privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதமிழ்மக்கள் சொத்தான தில்லைக்கோயில் இனி தீட்சிதன் சொத்தாம் ! - உச்சநீதிமன்றத் தீர்ப்பு...

தமிழ்மக்கள் சொத்தான தில்லைக்கோயில் இனி தீட்சிதன் சொத்தாம் ! – உச்சநீதிமன்றத் தீர்ப்பு !

-

மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
702/5 ஜங்சன் ரோடு,விருத்தாசலம்,கடலூர் மாவட்டம்.
94432 60164, hrpctn@gmail.com
103, ஆர்மேனியன் தெரு,  பாரிமுனை, சென்னை. 98428 12062

பத்திரிகை செய்தி

 சதி வென்றது! நீதி தோற்றது!

உச்சுக் குடுமி மன்றம்
உச்சுக் குடுமி மன்றம்

சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் இறுதி தீர்ப்பின் படி 2009 –ம் ஆண்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட சிதம்பரம் நடராசர் கோவிலை மீண்டும் தீட்சிதர்களின் வசமே ஒப்படைக்கும் வண்ணம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. 40 ஏக்கர் பரப்பளவுள்ள கோயிலும், சுமார் 2,700 ஏக்கர் நிலமும், பல கோடி மதிப்புள்ள நகைகளும் கோயிலின் அர்ச்சகர்களான தீட்சிதர்களின் கட்டுப்பாட்டுக்குப் போய்விட்டது. தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கோயிலை, தீட்சிதப் பார்ப்பனர்களின் தனிச்சொத்தாக்கியிருக்கிறது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.

இப்படி ஒரு அநீதி இழைக்கப்படவிருக்கிறது என்பதை நவம்பர் மாத இறுதியில் இந்த வழக்கின் விசாரணை தொடங்கிய கணத்திலிருந்து நாங்கள் கூறிவந்திருக்கிறோம். மக்கள் தரப்பில் நின்று மக்கள் சொத்தைக் காப்பாற்ற வேண்டிய தமிழக அரசு தீட்சிதர்களின் அரசாகவே செயல்பட்டது. 2009-ல் திமுக ஆட்சியில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி  சிதம்பரம் கோயிலை இந்து அறநிலையத் துறை எடுத்துக் கொண்ட போது, போயஸ் தோட்டத்துக்கே சென்று அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவை சந்தித்த தீட்சிதர்கள் அதன் பலனைப் பெற்று விட்டார்கள்.

ஜெயலலிதா, தீட்சிதர்கள்
தீட்சிதர்களுடனும் சுப்பிரமணியசாமியுடனும் கள்ளக்கூட்டு வைத்துக் கொண்டு செயல்படுகிறது ஜெயலலிதா அரசு.

இவ்வழக்கில் வாதியான தீட்சிதர்களுடனும் சுப்பிரமணியசாமியுடனும் கள்ளக்கூட்டு வைத்துக் கொண்டு செயல்படுகிறது ஜெயலலிதா அரசு என்பதையும், மூத்த வழக்குரைஞர்களை யாரையும் நியமிக்காமல் அறநிலையத்துறை அதிகாரிகள் ஒருவரைக் கூட டில்லிக்கு அனுப்பாமல் இந்த வழக்கில் தீட்சிதர்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தரும் வேலையை ஜெயலலிதா அரசே செய்கிறது என்று அம்பலப்படுத்தி, தில்லைக் கோயிலிலும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தினோம். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகளும் துவக்கம் முதலே ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதையும், அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்ட சுப்பிரமணியசாமியை கண்டிக்காததையும் கூட ஊடகங்கள் மூலம் வெளிக்கொண்டு வந்திருக்கிறோம்.

தீட்சிதர்கள்
பார்ப்பனியத்தின் தமிழின வெறுப்புக்கும், தீண்டாமைக்கும் வரலாற்றுச் சான்றாக இருப்பவர்கள் தீட்சிதர்கள் (உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால் தரிசனம்).

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் சிவனடியார் ஆறுமுகசாமி, வி.எம்.சவுந்தரபாண்டியன் ஆகியோர் மூலம் இவ்வழக்கில் தலையிட்டிருந்த எங்களுடைய வழக்குரைஞர்களை சுமார் பதினைந்து நாட்கள் டில்லியிலேயே தங்கியிருந்து உழைத்தார்கள். மக்கள் மத்தியில் நிதி திரட்டி மூத்த வழக்குரைஞர்களை அமர்த்தி வாதிட்டோம். இருந்த போதிலும், அரசுத் தரப்பே எதிர்தரப்புடன் கை கோர்த்துக் கொள்ளும் போது, நீதிமன்றமும் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்ளும் போது வழக்கில் வெல்வது இயலாத காரியம்.

சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடக்கூடாது என்று தடை விதித்த தீட்சிதர்கள் கோயிலைக் கவர்ந்து கொண்டால், அதைவிட அவமானம் தமிழர்க்கு இல்லை” என்று நாங்கள் இயன்றவழியில் எல்லாம் எச்சரித்தோம். ஆனால், உலகத்தமிழர்களுக்காகவும், ஈழ விடுதலைக்காகவுமே உயிர் தரித்திருப்பதாக கூறிக்கொள்ளும் யாரும் இதற்காகப் போராடவில்லை. முக்கியமாக ஜெயலலிதா அரசை கண்டிக்கவில்லை. மவுனம் சாதித்தன் வாயிலாக “தீட்சிதர்கள், பாரதிய ஜனதா, சு.சாமி, சோ, ஜெயலலிதா கூட்டணி”க்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுத்தவர்கள் இவர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு தமிழ்மக்களைக் கோருகிறோம்.

சுப்பிரமணியசாமி
அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்ட சுப்பிரமணியசாமியை நீதிமன்றம் கண்டிக்கவில்லை.

பார்ப்பனியத்தின் தமிழின வெறுப்புக்கும், தீண்டாமைக்கும் வரலாற்றுச் சான்றாக இருப்பவர்கள் தீட்சிதர்கள். அன்று நால்வர் பாடிய தேவாரத்தை சிதம்பரம் கோயிலுக்குள் முடக்கி வைத்து அழிக்க முனைந்த தீட்சிதர்கள்தான் பத்தாண்டுகளுக்கு முன் திருவாசகம் பாடிய சிவனடியார் ஆறுமுகசாமியை சிற்றம்பல மேடையிலிருந்து அடித்து வீசினார்கள். அன்று நந்தனாரை எரித்துக் கொன்றது மட்டுமல்ல, 1935 -ம் ஆண்டுவரை நடராசர் கருவறைக்கு எதிரே இருந்த நந்தனார் சிலையை அகற்றியவர்களும் அவர்கள்தான். நந்தனார் நுழைந்த தெற்குவாயிலை மறித்து தீண்டாமைச் சுவர் எழுப்பிவைத்துக் கொண்டு, அதை நியாயப்படுத்துபவர்களும் தீண்டாமை வெறி பிடித்த தீட்சிதர்கள்தான்.

தீட்சிதர்கள் பக்தர்களை எப்படி நடத்தினார்கள் என்பது பக்தர்களுக்குத் தெரியும். தீட்சிதர்கள் எந்த சட்டத்தையும், எந்த பக்தரையும் மதித்ததில்லை. பக்தர்களிடம் பணம் பறிப்பது, சாமி நகைகளை களவாடியது, கள்ளக் கையெழுத்துப் போட்டு கோவில் சொத்தை விற்றது என்று தீட்சிதர்கள் செய்த அயோக்கியத்தனங்களைப் பற்றி சக தீட்சிதர்களே அரசுக்குப் புகார் கொடுத்ததன் விளைவாகத்தான் 1982-ல் எம்.ஜி.ஆர் அரசு நிர்வாக அதிகாரியை நியமித்தது. எம்.ஜி.ஆர் அரசு போட்ட ஆணையைத்தான் தற்போது ஜெயலலிதா அரசு குப்பையில் வீசியிருக்கிறது.

ஜெயா-மோடி
பாரதிய ஜனதா- ஜெயலலிதா இடையேயான கள்ள உறவு தமிழகத்தின் கோயில்களை ஆர்.எஸ்.எஸ் கும்பலின் கூடாரங்களாக மாற்றும்.

இது சிதம்பரம் கோயில் பிரச்சினை மட்டுமல்ல, எல்லாக் கோயில் சொத்துக்களையும் பார்ப்பனக் கும்பல் விழுங்குவதற்கான சதியின் தொடக்கம் என்பதை நாங்கள் பலமுறை எச்சரித்து விட்டோம். தற்போது இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழகத்தின் அறநிலையத் துறையையே இல்லாமல் செய்வதற்கு வழக்கு தொடரப் போவதாக சுப்பிரமணியசாமி அறிவித்திருக்கிறார். அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாத மாணவர்களை தெருவில் நிறுத்தி வைத்திருக்கும் ஜெ அரசு இதையும் சாதித்துக் கொடுக்கும். பாரதிய ஜனதா- ஜெயலலிதா இடையேயான கள்ள உறவு தமிழகத்தின் கோயில்களை ஆர்.எஸ்.எஸ் கும்பலின் கூடாரங்களாக மாற்றும்.

இப்படி ஒரு அநீதியான தீர்ப்பு வருமென்பதை நாங்கள் எதிர்பார்த்திருப்பதால் இது எங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. “காடு திருத்தி கழனியாக்கிய உழவனுக்கு நிலத்தை சொந்தமாக்க முடியாது” என்று சொல்லும் அரசியல் சட்டமும் நீதிமன்றமும்தான், “மணியாட்டும் அர்ச்சகனுக்கு கோயில் சொந்தம்” என்று தீர்ப்பளித்திருக்கிறது.  “குற்றம் சாட்டப்பட்டவரே நீதிபதியைத் தெரிவு செய்யலாம்” என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்த  நீதிபதிகள்தான், கோயில் நகைகளைத் திருடிய தீட்சிதர்களுக்கு கோயிலையை சொந்தமாக்கித் தீர்ப்பளித்திருக்கிறார்கள். ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்று வெளிப்படையாகவே சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டியது மட்டும்தான் பாக்கியிருக்கிறது.

சுயநிதிக் கல்விக் கொள்ளையர்களுக்கும், அணு உலைக்கும், பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்கும் ஆதரவாக அடுக்கடுக்காகத் தீர்ப்பளித்து வரும் உச்ச நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியதில் வியப்பில்லை. உச்ச நீதிமன்றம் என்பது நீதிக்காக நாம் போராடும் பல்வேறு களங்களில் ஒன்று; அவ்வளவுதான். அது ஒன்றும் நீதி தேவதையின் உறைவிடம் அல்ல. உச்சுக்குடுமி மன்றம் என்று ஏற்கெனவே அறியப்பட்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் தீட்சிதனைப் போலவே முன்குடுமி போட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், தமிழக அரசு தனிச்சட்டமொன்று இயற்றி சிதம்பரம் கோயிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர முடியும். எல்லா பிரச்சினைகளுக்கும் சட்டமன்றத்தில் “வரலாற்று சிறப்பு மிக்க ஒருமனதான தீர்மானம்” இயற்றும் ஜெயலலிதா அரசு, இதற்கு ஒரு மசோதா கொண்டு வந்து ஒருமனதாக அதை ந்நிறைவேற்றி சட்டமாக்க முடியும். அவ்வாறு சட்டமியற்ற வேண்டும் என்பதற்காகப் போராடுவோம். அது மட்டுமல்ல, பார்ப்பன சாதிவெறி பிடித்த தீட்சிதர்கள், தமிழ் மக்கள் அனைவரையும் இழிவுபடுத்தும் வண்ணம் கோயிலின் தெற்கு வாயிலில் எழுப்பியிருக்கும் தீண்டாமைச் சுவரை அகற்ற வேண்டும். கோயிலில் இருந்து திருட்டுத்தனமாக அகற்றிய நந்தனார் சிலையை மீண்டும் நிறுவவேண்டும் என்பதற்காகவும் போராடுவோம்.

வென்று விட்டோம் என்று தீட்சிதப் பார்ப்பனக் கும்பல் இறுமாப்பு கொள்ள வேண்டாம். பார்ப்பனக் கும்பலுக்கு பாரதிய ஜனதா என்றால், தமிழ் மக்களுக்கு நாங்கள்! இது வரலாற்றுப் பகை என்பதை தமிழ் மக்களுக்கு உணர்த்துவோம். பகை முடிப்போம்!

இவண்

 சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர்.

  1. பொறம்பொக்கு, மொள்ளமாறி, மானங்கெட்டவனுங்க பதவியில் உள்ள நாட்டில இப்டிதான் நியாயம் இருக்கும் போல, சொரனை கெட்ட பக்தர்களுக்கு ரோசம் வந்தா நாமே தீர்ப்பை எழுதிடலாம், எது எப்டி ஆனாலும், எக்கேடு கெட்டாலும் அந்த மணியாட்டல கேட்டுட்டு, பூஜையை போட்டுட்டு வரலாம்னு நெனைக்கிற சனத்த என்ன பன்றது, அதுவரைக்கும் எவனாவது எழுதுரத கேட்டுகினுதான் போவனுமா?? தோழர்களே, வேற வழி என்ன இருக்குன்னு சொல்லுங்க.

  2. 1. Are deekshithars not thamizars? Why is the title separating deekshitars from Tamils?
    2. By calling Supreme court as “Uchikkudumi mandram” are you insulting the institution that also ruled in favour of reservations? If it is against you, is it uchi kudumi mandram?

    Be neutral folks.

  3. சிதம்பரம் கோயிலில் தீட்சிதரர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை கோயிலுக்குள் செல்வதில்லை. காணிக்கை செலுத்த மாட்டோம்,நந்தனை போன்ற வெளியில் இருந்துதான் சாமி கும்பிடுவோம் அல்லது தீட்சிதரர்கள் பூஜை செய்தால் புறக்கணிப்பு செய்வோம் என அரசியல் தளத்தில் போராட தயராவோம்.

    • கோயிலுக்குள் தமிழர்கள் கூட்டம் கூட்டமாக செல்ல வேண்டும் ஆனால் எந்தக் காணிக்கையும் செலுத்தக் கூடாது. அப்படிச் செய்தால், அவர்கள் கட்டாயப்படுத்தி, ஒரு நீண்ட புத்தகத்தில் இவ்வளவு பணம் தருவதாக கையெழுத்திட்டால் தான் தான், உள்ளே போய் தரிசனம் பண்ணலாம் என்று அடாவடித்தனம் பண்ணுவார்கள். அப்படியும் கொடுக்காது விட்டால், முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டு, நிச்சயமாக அடிக்க வருவார்கள். அதிலும் வெளிநாடு என்று தெரிந்தால் விடவேமாட்டார்கள். அது தான் சிதம்பரத்தில் என்னுடைய அனுபவம். 🙁

  4. ஏற்கனவே நடராசன் காலில் உள்ள ஒரு கொலுசைக் காணோம்…
    இனிமேல்,நடராசரையே ஆட்டயைப் போட எம்புட்டு நேரமாகும்?

  5. Kudimis have won and Tamils are dead. Now Kudumis can make secret valve added bonds and take them to invest in western Institution and orchestrate another genocide on Tamils like Eelam.

  6. This judgement makes sense taking into account the current trend and scenario in India where not all Worshiping place is under government.
    My personal opinion – All places of worship should be under govt. When I say “All places of worships” it includes churches, mosques and gurudwaras.
    Without even pushing for uniform civil code and structure in India, its sad that people talk things like paapans, kudumis etc…
    Sadly, these kind of people still help in splitting in the society with the veil of atheism…Anyway, thats how unmatured people get frustrated when they bite the dust….

    • uniform civil code is not a simple matter of just pushing the govt.it requires a change in people’s mind (myhts). it cant be done just like that. also why are you blaming atheist ?? your argument is illogical.uniformity can be brought only when people feel that uniformity…
      if you go in the way of our constitution, logically speaking you can never ever implement the UCC,WHY?? check all the articles for freedom of religion, it would be antithetical to UCC.while promoting diversity, how could you also promote uniformity??

  7. மணியடித்து பூசை செய்யும் தீட்சிதர்களுக்கு( தனி வகையறா????) சொந்தம்-உச்ச நீதிமன்றம்
    —————————————————————————————-
    தீதீர்ர்ப்ப்பூ!!!!!!!!!!!!!!!!
    ———————————
    எனவே,இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக நிலங்களை உழுது, விதைத்து, களை பறித்து, அறுவடை

    செய்து வாழ்ந்துவரும் (தனி வகையறாவான) தலித்துக்களுக்கு அனைத்து விளை நிலங்களையும்

    உரிமையாக்குவோம்.

  8. பக்தர்களிடம் பிச்சை எடுத்து
    பிழைப்பை ஓட்டும் பார்ப்பனர்களே !
    பொதுச் சொத்தை புடுங்கி தின்னும்
    சூடு சொரணை இல்லாத சுப்ரமணியே !
    உழைப்பாளிகளின்
    மலத்தை ஒன்றாய் சேர்த்து
    அள்ளி அள்ளி தின்றாலும்
    அறிவு வராது
    அவர்களின் துணிவு வராது ,,

  9. ஹ்ம்ம்… எல்லாரும் ஜெலுசல் குடிச்சிட்டு தூங்குங்க… இல்லன்னா பயர் சர்வீஸ் தான் கூப்புடனும் 😀

    அப்புறம் முக்கியமான விசயம்…

    கோயிலோட சொத்து 2000 ஏக்கர் இருபது வருசமா அறநிலை துறை கையில தானா இருக்கு.. அப்புறம் எப்படி தீட்சிதர்கள் மேலே குத்தம் சொல்றீங்க

    இதே போல நாட்டு கோட்ட செட்டி கோயில், சௌராஸ்டிரா சாதி கோயில், வெள்ளாலர் கோயில கூட அரசாங்கம் எடுத்துக்கனும்ன்னு போராடுவீங்கள..

    எங்க பிள்ளையார்பட்டி கோயில் முன்னாடி போராட்டம் பன்னுங்க பாக்கலாம் 😀

    • நாட்டுகோட்டை சாதி கோயிலிலும் வெள்ளாளர் கோயிலிலும் தமிழில் தேவாரம் பாட அனுமதி மறுத்தால் அவர்களும் எதிர்க்கப்ப்ட வேண்டியவர்கள் தான். அதை விட நாட்டுக்கோட்டைசெட்டிமார்களினதும், வெள்ளாளர்களினதும் முன்னோர்கள் அவர்களின் கோயில்களைக் கட்டியிருக்கலாம. சிதம்பரம் கோயிலைக் கட்டியது தீட்சிதர்களா? அவர்கள் தான் தாம் எங்கிருந்தோ வந்ததாக ஒப்புக் கொள்கிறார்களே. அப்படியானால் அந்தக் கோயில் அவர்களுக்கு சொந்தமாக முடியுமா? கோயிலை, தேவாலயங்களை அல்லது ஏதாவது சொத்தைப் பராமரிக்க நியமிக்கப்பட்டவர்களின் வாரிசுகள் அந்தச் சொத்துக்களை சொந்தம் கொண்டாடுவது எந்த நாட்டிலும் நடப்பதில்லை. தமிழ்நாட்டில் தான் பார்ப்பனர்கள் இந்த ஆட்டம் ஆடுகிறார்கள். ஏனென்றால் தமிழ்நாட்டு சோற்றுத் தமிழர்கள் மானாட, மயிலாட பார்க்கவும், விஜய் டிவியில் தமது குழந்தைகள் பாடவோ அல்லது ஆடவோ வாய்ப்பும் கிடைத்தால், போதும் என்ற எண்ணத்தில் இருக்கும் வரை, இப்படி தமிழர்களின் பாரம்பரிய சொத்துக்கள் எல்லாம் பறிபோகத்தான் செய்யும்.
      🙁

      • வியாசன் அவர்களே…..

        சிதம்பரம் கோயிலை அரசு எடுப்பதற்கு முன்பாக பலமுறை சென்றுள்ளேன்…… ஒவ்வொரு முறையும் நடராஜர் சன்னிதி முன்பாகவே நின்று சத்தமாகவே[ மாணிக்க வாசகர் அருளிய சிவபுராணம் ] திருமுறை பாடுவேன்…. என்னை எந்த தீட்சிதரும் தடுத்ததில்லை… குறைந்த பட்சம் மெதுவாக பாடுங்கள் என்று கூட யாரும் என்னிடம் கூறியதில்லை…..

        அறநிலைய [அற்ற] துறையின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் பழனி கோயிலில் சாயரட்சை பூஜையின் போது , திரைவிலக்கப்பட்ட போது சத்தமாக அரோகரா சொன்னபோது அங்கிருந்த ஒரு அதிகாரி சத்த‌ம் போடாதீர்கள் என்று சத்தம் போட்டான்….. அவனுக்கு ஹிந்து மதத்தைப்பற்றி என்ன தெரியும்? இறைவனை பாடி துதிப்பதுதானே நம் மரபு?

        பிராமணர்கள் மீதான காழ்ப்பு உங்கள் கண்ணை மறைக்கிறது…….. மற்றபடி கோயில்களைப்பற்றி கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பார்த்துக்கொள்கிறோம்….. சற்றே விலகியிரும் பிள்ளாய்…..

        • //சிதம்பரம் கோயிலை அரசு எடுப்பதற்கு முன்பாக பலமுறை சென்றுள்ளேன்…… ஒவ்வொரு முறையும் நடராஜர் சன்னிதி முன்பாகவே நின்று சத்தமாகவே[ மாணிக்க வாசகர் அருளிய சிவபுராணம் ] திருமுறை பாடுவேன்…..///

          அப்படியானால் எதற்காக ஆறுமுகசுவாமி சிற்றம்பல மேடையில் பாடுவதை மட்டுமே எதிர்த்தார்கள். அதை விட அப்படி தேவாரம் பாடுவது ஆகம விதிகளுக்கு எதிரானது எனக்கூறி அவர்கள் வாதாடியதை நான் காணொளியொன்றில் பாத்திருக்கிறேன். அதை விட, அதையே சுப்பிரமணியம் சுவாமியும் கூறியிருக்கிறார். அதனால் உங்களை மட்டும் பாட விட்டார்கள் என்பது உங்களின் கற்பனையாகக் கூட இருக்கலாம் அடுத்த முறை வீடியோ எடுத்து வந்து, youtube இல் போட்டு நிரூபியுங்கள். 🙂

          //அறநிலைய [அற்ற] துறையின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் பழனி கோயிலில் சாயரட்சை பூஜையின் போது , திரைவிலக்கப்பட்ட போது சத்தமாக அரோகரா சொன்னபோது அங்கிருந்த ஒரு அதிகாரி சத்த‌ம் போடாதீர்கள் என்று சத்தம் போட்டான்…..///

          அறநிலையத் துரையின் கீழுள்ள கோயில்களிலும் பார்ப்பன ஆதிக்கம் தான் தலை விரித்துப் போட்டு ஆடுகிறது. உதாரணமாக திருச்செந்தூரிலும் மதுரையிலும் பார்ப்பனர்கள் கண்முன்னாலேயே காசு பிடுங்குகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்களுக்கு அதிலும் டொலர் இருந்தால் கொடுத்தால் நல்லதாம். 🙂

          //பிராமணர்கள் மீதான காழ்ப்பு உங்கள் கண்ணை மறைக்கிறது…….. ///

          எனது வலைப்பதிவை வாசிக்கும் சிலர் என்னை இந்துத்துவா, பார்ப்பன ஆதரவு என்கிறார்கள் நீங்கள் என்னடாவென்றால் பிராமணர்கள் மீதான காழ்ப்புணர்வு என்கிறீர்கள்.

          //மற்றபடி கோயில்களைப்பற்றி கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பார்த்துக்கொள்கிறோம்…..

          எனக்கு கடவுள் நம்பிக்கயில்லை என்று சிவபெருமான் கனவில் வந்து சொன்னாரா?

          //சற்றே விலகியிரும் பிள்ளாய்….///

          “கோழைப்பார்ப்பான் செய்திடும் பிழையை ஏற்றுக்கொள்ளாதே- அவன்
          இனமறியாதவன் பின்புத்திக்காரன்…”

        • சான்றோன் பகர்வது உண்மையாயின், ஆறுமுகசாமி ஏன் கோர்ட்டுக்கு சென்றார்? அர்த்தமண்டபம் எனப்பபடும் சிற்றம்பல மேடையில், தேவாரம் உட்பட, தமிழ்ப்பாடல்கள், ஓதப்படல் கூடாது என்பது சில சமஸ்கிருத வெறியர்களின் நிலைப்பாடு! அதை எதிர்த்துதான் போராட்டம்! சான்றோன் பாடியது சன்னதிக்கு எதிரே, கீழே, பிரகாரத்தில் நின்று கொண்டு பாடியது என ஊகிக்கிறேன்!

          பலவருடங்களுக்கு முன்னர், பங்களுரில் கன்னட மொழியிலேயே கிருத்துவ தேவாலயங்களில், முதல் வழிபாடு இருக்கவேண்டும் என அன்றைய கர்னாடக அரசு உத்தரவிட்டது! அதுவரை தமிழர்கள் அனுபவித்துவந்த உரிமை மறுக்கபட்டது! கடைசியில் பெரும்பாண்மை உறுப்பினர்களின் முடிவுக்கு விடப்பட்டது!

          இந்து கோவில்களிலும் அந்த முறை பின்பற்றபடல் வேண்டும்! இந்து கோவில்கள் ஆதிக்க சக்தியினரிடமிருந்து விடுபட்டு, மக்கள் மன்றமாக வேண்டும்!

        • //…….. மற்றபடி கோயில்களைப்பற்றி கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பார்த்துக்கொள்கிறோம்….. சற்றே விலகியிரும் பிள்ளாய்…..//

          சுமார்த்த பிராமணர்களுக்கு எந்த கடவுளின் மீது நம்பிக்கை அய்யனே! நாமம் போட்ட யானையை வைத்து பிச்சையெடுக்கும் பாகனுக்கும், கோவிலில் கொள்ளையடிக்கும் பார்ப்பானுக்கும் என்ன வித்தியாசம்? சங்கராச்சாரி எந்த கடவுளுக்கு பயந்தான்? ஒரிஜினல் சங்கராச்சாரி, ஆதி சங்கராச்சாரி இறந்தவன் பெண்டாட்டியை புணர்ந்தான்! அடுத்து வந்தவர்கள் மட்டும் யோக்கியர்களா என்னெ? எத்தனை தேவனாதன்கள்?

    • //எங்க பிள்ளையார்பட்டி கோயில் முன்னாடி போராட்டம் பன்னுங்க பாக்கலாம் //
      பிள்ளையார்பட்டி கோயிலில் தேவாரங்களுக்கும், தமிழர்களுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லாமல் முன்னுரிமை கொடுப்பதை நான் நேரில் பார்த்தேன். பிறகு இவா, எதுக்கு பிள்ளையார் படி கோயில் முன்னால் போராட்டம் பண்ணனும் என்கிறார். 🙂

    • நாட்டுக்கோட்டை செட்டியார்கள் தங்களின் சொந்தப்பணத்தில் கோவில் கட்டினார்கள் அதையே அறநிலையத்துறையே நிர்வகிக்கிரது,தில்லைக்கோவில் சோழமன்னன் கட்டியது அதை தீட்சதன் திருடிக்கொண்டான்

      • ராஜராஜன் சொந்தப் பணத்திலிருந்து கட்டவில்லை, அரசாங்க சார்பாக மக்கள் வரிப்பணத்திலிருந்து கட்டினான். ஆகவே, இது அரசாங்கத்துக்குத் தான் சொந்தம். அரசு சொத்தை தாரை வார்த்துக் கொடுத்தது செல்லாது,

  10. போராட்டம் செய்யட்டும் ஆனால் மசூதி முன்பும் இந்த வகை போராட்டம் நடத்த தீல் இருக்குதா?

    • மசூதியைக் கட்டியது தமிழர்களாக இருந்து அங்கே தமிழ் பேசுவது தடுக்கப்படுமானால் நிச்சயமாக தமிழ்பேசும் அனைவரும் எதிர்ப்பார்கள். தமிழ்பேசும் முஸ்லீம்களின் மசூதிகளில் எல்லாம் தமிழில் தான் பிரசங்கம் நடக்கிறது. எந்தப் பள்ளிவாசலிலும் இந்த இடத்தில் தான் தமிழில் பேசலாம், இந்த இடத்தில் பேசக் கூடாது என்று எந்தக் கட்டுப்படும் கிடையாது. ஆனால் சிற்றம்பல மேடையில் தமிழில் பாடக்கூடாது என தீட்சிதர்கள் அடம்பிடிக்கிறார்கள்.

        • இந்துக் கோயில்களில் மட்டும் எல்லாம் தமிழிலா நடைபெறுகிறது. ஒரு சில வரிகள் தேவாரம் பாடுவதற்கே இவ்வளவு போராட வேண்டியிருக்கிறது. ஆனால் கிறித்தவர்கள் முற்று முழுதாக தமிழில் வழிபாட்டை நடத்துகின்றனர். தமிழ் பேசும் முஸ்லீம்களின் தொழுகையின் பின்னர், பள்ளிவாசலுக்குள்ளேயே நடக்கும் நீண்ட பிரசங்கம் அல்லது சொற்பொழிவு எல்லாமே தமிழில் தான் நடக்கிறது.அங்கு யாருமே, வெளியில் போய் தமிழில் பேசு என்று கூறுவதில்லை. தில்லையில் மட்டும் தான் சிற்றம்பல மேடையை விட்டு இறங்கி நின்று தமிழில் பாடச் சொல்கிறார்கள். அதனால் தான் இந்தப் பிரச்சனையே.

            • தாங்கள் தமிழ் மொழியிலேயே கேள்விகளை பதிவேற்றலாமே,

              இங்கு ஆங்கிலப் புலமை தேவையில்லையே.

          • /தமிழ் பேசும் முஸ்லீம்களின் தொழுகையின் பின்னர், பள்ளிவாசலுக்குள்ளேயே நடக்கும் நீண்ட பிரசங்கம் அல்லது சொற்பொழிவு எல்லாமே தமிழில் தான் நடக்கிறது.அங்கு யாருமே, வெளியில் போய் தமிழில் பேசு என்று கூறுவதில்லை.//

            இங்கு இருக்கிர முஸ்லீம் எத்தனை பெருக்கு அரபி தெரியும். அரபி தெரிந்து இருந்தால் தமிழில் பேசுவார்கலா ?

            • இந்துக்களாகவுள்ள தமிழர்களில் எத்தனை பேருக்கு சம்கிருதம் தெரியும்? பெரும்பாலான, பூசை செய்யும் பார்ப்பனர்களுக்கே சமக்கிருதமும் தெரியாது, அவர்கள் என்ன முணுமுணுக்கிறார்கள் என்பதன் அர்த்தமும் தெரியாது. சமக்கிருத்த்தையும் தமிழில் எழுதித் தான் படிக்கிறார்கள். இந்த லட்சணத்தில், பிழை, பிழையாக மந்திரங்களை உச்சரிப்பதை விட அவற்றைத் தமிழிலிலேயே சரியாக கூறலாம், கும்பிட்டுக் கொண்டிருக்கிற தமிழர்களுக்கும் புரியும், பிழை, பிழையாக, தெரியாத மொழியில் சாமியைத் திட்டும் பாவமும் பார்பனர்களுக்கு வந்து சேராது. 🙂

            • //இங்கு இருக்கிர முஸ்லீம் எத்தனை பெருக்கு அரபி தெரியும். அரபி தெரிந்து இருந்தால் தமிழில் பேசுவார்கலா ?///

              அறிவுக் கொள்ளுந்தே…இங்கு இருக்கிர தமிழர்களுக்கு எத்தனை பேருக்கு சமஸ்கிருதம் தெரியும்????!!!

              வழிபாட்டின் போது பாப்பான் சமஸ்கிருதத்தில் சொல்றானே அது இங்குள்ள மக்களுக்கு எப்படி புரியும் ….. Funny Fellow 🙂 🙂

  11. //“காடு திருத்தி கழனியாக்கிய உழவனுக்கு நிலத்தை சொந்தமாக்க முடியாது” என்று சொல்லும் அரசியல் சட்டமும் நீதிமன்றமும்தான், “மணியாட்டும் அர்ச்சகனுக்கு கோயில் சொந்தம்” என்று தீர்ப்பளித்திருக்கிறது.//

  12. ஸ்ரீரங்கநாதனையும்,
    தில்லைநடராசனையும்,
    பீரங்கிகொண்டு தகர்க்கும்நாள் எந்நாளோ???
    பாவேந்தர் பாரதிதாசன்…

    • //ஸ்ரீரங்கநாதனையும்,தில்லைநடராசனையும்,
      பீரங்கிகொண்டு தகர்க்கும்நாள் எந்நாளோ???
      பாவேந்தர் பாரதிதாசன்…///

      இறைவனை எப்பொழுதும் போற்றத் தேவையில்லை, திட்டவும் முடியும் என்பது தமிழர்களின் பக்தி வரலாற்றில் ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்று. ஆபிரகாமிய மதங்களைப் போன்று, கடவுளுக்குப் பயந்து நடுங்கும் பக்தி வரலாறு தமிழர்களிடம் இல்லை. அது ஒருபுறமிருக்க, சிவகங்கைச் சீமையின் வரலாற்றில் நடைபெற்ற ஒரு சம்பவத்தின் அடிப்படையில், அக்காலத்தில் பேச்சு வழக்கிலிருந்த “பீரங்கி வைத்துப் பிளப்பது” என்னும் அச்சுறுத்துக் கருத்தீட்டைத் தனது கவிதையில் வேடிக்கையாக, காளையர் கோயிலில் கோபுரத்தைப்பிளக்க ஆங்கிலேயர்கள் திட்டம் போட்டத்தைத் தான் அவ்வாறு வேடிக்கையாக குறிப்பிட்டார் பாவேந்தர் பாரதிதாசன் என்கிறார் திரு. இராமகி அவர்கள்.

      பாவேந்தர் பாரதிதாசன் உண்மையாகவே ஸ்ரீரங்கநாதனையும்,தில்லைநடராசனையும்,
      பீரங்கிகொண்டு தர்க்க விரும்பியிருந்தாலும் கூட, அதற்காக தீட்சிதர்களுக்கு தமிழர்களின் பாரம்பரிய கோயிலைத் தாரை வார்க்க வேண்டுமோ?

      “காளையார் கோவிலைக் கைப்பற்றினால் தான், சிவகங்கை கவிழும்; முன்னணி உடையும்; மற்ற போரளிகள் தொய்ந்து போவார்கள்; சென்னைக் கோட்டை உறுதிபெறும், ஆங்கில அரசு நாவலந்தீவில் நிலைக்கும்” என்ற கருத்தில், கர்னல் அக்னியூ காட்டைச் சுற்றி வளைத்தான். 40 மைல் சுற்றளவும், குறுக்கே 11-12 மைல் நீளமும் கொண்ட காட்டின் இடையே அப்பொழுது வயல்களோ, ஊர்களோ இல்லை. காட்டை ஒரு பக்கம் வெட்டத் தொடங்கினால், நிழல் குறைந்து ஆங்கிலேயர் அணி (அதனுள் இந்தியர் மட்டுமில்லை, மலாய்க்காரரும் இருந்தனர்.) வெய்யிலில் நகர முடியாமல் தடைப் பட்டது. காட்டிற்குள் செல்லும் முயற்சி எதுவும் பலிக்கவில்லை. முடிவில், காட்டிக் கொடுத்தவர்களின் உதவியோடு, மருது படை பயன்படுத்திய கமுக்க (secret) வழியை அறிந்து, அதன் வழியே படைநடத்தி, 30/9/1801 இரவு கழிந்து மறுநாள் புலரும் நேரத்தில், காளையார்கோவில் ஊர்வாயிலுக்கு அக்னியூ வந்து சேர்ந்தான்.

      அதற்கு இடையில் ஒற்றர் மூலம் “கோயில் கோபுரத்தைப் பீரங்கி கொண்டு தகர்க்க” அக்னியூ திட்டமிட்டிருப்பதை அறிந்த மருது பாண்டியர் யாரும் நினைக்க முடியாத ஒரு செயலைச் செய்தார்கள். (பீரங்கி வைத்து பிளப்பது என்னும் அச்சுறுத்துக் கருத்தீட்டைக் குமுகத்தில் பலரும் ஆங்கிலேயர் காலத்தில் அறிந்த காரணத்தால், பின்னொரு காலத்தில் பாரதிதாசன் வேடிக்கையாகச் சொல்லுவார்: “சீரங்க நாதனையும், தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளப்பதுவும் எக்காலம்?” ஒரு சிலர் கோவப் படாதீர்கள்!! இங்கே கோபுரம் பிளக்கும் கதை தான் குறியிடப் படுகிறது ;-))”

      http://odathur.blogspot.ca/2008/09/blog-post_21.html

      • சைவ சித்தந்திகள் எதற்காக கடவுள் மறுப்பு கொள்கையாளர்களிடம் சேர்ந்து போராட்டம் செய்ய வேண்டும்?

        தனித்து போராடி இருந்தால் சுமூக்மாக பிரச்னை mudinthu இருக்கும்?

  13. மசூதிகள் மற்றும் சர்சுகள் எல்லாம் அவரவர் மதத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் இந்து கோவில்கள் மட்டும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அது ஏன்? மத சம்பந்தமான அணைத்தையும் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஏன் இதுவரை போராடவில்லை. வெளிநாட்டிலிருந்து கோடிகோடியாக பணம் வருகிறது. அரசுக்கே தெரியவில்லை. அனைத்தும் பாதிரிகளும் முல்லாக்களும் சுருட்டிக் கொள்ளுகிறார்கள். கடைநிலை மக்களுக்கு செல்வதில்லை. இதெல்லாம் உங்களுக்கு தெரியவில்லை போலும். தீட்சிதர்கள் தமிழர்கள் இல்லை என்றால், தெலுங்கு கன்னடம் மலையாளம் சௌராஷ்டிர மற்றும் பிற மொழி பேசும் மக்கள் தமிழ் நாட்டில் அதிகம் இருக்கிறார்கள். அவர்களை ஏன் விமர்ச்சிப்பது இல்லை. மதசார்பற்ற நாட்டில் இந்து மதம் சம்பந்தமான கோவில்களை மட்டும் அரசு எடுத்து நடத்துவது ஏன்? மற்றமத வழிபாட்டு தலங்களையும் அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மதசார்பற்ற நாட்டில் மதம் சம்பந்தமான எதையும் அரசு எடுத்துக்கொள்ள கூடாது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ஏன் இதில் நுழைகிறார்கள். “பீரங்கி வைத்து தகர்த்தவேண்டிய” தில்லை நடராசர் கோவிலுக்காக ஏன் இந்த போராட்டம்?

    நீதிமன்றம் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினால் நல்ல தீர்ப்பு என்று கொண்டாடுவதும் பொதுவாக தீர்ப்பு வழங்கினால் அதனை விமர்ச்சிப்பதும் நீதிமன்றத்தை அவமதிப்பதாகும்.

    கோவில்கள் மற்றும் அதன் வழிபாடு விஷயங்களில் அரசும் “நாத்திக தற்குறி” கூட்டமும் தலையிடாமல் இருக்க வேண்டும். மற்ற மத வழிபாட்டு விசயங்களில் இவர்கள் சென்றால் அவர்கள் நல்ல ஆப்பு வைப்பார்கள் ! இது நன்றாக தெரிந்துதான் அங்கு செலவதில்லை!!

    தமிழ் நாட்டில் தமிழ் தெரிந்தவர்கள் அனைவரும் தமிழர்களே! வேறுபடுத்திப்பார்ப்பது அறியாமையாகும்.

    • திரு. மு.நாட்ராயன்,

      //மசூதிகள் மற்றும் சர்சுகள் எல்லாம் அவரவர் மதத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் இந்து கோவில்கள் மட்டும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அது ஏன்? ///

      இந்து மதத்தைப் போன்ற ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும் தான் குருமார்கள் ஆகலாம், கருவறைக்குள் நுழையலாம், கடவுளைத் தொடலாம் என்று எந்தப் பம்மாத்தும், பாகுபாடுகளும் மசூதிகளும், சர்ச்சுகளிலும் கிடையாது. அதனால் அங்கு சாதியடிப்படையிலான பாகுபாடோ, அல்லது எந்தவிதமான தீண்டாமையோ நடைமுறையில் இல்லை. அதனால், அவை அந்தந்த மதத்தினனரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்னும் போது. சாதாரண கீழ்மட்டத்திலுள்ள முஸ்லீமோ அல்லது கிறித்தவரோ கூட அவர்களின் குருமார்களாக வந்து தேவாலய நிர்வாகச் சபையின் அல்லது வக்பு வாரியங்களில் தமது ஆளுமையைக் கொண்டிருக்க முடியும். ஆனால் இந்துக்களின் பெரிய கோயில்களில் இன்றும் எல்லாத் தமிழர்களும், குருமாராக முடியாது, கருவறைக்குள் நுழையவும் முடியாது. அதனால், இந்துக்கோவில்கள் எல்லாம் இந்துக்களின் கட்டுப்பாட்டில் இருக்க அனுமதித்தால், இந்துக்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் அதாவது பார்ப்பனர் மட்டும், அதிகளவு ஆதிக்கம் கொள்ளக் கூடிய நிலை ஏற்படுகிறது. அதை விட, தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் எண்ணிக்கையையும், அவற்றின் பாரம்பரியம், அவற்றின் விலைமதிப்பற்ற தொன்மையையும் கருத்தில் கொள்ளும் போது அவை அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது தான் சரியானது என்பதை யாவரும் ஒப்புக்கொள்வர்.

      நீங்கள் கூறுவதின் படி பார்த்தால், சிதம்பரம் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இல்லாமல், இந்துக்களின் கைகளில் அதாவது, இந்துக்களும், தீட்சிதர்களும் இணைந்த ஒரு கோயில் நிர்வாகசபையின் கீழ் தானிருக்க வேண்டுமல்லவா? அதுவா உங்களின் கருத்தும்?

      • u ll be killed if ur a muslim and u leave islam,u ll be killed if a sunni muslim adopts shia/ahmediya any other sect.

        Here u have liberties to manage ur own temples and ur own form of worship,they dont have that.

        • you will be killed if you are a dalit and married a dominant caste girls in Hinduism. you cannot convert from one caste to another in Hinduism. other than brahmins cannot be temple priest in Hinduism. where is the liberty?

          • my brother in law is a nadar and we are menons,if u know the history of travancore,u ll understand the animosity between the 2 communities.

            temple priest is the poorest/weakest profession in the country,i dont accept any of your arguments one bit.

            The temples do not need government support,financial or otherwise.

            Islam has an apostasy law which demands a muslim to be killed if he leaves the religion.

            Many Dalits are married to caste hindu girls,not a big deal.

    • நட்டுராயன்….

      மானே, தேனே, பொன்மானே இதெல்லாம் இடையில் போடீங்க சரி… உங்க வழக்கமான “பெட்ரோ டொலர்” பஞ்ச்ச மறந்துடீங்க…:-) 🙂

      அடிக்கடி வந்துபோகவும் “மொக்கைக்கு” ஆட்கள் தேவை…

    • //தமிழ் நாட்டில் தமிழ் தெரிந்தவர்கள் அனைவரும் தமிழர்களே! வேறுபடுத்திப்பார்ப்பது அறியாமையாகும்.// அப்படியாயின், சம்ஸ்கிருத மந்திரங்கள் கற்ற அனைத்து சாதினரும் பிராமணர்களே என்று ஒப்புக்கொள்வீர்களா? அனைத்து கோவில்களிலும் பூசை செய்ய அனுமதிப்பீர்களா? அரசு பதவிகளில் இட ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு, கோயில் பூசை உரிமை ஆக்கிரமிப்பு, அரசு உயர் பதவிகள் ‘திறமை’ காட்டி ஆக்கிரமிப்பு, பார்ப்பன நீதியே தனிதான்! நாடு பார்ப்பன சர்வாதிகாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது!

  14. எந்த கோவிலில் எதை பாட வேண்டும் என்று சில வழிமுறைகள் உள்ளன. அதன்படிதான் பாடவேண்டும். முருகன் கோவிலில் “கந்தசஷ்டி” கவசம் பாடவேண்டும். திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் “சுப்பிரபாதம்” பாடவேண்டும். அதை விடுத்து திருப்பதியில் “கந்தசஷ்டி” கவசம் பாட முடியுமா? யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உங்களைப்போன்ற நாத்திக கூட்டம் தான் இதனை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கிறீர்கள். சருச்சுகளில் முஸ்லீம் மத குர்ரானை ஓதமுடியுமா? மசூதியில் கிருத்துவமத பைப்பிளை ஜெபிக்க முடியுமா? நீங்கள் இதற்கு முயற்சி செய்யுங்கள். நடக்குமா என்று பார்க்கலாம். இவர்களும் தமிழர்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள்!!! கோவில்கள், சருச்சுகள் மற்றும் மசூதிகள் அனைத்தையும் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சியுங்கள். அல்லது அனைத்தையும் அவரவர் மதத்திடம் ஒப்படைத்துவிடட்டும். இந்திய மத சார்பற்ற நாடு. அரசு மத விசயங்களில் தலையிடுவதும் ஆணை பிறப்பிப்பதும் தவறானது.

  15. “தில்லை கோவில் தமிழ் மக்களின் சொத்து”

    நன்றாகத்தான் சொல்லி உள்ளீர்கள். மசூதிகள் மற்றும் சர்சுகள் தமிழ் மக்களின் சொத்து அல்ல என்று மறைமுகமாக சொல்லி உள்ளீர்கள். இதற்கு என் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்!!!
    அவர்கள் தமிழர்கள் அல்ல என்று கூறி உள்ளீர்கள்!!! நன்றி!!!!!

  16. //தீட்சிதர்கள் தமிழர்கள் இல்லை என்றால், தெலுங்கு கன்னடம் மலையாளம் சௌராஷ்டிர மற்றும் பிற மொழி பேசும் மக்கள் தமிழ் நாட்டில் அதிகம் இருக்கிறார்கள். அவர்களை ஏன் விமர்ச்சிப்பது இல்லை. ///

    தெலுங்கு, கன்னடம், மலையாளிகளும் தமிழ்நாட்டு மன்னர்கள், தமிழ்நாட்டு மக்களின் உழைப்பில் கட்டிய கோயில்களை ஆக்கிரமித்துக் கொண்டு, அவை தம்முடையவையென்று வாதாடினால், தமிழ்நாட்டிலுள்ள அந்தக் கோயில்களில் தமிழுக்கு இடமில்லை, என்று தீட்சிதர்கள் போல, திமிரைக் காட்டினால், அவர்களும் எதிர்க்கப்பட வேண்டியவர்களே. அவர்கள் தமது சொந்தப்பணத்தில் கோயில்களைக் கட்டி, அவர்கள் மட்டும் வணங்கினால், அதில் யாரும் தலையிடத் தேவையில்லை. தீட்சிதர்கள் சொந்தமாக ஒரு கோயிலைக் கட்டிக் கொண்டு போய் என்ன கூத்துமடிக்கலாம்.

    வெளிநாடுகளில் உள்ள இந்துக் கோயில்களின் நிர்வாகம் எப்படி நடைபெறவேண்டுமென வெள்ளையர்கள் எவரும் அலட்டிக் கொள்வதில்லை. அதே வேளை தமிழ்கிறித்தவ பாதிரிமார்கள் பலர் கூட பல பாரம்பரிய, வரலாற்றுச் சிறப்புள்ள ஐரோப்பிய தேவாலயங்களில் இன்று குருமார்களாக உள்ளனர். தமிழிலும் பூசைகள் நடைபெறுகின்றன. ஆனால் தீட்சிதர்கள் செய்வது போன்று, ஒண்ட வந்த பிடரி, ஊர்ப்பிடாரியை விரட்டிச்சுதாம் என்ற மாதிரி, ஆங்கிலத்தில் தேவாலயத்தில் பாட முடியாதென்று தமிழ்ப்பாதிரிமார்கள் கூறினால் , வெள்ளைக்கார்கள் நாயைச் சுடுவது போல் சுட்டுத் தள்ளி விடுவார்கள். ஆனால் தமிழ்நாட்டில் என்னடாவென்றால் கோயிலையே தீட்சிதர்களிடம் கையளித்து விட்டு, எருமை மாதிரி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது தானையா வேறுபாடு

    • //மதசார்பற்ற நாட்டில் இந்து மதம் சம்பந்தமான கோவில்களை மட்டும் அரசு எடுத்து நடத்துவது ஏன்? மற்றமத வழிபாட்டு தலங்களையும் அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ///

      அந்த மதத்தைச் சேர்ந்த பெரும்பான்மை மக்கள் அவர்களின் வழிபாட்டுத் தலங்களை அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருமாறு கேட்டால், நிச்சயமாக அரசு அவற்றை எடுத்துக் கொள்ளும். இந்து வழிபாட்டுத் தலங்கள் அரசு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டமைக்கு முதற்காரணமே பார்ப்பனீயமும் அது உருவாக்கிய தீண்டாமையும் தான். தமிழர்கள் அவர்களின் முன்னோர்களின் கோயில்களிலேயே இழிவாக நடத்தப்பட்டமையாலும், பழம்பெரும் கோயில்களின் சொத்துக்கள் சுவாகா பண்ணப் பட்டதாலும் தான் கோயில்கள் திராவிட ஆட்சியாளர்களினால் அரசுடைமயாக்கப்பட்டன.

      /மதசார்பற்ற நாட்டில் மதம் சம்பந்தமான எதையும் அரசு எடுத்துக்கொள்ள கூடாது. ///

      ஒரு மதச்சார்பற்ற நாட்டில், அதுவும் 21வது நூற்றாண்டில் எந்த பொதுச் சொத்தும் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் கட்டுப்பாடில் மட்டும் இருக்க அரசு அனுமதிக்க கூடாது.

      //கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ஏன் இதில் நுழைகிறார்கள். ///

      இது தமிழர்களின் மானப்பிரச்சனை. தில்லைக் கோயில் தமிழர்களின் வரலாற்றுச் சின்னம், தாங்கள் தமிழ்நாட்டுக்கு வெளியில் இருந்து தான் வந்தோம் என தாமே ஒப்புக் கொள்ளும் ஒரு தமிழெதிதிர்ப்புக் குழுவினரிடம் அந்த தமிழர்களின் வரலாற்றுச் சின்னம் ஒப்படைக்கப்படுவதை, மதநம்பிக்கை இல்லாது விட்டாலும் கூட, தனது உடலில் உண்மையான தமிழ் இரத்தம் ஓடுகின்ற எந்த தமிழனும் அனுமதிக்க மாட்டான்.

      வெளிநாடுகளில் வெறும் ஐம்பது, நூறு வருடம் கொண்ட தேவாலயங்களை, அல்லது அவர்களின் அரசர்களில் யாரவது ஒருமுறை Toilet க்குப் போன வீடுகளைக் கூட அரசுடைமையாக்கிப் பாதுகாக்கிறார்கள் ஆனால். பெரும்பான்மையான தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகத் தமிழ்ச் சைவர்களுக்கும் முக்கியமான, தமிழர்களின் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த ஆயிரமாண்டுக்கும் கூடிய வரலாற்றுக் சிறப்பு நிறைந்த கோயிலை, ஒரு பார்ப்பனக்குழுவிடம், அதுவும் அந்தப் பார்ப்பனக் குழு அதே கோயிலில் கொள்ளையடித்ததாக அவர்களே ஆளுக்காள் குற்றஞ்சாட்டிய பின்னரும், அந்தக் கோயில் அவர்களின் ஒப்படைக்கப்படுகிறதென்றால், அது தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமது சொந்த மண்ணிலேயே, அதிகாரமேதுமற்ற, கையாலாகாதவர்களாக வாழ்கின்றனர் என்பதை தான் காட்டுகிறது. 🙁

  17. ///எந்த கோவிலில் எதை பாட வேண்டும் என்று சில வழிமுறைகள் உள்ளன. அதன்படிதான் பாடவேண்டும். முருகன் கோவிலில் “கந்தசஷ்டி” கவசம் பாடவேண்டும். திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் “சுப்பிரபாதம்” பாடவேண்டும்.///

    அதே போல் சிதம்பரத்தில் தேவாரம் பாடாமல் உங்கப்பன் வீட்டிலா பாடுவது.. 🙂

  18. மு.நட் ராயன் கேட்ட கேள்விக்கு அதாவது மசூதியில் சர்ச்சில் மத குருமார்களாக தாழ்த்தப்பட்டவர்களும் வரலாம் என்று சொல்லி ஆகி விட்டது. ஆனால் குரங்கு மாதிரி அடுத்த விடயத்திற்கு தாவுகின்றார் – கந்தர்சஷ்டி கவசம், சுப்புரபாதம் என்று !!!!!!!!. சரி நீங்கள் சொன்ன மந்திரங்களை அரசு சொல்லிக் கொடுத்த பள்ளிகளிலே படித்து மாணவர்கள் தயார் – அவர்களுக்கு வேலை கொடேன். உங்களை மாதிரி ஆத்திக அடிமைக் கூட்டம் கேட்கவில்லை ஆதலால்தான் நாத்திகர்கள் நாங்கள் கேட்கின்றோம். இதற்கு நீங்கள் (ஆத்திகர்கள்) நாக்கைப் பிடிங்கி கொண்டு சாகலாம்

  19. மனித உரிமை பாதுகாப்பு மய்யத்திற்கும் அதன் முன்னணி இயக்கங்களுக்கும் தீட்சிதர்கள் கற்றுக்கொடுத்திருக்கும் ஒரு அதி சிறப்பு வாய்ந்த அனுபவப் பாடமே இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. 1951-யிலேயே இந்தியா எது என்பது நிரூபிக்கப்பட்டாயிற்று, இதே வழக்கில். இந்தியா என்பது இந்து, பார்ப்பனக் கட்டமைப்பு. இங்கே வர்ணாசிரம தர்மத்தின் ஆட்சிதான் நடக்கிறது என்பதை மீண்டும் உணர்த்தி இருக்கிறார்கள். அ.சட்டம் என்பது இதனைப் பாதுகாப்பதற்கான பாதுகாவலன். வேதங்களையும் சாத்திரங்களையும் பிற மத பழக்க வழக்கங்களையும் நடைமுறைகளையும் கொண்டுதான் இந்தச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. உச்ச நீதி மன்றம் உச்சிக்குடுமி மன்றம். இவர்களை வெறும் கேஸ்கட்டுகள் கொண்டு போராட முடியாது. ஆர்ப்பாட்டங்கள் வெறும் வீண். அதோ தெரிகிறது பெரியாரியல் பாதை. உச்சிக்குடுமிகளும் பூணூல்களும் அறுபடட்டும். சட்டங்கள் எரியட்டும். அல்லது எது உங்களுடைய நக்சல்பாரி போராட்டங்கள் என்று காட்டுங்கள். இந்திய சமூக இயங்கியலில் உங்கள் அமைப்பு அதி முக்கியமான காலத்திலும் இடத்திலும் தன்னை அமர்த்திக் கொண்டு என்ன செய்யப்போகிறது? பிற அமைப்புகளைக் குறை சொல்லிப் பயன் இல்லை.

    • தமிழகத்தில் பார்ப்பனியத்தை நேருக்கு நேர் கருத்திலும், களத்திலும் எதிர்கொள்வது பெரியாருக்குப் பின் நக்சல்பாரி புரட்சியாளர்கள் மட்டும்தான். இடையில் தங்களைப் போன்றவர்கள் பெரியாரின் பக்தர்கள் என்று வேண்டுமால் சொல்லிக்கொள்ளலாம். பக்தர்களால் புரட்சிகர அமைப்புகளின் பால் அவநம்பிக்கை கொள்ளலாம், ஆனால் விமர்சிப்பது கடினம்.

      • என்ன செய்யப்போறீங்க என்பது தான் கேள்வி? இந்திய இந்துப் பார்ப்பன சமூகம் உருவாக்கியிருக்கும் முட்டுச்சந்தில் நக்சல்பாரிகள் சிக்கிக் கொண்டார்கள். பெரியாரின் சமூக இயங்கியலைத் தெரிந்து கொண்டவர்களுக்கு இந்தப் போராட்டத்தின் முடிவு முன்கூட்டியே தெரிந்த ஒன்று. இதற்கு இவர் தான் முதல்வராக இருக்க வேண்டும் அவர் தான் இருக்க வேண்டும் என்று இல்லை. இங்கே நீதிமன்றங்கள் என்பன பார்ப்பனர்களின் கோட்டை. அங்கே சென்று முறையிட்ட உங்கள் அப்பாவித்தனத்தைக் கண்டு தான் பரிதாபமாக இருக்கின்றது. “விமர்சனம் போதுமா”. பெரியாருக்கு பக்தர்கள் இருக்க முடியாது.

        • சிங்காரம், பெரியார் கொள்கைவாதி என்று தங்களைக் கூறிக்கொண்டு பெரியானின் பெயரை சும்மா களங்கப்படுத்தாதீர்கள். இங்கே நீதி மன்றங்கள் என்பன பார்ப்பனக் கோட்டை என்பதற்காக அதை எதிர்க்காமல் இருக்கச் சொல்கிறீர்களா? அல்லது மக்களிடம் இந்த அநீதியைப் பற்றி அம்பலப்படுத்தாமல் இருக்க முடியுமா?

          • மக்கள் இறங்கி நடுத்தெரு வந்து தீட்சிதர்களை ஊரை விட்டே அடித்துத் துரத்த மாட்டார்கள். நீங்க தான் ஏதாவது செய்ய வேண்டும். நீதி மன்றங்கள் என்பன பார்ப்பன இந்து இந்தியாவின் வெளிக்கட்டுமானம். பார்ப்பானர்களின் இருப்பு தான் உள்கட்டுமானம். எனவே அவர்களை எதிர்ப்பது தான் – கோவிலை ஆக்கிரமிப்பு செய்து, வாழ வழியில்லாமல் ஊரை விட்டே ஓட்டுவது தான் ஒரே வழி. நக்சல்பாரிகளுக்கு இதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

            • //நீதி மன்றங்கள் என்பன பார்ப்பன இந்து இந்தியாவின் வெளிக்கட்டுமானம். பார்ப்பனர்களின் இருப்புதான் தான் உள்கட்டுமானம்.//
              இந்திய சமூகத்தில் நிலவி வரும் சாதியக் கட்டுமானம்?

              • பார்ப்பானால் தான் சாதி உருவானது. எனவே பார்ப்பானும் சாதியப் பாகுபாடும் உள்கட்டுமானங்கள் தாம். பார்ப்பான் இல்லாமல் போகும் தருணத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சாதியும் அழியத் தொடங்கிவிடும். ஏனென்றால், பார்ப்பான் இல்லாமல் போகும் தருணம் என்பது மிகவும் முற்போக்கான சமூகநிலை; அந்நிலையில் சாத்திரம் அழியும், வேதம் அழியும், வருணம் அழியும், சாதிக்குக் கொடுக்கப்பட்ட மதத்திற்குக் கொடுக்கப்பட்ட சட்ட பாதுகாவல்கள் அழியும். எனவே, தைரியமாக பார்ப்பானை விரட்டுவதில் முயற்சியெடுங்கள். முதலில் பார்ப்பானை தமிழ்நாட்டை விட்டு விரட்டுவோம். பின்பு தமிழ்நாட்டை இந்தியாவை விட்டு ஓட்டுவோம். எல்லாமே விவாதத்திற்கு உட்பட்டவையே.

  20. …நட் ராயன் மறை கழண்டவனா…..?நேர் பதில் பேசாது அங்கு இப்படி…இங்கு இப்படி…என்று சுற்றுவது ஏன்?….தமிழில் பாட மறுப்பது ஏன் என்றால்…முஸ்லிம்…கிறிஸ்தவன்..என்று உளறுவது ஏன் என்று புரியவில்லை?….ஒரு வேளை அவன் சாமிக்கு ஒரு மொழி மட்டும் தான் தெரியும் போல…! பிறகு எப்படி உன் பிரச்சனையை அவன் கேட்பான்…ஒண்ணு பண்ணலாம்…தமிழ் தெரியாத…சமஸ்கிருதம் மட்டும் தெரிந்த உன் சாமி அனைவருக்கும் அதாவது 30,3,00,00,00,000 கோடி …சாமிக்கும் இன்னும் புதுசு புதுசா கிளம்புற அதாவது கார்கில் பிள்ளையார்,விசா வழங்கும் அம்மன்,லேப்டாப் நாயகி,3G பெரிய நாயகி…..இவங்க அனைவருக்கும் பெரியார் திடலில் டியுஷன் வைக்கலாம்….!

  21. //azaan is in tamizh?//

    ஒவ்வொரு நாளும் அரபு மொழியில் ‘அல்லாஹீ அக்பர்'(இறைவனே பெரியவன்) என்று அரபியில் ‘அதான்’ அழைப்பு விடப் படுவதை நாம் அனைவரும் கேட்டிருக்கிறோம். இதை ஏன் தமிழில் மொழி பெயர்த்து சொல்லக் கூடாது? என்று கேட்பதும் நியாயமாகத்தான் படுகிறது. முதலில் இஸ்லாம் என்பது உலகம் தழுவிய மார்க்கம் எனபதை நாம் அறிவோம்.ஆப்ரிக்காவிலிருந்து ஒரு முஸ்லிம் தமிழகத்தை சுற்றிப் பார்க்க வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். தொழுகை நேரம் வந்தவுடன் பள்ளிவாசலில் இருந்து வரும் அழைப்போசையைக் கேட்டவுடன் ‘இங்கு ஒரு பள்ளிவாசல் இருக்கிறது’ என்று தொழுக சென்று விடுவார்.உலக நாடுகளில் அது கம்யூனிஷ நாடாகட்டும், அல்லது சோஷலிஷ நாடாகட்டும் எங்கு சென்றாலும் நீங்கள் கேட்கும் ஒரே ஒலி இந்த பாங்கோசைதான். இதுவும் நமது தேசிய கீதம் போல் உலக ஒருமைப் பாட்டிற்க்குத் தானே யொழிய அரபி மொழி சிறந்த மொழி என்பதற்காக அல்ல.

    • //அல்லாஹீ அக்பர்(இறைவனே பெரியவன்)என்று//—-இப்படியாரும் அர்த்தம் சொல்வதில்லை நண்பரே.அல்லாவே பெரியவன் என்றுதான் பொருள் சொல்கிறார்கள்.இஸ்லாமியர்களுக்கு இந்துக்கள் காபீர்கள்.கிறிஸ்தவர்களுக்கு இந்துக்கள் சாத்தானை வணங்குபவர்கள்.தமிழ்நாட்டில் இந்துத்துவா வளர்வதற்கு இவர்களின் பங்களிப்பு ஈடுஇனை அற்றது.

    • சிலை வழிபாத்ஐ ஒழிப்பதும், வழிப்டுபவரை கொல்வதும் வஹப்பி இஸ்லமீன் நோக்கமா இல்லய?

      விடை கூற வேண்டுகிறேன்.

  22. //நன்றாகத்தான் சொல்லி உள்ளீர்கள். மசூதிகள் மற்றும் சர்சுகள் தமிழ் மக்களின் சொத்து அல்ல என்று மறைமுகமாக சொல்லி உள்ளீர்கள். இதற்கு என் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்!!!
    அவர்கள் தமிழர்கள் அல்ல என்று கூறி உள்ளீர்கள்!!! நன்றி!!!!!//

    மசூதியிலும் சர்ச்சிலும் தமிழகத்தில் வழிபாடு செய்பவர்கள் அனைவரும் பூர்வகுடிகளான தமிழர்களே! உங்களைப் போன்ற பார்பனர்களின் சாதி வெறியை கண்டு சகிக்காமல் மதம் மாறியவர்கள். வினவு போன்றவர்கள் இந்து மதத்திலேயே இருந்து கொண்டு சீர் திருத்தப் பார்க்கிறார்கள். எனக்கு என்னமோ வினவு தரப்பு வெற்றி பெறும் என்று எண்ணத் தேன்றவில்லை. பார்ப்பனத்தின் பிடி இந்து மதத்தில் அவ்வளவு இறுக்கமானது. வினவு தரப்பு வெற்றி பெற்றால் சந்தோஷமே!

  23. //இங்கு இருக்கிர முஸ்லீம் எத்தனை பெருக்கு அரபி தெரியும். அரபி தெரிந்து இருந்தால் தமிழில் பேசுவார்கலா ?//

    10 சதவீதமான உருது முஸ்லிம்கள் தமிழகத்தில் உள்ளனர். மற்ற அனைவரும் தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்களே! அரபு மொழி உலக ஒருமைப்பாட்டுக்காக தொழும் போதும் அதான் கொடுக்கும் போதும் பயன்படுத்துவர். வீட்டில் பேசும் மொழி அழகிய தமிழ் மொழிதான். தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களில் அரபியை சரளமாக பேசத் தெரிந்தவரகள் 2 சதவீதம் கூட தேற மாட்டார். இது தான் நிலை.

    • yeah but everyone tries broken urdu,i lived in UAE for 4 years and i have seen this happen,quite a lot.

      If i talk in tamizh,they ll reply in broken urdu.

      Azaan can be avoided,churches and temples have bells and songs on loudpseakers can be vernacular bhajanai songs or slokam in sanskrit,tamizh vazhipattu padalgalum ullathu.

      aana azaan pondra oru kaatu koochal,thaanga mudiyathathu.

  24. சர்வதேச மாமா,அரசியல் புரோக்கர்,ஈழ தமிழச்சிகளின் தாலி அறுத்த சண்டாளன் ராஜபக்சேவுக்கு குண்டிகழுவும் கோமாளி,பார்ப்பன கொடுங்கோலன்,சு.சாமியின் கோவணத்திற்குள் வேதம் ஓதும் பண்டாரஙகள் மட்டுமல்ல நாட்டாமைகளும் அடக்கம்.மைலாப்பூருக்கும் மை லார்டுக்கும் பூணூல்கொடி உறவு.இந்தியாவில் நீதிதேவதை போதையில் மிதப்பதும் நீதிமன்ற்ங்களில் போஸ்ட் மார்ட்டம் நடப்பதும் அதிசயம் அல்ல.

  25. // கிருத்துவத்திலும் இசுலாத்திலும் யார் வேண்டுமானாலும் குருவாகலாம் //
    ஹிந்துத்துவத்தின் rules கிருத்துவ இசுலாமிய rulesகளோடு ஒப்பிடுவது ஏனோ? ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு குறை மற்றும் நிறை.
    மேலும் பிராமணர்கள் தவிர மற்றவர்கள் பூசாரி ஆகமுடியாது என்பதல்ல. பல கிராமங்களில் பிராமணர் அல்லாத பூசாரிகளும் இருக்கிறார்கள். உடனே சிறு தெய்வ பெரு தெய்வ வேறுபாட்டிற்குள் குதிக்க வேண்டாம். பிராமணர் அல்லாத பூசாரி பூசை செய்யும் கோவிலில் ஒரு பிராமணர் பூஜை செய்ய இயலாது. அவ்வளவு ஏன் – எல்லா பிராமணர்களும் பார்ப்பான கோவில்களில் கருவறையில் நுழைய முடியாது. அங்கு வழிவழியாக பூசை செய்பவரே நுழைய முடியும்.
    வாடா மாநில கோவில்களில் அனைவரும் இறைவனை தொட்டு வழிபடுகிறார்கள்.
    ஆக இது உரிமை சார்ந்த விஷயமே அன்றி வேறல்ல. ஒருவர் பிழைபிற்கு ஆபத்து வரும்போது ஏழும் குமுறல். தொழிட்போட்டி அவ்வளவே.
    இது பல முறை நிறுவப்பட்ட ஒன்று இருந்தும் இதை பிடித்து தொங்குவதேனோ?

    // தமிழ் பேசுவது தடுக்கப்படுமானால் நிச்சயமாக தமிழ்பேசும் அனைவரும் எதிர்ப்பார்கள். //
    சிதம்பரம் கோவிலில் தமிழ் தேவாரம் பாடுவது பிரச்னை அல்ல என்றும் வினவிலேயே நிறுவப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் தமிழ் மட்டுமல்ல சமஸ்க்ரிதம், தெலுங்கு, கன்னடம் ஏன் எம்மொழியாயினும் தடை செய்கிறார்கள் என்பது தெளிவு. ஆனால் அரசியல் செய்வதற்காக தமிழில் (மட்டும்) பாட தடை என்று உணர்ச்சிகளை தூண்டிவிடுவதேனோ?
    பிற சமயங்களில் அதே கோவிலில் அதே அறிஞர் தேவாரம் பாடிக்கொண்டு இருக்கிறாரே. அதற்கு தடயேதுமில்லையே. இருந்தும் இதே கருத்தை திரும்பத்திரும்ப சொல்லுவதேனோ?

    • ///ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு குறை மற்றும் நிறை.///

      இப்படிச் சொல்லி பார்ப்பனர்கள் தமது ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்வதை நியாயப்படுத்துவதிலிருந்தே நீங்கள் யார் என்று தெரிகிறது. 🙂

      //அங்கு வழிவழியாக பூசை செய்பவரே நுழைய முடியும்.///

      ஆலயப்பிரவேசம் தொடக்கம் பார்ப்பனர்கள் கடலைக் கடப்பது முதல் ஆங்கிலேயப்புத்தாண்டுக்கு நடுச்சாமத்திற்குப் பின்னும் நடை திறப்பது வரை வழி, வழியாக வந்த எத்தனையோ வழக்கங்களை இந்துக்கள் மட்டுமல்ல, பார்ப்பனர்களும் மீறி விட்டனர். ஏனைய தொழில்களையும் பார்ப்பனர்கள் பார்த்து அவற்றிலும் பங்கு போட்டுக் கொண்டனர், ஆனால் வழி வழியாக பூசை செய்பதில் மட்டும் தீர்க்கமாக இருப்பதற்குக் காரணம் தீண்டாமையும். பேராசையும் தான் என்பது எல்லோருக்கும் தெரியும். சின்ன\க் கோயில்களில் உள்ள சிவனுக்கு யாரும் பூசை பண்ணலாம், பெரிய கோயில்களில், அதாவது வருமானம் அதிகமுள்ள கோயில்களில் உள்ள சிவனுக்கு வழி வழியாக பூசை செய்யும் பிராமணர் தான் பூசை செய்ய வேண்டுமென்றால், பெரிய கோயில்களிலும், சிறிய கோயில்களிலும் வெவ்வேறு சிவபெருமானா இருக்கிறார்? இதனால் தான் மற்றவர்கள் இந்துக்களைப் பார்த்து ஏளனம் செய்கிறார்கள்

      //வட மாநில கோவில்களில் அனைவரும் இறைவனை தொட்டு வழிபடுகிறார்கள்.///

      வட மாநிலங்களில் மட்டுமல்ல, ஈழத்தில் திருக்கேதீச்சரத்திலும் சிவலிங்கத்துக்கு யாரும் தொட்டு, அபிடேகம் பண்ணலாம். அதுவும் நாயன்மார்களின் பாடல் பெற்ற, பழம்பெரும் சிவன் கோயில் தான். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தான், சாதி வெறி பிடித்த பார்ப்பனர்கள் அவர்களின் “உரிமையைக்” காட்டி, தமிழ்நாட்டில், தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தர்களாகிய தமிழர்களுக்கு தமது முன்னோர்களின் கோயில்களில் உள்ள உரிமையை மறுப்பதை, நீங்களும் நியாயப்படுத்துவதற்கு, உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அவர்களின் தொழிற்போட்டிக்காக தமிழர்கள் தமது உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டுமென்பது என்ன நியாயம்?

      • //குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் தமிழ் மட்டுமல்ல சமஸ்க்ரிதம், தெலுங்கு, கன்னடம் ஏன் எம்மொழியாயினும் தடை செய்கிறார்கள் என்பது தெளிவு. ///

        தமிழ்நாட்டில் சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம் என்பவற்றை எங்கே எப்படி தடை செய்கிறார்கள் என்பது பற்றி தமிழர்களுக்கு கவலை கிடையாது. தமிழ்நாட்டில், தமிழர்களின் முன்னோர்களால், தமிழ்நாட்டு மன்னர்களால், தமிழர்களின் உழைப்பில், கட்டப்பட்ட கோயிலில், அதுவும் பெரும்பான்மை தமிழர்களான தமிழ்ச்சைவர்களுக்கு மட்டுமல்ல, உலகமெல்லாம் பரந்து வாழும் தமிழ்ச் சைவர்கள் அனைவரும் கோயில்,என்று போற்றும் தில்லையில், மாணிக்கவாசகர் திருவாசகத்தைப் பாட, அந்த ஆடவல்லானே தனது கைப்பட எழுதியதாக, தமிழர்கள் நம்பும் தில்லையில், ராஜ ராஜ சோழன் தேவார திருமுறைகளை மீட்டு, ஆடவல்லானின் [பாதங்களின் சமர்பித்த அதே தில்லைச் சிற்றம்பலத்தில், அதே தமிழ்த் தேவாரங்களை அங்கு பாட முடியாது, கீழே நின்று தான் பாடலாம், குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தான் பாடலாம், என்று தமிழுக்குக் கட்டுப்பாடு விதிக்க, இந்த தீட்சிதன்களுக்கு யார் உரிமை கொடுத்தார்கள் என்பது தான் கேள்வி, இது தமிழர்களின் உரிமைப் பிரச்சனை மட்டுமல்ல, மானப்பிரச்சனை என்பதால் தான் மதநம்பிக்கையில்லாத தமிழர்களே, எனக்கென்ன போச்சு என்றிருக்காமல், இந்தப் போராட்டத்தில் முன்னணியில் நிற்கிறார்கள், மதநம்பிக்கையுள்ள என்னைப் போன்ற உலகத்தமிழர்களும் அவர்களுக்கு ஆதரவளிகின்றார்கள். எப்படியாவது தமிழ்நாட்டுத் தமிழர்கள் தில்லைக் கோயிலை தீட்சிதர்களிடமிருந்து மீட்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்குண்டு.

  26. சட்டவாதமா ? புரச்சிகர நடவடிக்கைகளா ? என்று முடிவு செய்ய வேண்டிய தருணம் இது !

  27. முஸ்லீம்களும் கிருத்துவர்களும் உலகளாவிய தங்களது ஆதிக்கத்தை இந்தியாவில் நிருவுவதற்க்கத்தான் அந்தந்த நாடுகளுக்கேர்ப்ப அந்தந்த மொழிகளில் தங்களது பிரச்சாரங்களை வழிபாட்டு தளங்களில் செய்கிறார்கள். முஸ்லீம்கள் அழகான தமிழில் வீட்டில் பேசுவதாக சொல்லுவது ஏமாற்றும் செயல். அவர்களின் பெயர்கள் எல்லாம் என்ன அழகான தமிழ் மொழியிலா இருக்கிறது!! ஏன் பெயர்களை எல்லாம் தமிழ் மொழியில் வைத்துக்கொண்டு தங்களது அடையாளங்களை தமிழர் என்று நிருப்பிக்கலாமே!

    அரபு மொழிக்கென்று தனி பள்ளிகள் வைத்து நடத்துகிறார்களே அது ஏன்? அந்த பள்ளிகளில் அரபும் உருது மட்டுமே சொல்லி கொடுக்கப்படுகிறது. அதற்கும் நமது “மதசார்பற்ற அரசுகள்” இனாம் வழங்குறது இவர்களுக்கு தெரியாது போலும்! வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்காக “அல்லாஹ் அக்பர்” என்று கூவப்படுகிரதாம். என்னே விந்தை. அதற்காக அல்ல!! இந்த இடத்தில் பயங்கரவாதம் கற்றுத்தரப்படுகிறது நீங்களும் வந்து உங்கள் நாட்டில் உள்ள பயங்கரவாதத்தை இங்கு உள்ளவர்களுக்கும் சொல்லித்தாருங்கள் என்று அழைக்கிறார்கள். ஒரியாண்டல் பள்ளிகளில் தமிழில் பாடமா சொல்லிகொடுக்கிறார்கள். இல்லையே. சிறிது சிறிதாக தங்கள் மத வெறியர்களை அழைப்பதற்கும், பயங்கர வாதத்தை பரப்புவதற்கும் இந்த பள்ளிகள் பயன்படுகின்றன. அதுதான் உண்மை.

    கிருத்துவர்கள் தங்கள் வழிபாடு தளங்களில் அனைத்து சாதியினரையும் பாதிரிகளாக நியமிக்கிறார்கலாம்!! இது ஒரு அப்பட்டமான பொய்! கிருத்துவ வன்னியர், நாடார் வெள்ளாளர்கள் மற்றும் பிற உயர் ஜாதியினர் அதிகம் உள்ள பகுதிகளில் ஒரு தலித்தை பாதிரிகளாக நியமிக்க முடியாது. சருச்சுக்குள்ளேயே வெட்டு குத்து விழும். பல இடங்களில் இது நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்காக தலித்துகள் பலமுறை போராடியும் உள்ளரார்கள். செயலுக்கு வரவில்லை.

    கடவுளை மாற்றிக்கொண்ட அவர்கள் ஏன் ஜாதியை தன்னுடனே கொண்டு செல்கிறார்கள்? இதனையும் இங்கேயே விட்டு ஜாதி இல்லாத மதமாக ஆக்கலாமே! இப்போது கிருத்துவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால் தமிழைப் பற்றி பேசுகிறார்கள். அதே சமயம் கிருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமானால் அனைத்து சர்ச்சுகளிலும் தமிழை எடுத்துவிடுவார்கள். அதற்க்கு உதாரணமாக நாகாலாந்து மற்றும் மேகலாய மாநிலங்களை சொல்லலாம். அந்த மாநிலங்களில் முன்பு தாய் மொழி வேறு . கிருத்துவர்கள் பெரும்பான்மையானது அதனை ஒழித்துவிட்டு ஆங்கிலத்தை அங்கு திணித்து உள்ளார்கள். அந்த மாநில மக்களை இப்போது போய் கேட்டால் எங்களது தாய் மொழி ஆங்கிலம் என்றுதான் கூறுவார்கள். இதுதான் நடந்து வருகிறது. ஒரு காலத்தில் தமிழ் நாட்டிலும் இந்த நிலைதான் ஏற்ப்படும். பாதிரியார்கள் சொல்வதை அப்படியே எற்பார்கள். இதுதான் எதார்த்த நிலை.

    தில்லையில் கந்தசஷ்ட்டி பாட நீங்கள் ஏன் சொல்லவில்லை. தமிழர்கள் கோவிலை கட்டினார்கள்!!!! அந்த கோவிலுக்கு யாரை தீட்சிதர்களாக நியமித்தார்கள்? தமிழர்கள் தான் அதனையும் நியமித்து உள்ளார்கள். அது வழி தோன்றலாக உள்ளது. அணைத்து பிராமினர்களுக்கும் இந்த உரிமை கிடையாது.
    சில தனியார் கோவில்களில் பிராமணர்கள் பூஜை செய்கிறார்கள். அதை நியமித்தது அந்த கோவிலின் நிர்வாகஸ்தர்கள் தான். பிராமிணர்கள் தங்களைத்தானே நியமித்துக்கொள்ள வில்லை.

    • திரு. மு.நாட்ராயன்,

      //முஸ்லீம்களும் கிருத்துவர்களும் உலகளாவிய தங்களது ஆதிக்கத்தை இந்தியாவில் நிருவுவதற்க்கத்தான் அந்தந்த நாடுகளுக்கேர்ப்ப அந்தந்த மொழிகளில் தங்களது பிரச்சாரங்களை வழிபாட்டு தளங்களில் செய்கிறார்கள். ///

      எந்த மதக்குழுவினரும் தமது மதக்கொள்கைகளை மற்றவர்களுக்கு விளங்கும் மொழியில் எடுத்துக் கூறலாம். அது எல்லா சனநாயக நாட்டிலும் அரசியலமைபில் உறுதிப்படுத்தப்பட்ட கருத்துச் சுதந்திரமாகும். ஆனால் குறிப்பிட்ட ஒரு சாதியினர் மட்டும், தமிழர்களுக்குப் புரியாத மொழியில் தான், தமிழர்கள் தமது கோயில்களில் வழிபாடு செய்ய வேண்டுமென்பது எந்த விதத்தில் நியாயம்? தமிழர்களின் தாய்மொழியில், தமது முன்னோர்களின் கோயில்களில், அதுவும் தமிழ்நாட்டில் வழிபாடு செய்ய சிலர் மறுப்பதாலும், தமிழர்களின் கோயிலில், தமிழ் வேதமாகிய தேவாரங்களைப் தமிழில் பாடுவதற்கு, எங்கிருந்தோ வந்த ஒரு சாதிக்குழுவினர், கட்டுப்பாடுகள் விதித்ததாலும் தான், நான் உங்களுக்கு இங்கே பதிலெழுத வேண்டிய தேவை ஏற்பட்டதே தவிர, முஸ்லீம்களாலும், கிறித்தவர்களாலும் இந்தப் பிரச்சனை ஏற்படவில்லை. அப்படியிருக்க எதற்காக முஸ்லீம்களையும், கிறித்தவர்களையும் பற்றிப் பேசுகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை.

      //முஸ்லீம்கள் அழகான தமிழில் வீட்டில் பேசுவதாக சொல்லுவது ஏமாற்றும் செயல்///

      நீங்கள் எங்கிருக்கிறீர்களோ எனக்குத் தெரியாது, இலங்கை முஸ்லீம்கள் அவர்களது மொழிவழிச் சகோதர்களாகிய தமிழர்களின் முதுகில் குத்தி விட்டார்கள் என்ற மனத்தாபம் எனக்கிருந்தாலும் கூட, தமிழ்நாட்டிலுள்ள தமிழ் முஸ்லீம்களும், இலங்கை முஸ்லீம்களும் தமிழில் தான் வீட்டில் பேசுகிறார்கள் என்ற உண்மை எனக்குத் தெரியும். எனக்கும் நிறைய முஸ்லீம் நண்பர்கள் உண்டு.

      //அவர்களின் பெயர்கள் எல்லாம் என்ன அழகான தமிழ் மொழியிலா இருக்கிறது!! ஏன் பெயர்களை எல்லாம் தமிழ் மொழியில் வைத்துக்கொண்டு தங்களது அடையாளங்களை தமிழர் என்று நிருப்பிக்கலாமே!///

      பெரும்பாலான இந்துக்களின் பெயர்கள் கூட தமிழில் இல்லையே சமக்கிகிருத்தில் அல்லவா இருக்கிறது அப்படியானால் அவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா?

      ///அரபு மொழிக்கென்று தனி பள்ளிகள் வைத்து நடத்துகிறார்களே அது ஏன்?///

      பிராமணக் குழந்தைகளுக்கென்று தனியான சமக்கிருதப்பள்ளிகள்- வேதபாடசாலைகளை நடத்துகிறார்களே அது ஏன்? அரபு பாடசாலைகளிலாவது தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதில்லை.

      //அந்த பள்ளிகளில் அரபும் உருது மட்டுமே சொல்லி கொடுக்கப்படுகிறது. அதற்கும் நமது “மதசார்பற்ற அரசுகள்” இனாம் வழங்குறது இவர்களுக்கு தெரியாது போலும்! //

      வேதபாடசாலைகள் அமைத்து பிராமணக் குழந்தைகளுக்கு சமக்கிருதம் கற்பிக்கவும், தீண்டாமையை வளர்க்கவும் கூடத் தான் தமிழர்களின் வரிப்பணம் வீணாக்கப்படுகிறது.

      //இந்த இடத்தில் பயங்கரவாதம் கற்றுத்தரப்படுகிறது நீங்களும் வந்து உங்கள் நாட்டில் உள்ள பயங்கரவாதத்தை இங்கு உள்ளவர்களுக்கும் சொல்லித்தாருங்கள் என்று அழைக்கிறார்கள்.///

      நீங்கள் இப்படிச் சொன்னால், பிராமணர்களின் வேதபாடசாலைகளில் சமக்கிரதத்தை மட்டும் தான் கற்பிக்கிறார்கள். அங்கு தான் பார்ப்பனக் குழந்தைகளுக்கு தீண்டாமையும், மற்ற இன, மத மக்களை வெறுக்கவும் போதிக்கப்படுகிறது என, முஸ்லீம்கள் உங்களுக்குப் பதிலளிக்க எவ்வளவு நேரமாகும் என்பதை சிந்தித்துப் பார்த்தீர்களா? 🙂

      //கிருத்துவர்கள் தங்கள் வழிபாடு தளங்களில் அனைத்து சாதியினரையும் பாதிரிகளாக நியமிக்கிறார்கலாம்!! ///

      இந்து மதத்துடன் ஒப்பிடும் போது கிறித்தவத்திலும், இஸ்லாத்திலும் எல்லோரும் தங்கு தடையின்றி குருமாராகலாம்,

      //இது ஒரு அப்பட்டமான பொய்! கிருத்துவ வன்னியர், நாடார் வெள்ளாளர்கள் மற்றும் பிற உயர் ஜாதியினர் அதிகம் உள்ள பகுதிகளில் ஒரு தலித்தை பாதிரிகளாக நியமிக்க முடியாது. ///

      ஆனால் ஒரு தலித் பாதிரியாராக முடியும் பாப்பாண்டவரின் பார்வையில் அவர் ஒரு தலித் பாதிரியார் அல்ல வெறும் கத்தோலிக்க பாதிரியார் தான். உள்ளூர் மட்டத்திலுள்ள சாதிப்பாகுபாட்டுக்குக் காரணம், பார்ப்பனீயம் அவர்களின் பூர்வீக இந்து மதத்தின் வழியாக அவர்களுக்கு அறிமுகப்படுத்திய சாதி. அதற்கு கிறித்தவத்தை குற்றம் கூற முடியாது. அதற்கு அவர்கள் தமது இந்து முன்னோர்களைத் தான் திட்ட வேண்டும்.

      //இதனையும் இங்கேயே விட்டு ஜாதி இல்லாத மதமாக ஆக்கலாமே! ///

      கிறித்தவத்தில் பிறப்பின் அடிப்படையிலான ஜாதி இல்லை. தமிழர்கள் தமது ஜாதியை விட முடியாமல் இருப்பதற்கு எப்படி கிறித்தவம் பொறுப்பேற்க முடியும். அவர்கள் அதை அறிமுகப்படுத்தவில்லையே.

      //. ஒரு காலத்தில் தமிழ் நாட்டிலும் இந்த நிலைதான் ஏற்ப்படும். பாதிரியார்கள் சொல்வதை அப்படியே எற்பார்கள். இதுதான் எதார்த்த நிலை.///

      ஈழத்தில் தமிழுக்காக, தமிழீழ விடுதலைக்காக பாதிரிமார்கள் செய்த தியாகம், உயிர்த்தியாகம் உட்பட, அளப்பரியது. அப்படி தமிழ்ப் பாதிரிமார்கள் தமிழுக்காக உயிரைத் தியாகம் செய்த போது, இந்துக் கோயில்கள் சிங்கள இராணுவத்தால், கொள்ளையடிக்கப்பட்டு, அழிக்கப்பட்ட போது, ஈழத்து இந்துக்கள் கொல்லப்பட்ட போது, இந்துக் குருமார்கள், இலங்கையிலும, தமிழ்நாட்டிலும் சிங்களத் தலைவர்களுக்கு பாதபூசை செய்து, அவர்களை வரவேற்று பசப்பு வார்த்தை பேசிக் கொண்டிருந்தனர் என்பதையும் மறந்து விடக் கூடாது.

      //தில்லையில் கந்தசஷ்ட்டி பாட நீங்கள் ஏன் சொல்லவில்லை.!!!///

      தில்லையில் எதற்காக கந்தசஸ்டி பாடவேண்டும், அதற்கு தான் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குன்றிலும் முருகன் ஆடிக் கொண்டிருக்கிறானோ. தில்லையில் ஆடவல்லானுக்கு முன்னால் பாட வேண்டியதது அவனுக்குப் பிடித்த தேவார திருமுறைகள் தான் என்பது உங்களுக்குத் தெரியாதா?. அதைத் தான் ஆறுமுகசுவாமி தனது தள்ளாத வயதிலும், தீட்சிதர்களின் எதிர்ப்பின் மத்தியிலும் செய்து அவர்களிடம் அடி வாங்கினார்.

      //தமிழர்கள் கோவிலை கட்டினார்கள்! அந்த கோவிலுக்கு யாரை தீட்சிதர்களாக நியமித்தார்கள்? தமிழர்கள் தான் அதனையும் நியமித்து உள்ளார்கள்.///

      தமிழர்கள் தான் கோயிலைக் கட்டினார்கள் தீட்சிதர்களல்ல, என்ற உண்மையை ஒப்புக் கொண்டமைக்கு நன்றி. நீங்கள் உங்களின் வீட்டைக் கட்டி, அதைப் பாரமரிக்க நியமிக்கும் வேலைக்காரர்கல் அல்லது அந்த வேலைக்காரர்களின் வாரிசுகள் உங்களின் வாரிசுகளிடம் வீட்டில் உரிமை கோரி வாதாடுவதை நீங்கள் விரும்புவீர்களா? அப்படி நடக்குமென்று தெரிந்தால். நீங்கள் அந்த வேலைக்காரர்களை வேலைக்கு அம்ர்த்துவீர்களா?

      //அது வழி தோன்றலாக உள்ளது. அணைத்து பிராமினர்களுக்கும் இந்த உரிமை கிடையாது.///

      தீட்சிதர்களின் பூசை செய்யும் உரிமையைப் பறிக்க வேண்டுமென்று எந்த தமிழனும் கூறவில்லை. தமிழர்களின் பாரம்பரிய, பழமை வாய்ந்த கோயில் தமிழக அரசின் நிர்வாகத்தின் கீழிருக்க வேண்டுமே தவிர, ஒரு குறிப்பிட்ட சாதியினருக்குச் சொந்தமாக, அவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்க கூடாதென்பது தான் தமிழர்களின் வாதம்.

    • //… அந்த கோவிலுக்கு யாரை தீட்சிதர்களாக நியமித்தார்கள்? தமிழர்கள் தான் அதனையும் நியமித்து உள்ளார்கள். அது வழி தோன்றலாக உள்ளது. அணைத்து பிராமினர்களுக்கும் இந்த உரிமை கிடையாது.
      சில தனியார் கோவில்களில் பிராமணர்கள் பூஜை செய்கிறார்கள். அதை நியமித்தது அந்த கோவிலின் நிர்வாகஸ்தர்கள் தான். பிராமிணர்கள் தங்களைத்தானே நியமித்துக்கொள்ள வில்லை.//

      தீட்ஷிதர்களை நியமித்த தமிழர்களுக்கு அவர்களை நீக்க உரிமை கிடையாதா? அவர்களை பூசை செய்யும் ஊழியர்களாக நியமித்தார்களா அல்லது நிரந்தர உரிமை சாசனம் எழிதிக் கொடுத்திருக்கிரார்களா? டாடா காருக்காகநில ஏழைகளின் நிலத்தை அரசு ஆகிரமிப்பு செய்யலாம், ஆனால் பொது கோவிலை அரசு ஏற்று நடத்த கூடாதா? பார்ப்பன நியாயம் ஏழைக்கு ஒருநீதி, பார்ப்பானுக்கு ஒருநீதி சொல்கிறதா?

  28. ///பெரும்பாலான இந்துக்களின் பெயர்கள் கூட தமிழில் இல்லையே சமக்கிகிருத்தில் அல்லவா இருக்கிறது அப்படியானால் அவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா?///

    இவர்கள் எல்லாம் தமிழர்களா அல்லது தமிழர்கள் அல்லவா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். இந்துக்கள் சமஸ்கிருதத்தில் பெயர் வைக்கிறார்கள் என்பதால்தான் முஸ்லீம்களும் கிருத்துவர்களும் அரபு மற்றும் லத்தீன் மொழிகளில் பெயர் வைக்கிறார்களா? இதற்குத்தான் நீங்கள் வக்காலத்து வாங்கிகிரீர்கள் போலும். அனைத்து இந்துக்களும் சமஸ்கிருதத்தில் பெயர் வைப்பதில்லை. ஆனால் அனைத்து முஸ்லீம்களும் கிருத்துவர்களும் தமிழில் பெயர் வைப்பதில்லை என்று உங்களுக்குத் தெரியவில்லை போலும். அதிக அளவில் தமிழ் பெயர் வைப்பது இந்துக்கள்தான். மற்ற மதத்தினர் அல்ல.இது கூட பல ஆண்டுகளாக இருந்து வந்த பழக்கம். இதுகூட தெரியவில்லை போலும். அவர்கள் வைக்கும் பெயர்கள் தமிழர்களின் வாயில் நுழைவதே இல்லை.இதற்கு ஏதேனும் வழி காணுங்கள். “தில்லை நடராசன்” அருளால் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்.

    இலங்கையில் போர் நடந்து கொண்டு இருந்த போது அங்கு இருந்த முஸ்லீம்கள் அனைவரும் தமிழர்களுக்கு (விடுதலைப் புலிகளுக்கு) எதிராக இருந்தார்கள். புலிகளின் இருப்பிடங்களை காட்டிக்கொடுத்தார்கள். அப்போது கூட இந்தியாவில் (தமிழகத்தில்) இருந்த முஸ்லீம்தலைவர்கள் இலங்கை தமிழர்களுக்கு எதிராகத்தான் செயல் பட்டார்கள். முஸ்லீம்களின் காட்டிக்கொடுக்கும் செயல்களை கண்டித்து முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடந்தது. அதில் 1௦௦ க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கொல்லப்பட்டதாக கூறி அதற்கு நினைவு மண்டபம் எழுப்பி உள்ளார்கள். நாம் தமிழர்களுக்கு ஆதரவாக இங்கு முள்ளி வாய்க்கால் நினைவு தூண் கட்டியுள்ளோம். ஆனால் முஸ்லீம்கள் இலங்கை தமிழர்களுக்கு எதிராக உள்ளார்கள். இங்கு உள்ள முஸ்லீம்களும் அதற்கு ஆதரவாக உள்ளார்கள்.

    //////ஈழத்தில் தமிழுக்காக, தமிழீழ விடுதலைக்காக பாதிரிமார்கள் செய்த தியாகம், உயிர்த்தியாகம் உட்பட, அளப்பரியது. அப்படி தமிழ்ப் பாதிரிமார்கள் தமிழுக்காக உயிரைத் தியாகம் செய்த போது, இந்துக் கோயில்கள் சிங்கள இராணுவத்தால், கொள்ளையடிக்கப்பட்டு, அழிக்கப்பட்ட போது, ஈழத்து இந்துக்கள் கொல்லப்பட்ட போது, இந்துக் குருமார்கள், இலங்கையிலும, தமிழ்நாட்டிலும் சிங்களத் தலைவர்களுக்கு பாதபூசை செய்து, அவர்களை வரவேற்று பசப்பு வார்த்தை பேசிக் கொண்டிருந்தனர் என்பதையும் மறந்து விடக் கூடாது//////

    உங்களுடைய இந்த கருத்து பரிதாபமாக உள்ளது. கிருத்துவர்கள் இங்கு பிரச்சாரம் செய்யும் போது கிறிஸ்துதான் உங்களை காப்பார் என்றுதான் பிரச்சாரம் செய்கிறார்கள். ஏன் அந்த கிறிஸ்து அங்குள்ள மக்களை காப்பாற்ற வில்லை.ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் இந்துக்களுக்கு என்று ஒரு பொது அமைப்பு கிடையாது. சுதந்திரமாக தனித் தனியாகத்தான் செயல் படுகிறார்கள். ஒருக்கினைப்பு கிடையாது. ஒரு ஊரில் கோவில் கட்டவேண்டுமால் கூட அந்த ஊரை சேர்ந்த முக்கியஸ்தர்கள் பணம் வசூல் செய்து பல சிரமங்ககளுகிடையே கோவிலை கட்டுகிறார்கள். மேல் மட்டத்திலிருந்தோ வெளி நாடுகளில் இருந்தோ பணம் வருவதில்லை. ஆனால் கிருத்துத்தில் அப்படி இல்லை. ஒரு ஊரில் ஒரு கிருத்துவர் இருந்தால் போதும் “எங்கிருந்தோ” பணம் வருகிறது!!!! அதில் சிறிய அளவில் பிரமாண்டமாக “சருச்சை” கட்டிவிடுகிறார்கள்.

    தமிழர்களுக்கு அவர்களால் உருவாக்கப்பட்ட தெய்வம்தான் உண்மையான “தமிழ் கடவுள்”. முருகப்பெருமானும் காளி மாரி போன்ற தெய்வங்களே தமிழர்களின் தெய்வம். நீங்கள் கூறும் தேவாரம் திருவாசகம் திருக்குறள் போன்றவைகள் தான் தமிழர்களின் “வேதங்கள்”. வெளி நாட்டு மதங்களுக்காக வக்காலத்து வாங்குவதை விடுத்து உண்மையான தமிழர்களுக்காக வாதட முயற்சி செய்யுங்கள்!!!! நல்ல தமிழனாக வாழ முயற்சி செய்யோம்!!

    • வி.பு.களால் யாழ்ப்பாணத்திலிருந்து 100,000 இற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் தமது பணம்,உடமைகள் பிடுங்கப்பட்டு தமது சொந்த வாழிடங்களை விட்டு விரட்டப்பட்டார்கள்.இதனை எவ்விதத்திலும் நியாயப்படுத முடியாது.

      நாத்திகம்,ஆத்திகம் கடந்து தமிழர்களாய் ஒன்ட்ரு பட்டு நிர்பது தீட்சிதர்கலின் வயிற்றை கலக்குகிரது.

  29. // அவர்களின் தொழிற்போட்டிக்காக தமிழர்கள் தமது உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டுமென்பது என்ன நியாயம்? //

    தமிழில் பாடுவது உரிமையே. மிகச்சரி. ஆனால் கோவிலை நிர்வாகிப்பவர்கள் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதற்கு உடன்பட்டு நமது உரிமையை நிலைநாட்டலாமே.
    ஏன் அக்கட்டுப்பாடுகளை விதித்தனர் என ஆராய்ந்து இரு தரப்பும் பேசி சரி செய்வதைவிட்டு விதிகளை அப்படிதான் மீறுவோம் என்பது போகா ஊரின் வழியன்றோ?
    இக்கூறினால் தான் singapore அரசு பல தமிழர்களை நாடு கடத்த வேண்டியதாயிற்று.

    // ஒரு குறிப்பிட்ட சாதியினருக்குச் சொந்தமாக, அவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்க கூடாதென்பது தான் தமிழர்களின் வாதம். //

    இதில் தாரை வார்ப்பது எங்கே? நீங்கள் கூறுவது கோவிலுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களும் தீட்சிதர்களுக்கு பிரித்து கொடுப்பது போலும் இதில் அவர்கள் நினைத்தால் யாரை உள்ளே அனுமதிக்க அல்லது மறுக்க முடியும் என்பது போல் உள்ளது. அவ்வாறல்லவே. கோவில் பொது தான் ஆனால் அதை நிர்வகிப்பது யார் என்பது தான் கேள்வி. அதற்கு பதில் கிடைத்துள்ளது. இது சிறந்த பதிலா என்பது கேள்வி குறி. அதற்காக தர்ம தரிசனம் செய்ய வருபவன் தொலைவிலிருந்தும் காசு கொடுப்பவனுக்கும் VIPகளுக்கும் மிக நெருக்கத்தில் தரிசனம் செய்ய விடும் அரசாங்கத்திடம் மட்டும் எப்படி நிர்வாகத்தை ஒப்படைப்பது?
    மேலும் ஒரு திருடனிடமிருந்து மற்றோர் திருடனுக்கு எதற்கு கொடுக்க? அதற்கு இருக்கற திருடன் கிட்டயே வச்சுக்க சொல்லிட்டு மற்றோர் திருடனை கண்காணிக்க சொல்லலாம். அது உத்தமம்.

    • //தமிழில் பாடுவது உரிமையே. மிகச்சரி. ஆனால் கோவிலை நிர்வாகிப்பவர்கள் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதற்கு உடன்பட்டு நமது உரிமையை நிலைநாட்டலாமே.///

      கோவிலைப் பாரமரிக்க நியமிக்கப்பட்டவர்கள் இன்று பெரும்பான்மையினரான கோயில் சொந்தக்காரர்களுக்கு, அதாவது அவர்களின் தாய்மொழிக்கு, அவர்களின் முன்னோர்களின் கோயிலில் தடை விதிக்கிறார்கள். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டிய தேவை தமிழர்களுக்குக் கிடையாது, மாறாக இந்த தீட்சிதர்கள், அவர்களுக்கு சோறு போடும் தமிழைப் போற்ற வேண்டும். தமிழ்த்தேவாரங்களுக்கு தில்லையினல் முன்னுரிமை கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில், தமிழுக்கு, அதிலும் தேவாரத்துக்கு சிதம்பரத்தில் முன்னுரிமை கிடைக்காது விட்டால், வேறெங்கு கிடைக்கும்?

      //நீங்கள் கூறுவது கோவிலுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களும் தீட்சிதர்களுக்கு பிரித்து கொடுப்பது போலும் இதில் அவர்கள் நினைத்தால் யாரை உள்ளே அனுமதிக்க அல்லது மறுக்க முடியும் என்பது போல் உள்ளது///

      இந்த தீர்ப்பின்படி, மற்றவர்கள், அதாவது தமிழக அரசே கேள்வி கேட்க முடியாதளவுக்கு, கோயில் தீட்சிதர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது, இவ்வளவு காலமும், திமுக அரசின் கீழ் நியமித்த அறநிலையத்துறை அதிகாரியுடன் கூட அவர்கள் ஒத்துழைக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியாதா?. அவர் கடிதம் எழுதிப்போடுவதோடு சரி. தீட்சிதர்கள் அவரைக் கணக்கேடுக்கவேயில்லை. சில வருடங்களுக்கு முன்னால் நான் அங்கு சென்றிருந்த போது, சாமி கும்பிட முதல், அங்கு ஒரு தீட்சிதர் நீட்டிய நீண்ட புத்தகத்தில் ஒரு தொகையை எழுதாததால், அந்த தீட்சிதன் விடமாட்டேன் என்று அடம்பிடித்ததால், நான் இன்றுவரை சிதம்பரத்தில் சிவகாமி அம்மனைத் தரிசிக்கவில்லை. அதற்குப் பின்னர் எத்தனையோ முறை தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலுள்ள கோயில்களுக்குக் கூட போன நான், சிதம்பரத்துக்குப போகவில்லை. .

      //கோவில் பொது தான் ஆனால் அதை நிர்வகிப்பது யார் என்பது தான் கேள்வி. அதற்கு பதில் கிடைத்துள்ளது. இது சிறந்த பதிலா என்பது கேள்வி குறி. ///

      சிறந்த பதில் அல்ல என்பதை அறிந்ததாலும், குளறுபடிகள் நடந்ததாலும் தீட்சிதர்களே, ஒருவர் மீது ஒருவர் கொள்ளையில் குற்றம்சாட்டி போலீசுக்குப் போனதாலும் தானே, திமுக அரசு அறநிலையத்துறையின் கீழ் சிதம்பரம் கோயிலைக் கொண்டு வந்தது என்பது உங்களுக்குத் தெரியாதா?

      //அதற்காக தர்ம தரிசனம் செய்ய வருபவன் தொலைவிலிருந்தும் காசு கொடுப்பவனுக்கும் VIPகளுக்கும் மிக நெருக்கத்தில் தரிசனம் செய்ய விடும் அரசாங்கத்திடம் மட்டும் எப்படி நிர்வாகத்தை ஒப்படைப்பது?///

      இப்பொழுது நிலைமை இன்னும் மோசமாகலாம். அறநிலையத்துறையின் கீழ் உள்ள, மதுரை, திருச்செந்தூர் போன்ற பெரிய கோயில்களிலேயே பட்டப்பகலில் காசு பிடுங்குகிறார்கள். அப்படியிருக்க, அவர்களின் முழு நிர்வாகத்தில் எப்படியெல்லாம் கூத்தடிப்பார்கள் என்பதை நினைக்கவே பயமாக இருக்கிறது.

      //மேலும் ஒரு திருடனிடமிருந்து மற்றோர் திருடனுக்கு எதற்கு கொடுக்க? அதற்கு இருக்கற திருடன் கிட்டயே வச்சுக்க சொல்லிட்டு மற்றோர் திருடனை கண்காணிக்க சொல்லலாம். அது உத்தமம்///

      விடிய விடிய ராமர் கதை விடிஞ்ச பிறகு ராமனுக்கு சீதை என்ன முறை என்றானாம். அப்படிக் கண்காணிக்க நியமித்த “திருடனை”, உச்சநீதிமன்றம் போய் அகற்றி விட்டார்கள். என்பதைத் தானே எல்லோரும் இங்கே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

    • //தமிழில் பாடுவது உரிமையே. மிகச்சரி. ஆனால் கோவிலை நிர்வாகிப்பவர்கள் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதற்கு உடன்பட்டு நமது உரிமையை நிலைநாட்டலாமே.//

      உண்மைதான்! ஆங்கிலேயர்கள் சில கட்டுப்பாடுகள்நம்மீது வைத்திருந்தார்கள், அதை ஏற்றுக்கொண்டு அடிமை சேவகம் செய்துகொண்டிருக்கலாமே! தன்மானம் அற்றவருக்கு சுதந்திரம் எதற்கு?

      //கோவில் பொது தான் ஆனால் அதை நிர்வகிப்பது யார் என்பது தான் கேள்வி. //
      நல்ல கேள்விதான்! கோவில் பொது என்றால் அதை நிர்வகிக்கும் பொறுப்பாளர்களை நியமிக்கவும்,நீக்கவும் பொது மக்கள் பிரதிநிதியான அரசுக்குத்தானே உரிமை?

      //மேலும் ஒரு திருடனிடமிருந்து மற்றோர் திருடனுக்கு எதற்கு கொடுக்க? அதற்கு இருக்கற திருடன் கிட்டயே வச்சுக்க சொல்லிட்டு மற்றோர் திருடனை கண்காணிக்க சொல்லலாம். அது உத்தமம்.
      //

      காஙகிரசு ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது! பி ஜே பி ஆட்சிக்கு வந்தால் மேலும் உழல் செய்யத்தான் போகிரது! அதனால், காஙகிரசையே தொடர்ந்து ஆட்சி செய்ய விட்டு விடலாம், இந்த தெர்தல் கீர்தல் எல்லாம் வேண்டாமே, இல்லையா காப்பி அவர்களே!

  30. திரு நட்ராயன்!

    //அவர்களின் பெயர்கள் எல்லாம் என்ன அழகான தமிழ் மொழியிலா இருக்கிறது!!

    தமிழில் பெயர் வைக்க இஸ்லாத்தில் தடை இல்லை. நான் தமிழில் எனது பெயரை வைத்தால் என்ன ஜாதி என்று அடுத்த கேள்வி வரும். சாதியைத் துறக்கத்தான் பெரும்பாலான மக்கள் இஸ்லாத்தை தழுவும்போது திரும்பவும் அதே அடையாளம் வருவதை தவிர்க்கத்தான் அரபு பெயர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். சாதிகளற்ற சமூகமாக தமிழ் சமூகம் மாறி விட்டால் எனது பெயரையும் தமிழிலேயே வைத்துக் கொள்வேன். குர்ஆனில் அதற்கு எந்த தடையும் இல்லை.

    நபி ஆப்ரஹாம்(இப்றாகிம்) ஒரு அரபியரல்ல. முகமது நபியின் தோழர் ஈரான் தேசத்தை சேர்ந்த சல்மான் ஃபார்ஸி தனது பூர்வீக பெயருடனேயே இருந்தார். முகமது நபி அவர் பெயரை மாற்றவில்லை. ராமன், கிருஷ்ணன் போன்ற கடவுள் பெயர்களை தவிர்த்து அன்பழகன், அறிவழகன், ஆரோக்கியம், சாந்தி, மலர்க்கொடி என்ற அழகிய தமிழ் பெயர்களை வைக்க இஸ்லாத்தில் தடை இல்லை.

    மற்றபடி மிக அழகிய விளக்கங்களைக் கொடுத்த வியாசனுக்கு நன்றி!

  31. // பிராமணர் அல்லாத பூசாரி பூசை செய்யும் கோவிலில் ஒரு பிராமணர் பூஜை செய்ய இயலாது.//

    செய்ய இயலாது அல்ல அங்கு பூஜை செய்ய பாப்பான் வரமாட்டான்.

  32. ஹலோ பாப்பான்ஸ் என்னதான் நீங்க தேனில் நெய்யொழுக பேசினாலும் நீங்கள் ஒரு தனி வகையறா என்பதை உங்களால் மறைக்க முடியவில்லை. மற்ற சாதிக்காரர்கள் எல்லாம் தமிழில் பூஜை செய்வதை எதிர்ப்பதில்லை. அப்படி எதிர்ப்பது நீங்கள் ஒரு வகையறா மட்டுமே.

  33. குரானும் பைபிளும் தமிழிலும் இருக்கிறது பாப்பான் ஓதும் வேதத்தையும் தமிழில் வெளியிடுவீர்களா?

    • ///குரானும் பைபிளும் தமிழிலும் இருக்கிறது பாப்பான் ஓதும் வேதத்தையும் தமிழில் வெளியிடுவீர்களா?///

      குரானும் பைப்பிலும் தமிழில் இல்லை. தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது!! ஆனால் தமிழில் தேவாரம் திருவாசகம் திருப்பாவை திருவெண்பாவை இன்னும் எத்தையோ நூல்கள் இருக்கின்றன. இதனை கொண்டு தமிழில் ஆண்டவனை வணங்கலாம். தனியார் கோவில்கள் மற்றும் ஜாதி கோவில்கள் பல உள்ளன. அதிலெல்லாம் தமிழில் ஓதப்படுகிறது. இந்தியவில் பல்வேறு அரசர்கள் பல்வேறு காலக்கட்டத்தில் ஆண்டு வந்துள்ளார்கள். ஏராளமான மொழிகள் அனைத்து பகுதிகளிலும் பேசப்பட்டு வந்தது. ஒரே ஊரில் பல மொழிகளை மக்கள் பேசி வந்தார்கள். ஆண்டவனை வழிபட பொது மொழியாக சமஷ்கிருதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. சமஷ்கிருதத்தில் ஏராளமான தத்துவங்களும் நீதிகளும் இயற்றப்பட்டு இருந்தது. இப்போதும் சமஷ்கிருதத்தில் இல்லாதது அறிவியலில் இல்லை என்று கூறலாம். வான சாஸ்த்திரங்கள் முழுமையாக சமஷ்கிருததில் உள்ளது. நம்மால் இதனை படிப்பதற்கு நேரம் இல்லை அல்லது முதிர்ச்சி இல்லை. அதனால் வெறுப்பை கக்கி வெறுக்கிறோம்.

      • //ஆண்டவனை வழிபட பொது மொழியாக சமஷ்கிருதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது//

        இத எதாவது டவுசர் போட்ட RSS காரன் இருப்பான் அவன் கிட்ட போய் சொல்லூ.

        //சமஷ்கிருதத்தில் ஏராளமான தத்துவங்களும் நீதிகளும் இயற்றப்பட்டு இருந்தது//

        மனுநீதியை அரசியல் அமைப்புச் சட்டமாக்கிட சொல்றேல்!!!

        சரியான காமடி பீஸ்யா நீர் ha ha ha!!!

        //இப்போதும் சமஷ்கிருதத்தில் இல்லாதது அறிவியலில் இல்லை என்று கூறலாம். வான சாஸ்த்திரங்கள் முழுமையாக சமஷ்கிருததில் உள்ளது//

        ஏயா இவ்வளவு நாளா எங்க இருந்த உன்னைய தான் ISRO ல rocket விடுரதுக்கும், HAL (Hindustan aeronautics limited) aeroplane செய்யுறதுக்கும், தேடிக்கிட்டு இருந்தாங்க!!!. இது தெரியாம நம்ம இந்தியா போயி ரஷ்யாகிட்டயும், அமெரிக்காகிட்டயும் technology பிச்சை எடுத்துகிட்டிருக்குதே.

        பேசாம ஜோசியர்கலையும், மணி அடிக்கிற பார்பனர்களையும் direct ஆ scientist ஆக்கிட்டா இந்தியா அறிவியல்ல வளர்ந்துரும்.

        • The GSLV rocket launched recently was the result of 20 years of tireless research and hard work of many scientists of ISRO.But ISRO chief offered worship to Thiruppathi Balaji not only after that launch but also before every launch.The Mangalyan was built with indigenous materials by over 500 scientists within a short period.The ISRO chief never believed in the capacity or talent of his fellow scientists.Even after the start of the 48 hour count down for Mangalyan launch,instead of remaining with his team,went to Thiruppathi and Kalahasthi.Our Constitution advocates scientific temper among laymen.But ISRO chief do no believe in scientific temper.

      • // இப்போதும் சமஷ்கிருதத்தில் இல்லாதது அறிவியலில் இல்லை என்று கூறலாம். வான சாஸ்த்திரங்கள் முழுமையாக சமஷ்கிருததில் உள்ளது //

        சும்மா அடிச்சி விடப்படாது! நவீன அறிவியல் கூறும் விஷயங்களில் ஒரு தம்பிடி கூட சம்ஸ்கிருத நூல்களில் இருக்குமா என்பது சந்தேகம்தான்! உதாரணமாக, கிராவிடெஷனல் லென்சிங் பற்றி எங்கே ஒரு சம்ஸ்கிருத ஆதாரம் சொல்லுங்கள் பார்ப்போம்! அததற்கு அதனதன் இடம்.

      • தமிழிலிருந்துதான் எல்லா மொழிகளும், தெய்வங்களும், விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் தோன்றின என்று தமிழ் ஆர்வலர்கள் சொல்லக்கூடும்! இந்திரன் எழிதிய அய்ந்திரத்தில் நுண்மையான அளவு கணிதம் கூட உள்ளது என்று, ஒரு தமிஉழன்பர் கூறிவருகிறார்! இவையெல்லாம் தற்பெருமைக்கு மட்டுமே உதவும்! இந்தியர்கள் அனைவருமே, இத்தகைய மனப்போக்கால், விஞ்ஞான சிந்தையின்றி இருக்கிரோம்! இதில் பக்தி என்ற பெயரில், விஞ்ஞான ஆராய்ச்சியின்றி , முன்னோர் அருளிய வேதவாக்கு மாற்ற ஒண்ணாதது என்ற அளப்புகள் வேறு! அந்தக்காலத்திலேயே (50 வருடங்களுக்கு முன்பே) வெள்ளைக்காரன் சர்ஸ்வதி மகாளில் உள்ள நூல்களை திருடிவிட்டான், அதனால்தான் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த புஷ்பக விமானம் போன்று ஏரோப்ளேன் செய்திருக்கிரான் என்று அப்போதைய தாத்தாக்கள் முனுமுனுப்பர்!நீங்கள் அந்த வகையராவா? நல்ல வேளை,நீங்களாவது சமஸ்கிருதம் படித்து என்னை போன்ற சூத்திர பயல்களுக்கு சொல்லும்,நாயனாரே!

        • //தமிழிலிருந்துதான் எல்லா மொழிகளும், தெய்வங்களும், விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் தோன்றின என்று தமிழ் ஆர்வலர்கள் சொல்லக்கூடும்! இந்திரன் எழிதிய அய்ந்திரத்தில் நுண்மையான அளவு கணிதம் கூட உள்ளது என்று, ஒரு தமிஉழன்பர் கூறிவருகிறார்! இவையெல்லாம் தற்பெருமைக்கு மட்டுமே உதவும்! இந்தியர்கள் அனைவருமே, இத்தகைய மனப்போக்கால், விஞ்ஞான சிந்தையின்றி இருக்கிரோம்! இதில் பக்தி என்ற பெயரில், விஞ்ஞான ஆராய்ச்சியின்றி , முன்னோர் அருளிய வேதவாக்கு மாற்ற ஒண்ணாதது என்ற அளப்புகள் வேறு!//

          சரியாகச்சொன்னீர்கள் ஐயா….
          faactu…faactu…faactu…

    • அனைத்து சம்ஸ்கிருத சொற்களாயும் தமிழில் எழுதலாம்.

      அரபி மற்றும் லத்தீன் சொற்களை எழுத முடியாது.

      குரானும் பைபிளும் மொழிபெயர்க்க பட்டுள்ளன.

      ஹிந்துக்கழுக்கு வாழ்க்கையே புத்தகமாக உள்ளது.

    • வேதங்களின் தமிழ்/ஆங்கில மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன. எனக்கு தெரிந்த சிலவற்றை பற்றி குறிப்புகள் கீழே.

      நூறாண்டுகளுக்கு முன்பாக ரால்ப் கிரிப்பித் போன்றோர் நான்கு வேதங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர். இவை கீழே உள்ள தளத்தில் கிடைக்கின்றன. சற்று கடினமான செய்யுள் அமைப்பிலான ஆங்கில நடை.

      http://www.sacred-texts.com/hin/index.htm

      நான்கு வேத தமிழ் மொழிபெயர்ப்பு நூல் தொகுப்பு மயிலை கிரி டிரேடிங் என்ற கடையில் கண்டிருக்கிறேன்.

      முக்கிய உபநிடதங்கள் தமிழ் தெளிவுரை ராமகிருஷ்ண மடத்தில் கிடைக்கும். குறிப்பாக சுவாமி ஆசுதோஷானந்தர் எழுதிய சிறப்பான எளிய உரை.

      மூலம் முழுதும் சம்ஸ்கிருத, கிரந்த லிபியில் கிடைக்கிறது. தமிழ் லிபியில் உள்ளதா என தெரியவில்லை. ஆனால், ருத்ரம், சமகம், புருஷ சூக்தம் போன்ற முக்கிய பகுதிகள் மூலத்தை தமிழ் லிபியில் கண்டிருக்கிறேன். தமிழ் லிபியில் மொத்தமாக வெளியிட தடை ஏதும் இருப்பதாக தெரியவில்லை. அதிக வரவேற்பு இருக்காது என்பதால் யாரும் பதிக்கவில்லை என கருதுகிறேன்.

      மேலும் விவரம் தெரிந்தோர் பகிர்ந்து கொள்ளு

  34. /////நான் தமிழில் எனது பெயரை வைத்தால் என்ன ஜாதி என்று அடுத்த கேள்வி வரும்////

    ஐயோ பாவம் இவர்!!! தமிழில் பெயர் வைத்தால் என்ன ஜாதி என்று கேட்பார்களாம். யார் அவ்வாறு கேட்கிறார்கள். தமிழ் நாட்டில் உள்ள மக்கள் கோடிக்கணக்கில் உள்ளார்கள். தினசரி ஒவ்வொருவரும் பேசிக்கொள்ளும் போதும் என்ன ஜாதி என்றுதான் பேசிக்கொள்கிறார்களா? முஸ்லீம்களை பார்த்து நீ என்ன பிரிவு என்று கேட்க மாட்டார்களா? ஷியாவா சன்னி பிரிவா என்று?
    மற்ற மாநிலங்களில் வசிப்பவர்கள் எல்லாம் என்ன அந்த மாநில பெயரா வைத்துள்ளார்கள். வெளி நாடுகளில் வசிப்பவர்கள் எல்லாம் முஸ்லீம் பெயரைத்தானே வைத்துள்ளார்கள். நல்ல முஸ்லீம்கள் பலர் உலகில் அன்றாடம் நடக்கும் குண்டு வெடிப்பை கண்டு வெட்கப்படுகிறார்கள்!!!

    ஒருமுறை உங்கள் குழந்தைகளுக்கு நல்ல தமிழ் பெயரை வைத்துப் பாருங்கள். உங்கள் ஜாதி என்ன என்று யாராவது கேட்டால் எனக்கு ஜாதி இல்லை என்று சொல்லுங்கள். அரசாங்கத்தை தவிர வேறு யாரும் ஜாதியை கேட்பதில்லை. வினவு போன்றவைகள் தான் ஜாதியை வைத்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

    தமிழில் பெயர்வைக்க யாரோ தடுப்பது போல் பேசுகிறார்கள். இஸ்லாத்திலும் கிருத்துவத்திலும் அந்த மத குருமார்கள்தான் பெரும்பாலும் பெயர் வைக்கிறார்கள். ஆனால் இந்து மதத்தில் அப்படி அல்ல. பெற்றோர்கள்தான் பெயர் சூட்டுகிறார்கள்!!

    “வியாசன்” போன்றவர்கள் தங்களது பெயரை சுத்த தமிழில் மாற்றிக்கொள்ளலாம்! தடையேதும் இல்லை. பிராமணர்கள் யாரும் தடுப்பது இல்லை. ஆனால் முஸ்லீம்களும் கிருத்துவர்களும் பழைய பெயரை மாற்றி சுத்த தமிழ் பெயர் வைத்தால் சம்பத்தப்பட்ட மத குருமார்களால்
    கண்டிக்கப்படுவீர்கள்.

  35. ////இந்து மதத்தைப் போன்ற ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும் தான் குருமார்கள் ஆகலாம், கருவறைக்குள் நுழையலாம், கடவுளைத் தொடலாம் என்று எந்தப் பம்மாத்தும், பாகுபாடுகளும் மசூதிகளும், சர்ச்சுகளிலும் கிடையாது. அதனால் அங்கு சாதியடிப்படையிலான பாகுபாடோ, அல்லது எந்தவிதமான தீண்டாமையோ நடைமுறையில் இல்லை///

    இந்து கோவில்களில் கடவுள் சிலை வடிவில் உள்ளதாக நம்பித்தான் அங்கு சென்று வழிபடுகிறார்கள். குருமார்களோ அல்லது பூசாரிகளோ யாரும் பிரச்சாரம் செய்வதில்லை. திருப்பதி போன்ற தளங்களில் ஒரு வினாடிதான் வேங்கடாலசலபதியை வழிபட முடிகிறது. தொழுகை மற்றும் ஜெபம் என்ற பெயரில் பிரச்சாரம் செய்யப்படுவதில்லை. பிரபல கோவில்களிலும் சரி சாதாரண கோவில்களிலும் சரி எங்கும் தீண்டாமை கடைப்பிடிப்பது இல்லை. ஆனால் கிருத்துவத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்து தலித்துக்கு உள்ள அனைத்து சலுகைகளும் கிருத்துவ தலித்துக்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டு சமீபத்தில் தில்லியில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இந்து தலித்துக்கு உள்ள அதே சூழ்நிலைதான் இங்கும் (கிறுத்துவத்திலும்) நிலவுகிறது என்று கூறுகிறார்கள். தீண்டாமை அங்கு இல்லை என்றால் தலித் இந்துக்களுக்கான இட ஒதுக்கீட்டை தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று ஏன் கேட்கிறார்கள். அங்குதான் ஜாதிகள் இல்லையே ஏன் இட ஒதிக்கீடு கேட்கவேண்டும்?

    இந்துக்கள் வழிபடுவது ஆண்டவனின் அருள் விக்கிரகம்! மற்றவர்கள் இந்துக்களை போல் ஆண்டவனை வழிபட செல்வதில்லை. ஒரு தனி நபர் (கிருஸ்த்து மற்றும் நபிகள்) ஸ்தாபித்ததை கடவுளாக கருத முடியாது. தனி நபர் கூறியதை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. உலகம் மாறும்போது அவ்வாப்போது மாற்றங்கள் வரும். அதுதான் இயற்கை! இந்துமதம் இயற்கையின் பால் ஒன்றி கலந்தது. இதனை யாரும் உருவாக்க வில்லை. உலகில் மனிதன் உருவான போதே இந்துமதம் என்று நாம் சொல்லக்கூடிய இந்த தத்துவங்கள் உருவாக்கி விட்டன. ஆகையால் இந்துமதம் என்று நாம் சொல்லுவது ஒரு பண்பாடு மற்றும் காலச்சாரத்துடன் இணைந்தது. அது ஒரு மதம் அல்ல. இயற்க்கை கொடுத்த ஒரு வரப்பிரசாரம். இந்து பண்பாட்டோடு கலந்தால் உலகில் பயங்கரவாதம் இருக்காது. ராமாயணம் மகாபாரதம் தேவாரம் திருவாசகம் திருக்குறள் மற்றும் பலபல நூல்களை ஈரான் ஈராக் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பங்களாதேஷ் மற்றும் பிற இஸ்லாமிய நாடுகளில் கொண்டு சென்று போதித்து வந்தால் இந்த பயங்கரவாதம் ஒழியும்.

  36. திரு.மு.நாட்ராயன் அவர்களே! நீங்கள் பெரியபுராணத்தில் உள்ள கண்ணப்ப நாயனார் கதை கேள்வி பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.பன்றியை வேட்டையாடி அதை சுட்டு, வாயில் வைத்து சுவைத்து சுவையான மாமிசத்தை இலையில் எடுத்து கொண்டு,இறைவனுக்கு அர்சிக்க காட்டு பூக்களை தலையில் வைத்துகொண்டும்,அபிடேக நீரை வாயில் முகண்டுகொண்டும் சென்று ஏற்கனவே சிவன் மேல் உள்ள மலர்களை தனது செருப்பனிந்த காலால் கீழே தள்ளி வாயில் உள்ள நீரை சிவன் மேல் உமிழ்ந்து பன்றிகறியை படைத்து பூசை செய்தாராம்.அந்த கொவிலில் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லி சிவ ஆகமபடி பூசை செய்த சிவக்கோசரியாருக்கு அருள் செய்யாத இறைவன் கண்ணப்பருக்கு காட்சி தந்தாராம்.கடவுளை பூசை செய்ய சாதி ஒரு தடையாகுமா? மொழிதான் தடையாகுமா? வெளிப்படையான சாதி,மொழி வெறியர்களாகிய தில்லை தீட்சதர்கள் கையில் சிதம்பரம் கொவில் செல்வது தமிழர்களுக்கு நல்லது இல்லை.

    • /////வெளிப்படையான சாதி,மொழி வெறியர்களாகிய தில்லை தீட்சதர்கள் கையில் சிதம்பரம் கொவில் செல்வது தமிழர்களுக்கு நல்லது இல்லை/////

      தில்லை தீட்சிதர்கள் என்ன சம்ஸ்கிருத மொழியிலா பேசுகிறார்கள்!!! அவர்கள் தமிழில்தான் பேசுகிறார்கள் எழுதுகிறார்கள். அவர்களும் பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் நாட்டில் பலவிதமான நூல்களை எழுதி தமிழுக்கு அணி சேர்த்துள்ளார்கள். சமஸ்கிருதம் என்பது தற்போது பேச்சுவழக்கில் இல்லாத மொழி. யாரும் அதை பேசி வருவதில்லை. ஆனால் அதில் உள்ள மந்திரங்களை தமிழில் எழுதி பாடுகிறார்கள். அவ்வளவே! இதற்கு ஏன் இந்த விமர்ச்சனம் செய்கிறீர்கள் என்றுதான் தெரியவில்லை.அவர்கள் அனைவரும் தமிழர்களே.
      எதற்கு எடுத்தாலும் ஜாதி ஜாதி என்று சொல்லி, அதை வைத்துக்கொண்டு உங்களது வாழ்க்கையும் ஓடுகிறது. உங்களைப்போன்றவர்களால் தான் ஜாதியை ஒழிக்க முடியவில்லை. உங்களைப் போலவே அய்யா இராமதாஸ் அவர்களும் ஜாதியைப் பிடித்துக்கொண்டு ஆடுகிறார். உங்கள் இருவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

      • //உங்களை போன்றவர்களால் தான் ஜாதியை ஒழிக்க முடியவில்லை//–அய்யா என்ன சொல்ல வற்ரீங்கன்னு புரியலையே.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகணும்னு சொல்றவங்க சாதியை வளர்ப்பவர்கள்,நான் பிரம்மாவோட தலைலேயிருந்து பொறந்தவன் அதனால நான் மட்டும்தான் பூசை செய்யலாம் என்று சொல்லும் பார்ப்பனர் சாதி ஒழிப்பாளர்களா? நல்லா இருக்குங்க உங்கநியாயம் ரொம்ப நல்லா இருக்கு.

        • நாயனார்,

          இதுக்கெல்லாம் அவரு பதில் சொல்லமாட்டாரு. பள்ளிவாசல பற்றி கேட்டீங்கன்னா பக்கபக்கமா எழுதுவாரு.

      • //சமஸ்கிருதம் என்பது தற்போது பேச்சுவழக்கில் இல்லாத மொழி. யாரும் அதை பேசி வருவதில்லை.ஆனால் அதில் உள்ள மந்திரங்களை தமிழில் எழுதி பாடுகிறார்கள்.அவ்வளவே!//–அத தாங்க நானும் சொல்றேன்.சமஸ்கிருதத்தை தமிழ்ல எழுதி மனப்பாடம் பன்ற கொடுமைக்கு தமிழ்லயே உள்ள மந்திரத்த சொல்லி தொலைக்கலாம்ல சாமிக்கு தமிழ் தெரியாதா?

  37. திரு. மு.நாட்ராயன்,

    //“வியாசன்” போன்றவர்கள் தங்களது பெயரை சுத்த தமிழில் மாற்றிக்கொள்ளலாம்! தடையேதும் இல்லை.///

    வி + ஆசான் = வியாசான் – வியாசன்

    தமிழில் வி என்பது – முதல், மூலம், உயர்ந்த, என்பதைக் குறிக்கும்.

    உதாரணமாக: வி+தை + விதை (seed or root)
    Vithai> vthu> vitha> Vetha> Veda

    வியாசன் என்பது தமிழ்பெயர் மட்டுமல்ல, வியாசர் ஒரு திராவிடன் (தமிழன்) என்பதை வில்லிபுத்தூரர் பாரதம் என்ற நூல் கூறுகிறது. அவர் ஆரிய வேதங்களை தமிழர்களின் மூலமறைகளாகிய நான்மறைகளின் அடிப்படையில் தொகுத்தார் எனவும் கூறுவர். அதனால் என்னுடைய பெயர் ஏற்கனவே சுத்த தமிழில் தான் உள்ளது, உங்களுக்குத் தான் தமிழ், எழுதப் படிக்கத் தெரியாத யாரோ பெயர் வைத்திருக்கிறார்கள் போல் தெரிகிறது. 🙂

    //இவர்கள் எல்லாம் தமிழர்களா அல்லது தமிழர்கள் அல்லவா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.///

    யார் தமிழன் என்ற கேள்விக்கு என்னுடைய வரைவிலக்கணம் மிகவும் குறுகியது. அதாவது, யார் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களின் பாட்டனோ (பாட்டியோ), முப்பாட்டானோ அல்லது அவர்களின் முன்னோர்கள் எவராவது தமிழராக இருந்தால், அல்லது தமிழர் என்ற மொழிவழிஇன அடையாளத்தை விட வேறொரு இனவடையாளம் அவர்களுக்கு இல்லாது விட்டால், அவர்கள் இக்காலத்தில் தமிழைப் பேசாது விட்டாலும் கூட அவர்கள் தமிழர்கள் தான்.

    அதன்படி, தமிழே பேசத் தெரியாத புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் குழந்தைகளும், பிஜி, மொரீசியஸ், ரியூனியன், மலேசியா போன்ற நாடுகளுக்குப் பல தலைமுறைகளுக்கு முன்னால் போனவர்களின் வாரிசுகள் கூட தமிழர்களாகிறார்கள், ஆனால் தமிழை வெளியில் பேசி, தமது தாய்மொழியை வீட்டில் பேசும், தமிழ்நாட்டில் வாழும், தெலுங்கு, கன்னட, மலையாளிகள் எத்தனை தலைமுறையாக தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் தமிழர்கள் அல்ல. அதே வேளையில் தமிழை வீட்டிலும், வெளியிலும் பேசுவது மட்டுமல்ல, அமெரிக்காவில் வாழ்ந்தாலென்ன, ஆபிரிக்காவில் வாழ்ந்தாலென்ன, தமிழை மறக்காமல் தமது குழந்தைகளையும் தமிழ் பேசவைத்து, தம்மை தமிழர்களாக மட்டும் அடையாளப்படுத்தும் பார்ப்பனர்களும் தமிழர்கள் தான். அதே வேளையில் உருது, மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி போன்ற வேற்று மொழிகளை வீட்டில் பேசுபவர்கள் எத்தனை நூற்றாண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் தமிழ்பேசும் மக்கள் மட்டுமே தவிர தமிழர்கள் அல்ல. என்னுடைய கருத்தின் படி பார்த்தால் ஜெயலலிதாவும், சுப்பிரமணியம் சுவாமியும் தமிழர்களாவார்கள் ஆனால் பெரியாரும், விஜயகாந்தும், ஏன் வைக்கோவும் கூட உண்மையான தமிழர்கள் அல்ல என்றாகி விடும். 🙂

    உங்களின் கேள்விக்கு பதில் என்னவென்றால், தமிழ்க் கிறித்தவர்களும், முஸ்லீம்களும் ஆங்கிலப் பெயரையோ அல்லது அரபுப் பெயரையோ அல்லது ஆபிரிக்காவின் சுவாஹிலி மொழியில் பெயரைக் கொண்டிருந்தாலும் கூட, அவர்கள் தமிழர் என்ற இன அடையாளத்தை விட வேறொரு மொழிவழி இன அடையாளத்தை அவர்கள் கொண்டிருக்காதவரை, அவர்கள் தம்மை தமிழர்களாக அடையாளப்டுத்தினால் அவர்கள் தமிழர்களே. உதாரணமாக, இலங்கையின் தமிழ்பேசும் முஸ்லீம்கள் தமிழர்கள் அல்ல. ஏனென்றால் அவர்கள் தமிழைப் பேசினாலும், தம்மை தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை.

    /// இந்துக்கள் சமஸ்கிருதத்தில் பெயர் வைக்கிறார்கள் என்பதால்தான் முஸ்லீம்களும் கிருத்துவர்களும் அரபு மற்றும் லத்தீன் மொழிகளில் பெயர் வைக்கிறார்களா? இதற்குத்தான் நீங்கள் வக்காலத்து வாங்கிகிரீர்கள் போலும். ///

    வக்காலத்து வாங்குவது, பொய்யை உண்மை போல் சொல்வது. அதாவது பொய்யை உண்மையாக்கத்தான் மற்றவர்களின் ஆதரவு தேவை. நான் சொல்வதெல்லாம் உண்மை. பெரும்பாலான ‘இந்துதமிழர்களின்’ (இந்தச் சொல்லே எனக்குப் பிடிக்கவில்லை, ஏனென்றால் தமிழர்கள் இந்துக்கள் இல்லை. சைவ-மாலிய தமிழர்களைக் குறிக்கும் வேறொரு சொல்லை நாங்கள் உருவாக்க வேண்டும்) பெயர்கள் தமிழில் இல்லை, சமக்கிருதத்தில் தான் இருக்கிறது. இஸ், பிஸ் என்று தமிழில் இல்லாத ஷா, ஸவில் பெயர் வருவதை நாகரீகமாக கருதுகின்றனர் பல தமிழ்ப் பெற்றோர்கள். இலங்கையை விட தமிழ்நாட்டில் இது மிகவும் மோசம் அதிலும் விஜய் டிவியில் பாட்டுப்போட்டிகள் தொடங்கப்பட்ட பின்னர், எல்லோரும் தமது குழந்தைகளுக்கு அபிஷேக், யாதவ், யாத்ரா, ஆர்யா, சூர்யா என்றெல்லாம் பெயர் வைக்கத் தொடக்கி விட்டார்கள் என்பதை நீங்களே அவதானித்திருப்பீர்கள்.

    //அனைத்து இந்துக்களும் சமஸ்கிருதத்தில் பெயர் வைப்பதில்லை. ஆனால் அனைத்து முஸ்லீம்களும் கிருத்துவர்களும் தமிழில் பெயர் வைப்பதில்லை என்று உங்களுக்குத் தெரியவில்லை போலும். ///

    உங்களுக்குத் தான் தெரியவில்லை போலிருக்கிறது. கிறித்தவர்களுக்கு இரண்டு பெயர்கள் உண்டு. ஒன்று பெற்றோர் இடும் தமிழ்ப்பெயர் மற்றது ஞானஸ்நானப் பெயர், அதாவது ஒரு குழந்தை கிறித்தவத்துக்குள் முழுக்காட்டப்படும் போது இடப்படும் பெயர். இலங்கைக் கிறித்தவர்களின் தமிழ்ப்பெயர்கள் எல்லாம் அப்பழுக்கற்ற தமிழ்ப்பெயர்கள், அவர்களின் சர்ச் பெயர் தான் விவிலிய அல்லது மேலைநாட்டுப் பெயர்கள். பெரும்பாலானோர் அந்தப் பெயரை பொதுவாக உபயோகிப்பதேயில்லை. அதை விட யாழ்ப்பாண சைவப்பிள்ளைமார் எல்லாம் தமது பிள்ளை என்ற குடும்ப அல்லது சாதிப்பெயரைக் கைவிட்டு விட்டனர், ஆனால் இன்றும் ஈழத்துக் கிறித்தவ தமிழர்கள் தான், அந்தோனிப்பிள்ளை, கபிரியேற்பிள்ளை, பேதுருப்பிள்ளை, தியோகுப்பிள்ளை (Bishop), சுவாம்பிள்ளை(Bishop), மரியாம்பிள்ளை என தமது பிள்ளை பெயர்களைத் தொடர்கின்றனர்.

    ஈழத்துத் தமிழ்க்கிறித்தவர்களும் அவர்களின் பாதிரிமார்களும் தமது தமிழ் அடையாளங்களை, தமிழ்க்கலாச்சாரத்தை பாதுகாப்பதில், அதை மற்றவர்களுக்குக் காட்டுவதில் பெருமையடைபவர்கள். உதாரணமாக, ஈழத்தில் உள்ள பெரும்பாலான கத்தோலிக்க தேவாலயங்களில் இருப்பதற்கு Bench கள் கூடக் கிடையாது. ஏனென்றால் அது கோயிலுக்குள் கதிரையில் இருப்பது தமிழர்களின் பண்பாடல்ல, என்று தமிழ்ப்பாதிரிமார்கள் அகற்றி விட்டனர், , எல்லோரும் தரையில் தான் இருப்பார்கள் சில தேவாலயங்களில் பொங்கலைக் கூட கொண்டாடுவதுண்டு ,அதே போல் முஸ்லீம்களில் பலரின் குடும்பபெயர்கள் இன்றும் தமிழ்பெயர்களிலேயே உள்ளன. அல்லாப்பிச்சை, மாப்பிள்ளை மரைக்கார், குஞ்சு முகம்மது, இப்படி தமிழும் அரபும் கலந்த பெயர்கள் உண்டு, தமிழ்நாட்டிலேயே ராஜா என்ற பெயருள்ள மூன்று முஸ்லீம்களை எனக்குத் தெரியும். எனக்கு சில விடயங்களில் இலங்கை முஸ்லீம்களுடன் கருத்து வேறுபாடு உண்டு, அதற்காக நான் உண்மையைத் திரிப்பது அழகல்ல.

    //அவர்கள் வைக்கும் பெயர்கள் தமிழர்களின் வாயில் நுழைவதே இல்லை.இதற்கு ஏதேனும் வழி காணுங்கள். “தில்லை நடராசன்” அருளால் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்.///

    நீங்கள் முதலில், அபிஷேக், சந்தோஷ் யாத்ரா, ஆர்யா, சூர்யா, சூத்ரா, மூத்ரா என்றெல்லாம் பெயர் வைக்கும் தமிழ்நாட்டுத்தமிழர்களுக்கு ஏதாவது வழி பாருங்கள், அதற்குப் பின்னர் மற்றவர்களைப் பற்றி யோசிப்போம். எங்களின் முதுகிலுள்ள அழுக்கைக் கழுவாமல், மற்றவர்களின் அழுக்கைச் சுட்டிக் காட்டக் கூடாது. அப்படிச் செய்தால், மற்றவர்கள் எங்களைப் பார்த்துச் சிரிப்பார்கள்.

    ///ஆனால் முஸ்லீம்கள் இலங்கை தமிழர்களுக்கு எதிராக உள்ளார்கள். இங்கு உள்ள முஸ்லீம்களும் அதற்கு ஆதரவாக உள்ளார்கள்.///

    நீங்கள் சொல்வது உண்மை. அதே வேளையில் இலங்கைத் தமிழர்களுக்காக ஒரு தமிழ்நாட்டு முஸ்லீம் தீக்குளித்து இறந்தார் என்றும் கூட நான் கேள்விப்பட்டேன். நாங்கள்- ஈழத்தமிழர்களும், இலங்கை முஸ்லீம்களும்- விரும்பினாலும், விரும்பாது விட்டாலும், ஒன்றாக வாழக் கற்றுக் கொள்ளத் தான் வேண்டும், ஏனென்றால் வடக்கு, கிழக்கில் பல நூற்றாண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்திருக்கிறோம். இன்றைய பிரச்சனைக்கு, தமிழ் –முஸ்லீம் ஒற்றுமையின்மைக்கு முக்கிய காரணம், வட-கிழக்கு முஸ்லீம்களின் Carpetbagger leadership உம் வஹாபி இஸ்லாமும் தான்.

    ///உங்களுடைய இந்த கருத்து பரிதாபமாக உள்ளது. கிருத்துவர்கள் இங்கு பிரச்சாரம் செய்யும் போது கிறிஸ்துதான் உங்களை காப்பார் என்றுதான் பிரச்சாரம் செய்கிறார்கள். ஏன் அந்த கிறிஸ்து அங்குள்ள மக்களை காப்பாற்ற வில்லை.///

    உங்களை நினைக்கத்தான் பரிதாபமாக இருக்கிறது. அப்படியானால் இலங்கைத் தமிழர்களின் காவல் தெய்வம் முருகன் ஏன் தமிழர்களை அழிவிலிருந்து காப்பாற்றவில்லை. கண்ணகி ஏன் காப்பாற்றவில்லை, கடைசியில் ஈழத்தமிழர்கள் அழிந்ததும் வற்றாப்பளைக் கண்ணகியம்மன் தீர்த்தமாடும் நந்திக்கடலில், கண்ணகியின் முன்னால் தானே.

    ///ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் இந்துக்களுக்கு என்று ஒரு பொது அமைப்பு கிடையாது. சுதந்திரமாக தனித் தனியாகத்தான் செயல் படுகிறார்கள். ஒருக்கினைப்பு கிடையாது ///

    அந்த தனிமனித சுதந்திரம் தான் இந்துமதத்தின் சிறப்பு. அதனால் தான் இன்றும் அது அழியாமல் இருக்கிறது.

    ///ஒரு ஊரில் ஒரு கிருத்துவர் இருந்தால் போதும் “எங்கிருந்தோ” பணம் வருகிறது!!!! அதில் சிறிய அளவில் பிரமாண்டமாக “சருச்சை” கட்டிவிடுகிறார்கள்.///

    அதை நாம் தடுத்து விட முடியாது. மற்றவர்களின் மதங்களில் அவர்களின் மதங்களைப் பரப்புவதால், அவர்களுக்கு புண்ணியம், மீட்சி அல்லது சொர்க்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கும் வரை அவர்கள் அப்படித் தான் செய்வார்கள். அவர்களின் குருமார்கள் தமது மதத்துக்கு ஆள் சேர்ப்பதில் முன் நிற்கிறார்கள். ஆனால் இந்துமதக் குருமார்கள் தீண்டாமையைக் கைவிடமாட்டோமேன்று தாண்டவம் ஆடுவது மட்டுமல்ல, உச்சநீதிமன்றத்துக்கும் போய் கோயில்களையே தமதுடைமையாக்கி, இந்துக்களைப் பிரிக்கிறார்கள். இந்துமதக் குருமார்களின் குடும்பம், பிள்ளை குட்டி, சாதிவெறி, பேராசை, காசு பணத்தின் மீது ஆசை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து இந்துக்களை மற்ற மதங்களை நோக்கி விரட்டுகிறது. அதற்கு மற்ற மதத்தவர்களை குறை கூறுவதால் என்ன பயன்?

    ///நல்ல தமிழனாக வாழ முயற்சி செய்யோம்!!///

    நல்லது, முதலில் எந்த தமிழைக் கேட்கும் ஆவலில் சிவபெருமான் மதுரைக்கு வந்து பிரம்படி பட்டாரோ, அந்த தமிழுக்காக, எந்த தெய்வத்தமிழ் சிதம்பரத்தில் ஓடாமல் நின்ற தேரை ஓடவைத்ததோ, அதே தமிழ்தேவாரங்களுக்காக, எந்த தேவாரங்களை தமிழின் மீதுள்ள பற்றால் தில்லைநடராசர் தில்லைச் சிற்றம்பலத்துப்படிகளில் உள்ள கல்யானையைத் (திருக்களிற்றுப்படியார்), தூக்கி அவர் காலடியில் வைக்குமாறு ஆணையிட்டாரோ, அதே தமிழ் தேவாரங்களுக்காக, எந்த தேவாரங்களை மாமன்னன் இராசராசன் சிதம்பர தீட்சிதர்களிடமிருந்து மீட்டு நடராசர் காலடியில் சமர்ப்பித்து, தமிழர்களை அவர்களின் கோயில்களில் காலம் காலமாக பாடுமாறு பணித்தானோ (Royal decree), அதே தமிழ் தேவாரங்களுக்காக, தமிழர்களின், அந்த தமிழ்வேதங்களை தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடவல்லானுக்கு முன்னால் பாடத் தடைகளும், கட்டுப்பாடுகளும் விதிப்பவர்களை எதிர்த்துப் போராடுங்கள், முதலில் நீங்களும் உண்மையான தமிழன் தான் என்பதை நிரூபியுங்கள் பார்ப்போம். 🙂

  38. ////வி + ஆசான் = வியாசான் – வியாசன்
    தமிழில் வி என்பது – முதல், மூலம், உயர்ந்த, என்பதைக் குறிக்கும்.
    உதாரணமாக: வி+தை + விதை (seed or root)
    Vithai> vthu> vitha> Vetha> Veda
    வியாசன் என்பது தமிழ்பெயர் மட்டுமல்ல, வியாசர் ஒரு திராவிடன் (தமிழன்) என்பதை வில்லிபுத்தூரர் பாரதம் என்ற நூல் கூறுகிறது//////

    வியாசர் தமிழர் என்றே வைத்துகொள்ளலாம். அந்த தமிழர் தான் மகாபாரதம் என்ற அற்புதமான நூலை இயற்றியுள்ளார். ஆகையால் மகாபாரதம் தமிழர்களின் சொத்தாகிறது. இதனை ஏன் தமிழர்கள் தங்களது வேதமாக ஏற்றுக்கொண்டு பரப்பக்கூடாது? தற்போதுவரை மகாபாரதத்தையும் பகவத்கீதையும் ஏளனம் செய்யும் சில “பகுத்தறிவு” வாதிகளை ஏன் விமர்ச்சனம் செய்யக்கூடாது. அதாவது தமிழ் இனத்திலிருந்து ஒதுக்கக்கூடாது? இதனை எப்போதே செய்ய ஆரம்பியுங்கள். மகாபாரதம் தமிழர்களின் வேதங்களில் ஒன்று என்று கூறுங்கள்.

  39. //வியாசர் தமிழர் என்றே வைத்துகொள்ளலாம். அந்த தமிழர் தான் மகாபாரதம் என்ற அற்புதமான நூலை இயற்றியுள்ளார். ஆகையால் மகாபாரதம் தமிழர்களின் சொத்தாகிறது. இதனை ஏன் தமிழர்கள் தங்களது வேதமாக ஏற்றுக்கொண்டு பரப்பக்கூடாது? ///

    ஆறுமுகநாவலர் கூடத் தான் தமிழில் பைபிளை மொழி பெயர்ப்பதில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் தாபகர் பீட்டர் பேர்சிவல் பாதிரியாருக்கு உதவினார் என்கிறார்கள். அதற்காக ஆறுமுக நாவலரும் பைபிளை அவரது வேதமாக ஏற்று பரப்பியிருக்க வேண்டுமா. இப்படி அந்தக் காலத்தில் யாராவது ஆறுமுகநாவலருக்குக் கூறியிருந்தால், சொன்னவரை சிதம்பரத்துக்கு இழுத்துக் கொண்டு போய், தில்லைச் சிற்றம்பலத்தில் வைத்து நாக்கை ஓட்ட அறுத்திருப்பார் நாவலர். 🙂

    இந்தக் காலத்தில் கூட ஆபிரிக்க காட்டுமிராண்டிகள் யாராவது வந்து, பணம் தருகிறேன், என்னுடைய மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை, என்னிடமுள்ள கற்பனைக் கதையை வந்து எழுதிக் கொடு என்று கேட்டால், அடுத்த பிளேனில ஆபிரிக்காவுக்குப் போய் அவர்களின் மகாஆபிரிக்கத்தைக் அழகாக எழுதிக் கொடுக்க, எத்தனையோ தமிழ் வியாசர்கள் தயாராக இருக்கிறார்கள் அதற்காக, ஆபிரிக்கர்களின மகாஆபிரிக்கத்தை எல்லாம் தமிழர்கள் தமது வேதமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமா. என்னய்யா இது? சும்மா ஜோக்கடிக்கிறீர்களா? 🙂

  40. ///ஆறுமுகநாவலர் கூடத் தான் தமிழில் பைபிளை மொழி பெயர்ப்பதில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் தாபகர் பீட்டர் பேர்சிவல் பாதிரியாருக்கு உதவினார் என்கிறார்கள். அதற்காக ஆறுமுக நாவலரும் பைபிளை அவரது வேதமாக ஏற்று பரப்பியிருக்க வேண்டுமா///

    ஒரு கதையை மொழி பெயர்ப்பு செய்வது என்பது வேறு தானே உருவாக்குதல் எனபது வேறு. பைபிள் ஒரு மொழியில் இருந்து தமிழில் ஆறுமுகநாவலர் மொழி பெயர்த்தார். ஆனால் வியாசர் மகாபாரதத்தை தானே சொந்தமாக எழுதி உள்ளார். இது அவரது அறிவு கூர்மையை காட்டுகிறது. அவ்வளவு பெரிய மகாபாரதம் என்ற நூலை எழுதுவது மிகப்பெரிய சாதனை. ஒரு தமிழன் (வியாசர்) செய்தது அளப்பரிய சாதனை. அவருடைய அறிவு கூர்மையை அளவிட முடியாது. ஆனால் மொழி பெயர்ப்பு என்பது சாதரனமானதுதான். ஒரு பெரிய சாதனை அல்ல. ஆறுமுக நாவலர் அவர்கள் உதவி செய்துள்ளார்கள். அவரும் மிகப்பெரிய அறிவு கூர்மை உள்ளவர். இந்து மதத்திற்காக அரும்பாடு பட்டவர். பல அறிய நூல்களை எழுதியவர்.

  41. // கோவிலைப் பாரமரிக்க நியமிக்கப்பட்டவர்கள் இன்று பெரும்பான்மையினரான கோயில் சொந்தக்காரர்களுக்கு, அதாவது அவர்களின் தாய்மொழிக்கு, அவர்களின் முன்னோர்களின் கோயிலில் தடை விதிக்கிறார்கள். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டிய தேவை தமிழர்களுக்குக் கிடையாது //

    திரும்ப திரும்ப அதே திரிபு.
    அரசாங்க பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் மாணவர்களை பார்த்து இப்போ class நடக்கு அதனால யாரும் பேசக்கூடாது என்கிறார். அப்புறமா interval விடுவாக அப்போ பேசிக்குங்கன்னு சொல்றார். அடுத்த நாள் சிலர் வகுப்புக்கு முனனால் ஒரே ஆர்பாட்டம். என்ன பிரச்சனைன்னு கேட்டா நாங்க மாணவர்களோட தோழர்கள்; ஏன் மாணவர்களை தமிழ் பேச விட மாற்றீயனு ஒரே சத்தம்.
    இது தமிழர்கள் கட்டிய பள்ளி. இதுல தமிழ் பேச கூடாதுன்னு சொல்ல நீ யார்? இந்த ஊர்ல உள்ள பள்ளியில் உன்னை யார் நியமிச்சது அப்படி இப்படின்னு அந்த நாளே முடிஞ்சு போச்சு.
    கதை விளங்குதா?

    //அப்படிக் கண்காணிக்க நியமித்த “திருடனை”, உச்சநீதிமன்றம் போய் அகற்றி விட்டார்கள். என்பதைத் தானே எல்லோரும் இங்கே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.//
    நான் சொன்ன analogy புரியலன்னு நினைக்கிறேன்.
    இரண்டாவது திருடன் கிட்ட: “ஏப்பா நீ கடைக்குள்ள போகாத ஆனா மொதோ திருடன் கடைக்குள்ள என்ன பண்றான்னு பாத்துக்கிட்டே இரு. அவன் ஏதாவது திருக்கரமம் பண்ணினா அவனுக்கு தண்டனை குடு” சொல்ல சொல்றேன்.
    நீதிமன்றம் நிர்வாகம் வேண்டாம்னு தானே சொல்லியிருக்கு. நிர்வாகத்தில கோளாறு இருந்தா தண்டிக்க கூடாதுன்னு சொல்லலையே.

    • அர்ச்சகர் பக்கத்தில் ஒரு அரசாங்க அதிகாரிய நியமிக்கலாமா? அதற்கு அர்ச்சகர்கள் ஒத்துக்கொள்வார்களா?

    • இதற்கு நான் முன்பே பதிலளித்து விட்டேன். இரண்டு திருடன்களும் ஒன்று சேர்ந்து பல்லாண்டுகளாக கொள்ளையடித்த பின்பு, அந்தக் கொள்ளையில் அவர்களுக்கிடையில் சண்டை வந்ததால் தான், போலீசுக்குப் போனார்கள். அதானால் தான் அங்கு நடந்த ஊழல்கள் எல்லாம் வெளியில் வரத் தொடங்கின. அதற்குப் பின்னர் தான் திமுக அரசு அறநிலையத்துறை ஊழியர் ஒருவரை அங்கு நியமித்தது. நீங்கள் அரசையும், திருடர்கள் என்ற\ மாதிரி, VIP க்களுக்கு மட்டும் காசை வாங்கிக் கொண்டு முன்னுரிமை கொடுப்பார்கள் என்பதால் தான், நீங்கள் அந்த ஊழியரையும் திருடனாகக் கருதுகிறீர்களோ என்று நினைத்தேன். அதாவது தில்லையில் தீட்சிதர்கள் தான் தமக்கிடையே ஏற்பட்ட குலறுபடிகளால், ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி, போலீசுக்குப் போனார்கள். இந்த லட்சணத்தில், மீண்டும் அவர்களில் சிலரை மற்றவர்களைக் கண்காணிக்க நியமிக்குமாறு நீங்கள் கூறுவதைப் பார்க்க சிரிப்பாக இருக்கிறது.

  42. மரபு வழிப்பட்டு தில்லைக் கோவில் தீட்சிதர்களுடைய சொத்து இல்லை.தீட்சிதர்கள் தனி வகையறாவினரும் அல்லர்.பெரிய புராணத்தில் குறிப்பிடப்படும் தில்லைவாழ் அந்தணர்கள் தீட்சிதர்கள் கிடையாது. அவர்கள் ஆதி சைவர்கள்.ஆதி சைவர்கள் பிராமணர் அல்லர்.

    நண்பர்கள் பார்க்க தொலைக்காட்சி விவாதம்

    http://www.youtube.com/watch?v=bbSbywOcFQw

    http://www.youtube.com/watch?v=zVXTT0tEJMk
    http://www.youtube.com/watch?v=H7t6D8SUg50

  43. பார்ப்பனர்கள் தந்திரமாக பேசுகிறார்களாம். தில்லைக் கோயில் யாருடைய சொத்து, கோயிலில் தமிழில் பூஜை செய்யலாமா என கேட்டால் பக்கத்துல இருக்குற பாய்ங்க பள்ளிவாசலையே நோண்டிக்கொண்டு இருக்கிரார்கள். முஸ்லீம், கிறித்தவர்களிடம் விவாதித்தால் நல்லதோ கெட்டதோ அவர்களுடையதை பற்றி மட்டுமே பேசுகிறார்கள். உங்களுக்கு ஏய்யா இந்த பொழப்பு. பாய்ங்க பள்ளிவாசல் ஒன்ன இடிச்சாச்சு அப்போ உங்க கோயில ஒன்னையும் இடிச்சறலாமா! மேற்படி கோயில்களில் தமிழில் பூஜை செய்யலாமா? கூடாதா? கோயில்கள் அர்ச்சகர்களுடைய சொத்தா? மக்களுடைய சொத்தா? நேரிடையா பதில சொல்லு.

  44. மீனவப்பெண்ணின் மகனான “வியாசர்” அற்புதமான இதிகாசத்தை எழுதிஉள்ளார். அவர் ஒரு தமிழர் என்று நிருபித்த “”வி + ஆசான் = வியாசான் – வியாசன்”” அவர்களுக்கு எனது உளப்புர்வமான நன்றியை சமர்ப்பிக்கிறேன். இதற்கு அவர் நீண்ட ஆயுளுடன் வாழ “தில்லை நடராசரை” வேண்டி வணங்கி கேட்டுக்கொள்கிறேன். இதுவரை எனக்கு இந்த விஷயம் தெரியாமல் இருந்தது. பெரும்பாலான தமிழர்களுக்கும் மகாபாரதம் எழுதிய வியாசர் தமிழர் என்பது தெரியாது. உலகில் தோன்றிய பல முனிவர்களில் இவரும் ஒருவர் என்றுதான் நினைத்துகொண்டு இருந்தோம். உலகத்தில் இதுவரை யாரும் எழுதாத சாதிக்காததை ஒரு தமிழன் சாதித்து உள்ளன் என்று நினைக்கும்போது உள்ளம் குளிர்கிறது. அதுவும் ஒரு மீனவப்பெண்ணின் மகனான வியாசர் அர்ப்புதங்களை கொண்ட பாரத்தை எழுதி உள்ளார்.

    • “The Bibliographical evidences indicates that the Vedas are written in the Grantha and Nagari scripts, and according to tradition VEDA VYASA, A DRAVIDIAN, compiled and wrote the vEdas. The Grantha scripts belongs to the southern group of scripts and Veda Vyasa being a Dravidian would certainly have used it.”

      http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/11064/3/03_chapter1.pdf

      “The bibliographical evidences indicate that the Vedas are written in the Grantha and Nagari scripts, and according to tradition VEDA VYASA, A DRAVIDIAN, compiled and wrote the Vedas. The Grantha script belongs to the southern group of scripts and Veda Vyasa being a Dravidian would certainly have used it. Since the earliest evidence for Grantha is only in the 5th c. AD, the Vedas were written rather late.”

      -The Development of Scripts in India-

      “Adi Sankara has written interpretations according to the Aryan political concept to Bhagavad Gita, a part of Mahabharatha, written by VEDA VYASA, A DRAVIDIAN, to Brahma Sutra, written by Veda Vyasa and to the Upanishads, compiled by Veda Vyasa, in order to enslave the Dravidians.”

      http://www.rediff.com

      “Valmiki and Veda Vyasa composed the two great epics of India – Ramayana and Mahabharata in Sanskrit. It was VEDA VYASA, A DRAVIDIAN had compiled the Vedic hymns and developed the Vedas in Sanskrit and he too had collected and arranged the Upanishads and also had composed the spiritual books like Brahma Sutra, Bhagavad Gita etc. Kalidasa who had brought out beautiful epics in Sanskrit was also a Dravidian.”

      OKவா 🙂

    • //வியாசர் அர்ப்புதங்களை கொண்ட பாரத்தை எழுதி உள்ளார்//——மகாபாரதத்தில் உள்ள அற்புதங்களின் பட்டியலை சொல்லவா?

  45. ஐன்ஸ்டீன் ஒரு தமிழர் என்பது எத்துனை பேருக்கு தெரியும் ?

    அயன் ஸ்டீ இன் என்பதே அவரது பெயரின் மூலம் ஆகும் .

    மருதன் என்பதன் திரிபே அயன் ஆகும்

    ஸ்டீ என்பதன் கதை சுவாரசியமானது . தமிழர்கள் கொடு மணல் என்னும் ஊரில் இரும்பு ஊருக்கும் எக்கு ஆலையை நடத்தி வந்தார்கள். இரும்பை யவனர்களிடம் வியாபாரம் செய்தார்கள். கிரேக்கத்தில் ஸ்டீ என்பது இரும்பை குறிப்பது . யவனர்கள் இரும்பு விற்கும் மருதன் என்பதை அயன் ஸ்டீ என்று அழைத்தார்கள் அதுவே பின்னர் அயன்ஸ்டீன் ஆக மாறியது

    ஆங்கிலமும் தமிழில் இருந்து வந்தது தான்

    கோ என்றால் மாடு

    cow என்றால் மாடு

    இது எல்லாம் நம்பும்படியாக இல்லை என்று பார்ப்பனர்கள் சொல்வார்கள் . இதற்கான ஆதாரத்தையும் அழித்துவிட்டார்கள் பாவிகள்

    • ஐயோ பாவம்! யாரு பெத்த புள்ளன்னு தெரியலையே?! இப்படி சம்பந்தா சம்பந்தம் இல்லாம தனியா பொழம்புதே என்ன வியாதியொ எண்ணமோ!!!

        • திராவிட ராமரே!!!?? ஆரியர்களை [எங்களை] அவதூறு செய்வதை முதலில் நிறுத்துங்கள்.உலகின் சகல அறிவு துறைகளும் நாங்களே கண்டுபிடித்தோம்.ஐன்ஸ்டின் சார்பியல் தியரி ஆய்வுக்காக சிதம்பரம் வந்தது உங்களுக்கு தெரியும்தானே?.அவர் தியரியை முழுமை செய்யாமல் குழப்பத்தில் இருந்த போது ஒரு தில்லை தீட்சதரை கண்டார்.தீட்சதர் வாய் வேத கோசத்தை முழங்கியது,அவரின் பிருஸ்டபாகம் அபான வாயுவை முழங்கியது.இரண்டையும் ஒரு சேர கேட்ட ஐன்ஸ்டின் மூளையில் மின்னல் வெட்டியது போல் சார்பியல் தியரி முழுமை பெற்றது.இப்பொழுது புரிந்ததா உலக புகழ் பெற்ற ஐன்ஸ்டீன் கண்டுபிடிப்புகளுக்கு காரணம் தீட்சிதர் விட்ட குசுதான் என்று.வீணாக பீத்தாதீர்கள்.

  46. அய்யா நாட்ராயரே! மகாபாரதத்தை வியாசன் சொல்ல, அய்யன் வினாயகனன்றோ எழுதினான்! அப்போது பார்கெர் பேனாவும் இல்லை, பால்பாயிண்ட் பேனாவும் கண்டுபிடிக்கபடாததால் அய்யன் தன் கொம்பையே ஒடித்து எழுதினான் என்பது புராணம்! வியாசன் எழுதிய மகாபாரதம், கிரேக்க இதிகாசமான இலியாட் போறு அரசர்களுக்குள் பெண்நிமித்தமாகவும், மண்நிமித்தமாகவும் ஏற்பட்ட சண்டையாயிருக்க, நடுவில் கிருஷ்ணன் கூறுவதாக வரும் கீதை யார் விட்ட சரடு? பதிலுண்டா?

    அப்புறம் ஏளனம் செய்யும் சில “பகுத்தறிவு” வாதிகளை விமர்சனம் செய்யலாம்!

  47. பார்ப்பன இந்து மதம் இந்தியாவில் இருந்து வேரறுக்கப்பட வேண்டும்

    • ///பார்ப்பன இந்து மதம் இந்தியாவில் இருந்து வேரறுக்கப்பட வேண்டும்///

      இந்துமதம் என்ற ஒன்று உண்ட என்பதை முதலில் சொல்லுங்கள். அதன் பிறகு பார்ப்பன இந்துமதத்தை இந்தியாவில் இருந்து வேரருக்கலாம். யார் இந்து மதத்தை தோற்றுவித்தார்கள் என்று யாராவது கூறமுடியுமா? இந்துமதம் என்பது பண்பாடு கலாச்சார ரீதியானது. மதம் என்ற ரீதியில் யாரும் இதனை எடுத்துக்கொள்ள கூடாது. முஸ்லீம் மதத்தை நபிகள் தோற்றுவித்தார்கள். கிருத்துவ மதத்தை ஏசு தோற்றுவித்தார். இந்து மதத்தை யாரும் தோற்றுவிக்க வில்லை. அலாதியானது. இந்துக்களுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாமல் பாகிஸ்தானை தோற்றுவித்தார்கள். முஸ்லீம்களுக்காக பாகிஸ்தான் உருவானது. ஆகையால் இந்திய இந்துக்களான நாடு. இதனை வேரறுக்க வேண்டும் என்று சொல்ல உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. உங்களையும் (முஸ்லீம்களையும்) நாங்கள் வாழ வைத்துக்கொண்டு இருக்கிறோம். பூவோடு சேர்ந்து நாறும் மனம் பெரும் என்பது போல் இந்துக்களின் பண்பாட்டின் படியும் கலாச்சாரத்தின் படியும் தான் இந்தியாவில் முஸ்லீம்களும் கிருத்துவர்களும் நடந்து வருகிறர்கள். உங்கள் மதம் சார்ந்த நாடுகளில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். அந்த நாட்டு பண்பாடு கலாச்சாரத்தின் படி நீங்கள் நடந்து வருகிறிர்களா? நன்றாக யோசித்துப்பாருங்கள்!!! பாகிஸ்தான் மற்றும் பிற இஸ்லாமிய நாடுகளில் மற்ற மதத்தை சேர்த்தவர்களை எப்படி நடத்துகிறார்கள் என்று உங்களுக்கு தெரியமா?

      • இந்த அனானிமஸ் “அம்பி” யார்னு தெரியலையே அடிக்கடி வர்றார்.

  48. சைவ திருத்தலங்கள் அனைத்திலும் லிங்கங்களே வழிபாட்டில் இருக்கையில் தில்லையில் மட்டும் ஏன் நடராஜர் சிலை வழிபட படுகிறது?மூல லிங்கம் என்னும் சந்நிதி கிழக்கு கோபுரத்திற்கு நேரே பிரகாரங்களுடனும் இருந்தும் கொடிமரம் அகற்றப்பட்டு முக்யத்துவம் இன்றி இருப்பது என்? தில்லை தீட்சிதர்களில் முக்கால் வாசிப்பேர் சணல் நிற முடி பழுப்பு நிற கண்கள் மற்றும் உடம்பில் பழுப்பு புள்ளிகளுடனும் இருப்பது ஏன்?அங்கிருந்து என் நகரவே மாட்டேன் என்கிறார்கள்?உலகமே தேடும் ark of the covenant ஐ எடுத்து வந்து பத்திரமாய் பாதுகாக்கும் யூதர்களா அவர்கள்? என்பதை தமிழர்கள் ஆராயவேண்டும்.

    • //சைவ திருத்தலங்கள் அனைத்திலும் லிங்கங்களே வழிபாட்டில் இருக்கையில் தில்லையில் மட்டும் ஏன் நடராஜர் சிலை வழிபட படுகிறது?///

      இறைவனை(சிவனை) கூத்தனாக கண்டதும் அவனை ஆடவல்லானாக்கி வழிபட்டதும் தமிழர்களின் பாரம்பரியம் மட்டுமே. அதில் தீட்சிதர் மட்டுமல்ல, எந்த இந்தியக் கொம்பனும் பங்கு கேட்க முடியாது. நடராச மூர்த்தம் அல்லது சிவனைக் கூத்தனாக உருவம் கற்பித்தவர்கள் தமிழர்கள். நடராசர் தமிழர்களுக்கு, தமிழ்நாட்டுக்கு மட்டுமே சொந்தமான கடவுள். இங்கிருந்து தான் சோழர் ஆட்சியின் பின்னர் இந்தியாவின் ஏனைய பகுதிகளுக்குப் பரவியது. இலங்கைத் தமிழராகிய சேர். ஆனந்ததகுமாரசாமி, தனது சிவநடனம் கட்டுரையாலும், வேறுபல நூல்களாலும் மேலை நாடுகளுக்கு நடராசனை அறிமுகம் செய்து வைத்தார். இதில் தீட்சிதர்களுக்கோ அல்லது எந்தப் பார்ப்பனர்களுக்கோ அல்லது தமிழரல்லாத எவருக்குமே தொடர்பு கிடையாது.

      நடராஜர் சிலை தில்லையில் மட்டும் இல்லை. சிவபெருமான் கூத்தாடும் ஐந்து சபைகள் தமிழ்நாட்டில் உண்டு. இந்தக் கோயில்களிலும் சிவபெருமான் நடராசன் அல்லது ஆடவ்ல்லானாக/கூத்தனாக தமிழர்களால் வழிபடப் படுகிறார்.

      சிதம்பரத்தில்- பொன்னம்பலம்/சிற்றம்பலம்(சிற்சபை)/ கனகசபை – Golden Hall

      மதுரையில்- வெள்ளியம்பலம் – Rajatha Sabha or Silver Hall,

      திருவாலங்காட்டில்- இரத்தினசபை – Ruby hall (இங்குதான் காரைக்காலம்மையார் சிவனின் ஆட்டத்தை ரசித்தார்)

      திருநெல்வேலியில் – தாமிரசபை – Copper Hall

      திருக்குற்றாலத்தில் சித்திரசபை – Hall Art or pictures

      தொடரும்….

      • //மூல லிங்கம் என்னும் சந்நிதி கிழக்கு கோபுரத்திற்கு நேரே பிரகாரங்களுடனும் இருந்தும் கொடிமரம் அகற்றப்பட்டு முக்யத்துவம் இன்றி இருப்பது என்?///

        தமிழ்நாட்டில் சிவபெருமான் கூத்தாடும் ஐந்து சபைகளாகிய, மதுரை மீனாட்சியம்மன் கோயில், தில்லை நடராஜர் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், திருவாலங்காட்டு சிவன் கோயில், திருக்குற்றாலநாதர் கோயில் எங்குமே நடராஜத் ஆடும் சபைகளின் முன்னால் கொடிமரம் கிடையாது.

        //தில்லை தீட்சிதர்களில் முக்கால் வாசிப்பேர் சணல் நிற முடி பழுப்பு நிற கண்கள் மற்றும் உடம்பில் பழுப்பு புள்ளிகளுடனும் இருப்பது ஏன்?///

        நானும் சிதம்பரத்துக்குப் போயிருக்கிறேன். அப்படி ஒன்றும் பெரிய வேறுபாடு தெரியவில்லை. அப்படி யாராவது இருந்தால், அது படையெடுத்து வந்த துலுக்கர்களின் கைங்கரியமாக இருக்கலாம். துருக்கிக்கு நான் சுற்றுலாவுக்குப் போயிருக்கிறேன் அங்கும் முக்கால் வாசிப்பேர் சணல் நிற முடி பழுப்பு நிற கண்களுடன் தான் காணப்பட்டார்கள். 🙂

        ///அங்கிருந்து என் நகரவே மாட்டேன் என்கிறார்கள்?///

        வேறு எந்தநாட்டுக்கும் போய், அந்த நாட்டு மக்களின் முன்னோர்களின் கோயில்களை அல்லது சொத்துக்களை அபகரித்தால், அவர்கள் தமிழர்களைபோல் ஞே என்று எருமை மாடுகள் மாதிரி பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் அதனால் . தான் அவர்கள் நகர மறுக்கிறார்கள் போல் தெரிகிறது.

        //உலகமே தேடும் ark of the covenant ஐ எடுத்து வந்து பத்திரமாய் பாதுகாக்கும் யூதர்களா அவர்கள்? என்பதை தமிழர்கள் ஆராயவேண்டும்.///

        Nice Try, தம்மை யூதர்களுடன் எப்படியாவது தொடர்பு படுத்திப் பார்ப்பதில் பூரிப்படையும் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் சிலரை நானும் சந்தித்திருக்கிறேன். அவர்களின் ஒருவர் தான் ஆனந்தநடராசன் போல் தெரிகிறது. 🙂

  49. கோயில் மற்றும் ஆவுடையார் கோயில் என்றே ஆதிகாலத்திலிருந்து இத்தலம் குறிப்பிடப்படுகிறது! இதன்படி பார்த்தால் மூலஸ்தான சிவலிஙகம் உள்ள இடமே புராதன ஆலயமாக இருந்திருக்கிறது! இப்போது இருக்கும் சிற்றம்பலம் எங்கும் நிறைந்த அதே சமயத்தில் ஒன்றுமேயில்லாத அண்ட வெளியை வணங்கும் சபையாக சித்தரிக்கப்பட்டிருந்தது! சாங்கிய துறவிகள் தனி கோயிலாக அதை நிருவியிருக்க வேண்டும்! பின்னர் காலம் மாற, ஆட்சியரும் மாற, துறவிகள் துரத்தப்பட்டு, ஆடல் பாடல்களிலும், ஆட்பிடிப்பதிலும் தேர்ந்த பார்பன ஆதிக்கம் வந்தபின், அவர்களின் ததுவ மூர்த்தியாக நடராசர் நிருவப்பட்டார்! சாங்கிய கடவுளான மக சக்தி தோற்கடிக்கப்பட்டு, ஆண்குறியைகாட்டி நடனமாடிய நடராசர் சபானாயகரானார்! முதலில் சக்திக்கு அங்கு இடமே இல்லை! பிற்காலத்தில் சிவகாம சுந்தரிக்கு தனியான கோவிலே ஏற்படுத்தப்பட்டது!

    • //சாங்கிய துறவிகள் தனி கோயிலாக அதை நிருவியிருக்க வேண்டும்!//——அய்யா! சாங்கியம் இன்று வரை ஒரு தரிசன மரபாகவே நீடிக்கிறது.அது ஒரு மதமாக வளரவில்லை அதற்கு வழிபாட்டு தலங்களும் இல்லை.நீங்கள் இப்படி அள்ளிவிடுவதை நிறுத்துங்கள்.

      • //அய்யா! சாங்கியம் இன்று வரை ஒரு தரிசன மரபாகவே நீடிக்கிறது.அது ஒரு மதமாக வளரவில்லை அதற்கு வழிபாட்டு தலங்களும் இல்லை.நீங்கள் இப்படி அள்ளிவிடுவதை நிறுத்துங்கள்.// அய்யா!நீங்கள் (ஆரிய பார்ப்பனர்), வந்தபிறகு தானய்யா மக்களுக்கு மதம் பிடித்தது!அதற்கு முன்னர் மதம் என்ற பெயரே இல்லையே! நீங்களும் இப்படி அள்ளிவிடுவதை நிறுத்துங்கள்.

        • நான் ஆரிய பார்ப்பனனா? என்னைலே இருந்து? நாயுடுகாரு புழுகுறதுன்னு முடிவு பன்னி வந்துட்டா அதுக்கு எல்லை ஏது? சாங்கித்துக்கு வழிப்பாட்டு தலம் இருக்கான்னு கேட்டா அதுக்கு பதில் சொல்லாம போறதுதான் வாதமா? மதமா உருவானதுக்கு தான் வழிப்பாட்டு தலம் இருக்கும் அத புரிஞ்சுக்காம என்ன வாதம் பன்ரீர்?

          • நான் நாயுடுவா? என்னைலே இருந்து? ஏதாவது கனவு கண்டு பாதியில் எழுந்து விட்டீரா? உஙகள் ஆரிய பார்ப்பனர்களின் வருகைக்கு பின்னர், சாஙகிய கோவில்களில் பார்பனர் புகுந்து அவர்கலளை விரட்டிவிட்டனரே! சிதம்பரமும், காஞ்சி காமாட்சி கோவிலும் சாங்கிய கோவில்களே! இது பற்றிய ஆராய்ச்சி நூலொன்றை பல ஆண்டுகளுக்கு முன்நான் படித்திருக்கிரேன்! அண்ணாமலை யுனிவர்சிட்டி ஆராய்ச்சி பிரிவில் அக்கட்டுரைக்கு முனைவர் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது!னெட்டில் பாருங்களேன்!

            //மதமா உருவானதுக்கு தான் வழிப்பாட்டு தலம் இருக்கும் .//

            அது என்ன புது நியுட்டன் விதியா? அத புரிஞ்சுக்காம என்ன வாதம் பன்ரீர்?தெல்லாம் சென்ற ஆண்டே வினவில் விவாதித்தாயிற்று!நீவிர் புதிய அம்பியோ?

            • எனது பின்னுட்டம் 47.1.1.1 நீங்க புரிஞ்சுகிட்ட அழகுலேயே தெரியுது நீங்க ஆராச்சி கட்டுரையை எப்படி படிச்சு இருப்பீங்கன்னு.இதுல நான் வேற படிக்கனுமா தேவைதான்.

              • 47.1.1.1 தேவாரநாயனார் அய்யர் அல்ல என்பதற்கு நிரூபணமா என்ன? அம்பி கூட இதைவிட அற்புதமாக கமென்ட் அடிப்பாரே! அப்புறம் நீஙக கூட என்னை நாயுடு என்று எந்த ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்தீர்? இந்த லட்சணத்தில் நீஙகள் எந்த ஆராய்ச்சி நூலையும் படித்தும் பயனிலை தான்!

                சிவகாமி அம்மனுக்கு தனி கோவில் ஏற்பட்ட வரலாறை தெரிந்தவர்கள் விளம்பலாம்! நண்பர் வெங்கடேசன் தேடிக்கொண்டிருக்கிரார் என நினைக்கிறேன்!

                • அந்த கமெண்ட அற கொறையா படிச்சுதான் நீங்க உளர்ரீங்க.என்னுடைய எல்லா மறுமொழிகளுமே பார்பனருக்கு எதிராகதான் உள்ளது.இந்த விவாதத்திலும் மற்றும் பல விவாதத்திலும்.உங்களுக்கு நிறுபிக்க எந்த அவசியமும் எனக்கு இல்லை.என்னை பார்ப்பனர் என்று முதலில் அழைத்தது நீங்கள்தானே? எப்படி கண்டுபிடித்தீர்கள் அதை சொல்லுங்க அப்பறம் நான் சொல்கிறேன்.

                  • சமஸ்கிருதத்திற்கு வக்காலத்து வாங்கும் நீங்கள், சாங்கிய கோவில்கள் இருந்தது என்ற ஆதாரத்தை கூறியும், பார்ப்பன இந்து மதத்தை போற்றும், பகுத்தறிவு வாதிகளை ஏளனம் செய்யும் நீங்கள் வேறு யார் என்று ஊகிப்பது? பசுத்தோல் போர்த்திய பலரைநான் கண்டிருப்பதால்நான் அப்படி ஊகித்தேன்! பகுத்தறிவு என்றாலே பார்பனருக்குத்தான் பற்றிக்கொண்டு வரும்; ஏனேன்றால் அவர்களது சுரண்டல் வாழ்வாதாரத்தையே அது பாதிப்பதால்! உங்களுக்கு ஏன் இந்த காழ்ப்பு?

                    • //சமஸ்கிருதத்திற்கு வக்காலத்து வாங்கும் நீங்கள்//

                      அது எப்பண்ணே? வக்காலத்து வாங்குற பின்னுட்டம் இருந்தா சொல்லுங்கண்ணே.

                      //சாங்கிய கோயில்கள் இருந்தது என்ற ஆதாரத்தை கூறியும்,//

                      எந்த ஆதாரத்தைணே கூறினிய?

                      //பார்ப்பன இந்து மதத்தை போற்றும்//

                      இதுக்கும் பின்னுட்ட ஆதாரம் இருக்காண்ணே

                      //பசுத்தோல் போர்த்திய பலரைநான் கண்டிருப்பதால்நான் அப்படி ஊகித்தேன்!//

                      நல்லா ஊகித்திய போங்க நான் ஏன் பசுந்தோல் போத்த போறேன்.நான் சிங்கம்னே[ஹா,ஹா,ஹா]

                      //பகுத்தறிவு என்றால் பார்பனருக்குத்தான் பற்றிக்கொண்டு வரும்//

                      உங்க பகுத்தறிவ பாத்தா யாருக்கும் பத்திகிட்டுதான்.வாய்க்கு வந்த அடிச்சுவிடுறது பகுத்தறிவு இல்லண்ணே

                      //உங்களுக்கு ஏன் இந்த காழ்ப்பு?//

                      காழ்ப்புணர்ச்சி எல்லாம் இல்லண்ணே.திராவிட நாடு,திராவிட வாதம் எல்லாம் பேசுறவங்க தமிழன கெடுக்கறவங்க என்பது என் அபிப்ராயம்.தமிழன் திராவிடத்தால் கெட்டான்.

                • எல்லா சிவாலயங்களிலும் அம்மனுக்கு தனி சன்னிதி உண்டு..

                  // சாங்கிய கடவுளான மக சக்தி தோற்கடிக்கப்பட்டு, ஆண்குறியைகாட்டி நடனமாடிய நடராசர் சபானாயகரானார்! //

                  எந்த ஊரில் நடராசர் அம்மணமாக நடமாடும் சிலை உள்ளது என்று முன்பே கேட்டிருக்கிறேன்..! சிவபெருமானைப் போல் தில்லைக் காளி காலைத் தூக்கி நடமாடாததின் காரணம் காளியின் ஆடை அப்படி செய்ய இடமளிக்காதிருந்திருக்கலாம்.. காளியும் சிவபெருமானைப் போல் இடையில் இறுக்கமான ஆடை அணிந்திருந்தால் ஒரு வேளை ஊர்த்துவ தாண்டவம் ஆட முயன்றிருக்கலாம்..!

                  // அம்பி கூட இதைவிட அற்புதமாக கமென்ட் அடிப்பாரே! //

                  நான் எப்போது அய்யா இது போன்று கமெண்ட் அடித்திருக்கிறேன்..?! நீங்கள் இரு பிரம்மஹத்திகளும் நடத்தும் விவாதத்தில் என்னை ஏன் இழுக்கிறீர்கள்..?! இன்னோரு பிரம்மஹத்தியான வியாசர் மண்ணின் மைந்தர்களான உங்கள் சண்டையை தீர்த்து வைப்பதை விட்டுவிட்டு நம்மவா குடுமியை மட்டுமே குறிவைத்து உலவிக் கொண்டிருக்கிறார்.. எப்படியோ போங்கள்..

                  • அம்பி, பார்ப்பனரை கொலை செய்தால்தானே பிரஹத்தி பிடிக்குமாம்.அவங்க பன்ற பிராட கண்டுபிடித்து சொன்னாலுமா பிரமஹத்தி பிடிக்கும்? இது என்னங்க உங்க ஆட்டையிலேயே இது புது ஆட்டையா இருக்கு.

                    • அம்பி! முதல் பிரம்மகத்தி உங்கள் அயொத்தி ராமன்தானே! அவன் என்ன குறைந்தா போய்விட்டான்! அது இருக்கட்டும், எந்த ஊரில் அம்மண நடராஜர் சிலை இருக்கிறது என்றா கேட்டீர்கள்? தமிழ்னாட்டில் இல்லைதான்! ஆனால் சிவன் பார்வதி புணரும் நிலையில் நடராஜர் சிலைக்ள் வட இந்தியாவில் உள்ளனவே! சிவலிங்கம் கூட சிவனது அறுந்து விழுந்த ஆண்குறியை, பார்வதி தனது பெண்குறியில் பொருத்தி காப்பாற்றிய அடையாளச்சின்னம் என்றுதானே பர்ப்பன கதைகள் கூற்கின்றன! அதை தமிழ்னாட்டில் சைவ சித்தாந்திகள் ஒப்புக்கொள்வதில்லை!

                      பிட்ஷாண்டவ மூர்த்தி சிலைகளை பார்த்ததில்லையா?

                      விசிறி மடிப்பு மடிசார் கட்டி பரதநாட்டியம் ஆடும் உற்த்துவ தாண்டவம் ஆடுவதில்லையா? எல்லோராலும் அப்படி முடியாதுதான்! எம் ஜி யாரின் அரசவை நர்த்தகி அப்படி ஆடியிருக்கிராரே! ஆட முடியாமல் அம்மை ஆட்டத்தை நிறுத்தவில்லை! இந்த கதை முழுவதும் ஆணாதிக்க வெறியர்களால், சைவ சித்தாந்தம் அறியாத மூடர்களால் புனையப்பட்டது! தங்கள் பிழைப்புக்காக, ம்ட்டாள் பகதனை ஏமாற்றி பணம் பறிக்க, திருப்பதி ஏழுமலையானைக்கூட விலங்கு பூட்டி வைப்பதில்லையா?

                    • // முதல் பிரம்மகத்தி உங்கள் அயொத்தி ராமன்தானே! அவன் என்ன குறைந்தா போய்விட்டான்! //

                      ராவணய்யர் மட்டும் என்ன குறைந்தா போய்விட்டார்..?! திராவிடர் தலைவராகிவிட்டாரே..!

                      // எந்த ஊரில் அம்மண நடராஜர் சிலை இருக்கிறது என்றா கேட்டீர்கள்? தமிழ்னாட்டில் இல்லைதான்! ஆனால் சிவன் பார்வதி புணரும் நிலையில் நடராஜர் சிலைக்ள் வட இந்தியாவில் உள்ளனவே! //

                      சிலைகளை யார் வேண்டுமானாலும் செதுக்கலாம்.. அவற்றை யார் பூசை செய்து வணங்குகிறார்கள்..?!

                      // சிவலிங்கம் கூட சிவனது அறுந்து விழுந்த ஆண்குறியை, பார்வதி தனது பெண்குறியில் பொருத்தி காப்பாற்றிய அடையாளச்சின்னம் என்றுதானே பர்ப்பன கதைகள் கூற்கின்றன! //

                      அந்த கதைகளுக்கும் லிங்கத்திற்கும் என்ன தொடர்பு..?! சுயம்பு லிங்கங்களில் எந்த குறிகளும் காணப்படவில்லை.. லிங்கம் தத்துவார்த்தமானது, சிவபெருமான் அடிமுடியற்ற அக்கினித் தூணாக, அருவுருவற்று காட்சியளித்ததின் பௌதீக குறியீடு என்பது சைவ நம்பிக்கை.. சிவபெருமான் லிங்கோத்பவராக லிங்கத்தினுள் காட்சியளிப்பதை பல ஆலயங்களின் பிரகாரங்களில் காணலாம்..

                      // பிட்ஷாண்டவ மூர்த்தி சிலைகளை பார்த்ததில்லையா? //

                      அவர் எப்போது நடனம் ஆடினார்..?!

                      // விசிறி மடிப்பு மடிசார் கட்டி பரதநாட்டியம் ஆடும் உற்த்துவ தாண்டவம் ஆடுவதில்லையா? //

                      காளி விசிறி மடிப்பு மடிசார் அணிந்திருந்தால் அதைச் செய்திருப்பாள் என்பது சிந்திக்கத்தக்கது..

                      // எம் ஜி யாரின் அரசவை நர்த்தகி அப்படி ஆடியிருக்கிராரே! //

                      உடன்பிறப்பே, உங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை இங்கே கொட்டவேண்டாம்..

                  • ///பிரம்மஹத்தியான வியாசர் மண்ணின் மைந்தர்களான உங்கள் சண்டையை தீர்த்து வைப்பதை விட்டுவிட்டு நம்மவா குடுமியை மட்டுமே குறிவைத்து உலவிக் கொண்டிருக்கிறார்..//

                    தமிழர்கள் எப்படித் தான் அவாளின் குடுமியைப் போட்டு உலுப்பினாலும், தமிழர்களை விட மாட்டேன் என்று அடம்பிடிக்கும் பார்ப்பனப் பிரமஹத்திகளுடனும் அவர்களின் வாலயங்களுடனுமே என்னுடைய நேரம் போய்விடுகிறது. மண்ணின் மைந்தர்களின் பங்காளிச் சண்டை ஒருவழியில் ஒற்றுமையாகத் தீர்ந்து போகும், உட்பகையில் அதாவது கூடவிருந்தே தமிழர்களுக்குக் குழிபறிப்பவர்களின் மீது தான் தமிழர்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். 🙂

                  • அம்பி அவர்களே, வருக! எல்லா ஊர்களிலும் அம்மனுக்கு தனி சன்னதி இருக்கும், கோவிலல்ல! திருவாரூரில், சிவனுடன் திருமணம் ஆகாத நிலையில், அம்மன் தனி கோயில் கொண்டுள்ளார்! சிதம்பர ரகஸ்யம் தாத்தாச்சாரியார் ஏற்கெனவே கூறிவிட்டாரே! வேத விற்பன்னராகிய(டாக்டர்) அவரது கூற்றுக்கு, இது வரை யார் ஆதாரத்துடன் மறுத்திருக்கிரார்கள்?

                    • // எல்லா ஊர்களிலும் அம்மனுக்கு தனி சன்னதி இருக்கும், கோவிலல்ல! //

                      பெயர்தான் சன்னிதி.. மற்றபடி அம்மன் கோவில் என்றே கொள்ளும் வகையில் தனி கொடி மரம், தனி கோபுரம், தனி பிரகாரம், பரிவார தேவதைகள் என்று சிவபெருமானுக்கு இணையாகவே அம்மன் அருளாட்சி நடத்துவதை உமையொருபாகனான ஈசன் கண்டு களிக்கிறான்..

  50. சிதம்பரத்தின் உண்மையான மூர்ததமான அருவ ரக்சியம் ஒரங்கட்டப்பட்டு, உற்சவ மூர்த்திகளாக நடராசரும், சிவகாமியும் முக்கிய மூர்த்தங்களாயின! மூலஸ்தானத்தில் சிவலிஙம் கிழக்கு பார்த்து இருக்கையில், தனி சன்னதியில், அம்மன் தெற்கே பார்த்தவாறு இருக்கிறது! நடராஜருக்கென்று தனியாக மூல கல்விக்கிரகம் இல்லாததலும், சிவகாமிக்கு தனி பிரகாரத்துடன் கூடிய பெரிய கோவிலே இருப்பதாலும், சிவமசுந்தரி சமேத நடராஜர் பிற்சேர்க்கையாக இருக்க வாய்ப்புள்ளது!அதாவது தீக்ஷிதர்கள் வந்தபோது!

    //தில்லை தீட்சிதர்களில் முக்கால் வாசிப்பேர் சணல் நிற முடி பழுப்பு நிற கண்கள் மற்றும் உடம்பில் பழுப்பு புள்ளிகளுடனும் இருப்பது ஏன்?//

    உண்மையில் பல தீக்ஷிதர்கள், அவ்வளவு ஸ்மார்ட் அல்லாததால், பிழைக்கும் கலை அறியாதலால், வறுமையில்தான் இருக்கிரார்கள்! சிலர் மட்டுமே, கட்டளை என்ற பெயரில் வேளாள பக்தர்களிடமிருந்தும், வேறு வழிகளிலும் சம்பாதிக்கிரார்கள்! உலகெஙகும் வியாபித்துள்ள ஊழல் அங்கேயும் உண்டு!

    • பஞ்ச பூதங்களின் சேர்க்கையே இந்த உலகம் என்பது தமிழர்களின் அறிவியல்.இதில் முக்கியமானது ஆகாயம்[வெளி] பற்றிய அறிவு.ஏதுமற்ற ஒன்றை இருப்பாக கொண்டு அதில்தான் அனைத்தும் உள்ளது என்று வகுத்தனர்.சிதம்பரம் பஞ்ச பூத தலங்களில் ஒன்றாகிய ஆகாய தலம்.சைவ சித்தாந்தம் இந்த பிரபஞ்சத்தை சிவ சக்தி நடனமாக உருவகிக்கிறது[நேர்,எதிர் விசைகளின்].எனவே சிவகாமி முன்னால் வந்தது பின்னால் வந்தது என்று குழப்பாதீர்கள்.

      • //பஞ்ச பூதங்களின் சேர்க்கையே இந்த உலகம் என்பது தமிழர்களின் அறிவியல்.இதில் முக்கியமானது ஆகாயம்[வெளி] பற்றிய அறிவு.ஏதுமற்ற ஒன்றை இருப்பாக கொண்டு அதில்தான் அனைத்தும் உள்ளது என்று வகுத்தனர்..// சரிதான்! இறையை ஆணும் பெண்ணமற்ற ஆகாய வெளி என்றான பின் சக்தி தனியாக எங்கிருந்து வரும்?

        //சைவ சித்தாந்தம் இந்த பிரபஞ்சத்தை சிவ சக்தி நடனமாக உருவகிக்கிறது[நேர்,எதிர் விசைகளின்].//

        என்னே நும் அளப்பு!

        சைவ சித்தாந்தம் பின்னாளில் வந்தது, சக்தியை பேதம் காட்டி பிரித்தது! சிவகாமிக்கு தனியான கோவில் ஏற்பட்டது ஏன்? எப்போது? யாரால்? தெரிந்தால் பகரும், அன்றேல் விலகும். உம்மை யார் குழம்பச்சொன்னது? குழப்புபவருக்கு எல்லாம் குழப்பமாகத்தான் தெரியும்!

        • நீங்க அளக்குறதுதான் தாங்க முடியல? சைவ சித்தாந்தம் எப்ப உருவானுச்சுன்னு கால கணக்கோட விளக்கும் அல்லது விளகும்.

        • மிக நன்றி சூரியன்! சைவ சித்தாந்தம் திருமூலரின் திருமந்திரம் வெளியான காலத்தில் தான் தோன்றிரயிருக்க வேண்டும்! அவரின் இயற்பெயர், வரலாறு,காலம் யாருக்கும் தெரியாது! ஆனால், திருவள்ளுவரை போல, அக்கால பார்ப்பன ஆதிக்கத்தில், ஆரிய வேதாந்த கருத்துகளுக்கு மாறுபட்டு சித்தாந்த நூலை இயற்றியிருக்கிரார்! ஆனால் அவரின சித்தாந்த கருத்துக்கள் தமிழ்மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டமையால், அவரர் தஙகள் சாதி என்று சொந்தம் கொண்டாடுகின்றனர்! அவர் வழியிலேயே மெய்கண்டாரெளம், மானிக்கவாசகர், தாயுமானவர் மற்றும் வள்ளலாரும் சைவத்தை வளர்த்ததாக கூறுவர்!நான் சைவ சித்தாந்தம் தனியாக படித்து தீட்ச்சை பெறவில்லை! ஆனால், திருமந்திரம், அருட்பா, ம பொ சி யின் ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ மூலமாக அறிந்தேன்! பார்பனர் பிழைப்புக்காக அடித்த கூத்துகளையெல்லாம், ‘கலை உரைத்த கற்பனைகள்’ என்று வள்ளலார் புறந்தள்ளினார்!

          • “பதிபசு பாசம் எனப்பகர் மூன்றிற்”-{திருமந்திரம்-115]-இந்த பாடல் திருமந்திரத்தில் காரண ஆகமத்தின் பிழிவாக உள்ள முதல் தந்திரத்தில் உள்ளது.சைவ சித்தாந்தத்தில் உள்ள அனாதி முப்பொருள்களை பேசும் இப்பாடலில் “பகர் மூன்றிற்” என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்?.நீண்ட காலமாக சொல்லபட்டு வருகிற,சொல்லி வருகிற என்றுதான் அனைத்து உரை ஆசிரியர்களும் பொருள் கொள்கிறார்கள்.நீங்கள் வேண்டுமானால் புது உரை ஒன்றை எழுதுங்கள் ஏற்றுகொள்ளலாம்.

        • “நீலாங்க மேனியள்…….மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்”–[திருமந்திரம்-77]–இந்த திருமந்திரத்ல “நீலாங்க மேனியள்”–யாரு? அவங்க ஆடுன கூத்து என்ன என்று சொல்ல முடியுமா? இல்ல திருமந்திரத்துக்கும் சைவ சித்தாந்ததுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையா?[தமிழ்ல எழுதுங்க பாஸ். தமிழன் தமிழ்ல எழுதறத்துக்கு வெக்க பட கூடாது]

          • @சூரியன், திருமந்திரத்தில் ஒன்பதாம் தந்திரம் [மகுட ஆகமத்தின் சாரமானது] பாடல்கள் 2722 முதல் 2803 வரை உள்ள திருமந்திர பாடல்களின் [81] பொருள் தெரியுமா? தலைப்புகளை சொல்கிறேன் 1.திருகூத்து தரிசனம் 2.சிவானந்த கூத்து 3.சுந்தர கூத்து 4.பொற்பதி கூத்து 5.பொற்றில்லை கூத்து 6.அற்புத கூத்து நீங்கள் மூன்று வருடம் சைவ சித்தாந்தம் படித்தவர்.எனவே இது குறித்து விளக்குவது எளிதுதான்.இதில் எதிலும் சிவ சக்தி நடனம் இல்லையா? திருமந்திரம் சைவ திருமுறைகளில் ஒன்றுதானே.அல்லது உங்களுக்கு சிவஞான போதம் மட்டும்தான் சைவ சித்தாந்தமா?

            • அய்யா நாயனாரே! திருமந்திரம் பற்றி உமது விளக்கங்களுக்கு நன்றி! ஆனால் சிதம்பர ரகசியம் பற்றி எனது அய்யம் தீர்ந்தபாடில்லை! நீஙகள் கூறிய மற்ற சிவ தலஙகளிலும் நடராஜர் மூல விக்கிரகமாக இல்லை! சிதம்பரத்தில் நடராஜர் உற்சவ மூர்த்தமே! கல்லில் செதுக்கிய மூல விக்கிரகம் இல்லை! ஆனந்தநடராஜர் என்று ஒரு சிறிய சன்னதி உண்டு! அதனால் இப்போதுள்ள கனகசபை பிற்கால ஏற்பாடாக இருக்க வேண்டும்! இந்த நடனமூர்த்தி பிரபல மடைந்ததும் , மற்ற சிவாலயங்களிலும், இப்போது அய்யப்பன் சன்னதிகள் தோன்றியது போல, தோன்றியிருக்க வேண்டும்! திருவாரூரில் அஜபானடன தியாகராஜர், முன்னைய அம்மன் சன்னதியை ஆக்கிரமித்தார்! மதுரையில்நடராஜர் கால்மாற்றி ஆடினாராம்! ஊருக்கு ஊர் இந்த நடராஜனின் திருவிளையாடல் ஒவ்வோரு மாதிரி போலும்!

              • //சிதம்பர ரகசியம் பற்றி எனது அய்யம் தீர்ந்த பாடில்லை//

                ஆகாச தலம் சிவசக்தி நடனம் எல்லாத்தையும் சொல்லியாச்சு.அப்புறம் என்ன அய்யம்.சிதம்பரத்தை குறிக்கும் அனைத்து பாடல்களும் அதை திருசிற்றம்பலம்,பொன்னம்பலம் என்றுதான் கூறுகிறது.”தப்பில்லா மன்றில் தனிகூத்து கண்டபின்” என்று திருமந்திரம் சொல்கிறது.அது பிற்காலத்தில் உருவானது என்றால் நீங்கள்தான் ஆதாரத்துன் மறுக்க வேண்டும்.

                //அஜபானடன தியாகராஜர்,முன்னைய அம்மன் சன்னதியை ஆக்கிரமித்தார்!//

                அஜபா நடனமா? அது நீங்க கண்டுபிடித்ததா? ஆஜபா என்றால் ஜபிக்காத,உச்சரிக்காத என்று பொருள்.அஜபா மந்திரம்தான் உண்டு.தமிழில் இதை அசபை என் கிறார்கள்.”குண்டலி அதனில் கூடிய அசபை விண்டெலும் மந்திரம் வெளிபட உரைத்து”–[அவ்வையின் விநாயகர் அகவல்]

                //மதுரையில் கால்மாற்றி ஆடினாராம்!//

                ஒரு பாண்டிய மன்னனின் பக்திக்கு மகிழ்ந்து கால் மாற்றி ஆடினாராம்.தத்துவ மரபில் வேறு பொருளும் உண்டு.அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை? பகுத்தறிவுபடி அப்படி ஆடகூடாதா?

                • அய்யா! உங்களுக்கு தெரியவில்லை என்றால், அது இல்லை என்று சாதிக்காதீர்! திருவாரூரில் தியாகேசர் தேர் திருவிழாவுக்கு எழுந்தருளும் போது அஜபாநடனத்தில் வந்து காட்சியளிப்பார்! ஊத்சவ மூர்தியை மேலும் கீழும் அசைத்து,நாம் மூச்சு விடும்போதுநமது இருதயத்தில் உறையும் இறவனும் மேலும் கீழும் அசைவதாக அய்தீகம்!

                • அய்யா நாயனாரே! 1.திருகூத்து தரிசனம் 2.சிவானந்த கூத்து 3.சுந்தர கூத்து 4.பொற்பதி கூத்து 5.பொற்றில்லை கூத்து 6.அற்புத கூத்து ஆகியவை சிவன் ஆடியதாகவே இருக்கட்டும்! தில்லை காளியுடன் போட்டியிட்டு அவளை வென்று, விலஙகிட்டதாகவே சிதனம்பர தலபுராணம் கூறுகிறது! அதைத்தான் தாத்தாச்சாரியாரும் கூறுகிரார்! திரு மூலர் குறிப்பிடும் சிவ தாண்டவம் வேறு!அது சிவ பார்வதியின் காஸ்மிக் டான்ஸ்! சும்மா விடாதீர் உடான்ஸ்!

                  நீங்கள் ஒரு போலி பார்ப்பன எதிர்ப்பாளர் என்று நான் சந்தேகித்தது சரியே! நெட்டில் காப்பியடித்த திரு மந்திர வரிகளை கொஞசம் சிந்தித்து பாருங்கள்!

                  அருணகிரியாரின் ‘அதல சேடனாராட……’ என்ற பாடலிலும், சிவ தண்டவத்தின் போது அனைத்து தெய்வங்களும் ஆடினர் என்று பாடிய காட்சியை கண்ணால் பாருங்கள்! இவர்கள் காட்சியில் யாரும் தோற்கவில்லை, யாரும் ஜெயிக்கவில்லை! சிதம்பர ரகசியம் வேறு வகையானது! பாமரத்தனமானது!

                  திருவாரூரில், திருமால் பூஜித்த தியாகராஜர், பக்தனின் நெஞசத்தில் ஆடுவதாக , அஜபாநடனம் மிகவுகூறப்படுகிறது!நீர் சமஷிருத டிக்ஸ்னரியை பார்த்து சொல்லும் பொருளிலல்ல!

                  • //அதைத்தான் தாத்தாச்சாரியாரும் கூறுகிரார்//

                    யார் இந்த தாத்தாச்சாரியார்.அவர் என்ன கூறினார். எதாவது இணைப்பு அல்லது அவரது புத்தகங்களின் விபாரங்கள் உங்களிடமிருந்தால் தயவு செய்து தரவும்.

                  • //திரு மூலர் குறிப்பிடும் சிவதாண்டவம் வேறு!//

                    “எங்குந் திருமேனி எங்குஞ் சிவசக்தி
                    எங்குஞ் சிதம்பரம் எங்குந் திருநட்டம்
                    எங்குஞ் சிவமா யிருத்தலால் எங்கெங்குந்
                    தங்குஞ் சிவனருட் டன்விளை யாட்டதே”[திருமந்திரம்-2722]

                    அய்யா என்ன சொல்றாங்கன்னா திருமூலர் சொல்ற சிவதாண்டவம் வேற சிதம்பரத்ல உள்ளது வேறன்னு பாட்டு என்ன சொல்லுதுன்னா சிவதாண்டவம்னாலே சிதம்பரம்தான்னு.

                    “சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனைச்
                    சொற்பதமாம் அந்தச் சுந்தரக் கூத்தனைப்
                    பொற்பதிக் கூத்தனைப் பொற்றில்லைக் கூத்தனை
                    அற்புதக் கூத்தனை யாரறி வாரே[திருமந்திரம்-2723]

                    இந்த பாட்ல “பொற்றில்லைக் கூத்தனை”-வருதே அது சிதம்பரம்நடராஜரை குறிக்கலையா?
                    அண்ணன் அற்புதமான விளக்கம் சொல்வாரு பாருங்க.

                  • //நீங்கள் ஒரு போலி பார்ப்பன எதிர்ப்பாளர்//

                    நான் போலி பார்ப்பன எதிர்ப்பாளர் இல்ல.நீங்கதான் போலி தமிழ் பற்றாளர்.அதனாலதான் தமிழருக்கு சொந்தமான நடராஜர் தத்துவத்த சிதம்பரத்து கோவில் வேலை பாக்க வந்த பாப்பாந்தான் கொண்டுவந்தான்னு எந்த ஆதாரமும் இல்லாம அள்ளிவிடுரிங்க.

                    • நான் தமிழர் பற்றாளன் தான்! தமிழ் பற்றாளன் என்றால், அதில் கலந்துள்ள சாக்கடையையும் சேர்த்து கொண்டாடுவதில்லை! சிவ தாண்டவம், சக்தியுடன் இணைந்ததே! சக்தியை வெற்றி கொண்டல்ல! சாங்கிய சக்தியை வெளியேற்றி , அஙகு நடராஜ மூர்த்தம், முக்கிய மூர்த்தியாக்கப்பட்டது, பிற தேவார கதைகள் புனையப்பட்டது போன்ற செயல்கள் சைவ மதத்தை பாமர மதமாகிவிட்டது! மூன்று வயது குழந்தை, அம்மையின் முலைப்பாலுண்டு “தோடுடைய செவியன்” பாடியது, பிள்ளையார் நம்பியாண்டார் நம்பிக்கு பயந்து கொழுக்கட்டை உண்டது, சுந்தரருக்கு சிவனே பரத்தயர் வீட்டுக்கு தூது சென்றது, பிள்ளைக்கறி சாப்பிட்டது, உச்ச கட்டமாக பக்தனின் பெண்டாட்டியை கேட்டது, பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டது, தருமியின் பிழையான கவிதையை காட்டி பரிசு கேட்டது,நரியை பரியாக்கியது போன்ற கிரிமினல் திருவிளையாடல்கள் எல்லாம் வல்ல, உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவனை பெருமைப்படுத்துகிறதா? சிறுமைப்படுத்துகிறதா? வைணவத்திலும் இது போன்ற அபத்தங்கள் உண்டு! மற்ற எல்லா மதங்களிலும் இது போன்ற காலாவதியாகிவிட்ட கதைகள் உண்டு! அதனாற்றான் ‘மதமான பேய் எனை பிடியாதிருக்கவெ வெண்டும்’ என்றார்!

  51. பீச்செ எடுப்பதர்க்கு சட்டபூர்வ அங்கிகாரம் வேன்டுமாம் இந்த பார்பன வந்டெரிகள் இவர்களை முதலில் தமிழ்நாட்டை விட்டு அடித்து விரட்டவேண்டும். பெரியாரின் கோட்பாடின் படி குடிமியை ஆட்ட வேன்டும்

  52. ///உலகமே தேடும் ark of the covenant ஐ எடுத்து வந்து பத்திரமாய் பாதுகாக்கும் யூதர்களா அவர்கள்? என்பதை தமிழர்கள் ஆராயவேண்டும்.//

    ஐரோப்பாவில் சிவதாண்டவம்…

    Shiva’s Cosmic Dance at CERN

    http://www.redicecreations.com/article.php?id=4700

  53. தீட்சிதர்கள் கூறி கொளவது போல சிவானோடு வரவில்லை என்று ஜீன் மூலமாக அறிவியல் பூர்வமாக நிரூபித்து அந்த வரலாறு பொய் என்று நிறுவி , தில்லை அவர்களுடையது அல்ல என்று சட்டபூர்வமாக நிரூபிக்கா முடியாதா ?

  54. // தீட்சிதர்கள் கூறி கொளவது போல சிவானோடு வரவில்லை என்று ஜீன் மூலமாக அறிவியல் பூர்வமாக நிரூபித்து அந்த வரலாறு பொய் என்று நிறுவி , தில்லை அவர்களுடையது அல்ல என்று சட்டபூர்வமாக நிரூபிக்கா முடியாதா ?///

    நக்கல் இருக்கலாம் நளினம் இருக்கக் கூடாது. தீட்சிதர்கள் சிவனோடு வந்தனர் என்ற கதையை, தமிழர்கள் நம்புகிறார்கள் என்று தீட்சிதர்களும் உங்களைப் போன்ற ஆட்களும் மட்டும் தான் நம்புகிறீர்கள் போல் தெரிகிறது. சிவனைக் கூத்தனாக, நடராசனாக வழிபாடும் வழிபாடே தமிழர்களால் தமிழ்நாட்டில் தோற்றுவிக்கப்பட்ட வழிபாடு. அதாவது நடராசன் வெளியிலிருந்து வரவில்லை. தீட்சிதர்கள் தான் தமிழர்களின் பெருங்கற்றளிகளில் கழுவித் துடைக்க வந்தார்கள்.

    தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகத் தமிழர்களின் சைவத்தில் எந்த பிரிவும் (denomination ) கிடையாது. ஆனால் தமிழ்நாடு அரசு தகுதி வாய்ந்த வழக்கறிஞரை வைத்து, அவர்களின் வாதத்தை எதிர்த்து வாதாடாததால், தமிழர்களின் முக்கியமான வரலாற்றுச் சின்னம் ஒரு குறிப்பட்ட சாதியினருக்கு மட்டும் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டு விட்டது,

    இதில் கவலைப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், பெரும்பாலான தமிழ்நாட்டுத்தமிழர்கள் எனக்கென்ன போச்சு என்றிருக்கிறார்கள். இதைப் பற்றி கருத்துத் தெரிவித்தவர்களையே விரல் விட்டு எண்ணிவிடலாம். மற்றவர்கள் எம்மை முற்போக்குள்ள, மதச்சார்பற்றவர்கள் என்று எண்ண வேண்டுமென்பதற்காக, தமிழர்களின் வரலாற்றுச் சின்னங்களை மற்றவர்கள் அநீதியான முறையில் சொந்தம் கொண்டாடும் போது அமைதி காப்பது சரியான கோழைத்தனம்.

    ‘கோயில்’ என்று உலகமெங்கும் வாழும் தமிழர்கள் போற்றும் சிதம்பரம் தீட்சிதர்களுக்கு மட்டும் பாத்தியதையான கோயில் என்றால்,, தீட்சிதர்கள் ஏனைய தமிழ்ச்சைவர்களை விட வேறொரு Denomination என்றால், தமிழர்கள் சிதம்பரத்துக்கு எதற்காகப் போக வேண்டும். உண்மையில் சிதம்பரம் மீண்டும் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை “தீட்சிதர்களுக்குப் பாத்தியதையான”” சிதமபரம் கோயிலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். அப்படி அங்கு சென்றாலும் எந்தக் காணிக்கையும் செலுத்தக் கூடாது, தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை, அது தான் இதற்கெல்லாம் காரணம். அடுத்ததாக திருவரங்கம் போன்ற கோயில்களுக்கும் இப்படி நடக்காதென்று, என்ன நிச்சயம்?

  55. வெகு நாட்களாக வினவு தளத்தை வாசித்து இப்போது தான் முதல் முறையாக எழுதுகிறேன். என் தாய்மொழியாம் தமிழில் பாடினால் அதனை புரிந்து கொள்ள முடியாத ஒரு கடவுள் என் தமிழ்நாட்டில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. என் தமிழ்நாட்டில் தமிழை பாட தடை விதிக்க எவருக்கும் உரிமை இல்லை. சிறிது காலம் மதங்களை தள்ளி வைப்போம், மனிதாக மாறுவோம். நானாக கோவிலுக்கு போவதில்லை. குடும்பத்தினர் அழைக்கும்போது அவர்கள் மனது கோணக்கூடாது என்று போவேன். அங்கே பிராமணர்கள் செய்யும் அலப்பறை தாங்கமுடியவில்லை. நான் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை, கடவுள் பெயரால் நடத்தப்படும் இந்த பிரிவினைகள், கொள்ளைகள், சூழ்ச்சிகளை தான் நான் கூடாது என்கிறேன். தர்ம தரிசனம் என்றால் கிலோமீட்டர் கணக்கில் கியூவில் நிற்க வேண்டும், கொஞ்சம் காசு கொடுத்தால் சிறிய கியூ. நிறைய காசு கொடுத்தால் நேரடி தரிசனம். பதவியில் உள்ளவர்களுக்கு கடவுளிடமிருந்து நேரடியாக சிறப்பு பிரசாதம். என்ன கூத்து இது.

  56. இந்து மதத்தில் விக்கிரக வழிபாடு உண்டு! ஆண்டவன் விக்கிரக வடிவில் அருள் பாலிக்கிறார் என்று மக்கள் நம்பிகிரார்கள். அதனால்தான் வரிசையில் நின்று பல மணிநேரம் காத்திருந்து ஆண்டவனை தரிசிக்க வேண்டியுல்லது. திருப்பதி போன்ற ஸ்தலங்களில் ஒரு “வினாடி” வெங்கடாசலபதியை தரிசிக்க நாள் கணக்கில் கூட காத்திருக்க வேண்டி உள்ளது. அவ்வளவு கூட்டம் வருவதால் நிர்வாகத்தால் அதனை கட்டுப்படுத்த வேண்டி உள்ளது. வசதி உள்ளவர்கள் தங்களின் பணி நிமித்தமாக இலவச தரிசனத்திக்காக காத்திருக்காமல் நிர்வாகம் நிர்ணயப்படுத்தும் சிறு தொகையை செலுத்தி விரைவாக ஆண்டவனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இந்த தொகையும் மக்களின் நலத்திட்டங்களுக்கே போய் சேருகிறது. மற்ற மதங்களான கிருத்துவம் மற்றும் இஸ்லாம் மதங்களில் அனைவரையும் ஒருசேர அமரவைத்து “பிரசங்கங்கள்” செய்துவிட்டு அனுப்பி விடுக்கிறார்கள். இந்துமதம் அப்படிப்பட்டது அல்ல!

    • தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களிலும் நிர்வாகத்துக்குக் கொடுக்கும் தொகையை விடப் பெரியதொகையை அங்கு வேலை செய்யும் பார்ப்பனர்கள் பிடுங்கிக் கொண்டு விடுகிறார்கள். உதாரணமாக, என்னுடைய அனுபவத்தில் தமிழ்நாட்டின் பெரிய, பிரபலமான கோயில்களில் பார்ப்பனர்கள் ஆள் பிடிக்கும் முறைக்கும், புதுப்படங்களுக்கு சினிமாத் தியேட்டர்களில் களவில் ரிக்கற் விற்பவர்களுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. எப்படியோ பணக்காரர்களை, கடவுள் பக்தியுள்ள வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களைக் கண்டு பிடிப்பதற்கு அவர்களிடம் ரேடார் ஏதும் இருக்கிறது போலிருக்கிறது. கம்பிவேலிக்குப் பின்னால், வரிசையில் தங்கள் நாட்டில், தங்களின் முன்னோர்களின் கோயில்களில், தமிழ்க்கடவுள் முருகனைக் காண, மணிக்கணக்காக காத்திருக்கும் தமிழ்நாட்டின் சாதாரண தமிழர்கள் பார்த்துக் கொண்டிருக்க,அவர்களையெல்லாம் தாண்டி, காசிருப்பவர்களை மட்டும் கடத்திக் கொண்டு போய் முருகனைக் காட்டி விட்டு, வெளியில் கொண்டு வந்து விட்டுக் காசு வாங்குவது மட்டும் தான் அங்குள்ள பார்ப்பனர்களின் வேலை, பூசை எதுவும் செய்யவில்லை. அந்த வேலையைச் செய்து விட்டு, உடம்பை வருத்தாமல் காசு பண்ண, உண்மையில் பூணூல் தேவையில்லை, யாரும் செய்யலாம். உதாரணமாக, நான் இரண்டு பேருக்கு டிக்கற் வாங்க 500 ரூபா கொடுத்தேன். ஆனால் ஐயர் ஒரு 250 ரிக்கற்றில் எங்கள் இரண்டுபேரையும் அழைத்துச் சென்று, தரிசனம் செய்ய வைத்து விட்டு, வரும்போது தட்சணையையும் பார்த்துத் தரச் சொன்னார், அதில் ஒரு 500 ரூபாய், எல்லாமாக அரை மணிநேரத்தில் 750 ரூபாய் உழைத்துக் கொண்டார். ஆனால் 500 ரூபாய் தட்சணை கொடுத்திருக்கத் தேவையில்லை, அவரே அந்தளவு எதிர்பார்த்திருக்க மாட்டார் என என்னுடன் வந்த நண்பர், பின்பு தான் சொன்னார். கொடுத்து விட்டு சொல்லிக் காட்டக் கூடாது என்று எனக்கும் தெரியும் ஆனால், நான் இதைச் சொல்வதன் காரணம், அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள கோயில்களிலேயே நிலைமை இப்படி இருந்தால், சிதம்பரத்தில் இனிமேல் என்னவெல்லாம் நடக்குமோ என்பதைச் சுட்டிக் காட்டத்தான்.

      • இந்துமதக் கோயில்களில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் முஸ்லீம்களின் வழிபாட்டுத்தலங்களிலும் இப்படிக் காசு பறிப்பதுண்டு. நாகூர் தர்காவிலும், பார்த்துக் கொண்டிருக்க ஏமாற்றும் முஸ்லீம் பார்ப்பான்கள் இருக்கிறார்கள். சிதம்பரத்தில் மட்டுமல்ல, அங்கும் என்னை இருக்க வைத்து பாத்திஹா ஓதச் செய்து (இலங்கையிலும் சிறுவயதில் தர்காவுக்குப் போயிருக்கிறேன்), கையேந்தி வணங்கச் சொல்லி விட்டு, ஒரு சால்வையை என்தோளில் போர்த்தி, என் கைக்குள் சில ரோசாப்பூவின் இதழ்களைப் போட்டு விட்டு, சுற்றிக் கும்பிட்டு வரச் சொன்னார்கள். வந்தவுடன் ஒரு Receipt Book இல் ஒரு தொகையை எழுதிவிட்டுக் கையெழுத்து வைக்குமாறு கேட்டார்கள். நான் மறுத்து விட்டு, பாக்கட்டுக்குள் இருந்த 20 டொலரைக் கொடுத்து விட்டு, தப்பினேன் பிழைத்தேன் என்று ஓடி வந்து விட்டேன், அங்கிருந்து வேளாங்கண்ணி கோயிலுக்குப் போனேன், அங்கு இப்படி எந்த அநியாயமும் நடக்கவில்லை. 🙂

        • ‘கோவில்களே வேண்டாம் என்பதல்ல; கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது என்பது தான் என் வாதம்’ – அன்றே தமிழகத்தை தட்டியெழுப்பிய வசனம்!

          • அன்று தட்டியெழுப்பிய வசனகர்த்தா இன்று மஞ்சள் துண்டுக்குள் அடைக்கலமான மர்மம் என்ன? அதுக்கு காரணமும் பகுத்தறிவுதானா?

            “ஊருக்குதான் உபதேசம் உனக்கும் எனக்கும் என்னடின்ணானாம்” அப்படி இருக்கு கதை.

            • எந்த கலர் துண்டு போட்டாலும் வீணர்கள், ஏதாவது சொல்லத்தான் செய்வார்கள்! கலருக்கு ஏன் கலர் கொடுக்கிறீர்? இன்றுள்ள அரசியல் சூழ்னிலையில் யார் யோக்கியர்?

              பகுத்தறிவாளர்களை குறை கூறலாம்; ஆனால் பகுத்தறிவதையும் குறை கூறுவது எதைக்காட்டுகிறது? பரமார்த்தகுருவின் சிஷ்யர்கள் சண்டை போட்டுகொண்டு குருவை பதம் பார்த்த கதை போல, பகுத்தறிவை பதம்பார்க்காதீற்கள்! அது பார்பன சக்திக்கே ஆதரவாகும்! உண்மையில், சைவ சித்தாந்தம் செய்தது, செய்து வருவது அதைத்தான்! மக்களின் இயற்கையான பார்ப்பன எதிர்ப்புணர்ச்சியை, பக்தி புராணங்களால் மழுஙகடித்து விட்டீர்கள்!

              • ஜோஸ்ய காரங்க சொன்னத கேட்டுதானே பாஸ் அவர் மஞ்ச துண்டு போட்டுகிறார்.கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு பாமரன் கிட்ட நீ மஞ்ச துண்டுபோட்டுக்க போட்டுகிட்டா அதிஸ்டம் அடிக்கும்னு சொன்னா அவன் போட்டுக்க மாட்டான்.வேணாங்க நாலுபேரு பழிப்பாங்க எனக்கு வெக்கமா இருக்குன்னு சொல்லுவான்.அந்த வெக்கம் கூட அவருக்கு இல்லையே.

    • உண்மையே! இந்துமதம் அப்படிப்பட்டது அல்ல! பணக்காரனுக்கு பரிவட்டம் காட்டி பணத்தை பிடுங்கிவிடுகிரார்கள் ! சுரண்டப்பட்ட மக்கள், ஓட்டாண்டியாகிவிடுவதால் அவர்களை உள்ளே அனுமதிப்பதில்லை போலும்!

  57. //அடுத்ததாக திருவரங்கம் போன்ற கோயில்களுக்கும் இப்படி நடக்காதென்று, என்ன நிச்சயம்?//

    திருவரங்கம் மட்டுமல்ல, தமிழ்னாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்னாடகாவிலுள்ள அனைத்து கோவில்களையும் அரசின் இந்து சமய அறனிலயத்துறையினரிடமிருந்து பிடிங்கி, சங்கராச்சாரி போன்ற உத்தம சிரேஷ்டர்களிடம் ஒப்படைக்கவேண்டிமென ஒரு அம்பி உச்சனீதி மன்றத்தில் பி அய் எல் போட்டிருக்கிறதாம்! சங்கு ஊதியாயிற்று!

  58. @சூரியன்
    “காளியோ டாடிக் கனகா சலத்தாடிக்
    கூளியோ டாடிக் குவலயத் தேயாடி
    நீடிய நீர்தீகால் நீள்வா னிடையாடி
    நாளுற அம்பலத் தேயாடும் நாதனே {திருமந்திரம்-2745}

    இந்த பாடலுக்கு பொருள் கூற முடியுமா? இதில் சிவனோடு ஆடும் காளி யார்?

  59. இதுவே கற்பனை கதையின் அடிப்படையில் பாடியதுதான்! சிவனை கண்டவரும் இல்லை, அவன் ஆடியதை பார்த்தவரும் இல்லை! கஞ்சா சரக்கு கொஞ்சம் அதிகமாகிவிட்டால், இது மாதிரி பரவச காட்சிகள் உங்களுக்கும் தோன்றக்கூடும்! ஈரான், ஈராக் பகுதிகள் உள்ளிட்ட அரேபிய பகுதிகள், மெக்சிகோ பகுதிகளில், தாய் தெய்வமாக ஒரு பெண் தெய்வமும், பின்னர் சிவனை போன்ற ஒரு ஆண் தெய்வமும் வழக்கத்தில் இருந்துள்ளது! கிட்டதட்ட ஒரே மாதிரியான புராணங்கள், தெய்வ பெயர்கள் கூட வழங்கி உள்ளன! திரு. சர்க்கரை செட்டியார் எழுதியுள்ள ‘ பழங்கால உலக தெய்வங்கள்’ என்ற என்ற நூலில் பல வருடங்கலுக்கு முன்னரே படித்திருக்கிரேன்! தற்போது கலையகம் வலைதடத்திலும் சென்றவருடம் காணப்பட்டது! இந்த கடைச்சரக்கையெல்லாம் கூட்டி குறைத்து புதிய புராண, ததுவங்களாக்கி, பின்னரே அதர்க்கேற்ப கோவில்களையும் நிர்மாணித்தனர்!

    நடராஜரை பொருத்தவரை அதற்கென்று எஙகுமே தனிக்கோவில்களில்லை! லிஙக உருவமே மூலத்தானமாக இருக்கும்! திருமூலர் மறை பொருளாக, யோக மந்திரமாக இப்பாடல்களை இயற்றினார் என்று சிலர் கூறுவர்! அவரின் பாடல்கள் சுட்டுவது நமது உடம்பிலுள்ள சிவத்தைதான் என்றும் கூறுவர்! இந்தபாடலுக்கும் அப்படி ஒரு யொக விளக்கம் இருக்ககூடும்! தெரிந்தவர்கள் கூறலாம்!

    தில்லை வாழ் அந்தணர்கள், திருமூலரின் இந்த பாடலுக்கு ஏற்ப பிற்காலத்தில் நடராஜரை நிறுவியிருக்ககூடும்!

    நடராஜனுடன் ஆடிய பெண் தில்லை காளி, சிவனின் மனைவியல்ல! அவள் சுமார் ஒரு கல் தொலைவில், தில்லையின் எல்லையில் எல்லைக்காளியாக இருக்கிறாள்!

    நடராஜர் காளியை வென்றதாக சஙகேதமாக கூறுவது, சாஙிய பெண்தெய்வம் அகற்றப்பட்டு, மன்றினுள் நடராஜர் வைக்கப்பட்டதைதான் என்று ஒரு கருத்து உள்ளது! சூரியன் என்ன சொல்கிரார்?

    அரசு பொதுநூலகங்களில் ‘சிதம்பர ரகசியம்’ எனும், ஒரு ஆராய்ச்சிநூலை யாராவது பார்த்தால் தெரிவியுங்களேன்!

    • நடராஜர் வழிபாடு, சோழர்களின் ஆட்சிக்காலத்தில்தான் திடீரென பரவியிருக்கிறது! தில்லையில் முதன்மை தெய்வமாக்கப்பட்டு பொன்னம்பலத்திலும், மதுரை சொக்கனாதர் கோவிலில் வெள்ளியம்பலத்திலும், திருனெல்வேலியில் தாமிர சபையாகவும், குற்றாலத்தில் சித்திர சபையாகவும் அந்தந்த அரசின் நிதிநிலைக்கு ஏற்ப ஏற்படுத்தப்பட்டுள்ளது! அதற்கு புதிய கோவில்கள் எஙும் கட்டப்படவில்லை! இருக்கிற சிவ தலங்களிலேயே நடராஜ சன்னதியும் இணைக்கப்பட்டுள்ளது! சரித்திரநோக்கில் இதை ஆராயாது, தனக்கு தெரிந்த திருமூல பாட்டுக்களை (நெட்டில் பார்த்தது?)அள்ளி விடுவது நாயணாரின் திரிபு வாதம்! பக்தி நோக்கில் புராணக்கதைகளை அவர் நம்புவது வேறு! அதற்காக பகுத்தறிவாளர்களையும், குறிப்பாக திராவிட இயக்கத்தாரையும் இளக்காரமாய் பேசுவது அவர் உண்மையில் யார் என்று அடையாளம் காட்டுகிறது!

      • //நடராஜர் வழிபாடு, சொழர்களின் ஆட்சிக்காலத்தில்தான் திடீரென பரவியிருக்கிறது!//

        நல்லா பரவுனுச்சு திடீர்னு.பிற்கால சொழர்களின் ஆட்சி விஜயாலய சோழனால்[கி.பி.850-871] தொடங்கபட்டது.திருநாவுக்கரசரும்,திருஞான சம்பந்தரும் முதலாம் மகேந்திர வர்ம பல்லவன்[600-630] காலத்தவர்கள்.சிதம்பரத்தில் அவர்கள் பாடுன பாட்ட கீழே கொடுத்து இருக்கேன் படிங்க.

        “செல்வநெடு மாடம் சென்று சேணோங்கிச்
        செல்வமதி தோயச் செல்வ முயர்கின்ற
        செல்வர் வாழ் தில்லைச் சிற்றம் பலமேய
        செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே”[சம்பந்தர்]

        “பத்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே பரமயோகீ
        எத்தினாற் பத்தி செய்கேன் என்னை நீ இகழவேண்டா
        முத்தனே முதல்வாதில்லை அம்பலத்தா டுகின்ற
        அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே”[அப்பர்]

        எனக்கு என்ன டவுட்டுன்னா சோழர்காலத்துல திடீர்னு ஏற்பட்ட நடராஜரைபற்றி 200 வருசத்துக்கு முன்னாடியே எப்படி பாடுனாங்கன்னுதான்.அய்யாதான் பகுத்தறிவு பூர்வமா விளக்கணும்.இதுல எனக்கு வரலாற்று ஆராய்ச்சி இல்லன்னு அய்யா வருத்தபடுறாங்க. என்ன கொடுமை சார் இது.

        • //நல்லா பரவுனுச்சு திடீர்னு.பிற்கால சொழர்களின் ஆட்சி விஜயாலய சோழனால்[கி.பி.850-871] தொடங்கபட்டது.//

          அய்யா! போலி நாயனாரே! “பிற்கால” என்றுநான் கூறவில்லையே! என்ன கொடுமை சார் இது? பாவம்! நல்ல மருத்துவரை பாருங்கள் அய்யா!

          • அப்ப சங்ககால சோழர்களா? மாட்டிகிட்டவுடனே சமாளிப்ப பாருங்க! டாக்டர பாக்கவேண்டியது நீங்கதான்.சும்மா வாயாலேயே வடைசுடாம திடீர்னு பரவுனதுக்கு ஆதாரத்த கொடுங்க.

            • அகடவிகடம் செய்து மாட்டிக்கொண்டது நீர்தானய்யா ! பாவம் யார் பெற்ற புள்ளையோ என்று அடுத்தவரை கிண்டல் செய்யும் நீங்கள், வலைப்பதிவு செய்யும்போதாவது கொஞ்சம்நாகரிகத்தை கடைபிடியுங்கள்!

              இன்னுமொரு செய்தி! சிதம்பரத்தில் பொன்னம்பலம் என்று இன்னுமோரு இடமும் உண்டு! தற்போது அது பொக்கிஷ அறையாக பயன்படுத்தப்படுகிறது! முஙாலத்தில்நடராஜர் அங்கிருந்திருக்கலாம், துணைத்தெய்வமாக, தியாகெசர் போல!

              ஆராய்ந்து அறிய ஆர்வமுள்ளவர்களுக்கு மட்டுமே இந்த செய்தி, அடாவடிகள் தவிர்க்கவும்!

              • சங்க கால சோழர்களா? பிற்கால சோழர்களானு கேட்டா அதுக்கு இதுதான் பதிலா? அது எப்படிண்ணே எவ்வளவு அடி வாங்குணாலும் வலிக்காத மாதிரியே நடிக்கிறிங்க? அந்த அகட விகடத்ல பதில் சொல்லாம போனது நானா அவரா? அப்பறம் நான் எப்படி மாட்டிகிட்டேனு சொல்றீங்க? உங்க பகுத்தறிவு எல்லை மீறி போகுதுங்க பாத்துகங்க.

                ஆதாரத்துடன் பேசுபவர்கள் அடாவடிகாரர்கள்.வாய்க்கு வந்ததை உளருபவர்கள் அறிய ஆர்வமுடையவர்கள்.இது அண்ணனின் புது கண்டுபிடிப்பு.

                உங்களை போன்ற கூலிக்கு மாறடிக்கும் கூட்டம் என்பதுதான் வலைபதிவின் நாகரிகமா?

                யாரு பெத்த பிள்ளையோ என்பது விளையாட்டாக எல்லோரும் சொல்வதுதான்.அதற்கு விகற்பமான பொருள் எதுவும் இல்லை.அப்படி பொருள்காண்பது உங்களது வக்கிர புத்தி

    • அந்த பாட்டு மூன்று வருசம் சைவ சித்தாந்தம் படிச்ச சூரியன் கிட்ட கேட்டது.அவர்தான் சொன்னார் சைவ சித்தாந்தத்ல சிவசக்தி நடனமே இல்லன்னு.அதுனால கேட்டேன்.உங்க கிட்ட கேப்பனா? உங்களுக்கு திருமந்திரத்தை பத்தி ஒரு மண்ணும் தெரியாதுன்னு எனக்கு தெரியாதா? மூனு வருசம் படிச்சவரே கம்முனு போகைல உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? வந்ததும் வந்திய வெளக்கமா பொருள்சொன்னியலான்னா அதுவும் இல்லை.நான் சொல்றேன் அது காஸ்மிக் டான்ஸ்தான்.சிவ சக்தி நடனமும் நடராஜர் தத்துவமும் அததான் சொல்லுது.முன்னடி பின்னடின்னா ஆதாரத்தை கொடுங்க.

    • //தில்லை வாழ் அந்தணர்கள்,திருமூலரின் இந்த பாடலுக்கு ஏற்ப பிற்காலத்தில் நடராஜரை நிறுவியிருக்ககூடும்!//

      பின்னுட்டம் 52.1.2.2.1.1.1.2.1 ல இரண்டு திருமந்திரம் கொடுத்து இருக்கேன் அத பொறுமையா படிச்சு பாருங்க.வாய்க்கு வந்தது எல்லாம் புளுகாதிங்கன்னு சொன்னா ஏன் கேக்க மாட்டேங்கிறிங்க?

  60. //ஒரு பாண்டிய மன்னனின் பக்திக்கு மகிழ்ந்து கால் மாற்றி ஆடினாராம்.தத்துவ மரபில் வேறு பொருளும் உண்டு.அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை? பகுத்தறிவுபடி அப்படி ஆடகூடாதா?//

    உஙகள் புராண அளப்புகளுக்கு எல்லையே இல்லாததுதான், எனக்கு மட்டுமல்ல, எல்லா மானுடத்துக்கும் பிரச்சினை! அன்று முட்டாள் ராஜனின் வேண்டுகோளுக்காக கால் மாற்றி ஆடியவன், இன்று நாயணாரின் பக்திக்கு மெச்சி, சிதம்பரத்தில் கால்மாற்றி ஆடுவானா? இதில் பகுத்தறிவு விமர்சனம் வேறு!

    குலசேகர ஆழ்வார், ராமாயணம் பிரசங்கம் கேட்டுக்கொண்டு இருக்கும்போதே, உணர்ச்சி வசப்பட்டு இலங்கைக்கு படையெடுக்க சொன்னாராம்! இது போன்ற முட்டாள் ராஜாக்கள் நம்மையாள, நமக்கு தன்மான உணர்வே அற்றுப்போனது! திராவிட இயக்கத்தையும், அம்பேத்கர் இயக்கத்தையும் ஒன்றோடொன்று மோதவிட்டு பலனடைய நினைப்பவர்கள் ஆரியநரிகளே! அல்லது நமது இன துரோகிகளே!

  61. Chidambara Ragasiyam/Rahasyam (Tamil for “secret of Chidambaram”) is a Hindu belief that there is a secret message conveyed through the embossed figure near the shrine of Shiva in Chidambaram temple.

    Since ancient times, it is believed that this is the place where Lord Shiva and Parvathi are present, but are invisible to the naked eyes of normal people. In the Chidambaram temple of Lord Nataraja, Chidambara Ragasiyam is hidden by a curtain (Maya). Darshan of Chidambara Ragasiyam is possible only when priests open the curtain (or Maya) for special poojas. People who are privileged to have a darshan of Chidambara Ragasiyam can merely see golden vilva leaves (Aegle Marmelos) signifying the presence of Lord Shiva and Parvathi in front of them. It is also believed that devout saints can see the Gods in their physical form, but no such cases have been officially reported.

    The phrase “Chidambara Ragasiyam” really means something different. The pharse literally means a secret associated to Chidambaram – the place. Behind this is a real meaning to a secret. As described above there is a particular curtain kind of curtain which when removed enables us viewing the secret. The real significance of doing so is that, when the curtain which is “maya” is removed one can see his real self. And the seeing of oneself removing the curtain of maya is viewing the secret. According to legend, “Chidambara Ragasiyam” will never be revealed as it is the secret relating to a particular person who sees it removing the screen of “maya”. In the temple, when the poojas are performed and the screen is removed, one will be able to see the secret only when he applies this to his mind and soul.

    Source:http://www.chidambaramnataraja.org

  62. தில்லை காளி தல வரலாறு: (உபயம்;தினமலர்.காம்)

    “சிவனுக்கும் சக்திக்கும் இடையே தங்களில் யார் சக்திமிக்கவர் என்று விவாதம் ஏற்பட்டது. பார்வதிதேவி,”சக்தி தான் பெரிது’ என்று கோபத்துடன் வாதிட்டாள். சிவனும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்த, அவளை உக்கிரகாளியாக மாறும்படி சிவன் சபித்து விட்டார். மனம் வருந்திய பார்வதி சிவனிடம் சாப விமோசனம் கேட்டாள். அதற்கு சிவன்,””அரக்கர்களால் தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் ஏற்பட இருக்கிறது. நீ காளியாக இருந்து அவர்களை அழிக்க வேண்டும். பின்பு, தில்லையில்(சிதம்பரம்) என்னை நோக்கி தவம் ))இரு. நான் வியாக்ரபாதர்,பதஞ்சலி முனிவர்களது வேண்டுகோளின்படி தில்லையில் ஆனந்த நடனம் ஆடுவேன். அப்போது நீ சிவகாமி என்ற திருநாமத்துடன் என்னிடம் வந்து சேர்வாய்,”என்றார். அவ்வாறே அவள் செய்தாள். அவள் கோப சக்தியாக, “தில்லைக்காளி’ என்ற பெயரில் அமர்ந்தாள். இவளை “எல்லைக்காளி’ என்றும் சொல்வர். சிதம்பரத்தில் அருள் செய்யும் நடராஜரைத் தரிசிப்பவர்கள், ஊரின் எல்லையில் அருள்பாலிக்கும் தில்லைக்காளியையும் தரிசிக்கிறார்கள்………”

    திருமூலரும், ஏனைய சைவ சிந்தாந்தவாதிகளும் இதைத்தான், இந்த பார்பன தேவாசுர போட்டி, பொறாமை புராணத்தைதான் பாடினார்களா? தேவாரநாயணார் ஆத்திரம் கொண்டு பயனில்லை!

    • “அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
      முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
      முப்புர மாவது மும்மல காரியம்
      அப்புரம் எய்தமை யாரறி வாரே”[திருமந்திரம்-343]

      பொருள்:மூன்று புரங்களில் மூன்று அரக்கர்கள் இருந்துகொண்டு மக்களை கொடுமை படுத்தினார்கள்.சிவன் அவர்களை அழித்தான் என்று முட்டாள்கள் புராணகதை கட்டுகிறார்கள்.முப்புரமாவது மும்மலங்கள்[ஆணவம்,மாயை,கண்மம்].அதை சிவன் எப்படி எரித்தான் என்பது மூடர்களாகிய புராணிகர்களுக்கு தெரியாது

      இது புராண கட்டுகதைகள் பொய் என்றும் அதன் உள்ளுரையாக வேறு பொருள் உள்ளது என்பதற்கு
      எடுத்துகாட்டாகும்.நீங்கள் குறிப்பிடும் தல வரலாறு அது போன்ற கட்டுகதையாகும்.மேலும் அனைத்து
      தல புராணங்களும் மிக மிக பிற்காலத்தில் எழுதபட்டது என்பதுதான் வரலாறு.நீங்கள் தல புராணத்தின் ஆசிரியர் பெயரோ காலத்தையோ ஏன் குறிப்பிடவில்லை.இதில் நான் வருத்தபட என்ன உள்ளது.

    • தமிழ்நாட்டில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக பார்ப்பனர்கள் பல கதைகளை இயற்றியுள்ளார்கள். தாம் நடராஜனோடு வந்ததாக மட்டுமல்ல, நடராஜர் தங்களில் ஒருவர் அதாவது அவர்களும் கடவுள் என்று கூடத் தான் பார்ப்பனர்கள் தமிழர்களின் காதில் பூச்சுற்றினார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்கள் இன்றும் அந்தப் பூச்சுற்றலை ஏற்றுக் கொண்ட இளிச்சவாயர்கள் தான் என்பதற்கு, சிதம்பரத்தை தீட்சிதர்களிடம் தாரைவார்த்துக்க் கொடுத்து விட்டு, ஞே என்று இருப்பதே நல்ல உதாரணமாகும்.

      அது ஒருபுறமிருக்க, சோழர்கள் ஆட்சியின் பின்னர் இன்றுவரை பல நூற்றாண்டுகாலமாக தமிழ்மண்ணைத் தமிழர்கள் ஆளவேயில்லை, அதனால் தான் இவ்வளவு வரலாற்று திரிப்புகள் எல்லாம் நடைபெற்றன/நடைபெறுகின்றன. உண்மையில் தமிழ்நாட்டில் எதுவுமே தமிழர்களுடையதல்ல என்று சொல்லுமளவுக்கு வரலாற்றுத் திரிப்புகள் நடைபெற்று விட்டன. இந்த லட்சணத்தில் தமிழர்களே ஆளுக்காள் அடிபட்டுக் கொள்வதும், ஒருவரையொருவர் வாதத்திறமையினால் வெல்ல வேண்டுமென்ற ஆவலில் தமிழர்களின் பாரம்பரிய கோயில்களின் வழிபாட்டு முறைகளை, உதாரணமாக, தமிழ்நாட்டில் தமிழர்களின் உள்ளத்தில் உருவான, சிவனைக் கூத்தனாக, ஆடலரசனாக வழிபடும் முறை வெளியிலிருந்து வந்ததாகக் கூறுவது, அதாவது தமிழர்கள் இரவல் வாங்கியதாகக் கூறுவது, எமது தலையில் நாமே மண்ணையள்ளிப்போடும் செயலாகும்.

      சிவபெருமானைக் கூத்தனாக (நடராஜனாக) வழிபடும் பாரம்பரியம், தமிழ்மண்ணில் சோழர் காலத்தில் உருவாகியதா அல்லது பல்லவர் காலத்தில் உருவாகியதா என்ற விடயம் வேண்டுமானால் விவாதத்துக்குரியதாக இருக்கலாமே தவிர, அது தமிழ்நாட்டில் தமிழர்களின் உள்ளத்தில் உருவாகி, சோழர் காலத்தில் மிகவும் பிரபலமடைந்த வழிபாட்டுமுறை என்பதில் யாரும் சந்தேகம் தெரிவித்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் திரு. அஜாதசத்துரு அவர்கள், தேவாரநாயனாரை எப்படியாவது விவாதத்தில் வீழ்த்தி விட வேண்டுமென்ற ஆவலிலோ என்னவோ, நடராஜர் வழிபாட்டையே வெளியில் வந்தவர்கள் தான் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியது போன்ற ஒரு கருத்தை முன்வைக்கிறார் போல் தெரிகிறது. உண்மையில் தமிழ்நாட்டில் வணங்கப்படும் நடராஜா மூர்த்தம் (கூத்தப்பெருமான்) வெளியிலிருந்து வந்ததோ அல்லது தீட்சிதர்களால் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதோ அல்ல. பல புராணக்கதைகளை தேவலோகத்திலும், கைலாயத்திலும், வடக்கிலும் தான் நடைபெற்றதாக பார்ப்பனர்கள் கதை கட்டியிருக்கிறார்கள். ஆனால் தில்லைக் கூத்தனதும், சிதம்பரம் (சிற்றம்பலம் என்ற தமிழ்ச் சொல் சிதம்பரமாக மருவி விட்டது) கோயிலினதும் வரலாற்றைக் கூறும் கோயிற்புராணம், தில்லைவனத்தில் வாழ்ந்த முனிவர்களின் கர்வத்தை அடக்க சிவபெருமான் அழகிய பிட்சாடனராக உருவெடுத்தது முதல் பதஞ்சலி முனிவருக்கு காட்சியளித்தது வரை அனைத்துமே, தில்லைவனத்தில், தமிழ் மண்ணில் நடந்ததாகத் தான் கூறுகிறது. தில்லையில் தான் சிவனின் நடனமே நடந்ததாக, அதாவது பார்ப்பபனர்களே திரிபு படுத்தாமல் ஒப்புக்கொண்ட தமிழர்களின் தில்லைக் கூத்தனின் வரலாற்றை, திரு. அஜாதசத்துரு அவர்கள் திரித்து, நடராஜ வழிபாடு வெளியிலிருந்து தமிழகத்துக்கு வந்ததாக ஒரு கதையை உருவாக்க முனைவதைப் பார்க்க வேதனையாக இருக்கிறது.

      • அஜாத சத்ருவின் திரிபுகளை அம்பலபடித்தியற்கு நன்றி வியாசரே.

        • பிற்கால சோழரா முற்கால சோழரா என்று கேதாமல், பிற்கால சோழரைநான் குறிப்பிடுவதாக தவறாக கற்பிதம் செய்துகொண்டு உள்றிகொட்டுவானேன், இப்பொது வியாசனுக்குநன்றி சொல்வானேன்,நாயனாரே!

          நண்பர் வியாசரே! சிவதாண்டவமும், பிட்சாடண வைபவமும் சிதம்பரத்தில் நடக்கவில்லை! தல புராணப்படி, பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதரின் தவத்திற்கு இணங்க, கைலாயத்தில் ஆடிய சிவதாண்டவ காட்சியை இங்கு காண்பித்ததாகத்தான் கதை!

          இப்போதிருக்கும் கனகசபை, சித் அம்பலம் என்ற மரத்தினாலான மன்றம்தான், பராந்தக சோழன் பொன் ஒடு வேயும் வரை!

          இன்றும் பொன்னம்பலம் என்பது தீட்ஷிதர்களது பொக்கிஷ அறையும்,நிவாக அலுவலகமும் உள்ள இடம்தான்! அங்கு நிலவறைகளும் உள்ளன!

          உலகெலாம் வழிபட்ட சிவன், தில்லையில் மட்டுமே ஆடினான் என்பது பிழையானது, தற்பெருமைக்காக கூட ஒப்புக்கொள்ள இயலாதது! தமிழன் கெட்டது இந்த வீணான, தகுதியற்ற தற்பெருமையினாற்றான்! இனியாவது உலக வழக்கை ஒப்பிட்டு, உயரப்பாருங்கள்!

          • //பிற்கால சோழரா முற்கால சோழரா என்று கேதாமல்//

            அய்யா மழுப்பல் திலகமே அதை இப்ப எத்தனையோ முறை கேட்டு விட்டேனே.ஏன் பதில் கூற வில்லை? பதில் இல்லையா? இல்லை பதில் கூறினால் மாட்டிகொள்வோம் என்று பயமா?

            //உள்ரிகொட்டுவானேன்//

            திருமூலர் கூறும் சிவதாண்டவம் வேறு,சிதம்பரத்தில் உள்ளது வேறு என்று உளருனீர்கள்,ஒரு திருமூலர் பாடலை கொண்டுதான் சிதம்பரம் நடராஜரையே உருவாக்கினார்கள் என்று உளருனீர்கள்.சோழர் ஆட்சியில் திடீர் என்று நடராஜர் வழிபாடு உருவானது என்று உளருனீர்கள் அனைத்து உளரல்களையும் ஆதாரத்துடன் மறுத்துள்ளேன்.அதற்கு எந்த பதிலும் கூறாமல் நான் உளருவதாக வாய் கூசாமல் பொய்சொல்கிறீர்கள்.இப்படி பொய் சொல்ல உங்களுக்கு வெக்கமாக இல்லையா?

            //இப்போது வியாசனுக்கு நன்றி சொல்வானேன்?//

            விவாதத்தில் உடன் வருபவருக்கு நன்றி சொல்வதில் என்ன குற்றம் கண்டீர் பகுத்தறிவு பெருந்தகையே?

            சிதம்பரம் கோயிலுக்கு அனைத்து சோழ அரசர்களும் ஏதேனும் ஒரு திருப்பனியை செய்துதான் உள்ளார்கள்.

            தமிழன் கெட்டது தற்பெருமையால் அல்ல.திராவிட பம்மாத்துகளால்.

      • // தில்லையில் தான் சிவனின் நடனமே நடந்ததாக, அதாவது பார்ப்பபனர்களே திரிபு படுத்தாமல் ஒப்புக்கொண்ட தமிழர்களின் தில்லைக் கூத்தனின் வரலாற்றை, திரு. அஜாதசத்துரு அவர்கள் திரித்து, நடராஜ வழிபாடு வெளியிலிருந்து தமிழகத்துக்கு வந்ததாக ஒரு கதையை உருவாக்க முனைவதைப் பார்க்க வேதனையாக இருக்கிறது. //

        இப்போது மட்டும் பார்ப்பனர்கள் கூறுவது உண்மையாகத் தெரிகிறது..!

        • சிவபெருமானே தமிழால் விளையாடவே மதுரைக்கு வந்தாராம். நான் பார்ப்பனர்களே திரிபு படுத்தாமல் என்றேனே தவிர பார்ப்பனர்கள் திரிபு படுத்தவில்லை என்று கூறவில்லை. அதாவது தமிழர்களின் வரலாற்றை திரிபு படுத்துவதை வழக்கமாகக் கொண்ட பார்ப்பனர்களே திரிபு படுத்தாமல், ஒப்புக் கொண்டு விட்டார்கள், ஆனால் நீங்கள் ஒரு தமிழன், அதை ஒப்புக் கொள்ளாமல் திரிபு படுத்துகிறீர்களே என்ற என்னுடைய ஆதங்கத்தைத் தான், ‘பார்ப்பனர்களே’ என்ற சொல்லின் மூலம் சுட்டிக் காட்டியிருக்கிறேன். அதற்கு நீங்கள் உங்களுக்குப் பிடித்தமான கருத்தைக் கற்பித்துக் கொண்டீர்கள் போல் தெரிகிறது. 🙂

  63. //அன்று முட்டாள் ராஜனின் வேண்டுகோளுக்காக கால் மாற்றி அடியவன்,இன்று நாயணாரின் பக்திக்கு மெச்சி, சிதம்பரத்தில் கால்மாற்றி ஆடுவானா?//

    எனக்குதான் பக்தியே இல்லையே எப்படி ஆடுவான்?.நீங்க அஜபாநடன அய்தீகத்த பக்தியா சொன்னீங்கள்ல அது மாதிரிதான் நானும் சொன்னேன்.உங்களுக்கு ஒருநியாயம் எனக்கு ஒரு நியாயமா?

    • //திராவிட இயக்கத்தையும்,அம்பேத்கர் இயக்கத்தையும் ஒன்றோடொன்று மோதவிட்டு பலனடைய நினைப்பவர்கள் ஆரியநரிகளே! அல்லது நமது இன துரோகிகளே!//

      ஆரியநரிகள்,திராவிடநரிகள் இருவரும் தமிழ் இன துரோகிகளே.60 ஆண்டுகால திராவிட ஆட்சியாளர்களின் சாதனை அம்பெத்கர் இயக்கத்துக்கு எதிரான ஆதிக்க சாதியினரின் கலவரங்கள்தான்.தமிழ்நாட்டில் சாதி கலவரங்களை தூண்டிவிட்டு குளிர்காய்வதில் திராவிட ஆட்சியாளர்களுக்கு நிகர் யாரும் இல்லை.ஊர் ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டமாம்.திராவிட ஆட்சியாளர்கள் எல்லாருமே கூத்தாடிகள்தானே?

    • //நீங்க அஜபாநடன அய்தீகத்த பக்தியா சொன்னீங்கள்ல அது மாதிரிதான் நானும் சொன்னேன்.//

      கோவில் தலபுராணம் சொல்லும் அய்தீகம் எனப்படும் தத்துவார்த்த விளக்கம் அது! அதில் எனது பக்தியை எங்கே கண்டீர்?

      //தமிழ்நாட்டில் சாதி கலவரங்களை தூண்டிவிட்டு குளிர்காய்வதில் திராவிட ஆட்சியாளர்களுக்கு நிகர் யாரும் இல்லை.ஊர் ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டமாம்.திராவிட ஆட்சியாளர்கள் எல்லாருமே கூத்தாடிகள்தானே?//

      அய்யாவுக்கு எந்த ஊர்? தமிழ்னாட்டு சாதி கலவரங்களை ஆரம்பித்தது, திராவிடக்கட்சிகளை தூற்றி பதவி பெற ஆசைப்பட்ட, பார்பன பாதந்தான்கிகள், மருத்துவர் அய்யா போன்றோரே! அவருக்கு என்னநிர்ப்ந்தமோ! பரம்பரை கூத்தாடிகள் தான் திராவிட இயக்கத்தை குறை கூற உங்களைப்போன்ற கூலிக்கு மாரடிக்கும் படைகளை ஏவுகின்றனர்! ஊர் ரெண்டுபட்டா உங்களுக்கு கொண்டாட்டம்.

      • //உங்களைப்போன்ற கூலிக்கு மாரடிக்கும் படைகளை ஏவுகின்றனர்!//

        அண்ணே! வெளக்கண்ணே!வெளங்குற மாதிரி சொல்ல தெரியாதா வெ……அண்ணே!

          • என்னமோ போங்கண்ணே!நீங்க பழய மாதிரியே இல்ல எந்த கேள்வி கேட்டாலும் சரியாவே பதில் சொல்ல மாட்டேங்கிறிய.

  64. உலாகபிவிருத்தியைக் கருதி பிரம்மா, தன்முகம், தோற், தொடை, பாதம் என்ற நான்கு அவயவங்களிலிருந்தும், முறையே பிராமணரையும், சத்திரியரையும் வைசியரையும் சூத்திரரையயும் சிருஷ்டித்தார் (மனு 1 :31.1)

    சூத்திரனுக்கு நாமகரணம் செய்யும்போது எப்போதுமே அடிமை, தாசன் என்பன போன்ற தாழ்ந்த நிலையைக் குறிக்கும் பெயர்களையே தான் சூட்ட வேண்டும். (மனு2:31)

    பிரக்கணனைக் காப்பாற்றும் பொருட்டு பிராமணரல்லாதாரைக் கொலை செய்தவனுக்குப் பாபமில்லை. (மனு 8:143)

    பிராமணனால் சூத்திர ஸ்திரீக்கப் பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்குத் தந்தையின் சொத்தில் பங்கில்லை. (மனு 8:155)

    சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்தில் சமமாக உட்கார்ந்தால் அச்சூத்திரனது இடுப்பில் சூடு போட்டாவது அல்லது அவனது ஆசனவாய் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரைவிட்டுத் துரத்தவேண்டும். (மனு 8:281)

    அரசன் சூத்திரனைப் பிராமணர் முதலிய உயர்ந்த ஜாதிகளுக்குப் பணிவிடை செய்யும்படி கட்டளையிட வேண்டும். சூத்திரன் மறுத்தால் அவனைக் கடுமையாய் தண்டிக்க வேண்டும் (மனு 3:410)

    பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருட்களைக் கைப்பற்றிக் கொள்ளலாம. ஏனென்றால் அடிமையாகிய சூத்திரன் எவ்வித பொருளுக்கும் உடையவனாக மாட்டான். (மனு 8:417)

    பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனைச் சித்ரவதை செய்து செய்து கொல்லவேண்டும். ஆனால் சூத்திரனுடைய பொருளைப் பிராமணன் தன் இஷ்டப்படி கொள்யைடிக்கலாம். (மனு 9:248)

    பிராமணர் இழிதொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் பூஜிக்கத்தக்கவர் (மனு 9:313)

    பிராமணன் மூடனாக இருந்தாலும் அவனே மேலான தெய்வம் (மனு 9.317)

    பிராமணன் அல்லாதவன் உயர்குலத்தோரின் தொழிலைச் செய்தால் அரசன் அவன் பொருள் முழுவதையும் பிடுங்கிக்கொண்டு அவனை நாட்டைவிட்டே துரத்திவிட வேண்டும் (மனு 10:96)

    பிரமணன் உண்டு மிச்சப்பட்ட எச்சில் ஆகாரமும் உடுத்திக் கிழித்த கந்தல் ஆடையும் கெட்டுப்போன தானியமுமே சூத்திரனுடைய சீவனத்துக்குக் கொடுக்கப்பட வேண்டும்.

    யோக்கியமான அரசன் சூத்திரனிடம் திருடிய பிராமணனைத் தண்டிக்கூடாது. (மனு11:20)

    பெண்களையும் சூத்திரர்களையும் கொல்வது மிகவும் குறைந்த பாபமேயாகும். (மனு 11:66)

  65. பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால்
    போர் கொண்ட நாட்டுக்குப் பொல்லா வியாதியாம்
    பார் கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம் என்றே
    சீர் கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே………… திருமந்திரத்தில் திருமூலர் பாடிய இந்த பாடலுக்கு அரசு செவிசாய்க்குமா?

    • இந்த பாடலை கேட்டால் அம்பி அந்நியன் ஆகி விடுவாறே உங்களுக்கு தெரியாதா?

    • பேர் கொண்ட பார்ப்பான் என்றால் ஆரியப் பார்ப்பானா அல்லது பேரளவில் பார்ப்பானா என்று ஏற்கனவே வேறொரு பதிவில் விரிவாக விவாதித்தாகிவிட்டது.. இப்போது ஆனந்த நடராசர் விளக்க வேண்டியது, போர் கொண்ட நாட்டுக்கு என்றால் 150 அடிக்கு கீழ் போர் போட வேண்டிய நாட்டுக்கா.. பார் கொண்ட நாட்டுக்கு என்றால் டாச்மாக் பார் புகழ் கொண்ட நாட்டுக்கா.. பார்ப்பானை விரட்டிவிட்டால் நிலத்தடி நீர்மட்டம் மேலே வந்து, டாச்மாக் தண்ணீர் ஒழிந்து விடுமா..

      • நான் சமீபத்தில் நல்லூர் நாகலிங்கம் என்பவருடைய திருமந்திர விளக்க உரையை வாசித்தேன்.திருமந்திரத்துக்கு சமீப கால நடைமுறையுடன் பொருத்தி பொருள் கூறி இருந்தார்.மேற்படி “பேர் கொண்ட” என தொடங்கும் பாடலுக்கு அவர் கூறி உள்ள பொருளை அப்படியே தருகிறேன் இதில் என் சொந்த சரக்கு ஏதுமில்லை

        “பேர்கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தாற்”

        இது பெயரளவிலான பார்ப்பானா அல்லது ஆரிய பார்ப்பானா என ஆராயாமல் தற்காலத்தில் பூஜை செய்துவரும் பார்ப்பனர்கள் பெயரளவில்தான் பூசிப்பதால் அவர்களை குறிப்பதாக கொள்ளலாம் என் கிறார்.

        “போர்கொண்ட நாட்டுக்குப் பொல்லா வியாதியாம்”

        மேற்படி வரிக்கு பொருள் கூறும் போது தன்னிடம் பாரம்பரியமாக வந்த திருமந்திர ஏடுகள் இருப்பதாகவும் அதில்”பார்கொண்ட நாட்டுக்கு பொல்லா வியாதியாம்” என உள்ளது என கூறும் அவர் நடைமுறையில் உள்ள வரி பாடபேதமாக இருக்கலாம் என சொல்கிறார்.அவர் கூற்றுபடி டாஸ்மார்க் பார்கள் உருவாகி அதன் மூலம் பொல்லாத வியாதிகள் வருமாம்.

        “பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம் என்றே”

        மேற்படி வரியும் பாடபேதமே என துணியும் அவர்.அவரிடம் உள்ள ஏட்டில்”போர்கொண்ட நாட்டுக்கு பஞ்சமுமாம் என்றே” என உள்ளதாகவும் அதன் பொருள் பருவமலை மாறுபட்டு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு 150 அடிக்கு கீழ் போர்போட வேண்டும் என்பதாம்.

        மேலே கூறி உள்ள விளக்கங்களின் திரண்ட பொருள் என்னவெனில் பேருக்கு பூசை செய்யும் பார்ப்பனர் சிவனை பூசித்தால் டாஸ்மார் பார்கள் உருவாகி வியாதிகள் பெருகும் எனவும்,150 அடிக்கு கீழ் போர் போடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்பதாம்.

        மேற்கூறிய இரண்டும் நடைமுறை உண்மையாக உள்ளதால் அனைத்து பார்ப்பனரும் பேருக்குதான் பூசை செய்கிறார்களோ என சந்தேகிக்க இடமுண்டு.

        எனவே அனைத்து சாதியை சேர்ந்தவர்களையும் அர்ச்சகராக்கி நாட்டுக்கு சுபிட்சத்தை உண்டாக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

        • மேற்படி நல்லூர் நாகலிங்கனார்தான் வியாசன் என்ற பெயரில் வந்து நமக்கு அருள் பாலிக்கிறாரோ..?!

          • டாஸ்மார்க் பார்,150 அடிக்கு கீழ் போர் போன்றவை வியாசனின் பதவுரைகள் இல்லையே.

  66. //நண்பர் வியாசரே! சிவதாண்டவமும், பிட்சாடண வைபவமும் சிதம்பரத்தில் நடக்கவில்லை! தல புராணப்படி, பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதரின் தவத்திற்கு இணங்க, கைலாயத்தில் ஆடிய சிவதாண்டவ காட்சியை இங்கு காண்பித்ததாகத்தான் கதை!///

    சகோ. அஜாதசத்துரு,

    சிவபெருமானைக் கூத்தனாக, நடராசனாக வழிபடும் முறை, அதிலும் குறிப்பாக தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடும் கூத்தப்பெருமான் அல்லது ஆடலரசனின் வடிவம் தமிழர்களுடையது. அது வெளியிலிருந்து வரவில்லை. சோழர்கள் அவர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் (Warrior God) வடிவமாக, அந்த நடராஜா மூர்த்தத்தை வரித்துக் கொண்டதால், நடராசனை தமது குலத்தெய்வமாக கருதுமளவுக்குப் போற்றினர் அதனால் அது சோழர் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாமல், எங்கு சோழர்கள் சென்றனரோ அங்கெல்லாம் பிரபலமடைந்தது. இலங்கையிலும் சோழர்கள் அமைத்த தலைநகராகிய பொலநறுவை என இன்று அழைக்கப்படும் “நிகரிலி சோழ வளநாட்டுப் புலைநரியான ஜனநாதபுரத்திலும்” நடராசர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    சிவபெருமான் வாழும் கைலாயம் என்பது Celestial place அது ஒரு நாடல்ல, கைலாயத்தில் வாழ்பவர்கள் மனிதர்கள் அல்ல, கடவுளும் தேவர்களும், பூதகணங்களும் தான். நீங்கள் சொல்வதன் படி பார்த்தாலும் கூட, பதஞ்சலி முனிவருக்கும், வியாக்கிரபாதருக்கும் கைலாயத்துக்கு வெளியே எங்கே சிவதாண்டவம் காட்டப்பட்டது- தில்லையிலே, அதாவது தமிழ்மண்ணிலேயே- தவிர வேறு எந்த நாட்டிலும் அல்ல. அத்துடன் சிவபெருமான் பிட்சாடனராகவும், திருமால் மோகினியாகவும் வேடமிட்டு தில்லைவனத்து முனிவர்களின் கர்வத்தை அடக்க வந்த இடம், சிதம்பரத்திலிருந்த தில்லைவனம் என்று தான் கோயிற்புராணம் கூறுகிறது. அதாவது பிட்சாடன வைபவம் நடைபெற்றதும் தில்லையில் தான். அதனால், சிவதாண்டவம் காட்டப்பட்டதும் தில்லையில் தான், பிட்சாடன வைபவம் நடைபெற்றதும் அதே தில்லையில் தான். அப்படியானால் அந்த தில்லைவனம் எங்கேயிருக்கிறது? அது தமிழர்களின் நாட்டில் தான் அன்றும் இருந்தது, இன்றும் இருக்கிறது. அப்படியிருக்க எப்படி ஐயா, நடராசர் வழிபாட்டு முறையும், நடராசர் வடிவமும் வேறு எங்காவதிருந்து தமிழ்மண்ணுக்கு வந்திருக்க முடியும்.

    தமிழர்கள் தான் கடவுளை கூத்தனாக/நடராசன் (Dancer) கண்டனர் என்கிறார் Michael Woods, British Historian ( காணொளியில் 40:00 பார்க்கவும்).

    http://viyaasan.blogspot.ca/2014/01/blog-post_20.html

  67. ///உலகெலாம் வழிபட்ட சிவன், தில்லையில் மட்டுமே ஆடினான் என்பது பிழையானது, தற்பெருமைக்காக கூட ஒப்புக்கொள்ள இயலாதது! தமிழன் கெட்டது இந்த வீணான, தகுதியற்ற தற்பெருமையினாற்றான்! இனியாவது உலக வழக்கை ஒப்பிட்டு, உயரப்பாருங்கள்!///

    உலகமெல்லாமுள்ள கிறித்தவர்களால் வழிபடப்படும் கர்த்தரும், இஸ்லாமியர்களின் அல்லாவும், அவர்களது படைப்பில் உருவாகிய அழகிய பரந்த உலகமிருக்க, மத்திய கிழக்குப் பாலைவனத்தைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது “பிழையானது, தற்பெருமைக்காக கூட ஒப்புக்கொள்ள இயலாததது” என்று யாரவது கூறினால் அது எவ்வளவு நகைப்புக்கிடமானதோ அப்படியானது தான் உங்களின் வாதமும்.

    சிவன் கைலாயத்திலும் ஆடினான். காஸ்மீரத்திலும் ஆடியிருக்கலாம், ஆனால் சிதம்பரத்திலுள்ளது போன்ற நடராசவடிவம் தமிழ்நாட்டில், தமிழர்களின் உள்ளத்தில் தான் உருவாகியது. கூத்தப்பெருமானின் ஆட்டம் தில்லையில் நடந்ததாக பழந்தமிழர்கள் நம்பினார்கள். அந்த நம்பிக்கையின் வழியில் தமிழ்நாட்டில் தமிழர்களால் உருவாக்கப்பட்டது தான் நடராசர் உருவமும் அதன் வழிபாடும். தமிழ் மண்ணிலிருந்து தான் நடராசர் வழிபாடு வெளியுலகுக்குப் பரவியது, அதிலும் குறிப்பாக, அதை மேலை நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியது சேர். ஆனந்த குமாரசுவாமி எனப்படும் இலங்கைத் தமிழர். இவையெல்லாம் வெறும் புகழ்ச்சியல்ல, தற்பெருமையுமல்ல.

    நாங்கள் தமிழர்கள், எமக்குரியவற்றை, எங்களுடையதென சொந்தம் கொண்டாடாது விட்டால், தயங்கினால் அல்லது வெறும் புகழ்ச்சி வேண்டி தேவையற்ற வரட்டுப் பெருந்தன்மை காட்டினால், மற்றவர்கள் தம்முடையதாக்கிக் கொள்வார்கள். அது தான் சிதம்பரத்தில் நடந்திருக்கிறது. எங்கிருந்தோ வந்த தீட்சிதர்கள், இன்று தமிழர்களின் கோயிலையே தமதாக்கிக் கொண்டார்கள். தமிழர்களின் விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மை மட்டுமல்ல, தமது வரட்டுக் கெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள, தமிழர்களின் வரலாற்றைத் திரித்து, தமிழர்களின் பாரம்பரியக் கலாச்சார சின்னத்தையே தமிழர்களுடையதல்ல, என்று வாதாடக் கூடிய தமிழர்கள் பலர், இன்றும் அதாவது தமிழினம் ஒன்றுபட்டு, எழுச்சி கொள்ள வேண்டிய இக்கால கட்டத்திலும் எம்மிடையே இருப்பது தானையா தமிழினத்தின் சாபக்கேடு. 🙁

    • //உலகமெல்லாமுள்ள கிறித்தவர்களால் வழிபடப்படும் கர்த்தரும், இஸ்லாமியர்களின் அல்லாவும், அவர்களது படைப்பில் உருவாகிய அழகிய பரந்த உலகமிருக்க, மத்திய கிழக்குப் பாலைவனத்தைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது “பிழையானது, தற்பெருமைக்காக கூட ஒப்புக்கொள்ள இயலாததது” என்று யாரவது கூறினால் அது எவ்வளவு நகைப்புக்கிடமானதோ அப்படியானது தான் உங்களின் வாதமும்.//

      கடவுளர் பற்றிய கதைகளை அந்த மதங்களே பழைய ஏற்பாடு என்று ஒதுக்கித்தள்ளிவிட்டனர்! கிருத்துவம் யேசுவின் போதனைகளை முன்வைத்தும், இஸ்லாம்நபி அவர்களின் சீர்திருத்தகருத்துக்களை முன்வைத்தும் வழங்கப்படுகிறது! புரட்சியாளர்கள் வாழ்ந்த இடங்களில் அவர்களைப்பற்றி அறிந்த மக்கள் அதை பின்பற்றுகிரார்கள்! கடவுள் பாலஸ்தீனத்தில்தான் பிறந்தார் என்று அவர்கள் கூறவில்லையே! உங்களின் வாதம் தான் நகைப்புக்கிடமானது!

      உலகெலாமுணர்ந்து ஓதற்கு அறியவனான இறைவனை வெறும் தெருக்கூத்து நாயகனாக்கி நகைக்க வைத்துவிட்டனரே! தத்துவமாகநினைப்பது ஒன்று, புராணமாக மக்களை ஏமாற்றுவது ஒன்று என இரண்டு முகங்கள் ஏன்?

  68. //அதிலும் குறிப்பாக, அதை மேலை நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியது சேர். ஆனந்த குமாரசுவாமி எனப்படும் இலங்கைத் தமிழர். இவையெல்லாம் வெறும் புகழ்ச்சியல்ல, தற்பெருமையுமல்ல.//

    சேர். ஆனந்த குமாரசுவாமி அவர்களுக்கு என்நன்றி! ஆனால், சிவ வழிபாடி ஆயிரக்கணகான ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவின் பாலைவனப்பகுதியில் இருந்த (கொவில் போன்ற) கட்டிட இடிபாடுகளை ஆராய்ந்தபொது மிகச்சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்! மேலும் பல ஆசிய அப்பிரிக்கநாடுகளிலும் சிவன் வழிபாடு இருந்ததற்கான குறியீடுகள், கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது!

    ஈராக்கிலிலிருந்து, ஜப்பான் வரை நமது சிவ வழ்பாடு போன்றதோர் கலாசாரம் இருந்ததற்கான சான்றுகள், கலையகம் வலைத்தடத்தில் காண்க! சிவ வழிபாடு அனாதி காலமாயிருக்க, புராண பித்தலாட்டமும், பிழைப்பு வாதம் மட்டுமே நமது சொத்து என்பதை அறிக!

  69. அய்யா வியாசரே! உங்கள் புராண விளக்கம் பிழையானது! சிவ பெருமான் பிட்சாண்டரானதும், ரிஷிபத்தினி களை கற்பழித்து ரிழிகளின் செருக்கை அடக்கியதும் தாருகா வனத்து ரிஷிகளிடம்! அது தில்லைவனம் அல்ல! சிவனை அழிக்க மான்,மழு, வடவாக்கினி, முயலகன் முதலிய பூத கணங்களால் முடியாமல் போனதால் சிவனிடம் அடிபணிந்தனர்!

    சிதம்பரதின் மூல தத்துவமான ஆகாச லிஙகத்தையும்(அம்மையும் அப்பனும் இணைந்த சாங்கிய அருவுருவம்)நீக்கப்பட்டு, நடராஜர் மூலவராக இடம்பெற்றது தேவார காலத்திற்கு சற்று முன்னர்தான்! திட்டமிட்டே, பல ஊர்களிலும் பல நடராஜ உருவங்கள் ஏற்படுத்தபட்டன! ஆரிய வசப்பட்ட சோழர்கள் தங்கள் ஆட்சி பரவிய இடங்களிலெல்லாம் ஆட்ல், பாடல், தெவதாசிகள் இவைகளால் மக்களை கவர கோவில்களை பயன்படுத்தினர்! அதுவரை சிவமதமென்றாலே, இகலோக சுகஙகளை வெறுத்து, இறைவனுடன் சேர்ந்து முக்தி பெற, மாயாவாதம் என்ற நோக்கிலிருந்து, புதிய புராணங்கள் இயற்றி, இயல் இசை நாடகஙகள் உருவாயின! இவற்றிற்கெல்லாம் காரணம், புத்த சமண அறனெறிகள் ஒழிந்து, ஒரு பக்கம் புதிய சைவமும், மறுபக்கம் தமிழ் வைணவமும் போட்டி போட்டு மக்களை தங்கள் பக்கம் ஈர்த்ததுதான்! பல அபத்தமான, இறை இலக்கணத்துக்கு அப்பாற்பட்டு தங்கள் தங்கள் தெய்வங்களை தாங்களே சிறுமைப்படுத்தினர்!

    உலகெங்கிலும் வணங்கபட்ட உண்மையான சிவன் பற்றி அறிய பர்க்க; “சிவன்’-ந சி கந்தையா பிள்ளை,நாம் தமிழர் பதிப்பகம் வெளியீடு.

    • @அஜாதசத்ரு

      ///நடராஜர் வழிபாடு சோழர்களின் ஆட்சிக் காலத்தில்தான் திடீரென பரவியிருக்கிறது///–மறுமொழி61.1

      ///”பிற்கால” என்று நான் கூறவில்லையே///—மறுமொழி 61.1.1.1

      ///பிற்கால சோழரா முற்கால சோழரா என்று கேதாமல் பிற்கால சோழரை நான் குறிப்பிடுவதாக தவறாக கற்பிதம் செய்துகொண்டு உள்ரிகொட்டுவானேன்///–மறுமொழி 64.2.1.1

      ///நடராஜர் மூலவராக இடம் பெற்றது தேவார காலத்திற்கு சற்று முன்னர்தான்///–மறுமொழி 71

      மேலே உள்ள மறுமொழிகள் அனைத்தும் அஜாதசத்ரு அவர்கள் கூறியதுதான்.முதல் மூன்று மறுமொழிகளின் மூலம் நடராஜர் வழிபாடு முற்கால சோழர்களின் காலத்தில்[தோராயமாக கி.மு 3_கி.பி.3 வரை] திடீரென பரவியது என கூறுகிறார் என கொள்ளலாம்.நாலாவதாக உள்ள மறுமொழியில் தேவார காலத்திற்கு சற்று முன்னர் என்பது எந்தநூற்றாண்டு என அவர்தான் கூறவேண்டும்.இந்த கால கணக்குகளில் சற்று குழப்பம் இருப்பதாக என் சிற்றறிவுக்கு படுகிறது.அய்யா போன்ற பேரறிவாளர் அதை விளக்கினால் நலமாக இருக்கும்.

      கால வரிசைபடி தனது கருத்தை நிறுவாமல் குழப்பிக்கொண்டு திரியும் அவர்,அவரே நம்பாத பார்ப்பனர்களின் தல புராண கட்டுகதைகளின் மூலம் தனது வாதத்தை நிறுவமுயல்வதை பார்க்க பரிதாபமாக உள்ளது.சிவன் காளியை வென்றதான கதை பார்ப்பன புராணப்படி பாமர தனமாக இருக்கலாம்.சித்தாந்தபடி அது உயர்வானதுதான் தேவையெனில் அதையும் விளக்குகிறேன்.

      • //கால வரிசைபடி தனது கருத்தை நிறுவாமல் குழப்பிக்கொண்டு திரியும் அவர்,அவரே நம்பாத பார்ப்பனர்களின் தல புராண கட்டுகதைகளின் மூலம் தனது வாதத்தை நிறுவமுயல்வதை பார்க்க பரிதாபமாக உள்ளது.சிவன் காளியை வென்றதான கதை பார்ப்பன புராணப்படி பாமர தனமாக இருக்கலாம்.சித்தாந்தபடி அது உயர்வானதுதான் தேவையெனில் அதையும் விளக்குகிறேன்.//

        காலவரிசைப்படி நிறுவ, தமிழர்கள் சங்க கால பாடல்களைத்தவிர போதுமான ஆதாரங்கள் இல்லை! புராணக்கதைகளை ஆதாரமாக கொள்ளமுடியாது! ஆனால், தல புராணங்களுக்கும் உண்மைகளுக்கும் வெகு தூரம்! கல்வெட்டுநாகரிகமும், சிற்ப கலைத்திறனும் வளர்ச்சியடைந்த பின்னரே உருவ வழிபாடும், புராணக்கதைகளையொட்டிய சிலைகளும் தோன்றின! ஒவ்வொரு ஊரிலும் ஒரு அசுரன் இருந்ததையும், அவனை அழிக்கவே கடவுள் அந்த ஊரில் வந்து தங்கியதாகவும் தலபுராணங்கள் எனும் அண்டபுளுகு ஆகாச புளுகு கதைகள், பாமர பக்தனை கவரவே, உண்மையல்ல என்று தெரிந்தே புனையப்பட்டன! ஒரு அண்டபுளுகை அம்பலமாக்கவே, இன்னொரு ஆகாசபுளுகு இருப்பதையும் குறிப்பிட்டேன்!

        தேவாரநாயனார் மேலும் விவரமளிக்க முடிந்தால் வரவேற்கிறேன்!

        • ///தேவார நாயனார் மேலும் விவரமளிக்க முடிந்தால் வரவேற்கிறேன்///

          விவரமளிக்க வேண்டியது நீங்கள்தான் ஐயா! நடராஜர் வழிபாடு பிற்காலத்தில் தோன்றியது என்று கூறியவர் நீங்கள்தான்,அது எப்பொழுது என்று கேட்டால் மாற்றி மாற்றி குழப்புபவரும் நீங்கள்தான்.எப்படி குழப்புகிறீர்கள் என்று மறுமொழி 71.1ல் பட்டியல் இட்டுள்ளேன்.அதை படித்து பார்த்து சரியான காலம் எது என்று கூறுங்கள்.

    • ஒரு திருத்தம்[தோராயமாக கி.மு.300–_கி.பி.300 வரை என வாசிக்கவும்.

  70. // அய்யா வியாசரே!உங்கள் புராண விளக்கம் பிழையானது! சிவ பெருமான் பிட்சாண்டரானதும், ரிஷிபத்தினிகளை கற்பழித்து ரிழிகளின் செருக்கை அடக்கியதும் தாருகா வனத்து ரிஷிகளிடம்! அது தில்லைவனம் அல்ல!//

    மன்னிக்கவும், அது என்னுடைய பிழை தான், கூகிளை மட்டும் நம்பியதால் வந்த தவறு. 🙂 ஆனால் தாருகாவனத்தில் நடந்த பிட்சாடனர்(சிவன்), மோகினி(திருமால்) நடனத்தை ஆதிசேடன் காண விரும்பியதால், பதஞ்சசலி முனிவராக ஆதிசேடனை தில்லைவனத்துக்குப் போகுமாறு கூறி, அங்கு அவருக்கு ஆனந்த தாண்டவத்தைக் காட்டியதாகக் கூறுகிறது கோயில்புராணம். அதாவது வியாக்கியபாதருக்கும், பதஞ்சலி முனிவருக்கும் அந்தக் காட்சியைக் காட்டுவதற்கு, இந்தப் பரந்த உலகில் பல அழகான இடங்களும் வனங்களுமிருக்க, தமிழ்நாட்டின் தில்லைவனத்தைத் தேர்ந்தெடுத்தார் சிவபெருமான். அந்தக் கதையின் அடிப்படையில் தான், தமது மண்ணில் சிவன் தாண்டவன் ஆடியதாக நம்பிய பழந்தமிழர்களின் உள்ளத்தில் சிவபெருமானைக் கூத்தனாக வழிபடும் எண்ணம உருவெடுத்து, இன்றைய நடராச வடிவமாக வடிவமைக்கப்பட்டது. தில்லைச் சிதம்பரத்தின் நடராசர் தமிழர்களுடைய கடவுள், அவர் தமிழ்நாட்டுக்கு வேறெங்கிருந்தும் வரவில்லை. அந்த வழிபாட்டை தமிழர்கள் யாரிடமிருந்தும் இரவல் வாங்கவில்லை. (நான் உங்களுக்கு ஐயா அல்ல, அனேகமாக தம்பியாக இருக்கலாம் இருக்கலாமென நம்புகிறேன். எப்படியும் அழையுங்கள், அது பெரிய விடயமல்ல. :))

    • // மன்னிக்கவும், அது என்னுடைய பிழை தான், கூகிளை மட்டும் நம்பியதால் வந்த தவறு. //

      நீங்கள் குட்டிகரணம் அடிப்பது வழக்கம்தான்.. இப்படி வேட்டியையும் அவிழ்த்து வீசி விட்டு அடிப்பீர்கள் என்பது ஒரு புதுமை..!

      // ஆனால் தாருகாவனத்தில் நடந்த பிட்சாடனர்(சிவன்), மோகினி(திருமால்) நடனத்தை ஆதிசேடன் காண விரும்பியதால், பதஞ்சசலி முனிவராக ஆதிசேடனை தில்லைவனத்துக்குப் போகுமாறு கூறி, அங்கு அவருக்கு ஆனந்த தாண்டவத்தைக் காட்டியதாகக் கூறுகிறது கோயில்புராணம். //

      நடராசரின் திருவுருவில் அரையில் ஆடையிருப்பதால் பதஞ்சலி முனிவர் பிட்சாடனரின் ஆட்டத்தைக் காண விரும்பவில்லை, ஈசனின் ஆனந்தக் கூத்து எனும் ஐந்தொழில் புரியும் பிரபஞ்ச நடனத்தையே காணவிரும்பியிருக்கிறார்.. மேலும் அருகில் நிற்கும் சிவகாமியம்மன் உமாதேவியார்தானே தவிர மோகினி அவதாரம் அல்ல.. நடராசர் தாருகாவனத்து பிட்சாடனர் என்று கோயில் புராணம் கூறினால்(?) அது கேள்விக்குரியது..

      // அதாவது வியாக்கியபாதருக்கும், பதஞ்சலி முனிவருக்கும் அந்தக் காட்சியைக் காட்டுவதற்கு, இந்தப் பரந்த உலகில் பல அழகான இடங்களும் வனங்களுமிருக்க, தமிழ்நாட்டின் தில்லைவனத்தைத் தேர்ந்தெடுத்தார் சிவபெருமான். //

      வியாக்கிரபாதரும், பதஞ்சலி முனிவரும் தில்லையில் இருந்ததால் ஆனந்தநடனக் காட்சி அவர்களுக்கு அங்கு தெரிந்தது.. ஈசன், காரைக்கால் அம்மைக்கு திருவாலங்காட்டிலும், திருமூலருக்கு அவர் இருந்த இடத்திலும் நடனக் காட்சி அளித்தான்..

      // அந்தக் கதையின் அடிப்படையில் தான், தமது மண்ணில் சிவன் தாண்டவன் ஆடியதாக நம்பிய பழந்தமிழர்களின் உள்ளத்தில் சிவபெருமானைக் கூத்தனாக வழிபடும் எண்ணம உருவெடுத்து, இன்றைய நடராச வடிவமாக வடிவமைக்கப்பட்டது. தில்லைச் சிதம்பரத்தின் நடராசர் தமிழர்களுடைய கடவுள், அவர் தமிழ்நாட்டுக்கு வேறெங்கிருந்தும் வரவில்லை. அந்த வழிபாட்டை தமிழர்கள் யாரிடமிருந்தும் இரவல் வாங்கவில்லை. //

      சிவபெருமானின் பிரபஞ்ச நடனத்தை, முயலகன் என்ற ஆணவத்தை மிதித்து மேல் எழுந்து நின்று படைத்தல் (வலது மேல் கரத்தில் உடுக்கை), காத்தல் (வலது கீழ் கரம் காட்டும் அபய முத்திரை), அழித்தல் (இடது மேல் கரத்தில் ஊழித்தீ), மறைத்தல் (துதிக்கை போல் குறுக்கே நீண்ட இடது கீழ் கரம்), அருளல் ( தூக்கிய இடது காலின் பாதம்) எனும் ஐந்தொழில் புரியும் நடராசரின் குறியீட்டு நடனத்தில் கண்டுணர்ந்து வழிபடும் முறை தமிழ் மண்ணில் தோன்றியது என்று கூறுவதில் தமிழனுக்கு ஏன் வெட்கம்..?! அந்த ஆளே எங்க ஊருக்கு வந்துதான் நடனம் ஆடினார் என்று கூறிக் கொள்வதில் இருக்கும் பெருமையை விட, சிவ வழிபாட்டை நடராசராகவும், ஆலமர் செல்வனாகவும் தத்துவார்த்தப்படுத்தி முதலில் வணங்கியவன் தமிழன் என்று கூறுவதில் இருக்கும் பெருமை குறைவல்ல..

      • //இப்படி வேட்டியையும் அவிழ்த்து வீசி விட்டு அடிப்பீர்கள் என்பது ஒரு புதுமை..!//

        உண்மையில் அந்தக் கதையை கூகிள் மூலம் தானறிந்தேன். அதனால் தான் உண்மையை ஒப்புக் கொண்டேன், அதிலென்ன தவறு என்று எனக்குப் புரியவில்லை. மற்ற விடயங்களில் எல்லாம், என்னுடைய கருத்தைத் தான் நீங்களும் கூறுகிறீர்கள். 🙂

  71. லிங்கத்துக்கும் சிவனுக்கும் என்னப்பா சம்பந்தம்? லிங்கம் என்றால் என்ன? அதை எதற்கு வழிபடுகிறார்கள்?அந்த லிங்கத்துக்கு என் பார்ப்பனர்கள் பிரகதீஸ்வரர் வைத்தீஸ்வரர் அருணாச்சலேஸ்வரர் ஜலகண்டேஸ்வரர் ஏன் ஆள் பெயர்களை வைத்திருக்கிறார்கள்? தமிழகம் எங்கும் சைவ கோவில் லிங்கதிற்க்கு தமிழல்லாத சம்ஸ்கிருத பெயர்கள் ஏன்? ராமேஸ்வரம் நெல்லை கங்கை கொண்ட சோழபுரம் போன்ற ஊர்களின் லிங்கம் பெயர் தெரியவில்லை……

    • தமிழ்நாட்டில் பழமையான கோயில்கள் எல்லாவற்றுக்கும் தூய தமிழ்ப்பெயர்கள் உண்டு. தமிழரல்லாதாரின் ஆட்சியில் சமக்கிருத்ததில் மட்டும் பூசைகள் செய்யத் தொடங்கியவுடன், தமிழ்ப்பெயர்கள் எல்லாவற்றையும் சமக்கிருதத்தில் மொழி பெயர்த்து வடமொழிமயமாக்கி விட்டனர். நாம் இன்றும் அவற்றையே கிளிப்பிள்ளை மாதிரி ஒப்பித்துக் கொண்டிருக்கிறோம். அந்தப் பெயர்கள் எல்லாம் மீண்டும் தமிழாக்கப்பட வேண்டும். அதற்கு முன்னால் தமிழர்களாகிய நாங்கள் அந்த தமிழ்ப் பெயர்களை எமது எழுத்திலும் பேச்சிலும் பயன்படுத்த வேண்டும், அப்படிச் செய்தால் தான் அவை மீண்டும் வழக்கத்தில் வரும்,

      பிரகதீஸ்வரர் – தஞ்சைப் பெருவுடையார் – பெரியநாயகி அல்லது உலகமுழுதுடைய நாச்சியார்

      வைத்தீஸ்வரர் – மருத்துவநாதர் / திருப்புள்ளிருக்குவேளூரான் – தையல்நாயகி

      அருணாச்சலேஸ்வரர் – அண்ணாமலையார் – உண்ணாமுலையாள்

      ஜலகண்டேஸ்வரர் – நீர்த்திரள்நாதர்/திருவானைக்கா உடையார் – உலகுடையாள் / உலகாண்டநாயகி

      இராமேச்சரம் – இராமநாதர் – மலைவளர்காதலி

      திருநெல்வேலி – நெல்லையப்பர் / நெல்வேலிநாதர் – வடிவுடையம்மை

      கங்கைகொண்டசோழபுரம் – கங்கைகொண்டசோழேச்சரர்/பெருவுடையார்.- பெரியநாயகி

      திருக்குற்றாலம் – குற்றாலநாதர் – குழல்வாய்மொழியம்மை

      திருக்கோணமலை (ஈழம்) – கோணநாதர் – மாதுமையாள்

  72. வியாசன் என்ற பெயரை விரும்பியதால்,நான் தங்களை அய்யா என்று அழைப்பதே முறை! உண்மையில் மகாபாரதத்தை இன்னும் சிலர் தொகுத்திருந்தாலும், வியாசரின் தொகுப்பு அந்தக்கால அரசு உரிமை போராட்டங்களையும், ஓரளவு அக்கல சமூக ஒழுக்கநெறிகளையும் சொல்கிறது!நான் முரண்படுவது திராவிட் புரட்சியாளன் கிருட்டினனை தெய்வதன்மைக்கு உயர்த்தி, அவன் வாயாலேயே பார்பன மேலாண்மையைநியாயப்படுத்தும் கீதையை புகுத்தியதைத்தான்! கீதை இடைச்செருகல் தான் என்பதை ஆர் எஸ் எஸ் அம்பிகளைத்தவிர அற்ஞர்கள் பலரும் ஒத்துக்கொண்டதால், வியாசர் மீது எனக்கு நல்ல மதிப்பே மிஞசுகிறது!

    தீட்சிதர்கள் காசு பறிக்க, எந்த சிதம்பர ரக்சியத்தை ஒளித்து வைத்தனரோ, அதுதான் சிதம்பரத்தின் உண்மையான மூலவர் என்பதே என் வாதம்!

    முன்பு, அதிமுக அரசு தில்லை கோவிலை அரசுடமை ஆக்கியபோது, இப்பொதுள்ள தீட்சிதர்கள் அவர்கள் சொல்லிக்கொள்வது போல, கைலாசத்திலிருந்து நடராஜருடன் இறங்கவில்லை, அலகாபாத்திலிருந்து வந்தவர்கள் என்பதற்கு செப்பேடு இருப்பதாக கூறினர்! இதைப்பற்றி முழு ஆதாரமும், விடுதலை ஆசிரியர் வீரமணி அவர்களுக்கும், முன்னால் அமைச்சர் வி வி சுவாமினாதன் அவர்களுக்கும் தெரிந்திருக்கும், எனக்கு நினைலில்லை!

    மற்றபடி சிதம்பரம் ஒரு சாங்கிய கோவிலாக இருந்தது என்பதற்கு ஆதாரம், பொது நூலகத்திலிருந்து எடுத்து கொடுக்க, எனது நண்பரிடம் கேட்டிருக்கிறேன்! விரைவில் பகிர்ந்து கொள்கிரேன்!

    சைவ சித்தாந்ததை, சாதி மதங்களை,நாடுகளை கடந்து, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் உரிய தத்துவமாக எடுத்துச்செல்லவே வள்ள்லார் முயன்றார்! அந்தநெறியில்நாம் முன்னேற வேண்டுமேயன்றி, பிழைப்புவாத, பார்பனிய சமய சழக்குகளில் மாட்டிக்கொள்ளல் ஆகாது!

    • // திராவிட் புரட்சியாளன் கிருட்டினனை //

      அடிக்கடி இப்படி இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துகிறீர்கள் அய்யா..

    • /// சைவ சித்தாந்ததை, சாதி மதங்களை,நாடுகளை கடந்து,பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கு உரிய தத்துவமாக எடுத்துச்செல்லவே வள்ள்லார் முயன்றார்!///

      சரியான கருத்துதான்! சைவத்தில் கலந்து இருந்த பார்ப்பானிய வைதீக நெறிகளை எல்லாம் களைந்து அதை தூய நெறியாக்க முயன்ற வள்ளலார்,அதன் பொருட்டே சிவனை ஜோதி ரூபமாக வழிபட வேண்டினார்.ஆனாலும் சைவத்தின் ஆதி தரிசனமாகிய நடராஜர் வழிபாட்டை மறுக்க வில்லை.கீழே உள்ள பாடலை பாருங்கள்.

      “சைவ முதலாக நாட்டும்–பல
      சமயங்கள் எல்லாம் தனித்தனிக் காட்டும்
      தெய்வம் இதுவந்து பாரீர்-திருச்
      சிற்றம் பலத்தே திருநட ஜொதி.[திருஅருட்பா-4605-ஆறாம் திருமுறை]

      சைவம் முதலான அனைத்து சமயங்களும் கூறுவது சிற்றம்பலத்தில் நடனமாடும் ஜோதியைதானாம்.
      சைவம் அதை நடராஜர் என வணங்குகிறது.வள்ளலார் ஜோதியாக வணங்குகிறார்.

      • //சைவம் முதலான அனைத்து சமயங்களும் கூறுவது சிற்றம்பலத்தில் நடனமாடும் ஜோதியைதானாம்.
        சைவம் அதை நடராஜர் என வணங்குகிறது.வள்ளலார் ஜோதியாக வணங்குகிறார்.//

        சாதாரண புராண பிரசங்கியாக இருந்து, பின்னர் கந்தர்கோட்ட முருகனைப்பாடி, சிதம்பரம் வந்த பின்னர் நடராஜனை உண்மையிலேயே மனம் உருகி பாடி(பிழைப்புக்காக அல்ல), பசித்திருந்து தனித்திருந்து, முன்னரே இருந்த சைவநூல்களை கற்றுணர்ந்து, துறவுனிலையில் புத்தரைபோல இறை சக்தியை உள்ளூணர்ந்து, அதற்கு பின்னரே சமரச சன்மார்க்கம் போதித்தார்! அவரது பக்தி பரிணாம வளர்ச்சியில், தில்லை சபாபதி இடையில் சிலகாலமே! இறுதியில் உங்கள் சைவத்திற்கு வேறுபட்டே அவர் சத்தியந்ஜான சபையை ஏற்படுத்தினார்! அவர் சைவரல்லர் என்றும், அவரது பாடல்கள் மருட்பா என்றும் அக்காலதிலேயே பாட்டெழுதி தூற்றியுள்ளனர்!

        • சிற்றம் பலத்தே திருநட ஜோதி- சிற்றம்பலத்தில் நடனமிடுவது யாருடைய தத்துவம்?

          • தேவார நாயனார்,

            //சிற்றம் பலத்தே திருநட ஜோதி- சிற்றம்பலத்தில் நடனமிடுவது யாருடைய தத்துவம்?// அட கொடுமையே. வள்ளலாரின் சன்மார்க்கம் சைவம் அல்ல. இதன் பொருள் நடராஜன் ஆடும் டான்ஸ் இல்ல, தியான நிலையில் நடக்கும் உணர்வு .

            • அஸ்வின் !

              நடராஜர் டான்ஸ் மட்டும் நேரா ஆடுனதுன்னு நான் சொன்னேனா? இல்லை வள்ளலார் சொன்னாரா? கீழே உள்ள பாட்ட படி

              வாழி எனைத்தூக்கி வைத்த கரதலங்கள்
              வாழி எலாம்வல்ல மணிமன்றம்-வாழி நடம்
              வாழி அருட்சோதி வாழிநட ராயன்
              வாழி சிவஞான வாழி.[திருஅருட்பா-ஆறாம் திருமுறை-4776]

              அருட்சோதியை வாழ்த்திவிட்டு நடராஜனை வாழ்த்துகிறாரே இரண்டையும் தியானத்தில் பார்த்துதானே.

              அருட்பொது நடமிடு தாண்டவ னே
              அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ னே
              நடராஜ பலமது நம்பல மே
              நடமாடு வதுதிரு அம்பல மே
              நடராஜர் பாட்டே நறும்பாட் டு
              ஞாலத்தார் பாட்டெல்லாம் வெறும்பாட் டு
              சிதம்பரப் பாட்டே திருப்பாட் டு
              ஜீவர்கள் பாட்டெல்லாம் தெருப்பாட் டு[அருட்பா-5093-5096]

              அவர் அருப்பெரும் ஜோதியையும்,நடராஜரையும் ஒன்றாகதான் பார்த்தார் என்று புரிந்ததா?

              உனக்கெல்லாம் அருட்பா விளக்கம் கொடுப்பதுதான் மிகப்பெரியா “அடக்கொடுமையே”

              • வினவுக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை? அஸ்வின் பயன்படுத்திய அதே வார்த்தையை தானே நானும் பயன்படுத்தினேன்.அவர் சொல்லியதை வெளியிட்டு,நான் சொல்லியதை நீக்க என்ன காரணம்?

                • அதை முதலில் கவனிக்கவில்லை, இப்போது நீக்கிவிட்டோம். நண்பர்கள் வசை போட்டு கருத்தாடாமல் கருத்தார்ந்து விவாதிப்பது பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

                  • விளக்கத்திற்கும்,நீக்கியமைக்கும்[இருவருடையதையும்] மிக்க நன்றி!

              • அஸ்வின்,நீங்கள் கூறிய ஒரு வார்த்தைக்காக ஒருமையில் விளிக்க வேண்டியதாயிற்று.வருந்துகிறேன்.

  73. //அலகாபாத்திலிருந்து வந்தவர்கள் என்பதற்கு செப்பேடு இருப்பதாக கூறினர்! //

    தீட்சிதர்கள் வங்காளத்திலிருந்து வந்ததாகவும் சிலர் கூறுகின்றனர். எங்கிருந்து வந்தாலும், அவர்கள் தமிழ்மண்ணுக்கு வெளியிலிருந்து வந்ததாக அவர்களே ஒப்புக்கொள்கின்றனர். எங்கிருந்தோ வந்தாவர்கள்; எப்படி தமிழ்நாட்டில் தமிழர்கள் கட்டிய கோயிலுக்கு உரிமையாளர்களாகினர் என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது.

  74. தேவாரநாயனாரே! வள்ளலார் ஆரம்பத்திலிருந்தே நடராஜனிடமிருநது வெட்டிக்கொள்ளவில்லை!நடராஜனை புராணநாயனாக கருதாமல் உயிர்களின் மனதாகிய , சித் அம்பலத்தில், நடனமிடுபவன் என்றே பொருள் கொண்டார்! பிறகு இறுதி நாட் களில், சித் அம்பலத்தின் பிரதியாகவே சத்தியஞான சபையை தோற்றுவித்தார்! சிதம்பரம் என்ற பெயர் காரணமே, அங்கே சித் அம்பரம் எனும், சைவ சித்தாந்ததின் விளக்கமாகிய, உருவிலா இறை தத்துவத்தை விளக்கும் கோவிலுள்ள ஊர் என்பதால் இருக்கலாம்!

    சைவர்களுக்கு ஒரே கோவிலாக ‘கோயில்’ என்றே குறிப்பிடப்பட்டு வந்தமையால், பிற கோவில்கள் அதற்கு பின்னரும், அந்த சிறப்பு பெறாமையும் குறிப்பிடதக்கது! இன்றும் சுத்த வாக்கிய பஞ்சாங்கத்தில் தில்லை ஆவுடையார் கோவில் என்றுதான் குறிப்பிடுவது வழக்கம்! மற்ற பஞசபூத தலங்கள் எனப்படும் சைவ கோவில்கள் பிற்காலத்தில் புராண கதைகள் அடிப்படையில் ஏற்படுத்தப்படும்போது, சிதம்பரத்திலும் ‘நடராஜர்’ குடியேறி இருக்கலாம்! இந்த கோவில்கள் எல்லாம் இடைக்கால சோழ அரசர்களின் தற்காலிக தலைனகராகவும், அந்தந்த பகுதி பொக்கிஷ பண்டாரமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன! மதுரை சொக்கனாதர் புராணத்திலும்,நெல்லையப்பர் புராணத்திலும் நடராஜர் இல்லாமலே, சோழ ஆட்சி அஙகு விரிவு படுத்தப்படும்போது அந்த இடங்களிலும் சபைகள் ஏற்படுத்தபட்டன! குற்றாலத்திலோ அகத்தியரே திருமாலை சிவனாகிய புராணமே உள்ளது! அங்கு சித்திர சபை மிக பிற்காலத்தில் ஏற்படுத்தபட்டது! இவ்வாறு உண்மையான சைவநெறி சிதைக்கப்பட்டு, பார்ப்பனீய புராணக்கதைகள் திணிக்கப்பட்டன! அதற்கு பணம் கொடுத்து தமிழ் புலவர்கள் அமர்த்தப்பட்டனர்! தமிழர்களின் உள்ளூர் தெய்வங்கள், கள்ளழகர், சொக்கர், காளி, முருகன், சுடலை மாடன் முதலிய கிராமத்தேவதைகள் பார்ப்பன அவதாரம் எடுத்தன! தற்போது யாதவ கிருட்டினனுக்கும், ஆஞசனேயருக்கும் கூட பூணூல் போட்டு படம் வரைகிரார்கள்! மக்கள் மறைந்துள்ள மர்மத்தை அறிவார்களா?

  75. Supreme court judgement is final and we will all follow it.
    It is a waste and some are shouted in their level of thinking.
    Don’t point out& attack single community. It seems to attack without any basic concept.
    (I am a backward class community person)

    • It seems like you have not read the background or at the minimum, all of the above comments in detail to try and understand why the matter went to court.

      And if the Supreme court judgement is final, and if you say not to appeal it, you no need to be in a democratic country.

Leave a Reply to Ajaathasathru பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க