privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதில்லை கோவில் உச்சநீதிமன்ற தீர்ப்பு – சதி வென்றது, நீதி தோற்றது !

தில்லை கோவில் உச்சநீதிமன்ற தீர்ப்பு – சதி வென்றது, நீதி தோற்றது !

-

சிதம்பரம் நடராசர் கோயில் 2009-ம் ஆண்டில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதனை எதிர்த்து தீட்சிதர்கள் தொடுத்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீட்சிதர்கள் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவை சந்தித்து முறையிட்டனர். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்தனர். இந்த வழக்கில் சிவனடியார் ஆறுமுகசாமி சார்பில் மனித உரிமைப் பாதுகாப்பு மையமும் முனைப்புடன் கலந்து கொண்டு போராடியது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதன்படி தில்லைக் கோவிலை மீண்டும் தீட்சிதர்கள் வசமே ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பார்ப்பன சதி வென்று விட்டது. நீதி தோற்று விட்டது. இது குறித்து மனித உரிமைப்பாதுகாப்பு மையத்தின் அறிக்கையை விரைவில் வெளியிடுகிறோம்.

 

  1. அடப்பாவிகளா. ஒரு சோப்ளாங்கி வக்கீலை தமிழக அரசு நியமிசிருக்குன்னு நீங்க சொன்னபோதே இப்படிதான் தீர்ப்பு வரும்னு கணிக்க முடிஞ்சுது.

    தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கோவில்களின் நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்றுள்ளது. இவ்வாறு வலுவான precedent உள்ள நிலையிலும் இப்படி தீர்ப்பு என்றால், அனைவரும் அர்ச்சகர் வழக்கை மத நம்பிக்கை, ஆகமம் என்ற பெயரில் எளிதாக கவிழ்த்து விடுவார்கள் என அச்சப்படுகிறேன்.

    தீட்சிதர் வழக்கு நடந்த சமயம் தயிர் வடை தின்று கொண்டிருந்த கலைஞரும், வீரமணியும் இப்போது வாய் கிழிய அறிக்கை விடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

    முடிந்தால் தீர்ப்பு ஆவணத்தை இணையத்தில் வெளியிடவும். எந்த லட்சணத்தில் இருக்கிறது என படித்துப் பார்க்க விரும்புகிறேன்.

    • /அடப்பாவிகளா. ஒரு சோப்ளாங்கி வக்கீலை தமிழக அரசு நியமிசிருக்குன்னு நீங்க சொன்னபோதே இப்படிதான் தீர்ப்பு வரும்னு கணிக்க முடிஞ்சுது./

      //தீட்சிதர் வழக்கு நடந்த சமயம் தயிர் வடை தின்று கொண்டிருந்த கலைஞரும், வீரமணியும் இப்போது வாய் கிழிய அறிக்கை விடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.//

      அய்யா ரெட்டை தொப்பிக்காரரே! முன்னதற்காக பார்பன அம்மையாரை விமர்சிக்க பயந்து, கலைஞரையும் வீரமணியையும் தூற்றுவது, பார்பனருக்கே உரித்தான திசை திருப்பும் வேலை அல்லவா! அயொத்திதனமான தீர்ப்புக்கு, தமிழக அரசை தவிர பிறரை மட்டும் தூற்றுவது ஏன்? வினவு உட்பட அனைத்து இடது சாரி இயக்கங்களும் இதற்கு பதிலளிக்க வேண்டும்! முக்கியமாக பார்பன கூட்டு சதியை தோலுரிக்கவேண்டும்!

      • கலைஞர் ஆட்சியில் அறநிலையத்துறை கோவில் நிர்வாகத்தை எடுத்துக் கொண்டு கீழ் கோர்ட், உயர்நீதிமன்றம் இரண்டிலும் வெற்றி பெற்றது பாராட்டுக்குரியது. இவ்வாறு இரண்டு நீதிமன்றங்களில் வென்ற வழக்கில், ஆட்சி மாறிய பின்பு உச்சநீதிமன்றத்தில் சோப்ளாங்கி வக்கீலை வைத்து தோற்றத்தில் சு சாமி உள்ளிட்ட பார்ப்பன சதி இருப்பது தெளிவு. இது பற்றி வினவு ஏற்கனவே கோடிட்டு காட்டியுள்ளது. விரிவாக எழுதுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

        / முன்னதற்காக பார்பன அம்மையாரை விமர்சிக்க பயந்து

        ஆம், பயம் தான் காரணம். நான் “தமிழக அரசு” என இடத்தில் “ஜெ அரசு” என படித்துக்கொள்ளவும். இதற்கு மேல் எழுத கை நடுங்குகிறது.

        மூத்த வக்கீல்களை வைத்து இந்த வழக்கை முறைப்படி நடத்த ஏற்பட்ட பணத்தேவை பற்றி வினவு ஏற்கனவே சொல்லியுள்ளது. பெரியார் பெயர் சொல்லி கலைஞர், வீரமணி நடத்தும் இயக்கங்களுக்கு பணபலம் இல்லையா?

        • இதில் பணபலம் மட்டுமிருந்து என்ன பலன்? பார்ப்பன பிரமாச்திரத்தை ஏற்கெனவே அறிந்து கொண்டவர் என்பதாலும், எமெர்ஜென்சியிலேயே தமிழனின் வீரத்தையும், விவெகத்தையும் புரிந்து கொண்டவர் என்பதாலும், தற்போதுள்ள 2ஜி வழக்கு பிரச்சனைகளாலும், தி மு க வில் சுமுகமாக தலைமை மாற்றம் ஏற்பட வேண்டுமே என்ற கவலையினாலும், இப்போதுள்ள சூழ்னிலையில் அவரை உள்ளே தள்ளினால் கூட, வெங்கடேசன் உதவிக்கு வரமாட்டார் என்பதாலும் அடங்கிவிட்டார் போலும்!

          ஆனால், வீரமணி அவர்கள் முன்னால் அறனிலயத்துறை அமைச்சர் வி வி சுவாமினாதனுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிரார்! வினவும் அதைத்தானே செய்தது? சமுதாய கண்ணோட்டம் மட்டுமே கடமையாக கொண்டு வாதாட முன் வரும் வக்கீல்களும், மறைந்த வானமாமலை போறோர் இல்லையா? யார் என்ன வாதிட்டாலும் அந்த தீர்ப்பு முன்பே எழுதப்பட்டுவிட்டது தானே! இனி மேல் முறையீடு செய்யலாம், இந்த தீர்ப்புக்கு முதலில் தடையாணை பெற்லாம்! இனை முப்பது ஆண்டுகளுக்கு அவாள் நீதிதான் செல்லும்! சட்டம் தோற்று சனாதனம் ஜெயிக்கிறது! ஊர் ரெண்டு பட்டால் பார்ப்பானுக்கே கொண்டாட்டம்!

          • // வினவும் அதைத்தானே செய்தது?

            வினவு ஆர்ப்பாட்டம் மட்டும் செய்யவில்லை. உச்சநீதிமன்றத்தில் சிவனடியார் ஆறுமுகசாமியை ஒரு தரப்பாக சேர்த்து, அவர் சார்பாக முன்னின்று, சொந்த செலவில் வக்கீல்களை அமர்த்தி வழக்கில் பங்கு பெற்றது.

    • I will try to explain it simply in a neutral stand point (There are a few minor technical errors, which cannot be avoided for the sake of simplicity):

      There are two important aspects to be considered while giving a judgment: Res Judicata and Judicial Precedence.

      Res Judicata is stronger than Judicial precedence in most cases.
      (i) Res Judicata: means matter already judged. The same issue was judged in a manner in the same level of court. Mostly in civil cases.
      Ex: An ancestral property disposed in your favour in case against your brother in supreme court. Your brother files a case again in SC to reopen the case. If the earlier judgment (in your favour) was considered Res Judicata, then your brother’s appeal will be dismissed on the grounds that it is Res Judicata. Simply Res Judicata judgment is last and final. No more appeals UNLESS the earlier judgment is UNCONSTITUTIONAL.
      (ii) Judicial precedence: Similar judgments in earlier cases. If Bombay high court rules that Alcohol consumption in public places is illegal in Maharashtra, Chennai high court will take that as a precedence and make such ruling in Tamil Nadu.

      In this case:
      1. In 1952, a judgment was given in favour of the Dikshithars. This Res Judicata is much stronger than the judicial precedence setup by other courts in permitting govt take over of temples. Yesterday’s judgment was based on Res Judicata because the nature of the case is very similar to the one in 1951. Also courts give great importance to judgments given in 1950s and early 60s. As these are given during a period, when our constitutional makers were alive and these judgments are considered to be guiding framework of our constitution.
      2. Also if a judgment is pronounced in early 50s but now found as invalid (due to changes in the constitution or new laws) then it will be considered for review/revaluation.
      3. In this case, the constitution (article 26 to be more specific) gives immunity to religious denominations. Constitution does not define the word denomination and lists the temples under it. However various judgments have defined it (The 1951 judgment is a res judicata for the same). If some historians convinced the court that Chidambaram temple is indeed non-denominational temple, then the verdict would have been different.

      Future course:
      1. The TN govt can pass a law instead of a G.O announcing that religious denominations can be taken over by govt. But this will be annulled by the court as unconstitutional (against atr. 26).
      2. The parliament can modify art. 26 of the constitution. However the chances for a constitutional amendment in this regard are very meager and even if the amendment is made, supreme court may strike down the amendment itself as unconstitutional as art 26 constitutes the basic structure of constitution (art 26 being part of basic structure is only my interpretation and the court may interpret better).

      P.S 1: I don’t think that TN govt failed because it appointed a weak counsel in this case. Even if it had appointed top guns like Fali Nariman or Harish Salve, it would have lost this case.
      P.S 2: I don’t think it is right to attribute motive in this case particularly when it involves constitutional interpretation.

      • நாராயணன்,

        நீங்கள் சொல்வதை எல்லாம் ஏன் உயர்நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை?

        ————————–

        உச்சநீதிமன்ற தீர்ப்பு இணையத்தில் கிடைக்கிறதா? அவர்கள் தளத்தில் நான் தேடியவரை அகப்படவில்லை.

  2. தமிழ்நாட்டுச் சோற்றுத் தமிழர்களைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டவர்கள் பார்ப்பனர்கள் அதனால் தான் அவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் தமிழ்நாட்டுத் தமிழர்களைக் கட்டி ஆளுகிறார்கள். தமிழர்களின் வரலாற்றுச் சிறப்பு நிறைந்த ஆயிரம் வருடங்களுக்குமதிகமான பெரிய கோயிலை ஒரு குறிப்ப்பிட்ட சாதியினரிடம் ஒப்படைத்து விட்டு ஞே என்று எருமை மாதிரிப் பார்த்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களைத் திட்டுவதற்கு தமிழில் வார்த்தையில்லை. வெட்கக்கேடு. 🙁

  3. தீர்ப்பு ஆவணத்தை முழுமையாக தமிழிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ வெளியிடுங்கள், பார்ப்பன குடுமி நீதிபதிகள் கூறும் காரணங்களை அவர்களுடைய மொழியிலேயே தெரிந்து கொள்ளலாம்

  4. மானங்கெட்டவனுங்க பதவியில் உள்ள நாட்டில இப்டிதான் நியாயம் இருக்கும் போல, சொரனை கெட்ட பக்தர்களுக்கு ரோசம் வந்தா நாமே தீர்ப்பை எழுதிடலாம், அதுவரைக்கும் எவனாவது எழுதுரத கேட்டுகினுதான் போவனுமா?? தோழர்களே, வேற வழி என்ன இருக்குன்னு சொல்லுங்க.

  5. அன்றே தெரியும்…அரசு வழக்கறிஞர்கள் வாதத்தில் மெத்தனமாக நடந்த போது கருணாநிதி விட்ட அறிக்கையே இதற்க்கு சான்று… பார்ப்பன பண்டாரங்களுக்கு அடிமைகளான தடுமாரன், மைகோ,குருவி மணியன்….நரம்பு புடைக்க கத்தும் சீமான் போன்றோர் எங்கு சென்றனர்….பிணம் இருந்தால் அரசியல் செய்யும் இவர்கள் இது போன்ற சமூக வழக்கின் தீர்ப்பிற்கு மௌனம் சாதிப்பது RSS கேடிகளை விட கொடூரமானவர்கள்…..!தொடரட்டும் உங்கள் முயற்சி….!

  6. தமிழ்நாட்டை கன்னடத்து பாப்பாத்தியும்,தெலுங்கு சின்ன மேளமும் மாற்றி மாற்றி ஆளும் வரை தமிழனுக்கு உரிமை என்று ஒரு மயிரும் இருக்காது.

  7. உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தா நீதிக்கு வெற்றி, அதே எதிரா வந்தா உடனே பார்ப்பன சதி! நல்லா இருக்குங்க உங்க வாதம்.. நீதிமன்றத்தில் இந்த மாதிரிதான் வாதம் வெச்சிங்களோ என்னவொ.. அதான் தீர்ப்பு எதிரா வந்திருக்கு

  8. மே 17 ஈழ தமிழர்களின் கருப்பு நாள்

    டிசம்பர் 6 இந்தியாவின் கருப்பு நாள்

    ஜனவரி 6 தமிழகத்தின் கருப்பு நாள்

  9. Referring to the provisions of Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Act, Swamy had submitted, “Section 107 specifically bars the application of the Act to institutions coming under the purview of or enjoying the protection of Article 26 of the Constitution.” He contended that if there were allegations of misappropriation of temple’s property then it should be dealt with under the provisions of Indian Penal Code and not by taking over the temple administration.

    I do not see any issue in this…!! Where is the question of “சதி வென்றது, நீதி தோற்றது !”?

    • “சதி வென்றது, நீதி தோற்றது !”?
      ________________________________
      தமிழன் அவர்களே,

      கணக்கு, தாம்பாள தட்டுடனே போய்விடுகிறது, பிறகு எங்கிருந்து தொடங்குவது?

      அரசியல் சட்டம்-அத்தியாயம் 26,மற்றும் இந்து அறநிலையத்துறை சட்டப்பிரிவு 107ன் படி இவர்கள்

      எப்பொழுது இந்த புதிய பிரிவாக நிறுவினார்கள்? இவர்களுக்கு சொத்துக்கள் எங்கிருந்து,யார் மூலம்

      கிடைத்த்து?அதற்கு என்ன ஆவண்ங்கள் வைத்துள்ளார்கள்?கல்கத்தா, இராமகிருசுண மடம், தங்கள்

      மடத்தின் சொத்துக்களை தங்களின் வைத்துக்கொள்ள வேண்டி, தாங்கள் ஒரு தனியான பிரிவு என

      நீதிமன்றத்தில் வாதிட்டு பெற்றார்கள்.அவர்களுக்கு அவர்களின் மடத்தை நிறுவியவர் அதனை

      தொடர்ந்து நடத்திவருபவர்கள் என ஒரு தொடர்ச்சி உள்ளது.தில்லை தீட்சிதர்களுக்கு அப்படி எந்த

      வழி அல்லது பரம்பரை உள்ளது.இமயமலையிலிருந்து சிவனோடு வந்தவர்கள் என

      புளுகித்திரிகிறார்கள்.

      அக்கோயில் இங்குள்ள தமிழர்களால் நிறுவப்பட்டு நடத்திவருவதாகும்,இடையில் வந்தேறிகளான

      இவர்களுக்கு (பூசாரித்தொழில் பார்த்த தமிழ் பண்டாரங்களை வெளியேற்றிவிட்டு,புகுந்த

      கருநாகங்கள்)எப்படி உரிமைஉடையதாகும்??

  10. முதலில் கற்பக்கிரகத்துக்குள் ஒதப்படுவது பைபிளில் உள்ள்துதான் என்பதை மடத்தமிழ்ப்பக்தர்கழுக்கு எடுத்துச்சொல்லுஙக அப்பவாவது பூசாரிகள் தமிழ் மொழிக்கு துரோகம் செய்கின்றார்கள் என்பதைப் புரிந்து கொண்டாலாவது எதிக்கட்டுக்கும்.எந்தக்கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் இந்துக்கள் எனப்படுபவர்கள் எதிக்கின்றார்களோ அவர்கள் கருத்தைத்தான் மந்திரமொழி எனும் பெயரில் ஓதுகின்றார்கள் பூசாரிகள் என்பதைப்புரிந்து கொள்ளட்டும்.தீட்சிதர்களுக்கு மட்டும்தான் சிவன் சொந்தமா அல்லது தமிழகமே சொந்தமா?

    • Surprised by ur ignorance. Even before Christian religion born, india had saivism vaishnavism buddhism jainism.so the truth might be just opposite. Better to read history properly. R u a converted fellow.if so y to keep hindu name.

      By the way it is wonder on how dikshitars can claim temple itself ,not jus admin,whereas the temple is built by tamil kings.

      • Hello Mr.Kss, you read the history properly. The so called Hinduism is torn by the theeka men.
        Hindu is the name given by British. Your sanscrit came only from Tamil. Brahmins are the most selfish and dangerous people in the world. No good things can possibly come from Brahmins to others. But brahmins will act to get the benefit from nonbrahmins. Shameless brahmins. All the Tamilians should convert into either Christianity or Islam, which is our mother religion. Hinduism is the religion only for brahmins. Clear Mr.Kss. This is not 1950. This is 2013.

        • I did not use the word hindu. The name hindu is given by greeks(probably) and not definitely by english.i neither support brahmins as well .their character is known to all.
          tamil community is one of the oldest civilisations.tamils worshipped nature as the religion. Christianity is 2014 years old only.
          As per chronology of the world,ur statement is a blunder.
          tn has temples and buildings which r more than 2000years old.
          harappa civilsn is actually tamil civilsn only. North historians have hidden the truth.
          Nature is the religion of tamils.

  11. //முதலில் கற்பக்கிரகத்துக்குள் ஒதப்படுவது பைபிளில் உள்ள்துதான் என்பதை மடத்தமிழ்ப்பக்தர்கழுக்கு எடுத்துச்சொல்லுஙக…. எந்தக்கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் இந்துக்கள் எனப்படுபவர்கள் எதிக்கின்றார்களோ அவர்கள் கருத்தைத்தான் மந்திரமொழி எனும் பெயரில் ஓதுகின்றார்கள் பூசாரிகள் என்பதைப்புரிந்து கொள்ளட்டும்//

    “அழுவார் அழுவார் எல்லாம் தம் கவலை, ஆனால் திருவன் *பெண்டிலுக்கு அழ ஆளில்லையாம்” (ஈழத்துப் பழமொழி)… 🙂

    *(பெண்டாட்டிக்கு)

  12. அன்பர் ரவி மீது தவரில்லை! ம் அந்திரம் சொல்லும் பார்பானுக்கே அதன் அர்த்தம் புரியாத நிலையில், இறைவனால் கொடுக்கப்பட்ட வேதம் என்ற வகையில், பைபிலும் ஒரு வேதம் தானே! பைபிலாவது தமிழில் படிக்க முடிகிறது, ஒரே இறைவன் அதை ஏற்றுக்கொள்கிரான்! நம் விஷயம் எப்படி? ஆகாயத்திலிருந்து குதித்த அய்யர், நட்ட கல்லை சுற்றி வந்து……உளரிக்கொட்டுவதற்கு, மக்களுக்கு புரிந்த மொழியில் சொல்லபட்டால், பைபிலாக இருந்தாலும், குரானாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளபடதக்கதே!

  13. கடவுளே இல்லேன்னு சொல்லும் பு.ஜ.காவும், இந்து மதத்தையும், கலாசாரத்தையும் ஏசும் வினவும் இதை பற்றி எழுதுவது, போராடுவதும் கேலி கூத்தாக உள்ளது……நீதிமன்றம் சரியான தீர்ப்பை சொல்லியுள்ளது.. இனிமேலாவது போராட்டம் நடத்தும் முன் உங்கள மாதிரி சின்னப்பசங்க யோசிப்பது நல்லது…..

  14. சோழியன் குடுமி சும்மா ஆடாது! சிதம்பரம் கோவிலும் ஏனைய தமிழ்னாட்டு சரித்திர,கலை கலாச்சார சம்பந்தமுள்ள தொள்பொருள் சின்னம்! அந்த வகையிலாவது, ஏனைய, திருவண்ணாமலை, திருவாரூர், திருச்சி, சீரங்கம்,வேலூர் கோவில்களை அரசு எடுத்துக்கொண்டதைபோல, அரசுதுறையின் கீழ் வருவதே சரியானது! உச்சநீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு, அயொத்தி நீதிபதிகளின் கபடமான தீர்ப்பை போல, இன்னும் பல கோவில்களுக்கும் பரவி, கடைசியில் இந்து அறநிலயத்துறையையே பயனற்ற அமைப்பாக்கிவிடும்! இது பற்றி எல்லா மானில மக்களும் கவலைப்பட்டாக வேண்டும்! குறிப்பாக தென் மானில மக்கள்!

Leave a Reply to Ravi பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க