privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமோடியின் பயங்கரவாத ஆட்சியில் சமூக ஆர்வலர்களுக்கு இடமில்லை!

மோடியின் பயங்கரவாத ஆட்சியில் சமூக ஆர்வலர்களுக்கு இடமில்லை!

-

குஜராத்தின் கிர் காடுகளில் நடக்கும் சட்டவிரோத சுரங்கக் கொள்ளையை அம்பலப்படுத்திய தகவல் அறியும் உரிமைச் சட்ட (RTI) ஆர்வலரான அமித் ஜெத்வா, கடந்த 2010-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி குஜராத் உயர் நீதிமன்றத்திற்கு அருகே சுட்டுக் கொல்லப்பட்டார்.

அமித் ஜெத்வா
அமித் ஜெத்வா

இக்கொலையின் பின்னணியில், ஜுனாகத் தொகுதியின் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரான தினு சோலங்கிக்குத் தொடர்பு இருப்பதாகவும், அவரை மோடி அரசு பாதுகாப்பதாகவும் அமித் ஜெத்வாவின் தந்தை பிகாபா குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், போலீசின் போலி விசாரணையில், சோலங்கிக்கு இதில் எவ்விதத் தொடர்புமில்லை என்ற நற்சான்றிதழ் வழங்கப்பட்டதால், இதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென, குஜராத் உயர் நீதிமன்றத்தில் பிகாபா வழக்கு தொடர்ந்தார்.

இறுதியில், இப்படுகொலையில் சோலங்கிக்கு இருந்த நெருங்கிய உறவு அம்பலமானதால், சி.பி.ஐ, அவரைக் கடந்த மாதம் கைது செய்துள்ளது. மேலும் சோலங்கியின் மருமகன் ஷிவ் சோலாங்கி மற்றும் குறி தவறாமல் சுடுவதில் நிபுணரான சைலேஷ் பாண்டே ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்செய்தி வகை மாதிரிக்கு ஒரு உதாரணம் மட்டுமே. கடந்த ஐந்தாண்டுகளில், தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் தாக்கப்படுவதிலும் கொல்லப்படுவதிலும் நாட்டிலேயே முன்னணியில் திகழும் மாநிலமாக பயங்கரவாத மோடி ஆளும் குஜராத் முன்னேறியிருக்கிறது.

தினு சோலங்கி
தினு சோலங்கி சிபிஐ-ஆல் கைது செய்யப்படுகிறார்.

______________________________________
புதிய ஜனநாயகம், 2013 டிசம்பர்
______________________________________

  1. “இச்செய்தி வகை மாதிரிக்கு ஒரு உதாரணம் மட்டுமே. கடந்த ஐந்தாண்டுகளில், தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் தாக்கப்படுவதிலும் கொல்லப்படுவதிலும் நாட்டிலேயே முன்னணியில் திகழும் மாநிலமாக பயங்கரவாத மோடி ஆளும் குஜராத் முன்னேறியிருக்கிறது.”

    வழக்கமான ஆதாரமற்ற ‘வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ’ வகை குற்றச்சாட்டு. உடனே இதை உண்மை என்று நம்பி இணையத் தோழர்கள் கொதித்தெழுவார்கள்.எழுதுபவருக்கு குற்றத்தை நிரூபிப்பதில் பங்கு இல்லாதவரை இம்மாதிரி ஓட்டைக் குற்றச்சாட்டுகள் தொடரும்.

    கைது செய்யப்பட்டவர் குற்றவாளி என்று நிரூபணமாவதற்குள் வினவின் கோர்ட்டில் தீர்ப்பு வந்தாகிவிட்டது.

    பிகு: வேறு சில பல சிவாக்கள் இருப்பதால் நான் என் பெயரை மணவை சிவா என்று மாற்றிக் கொண்டு விட்டேன்.

    • hello Siva,[manavi seva],

      We can clearly understand when will your justice, truth ,law mind are sleeping and waking up!!

      [1]It is very clear that you are trying to safe guard the name of MODI even though he commit any king of cries against Indians.

      [2]But this essay is only indicating the murder and its follow up by Gujarat police and CBI only.
      //உடனே இதை உண்மை என்று நம்பி இணையத் தோழர்கள் கொதித்தெழுவார்கள்.//

      [3] It is not only the work of comrades and also any democratic people of India to raise voice and hands against this human hunter “Indian Rajabtcha” MODI and his gov.

      with regards,
      K.Senthil kumaran

  2. இது போன்ற செய்திகள் ஊடகங்களால் பிரபலப்படுத்தப் படாமல் தனுசையும், சச்சினையும்,சாருகானையும் பிரபலப்படுத்திக் கொண்டிருக்கும் வ்ரை இது போன்ற கொலைகளும்,கொடுமைகளும் நடந்து கொண்டுதான் இருக்கும் என்று தோன்றுகிறது.கொடுமை கண்டு எவ்வாறு பொங்குவது?நல்லது செய்ய வேண்டும் என்றுநினைப்பவர்களை எல்லாம் தீங்கு செய்பவர்கள் இணைந்து அழிக்கும் போது,நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இணைவதற்கு என்ன வழி என்பது பற்றி எழுதுங்கள்.

    • “இச்செய்தி வகை மாதிரிக்கு ஒரு உதாரணம் மட்டுமே. கடந்த ஐந்தாண்டுகளில், தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் தாக்கப்படுவதிலும் கொல்லப்படுவதிலும் நாட்டிலேயே முன்னணியில் திகழும் மாநிலமாக பயங்கரவாத மோடி ஆளும் குஜராத் முன்னேறியிருக்கிறது.”

      ஏதாவது statistics ? ஏதாவது ஆதாரம் ?

      என்னுடைய கேள்வி மேலே கொடுத்துள்ள மொட்டை statement ஐக் குறித்ததே அல்லாது அமித் ஜெத்வா பற்றியதல்ல.சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் & யாராக இருந்தாலும் குற்றம் நிரூபிக்கப் பட்டால் தண்டிக்கபட வேண்டும்.

      • Hello Siva[allice manavi siva],

        u only typed this yesterday???????????????????????????

        //நான் இனிமேல் மறு மொழிகள் பதிவு செய்வதாக இல்லை. ஆபாசமான, தரக்குறைவான மறுமொழிகளை publish செய்யும் வினவு, என்னுடைய சில முந்தைய மறுமொழிகளை publish செய்யாததற்கான எதிர்ப்பு நடவடிக்கை.//

        But now?
        See the Boommai are same !!!!!!

        • அதற்கப்புறம் என்னுடைய எல்லா மறு மொழிகளும் பதிவு செய்யப் பட்டன.

          என்ன செய்வது ! ஒருவர் தவறைத் திருத்திக் கொண்டால் மன்னிக்க வேண்டியது கடமையாகிறது.

  3. கிரிமினல் குற்றங்களில் ஏதாவது ஒன்றையாவது இந்த கிரிமினல் மோடி விட்டு வைத்திருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. பத்திரிக்கையாளர் ஒருவர் குறிப்பிடும் போது மோடிக்கு எதிரான சில வழக்குகள் நிரூபிக்கப்பட்டாலும் கூட மக்களின் சிந்தனையில் அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்கிறார். சங்கராச்சாரி மற்றும் நித்தியானன்தா போன்ற கிரிமினல்கள் அனுபவித்து வரும் சலுகை இது. எவ்வளவு அம்பலப்பட்டாலும் அவர்கள் பக்தர்கள் ஏற்றுக் கொள்வதை போன்ற பைத்திய மனநிலை இந்த மோடி பக்தர்களுடையது. எனவே இந்த சிந்தனை குறைபாடு நோய் நீங்கும் வரை கடமையாற்றும் பெரும் பொறுப்பில் நாம் உள்ளோம்.

  4. சங்கர ராமன் தனக்குத்தானே வெட்டிக்கொண்டு மாண்டதைப் போல ஜாப்ரி தனக்கு தானே தீ வைத்துக்கொண்டும் கொலைகாரன் மோடிக்கு பயந்து அடைக்கலம் புகுந்த 60 பேரையும் தீ வைத்து கொன்று விட்டதை போல நேற்று அலகாபாத் அநீதி மன்றம் ஜாப்ரியின் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து விட்டது.நீதிக்காக வயது முதிர்ந்த அந்த தாய் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நெடிய படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது பரிதாபமாக உள்ளது.அமித் ஜெத்வாவின் கொலைக்காக பயங்கரவாதி மோடி தண்டிக்கப்படுவான் என்ற நம்பிக்கை இல்லவே இல்லை .

  5. //நான் இனிமேல் மறு மொழிகள் பதிவு செய்வதாக இல்லை. ஆபாசமான, தரக்குறைவான மறுமொழிகளை publish செய்யும் வினவு, என்னுடைய சில முந்தைய மறுமொழிகளை publish செய்யாததற்கான எதிர்ப்பு நடவடிக்கை//
    Dear manavi siva,
    [1] Can you tell the feed backs which contains the abusive content or bad in taste and that are published by vinavu? can u give a single reference for your acquisition?

      • [1]Be specific about abusive content or bad in taste that are published by vinavu? Which essay and in Which paragraph?

        [2] The essays related to “Parpanan-Hindu Religious passisam” will be continued in Vinavu. What will u do now? Continue your comments ? or quit from vinavu?

        [3] If u feel anything is abusive here comment it here

        //Plenty ! In all articles involving srilankan tamil issues, anti hindu/anti brahmin issues etc.//

  6. NMD எனப்படும் `நரேந்திரமோடி மார்க்கெட்டிங்க் டிப்பார்ட்மெண்ட்’டின் பத்துபேர் கொண்ட குழுவிடம் சொல்லி எனக்கு யாரும் வேலை வாங்கி தர முடியுமா…

    நல்ல பேமெண்ட் கொடுக்குறாங்களாம்.. அதான் அப்ரண்டிஸா சேர்ந்து தொழில் கத்துக்கலாம்னு இருக்கேன்..

Leave a Reply to சிவப்பதிவாளன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க