட்சித் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த பந்த்தை ஆதரிப்பதாக பாமக நிறுவனத் தலைவர் ராமதாசு கூறியிருந்தார். வைகோ, கருணாநிதி, ஜெயலலிதா, சிபிஎம்மின் ஜி. ராமகிருஷ்ணன் என அனைவரும் இப்படுகொலைகளை கண்டித்துள்ளனர். இக்கொலையை விசாரிக்க தமிழக அரசு சிறப்பு புலனாய்வுப் படையை நியமித்திருக்கிறது.

ஆடிட்டர் ரமேஷ்
ஆடிட்டர் ரமேஷ்

கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாஜகவின் பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷை மூன்று பேர் சேர்ந்து கொலை செய்துள்ளனர். ஜூலை 1-ம் தேதி வேலூரில் இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் டாடா சுமோவில் வந்த 6 பேரால் பகல் நேரத்தில் கொலை செய்யப்பட்டார். ஏப்ரல் 21-ல் நாகர்கோவிலில் பாஜக மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி மீது நடைப்பயிற்சி மேற்கொள்கையில் தாக்குதல் தொடுக்கப்பட்டது. இப்படி கடந்த ஓராண்டு காலத்தில் இந்துமதவெறி இயக்கத்தை சேர்ந்த 6 பேர் கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறி இந்துத்துவ அமைப்புகள் ‘இந்துக்களிடம்’ இந்துமதவெறி அரசியலைத் தூண்டி வருகின்றன. தேர்தல் அரசியலில் தமிழக கூட்டணிகளில் இடம்பெற வழியில்லாமல் இருக்கும் பாஜகவிற்கு இத்தகைய தாக்குதல்கள் மூலம் மக்களிடையே மதவெறியை தூண்டிவிட்டு செல்வாக்கு அடையலாம் என்ற சதிக்கனவை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்த நேரத்தில், அத்வானி தமிழ்நாடு வந்த போது அவரை கொல்லத் திட்டமிட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சிலரது படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. ஆடிட்டர் ரமேஷ் கொலையில் இவர்களுக்கும் பங்கிருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிப்பதாக ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. இத்தகைய கொலைகளில் விசாரணை துவங்குவதற்கு முன்னரே இசுலாமிய தீவிரவாதம் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது ஊடகங்களுக்கும் காவல் துறைக்கும் வாடிக்கையாக ஆகியிருக்கிறது.

கடையடைப்பு நடத்துமாறு மிரட்ட மாட்டோம் என்றெல்லாம் சில பாஜக தலைவர்கள் சடங்கு அறிக்கை வெளியிட்டாலும் பல இடங்களில் கடையடைப்பு நடத்தும்படி கட்டாயப்படுத்தி வன்முறை சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுக்க சுமார் 6,000 பேர் கைதாகியிருக்கின்றனர். ராமதாஸ் கைதைத் தொடர்ந்து பாமக குண்டர்கள் நடத்திய அழிவு செயல்களுக்கு போட்டியாக 100 பேருந்துகள் உடைப்பு, கோவையில் மசூதி மீது பெட்ரோல் குண்டு வீச்சு என பாஜக தங்களது ‘ஜனநாயக’ கடமையை செய்து முடித்திருந்தது. இதன் மூலம் தங்களுக்கு நேசக் கரம் நீட்டியிருக்கும் ராமதாசுக்கு இணையாக பேரம் பேச தகுதி பெற்று விட்டார்கள் என்றும் வைத்துக் கொள்ளலாம்.

இல.கணேசன், கோபமடைந்துள்ள இந்து இளைஞர்களை கட்டுப்பாடாக வைத்திருப்பதால்தான் இப்படி பந்த் போன்ற அகிம்சை போராட்டங்களை நடத்துகிறோம் எனக் கூறி அரசை மறைமுகமாக மிரட்டுகிறார். இத்தகைய கருத்து சுதந்திரம் வேண்டும் என்பதற்காகத்தான் மாமல்லபுரத்தில் வீராவேசம் பேசிய மருத்துவர் ஐயா திருச்சி சிறைக்கு சென்றார். ஆனால், இல.கணேசனின் இந்த அறிக்கைக்கு ஜெயா பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்க கூடாது. பார்ப்பனியத்தின் பங்காளிகள் கூட்டணியில் இல்லை என்றாலும் கொள்கையில் ஒன்றுபடுபவர்கள். எனினும் தாங்கள் எதிர்பார்த்த மாதிரி ஜெயலலிதா செயல்படவில்லை என்று தீவிர இந்துமதவெறி தொண்டர்கள் கருதினாலும், தலைவர்கள் புரட்சித் தலைவிக்கு நன்றி மேல் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தேசத்துக்காக உழைத்தவர்கள் என்றும், தேச விரோத சக்திகள் இவர்களை கொன்று விட்டார்கள் என்றும் பிரச்சாரம் செய்கின்றன இந்துமத வெறி அமைப்புகள். இது பாகிஸ்தான் சதி, ஜிகாதி பயங்கரவாதம் என்று இசுலாமியர்களை குறிவைத்து பாஜக தலைவர்கள் அறிக்கை வெளியிடுகிறார்கள். ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் சுதேசி விழிப்புணர்வு இயக்கம் மூலமாக சுதேசி பொருட்களை பயன்படுத்தக் கோரி பிரச்சாரம் செய்வாராம். ஆர்.எஸ்.எஸ் பேசும் சுதேசி ஒரு ஏமாற்று என்பதை உலகறிந்த விசயம். மேலும் ஆடிட்டர் ரமேஷ் தணிக்கையாளர் வேலை பார்த்தவர் என்பதால் அதில் பன்னாட்டு கம்பெனிகளுக்கு கணக்குக் காட்டுவதில், வரி கட்டுவதில் திருட்டுத்தனம் பண்ண உதவினாரா என்றெல்லாம் கேட்க கூடாது. ஏனெனில் கோகோ கோலாவுக்காக ஆஜரான வழக்கறிஞர் அருண் ஜேட்லி என்பதை நினைவில் கொள்க.

ஆடிட்டர் இறந்தவுடன் சேலம் பாஜகவைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி என்ற பெண் மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் என்றும் முருகமணி என்பவர் மாரடைப்பால் இறந்து விட்டார் என்றும் சேர்த்து பிரச்சாரம் செய்கிறது பாஜக. இன்னும் அத்வானி வரப்போகிறார், மோடி அறிக்கை விட்டு அப்டேட்டுகிறார் என்றெல்லாம் உணர்ச்சியை சூடாக வைத்திருக்க பாஜக முயல்கிறது.

வேலூர் இந்து முன்னணியின் முழுநேர ஊழியர் வெள்ளையப்பன் தென் மாவட்டத்தை சேர்ந்த சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர். கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட வேலூர் மண்டலத்துக்கான பொறுப்பாளராக இருந்திருக்கிறார். வேலூர் ஜலகண்டேசுவரர் ஆலையத்தை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்தியதை எதிர்த்து இயக்கம் நடத்திக் கொண்டிருந்தாராம். மக்களோடு எளிதில் பழகும் தன்மை உடையவர் என்றும் அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரை இசுலாமிய தீவிரவாதிகள் கொலை செய்வதன் மூலம் மற்ற இந்துத் தலைவர்கள் முடக்கிப் போடலாம் என்று நினைக்கிறார்கள் என்றும் இந்துமத அமைப்புகள் பிரச்சாரம் செய்கின்றன. அவரது கனவை நனவாக்குவோம் என்கிறார் ராம.கோபாலன். அதாவது ஜலகண்டேசுவரரது உண்டியலை அரசிடமிருந்து பார்ப்பனர்கள் கைகளுக்கு மாற்றிட போராடுவோம் என்கிறார். வெள்ளையப்பனின் அந்த முயற்சியில் கோபமடைந்த யாரோ இந்த கொலையை செய்து விட்டார்கள் என்பதால் முசுலீம்கள் மீது பழியைப் போடுவதில் என்ன முகாந்திரம் இருக்கிறது? இதற்கிடையில் இந்தக் கொலையை செய்தது தென்மாவட்டங்களைச் சேர்ந்த கூலிப்படையினராக இருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகின்றனர். கூலிப்படை என்றாலே அது சாட்சாத் ‘இந்து’ தளபதிகளின் தலைமையில்தான் நடக்கும் என்பது தினசரிகளின் குற்றச் செய்திகளை படிப்போருக்கு புரியும்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வேலூரில் பாஜகவின் மாநில மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் அரவிந்த ரெட்டி கொலைசெய்யப்பட்ட போது இதே போன்று ஆரவாரம் செய்து கடையடைப்பு நடத்தியது வேலூர் பாஜக. ஆனால் அந்தக் கொலை தொடர்பாக திட்டம் தீட்டியது வேலூர் மத்திய சிறையில் உள்ள பிரபல ரவுடி வசூர் ராஜா என்பதோடு கைது செய்யப்பட்ட அனைவருமே இந்துக்கள்தான். கொலைக்கான காரணம் பெண் விவகாரம் எனவும் விவரங்கள் வெளியாகியிருக்கின்றன. இப்போது அந்தக் கொலையையும் சேர்த்து பந்த் நடத்தி பஸ் உடைக்கும் இந்து மத வெறியர்கள் மக்களை அவ்வளவு தூரம் முட்டாள்களாக நினைத்திருக்கிறார்கள். வேலூர் ரெட்டி கொலை விசாரணையை காவல்துறை திசைமாறி விசாரிக்கிறது என்றும் அபாண்டம் பேசுகிறார்கள் இந்துமதவெறியர்கள். எனில் உண்மையான குற்றாவாளிகள் யார் என்று இவர்கள் அடையாளம் காட்டலாமே?

நாகப்பட்டினத்தை சேர்ந்த புகழேந்தி, பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர். கடந்த ஆண்டு ஜூலை 5 அன்று காலை நடைப்பயிற்சியின் போது ஆட்டோவில் வந்த 4 பேரால் வெட்டிக் கொல்லப்பட்டார். அப்போது இதைக் கண்டித்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் இவர் அங்குள்ள பிரபல தேவாலயமொன்று அரசு புறம்போக்கை ஆக்கிரமிக்க முயன்ற போது எதிர்த்துப் போராடியதால் தான் இக்கொலை நடந்ததாக கூறினார். ஆனால் அதற்கு சில தினங்களுக்கு முன்னர்தான் ஆசிரியர் ஒருவரது வீட்டை அபகரித்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்திருந்தார் புகழேந்தி. கட்டப்பஞ்சாயத்து மற்று அடாவடி வேலைகளில் ஈடுபட்டு வந்த அவரை கொன்றதாக கைதானவர் முனீசுவரன் என்பவர், ஒரு இந்து.

அடுத்து கடந்த மார்ச் மாதம் பரமக்குடியில் கொல்லப்பட்ட முன்னாள் பாஜக கவுன்சிலர் முருகன் என்பவரை கொன்ற ராஜபாண்டி மற்றும் முருகன் ஆகியோர் காரணமாக சொன்னது 6 ஏக்கர் நிலம் தொடர்பான தகராறுதான்.

கணக்கு எழுதுவது, ரியல் எஸ்டேட் என்று மட்டுமின்றி கந்து வட்டி தொழிலிலும் இந்துத்துவ அரசியல் தலைவர்கள் கொடிகட்டிப் பறக்கிறார்கள். கடந்த ஆண்டு ஏப்ரலில் சென்னை கோயம்பேட்டில் கொலை செய்யப்பட்ட விட்டல் என்ற பாஜகவின் 127-வது வட்டச் செயலாளர் கந்துவட்டிக்கு கடன் கொடுப்பவர். சுந்தரபாண்டியன் என்பவரிடம் கொடுத்த ரூ 2 லட்சம் கடன் திரும்பி வராத காரணத்தால் அவரது வீட்டுக்கு போய் அந்த வீட்டுப் பெண்களை ஆபாசமாக பேசியுள்ளார். அதனால் கோபமடைந்த சுந்தரபாண்டியன், அவரது அண்ணன் முருகன் மற்றும் நண்பர் கங்காதரன் ஆகியோர் சேர்ந்து விட்டலை வெட்டி கொலை செய்திருக்கின்றனர். பெண்களை தாயாகவும், நதியாகவும், பாரதமே தாயாகவும் பேசும் பாஜக ஆதரவாளர்கள் விட்டல் திட்டியது இந்து குடும்ப பெண்களை என்பதை கவனிக்க தவறக் கூடாது.

ரியல் எஸ்டேட், கட்டப் பஞ்சாயத்து என்று உருமாறியிருக்கும் ஓட்டுக் கட்சி பிரமுகர்களுக்கிடையேயான தொழில் போட்டியில் எந்த ஒரு கட்சியிலும் ஒரு ஆண்டில் ஒரு சில நபர்கள் கொல்லப்படுவது சாதாரணமாகிப் போயிருக்கிறது. திமுகவில் தா.கிருஷ்ணன் நடைப்பயிற்சியின் போது மதுரையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார், பொட்டு சுரேஷை கொன்றார்கள். திருச்சி ராமஜெயத்தை கொன்றவர்களை ஓராண்டு முடிந்த பின்னும் இன்னும் பிடிக்க முடியவில்லை. இதற்காக திமுக திராவிட இனத்தை தட்டி எழுப்பி பந்த் நடத்தியதாக தெரியவில்லை.

இது போன்று தங்களது கட்சியில் சிலர் கொல்லப்பட்டதை ஏதோ தேசத்திற்காக தியாகம் செய்தது போல பிரச்சாரம் செய்து மதவெறியை தூண்டுகின்றனர் இந்துமத வெறியர்கள். இறந்தவர்கள் சொந்தப் பகை காரணமாக கொல்லப்பட்டனரா அல்லது தொழில் காரணமாக கொலை நடந்ததா, உண்மையிலேயே கட்சி வேலை காரணமாக கொல்லப்பட்டனரா அல்லது ஏதாவது பாலியல் விவகாரமா என்ற விசாரணைகளை துவங்குவதற்கு முன்னர் இசுலாமியர்களை நோக்கி அவர்களது கைகள் திட்டமிட்டு நீளுகின்றன.

1998-ல் அவர்கள் திட்டமிட்டு நடத்திய கோவை கலவரம்தான் அவர்களுக்கு தமிழ்நாட்டிலும் சில நாடாளுமன்ற சீட்டுகளை வாங்கித் தந்தது. கோவை, நாகர்கோவில் , நீலகிரி பகுதிகளைத் தொடர்ந்து இப்போது வட மாவட்டங்களில் குறிப்பாக தோல் தொழிலில் பணக்கார முசுலீம்கள் கொடிகட்டிப் பறக்கும் வேலூர் பகுதியில் மதவெறிப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சமீபத்தில் ஓராண்டாக நடந்த தாக்குதல்கள், படுகொலைகள் என அனைத்துமே வேலூர், குன்னூர், திருப்பூர், ராமநாதபுரம், நாகர்கோவில், நாகப்பட்டினம் என குறிப்பிட்ட இடங்களாகவே இருப்பதால் இந்துமத வெறியர்கள் இங்கெல்லாம் அனல் பறக்கும் மதவெறியைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள். இசுலாமியர்களோடு சகோதரத்துவ உணர்வில் பழகும் ‘இந்துக்கள்’ எல்லாம் பாஜகவின் வருகைக்குப்பின்னர் மதவெறி பிரச்சாரத்திற்கு எளிதில் இரையாகின்றனர்.

பேருந்து
சென்னையில் கல்வீச்சில் சேதமடைந்த மாநகரப் பேருந்து (படம் : இந்தியன் எக்ஸ்பிரஸ்)

சிபிஎம், கருணாநிதி உள்ளிட்ட யாருமே இந்தக் கொலையில் ஒட்டுமொத்த முசுலீம்களை நோக்கி வைக்கப்படும் இந்துமதவெறியர்களின் சதியை கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக மற்றும் இந்து முன்னணி போன்ற அமைப்புகள் இசுலாமிய தீவிரவாதிகளை மட்டுமல்ல மனிதநேய மக்கள் கட்சி போன்ற தேர்தல் அரசியலை ஏற்றுக் கொண்டவர்களையே தீவிரவாதிகளாக சித்தரித்துதான் அறிக்கை வெளியிட்ட வண்ணம் உள்ளன. இசுலாமியர்களுக்கெதிரான பொதுப்புத்தியை கிளறிவிட்டு அதில் குளிர்காய இந்த அமைப்புகள் தயாராகி வருகின்றனர்.

தமிழகத்தில் மத அடிப்படைவாத சக்திகளுக்கோ, இடதுசாரி தீவிரவாதத்திற்கோ இடமில்லை எனக் கூறியுள்ள ஜெயலலிதா ஆடிட்டர் ரமேஷ் கொலை தொடர்பாக சிறப்பு புலனாய்வுப் பிரிவு விசாரிக்கும் என அறிவித்துள்ளார். அதற்கு நன்றி தெரிவித்துள்ள வெங்கையா நாயுடு இந்து அமைப்புகளை அச்சுறுத்தவே இந்தப் படுகொலைகள் நடப்பதாக கூறியுள்ளார். இப்படித்தான் கோத்ரா விபத்தை காரணமாக்கி குஜராத்தில் முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது. தமிழகத்திலும் அத்தகைய முயற்சிக்கு இவர்கள் தயாராகிவருகிறார்கள்.

வேலூரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் ‘’துலுக்க நாய்களே! நீங்கள் இரண்டாம் தர குடிமக்கள் என்பதை மறந்து விடாதீர்கள். 2002 குஜராத் மறந்து விட்டதா’ என்றெல்லாம் இந்து முன்னணி போஸ்டர் ஒட்டியுள்ளது. இளவரசனது இறுதி ஊர்வலத்துக்கு தடை, போஸ்டர் ஒட்டினால் போலீசே வந்து கிழிப்பது எல்லாம் நடக்கும். ஆனால் மேற்படி ஜனநாயகபூர்வமான போஸ்டர்களுக்கு போலீசு மரியாதை. பாசிச இந்துமத வெறியர்கள் ஜெயாவின் உதவியுடன் அடுத்த கலவரத்திற்கு தயாராகி வருகின்றனர்.

வரும் நாடாளுமன்ற தேர்தல் பேரங்களுக்காகவும் அரங்கேற்றப்படும் இந்துமதவெறியர்களின் சதித் திட்டங்களில் பாதிக்கப்படுவது அனைத்து மதங்களையும் சேர்ந்த சாதாரண உழைக்கும் மக்கள்தான். இசுலாமிய மக்களை தனிமைப்படுத்தும் முயற்சிக்கு தோதாக விசுவரூபம் பிரச்சினை, ரிசானா நபீக் விவகாரம், அமெரிக்க துணைத் தூதரக முற்றுகை போன்றவற்றில் அடிப்படைவாத இசுலாமிய அமைப்புகளை ஆட விட்டு, மக்கள் மனநிலையில் முசுலீம்கள் மீதான வெறுப்பை தோற்றுவிக்க முயற்சித்தவரும் இதே ஜெயலலிதாதான். இப்போது அவர் முசுலீம்களுக்கு எதிராக இந்துத்துவ வெறியர்கள் நடத்தவிருக்கும் கலவரங்களை எதிர்பார்த்து இருக்கிறார்.

அனைத்து மதங்களையும் சேர்ந்த உழைக்கும் மக்கள் இத்தகைய மதவெறி பிரச்சாரங்களை அடையாளம் கண்டு நிராகரித்து ஒருங்கிணைய வேண்டும். தமிழகத்தில் இந்துமதவெறியருக்கு இடமில்லை என்பதை நிலைநாட்ட வேண்டும்.

– வசந்தன்.

  1. சரி குற்றவாள்கள் கண்டுப்டிக்கப்படும் வரை…யாரையும் குற்றம் சோல்லக்கூடாதுதான்…ஆனால் இதுவரை எத்தனையோ இந்து முண்ணனி தலைவர்களும் இந்து அமிப்புகளின் தலைவர்களும் கொல்லப்பட்ட்னரே…அதற்கு சில தீவிரவாதிகளுக்கு தண்ட்லையும் வழங்கப்பட்டுள்ளது…

    திண்டுக்கல் இந்து முண்ணணி ராஜகோபாலன் கொலை வழக்கு இதற்க்குநல்ல எடுத்துக்காட்டு…

    http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/6-get-life-term-for-murder-of-hindu-munnani-activist/article2437992.ece

    • Paiya.. ஏன் அத்தனை வருடங்களுக்கு முன் (1994ல்) நடந்த கொலைக்கு சென்றீர்கள்…? சமீபத்தில் நடந்த கொலைகளையே எடுதாக்கட்டாக கூறலாம் வாருங்கள்.

      //பாரதிய ஜனதா, இந்து முன்னணியின் தேர்தலை ஒட்டிய விஷமப் பிரச்சாரமும், ஆனால் அதிர்ச்சி தரும் உண்மை நிலையும் ஆதரங்களுடன்..!

      பாரதிய ஜனதா, இந்து முன்னணி போன்ற இந்துத்துவா சக்திகள் ஆடிட்டர் ரமேஷ் கொலையை இந்து முஸ்லிம் பிரச்சனையாக்கி மக்களிடையே விஷமப் பிரச்சாரத்தையும், மதக்கலவரத்தை ஏற்படுத்துவும், மக்களிடையே பீதியை உருவாக்கி வருகிற மக்களைவை தேர்தலில் சில சீட்கலாவது பெற திட்டமிடுகிறார்கள்.

      இவர்கள் கூறுவதில் உண்மை உள்ளதா…? இங்குள்ள நோட்டிசைப் போல இன்னும் பல இடங்களிலும் இவர்கள் பரப்பும் இந்த கூற்று உண்மையா..?

      அதிர்ச்சி தரும் உண்மைகள் செய்தி ஊடகங்களின் ஆதாரத்துடன்..

      முஸ்லிம் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர் என்று வேடம் போட்டு பந்த் நடத்தும் ப.ஜ.க. வின் வேஷம் கலைக்கும் ஆதாரங்கள். தேவையான இடங்களில் பகிருங்கள் இந்தியர்களே, தமிழர்களே..!.

      1. 4-7-2012 இல் நாகையில் பா.ஜ.க. மாநிலச் செயற்குழு உறுப்பினர் புகழேந்தி என்பவரை கொன்ற வழக்கில் தேடப்பட்ட “முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த முனீஸ்வரன் சரண்”.

      http://www.dinakaran.com/News_Detail.asp?nid=18393

      2. 23-10-2012 இல் வேலூரில் பா.ஜ.க. மருத்துவ அணியின் மாநிலச் செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி என்பவரின் கொலையில் கைதானவர்களின் விவரம். கைதான ஆறு பேரும் இந்துக்கள்.

      http://www.dinakaran.com/News_detail.asp?Nid=31815

      3. 19-3-2013 அன்று பரமக்குடி நகராட்சி பா.ஜ.க. முன்னாள் கவுன்சிலர் முருகன் கொலை வழக்கில் கைதானவர்கள் விவரம். இதில் ஒரு இந்துவும், மூன்று முஸ்லிம்களும் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் காரணம் இந்து முஸ்லிம் பிரச்னை அல்ல. சொத்து தகராறு.

      http://www.thinaboomi.com/2013/04/06/20905.html

      4. 8-7-2013 அன்று ராமேஸ்வரத்தில் ஒன்றிய இந்து முன்னணி செயலாளர் குட்டநம்பு என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் மாந்தோப்பு ராமச்சந்திரன், முருங்கவாடி சண்முகநாதன் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர்.

      http://www.dailythanthi.com/node/361658

      5. 1-7-2013 அன்று வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் என்பவர் கொலையுண்ட வழக்கில் போலீசார் இன்னும் விசாரணை செய்து வருகின்றனர்.

      ஆக, மேலே சொல்லப் பட்ட வழக்குகளில் ஒருவர் கூட இந்து முஸ்லிம் மதப் பிரச்சனையால் கொலை செய்யப்படவில்லை என்பது மிகத் தெளிவு.

      இவ்வளவு தெளிவான ஆதாரங்கள் இருந்தும், உண்மைகள் இருந்தும், அயோக்கியத்தனமாக மக்களை பிரித்தாளும் கொள்கையை விதைத்து தமிழகத்தில் எப்படியாவது 1998ன் சூழலை திரும்ப கொண்டு வந்து பிஜேபிக்கு சில சீட்களாவது வாங்க இவர்கள் நடத்தும் வெறியாட்டத்தை நல்லவர்களே, நியாயவான்களே கண்டு கொள்ளுங்கள். இவர்களை அடையாளம் காணுங்கள்.
      மக்களை சாதி, மதத்தால் பிரித்து கலவரத்தை தூண்ட நினைக்கும் இத்தகைய மனிதகுல விரோதிகளை இனம் கண்டு தனிமைப் படுத்துங்கள்.
      //

  2. Abdul Munaf என்பவர் மின்னஞ்சலில் அனுப்பிய செய்தி

    காரைக்காலில் முஸ்லிம் அமைப்பினர் கடை மீது தாக்குதல் நடத்திய பாஜக மாநில தலைவர் அருள்முருகனை கைது செய்யக் கோரியும், கடைமிது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் முஸ்லிம் களை தரக்குறைவாக பேசிய
    காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 300 க்கும் மேற்பட்ட முஸ்லிம் ஜமாத்தார்கள் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். இதனால் காரைக்காலில் பரபரப்பு காணப்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் சேலத்தில் பாஜக மாநில செயலர் வெட்டி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் தமிழகத்தில் அண்மை காலமாக தொடர்ந்து இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து உடனடி நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தியும் பாஜக சார்பில் இன்று மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    புதுச்சேரி மாநிலத்திலும் பாஜக சார்பில் பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் காரைக்காலில் பெரும்பாலான கடைகள் அடைக்கப் பட்டிருந்தன.அரசு மற்றும் தனியார் பேருந்துகள்,ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கின. காரைக்கால் மாதா கோவில் வீதியில் திறக்கப் பட்டு இருந்த முஸ்லிம் அமைப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவரின் கடையை மூடுமாறு பாஜகவை சேர்ந்தவர்கள் கூறினார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் கடையின் முன் பக்க கண்ணாடி சேதப் படுத்த பட்டது..இதில் கடையில் வியாபாரம் செய்த ஒருவர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் கடையின் கண்ணாடியை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடை உரிமையாளர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர் அப்போது காவல்துறையினருக்கும் முஸ்லிம் அமைப்பினர்ருக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையின் போது காவல்துறை அத்துமீறி முஸ்லிம் அமைப்பினர்ரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதனை அடுத்து முஸ்லிம் அமைப்பினர் பேரணியாக சென்று காவல்துறை மீதும், கடையை தாக்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் பொருப்பில் உள்ள முத்தம்மாவிடம் மனு அளித்தனர். மனுவை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கபடும் என உறுதி அளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    • ஆண்டவனே … இந்தியாவில் இந்து தீவிர வாதம் கொறயணும்.. முசுலிம் ஆட்சி மலரணும்.. அப்ப இருக்கிடி வினவு உனக்கு… ஒருத்தன விடாம……..அவ்வளவுதான்.. அப்ப உம்மால ப்ளாக் இல்லை.. ப்ளாக்போர்ட்லகூட எழுத முடியாது..

  3. என்ன இந்து மதவெறியர்கள்….இது அநாகரீகமான பேச்சாகத்த்ரியவில்லையா…

    வினவில் ஒருநாளாவது முஸ்லீம் மதவெறியர்கள் அல்லது கிரித்துவ மதவெறியர்கள் என கட்டுரை வ்ந்ததுண்டா???

    சொல்லப்போனால் இந்துவிற்க்கு மதவெறியே கிடையாது..இந்தப்போராட்டங்கள் இன்றே அடங்கிவிட்டன..

    • பாபர் மசூதி குஜராத் படுகொலை இதுவெல்லாம் என்னவென்று சொல்வது

      • இருக்கிற இடமெல்லாம் வெடி வைக்குறீங்களே அதை என்ன சொல்லுவது?

        • HHaa GOOD JOKE Still you are in dream and false propaganda. FOR all bombing arr carried out By RSS members and as turtu has come out Even the main RSS man SUNIL Joshi was killed by Rss itself. Dont make reel here

          • 1984-ல் மதுரையில் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளான ராம.கோபாலன் முதற்கொண்டு இப்போது சேலத்தில் கொல்லப்பட்டுள்ள ஆடிட்டர் ரமேஷ் வரை, கொலைகாரர்களின் பிரதானக் குறிக்கோள் இந்து இயக்கங்களின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துவதே.

            அடுத்து, இந்து இயக்கங்கள் மக்களிடையே பெற்றுவரும் ஆதரவு, தேசவிரோதிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. மக்களிடையே பீதியை உருவாக்குவதன் மூலமாக இந்து இயக்கங்களின் ஆதரவுத் தளத்தை அழிப்பதும் அவர்களது நோக்கம்.

            • Paiya முஸ்லிம்கள் செய்யாத குற்றங்களுக்கே கைது செய்யப்படுகிறார்கள் .செய்யாத குற்றங்களுக்கு தண்டிக்கப் பட்டுள்ளார்கள் அவ்வாறிருக்க அரவிந்த் எரெட்டி இன்னும் சிலர் படு கொலை சம்பநதமாக டிஜிபியின் அறிக்கையை பார்த்த பிறகு மனம் போன போக்கில் பேசிக் கொள்ளுங்கள் மேலும் தங்களை பிரபல படுத்த கொலை மிரட்டல் கடிதங்கள் வேறு .இந்த கடிதங்கள் பாஜகவின் தயாரிப்பே .தமிழகத்தில் அனாமதேய கட்சியான பாஜக .கட்சி தலைவர்களை கொன்று அக்கட்சியை மக்கள் மத்தியில் அனுதாப ஆதரவை உருவாகக் முஸ்லிம்கள் பைத்தியக்காரர்கள் அல்ல .கட்சியை வளர்க்க வேறு நல்ல காரியங்கள் உள்ளன .சமிபத்திய செய்தி நாகை பா.ஜ.க பிரமுகர் புகழேந்தி கொலை வழக்கில், சேலம் நீதிமன்றத்தில் ஒருவர் சரணடைந்துள்ளார். புகழேந்தி கடந்த 4ம் தேதி நாகையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த, முனீஸ்வரன் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். சரணடைந்த முனீஸ்வரனை 15 நாள் சிறையில் அடைக்குமாறு, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மேகலா உத்தரவிட்டுள்ளார். – செய்தி

    • முஸ்லிம் பெண்கள் கருவில் உங்கள் விந்துவை செலுத்தி ஹிந்து கருவை வளர செய்யுங்கள் என்று காவி தலைவர்கள் மேடைகளில் பேசுவது மிகவும் இழிவான மதவெறி அல்லவா ? பஜக ஆட்சிக்கு வந்தால் அதே இடத்தில் ராமருக்கு கோவில் கட்டுவோம் என்று கூறுவது மதவெறி அல்லலலவா ? ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் வாக்குறிமையை பறிப்போதும் என்று தொக்காடியா பேசுவது மத வெறியலலவா ? வீடு வாடகைக்கு கொடுக்காதே முஸ்லிம்களுக்கு என்று கூறுவது மதவெறியல்லவா ?

    • மதம் பிடித்தவர்கள் என்று காவி தினமணி தலையங்கம் எழுதியதே அது மதவெறி செயல் அல்லவா?

      குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம்களை தலைமை தாங்கி நடத்திய கொலைக்காரர் அவர்களை காரில் அடிப்பட்ட நாய் குட்டி என்று கூறியது மதவெறி அல்லவா ?

    • @ Paiya

      பையா சொல்வதை கண்ணபின்னா என வரவேற்கிறேன்…

      உண்மையில் மதவெறி என்பது… எல்லா மதத்துக்கும் பொதுவானது.

      இதில் ஈடுபடுவது அடிப்படை வாதிகள் தாம். பொது மக்களில் பெரும்பான்மையோருக்கும், அதே மததை சேர்ந்தவர்கும் இது இடைஞ்சலே…

    • பையா, இந்தியன் போன்றவர்களுக்கு இஸ்லாமிய மதவெறியைக் கண்டித்து எத்தனை கட்டுரைகள் வந்தாலும் ” வினவில் ஒருநாளாவது முஸ்லீம் மதவெறியர்கள் அல்லது கிரித்துவ மதவெறியர்கள் என கட்டுரை வந்ததுண்டா??? ” இப்படி தான் கூறுவார்கள்.

      விஸ்வரூபம் : ஜெயாவின் கையாட்களா முஸ்லிம் அமைப்புக்கள் ?
      https://www.vinavu.com/2013/01/30/viswaroopam-jaya-islamic-fundamentalism/
      என்ற கட்டுரையில் ” யோவ் என்னயா முஸ்லீம் தீவிரவாதி அது இதுன்னு திடீர்னு எழுதிப்புட்ட… ” https://www.vinavu.com/2013/01/30/viswaroopam-jaya-islamic-fundamentalism/#comment-77848 என்று பின்னூட்டமிட்டுள்ளார் பையா.

      இஸ்லாமிய மதவெறி பற்றிய கட்டுரையில் ” யோவ் என்னயா முஸ்லீம் தீவிரவாதி அது இதுன்னு திடீர்னு எழுதிப்புட்ட…” என்று பின்னூட்டமிட்டவர் திரும்பவும் ” வினவில் ஒருநாளாவது முஸ்லீம் மதவெறியர்கள் அல்லது கிரித்துவ மதவெறியர்கள் என கட்டுரை வ்ந்ததுண்டா??? ” என்று கேட்கிறார் என்றார் என்றால் பையா எவ்வளவு நேர்மையாக இருக்கிறார் என்று பாருங்கள்…. இதுதான் இந்துமதவெறி..

      // சொல்லப்போனால் இந்துவிற்க்கு மதவெறியே கிடையாது..இந்தப்போராட்டங்கள் இன்றே அடங்கிவிட்டன..//

      அனைத்து இந்துக்களும் மதவெறியர்களும் அல்ல. அப்பாவி உழைக்கும் மக்கள் இந்துமதவெறிக்கு இறையாகிறார்கள் என்று தான் கூறுகிறோம். ஆனால் அந்த அப்பாவி இந்துக்களின் பட்டியலில் பையா வருகிறாரா என்று தெரியவில்லை.

  4. யாருக்கெல்லாம் இதயம் இல்லையோ
    யாருக்கெல்லாம் மூளை இல்லையோ
    அவனே இந்துவாக இருக்க முடியும்
    என்று அம்பேத்கரும் பெரியாரும்
    அறைந்து கூறினர்.

    உனது பிறப்பையே
    வேசிமகன் என்று
    இழிவுபடுத்தும்… இந்த மதம்
    இந்த இந்துமதம்
    உன் சொந்த மதமா?
    என பெரியாரும் அம்பேத்கரும்
    சுரனை கொடுத்த இந்த மண்ணை
    பார்ப்பன மலவண்டுகள்
    அரிக்கப் பார்க்குது
    போராடும் தலைமுறையே
    எச்சரிக்கை!

    • சரி ஒரு பேச்சுக்கு வச்சுக்குவோம் சம்பு சார்…உங்களை யாரவது அவ்வாறு அழைத்தால் நீங்கள் அதுவாகவே ஆகிவிடுவீர்களா என்ன?

      • அதுவாக ஆகிவிடாவிட்டால் அந்த வர்னாசிரம கொள்கை சரியா ?

        • வர்னாசிரம கொள்கை தவறுதான் அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்…

          னிங்கள் இருக்கின்ற இடத்தில் விசுவாசமாக் இருங்கள்…

          • இருக்கிற இடம் ஒரு புறம் இருக்கட்டும் பையா.. இந்து மதம் எல்லாரும் முதலில் இருத இடம் தானே..

            இருந்த இடம் விட்டு போக வேண்டி வந்தது வருணாசிரமம் , தீண்டாமை, அடக்குமுறைதானே காரனம்…

            இதை அனுபவித்தவர்கள் ஏன் இதை பற்றி சொல்ல கூடாது…

            • இந்து என்ற சொல் ஒரு பூளோக சுட்டி. சிந்து நதிக்கு அப்பால் இருந்தவர் என்ற அர்த்தத்தில். அவ்வளவே. பின்னர் பிரிடிஷ்காரன் காலத்தில் அதை அரசியல் சமய குறியீடாக மாற்றிவிட்டனர். இதில் பிரிடிஷ்கரனுக்கும் பங்கு உண்டு. ஏனென்றால் பிரித்து ஆள்வதற்கு தெளிவான பிரிவினை தேவை.
              இந்து சமயம் என்று சொல்வதிலேய ஒரு சில குழுவினர் [வீர சைவர்களை போல்] நாங்கள் இந்து இல்லை என்று கூறுகிறார்கள். இதைபோல் ஆறு சமய குழுக்களும் இன்ன பிற வழிபாட்டு/சடங்கு முறை குழுக்களும் தங்களை இந்து இல்லை என்று கூறிக்கொள்ள ஆசைதான். ஏனென்றால் இவர்கள் சாதியாகவும் திரள முடியும். ஆனால் பெரிதாக ஒன்றும் பயன் இல்லை என்பதால் வாளாவிருந்து விட்டனர்.
              ஒரு கடவுள் வழிபாடு, ஓர்மை தத்துவம் என்று நகர முயன்ற இந்திய சமயங்கள் இறக்குமதி சமயங்களின் தாக்குதலை சமாளிக்க திரும்பவும் பலகடவுள் வழிபாடு, பிற கடவுள் வழிபாடு, பிற சமயம் பொறுத்தல் என்று தங்களை தகவமைத்து கொண்டு வாழ்கின்றனர்.
              எனவே இந்துவாக இருந்து மற்ற சமயம் மாறினார்கள் என்று கூறுவது பொருந்தாது. இல்லாத ஒன்றில் இருந்து எப்படி மாறுவது?
              சமணம்,பௌத்தம் வைதீக சமயங்களுக்கு முந்தியவை. அவற்றின் அழிவில் இருந்தே வைதிக சமயங்கள் நிருவனமாயின.அதிகார போட்டியில், இயற்கை வளங்களை கவர்வதில் உண்டான போட்டியில் சாதிகள் இறுகி அதிகாரம் மையப்படும் போக்கு உருவானது. வெளியில் இருந்து வரும் படையெடுப்புகளின் கொடூரம் அஞ்சி, மக்கள் இந்த சாதிக்கொடுமைகளை சகித்துக்கொண்டு வாழ்ந்தனர்.
              வெளி பகை இல்லா தருணம் இந்த சாதி அடக்குமுறைகளை உடைக்க சித்தர் மரபும், ராமானுஜரும் முயன்று பார்த்தார்கள். மீண்டும் சாதி இறுகியதே ஒழிய தளரவில்லை. பிரிடிஷ்காரன் காலத்தில் ஒரு பாதுகாப்பு உணர்வு மக்களிடையே வந்தபின்புதான் சாதி தளர ஆரம்பித்தது. அதையும் திராவிட அறிவுகொழுந்துகள் கெடுத்து குட்டிசுவராக்கி இன்று இந்து அல்லாதவர்கள்,பஞ்சமர்கள்[தலித்துகள் நிலை இரண்டும் கெட்டான் நிலை]ஒரு புறமும் சாதி இந்துக்கள் மறுபுறமும் நின்று தாண்டவமாடும் நிலைமைக்கு கொண்டுவந்து விட்டனர். இதில் RSS, BJP மீது பலி சொல்வது அயோக்கியத்தனம். பகுத்தறிவு, குரங்கு கை கத்தியாக போனதால் சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த இந்த திராவிட ஆண்டிகள் குப்புற விழுந்தாலும் அடுத்தவன் மீசையைத்தான் பார்ப்பார்கள்.
              மதமாற்றம் என்ற நிகழ்வு பற்றி வெளியில் பேசாமல் இருப்பதே நல்லது என்று நினைக்கிறேன்.

              • இந்துமதவெறியர்களைப் பற்றியும் மோடியை பற்றியும் பேசினால் அயோக்கியத்தனம் என்று பரலோகபாண்டியன் கூறிவிட்டதால் இனிமேல் யாரும் அதைப் பற்றி பேசாதீர்கள்.

                சரி பரலோகப்பாண்டியன் மேலே சொல்லியிருக்கீங்களே அதை எல்லாம் எதற்காக சொல்றீங்க, அதெல்லாம் சமீபத்தில் நீங்க படிச்சதா ?

          • paiya
            ஒரு அடிப்படை அளவு கோலை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்
            முதலாவதாக
            80 சதவிகிதம் இந்தியாவில் அனைத்து மதத்தவரும் கலந்து நட்புடன் தான் வாழ்கின்றனர்
            பிரிவினையை உருவாக்கி அதில் குளிர் காய நினைப்பது குறிப்பாக தமிழகத்தில் சமீப காலமாக காவி சிந்தனை படைத்த தீவிரவாதிகள் தான்

            ஹிந்துக்கள் தான் இந்நாட்டில் பெரும்பான்மை மக்கள்
            பெரும்பான்மை மக்களை சிறுபான்மை மக்கள் பயமுறுத்தமுடியாது என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை

            சமீபத்தில் தமிழகத்தில் நடந்த கொலைகளில் சம்மந்தப்பட்டவர்கள் யார் என்பதை நன்பர் ibn mohideen சரியாக பட்டியலிட்டுள்ளதை பாருங்கள்.

            மோடி சமீபத்தில் முஸ்லிம்களை நாய்களுக்கு ஒப்பிடடு பேசியுள்ளது எந்த வகையை சார்ந்தது. ஒரு பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவரே இப்படி ஒரு வன்முறை பேசினால் என்ன வென்று சொல்வது

          • வந்தேறிகள் ஆரிய பார்ப்பனர்கள் .

            இந்த நாட்டை குட்டிச்சுவராக்கியவர்கள். அவர்கள் வெளியேறவேண்டியவர்கள்.

    • அப்படியெல்லாம் எவனும் உன் பிறப்பை இழிவு செய்ய இயலாது. பெரியார் சொன்னார் சிறியார் சொன்னார் என்றெல்லாம் கை காட்டாமல் கொஞ்சம் சொந்த மூளையையும் பயன்படுத்தவும். உம்மால் முடியக்கூடிய சிறிய விஷயம்தான்.

      • பெரியார் தமிழைக் கூட காட்டுமிராண்டி பாஷை என்றார் அதுக்காக அப்படியே ஆகிவிடுமா என்ன.?

        • சாதி ரீதியாக மக்களை பிரித்து வைக்கும் இந்து மதத்தை தூக்கி பிடிக்கும் நீங்க தமிழ பத்தி கவலை படுரீங்க

  5. நீங்கள் இப்படி என்னதான் உண்மையை தெள்ளத்தெளிவாக விளக்கினாலும் ஒரு இலக்கு நோக்கியே இந்த சக்திகளின் பார்வையும் கொந்தளிப்பும் இருக்கும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது பற்றியோ பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது பற்றியோ அக்கறை கொள்ளுமளவுக்கு இவர்களிடம் தெளிவு கிடையாது. அவர்களை பொறுத்த வரை, அவர்கள் அறிந்த அரிச்சுவடி சிறுபான்மை சமூகங்களின் மீது வெறுப்பை உமிழ்வது மட்டும் தான். குற்றவாளி பிடிபட வேண்டும், அவர்கள் யாராக இருந்தாலும் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என நடுநிலையாக சிந்திப்பது கூட அவர்கள் பார்வையில் தீண்ட தகாதது தான்.வெறும் 3500 பேர்களை வழி நடத்தி, ஒரு ஆர்ப்பாட்டத்தை ஜனநாயக வழியில் நடத்த தெரியாமல், வன்முறையில் வெறியாட்டம் போட்ட இவர்கள் பின்னால், நாடு போனால், நாடு எப்படி ஜனநாயக வழியில் செல்லும்.

  6. நன்றி, உங்கள் கட்டுரை முழு உண்மையையும் உலகத்திற்கு உணர்த்துகிறது………..வாழ்த்துக்கள்

  7. ஓடு படுகொலை நடைபெற்று இருக்கு அதற்க்கு கண்டனம் தெரிவிப்பது பெயரய தவறா எப்பட ராமதாஸ் செய்து வரும் என்று தூங்காம கூட கடவுளை பிரார்த்தனை பண்ணுவிங்க போல நல்ல போலி மதசாற்படர்வர்கள்

  8. வினவு …நீ என்ன சோறு தான் திங்குரியா …இல்ல P—- திங்குரியா ????? அந்த ______ ELAVARASAN ku சப்போர்ட் பண்ணுன …பட் aditor ramesh கொலைக்கு கீழ்த்தரமான வாசகம் எழுதிருக்க … இந்த பொழப்புக்கு நீ போஒய் தூக்கு மாட்டி சாகலாம்…

    • அன்னோனு….

      விசாரணைக்கு முந்தியே இது இன்னார் செய்த குற்றம் தான்னு முடிவு பண்ணிட்டு விசாரிக்கிறத பல காலாமா பாக்குறோம், ராஜிவ் கொலையில் இது தான் நடந்தது, இபோது இதற்கு தான் அடி போட படுது…

      சாதி வெறி வேண்டாம்னு சொன்னா அது பீ தீன்னு சொல்லுவதா ? என்ன கீழ் தரமான வாசகம் இருக்கு ? யார் தூக்கு போட்டு சாக வேண்டும் ?

      • இங்க மட்டும் குற்றவாளி விசாரணைக்கு முன்னே சொல்றாங்களா.

    • விசாரனைக்கு முன்பே காவிச் சிந்தனை தினமணி மதம் பிடித்தவர்கள் என்று தலையங்கம் எழுதியதே தினமணி ஆசிரியர் எதை திங்கவேண்டும் ?

  9. உனக்கு எதுக்கு இந்த மானம் கேட்ட பொழப்பு ???? எழுதினா ஒழுங்கா எழுது…இல்லேன்னா மூடிகிட்டு வேலைய பாரு …

  10. //தேர்தல் அரசியலில் தமிழக கூட்டணிகளில் இடம்பெற வழியில்லாமல் இருக்கும் பாஜகவிற்கு இத்தகைய தாக்குதல்கள் மூலம் மக்களிடையே மதவெறியை தூண்டிவிட்டு செல்வாக்கு அடையலாம்//

    இது தான் இந்த காவிகளின் எண்ணம்.

    என்னதான் உடம்புல எண்ணெய்ய தடவி புரண்டாலும் உங்களுக்கு(காவிக்கு) ஒரு மண்ணும் ஒட்டாது.

  11. வைகோ, கருணாநிதி, ஜெயலலிதா, சிபிஎம்மின் ஜி. ராமகிருஷ்ணன் என அனைவரும் இப்படுகொலைகளை கண்டித்துள்ளனர்.////சீமானு,கொங்கு முன்னேற்ற கழகம் விட்டுடீங்களே?

    • எதிரிகளின் கொலை மற்றும் சாவை ரசிக்கும் மனோபாவம்தான் இப்படி உங்களை சிந்திக்க வைக்கிறது………….. உங்களுக்கும்(வினவு உள்பட……), இளவரன் சாவுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய சாதி வெறியர்களுக்கும் என்ன வித்தியாசம்(………… .

      • நண்பரே நீங்க முஸ்லீம கொலை பண்றப்ப இத யோசிச்சிறுக்கீங்கலா? நாட்டை மக்களை பிரித்து கலவரத்த தூண்டறதுக்கு தான நீங்களே ரமேஷ்க்காக கண்ணீர் விடுறீங்க. எங்கயாச்சும் மத கலவரம் பண்றதுக்கு சாவ உபயோகிக்கிற நீங்க உண்மையா வருத்த படுங்க எங்களையும் திட்டுங்க

    • ஏன் இந்தப்படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்பது அவ்வளவு பெரிய தவறா??

      • கண்டனம் தெரிவிக்கலாம் அப்பதான் எங்களுக்கு யார் யார்லாம் இந்துத்துவ பயங்கரவாதத்துக்கு அடிமைனு தெரியும்

        • அப்ப வருசம் தவறாம இந்தியாவில் குண்டு வெடிக்கும் போதும், இந்துத்துவ தலைவவர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்படும் போதும்….வாயையும் மூடிக்கிட்டு இருக்கும் உம்மை என்ன சொல்லுவது??

          • வருச வருச அப்பாவி முஸ்லீம்கள கைது செஞ்சு ஜெயில்ல போட்றாங்களா அதுக்கு நீங்க என்ன பேசிறிக்கீங்க? குஜராத் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிச்சீங்களா?

                  • கசாப்பும் மோடியும் ஒண்ணா தான் எங்களுக்கு தெரியுறது, என்ன சட்ட பூர்வமா, சட்ட துணையோட, அதிகார வர்க்கமா இருந்து மோடி கொலை பண்றார் அவ்வளவு தான்

    • எடுத்த எடுப்பிலேயே மதம் பிடித்தவர்கள் என்று தலையங்கம் தீட்டி காவிப் பத்திரிக்கை தினமணியை கண்டிக்கவேண்டும் அனைவரும்.

      • அப்ப இல்லாத இந்துத்தீவிரவாத்தினைப் பற்றி வெனவு பேசும் போது மட்டும் இனிக்குது….

        இருக்கிற இஸ்லாம் தீவிரவாத்தினைப் பற்றிப்பேசினால் கசக்கிறதா?

        • அப்ப இல்லாத இந்துத்தீவிரவாத்தினைப்///அப்ப ஆர்.எஸ்.எஸ் யாரு

            • தேசியவாதி, தீவிரவாதி – உங்களுக்கு ஆரம்பத்திலிருந்து வகுப்பெடுக்க வேண்டும் போல் இருக்கிறது. காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ் காரன் உமக்கு தேசியவாதி!!! என்றால் — ம் என்னத்த சொல்றது.

        • இல்லாத இந்துத்தீவிரவாத்தினைப் பற்றி //

          மலேகான் குன்டு வெடிப்பில் சிக்கிய பெண் சாமியார்கள் எத்த மதத்தை சார்ந்தவர்களாம் கன்னா?

          பள்ளிவாசலை இடித்து தரைமட்டமாக்கிய அட்வானி சி யாராம்

          ஆயிரம் கொலைகளை செய்த மோதி யாராம் எந்த மதத்தை சார்ந்தவராம்

  12. இளவரசனின் இறுதி ஊர்வலத்தில் “ தருமபுரி பகுதிகளில் நக்சல்பாரி நடவடிக்கைகள் குறைந்ததால்தான் , பாமக வின் சாதி அரசியல் பெருக காரணம்“ என்று நோட்டீசு கொடுத்து இழவு வீட்டில் அரசியல் ஆதாயம் அடைய முயன்ற உங்களுக்கும் ,,,,,,,,, இந்து மத தலைவர்கள் கொல்லப்படுவதை வைத்து பிஜேபி அரசியல் ஆதாயம் தேடுவதற்கும் பெரியவித்தியாசமில்லை…………. அரசியல் எதிரிகள் வீழ்ந்தால் மகிழும் அற்ப அரசியல்வாதியின் மனநிலைதான் உங்களுக்கும் உளளது………………… இளவரசன் தற்கொலை செய்துகொண்டான் என்று காவல்துறை கூறியபோது அதை கட்டுக்கதை என்று கூறிய வினவு …………. இன்று ஒவ்வொரு ஹிந்து மத தலைவர்கள் கொலைக்கும் காவல்துறை கூறும் காரணத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனநிலை என்பது உண்மையை தங்களுக்கு ஏற்றாற்போல் மாற்றி வழங்கும் சன் டிவிகாரனுக்கு ஒப்ப உளளது……………….. தனி மனிதனின் ஒழுக்க விடயத்தை ஒவ்வொரு கொலைக்கும்(அது உண்மையா இல்லையா என்பது வேறு விஷயம்.) சுட்டிக்காட்டுவதன் மூலம் இப்படுகொலைகளை வினவு நியாயப்படுத்தவே செய்கிறது………………..

    • // இளவரசன் தற்கொலை செய்துகொண்டான் என்று காவல்துறை கூறியபோது அதை கட்டுக்கதை என்று கூறிய வினவு …// அய்யா பொய் சாமி மேற்கண்ட வரிகளை வினவு எங்கே கூறியிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டவும். பாமக சாதிவெறியை ஆதரிப்பதாக இருந்தால் அதை நேரடியாக செய்து விட்டு அரிப்பை தீர்த்துக் கொள்ளலாமே? வினவு மேல் இப்படி அவதூறு சொல்வதற்கு என்ன காரணம்?

      • ஒருவேளை ராமதாஸ் அய்யா பாஜக பந்துக்கு தமது ஆதரவை வழங்கியதைக் கண்டு தொண்டர்க்கும் இப்படி ஆர்.எஸ்.எஸ்க்கு ஆதரவாக களம் இறங்கியிருக்கிறார்கள் போலும். என்ன இருந்தாலும் ஷத்திரியர்கள் அல்லவா!

        • சர்க்கஸ் அரங்கிற்குப் போனால் அங்கு சில காட்சிகள் வரும். பளு தூக்குவதில் வல்லவரான நல்ல உடல்வாகு கொண்ட ஒருவர் வந்து பல கிலோ எடைகளை அவர் தூக்கும் கம்பியின் இருபுறமும் வைத்து அவற்றை முயற்சி எடுத்துத் தூக்கிக் காட்டுவார். அவர் அதனைச் செய்வதன் மூலம் உருவாக்கிய தாக்கம் பார்ப்பவரின் மனதிலிருந்து அகல்வதற்கு முன்பாகவே சர்க்கஸ் நிகழ்ச்சியில் வரும் கோமாளி ஒரு சிறிய கம்பினை எடுத்துவந்து அதன் இருபுறமும் இரு தொப்பிகளை வைத்து அதனை மிகவும் சிரமப்பட்டு தூக்குவது போல் தூக்கிக் காட்டி அனைவரையும் சிரிக்க வைப்பான்.வினவு பத்திரிக்கையையும் கோமாளித் தனமானதாக ஆக்கியுள்ளது.

        • அன்புடையீர், நடந்த கொலைக்கு தயவு செய்து சாதி வர்ணம் பூச முயலாதீர்கள். ஒரு உயிரைப் பறிக்க எவர்க்கும் உரிமை யில்லை. இதில் இஸ்லாமியர்,இந்து,கிறித்தவர் என்ற பாகுபாடு வேண்டாம். எல்லோரும் ஒற்றுமையாக வாழ இறைவனை வேண்டுங்கள். ஏன்னை ப்போன்ற எத்தனையோ பார்ப்பனர் உங்கள் வாசகர்களாக உள்ளோம். முன்னோர்கள் செய்த தவறுக்காக மிகவும் வருந்துகிறோம். அன்று ஆரம்பித்த தீண்டாமை தீயை அணைக்க மிகவும் முயன்று வருகிறோம். தயவு செய்து பார்ப்பன சமூகத்தை ஒட்டு மொத்தமாக மனது புண்படும் படி விமர்சனம் என்று உங்கள் அனைவரையும் பணிகிறேன்.

      • ஒருமையில் கீழ்த்தரமாக பேசுவதாலும், சாதிமுத்திரை குத்துவதாலும் உங்களின் ஒருசார்பு நிலையை நியாயபடுத்திவிடமுடியாது ………… , புரட்சியாளர்கள் என்ற பெயரில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதால் நீங்கள் நினைக்கும் பொதுஉடமை சமூகத்தை அடையலாம் என கருதுகிறீர்கள் போலும்…………… நேர்மையானவர்கள் என்றால்…………. வன்னியர்களுக்கும், தலித் மக்களுக்கும் சேர்த்துதான் நாங்கள் பாடுபடுகிறோம் என்று கூறும் நீங்கள் இளவரசன் சாவுக்கு நியாயம் கேட்டதுபோல் , நாகராஜ் சாவுக்கும் நேர்மையாக நியாயம் கேட்டு போராடியிருக்கவேண்டும்………. இளவரசன் இறந்த வீட்டில் புரட்சி செய்த நீங்கள்………… நாகராஜ் இறந்தபோது அவர் வீட்டிலும் புரட்சி செய்துருக்க வேண்டும்………….. உங்களைப்பொருத்தவரை பொதுஉடமை என்பது நிபந்தனைக்கு உட்பட்டதா …………?
        இதேநிலைதான், ஹிந்து தலைவர்கள் கொலையிலும் வினவின் நிலைப்பாடு ……… ஒவ்வொருவரின் கொலைக்கும், கேலியாகவும் கிண்டலாகவும் விளக்கம் கொடுக்கும் வினவு, இந்த படுகொலைகளை கண்டு மகிழும் மனநிலையை காட்டுகிறது……. தனிமனித ஒழுக்கத்தை கேள்விக்கு உட்படுத்துவதன் மூலம் இந்த படுகொலைகளை மறைமுகமாக நீங்கள் நியாயப்படுத்தவே செய்கிறீர்கள்……. இந்த மனநிலை கருணாநிதி எதிரிகளை சந்திக்க கடைசியாக பயன்படுத்தும் ஆயுதமான, தனிமனித ஒழுக்கத்தை சந்திக்கு இழுக்கும் உத்தியை ஒப்ப உளளது………….

        • தருமபுரியில் இளவரசனைக் கொன்று வீசியது பமக வின் வன்னிய சாதி வெறி. திவ்யா வின் தந்தை நாகராஜைக் காவுகொண்டது சாதிவெறியர்களின் அவச்சொல்லும், எள்ளலும், ஏகடியமுமே! இதன் முழுப்பொறுப்பும் சாதிவெறியன் இராமதாசையேச் சாரும்! உழைக்கும் மக்கள் இந்த வன்னிய சாதி வெறிக்கு ஆட்பட்டது என்பது பொதுவுடமைச் சிந்தனை அவ்வுழைக்கும் மக்கள் மனங்களில் குறைந்ததே! இதைக் குறிப்பிடுவதில் என்ன தன்னலம் வினவுக்கு உள்ளது? மனிதருக்குள்ளே ஏற்றத்தாழ்வு என்பது மனிதத்தன்மையே அல்ல! அது விலங்கு (மிருக) உணர்ச்சி&வெறி. அந்த வெறி மனிதனுக்கு வந்து சகமனிதனைக் கொல்கிறாயென்றால் இவனுக்கு மனிதத்தன்மை போய்விட்டது என்று பொருள். உழைக்கும் மக்களுக்கு மனிதத் தன்மை வேண்டும், அந்த உன்னத நிலையைத் தரும் பொதுவுடமைச் சிந்தனைக்குள் உழைக்கும் மக்கள் வரவேண்டும் என்று சொல்வதில் என்ன தன்(சுய)நலம் உள்ளது நண்பர்களே?
          நண்பர்களே.. தணிக்கையாளர் இரமேசின் கொலை என்பது இந்து மதவெறியர்களின் கூற்றுப்படிப் பார்த்தால் ஒரு எதிர் வினைதானே! குசராத்திலும், அயோத்தியிலும் செய்ததின் எதிர் வினை என்பதுதானே இன்னொரு கோணத்தில்? ஆனால், இந்தக் கொலையால் ஆதாயம் அடைவது என்னவோ இந்து மத வெறியர்கள் மட்டுமே! இந்து மதவெறியர்கள் தங்கள் படுகொலைக் கணக்கை காந்தியிலிருந்து துவக்கி குமரி, கோவை என்று விரிவு படுத்தி, அதன்மூலம் ஒருசில சட்டமன்ற நாடாளுமன்ற இருக்கைகளைப் பெற்று அதிகாரத்தை சுவைத்ததால்… ஒருவேளை இக்கொலை, இவர்களின் கடந்தகாலச் சதி வேலைகளையும், இவர்களுடைய அர்த்தசாத்திரத்திரத்தில் இவர்கள் எழுதிவைத்த சூதுவாது, சூழ்ச்சிகளைக் கவனிக்கும் போது ஏன் இந்த இந்துமத வெறியர்களையே விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரக்கூடாது?
          பெரியார்த் தொண்டர்களோ அல்லது உண்மையான பொதுவுடமையாளர்களோ… தன் ஆதிக்கத்திற்காக அடிப்பவனையும், தன்னைப் பாதுகாக்க வேண்டி திருப்பி அடிப்பவனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க மாட்டார்கள்! ஒரு துயரச் செயல் நடக்கும் போது அதன் அடிமூலம், அதன் காரணம் என்ன ? அந்த மூலங்களை இச் சமூகத்தை விட்டு அப்புறப்படுத்துவதாலேயே அடுத்த துயர நிகழ்வை தடுத்து நிறுத்த முடியும்.. இப்படித்தான் நாங்கள் சிந்திப்போம்!
          மத வெறியர்களை, சாதி வெறியர்களை.. இவர்களை மனிதாக மாற்றுவது, மனிதனாக்குவது உண்மையான பொதுவுடமைச் சித்தாந்தமே! இச் சிந்தனைக்குள் வருவதாலேயே மட்டும்தான் நம் தமிழ்ச்சமூகம் நிம்மதியான வாழ்வுக்குள் அடியெடுத்து வைக்கும். மனிதனுக்கேயுரிய மாண்பும் கிட்டும், தமிழனைக் கூறுபோட்டு தொங்கவிடும் சாதி எனும் சாக்கடையும், கடவுள் என்ற அடிமுட்டாள்தனமும் சவக்குழிக்குள் புதைக்கப்படும்.

      • சுதந்திரத்திற்கு முன் காந்தி இஸ்லாமியர்களை தாஜா செய்யமுயன்று கடைசியில் தோற்றுப்போனார்…………. இன்று கம்யூனிஸ்ட்’ கள் முயன்றுகொண்டிருக்கிறார்கள்……… இந்த படுகொலைகளுக்கு இஸ்லாமியபயங்கரவாதிகள் காரணமில்லை என்று கூறுவதன்மூலம்,இஸ்லாமியர்களை தாஜா செய்ய முயன்றிருக்கிறீர்கள்……. இம்முயற்சியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  13. இவனுங்கெல்லாம் செத்தா யாருக்கு என்ன நட்டம்?

    போய் தொலையட்டும் இந்த பூமிக்கு சுமையாவது குறையும்.

    இந்து மதவெறி ஓநாய்களை ஒழித்துக்கட்ட வேண்டும்.

      • எங்க சொந்தகாரர் ஒரு சிலர் BJP-ல் மாவட்ட அளவில் பதவியில் இருக்கிறார்கள். இவர்கள் நன்கு மூளைச்சலவை செய்யப்பட்ட, சிந்திக்கும் திரணற்ற, மதவெறியூட்டப்பட்ட ரோபோக்களைப்போல் இருக்கிறார்கள். இவர்கள் நோக்கம் என்னானு நல்லா தெரியும். இவர்களை இப்படி மாற்றி தனது ஆதாயத்துக்கு பயன்படுத்தும் நாதாரிகள் சாவதில் என்ன சோகம் வேண்டிகெடக்கு.

      • லாப நட்டக்கணக்குப் பார்ப்பதற்கு இது என்ன வெங்காய மண்டி வியாபாரமா? நீ 3000 ம்னு கணக்கு பார்த்தால், அவன் பாக்கி 2999 இருக்கு என்று பதில் சொன்னால் – இது எங்கு போய் முடியும்? இதுல நொந்த சாமியான நல்லுசாமி இந்த ஒன்றுக்கே இந்த புலம்பு புலம்புகிறார். ச்ச்சீனு, மோடி மஸ்தான் செய்த 3000 ப்பற்றி இப்போதாவது ஒத்துக்கிறீங்களே!!

    • எல்லா மதங்களிலுமுள்ள மதவெறி நாய்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பது தான் சரியானது.

  14. இந்து தலைவர்களை தமிழ் மண்ணில் நாய்கூடத் தீண்டாது…. அவர்கள் செத்துப் போனதற்காகவும் கூட ஒரு தெரு நாய்கூட ஓங்கி குறைக்காது. இந்த மண்ணின் மதமாக இந்து மதம் எப்போதுமே ஏற்றுக்கொள்ளப் பட்டதில்லை. என்னதான் பார்ப்பனர்கள் கூவிய போதும் இந்து முசுலீம் ஒற்றுமை இங்கு சிதைந்ததில்லை…. ஆனால், தற்போதைய தேசிய ஊடகங்களும் இந்திய இந்து தேசியத்தை வலுப்படுத்தும் திரைப்படங்களும் இந்தியில் இருந்தும் ஆங்காங்கே தமிழிலும் வருகின்றன. இன்றைய மாணவர்கள் மற்றும் வெண்-சீருடை வேலை நடுத்தர வர்க்கத்திடம் இந்தியா மீதான பற்று என்பது கிரிகெட் மூலமும் ஹசாரே தனமாகவும் பரப்பப்பட்டு, அது இந்து வெறியாக, முசுலீம் வெறுப்பாக, பார்ப்பனிய விழுமியங்களின் ஏற்பாக மாற்றப் படுகிறது. பெரியாரின் பெயரைச் சொல்லி இயக்கங்கள் நடத்தும் யாரும் இந்த இந்து அபாயத்தை புரிந்து கொண்டதாகக் கூடத் தெரியவில்லை. பெரியாரியப் பனி என்பது வெறும் கடவுள் மறுப்பும் பார்ப்பனர்களைத் திட்டுவதுமே என்று தன்போக்கில் செயல்பட்டு வருகின்றனர். பெரியாரிய மற்றும் திராவிட இயக்கங்களின் போலி பெரியாரியமும், பிழைப்புவாத அரசியலும், சந்தர்ப்பவாதக் கூட்டுகளும் வெற்றுச் சவடால்களுமே இந்த இந்து அமைப்புகளும் ப.ஜ.க வும் தமிழகத்தில் வளர முதல் காரணம். இந்து அமைப்புகளின் அபாயத்தை ம.க.இ.க. மற்றும் புரட்சிகர அமைப்புகள் மட்டுமே எண்பதுகளில் மெல்ல வேரூன்றி, 1992 கு பிறகு அபாயகரமாக வளர்ந்து வரும் இந்து அமைப்புகளுக்கு எதிரான சரியான நிலைப்பாட்டையும் புரிதலையும் தமிழகத்தில் வளர்த்துள்ளதோடு, வீரியமிக்க செயல்பாடுகளையும் கலத்திலும் ஆற்றியுள்ளன.

    • போலி மதச்சார்பின்மை. வலைக்குழுமங்களில் மதச்சண்டை நடப்பது சர்வ சாதாரணம். இதில் இந்துக்கள், முஸ்லீம்கள், கிறித்துவர்கள், பகுத்தறிவு பேசுபவர்கள் என பல தரங்கள் உண்டு. இந்துக்கள் சார்பாக இந்துக்கள் மட்டுமே பேசுவார்கள் ஆனால் இந்துக்களையும் இந்து மதத்தையும் தாக்கி எழுத, கிறித்தவர்கள், முஸ்லீம்கள், பகுத்தறிவுவாதிகள், மேலும் பகுத்தறிவாளர் வேடமிடும் பிற மதத்தவர் என எல்லோரும் ஒன்று கூடி விடுவார்கள். முஸ்லீம்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்துக்கள் பெரும்பாலும் பகுத்தறிவு வாதம், நட்புக்கு உதவி என்ற ரீதியில் முஸ்லீம்களுக்கு ஆதரவளிப்பார்கள். உண்மையில், இந்த பகுத்தறிவாளர்களின் போர்வையில் இருப்பதெல்லாம் இந்து மதம் தவிர்தத பிற மத வெறியர்களின் கலவையே. இவர்களது வாதம் என்னவென்றால் இவர்கள் மதச்சார்பற்றவர்களாம், முற்போக்கு சிந்தனாவாதிகளாம். பகுத்தறிவுப்படி பேசுபவர்களாம். இவர்களின் பகுத்தறிவு இந்து மதத்துக்கு எதிராக மட்டுமே சிந்திக்கும், இந்து சம்பிரதாயங்களை மட்டுமே விமர்சிக்கும். இஸ்லாம், கிறித்துவ மதத்தைக் கேள்வி கேட்கும் விதத்தில் சிந்திக்கவே சிந்திக்காது. இவர்கள் மொழியில் இதற்குப் பெயர் பகுத்தறிவு மற்றும் மதச்சார்பின்மையாம்!!!!!

      பகுத்தறிவாளர்களில் கடவுளே கிடையாது, தீமிதித்தல் காட்டுமிராண்டித்தனம் என்றெல்லாம் பிதற்றும் திராவிட வியாதிகள், பெரியார் வியாதிகள் உண்டு. இந்த வியாதிகள் பெரும்பாலும் இந்துக்களாகவே இருப்பார்கள். ஏதோ ஒரு நம்பிக்கைக் குறை அவ்வளவுதான். ஆனால் முஸ்லீம்களும் கிறித்துவர்களும் இந்த பகுத்தறிவாளர் போர்வையில் ஒளிந்திருப்பார்கள் பாருங்கள், பேச்செல்லாம் விடம். இவர்களுக்கு மதத்தைப் பற்றியும் கிறித்துவ மதத்தைப் பற்றியும் பேசினால் மட்டும் பகுத்தறிவு வேலை செய்யாது. எங்கள் மதம், எங்கள் மார்க்கம், எங்கள் மத நியதி, ஏக இறைவன் என்றெல்லாம் பேசுவார்கள். இந்துக்கள் எதிர்வாதம் புரியும் போது, இந்துமத சம்பிரதாயங்களைக் காட்டி அது பகுத்தறிவுக்கு ஒத்து வராது என்று உளறுவார்கள். குரானில் சொல்லியிருக்கிறது, பைபிளில் இருக்கிறது என்று அவர்களின் மதச்சார்புடைய வலைச்சுட்டிகளைப் பட்டியல் இடுவார்கள்.

      அதே போல் ஒரு இந்துவிற்க்கு வந்தால் அது தக்காள்ச்சட்ட்னி ம்த்தவர்களுக்கு வந்தால் அது ரத்த்ம்…இவ்வள்வுதான்டா வினவு..

      • எதையும் ஒழுங்கா ஆராய்வது கிடையாது, நீங்களே ஒன்றை நினைத்துக்கொண்டு உளருவது.

        சரி இதை விடுங்க ஈழத்தமிழர்கள் மற்றும் பிரபாகரன் மகன் கொலை செய்யப்பட்டதற்கு நீர் நீலி கண்ணீர் வடித்தாய் என்று எடுத்துக்கொள்வோமா?

        ஏனென்றால் ஈதமிழர்கள் அழிப்பை பார்த்து கொண்டாடியவர்கள் தான் பாஜக ஓநாய்கள் , முழுக்க முழுக்க ராஜபக்சேவுக்கு ஜால்ரா போட்டவன் தான் இவனுங்கெல்லாம். எப்படி பார்த்தாலும் இவனுங்க சமூகவிரோத கும்பல் தான்

    • //இந்த மண்ணின் மதமாக இந்து மதம் எப்போதுமே ஏற்றுக்கொள்ளப் பட்டதில்லை. //
      திருச்சிற்றம்பலம்… தென்னாடுடைய சிவனே போற்றி! இடையில் வந்த மதங்கள் ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாது விட்டாலும் தமிழ் மண் சிவபூமி என்ற உண்மை மறைந்து விடாது. ஒண்டவந்த பிடாரி, ஊர்பிடாரியை விரட்டிச்சுதாம் என்ற கதை தான் இது. 🙂

    • சொற்றுனை வேதியன் சோதி வானவன்
      பொற்றுனை திருந்தடி பொருந்தக் கைதொழக்
      கற்றுனைப் பூட்டி ஓர் கடலினிற்பாய்ச்சினும்
      நற்றுனையவது நமச்சிவாயவே…….

  15. வினவு, உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை.ஒரு கொலையை கூட நியாயமாக எழுதாத நீங்கள், முற்போக்கு வேஷம் போடுவது யாரை ஏமாற்ற? மாற்றம் உங்களிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும் போல.

  16. எண்கவுன்டெர் ஸ்பெசலிஸ்ட் மோடியின் சீடர்கள் இந்துக்கள் பயணம் செய்யும் பஸ் கண்ணடியை உடைப்பது சரிஅல்ல.

  17. 1. “விசாரணை துவங்குவதற்கு முன்னரே இசுலாமிய தீவிரவாதம் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது ஊடகங்களுக்கும் காவல் துறைக்கும் வாடிக்கையாக ஆகியிருக்கிறது”.

    வினவு மட்டும் தான் தீர விசாரித்து ராமதாஸ் தான் கொலையாளினு தீர்ப்பு சொல்லலாம். காவல்துறையும் நீதிமன்றமும் சொன்னால் அது சிறுபான்மையினருக்கு எதிரான போர் அப்படிதானே வசந்தன்.

    2. “பாஜக தங்களது ‘ஜனநாயக’ கடமையை செய்து முடித்திருந்தது”

    சரி பாஜக செய்யல நீங்க உங்க கடைமையை முடிசிட்டேன்களா? தான் வாழும் சமுதாயத்தில் ஒருவர் இழப்புக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் கொண்டாடி மகிழும் உங்கள் போன்றவர்கள் புலிகளுக்கு சப்போர்ட் பண்ணி தனி ஈழம் ஆதரவு கோஷம் போடுவீங்க அதையும் நம்பனும்.

    3. “மாநிலம் முழுக்க சுமார் 6,000 பேர் கைது, 100 பேருந்துகள் உடைப்பு”.

    இது என்ன ம.க.இ.க கண்டுபிடிப்பா?

    4. “கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தேசத்துக்காக உழைத்தவர்கள் என்றும், தேச விரோத சக்திகள் இவர்களை கொன்று விட்டார்கள் என்றும் பிரச்சாரம் செய்கின்றன இந்துமத வெறி அமைப்புகள்.”

    என்ன யோக்கியமா எழுதுறீங்க, இளவரசன் மட்டும் காஷ்மீர்ல எதிரிகள்கூட சண்டை போட்டு நாட்ட காப்பாத்தினானா என்ன?

    இந்தியாவுல முஸ்லீம் தீவிரவாதமே இல்லை என சொல்கிறீர்களா? கட்டுரையின் ஒவ்வொரு வரியிலையும் அபத்தம். முடிந்தவரை ஒருசார்பு நிலையை விட்டுட்டு பொதுவா எழுத முடியுமான்னு யோசிக்கலாமே.

    • ராகுல் ///வினவு மட்டும் தான் தீர விசாரித்து ராமதாஸ் தான் கொலையாளினு தீர்ப்பு சொல்லலாம். காவல்துறையும் நீதிமன்றமும் சொன்னால் அது சிறுபான்மையினருக்கு எதிரான போர் அப்படிதானே வசந்தன்.///

      வினவு சாதி வெறியை எதிர்க்கும் தளம் ..பாமகவினர் காரணமாக இருக்கலாம் என்று தனது தரப்பு வாதத்தை வைக்க உரிமை உள்ளது
      ///விசாரணை துவங்குவதற்கு முன்னரே இசுலாமிய தீவிரவாதம் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது ஊடகங்களுக்கும் காவல் துறைக்கும் வாடிக்கையாக ஆகியிருக்கிறது”.///
      காவல்துறையும் பொதுவான ஊடகங்களும் அது போன்று கூறுவது எப்படி வினவு கருத்து போல் ஆகும்?

  18. இந்துமதவெறியன் செத்துப்போனதுக்கு ஒப்பாரி வைப்போர் பட்டியலில் முந்திக்கொண்டோர்
    ராமதாசு, வைக்கோ..இந்த ரெண்டு பேரும் வைக்கும் ஒப்பாரியைப் பார்க்கையில் நெருங்கிவரும் தேர்தலும் கூட்டணிக் கணக்கும் தென்படுகின்றன..இப்படித்தான் ஒருத்தி எழவு வீட்டுக்குப் போனாளாம்..ஒப்பாரி வைக்கையிலே ‘எக்கா…ஒங்க வீட்டு கொல்லையிலே முருங்கைக்காயீ..முறுக்கு முறுக்கால்லா காச்சிருக்கு’ன்னு சொல்லி அழுதாளாம்..எழவு வீட்டிலே வைக்கோவும் டாக்டரும் இப்படித்தான் எம்பி சீட்டா நெனச்சு அழுதிருப்பாங்க..

    எள்ளுதான் எண்ணெய்க்குக் காயுது..இந்த எலிப்புழுக்க என்னாத்துக்கு காயுதாம்?
    அதான்..மானம்ம்ம்ம்ம்ம் மிக்க்க்க்க்கு வீரமணியும் ஒப்பாரி வச்சிருக்காரு…”சேலத்தில் ஆடிட்டர் இரமேஷ் என்ற பா.ஜ.க.வின் தமிழகப் பொதுச் செயலாளர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார் என்பது மிகவும் வருந்தத்தக்க செய்தியாகும்.

    இதற்கு மூல காரணம் யார் எது என்று கண்டறியப்படுவது, குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதைவிட முக்கியமாகும்.

    இதற்கு சில வாரங்கள் முன் வேலூரில் இதே கட்சியின் ஒருவரும் வெட்டிக் கொல்லப் பட்டார் என்ற வேதனைக்குரிய செய்தியும் வெளிவந்தது!”

    • பாய்…பேரு கிடைக்காட்டிநல்ல பேராநான் வைக்குறேன்…சும்மா…கனகுராஜ் கினகுராஜுன்னு வச்சுக்க்கிட்டு காமிடி பண்ணாத..

    • பாராளுமன்ற தேர்தலுக்கு திமுகவோ அதிமுகவோ கூட்டணி வைக்காது பணம் கிடைக்காது என்பதால் கிடைத்த காரணத்தை காட்டி உறவு வைக்கக் மமுனைகிறார்கள் .ஜெயிக்கிரமோ கிடைக்குதோ இல்லையோ இந்த தடவை மோடி பணத்தை அள்ளி விடப் போகிறாராம் .அதில் டாக்டரும் புலித்தோலும் வரிந்து கட்டுகிறார்கள்

      • நடந்த ஒரு படுகொலைக்கு இரங்கல் தெரிவிப்பதை எவ்வளவு கீழ்த்தர‌மாக விமர்சிக்கிறீர்கள்…..இதுதான் உங்கள் தரம் என்பது உலகுக்கே தெரியும்…..

  19. இந்து மதவெறியர்கள்…. endru sollan unnaku enna arukathai erruku. Nee nadu nillai enu sollitu muslim(minority pepoles) support panfrathe vellaya pochiu..
    Unnal mudinthal முஸ்லீம் மதவெறியர்கள் அல்லது கிரித்துவ மதவெறியர்கள் endu eppovathu sonathu unndaaa.
    Ethula theriyuthu unnudya yokithai………

  20. தர்மபுரில் வாக்கை சவாலை சந்திக்க திறனியற்ற இளவரசன் தற்கொலைக்கு பக்கம் பக்கமா எழுதினாய்.இளவரசன் சாவல் நாட்டுக்கு என்ன இழப்பு வந்துவிட்டது.மதத்தின் பெயரால் ஒரு கொலை நடந்தால் அது இந்துதுவத்தை ஆதரிப்பவனாக இருந்தால் அவன் சொந்த முன்பகை கரணமாக கொல்லப்பட்டான் என்று எழுதுவீர்.அதுவே முஸ்லீம் என்றால் தியாகி என்று எழுதுவீர். இள்வரசன் சாவுக்கு வந்து இரங்கல் கூட்டத்தில் மொத்தமா 25 பேர்தான் உக்காந்து இருந்தது நீர் வெளியிட்ட வீடியோவிலேயே உள்ளது. இளவரசன் சாவுக்கு உலகமே அழுதமாதிரி பக்கம் பக்கமா கட்டுரை எழுதரை. இதில் இருந்தே தெரிகிரது உன் பித்தலாட்டம்

  21. இந்த கொலைகளுக்கு காரணம்
    ஒன்று ;பிஜேபி இந்து முன்னணி அமைப்புகளில் ஆதிக்க சாதியினரே கொள்கை பிடிப்புடனும் மதவெறி உடனும் உள்ளனர் .அவர்கள் மேட்டுக் குடிகள் .தெருவில் இறங்கி அமைப்பை வளர்க்கும் ஆற்றல்கள் அவர்களிடம் கிடையாது .இதற்காக இந்த அமைப்புகள் காசு கொடுத்து பிற்படுத்தப்பட்ட மக்களில் உள்ள அடாவடிகளை பணம் கொடுத்து அமைப்பில் சேர்த்து பதவி கொடுக்கிறார்கள் .அவர்கள் அந்த பதவிகளை பயன்படுத்தி தங்களது பணம் குவிப்பு நடவடிக்கைகளில் ,மற்றும் பணம் சேர்ந்ததும் பெண் சல்லாபங்கள் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள் .இதானால் வரும் பிரச்னைகளில் கொலைகள் நடக்கலாம்
    அடுத்து ,மோடி பிளான் ,தமிழ்நாட்டில் கூட்டணி வைக்க கூட தயங்கும் தங்களது கட்சியை கோவை குண்டு வெடிப்பு மூலம் கிடைத்த வெற்றியை போல மீண்டும் பிரபல அடைய செய்ய வேண்டும் .அதற்கு இது போன்ற குற்றம் சம்பந்தப்பட்ட கட்சிக்காரர்களை தொடர் கொலை மூலம் மக்கள் மத்தியில் அனுதாபத்தை உருவாக்க வேண்டும்

    வெள்ளையப்பன் கொலையாளிகளை கண்டு பிடித்து ஊடகங்கள் மூலம் செய்தியை மக்கள் மத்தியில் வெளியிட்டிருந்தால் அடுத்த கொலைக்குஅவர்கள் துணிந்து இருக்க மாட்டர்கள் .வெள்ளையப்பன் கொலையாளிகள் ரகசியமாக வைக்கப் படுகிறது ஏன்?
    போலிஸ் இன்ஸ்பெக்டர் கணவர் ,மகனுக்கும் மகளுக்கும் திருமணம் முடிந்து விட்டது ,இந்த நிலையில் ஒரு அம்மையார் தீக்குளித்த வரலாறு புதுமையடா !

      • 1994 இல நடந்த கொலை பற்றி தகவல் கொடுத்துள்ளார் .அந்த சமயத்தில் பாபரி மஸ்ஜித் பிரச்னை இருந்தது .அப்போது பாஜகவின் சதி பற்றி முஸ்லிம்களும் அதிகமாக அறியாது இருந்தனர் .முஸ்லிம்களை கடுப்பேற்றி அதனால் கலவரம் தோன்றி கட்சி வளர்க்கும் பாணியை அறியாது இருந்தனர் .மேலும் ராஜ கோபாலுக்கும் சீனி நைனாமுஹம்மதுவுக்கும் விநாயகர் ஊர்வலம் விசயமாக பகை இருந்து வந்தது கீழக்கரையில் குறிப்பிட்ட 100 சதம் முஸ்லிம்கள் உள்ள தெருக்கள் வழியாக விநாயகர் ஊர்வலம் நடத்த வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டினார்கள் .அப்போது கருணாநிதி கூட முஸ்லிகளை தரிசிக்க விநாயகர் ஆசப் படுவது ஏன் என்றுகேட்டார்.
        என்னை பொறுத்த வரையில் விநாயகர் ஊர்வலத்துக்கு முஸ்லிம்கள் தெரு வழியாக அனுமதித்து ஊர்வலத்தில் வரும் சங்கபரிவார் களுக்கு குளிர்பானம் கொடுத்து உபசரித்தால் இந்துக்கள் இந்த மத வெறியர்களை புரிந்து கொள்வார்கள்
        மாலேகான் ,அஜ்மீர் ,போன்று பல இடங்களில் ஹிந்துத்துவா ஆட்கள் குண்டு வைத்துள்ளார்கள் .அதனால் கொயாமுத்தூரில் நடந்த குண்டுவெடிப்பும் அவர்கள் நடத்தியதுதான் என்று நான் சொல்ல மாட்டேன்

    • // வெள்ளையப்பன் கொலையாளிகளை கண்டு பிடித்து ஊடகங்கள் மூலம் செய்தியை மக்கள் மத்தியில் வெளியிட்டிருந்தால் அடுத்த கொலைக்குஅவர்கள் துணிந்து இருக்க மாட்டர்கள் . //

      உண்மைதான்.. ஒரு ’இந்துமதவெறி இயக்கத்தின்’ பொறுப்பாளர் செத்தால் யாருக்கு என்ன நட்டம் என்ற பரவலான முற்போக்கு சிந்தனையும், அரசின் மெத்தனமும்தான் காரணம்..

      • இப்போ செத்தவன் கூட பழனி பாபா சாயல்ல தான் இருந்தானாம். அதான் நம்மலவாலே போட்டுட்டா !

  22. கூட்டணிக்கு கூட கட்சி இல்லாத ஒரு அனாமதேய கட்சியை ,மக்கள் கண்டு கொள்ளாத கட்சியை ,தமிழகத்தில் முஸ்லிம்களுக்கும் பாஜகவுக்கும் எவ்வித பிரச்னைகளும் இல்லாத இவ்வேளையில் அதன் தலைவர்களைக் கொன்று பாஜகவை வளர்க்க முஸ்லிம்களுக்கு என் பைத்தியமா பிடித்து இருக்கிறது

  23. Vinavu, though I am a vehement opposer of BJP, one should always condemn violence and murders. There is no joy in someone’s death. Can you just say that you too condemn the murderer whomever it may be?

  24. நித்திஸ்குமாருடன் கூட்டணி இருக்கையில் பீகாரில் குறிப்பிடும்படியாக சம்பவம் இல்லை .ஆனால் மோடி பாடம் கற்பிக்கிறேன் என்று சொன்ன பிறகு புத்தகயாவில் தொடர் குண்டு வெடிப்பு ,பள்ளி குழந்தைகள் 23பேர் பலி .நாசமாபோற நரபலி மோடி இன்னுன் என்னவெல்லாம் அங்கு பணன்போகிரானோ

    • அப்படியே தாம்பரத்துல தாலி அறுத்த் கேசையும் மோடி மேல போடுங்க…

      நித்திஸ் வாலச்சுருடிடுக்கிட்டு முத்ல்ல ஒருநல்ல முதலமைச்சார தன் கடமையைச்செய்யட்டும்….அத்ன் பிறகு பாரதப்பிரதமராகும் கனவு காணலாம்(னோட்- ஒன்லி கனவு மட்டும்)

      • அடேங்கப்பா ,என்ன ஆத்திரம் ,கோயிலில் குண்டு வெடித்தாலும் மசூதியில் குண்டு வெடித்தாலும் புத்த கயாவில் குண்டு வெடித்தாலும் இந்திய முஜாஹிதீன் இணையதளத்தில் தகவல் என்று செய்தி பரப்புவது எபப்டி?
        பாஜக காரன் எவன் கட்ட பஞ்சாயத்தில் செத்தாலும் சரி ,கள்ள காதலில் கொல்லப்படாலும் சரி உடனே முஸ்லிம்கள் என்று எப்படி முடிவெடுக்க முடிகிறது ?அரவிந்த் ரெட்டி விவகாரம் வேலூரில் இந்து சகோதரனிடம் கேட்டால் சொல்லுவானே
        சரி இனியாவது தாம்பரத்துலே தாலி அத்த கேசையும் இந்திய முஜாஹிதீன் பேரிலே போடுங்க
        Dinamani 22/07/2013
        அடுத்ததாக, எந்தெந்த அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் நிலத்தை ஆக்கிரமித்திருக்கிறார்கள், அல்லது சட்டப்படி குறைந்த விலையில் நிலத்தை அடித்துப்பேசி வாங்கி, இப்போது பல கோடி ரூபாய் சம்பாதித்தார்கள், எப்படி ஊழல் செய்கிறார்கள் என்று வெளிப்படையாகப் பேசுதல், மற்றும் ஊடகங்கள், பத்திரிகைகளுக்குத் தகவல் கொடுத்தல் ஆகியவற்றில் ஈடுபடுவோரை, பாதிக்கப்படும் அரசியல்வாதிகள் விரும்புவதில்லை. முதல் கட்டமாக எச்சரிக்கிறார்கள். பிறகு கொலை செய்யும் அளவுக்குப் போகிறார்கள்.

        இந்த வழக்கு விசாரணையை ஆறப்போடாமல் விரைவில் குற்றவாளிகளைக் கைது செய்து, கொலைக்கான காரணங்களை வெளிக்கொணர வேண்டும். மேலும், வெறும் அடிதடியாக இருக்கும்போதே இந்த விவகாரத்தை காவல்துறையின் உளவுத்துறை கண்காணிக்கத் தொடங்கினால், பல கொலைகள் நடக்காது.

        நடந்தேறி இருக்கும் கொலைகளுக்குத் தொழில் போட்டி காரணம் என்றாலும், அரசியல் காரணம் என்றாலும், இரண்டுமே ஆபத்தானவை. இரும்புக்கரம் கொண்டு ஆரம்பத்திலேயே அடக்காமல் போனால் பூதாகாரமாக விஸ்வரூபம் எடுத்துவிடும்!

      • பையா ,பையெல்லாம் மோடி பணமா
        ////பிறகு பாரதப்பிரதமராகும் கனவு காணலாம்(னோட்- ஒன்லி கனவு மட்டும்)///

        அப்ப,மோடி பிரதமர் ஆயிட்டாரா?
        நித்திஸ் கனவும் மோடி கனவும்

  25. தலித் வாலிபன் இளவரசன் தற்கொலை தயாராகும் தலித் தீவிரவாதிகள் இப்படி நீ தலைப்பு கொடுக்கலாமே ? வினவு என் பார்வையில் சூப்பரா அனுப்பமுடியும் ஆனால் நீ போஸ்ட் பண்ண மாட்ட

  26. //துலுக்க …..! நீங்கள் இரண்டாம் தர குடிமக்கள் என்பதை மறந்து விடாதீர்கள். 2002 குஜராத் மறந்து விட்டதா //

    Shocking! And such posters are allowed in public forum is more sickening

  27. //கடையடைப்பு நடத்துமாறு மிரட்ட மாட்டோம் என்றெல்லாம் சில பாஜக தலைவர்கள் சடங்கு அறிக்கை வெளியிட்டாலும் பல இடங்களில் கடையடைப்பு நடத்தும்படி கட்டாயப்படுத்தி வன்முறை சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுக்க சுமார் 6,000 பேர் கைதாகியிருக்கின்றனர். ராமதாஸ் கைதைத் தொடர்ந்து பாமக குண்டர்கள் நடத்திய அழிவு செயல்களுக்கு போட்டியாக 100 பேருந்துகள் உடைப்பு, கோவையில் மசூதி மீது பெட்ரோல் குண்டு வீச்சு என பாஜக தங்களது ‘ஜனநாயக’ கடமையை செய்து முடித்திருந்தது. இதன் மூலம் தங்களுக்கு நேசக் கரம் நீட்டியிருக்கும் ராமதாசுக்கு இணையாக பேரம் பேச தகுதி பெற்று விட்டார்கள் என்றும் வைத்துக் கொள்ளலாம்.//

    எவனோ ஒருத்தன் எடுத்த பட்டத்துக்கு இங்க சென்னையில அமெரிக்க தூதரகத்தை அடிச்சு நொறுக்குனாய்ங்களே, ஒரு நாள் பூரா ட்ராப்பிக் பிரச்சினை பன்னி அவனுங்களோட ‘பலத்தை’ காட்டும் போது அன்னைக்கு எங்க போய் ஒளிஞ்சுகிட்டீங்க? அதை பத்தி பேச வக்கிருக்கா?

  28. Freedom of speech and Freedom of Religion ,everyone possesses. But freedom to murder fellow human being should not be supported and cheered on by anyone.

  29. உங்கள் கட்டுரையின் படி இவர்கள் இறந்தது கந்து வட்டி மற்றும் கட்டப்பஞ்சாயத்து என்றால் சட்டமன்றம், மாவட்ட மன்றங்களில் இருப்பவர்கள் முக்கால் வாசி காலி. இது பக்கத்தை நிரப்ப எழுதப்பட்ட கட்டுரை.

  30. 1994 இல நடந்த கொலை பற்றி தகவல் கொடுத்துள்ளார் .அந்த சமயத்தில் பாபரி மஸ்ஜித் பிரச்னை இருந்தது .அப்போது பாஜகவின் சதி பற்றி முஸ்லிம்களும் அதிகமாக அறியாது இருந்தனர் .முஸ்லிம்களை கடுப்பேற்றி அதனால் கலவரம் தோன்றி கட்சி வளர்க்கும் பாணியை அறியாது இருந்தனர் .மேலும் ராஜ கோபாலுக்கும் சீனி நைனாமுஹம்மதுவுக்கும் விநாயகர் ஊர்வலம் விசயமாக பகை இருந்து வந்தது கீழக்கரையில் குறிப்பிட்ட 100 சதம் முஸ்லிம்கள் உள்ள தெருக்கள் வழியாக விநாயகர் ஊர்வலம் நடத்த வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டினார்கள் .அப்போது கருணாநிதி கூட முஸ்லிகளை தரிசிக்க விநாயகர் ஆசப் படுவது ஏன் என்றுகேட்டார்.
    என்னை பொறுத்த வரையில் விநாயகர் ஊர்வலத்துக்கு முஸ்லிம்கள் தெரு வழியாக அனுமதித்து ஊர்வலத்தில் வரும் சங்கபரிவார் களுக்கு குளிர்பானம் கொடுத்து உபசரித்தால் இந்துக்கள் இந்த மத வெறியர்களை புரிந்து கொள்வார்கள்
    மாலேகான் ,அஜ்மீர் ,போன்று பல இடங்களில் ஹிந்துத்துவா ஆட்கள் குண்டு வைத்துள்ளார்கள் .அதனால் கொயாமுத்தூரில் நடந்த குண்டுவெடிப்பும் அவர்கள் நடத்தியதுதான் என்று நான் சொல்ல மாட்டேன்

    • Only Urdu gets prominence in Melvisharam. In Municipal sessions, the Chairman and members discuss all issues only in Urdu. The Municipal Library contains only Urdu books, magazines and newspapers, and has very few Tamil newspapers, that too as a formality. The Muslim majority of Melvisharam speak Tamil only with strangers visiting the town. The only street with just 10 Hindu families is named “Tamil Street”! The names of all other streets and even the names of shops and other trade venues and business establishments are written only in Urdu.

      Melvisharam has “Abdul Hakim Engineering College”, “Abdul Hakim Arts & Science College”, and five schools run by “Melvisharam Muslim Educational Society” (MMES). A landmark is Masjid-e-Khizar whose minaret is 175 ft (53 m) high. In 2003 K.H. Group of Companies and Apollo Group of Hospitals set up the Apollo KH Hospital. Banks and other establishments are aplenty. But, it doesn’t have a police station! Everything is decided only by Jamaat (public – as told by Amjad Hussein, who runs a fruit juice shop).

      Keelvisharam is also called ‘Rasaththipuram,’ and since its merger with Melvisharam, the Panchayat election has never been conducted democratically. The local Jamaat decides the Chairman and Councillors and only they can file nominations. Nobody else can.

      In 2002, the four councilors of Rasathipuram were beaten black and blue by the other Muslim councillors and since then the people of Rasathipuram (four wards) have been boycotting the elections.

      The Melvisharam Jamaat had the practice of choosing an influential Muslim of the ruling party as Chairman of the Municipality. The proceedings of the Municipal session were never known to the Hindus. It is alleged that most times the sessions were conducted in wealthy Muslim homes and not in official municipal premises.

      While most of municipal jobs were given to Muslims, menial jobs like sweeping and scavenging only were given to Hindus (SCs and MBCs).

      K.L. Elavazhagan of PMK is the present MLA (Arcot) and hails from Keelvisharam. His father K. Loganathan was murdered in 1991. Though the murder was projected as ‘political rivalry’, it was learnt that the killer was saved and converted to Islam by an influential Muslim from Melvisharam. He is presently living with his Muslim wife leading a cushy life.

      • //menial jobs like sweeping and scavenging only were given to Hindus (SCs and MBCs).//

        SC and MBC மட்டும் தான் இந்துவா? மித்தவா எல்லாம் வேற மதமா?

        • and even poor brahmins today can count for some support from the rich brahmins(little bit,atleast relatives),why are those Collectors/professionals of MBC/SC not protesting against manual scavenging.

          • தன்னுடைய மலத்தையே அருவெறுப்புடன் பார்ப்பவன் இழிந்தவன். அதை அடுத்தவன் அள்ள வேண்டும் என்று நினைப்பவன் அதை விட இழிந்தவன். அப்படி பார்த்தால் உலகில் இரண்டு சாதிதான் உள்ளது.
            இந்தியாவில் இன்று உள்ள தலையாய மனித விரோத பிரச்சினை இதுதான். இதை தீர்த்தால் தான் நாம் மனித சாதியாக மாறமுடியும்.மற்ற பிரச்சினைகளை பின்னர் தீர்த்து கொள்ளலாம்.
            வெட்டி பிரச்சினைகளுக்கு அல்லும் பகலும் ஆக்கங்கெட்ட கூகைபோல் கத்திக்கொண்டு திரியும் எல்லா அரசியல் வியாதிகளும் இந்த பிரச்சினையை பற்றி மட்டும் கண்டும் காணாதது போல் முன் நகர்ந்து செல்வார்கள்.மனித நேயம் என்பார்கள்; சமூக விழிப்புணர்வு என்பார்கள்; சமத்துவம் என்பார்கள்;சாதி ஒழிப்பு என்பார்கள்;வர்க்க ஒற்றுமை என்பார்கள்; மலம் அள்ளுபவரை பற்றி மட்டும் பேச மாட்டார்கள்.
            இப்போது கூட எல்லா வெண்ணை வெட்டி வேலையை விட்டு விட்டு இந்த பிரச்சினையை பற்றி பேசி கூடிய விரைவில் போர்கால அடிப்படையில் உடனே தீர்த்து விட்டு வேறு வேலை பாருங்கள் என்று சொல்லிப்பாருங்கள். பாராளுமன்றம் சட்டம் கொண்டு வரும், உச்சநீதிமன்றம் உச்சா போகும் என்று சொல்வார்களே தவிர தெருவில் இறங்கமாட்டார்கள். எப்போதும் போல் இந்த பிரச்சினையில் செத்த நாயை நொண்டியடித்து தாண்டும் தொழில் நுட்பத்தை கடைபிடிப்பார்கள்.

            • மற்றவர்கள் தான் கூகை போல கத்திக்கொண்டிருக்கிறார்கள், சரி மனித சாதியாக மாற விரும்பும் பரலோகபாண்டியன் என்கிற குயில் இதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதைச் சொன்னால் அனைவரும் அவர் பின்னால் அணிதிரளலாம், எனினும் இந்த குயிலின் வேலை கூடுகளை கலைப்பது தான் என்பதை அனைவரும் நினைவில் கொள்க. எந்த மந்தையிலும் சேராத இந்த புனித ஆடு மலத்தைப் பற்றி கவலைப்படுவதும் கூட காரணமாகத்தான், இந்த கவலை மனிதர்கள் மலத்தைச் சுமக்கிறார்களே என்றெண்ணி வந்த கவலை அல்ல..

              • சொல்லி முடித்த உடனே ஆஜராயிட்டாறு. பழக்கதோஷம் போகாது.

                • அது சொல்லாமலே நீங்க அதுக்காக ஆஜராகும் போது நான் மக்களுக்காக நீங்கள் சொல்லும் முன்பே கூட ஆஜராகலாம் நண்பரே. சரி மலம் அள்ளுவதை ஒழிக்க என்ன திட்டம்.

                  • நீதான் மலம் அள்ளியே ஆகவேண்டும் என்று அடித்து இழுத்து வருபவனையும், நீ பணம் கொடுத்தால் போதும், மலத்தைக்கூட அள்ளுவேன் என்று சொல்பவனையும் ஒழித்துக் கட்டினால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும்.

                    • ஆணவத்தில் சொல்பவனுக்கும் வயிற்று பசிக்கு செய்பவனுக்கும் வித்தியாசம் இல்லையா நண்பரே? அரசாங்கம் தான் சம்பளம் கொடுத்து மலம் அள்ள சொல்கிறது.
                      வேறு வேலைக்கு சென்றாலும் விரட்டி அடிக்கப்படும் போது வேறு வழியின்றி இதை செய்கிறார்கள். தன் சாதி அடையாளத்தை மறைக்காமல் அவர்களால் வேறு வேலை தேடி செல்ல முடிவதில்லை.ஒரு முறை நீங்கள் இந்த வேலைக்கு உங்கள் ஊர் நகராட்சியில் சேர்ந்துவிட்டால் பின்னர் நீங்கள் கொத்தடிமை தான்.

    • கஷ்டப்பட்டு கொலையாளிகளுக்கு வக்காலத்து வாங்கற வேலையெல்லாம் நீங்க பாக்கவேண்டாம் பாய்…..அதுக்குத்தான் பெட்ரோ டாலரில் முக்குளிக்கும் வினவு மாதிரியான முற்போக்கு வியாதிகளை வேலைக்கு வச்சிருக்கீங்கள்ல……நீங்க போய் அடுத்த ஆளுக்கு ஸ்கெட்ச் போடுங்க…..

    • முஸ்லிம்கள் மதத்துக்காக ஹிந்துக்களை வெட்டுவது இன்ற நேற்றல்ல. 1926 ல் ஆர்யா சமாஜ் தலைவரும் , இந்திய தேச விடுதலை இயக்கத்தில் பெரும் பங்கு வகித்தவருமான சுவாமி ஸ்ராத்ததானந்தரை ரஷித் அலி என்ற மத வெறியன் வெட்டிக் கொன்றான். அப்போது குஜராத் கலவரம் நடந்ததா அல்லது மோடி இருந்தாரா?

  31. வெள்ளையப்பனும் ஆடிட்டர் ரமேசும் நெருங்கிய நண்பர்கள் என்று மாலைமலர் செய்தித்தாள் மட்டும பதிவு செய்தது. Dated: July 20th, 2013, Page 5. (கோவை பதிப்பு)

    http://epaper.maalaimalar.com/showtext.aspx?parentid=31064&boxid=31343546&issuedate=coimbatore/2072013

  32. நினைத்தேன். எழுதிவிட்டீர்கள். இது…இதுதான் வினவு. இங்கேதான் வினவு உயர்ந்து நிற்கிறது.

    வேலூர் ரெட்டியின் கொலைக்கான பின்னணி கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது வேலூர் மக்களுக்கும் தெரியும். இந்த விவகாரத்தால் வேலூரே சிரிப்பாய் சிரிக்கிறது. இது தமிழக காவல் துறைக்கும் தெரியும். பா.ஜ.க தலைமைக்கும் தெரியும். இதை பகிரங்கப்படுத்தினால் பா.ஜ.க மானம் கப்பலேறிவிடும். அந்த வகையில் தமிழக காவல் துறை பா.ஜ.க வுக்கு நல்லதுதான் செய்துள்ளது.

    பொதுவாக பெரும்பாலான கொலைகள், தாக்குதல்கள் பணம் – சொத்து- கட்டப்பஞ்சாயத்து தொடர்பானதாகவோ அல்லது பெண் சகவாசம் தொடர்பானதாகவோ அல்லது தொழில் போட்டி தொடர்பானதாகவோதான் இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் கொலை செய்யப்பட்டதும் கட்டப் பஞ்சாயத்து விவகாரத்தில்தான் என்பது தெரிந்த பிறகு முதலில் வன்னியர்கள் மீது குற்றம் சாட்டிய அக்கட்சியின் தலைவர் பிறகு மௌனமானதும் காஞ்சிபுரம் மக்களுக்குத் தெரியாதா என்ன? நவீன ரவுடிகள்!(http://www.hooraan.blogspot.com/2012/12/blog-post_31.html)

    ஒரு ஊரில் ஒருவர் மீது நடத்தப்படும் தாக்குதல் மற்றும் கொலைக்கான காரணம் மற்றவர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் போகலாம். ஆனால் உள்ளூர் மக்களுக்கு அதிலும் குறிப்பாக அந்த நபர் வாழும் தெரு-பகுதி மக்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கிறது. எதிரிகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் போலீசு – கேசு என்கிற இழுத்தடிப்புகளுக்கு யாரும் தயாராய் இருப்பதில்லை. அதனாலும் பல வழக்குகளில் உண்மை வெளிவருவதில்லை.

    இந்து முன்னணியின் வெள்ளையப்பன் உள்ளிட்ட பிற இந்து அமைப்புத் தலைவர்கள் மீதான தாக்குதல் மற்றும் கொலைக்கான காரணங்கள் தமிழக காவல் துறைக்குத் தெரியாமலா இருக்கும்? எதை வெளியிட வேண்டும் – எதை வெளியிடக் கூடாது என்பதெல்லாம் சம்பந்தப்பட்டவர்களின் பண பலம், அரசியல் பலம், சாதி பலம் உள்ளிட்ட பல்வேறு கூறுகளை வைத்துதான் தீர்மானிக்கப்படுகிறது. அவ்வாறு காரணங்கள் மறைக்கப்படும் போது அந்தக் காரணங்களை வெளி உலகிற்குக் கொண்டு வந்து நீதி கேட்டு போராடுவதுதான் சரியானது. அதைவிடுத்து பொதுவாக இஸ்லாமியர்கள் மீது பழி சுமத்துவது – பயங்கரவாதிகளின் தாக்குதல் என கூச்சல் போடுவது என்பது அரசியல் ஆதாயம் தேடுவதைத் தவிர வேறு எதுவும் கிடையாது.

    • அய்யா பூரான்……

      ரியல் எஸ்ட்டேட் , கட்டப்பஞ்சாயத்துக்கெல்லாம் கொலைநடக்கும்னா தமிழ்நாட்டுல ஒரு அரசியல்வாதி கூட மிச்சம் இருக்க மாட்டார்கள்……

      கடந்த ஆட்சியில் அப்பாவி மக்களை மிரட்டிநிலங்களை மிரட்டி பிடுங்கிய அரசியல்வாதிகள் இன்னைக்கும் ஊருக்குள்ள நடமாடிக்கிட்டுத்தான் இருக்கான்…..

      அதென்ன இந்து இயக்க அரசியல்வாதிகள் மட்டும் ரியல் எஸ்டேட் வியாபாரம் பண்னுனா உடனே கொல்லப்படுறாங்க…?

  33. இவ்வளவு நாகரீகம், படிப்பறிவு முன்னேறிய இந்த காலத்திலேயே ஒரு 3 சதவீத பார்பனர்கள் மற்ற மக்களை இழிவு படுத்தும் கொள்கையை வைத்துக்கொண்டு பெரும்பாண்மைய மக்களை இப்படி ஆட்டுவிக்கிறார்கள் என்றால்.. அந்த காலத்தில் இவர்களின் அடித்த கொட்டத்தை என்ன வென்று சொல்வது? நம் மூதாதையர்களை ஜந்துக்களை போல் தான் நடத்தி இருப்பார்கள். இந்த இழிநிலைக்கு சிந்திக்க தெரியாத நம் மக்களை குறை சொல்வதா ?… இல்லை கடவுளை காட்டி நம் மக்களின் சிந்தனையை கட்டிப்போட்ட பார்பனனின் திறமையை மெச்சுவதா ? பார்ப்பனர்களின் உயிர் நாடியை பிடித்த பெரியாரின் லட்சியம் முழுமையாக வெற்றி பெறாமல் பார்பனர்களிடம் தோல்வி அடைந்தது மிக வருத்தமானது. மீண்டும் ஒரு பெரியார் வந்து இவர்களின் கொட்டத்தை அடகினால் ஒழிய இவர்களை ஒடுக்கவே முடியாதென்றே தோன்றுகிறது.

  34. ஒரு இஸ்லாமியர் கொல்லப்பட்டால் ஒடனே, அது இந்து தீவிரவாதம் ;
    ஒரு இந்து கொல்லப்பட்டால் கொலையாளி இஸ்லாமியனவே இருந்தாலும் அது இந்து தீவிரவாதம் ;
    ஒரு இந்து கொல்லப்பட்டு கொலையாளி இஸ்லாமியராக இருந்து அவர் கைது செய்யப்பட்டாலும் அதுவும் இந்து தீவிரவாதம் ;

    இல்லையா ?

    // அதாவது ஜலகண்டேசுவரரது உண்டியலை அரசிடமிருந்து பார்ப்பனர்கள் கைகளுக்கு மாற்றிட போராடுவோம் என்கிறார். //

    அது எப்படிப்பா, இந்துக்களின் வழிபாட்டு இடங்கள் மட்டும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து சீரழியனும். இஸ்லாமிய / கிறித்தவ வழிபாட்டிடங்கள் அந்தந்த மத நிறுவனகள் கட்டுப்பாட்டிலேயே இருக்கலாம். அதை அரசு கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முயற்சி பண்ணினா ஆதரவு கொடுக்கும் வக்கோ வாக்கோ நேர்மையோ இருக்கா ?

    கொஞ்சம் நெஞ்சுல தில்லு இருந்தா மசூதிகளை அரசு கட்டுப்பாட்டுல கொண்டுவரணும்னு மட்டும் லேசா முனகிப்பாருங்களேன். அதுக்கெல்லாம் வாக்கு இருந்தா நீங்க ஏன் இப்படி கேவலப்பட்டு நிக்கப்போரீங்க ?

    காறி உமிழனும் போல இருக்கு. என் எச்சிலை இழிவுபடுத்திக்கொள்ளவேண்டாம் என்பதால் அமைதி காக்கிறேன்.

    • நெத்தியடி …பொன் முத்துக்குமார்……பாராட்டுக்கள்……….

  35. பாரதிய ஜனதா, இந்து முன்னணியின் தேர்தலை ஒட்டிய விஷமப் பிரச்சாரமும், ஆனால் அதிர்ச்சி தரும் உண்மை நிலையும் ஆதரங்களுடன்..!

    இங்கு இணைத்துள்ள சுற்றரிக்கைகளைப் (நோட்டீஸ்கள்) போல இன்னும் பல இடங்களிலும், அணைத்து செய்தி ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பாரதிய ஜனதா, இந்து முன்னணி போன்ற இந்துத்துவா சக்திகள் ஆடிட்டர் ரமேஷ் கொலையை இந்து முஸ்லிம் பிரச்சனையாக்கி மக்களிடையே விஷமப் பிரச்சாரத்தையும், மதக்கலவரத்தை ஏற்படுத்துவும், மக்களிடையே பீதியை உருவாக்கி வருகிற மக்களைவை தேர்தலில் சில சீட்கலாவது பெற திட்டமிடுகிறார்கள்.

    இவர்கள் கூறுவதில் உண்மை உள்ளதா…? இங்குள்ள நோட்டிசைப் போல இன்னும் பல இடங்களிலும் இவர்கள் பரப்பும் இந்த கூற்று உண்மையா..?

    அதிர்ச்சி தரும் உண்மைகள் செய்தி ஊடகங்களின் ஆதாரத்துடன்..

    முஸ்லிம் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர் என்று வேடம் போட்டு பந்த் நடத்தும் ப.ஜ.க. வின் வேஷம் கலைக்கும் ஆதாரங்கள். தேவையான இடங்களில் பகிருங்கள் இந்தியர்களே, தமிழர்களே..!.

    1. 4-7-2012 இல் நாகையில் பா.ஜ.க. மாநிலச் செயற்குழு உறுப்பினர் புகழேந்தி என்பவரை கொன்ற வழக்கில் தேடப்பட்ட “முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த முனீஸ்வரன் சரண்”.

    http://www.dinakaran.com/News_Detail.asp?nid=18393

    2. 23-10-2012 இல் வேலூரில் பா.ஜ.க. மருத்துவ அணியின் மாநிலச் செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி என்பவரின் கொலையில் கைதானவர்களின் விவரம். கைதான ஆறு பேரும் இந்துக்கள்.

    http://www.dinakaran.com/News_detail.asp?Nid=31815

    3. 19-3-2013 அன்று பரமக்குடி நகராட்சி பா.ஜ.க. முன்னாள் கவுன்சிலர் முருகன் கொலை வழக்கில் கைதானவர்கள் விவரம். இதில் ஒரு இந்துவும், மூன்று முஸ்லிம்களும் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் காரணம் இந்து முஸ்லிம் பிரச்னை அல்ல. சொத்து தகராறு.

    http://www.thinaboomi.com/2013/04/06/20905.html

    4. 8-7-2013 அன்று ராமேஸ்வரத்தில் ஒன்றிய இந்து முன்னணி செயலாளர் குட்டநம்பு என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் மாந்தோப்பு ராமச்சந்திரன், முருங்கவாடி சண்முகநாதன் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர்.

    http://www.dailythanthi.com/node/361658

    5. 1-7-2013 அன்று வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் என்பவர் கொலையுண்ட வழக்கில் போலீசார் இன்னும் விசாரணை செய்து வருகின்றனர்.

    ஆக, மேலே சொல்லப் பட்ட வழக்குகளில் ஒருவர் கூட இந்து முஸ்லிம் மதப் பிரச்சனையால் கொலை செய்யப்படவில்லை என்பது மிகத் தெளிவு.

    இவ்வளவு தெளிவான ஆதாரங்கள் இருந்தும், உண்மைகள் இருந்தும், அயோக்கியத்தனமாக மக்களை பிரித்தாளும் கொள்கையை விதைத்து தமிழகத்தில் எப்படியாவது 1998ன் சூழலை திரும்ப கொண்டு வந்து பிஜேபிக்கு சில சீட்களாவது வாங்க இவர்கள் நடத்தும் வெறியாட்டத்தை நல்லவர்களே, நியாயவான்களே கண்டு கொள்ளுங்கள். இவர்களை அடையாளம் காணுங்கள்.
    மக்களை சாதி, மதத்தால் பிரித்து கலவரத்தை தூண்ட நினைக்கும் இத்தகைய மனிதகுல விரோதிகளை இனம் கண்டு தனிமைப் படுத்துங்கள்.

    நன்றி :
    நிகழ்வுகளின் தொகுப்பு : நிழல்களும் நிஜங்களும்
    ஆதாரங்கள் தேடல் : நான்.

    • ராசா இப்ன் மொஹிதீன், நீவிர் முட்டாளா இல்லை மற்றவர்களை முட்டாளாக்கப் பார்க்கிறீர்களா ?

      கொலை செய்தவர்கள் இந்துவாக இருக்கலாம். ஆனால் அவர்கள், நீங்கள் காசும் குவார்ட்டரும் பிரியாணிடும் கொடுத்து என் மேல் எவிவிட்டாலும் நான் அதே காசும் குவார்ட்டரும் பிரியாணிடும் கொடுத்து உங்கள் மேல் எவிவிட்டாலும் செய்வார்கள். காரணம் அவர்களெல்லாம் கூலிப்படைகள். வெறும் அம்புகள்.

      ஒருத்தர் கூட மதவெறியால் கொள்ளப்படவில்லையாம். யப்பா யப்பா … கேக்குறவன் கேனையன்னா எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டுதுன்னு சொல்வீங்க போல.

      • You Idiot how do you presume that they were killed because of religious hatred.First read the article properly and answer. Do you find the truth in extra sense . too foolish.

        • If it is proven,will you change your stance and reconvert?

          why dont you go and discuss melvisaaram in vellore?

          why is vinavu not protesting second hand treatment of Hindus there by the Urdu muslims?

          • நீங்கள் சொல்வது பகுத்தறிவு சம்பந்தப்பட்டது. பகுத்தறிவு சம்பந்தப்பட்ட விசயத்தை இந்துக்களிடம் தான் பேச முடியும். மற்ற சமயங்களுக்கும் பகுத்தறிவுக்கும் என்ன சம்பந்தம்? கொல்லன் தெருவில் தான் ஊசி விற்க முடியும். குரங்கு கூட்டத்தில் அல்ல.
            வினவு இந்த மாதிரி தற்கொலை முயற்சி எல்லாம் செய்யாது. பிழைப்பை கெடுக்க வழிசொல்கிரீர்கள். உங்கள் நல்லெண்ணம் புரிகிறது.

            • If Vinavu can do compromise somewhere,they are the same as everyone.

              A new idealist shows up every 10 years saying naan thaan nallavan,thats why one has to very careful about the new born idealists.

            • மண்ணு சோறு திங்கிறது, மரத்தை சுத்தி வர்ரது, பாடை காவடி – பன்னாடை காவடின்னு எடுக்குறது இன்னும் …. இதெல்லாம் உங்களுக்கு பகுத்தறிவா இருக்கு. அதை செய்யாதேன்னு சொல்றவனெல்லாம் உமக்கு குரங்காத் தெரிகிறது. வாழ்க உங்கள் பகுத்தற்ற்ற்றிவு!!!

      • ராசா பொன்.முத்துக்குமார்,

        அடடா.. அடடா.. குட்டு ஒரே நாளில் வெளிப்பட்டது விட்டது என்று என்ன வருத்தம்.. என்ன எரிச்சல்..!!

        நீங்கள் சொன்ன வாதத்தில் இருந்தே தெரிகிறது நீங்கள் சொன்னது எவ்வளவு முட்டாள்தனம் அல்லது நீங்கள் எவ்வளவு விஷமுடயவர்கலாக இருக்கிறீர்கள்.

        இந்துத்துவா பயங்கரவாதிகளும், சில மீடியாக்களும், உங்களைப் போன்றவர்களும் இந்த கொலைகளைத்தான் ஒரு வருடத்தில் எங்கள் மீது நடந்த கொலைகள், முஸ்லிம் தீவிரவாதிகள் செய்கிறார்கள் என்று ஊர் முழுவதும் அழுது மக்களின் அனுதாபத்தை பெறத்துடித்துக் கொண்டு இருகீர்கள். ஆனால் உண்மையோ இந்த அத்தனை கொலைகளும் வேறு வேறு நோக்கங்களுக்காக, இந்துகக்களாலேயே நடத்தப்பட்டுள்ளது.

        உண்மை அங்ஙனம் இருக்க.. அதை வெளிக்கொண்டு வந்ததும் என்ன ஒரு புத்திசாலித்தனமான (???!!) பதில் அதற்க்கு..!

        காவல் துறை இவர்களை கைது செய்துள்ளது. சில கொலைகளுக்கு காரணமும் கண்டுபிடிக்கப்ட்டுள்ளது. இவர்கள் வெறும் அம்புகள் தான் என்பதற்கு என்ன ஆதராம்.? நீங்கள் போய் பார்த்தீரா..?

        கொன்றவர்கள் இந்துக்கள் தான், காரணம் சொந்தப் பிரச்சனை என்று நான் ஆதாரம் கொடுத்துள்ளேன். நீங்கள் இவர்கள் அம்புகள் தான் எனபதற்கு ஆதாரம் கொடுங்கள்… கொடுக்க முடியவில்லையென்றால் உங்கள் நீலிக் கண்ணீரை வீடுகளில் வைத்துக் கொள்ளுங்கள். வீதிகளில் வேண்டாம். அதை நம்புவதற்கு இப்பொழுது மக்கள் முட்டாள்களாக இல்லை.

        இது 1998 இல்லை.

        • உலகம் முழுவதும் தீவிரவாதம் செய்து அடிவாங்குவது யார்? எந்த மத பயங்கரவாதிகள்…

          Where the Muslims are not happy:

          They’re not happy in Gaza.
          They’re not happy in Egypt.
          They’re not happy in Libya.
          They’re not happy in Morocco.
          They’re not happy in Iran.
          They’re not happy in Iraq.
          They’re not happy in Yemen.
          They’re not happy in Afghanistan.
          They’re not happy in Pakistan.
          They’re not happy in Syria.
          They’re not happy in Lebanon.
          They’re not happy in Indonesia.

          So, where are they happy?

          They’re happy in Australia.
          They’re happy in England.
          They’re happy in France.
          They’re happy in Italy.
          They’re happy in Germany.
          They’re happy in Sweden.
          They’re happy in the USA.
          They’re happy in Norway.

          They’re happy in almost every country that is not Islamic!

          And who do they blame [for their unhappiness]?

          Not Islam…not their leadership…not themselves… They blame the countries in which they are HAPPY! And they want to change the countries in which they’re happy, to be like the countries they came from, where they were unhappy.

          Try to find logic in that.

    • மொய்தீன் பாய்…….

      மதுரை லீலாவதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பதினாறு வயது சிறுவனுக்கு பேசப்பட்ட கூலி எவ்வளவு தெரியுமா? ஐனூறு ரூபாயும் ஒரு குவார்ட்டரும்……

      கொலையாளிதான் முதலில் மாட்டுவான்……கொலை செய்ய திட்டம் போட்டவன் பிறகுதான் மாட்டுவான்……அதுக்கு மேல விசாரணை போக நீங்க விட்டாத்தானே?

      உடனே கமிஷனர் ஆபீசை முற்றுகை இடுவீங்க…..அப்புறம்?

      • என்ன ஒரு கொடுமை. ஒரு கொலையில் கூட மதத்தீவிர வாதம் இல்லை என்று ஆதரத்துடன் கூறியும் கூட.. இந்தக் கொலைகளை வைத்து அரசியல் ஆதாயம் காண நினைக்கும் உங்களை எல்லாம் என்ன சொல்வது..????

        நான் தெளிவான ஆதாரத்தை கொடுத்துள்ளேன், நீங்கள் வெறும் யூகத்தை வைத்துப் பேசுகிறீர்கள்.

        தெளிவான ஆதரத்தை மறுத்து வெறும் யூகத்தை மட்டும் வைத்துக் கொண்டு இஸ்லாமியர்கள் மீது பழியைப் போட நினைக்கும் உங்கள் கருத்தைப் படிக்கும் அனைவருக்கும் உங்கள் மனதில் உள்ள வெறும் விஷம் தான் தெரியும் சான்றோனே..!

        • நான் பிஜேபி காரனோ, ஆதரவாளனோ அல்ல என்பதை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கின்றேன். ஆடிட்டர் கொலையில் இந்து மதத்திற்கு எதிராக நடக்கும் கொலைகள் என்பதைதான் குறிப்பிட்டார்களே தவிர ஒரு பிஜேபி ஆள்கூட இது முஸ்லீம் தீவிரவாதிகளின் செயல் என்று கூறவில்லை. அது புத்த கயாவில் நடக்கும் குண்டு வெடிப்பாகட்டும், டெல்லியில் நடக்கும் குண்டுவெடிப்பாகட்டும்…. எங்கு நடந்தாலும் இஸ்லாமியர் செயல் என்ற வார்த்தையை யாருமே குறிப்பிடுவதில்லை. ஆனால் எது நடந்தாலும் அடுத்த ஐந்து நிமிடத்தில் இது இஸ்லாமியர் செய்தது என்று சொல்லிவிடுவார்களே என்று கூக்குரலிடுவது, சிலாகிப்பது இஸ்லாமியர்கள்தானே தவிர பிஜேபியினர் கிடையாது. அத்வானி செல்லும் வழியில் குண்டுவைத்தது குறித்து செய்தி வந்தபோதும், இதுவும் இஸ்லாமிய செயல்தான்னு சொல்லிடுவீங்களே என்று இணையம் முழுவதும் கிண்டல் அடித்தார்கள். இன்று யார் செய்தது, போலீஸ் யாரை தேடுகின்றார்கள் என்பது உறுதியானதும் வாயை மூடிக்கொண்டுவிட்டார்கள். இதேதான் ஆடிட்டர் கொலைக்கும் பேசினார்கள். இப்போது என்ன ஆயிற்று? நான் திருநெல்வேலியில் இருப்பவன். மேலப்பாளையத்தில் என்ன நடக்கின்றது என்பது இங்கே வசிக்கும் அத்தனை பேருக்கும் தெரியும். நேற்று அள்ளிய வெடிப்பொருட்கள் ஒரு சாம்பிள் மாதிரிதான். இங்கே வீதிவீதியாக ரெய்டு நடத்தினால்தான் நாம் எவ்வளவு பயங்கரமானவர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பது உலகுக்கு தெரியவரும். அந்த ஒரு வீட்டுக்குள்ளேயே ரெய்டு செய்யவிடாமல் ஒரு பெரிய கூட்டம் கூடி மறைத்ததை நான் கண்ணால் பார்த்தவன். என்ன ஒரு ஆக்ரோசமான கூட்டம். உள்ளே புகுந்து பிஜேபி காரர்களா எல்லாவற்றையும் அள்ளினார்கள்? போலீஸ்தான் அள்ளியது. இத்தனைக்கும் அதில் இஸ்லாமிய காவல் அதிகாரியும் இருந்தார். இப்போது என்ன சொல்லப்போகின்றார்கள் நமது இஸ்லாமிய அனுதாபிகள்? நான் இந்துமதத்தை சார்ந்தவன் அல்ல. நானும் பிறப்பால் தலித்தான். இங்கே திராவிட கட்சிகளாகட்டும், கம்யூனிஸ்ட் அமைக்களாகட்டும், இந்துக்களுக்கு எதிரான போராட்டம் என்று சொல்லி இஸ்லாமிய கூட்டங்களை ஆதரிப்பது பாம்புக்கு பால் வார்க்கும் செயல். அவர்கள் கூட்டம் சேரும் வரை உங்களை பயன்படுத்திகொள்வார்கள். அவர்கள் வலிமை பெற்ற அடுத்த கணம் என்ன நடக்கும் என்பது உலக நடப்புகளை பார்த்தாவது நாம் உணரவேண்டும். இந்த ரெய்டுகளை மேலப்பாளையத்தோடு நிறுத்திவிடாமல், காயல்பட்டினம், கடையநல்லூர் என்று வரிசையாக தொடரவேண்டும்.

          • // இந்துக்களுக்கு எதிரான போராட்டம் என்று சொல்லி இஸ்லாமிய கூட்டங்களை ஆதரிப்பது பாம்புக்கு பால் வார்க்கும் செயல். அவர்கள் கூட்டம் சேரும் வரை உங்களை பயன்படுத்திகொள்வார்கள். அவர்கள் வலிமை பெற்ற அடுத்த கணம் என்ன நடக்கும் என்பது உலக நடப்புகளை பார்த்தாவது நாம் உணரவேண்டும்.//

            100% true brother. If we are liberal/secular then we should only support liberals and secularists. To oppose one type of fundamentalism, we should not support another type of fundamentalism.

  36. இந்து பாசிச கும்பலுக்கு மேலும் ஒரு பிரச்சினை கிடைத்து விட்டது முஸ்லிம்கள் மீது வீண் பழி சுமத்தி அரசியல் ஆதாயம் தேடுவதற்கு.கந்து வட்டியும் கட்டப் பஞ்சாயத்தும் கள்ளக் காதலும் இவர்களின் படு கொலைகளுக்கு காரணங்களாக இருந்த போதிலும்,ஏதோ முஸ்லிம்கள்தான் இவங்களை கொன்று விட்டது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தி கலவரங்களை தூண்டி ரத்தம் குடிக்க இவர்கள் முயலுகிறார்கள்.இந்த தீய சக்திகள் வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்தொழிக்கப் பட வேண்டும்.இவர்களின் சூழ்ச்சி வெற்றிபெறாமல் தடுக்க மீடியாக்கலும் முக்கிய பங்காற்ற வேண்டும்.

  37. //தமிழகத்தில் இந்துமதவெறியருக்கு இடமில்லை என்பதை நிலைநாட்ட வேண்டும்.//

    இந்து மத வெறியர்களுக்கு மட்டுமல்ல தமிழகத்தில் எந்த மத வெறியர்களுக்கும் இடமில்லை என்பதை நிலைநாட்ட வேண்டும் என்று கூறியிருந்தால், வினவுவின் நடுநிலையையும், மதச்சார்பின்மையையும் பற்றி யாருக்கும் சந்தேகம் ஏற்பட்டிருக்காது. 🙂

    • ஆரம்பித்தாயிற்று இந்த இந்துக் கோமான்களின் பிதற்றல். எத்தனை முறை கூறியாகிவிட்டது.. வினவில் இஸ்லாமிய மதவெறியர்களைக் கண்டித்து பல கட்டுரைகள் வந்துள்ளன.

      //தமிழகத்தில் இந்துமதவெறியருக்கு இடமில்லை என்பதை நிலைநாட்ட வேண்டும்.// என்று கூறினால் முஸ்லீம் மதவெறியர்களுக்கு இடமுண்டு என்ற அர்த்தமா?.
      தோழர்களுக்கு இந்த நடுநிலைப் பசப்பல்களிலெல்லாம் நம்பிக்கை இல்லை. இந்தியாவைப் பொறுத்தவரை இஸ்லாமியத் தீவிரவாதத்தை வளர்ப்பவர்கள் பா.ஜ.க. சங் பரிவார், ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து மதவெறிக் கும்பல்தான். இஸ்லாமியத் தீவிரவாதம் இல்லையென்றால் பா.ஜ.க வளர முடியாது. இஸ்லாமியத் தீவிரவாதம் இருந்தால்தான் பா.ஜ.க உள்ளிட்ட சங்கப்ப்ரிவாரங்கள் வளரமுடியும். இஸ்லாமியத் தீவிரவாதத்தை காரணமாக வைத்துதான் இந்து மதவெறியர்கள் கொலைவெறியாட்டம் போட முடிகிறது. ஆகவே இஸ்லாமியத் தீவிரவாதத்தைக் கண்டிப்பவர்கள் முதலில் பா.ஜ.க உள்ளிட்ட சங்கப்பரிவாரங்களைத்தான் கண்டிக்க வேண்டும். இதில் நடுநிலையெல்லாம் இருக்க முடியாது.

      காவிப் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தும் ம.க.இ.க. வின் “அசுரகானம்” ஒலிப்பேழையில் ” இந்து மதவெறியர்களின் தாக்குதல்களால் சில் இஸ்லாமிய நண்பர்கள் இஸ்லாமிய மதவெறிக்கு இறையாகிவிடுகிறார்கள். இது தவறு. விசத்தில் நல்லது எது? கெட்டது எது? இந்து மதவெறியை முறியடிக்க வேண்டுமானால் ஒடுக்கப்பட்ட இஸ்லாமிய மதங்கள் மதச்சார்பற்ற, புரட்சிகர, ஜனநாயக அமைப்புகளின் கீழ் அணி திரள வேண்டும். உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட சக்தி இந்து மதவெறி பாசிசக் கும்பலை அடித்து வீழ்த்தட்டும்” என்று இருக்கும். இது தான் வினவின் கண்ணோட்டம்.

    • இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாத்தின் ஊற்றுக்கண் இந்துமதவெறிப் பாசிசப் பயங்கரவாதம் தான். இதை விளக்கும் கட்டுரைகள், பேச்சுக்கள்.
      தமிழகத்தை இந்துத்துவத்தின் கல்லறையாக்குவோம்! – மருதையன்
      1. http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3851:maruthayan91&catid=111:speech&Itemid=111

      2. http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3850:maruhtayan92&catid=111:speech&Itemid=111

      3. http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3849:maruthayan81&catid=111:speech&Itemid=111

      4. http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3848:maruthayan82&catid=111:speech&Itemid=111

      குஜராத் படுகொலையைக் கண்டித்து… தோழர் மருதையன் உரை
      1. http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1977:gujrat1&catid=111:speech&Itemid=111

      2. http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1976:gujrat2&catid=111:speech&Itemid=111

      3. http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1975:gujrat3&catid=111:speech&Itemid=111

      4. http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1974:gujrat1maru&catid=111:speech&Itemid=111

      வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!
      https://www.vinavu.com/2008/07/29/thebomb/

  38. விசுவரூபம் விவகாரத்தில் மெட்ராஸ் ரோட்டில் கதகளி ஆடியவர்கள் என்ன மதவிறியர்கள்…

    உண்மையில் இந்தியாவில் இந்து மதத்தில் தான் மதவெறியர்கள் குறைவு….

    (இத வாதத்திற்க்கு எடுத்துக்கொள்ளும் முன் மனதில் ஒருநிமிடம் யோசித்துப்பார் உண்மை புரிய்ம்..

    அவர யார் கொன்றிருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்….அவர் கொலையை கண்டித்த அனைத்து அரசியல் கட்சிகளும் பாராட்டப்படவேண்டியவை…

    • //உண்மையில் இந்தியாவில் இந்து மதத்தில் தான் மதவெறியர்கள் குறைவு….// ஆமாம். உண்மை .இங்கு கூட பின்னூட்டம் இட்டவர்களில் நாலு பேருதான் இந்து மத வெறி நாய்கள்.

      • வினவு….. உங்கள் நடுநிலைமை புல்லரிக்க வைக்கிறது…… இந்து இயக்க ஆதரவாளர்களை நாய்கள் என்று குறிப்பிடும் கருத்தை வெளியிடுவீர்கள்….அதற்கு பதிலடி கொடுத்தால் வெளியிடமாட்டீர்கள்….. மாற்றுக்கருத்துகளுக்கு உங்கள் பொன்னுலகில் என்ன இடம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே?

      • நீங்க வேண்டாம் வேண்டாம் என்றால் நாங்க சும்மா விட்டுவிடுவோமா ??? பூணுல் மாட்டி RSS TATTOO குத்தி தான் விடுவோம்

        இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்த்தா நீ RSS ஆன்னு கேக்கறாங்க, காங்கிரஸ் ஊழல்களை எதிர்த்தா நீ BJP ஆன்னு கேக்கறாங்க, திராவிட பகுத்தறிவு பன்னாடைங்களை எதிர்த்தா நீ அய்யரான்னு கேக்கறாங்க.

        நான் அய்யரும் இல்லை, எந்த கட்சியிலும் இல்லை, எந்த சங்கத்துலேயும் இல்லை. நான் ஒரு சராசரி மனிதன், இந்தியன், தமிழ் தான் தாய்மொழி
        கடவுளை வணங்கும் போது ஹிந்து கடவுள்களை வணங்குகிறேன் அது என் மதம், தனிப்பட்ட விஷயம். என் பெற்றோருக்கு நான் பிறந்ததை போல, ஹிந்து மதத்தில் பிறந்தேன். அதை எதற்காகவும் மாற்றிக்கொள்ள முடியாது.

        என் தாய் மொழி தமிழ், அதை மறுக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது. இதற்கும் மேல எனக்கு அடையாளங்கள் தேவை இல்லை. நான் வேலை செய்யுமிடத்தில் என்னை பார்பவர்கள் கேட்பது “நீங்கள் இந்தியரா?” என்று மட்டும் தான். என் உடையில், உடலில், மொழியில் எந்தவித வேறுபாட்டையும் நான் கொண்டிருக்க வில்லை.

        எனது பதிவுகள் மட்டும் ஏன் மத சம்மந்தப்பட்டுள்ளது என்று கேட்பவர்களுக்கு என் பதில் இது தான் “நான் வேறு நாட்டில் போய் ஹிந்து மதத்தை உயர்த்தி பேசவில்லை, நம் நாட்டில் அதை எதிர்பவர்களைத்தான் எதிர்கிறேன்………………

        • பையா – உங்கள் கருத்து மிக்க சரி… மனிதனுக்கு மதம் மிக முக்கியம். மார்க்கம் இல்லாமல் வாழும் மனிதன் முரடனாக தான் இருப்பான்…

          முற்போக்கு பார்வையில் மதத்திற்கு இடமில்லை. திருமணம் தேவையில்லை, குடும்பத்திற்கு இடம் இல்லை…. சவப்பெட்டியில் படுத்து இருந்தாலும் உழைத்தால் தான் சோறு… பிள்ளையை அப்பன் சுமக்க வேண்டியதில்லை என பல இல்லைகள் உள்ளது அது…

          ஹிந்துக்களும், இஸ்லாமியரும், க்ரிதவரும் இவர்களை பொறுத்தவரை ஒன்றுதான்.. இவனுக்கு ஒரு பதிவு , அவனுக்கு ஒரு பதிவு என மக்கள் தொகை பொறுத்து பதிவிட்டு, அவர்களின் கருத்து மோதலை கூர்ந்து கவனித்தல் ஒரு வகை முற்போக்கு தனமாம்…. 🙂

    • பயர் என்ற படம் வெளி வந்த போது நீங்கள் ஆடியது என்ன குச்சுப்புடியா? பரதநாட்டியமா?

    • இணையதளங்களை பார்த்தாலே தெரியும் மதவெறியர்கள் யார் என்பது ?
      ஹரிகுமார் வெறி யாருக்கு வரும்?

  39. பெரும்பாலான அரசியல்வாதிகளின் கொலை தனிப்பட்ட விரோதத்தினால் நடப்பதுதான். இதில் சாதி சமய சாயம் பூசுவது ஊடகங்களின் விபச்சாரம். விபச்சாரத்தை மட்டுமே நம்பி பிழைப்பது அவர்களின் முடிவு. மக்கள் விபச்சாரி கூற்றை நம்ப வேண்டிய அவசியம் என்ன?
    ஒரு நாய் செத்தால் கூட அதை சாதி சமய முலாம் பூசி சில்லறை பொறுக்கும் ஊடகங்களில் ஒரு சில இந்து என்றால் ஒரு நியாயமும், இசுலாம், கிருத்துவம் என்றால் ஒரு நியாயமும் வைத்து பேசுவது உயிர்பயத்தினாலே. சிலர் சில்லறை வாங்கும் நிலைமையும் உண்டு. இவர்களின் சித்தாந்த பட்டறையில் பழைய ஈயம் பித்தளை மட்டுமே பற்றவைக்கப்படும். இரும்பு பற்றவைக்கும் எந்திரம் வாங்கமாட்டார்கள்.
    இந்து டீ ஸ்டால் என்று பேர் வைத்து சாதிக்கொரு டம்ளர் போட்டு தினமும் அடிதடியுடன் யாவரம் பார்க்கும் இவர்கள் கடைக்கு பேர் மாற்றி ஆளில்லாத டீ கடையில் டீ ஆற்ற வேண்டும் என்று இந்துக்கள் கேட்பது தர்மமா?

  40. வினவு; மது குடித்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட ஒரு தருமபுரி தர்குறிக்கு ஆதரவாகவும்,வன்னியர்களுக்கு எதிராகவும் பக்கம் பக்கமாக எழுதினாயே.

    *பா.ஜ.க ரமேஷ் கொலைக்கு அனுதாபம் தெறிவிக்க வக்கில்லை.
    தமிழகத்தில் தலித்,முஸ்லிம்,கிறிஸ்வர்கள் மட்டும் என்ன செய்தாலும் நியாயமான செயல் வினவின் எழுத்தில்.

    *வினவு ஆதரவாக எழுதும் தலித்+முஸ்லிம்+கிறிஸ்வர் = 18+3+3 = 24%.

    *இவர்களுக்கு (வினவு+தலித்+முஸ்லிம்+கிறிஸ்வர்) மற்ற சாதி,மதத்வர்கள் (76%) ஒன்றுபடாமல் இருப்பதே நல்லது. அதையே இவர்கள் விரும்புகின்றனர்.

    *76% மக்களை ஒன்றினைப்பதே பா.ம.க இராமதாசின் நோக்கம். மற்றவர்களை அடிமைபடுத்த இல்லை. 76% மக்களை பாதுகாக்க கொலையை கூட இறக்கமின்றி இந்து இனவெறி என எழுதுபவர்களிடமிருந்து.

    • 18% தலித்துகள் இந்துக்கள் இல்லையா அப்போ. அவங்களையும் சேர்த்துகிட்டா இந்து ஒத்துமை ஓங்காதா ?

  41. //இந்துக்கள் சார்பாக இந்துக்கள் மட்டுமே பேசுவார்கள் //

    இந்துக்கள் என்று பொத்தாம் பொதுவாக சொன்னா எப்படி. இந்துக்கள் சார்பாக எப்போதும் ஒட்டு மொத்த இந்துக்களும் பேசியதில்லை. இந்து என்று சொல்லிக்கொள்ளும் மதத்தில் உள்ளோர் எல்லாம் தத்தமது சாதிக்காகத்தான் பேசுகிறார்கள். அது இந்து மதத்தின் சாபக்கேடு. பையா எல்லோரும் இந்து என ஒன்று சேர்த்து RSS யை அரியணையில் உக்கார வைக்கவேணும் நீங்கள் சாதியை ஒழித்தால்தான் உண்டு.

    மக்கள் விரோத கொள்கைகளிலும், ஊழலிலும், அமெரிக்க அடிவருடித்தனத்திலும் காங்கிரஸ் எவ்வளவுதான் நாறிப்போனாலும் இன்னும் கெத்தாதான் இருக்கிறது. அதற்கு காரணமே குறிப்பிட்டு சொல்லும்படியான எதிர்க்கட்சியான பாஜகவின் இமேஜ் அப்படி.

  42. வினவு, வசந்தன், மற்றும் எல்லா நண்பர்களுக்கும் ஒரு விஷயம். நீங்கள் ஒரு முஸ்லிமாகவோ, அல்லது கிரிஸ்டியானாகவோ இல்லாத பட்சத்தல் நீங்கள் அனைவரும் இந்துக்கள் தான். நீங்கள் என்னதான் முஸ்லிம்களுக்கு வரிந்துகட்டிக்கொண்டு சப்பைக்கட்டு கட்டினாலும், உங்களை அவர்கள் மதிக்க மாட்டார்கள். நீங்கள் செத்தால் கூட உங்களை அவர்களின் மயானத்தில் அடக்கம் கூட பண்ண விடமாட்டார்கள். நீங்கள் இந்து மயானத்திற்கு தான் வரவேண்டும். போலி பகுத்தறிவு பேசிக்கொண்டு மக்களை இனியும் ஏமாற்றாதிர்கள்.

  43. முஸ்லீம்களுக்கு வந்தா இரத்தம் இந்துக்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? நல்ல இருக்கு வினவு உங்களோட நியாயம்!
    இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கையலேயே இந்த நிலமைனா…
    மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை!
    http://www.sakthiganesh.com/letter-to-tamil-hindus

    • இந்து பயங்கரவாதிகள் பக்கம் நின்று கொண்டு இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்ப்பது அயோக்கியத்தனம் இல்லையா சக்தி கணேஷ். மேலும் இது ஒரு கட்டப்பஞ்சாயத்து அல்லது கள்ளக்காதல் கொலையாக இருக்கலாம் அதற்கும் முஸ்லீம்களுக்கும் என்ன சம்பந்தம். மதவெறியையும், வெறுப்பையும் விதைப்பது ஆர்.எஸ்.எஸ் கும்பல் தான் அதை மறைத்துவிட்டு முஸ்லீமை எதிரியாக்குவது இந்து தர்மமா கணேஷ்.

  44. “நீங்கள் இந்து மயானத்திற்கு தான் வரவேண்டும்.”
    எந்த இந்து மயானத்திற்கு வரவேண்டும்? தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தள்ளி வைக்கப்பட்டிருக்கும் இந்து மயானத்திற்கா? அல்லது உங்களைப் போன்றவர்களுக்கென்று அமைக்கப்பட்டிருக்கும் இந்து மயானத்திற்கா?

  45. யார் தீவிரவாதி ?

    காரைக்கால் காவல்துறையில் ஓர் கருப்பு ஆடு……..!!

    காரைக்காலில் காவி பயங்கரவாதிகள் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு முஸ்லிம்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி காரைக்காலை இரத்த களறியாக்க நினைத்த நிலையில்…

    சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய காவல்துறையில் உயரிய பொறுப்பான மாவட்ட கண்காணிப்பாளராக இருந்து சட்டம் ஒழுங்கை காக்காமல்…

    காவி பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவும், சிறுபான்மை சமுதாயத்துக்கு எதிராகவும் களம் கண்டு, முஸ்லிம்களை பார்த்து நீங்களெல்லாம் தீவிரவாதிகள் தானே என்றும் படும் கேவலமாகவும் பேசியுள்ளார்.

    இவருடைய செயல் நிச்சயம் காக்கி உடையில் ஒளிந்திருப்பது கருப்பு ஆடு என்றே நினைக்க தோன்றுகிறது.

    காவல்துறையில் உயரிய பொறுப்பில் இருக்கும் இந்த கருப்பு ஆட்டிற்கு யார் தீவிரவாதிகள் என்று கூட தெரியாமல் போனது ஏனோ ?

    யார் தீவிரவாதிகள் என்பதை அறியும் பொருட்டு இப்பதிவினை வழங்குகிறோம்….

    யார் தீவிரவாதி………???

    இஸ்லாமியர் என்றால் தீவிரவாதியா

    01) தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ?

    02) சம்ஜயோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?

    03) சபர்மதி எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?

    04) மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்தவன் யார் ?

    05) அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தவன் யார் ?

    06) கோவாவில் குண்டு வெடிப்பு நடத்தியவன் யார் ?

    07) மாலேகானில் குண்டு வைத்தவன் யார் ?

    08) நாடெங்கும் குண்டு வைத்து விட்டு அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடுபவன் யார் ?

    09) குஜராத்தில் 3000 முஸ்லிம்களை கொன்று குவித்தவன் யார் ?

    10) நாடு முழுவதும் கலவரத்தை நடத்துபவன் யார் ?

    11) நம் தேசத்தந்தை மகாத்மா அவர்களை கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு காந்தியை கொன்றவன் யார் ?

    12) விநாயக சதுர்த்தி ஊர்வலத்தின் போது தலித்,மற்றும் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் கலவரத்தை துண்டுபவன் யார் ?

    13) பெங்களூரில் பாகிஸ்த்தான் கொடியை ஏற்றி தேச துரோக செயலை செய்து விட்டு முஸ்லிம்கள் மீது பழியை போட்டு பிறகு மாட்டி கொண்டவன் யார் ?

    14) மாவீரன் கார்க்ரேவை கொன்றவன் யார் ?
    ஆந்திராவில் மாட்டு தலையை வெட்டி போட்டு கலவரத்தை தூண்டியவன் யார்?

    15) பாபர் மஸ்ஜித்தை இடித்து தரைமட்டமாக்கி உலக அரங்கில் இந்தியாவை தலை குனிய வைத்தவன் யார் ?

    16) இந்த நாட்டின் இறையாண்மையை இல்லாமல் ஆக்குபவன் யார் ?

    2003 மார்ச் 13 : மும்பை ரெயிலில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலி.

    2003 ஆக 25 : மும்பையில் 2 கார் குண்டுகள் வெடித்து 60 பேர் பலி.

    2005 அக் 29 :டெல்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 60 பேர் பலி.

    2006 மார்ச் 7 : காசியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 15 பேர் பலி.

    2006 ஜூலை 11 : மும்பை ரெயில்களில் 7 குண்டுகள் வெடித்தன. 180 பேர் பலி.

    2006 செப் 8 : மலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் 35 பேர் பலி.

    2007 பிப் 19 : பாகிஸ்தானுக்கு சென்ற ரெயிலில் குண்டு வெடித்து 66 பயணிகள் பலி.

    2007 மே 18 : ஐதராபாத் மசூதியில் குண்டு வெடித்து 11 பேர் பலி.

    2007 ஆக 25 : ஐதராபாத்தில் நடந்த தொடர்குண்டு வெடிப்பில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

    2008 மே 13 : ஜெய்ப்பூரில் 7 இடங்களில் குண்டு வெடித்தது. 63 பேர் பலி.

    2008 ஜூலை 25 : பெங்களூரில் 8 இடங்களில் குண்டு வெடித்தது. 1 பெண் பலி.

    2008 ஜூலை 26 : அகமதாபாத்தில் 16 இடங்களில் குண்டு வெடித்தது. 45 பேர் பலி.

    2008 செப் 13 : டெல்லியில் அடுத்தடுத்து 5 இடங்களில் குண்டு வெடித்தது. 23 பேர் பலி. அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் திட்டமிட்ட இனப்படுகொலை ஒன்று நடத்தப்பட்டது.

    இதில் 2,191 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 370 குழந்தைகள் அநாதையாக்கப்பட்டனர். 16 கிராமங்களிலிருந்த முஸ்லிம்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.

    இந்து தீவிரவாதிகள் பட்சிலம் குழந்தைகளை வெட்டி கிழித்து இரு கூராக்கினார்கள். மேலும் நெருப்பு குண்டம் வளர்த்து அதில் பெண்களின் கைகளில் இருந்த குழந்தைகளை பறித்து போட்டனர். அந்த குழந்தைகள் தீயில் கருகி சாவதை பார்த்து ரசித்து பேரானந்தம் அடைந்தனர்.

    மறக்கப்பட்ட நெல்லி இனப்படுகொலை இந்தியாவில் ஹிந்துதுவாவினர் நடத்திய தொடர் இனப்படுகொலைகளின் ஒரு முன்னோட்ட மாகவே பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே டெல்லியில் 1984லும், பாகல்பூரில் 1989லும், மும்பையில் 1993லும் நாடு தழுவிய இனப்படுகொலைகள் நடைபெற்றன.
    இதனுடைய உச்சகட்ட நிகழ்வுதான் குஜராத் இனப்படுகொலை. அதன் தொடர்ச்சிதான் இப்போது இந்தியா முழுவதும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகள்.பாகல்பூர் கலவரம்: பீகார் மாநிலம் பாகல்பூரில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துத்துவ தீவிரவாதிகளால் 1989 ல் கலவரம் நடத்தப்பட்டது. இதில் முஸ்லிம்கள் 116 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த கலவரத்தை ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கமும் அதன் துணை அமைப்புகளும் திட்டமிட்டு நடத்தின. ஜக்தீஷ்பூர் காவல்நிலையத்தின் ஆய்வாளர் ராமச்சந்திர சிங் மற்றும் கிராமத்தலைவர் தாக்குர் பாஸ்வான் ஆகியோர் இந்த படுகொலைக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டனர்.

    இதன் மூலம் சொந்த நாட்டில் 30,000 பேரை அகதிகளாக்கி, 3000 க்கும் மேற்பட்ட வீடுகளைச் சூறையாடி பெரும் இன அழிப்பை நடத்தினர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.

    தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ?

  46. கொல்லப்பட்டவர் இந்து இயக்கத்தை சேர்ந்தவர் என்பதால் கொண்டாடி கும்மாளம் போடும் வினவு……ஒரு வேளை ஜிகாதிகளின் கனவு பலித்து , இந்தியா இஸ்லாமிய தேசமாகிவிட்டால் , முதல் ஆப்பு உனக்குத்தான்…..[ , கோவையில் , பட்டப்பகலில் ,நட்டநடு ரோட்டில் ஆடுஅறுக்கும் அலால் மந்திரம் சொல்லிக்கொண்டே கழுத்திலிருந்து அடிவயிறு வரை அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட போக்குவரத்து காவலர்நினைவுக்கு வருகிறாரா?]

    அப்போது , வெள்ளையப்பனையும் , ஆடிட்டர் ரமேஷையும்நினைத்துக்கொள்……..

    • ஒரு வேலை இந்த சங் பரிவாரின் கனவு பலித்து,இந்தியா மனுதர்மதின் அடிப்படையில் தேசமாகிவிட்டால், பார்பனனனுக்கு சேவை செய்து கொன்டும், அவன் இனத்தை தவிர பிர படிக்கும் மக்களின் காதில் ஈயதை விடவும் செய்ய வேன்டும்.[குஜராதில்,பட்டப்பகலில் ,நட்டநடு ரோட்டில் கர்பினி பென்னின் அடிவயிறு வரை கிலிக்கப்பட்டு அந்த சிசு கொல்லப்பட்டது போல.. அப்போது பார்பனனை தவிர பிர சாதீயினருக்கு ஆப்பு தான்.

  47. Only a Pannadai can identify another Pannadai.But people having Dravidian and Rationalist ideologies can not be called Pannadais since they ask questions.A Pannadai can not ask questions because it cannot retain anything in its brain.In the place of brain,a Pannadai has shallow substance.

  48. @ தேவன் அரசு

    அது சரி,

    இங்கு நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்கள் காரணமில்லை. அப்ப பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான்ல நடக்குற குண்டு வெடிப்ப பத்தி உங்க கருத்து என்ன?

    @ வினவு

    வாங்குர காசுக்கு நல்லா வேல பாக்குறீங்க…

    வாழ்த்ட்குக்கள்

    • \\அமைப்புகள் பிரச்சாரம் செய்கின்றன. அவரது கனவை நனவாக்குவோம் என்கிறார் ராம.கோபாலன். அதாவது ஜலகண்டேசுவரரது உண்டியலை அரசிடமிருந்து பார்ப்பனர்கள் கைகளுக்கு மாற்றிட போராடுவோம் \\

      வினவு
      உனது கட்டுரையில் பொய்களை தவிர வேறு எதுவும் இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே….
      எனினும் ஒரு விசயம்… இந்த கோயிலில் தர்மகர்த்தா…பார்பனர் கிடையாது…. அங்கு வேலை செய்யும் பார்பனர்க்கு நீ இது போன்ற கட்டுரை எழுதி கிடைக்கும் பணத்தில் ஒரு சதம் கூட அவருக்கு சம்பளம் கிடையாது…..

    • சோழன் ,அந்த நாட்டில் குண்டு வைப்பவர்கள் அந்த நாட்டின் மெஜாரிட்டி மத மக்களில் உள்ள தீவிரவாதிகள்
      இந்தியாவில் குண்டு வைப்பவர்கள் இந்த நாட்டின் மெஜாரிட்டி மத மக்களின் உள்ள தீவிரவாதிகள்

  49. ஒரு பாஜக ஆள் கள்ள காதலில் கொலை செய்யபடும், அந்த கிரிமினல் பேர்வழியை தேச பக்தர் என சொல்லும் பொறுக்கிதனம் ஆர்.எஸ்.எஸ். அம்பிகளிடம்தான் இருக்கும்.

    கூடுதலாக 200 ஆண்டுகளுக்கு முன்னாள் ஒழிக்கபட்ட உடன் கட்டை ஏறும் வழக்கத்தை கூட இப்போது சேலத்தில் கள்ள காதல் மீட்டு எடுத்த ஆர்.எஸ்.எஸ்./பாஜகவை விட்டு வைத்தால் மீண்டும் அதே பார்ப்பன இந்து மத காட்டுமிராண்டிதனங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

  50. தனிநபர்கள் பிரச்சனை அல்லது இசுலாமிய அடிப்படிவாதம் என எது காரணாமாக இருந்தாலும் இந்தக் கொலை ஒரு குற்றமே. செய்தவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். கட்டுரையின் மையப்போருளோடு உடன்படுகிறேன். இந்து இயக்கங்கள் மத வெறியை தூண்டுகின்றன. தடுக்கப்பட வேண்டும்.

    இப்போது இந்தக் கொலைக்கு கூச்சலிடுபவர்கள் திவ்யா-இளவரசன் பிரச்சனையில் தலித் வீடுகள் எரிக்க பட்டபோது எங்கே போனார்கள்? அதற்கு பந்த் எல்லாம் கிடையாதா? ஒரு வேளை கொலை என்றால் தான் ஆர்வம் காட்டுவார்களோ. வீடு எரிப்பு போன்றவை துக்கடா விஷயமா. அல்லது தலித்துகள் இந்துக்கள் இல்லையா? அல்லது இந்து மதத்தின் வெளிமனிதர்கள் அடித்தால் தான் கத்துவார்கள், உள்மனிதர்கள் அடித்தால் சும்மா கிடப்பார்களா? வன்னிய வெறி பற்றி பேசினால் ஒட்டு கிடைக்காது, முஸ்லிம் வெறி பற்றி பேசினால் ஒட்டு கிடைக்கும். அவ்வளவு தான் மேட்டர்.

    கட்டுரையில் கீழே உள்ள வரி மட்டும் போகிற போக்கில் அடித்து விட்ட கருத்தாக இருக்கிறது. முஸ்லிம்கள் மீது வெறுப்பு வர வேண்டும் என்ற உள்நோக்கில்தான் ஜெ விசுவரூபம் படத்தை தடை செய்தாரா? அவர் தான் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட சொன்னாரா? என்னய்யா சும்மா ரீல் உடரீங்க.

    // இசுலாமிய மக்களை தனிமைப்படுத்தும் முயற்சிக்கு தோதாக விசுவரூபம் பிரச்சினை, ரிசானா நபீக் விவகாரம், அமெரிக்க துணைத் தூதரக முற்றுகை போன்றவற்றில் அடிப்படைவாத இசுலாமிய அமைப்புகளை ஆட விட்டு, மக்கள் மனநிலையில் முசுலீம்கள் மீதான வெறுப்பை தோற்றுவிக்க முயற்சித்தவரும் இதே ஜெயலலிதாதான் //

  51. முன்பொரு முறை ஆராய்ச்சியாளரும், வலைப்பதிவருமான ஒருவரோடு அவரது பதிவு ஒன்றை முன்னிட்டு நடந்த சிறு உரையாடல் ஒன்றின் போது எனக்கு இந்து மதம் குறித்ததான ஒரு சிந்தனை கிடைத்தது. எனக்கு ஏற்புடையதாக இருந்தது. இப்பதிவுக்கு ஒரு விதத்தில் தொடர்புடையது என்பதால் பகிர்ந்து கொள்கிறேன்.

    இந்து மதம் ஒரு தனிநபர் மதமாக இருக்க வேண்டும். இயக்கமாக இருக்க கூடாது. பலதரப்பட்ட ஆன்மீக தத்துவங்களும், சடங்குகளும் நிறைந்த இந்து மதம் ஒரு சந்தை கடை. மொத்தமும் மோசம் என நினைத்தால் ஒதுக்கிவிடலாம். அல்லது, ஒருவருக்கு பிடித்த பொருள்களை எடுத்துக்கொண்டு நடையைக் கட்டலாம். உதாரணமாக, மொட்டை அடித்துக்கொள்வது என்ற வழக்கம் எனக்கு பிடித்திருக்கிறது, சந்தோஷம் தருகிறது என வைத்துக்கொள்வோம். இதை என்னளவில் செய்து கொள்ளலாம். மேலும், மனிதன் ஒரு சமூக விலங்கு என்ற முறையில், ஒத்த ஈர்ப்புடையோரோடு சேர்ந்து செயல் பட விரும்புவது இயற்கை. அந்த வகையில் ஒரு குழுவாக செயல்படலாம். உதாரணமாக, “மயிலாப்பூர் மொட்டை அடித்துக்கொள்வோர் குழு”, என்னுமாப்போலே. ஒரு பகுதியில், ஐபில் ஆட்டம் பிடித்தவர்கள் சொந்த செலவில் பெரிய திரை அமைத்து ஒன்று கூடி ரசிப்பது போல. கோலி விளையாட்டு பிடித்தவர்கள் ஒன்று கூடி விளையாடுவது, ஆட்ட நுணுக்கங்கள் ஆராய்வது என்பது போல. சிறு அளவில் பிரசாரமும் செய்யலாம். “வரும் ஞாயிறு, பிள்ளையார் கோவிலில் மொட்டை அடித்துக்கொள்ள இருக்கிறோம். விரும்புவோர் இணைந்து கொள்க”, என துண்டு பிரசுரம் விநியோகிக்கலாம். அத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்திய அளவில், தமிழக அளவில் இந்து மதத்தை இணைத்து அரசியல் இயக்கம் தொடங்க கூடாது. மொட்டை அடிக்காமல், தாடி வைத்திருப்போரை எதிரியாய் நினைப்பது, அவர்களுக்கு எதிராக வெறியை தூண்டுவது கூடாது. மொட்டையே இந்திய பண்பாடு, தாடி அண்டார்டிகா பண்பாடு என்றெல்லாம் பேச கூடாது. சுருக்கமாக, இந்து மதத்தின் கூறுகள் ஒரு தனிநபர் தனக்கு ஏதோ ஒரு வகையில் பயன் உள்ளதாக கருதினால், தனிநபர் வழக்கமாக வைத்து கொள்ள வேண்டிய விஷயம். அதிக பட்சம் ஒத்த ஈர்ப்புடையோர் என்ற வகையில் ஒன்றாக கூடி ஒரு குழுவாக அந்த வழக்கத்தை, மற்றவருக்கு பாதகம் செய்யா வண்ணம் கடைபிடிக்கலாம். அத்துடன், மூட்டையை கட்டிடணும்.

    இவ்வாறு அடக்கி வாசிப்பதே சமூக ரீதியில் சரி என எனக்கு தோன்றுகிறது. மேலும், இதில் ஒரு சுயநலமும் உண்டு. அரசியல் இயக்கம் என்றெல்லாம் ஆட்டம் போட்டால் பிரச்சனை தான். மொட்டை அடிக்கும் இடத்தில் மற்றவர் வந்து கொடி பிடிப்பர்; கோஷம் போடுவர். மொட்டை அடிப்பதில் கிடைக்கும் சந்தோஷமும், திருப்தியும் அம்பேல் ஆகிவிடும். சுற்றி நிற்று ஒரு கும்பல் கத்திக் கொண்டிருந்தால் எப்படி நிம்மதியாக மொட்டை அடித்துக்கொள்வது?

    எனவே மொட்டை அடித்துக் கொள்வதில் விருப்பம் உள்ளோரே, ஒன்று கூடி மொட்டை அடித்துக் கொள்வோம். மற்றவனுக்கு மொட்டை அடிப்பது, மண்டையை பிளப்பது ஆகியவை வேண்டாம்!

    • வெங்கடேசன்……

      இந்த விளக்கெண்ணய் வியாக்கியானமெல்லாம் நல்லாத்தான் இருக்கு……தனியா மொட்டையோ , ஒரு க்ரூப்பா மொட்டை போடறதுக்கோ மொதல்லநாம உயிரோட இருக்கனும்….. தான் கும்பிடுற சாமியத்தவிர மத்த சாமிய கும்பிடுறவனெல்லாம் காபிர் ….அவனுகள போட்டுத்தள்ளுனா சுவனம் கிடைக்கும்னு கெளம்பியிருக்காய்ங்க…..அதப்பத்தித்தான் இப்ப பேச்சு…..

      • சான்றோன்,
        என்னை காபிர் என்று கருதும் உரிமை இஸ்லாமியர்களுக்கு இருப்பதாகவே கருதுகிறேன். நான் கூட, “குன்றம் போல் மணிமாட நீடு திருக்குருகூர் அதனுள் நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே” என ஓதவில்லையா!

        கொலை பற்றி கூறினீர்கள். நான் பிறந்ததில் இருந்தே காபிர் தான். இப்போதும் அப்படியே. யாரும் என்னை கொல்ல வரவில்லை. நீங்கள் கிளப்பும் பீதியை, ஏன் கிருத்தவர்கள் கிளப்புவதில்லை? அவர்களும் காபிர் தானே! தோழர்கள் கூட காபிர் தான். அவர்களும் பயப்படவில்லை. ஏன் நீங்களும், உங்கள் முட்டு கொடுக்கும் இயக்கத்தோரும் மட்டும் பீதி அடைகிறீர்கள்? குஜராத்தில் யார், யாருக்கு காபிர் ஆனார்கள்?

        —————————————————————————————-

        நண்பரே, எனது விளக்கெண்ணை வியாக்கியானம் நன்றாக இருப்பதாக நீங்களே சொல்கிறீர்கள். எனில், பின்பற்றலாமே! 14.3 இல் உள்ள உங்கள் கருத்தை காணும் போது உங்களுக்கு அப்பர் பெருமான் பதிகங்கள் பிடிக்கும் என தெரிகிறது. எனக்கும் மிகவும் பிடிக்கும். திருஞானசம்பந்தர் போலன்றி யாப்புப்படி பதம் பிரித்தாலும் ஒவ்வொரு வார்த்தையும் தனித்தனியாய் நின்று ஓத எளிமையாய் இருக்கும். வாருங்கள் சேர்ந்து ஓதுவோம். “அதிகை கெடில வீரட்டானத்து உறையம்மான் ” தொடங்கி “பூம்புகலூர் மேவிய புண்ணியன்” வரை போற்றித் துதித்து முற்றோதுவோம். பையா என்ற நண்பர் RSS டாட்டூ பற்றி சொன்னார். அது வேண்டாம். அப்பர் பெருமான் போல நாமும் திருக்கடந்தை தூங்கானை மாடத்து சுடர்க்கொழுந்து முன்னால் இடபமும், மூவிலை சூலமும் பொரித்துக் கொள்வோம்.

        இவை போன்றவை போதும். இந்து மதத்தின் பெயரால் அரசியல் இயக்கம் வேண்டாம்.

        • நன்றி ! வெஙகடெசன் ! எனது கருத்தும் அதுவே! இந்து மதம் என்று இப்பொது காணப்படுவது உண்மையில் தனினபர் கருத்து சுதந்திரமே! கொள்ளையடித்து கோவிலை யாரோ கட்ட, உழைப்பளிகளை மூளைச்சலவை செய்து, மூடனம்பிக்கையில் ஆழ்த்த ஏற்பட்டதல்ல இந்துமதம்! பாமரர்க்கு புரியாதவாறு மந்திரம் என மறை பொருளில் ஏமாற்றும் வேலை உண்மையான இந்திய ஆன்மிக சாரத்திற்கு எதிரானது! மக்களுக்கு இக்கருத்தை விண்டுரைப்பவர் நாத்திகன் என்றால், நானும் ஒரு நாத்திகனே!

        • திரு. வெங்கடேசன்
          சமயம் ஒரு காலத்தில் தனிமனிதன் கைப்பொருளாகவே இருந்தது. வீட்டுக்கு உள்ளே இருந்ததை தெருவுக்கு கொண்டு வந்த பெருமை ‘வந்தேறிகளின்’ கைங்கரியம். தெருவுக்கு வந்தது பின்னர் தெரு முனையில் நின்று ஆடி, கோபுரமாய் வளர்ந்து கூட்டம் கூட்டி தன்னை பாதுகாத்து கொண்டது. இது சமயத்தின் பாதுகாப்பு அல்ல; சமய கவசம் அணிந்த மக்களின் பாதுகாப்பு. அவ்வாறான சூழ்நிலை இன்றும் உள்ளது. எனவே நிருவனமாதல்,[சைக்கிள் கேப்பில் வணிகமாக்குபவனும் உள்ளான்]ஒன்று படுதல், தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். பல கடவுள் வழிபாடு ஒரு கடவுள் வழிபாட்டுக்கு ஒன்றி பின் ஓர்மை தத்துவம் நோக்கி நகர்ந்த நேரத்தில், வந்தேறிகளின் வெறியாட்டம் அந்த பரிணாமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. பல கடவுள் வழிபாடும், பல கடவுள் ஏற்பும், புற சமய ஏற்பும் இன்றைய நிலை. அதுவே இந்துக்களுக்கு பாதுகாப்பு. இவர்கள் இந்துவாய் திரண்டதே பாதுகாப்புக்குத்தான். இவ்வகையான திரட்சி பல ஆயிரம் வருட வரலாறு. திரட்சி இயற்கை விதி. திரட்சி நடக்காதிருந்தால் நீங்கள் இன்று இல்லை. உங்கள் பின்னூட்டமும் இல்லை.அண்ணாந்து பார்த்து நடப்பது அற்புதமான அனுபவம். அக்கம் பக்கம் பார்த்து நடப்பது பிழைப்புக்கான அனுபவம்.
          நிற்க.
          நான் வந்தேறிகள் என்று சொன்னது { —-எல்லோரையும் சேர்த்துதான்—–}.

          • இந்துக்கள் எப்போது திரண்டார்கள், இந்த திரட்சி எப்படி நடந்தது பரலோகப்பாண்டியன்.

            • சிந்து நதிக்கு அப்பால் வாழும் மக்கள் கூட்டம், பல்வேறு இனக்குழுக்களாக பிரிந்து இருந்தனர் . மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சிறிது சிறிதாக வந்தேறிகளாக இடம்ப்யர்ந்து வந்துகொண்டிருந்தனர். இந்த இமக்களின் இடப்பெயர்ச்சி ஆனது பல்வேறு இனக்குழுக்களையும் ஒருவருக்கு ஒருவர் மாறுபட்ட கலாச்சாரதையும் கொண்ட ஒரு மனித சமூகமாக மாறியது. இந்நிலையில் பார்ப்பனியம் என்ற ஒன்று தோன்றியது. இதன் முக்கிய குறிக்கோள் முதலில் பல்வேறு கலாசாரங்களையும் பல கடவுளர்களையும் ஒற்றுமை படுத்தி பல தரப்புக்கும் போர் எழாத வண்ணம் ஒர்மைப்பட்டை கொண்டு வர முயற்சித்தது. எனினும் அது தன நிலையிலிருந்து சீரழிந்து ஜாதி வெறியாகவும் ஜாதிகளை ஊக்குவிப்பதாகவும் ஏற்றத்தாழ்வை ஆதரிப்பதாகவும் மாறியது. இந்த பார்ப்பனியமே இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மதங்களின் வரவினால் இந்து மதமாக அடையாளப்படுதபட்டது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் மேற்க்கத்திய நாடுகளின் அரசியலால் கிட்டத்திட்ட ஒரே சாம்ராஜ்ஜியமாக இருந்த துருக்கிய சாம்ராஜ்ஜியம் பல்வேறு இஸ்லாமிய நாடுகளாக சிதறிபோயின. அதே நேரத்தில் 500 க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களாக பிரிந்து இருந்த இந்திய துனைகண்டத்து சிறு இராச்சியங்கள் மத ரீதியாக இரண்டு குழுக்களாக பிரிந்தன. இஸ்லாமிய அடையாளத்துடன் பாகிஸ்தான் தோன்றது போயிருந்தால் இந்த இந்து மத பார்ப்பனீயம் வலுவடைந்திருக்கது.

              • பா.ஜ.க. மக்களை சாதிகளை தாண்டி இந்துவாக, சமயரீதியில் கூட்டுகிறது என்று பலரும் தவறாக எண்ணுகிறோம். அவர்கள் மக்களை சாதிகளாகத்தான் கூட்டுகிறார்கள். கர்நாடக மாநில அரசியலை பாருங்கள்.

                • Reservation and Vankodumai sattam creates division among castes,Right wing ensures there is no friction amongst them.

                  Healthy competition amongst castes makes them the masters of India,conversion only makes you a slave of arabia/vatican.

    • தேசபக்தி – தேசிய உணர்வைப் பொறுத்தவரை இஸ்லாத்தில் கொஞ்சம்கூட இல்லை என்பது அம்பேத்கரின் வாதமாகும். அம்பேத்கர் கூறுகிறார் :

      “….இஸ்லாமின் இரண்டாவது குறைபாடு அது ஸ்தல தன்னாட்சி முறையிலிருந்து மாறுபட்ட ஒரு சமூக தன்னாட்சி முறையாக அமைந்திருப்பதாகும். ஏனென்றால் ஒரு முஸ்லிம் தான் வாழும் நாட்டின் மீதன்றி, தான் கடைப்பிடிக்கும் சமயத்தின்மீது விசுவாசம் கொண்டிருக்கிறான். முஸ்லீமுக்கு இந்துக்கள் அதிகம் வசிக்கும் சொந்த நாட்டின் மீது நம்பிக்கை வைப்பது நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று.

      எங்கெல்லாம் இஸ்லாம் ஆட்சி நடைபெறுகிறதோ அவையெல்லாம் அவனது சொந்த நாடு. வேறுவிதமாகச் சொன்னால், ஓர் உண்மையான முஸ்லீம் இந்தியாவைத் தனது தாயகமாக வரித்துக்கொள்ளவும் இந்துக்களை உற்றார் உறவினர்களாகக் கருதவும் இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்காது.

      ஒரு மாபெரும் இந்தியராகவும் உண்மையான முஸ்லீமாகவும் திகழ்ந்தவருமான மௌலானா முகமது அலி இந்திய மண்ணை விட ஜெருசலேமில் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று விரும்பியதற்கு ஒருவேளை இதுவே காரணமாக இருக்கலாம்.’’ என்று கூறுகிறார்.

  52. பிஜேபி தமிழ் நாட்டில் ஒரு செல்லாக்காசு, இந்து முன்னனி, இந்து மக்கள் கட்சியெல்லாம் செல்லாக்காசுக்கு அல்லக்கைகள்…

    தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று ஒரு போராட்டம் நடத்த இந்த செல்லாக்காசுகளால் முடியுமா? இல்லை தினமணியாலோ, தினமலத்தாலோ தலையங்கம் எழுத முடியுமா?

    இந்த செல்லாக்காசு கட்சி போஸ்டர்களை பார்த்தாலே கண்டு கொள்ளலாம்.. ”ஜி” ”ஜி” என்று பேருக்கு பின்னாடி போட்டு இருப்பார்கள்…

    இவர்களது ஜால்ராக்கலோ ‘ மோடி’ என்று எழுத மாட்டார்கள் ‘மோதி என்றே எழுதுவார்கள்…அது ஏன் என்று புரியவில்லை..

    கொலை என்பது கடுமையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று என்பதில் இம்மியளவும் சந்தேகம் இல்லை, அதே நேரம் இக்கொலைகளை வைத்து பிழைப்பு நடத்த முயலும் செல்லாக்காசுகளையும் தமிழ் நாட்டை விட்டே ஓட ஓட விரட்ட வேண்டும் என்பதிலும் யாதொரு அய்யமுமில்லை…அது நடக்கும் நாளும் தொலைவில் இல்லை…

    • கோயமுத்தூர் தம்பி…….ஆடாத ஆட்டமெல்லாம் போட்டு ,வகையா வாங்கிக்கட்டிக்கிட்டப்புறம் பொத்திக்கிட்டு உக்காந்திருக்கீங்களே……அத நல்லா நெனப்புல வச்சுக்கங்க…….

      • தாங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்பதை சற்று தெளிவாக சொல்லவும்….

        யார் எதை யாருக்கு கொடுத்தார்கள்?

        எதை பொத்தச் சொல்கிறீர்?

        Are your comments and your name are antonym to each…

        your comment to my reply was utter bullshit mr.saandron..

        • கோயமுத்தூர் தம்பி……

          மோடி என்பது ஆங்கிலத்தில் எழுதப்படுவது……மோதி ..அதன் சரியான குஜராத்தி உச்சரிப்பு ….இதில் உங்களுக்கென்ன பொச்சரிப்பு……?

          பெயருக்குப்பின்னால் ஜி சேர்த்துக்கொள்வது மரியாதை நிமித்தம்…அதெல்லாம் உங்களைப்போன்றவர்களுக்கு எங்கே புரியப்போகிறது…..

          கோவையில் ஆட்டம் போட்டது யார்……இப்போ பொத்திக்கொண்டு இருப்பது யார்னு கோயமுத்தூர்க்காரங்களுக்கு தெரியும்…..உனக்கு தெரியலைன்னாஷோபாக்காரனை போய் கேளு……

  53. இந்த வினவுக்கு இதே வேலை தான் என்னமொ நியாமா பேசரா மாதிரிநெனப்பு

  54. //தமிழகத்தில் மத அடிப்படைவாத சக்திகளுக்கோ, இடதுசாரி தீவிரவாதத்திற்கோ இடமில்லை எனக் கூறியுள்ள ஜெயலலிதா ஆடிட்டர் ரமேஷ் கொலை தொடர்பாக சிறப்பு புலனாய்வுப் பிரிவு விசாரிக்கும் என அறிவித்துள்ளார். அதற்கு நன்றி தெரிவித்துள்ள வெங்கையா நாயுடு இந்து அமைப்புகளை அச்சுறுத்தவே இந்தப் படுகொலைகள் நடப்பதாக கூறியுள்ளார். இப்படித்தான் கோத்ரா விபத்தை காரணமாக்கி குஜராத்தில் முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது. தமிழகத்திலும் அத்தகைய முயற்சிக்கு இவர்கள் தயாராகிவருகிறார்கள்.//………வினவு வாய்ல்லு சக்கரை தான் பொடவேண்டும்! பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது ! எல்லா இந்து தலைவர்களையும் கொன்றது, கொல்ல் திட்டம் தீட்டியது நாலு தெடப்படிம் இச்லாமியர்கலள்தானாம்! சிறப்பு புலனாய்வு கண்டுபிடித்து விட்டது ! என்ன வேகம்!

    • //இப்படித்தான் “கோத்ரா விபத்தை” காரணமாக்கி//

      எவ்வளவு வக்கிரமான வார்த்தைகள். இதுக்காகவே குஜராத் கலவரத்தை ஆதரிக்கலாம் போல…தூ…இதுவும் ஒரு பொழப்பு…

      • வக்கிரமாக பேசும் சீனுவுக்கு உண்மையை சொன்னால் வக்கிரமாகத்தான் தெரியும் தெஹல்கா கோத்ரா சம்பவத்தை போட்டு உடைத்துல்லார்களே .
        குஜராத்தில் இந்து முஸ்லிம் பிரச்னை ஒன்றும் இல்லாதாஹ் சமயத்தில் ,இன்னும் சொல்லப் போனால் பாபரி மஸ்ஜித் இடித்தபிறகு கூட என்தாஹ் குண்டு வெடிப்பும் இல்லாது இருந்த பொழுது 2001 இடைத்தேர்தல்களில் பாசக் தோற்றதும் கோத்ரா ரயில் எறிந்த மர்மம் என்ன ?
        மோடி என்ன புனிதரா ? உடன் இருந்த சக அமைச்சரை சுட்டுத் தள்ளிவிட்டு தீவிரவாதிகள் என்று முஸ்லிம்கள் மீது கொலை வழக்கு பதியவில்லையா?
        அமைச்சரின் அப்பா மோடியை எத்ரித்து மணிநகரில் போட்டியிட் வில்லையா?
        சக அமைச்சரை கொன்றதோடு நில்லாது முஸ்லிம் தீவிரவாதிகள் என்று சொன்ன மோடிக்கு வக்கிரமாவது சுக்கிரமாவது .உங்க பிழைப்பு ,,,,,,

  55. தவறுதான் சீனு! அதுவும் அகண்ட பாரத சதியின் ஒரு அஙகமாக இருக்க கூடும்! பரிவாரத்தின் திருவிளையாடல் அதற்கு முன்னரே ஆரம்பித்தாயிற்றே! காந்தியை கொன்ற கொட்செ கையில் இச்லாமிய பெயர்தானே பச்சை குத்தியிருந்தான்! அன்று மட்டும் பண்டிதநேரு அசந்து இருந்தால் இவர்கள் என்ன ஆட்டம் போட்டிருப்பார்கள்! இவர்களின் ஊடகஙள் எப்பொதுமே வதந்தியை கிளப்பிவிட்டு, பற்றி எரியும்நெருப்பில் குளிர் காய்பவர்கள் தானே!

    • Most facts about Godse including his trial and defence are not in public domain,this Ismail story is also fictious.

      He is a known member of the RSS and there is no way he is going to get away as Ismail,so the story is a big bogus story.

    • அதே நேரு உஷாராக இந்திருக்காவிட்டால்,இன்னேரம் இந்தியா பாகிஸ்தாந்-2 அல்லது ஜின்னாயிஸ்தானாகி இருக்கும், இந்துக்களும் கூண்டோடு கைலாசம் போயிருப்பார்கள். அவர்களின் உலக சமாதான நோக்கமும் நிறைவேறி இருக்கும்.

  56. பச்சை மட்டுமா குத்தியிருந்தான்….சுன்னத் செய்து இருந்தான், சித்பவன் பார்ப்பான் நாதுராம் விநாயக் கோட்சே….

  57. இதேபோன்று நாகப்பட்டினத்தில் பாஜக மாநில பொதுக் குழு உறுப்பினர் புகழேந்தி கொலை செய்யப்பட்டார். பணம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக நடந்த இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேர் நீதிமன்றத்திலும் சரண் அடைந்தனர். ஒருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

    மருத்துவர் படுகொலை: பாஜக மாநில மருத்துவ அணிச் செயலாளர் அரவிந்த ரெட்டி பணப் பிரச்னை காரணமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, 7 பேர் கைது செய்யப்பட்டனர். கோவையை அடுத்த மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஆனந்தன் கொலை முயற்சி வழக்கில் ஒருவரும், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர பாஜக செயலாளர் முருகன் என்பவ நிலப் பரிமாற்றப் பிரச்னையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரும் கைது செய்யப்பட்டு, அனைவரும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

    கோவையில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வீட்டின் மீது தாக்குதல், உதகை இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் மஞ்சுநாத் மீதான தாக்குதல், குன்னூரில் இந்து முன்னணி நகரச் செயலாளர் ஹரிஹரன் மீது தாக்குதல், நாகர்கோவிலில் பாஜக மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.ஆர்.காந்தி மீதான தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.டிஜிபி ராமானுஜம்

  58. இபுராகீம்,
    ஒரு வேள மோடி அழகிய நபி வழிய பின் பற்றி இன அழிப்பை செய்யராரோ என்னமோ.

  59. நாடாளுமன்றத் தேர்தல் வரதுக்குள்ளார பாஜக காட்சிக்காரவுக மீது வஞ்சனை உள்ளவர்கள் எல்லாம் தீர்த்துக் கொள்ளலாம். போலீசுக்கும் அலைச்சல் மிச்சம்.

  60. கோவை அனுமன் சேனை தலைவர் கடத்தல் என்று சில நாட் கள் கூக்குரல் இட்டார்கள்! பின்னர் அவர் வேண்டுமென்றே தலைமறைவாக திரிந்தது போலிசால் கண்டுபிடிக்கப்பட்டது!

Leave a Reply to SARAVANA பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க