தமிழக அரசே !
- அரசுப் பள்ளிகள் அனைத்திலும் போதிய ஆசிரியர்களைப் போர்க்கால அடிப்படையில் உடனே பணியமர்த்து!
- மாணவர்களுக்குப் பாதுகாப்பான குடிநீர், கழிப்பறை, சமையலறை வசதிகளை வழங்காத அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடு !
- பள்ளிகளில் விளையாட்டு மைதானம், போதிய வகுப்பறை, நூலக வசதி ஆகியவற்றை அலட்சியப்படுத்தும் அதிகாரிகளை சஸ்பென்ட் செய்!
பெற்றோர்களே!
- நமது சங்கத்தில் உறுப்பினர்களாக சேருங்கள்!
- அரசுப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் முழுமையாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க பெற்றோர்களாகிய நமக்கு உரிமை உண்டு.
- வாத்தியார் இல்லா வகுப்பறை! மரத்தடியில் மாணவர்கள்!! அழியும் அரசுப் பள்ளிகள் !!!
- உன் பிள்ளைக்கு நீ போராடாமல் யார் போராடுவார்கள்.
விருத்தாசலத்தில் ஆகஸ்ட் 15 – பேரணி – மறியல்
மாணவர்களின் எதிர்காலம் காக்க பெற்றோர்களே அணி திரள்வீர்!
அன்பார்ந்த பெற்றோர்களே வணக்கம் !
வாத்தியார் இல்லாத வகுப்பறை, மரத்தடியில் மாணவர்கள், மதிய உணவில் பல்லி, அழுகிய முட்டையால் வாந்தி மயக்கம், கழிப்பறை இல்லை, சுகாதாரமான குடிநீர் இல்லை என்ற செய்திகள் அரசுப்பள்ளிகளைப் பற்றி தினமும் வந்து கொண்டே இருக்கின்றன.
உங்கள் பிள்ளைகளிடம் “இன்று பள்ளியில் என்ன கற்றுக் கொண்டாய்? ஆசிரியர் நடத்திய பாடம் உனக்குப் புரிந்ததா? என கேட்டீர்களா?” உங்கள் பிள்ளை படிக்கும் பள்ளியில் போதிய ஆசிரியர் இருக்கின்றாரா? விளையாட்டு வாத்தியார் இருக்கிறாரா? நூலகம் இருக்கிறதா? வகுப்பறை இருக்கிறதா? என்று என்றைக்காவது சென்று பார்த்திருப்பீர்களா? உங்கள் பிள்ளைகள் பெயிலானதற்கு, மார்க் அதிகம் எடுக்காததற்கு அவர்கள் மட்டுமே காரணம் அல்ல, தரமான கல்வி கற்பிக்கப்படுவதில்லை. நம் ஊரிலேயே பல பள்ளிகளில் போதிய வகுப்பறை, ஆசிரியர்கள் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?
அரசின் தனியார்மயக் கொள்கையாலும், தனியார் பள்ளிகள் தரமானது என்ற கவர்ச்சி விளம்பரத்தாலும், கட்டண கொள்ளையடிக்கவும், பெற்றோர்கள் தனியார் பள்ளிகளுக்கு நிர்ப்பந்தமாக தள்ளப்படுகின்றனர். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றி பல பள்ளிகளில் சிறந்த மாணவர் தேர்ச்சியை காட்டி வருகின்றனர். தகுதியானர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடம் காலி ஏன்?
தமிழகத்தில் எண்பது சதவீத மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் பெருமளவில் மாணவர்கள் பெயிலானால் ஆசிரியர்கள் மீதும், கண்காணிக்காத அதிகாரிகள் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை. சாதி பாகுபாடில்லாமல், ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாமல், அனைவரும் சமமாக கூடும் ஒரே இடம் பள்ளிக் கூடம் மட்டுமே. 5,000 ரூபாய்க்கு ஒரு பள்ளி 50,000 ரூபாய்க்கு ஒரு பள்ளி என மாணவர்களை கூறு போட்டால் சமூகம் எப்படி சமத்துவத்தறிற்கு செல்லும்.
தமிழகத்தில் 16,421 பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள், 2,253 பள்ளிகளில் ஒரு ஆசிரியம் மட்டுமே கொண்டு இயங்குகின்றன. ஏறத்தாழ நான்கரை லட்சம் மாணவர்கள் 100 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என படிக்கின்றனர். இச்சூழலில் எப்படி மாணவர்கள் தரமான கல்வி கற்க முடியும்? நம் கண்முன்னே நம் பிள்ளைகளில் எதிர்காலம் சரிந்து விழுவதை நாம் எப்படி அனுமதிக்க முடியும்?
மாணவர்கள் இன்று தக்கை மனிதர்களாக வளருகின்றனர். தன்னம்பிக்கை, ஒழுக்கம், நேர்மை, சிந்திக்கும் ஆற்றல், சமூக பொறுப்புணர்வு, வாதிடும் திறமையை, ஜனநாயகத்தை, நாட்டுப் பற்றை போதிக்கும் தரமான கல்வியை அரசு பள்ளிகளால் மட்டுமே வழங்க முடியும். அத்தகைய கல்வி முறைக்காக நாம் போராட வேண்டும்.
இன்று உயர் பதவிகளில் இருக்கும் தலைமை நீதிபதி, விஞ்ஞானிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உட்பட பலரும் அரசுப் பள்ளிகளில் படிதவர்களே. காசு உள்ளவனுக்குத்தான் கல்வி, மருத்துவம், குடிநீர், மின்சாரம் எல்லாம் என்றால் ஆகஸ்ட் 15 சுதந்திரத்தால் நாம் அடைந்த பயன் என்ன? இயற்கை வளங்கள் அனைத்தையும், தாய்க்குச் சமமான தண்ணீரையும் பன்னாட்டு கம்பெனிக்கு விற்பதுதான் அரசின் கொள்கை என்றால் ஆகஸ்ட் 15 அர்த்தம் என்ன?
அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குவதன் மூலம்தான் நல்ல மாணவர்களை உருவாக்க முடியும். அவர்கள்தான் இந்நாட்டின் உண்மையான சுதந்திரத்திற்காக போராடுவார்கள்.
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்
702/5 ஜங்சன் ரோடு, விருத்தாசலம், கடலூர் மாவட்டம்
தொடர்புக்கு 9345067646
பெறுதல்
அரசு செயலாளர் அவர்கள்,
பள்ளிக் கல்வித் துறை,
தலைமைச் செயலகம்,
செயின்ட் ஜார்ஜ் கோட்டை,
சென்னை.
பொருள்
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் போதிய ஆசிரியர்களை பணியமர்த்துதல் – மாணவர்களுக்கு பாதுகாப்பான, குடிநீர்-கழிப்பறை-சமையலறை வழங்குதல்
அய்யா வணக்கம்
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாமல் கடந்த பல ஆண்டுகளாக மாணவர்களின் கல்வித்தரம் வெகுவாக பாழடைந்து வருகிறது. தரமான கல்வி வழங்குவதை அதிகாரிகளும் கண்காணித்து உத்திரவாதப்படுத்த தவறுகின்றனர். இதனால் பல மடங்கு கல்வி கட்டணத்தில் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளுக்கு போக நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
2012-2013 ஆன் ஆண்டுக்கான மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி 16 பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை. 2,253 பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர்தான். 16,421 பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணி புரிகின்றனர். மேலும் நூறு மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையில் நான்கரை லட்சம் மாணவர்கள் கல்வி பயிலும் அவலமான சூழலில் அரசு பள்ளி மாணவர்கள் உள்ளனர்.
போதிய வகுப்பறை இல்லாமல் மரத்தடியில் கல்வி பயிலுதல், பாதுகாப்பான குடிநீர், கழிப்பறை இல்லை. மதிய உணவில் பல்லி, அழுகிய முட்டை, வாந்தி, மயக்கம் என நாள் தோறும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. பல பள்ளிகளில் ஆசிரியர்களும் எதிர்காலத் தலைமுறையை உருவாக்குகிறோம் என்ற பொறுப்புணர்வு இன்றி மாணவர்களுக்கு ஏனோ தானோ என கல்வி கற்பிக்கின்றனர். தேர்ச்சி விகிதம் படு மோசமாவதற்கும், தேர்ச்சி அடைந்த மாணவர்களும் குறைந்த மதிப்பெண் பெற்று மேல்நிலைக் கல்வி தொடர முடியாமல் இடையிலேயே கல்வியிலிருந்து நிறுத்தப்படும் அவலமும் தொடர்கிறது.
அரசுப் பள்ளியின் இத்தகைய நிலையால் கிராமப் புற பெற்றோர்கள் தரமானது என புற்றீசல்களாக ஆங்கிலவழி தனியார் பள்ளிகளை சென்றடைகின்றனர். அத்தகைய மாணவர்களுக்கு ஆங்கிலமும் தெரியாமல் தமிழும் தெரியாமல் கற்பித்தல், ஜனநாயகம் என்ற சிந்தனை மாணவர்களிடமிருந்து உருவப்பட்டு பிராய்லர் கறிக்கோழிகளாக மாற்றப்படுகின்றனர். மாணவர்களை சுய சிந்தனை, முழுமையான ஆற்றல் இல்லாமல் உதிரிகளாக மாற்றும் தனியார்மயக் கல்வி புற்று நோயாக எதிர்கால மனித வளத்தை அரித்து வருகிறது. இதே நிலை இன்னும் சில ஆண்டுகள் நீடித்தால், அரசு பள்ளிகள் அனைத்தும் மாணவர்கள் இல்லை என்று மூடப்படுவதும், கடன் சுமையால் விவசாயிகள் போல கல்வி கட்டணச் சுமையால் பெற்றோர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும்.
எனவே அரசுப் பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்கப்படுவதை அரசு உத்திரவாதப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதித்தில் போதிய ஆசிரியர்களை நியமித்தல்
- போதுமான வகுப்பறைகள்
- சுகாதாரமான குடிநீர்
- போதிய கழிப்பறை வசதிகள்
- விளையாட்டு மைதானம்
- பாதுகாப்பான சமையலறை
- நூலக வசதி
- கற்றல், கற்பித்தல் சரியாக நடைபெறுகிறதா என்பதை மாதம் தோறும் கண்காணிக்க போதுமான கல்வி அதிகாரிகளை நியமித்தல்
போன்றவைகள் தரமான கல்வி கற்க அடிப்படையானவைகள்.
மாணவர்களின் கல்வி உரிமை என்பது வாழ்வுரிமையின் அங்கமாகும். அரசுப் பள்ளிகளில் இவற்றை தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள், மாணவர்களிடம் கையொப்பம் பெற்று இந்த கோரிக்கை மனுவை சமர்ப்பிக்கின்றோம். நன்றி.
தகவல்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர்கள் சங்கம்
விருத்தாசலம். பேச : 9345067646, 9345180948
வாழ்த்துக்கள். நல்ல முயற்சி. பெற்றோர்கள் தீவீரமாக இந்த பிரச்சினையை அணுக ஆரம்பித்தால் விடிவு உண்டு.
அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பும், கல்வித்தரமும் மேம்பட வேண்டியது மிக முக்கியமான சமூகத் தேவை.. ம.உ.பா.மை., பெற்றோர்கள் கூட்டு முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்..
///தமிழகத்தில் எண்பது சதவீத மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் பெருமளவில் மாணவர்கள் பெயிலானால் ஆசிரியர்கள் மீதும், கண்காணிக்காத அதிகாரிகள் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை. //
இதற்க்கு இரண்டு காரணிகள் : 1. எட்டாம் வகுப்பு வரை all pass செய்ய வேண்டும் என்ற சட்டம். எனவே எட்டாம் வகுப்பு வரை எப்படி சொல்லிகொடுத்தாலும், அல்லது சொல்லிக்கொடுக்காவிட்டாலும், ஆல் பாஸ் என்பதால், மாணவர்கள் கல்வி கற்க்காமலே பாஸ் செய்து, ஒன்பதாவது முதல் பெரிய அளவில் பெயில் ஆகும் நிலை. முன்பு இப்படி ஒரு சட்டம் இல்லை. எனவே ஆரம்ப பள்ளிகளில் ஒழுங்கா சொல்லி கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயம்.
2.பல ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளில் பல ஆசிரியர்கள் ஒழுங்கா வருவதே இல்லை. லீவ் லெட்டரை (தேதியிடாமல்) தயாராக சக ஆசிரியர்களிம் கொடுத்து வைத்திருப்பார்க்ள். ஆய்வாளர் திடிரேன் வந்தால், சக ஆசிரியர் தேதியை மட்டும் இட்டு, விடுப்பு என்று சொல்லி ‘காப்பத்துவார்கள்’ ; அவர்களுக்கும் இதே ‘உதவி’ கிடைக்கும். எப்படி வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் வேலை போகவே போகாது என்ற சட்டம் இருக்கும் வரை, இவர்களை மாற்ற முடியாது.
பார்க்கவும் :
http://swaminomics.org/cameras-improve-teacher-attendance/
Teacher absence ranges from 20% to over 50% in different states, and makes a mockery of free and universal education. No wonder children drop out in droves, and functional illiteracy is high even for those who complete school. In such circumstances, the government’s plan to double spending on education will simply double the waste.
Teacher unions will be outraged at the linking of performance to pay: they have never seen any connection between the two. No political party seems willing to confront teachers’ unions.
அமெரிக்காவில் 80% மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர். வீம்பு பிடித்த அப்பாடக்கர் ஆசாமிகளை விட்டுவிட்டால், நடுத்தர, மேல்-நடுத்தர மக்கள் கூட அரசுப் பள்ளிகளையே நாடுகின்றனர். மாணவர்-ஆசிரியர் சதவீதம் சுமார் 15. அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
தமிழ் நாட்டில் சுமார் ஒரு கோடி மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் பயில்கின்றனர் (2005 ஆம் ஆண்டு கணக்குப்படி). இந்த ஆண்டு பள்ளிக் கல்விக்காக அரசு 17000 கோடி ஒதுக்கியுள்ளது (இதில் மத்திய உணவு, இலவச புத்தகங்கள் போன்றவை அடங்குமா என தெரியவில்லை). மாநில GDP யில் இது 2.1%. (அமெரிக்காவில் இது 6% ஆக உள்ளது). அதாவது ஒரு மாணவனுக்கு ஆண்டுக்கு 17000 ரூபாய் . அரசு நிர்ணயித்துள்ள தனியார் பள்ளி கட்டணங்களுக்கு இணையானது. இவ்வளவு செலவு செய்யும் போது 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற சதவீதம் சாத்தியமானதே என தோன்றுகிறது. தனியார் பள்ளிகளை ஒப்பிடும்போது, நிலம், கட்டிடம் போன்ற செலவுகள் அரசுக்கு இல்லை. பெரிய செலவு ஆசிரியர் சம்பளம். 30 மாணவர்களுக்கு செலவு 5.1 லட்சம் ரூபாய் வருகிறது. இதில் ஆசிரியர் சம்பளம், பிற செலவுகளை சமாளிக்க முடியும் என்றே தோன்றுகிறது.
அரசுக்கு வைத்துள்ள கோரிக்கைகள் நியாமானது. அதே சமயம் ஆசிரியர்களையும் கவனிக்க வேண்டும்.
// அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றி பல பள்ளிகளில் சிறந்த மாணவர் தேர்ச்சியை காட்டி வருகின்றனர் //
// பல பள்ளிகளில் ஆசிரியர்களும் எதிர்காலத் தலைமுறையை உருவாக்குகிறோம் என்ற பொறுப்புணர்வு இன்றி மாணவர்களுக்கு ஏனோ தானோ என கல்வி கற்பிக்கின்றனர் //
இந்த இரண்டு நிலைகளில் முற்காலத்தில் முதல் வகை ஆசிரியர்களும், தற்காலத்தில் இரண்டாம் வகை ஆசிரியர்களும் அதிகம் என்ற ஒரு பொதுக்கருத்து நிலவுகிறது. சரியா என தெரியவில்லை.
பொதுவாக, அரசுக்கு கோரிக்கைகள் வைக்கும் அதே சமயம், தனியார் பள்ளிகளை விட அதிக சம்பளம் பெரும், அரசு பள்ளி ஆசிரியர்கள் முனைப்போடு பணியாற்ற வேண்டும் என்பதையும் வலியுறுத்த வேண்டும். தேர்ச்சி சதவீதம் மிகக் குறைவாக இருந்த ஒரு அரசு பள்ளியில் (விருத்தாசலம்?) நீங்கள் போராட்டம் நடத்தியது போல.
நல்ல முயற்சி வாழ்த்துக்கள். பதவிப் பெருச்சாலிகளின் பாரபட்சமான பார்வையில் பரிதவிக்கும் பள்ளிகள்.
அரசுப் பள்ளிகளை கண்காணிப்பதும், பாதுகாப்பதும் அவை ஒழுங்காக இயங்க வகை செய்வதும் நமது சமுகக் கடமை ஆகும்!