privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கமோடியை திரை கிழிக்கும் பிரச்சாரம் - பாஜக அலறல் !

மோடியை திரை கிழிக்கும் பிரச்சாரம் – பாஜக அலறல் !

-

திருச்சியில் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி குறித்து பாஜகவின் மாநிலத் தலைவர் பொன் இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்த போது பின்வருமாறு கூறியிருக்கிறார்:

பாஜக மாநாட்டை விமர்சித்தும், மோடியை விமர்சித்தும் மாநகரில் மோசமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. காவல்துறையினர் இதை எப்படி அனுமதிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

கலவரத்தைத் தூண்டும் வகையில் நடைபெறும் இந்த முயற்சிகளை காவல்துறையினர் தடுக்க வேண்டும்.கலவரத்துக்கான அறிகுறிகள் தெரியும்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகரக் காவல் ஆணையரை சனிக்கிழமை காலை கட்சி நிர்வாகிகள் சந்தித்து புகார் அளிப்பார்கள் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பாஜகவை விமர்சித்து விநியோகிக்கப்பட்டு வரும் துண்டுப் பிரசுரங்களைக் காட்டுகிறார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்.

மோடியை எதிர்த்து புரட்சிகர அமைப்புகள் செய்து வரும் பிரச்சாரத்தை போலிசு துணை கொண்டு தடுத்து நிறுத்த முனைகிறார் பாஜக தலைவர். ஜனநாயக முறையில் வரும் எதிர்ப்பு பிரச்சாரத்தைக்கூட இவர்கள் தீவிரவாதமாக சித்தரிக்கிறார்கள் என்றால் நாளைக்கே ஆட்சிக்கு வந்தால் எப்படியெல்லாம் அடக்குமுறை செய்வார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். பாசிஸ்டு மோடியையும், பாசிச பாஜக கட்சியையும் எதிர்த்தால் கலவரம் வருமாம். ஆனால் கலவரம் செய்து ஆட்சியை பிடிக்க எத்தனிப்பது இந்தக் கூட்டம்தான்.

எனவே மதவெறியை எதிர்ப்போர் அனைவரும் மோடிக்கு எதிராக தங்களால் இயன்ற அளவுக்காகவது களம் இறங்க வேண்டும். மோடியை எதிர்க்கும் பிரச்சாரம் தமிழகம் முழுவதும் நடக்க வேண்டும். அப்போதுதான் மதவெறி பிடித்த இந்த ஓநாய்க் கூட்டத்திறத்கு தகுந்த பாடம் புகட்ட முடியும். வாருங்கள், மகஇக நடத்தும் மோடி எதிர்ப்பு இயக்கத்தில் பங்கு கொள்ளுங்கள்!

திருச்சியில் BJP அடித்தட்டு மக்களிடையே பரப்பிவரும் மோடியைப் பற்றியான பொய்பிரச்சாரத்தை அம்பலப்படுத்தி மையக்கலைக்குழு தோழர்கள் நடத்திவரும் தெருமுனைக்கூட்டங்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

பிரச்சார இயக்க பொதுக்கூட்டம்
_____________________________________
சிறப்புரை : தோழர். மருதையன்,

மாநில பொதுச்செயலர்,
ம.க.இ.க, தமிழ்நாடு.

செப்டம்பர் 22 – ஞாயிறு – மாலை 6.00 மணி
புத்தூர் நால்ரோடு, உறையூர்,  திருச்சி.

தகவல் :

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி