privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விகல்வி தனியார்மயம் – எரியும் வீட்டில் எண்ணெய் ஊற்றும் பார்ப்பனீயம் !

கல்வி தனியார்மயம் – எரியும் வீட்டில் எண்ணெய் ஊற்றும் பார்ப்பனீயம் !

-

மீபகாலமாக மெக்காலே கல்விமுறை ஏற்படுத்தியுள்ள சீரழிவுக்கு மாற்றாக குருகுலக்கல்வியை முன்வைத்து பார்ப்பனக்கும்பல் செய்து வரும் பிரச்சாரம் அதிகரித்து வருகிறது. அதுபோலவே காலனிய ஆட்சிக் காலத்திலிருந்து இன்று வரை இந்திய அரசின் அனைத்து உயர் பதவிகளிலும் இருந்து கொண்டு திட்டமிட்டே அரசுப் பள்ளிக்கூடங்களையும் உயர் கல்வி நிறுவனங்களையும் சீரழித்த இந்த பார்ப்பன ஆளும் வர்க்கம், இட ஒதுக்கீட்டில் வந்த தரமற்ற மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் தான் இந்தியக் கல்வித் துறை அழுகி நாறுவதாகவும், எனவே கல்வியைத் தனியாரிடம் ஒப்படைத்து விட்டால், திறமையான (பார்ப்பன) மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொண்டு இந்த சீரழிவை சரி செய்து விடலாம் என்றும் பிரச்சாரம் செய்கின்றனர்.

துக்ளக் சோ
‘அரசு பள்ளி என்றால் சீரழிவு’ – துக்ளக் சோ

இந்திய அரசாங்கம் கல்வித் துறையைத் பன்னாட்டு-தரகுக் கும்பலிடம் ஒப்படைக்கும் பொருட்டு கொண்டு வரும் கட்டுமான மற்றும் கொள்கைச் சீர்த்திருத்தங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகரித்து வரும் நிலையில் இவர்களின், இந்த இரண்டு பிரச்சாரங்களும் சூடு பிடித்துள்ளது கவனிக்கத்தக்கது. இதற்கு, கல்வி தனியார் மயமாக்கலைத் துரிதப்படுத்துவதிலும் அதை நியாயப்படுத்தி அதையே ஒரு ஒழுக்கமாக்கி மக்களை ஏற்றுக் கொள்ளச் செய்வதிலும், பார்ப்பனக் கும்பலான – அறிவுஜீவிகளும், பத்திரிகையாளர்களும், சாமியார்களும், கார்ப்பொரேட் சி ஈ ஓ க்களும், எழுத்தாளர்களும், அறிஞர்களும், கல்வியாளர்களும், அரசியல்வாதிகளும் – என்ற எல்லாத் தரப்பும் என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதை இங்கு தொகுக்கின்றோம்.

பார்ப்பன ஊடகங்கள்

பார்ப்பன ஊடகங்களான தினமணி, தினமலர், துக்ளக் முதலானவை தொடர்ச்சியாக அரசு கல்வி நிறுவனங்களுக்கு எதிரான தலையங்கங்களையும், கட்டுரைகளையும் செய்திகளையும் திட்டமிட்டே கடந்த சில மாதங்களாக வெளியிட்டு வருகின்றன.

சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சேதுராமன், கல்வி தனியார் மயமாக்கலையும், அதில் இந்தியக் கல்விமுதலாளிகள் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் கூட்டு வைத்து அடையப் போகும் ஆதாயத்தைப் பற்றியும், இந்திய அறிவுத் துறையையே தனது பிடிக்குள் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை நியாயப்படுத்தியும் துக்ளக்கில் தொடர் எழுதி வருகிறார். அதுபோல, அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடைமையாக்குவோம் என்ற முழக்கத்துடன் பள்ளிக் கல்வி அலுவலகத்தை புமாஇமு முற்றுகையிட்டதை நக்கலடிக்கும் துக்ளக், இப்படி போராட்டம் நடத்தி ஒழுங்காகக் கல்வி வழங்கும் ஒரு சில நல்ல தனியார் கல்வி நிறுவனங்களையும் அரசிடம் ஒப்படைப்பதன் மூலம் கல்வியை சீரழிப்பதே இவர்களின் நோக்கம் என்றும் எழுதுகிறது.

தினமணியின் தலையங்கங்களை தொடர்ச்சியாக கவனித்தால், திட்டமிட்டே அரசுப்பள்ளிக்கூட ஆசிரியர்களை தரக்குறைவாக சித்தரிப்பது தெரியும். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித் தேர்வு முடிவுகள் குறித்து தலையங்கம் எழுதிய தினமணி (13.08.2012), ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் தரம் பற்றி விமர்சித்ததோடு, இந்த தேர்வில் வெற்றி பெறாததாலே ஆசிரியர் பயிற்சி முடித்த அனைத்து பட்டதாரிகளும் தகுதியற்றவர்கள் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் கடந்த ஜெயலலிதா ஆட்சியில், அதுவரை அரசு அல்லது அரசு நிதியுதவி பெற்று இயங்கிய ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகளால் மட்டுமே வழங்கப்பட்டு வந்த ஆசிரியர் பயிற்சிப் படிப்பை, தனியார் லெட்டர் பேடு கல்லூரிகள் கூட ஏதாவது மாட்டுக் கொட்டகையில் வைத்தோ, தொலை தூரத்திலோ, கண்ணில் படாமலே கூடவோ நடத்தலாம் என்று ஒரே ஒரு அரசு ஆணை மூலம் பிஎட், எம்எட், டிடிஇ போன்ற படிப்புகளை சீரழிவின் படுபாதாளத்துக்குத் தள்ளியதை தினமணி வைத்தியநாதன் இன்று சௌகரியமாக மறைத்து விட்டார்.

ஆனால் தினமணி வைத்தியநாதனுக்கு பொது அறிவுகூடவா மட்டம்? தமிழ் நாட்டில் எந்த தனியார் பள்ளிக்கூடத்திலோ அல்லது சுயநிதிக் கல்லூரியிலோ முறையான பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் இல்லை என்பதோடு, குறைந்தபட்ச தகுதிகூட இல்லாத ஆசிரியர்களைக் கொண்டு அடிமாட்டு விலைக்கே இவர்களின் உழைப்பு பிழியப்படுகிறது; மாறாக எந்த அரசு கல்வி நிலையங்களும் தகுதியில்லாத ஆசிரியர்களை இன்றுவரை நியமித்ததில்லை. ஆனால் இதைப்பற்றி இவர்களுக்கு எப்பவுமே செலக்டீவ் அம்னீஷியா; ஏனென்றால், தினமலர், டிவிஸ் ஐயங்கார், சோ ராமசாமி போன்றோர் நடத்தும் பள்ளிக்கூடங்களில் ஆசிரியராக, ஜெயலலிதா நடத்தும் இந்த தகுதித்தேர்வை எழுதி ஜெயிக்க வேண்டுமென்றோ அல்லது குறைந்த பட்சம் அரசுப் பள்ளிக்கூடங்கள் போல ஆசிரியப் பயிற்சி முடித்தவர்களை மட்டுமே நியமிக்க வேண்டுமென்றோ எந்த அரசும் சட்டம் கொண்டு வராதது மட்டுமின்றி இதை சட்டை செய்வதே இல்லை என்பது தான்.

பார்ப்பன முதலாளிகளும், பேராசிரியர்களும

2011 அக்டோபரில் அமெரிக்காவில் நடைபெற்ற பான் ஐஐடி (PAN IIT Summit) என்ற இந்திய மக்களின் வரிப்பணதை உறிஞ்சிக்கொழுத்து கல்விகற்று இன்று மேற்குலகின் கார்ப்பொரேட்டுகளில் முக்கிய பதவிவகிக்கும் ஐஐடி முன்னாள் மாணவர்களின் உச்சிமாநாட்டில் பேசிய இன்போசிஸ் நாராயணமூர்த்தி தனது பார்ப்பனீய வெறியை  இவ்வாறு வெளிப்படுத்துகிறார் :

பான் ஐஐடி
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவிலிருந்து தேச சேவை செய்யும் பான் ஐஐடி சங்கம்.

“ஐஐடி அதன் உலக தரத்தை இழந்துள்ளது. அதற்கு காரணம் ஐஐடியில் ஒவ்வொரு ஆண்டும் நுழையும் மாணவர்களில் வெறும் இருபது சதவீதம் மட்டுமே பிறவி புத்திசாலிகள், மற்றவர்களெல்லாம் பயிற்சி வகுப்புகள் மூலம் ஐஐடிக்குள் நுழைபவர்களாக இருப்பது தான். இப்படிப்பட்ட ஆங்கிலம் நுனி நாக்கில் பேச வராத, நிர்வாகத் திறமையற்ற ஒரு கூட்டமான ஐஐடி ப்ராடக்ட்டுகளால் கார்ப்பரேட்டுகளின் தேவைகளை எப்படி பூர்த்தி செய்ய முடியும்? இதற்கெல்லாம் காரணம் இந்திய அரசின் கொள்கைகளும் திட்டங்களும் (இடஒதுக்கீடு) தான்.

எனவே இந்திய அரசை ஐஐடி நிர்வாகத்தில் தலையிடுவதிலிருந்து தடுக்கவேண்டும். அதற்கு ஐஐடி நிர்வாகக் குழுவில் (Board of Governance) இந்திய அரசு முன்மொழியும் பிரதிநிதிகளுக்கு பதிலாக இனிமேல் ஐஐடி முன்னாள் மாணவர்களான கார்ப்பொரேட் ’சி.ஈ.ஓ’ க்களே இருக்க வேண்டும். இதன் மூலம் கடந்த சில வருடங்களில் ஐஐடி இழந்த அதன் உலக தரத்தை திரும்பக் கைப்பற்ற உலகம் முழுவதுமுள்ள முன்னாள் ஐஐடி மாணவர்கள் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும்”.

உயர்கல்வியில் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்டு பல பத்தாண்டுகளான நிலையில், ஐஐடி எயிம்ஸ் மற்றும் ஐஐம்களின் பேராசிரியர்களாகப் பணிபுரியும் சாதியாதிக்க வெறிபிடித்த பரசுராமன்களாலும், துரோணர்களாலும் கொல்லப்படும் அனில் மீனா, பால் முகுந்த் பாரதி, முரளி பிரசாத் போன்ற தலித் மாணவர்களின் எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கு கூட ஹார்வர்டிலும் ஆக்ஸ்போர்டிலும் உள்ள கறுப்பின மாணவர்கள் நிறவெறியால் கொல்லப்படுவதில்லை. இப்படி கேள்விக்கிடமற்ற வகையில் பார்ப்பன கும்பல் உயர்கல்வி நிறுவனங்களில் தங்கள் பேரரசை நிறுவியுள்ளனர்.

மத்திய அரசு பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை ஐஐடிக்களில் அமுல்படுத்தத்தொடங்கி ஓரிரு வருடங்களேயாகியுள்ள நிலையில், ஐம்பதாண்டுகளாக தக்க வைத்த பார்ப்பன அறிவுஜீவி மற்றும் அதிகாரக் கோட்டையான ஐஐடிக்குள் ஒரு குறிப்பிட்ட அளவு மற்ற சாதிஇந்துக்களும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் நுழைந்துள்ளனர்; அதுகூட இளநிலை பாடப்பிரிவுகளில் ஐஐடி-ஜேஇஇ மூலம் வருபவர்கள் மட்டுமே; மற்றபடி முதுநிலை அல்லது ஆராய்ச்சிப் படிப்புகளுக்கோ அல்லது பேராசிரியர் நியமனங்களுக்கோ அரசின் இட ஒதுக்கீடு இங்கு மயிரளவுக்குக் கூட நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

நாராயண மூர்த்தி
இட ஒதுக்கீட்டை எதிர்த்த நச்சு பிரச்சாரம் – நாராயணமூர்த்தி.

இதுவரை தலித் மாணவர்களை தரக்குறைவாக நடத்தி, மனரீதியாக சிதைத்து தற்கொலைக்கு தள்ளிய இவர்களால் பிற்படுத்தோர் இடஒதுக்கீட்டின் தாக்குதலை சமாளிக்கமுடியவில்லை. இது பார்ப்பனக் கோட்டையை ஆட்டங்காண வைத்துள்ளது. அதனால் தான் ஐஐடிக்குள் கிராமப்புற தலித் – பிற்படுத்தப்பட்ட ஏழை மாணவர்களோ, நடுத்தர வர்க்க தலித் மாணவர்களோ இனி எந்த ஜன்மத்திலும் நுழைய முடியாத அளவுக்கு கடந்த ஆண்டிலிருந்து ஜேஇஇ தேர்வின் மாதிரி கடுமையாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பார்ப்பனக் கும்பல் சத்தமே இல்லாமல் பொதுமக்களின் சொத்தான ஐஐடியை தனியாருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தாரைவார்த்து தங்கள் கோட்டையை தக்கவைப்பதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளது.

இதற்காகவே உருவாக்கப்பட்ட கடோட்கர் கமிட்டி ஐஐடியை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்கான முன்வரைவை உருவாக்கியிருப்பதோடு, அதற்கு தோதாக சட்டத் திருத்தங்களையும் கொண்டு வரும் பொருட்டு இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி மசோதா (Institute of Technology Bill 1961) 1961 – ல் திருத்தத்தைக் கொண்டு வந்து பாரளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதா மூலம் ஐஐடி பன்னாட்டு நிறுவனங்களின் கூட்டமைப்புகளிடமும், தரகு முதலாளிகளின் கூட்டமைப்புகளிடமும் ஒப்படைக்கப்படுவதோடு, இவர்களால் நிர்வகிக்கப்படும் ஒவ்வொரு ஐஐடியும் அந்தந்த பிராந்தியத்தில் (Zonal level) உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் இந்த மசோதா வழங்கியுள்ளது.

மத்திய கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்ட போதும், ஐஐடி-ஜேஇஇ-க்கு பதிலாக பொது நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும் தெருவில் இறங்கி போராடிய ஐஐடி பேராசிரியப் பெருமக்களோ, ஐஐடி பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்படும் போது அதை தாரை தப்பட்டையுடன் வரவேற்கின்றனர்.

பார்ப்பனிய ‘அறத்தை’ ஆதரிக்கும் எழுத்தாளன்

சமீபகாலமாக அறம் வரிசை கதைகளுக்கு பெயர்போன எழுத்தாளன் ஜெயமோகன், அரசுப் பள்ளி மாணவன் ஒருவன் தற்கொலை செய்ததையொட்டி அவரது அறச்சீற்றத்தை வார்த்தைகளாகக் கொட்டி கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். இந்த தற்கொலையை வைத்து தொடங்கிய அவரது சீற்றம் எங்கே போகிறதென்று பாருங்கள்:

“இந்தப் புல்லர்களை (அரசுப்பள்ளி ஆசிரியர்கள்) நம்பித்தான் இங்கே ’சமச்சீர் கல்வி’ என்றெல்லாம் பெரிய பேச்சுக்கள் பேசப்படுகின்றன. இன்று நம் கல்விமுறையின் மிகப் பெரிய பிரச்சினையே இந்த மாஃபியாதான். இவர்களை நெறிப்படுத்த ஓர் அமைப்பு இங்கே இல்லை.  அதைச் செய்ய மனம்  இல்லை. கண் துடைப்புக்காக சமச்சீர் கல்வி என்கிறார்கள். இன்று சமச்சீர் கல்விக்காகப் பேசுபவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த ஆசிரியப் புல்லுருவிகள்தான்.

ஜெயமோகன்
தனியார் கல்விக்காக ஜெயமோகனின் அறச்சீற்றம்.

தனியார் பள்ளிகளில் இதே சம்பளத்தில் பாதியைப்பெற்றுக்கொண்டு இரட்டிப்பு நேரம் கற்பிக்கிறார்கள். அங்கே சென்று புகார் செய்ய ஓர் இடம் இருக்கிறது. பிடிக்கா விட்டால் மாற்றிக் கொள்ள முடிகிறது. விளைவைக் காட்டிப் போட்டியில் நின்றாக வேண்டிய வணிகக் கட்டாயமாவது அவர்களுக்கு உள்ளது. சமச்சீர் கல்வி என்ற பேரில் அதற்கும் வேட்டு வைக்க நினைக்கிறார்கள்.”

பல தனியார் பள்ளிகளிலும் மாணவர்கள் ஆடுமாடுகளை விடக் கேவலமாக நடத்தப்பட்டு பல மனித உரிமை மீறல்கள் நடக்கும் போதெல்லாம் அது பற்றி வாய் திறக்காத இவருக்கு அரசுபள்ளி ஆசிரியர்களிடம் ஏற்பட்ட அறச்சீற்றத்தின் மூலத்தைக் கண்டுபிடிக்க இந்த கூற்றிற்கு முந்தைய பாராவைப் படித்தால் புரிந்துகொள்ளலாம் :

“சற்றுமுன் காலை நடை சென்றபோது ஓர் ஆசிரிய அற்பனிடம் பேசிவிட்டு வந்தேன். ‘ஏலே, துணிக்கும் சாராயத்துக்கும் காசு குடுக்குதேல்ல? காசு குடுத்துப் படிலே..ஏன் கெவர்மென்டு பள்ளிக்கு வாறே? ’ என  இறந்த மாணவனை வசை பாடினார். ‘வாத்தியரையா மாட்டி விடுதே? அரெஸ்ட் பண்ணினானுகளாம். அரெஸ்ட் பண்ணி என்ன செய்வே? ஒரு மண்ணும் செய்யமாட்டே. நாட்டிலே இருக்க பெரிய யூனியன் எங்களுக்காக்கும்.  ஜெயலலிதாவுக்கு அதுக்க ருசி தெரியும்’ என்றான், அவர்  ஒரு செந்தோழர்.”

கன்னியாகுமரியில் நாயர்-நம்பூதிரி சாதி ஆதிக்கத்திற்கெதிராக கிளர்ந்தெழுந்த நாடார்களில் பலரும் மிஷனரிகள் மூலம் கல்வி கற்று சாதிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, அரசு பள்ளிகளில் ஆசிரியர்களானார்கள். ஒருகாலத்தில், சாதி இந்துக்களால் கல்வி மறுக்கப்பட்ட இவர்கள் இன்று பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக இருப்பது ஜெயமோகனால் சகிக்க முடியவில்லை. இதற்கு அவர் வைக்கும் தீர்வு ”கல்வி தனியார்மயம்”.

பார்ப்பன கார்பொரேட் சாமியார் வாழும்கலை ரவிசங்கர் சில மாதங்களுக்கு முன் மத்திய அமைச்சர் கபில் சிபிலே எதிர்ப்பு தெரிவிக்குமளவிற்கு கூறிய ’அறிவார்ந்த’ பேச்சு:

“இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளும் தனியார் மயமாக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கங்கள் இதில் சம்பந்தப்படக் கூடாது என்றும் நினைக்கிறேன். காரணம் அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் தான் முதன்மையாக நக்சல்களாக உருவாகிறார்கள் என்ற முடிவிற்கு நான் வந்துள்ளேன்” என்றது தான். இதற்கு அவர் சொல்லும் காரணம் வாழும்கலை (art of living) 185 ப்ரி-ஸ்கூல் (pre-school) களை நக்சல் இயக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடத்துவதாகவும், அவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு எப்போதும் இப்படிப்பட்ட தீவரவாதம் போதிக்கப்படுவதில்லை என்றும் கூறுகிறார்.

ஆன்மீகம் என்ற பெயரில், மத்திய இந்தியாவில் மட்டுமே 185 ஆரம்பப் பள்ளிகளை நடத்தும் இந்த கார்ப்பரேட் சாமியாரின் நோக்கம் இலாபம் மட்டும் இல்லை என்பது திண்ணம். ஆனால் பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு எதிரான மறுகாலனியாக்கத்திற்கும் அதற்கு சேவை செய்யும் பார்ப்பனியத்திற்கும் எதிராக அவர்கள் திரண்டெழுந்து நக்சல்பாரிகளாய் அணிதிரண்டால், இரண்டாயிரம் ஆண்டாய் கட்டிக் காத்த சாம்ராச்சியத்திலிருந்து தூக்கியெறியப் படுவோம் என்ற பீதி தான் இன்று ‘கல்வியை தனியாரிடம் ஒப்படை’ என்று அரசை நிர்ப்பந்திக்க இந்த கார்ப்பொரேட் சாமியாரை தூண்டியுள்ளது.

பார்ப்பனக் கல்வியாளர்கள்

ஒய் ஜி பார்த்தசாரதி
பத்ம சேஷாத்ரியின் பார்ப்பன கல்வியாளர் திருமதி ஒய் ஜி பார்த்தசாரதி.

சமச்சீர் கல்வி மற்றும் தனியார் பள்ளிக் கூடங்களில் ஏழை மாணவர்களுக்கு 25% இடஒதுக்கீடு முதலியவை அமுல்படுத்தப்பட்ட பின் கல்வி முதலாளிகளாகவும், கல்வியாளர்களாகவும் திகழும் பார்ப்பனர்களின் போர்க் குணமிக்க எதிர்வினையின் அரசியல் சாதியாதிக்கம் அன்றி வேறேன்னவாக இருக்க முடியும். சமச்சீர் கல்வித்திட்டம் அமுல்படுத்தப்பட்டபோது அதை எப்படியாவது தடுக்க பத்மாசேஷாத்ரி மற்றும் டிவிஏ பள்ளி முதலாளிகள் முயற்சி செய்தது நாம் எல்லோரும் அறிந்ததே. அதுபோல 25% இடஒதுக்கீடு கட்டாயமாக்கப்பட்டதையொட்டி ஏழை மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதால் பள்ளியின் ஒழுக்கமும், தரமும் கெட்டுவிடும், ஆசிரியர்களிடமும் ஒழுங்கு குலையும் என்று சென்னை அடையாறிலிருக்கும் ஸ்ரீ சங்கரா சீனியர் செகண்டரி பள்ளியின் தலைமையாசிரியை சுபலா அனந்தனாராயணன் கூறியுள்ளதோடு, பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் அனைவருக்குமான கல்வி மசோதாவை எதிர்த்துப் போராடும் படியும் சுற்றறிக்கை விட்டுள்ளார். 25% இடஒதுக்கீட்டில் வந்த மாணவர்களின் முடியை வெட்டி அவமானப்படுத்தி தீண்டாமையைக் கடைபிடித்த பங்களூர் ஆக்ஸ்போர்ட் பள்ளியின் செயலை ஒத்ததே இது.

பார்ப்பன ஆட்சியாளர்கள்

பார்ப்பன பாசிச ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து ஒரு சில நாட்களிலே மெட்ரிக் பள்ளி முதலாளிகளுக்காக சமச்சீர் பாடத்திட்டத்தை இரத்து செய்தார். பொதுமக்களின் பணத்தையெடுத்து இந்த கல்வி முதலாளிகளுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் பல கோடிகளை வாரியிறைத்து வாதாடியும் இவ்வழக்கில் தோல்வியைத் தழுவியது ஜெயா அரசு. ஆனால் அத்துடன் பாடம் கற்றுக் கொண்டால் அப்புறம் பார்ப்பன பாசிச ஜெயலலிதாவாக இருக்க முடியுமா?

இம்முறை மக்கள் பணத்தில் தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரி முதலாளிகளுக்காக களம் இறங்கியுள்ளது. கடந்தாண்டு பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தை அணுகி எந்த வித கட்டுமான வசதிகளோ தகுதியான ஆசிரியர்களோ இல்லாத இந்த பொறியியல் கல்லூரிகளில் சேர எந்த மாணவர்களும் விரும்பாத நிலையில், காலியாகக் கிடக்கும் இடங்களை நிரப்பி கல்வி முதலாளிகளுக்கு சேவை செய்யும் பொருட்டு, ஏஐசிடிஇ யின் விதிப்படி தலித்துகளுக்கு 40% ஆக உள்ள குறைந்த பட்ச மதிப்பெண்ணை 35% ஆகக் குறைக்க வேண்டி உயர்நீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்தது.

ஜெயலலிதா
தனியார் கல்வி முதலாளிகளுக்காக போராடும் பார்ப்பன-பாசிச ஜெயலலிதா

அரசுத் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்: ”தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகளில் பல ஆயிரக்கணக்கான இடங்கள் காலியாகக் கிடப்பதால் அக்கல்லூரிகளில் ஏழை தலித் மாணவர்களுக்கு கல்வி வழங்கி சமூக நீதியை நிலைநாட்டும் பொருட்டு ஏஐசிடிஇ விதிமுறைகளை தளர்த்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர். இந்த வழக்கில் நீதிபதி சந்துருவின் தீர்ப்பு தமிழக அரசின் மக்கள் விரோதச் செயலை தோலுரித்தது.

“தமிழக அரசு இந்த மாதிரியான ஒரு பொதுநல வழக்கை கூடுதல் தலைமைச் செயலர் (உயர்கல்வித்துறை) வழியாக தாக்கல் செய்திருப்பது துரதிர்ஷ்டவசமானது…. ஏனென்றால் தமிழகத்தில் பிறந்த அனைவரும் இஞ்சினியர்கள் ஆக வேண்டுமென்ற கட்டாயமொன்றுமில்லை. தமிழக அரசு யாருடைய நலனுக்காக பிரச்சாரம் செய்கிறது என்பது மிகத்தெளிவாகத் தெரிகிறது. ஏனென்றால் சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்களை போட்டி அதிகமாக உள்ள (கட் ஆப் 95-97%) அண்ணா பல்கலைக் கழகத்திலோ அல்லது அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளிலோ சேர்க்க வேண்டுமென்று அரசு விரும்பவில்லை. மாறாக தரமில்லாததால் இடங்கள் நிரப்பப்படாத சுயநிதிக்கல்லூரிகளுக்கு ஆள் சேர்த்துக் கொடுக்கவே அரசு இப்போது முயல்கிறது. இதற்காக எந்த தனியார் கல்லூரிகளும் நீதிமன்றத்தை அணுகவில்லை… மாறாக இந்த பொதுநல வழக்கு மூலம் அவர்களை ஆதரித்து தமிழக அரசு தான் நீதிமன்றத்தை அணுகி உள்ளது. தமிழக அரசின் இந்த அணுகுமுறை தனியார் சுயநிதிக் கல்லூரிகளின் நலனுக்காக மட்டுமே. அரசு செலவிலே தலித் மாணவர்களுக்கு கல்வி வழங்கப்படுகிறது. அப்படி இருக்கையில், இவர்களை எந்த கட்டுமான வசதியுமற்ற தனியார் சுயநிதிக் கல்லூரிகளை நோக்கி விரட்டும் இந்த நடவடிக்கையின் நோக்கம் அக்கல்லூரிகள் அரசு செலவில் காலி இடங்களை நிரப்புவதேயாகும்… காலியிடங்களை நிரப்புவதற்காகவே ஏஐசிடிஇ விதிமுறைகளை தளர்த்துமாறு நீதிமன்றங்களை அணுக இந்த அரசிற்கு சட்ட அதிகாரமோ, அரசியலமைப்பு அதிகாரமோ இல்லை” என்று 23.07.2012 அன்றுகூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

நீதிமன்றத்தால் இவ்வளவு தூரம் மூக்குடைக்கப்பட்டும், வழக்கம் போல எந்த பாடத்தையும் ஜெ அரசாங்கம் கற்கவில்லை. தீர்ப்பு வந்து பதினைந்தே நாட்களில் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் 06.08.2012 அன்று சண்டே எக்ஸ்பிரஸ்-க்கு அளித்த பேட்டியில், தமிழக அரசு இந்த வழக்கில் உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப் போவதாகக் அறிவித்தார். தனியார் கல்விக் கொள்ளையர்களின் நலனுக்காக பொதுமக்களின் பணத்தையே வாரி இறைத்ததன் மூலம், தனியார்மயத்தை பாதுகாக்க பார்ப்பன-பாசிச ஜெயலலிதா அரசாங்கம் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கீழிறங்கும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

பார்ப்பன லாபி

ஒட்டு மொத்தக் கல்வியையும் தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு கல்வி உரிமைச்சட்டம் எனும் பல்லில்லாத காகிதச் சட்டத்தைக் கொண்டு வந்த அரசு, அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் அம்மசோதாவில் கடந்த வருடம் ஒரு சட்டத் திருத்ததையும் கொண்டு வந்துள்ளது. அரசியல் சாசனத்தின் 29 மற்றும் 30 ஆவது பிரிவுகளின் படி மத நிறுவனங்களால் நடத்தப்படும் மதரசாக்களுக்கும் வேத பாடசாலைகளுக்கும் இச்சட்டம் பொருந்தாது என்றது அந்த சட்டத் திருத்தம். அரசியல் சாசனத்தின் 29 மற்றும் 30 ஆவது பிரிவானது, மொழி, கலாச்சார மற்றும் மத சிறுபான்மையினருக்கு சில சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது. இந்த சிறப்பு சலுகைகள் அந்தந்த மாநிலங்களில் அவர்கள் 50% த்திற்கு குறைவாக இருந்தால் மட்டுமே பொருந்தும் என்று டி.எம்.ஏ. பை ஃபவுண்டேஷன் வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஈஷா சம்ஸ்க்ருதி பள்ளி
சமஸ்கிருதம் சொல்லித் தருவதால் ஈஷா சம்ஸ்க்ருதி சிறுபான்மையினரின் பள்ளி.

ஆனால் ’யார் இந்து?’ என்பதை வரையறுத்தது போல, ’யார் சிறுபான்மையினர்?’ என்பதற்கும் தளர்வான வரையறைகளே அரசியல் சாசனம் கொடுத்துள்ளது. இப்படியான வரையறை காரணமாக சிறுபான்மை நிறுவனங்கள் என இதுவரை தங்களை பதிவு செய்துக் கொண்ட பல நிறுவனங்களும், சிறுபான்மையிருக்கான சிறப்பு சலுகைகளை நீதிமன்ற தலையீட்டின் மூலமே பெற்றுவந்துள்ளன. அரசியல் சாசனத்தின் இந்த ஓட்டையை பார்ப்பனர்கள் தங்களையும் சிறுபான்மையினராக முன்னிறுத்த பல முறை உபயோகித்துள்ளனர்.

சிதம்பரம் தீட்சிதர்கள், தங்கள் வழிபாட்டு முறைகள் வேறுபட்டதாக இருப்பதால் தாங்கள் இந்துக்களே அல்ல என்றும், எனவே மத சிறுபான்மையினருக்கான சிறப்பு சலுகைகளின் பாகமாக தங்கள் வழிபாட்டு தலமான நடராசர் கோயிலை பராமரிக்கும் பொறுப்பு தமக்கு மட்டுமே உள்ளதென்றும் அதில் அரசு எந்த காரணத்தைக் கொண்டும் தலையிடக் கூடாது என்றும் வாதிட்டனர். அப்படியிருக்கையில் ’இந்துக்களுக்கு உரிமையே கிடையாதா?’ என்ற தலைப்பில் வந்த இந்து முன்னணி வெளியீட்டில், கல்வி நிறுவனங்கள் தொடங்குவதில் மதம் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் கொடுக்கப்படும் சலுகைகளை ’எங்களுக்கும் தாருங்கள்’ என்று கேட்கின்ற நிலைக்கு இந்துக்கள் தள்ளி விடப்பட்டுள்ளதாக புலம்புகிறார்கள்.

இது வெறும் வெற்றுப் புலம்பல் தானே என்று ஒதுக்கிவிடமுடியாதபடி ”மத சிறுபான்மை நிறுவனங்களுக்கென” அரசியல் சாசனம் வழங்கிய சலுகையை ”மத நிறுவனங்களுக்கான சலுகை” யென ஒரு சிறு திருத்தம் செய்ததன் மூலம் இன்று பார்ப்பன லாபி சத்தமே இல்லாமல் வேத பாடசாலைகளின் செயல்பாட்டில் அரசு தலையிட முடியாதென்று சட்டத்தையே கொண்டுவந்துள்ளது. இந்த சட்டத் திருத்தத்தின் அடுத்த வரி இன்னும் ஆபத்துக்குரியதாக உள்ளது. இந்த மத நிறுவனங்கள் எந்த வகையான கல்வியை (ஆங்கில வழியோ அல்லது குருகுலக் கல்வியோ) மாணவர்களுக்கு வழங்கினாலும் அவை மத நிறுவனங்களின் கீழ் நடத்தப்படுவதாகப் பதிவு செய்யப்பட்டாலே, இந்த கல்வி உரிமைச் சட்டம் அதற்கு பொருந்தாது என்கிறது.

ஏதோ முஸ்லீம் அமைப்புகளின் நிர்பந்தத்தால் தான் இச்சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டதாக கபில் சிபில் வரிக்கு வரி பேட்டியளித்தாலும், அரசியல் சாசனத்தின் பிரிவு 29 & 30 –இன் படி இந்துக்கள் எப்படி சிறுபான்மையினராக முடியும் என்று யாரும் கேள்வி எழுப்பவில்லை. வேத பாடசாலைகள் அரசியல் சாசனத்தின் 29 & 30 பிரிவுகள் சிறுபான்மை மத நிறுவனங்களுக்கு வழங்கும் சிறப்பு சலுகைகளுக்கு கீழ் வருமென்றால் அதில் பெரும்பான்மையான இந்துக்களுக்கு பிரவேசனம் இருக்குமா என்றும் யாரும் கேள்வியெழுப்பவில்லை.

பஜ்ரங்தள்
பயங்கரவாதிகளை உருவாக்கும் பஜ்ரங்தள் பயிற்சி பட்டறை.

இந்த இரண்டு கேள்விகளும் ஒரே பதிலைத் தான் கொடுக்க முடியும். பிரிவு 29 & 30 இன் வரையறைப்படி மொழி, மத அல்லது கலாச்சார ரீதியாக சிறுபான்மையினருக்கான சிறப்புச் சலுகைகளை அனுபவிக்க வேத பாடசாலைகள் தகுதியாயிருப்பதற்கு காரணம், பெரும்பான்மை இந்துக்களுக்கு இல்லாத பார்ப்பனர்களுக்கென்று மட்டுமே உள்ள தனி மொழி (சமஸ்கிருதம்), வழிபாட்டு முறை, கலாச்சாரம் போன்றவை அவர்களை இந்தியாவில் சிறுபான்மையினராக வகைப்படுத்த தகுதியுடையதாக்கிறது.

ஒருபக்கம் தங்களை இந்தியாவின் பெரும்பான்மையினராக சித்தரித்துக் கொண்டு சிறுபான்மை கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு அவர்களை ஏதோ அன்னிய ஆக்கிரமிப்பு சக்திகள் போல் சித்தரிக்கும் இக்கும்பல், தனது நலன்களுக்காக தங்களையே இந்நாட்டின் சிறுபான்மையினராக முன்னுறுத்தி தேவையான சலுகைகளை சத்தமேயில்லாமல் சுருட்டியுள்ளது.

சுருங்கச் சொன்னால் பார்ப்பனர்களால் விதவிதமாகத் தொடங்கப் பட்டுவரும் வேதிக் பாட்சாலா, வித்யாஸ்ரம், வித்யாமந்திர் தொடங்கி வாழும் கலை, அமிர்தா, சங்கரா, சாயிபாபா, டிவிஎஸ், சோ, லதா ரஜனிகாந்த், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஆஸ்ராம் பாபுவின் பால சன்ஸ்கார் கேந்திரா, ஈஷா வின் ஈஷா சம்ஸ்க்ருதி () போன்றவை கல்வி நிலையங்கள் என்ற பெயரில் நடத்தும் இந்துத்துவ பயங்கரவாத மையங்களின் செயல் பாட்டில் இனி அரசு தலையிட முடியாது. அதாவது இவ்வகைப்பட்ட கல்வி நிறுவனங்களில் என்ன வகையான பாடத் திட்டதை எந்த வகையான மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானிப்பது இந்த சாமியார்களும், பார்ப்பன தொழில் முனைவோரும் தான். ஏறத்தாழ ஆர் எஸ் எஸ் இன் அஜண்டாவுக்கு ஏற்ப இளம் இந்து பயங்கரவாதிகளை உருவாக்கும் பட்டறைகளாக இப்பள்ளிகளை உருவாக்கும் திட்டத்திற்கு இவர்கள் அச்சாரமிட்டுள்ளனர்.

இப்பொழுது மீண்டும் வாழும் கலை ரவிசங்கரின் ஆரம்பப்பள்ளிக்கூடங்கள் நக்ஸல் பகுதிகளில் உருவாக்கப்பட்டு வளர்க்கப்படுவதை நினைவுபடுத்திப் பாருங்கள்.

பார்ப்பன லாபியின் வலிமை கார்ப்பரேட் லாபிக்கு சற்றும் சளைத்தது அல்ல.

– ராஜன்

  1. தினமலம்,தினமனி,துக்ளக்..
    .இவையெல்லாம் கக்கூசு.
    ..இவற்றில் இருந்து
    கக்கூசு நாத்தம்தான் வெளிவரும்!
    இன்னமும் சனாதனக் கல்வி முறைக்காக
    “நாக்கை” தொங்கப் போட்டுக்கொண்டு அலையும்
    .. அடித்து விரட்டும் வரை.
    .அவாள் ஊளை விட்டுண்டுதான் இருப்பாள்!

  2. சுப்ரமணிய சாமி,சோ,இந்து ராம்,வைத்தி மாமா,தினமலர்….இவர்கள் அனைவரும் சேது கால்வாய்,ஈழம்,சமச்சீர்கல்வி,கூடங்குளம்,முல்லைபெரியாறு,நுழைவுதேர்வு போன்ற விஷயங்கள் அனைத்திலும் ஒரே மாதிரியாக தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுக்கிறார்கள்.ஆனால் தமிழன் இன்னும் மரமண்டையனாகவே இருக்கிறான் என்ன செய்ய.இன்று தமிழ் இந்துவில் தமிழை இங்க்லிஷ்லேயே எழுதலாம்.தமிழ் மொழி எழுத்துக்களே தேவை இல்லை அப்பத்தான் தமிழ் வளரும் என்று ஜெயமோகன் எழுதுகிறான்.இவ்வளவு இடம் எப்படி கொடுக்கிறோம்?

    • 1.sethusamudran canal ll be useful only for dmk and tr baalu and ll kill the fishes in the ocean and there are alternate means available to achieve the same.

      2.eazham-dmk/veeramani etc etc allakais deserve to be slaughtered to screwing up the peace of the island.They themselves request you to shut up and mind your business instead of messing around with their politics.

      3.samacheer kalvi is a bogus medium which aims at keeping poor tamil people ignorant with mediocre and substandard education delivered by lazy teachers who act only as card carrying members of dmk.

      4.Koodankulam is a very beneficial project for TN and i wonder why those who dont complain about kalpakkam,now complain about koodankulam.

      5.All tamils are equivocally supportive of Mullaiperiyar dam.

      6.Entrance exam-Tamil students had entrance exam till 5 years and removing it ll only make state board students more dumber than they were before.

    • மரமண்டையனாக…என்ன செய்வது:
      விழிப்பு இல்லாத காரணத்தினால்,
      எல்லா அரசியல் வியாதிகளும்,நம் மீது கழுதை/குதிரை
      சவாரி செய்கிறான்….
      நீங்களும்,நானும் விழித்துக்கொண்டோம்…எல்லோரும்
      விரைவில் விழிப்பார்கள்….
      அப்புறம் பாருங்களேன்….பூணூல்கள் ” வுஞிஞிவிருதி”யை பின்பற்றும்..
      ஏமாந்த தேசம் இருந்தால் ஓடிப் போய் ஏமாற்ற முயலும்

  3. இந்த அளவுக்கு பளபளவென போட்டோக்கள் , தனி மனிதர் தாக்குதலை இன்பன்ட்-ஜீஸஸ் விவகாரத்தில் ஏன் காட்ட்வில்லை – வினவாரே ?

  4. தனியார்மயத்தை எதிர்த்து கூவும் வினவு , சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளை அரசுடமை ஆக்க போராட வருமா…………? சிறுபான்மையினர் என்ற போர்வையில்தான் ஜேப்பியார் , கிரசன்ட் ,காருண்யா போன்ற பல்கலைகழகங்கள் தனியார் மய கல்வி கொள்ளையினை செயல்படுதிவருகின்றனர்……….. பல்கலை கழக மானியக்குழு உட்பட அரசு வழங்கும் அணைத்து சலுகைகளையும் அனுபவிக்கும் இவற்றை அரசுடமை ஆக்க வினவு போராட………… இல்லை, இல்லை அரசுடமை ஆக்க ஒரு வார்த்தை கூற முன்வரவேண்டும்……… இங்கு கல்வி ஒன்றும் இலவசமாக கற்றுதரப்படுவதில்லை. இவர்களெல்லாம் சிறுபான்மையினர் எனில் , பெரும்பான்மை சமூகத்தவன் ஆரம்பிக்கும் கல்விநிறுவனங்களுக்கு அரசு ஏன் சலுகை வழங்க கூடாது….? இவ்வளவு நீண்ட கட்டுரை எழுதியிருக்கும் வினவு, அரசு மானியங்களை பெறும் சிறுபான்மையினர் கல்விநிறுவனங்கள் இலவச கல்வி தர ஒரு வார்த்தையும் விடாதது கவனிக்கதகது….. . எதை கூறினாலும் கேட்டுகொண்டுபோக இங்கு இளிச்சவாயன் ஹிந்து மட்டுமே..,,,,,,,,,

  5. /////////ஏதோ முஸ்லீம் அமைப்புகளின் நிர்பந்தத்தால் தான் இச்சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டதாக கபில் சிபில் வரிக்கு வரி பேட்டியளித்தாலும், அரசியல் சாசனத்தின் பிரிவு 29 & 30 –இன் படி இந்துக்கள் எப்படி சிறுபான்மையினராக முடியும் என்று யாரும் கேள்வி எழுப்பவில்லை./////////

    இஸ்லாமிய மக்களின் நிர்பந்தம் என்னவென்று புரிகிறதா மக்களே……… இஸ்லாமியர்கள் நடத்தும் மதரசா, இச்சட்டதின் மூலம் கல்விநிருவனங்களுக்கு உரிய அணைத்து தகுதிகளையும் பெற்றுவிடுகிறது…….. இதன்மூலம் வினவு கூறுவது போல் இனி பள்ளிகளில் இந்து மத வெறி மட்டுமல்ல ………. மதரசாக்களில் இஸ்லாமிய மதவெறி கல்வி கற்றுத்தரப்படு வதும் சட்டபூர்வமாக ஆக்கப்பட்டுள்ளது……… இதையெல்லாம் கூற வினாவுக்கு இந்த நீண்ட கட்டுரையில் இடம் போதாது என்பதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

  6. தங்களது தலையாய கடமை தினசரி இந்துக்களை அவமதித்து பதிவிடுவது,பிராமணர்களை அவமானப்படுத்துவது இந்திய நாட்டைக் கேவலப்படுத்தி எழுதுவது இதெல்லாம் இந்நிய திரு நாட்டில் மட்டுமே முடியும்.
    மலாலா என்ற சிறுமி படிக்கச் சொன்னார் என்பதற்காக சுடப்பட்டார்.அதைப்பற்றி கால் பங்கு கூட எழுத தங்களது நேர்மை,நியாயம் இடம் தரவில்லை.
    தங்களுக்கு என்ன தெரியும் இந்து மதத்தைப்பற்றி.
    தங்களுக்கு பின்னுாட்டம் இட்டு இருக்கும் RAMADOSS KOTHANDARAMAN SEETHAPATHI,NARAGAASURAN.G இவர்களின் புனைப் பெயர் நன்றாகவே உள்ளது.

    • எனது முழுப் பெயர்
      ராமதாசு கோதண்டராமன் சீத்தாபதி.
      .இதில் புனை பெயர் ஏது…?
      பொய்,புனை சுருட்டு எல்லாம் அக்கிரகாரத்து அயிட்டங்கள்…
      பாலாவை சந்தோசப் படுத்த என்னிடம்
      அக்கார அடைசல்,புளியோதரை,தத்தியண்ணம் கிடையாது!

  7. வந்தால் ஆரியவர்த்தாவுக்கு வருவேன். இந்தியாவுக்கு வரமாட்டேன்:

    கோவணத்தை கட்டிக்கொண்டு காட்டிலே மேட்டிலே அலைந்து திரிந்து கொண்டிருந்த அரைநிர்வாணப் பக்கிரிக்கெல்லாம் கல்விக்கண்ணை திறந்தது எனது பிராமண இனம். ஐ.ஐ.டி போன்ற கல்விக்கோயில்களை கட்டி பாரத திருநாட்டை உலக அரங்கிலே தலை நிமிர்ந்து நிற்கவைத்தனர் எனது முன்னோர். ஒபாமாவிடம் போய், நீங்கள் அறிந்த மாபெரும் இந்தியர்கள் யார் என்று கேட்டால் “சர்.சிவி.ராமன், டாக்டர்.சந்திரசேகர், கனிதமேதை ராமானுஜம், ஆர்யபட்டா, ஓவியர் ரவி வர்மா, சிதார் ரவி சங்கர்” என்று சொல்வார்.

    NASA, Microsoft, SUN, Oracle, MIT, Stanford, Harvard என்று எங்கே சென்றாலும் உயர்ந்த பதவிகளில் தலைமையேற்று திறம்பட நடத்துகிறோம். அறிவியல், மருத்துவம், கலை, இயல், இசை, நாடகம் என்று அனைத்து துறைகளிலும் முத்திரைகளை பதித்து இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க வைத்துள்ளோம். இந்தியருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு எனும் கண்ணியத்தையும், கௌரவத்தையும் எங்களுடைய அயராத உழைப்பாலும் புத்தி கூர்மையாலும் வென்றுள்ளோம்.

    ஆனால் இன்று இடஒதுக்கீட்டில் எனக்கு இடமில்லை. எனது முன்னோர் கட்டிய கல்விக்கோவிலில் எனக்கு நுழைய அனுமதியில்லை. அங்கே சூத்திரன் அர்ச்சகனாகிவிட்டான், நான் தீண்டத்தகாதவனாகி விட்டேன். பிழைக்க வழிதேடி அமெரிக்காவுக்கு அப்ளிகேசன் போட்டேன். எனக்கு ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஸ்காலர்சிப் கொடுத்து வரச்சொன்னார்கள். நல்லதாய் போய்விட்டது. பஞ்சாயத்து ஆபிஸில் கணக்கர் வேலை கிடைத்தால் எனது பிறவிப்பயன் கிட்டிவிடும் என கனவு கண்ட நான், இன்று அமெரிக்காவில் மிகப்பெரிய சாப்ட்வேர் கம்பெனியின் சேர்மேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியருக்கு நான் வேலை தந்துள்ளேன். ஒவ்வொருவரும் என்னிடம் சொல்வது இதுதான். “அய்யா நீங்க எனக்கு வேலை தந்திராவிட்டால், ஒன்று கோட்சேயாக மாறியிருப்பேன் அல்லது தூக்கிலே தொங்கியிருப்பேன்”.

    முடிவு செய்துவிட்டேன். இனி எனது பிறந்த மண்ணைக் காணவந்தால், ஆரியவர்த்தாவுக்கு வருவேன். இந்தியாவுக்கு ஒரு போதும் வரமாட்டேன்.

    மஹாத்மா மோடி தொடக்கம். முடிவு ஆரியவர்த்தா.
    (எனது அமெரிக்க நன்பர் சொன்னது)

  8. Education is given free to all by Kamarajar.but privatized by great Kazhagam.why u r not writing that? what is the donation fee in veeramani’s college or for that matter in all private colleges? Write unbiased about TN Education system.

  9. மேற்கு வங்கத்தில் ராமகிருஷ்னா மடத்து கல்லூரிகள், பார்ப்பன ஆதிக்கத்திலிருந்தாலும், சிறுபான்மை சமூக கல்விநிரறுவனமாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது அன்றைய காம்ரேடு ஆட்சியாளர்களால்! சட்டங்களை வளைத்து, திரித்து ஆதாயமடைவது தானே அவாள் பிழைப்பு! சம்சஸ்கிருத வளர்ச்சி என்ற பெயரில், இவர்கள் அடித்து வரும் கொள்ளை எவ்வளவு? அவாள் வாரீசுகள் மட்டுமே படிக்கும் அக்கிரகார மடங்களுக்கு மத்திய அரசின்நிதி எதற்கு? வருடா வருடம் சங்கர நேத்திரலாயாவிற்கு அரசுத்துறைநிறுவனமான இந்தியன் ஆயில் தரும் நன் கொடை பத்து கோடி ரூபாய்! பெட்ரொல் விலை ஏன் உயராது?

  10. //மாறாக எந்த அரசு கல்வி நிலையங்களும் தகுதியில்லாத ஆசிரியர்களை இன்றுவரை நியமித்ததில்லை.//

    அந்த ஆசிரியர்களின் திறமைதான் பொதுத்தேர்வுகளில் தெரிந்துவிடுகிறதே…

  11. பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு எதிரான மறுகாலனியாக்கத்திற்கும் அதற்கு சேவை செய்யும் பார்ப்பனியத்திற்கும் எதிராக நக்சல்பாரிகளாய் அணிதிரளாதவரை வேறு எந்த வழியிலும் வெற்றி கிடைப்பதாக தெரியவில்லை…………….

  12. கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் எழுதப்பட்டுள்ளது இந்த கட்டுரை. சமச்சீர் கல்வி என்பதே சோம்பேறிகளாக இருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களை மேலும் சோம்பேறிகளாக வைத்திருப்பதற்கு முந்தைய தி.மு.க அரசு கொண்டு வந்த திட்டம் தான். தமிழ்நாட்டை சேர்ந்த ஏழை எளிய பின்புலம் கொண்ட மாணவர்கள் வெளியுலகமே தெரியாமல் தற்குறிகளாய் தமிழ்நாட்டுக்குள்ளேயே கிடந்து நாசமாய் போகவேண்டும் என்பது தான் இதன் மறைமுக நோக்கம். அரசு பள்ளி ஆசிரியர்கள் கற்பிப்பதற்கு உண்டான அனைத்து தகுதிகளையும் கொண்டவர்கள் என்பதே சர்ச்சைக்கு உரியது. முந்தைய தி.மு.க ஆட்சிகளில் சும்மா வீட்டில் உட்கார்ந்து இருந்தவர்களுக்கு எல்லாம் ஆசிரியப்பணி கொடுக்கப்பட்டது. உலகமே போட்டித்தேர்வுகளை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. அதற்கு ஏற்றாற்போல் தான் நம்முடைய கல்வி முறை இருக்க வேண்டும். இல்லையெனில் இந்த உலகமய சூழ்நிலையில் தமிழ்நாட்டு மாணவர்கள் பின் தங்கிவிடுவார்கள். அரசு பள்ளி ஆசிரியர்களில் சுமார் என்பது சதம் பேர் பணி செய்யும் எண்ணத்துடன் வருவதில்லை. அவர்களுக்கு பணிப்பண்பாடே கிடையாது என்று ஒரு சர்வே கூறுகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எழுத்துக்களை படிக்க தெரியாது. சாதாரண கணக்கை கூட போடத்தெரியாது. அந்த அளவுக்கு தமிழக அரசு பள்ளிகளின் ஆசிரியர்களின் தரம் மோசம் என்று இன்னொரு சர்வே கூறுகிறது. இந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் வாங்கும் சம்பளத்தின் அளவை கொஞ்சம் நினைத்து பாருங்கள். ஏழை மாணவர்களின் படிப்பு விசயத்தில் கொஞ்சம் மனசாட்சியோடு கட்டுரை எழுதுங்கள். புண்ணியமாக போகும்.

    • Mr Periyasamy,The following are the non-educational duties allocated by the Govt to Govt school teachers and Headmasters.The Headmaster is expected to supervise the construction of school buildings under the Education for all scheme.He has to utilize utmost diplomacy in avoiding payment of commission out of the allocated funds under the scheme to local political leaders.Govt do not appoint sweepers or scavengers for these buildings.HM and other teachers are cleaning not only class rooms but also the toilets.Even though he is not related to Midday meals,HM is expected to taste the food before serving to students.No clerks are appointed in these schools.HM is expected to maintain 52 types of records and furnish data to the Education Deptt morning and evening and most of the times again and again.Govt do not supply the free stationery and other items to students in one stretch.He has to make many trips to various Govt offices every month to collect them and carry back to the school.These teachers are engaged in the following surveys;-Survey on tooth decay among students,caste wise survey,socio economic survey,census,survey regarding livestock,survey connected with ration cards etc.They have to attend training programmes conducted every Saturday and they attend camps for addition,deletion and correction in electoral rolls every Sunday.They have to serve as BLOs and DLOs during elections After attending to all these duties not related to Education,they “also”teach whenever they are allowed.Less said the better about the infrastructure available in Govt schools.In spite of all these hurdles,only due to their hard work,they have improved the pass percentage.The Chennai(Corporation)Schools improved their pass percentage from 50 to 90 in the past decade.One should remember that the Govt school students scoring higher marks are achieving that without any tuition unlike private school students.They are from the lower strata of society and they can not afford to pay for private tuitions.There are thousands of elementary schools with only one teacher for all the classes.About 50000 vacancies were not filled up.In TN, only those who underwent Teacher training courses were appointed through Employment Exchanges.Anybody sitting at home were not appointed as stated by you.There are 5 lakhs trained people registered with Employment Exchanges for more than a decade.Now tell whether teachers are responsible for the education standard.

    • ஐயா பெரியசாமி, வார்த்தைக்கு வார்த்தை கல்வித்தரம் குறைந்துவிட்டது என்று எழுதுவதற்கு முன்னர், கல்வித்தரம் எப்படிக் குறைந்தது என்று கொஞ்சம் யோசிக்க வேண்டும்.

      (அ) கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்களின் பிள்ளைகள்
      (ஆ) அந்த ஆசிரியரை மேற்பார்வையிடும் தலைமையாசிரியர்களின் பிள்ளைகள்
      (இ) கல்வி சரியாக போதிக்கப்படுகிறதா என்று உறுதி செய்யும் கல்வித்துறையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான அதிகாரிகளின் பிள்ளைகள்
      (ஈ) ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் (Teacher’s Recruitment Board) அதிகாரிகளின் பிள்ளைகள்
      (உ) நீதிபதிகளின் பிள்ளைகள்
      (ஊ) ஆயிரக்கணக்கான அதிகாரவர்க்கத்தினரின் (ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளின்) பிள்ளைகள்

      இப்படி இந்நாட்டில் கல்வியின் தரத்தை உறுதி செய்யும் ஆயிரக்கணக்கானோரின் பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்து படித்திருந்தால் அதன் தரத்தைக் குறைய விட்டிருப்பார்களா? ஒரு தலைமையாசிரியரின் பிள்ளைகள் அதே அரசுப் பள்ளியில் படித்தாலோ, ஒரு மாவட்ட கல்வியதிகாரியின் பிள்ளைகள் அம்மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளியில் படித்தாலோ அவர்கள் அதன் தரத்தை குறைய விட்டிருப்பார்களா? இவர்களின் பிள்ளைகள் எல்லோரும் சொகுசாக தனியார் பள்ளிகளில் படிப்பதால்தான் ‘வேறு யாரோ’ பிள்ளைகள் படிக்கும் அரசுப் பள்ளிகளின் தரத்தைப் பற்றி இவர்கள் கண்டுகொள்ளவதில்லை. இல்லையா…? ஆக முதலில், அனைத்து அரசு ஊழியர்களின் பிள்ளைகளும் கட்டாயமாக அரசுப் பள்ளிகளில்தான் பயில வேண்டும் என்பதை சட்டமாக்கினாலே அதன் தரம் மீண்டும் உயரும் என்பது என் கருத்து.

      இரண்டாவதாக:
      டாஸ்மாக் கடைகளை (‘எலைட்’ ) தனியார் பேரங்காடிகளின் (mall) தரத்திற்கு இணையாக போட்டி போட்டுக்கொண்டு நடத்தும் தமிழக அரசினால் ஏன் கல்விக்கூடங்களை தரமாக நடத்த முடியவில்லை என்பதையும் சேர்த்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

      • Finally Mr,Periaswamy hit the nail on the head,whatever sooriyan can say,the reality is all school teachers and govt employees are and behave like card carrying members of DMK.

        It is a big stagnating rut and worthless,I remember so many CBSE students going to state board after 10th std and getting minimum 1150/1200.

        The village kids are the only losers as they have poor teachers.

  13. பள்ளர் பறையர் சூத்திரனுக்கெல்லாம் வர்ணதரும அடிப்படையில் குலத்தொழிலை 5000 வருடங்களாக ஒதுக்கீடு செய்துள்ளோம்.கொடுத்த வேலையை செய்யாமல், நானும் ராக்கெட் விஞ்ஞானி ஆகப்போறேனென்று கிளம்பினால் புலியைப்பார்த்து பூனை சூடு போட்ட கதைதான் —- கடமையை செய், பலனை எதிர்பாராதே. கர்மபலனை அனுபவி. அந்தணரின் அடிதொழுது வாழ்.

    • நாங்கள் எங்களது வேலையை இதுவரை
      செய்துவிட்டோம்..
      .எனவே இனிமேல்
      பூணூல்கள்,
      கக்கூசு கழுவுவது
      துணி சலவை போன்ற வேலைகளை “மிகவும்”
      “திறம்பட” செய்து “உழைத்து” வாழ முயற்சி செய்யட்டும்

      • நாயுடுகாரு அது என்ன ‘ நாங்கள் எங்களது வேலையை இதுவரை செய்துவிட்டோம் ” கீழ்வெண்மனி போன்ற் வேலைகளா ? உங்களுக்கு கக்கூசு கழுவுவது துணி சலவை போன்ற வேலைகளை செய்ததும் தாழ்த்தபட்ட இனம் தான்.

        பூணூல்களை திறம்பட” செய்து “உழைத்து” வாழ முயற்சி செய்ய சொல்லும் ராகோசீ – உஙகளால் அந்த வேலையை கூட திறம்பட” செய்து “உழைத்து” வாழ முடியாதா ?

        • இவ்வளவு நாட்கள்,,நாங்கள்தான் செய்தோம்..எனது
          முன்னோர்கள் சவுத் அப்ரிக்காவில் இன்னமும் இதைத்தான்
          செய்கிறார்கள்…இதில் மறைக்க ஒன்றுமில்லை….
          எங்கேயாவது,எந்த பாப்பானோ/பாப்பாத்தியோ நாற்று நட்டு/களை பிடுங்கி பார்த்ததுண்டா?
          உங்களது (பூணூல்) முழு நேர வேலையே, எங்களது வருவாயை “லவட்டி” செல்வது?

          • ராகோசீநாயுடுகாரு – நான் போடட மறுமொழிக்கு இதுவா பதில் மறுமொழி ? அப்போ சவுத் அப்ரிக்காவில் போய் உமது கோரிக்கையை வைக்கவும். இது உங்கள் தந்தை ராமசாமிநாயுடு பிறந்த மண்ணாக்கும். தமிழ்நாட்டில் யார் யார் என்ன செய்கிறார்கள் என்பதுதான் பேச்சு.

            • எனது வீட்டில் கழிவறையை சுத்தம் செய்வது நான்:
              வேண்டுமானால்,பூணூல்கள் செய்ய விரும்பினால்
              தாராளமாக செய்யலாம்:தகுந்த கூலி தர நான் தயார்!

            • இன்றுவரை உங்களது சீர்மிகு சென்னையில்
              எங்களது வடுக பங்காளிகல்தான் உங்களது
              ……..சுத்தம் செய்கிறார்கள்…வேண்டுமானால் சென்னை
              மாநகராட்சியின்,பதிவேட்டைப் பாருங்களேன்…ஒருவேளை,அதில்
              சு,சாமி,இந்து ராம்,வைத்தி,ரமேசு இவாள் பெயர் இருந்தால்,
              எனது தலையை வெட்டிகொள்ளத் தயார்:
              ஒரு சிறு திருத்தம்-“வடுகனில்” பெரும்பாலோர் இப்போது
              ஜெய கோபுரத்தில்(யேசு அழைத்ததினாலும்,நீங்கள் உங்கள் இந்து கோவில் கதவுகளை அடைத்ததாலும்)ஐக்கியம்மாகிவிட்டனர்

  14. //பார்ப்பன பாசிச ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து ஒரு சில நாட்களிலே மெட்ரிக் பள்ளி முதலாளிகளுக்காக சமச்சீர் பாடத்திட்டத்தை இரத்து செய்தார். பொதுமக்களின் பணத்தையெடுத்து இந்த கல்வி முதலாளிகளுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் பல கோடிகளை வாரியிறைத்து வாதாடியும் இவ்வழக்கில் தோல்வியைத் தழுவியது ஜெயா அரசு. ஆனால் அத்துடன் பாடம் கற்றுக் கொண்டால் அப்புறம் பார்ப்பன பாசிச ஜெயலலிதாவாக இருக்க முடியுமா?//

    Our government or our CM.Selvi.J.Jayalalitha are not the real losers of this case, the actual losers are the children and their parents of Tamil Nadu. If you want to know the feedbacks of சமச்சீர் please go to the parents whose children were studying in சமச்சீர் schools, and then write your stories. Because all the parents whom I asked about சமச்சீர் gave only negative feedback on it. If you want to be against AIADMK and our CM.Selvi.J.Jayalalitha its you wish, for that don’t play with the life of Tamil Nadu Children.

  15. அய் டீ துரையினருக்கு அள்ளிக் கொடுக்கும் சம்பளத்தை , ஆசிரியருக்கு கொடுங்களேன்! அப்புறம் பாருங்கள், ஆசிரியர் வேலை பார்க்க தகுதி,திறமை பேசுகிற கூட்டம் அலை மோதுவதை! அய்யா பெரியசாமியாரே! எல்லா ஆசிரியர்களும் கருணானிதியால்நியமிக்கப்பட்டவர்கள் அல்ல! எம் ஜி யாரும், அம்மாவும் ஆசிரியர் நியமனத்தில் புகுந்து விளையாடியிருக்கிறார்கள்! சமச்சீர் கல்வியால் தரம் குறைந்து விட்டதாக கூறுவது பச்சை பார்ப்பன பம்மாத்து! பாடத்திட்டம் தயாரித்த நிபுணர்கள் குழு கல்வித்துறையில் கொட்டை போட்டவர்கள்! கொள்ளையடித்து வரும் தனியார் வள்ளல்களல்ல!

    • //அய் டீ துரையினருக்கு அள்ளிக் கொடுக்கும் சம்பளத்தை , ஆசிரியருக்கு கொடுங்களேன்! அப்புறம் பாருங்கள்//

      ஐயா….இன்றைய தேதியில் ஆசிரியர் சம்பளம் ஒன்றும் குறைவில்லை…

      அரசாங்கப்பள்ளியில் நல்ல சம்பளம் வாங்கியும் சரியாக வேலை செய்யாத ஆசிரியரை எதிர்த்து மக்கள் போராட்டம் பற்றி வினவில் படிக்கவில்லயா?

      இந்த 10 பைசா பெறாத திராவிடம், பார்ப்பனம், ஆரியம், சாதியம், அகன்ட பாரதம் என்று பேசிப்பேசி மக்களை முட்டாளாக்கி ஆட்டையயை போடும் கூட்டமோ உஷாராகத்தம் வேலையைச்செவ்வணே செய்து கொண்டிருக்க…அக்கூட்டத்தின் விருப்பம் போல மக்கள் அடித்துக்கொள்கிறார்கள்…

      இது தான் உண்மை…

    • அய்யா என்ன சொல்கிறீர் என புரியவில்லை. கதிர் சொல்லியுளளது வரவேற்க்கதக்கது. அரசு ஊழியர்நியமனம் என்றாலே அனைவருக்கும் உடனடி நினைவு வருவது முக/திமுக தான்.

  16. அஜாதசத்ரு,

    உங்களால் எப்படி மனசாட்சி இல்லாமல் இப்படி ஒரு மனசாட்சி இல்லாத கட்டுரையை ஆதரித்து எழுத முடிகிறது?. காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் இருந்த போது பெரியவீட்டு பிள்ளைகளெல்லாம் அரசு பள்ளிக்கூடத்தில் தான் படித்தார்கள். இப்போது இந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் செய்யும் வேலைக்கும் அராஜகங்களுக்கும் மிக அதிகமாகவே சம்பளம் கொடுக்கப்படுகிறது. தனியார் பள்ளி ஆசிரியர்கள் இந்த பணிச்சூழ்நிலைக்கு இந்த சம்பளத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாது. எம்.ஜி.ஆர் இருந்த போது இவர்களின் தொழிற்சங்க அராஜகங்களை கட்டுக்குள் வைத்திருந்தார். எல்லாவற்றையும் கெடுத்தது தி.மு.க வினர் தான்.

    “பாடத்திட்டம் தயாரித்த நிபுணர்கள் குழு கல்வித்துறையில் கொட்டை போட்டவர்கள்! கொள்ளையடித்து வரும் தனியார் வள்ளல்களல்ல!”

    இந்த நிபுணர்கள் குழுவினர் தமிழக அளவில் மட்டும் கொட்டை போட்டவர்கள். அதனால் தான் இந்த லட்சணம். மற்றபடி இந்திய அளவில் நோக்கினால் தரம் எங்கேயோ இருக்கிறது. உலக தரத்தை பற்றி யோசிக்கக்கூட முடியாது. நீங்கள் சொல்வது “கலைஞர் தான் உலகின் மிகச்சிறந்த திரைப்பட வசனகர்த்தா. சிவாஜி கணேசன் தான் உலக திரைப்படத்துறையிலேயே மிகச்சிறந்த நடிகர்” என்பது மாதிரி இருக்கிறது.
    மேலும் ஐ.டி துறை என்பது வேறு. அது தனியார் துறை. வேலை பிழிந்தெடுத்து விடுவார்கள். மன உளைச்சலும் அதிகம். நாற்பது வயதுக்கு மேல் அத்துறையில் இருப்பது கடினம். யாருக்கு திறமை இருக்கிறது என்று முதலாளிகள் நினைக்கிறார்களோ அவர்களுக்கு தான் வேலை கிடைக்கும். ஒழுங்காக இல்லை என்று நினைத்தால் கிடைத்த வேலையும் போய்விடும்.
    இவ்வளவு பேசுகிறீர்கள். அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும். இல்லை என்றால் வேலையை விட்டுவிட வேண்டும் என அரசு சட்டம் கொண்டு வந்தால் ஆசிரியர்களும் அவர்கள் சங்கங்களும் ஒப்புக்கொள்ளுவார்களா? நீங்களும் ஒப்புக்கொள்வீர்களா? டாட்டா, பிர்லாவின் முதலாளித்துவத்தை பற்றி பிறகு கதையாடலாம்.
    பல தனியார் பள்ளிக்கூடங்களின் பொறுப்பாளர்களாக மறைமுக முதலாளிகளாக அரசு பள்ளியின் ஆசிரியர்களும் அரசு கல்லூரியின் பேராசிரியர்களும் இருக்கிறார்கள். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?

  17. அய்யா சலனன் அவர்களே! உங்கள் கேள்விகளுக்கு ஒவ்வோன்றாக பதிலளிக்கிறேன்; என் மன சாட்சியை அப்புறம் கேட்கலாம்!

    //காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் இருந்த போது பெரியவீட்டு பிள்ளைகளெல்லாம் அரசு பள்ளிக்கூடத்தில் தான் படித்தார்கள்//

    மிக மிக தவறான தகவல்! அன்றும், இன்றும், என்றும் பணக்காரர் வீட்டு பிள்ளைகள் அவரவர் பணபலத்திற்கேற்ற பள்ளிகளிலேயே படிக்கிரார்கள்! ஊட்டி,ஏற்காடு கான்வென்ட் படிப்பு அந்தககாலங்களில் பெருமையாக கருதப்பட்டது! அவ்ர்களில் யாரும் விஞ்ஞானியாகவோ, எஞ்சினியராகவோ, மருத்துவராகவோ புகழடைந்த நினைவு இல்லை! ஆனால் புகழ் பெற்ற மருத்துவர்கள், எஞ்சினீயர்கள், மயில்சாமி போன்ற விஞ்ஞானிகள் உருவானது நடுத்தர வர்க்கம் எட்டும் அரசு பள்ளிகளில்தான்! கான்வென்ட் பள்ளிகள் குட்டி முதலாளியை உருவாக்கியது; அரசு கல்வி வல்லுனர்களை உருவாக்கியது! இவர்கள் உழைத்தார்கள், அவர்கள் களித்தார்கள்! அதுதான் வித்தியாசம்!கான்வென்ட் கல்வி பெற்ற நேரு பிரதமராக, பொது கல்வி பெற்ற படேல் துணைப்பிரதமராகத்தானே ஆக முடிந்தது? அது வர்க்க வேற்றுமை! அண்ணல் ஜெகஜீவன்ராம் அவர்களை பிரதமராக ஏற்க மறுத்தார்களே, அது சாதிய வேற்றுமை ! என் மனசாட்சி தெளிவாகத்தான் இருக்கிறது!

    //இந்த நிபுணர்கள் குழுவினர் தமிழக அளவில் மட்டும் கொட்டை போட்டவர்கள். //

    ஓகோ! தனியார் துறையினர், முக்கியமாக ஜெயா அரசு மெச்சிய பத்மா சேஷாடத்ரிகள், எங்கே கொட்டைபோட்டார்கள்! சந்திரமண்டலத்திலோ? பணக்காரர்களுக்கான,(அதிலும் கட்டணக்கொள்ளை!) பார்பன இனத்திற்கான சேவையைத்தவிர வெறு குறிபிடத்தக்க பொதுச்சேவை என்ன? ஒரு ஜே பி யார், பச்சைமுத்துவை விட எந்தவகையில் சிறந்தவர்?

    //“கலைஞர் தான் உலகின் மிகச்சிறந்த திரைப்பட வசனகர்த்தா. சிவாஜி கணேசன் தான் உலக திரைப்படத்துறையிலேயே மிகச்சிறந்த நடிகர்” என்பது மாதிரி இருக்கிறது.//

    என்கிருந்து எங்கு தாவுகிறீர்கள்? மாதிரி என்ன? நம் மக்களுக்கு தேவையானதைத்தானே அவர்கள் கொடுத்தார்கள்? அவர்கள் செய்ததும் ஒரு வியாபாரம்தானே! பகல் கொள்ளை அல்லவே!

    //பல தனியார் பள்ளிக்கூடங்களின் பொறுப்பாளர்களாக மறைமுக முதலாளிகளாக அரசு பள்ளியின் ஆசிரியர்களும் அரசு கல்லூரியின் பேராசிரியர்களும் இருக்கிறார்கள். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?//

    இந்தக்கொடுமைக்குநான் என்னத்தை சொல்ல! உங்களுக்கே இது முரண்பாடாக தெரியவில்லை?

    //அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும். இல்லை என்றால் வேலையை விட்டுவிட வேண்டும் என அரசு சட்டம் கொண்டு வந்தால் ஆசிரியர்களும் அவர்கள் சங்கங்களும் ஒப்புக்கொள்ளுவார்களா? நீங்களும் ஒப்புக்கொள்வீர்களா? //

    தாராள்மாக ஒப்புக்கொள்கிறேன்! முதலில் இன்னும் அதிக இடவசதியும், ஆசியர் நியமனமும் செய்யுஙள் அய்யா!

    அரசியல் காழ்ப்புணர்வை மனதில் கொண்டு, பொது விடயஙளை அணுகாதீர்கள் அய்யா! கலர் கண்ணாடிகளை கழட்டி விடுங்கள், தெளிவாகத்தெரியும்!

    • My grandfather had a decent amount of land and my father and his brothers studied in government schools,only my youngest aunt studied in a matriculation school.

      The people you are talking about are a small minority who lived in cities.

      Rich people in villages still went to government schools and mayilswamy annadurai comes from an ettu veetil pillaimaar family of nagercoil and by no means uneducated or poor.

      His nephew is a college mate of mine and his parents are not poor at all,they are educated people of old travancore state and he also did not go to government school,please dont peddle such brazen lies.

      Government school teachers have no accountability,they dont even show up in schools and make a lot of money by taking tutions.

      They get a lot of salary and pension and power in political partties,especially DMK.

      You should go find out the asking rate for the bribe money to be paid for getting an aasiriyar job in TN state government.

      But you come here and make fool of people all the time.

      The comment about sivaji and karunanidhi is how tamils often end up as a kinathu thavalai because of people like you,who stagnate them in their homwtowns.

      Padma seshadri school is for elite upper class people in Madras,there is no caste barrier.

      If a brahmin cannot afford the donation and fees and someone else can,they ll get the seat.

      Thats all and it has good teachers and infinitely better than what jeppiar and other colleges give,

      thats why i asked what is your qualification?

      appuram ungalukku eppadi puriya vaikkanumnnu naan mudivu seiven.

      • //appuram ungalukku eppadi puriya vaikkanumnnu naan mudivu seiven.//

        I never complained about the quality of education in old convent schools! But they are affordable only to the rich people! Public schools in ootty, Erkaadu and other places are meant for educating wards of very rich and royal people! They charge more, only to resist the entry of common people! Syllabus is same but they keep up their ROYAL prestige.

        //appuram ungalukku eppadi puriya vaikkanumnnu naan mudivu seiven.// Mirattal? I don’t care! if really interested, just try to write in Tamil in Tamil blog, like Vinavu! Thats enough! I have to write this in english because I wanted to quote your words as it is! I find it difficult to mix both languages

        //They get a lot of salary and pension and power in political partties,especially DMK.
        You should go find out the asking rate for the bribe money to be paid for getting an aasiriyar job in TN state government.//
        Why you peeple are always single out DMK? Why don’t blame Jeya too? You show off your caste inclination, dear friend!

    • சார், நீங்கள் சொல்வதுபோல் பணக்கார வீட்டு பிள்ளைகள் குட்டி முதலாளிகளாகி களிக்கவில்லை, வசதியான வீட்டு பிள்ளைகள் ஏதோ படித்து முடித்தபிறகு குட்டி முதலாளிகளாகி பொழுதை களிப்பது போல் பேசுவது சரி அல்ல. நான் கல்லூரியில் படிக்கிறேன் என்னுடன் படித்த மாணவர்கள் பலர் சுயதொழில் செய்கிறார்கள் நீங்கள் சொல்வது போல் அவர்கள் படிக்க கஷ்டப்பட்டு (அவர்கள் அனைவரும் கல்லூரியில் நல்ல மார்க் வாங்கி தேர்ச்சி பெற்றவர்கள் தான்) கொண்டு சுயதொழில் செய்யவில்லை தந்தை செய்த அல்லது அவரின் உதவியில் தொழில் செய்கிறார்கள். பலர் ஏற்றுமதி செய்கிறார்கள் அதன் மூலம் அந்நியசலாவணி ஈட்டி தருகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? படித்து விஞ்ஞானி ஆனால் தான் புத்திசாலிகள் என்பது இல்லை சுயதொழில் மூலம் பல படித்தவர்களுக்கும் வேலை கொடுப்பது இந்த முதலாளிகள் (நீங்கள் பொழுதை களிப்பதாக சொல்லும்) தான் என்பதை மறக்க வேண்டாம். அதேபோல் சிறிது சறுக்கினாலும் எவ்வளவு பெரிய தொழிலாதிபராக இருந்தலும் அவர் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தலும் நடுதெருவுக்கு கொண்டுவந்துவிடும் சுயதொழில் செய்வது என்பது உங்களுக்கு தெரியாதா?

      மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்பதை தங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

  18. தமிழகத்தை சேர்ந்த பார்ப்பனர்கள் தான் இந்திய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் அறிஞர்களாக வல்லுனர்களாக அதுவும் நோபெல் பரிசு வாங்கும் அளவுக்கு கொடி கட்டிப்பறக்கிறார்கள். அவர்கள் விஷயம் தெரிந்தவர்கள். அவர்களுக்கு வெளியுலக அனுபவம் கல்வி விஷயத்தில் நிறைய உண்டு. இந்த பார்ப்பனர்கள் தான் தங்கள் பிள்ளைகள் சமச்சீர் கல்வி என்னும் தண்டத்தின் மூலம் பின் தங்கி விடக்கூடாது என்பதற்காக எதிர்கிறார்கள். இந்த சமச்சீர் கல்வியை கொண்டு வந்த கருணாநிதி ஏன் தன் வழித்தோன்றல்களை உயர்தர ஆங்கில மீடியம் பள்ளிகளில் சேர்த்தார்?. திராவிட அரசியல்வாதிகள் என்ன முட்டாள்களா? பத்மா சேஷாத்ரி பள்ளியில் தங்கள் பேரனுக்கு இடம் கிடைக்கவில்லை என்பதற்காக கருணாநிதியும் அவர் மனைவி தயாளுவும் மனம் குமைந்தார்கள் தெரியுமா? இந்த கட்டுரை மனசாட்சி இல்லாமல் எழுதப்பட்ட கட்டுரை. பின்னூட்டம் இடும் சிலரும் மனசாட்சி இல்லாமல் தான் பின்னூட்டம் இடுகிறார்கள். ஏழ்மையான பின்னணியில் இருந்து வரும் மாணவர்களின் எதிர்காலத்தை இம்மாதிரியான செயல்களின் மூலம் கெடுக்காதிர்கள் என வேண்டிக்கொள்கிறோம்.

  19. அய்யா அரிகுமார்! உங்கள் தாத்தா படித்த போது அரசு பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் போட்டியில்லை, காரணம் படிக்க வருபவர்கள் மிகக்குறைவு! பின்னர், காமராஜரின் மதிய உணவு திட்டமும், எம் ஜி யாரின் அனைவருக்கும் மதிய உணவு திட்டமும் அனைத்து கிராமப்புற சிறுவர்களையும் பள்ளிக்கு ஈர்த்தன! படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலை கிடைத்தது!
    மக்கள் பெருக்கம் அளவுக்கு அரசு பள்ளிகள் பெருகாத காரணத்தாலும், தனியார் பள்ளிகளின் ஆங்கில வழி படிப்பு கவர்ச்சிகரமாக இருந்ததாலும், தனியார் பள்ளிகள் அதிகரித்தன! அரசு மக்கள் கல்வியில் தனது பொறுப்பை தட்டி கழித்ததாலேயே, தனியார் பள்ளிகள், அதுவும் சமீப காலங்களில், ரத்தம் உறிஞஜும் அட்டைபூச்சிகளாகிவிட்டன!

    குறிப்பாக, சுயனிதி கல்லூரிகள் அரசு பல்கலைகழகங்களின் கட்டுபாட்டை தாண்டி, நிகர்னிலை பல்கலைகழகங்கள் என்று ஆனபின், தரம் என்பது பலி கொடுக்கப்பட்டுவிட்டது! மருத்துவ கல்லூரி அனுமதி ஊழல் புகாரிலும், 350 கோடி கணக்கில் வராத சொத்து செர்த்த வழக்கிலும் சம்பந்தப்பட்டவர் அந்த மருத்துவ கவுன்சிலுக்கே பொறுப்பாளராக தேர்ந்தெடுக்கபட்டது என்ன நீதி?

    அப்புறம், மயிசாமி அன்னாதுரை ஏழை என்று சொல்லவில்லையே! அரசு பள்ளியில் படித்து பிரகாசித்தவர் என்றுதான் கூறினேன்!நான் திண்ணை பள்ளீயில் படித்து, அரசுப்பணியாற்றி நன்றாகத்தான் உள்ளேன்! எங்கோ கிராமப்புரங்களில் அரசுபள்ளி தரம் குறைந்து இருக்கலாம், அதையும் இப்பொது மக்கள் போராடி தட்டி கேக்கிரார்கள்!

    பெற்றோர்கள் நல்ல வேலையிலிருந்தால், அவர்கள் பிள்ளைகளும்,நல்ல தன்னம்பிக்கை நிறைந்த சூழலில் வளர்கிரார்கள்! அதைத்தான் நான் பணக்கார வீட்டு பிள்ளைகள், பிறந்ததிலிருந்து தன்னம்பிக்கையும், ஆளுமையும் கொண்ட சூழலில் வளருவதால், சொந்த தொழில் அல்லது பரம்பரை தொழிலில் பிரகாசிக்கிரார்கள்! அதைத்தான் களிக்கிரார்கள் என்று சொன்னேன், சங்கர் அவர்களே! அந்த வசதியற்ற என் போன்ற முதல் தலைமுறை மாணவர்கள் தனியார் பள்ளியிலும் சொபிக்க முடியாது! பணத்தை கொடுத்து பட்டம் வாங்கலாம், வாழ்வில் எதிர்நீச்சல் போட தன்னம்பிக்கையே முக்கியம்! எனது மக்கள் வெளினாடுகளில் படிக்கவும், பணியாற்றவும் முடிகிறது!
    எல்லாம் அரசு கல்லூரிகளில் படித்தவர்கள் தான்!

    //சுயதொழில் மூலம் பல படித்தவர்களுக்கும் வேலை கொடுப்பது இந்த முதலாளிகள் (நீங்கள் பொழுதை களிப்பதாக சொல்லும்) தான் என்பதை மறக்க வேண்டாம்.//

    மறக்கவில்லை! மறுக்கவும் இல்லை! நடுத்தர மக்கள் படித்து, இந்த முதலாளிகளுக்கு ஏவல் செய்வதிலேயே திருப்தியடைந்துவிடுகிறார்கள்! மேலும் மேலும் முன்னுக்கு வர முனைதலின்றி அதிக சம்பளம் பெற்றாலும் ஊழியராகவே இருந்துவிடுகிரார்கள் என்ற அர்த்ததில் தான் சொன்னேன்!

    //இந்த பார்ப்பனர்கள் தான் தங்கள் பிள்ளைகள் சமச்சீர் கல்வி என்னும் தண்டத்தின் மூலம் பின் தங்கி விடக்கூடாது என்பதற்காக எதிர்கிறார்கள். //
    சலனன் அவர்களே யார் எதிர்க்கிரார்கள் என்பதை அப்பட்டமாக ஒப்புக்கொண்டதற்க்கு நன்றி!

    //இந்த சமச்சீர் கல்வியை கொண்டு வந்த கருணாநிதி ஏன் தன் வழித்தோன்றல்களை உயர்தர ஆங்கில மீடியம் பள்ளிகளில் சேர்த்தார்?//

    சமச்சீர்கல்வி என்றால் தமிழ் மீடியம் மட்டுமே என்பதல்ல! மீடியம் எதுவாக இருந்தாலும் பாடத்திட்டம் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதேநோக்கம்! ஆனால் உங்கள் நோக்கம் தான் வேறாயிற்றே! எனது தனிப்பட்ட அபிப்பிராயமும், கணிதமும், அறிவியலும் ஆங்கில வழியில் கற்பதும், கற்பிப்பதும் நலம் என்பதுதான்! தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவேண்டும்! குறைந்த பட்சமாக கலைச்சொற்கள் மட்டுமாவது ஆங்கிலத்திலும் குறிப்பிடலாம்!

    //திராவிட அரசியல்வாதிகள் என்ன முட்டாள்களா? பத்மா சேஷாத்ரி பள்ளியில் தங்கள் பேரனுக்கு இடம் கிடைக்கவில்லை என்பதற்காக கருணாநிதியும் அவர் மனைவி தயாளுவும் மனம் குமைந்தார்கள் தெரியுமா? //

    தெரியாதய்யா! அதனால் எதை இழந்தார்கள்? ஆனால் சமீபத்தில் திமுக பிரமுகர் ஒருவரின் மகன், பத்மா சேஷாத்ரி பள்ளிநீச்சல் குளத்தில் மரணமடைந்தது தெரியும்! எல்லா பணம் பிடுங்கும் பள்ளிகலைகளைப்போலவே இதுவும் சிறார் பாதுகாப்பில் கவனக்குறைவான நிர்வாகம்தான் என்று வெளிச்சமாயிற்று!
    //ஏழ்மையான பின்னணியில் இருந்து வரும் மாணவர்களின் எதிர்காலத்தை இம்மாதிரியான செயல்களின் மூலம் கெடுக்காதிர்கள் என வேண்டிக்கொள்கிறோம்.// பத்மா செஷாத்ரிகளுக்கு வக்காலத்து வாங்கியவர் ஏழைகளுக்கும் இரக்கப்படுவது புல்லரிக்க வைக்கிறது! அவர்களுக்கு எது வேண்டும் என்பதை அவர்கள்நன்றாக அறிவார்கள் அய்யா! இருந்தாலும் தங்களது அக்கறைக்கு தலைவணங்குகிறேன்!

  20. //தமிழகத்தை சேர்ந்த பார்ப்பனர்கள் தான் இந்திய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் அறிஞர்களாக வல்லுனர்களாக அதுவும் நோபெல் பரிசு வாங்கும் அளவுக்கு கொடி கட்டிப்பறக்கிறார்கள். அவர்கள் விஷயம் தெரிந்தவர்கள். அவர்களுக்கு வெளியுலக அனுபவம் கல்வி விஷயத்தில் நிறைய உண்டு.// நன்றி சலனன்! என் அபிப்பிராயமும் அதுதான்! அப்பேர்பட்டவர்கள், இன்னும் மணியடிக்கும் உரிமையை எங்களுக்கு தர ஏன் முட்டுகட்டை போடுகிரார்கள்? அரசுதுறையிலும் அவர்களே!நீதிதுறையில் கேட் கவே வேண்டாம்! பின்னும் ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி?

  21. //பார்ப்பன லாபியின் வலிமை கார்ப்பரேட் லாபிக்கு சற்றும் சளைத்தது அல்ல.//

    வினவின் கூற்று உண்மையே ! இரண்டும் ஒன்றுதானே! இன்று இந்தியாவையாளும் டாடா, பிர்லா, அம்பானிகள் பின்னணி அவர்கள் தானே!

    • //வினவின் கூற்று உண்மையே ! இரண்டும் ஒன்றுதானே! இன்று இந்தியாவையாளும் டாடா, பிர்லா, அம்பானிகள் பின்னணி அவர்கள் தானே!//

      டாடா, பிர்லா, அம்பானிகளின் முனோர்கள் சாதரணமாக இருந்து இந்த நிலைக்கு வந்தவர்கள்தான், அவர்கள் நாட்டிக்கு எவ்வளவு வரி கட்டுகிறார்கள், அவர்கள் செய்யும் ஏற்றுமதி மூலம் நமக்கு எவ்வளவு அந்நிய சலவாணி வருகிறது. அவர்கள் நிறுவனங்களை மூடிவிட்டால் இருக்கும் வசதி வைத்து அவர்கள் வாரிசுகள் சந்தோசமாக வாழ்வார்கள் ஆனால் அவர்களிடம் வேலை செய்யும் லட்சகணக்கான மக்கள் நிலைமை மற்றும் அவர்கள் கம்பெனியில் முதலிடு செய்தவர்களின் நிலைமை?
      அதேபோல் அணைத்து முதலாளிகள் கட்டும் வரிப்பணம் இல்லை என்றால் நம் நாட்டின் நிலை என்ன ஆகும் சற்று சிந்தித்து பேசுங்கள்.

  22. //டாடா, பிர்லா, அம்பானிகளின் முனோர்கள் சாதரணமாக இருந்து இந்த நிலைக்கு வந்தவர்கள்தான், அவர்கள் நாட்டிக்கு எவ்வளவு வரி கட்டுகிறார்கள், அவர்கள் செய்யும் ஏற்றுமதி மூலம் நமக்கு எவ்வளவு அந்நிய சலவாணி வருகிறது. // அய்யொ பாவம் சங்கர் அவர்களே! உஙளைபோலத்தான்நானும் ஒரு காலத்தில் நினைத்து கொண்டிருந்தேன்!

    டாடா ஆங்கிலேய அரசின் மிலிடரி சப்ளை கான்டிரக்டர்! ஆங்கிலேயருக்கு நிகரான வியாபார உரிமைக்காகவே திலகருடன் செர்ந்து போராடினார்கள்! ஆர் எஸ் எஸ் ஆதரவாளர்! முதன் முதலில் சுதேசி இரும்பு ஆலையை தோற்றுவித்தவர்கள்! வர்த்தகத்துறையில் நிர்வாகத்திறமைக்காக(?) பாராட்டபடுகிரார்கள்! ஆனால்,நரசிம்மராவ் காலத்தில் இந்த குழுமத்தின் தலைவராக இருந்த ரூசி மோடி செய்யாத ஊழலில்லை! கடைசியில், ரட்டன் டாடா ஜூனியரால் ஓரங்கட்டப்பட்டும் அரசுத்துறை ஏர் இண்டியாவை போண்டியாக்கியவர்!

    பிர்லா, நேரு குடும்பத்துக்கு நெருக்கமான, ஆஸ்தான தொழிலதிபர்! இந்திராவின் பொற்காலமான எமர்ஜென்சியில் நல்ல அறுவடை செய்தவர்! குடும்ப சண்டையால் சுணங்கிவிட்டனர்!

    கடைசியாக, அம்பானியின் பூர்வோத்திரம் பேப்பர் போடும் பையனாக ஆரம்பித்து,நரசிம்மராவ் அரசின் தயவால் கார்ப்பரேட் உலகில் தாதாவாக உலவி வருபவர்! கொயங்காவின் ஆதரவில் வளர்ந்து அவருக்கே உலை வைத்தவர்! இவர்கள் குடும்பத்தில் ஒருமுகம் ஆர் எஸ் எஸ் பக்கமும், மற்றொரு முகம் சோனியா பக்கமும் இருந்து, இன்று நாட்டை (ஊழலையும் சேர்த்துதான்) வழினடத்துவதுநீங்Kஅள் அறிந்து இருப்பீர்கள்!

    மற்றபடி இவர்கள் வரிகட்டிநம்மை போல ஏமாறுவது இல்லை! இவர்களுக்கு தேவையான வரி சலுகைகளை அரசே வாரி வழங்குகிறது (எந்தக்கட்சியானாலும்)! முன்னொரு கூட்டணியில் ப சி கொஞசம் தைரியத்துடன் ‘மினிமம் ஆல்டெர்னெடிவ் டாக்ஸ்’ என்று வரி கட்டாத கோமான் களுக்காக , ஒரு வரி போட்டார்! என்ன அதிசயம்! ஆட்சி கவிழ்ந்துவிட்டது! பின்னர் வந்த ப ஜ க அரசு, அடுத்த புட்ஜெட்டில் வரியைநீக்கியதுடன், முந்தைய வருடம் வசூலித்த வரியைக்கூட கன்னத்தில் போட்டுகொண்டு திருப்பி கொடுத்துவிட்டது! தொழிலாளர் வைப்புநிதியிலிருந்து பிடுங்கிய பணம் திருப்பித்தர சட்டம் இடந்தரவில்லையாம்! டாடா போன்ற முதலாளிகளிடம் வசூலித்த வரிகள் திருப்பி தரலாமாம்!

    அன்னியநாடுகளில், கருப்பாகவும், பின்னர் தைரியமாக முதலீடு என்ற பெயரில், வெளுப்பாகவும் இவர்கள் அடிக்கும் கொள்ளை எவ்வளவு? ஆர் டி அய் போட்டாலும் பதில் வராது!

  23. மனப்பாடம் பன்னி பரிட்சையில் போய் வாந்தி எடுத்து விட்டு அதை அன்றோடு மறந்து விடுவது இதுதான் இந்திய கல்வி முறை இது பள்ளிக்கல்வில இருந்து பொறியியல் படிப்பு வரை தொடர்கிறது மனப்பாடம் பன்றதொட செயல்முறையின் மூலம் கல்வி கற்பிக்க வேண்டும் கணிதம் கற்பிப்பதோடு கணிதத்த பயண்படித்தி எப்பிடி ராக்கெட் அனுப்புறாங்கனு சொல்லி தரனும் விஞ்ஞான விதிகள கத்து குடுக்குறதோட விஞ்ஞான விதிகள் எங்கெல்லாம் பயண்படுதுனு செயல் முறைல விளக்கணும் வெறும் புத்தகத்த படிக்கிறத விட் புத்தகத்தில்லுள்ள கருத்துகள காட்சி படம் ஆக்கி விளக்கணும் அப்பதான் அறிவுள்ள ஆராச்சி மனப்பண்மை உள்ள மாணவன உருவாக்க முடியும் புது புது கண்டுபிடிப்புகள நிகழ்துறதுல இந்தியா 87 வது இடத்துல இருக்குறதா சொல்லுறாங்க அது ஏன் நம்ம கல்வி முறைதான் ஏன் இந்த கல்வி முறைய மாத்த கூடாது அப்பிடினா அரசாங்க அதிகாரி சொல்லுறார் நம்ம கிட்ட அந்த அளவுக்கு கட்டமைப்பு இல்ல அதனால் தனியார் மயம் ஆக்குறோம்னு சொல்லி புருடா விடுறானுக இதுல பார்பனர்கள் நடத்துற கல்வி நிறுவனங்களுக்கு லாபம் இதனாலதான் அவங்க அரசு பள்ளிகள அரசு ஆதரவோட இல்லாமயே பன்னிறாலாம்னு நினைக்குறார்கள் அப்புறம் கிராமப்புற ஏழை ஒடுக்கப்பட்ட மக்கள் எல்லாம் தகுதி எப்பிடி படிச்சு முன்னேறி விஞ்ஞானி ஆகுறது என்னமோ போங்கடா நீங்களும் உங்க அரசங்கமும் ,இந்தியா எப்பிடி அமெரிக்கா மாறி வல்லரசு ஆகும் வேணா இந்தியான்ற பேற மாத்தி வல்லரசுனு வச்சுக்கலாம்

  24. தனியார் பள்ளிகளின் வெற்றிக்கு காரணம் அவர்கள் எப்பிடிபட்ட மாணவனையும் கசக்கி பிழிந்து அதிக மதிப்பெண் எடுக்க வைப்பதுதான் வீக்லி டெஸ்ட் மந்திலி டெஸ்ட் ஸ்டடி அவர் அப்பிடினு போட்டு மாணவன பெண்டு நிமித்தி புத்தகத்த தவிற வெளி உலக சிந்தனையே வரவிடாம் பன்னி அரைமெண்டல் ஆக்கி +2 ல 1111 மார்க் எடுக்க வச்சுறுவானுக அப்புறம் என்ன சுவிட் எடு கொண்டாடுதான் இப்ப இருக்கிற எஜிகேசன் சிஸ்டத்த மாத்தனும் அதுக்கும் போராடுங்க

Leave a Reply to RAMADOSS KOTHANDARAMAN SEETHAPATHI பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க