privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்காஞ்சியில சங்கரரு... கேரளாவில கண்டரரு... தில்லையில தீட்சதரு...

காஞ்சியில சங்கரரு… கேரளாவில கண்டரரு… தில்லையில தீட்சதரு…

-

“காஞ்சியில சங்கரரு… கேரளாவில் கண்டரரு… தில்லையில தீட்சதரு… இறைவா, காப்பாத்த போவது யாரு… இறைவா ஒன்னை காப்பாத்தப் போவது யாரு” – பிப்ரவரி 24, 2007 அன்று மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்திய 14-வது தமிழ் மக்கள் இசை விழாவில் ம.க.இ.க மைய கலைக்குழுவினர் பாடிய பாடல்.

வெள்ளையர்களால் வீரச்சாவு அடைந்த திப்புவின் உடலைப் பார்த்து, மானம் இழந்து இனி வாழ்வோமா, அல்லா எமக்கு சாவு வராதா, துயரும் இழிவும் கண்ணில் தெரியுதே, அல்லா எமக்கு சாவு வராதா. மானத்தை இழந்து வாழ்வோமா அல்லா, எமக்கு சாவு வராதா என்று கதறினார்கள், திப்புவின் வீரர்கள்.

ஆனா, இன்னைக்கு நெலமை என்ன தெரியுமா, கடவுளுக்கு புரோக்கர்னு சொல்லிக்கிறவன் எல்லாம் மானங்கெட்டவனா இருக்கிறான். இந்த அய்யப்பன் கோயிலுக்குப் போறாங்களே, ஐயப்பன் கல்யாணம் ஆகாதவரு, சுத்தமான சாமி, நம்மளும் சுத்த பத்தமா போகணும்னு சொல்லி தேக பலம் தா, பாத பலம் தா, தேக பலம் தா, பாத பலம் தா. அப்படின்னு மலை ஏறி கஷ்டப்பட்டு போய் அப்புறம் பாதம் பொளந்து வர்றாங்க அது வேற விஷயம்.

இவங்க தேக பலந்தான்னு சொல்லறாங்க, அங்க மணி அடிக்கிறானே கண்டருரு மோகனரு, கண்டரரையும் பார்த்து மோகனரு. அவரு மணி அடிக்கிற நேரம் போக மிச்ச எல்லா நேரமும் லாட்ஜிலதான் கெடக்கறாரு. இவங்க தேக பலந்தான்னு சொல்லறாங்க, அவன் தேக சொகந்தாங்கறான்.

இங்க தீட்சிதர்னு தில்லையில பூணூல உருவறான், மூலஸ்தானத்திலேயே வச்சு முட்டை பிரியாணி அடிக்கிறான். கேரளாக்காரனாவது லாட்ஜை தேடி அவன் போறான். ஆனா லாட்ஜே தீட்சிதரு மூல ஸ்தானத்துக்கு வருது. ஆனா மூலஸ்தானத்துக்கு தமிழ் போகக் கூடாதுன்னு சொல்றான்

காஞ்சியில, அவங்களை சொல்லவே வேண்டாம், அவரு இருக்காரு. அப்படி மானம் கெட்டு இன்னமும் கால்ல விழுறவன் இருக்கான்.

—————-
காஞ்சியில சங்கரரு, கேரளாவில் கண்டரரு, தில்லையில தீட்சதரு,
இறைவா, காப்பாத்தப் போவது யாரு
உன்னை காப்பாத்தப் போவது யாரு

கோரஸ்:
காஞ்சியில சங்கரரு, கேரளாவில் கண்டரரு, தில்லையில தீட்சதரு,
இறைவா, காப்பாத்தப் போவது யாரு
உன்னை காப்பாத்தப் போவது யாரு

பகலில திருநீறு இறைவாஆஆ…
பகலில திருநீறு, ராத்திரியில் ஈகிள் பீரு,
கோரஸ் : பகலில திருநீறு ராத்திரியில் ஈகிள் பீரு,
அது கோயிலில்ல, டாஸ்மாக் பாரு
டவுட்டுன்னா ஏட்டையாவ கேட்டுப் பாரு.
கோரஸ் : டவுட்டுன்னா ஏட்டையாவ கேட்டுப் பாரு.

கோரஸ் :
காஞ்சியில சங்கரரு, கேரளாவில் கண்டரரு, தில்லையில தீட்சதரு,
இறைவா, காப்பாத்தப் போவது யாரு
ஒன்னை காப்பாத்தப் போவது யாரு

மோகனரு தீட்சதரு
மோகனரு தீட்சதரு
மோகனரு… தீட்சத…ரு
மோகனரு தீட்சதரு
முட்டையில ரெட்டை கரு

கோரஸ் :
மோகனரு தீட்சத…ரு
முட்டையில ரெட்டை கரு

யாரதுக்கு மூலவரு
இவிங்களுக்கு யாரிதுக்கு மூலவரு
நம்ம கா காஞ்சனா…. கா கழுதையா
காஞ்சி ஜெகத்து குரு, நம்ம காஞ்சி ஜெகத்து குரு

கோரஸ் :
காஞ்சியில சங்கரரு, கேரளாவில் கண்டரரு, தில்லையில தீட்சதரு,
இறைவா, காப்பாத்த போவது யாரு
உன்னை காப்பாத்த போவது யாரு

யாரு காப்பாத்த போவது.