privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்காஞ்சி, சிருங்கேரி, பூரி சப்பாத்தி - ம.க.இ.க பாடல்

காஞ்சி, சிருங்கேரி, பூரி சப்பாத்தி – ம.க.இ.க பாடல்

-

க்கள் கலை இலக்கியக் கழகம் 1993-ம் ஆண்டு வெளியிட்ட “அசுர கானம்” பாடல் ஒலிப்பேழையில் இடம் பெற்ற “சின்னவாளு, பெரியவாளு” பாடல்.

புராண இதிகாசங்கள் படியும் மனுதர்ம சாத்திரங்கள் படியும் ஆட்சி நடக்கிறதா என்று கவனிப்பதற்கு என்றே கையில் தடிக்கம்போடு ஒருவர் முக்காடு போட்டு உட்கார்ந்து இருக்கிறார். அவர் பெயர் ஜகத்குரு. சாதாரண குரு அல்ல ஜெகத்த்து குரு.

“உன்னால ஜகத்துக்கு என்னடா பிரயோஜனம்”னு கேட்டா “லோக சேமத்துக்கு தவம் பண்ணுறேன்” என்கிறான். “அட மண்டல் கமிஷனுக்கு என்ன சொல்றேன்”னு கேட்டா,  “இது பகவானுக்கே அடுக்காது” என்கிறான்.

“அட அயோத்தியில் உங்க ஆளு மசூதியை இடிச்சுட்டானே இது அடுக்குமா” என்று கேட்டா “நன்னா இடிக்கட்டும்” என்கிறான். “மசூதி என்ன மசூதி அயோத்தி பூராவுமே எங்க ஸ்ரீராமனுக்கு சொந்தம்” என்கிரான்.

“சாமி நீரே சர்வ மானியம், இந்துவுக்கெல்லாம் நீ என்னாடா நாட்டாமை?”

பல்லவி

சின்னவாளு பெரியவாளு நடுவாளு கொடுவாளு
எத்தன வாளானாலும் அத்தனையும் அவாளு
காஞ்சி, சிருங்கேரி, பூரி சப்பாத்தி
எங்கடா எங்க ஆளு – அட
எங்கடா எங்க ஆளு – அட

எல்லாம் இந்துங்கறது ரீலு – போடா
எல்லாமே …. பூ…ணூலு
எல்லாமே …. பூ…ணூலு

சரணம்

புத்தரிருந்தார்… சித்தருமிருந்தார்
பட்டினத்தார் கீர தண்டாட்டம் மெலிஞ்சார்..
அவலு பொரிதாங் ஆகாரமிங்குற…..நீ
அவலு பொரிதாங் ஆகாரமிங்குற..
ஆளப்பாரு பொலி காள… அவன்
ஆளப்பாரு பொலி காள
நீ வந்திடடா விடி கால..- ஏருக்கு
கொறையுது ஒரு காள (சின்னவாளு)

சந்து சந்தா சாராயம் விக்கிறாங்..
சனங்க தாலிய சொல்லி அறுக்குறாங்..
சகத்துக்குருங்கிற……இதுக்கும் இளிக்குற
மகத்துச் சாவுக்கு மழுப்புற ,மொழுவுற… நீ
மகத்துச் சாவுக்கு மழுப்புற மொழுவுற
அதுக்கொரு அருள் வாக்கு..
நீ அம்முக்கு ஆ…….த…..ர….வூ
அப்படி என்னதாண்டா ஒறவு..? (சின்னவாளு)

கோடி கோடி சொத்து பல கோடி
காமகோடிய வந்ததே…. தேடி…
நாடும் மக்களும் ஆனதே போண்டி
மடத்துக்கு பலமாடி..ஆண்டி
மடத்துக்கு பலமாடி
நீ திருவோடு எடுக்காட்டி….உன்ன
பொரட்டிடுவோம்… பொரட்டி (சின்னவாளு)

எதுக்குடா துறவிக்கு அரசியலுங்குற..
இடிச்சுட்டான் மசூதிய இதுக்கென்ன சொல்லு
நடந்தது போகட்டும் எதுக்கத கெளரனும்
திமிருல பதில் சொல்லுற… – நீ
திமிருல பதில் சொல்லுற… – உன்ன
இறுக்குறேன் செருப்புலடா…- அட
அதையும் மறந்திடடா….. (சின்னவாளு)

தகிடுதத்தம் டாடாவும் வாறான்
அரையிருட்டுல அம்பானி வாறான்
நாட்டையே வித்த ராவுஜி வாறான்
நடக்க முடியாம
நடக்க முடியாம சர்மாவும் வாறான்
என்னடா அங்க வேல… -அட
என்னடா அங்க வேல..
சம்போ… சங்கர மகா தே….வா- உன்

கும்பலே சதிதாண்டா
கும்பலே சதிதாண்டா