privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விபேராசிரியர்கள் வேலை நீக்கம் - வேல்டெக் கல்லூரியின் அராஜகத்தை முறியடிப்போம்!

பேராசிரியர்கள் வேலை நீக்கம் – வேல்டெக் கல்லூரியின் அராஜகத்தை முறியடிப்போம்!

-

பேராசிரியர்களின் சான்றிதழ்கள் பறிப்பு – வேலைநீக்கம்!
வேல்டெக் பொறியியல் கல்லூரியின் அராஜகத்தை முறியடிப்போம்!

வேல்டெக்தமிழக அரசே!

  • வேலை நீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர்களின் சான்றிதழ்களையும்,
    உரிய இழப்பீட்டையும் உடனே வழங்க நடவடிக்கை எடு!
  • பல்கலைக் கழக மானியக்குழுவின்(UGC) விதிமுறைகளைத் தூக்கியெறிந்துவிட்டு
    பேராசிரியர் நியமனம், மாணவர் சேர்க்கை, தரச்சான்றிதழ் ஆகியவற்றில்
    முறைகேடு செய்யும் வேல்டெக் கல்லூரியை அரசே ஏற்று நடத்து!
  • நிர்வாகிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்!
  • வேல்டெக் நிர்வாகத்தின் சொத்துக்களைப் பறிமுதல் செய்!

அண்ணா பல்கலைக்கழகமே!

  • எம்.இ, பி.எச்.டி பட்டம் பெற்ற பேராசிரியர்களை வகுப்புக்கு அனுப்பாமல்
    முழு நேர அலுவலக ஊழியர்களாக்கி கசக்கிப் பிழிகின்ற,
    வேல்டெக் போன்ற கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்!

பேராசிரியர்களே!

  • எதிர்கால மாணவ சமுதாயத்தை உருவாக்கும் பேராசிரியர்களை
    கொத்தடிமை போல் நடத்துவதைப் பொறுத்துக் கொள்வது அவமானம்!
  • நிரந்தரமான வேலை, பணி பாதுகாப்பு, கௌரவமான பணிச்சூழல்
    ஆகியவற்றை நிலைநாட்ட துணிச்சலுடன் போராடுவதே தன்மானம்!

பொறியியல் கல்லூரி மாணவர்களே!

  • எதிர்கால வாழ்க்கை பாழாகிவிடும் என்று தனியார் கல்லூரிகளின்
    சித்திரவதைகளைப் பொறுத்துக் கொள்வதை நிறுத்துவோம்!
  • தனியார் கல்விக் கொள்ளையர்களின் அடக்குமுறைக்கு எதிராக
    பேராசிரியர்களோடு ஒன்றிணைந்து போராடுவோம்!

பெற்றோர்களே! உழைக்கும் மக்களே!

  • வேல்டெக் கல்லூரியின் அராஜகத்திற்கு எதிராக மாணவர்கள், பேராசிரியர்களோடு
    கரம் சேர்ப்போம்! களமிறங்குவோம்!
  • தரமான கல்வி, உத்தரவாதமான வேலைக்கு வேட்டு வைக்கும்
    கல்வி தனியார்மயக் கொள்கையை ஒழித்துக் கட்டுவோம்!

வேல்டெக் பொறியியல் கல்லூரியின்
அராஜகத்தை முறியடிப்போம்!

பேராசிரியர்களின் சான்றிதழ் பறிப்பு – சட்டவிரோத வேலை நீக்கம்!
சான்றிதழ்களையும், உரிய இழப்பீட்டையும் உடனே வழங்கு!

கண்டன ஆர்ப்பாட்டம்

நிகழ்ச்சி நிரல்

தலைமை : தோழர் நெடுஞ்செழியன், மாநில அமைப்புக் குழு உறுப்பினர், பு.மா.இ.மு தமிழ்நாடு

கண்டன உரை :

தோழர் கணேசன், மாநில அமைப்பாளர், பு.மா.இ.மு, தமிழ்நாடு

தோழர் ம.சி. சுதேஷ்குமார், மாநில இணை செயலாளர், பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு

நேரம் : 28.12.2013, மாலை.4 மணி அண்ணா சிலை,ஆவடி.

இடம்  : பேருந்து நிலையம் அருகில்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தொடர்புக்கு : 9445112675 – 9444834519