privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதில்லைக் கோயில்: இறுதிக் கட்டப் போராட்டம்! ஆதரவு தாரீர் !

தில்லைக் கோயில்: இறுதிக் கட்டப் போராட்டம்! ஆதரவு தாரீர் !

-

ன்பார்ந்த தமிழ் மக்களே,

போராடி மீட்டெடுக்கப்பட்ட தில்லைக்கோயில், மீண்டும் தீட்சிதர்களின் பிடிக்கே சென்று விடாமல் தடுக்கும் பொருட்டு, உச்ச நீதிமன்றத்திலும் தமிழகத்தின் மக்கள் மன்றத்திலும் விடாப்பிடியாகப் போராடி வருகிறோம்.

சுப்பிரமணிய சாமி, உச்சநீதிமன்றம்
ஜெயலலிதா அரசும், சுப்பிரமணிய சாமியும், தீட்சிதர்களும் இணைந்த பார்ப்பனக் கூட்டணிக்கு எதிராகப் போராட உங்களை அறைகூவி அழைக்கிறோம்.

ஜெயலலிதா அரசு கோயிலிலிருந்து அறநிலையத்துறை அதிகாரியை வெளியேற்றப் போகிறது என்று சுப்பிரமணியசாமி அறிவித்தவுடன், திங்கள்கிழமை காலை சிவனடியார் ஆறுமுகசாமியுடன் எமது வழக்குரைஞர்களும் உறுப்பினர்களுமாக 30-க்கும் மேற்பட்டோர் தில்லைக் கோயிலுக்குள் சென்றனர். “தில்லைக்கோயிலை தமிழக அரசு தீட்சிதர் வசம் ஒப்படைத்தால் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடியபடியே உயிர் துறப்பேன்” என்று அறிவித்தார் ஆறுமுகசாமி. கொட்டும் மழையில் அவர் வழிபாடு தொடங்கியது, போராட்டமும்  தொடங்கியது. அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

அதே நேரத்தில் ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு தோழர்கள் சென்னை இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலக வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்லாயிரம் கோடி மதிப்புள்ள பொதுச் சொத்தான கோயிலை தீட்சிதரின் தனிச் சொத்தாக மாற்றுவதற்கு அறநிலையத்துறை ஆணையர் தீட்சிதர்களோடு சேர்ந்து நடத்தும் கூட்டுச் சதியை இப்போராட்டம் கேள்விக்குள்ளாகியது. ஆணையரிடமிருந்து பதில் இல்லை. போராடியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இப்போராட்டங்களின் விளைவாக அரசாணையை திரும்பப் பெறும் தனது சூழ்ச்சியை மறைத்துக் கொண்டு சுப்பிரமணிய பிரசாத் என்ற கூடுதல் அட்வகேட் ஜெனரலை நேற்று உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறது தமிழக அரசு.

ஆறுமுகசாமி போஸ்டர்“தமிழக அரசு வாதாடியது” என்று கணக்கு காட்டுவதற்காக அவர் நேற்று பதினைந்து நிமிடம் நேரம் நீதிமன்றத்தில் பேசினார். அவ்வளவுதான். ஆனால்  “TN Justifies appointment of E.O for Chidambaram temple” என்று தலைப்பு போட்டு இந்து நாளேட்டில் இன்று செய்தி வெளி வந்திருக்கிறது. தீட்சிதர்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு காட்டியதைப் போல ஒரு நாடகம்!

நேற்று முழுவதும் தீட்சிதர்களுக்கு எதிராக சத்தியவேல் முருகனார் சார்பில் மூத்த வழக்குரைஞர் துருவ் மேத்தா வாதாடியிருக்கிறார். நேற்று மாலை ஆறுமுகசாமியின் சார்பில் காலின் கன்சால்வேஸ் தனது வாதுரையைத் துவக்கியிருக்கிறார். இன்று நீதிமன்றம் இல்லை. நாளை வழக்கு விசாரணை தொடர்கிறது. காலின் தனது வாதத்தை தொடர்வார். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் ஒரு வழக்குரைஞர் குழு டெல்லியில் முகாமிட்டு மூத்த வழக்குரைஞர்களை ஒருங்கிணைத்துப் பணியாற்றி வருகிறது.

வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, “தமிழக அரசு நிர்வாக அதிகாரியை வாபஸ் பெறா விட்டால், நீதிமன்றம் தமிழக அரசுக்கு எதிராகத் தீர்ப்பளிக்கும்” என்று சுப்பிரமணியசாமி இந்து நாளேட்டிற்கு பேட்டியளித்திருக்கிறார். இதனையொட்டி சாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரவிருக்கிறோம்.

ஜெயலலிதா அரசும், சுப்பிரமணிய சாமியும், தீட்சிதர்களும் இணைந்த பார்ப்பனக் கூட்டணிக்கு எதிராகப் போராட உங்களை அறைகூவி அழைக்கிறோம்.

திராவிட இயக்கக் கொள்கைகளில் பற்று கொண்டவர்களும், கோயில்கள் கொள்ளைக் கூடாரங்களாகக் கூடாது என்ற அக்கறை கொண்டவர்களும், ஆலயத் தீண்டாமையை எதிர்ப்பவர்களும், தமிழ் வழிபாட்டை ஆதரிப்பவர்களும் தமிழக அரசின் இந்தப் போக்கிற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தின் சுயமரியாதைப் பாரம்பரியத்தையும், தமிழ் உணர்வையும் எதிர்த்து பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியசாமி என்ற அரசியல் தரகனும், தீண்டாமை வெறி பிடித்த தீட்சிதர்களும் வெற்றி பெறுவதை நாம் அனுமதிக்க கூடாது.  கோயிலை இந்து அறநிலையத்துறையின் வசம் ஒப்படைப்பதற்கு ஆதரவாக சாத்தியமான வழிகளில் எல்லாம் குரலெழுப்புங்கள் என்று அனைவரையும் கோருகிறோம்.

பெற்ற வெற்றியைப் பறி கொடுத்து விடக்கூடாது என்பதற்காக, பெரும் தொகையைக் கடன் வாங்கி,  வழக்கை முன்னெடுத்துச் செல்கிறது மனித உரிமைப் பாதுகாப்பு மையம். செலவுகளை சமாளிப்பதற்கு வழக்கு நிதி கோருமாறு டில்லியிலிருந்து கோரிக்கை அனுப்பியிருக்கிறார் வழக்குரைஞர் ராஜு.

கீழ்க்கண்ட எமது வங்கிக் கணக்கிற்கு வழக்கு நிதியை அனுப்பி விட்டு, மின் அஞ்சல் வாயிலாக விவரத்தை தெரிவிக்கவும். நீங்கள் அனுப்பும் நன்கொடைக்கு ரசீது அனுப்பப்படும்.

நன்றி.

வினவு

—————————–

நெட்பாங்க் மூலம் அனுப்ப விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட கணக்கிற்கு பணம் அனுப்பிவிட்டு விவரத்தை மின்னஞ்சல் (vinavu@gmail.com) அல்லது தொலைபேசி (Mobile – (91) 97100 82506) மூலம் தெரிவிக்கவும்.

Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 6 1 2 8 0 1 1 0 7 3 8 9
IFSC Code: I C I C 0 0 0 6 1 2 8
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
MICR Code: NONMICRLO
Account Type: Savings
____________________________

பணத்தை மணியார்டர், காசோலை, வரைவோலைகளின் மூலம் KANNAIAN RAMADOSS , CHENNAI என்ற பெயருக்கு எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:

KANNAIAN RAMADOSS
PUTHIYA KALACHARAM,
NO.16, MULLAI NAGAR SHOPPING COMPLEX,
SECOND AVENUE, ASHOK NAGAR, CHENNAI, 600 083.
PHONE : 044- 23718706.
செல்பேசி : அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் – 99411 75876
__________________________________

வெஸ்டர்ன் யூனியன் மூலம் பணம் அனுப்புபவர்கள் KANNAIAN RAMADOSS என்ற பெயருக்கு அனுப்பி விட்டு மின்னஞ்சல் மூலம் (vinavu@gmail.com) விவரங்களைத் தெரிவிக்கவும்.

  1. பெரியார் பிறந்த மண் என்று பெருமைகொள்பவர்கள், பெரியாரை உரிமை கொண்டாடுபவர்கள் எல்லோரும் எங்கே போனார்கள்? கம்யூனிஸ்ட் கொள்கையை கொண்ட ம.க.இ.க தோழர்கள் தனித்து நின்று போராடுகிறார்கள். ஆனால் நாத்திகத்தையும், பார்ப்பன எதிர்ப்பையும் முதன்மை கொள்கையாக கொண்ட திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் போன்ற அமைப்புகள் என்ன வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்? இது வெட்கக்கேடான விசயம்.

    மற்றொரு பக்கம் தமிழ்தேசிய அமைப்புகள் அனைத்தும் இரண்டு வாரங்களாக மூச்சு கூட விடுவதில்லை. இந்த தமிழ்தேசிய மண்ணாங்கட்டிகள் ம.க.இ.க தோழர்களை அவதூறு செய்வது என்றால் முன்டியடித்துக்கொண்டு நிற்பார்கள்.

  2. சு.ப.உதயகுமாரிடம் ம.க.இ.க தோழர்கள் கேள்வி கேட்டு ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது இன்னும் பதிலளிக்கவில்லை. உதயகுமார் கடிதம் எழுதிய இருபத்திநான்கு மணி நேரத்திற்குள் தோழர்கள் அவருக்கு பதிலளித்துள்ளனர். ஆனால் அந்த அவதூறை மகிழ்ச்சியுடன் தனது பத்திரிகையில் எடுத்து பிரசுரம் செய்துகொண்ட தமிழ்தேச பொதுவுடைமைக் கட்சி என்கிற பேரீச்சம் பழத்திற்கு கூட விலை போகாத காரைப் போன்ற ஒரு கட்சியை வைத்துக்கொண்டிருக்கும் பெ.மணியரசன் என்கிற இனவெறியருக்கு தோழர்களின் பதிலை எடுத்துப்போட மனம் இல்லை. தோழர்கள் செய்யும் அரசியல் ரீதியிலான விமர்சனங்களுக்கு பதிலளிக்க முடியாத இனவெறியர்கள் கேலவமான முறையில் அவர்களை அவதூறு செய்கிறார்கள்.

    தமிழ் மொழி, தமிழ் தேசியம் என்றெல்லாம் பிதற்றும் இந்த கும்பலும் தீட்சித பார்ப்பன கும்பலுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை என்பதை நினைவுபடுத்தவே இதை இங்கு கூறினேன்.

  3. ”கோயில் கொள்ளையரின் கூடாரமாகிவிடக்கூடாது”

    என்று பராசக்திக்கு வசனம் எழுதியவரின் கட்சிக்காரர்கள் ஏன் கள்ள மவுனம் சாதிக்கிறார்கள்???

    பெரியாரின் வாரிசுகள்,அவர் சேர்த்துவைத்த சொத்துக்களுக்கு மட்டுமே வாரிசுரிமை வைத்து

    கொண்டுள்ளார்கள்.அவரின் இன்றியமையா சொத்தான பகுத்தறிவுக்கும், பார்ப்பனிய எதிர்ப்புக்கும்

    ஏன் இவர்கள் நன்றி கொன்றவர்களா உள்ளார்கள்?பகுத்தறிவு பகலவன் இவர்களை இருளிலா

    வைத்துச்சென்றார்??இவர்களா தமிழர்களுக்கு தளபதி??? இவர்களை மக்கள் மன்றத்தில்

    தோலுரிப்போம்.

  4. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும்,
    என்னால் இயன்ற அளவுக்கு நான் நிச்சயம் உதவுவேன்:
    ஒருமுறை எனது மனைவியுடன் கோவில் உள்ளே
    சென்றபோதுதான் தீட்சதர்களின் கொள்ளைக்கூடாரமாக
    சிதம்பரம் கோவில் இருப்பதை கண்டேன்:
    வருத்தம் இல்லை…எனது வருத்தமெல்லாம்,சேர,சோழ,பாண்டிய
    மரமண்டைகள் மீதுதான்…பூணூல்கள் பிழைக்க கேனப்பயல்கள்
    எவ்வளவு தூரம் சென்றும் கொள்ளை அடித்து கட்டியவை….
    ஆனால் பாருங்கள்..நமது தமிழ் வாத்தி(யார்) இந்த பண்டாரங்களை வானுயர புகழ்வதை….

    • நாயுடு, சேர,சோழ,பாண்டியர்களை கேனப்பயல்கள் என்றும் மரமண்டைகள்,பண்டாரங்கள் என்றும் கூற நீ யார்? உன்னைக்கு அந்த உரிமையை தந்தது யார்? தமிழ் மொழியை,பண்பாட்டை,நாட்டை காத்தவர்களை உன்னை போன்ற அரைவேக்காடுகள் திட்ட சொல்லி வேடிக்கை பார்க்கும் இன்றைய தமிழந்தான் நீ கூறிய அனைத்தும்.

      • குறைந்த பட்சம் ஏதாவது கோணி ஊசி தொழிற்சாலையை
        உங்களது சேர,சோழ,பாண்டிய பன்னாடைகள் விட்டுசென்றனவா?

        இவர்கள் போற்றி வளர்த்ததும் பூணூலை…பூமிக்குள் மண்ணோடு புதையவும் இதே பூணூல்கள்தான் காரணம்!

        இவர்கள் துனை இல்லாமலேயே தமிழ் வாழ்ந்தது,இப்போதும் வாழ்கிறது!
        வேண்டுமானால் பெரு உடையார் கோவிலின் மதிலில் என்ன எழுதி உள்ளது?
        வேசிகளுக்கு இவ்வளவு பொருள் கொடுத்தது,வீடு ஒதுக்கிக் கொடுத்தது..சரி…தேவார நாயனார்…
        நீங்கள் லோக குருவின் வாரிசுகளில் ஒருவரா?

        • சீதாபதி, வரலாறு 10வது வரையாவது படித்து இருக்கீர்களா இல்லையா? இன்று தமிழ்நாட்டில் உள்ள ஏரிகள்,நீர்பாசன கட்டமைப்புகள்,ஆறுகள் யார் ஏற்படுத்தியது? நீரும் உம்ம வம்சாவளியுமா? இவைகளை தூர்வாரும் யோக்யதை கூட இன்று உள்ள எந்த அரசுக்கும் இல்லை.வீரானம் ஏரி தெரியுமா? உலகில் முதல் அனைகட்டு ஆகிய கல்லனையை யார் கட்டியது? இவை எல்லாம் இல்லை என்றால் தமிழ்நாடு என்றொ பாலைவனம் ஆகி இருக்கும். மூவேந்தர்கள் கோனூசி கூட செய்யவில்லையா? ஊசி செய்ய தெரியாதவனா இந்தியாவிலேயே முதல் கப்பற்படை அமைத்து கடல்கடந்து வெற்றிபெற்றான். தமிழ்தானாக வளர்ந்ததா? அப்ப சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தது உங்கள் முப்பாட்டனா?

          • எனது கேள்வி இன்னமும் ஆதங்கத்தில்தான் …
            இப்போதும்கூட,உலகில் உள்ள தமிழர்கள் தெருவுக்கு தெருவு
            கோவில் கட்டி தனது பெயரையும் செதுக்கி கடவுளோடு கடவுளாக
            வாழ ஆசைப்படுவது உண்மையில்லையா?
            கல்லனை:ஆய்வு செய்யப் படவேண்டிய தலைப்பு:
            கல்லனை கட்ட இலங்கையிலிருந்து எத்தனை ஆயிரம்,ஆயிரம்
            தமிழர்களை அடிமையாக ஓட்டி வந்தான்: எத்தனை பேர் மாண்டனர்?
            கரிகாலன்,கல்லனை கட்டினான்:ரொம்ப நல்லது: மற்ற மா மன்னர்கள் எந்த எந்த துறைமுகங்களை கட்டினார்கள்:
            ஈட்டியும்,சுளிக்கியும் அரிவாள்-இவைகள் அனைத்துமே அவர்களின் படைப்புகள்தான் சந்தேகமில்லை:பதம்பார்த்ததும் பெரும்பாலும் அப்பாவி பொதுமக்களை!
            ஒரத்தநாடு,தென்னமநாடு,சூரக்காடு,பட்டுக்கோட்டை எல்லாமே 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடம்:சரி:இவர்கள் படையேடுத்தது யார் மீது?
            ஆங்கூர்வாட்: கட்டிடக்கலையின் அற்புதம்: பணம் எங்கேயிருந்து வந்தது?
            திருவாஙூகுர் சமாஸ்தானம் எப்படி கொள்ளையிட்டு,பத்மநாப சாமி கோவிலில் குவித்து வைத்ததோ அதைபோல ஒவ்வொரு மன்னனும் ஒருவனை ஒருவன் தாக்கி கொள்ளை அடித்ததுதான்:சொல்லப்போனால்,சேரன் பொண்டாட்டியை,சோழனும்,சோழன் பொண்டாட்டியை
            பாண்டியனும் லவட்டிகொண்டு போய்..அப்புறம் என்ன, ஊர் மக்கள் தாக்கப் பட்டு சொத்திழந்து,ஊர் ஊராக அலைந்ததுக்கு நானா காரணம்?
            10 ஆவது வரை வரலாறு படித்தால் போதுமா மகனே?

            • ராமதாஸ் கோதண்டராமன் சீதாபதி அவர்களின் பெயரில் ஒருபகுதி கூட தமிழ்மண்ணுக்கு உரியதல்ல, இவரது பெயரைப்போலவே ஐவரும் தமிழரல்ல, அதனால் வேண்டுமென்றே தமிழ்மன்னர்களை இழிவு படுத்துகின்றாரோ என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. 🙂

              சேர, சோழ, பாண்டியர்கள் ஒன்றும் ஏனைய இனத்தவர்களின் அரசர்கள் செய்யாத எந்தக் கொடுமையையோ அல்லது ஒருவரும் செய்யாத புதியா அட்டூழியங்களையோ அல்லது அநியாயங்களையோ செய்யவில்லை, மற்ற நாட்டு மன்னர்களுடன் ஒப்பிடும் போது அவர்கள் அவர்கள் உயர்வாகத் தான் தெரிகிறார்கள். இக்கால சோஷலிச, பெரியாரிச, முற்போக்கு சிந்தனைகளின் அடிப்படையில் அக்கால ஆட்சியாளர்களை கணிப்பிடுவது வெறும்முட்டாள்தனம். உதாரணமாக இக்காலத்தில் ஒருவரை யானையால் மிதித்துக் கொல்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று, ஆனால் அது அக்காலத்தில் சாதாரணமாக வழக்கத்திலிருந்த தண்டனை. அக்கால வழக்கப்படி, சட்டங்களின் படி மன்னன் நடந்து கொண்டான், அந்த அடிப்படையில் அவன் கொடியவன் என்று நாங்கள் அவனைத் தூற்றினால் அது எவ்வளவு முட்டாள் தனமோ அது போன்றது தான் தமிழ் மன்னர்கள் factory கட்டவில்லை computerஐக் கண்டு பிடிக்க ஊக்குவிக்கவில்லை என்பதும்.

              அக்கால வழக்கப்படி தமது புகழை நிலை நாட்டவும், போரில் தாம் செய்யும் கொலைகளின் விளைவாக அடுத்த பிறப்பில் தாம் தண்டிக்கப்பட்டு விடுவோமோ என்றும் பயந்த தமிழ் அரசர்கள் தமது செல்வத்தைக் கொண்டு கோயில்களைக் கட்டினார்கள். அதில் மக்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கினார்கள். இன்று உலகம் வியக்கும் தமிழர்களின் தொழில்நுட்ப, கட்டிட, சிற்ப கலைகளை ஊக்குவித்தார்கள். இதே காரணத்துக்காக, அதாவது தமது பாவங்களைப் போக்கத் தான் ஐரோப்பிய அரசர்களும் வானளாவிய தேவாலயங்களைக் கட்டினார்கள். அக்காலத்தில் ஐரோப்பாவில் சாமானியர்களின் நிலை, தமிழ்நாட்டை விட மோசமானது, அதற்காக இன்று எந்த ஐரோப்பியரும் தமது மன்னர்களை வசை பாடுவதில்லை, அவர்கள் கட்டிய தேவாலயங்களை, அவர்கள் மாளிகைகளை தமது பாரம்பரியச் சின்னங்களாக பெருமையுடன் பராமரிக்கிறார்கள்.

              இன்று தமிழ்நாட்டில் இவ்வளவு சாதிப்பிரிவும், பார்ப்பனர்களின் ஆளுமையும், தமிழர்கள் தமது நிலமிழந்து கொத்தடிமைகளாக இருப்பதற்கும் மூவேந்தர்கள் காரணம் அல்ல, சோழர்களின் வீழ்ச்சியின் பின்னர் பல நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டை தமிழரல்லாதார் ஆண்டதால் வந்த வினை. அவர்கள் தான் தமிழர்களின் நிலங்களைப் பறித்து, தமது நாட்டிலிருந்து தமிழ்மண்ணுக்கு குடியேற்றப்பட்ட ரெட்டிகளுக்கும், நாயுடுகளுக்கும் வழங்கினார்கள். இன்றும் தமிழ்நாட்டுக் கிராமப் புறங்களில் தமிழர்களை விட ரெட்டிகள், நாயுடுகள் போன்ற தமிழரல்லாத சாதிகள் நிலச்சொந்தக்காரர்களாக காணப்படுவதற்கும் இது தான் காரணம். யாழ்ப்பாண வெள்ளாளர்கள் கூட விஜயநகர ஆட்சியில் தமது நிலங்களை இழந்த தமிழ்நாட்டுப் பிள்ளைமார்களும், முதலியார்களும் தான் அங்கு குடிபெயர்ந்தனர் எனவும் கூறுவர்.

              • போரில் செய்த கொலைகளுக்கு பரிகாரமாக கோயில் கட்டினார்களா?
                ஆகவே,ஜெயேந்திரனும் விரைவில் கோவில் கட்ட ஏற்பாடு செய்யலாம்:ஜீரனோத்தரண கும்பாபிசேகத்துக்கு,குடும்பத்துடன் சென்று ஐயன் அருள் பெறுக!

                நீங்கள் போற்றிப் புகழும் சேர,சோழ,பாண்டிய”உத்தமர்களைக்” காட்டிலும், களப்பிறர்கள் காலம் மிகவும் சிறந்தது: எந்த கோவிலுக்கும் அவர்கள் பணத்தை விரையம் செய்து குடமுழுக்கு செய்யவில்லை:
                கோவில் கட்டியதால் எல்லோருக்கும் வேலை வாய்ப்பு?
                கோவிலில் பெரிய மணியை அடிக்க,தோட்டத்தில் பூ பறிக்க,கழுத்து வலியுடன் (பூனூல்களையும் சேர்த்து சுமக்க) “சாமி” தூக்க,”சாமி” பள்ளியறைக்கு வந்து தூங்கிய பின்பும்,கொட்ட கொட்ட விழித்திருந்து கோவிலையும்/சாமியையும் காவல் காக்க: ஆகா என்ன மாதிரியான வேலை வாய்ப்பு

              • எனது பெயரில் தமிழ் வாசனை இல்லாமல் போனதற்கு
                நான் காரணமல்ல:
                “தமிழ் வாசனை”யுடன் உள்ள பெயரில் உள்ளவர்களை விட
                எனது பங்களிப்பு எப்போதும் அதிகம்தான்:
                உங்களது திருப்திக்காக, எனது பெயரை
                உத்தம் சந்து காந்தி என்று மாற்றிக்கொள்ள முடியாது

              • //ராமதாஸ் கோதண்டராமன் சீதாபதி அவர்களின் பெயரில் ஒருபகுதி கூட தமிழ்மண்ணுக்கு உரியதல்ல, இவரது பெயரைப்போலவே ஐவரும் தமிழரல்ல, அதனால் வேண்டுமென்றே தமிழ்மன்னர்களை இழிவு படுத்துகின்றாரோ என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. //

                அய்யா! ராமதாஸ் கோதண்டராமன் சீதாபதி அவர்களின் ஆதங்கத்தில் நியாயமிருக்கிறது! அந்தக்கால தமிழ் மன்னர்கள் தங்களுக்குள் சகோதர சண்டையிட்டு மக்களை துன்புருத்தியதே அதிகம்! தமிழ் மற்றும் தமிழன் மீது அக்கறையை காண்பிக்க, கடந்த கால காட்டு மிராண்டிதனமான செயல்களை நியாயபடுத்த வேண்டாம்!

                //சோழர்களின் வீழ்ச்சியின் பின்னர் பல நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டை தமிழரல்லாதார் ஆண்டதால் வந்த வினை. அவர்கள் தான் தமிழர்களின் நிலங்களைப் பறித்து, தமது நாட்டிலிருந்து தமிழ்மண்ணுக்கு குடியேற்றப்பட்ட ரெட்டிகளுக்கும், நாயுடுகளுக்கும் வழங்கினார்கள். // இதுவும் தவரான கருத்து! சேர, சோழ, பாண்டியர்கள் ஒன்றும் ஏனைய இனத்தவர்களின் அரசர்கள் செய்யாத எந்தக் கொடுமையையோ அல்லது ஒருவரும் செய்யாத புதியா அட்டூழியங்களையோ அல்லது அநியாயங்களையோ செய்யவில்லை என்பதும், தமிழன் அப்போதும், இப்போதும், தங்களுக்குள் சண்டையிட்டு அழிவதைநியாயப்படுத்தாது! யாழ்ப்பாண வெள்ளாளர்கள் கூட விஜயநகர ஆட்சியில் தமது நிலங்களை இழந்த தமிழ்நாட்டுப் பிள்ளைமார்களும், முதலியார்களும் தான் அங்கு குடிபெயர்ந்தனர் எனவும் கூறுவதும் ராஜபக்ஷேவுக்கு வேண்டுமானால் உதவக்கூடும்! உண்மை அதுவல்ல! ராஜராஜசோழனே தெலுங்கன்தான்! ஆதிக்க ஆசையினாலேயே மதுரை, திருவனந்தபுரம் மற்றும் நீலகிரி மக்களிடம் கொடூரமான போர் தொடுத்தான்! அவனது கொள்ளையில் கட்டியதுதான் தஞை பெரிய கோவில்! முழுக்க முழுக்க பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தி, தமிழரின ஒற்றுமைக்கு வேட்டு வைத்தவன்! எந்த மலையாள யானைப்படையால் வெற்றிநாயகன் ஆனானோ அதே மலையாள மற்றும் மதுரை படையால் அவன் வம்சமும் அழிந்தது! தஞ்சையை இழந்து ஊர் ஊராக திரிந்து, கடைசியில் சிற்றரசராக இருந்தனர்! அவர்கள் தெலுஙகர்களாக இருந்தாலும் தமிழ்பற்றும், இறைபற்றும் கொண்டு இருந்ததற்கு காரணம் , அவர்கள் மணந்த தமிழ் பெண்திலகங்கள்! பக்தை வந்ததும் வீரமும் அழிந்தது! இவர்களை அண்டி பிழைத்த ஒட்டுண்ணிகள் , விஜயனகரம் சென்றனர்!

                • நான் சொல்ல வந்ததும் அதுதான்:
                  பக்தி வந்ததும்,வீரம் போயிற்று:மானம் இழந்தனர்:
                  நாடிழந்தனர்: எல்லாம் எவரால்?
                  பூணூல்தானே?
                  நாம் போராடவேண்டியது சு.சாமியிடம்:
                  ஆனால், என்னை பிழிந்து காய வைக்க
                  தமிழ் இனமே ஒன்று கூடுவதை வருத்தத்துடன்
                  காண்கிறேன்!

                  • தமிழர்களின் எதிரிகள் சு.சாமி போன்றவர்கள் தான். ஆனால் தமிழரல்லாத தமிழர்களின் எதிரிகள் எப்படா தமிழர்கள் அடித்துக் கொள்வார்கள் என்று தருணம் பார்த்துக் கொண்டிருக்கும் போது உங்களைப் போன்ற தமிழர்கள் நேரம் காலம் தெரியாமல் சில பழைய விடயங்களைப் பற்றிப் பேசுகிறீர்கள். இப்பொழுது தமிழர்களுக்கு தேவை ஒற்றுமை, எங்களிடையே உள்ள வேறுபாடுகளையும், நடந்து முடிந்த கசப்பான நிகழ்வுகளையும் மறந்து, சாதி, மத வேறுபாடின்றி ஒன்று பட வேண்டும். உதாரணமாக, பார்ப்பனர்களிடம் எத்தனை பிரிவுகள் உண்டு. ஆனால் இன்று தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள பிராமணர்கள் அனைவரும் தீட்சிதர்களுக்கு ஆதரவளிக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக உண்மையைத் திரித்து ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். பல பார்ப்பனர்களும் அந்தக் கட்டுரைகளை ஆதரித்து பின்னூட்டம் இடுகிறார்கள். அவர்கள் அகில இந்திய அளவில் மட்டுமல்ல உலகம் முழவதும் மக்களின் ஆதரவை தீட்சிதர்களுக்கு பெற்றுக் கொடுக்கிறார்கள். ஆனால் நாங்கள் தமிழர்கள், இந்த இணையத்தளத்தில் கூட ஒற்றுமையைக் காட்ட முடியாமல் ஆளுக்காள் அடிபடுகிறோம். அதைத் தொடங்கி வைத்தவர் நீங்கள். அதனால் மற்றவர்கள் உங்களை பிழிந்து காய வைப்பதில் தவறில்லை. 🙂

                • //ராமதாஸ் கோதண்டராமன் சீதாபதி அவர்களின் பெயரில் ஒருபகுதி கூட தமிழ்மண்ணுக்கு உரியதல்ல//
                  Is u r name viysan is a tamil name?

              • //இன்று தமிழ்நாட்டில் இவ்வளவு சாதிப்பிரிவும், பார்ப்பனர்களின் ஆளுமையும், தமிழர்கள் தமது நிலமிழந்து கொத்தடிமைகளாக இருப்பதற்கும் மூவேந்தர்கள் காரணம் அல்ல, சோழர்களின் வீழ்ச்சியின் பின்னர் பல நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டை தமிழரல்லாதார் ஆண்டதால் வந்த வினை. //

                wHEN TEMPILS ARE BUILT IN tAMIL NADU THEN CAST BASED SOCIETY ALSO DEVELOPED BY BRAMINS WITH SUPPORT FROM chola kings!!

                but u start blaming other people for your [our] mistake!!!!

              • //இன்று தமிழ்நாட்டில் இவ்வளவு சாதிப்பிரிவும், பார்ப்பனர்களின் ஆளுமையும், தமிழர்கள் தமது நிலமிழந்து கொத்தடிமைகளாக இருப்பதற்கும் மூவேந்தர்கள் காரணம் அல்ல, சோழர்களின் வீழ்ச்சியின் பின்னர் பல நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டை தமிழரல்லாதார் ஆண்டதால் வந்த வினை. //

                What a lie u r telling!!!

                The cast based Tamil socity was developed even before chola kings!!

                This idiot chola kings suppressed native Tamil people like dalits and supports Bramin people!!

                In the name of Tamil and Tamil culture u too try to suppress native people of tamil nadu

          • எனது முப்பாட்டன் யாரும் இங்கே இல்லை:
            தமிழ் பெயருடன்,தென் ஆfரிக்காவில், திரிகிறார்கள்:
            தில்லையாடி(வள்ளியம்மை)யில் இருந்த பெரும்பாலோர்,தரங்கம்பாடியிலிருந்து
            கப்பல் மூலமாக (பிழைப்பு தேடி) போய்விட்டார்கள்:
            நான் எந்த “சங்கமும்” வைக்காமல்,தமிழை வளர்க்கிறேனோ, இல்லையோ;தமிழை
            அவதூறு செய்வதில்லை!

            எவனாவது எழுதிக் கொடுத்தால் தன் பெயரில் வெளியிடும் மன்னர்களில் எவன் ஒசத்தி?

        • //குறைந்த பட்சம் ஏதாவது கோணி ஊசி தொழிற்சாலையை
          உங்களது சேர,சோழ,பாண்டிய பன்னாடைகள் விட்டுசென்றனவா?//

          கல்லனை அமைத்தவன் யார்?

          • தென் கிழக்கு ஆசியா முழுதும் சோழ புலிக்கொடி பறந்திருக்கின்றது…

            அங்கோர் வாட் கோவில் பார்த்திருக்கிறீர்களா?

            சோழ மாமன்னர்கள் கட்டிய வாய்க்கால் அறிவீர்களா?

            கம்பன் வாழ்ந்த காலம் அறிவீர்களா?

            • வீரன், கர்நாடகாவில் வள்ளுவனுக்கு சிலை வைக்கமுடியாது அவ்வளவு எதிர்ப்பு ஆனால் ஒரு பொது தளத்தில் ஒரு நாயுடுவால் தமிழ் மன்னர்களை பன்னாடைகள்,கேனப்பயல்கள்,மரமண்டைகள்,பண்டாரங்கள் என்று பேசமுடிகிறது.அதுதான் திராவிட மாயை.

              • கட்டிய கோவில்கள் இருக்கிறது:
                அவர்களின் தொழிற்சாலைகள் ஏதேனும் எங்கேயாவது உள்ளதா?
                இதில் மாயை,மந்திரம் எதுவும் இல்லை!

                • //அவர்களின் தொழிற்சாலைகள் ஏதேனும் எங்கேயாவது உள்ளதா?//

                  யப்பா….தாங்க முடியலயே

                  • வீரன், எழுத்தாளர் ஜெயமோகன் நக்கலாக சொன்னார் ராஜராஜ சோழன் காலத்தில் ஏன் பின் நவீனத்துவம் இல்லை என்றறெல்லாம் கேக்ககூடாது என்று.சீதாபதி கேட்டே விட்டார்.18ம் நூற்றான்டில் தொழிற்புரட்சி ஏற்பட்டு அதன் பிறகுதான் உலகெங்கும் தொழிற்சாலைகள் ஏற்பட்டது.13ம் நூற்றான்டின் இறுதியில் முடிவுக்கு வந்த மூவேந்தர் ஆட்சியில் ஏன் தொழிற்சாலை இல்லைன்னு அண்ணன் கேக்குறார்.இதுல 10ம் வகுப்பு வரை வரலாறு படிச்சா போதுமான்னு வேற கேக்குறார் பாருங்க அங்க நிக்கிறாரு அண்ணன்

                    • வரலாறு முக்கியம் மகனே!
                      காந்தி தாத்தா சுதந்திரம் வாங்கினார்
                      “மாமா” நேரு இந்தியாவை “செதுக்கினார்”
                      அத்தை மகள் இந்திரா, “மிசா” கொண்டு சனனாயகம் தழைக்க உதவினார்:
                      அப்புறம்…தியாகத் தெரு விளக்கு,தமிழனின் ஒட்டு மொத்த கருமாதி செலவையும்
                      ஏற்றுக் கொண்டார்!
                      எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை: ராச ராசன் விட்டு சென்றதை,நீங்கள் நிறைவேற்றலாம்…..

                    • A king like chola only supporting bramin culture so that he developed temples and only bramin people are allowed inside the karpa grakam and dalit people are not allowed even inside the temple. why?

                      DO U SUPPORT THIS FOOLISH KINGS?

                • சீதாபதி, எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.நீ 1ப்பு வரலாறு கூட படிக்கல போல.மூவேந்தர்கள் ஆட்டோ மொபைல் தொழிற்சாலை அமைக்கலன்னு வருத்தபடுறியா? தொழிற்புரட்சி எப்ப ஏற்பட்டுச்சுன்னு வீட்ல கேளு.அப்புறம் கல்லனையை நீ ஆராய போரியா செம காமடிதான்.கரிகாலன் எப்ப இலங்கை மீது படையெடுத்தான்? அங்கேருந்து 1000 அடிமை தமிழர்களை வேறு கூட்டி வந்தானம்.கரிகாலன் சங்க காலத்தை சேர்ந்த சோழ அரசன்.சங்க காலத்தில் அடிமை முறை இல்லை.ஆப்ரிக்காவில் உள்ளது உன் முப்பாட்டன்னு எனக்கு தெரியும் ஆனா தமிழ் பேரொடுன்னு புளுகாதே.தமிழன் தன் சொந்த நாட்டில் அடிமையானதும்,அடிமையாய் நாடு கடத்தபட்டதும் வ்ந்தேறிகள் ஆட்சியில்தான்.

                  • நான் வரலாறு படிக்கவில்லை:
                    நீங்கள் முடிந்தால்,
                    தமிழ்நாட்டு போர்க்களங்கள்: படியுங்கள்:
                    எழுதியவர்: பன்மொழி புலவர் அப்பாதுரை பிள்ளை:
                    எனக்கு கோவிலில் “காவடி” தூக்குபவர்களைப் பற்றி கவலை இல்லை:
                    அடுத்த தலைமுறையும்,காவடி தூக்கினால்,தீவட்டி சுமந்தால்….குடும்பம்
                    நல்ல பொருளாதாரத்துடனும்,”புண்ணியத்துடனும்” இருக்கும்: மிச்சம் மீதி சொத்து இருந்தால் இருக்கவே இருக்கு காஞ்சி சங்கர மடம்:எழுதி வச்சிட்டுப் போகலாம்!

              • இவ்வளவு ஆக்ரோசமாக பேசும் நீங்கள்,
                எத்தனை பேர், தில்லையாடி அருனாசலம் பாடல்களுக்கு
                முக்கியத்துவம் கொடுத்தீர்கள்?
                அருனாசலத்துக்கு பூணூல் மட்டும் இருந்தால்….
                தியாகராயர் கீர்த்தனைகள் பின் தள்ளப் பட்டிருக்கும்:
                நமது வரலாறு மிகவும் வலி மிகுந்தது: பூணூலின் சூழ்ச்சியால்
                நம்மைக் குப்புற தள்ளி குழி பறித்தது…குழியில் இருந்து எத்தனை பேர்
                மீண்டோம்? எவ்வளவு பேர் மாண்டோம்?
                ஒரு நாயுடுவால்….சேர சோழ பாண்டியர் களைத் தோலுரிக்க முடியும் என்றால் மிகவும் சந்தோசம்: உங்கள் மொழியில் சொல்வதென்றால்: சுண்ணாம்பு காளவாயில் போட்டாலும்,எனது வேலையை(விழிப்புனர்ச்சியை) செய்வேன்!

                • பின் குறிப்பு: தில்லையாடி அருனாசலம் நாயுடு அல்ல!
                  பிள்ளைவால்

                  • மற்றுமொரு திருத்தம்! அவர் தில்லையாடி அல்ல! தில்லைவிடங்கன் அருணாச்சலம் பிள்ளை!

                    • மன்னிக்கவும்!
                      தில்லையாடியில் அருணாச்சலக் கவிராயர், தில்லைவிடங்கன் மாரிமுத்தாபிள்ளை, சீர்காழி முத்து தாண்டவர் இவர்களே தமிழ் இசை மும்மூர்த்திகள்!

                    • அருனாசசலம் பிறந்தது தில்லையாடியில்:எனது தந்தை
                      வாழ்ந்த தெருவில்:அவர் கல்வி பயின்றது,தருமபுரம் ஆதீன மடத்தில்:
                      பின்னால் காசுக்கடை வைத்து மாயுரத்தில்(மயிலாடுதுரையில்) வாழ்ந்தார்:
                      இவரது புலமையின் காரணமாக,சீர்காழியில் தங்கி பாடல்கள் இயற்றினார்:

                      ஏன் பள்ளி கொண்டீரய்யா,ரங்கனாதா(கொஞ்சும் சலங்கை) இவரது பாடல்:
                      போதுமா?இன்னும் தகவல்கள் வேண்டுமா?
                      ஒரு சமயம்,ஆதினம் ஆக இவருக்கு வழி இருந்தது:மறுத்துவிட்டார்:காரணம் தெரியவில்லை!

                • தமிழ் இசையை அழித்து தெலுங்கு சமஸ்கிருத இசையாகிய கர்நாடக இசையை வளர்த்தது தமிழ் மன்னர்களா? தெலுங்கு வந்தேறிகளா? அப்புறம் நீங்கள் சேர,சோழ,பாண்டியர்களை என்னத்தை தோலுரித்து கிழித்தீர்? அவங்க ஏன் அய்.டி கம்பெனி ஆரம்பிக்கலைன்னு கேக்குறதுதான் ஒங்க ஊர்ல தோலுரிப்பா?

            • ஊரை கொள்ளடித்து தினமும் 1000 பேருக்கு அமுது படைத்த 12 ஆழ்வார்களில் ஒருவனான
              திருமங்கை ஆழ்வார் யாருக்காக இதைச் செய்தார்?
              108 “திவ்ய” தேசமும் இப்படிக் கண்ணீர் கதைகளில் வடித்தவைதான்:
              உங்களுக்கு கோவில், பக்தி இவையெல்லாம் பூணூல்களுக்கு உடலை சற்றும் அசைக்காமல்
              பிழைப்பை ஏற்படுத்தி கொடுத்தவைதான்:
              வேண்டுமானால், தஞ்சைவாணன் கோவை படியுங்கள்: உண்மையை உணருங்கள்:உணர்ச்சிப் பெருக்கு: நஷ்டம் நமக்குத்தான்!

            • வீரன் தம்பி:
              ராச ராசனின் காலத்தில் பூணூல்களுக்கு வரி கிடையாது:தாழ்த்தப்பட்டவர்களுக்கு? அதிக வரி!
              பெண்கள் உடன் கட்டை ஏறும் வழக்கம்/தேவதாசி முறை மற்றும் பூணூல்களுக்கு சதுர்வேதி மங்களம் தந்து, நமக்கு மங்களம் பாடினான்:கோவிலின் அடி வரிசையில்(அழிக்க முடியாத நிலையில்) எழுதியுள்ளான்:
              நான் சொல்ல வந்தது இதுதான்:
              எவனொருவன் பூணூல்களால் ஆட்டுவிக்கப் படுகிறானோ அவன் இந்த சமுதாயத்துக்கு சிறந்த சேவையை செய்ய முடியாது:
              பூணூல்களுக்கு வக்காலத்து வாங்கி சேவை செய்வது சரியா?

      • //தமிழ் மொழியை,பண்பாட்டை,நாட்டை காத்தவர்களை உன்னை போன்ற அரைவேக்காடுகள் திட்ட சொல்லி வேடிக்கை பார்க்கும் இன்றைய தமிழந்தான் நீ கூறிய அனைத்தும்.//

        Hello gentilman

        which is Tamil culture? What kind of culture your kings are developing?

        Fully idiotic and foolish and Dalith people suppressing culture—–your king are developing!

        In Tamil Nadu Cast based society was developed by these so called kings.

        ARE U SUPPORTING THESE KINGS AND CULTURE???

        • செந்தில் குமார், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதும் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதும் தமிழ் பண்பாட்டில் இருந்து உருவாகி வந்த சிந்தனைகள்தான், ஏனென்றால் இலக்கியம் என்பது மக்கள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணாடி. முன்முடிவுகள் ஏதுமின்றி சங்க இலக்கியங்களை வாசித்து பாருங்கள் உண்மைப்புரியும்.இன்று நாம் காணும் இறுக்கமான சாதிகட்டமைப்பு தெலுங்கு மரபு சோழன்[முதலாம் குலோத்துங்கன்]ல் தொடங்கி நாயக்கர் ஆட்சில் உச்சத்தை அடைந்தது.வரலாற்றின் அந்த காலத்தில் உலகில் எங்கு மக்களாட்சி நிலவியது,எங்கு சோசலிசம் நிலவியது என்று கூறினால் மேற்கொண்டு விவாதிக்கலாம். அதுசரி தமிழ் உங்களுக்கும் நீச மொழிதானா?

          • //.இன்று நாம் காணும் இறுக்கமான சாதிகட்டமைப்பு தெலுங்கு மரபு சோழன்[முதலாம் குலோத்துங்கன்]ல் தொடங்கி நாயக்கர் ஆட்சில் உச்சத்தை அடைந்தது.வரலாற்றின் அந்த காலத்தில் உலகில் எங்கு மக்களாட்சி நிலவியது,//

            See thevaranaya…,

            [1]If u believe in your own words then why are u supporting the culture which was polished by idiotic kings like chola?
            [2]If I telling temples should be converted into schools and science education should be provided in Tamil language then where will u have pain with in u?[3]What is wrong in this temple to school conversion?
            [4]By supporting that Hindu culture inside and outside temple you only against working class Tamil people and scientific Tamil language
            [5]yes it is not a religious language but it is a scientific language.[Even a 6 month baby start telling Tamil letters by own. So it is a natural language for our people]
            [6]In the name of Tamil culture all u guys are suppressing working tamil people.THIS IS OUR TIME[COMMUNIST] TO TAKE THE LANGUAGE ISSUE AND CULTURAL ISSUES TO DO TOP DOWN CHANGE IN IT.
            [7]First of all u do little bit action to change this cast bast tamil society than only start blaming people like me.

            • செந்தில் பாய் நீங்கள் என்னதான் தமிழ் பெயரில் வேசம்கட்டி வந்தாலும் உங்க கொண்டையை மறைக்க முடியலேயே. 1.சோழ பேரரசில் வாரிசு இல்லாநிலை ஏற்பட்ட போது முதலாம் ராஜேந்திரன்[கி.பி.1012-1044] மகள் வழி பெயரன் [அம்மங்கா தேவி மகன்] முதலாம் குலோத்துங்கன்[கி.பி.1071-1122] சோழ பேரரசை கைபற்றினான்.அவன் வெங்கி நாட்டை சேர்ந்தவன்.நான் தெலுங்கு சோழன் என்று குறிப்பிட்டது அவனைதான் 2.கோயிலை மாத்திடலாம் சர்ச்,மசூதியை,என்ன செய்யலாம்? 3.இந்து தத்துவ மரபில் தமிழர்களின் பங்கு கனிசமாக உண்டு.உதாரணம் சாங்கியம். 4.அய்யா ஆங்கிலத்திலேயே எழுதிரிங்களே தமிழ் நீசபாசையான்னு கேட்டேன் வேறொன்னும் இல்லை.

            • 30வருடங்களுக்கு மேலாக இடது சாரிகள் ஆண்ட மேற்கு வங்கத்தில்தான் தலித்மக்கள் நிலை மிகவும் மோசமாக உள்ளது.கம்னிஸ்டுகள் உழைக்கும் மக்களை காப்பார்கள் என்பது நல்ல தமாசு.

          • //அதுசரி தமிழ் உங்களுக்கும் நீச மொழிதானா?//

            We communist people never discriminate the language of native people. We support Not only Tamilan and Tamil language also support all other languages and all other race people and their rights.

            [1]We are the communist born in Tamil Nadu so we are having love with my language.
            [2] Our leader Lenin is a communist and he born in Russia so he love his language.
            [3] Marx is a father of Communist ideology who born in German so he love his language.
            [4] Angels from England and he speaks and writes in English.

            But this language barriers will not and can not stop us to work together for working class.

            Hello sir mind it…

            “For communist people like us The language is a tool for fighting for gaining the economical,political and cultural rights of working class”

            “But you religious people–the language is a drug like abbin and you guys are getting happiness through the useless religious davarama songs and vadas. Through all this garbage songs in to bin and think about a common man ”

            “Singing Davaram or vada will not eleminate the problems of working class but through them away into ditch will make us to think about the SOCIAL CHANGE”

  5. இன்று வெளிவந்துள்ள தினகரன் நாளிதழில் 8ஆம் பக்கத்தில் புகைப்படத்துடன் வந்த செய்தி … பார்பன பாசிஸ்ட் பொறிக்கி ஜெயலலிதாவின் அடிவருடிகளான ஆ.தி.மு.க பொறிக்கிகள்(ஓம் சக்தி சேகர் ) அவனுடைய ஆதரவாளர்களும் தில்லை கோவில் விவகாரம் தொடர்பாக ஜெயலலிதாவின் முகமூடியை கிழித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னை-கடலூர் 100 அடி சாலையில் துண்டு பிரசுரம் விநியோகித்து கொண்டிருந்த நமது புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தோழர்களை கடுமையாக தாக்கி இருக்கிறார்கள்..

  6. புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களே உதவுங்கள்!

    தில்லைச் சிதம்பரத்துக்கும் ஈழத்தமிழர்களுக்கும் உள்ள பாரம்பரிய தொடர்புகளையும் எமது முன்னோர்கள் எவ்வளவு பக்தியுடன் சிதம்பரம் கோயிலுடன் தமது தொடர்புகளை இடையறாது பேணி வந்தார்கள் என்பதையும் உணர்ந்து, தில்லைச் சிற்றம்பலத்தில் தமிழ் தேவாரங்களைப் பாடவும், கோயில்களில் எல்லாம் உயர்ந்த கோயிலாகிய தில்லைச் சிதம்பரத்தில் இடையூறின்றி தமிழ் ஒலிக்கவும், கோயில் தமிழர்களின் கைகளில் தொடர்ந்திருக்கவும் போராடும் தமிழர்களுக்கு உங்களால் இயன்றளவு நன்கொடையை நல்கி அவர்களை ஆதரியுங்கள். இது புலம்பெயர்ந்த நாடுகளில் எல்லாம் மூலைக்கு மூலை கோயில் கட்டுவதை விட சிறந்த திருப்பணியாகும்.

    http://viyaasan.blogspot.ca/2013/12/blog-post.html

    • //இன்று தமிழ்நாட்டில் இவ்வளவு சாதிப்பிரிவும், பார்ப்பனர்களின் ஆளுமையும், தமிழர்கள் தமது நிலமிழந்து கொத்தடிமைகளாக இருப்பதற்கும் மூவேந்தர்கள் காரணம் அல்ல, சோழர்களின் வீழ்ச்சியின் பின்னர் பல நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டை தமிழரல்லாதார் ஆண்டதால் வந்த வினை. //

      Hello viysan what a lie you r telling!!!

      In Tamil nadu only dalith people are land less. But all u vellalars[all types] are having land in big size.

      Why are u lieing this matter?

    • You guys are showing your cast pride in Yazpanam against dalit.

      Now u guys are coming to Tamil Nadu for the same reason!!

      All this Temples should be converted in to schools and all people should be allowed to learn

      What the hell reason for singing the songs in Tamil and Sanskrit in side the temple!?

      put all the shit davarams and shit vads in to the dust bin and start teaching science in side the temple

  7. … பார்பன பாசிஸ்ட் பொறிக்கி ஜெயலலிதாவின் அடிவருடிகளான ஆ.தி.மு.க பொறிக்கிகள்(ஓம் சக்தி சேகர் ) அவனுடைய ஆதரவாளர்களும் தில்லை கோவில் விவகாரம் தொடர்பாக ஜெயலலிதாவின் முகமூடியை கிழித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னை-கடலூர் 100 அடி சாலையில் துண்டு பிரசுரம் விநியோகித்து கொண்டிருந்த நமது புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தோழர்களை கடுமையாக தாக்கி இருக்கிறார்கள்..பெரியார் பிறந்த மண் என்று பெருமைகொள்பவர்கள், பெரியாரை உரிமை கொண்டாடுபவர்கள் எல்லோரும் எங்கே போனார்கள்? கம்யூனிஸ்ட் கொள்கையை கொண்ட ம.க.இ.க தோழர்கள் தனித்து நின்று போராடுகிறார்கள்

  8. //அன்று ராஜ ராஜ சோழன் முன்னால் கைகட்டி வாய்புதைத்து நின்றனர், ஆனால் இன்று அதே தில்லைச் சிற்றம்பலத்தில் அதே தமிழ்த் தேவாரங்களைப் பாட எதிர்க்கின்றனர். சிற்றம்பலத்தில் தமிழில் தேவாரம் பாட தமிழர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் தமிழின், தமிழர்களின் இந்த இழி நிலைக்கு யார் காரணம்?//

    தமிழ் மக்களின் சுய மரியாதையற்ற, தாழ்வு மனப்பான்மையும், சிலரின் விபீஷண அடிமைதனமுமே காரணம்! குயில் முட்டையை காகம் தன் முட்டையென அடைகாத்தலைபோன்று திராவிடம் ஆரியத்தை அடைகாத்து ஆரிய குஞ்சுகளை வளர்த்துவிட்டது!

    • அஜாதசத்ரு, திராவிடன் யார்? தமிழ் நாட்டில் உள்ள மலையாளி,கன்னடன்,தெலுங்கன் மட்டும்தானா? கேரளாவிலோ,கர்னாடகத்திலோ,ஆந்திராவிலோ திராவிடன் என்ற கருத்தை யாராவது ஏற்கிறார்களா? தமிழ் நாட்டில் உள்ள தமிழன் மட்டும்தான் திராவிட புளுகை நம்பி ஏமாறவேண்டுமா?

      • திராவிடர் யார் ஆரியர் யாரென்பதை ஜவகர்லால் நேரு விளக்கமாகவே எழிதி விட்டார்! யார் ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் உலக சரித்திர அறிக்னர்கள் ஒப்புக்கொண்ட உண்மை! அடாவடிக்காரர்கள் மட்டுமே ஒப்புக்கொள்வதில்லை!

        • //கேரளாவிலோ,கர்னாடகத்திலோ,ஆந்திராவிலோ திராவிடன் என்ற கருத்தை யாராவது ஏற்கிறார்களா? தமிழ் நாட்டில் உள்ள தமிழன் மட்டும்தான் திராவிட புளுகை நம்பி ஏமாறவேண்டுமா?//

          நீங்கள் குறிப்பிட்ட எல்லா மானிலத்தவர்களும்நீதீக்கட்சியிலிருந்து போராடி, பின்னர் தங்கலுக்கு பதவி வந்தவுடன் ஓடியவர்கள் தாம்! மதராஸ் ராஜதானியின் பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கே அவர்கள் மொழிவாரி மானிலம் கேட்டு போராடினார்கள், வென்றார்கள்!

          • மொழிவாரி மாநிலம் பிரிக்கும் போது இதே திராவிட புளுகால்தான் தமிழ்நாட்டுக்கு உரிமையான நிலங்களை இழந்தோம்

          • அது அவர் இஷ்டம்! உங்களுக்கு தெளிவு வேண்டுமென்றால் விக்கிபீடியாவில் பார்க்கலாமே!

        • பல சாதி ஒழிப்பாளர் என்று கூறிக்கொள்பவர்கள், அம்பேத்கரின் சிந்தனைகளை பொதுமக்களிடம் சரியான முறையில் சேர்க்கவில்லை…

          என்ன செய்வது…அவர் எழுதியவற்றைப்படித்தால் உண்மையான பகுத்தறிவு வந்து விடுமே…
          அப்படி நடந்தால் பிறறை தூற்றி பொழைப்புநடத்த முடியாதே…

        • திராவிடர் என்பது தனித்த பேரினம் என்பதை மானிடவியல் அடிப்படையில் ஆராய்ந்து நிறுவிய நூல் எதுவும் உண்டா? அல்லது மண்டையோட்டு முறை [கிரனியோ மெட்ரிக்] ஆய்விலோ ,மரபினமுறை[பயோலாஜிகல் ஆந்த்ரோபோலஜி],இனக்குழு ஒப்பாய்வியல்[எத்நோலஜி] ஆய்வு முறையிலோ ஆய்ந்த நூல்கள் உண்டா?

          • அய்யய்யோ…
            நண்பரே…இதெல்லாம் “பகுத்தறிவு”க்கு ஒவ்வாத முறைகள்…

            பகுத்தறிவு என்றால் என்ன:
            1)சாதி ஒழிப்பு இயக்கம் ஆரம்பிப்பது
            2) இந்த இயக்கத்தில் பிராமன ‘சாதி’யில் பிறந்தால் சேர முடியாது..

            1 + 2 = முரன்பாடு (அதாவது “பகுத்தறிவு”)

            • இந்தியாவின் ஆரிய திராவிட இன அடிப்படையான மூலக்கூறுகள் உடல் அமைப்பு அடிப்படையில் ஆராயப்பட்டுள்ளது! பெரும்பாலும் ஆரியர் என்று அவர்கள் தாங்களே , இட்லர் போல, கூறிக்கொண்டார்கள் ! அவர்களை எதிர்த்து போரிட முடியாமல் அடிமைப்பட்டவர்கள், பெரும்பாலும் தெற்குபகுதிக்கு ஒதுங்கியவர்கள், திராவிடர்கள் என்று ஆரிய ஆதிக்க சாதியினரே கூறினார்கள்! இந்துஸ்தானம் எனும் வடபகுதியும், தெக்காணம் எனும் தென்பகுதியும்,நடுவில் மலையும்,வனமும், கடல்போன்ற கோதாவரி, துஙபத்திராநதிகளும் பிரித்து வைத்ததால், ஆரிய – மஙகோலிய இனக்கலப்பு தென்னாட்டில் அரிதானது! சமீபத்திய ஜீன் அடிப்படையிலான ஆராய்ச்சி தென்னாட்டை பொருத்தவரை அனைத்து சாதியினரும் ஒரே குடும்பத்தை செர்ந்தவராக , ஆப்பிரிக்க இன கூறுகளைக் கொண்டதாக வினவில் ப்டித்தநினைவு! ஆனால் இதை எந்த ஆரியனும் (என்று கூறிகொள்பனும்,முக்கியமாக ஆர் எஸ் எஸ்) ஒத்துகொள்ள வில்லை! தி மு க வை எதிர்க்கும் வினவு அம்பிகள், இதை ஒப்புகொண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஒத்துழைப்பார்களா?

              • அஜாதசத்ரு,நூல் பெயரை கேட்டா நூல் பெயரை சொல்லுங்க அவங்களா சொல்லிகிட்டாங்க டீ கடைல பேசிகிட்டாங்க ஏன் மணி அடிக்கவிடலை அப்பிடின்னு எல்லாம் கேட்டு மழுப்பாதிங்க.

            • //பகுத்தறிவு என்றால் என்ன:
              1)சாதி ஒழிப்பு இயக்கம் ஆரம்பிப்பது
              2) இந்த இயக்கத்தில் பிராமன ‘சாதி’யில் பிறந்தால் சேர முடியாது..//

              எந்த முரண்பாடும் இல்லை! நாங்கள் தனித்த சாதி, பிரமாவின் முகத்தில், பிறந்தவர்கள் என்று அவர்களே ஒதுங்யிருக்கிரார்கள்! அவர்களால் ஆக்கிரமிப்பு செய்யபட்டிருக்கும் அதிகார மையங்களை, இதுவரை பத்வி அனுபவிக்காத ஒடுக்கப்பட்டவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டதே திராவிட இயக்கம்! புரியாது போல குட்டையை குழப்பும் பார்பன யுக்தியை நாமறிவோம!

              ஏன் அம்பேத் கர் இயக்கத்தில் சேர்ந்து விட வேண்டியதுதானே! சட்டப்படி வேண்டுமானால் தாழ்த்தபட்ட, பிற்படுத்தபட்ட பெண்களை கலப்பு திருமணம் செய்துகொண்டு பிராமண சாதியை துறக்கலாம்!அல்லது கிருத்துவம், இஸ்லாம் மதத்துக்கு ஏகலாம்!

              • ஆரிய திராவிட இனம் பற்றி எவர் அறிவியல் பூர்வமான ஆதாரமில்லாமல் பேசினாலும் அது தப்பு தான்…அம்புட்டுத்தேன்…இதில் கொள்கை கிள்கை எல்லாம் இல்லை…

                //இதுவரை பத்வி அனுபவிக்காத ஒடுக்கப்பட்டவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டதே திராவிட இயக்கம்! //

                அதாவது வெறும் அதிகாரத்தைக்கைப்பற்ற நடந்தது…
                ஒடுக்கப்பட்டவர் முன்னேற்றம் என்றெல்லாம் பூ சுற்ற வேண்டாம்….
                கீழவெண்மனி ஏன் நடந்தது? இன்று நாயக்கன்கொட்டை போன்ற சம்பவங்கள் ஏன் நடக்கின்றன?

                புத்தகத்தில் என்ன எழுதினாலும் இவ்வியக்கம் வெறும் பிராமன எதிர்ப்பு இயக்கமாகவே செயல்பட்டிருக்கிறது…மற்றபடி சொல்லிக்குள்ளும் படி எதுவும் இல்லை…

                //ஏன் அம்பேத் கர் இயக்கத்தில் சேர்ந்து விட வேண்டியதுதானே! சட்டப்படி வேண்டுமானால் தாழ்த்தபட்ட, பிற்படுத்தபட்ட பெண்களை கலப்பு திருமணம் செய்துகொண்டு பிராமண சாதியை துறக்கலாம்!அல்லது கிருத்துவம், இஸ்லாம் மதத்துக்கு ஏகலாம்!//

                நான் என்ன செய்யவேண்டும் என்று நானே முடிவு செய்து செய்தும் உள்ளேன்…
                எந்த இயக்கத்திலும் சேர எனக்கு விருப்பம் இல்லை…அதனால் சேரவில்லை…
                சாதி பார்த்து மனம் முடித்தாலும் மற்றவரை தூற்றாத வரை / தாழ்வாக நடத்தாத வரை அது தனிநபர் சுதந்திரம்…
                மதநம்பிக்கை இல்லாததால் மதம் மாற இயலாது…மற்றவரை தூற்றாத வரை / தாழ்வாக நடத்தாத வரை அது தனிநபர் சுதந்திரம்…

                இதைச்செய் / அதைச்செய் என்று காவி மடத்திற்ற்குச்சற்றும் குறையாமல்நடக்கின்றது திராவிட மடம்…

                திராவிட சித்தாந்தத்தினால் சாதி ஒழிந்ததா? சாதிக்கொடுமை ஒழிந்ததா?

                திராவிட வாசனையே படாத மாநிலங்களிலும் சாதிக்கொடுமை இல்லை…

                இத்துடன் முடித்துக்கொள்கிறேன்…தில்லைக்கொவில் விசயத்திலிருந்து மாறுகிறோம்…

                • //திராவிட வாசனையே படாத மாநிலங்களிலும் சாதிக்கொடுமை இல்லை…திராவிட திராவிட வாசனையே படாத மாநிலங்களிலும் சாதிக்கொடுமை குறைவு என்று வாசிக்கவும்…

                  http://ncrb.nic.in/ciiprevious/Data/CD-CII2007/cii-2007/CII_CHARTS07.pdf

                  • “பூனை கண்ணை மூடினால்”…..தான் நினைவுக்கு வருகிறது…கொஞ்சமாவது உண்மையை பேசுங்கள்… வ்ந்து குவியும் வட இந்தியர்களை பார்த்தும் ஒன்றுமே தெரியாதது போல் பேசாதீர்கள்…சிந்திப்பீர்….

                    • நண்பரே…
                      உ பி, ராஜஸ்தான், மபி, ஆந்திரா இங்கு தமிழகத்தைவிட மிக அதிகமாக தலித்களுக்கு எதிரான வன்முறை கேஸ்கள் பதிவாகியுள்ளன…
                      பீகாரிலும் அதிகம்…

                      தமிழகத்தைப்பற்றி: மகாராஷ்டிரம், குஜராத், ஒரிசாவில் திராவிட அமைப்புகள் இல்லாமலேயே தமிழகத்தை விட குறைவான கேசுகளே பதிவாகியுள்ளன…
                      உற்று நோக்கினால் தமிழகத்தில் 2007 ல் நிலமை சற்று மோசமடைந்திருக்கின்றது…

                      நான் கூற வருவது இது தான்: திராவிட இயக்கத்தினால் தான் ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை கிடைத்ததைப்போன்று ஒரு மாயை தமிழகத்தில் தோற்றுவிக்கப்படுகிறது…
                      பன்டிதர் அயொத்திதாஸர், ரெட்டைமலை சீனிவாசனார் போன்றோர் பெருமை இருட்டடிக்கப்படுகின்றது…

                      தில்லைக்கோவிலைப்பற்றி:
                      நண்பர் கருப்பன் தந்த லிங்க் பார்த்தேன்… அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக ஏன் காலமாகின்றது என்றே புரியவில்லை…ஆகம விதிகளைப்பற்றி அர்ச்சகர் சங்கத்தலைவரே முன்னுக்குக்குப்பின் முரனாகப்பேசுகிறார்…கேசு கோர்ட்டில் எப்படி நிற்கிறது என்று புரியவில்லை…

                      எனது 100% நம்பிக்கை இது தான்: மாறாதது மாற்றம் தான்….அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆதல் என்ன எதிர்ப்பு வந்தாலும் நடந்தே தீரும்…
                      இது நடந்தால் கண்டிப்பாக நான் கோவிலுக்கு சென்று அர்ச்சகரிடத்தில் பிரசாதம் வாங்கிக்கொள்வேன் (நான் பல வருடங்களாக கோவிலுக்குச்செல்வதில்லை)

  9. ஓம் சக்தி ஆரம்பித்திருக்கிறான். அவனுக்குப் பதிலடி கொடுப்பதென்பது இந்த வழக்கில் நாம் வெற்றி பெற்றுக் காட்டுவதுதான். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கரத்தினை வலுப்படுத்துவோம்!

  10. //“தமிழக அரசு நிர்வாக அதிகாரியை வாபஸ் பெறா விட்டால், நீதிமன்றம் தமிழக அரசுக்கு எதிராகத் தீர்ப்பளிக்கும்” என்று சுப்பிரமணியசாமி பேட்டியளித்திருக்கிறார்.//

    இதுதான் பார்ப்பனக்கொழுப்பு என்பது! நீதிமன்றம் என்ன செய்ய இருக்கிறது என்பதை இவாளே எப்படி முன்னதாகவே கூறி மிரட்டமுடிகிறது? உச்சனீதிமன்றம் கூட வெறும் கண்துடைப்பு விசாரணைதான் செய்கிறதா? அல்லது அயோத்தி நீதிபதிகள் போல, கொக்கென்றுநினத்துவிட்டாரா உச்ச மன்ற நீதிபதிகளை?

  11. முன்னாள் (அ தி மு க)அறனிலயதுறை அமைச்சர் வி வி சுவாமினாதன் அவர்களே இன்று கேப்டன் டிவீ யில் பேசியிருக்கிரார், மறைந்த சஙகராச்சாரி, சந்திரசெகரர், கொடுத்தநடராஜர் காலில் அணிவிக்கும் வைர அணிகலன் திருடப்பட்டிருக்கின்றது! அரசர்கள் காலத்திலிருந்து கோவிலுக்கு கொடுக்கபட்ட பணம், நகைகள் மூறையாக கணக்கு வைக்கப்படவில்லை! சொதனையின் பொது கைப்பற்றபட்ட நகைகளும் , தங்கள் சொந்தநகைகள், பாதுகாப்பிற்காக கோவிலில் வைக்கப் பட்டிருப்பதாக சாதிக்கிரார்கள்!

    சதிராட வந்த நாட்டிய பெண்ணை கடத்தி கெடுத்திருக்கிரார்கள்; தட்டிகேட்ட கணவன் கொலை செய்யப்பட்டிருக்கிரான்! சிதம்பரம் போலிசில் புகார் பதியப்பட்டுள்ளது! இவ்வளவிற்கு பிறகும் நிர்வாகத்தை அறனிலயத்துறை நேரடி கண்கானிப்பில் வைக்காதது மோசடியாகும்!

    மேலும், தமிழ்னாடு மட்டுமின்றி, அனைத்து மானிலங்களிலும் அரசு தலையீடு இன்றி, இந்து அமைப்புகள் என்ற போர்வையில் பார்ப்பன கொள்ளையர் வசம் ஒப்படைக்க இந்துத்வா கும்பல் சதி செய்கிறது! உஷார்!

    • அதனால்தான் (மீதி உள்ள ஒரு கொலுசை காப்பாற்ற)
      ஒரு காலை கீழே இறக்காமல்,நடராசன் ஒரு காலில்
      நிற்கிறான்!

      • உண்மை,பாவம் நடராசன், அவர் தமிழர்களின் கருத்தில் உருவாகியவர், இந்தியாவிலோ அல்லது உலகில் எங்குமே கடவுளை ஒரு நாட்டியக்காரனாக கற்பித்த வரலாறு கிடையாது. ஆடவல்லான் எங்களின், தமிழர்களின் கடவுள். அதனால் அவரது ஒற்றைக் கொலுசையாவது பாதுகாத்துக் கொதுக்க முடியுமா என்று பதை பதைத்துக் கொண்டிருக்கும் போது, சேர, சோழ, பாண்டியர்களை அதாவது நம்மவாளையே சண்டைக்கு இழுத்து ஒரு புதுக்கலவரத்தை தூண்டி விடுகிறீர்களே அது நியாயமா? உங்களின் சச்சரவில் நடராசனின் காணமாமல் போன கொலுசுப் பிரச்சனை காணாமலே போய்விடுமோ என்று பயமாக இருக்குது. 🙂

  12. MR.RAMADOSS KOTHANDARAMAN SEETHAPATHI,

    //கல்லனை கட்ட இலங்கையிலிருந்து எத்தனை ஆயிரம்,ஆயிரம்
    தமிழர்களை அடிமையாக ஓட்டி வந்தான்: எத்தனை பேர் மாண்டனர்?//

    வரலாற்றில் நீங்கள் அத்துப்படி போல் தெரிகிறது. 12000 சிங்களவர்களைத் தான் பணயக்கைதிகளாக கரிகாலன் பிடித்து வந்தானே தவிர தமிழர்களை அல்ல. ஆனால் அதற்கு முன்பே கல்லணை கட்டத் தொடங்கப்பட்டு விட்டது, கல்லணையைக் கட்டுவதற்காக சிங்களவர்களைப் பிடித்து வரவில்லை. இன்றும் சிங்கள பிக்குகள் இனவாதத்தை தூண்ட கரிகாலன் பிடித்துப் போன சிங்கள பணயக்கைதிகளைப் பற்றிப் பேசுகிறார்கள் ஆனால் நீங்கள் என்னடாவென்றால் சரித்திரத்தையே தலைகீழாகத் திரிக்கிறீர்கள். 🙂

    //கரிகாலன்,கல்லனை கட்டினான்:ரொம்ப நல்லது: மற்ற மா மன்னர்கள் எந்த எந்த துறைமுகங்களை கட்டினார்கள்://

    பல உலகப்புகழ் பெற்ற துறைமுகங்களை தமிழ்நாட்டில் மட்டுமல்ல இலங்கையிலும் கட்டினார்கள் பல அவர்களின் வீழ்ச்சியின் பின்னால் கவனிப்பாரற்று அழிந்து விட்டன. இலங்கையில் திருக்கேதீஸ்வரம் அமைந்துள்ள மாதோட்டம் துறைமுகம், அரிப்புத்துறை எனப்படும் முத்துக்குளிக்கும் துறைமுகம் எல்லாம் பாண்டியர்களும், சோழர்களும் கட்டியவை தான். இப்படி எத்தனையோ துறைமுகங்கள் கட்டியிருக்கிறார்கள். இலங்கையில் ஊர்காவற்துறையில் கூட சோழர் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

      • அக்காலத்து வழக்கப்படி அது நடந்தது. அதற்கு தீர்ப்புக் கூற எங்களுக்கு தகுதியுண்டா. அது ஒன்றும் அக்காலத்தில் வேறு நாடுகளில் நடக்காமல், கரிகால சோழன் மட்டும் அப்படிச் செய்திருந்தால் அதைக் குறை கூறலாம். அக்காலத்தில் அதை விட மோசமான நடைமுறைகள் வழக்கில் இருந்தன.

        • hELLO viyasan…, After 500 years from today …singala people will justify his Tamil genocide happend at 2009.

          R U OK?

          We can not go back to past and change the history but we can learn lesson from past history and critizize it and create a new world

          • //We can not go back to past and change the history but we can learn lesson from past history and critizize it and create a new world//

            I only see blind criticism from many commentators.

            Please list the lessons that can be learnt from our past and let us know what to do.
            Be specific, mention in the form of points.

            • Since u have brain to think I left this matter to u.

              Read the history and start analysts the history and u try to publish the matter here.

              That is only good for your self thinking!

              If it is not possible then I will help u
              For example:

              [1] Ashoka plant the tress
              [2] Chola build the temples

              Which is good and which is needed?
              Do not say both!!!!!

            • My help for history analsis

              [1]After the war with Orisa[kalanga] ashoka start thinking about the peace and preaching Buddhism

              [2]Cola kings fighting with native Tamils in side Tamil nadu and gained lot in terms of Gold and STRAT BUILDING TEMPLES

              Hello friend now think which is good and needed!!
              Do not say both!!!!!

        • So till now u are supporting the human rights violations held in history by Tamil kings!!!

          That is why I ask u….

          After 500 years from today …singala people will justify his Tamil genocide happened at 2009.

          will u support this human rights violations also?

        • //அக்காலத்து வழக்கப்படி அது நடந்த//

          Nowadays too US gov is suppressing Iraq people and afgan people. By using this killings will u justify the 2009 genocide held in vani and mullaithevu?

  13. ///ஆங்கூர்வாட்: கட்டிடக்கலையின் அற்புதம்: பணம் எங்கேயிருந்து வந்தது?///

    தமிழ்நாட்டை ஆண்ட தெலுங்கர்கள், மராத்தியர்கள் கூட தமிழ்நாட்டுக் கோயில்களில் சில திருப்பணிகளைச் செய்திருக்கிறார்கள் ஆனால் அதற்காக அவர்கள் ஆந்திரா அல்லது மராட்டியத்திலிருந்து பணத்தைக் கொண்டு வரவில்லை, எல்லாமே தமிழ்மண்ணில் தமிழர்களைச் சுரண்டியது தான். அதனால் தமிழ்நாட்டில் தமிழரல்லாத அரசர்கள் ஏதாவது திருப்பணி செய்திருந்தாலும், அவை எல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு சொந்தமானவையே தவிர வேறு எவருடையவையும் அல்ல. தமிழ் மண்ணில் தமது முன்னோர்களின் வேர்கள் இல்லாத எவருமே தமிழ்நாட்டில் எதற்கும் சொந்தம் கொண்டாட முடியாது.

    அது போன்றே அங்கர்வாட்டைக் (Angkor Wat) கட்டுவதற்கு தமிழ்நாட்டிலிருந்து பணம் கொண்டு போகப்படவில்லை. ஆனால் அதைக் கட்டிய உழைப்பும் பணமும் கமர் (Khmer) மக்களுடையவை. தமிழ்நாட்டு அல்லது தென்னிந்திய கட்டிடக் கலையை நாங்கள் அங்கு பார்த்து பெருமைப்படலாம். ஆனால் அதற்கு சொந்தக்காரர்கள் அந்த மண்ணின் மைந்தர்களாகிய Khmer people மட்டும் தானே தவிர வேறு எவருமல்ல.

  14. //சீதாபதி, எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.நீ 1ப்பு வரலாறு கூட படிக்கல போல. கல்லனையை நீ ஆராய போரியா செம காமடிதான்.கரிகாலன் எப்ப இலங்கை மீது படையெடுத்தான்? அங்கேருந்து 1000 அடிமை தமிழர்களை வேறு கூட்டி வந்தானம்.கரிகாலன் சங்க காலத்தை சேர்ந்த சோழ அரசன்.சங்க காலத்தில் அடிமை முறை இல்லை//

    திரு.தேவாரநாயனார்,

    திரு.சீதாபதி அவர்கள் கூறுவதில் உண்மை இல்லாமலில்லை. முற்கால சோழ (Early Chola) அரசர்களில் ஒருவனாகிய கரிகால் சோழன் அல்லது கரிகால் சோழ பெருவளத்தான் (Ca.120 CE)மாமன்னன் ராஜ ராஜ சோழனுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே இலங்கை மீது படையெடுத்தது மட்டுமன்றி அந்தப் போரில் பணயக் கைதிகளாக 12000 சிங்களவர்களையும் சோழநாட்டுக்குக் கொண்டு சென்று கல்லணையை கட்ட கூலிகளாகப் பயன்படுத்தினான் என்பதை இந்திய சரித்திர ஆசிரியர்கள் மட்டுமன்றி இலங்கையின் வரலாற்றைக் கூறும் சிங்களவர்களின் மகாவம்சமும் உறுதி செய்கிறது, ஆனால் அந்தப் பணயக்கைதிகளை சிங்கள அரசன் கஜபாகு (112-134 CE) விடுதலை செய்து அதற்குப் பழிவாங்க 10000 தமிழர்களை பணயக் கைதிகளாக இலங்கை கொண்டு சென்றதாக மகாவம்சம் கூறுகிறது.

    “கடல்சூழ் இலங்கைக் கயவாகு”, மன்னன் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு சிலை எடுத்த விழாவில் கலந்து கொண்டதாக சிலப்பதிகாரமும் குறிப்பிடுகிறது. அதனால் கஜவாகுவின் தமிழ்நாட்டு விஐயம் படைஎடுப்பாகத் தெரியவில்லை, அவன் பேச்சு வார்த்தை மூலம் 12000 சிங்களவர்களையும் விடுதலை செய்திருக்கலாம். இலங்கை அரசன் கஜவாகு தான் கண்ணகி வழிபாட்டை இலங்கைக்கு கொண்டு சென்றவன், இலங்கைத் தமிழர்களும், சிங்களவர்களும் இன்றும் கண்ணகியைத் தெய்வமாக வழிபடுகிறோம்.

    Ref:

    The Cholas under King Karikala invaded the country and took away 12,000 prisoners during the reign of his son King Vankanasika Tissa. However his grandson King Gajabahu [112-134 AD] retrieved the national honor by a counter invasion and bringing back not only the captives from Ceylon , but also equal number of men of the Cholas. King Gajabahu ( Ones whose Arms is of the strength of an Elephant) names appears in the Sangam literature of the South India. The next invasion was Pandyan , after the death of King Mahanama[ 419-432 AD] , King Pandu from South India who invaded the country and ruled for twenty seven years , until King Mahasena regained power in 469 AD.

    http://sirimunasiha.wordpress.com/about/the-coins-of-pandyan-and-colas-found-in-srilanka/

    http://tamilnation.co/tamileelam/boundaries/nagarajan.htm

  15. @ சீதாபதி, வரலாற்று அடிப்படையில் பார்க்காமல் மூவேந்தர் கட்டிய தொழிற்சாலை எங்கேன்னு யான் கேக்குரீர்ன்னு கேட்டா சம்மந்தம் இல்லாம காந்தி, நேரு, இந்திராகாந்தின்னு பேசுரீர் உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லயே? இதல்லாம் ஆரம்பத்துலே பாத்து வைத்தியம் பாக்கனுங்க. அப்புறம் ராஜ ராஜன் விட்டு போன பணியை தொடர சொல்ரீர் இலங்கையை வென்று ஆண்டதை சொல்ரீர்னு நெனக்கிரேன் அதை தமிழ் இனம் ஒருநாள் செய்தேதீரும்.

  16. //அந்தக்கால தமிழ் மன்னர்கள் தங்களுக்குள் சகோதர சண்டையிட்டு மக்களை துன்புருத்தியதே அதிகம்!//

    திரு. Ajaathasathru,

    இது தான் சோசலிசமும், பெரியாரிசமும் தமிழர்களுக்கு இழைத்த கொடுமை. இக்கால சோஷலிச, பெரியாரிச, முற்போக்கு சிந்தனைகளின் அடிப்படையில் அக்கால ஆட்சியாளர்களை கணிப்பிடுவது வெறும்முட்டாள்தனம் என்பதை நான் முன்பே விளக்கியுள்ளேன். பெரியாரிச தீவிரவாதிகளைத் தவிர வேறு எந்த நாட்டவரும் அப்படிச் செய்வதில்லை. இதற்கெல்லாம்வேறு நாடுகளுக்குப் போகாமலும், ஏனைய நாடுகளின் வரலாறுகளை அறியாமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    உதாரணமாக புகழ்பெற்ற துருக்கியின் Ottoman Empire எனப்படும் இஸ்லாமிய அரச குடும்பத்தில், தமது உடன்பிறந்த சகோதரர்களை ஒவ்வொருவராகக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றுவது ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்கமாக இருந்து வந்தது. சிங்கள அரசர்கள் சகோதரர்களை மட்டும் அல்ல தமது சொந்த தந்தையைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினார்கள். அது எல்லாம் அக்கால அரசாட்சியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை. யார் வீரமும்ம், விவேகமும் உள்ளவனோ அவன் ஆட்சியைக் கைப்பற்றினான். பல நாட்டு அரசர்களுடன் ஒப்பிடும் போது, சேர. சோழ பாண்டியர்கள் உண்மையில் சத்தியவான்கள். அக்காலத்தில் போர் ஒன்று தான் தமது நாட்டை விரிவுபடுத்தும் ஒரே வழியாக இருந்தது. ஆனால் எந்த துருக்கியரோ அல்லது எந்த முஸ்லீமோ அல்லது எந்த சிங்களவனோ தமது பழைய மன்னர்களைத் தூற்றி, தமது வரலாற்றை இழிவு படுத்துவதில்லை.
    தமிழ்நாட்டில் தான் தமிழர்களின் மன்னர்களை தமிழர்களே இழிவு படுத்தி, தமது தலையில் மண்ணையள்ளிப் போடும் அலங்கோலம் நடக்கிறது.

    இதற்கெல்லாம் காரணம் தமிழ்நாட்டில் தமிழரல்லாதவர்களினதும், திராவிடக் கலப்பினத் தமிழர்களினதும் ஆதிக்கம் அதிகம். அதை விட சிலர், நமது முன்னோர்களைத் தாக்குவதும், இழிவாகப் பேசுவதும் தான் முற்ப்போக்கின் அடையாளம் அல்லது அதுவும் சாதியை ஒழிக்கும் வழி எனத் தவறாக நினைத்ததுக் கொண்டிருக்கின்றனர் போல் தெரிகிறது. சாதியை ஒழிப்பது எங்களின் கைகளில் தான் உண்டே தவிர, பழைய அரசர்களை வசை பாடுவதாலோ அல்லது எமது வரலாற்றை, எமது முன்னோர்களை நாமே தாழ்த்துவதாலோ சாதியை ஒழிக்க முடியாது.

    • //இது தான் சோசலிசமும், பெரியாரிசமும் தமிழர்களுக்கு இழைத்த கொடுமை.//

      Hello viyasan mind your words!

      Only communist people are fighting for Chidambaram Temple issue “on behalf of Tamil people”

      • //Only communist people are fighting for Chidambaram Temple issue “on behalf of Tamil people”//

        உண்மையில் அவர்களின் மனிதவுரிமைப் போராட்டத்தை நான் வரவேற்பது மட்டுமல்ல மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன், அதே வேளையில் அங்கு தான் பிரச்சனையும் இருக்கிறது. அதாவது கடவுள் நம்பிக்கையில்லாத அவர்கள் கோயில் வழிபாடு சம்பந்தமான போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது, எதிர்த் தரப்புக்கு அவர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த, அல்லது அவர்களின் பொதுநல நோக்கைக் களங்கப்படுத்த வாய்ப்பளிக்கிறது. அவர்கள் இந்தப் போராட்டத்தில், தமிழ் நாட்டில் தமிழர்களின் சொத்தது தமிழர்களின் கைகளில் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்ற கொள்கையும், கடவுள் நம்பிக்கையும் கொண்ட தமிழர்களையும் கூட்டுச் சேர்த்துக் கொண்டு இந்தப் போராட்டத்தை தொடர வேண்டும். அத்தகைய கூட்டணி ஏற்பட்டால் இந்தப் போராட்டம் மட்டுமல்ல, இதைப் போன்ற பல கோயில்களை மீட்க வேண்டிய போராட்டங்கள் எல்லாம் நிச்சயமாக வெற்றியடையும்.

        • The question is whether the communist people can fight for temple rights?

          [1] Why not? Temples are public properties. All these temples were built by working class people of Tamil Nadu and using our Tax.So communist people are fighting for the rights of the working class people of Tamil Nadu

          [2]Yes temples are having huge properties and which are the belonging to working class so we want to CONVERT ALL THE TEMPLES INTO SCHOOLS TO EDUCATE OUR PEOPLE IN THEIR MOTHER LANGUAGE.Why are u having pain for this conversion.

          [3] Instead of Vadas if u sing davaram inside the temple then do u think all the problems of working class will be solved? No. Instead of bramin only vellala people will dominate the temple.

          [4] So vedas should not be sung inside the temple because that will enrage Bramins and their scandal …

          [5] So devaram should not be sung in side the temple becacus that will encourage vellana-landlord system

          [6] So Temples should be converted in to schools where kids should learn their science through their mother language Tamil

  17. //தமிழ் மற்றும் தமிழன் மீது அக்கறையை காண்பிக்க, கடந்த கால காட்டு மிராண்டிதனமான செயல்களை நியாயபடுத்த வேண்டாம்!//

    ஐயா, இது எங்கேயோ உதைக்குதே! சேர, சோழ, பாண்டிய ஆட்சிக்குப் பின்னர் வந்த தமிழரல்லாத விஜயநகர ஆட்சியாளர்கள் தமிழர்களுக்குச் செய்த கொடுமைகளைப்ப் பேசாமல், அவர்களைத் தாக்காகாமல், தமிழர்களாகிய மூவேந்தர்களை மட்டும் தாக்குகிறீர்கள். இதற்குக் காரணம், சில குறிப்பிட்ட சாதியினர் தமிழ்நாட்டில் மூவேந்தர்களை தமது சாதியைச் சேர்ந்தவர்கள் என்று சொந்தம் கொண்டாடுவதால், சேர, சோழ, பாண்டியர்களை இழிவு படுத்துவது ஒரு சில ஆதிக்க சாதியினரைப் பழிவாங்கும் செயல் என குழந்தைப் பிள்ளைத்தனமாக நினைப்பது தான் காரணம் என நான் நினைக்கிறேன்.

    தயவு செய்து உங்களின் இக்காலக்குடுமிச் சண்டையில், தமிழர்களின் வரலாற்றை இழிவு படுத்தாதீர்கள். எங்களின் நிகழ்காலமும் நன்றாக இல்லை, எதிர்காலமும் எப்படியிருக்குமோ தெரியாது. வரலாறு ஒன்று தான் உலகத்தமிழர்கள் பெருமைப்படும்படியாக இருக்கிறது. உண்மையில் தமிழரல்லாத விஜயநகர ஆட்சியின் கீழ் தான் சாதிப்பிளவுகள் மட்டுமன்றி, தமிழர் அல்லாத சாதியினர் தமிழ்நாட்டில் நிலங்களைக் கைப்பற்றி தமிழர்களை தாழ்த்தினர். பார்ப்பனர்களின் ,முழுச்சொத்தாக கோயில்கள் மாறின. அப்படியிருக்க விஜய நகர ஆட்சியாளர்களை குற்றம் கூறுவதற்குப் பதிலாக, தமிழ் மூவேந்தர்களை மட்டும் சாடுகிறீர்கள், இதற்குக் காரணம் நீங்களும் தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் திராவிடக்கலப்புத் தமிழர்களில் ஒருவராக இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது? 🙂

    • உண்மைதான்: நிகழ் காலம் நன்றாக இல்லை:
      எதிர்காலம் எப்படி இருக்குமோ?
      நாம் சுதந்திர அடிமை:
      போலிசுவிடம் அனுமதி வாங்கி கூட்டம் போடலாம்:
      எதிர்காலத்தில் அனுமதி வாங்க முடியாது- அனுமதி டெல்லி எருமைகளிடம்
      இருக்கும்!

  18. //உண்மை அதுவல்ல! ராஜராஜசோழனே தெலுங்கன்தான்!/

    ஐயா அஜாதசத்ரு,

    நீங்கள் தான் தெலுங்கன் என்று நான் நினைக்கிறேன். உங்களுக்கு தான் வரலாறு தெரியவில்லை. ராஜ ராஜ சோழனின் தந்தை சுந்தரசோழனின் தாய் தான் ஒரு தெலுங்குப் பெண் அல்லது கலிங்கப் பெண்ணாக இருக்கலாம் என சில கூறுவார். தந்தை தமிழன் தான், ராஜ ராஜ சோழனின் தாய் தமிழ் வேளிர் குலப்பெண்ணாகிய வானவன் மாதேவி.

    ஆங்கில அரசர்கள் பலர் தமது மனைவிமாரை ஆங்கிலேயர் அல்லாத ஜேர்மன், ஸ்பானிஸ், டேனிஸ் போன்றவர்களிடமிருந்து மணமுடித்துக் கொண்டனர். ஆனால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஆங்கிலேயர் தான். பல சிங்கள அரசர்கள் பாண்டிய அரச குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர், உதாரணமாக இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற அரசன் பராக்கிரமபாகுவின் தந்தை, பாண்டிய இளவரசன் மானாபரணன் ஆனால் சிங்களவர்களோ அல்லது எந்த வரலாற்றாசிரியரும் அவனை தமிழன் என்று கூறுவதில்லை. அவன் சிங்கள அரசன் தான். ராஜ ராஜ சோழன் தெலுங்கன் அல்ல அவனது வழிவந்தவர்கள் தமது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள தெலுங்கர்களை மணந்து இறுதியில் தெலுங்குச் சோழர்கள் என்ற அரச குடும்பமும் உருவாகியது, ஆனால் ராஜ ராஜ சோழன் தமிழன், அந்தப் பெருமையை எந்தக் கொம்பனும் தமிழர்களிடமிருந்து தட்டிச் செல்ல முடியாது. 🙂

    • //நீங்கள் தான் தெலுங்கன் என்று நான் நினைக்கிறேன். உங்களுக்கு தான் வரலாறு தெரியவில்லை//

      முதல்பாதி பற்றி: நீங்கள் உங்களை போலவே எல்லோரும் தங்கள் ஜாதி அடிப்படையில் நினைக்கிறார்கள் என்று நம்புவது புரிகிறது! அது தவறு!

      இரண்டாவது பகுதி பற்றி:வரலாறு நீஙகள்நம்புவது பிழையானது!

      ஆய்வாளர்கள்,சேர, சோழ , பாண்டிய மன்னர்களின் தொன்மை பற்றி குறிப்பிடவே மகாபாரதம், புறனானூறு, பட்டினப்பாலை, கலிஙத்துப்பரணி முதலிய இலக்கிய ஆதாரங்களை கூறுவர்!

      மற்றபடி இந்த வம்ச அரசர்கள் எல்லாம் தொடர்ச்சியாக ஒரே குடும்ப பரம்பரையில் வரவில்லை! அதனால், வரலாற்று குறிப்புகளும் இல்லை தொடர்ச்சியாக இல்லை!

      வசதிக்காக, வரலாற்று ஆசிரியர்கள் சஙககால சோழர்கள் என்றும், மத்திய கால சோழர்கள் என்றும், பிற்கால சோழர்கள் என்றும் கூறுவார்கள்-வம்சம் தொடர்ச்சியாக வராததாலும் வெற்றியடைந்தவர்கள் தங்கள் முன்னோரென பிரபலமடைந்த பழைய வம்சத்தையே பெருமையாக குறிப்பிட்டுகொள்வதால்!

      மத்திய கால சோழர்களும் அப்படித்தான்! திருவாலங்காட்டு செப்பெடு ஆதாரம் கூற்றுபடி, அவர்கள் மனு, இஷ்சுவாகு முதலிய வம்சத்தில் தோன்றி, சம்ஸ்க்ரித பெயர்களுடனேயே கூறப்பட்டுள்ளது. கடைசி மூன்று பெயர்கள் மட்டுமே, தமிழ் பெயராக உள்ளது!

      சாதவகனர்களுக்கு பிறகு இந்த இஷ்சுவாகு வம்சத்தினரே இன்றைய ஆந்திராவை ஆண்டனர்!

      திருவாலங்காட்டு செப்பேடு அன்றி இவர்கள் வம்சாவளி கூறும் வேறு ஆதாரஙகள் அறியப்படவில்லை!

      • Genealogy from Chola inscriptions[edit]
        There is no concordance between various Chola inscriptions as far as their ancestry is concerned.
        The genealogy of the Chola family conveyed by the Thiruvalangadu copperplate grant consists of names that are mostly mythological.
        • Manu
        • Ikshvaku
        • Vikukshi
        • Puranjaya
        • Kakutstha
        • Kakshivat
        • Aryaman
        • Analapratapa
        • Vena
        • Prithu
        • Dhundhumara
        • Yuvanasva
        • Mandhatri
        • Muchukunda
        • Valabha
        • Prithulaksha
        • Parthivachudamani
        • Dirghabahu
        • Chandrajit
        • Sankriti
        • Panchapa
        • Satyavrata
        • Rudrajit
        • Sibi
        • Marutta
        • Dushyanta
        • Bharata
        • Cholavarman
        • Rajakesarivarman
        • Parakesarin
        • Chitraratha
        • Chitrasva
        • Chitradhanvan
        • Suraguru (Mrityujit)
        • Chitraratha
        • Vyaghraketu
        • Narendrapati
        • Vasu (Uparichara)
        • Visvajit
        • Perunatkilli
        • Karikala
        • Kochchengannan
        pl see….http://en.wikipedia.org/wiki/Legendary_early_Chola_kings

        • thanks for ur information:
          totally how many copper plates has been found?
          bUt,how many total copper plates has been mentioned?
          why one copper plate is missing?
          who has stolen it?
          Guess ,who could have done it?
          Answer: may be ,one of his RAJAGURU?

      • திரு.அஜாதசத்துரு,

        The genealogy of the Chola family conveyed by the Thiruvalangadu copperplate grant consists of names that are mostly “MYTHOLOGICAL” என்பதையும் நீங்களே பதிவு செய்து விட்டு சோழர்கள் இசவாகு வம்சத்தினர் என்று கூறுவதையும் பார்க்க சிரிப்பு தான் வருகிறது, விக்கிபீடியாவை சான்றாகக் காட்டுவது ஆரோக்கியமான விவாதத்துக்கு அழகல்ல, அங்கு யாரும் எதையும் திரித்து பதிவு செய்யலாம்.

        திருவாலங்காட்டுக் கல்வெட்டில் மட்டுமல்ல, எந்தக் கல்வெட்டிலும் மன்னர்களை கடவுள்களுடனும், வானவர்களுடனும் இணைத்து புகழ்ந்து, அல்லது இதிகாசங்களுடன், இராமாயணத்துடனும், மகாபாரதத்துடனும் தொடர்பு படுத்தி எழுதியிருப்பவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை வரலாற்றாசிரியர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். உதாரணமாக, எம் ஜி. ஆரைக் கூடத் தான் கர்ணனைப் போன்ற வள்ளல் என்று பலர் போற்றியிருக்கிறார்கள். இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் எம், ஜி, ஆர் மகாபாரதத்தில் வரும் கர்ணனின் வழிவந்த வாரிசு என்று யாரவது சொன்னால் எப்படியோ அப்படியானது தான் ராஜ ராஜ சோழனின் முன்னோர்கள் “Mythical King” மனு என்பதும்.

        சோழர் காலக் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளும் கடவுளை வழிபட்டு மங்களம் கூறும் பகுதியுடன் அதாவது மங்களம் உண்டாகட்டும் என்பதை அறிவிக்கும் ஸ்வஸ்திஸ்ரீ என்ற வார்த்தையுடன் தொடங்குகிறது. இரண்டாவதாகப் பிரசஸ்தி அல்லது மெய்க்கீர்த்தி காணப்படுகின்றது. இதில் அரசனின் பல பெயர்கள் அவனது முன்னோர்களைப் பற்றிய புகழுரைகள் என்பவற்றைக் காணலாம். இப்பகுதியில் பல செய்திகள் மிகைபடுத்திக் கூறப்படுவது வழக்கம், திருவாலங்காட்டுச் செப்பேட்டில் அந்தப்பகுதியை, அதாவது mostly “mythological” என்று விக்கிப்பீடியாவில் கூடக் குறிப்பிட்டிருக்கும் போது மனு, இஷ்சுவாகு வம்சத்தினர் தான் ராஜ ராஜ சோழனின் முன்னோர்கள் என்று கூறும் உங்களுக்கு எப்படி விளக்குவது என்று எனக்குத் தெரியவில்லை. 🙂

      • தெலுங்கன்,கன்னடன்,மலையாளி….நாங்கள் எல்லோரும் உங்களுக்கு விரோதிகள்…அப்படியே இருக்கட்டும்..
        .எத்தனை தமிழன் எத்தனை தமிழனுக்கு எதிரி?
        நீங்கள்(தமிழர்கள்) பெரும்பாலோனர் உறக்கம் கலையாமல்
        ஒப்பனை ஆசாமிகளுக்கு பால் அபிசேகம் செய்வதை
        உன்னதமான செயலா?
        தமிழன் விழிப்புடன் இருந்தால்,எவனாவது 1,50,000 பேரை அழிக்க முடியுமா?
        அழித்துவிட்டு,சால்ஜாப்பு சொல்லமுடியுமா

  19. @ K.Senthil Kumaran,

    //hELLO viyasan…, After 500 years from today …singala people will justify his Tamil genocide happend at 2009.//

    I think you got your analogy mixed up. The Sinhala people are justifying the Genocide even now. The Sinhala people will never blame their own even if the Sinhala military annihilate the entire Tamil race in Sri Lanka. Unlike the Tamils, the Sinhala people are very loyal to their race, their rulers, past and present. But the Tamil like you are blaming our ancestors for their actions on the basis of the rules and norms of today’s world. I think that is insane.

    //R U OK?//

    I should ask you this question. 🙂

    //We cannot go back to past and change the history but we can learn lesson from past history and critizize it and create a new world.//

    First of all, we do not live under monarchy now, therefore criticizing what the Kings did during their absolute rule centuries ago won’t change anything in our current situation. It is absurd to criticize the past Monarchs for the problem we have today. We should be criticizing our democratic rulers and their past mistakes and learn from it.

    Ok, Karikal Chola captured hostages from another country and brought them to work in Tamil Nadu, What is there to learn from by criticizing him? Are you saying we should learn a lesson not to take hostages from another country? 🙂

    Let’s agree, Raja Raja Chola brought many Brahmins to the Tamil country. Can we now deport all these Brahmins back to where they came from? No. So criticizing him won’t change anything. He brought many Brahmins at that time because he wanted people to work in the temples he built. There was a shortage of workers in his kingdom. Do you really think Raja Raja knew all these Brahmins would turn against Tamils under Vijaya Nagar rule and back stab them? If he knew that, I don’t think he would have brought all those Brahmins as guest workers to the Tamil country.

    • //First of all, we do not live under monarchy now, therefore criticizing what the Kings did during their absolute rule centuries ago won’t change anything in our current situation. It is absurd to criticize the past Monarchs for the problem we have today. We should be criticizing our democratic rulers and their past mistakes and learn from it.//

      If criticing of kings is wrong And then why are u criticizing vijaya nagara kings for all our problem?

      • I am pointing out the fact that if you really want to criticize our past kings for caste and other social inequalities you should be blaming the Vijayanagar rulers instead off the Chola kings who ruled before them. 🙂

        • Hello jafna vellala-parpana viysan,

          Why are you having contradiction in your statement!!
          In u r first statement you said we can not change the past history and in the next statement u r telling that vijayanagar kings are responsible for all our cast problems!!!

          But in raality…,Chola kings construct the temple and allowed Bramin people for Temmple work and viyayanagara kings also do the same.

          [1]//First of all, we do not live under monarchy now, therefore criticizing what the Kings did during their absolute rule centuries ago won’t change anything in our current situation. It is absurd to criticize the past Monarchs for the problem we have today//

          [2]//I am pointing out the fact that if you really want to criticize our past kings for caste and other social inequalities you should be blaming the Vijayanagar rulers instead off the Chola kings who ruled before them. //

  20. @ K.Senthil Kumaran,

    //A king like chola only supporting bramin culture so that he developed temples and only bramin people are allowed inside the karpa grakam and dalit people are not allowed even inside the temple. why?//

    The Chola kings did not build temples to give employment to the Brahmins. They built temples to avoid going to hell or being born as worms or even worse in the next life. For the same reasons, the European rulers built Europe’s cathedrals.

    We can see evidence in Thevarams, the sacred hymns of Tamils, that, just like in northern India, the Tamils went inside the Santo sanctorum and worshiped the deity during the Bhakthi period. Total exclusion of Tamil and Tamils from their ancestral temples happened only in the Vijayanagar period. Not the Chera, Chola Pandiyas, but those Telugu rulers are to be blamed for the current condition of Tamils in their temples. But these Dravidian activists will not blame them because many of them trace their ancestors to Telugu, invaders and Malayali and Kannada migrants to the Tamil country. 🙂

    • //The Chola kings did not build temples to give employment to the Brahmins. They built temples to avoid going to hell or being born as worms or even worse in the next life. //

      From where did they get this foolish belief?
      Ya only from Hindu vadas!

      These chola foolish kings are influenced by Bramins, vellalar people in and around Tanjor!

      Hi viysan we know all the dark painted history of ur chola kings

  21. Hello viysan

    I have read u r blog.. fully Muslim hatted speech!!

    r u from Jaffna-RSS[LTTE]?

    In history RSS[LTTE] kills Muslims and send them out from jafna!!

    Now you start the game in Tamil nadu!!

    • மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி:
      புலிகள் எப்போது ராச்டீரிய சேவா சங்கத்தில் சேர்ந்தார்கள்?
      பூணூல்கள் இல்லாவிட்டால்,மேற்படி சங்கத்தில் குப்பை கொட்ட முடியாது:
      ஏனேன்றால், சங்கமே குப்பை!

      • Hello sir,

        What is the policy of RSS in India.?[Only Hindus should dominate the country].

        In srilanka the LTTE too want to eliminate thousands of Muslims from their native place at Jaffena and kills thousans of Muslim in Muudr in East part of srilanka.

        So the name of the organizations are different[RSS and LTTE] but they are working for Hindu upraising govenment.

        I can not support these too organizations.

        HINDU UPRAISING MEANS THAT IS ONLY GIVING IMPORTANT TO BRAMIN PEOPLE AND NOT FOR WORKING CLASS.

        SO I can not support these too organizations.

      • Yes sir,

        [1]The RSS is domiated by Bramin people in India.And RSS is suppressing Dalith and Muslims in India

        [2]In LTTE only jaffna vellan Tamil people were dominating and that jaffna people are suppressing democratic students in jaffna university ,dalit people and eliminating Muslims from Jaffna.
        [Ref Danial noval panjamarkal and jaffna university student publications “muritha Panai” and Thiru prabakaran apologis for Muslim killing in Maverar day speech and LTTE press releases]

        For the national freedom of EElam ,it is not only for Jaffna vellaa people. But it should be for all kind of working people like dalith and backward class people of EElam

        In India like Bramins ,Vellaa Tamils are dominating in EElam.But we need a gov both in Tamil nadu and EElam which should be dominated by working class. That is why i can not support both RSS and LTTE

  22. சீதாபதி நாயுடு சார்,
    மூவேந்தர்களை பன்னாடை,மரமண்டைகளென்று இழிவுபடுத்தும் நீங்கள்,

    13ம் நூற்றாண்டு தொடக்கம் 19ம் நூற்றாண்டு வரை தமிழகத்தை ஆண்ட வந்தேறிகளான ஆரியத்தில் மூழ்கி முத்தெடுத்த விஜயநகர அரசர்கள் தொடங்கி கொல்லவாரு நாகமன்,மதுரைநாயக்கன்,திருச்சிநாயக்கன்,தஞசைநாயக்கன்,வேலூர்நாயக்கன்,செஞசிநாயக்கனை என்னவென்று அழைப்பீர்கள?

    பெருவுடையார் கோயில் சுவரில் குறிப்பிடப்பட்டு இருப்பது தேவரடியார் என்ற கோயில் பணிசெய்த (ஆடல்,கவிதை உட்பட கலை வளர்த்த பெண்கள்).இவர்களில் அரச குலப்பெண்களும் அடக்கம்.

    தேவரடியார் பெண்களை கோயிலை விட்டு விரட்டியத்து ஆந்திர,கர்நாடகப் பகுதிகளிலிருந்து பெண்களை அழைத்து வந்து தேவதாசிகளென்று பெயர் கொடுத்து பாலியல் அடிமைகளாக்கி இழிவு படுத்தியது விஜயநகர ஆட்சியாளர்கள்!.இது பின் வந்த எல்லா நாயக்கர் ஆட்சிகலிலும் தொடர்ந்தது!

    • நமீதா,குஷ்பூ,நயனதாரவுக்கும் ஆடல்,பாடல்(ஏன்,விசனம் கூடப் பேசத் தெரியும்)
      இவர்களையும் தேவரடியார் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாமே?
      பெருவுடையார் கோவிலில் மிச்சம் மீதி இடம் இருந்தால்,இவர்களது “சேவையை” செதுக்கி
      வைக்கலாம்(செய் முறை, படங்களோடு)
      நான் சொன்னது என்ன?
      பார்ப்பனர்கள்,தமிழர்களை, பக்தி என்ற போர்வையில்,புரட்டி,புரட்டி எடுத்து
      வாழ்வை அழித்துவிட்டனர்!
      எதுக்கு சப்பைக் கட்டு:நளினமாக சொல்லவேண்டுமென்றால்: அரசு நர்த்தகி…

      • பாருங்க மறுபடியும் சம்பந்தம் இல்லாம பேசுரத.நீங்க இன்னும் டாக்டர் கிட்ட போகல.

  23. //The Chola kings did not build temples to give employment to the Brahmins. //

    True! Kings of those days are as NAIVE as todays’ Tamils! They believed their priests! It is those priests who misled them building so many temples and forget poor people and finally the state became bankrupt, soldiers abondoned, farmers taxed and tortured! The chola kingdom fell due over expenditure and reduced farm output creating FAMINE like situation!

  24. //I have read u r blog.. fully Muslim hatted speech!!
    r u from Jaffna-RSS[LTTE]?
    In history RSS[LTTE] kills Muslims and send them out from jafna!!
    Now you start the game in Tamil nadu!!//

    K.Senthil kumaran,

    There are so many issues that have been discussed on my blog including topics related to Muslims. If you can why don’t you debate those issues instead of blabbering. I am from Jaffna and very proud of it. If you equate the LTTE with the RSS, I think you are an anti-Tamil Paarpan like Subramaniyam Samy who is trying to stir up a fight among the Tamils in this forum.

    The LTTE safely evacuated the Muslims out of Jaffna instead of killing them like they killed the Tamils who worked as spies to the Sri Lankan military. Not just the LTTE, even the Muslim Home guards killed thousands of Tamils. That is the issue the Muslims and the Eelam Tamils must and will sort it out. I don’t think that is relevant to the topics we have been discussing here.

    • Hello jafna vellala-parpana viysan,

      [1] you first read the books written by Thiru Danial like “panjamarkal”. You idiot people suppress the Dalit and other working people inside the Jafna.

      [2] you idiot people only kills the jafna university people during 1980’s and early 1990’s.Will u support this?

      [3] Even LTTE apologists for their Muslim genocide but u idiot guy lie again and again that Muslim are safely sent out from jafna! [ref Maverar day speeches of late Thiru Prabakaran]

      [4] The communist people who are fighting for chadambaram temple issue are not Tamil-ans but communist.They will not give the Temple rights to you vellana people but only to working class people.

      [5] This temple issue fighting is part of the beginning of cultural revaluation of REAL communist people. In our near feature communist Tamil Nadu, we will accept all temples for schools and science edu will be provided in our own native Tamil language. All cast people will be compulsorily allowed inside the temple for education but not for worship. If u accept this then only you can support our fight for temple issue!!!!

      [6]I hope since subramanaya swamy and senthil kumaran are reffering the anciant God of tamils ,so now you are equalizing me with BJP subramanaya samy!!! Good!!! Think about the past early 1990’s. You[ltte] have the edge of winning of jaffna from chandraka gov. Who did stop LTTE to get the jaffna main land? Only BJP government under A.P vajbay which threatening LTTE!!! so you stop that fight that time. If we gained the Jaffna that time deffintley Tamil Nation would be formed under the leader ship of National Leader Thiru Late Prabakanan.

      //If you can why don’t you debate those issues instead of blabbering. I am from Jaffna and very proud of it. If you equate the LTTE with the RSS, I think you are an anti-Tamil Paarpan like Subramaniyam Samy who is trying to stir up a fight among the Tamils in this forum.//

  25. ///Is u r name viysan is a tamil name?///

    Yes, Veda Viyasar was a Dravidian and most likely a Tamil. 🙂

    Ref:

    1. “Vedham’ has root ‘Vei’ / Vae(nedil) means ‘hide’. When there is no hidden thing due to light it is called ‘Vei+el’ –Veyyil, no hide-Sunlight. Vei (Otran-spy who hides and act), Veithal /Veivu–Hide (Koorai veithal), Veyul-Porvai(a blanket used while sleeping)are some of the words from this root. Sanskrit does not have single parallel words from this root! ‘Vetha Viyasar’ is a ‘Dravidian’ as per fifth Vedham( message by 14 th century CE-Sri Villiputthoorar Bharatham) “Mahabarath”s terminology and he organized vedhas during 100-150 CE(AD) keeping in his mind about Tamil’s organized structure.

    2. The bibliographical evidences indicate that the Vedas are written in the Grantha scripts, and according to tradition Veda Vyasa, a Dravidian, compiled and wrote the Vedas. The Grantha script belongs to the southern group of scripts and Veda Vyasa being a Dravidian would certainly have used it. Since the earliest evidence for Grantha is only in the 5th c. AD, the Vedas were written rather late. (Indian Civilization by R.K. Pruthi )

    3. Scholars claim that Aryans came to India without any proper religion or scripture. It was Veda Vyasar, a Dravidian *(Tamil) scholar) who collected their folk songs and compiled and assigned he name Vedas( a Tamil word for scripture. (J.D. Baskara Doss, “Social Justice in Dravidian Religion (University of Madras (November 22, 1995) P9)

  26. கோயில் கூடாது என்றூ சொல்லவில்லை கோயில் கொடியவர்களீன் கூடாரமாகக்கூடாது என்றூ தான் சொல்கிறேன். கலைன்சர் வெறூம் வாய் பேச்சு அறீக்கை மட்டுமே

Leave a Reply to RAMADOSS KOTHANDARAMAN SEETHAPATHI பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க