privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஆசியாஇசுலாமிய பிற்போக்குத்தனத்தால் கொல்லப்பட்ட அமீனா பவஷர்

இசுலாமிய பிற்போக்குத்தனத்தால் கொல்லப்பட்ட அமீனா பவஷர்

-

ஸ்லாமிய அடிப்படைவாத நாடான சவுதியில் மத பிற்போக்குத்தனத்தின் காரணமாக ஒரு மாணவி கொல்லப்பட்டிருக்கிறார்.

சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள மன்னர் சவுத் பல்கலைகழகத்தில் (King Saud University), சமூகவியல் கல்லூரி வளாகத்தில் படித்து  வரும் மாணவி அமீனா பவஷீர். கடந்த 06.02.2014 அன்று கல்லூரிக்கு சென்ற இவருக்கு, காலை 11 மணி அளவில் நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. உடன் இருந்தவர்கள், உடனடியாக மருத்துவ உதவி கேட்டு தொடர்பு கொண்டிருக்கிறார்கள். உடனடியாக ஆம்புலன்சில் மருத்துவர்களும் வந்து சேர்ந்திருக்கின்றனர். ஆனால், இது பெண்களுக்கான பல்கலைக்கழகமாதலால், ஆண் மருத்துவர்கள் உள்ளே செல்வது தடை செய்யப்பட்டிருக்கிறது என்று கூறி பல்கலைக்கழக நிர்வாகம் மருத்துவர்களை உடனடியாக உள்ளே அனுமதிக்கவில்லை. ஆண்களை  அனுமதிக்கலாமா என்ற யோசித்து முடிவு காணும் வரை அவர்கள் வாயிலிலேயே காக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சவுதி மாணவியர்
மன்னர் சவுத் பல்கலைக் கழகத்தில் அறிவியல் கற்பிக்கும் சவுதி பெண்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. (படம் : நன்றி RT.com)

இது குறித்து அமீனாவின் சகோதரி பஹ்தா, அல்-அரபியே டிவி சேனலுக்கு கொடுத்த பேட்டியில் கூறியதாவது, “கல்லூரி நிர்வாகம் மருத்துவர்களை உடனே அனுமதிக்காமல், அவர்கள் 1 மணி வரை வெளியிலேயே காத்திருக்க வைக்கப்பட்டார்கள். கடைசியில் மருத்துவர்கள் உள்ளே அனுமதிக்கப்படும் வேளையில் அமீனா இறந்து விட்டிருந்தார்” என தெரிவிக்கிறார்.

ஆனால் கல்லூரி நிர்வாகம் இந்த செய்தியை மறுத்து தாங்கள் உடனடியாக மருத்துவர்களை உள்ளே அனுமதித்து விட்டதாக கூறுகிறது. அதாவது, 12.35 மணிக்கு தான் அந்த பெண்ணிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டது என்றும், தாங்கள் ஆம்புலன்சை வரவழைத்து உடனடியாக 12.45 -மணிக்கு உள்ளே அனுமதித்துவிட்டதாக மழுப்புகிறது. ஆனால் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி பணியாளர்களும் இந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்துள்ள தகவல்கள்,  நிர்வாகத்தின் மேற்கண்ட தகவல் பொய் என்பதை நிரூபிப்பதாக இருக்கிறது.

அதே கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியை அசீசா யூசூஃப் மருத்துவர்களை உள்ளே அனுமதிக்காமல் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த நிர்வாகத்தை கண்டித்து  “கலாச்சாரம் என்ன சொல்லும், குடும்பம் என்ன சொல்லும் என்பது பற்றி யோசித்துக் கொண்டிராமல் வேகமாக முடிவெடுக்கக் கூடிய நிர்வாகம் நமக்கு  தேவையாக இருக்கிறது” என்கிறார். ஆண்களை உள்ளே அனுமதித்து சட்டத்தை மீறினால் தங்களுக்கு பிரச்சனை நேரிடலாம் என்று கல்லூரி முதல்வர் பயந்திருக்கிறார். இதனாலேயே அவர்கள் ஆம்புலன்சை அனுமதிப்பதற்கு காலம் தாழ்த்தியிருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பல்கலைக்கழக ஊழியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆபத்து நேரத்திலும் மருத்துவர்களை அனுமதிக்காமல், மனிதாபிமானமற்ற முறையில்  நடந்துகொண்ட கல்லூரி நிர்வாகம் மட்டுமல்ல இங்கு பிரச்சனை. மதத்தின் பெயரால் இது போன்ற சட்டங்களை இயற்றி மக்களை காட்டுமிராண்டி காலத்தில் வைத்திருக்கும் சவுதி அரசும், அதன் இசுலாமிய அடிப்படைவாத சட்டங்களும் தான் இங்கு முதன்மையான குற்றவாளி. சவுதியின் ஷரியத் சட்டங்களுக்கு பயந்துதான் கல்லூரி நிர்வாகம் இப்படி ஒரு மாணவியின் மரணத்திற்கு காரணமாக இருந்திருக்கிறது. ஒருக்கால் ஆண் மருத்துவர்களை அனுமதித்திருந்தால் நிர்வாக தரப்பில் உள்ளவர்களுக்கே தலை வெட்டப்படுவதற்கும் வாய்ப்பிருக்கும் போது யார் பொறுப்பேற்பார்கள்?

இஸ்லாமிய வகாபிய அடிப்படைவாத நாடான சவுதியில் ஆண்களும் பெண்களும் பொதுவில் கலந்து பழகுவது கறாராக தடுக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தும், பூங்காக்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கும் இடங்களும் ஆண்களுக்கு பெண்களுக்கு என்று தனித்தனியே பிரிக்கப்பட்டிருக்கின்றன. முக்கியமாக உணவு விடுதிகளில் இவை மிகக் கறாராக பின்பற்றப்படுகின்றன. ஏனெனில் உணவு உட்கொள்ளும் போது புர்காவால் முகத்தை மறைக்கமுடியாததே அதற்கு காரணம். மேலும், ஆண் துணையில்லாமல் பெண்கள் உணவுவிடுதியினுள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது போன்ற ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன.  இதற்கு அங்கே இருக்கும் மேற்கத்திய நிறுவனங்கள் கூட விதிவிலக்கல்ல. அவர்களும் ஜனநாயகம், சமத்துவத்தை விட வியாபாரமே மேல் என்பதால் இது குறித்து எந்த எதிர்ப்பும் தெரிவிப்பதில்லை.  இது தொடர்பாக மெக்டொனால்ட்ஸ் போன்ற நிறுவனங்கள் மேற்கத்திய பெண்ணியவாதிகளால் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளன. இந்த பிரித்து வைக்கும் சட்டம்தான் அமீனா பவஷீரின் கொலைக்கு காரணமாக இருந்திருக்கிறது.

இந்த சம்பவம் குறித்து டிவிட்டரிலும், சமூக வலைத்தளங்களிலும் பேசுபவர்கள் கூட எச்சரிக்கையாக ஒரு அச்சத்துடன் பேசுவதை காண முடிகிறது. பெண்கள் மட்டும் பங்குபெறும் ஆம்புலன்ஸ் சேவை, பல்கலைகழகத்தினுள்ளேயே போதிய மருத்துவ வசதிகளை வைத்திருப்பது என்றுதான் அவர்கள் முன் வைக்கும் தீர்வுகள்  நீளுகின்றன. இசுலாமிய அடைப்பைவாதமான வகாபியிச சட்டங்களை எதிர்த்து எதுவும் பேசப்படுவதில்லை. காட்டுமிராண்டி நடைமுறைகளை ஏற்றுக் கொண்டு அதற்கு பழுதில்லாமல் உயிர்களை எப்படி காப்பாற்ற முடியும்?

முகத்தை மூடிக் கொண்ட பெண்
மெக்காவில் புர்கா அணிந்த பெண் (கோப்புப் படம்)

சவுதியில் இது போன்ற காட்டுமிராண்டித்தனங்கள நடப்பது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே 2002-ம் ஆண்டு மெக்காவில் உள்ள பெண்கள் நடுநிலைப் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்ட போது  சிறுமிகள் இஸ்லாமிய முறைப்படி புர்கா அணிந்து உடல் முழுவதையும் மறைக்காமல் இருந்ததாகக் கூறி மதக்காவலர்கள்  எரிந்து கொண்டிருந்த கட்டிடத்தில் இருந்து அவர்கள் வெளியே தப்பிச் செல்வதை தடுத்தனர். மீட்புப் பணி ஊழியர்களையும் உள்ளே அனுமதிக்கவில்லை. ஆண் மீட்பு ஊழியர்கள் பெண்களை தொட்டு காப்பாற்றுவது தவறு என்று அவர்களையும் தடுத்திருக்கின்றனர்.

“முக்கிய வாசல் வழியாக  தப்பி ஓடி வந்த பெண்களை, மதக் காவலர்கள் இன்னொரு வாசல் வழியாக திருப்பி உள்ளே செல்ல கட்டாயப்படுத்தினர். மீட்புப்  பணியில் எங்களுக்கு உதவுவதற்கு பதிலாக, எங்களை தாக்கி விலக்கிக் கொண்டிருந்தனர்” என்று மீட்புப் பணி ஊழியர் ஒருவர் வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்த சம்பவத்தில் 15 பள்ளி மாணவிகள் கொல்லப்பட்டனர், 50 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டு, கண்துடைப்பாக மதகுருமார்கள் மற்றும் மதவழிகாட்டுதல் துறையின் கீழ் இருந்த பெண்களுக்கான பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டன. ஆனால், நாடெங்கிலும் பெண்களுக்கெதிரான இத்தகைய பிற்போக்கு மதவாத சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்படுகின்றன. ஆகவே வளைகுடா நாடுகளில் இத்தகைய இசுலாமிய அடிப்படைவாதச் சட்டங்கள் ஒழிக்கப்பட்டு ஜனநாயகம் மலராத வரை அங்கே சவுதி அரச குடும்பம், பணக்கார ஷேக்குகள், அமெரிக்க இராணுவம் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை.

அடிப்படைவாதத்திற்கு மதவேறுபாடு கிடையாது. கத்தோலிக்க கிறித்துவ மத அடிப்படைவாத சட்டங்கள் பின்பற்றப்படும் அயர்லாந்து நாட்டில், கத்தோலிக்க சட்டப்படி மருத்துவர்கள் சவிதா என்ற பெண்ணுக்கு கருச்சிதைவு செய்ய மறுத்ததால் அவர் உயிரிழந்த பரிதாபம் குறித்து வினவில் ஏற்கனவே எழுதியிருக்கிறோம். இன்றும் கடுங்கோட்பாட்டு பெந்தகோஸ்தே கிறித்தவர்கள் எந்த நோய் வந்தாலும் மருத்துவமனைகள் செல்வதில்லை. இந்து மதத்திலோ அம்மை வந்தால் மாரியாத்தா கோபம் என்பது முதல் நரபலி வரை பல்வேறு மூடநம்பிக்கைகள் உள்ளன.  ஆகவே அனைத்து மதங்களும் அன்பை போதிப்பதாக சொல்லி மனித உயிர்களை எடுக்கும் காட்டுமிராண்டித் தனங்களைக் கொண்டுள்ளன. வரலாற்றில் இவற்றை எதிர்த்து நடக்கும் ஜனநாயக போராட்டங்களுக்கேற்ப இவை கணிசமாக குறைந்துள்ளன. எனினும் ஜனநாயகத்தின் வாசனை கூட இல்லாத வளைகுடா நாடுகளில்  இவை இன்றும் பெருமளவு தொடர்கின்றன.

பெண்களுக்கான ஜனநாயக உரிமைகளை மறுப்பதில் வகாபியிசத்தின் தமிழக பங்காளிகளும் சவுதி எஜமானர்களுக்கு குறைந்தவர்களில்லை என்பதை தோழர் பாத்திமா விவகாரத்தில் பார்த்தோம். தோழர் பாத்திமா போன்றவர்கள் இந்த இஸ்லாமிய மதவெறி கும்பலை முறியடிக்க முடிவதற்கு காரணம் புரட்சிகர அமைப்புகளில் பெற்ற ஜனநாயக உணர்வாகும். அப்படி புரட்சிகர ஜனநாயக கருத்துக்கள் சவுதியில் நுழைந்தால் தான் இந்த வகாபிய காட்டுமிராண்டி சட்டங்களை மாற்ற முடியும்.

மேலும் படிக்க

      • தகடு,

        Can you expect such death in any other place?

        Even in the case of Savitha at Ireland, they immediately amended their law in their parlement.

        Can you expect such correction to maharam law of Muhamadism? Muhamadism is the vilest fundamentalism.

        • Univerbuddy,

          Which correction you expect to be done in Islam? If you think free mixing is the correction, we believe that is the evil in today’s society. Your issues and the issues of free mixing is resolved by Islam.

          If you wish to live in a way without any accountability, you have right to live in this world. But, don’t get into judgmental about Islam before you understand about its benefits.

          Amendment should be done in the action done by the College if they had not allowed in case of emergency. As per Shariah law, they should have allowed the Male doctor to treat the female patient since it is the case of emergency.

          I would suggest you to start fighting against the honor killing being done in India in many of the sects if you want to get publicized instead of getting into something which is already in its elite nature.

  1. அது எப்புடிங்க???
    இந்து சம்பந்தமான கட்டுரை எழுதும்போது “இந்துக்களை” மட்டுமே TARGET செய்யவேண்டியது….
    இஸ்லாமியத்தை பத்தி எழுதும்போது மட்டும்….மத்த மதங்களை சீண்டாமல் “வினவால்” எழுதமுடிவதில்லை….

    இஸ்லாமியம் என்றால் அடிப்படைவாதம்(நாசுக்காக சொல்கிறீர்கள் ) ….
    இண்டித்வம் என்றால் மூடநம்பிக்கை/தீவிரவாதம்(பகிரங்கமாக சொல்கிறீர்கள்…)

    என்னே வினவின் நியாயம் !!!!

  2. //அடிப்படைவாதத்திற்கு மதவேறுபாடு கிடையாது. கத்தோலிக்க கிறித்துவ மத அடிப்படைவாத சட்டங்கள் பின்பற்றப்படும் அயர்லாந்து நாட்டில், கத்தோலிக்க சட்டப்படி மருத்துவர்கள் சவிதா என்ற பெண்ணுக்கு கருச்சிதைவு செய்ய மறுத்ததால் அவர் உயிரிழந்த பரிதாபம் குறித்து வினவில் ஏற்கனவே எழுதியிருக்கிறோம். இன்றும் கடுங்கோட்பாட்டு பெந்தகோஸ்தே கிறித்தவர்கள் எந்த நோய் வந்தாலும் மருத்துவமனைகள் செல்வதில்லை. இந்து மதத்திலோ அம்மை வந்தால் மாரியாத்தா கோபம் என்பது முதல் நரபலி வரை பல்வேறு மூடநம்பிக்கைகள் உள்ளன.//

    கடைசியில பாயின்ட்டுக்கு வந்தாச்சா? 😀

    அம்மை வந்தால் வேப்பிலை கொதிக்க வைத்த தண்ணீரில் குளிக்க வைப்பது மருத்துவ குணம் கொண்டது என்பது தெரியாதா? அப்படியே இல்லை என்று நீங்கள் சொன்னாலும், அடுத்து மருத்துவரை அனுகுவது என்று இன்னொருத்தர் சொன்னால் ஏற்றுக்கொள்கிறார்கள். வெறும் நம்பிக்கையை வைத்து அடம் பிடிப்பது இல்லை.

    FYI…தட்டம்மைக்கு தடுப்பூசி போடப்படுவதை எதிர்த்தே நிறைய article-கள் வந்து கொண்டிருக்கின்றன. அதாவது, ‘சில’ தடுப்பூசிகள் தேவையில்லை என்றே. அம்மை போன்ற நோய்களும் மனிதனின் உடம்புக்கு தேவையே என்கின்றன சமீபத்திய அறிவியல். MMR-க்கு போடப்படும் தடுப்பூசிகள் கூட ஆட்டிஸம் வருவதற்கு காரணம் என்கின்றன சில articles. அப்ப இத்தனை வருடங்கள் போட்டதனால் குழந்தைகளுக்கு ஆட்டிஸம் வந்திருக்கும் இல்லையா? அவர்களுக்கு என்ன பதில்? நாங்களாவது காலத்துக்கு தகுந்தார் போல் மாறிக்கொள்கிறோம்…

  3. //மதத்தின் பெயரால் இது போன்ற சட்டங்களை இயற்றி மக்களை காட்டுமிராண்டி காலத்தில் வைத்திருக்கும் சவுதி அரசும்//

    This law (maharam rules) is made by Muhamad, not by Saudi govt.

    Any blame should go to Muhamadism.

    We can blame the govt only for enforcing this vile maharam rules, with cultish police, etc.

    For details on what is maharam rules, please read,

    சித்தி மகன் பார்க்க வரக்கூடாதா?
    http://questionstomuhamadhians.blogspot.com/2013_07_01_archive.html

  4. இந்துமதத்தை சாடாமல் வினவுவால் இருக்க முடியாது. இந்துமதம் சார்ந்த சடங்குகளில் எந்த “இந்து தலைவர்களும்” வழிநடத்துவது இல்லை. மக்கள் தன்னிச்சையாக முடிவு எடுத்து செயல்படுகிறார்கள். வேப்பிலை ஒரு கிருமி நாசினி. அதனால்தான் அம்மை கண்டவருக்கு வேப்பில்லையை பயன்படுத்தி வருகிறார்கள். இது தமிழ் மருத்துவமான “சித்த மருத்துவமாகும்”. ஆங்கில மருத்துவத்தை பயன்படுத்தாமல் தங்களின் விருப்பப்படி தமிழ் மருத்துவத்தை பயன்படுத்துகிறார்கள். இப்போதுகூட அனைத்து மருத்துவ மனைகளிலும் சித்த மருத்துவ பிரிவு செயல்பாட்டில் உள்ளது. அரசும் இதற்கு முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் இஸ்லாமியத்தில் அப்படி இல்லை. இஸ்லாமிய மத தலைவர்களின் கட்டளைப்படி ஆண் மருத்துவர்களை அனுமதிக்காமல் பெண் மரணம்வரை சென்று விட்டது.—————

  5. இஸ்லாம் இதை கூறவில்லை…நபிகள் நாயகம் சந்தித்த போர்க்களத்தில் கூட ஆண்களுக்கு பெண்கள் தான் மருத்துவ உதவி செய்தார்கள் என்று தான் இஸ்லாமிய வரலாறு கூறுகிறது…இஸ்லாத்திற்கும் இவர்கள் செய்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை…இதை இஸ்லாமிய அடிப்படைவாதம் என்று கூறுவது தவறு…இஸ்லாத்தை புரிந்துக்கொள்ளாதவர்கள் செய்ததற்காக இஸ்லாத்தை குறைகூறுவது எவ்வாறு சரியாகும்??…

    • fuzail,

      Ameen,

      //போர்க்களத்தில் கூட ஆண்களுக்கு பெண்கள் தான் மருத்துவ உதவி செய்தார்கள் என்று தான் இஸ்லாமிய வரலாறு கூறுகிறது//

      பெண்களுக்கு ஆண்கள் மருத்துவ உதவி செய்தார்கள் என்று இஸ்லாமிய வரலாறு கூறுகிறதா?

      • porkalil aankal thaan eedupaduvar penkal kulanthaikalai eedupadutthamaattaarkal . ethai sunnaalum athil oru kutram kandu pidikkavendum enkira unkaludaiya vetkai velippadaiyaakave therikirathu. unmaiyil islaatthai patri nanku therinthukkondu unkaludaiya oruppadaatha karutthukalai veli edunkal. neenkal arivaali endraal unkalai padaittha iraivan nitchayamaaka mikapperiya arivaali.

  6. ஆகவே வளைகுடா நாடுகளில் இத்தகைய இசுலாமிய அடிப்படைவாதச் சட்டங்கள் ஒழிக்கப்பட்டு ஜனநாயகம் மலராத வரை அங்கே சவுதி அரச குடும்பம், பணக்கார ஷேக்குகள், அமெரிக்க இராணுவம் தவிர யாருக்கும் பாதுகாப்பிலை மிகசரி.

  7. இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முதலில் இஸ்லாத்தின் மீது உங்கள் காழ்புணர்ச்சியை குறையுங்கள்.

    மஹ்ரம் இல்லாத அணோடும் பெண்ணோடும் பழகி இன்று சமுதாயத்தில் பரவி இருக்கும் இழி நிலையை போக்கவே இஸ்லாம் கட்டுப்பாடு விதிக்கிறது.

    மற்றபடி அவசர தேவைக்கு என்றுமே இஸ்லாம் தடை விதிக்கவில்லை. நபிகள் நாயகம் சந்தித்த போர்க்களத்தில் கூட ஆண்களுக்கு பெண்கள் தான் மருத்துவ உதவி செய்தார்கள் என்று தான் இஸ்லாமிய வரலாறு கூறுகிறது.

    இஸ்லாத்தை மதிப்பிட வேண்டுமானால் அதை பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டு வாதிடுங்கள்.

    மக்கள் செய்யும் தவறுக்கு என்றுமே இஸ்லாத்தை சாடாதீர்கள்.

    உங்கள் வாதம் சரி என்றால், குரான் மற்றும் ஹதீஸில் ஆதாரம் காட்ட முடியுமா? இல்லை என்றால் இந்த பதிவை திருத்துங்கள்.

    நன்றி

    • Ameen,

      //போர்க்களத்தில் கூட ஆண்களுக்கு பெண்கள் தான் மருத்துவ உதவி செய்தார்கள் என்று தான் இஸ்லாமிய வரலாறு கூறுகிறது//

      பெண்களுக்கு ஆண்கள் மருத்துவ உதவி செய்தார்களா என்று இஸ்லாமிய வரலாறு கூறுகிறதா?

      இல்லையா? (ஹதீஸில் புதிதாக ஒரு ஹதீதை சொருகி விடுங்கள் பெண்களுக்கு நல்லது நடக்கட்டும்.)

      //மக்கள் செய்யும் தவறுக்கு என்றுமே இஸ்லாத்தை சாடாதீர்கள்//\

      முகமதியர்கள் முகமதியத்தின் படி நடப்பதால் தான் இது போன்ற கண்றாவிகள் நிகழ்கின்றன.

      //குரான் மற்றும் ஹதீஸில் ஆதாரம் காட்ட முடியுமா?//

      quran (24:31)
      For details : http://questionstomuhamadhians.blogspot.com/2013_07_01_archive.html

    • ////நபிகள் நாயகம் சந்தித்த போர்க்களத்தில்///

      கடவுளாக மதிக்கப்பட்டு கடைசி தூதுவராக மதிக்கப்படும் இந்த நபிகள் நாயகத்தை யார் போருக்கு அழைத்தது? ஏன் போரை நபிகள் விரும்பினார்? கடவுள் இருக்கும் இடத்தில் எப்படி போர் குணம் அந்த மக்களுக்கு வரும்!! இதிலிருந்து இவர் கடவுளின் கடைசி தூதர் என்பது உண்மையல்ல என்பது தெரியவருகிறது. நபிகள் அவர்கள் இயேசு , பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி மற்றும் பிற அரசியல் தலைவர்களைப்போல் ஒரு சராசரி மனிதர்தான். இவருக்குப் பிறகு பிறரால் எழுதப்பட்ட குரான் என்ற புத்தகத்தை பெரிய அளவில் விளம்பரப்படுத்தி அரசியல் செய்கிறார்கள். அவ்வளவே!!!

      • நண்பரே, உங்களுடைய குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இருக்கிறதா? முகம்மது நபி இறைவன் அல்ல. அவர் இறுதி தூதர். உங்கள் கருத்தில் தெளிவாக குறிப்பிடவும். தூதர் (pbuh ) உலகத்தை ஆளவோ அல்லது பதவிக்கு ஆசைப்பட்டோ போர் தொடுக்கவில்லை. முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காகவே போர் தொடுக்க வேண்டியதாக இருந்தது. நிறைய போர்களை தடுக்க உடன்படிக்கைகளையும் செய்து கொண்டார். அவருடைய காலத்தில் 28 போர்கள் நடந்தது. அதில் மொத்தம் உயிர் இழப்பு இரண்டு பக்கமும் சேர்த்து 1.5% மட்டுமே.

        போரை தடுக்க இயலாத அந்த கால கட்டத்தில், கொடூரமாக போர்களும், தண்டனைகளும் தந்து கொண்டு இருந்த அந்த காலகட்டத்தில், நபிகள் நாயகம் போர்களத்தில் நிறைய கட்டுபாடுகளை முஸ்லிம்களுக்கு விதித்தார். போர்களத்தில் பெண்களையும், குழந்தைகளையும், நிழல் தரும் மரங்களையும், வயதானவர்களையும் தீங்கிழைக்க கூடாது என்றார்.

        “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” குரான் 5:32

        அதே போல போரில் வெற்றிபெற்றவுடன் தோற்றவர்களின் வீடுகளையும், மனைவிமக்களையும், கால்நடைகளையும், பயிர்களையும் எந்த தீங்கும் தரக்கூடாது என்று உத்தரவிட்டார். ஒரு ஆட்டின் பாலை அருந்துவது என்றாலும் அதன் எஜமானரின் உத்தரவின்றி செய்ய கூடாது என்றார்.

        போரில் காயப்பட்டவர்களை கொல்வதையும், பயந்து ஓடியவர்களை துரத்தி சென்று கொல்வதையும் தடை செய்தார்கள். போருக்கு வருபவர்களை மட்டுமே எதிர்த்து போரிட சொன்னார். அவர்கள் மன்னிப்பு கோரினால், அவர்களை விட மட்டும் அல்ல, அவர்களை பத்திரமாக அழைத்து சென்று ஆபத்தில்லா இடத்தில் விடுவதும் முஸ்லிமின் கடமை என்றார்.

        • குர்ஆனில் எந்த வரிகளில் நீங்கள் கீழே குறிப்பிட்டது உள்ளது. தோற்றவர்களின் பெண்களை அடிமைகளாகப் பிடித்துக் கொண்டு வந்து முஸ்லீம்கள் அனுபவிப்பதற்கு குர்ஆனில் அனுமதிக்கப்பட்டுள்ளதா அல்லது அது தடை செய்யப்பட்டுள்ளதா. அடிமைப் பெண்களையும், போரில் பிணையக்கைதிகளாகப் பிடிபட்ட பெண்களையும் கற்பழிக்க இஸ்லாம் அனுமதிக்கிறது என்கிறார்களே, அதற்கு உங்களின் விளக்கம் என்ன? இஸ்லாத்தைப் பற்றியும், குரானைப் பற்றியும் மேலும் அறிந்து கொள்ளும் ஆவலில் கேட்கிறேன் அவ்வளவு தான். இந்த சின்னச் சின்ன சந்தேகங்களுக்கெல்லாம் பதிலையறிய, எல்லோராலும், மண்ணடிக்குப் போக முடியாது. 🙂

          //அதே போல போரில் வெற்றிபெற்றவுடன் தோற்றவர்களின் வீடுகளையும், மனைவிமக்களையும், கால்நடைகளையும், பயிர்களையும் எந்த தீங்கும் தரக்கூடாது என்று உத்தரவிட்டார். ஒரு ஆட்டின் பாலை அருந்துவது என்றாலும் அதன் எஜமானரின் உத்தரவின்றி செய்ய கூடாது என்றார்.//

          • நீங்கள் குற்றம் கூறினால், அதை நிரூபிக்கவேண்டியது உங்களுடைய கடமை. குர்ஆனில் இருப்பதை சுட்டிக்காட்டி கேட்டால், விளக்கமளிக்கலாம். குர்ஆனில் இல்லை என்று நிருபிக்கசொன்னால் நான் எப்படி செய்வது. உங்களுக்கு உண்மையிலயே குரானை அறிந்து கொள்ளும் ஆர்வம் இருக்குமானால், குர்ஆனில் அத்தியாயத்தையும், வாக்கியத்தையும் கொடுங்கள். இறைவன் நாடினால், எனக்கு அதை பற்றிய ஞானம் இருந்தால், நான் விளக்கம் அளிக்கிறேன்.

    • 5187. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
      நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் எங்கள் பெண்களுடன் (அதிகமாகப்) பேசுவதையும் சகஜமாகப் பழகுவதையும் தவிர்த்து வந்தோம். (அவ்வாறு பழம், தவறு ஏதேனும் நிகழ்ந்துவிட்டால்) எங்கள் தொடர்பாக (குர்ஆன் வசனம்) ஏதேனும் இறங்கி (தடை விதிக்கப்பட்டு) விடுமோ என்ற அச்சமே இதற்குக் காரணம். நபி(ஸல்) அவர்கள் இறந்த பிறகு (பெண்களுடன் தாராளமாகப்) பேசினோம்; சகஜமாகப் பழம்னோம்.
      Volume :5 Book :67

  8. Univerbuddy,

    முதலில் உங்கள் உண்மையான பெயரில் கமெண்ட் செய்ய துணியுங்கள். போலி பெயர்களில் ஒளிந்து கொண்டு மற்றவர்களை கேலி செய்வது ஆறரிவு படைத்த மனிதனுக்கு அழகு இல்லை.

    //பெண்களுக்கு ஆண்கள் மருத்துவ உதவி செய்தார்களா என்று இஸ்லாமிய வரலாறு கூறுகிறதா?//

    இதோ ஆதாரம்: http://www.daruliftaa.com/node/5696?txt_QuestionID

    மருத்துவம் செய்ய கூடாது என்று உங்களால் காட்ட முடியுமா?

    //இல்லையா? (ஹதீஸில் புதிதாக ஒரு ஹதீதை சொருகி விடுங்கள் பெண்களுக்கு நல்லது நடக்கட்டும்.)//

    குரானும் ஹதீசும் மற்ற மத நூல்களை போல மனிதர்களால் காலத்திற்கு ஏற்றார் போல மாற்ற முடியாது. அது உலகம் அழியும் வரை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். எந்த மாற்றமும் ஆகாது.

    //முகமதியர்கள் முகமதியத்தின் படி நடப்பதால் தான் இது போன்ற கண்றாவிகள் நிகழ்கின்றன.//

    மனித குலத்திற்கு உலகம் அழியும் வரை உன்னத மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. குரான் மற்றும் சஹிஹ் ஹதீஸ் இருந்து நீங்கள் கேள்வி கேளுங்கள். நீங்கள் கொடுத்தா லிங்க் போல என்னால் ஆயிரம் லிங்க் மற்ற மதத்திலும் கொடுக்க முடியும். அப்படி செய்ய சொல்லி குரானில் இருக்கிறது என்று காட்டுங்கள்.

    முடியாது என்றால் முதலில் குரானில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்களை படைத்தவன் உங்களுக்கு நேர்வழி காட்டட்டும்.

  9. Univerbuddy,

    நீங்கள் கொடுத்தா லிங்கை முற்றிலுமாக படித்தீர்களா என்று தெரியவில்லை. உங்கள் எல்லா கேள்விக்கும் சகோதரர் ஒருவர் பொறுமையாக பதில் சொல்லி இருக்கிறார். முதலில் அதை படியுங்கள். பிறகு சிந்தயுங்கள். அதற்கு பிறகு கேள்வி கேளுங்கள்.

    விடண்டவாதம் நேரத்தை மட்டுமே வீணாக்கும்.

    • //மனித குலத்திற்கு உலகம் அழியும் வரை உன்னத மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. ///

      முஸ்லீமாகப் பிறந்து, முஸ்லீமாக வளர்ந்து இஸ்லாத்தை விட்டு விலகி இஸ்லாத்தைப் பற்றி விமர்சனம் செய்யும் செல்வி. Ayaan Hirsi Aliயின் நேர்காணலை, விவாதங்களையும் பேச்சுகளையும் ஜனாப். அமீன் அவர்கள் பார்க்கவில்லை போல் தெரிகிறது. உண்மையில் வஹாபியத்தையும், தமிழ் முஸ்லீம்களின் அரபுமயமாக்கலையும் தமிழ்நாட்டில் ஊக்குவித்து, தமிழர்களுக்கும், ‘இன்று’ தம்மைத் தமிழர்களாக நினைக்கும் தமிழ்நாட்டு முஸ்லீம்களுக்குமிடையே ஒரு நிரந்தர மொழி, கலாச்சார இடைவெளியை ஏற்படுத்தும், தமிழ் முஸ்லீம் வஹாபிகள், செல்வி. Ayaan Hirsi Ali போன்றவர்களுடன் வாதாட வேண்டும், அல்லது அவரைப் போன்றவர்களின் கருத்துக்களுக்கு எதிர்க்கருத்தை தெரிவிக்க வேண்டும். அதை விட்டு, இஸ்லாம் தான் சமாதானத்தின் மார்க்கம், உலகின் உன்னத மார்க்கம் என்றெல்லாம் மற்றவர்களுக்கு கூறுவதில் பயனில்லை. அப்படியான உளறல்களைப் பார்க்க சிரிப்பு தான் வருகிறது. எல்லோருக்கும் தான் அவரவர்களின் மார்க்கம்/மதம் உத்தமமானது, அதனால் தான் அவர்கள் அந்த மதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள் அல்லது எப்பவோ “உன்னதமான” இஸ்லாத்தை நோக்கி ஓடிப்போயிருப்பார்கள் அல்லவா? 🙂

      Islam is a Religion of Peace? Intelligence Squared Debate

    • Ameen,

      //முற்றிலுமாக படித்தீர்களா என்று தெரியவில்லை//

      Did you read the debate upto the end? சகோதரர் ஒடிவிட்டார் பாருங்கள்.

      • நான் ஒவ்வொன்றாக பதில் சொல்லி கொண்டிருக்கிறேன். நீங்கள் நான் ஓடிவிட்டேன் என்று கூறுகிறீர்கள். அனைத்து விளக்கத்தையும் படியுங்க. நான் சத்தியத்தில் இருக்கும் போது எதற்காக ஓடவேண்டும்.

  10. mohamedians!!! why can’t you answer straightly.. you religion is extremely fundamental not suitable for every application in real life..it is a failed one. Human are more valuable then you religion and sharia law. Answer straight a life is lost because of stupid law tell me if saudi law is based on islam or not, if not then is Saudi an atheist nation or muslim nation? The holiest place for islam acts on islamic law or not? answer straight… Sometimes your islam orthodoxy looks absurd but it possess grave effects on innocent people.

  11. the real problem with Muslims is they do not use their brain to analyze what given in their book is right or wrong, they strictly believe someone has done entire thinking for all of. them 1000 years before itself. so they just exist, human society progress by thinking. Ask, seek, analyze… In your case it is degeneration of thinking ability for over 1000 years. What separates human from other mammals is this ability to think,, your man mohammed nabi is a great finest thinker..!!! he create a religion to discipline people around him, he did well,, but what resulted is all his teachings are now expired not applicable to this day…

  12. தவறாக சித்தரிப்பது சரியாகுமா?
    ?..
    …………………………………………….
    அடிப்படைவாதம் என்பதைத் தவறான கருத்தியல்போல் சித்தரிக்கும் ஃபாசிச சதியைப் பகுத்தறிவுத்தோழர்களும் ஆதரிப்பது ஆச்சர்யமாக உள்ளது…

    மார்க்ஸிய அடிப்படைகளை ஒருவர் உறுதியாக நம்பி அதன் படி செயல்பட்டால் அவர் மார்க்ஸிய அடிப்படைவாதி, அவ்வாறே பெரியாரியல், உள்ளிட்ட அனைத்து இயல்களுக்கும் இது பொருந்தும்.

    இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படைகளை உறுதியாக நம்பி அதன் படி செயல்படும் யாவரும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளே…
    அதைத் தவறாக சித்தரிப்பது சரியாகுமா?

    மூடத்தனம், பெண்ணடிமைத்தனம், இன இழிவு, மொழிவெறி, குலவெறி, அறிவியலை எதிர்த்தல், புரோகிதம் வளர்த்தல், மதத்தை நிறுவனமாக்கி உழைக்காமல் உண்டுகொழுக்க வழி தேடுதல்,
    உள்ளிட்ட சமூகச்சீரழிவுகளை அடியோடு எதிர்த்தழித்த மார்க்கம் இஸ்லாம்..

    முல்லாக்கள் தங்கள் மூடச்செயல்களுக்கு இஸ்லாமிய சாயம் பூசிக்கொண்டால் உடனே அதை இஸ்லாமிய கோட்பாடாக நம்பி,
    அடிப்படைவாத ’வஹாபி’களுக்கு எதிராகப் போராடுவோம் என்பது எப்படி சரியாகும்.

    மூடசடங்குகளை முற்றாக எதிர்க்கிற நம்மையும் தான், புரோகித முல்லாக்களின் போர்வைக்குள் நின்று போர்செய்யும் நண்பர்கள் வஹாபி என்கின்றனர்..

    வஹாபி என்ற சொல்லைக் கண்டுபிடித்தவர்கள்
    மூர்க்க முல்லாக்களோடு,
    இஸ்லாமை அதன் தூய முற்போக்கான வடிவில் எடுத்துரைப்போரையும் இணைத்துச் சாடுவதன் மூலம் யாருக்கு ஆதரவான அரசியலை நடத்துகிறார்கள் என்பதை நண்பர்கள் உணர வேண்டும்….

    இஸ்லாமின் முதன்மை அடிப்படையான குர் ஆனில் பிற்போக்குக் கருத்துகள் இருப்பதாக விமர்சனம் வைக்கப்படுமானால் அறிவார்ந்த முறையில் விவாதிக்கலாம்…

    முல்லாக்களின் மூடத்தனங்களும், மூர்க்கத்தனங்களும் இஸ்லாமியக் கோட்பாடாகி விட முடியாது…

  13. அமீன்,

    உஸ்மானின் ஏழு குரான்களைப் பற்றி படித்ததில்லையா ? 70 ஆயிரம் ஆதீசிலிருந்து 7 ஆயிரத்துக்கு குறைத்ததும் உங்களுக்கு தெரியாதா ?

    • குரானின் மொழிபெயர்ப்பும் ,குரானின் ஆதார முதுகெலும்பான அடைப்புக்குறிகளும் காலத்துக்கு காலம் மாறுபடும்.மருத்துவத்தில் ஒரு புது கண்டுபிடிப்பு செய்யப்பட்டுள்ளதா?அதையும் குரான் அப்போதே சொன்னது என்கிற ரீதியில் அந்த வசனங்களின் அர்த்தம் மாற்றப்படும்.அதே போல புவியியல் மற்றும் பிற விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு தக்கவாறு வசனங்கள் மாற்றப்பட்டு நாங்க அப்பவ சொன்னோமே என்று மார்தட்டுதல் குபீர் காமெடிதான் !!!எல்லா இசுலாமியனும் ஏற்றுகொள்ளும் ஒரு குரான் பதிப்பை இவர்களால் காட்டவே முடியாது என்பதுதான் உண்மை!

  14. இது அனைத்துக்கும் நான் என்னுடைய முதல் பதிவிலியே பதில் சொல்லி விட்டேன். இன்டர்நெட்டில் இஸ்லாத்திற்கு எதிராக தேடினால் இதுபோல் ஆயிரம் லினக்ஸ் கிடைக்கும். பணத்திற்கும் புகழிற்கும் தங்கள் மார்க்கத்தை விற்பவர்களை பற்றி பேச வேண்டுமானால், பேசிக்கொண்டே போகலாம்.

    7 குரான் பற்றி சொல்லும் nandan அவர்களே, அந்த 7 குரானில் எங்கு நீங்கள் வித்தியாசம் பார்த்தீர்கள்? உங்களுக்கு எந்த இடத்தில் சந்தேகம் என்று கூறுங்கள். எதாவது ஒரு சைட் படித்துவிட்டு இங்கே கமெண்ட் செய்யாதீர்கள்.

    david bill
    //you religion is extremely fundamental not suitable for every application in real life// குரானில் இருக்கும் எந்த கருத்து நடைமுறை வாழ்க்கைக்கு பொருத்தம் இல்லை என்று சொல்லுங்க. பிறகு அதை பற்றி பேசலாம்.

    //a life is lost because of stupid law // எத்தனை தடவை சொன்னாலும் ஏன் உங்களுக்கு புரிய மாட்டேன்கிறது அல்லது புரிய வேண்டாம் என்று எண்ணுகிறீர்களா? இந்த சட்டம் குரானில் இருக்கிறது என்று உங்களால் நிருபிக்க முடியுமா?

    பழுத்த மரம் கல்லடி படும் என்பதற்கு ஏற்ப இஸ்லாத்தை பற்றி குறை கூற வேண்டுமானால் அனைவருக்கும் ஹல்வா சாப்பிடுவது போல் இருக்கும் போல இருக்கு. இதிலாவது ஒற்றுமையை இருக்கிறீர்களே.. சந்தோசம்.

    இஸ்லாத்தில் குறை கண்டு பிடிக்க செலவழிக்கும் உங்கள் நேரத்தை, இஸ்லாம் மற்றும் நபி அவர்கள் பற்றி உண்மை தெரிந்து கொள்ள செலவிடுங்கள். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும் எனக்கும் நேர் வழி காட்டட்டும்.

    நீங்கள் ஒரு site ஆதரமாக காட்டினால், இஸ்லாத்திற்கு வந்த 1000 பேர்களை என்னால் அதே இன்டர்நெட்டில் காட்ட முடியும். நீங்கள் இஸ்லாத்தை பற்றி உண்மை தெரிந்து கொள்ள திறந்த மனதுடன் படியுங்கள். இஸ்லாம் உங்களுக்கு நேர்வழி காட்டும்.

    • இசுலாமில் ஒருவன் சேர்ந்தால் “ஆகா இசுலாத்தால் அந்த நபருக்கு பெருமை” என்று மார்தட்டுகிறீர்கள்.அதே நேரம் இசுலாமியன் ஒருவன் ஜல்சா வேலைகள் செய்து மாட்டிக்கொண்டால் அது தனி நபர் சம்மதபட்டது இசுலாதுக்கும் அவனுக்கும் சம்மந்தம் இல்லைன்னு ஜகா வாங்குறீங்க…இது என்னவகையான புரிதல்?
      ..
      .
      இஸ்லாம் உங்களுக்கு நேர்வழி காட்டும்.////..
      அப்படி காட்டி இருந்தால் இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் இசுலாமிய நாடுகளில் போலீசு ராணுவம் என்று எந்த தேவையும் ஏற்பட்டிருக்க கூடாதே!!உடனே மற்ற மத சிறுபான்மையினர் செய்யும் தவறுகளுக்காக அவை உள்ளன என்று எல் கே ஜி ஜோக் எல்லாம் அடிக்கபடாது!!!

      • islaatthil oruvar servathaal islaatthitkku evvitha uyarvum illai thaalvum illai , vendum endraal islaamiya sattathittankalai pinpatruvathaal avar menmai peralaam. aal sertthu palam kaamikka ithu katchi alla anbare!!!

  15. ஒருத்தரு குரான் மாறிவிட்டது என்கிறார். இன்னொருவர் குரான் 1000 வருடம் பழையது, இந்த காலத்திற்கு ஏற்பு இல்லை என்கிறார். இது என்ன காமெடி பாஸ்.

    முதலில் உங்களுக்குள் பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள். பிறகு, உங்கள் கேள்விகளை கேளுங்கள். வெறும் போகிற போக்கில் கேள்விகள் கேட்காமல், உங்கள் கேள்விகளை குரானிலிருந்து ஆதரமாக கேளுங்கள். பிறகு பதில் சொல்கிறேன்.

    if you are atheist then view this: http://www.youtube.com/watch?v=oTGeuVzuBw0

    if you are hindus then view this: http://www.youtube.com/watch?v=ROhEs09ifE0

    if you are christians/jews then view this: http://www.youtube.com/watch?v=7OEU9B3V-Fg

    நான் இது எல்லாம் பார்க்க மாட்டேன். யாரு சொன்னாலும் கேட்ட மாட்டேன். தான்தோன்றி தனமாகத்தான் இருப்பேன் என்று சொன்னால், உங்களுடைய விடண்டவாத கேள்விகளுக்கு பதில் சொல்ல எனக்கு நேரம் இல்லை.

    இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டு கேட்டால் நிச்சயம் பதில் கிடைக்கும். குற்றம் கண்டு பிடிக்க கேள்வி கேட்டால், நம் இவருடைய நேரம் தான் வீணாகும்.

    • அதற்கு முன் சவுதி அரேபியாவில் சரியத் முறைப்படி ஆட்சி நடக்கிறதா? இல்லையா? என்பதை மட்டும் சொல்லுங்கள்.

    • ஒருத்தரு குரான் மாறிவிட்டது என்கிறார். இன்னொருவர் குரான் 1000 வருடம் பழையது////
      .
      .
      சரி சொல்லுங்கள் எந்த ஒரு குரானின் மொழிபெயர்ப்பை அனைத்து இந்திய இசுலாமியர்களும் ஒருமனதாக ஏற்றுகொள்கிரீர்கள்??

      • குரானை பற்றி தெரிந்து கொள்ள அதன் உண்மையான கிரந்தத்தை படிக்கவேண்டும். மொழி பெயர்த்தவர்கள் மனிதர்கள். அவர்களுடைய அறிவு, மொழி ஞானம் அனைத்தும் மாறுபடும். ஒருவருடைய மொழி பெயர்ப்பு இன்னொருவருடைய மொழி பெயர்போடு சரியாக இருக்காது.

        இது அந்த மக்களின் ஞானத்தை பொருட்டு அமையும். இதனால், குரான் மாறிவிட்டது என்பது அறிவான சொல் இல்லை.

        இதனாலேயே, குரான் அதன் தாய் மொழியில் மனனம் செய்யப்படுகிறது. மொழி பெயர்பில் இல்லை.

        மறுபடியும் அரபி சிறந்ததா அல்லது தமிழ் சிறந்ததா என்று ஆரம்பிக்க வேண்டாம். மொழிகள் அனைத்தும் சமமே.

  16. உங்கள் பிரச்னை சவுதி ஷரியா சட்டம் நடைமுறையில் இருப்பதிலா அல்லது ஷரியத் சட்டத்தில் பெண்களுக்கு அவசர நேரத்தில் மருத்துவம் பார்க்க ஆண்களுக்கு அனுமதி இருக்கா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதிலா?

    என்னுடைய பதில், சவுதியில் 95% ஷரிய சட்டம் அமலில் இருக்கிறது. சிலர் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி சட்டத்திற்கு மாற்றமாக செல்கிறார்கள். இது மனிதர்களின் தீய செயலே அன்றி ஷரிய சட்டம் அனைவருக்கும் சமமே..

    இஸ்லாத்தில் உள்ள சட்டங்கள் அனைத்தும் சாதாரணமாக அனைவருக்கும் பொருந்தும். ஆனால், அவசர நேரத்திலோ அல்லது நிர்பந்தத்தினாலோ ஒருவர் அந்த சட்டத்தை மீறினால் அது அவர்கள் மீது குற்றமாகாது.

    இந்த கட்டுரையில் உள்ளதைபோல இஸ்லாம் சொல்லவில்லை. தவறு நடந்திருப்பின் அதற்கு முழு பொறுப்பு அந்த நிர்வாகமே அன்றி இஸ்லாம் இல்லை.

    அது என்ன அடிப்படைவாதி? இதற்கு வினவு ஆசிரியர் பதில் சொல்ல வேண்டும். இங்கே தமிழ் அடிப்படைவாதிகள் இருக்கலாம், நாத்திக அடிப்படைவாதிகள் இருக்கலாம் ஆனால் ஒருவர் இஸ்லாத்தை பின்பற்றினால், உடனே அவர்கள் இஸ்லாமிய அடிப்படைவதிகளா?

    அது போல அது என்ன வஹாபி? இதற்கும் பொருள் வேண்டும்.

    நான் திருட மாட்டேன் என்பதில் அடிப்படைவாதி, பொய் சொல்ல மாட்டேன் என்பதில் அடிப்படைவாதி, பெண்களின் தரம் குறைய விட மாட்டேன் என்பதில் அடிப்படைவாதி, அனைவரையும் சகோதரர்களாக எண்ணுவேன் என்பதில் அடிப்படைவாதி, அதே போல இஸ்லாம் என்னுடைய மார்க்கம் என்பதிலும் அடிப்படைவாதி. இதில் தவறு என்ன இருக்கிறது?

    • இந்த கட்டுரையில் உள்ளதைபோல இஸ்லாம் சொல்லவில்லை. தவறு நடந்திருப்பின் அதற்கு முழு பொறுப்பு அந்த நிர்வாகமே அன்றி இஸ்லாம் இல்லை. //
      .
      .
      நான் ஏற்கேனவே சொன்ன கருத்தை மீண்டும் ஒருமுறை உறுதி செய்தமைக்கு நன்றி இதற்கு மேல் விவாதிக்க ஒன்றுமில்லை!
      .

    • சவுதி அரேபியா
      இடி அமீனுக்கு அடைக்கலம் குடுத்தது
      இஸ்லாமிய மக்களை கொல்லும் அமெரிக்காவுக்கு ஆதரவு அளிப்பது

      இவை எல்லாம் அந்த 5 சதவிகிதத்தில் வந்து விடுமா என்ன ? அப்படி வந்தாலும் அந்த 5 சதவிகிதத்தின் விளைவு எவ்வளவு பெரியது என்று பாருங்கள்

      மேலும் சில விசயங்கள்

      ஒப்பந்த திருமணத்தின் பெயரில் விபச்சாரம் செய்யும் ஷேக்குகளுக்கு என்ன தண்டனை ?
      க்ட்ட்ப்://ந்ந்ந்.வினவு.சொம்/2013/04/29/சொன்ட்ரச்ட்-இச்லமிச்-மர்ரிஅகெச்/

      ரிசானாவுக்கு மரண தண்டனை. ஆனால்
      ஆறு வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த மத போதகருக்கு முதலில் அபராதம் மட்டும் விதித்து விட்டு அப்புறம் 8 ஆண்டுகளும் 800 கசையடிகளும்

      பொருளாதார விஷய சாட்சிகளில் இரண்டு பெண்களின் சாட்சி = ஒரு ஆணின் சாட்சி
      விளக்கவும்.

  17. //அது போல அது என்ன வஹாபி? இதற்கும் பொருள் வேண்டும்.//
    முஸ்லீமாகிய உங்களுக்கு, வஹாபியிசம், வஹாபிகள், வஹாபி யார் என்பது எதுவுமே தெரியாதா? உண்மையில் வஹாபிகள் யார், அந்த வஹாபிகளுக்கும், உங்களைப் போன்ற முஸ்லீம்களுக்கும் வேறுபாடு உண்டா அல்லது எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானா என்பதை எல்லாம், உங்களைப் போன்ற முஸ்லீம்கள் தான் விளக்க வேண்டும்.

  18. nagaraj அவர்களே,

    //இடி அமீனுக்கு அடைக்கலம் குடுத்தது
    இஸ்லாமிய மக்களை கொல்லும் அமெரிக்காவுக்கு ஆதரவு அளிப்பது

    இவை எல்லாம் அந்த 5 சதவிகிதத்தில் வந்து விடுமா என்ன ? அப்படி வந்தாலும் அந்த 5 சதவிகிதத்தின் விளைவு எவ்வளவு பெரியது என்று பாருங்கள்//

    அதிகாரத்தில் இருப்பவர்கள் இஸ்லாத்தை சரியாய் கடை பிடிக்கவில்லையென்றால் அதற்கும் இஸ்லாம் பொறுப்பாகுமா? இஸ்லாத்தில் உங்களுக்கு இருக்கும் கேள்விகளுக்கு விளக்கலாம். தனி மனிதனுடைய செயல்களுக்கு (அதிகாரிகள் உட்பட) இஸ்லாத்தை பொருப்பாக்காதீர்கள்.

    //க்ட்ட்ப்://ந்ந்ந்.வினவு.சொம்/2013/04/29/சொன்ட்ரச்ட்-இச்லமிச்-மர்ரிஅகெச்//
    இந்த திருமணங்களும் இஸ்லாத்தின் படி விபச்சாரமாகவே கருதப்படும். இதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை.
    கட்டாய திருமணத்திற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. கட்டாய திருமணம் இஸ்லாத்தில் செல்லாது.
    நீங்கள் இஸ்லாத்தைப்பற்றி தெரிந்து கொள்ள குரான் மற்றும் சஹீஹ் ஹதீஸ் பாருங்கள். முஸ்லிம்கள் செய்யும் தவறுகளை இஸ்லாத்துடன் தொடர்பு படுத்தாதீர்கள்.

    //ரிசானாவுக்கு மரண தண்டனை. ஆனால் ஆறு வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த மத போதகருக்கு முதலில் அபராதம் மட்டும் விதித்து விட்டு அப்புறம் 8 ஆண்டுகளும் 800 கசையடிகளும்//
    இந்த செய்தி எனக்கு தெரியாது. நீங்கள் படித்த லிங்க் அனுப்புங்கள். பிறகு இஸ்லாத்தின் பார்வை சொல்கிறேன்.
    இன்னொரு விஷயம், பத்திரிகைகளில் வரும் அனைத்தும் உண்மை அல்ல. TRP ரேட்டிங் ஏற்ற இவர்கள் பல பொய்கள் சொல்வது புதிதல்ல.

    //பொருளாதார விஷய சாட்சிகளில் இரண்டு பெண்களின் சாட்சி = ஒரு ஆணின் சாட்சி விளக்கவும்.//
    இப்போது தான் நீங்கள் சரியான கேள்வி கேட்டு உள்ளீர்கள்.
    இஸ்லாத்தின்படி ஆணும் பெண்ணும் சமம் ஆனால் ஒன்று இல்லை (equal but not same).
    அல்லாஹ் ஆணிற்கு சில தகுதிகளும், உடல் அமைப்பும், வலிமையையும், பெண்ணிற்கு சில தகுதிகளும், உடல் அமைப்பும், வலிமையையும் கொடுத்துள்ளான். இதில் எற்ற தாழ்வுகள் இல்லை. படைத்தவனுக்கு அவனுடைய படைப்புகளின் பண்புகள் தெரியாதா?
    அதனால், அல்லாஹ் பொருளாதார விஷயத்தில் 2 பெண்களை சாட்சிகளாக வைக்க சொல்கிறான். ஒருவர் மறந்து விட்டால், இன்னொரு பெண் நினைவூட்டுவதற்காக. இதில் என்ன பிரச்னை?

    இஸ்லாம் பெண்களுக்கான எல்லா செலவுகளையும் ஆண்களே செய்ய வேண்டும் என்று சொல்கிறது. இதை நீங்கள் ஆண் அடிமைத்தனம் என்று சொல்வீர்களா?

    • சவுதியில் 95% ஷரிய சட்டம் அமலில் இருக்கிறது

      ஆனால்

      அதிகாரத்தில் இருப்பவர்கள் இஸ்லாத்தை சரியாய் கடை பிடிக்கவில்லையென்றால் அதற்கும் இஸ்லாம் பொறுப்பாகுமா?

      இது எப்படி சாத்தியம்

        • //95% ஷரிய சட்டம் அமலில் இருக்கிறது//

          ஆனால்

          //அதிகாரத்தில் இருப்பவர்கள் இஸ்லாத்தை சரியாய் கடை பிடிக்கவில்லை///

          இது எப்படி சாத்தியம்

          • அதிகாரத்தில் இருப்பவர்கள், தங்களுடைய நலனுக்காக சட்டத்தை கடைபிடிக்கவில்லை என்றால்,

            நம் நாட்டில் நீங்கள் சிவப்பு விளக்கில் நிக்காமல் சென்றால் அபராதம் கட்ட வேண்டும். அதே ஒரு காவலர் நிக்காமல் சென்றால், எந்த அபராதமும் இல்லை. இது நம்முடைய ஜனநாயக சட்டம் சரி இல்லை என்று பொருளா? அல்லது அந்த காவலருடைய தவறா?

            இப்போது புரிகிறதா?

            • அப்புறம் ஏன் 95% சரியத் சட்டம் சவுதியில் அமலில் உள்ளது என்கிறீரகள்

              • சவுதி அரேபியாவில் 100% ஷரியத் சட்டம் அமலில் உள்ளது. ஆனால் 5% அதை தவறாக பயன்படுத்துகிறார்கள் அல்லது பயன்படுத்த மறுக்கிறார்கள். நான் இந்த பொருளிலேயே சொன்னேன்.

              • நீங்க ரொம்ப நல்லா குற்றம் கண்டுபிடிக்கிறீங்க. கீப் இட் அப்.

    • // அதனால், அல்லாஹ் பொருளாதார விஷயத்தில் 2 பெண்களை சாட்சிகளாக வைக்க சொல்கிறான். ஒருவர் மறந்து விட்டால், இன்னொரு பெண் நினைவூட்டுவதற்காக. இதில் என்ன பிரச்னை? //

      ஏன் பெண்களுக்கு மட்டும் மறந்துவிடும் என்று இஸ்லாம் கூறுகின்றது? ஆண்களுக்கு மறதி கிடையாதா? ஆண்களுக்கு நினைவூட்டுவதற்கு யாரும் தேவையில்லையா?

      • The Quran in Sura 2:282 says:

        And let two men from among you bear witness to all such documents [contracts of loans without interest]. But if two men be not available, there should be one man and two women to bear witness so that if one of the women forgets (anything), the other may remind her.

        It is 2 men on first hand. Hope this answers your question.

  19. .டேவிட் பில் ///, but what resulted is all his teachings are now expired not applicable to this day…////

    முஹம்மது நபிசல் அவர்கள் கற்றுத்தந்தவை இப்போது பொருந்தாது எது என்று ஒன்றை சொல்லுங்கள் .

    வியாசன் ஹிர்ஷி அலியின் விமர்சனங்கள் ,அளிசினாவின் விமர்சனங்கள் எப்போதே அடித்து நொறுக்கப் பட்டுவிட்டது .
    உங்களுக்கு அவரது எந்த விமர்சனத்துக்கு பதில் வேண்டும் சொல்லுங்கள்

    • அளிசினாவின் விமர்சனங்கள் எப்போதே அடித்து நொறுக்கப் பட்டுவிட்டது .

      எப்போது??????????????????????????????????????????????????????????? அவர் இன்றும் வாதத்துக்கு தயாராக இர்ருகிறார் . ஆண்மையுள்ள முஸ்லிம் கருது பதிவோடு விவாதத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார் . எப்போது நீங்கள் அவரை விவாதத்தில் தோற்கடிதீர், புளுகுவதர்ட்ட்கும் ஒரு அளவு வேண்டும் இப்பு 😛

        • //Dr. Zakir Naik believes in having public debates and letting the audience be the judge. Alhamdulillah Ali Sina has declined for a face to face debate in front of a camera on public place even though Dr. Zakir Naik does not consider him worth debating.//

          ali sina quote as below

          I am sure people can see that Dr. Naik uses haughtiness and pomposity as a shield to protect his image. He is more aware than his fans of his limitations. Every day Muslims are writing to declare they have left Islam because of the information they got in this site. If Dr. Naik truly cared about Islam and the truth he would have come to the defense of his faith even if he thinks I am not worthy of his super inflated, ego loaded stature.

          அது என்ன பொது விவாதம் நேருக்கு நேராக மட்டுமே என்ற கொள்கை?? அலி சிணவோடு இணையத்தில் வதிட்டிருக்கலாமே? உங்களுக்கு நேருக்கு நேராக மட்டும் என்ற கொள்கை இருக்கும் பொது ஆதாரப்படுதளுக்காக இன்னையத்தில் மட்டுமே விவாதம் என்ற கொள்கையை அலி சினா கொண்டிருக்கிறார் என்பதை கூட அறியமாடீர்களா?

  20. //இஸ்லாத்தின்படி ஆணும் பெண்ணும் சமம்//
    இஸ்லாத்தின் படி ஆணும் பெண்ணும் சமம் என்று குர்ஆனில் எந்த வரிகளில் கூறப்பட்டுள்ளது. அதைப்பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வத்தில் கேட்கிறேன். நன்றி.

    • Bro, Below are some of the quranic verses which tells the equality between Men and Women and in some cases how Women are honored. You have to remember Quran teaches these when Bible says “Women doesn’t have soul” and in India “Women are burned alive if widow in the name of SATI”

      “And the believers, men and women, are protecting friends one of another; they enjoin the right and forbid the wrong, and they establish worship and they pay the poor-due, and they obey Allah and His messenger. As for these, Allah will have mercy on them. Lo! Allah is Mighty, Wise.” [Al-Qur’an 9:71]

      “And they (women) have rights similar to those of men over them in a just manner.” [Al-Qur’an 2:228]

      “Whoso does an ill deed, he will be repaid the like thereof, while whoso does right, whether male or female, and is a believer, (all) such will enter the garden, where they will be nourished without stint.” [Al-Qur’an 40:40]

      “And of His signs is this: he created for you spouses from yourselves that you might find tranquillity in them, and he ordained between you love and mercy. Lo, herein indeed are signs for folk who reflect.” [Al-Qur’an 30:21]

      ” … But consort with them in kindness, for if you hate them it may happen that you hate a thing wherein Allah has placed much good.” [Al-Qur’an 4:19]

      ” … and covet not the thing in which Allah has made some of you excel others. Unto men a fortune from that which they have earned, and unto women a fortune from that which they have earned. (Envy not one another) but ask Allah of his bounty. Verily! Allah is knower of all things.” [Al-Qur’an 4:32]

      “And those who launch a charge against chaste women, and produce not four witnesses (to support their allegations) – flog them with eighty stripes; and reject their evidence ever after: for such men are wicked transgressors.” [Al-Qur’an 24:4]

      “And their Lord has heard them (and he says): Verily! I suffer not the work of any worker, male or female, to be lost. You proceed one from another.” [Al-Qur’an 3:195]

      “And whoso does good works, whether of male or female, and he (or she) is a believer, such will enter paradise and they will not be wronged the dint in a date stone.” [Al-Qur’an 4:124]

      “Whosoever does right, whether male or female, and is a believer, him verily we shall quicken with good life, and We shall pay them a recompense in proportion to the best of what they used to do.” [Al-Qur’an 16:97]

  21. இந்தக் காணொளியைப் பார்க்கும் போது முஸ்லீம் பெண்கள், அதுவும் தமிழ் முஸ்லீம் பெண்கள், இந்தியாவில் ஏனைய மாநிலங்களுடன் ஒப்பிடும் போது வரலாற்றின் அடிப்படையிலும், எமது தமிழ்க்கலாச்சாரத்தின் அடிப்படையிலும் தமது உரிமைகளைச் சுதந்திரமாக அனுபவிக்க வேண்டிய தமிழ்நாட்டுப் பெண்கள், அவர்களது முன்னோர்கள் இஸ்லாத்தைத் தழுவியதன் காரணமாக, தமது வாழ்க்கை சம்பந்தமான அடிப்படை உரிமைகளில் கூட, வீட்டை விட்டு வெளியே வந்து தமது விருப்பு வெறுப்புகளைத் தெரிவிக்க முடியாமல், ஒரு சில அன்னிய ஆண்கள் ஜமாஅத்தில் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள், என்ற எண்ணம் முஸ்லீமல்லாத தமிழர்களுக்கு ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

    http://www.youtube.com/watch?v=v9z7lRB4gQ8

    சூடானிலும் சவூதி அரேபியாவிலும், ஆப்கானிஸ்தானிலும், ஏனைய முஸ்லீம் நாடுகளிலும் முஸ்லீம் பெண்களின் நிலை என்ன என்பதை பின்பு பார்ப்போம். உண்மையிலேயே இஸ்லாத்தில் ஆணும் பெண்ணும் சமமானவர்கள். பெண்களுக்கு சமவுரிமை என்ற விடயத்தில் முஸ்லீம் பெண்களுக்கு எந்தப் பிரச்சனையுமில்லை, அவர்கள் சமமாக நடத்தப்படுகிறார்கள் என்றால், எதற்காக எமது தமிழ் முஸ்லீம் சகோதரிகள் உரிமை கேட்டுத் தமிழ்நாட்டில் போராடினார்கள்.

    http://viyaasan.blogspot.ca/2013/04/blog-post_12.html

    • //அவர்களது முன்னோர்கள் இஸ்லாத்தைத் தழுவியதன் காரணமாக//

      இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இங்கே தமிழ் நாட்டில் பெண்கள் மேலாடை அணிவதும் குற்றம் என்று ஒடுக்கப்பட்ட காலத்தில், இஸ்லாத்தில் பெண்கள் கண்ணியபடுதப்படுகிறார்கள் என்பதற்காக இஸ்லாம் நோக்கி மக்கள் வந்தனர் என்பதே உண்மை.

      இங்கே கணவனை இழந்த கைம்பெண்கள் உடன் கட்டை ஏற்றி எரித்தது உங்களுக்கு தெரியாதா அல்லது மறந்து விட்டதா?

      நீங்களில் குரானிலிருந்து ஒரு இடத்தை சுட்டிகாட்டி இது பெண்களுக்கு எதிரானது என்று கூறுங்கள் பார்போம்?

      • //இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இங்கே தமிழ் நாட்டில் பெண்கள் மேலாடை அணிவதும் குற்றம் என்று ஒடுக்கப்பட்ட காலத்தில், இஸ்லாத்தில் பெண்கள் கண்ணியபடுதப்படுகிறார்கள் என்பதற்காக இஸ்லாம் நோக்கி மக்கள் வந்தனர் என்பதே உண்மை.///

        இது உண்மையானால், தமிழர்கள் எல்லோரும் இப்பொழுது முஸ்லீம்களாக இருக்க வேண்டும். அல்லது தமிழ்நாடு பெரும்பான்மை முஸ்லீம்களைக் கொண்ட மாநிலமாக இருந்திருக்கும். மேலாடை அணிவதற்காக மதம் மாறியவர்கள், எதிர்காலத்தில் தமிழ்நாட்டு வஹாபிகள் அவர்களின் பரம்பரையினரை கண்ணைத் தவிர எல்லாவறையும் வரிந்து கட்டி, அரேபியக் கலாச்சாரத்தைக் கடைப்பிடிக்குமாறு வற்புறுத்துவார்கள் என்று தெரிந்திருந்தால், மதம் மாறியிருப்பார்களா என்பது சந்தேகமே. இதில் வேடிக்கை என்னவென்றால், முஸ்லீம்கள் அனைவரும் ஒரேமாதிரி சீருடை அணிய வேண்டுமென்றோ அல்லது அரபுக்கள் மாதிரி ஆடை அணிய வேண்டும், அல்லது அரபுக் கலாச்சாரத்தைக் கைக்கொள்ள வேண்டுமென்றோ, திருக்குரானில் எந்த வரியிலும் கூறவில்லையாம்.

        அவை ஒருபுறமிருக்க, மேலாடை அணிவதற்காக தான் தமிழர்கள் இஸ்லாத்தை நோக்கி வந்தார்கள் என்றால், அதாவது அந்தக் கட்டுப்பாட்டை எதிர்த்து தான் தமிழர்கள் மதம் மாறினார்கள் என்றால், இன்றைக்கு அந்த துணிச்சல் மிக்க தமிழ்ப்பெண்களின் பரம்பரையில் வந்தவர்கள், தமது குடும்ப, உணர்வு சம்பந்தமான பிரச்சனைகளைக் கூட வெளியில் போய் பேசி, தமது பக்க நியாயத்தை, தமது உள்ளக் கிடக்கையை எடுத்துக் கூற முடியாமல், அவர்களின் குடும்ப பிரச்சனையில் சில வெளியாட்கள்(ஆண்கள் மட்டும் கொண்ட ஜமாஅத்), அவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிப்பது மட்டுமன்றி, அவர்கள் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டிய நிலையில் பெண்கள் இருப்பது போன்ற கொடுமை வேறெதுவுமிருக்க முடியாதல்லவா?

        //இங்கே கணவனை இழந்த கைம்பெண்கள் உடன் கட்டை ஏற்றி எரித்தது உங்களுக்கு தெரியாதா அல்லது மறந்து விட்டதா?///

        வட இந்தியாவில் தான் அது பரவலாக வழக்கத்தில் இருந்தது. அந்தக் கைம்பெண்கள் உடன்கட்டையேறித் தமது உயிரை மாய்த்துக் கொண்டதே, எங்கிருந்தோ படையெடுத்து வந்து, தமது நாட்டைப் பிடித்த முகலாயர்களின் கைகளில் பட்டு சீரழியாமலிருக்கத் தான் என்றும் சிலர் கூறுகின்றனர். அது மட்டுமல்ல, பால்ய விவாகங்கள் கூட முகலாய காமுகர்ளிடமிருந்து தமது பெண்குழந்தைகளைக் காப்பாற்றிக் கொள்ள, அதாவது முகலாயர் காலத்தில் தான் பெரியளவில் நடைமுறையில் வந்தது என்றும் கூறுகின்றனர். ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் உண்டு.

        //நீங்களில் குரானிலிருந்து ஒரு இடத்தை சுட்டிகாட்டி இது பெண்களுக்கு எதிரானது என்று கூறுங்கள் பார்போம்?///

        ஒன்றல்ல, பல இடங்களை என்னால் காண்பிக்க முடியும். இந்த விவாதத்தை நான் தொடர்ந்தால், இங்குள்ளவர்கள் எனக்கு இந்துத்துவா பட்டம் சூட்டி, பூணூலும் போட்டு, போதாதற்கு பாட்வாவும் அறிவித்து விடுவார்கள். எனக்கு இஸ்லாத்திலோ அல்லது எந்த மதத்திலும் வெறுப்பில்லை. இஸ்லாத்தில் பல நல்ல விடயங்களும் உண்டு என்பது எனக்கும் தெரியும், ஆனால் இந்து மதத்தைப் போல் எந்த மதத்திலும் சுதந்திரம் கிடையாது.

        இஸ்லாத்தில் ஆணும் பெண்ணும் சமமானவர்கள் என்றால் எதற்காக, பெற்றோரின்சொத்தில் பெண்களை (மகள்களை) விட ஆண்களுக்கு (மகன்களுக்கு) இரண்டு மடங்கு கொடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது தான் இஸ்லாத்தில் பெண்களாய் சமமாக நடத்தும் லட்சணமா?

        (4:11. “இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு” என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான்………

        4:11. Allah instructs you concerning your children: for the male, what is equal to the share of two females……..)

        இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்களின் வழக்கப்படி, அதாவது யாழ்ப்பாண மக்களின் தேசவழமைச் சட்டத்தின் படி, பெண்களுக்கு ஆண்களை விட சொத்தில் கூடிய பங்குண்டு. அதாவது குடும்ப வீடும் (family home) காணியும் மூத்த மகளுக்குத் தான் சீதனமாகக் கொடுக்கப்படுமே தவிர மகனுக்கல்ல. அதை விட ஏனைய சொத்துக்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம பங்குண்டு. மகளுக்கு வீட்டைக் கொடுத்து, எமது முன்னோர்கள், பெண்களின் பாதுகாப்பை, அதாவது தமது பெண் குழந்தைகள் ,தலைக்கு மேல் கூரையில்லாமல், நடுத்தெருவுக்குப் போக வேண்டிய நிலைமை வராமலிருக்க உறுதிப்படுத்தினார்கள்.

        • //இந்து மதத்தைப் போல் எந்த மதத்திலும் சுதந்திரம் கிடையாது. // ஆமாமாம் , யாரு வேணும்னாலும் கோவிலுக்கு போகலாம், யாரு வேணும்னாலும் கோவில் அர்ச்கனாக ஆகலாம், எல்லாரும் குளத்தில் நீர் எடுக்கலாம், யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். ஆகா என்ன ஒரு சுதந்திரமான மதம்.

          • இந்து மதத்திலும் நிறையத் தவறுகள் உள்ளன. அவை களையப்பட வேண்டும்.

          • யார் வேண்டுமானாலும் இந்து மதத்தை விமர்சனம் செய்யலாம், விவாதிக்கலாம், கோயில் சிலைகளை அவமதிக்கலாம். யாரும் பாட்வா அறிவிக்க மாட்டார்கள். அந்த பொறுமையையும், தனி மனித சுதந்திரத்தை மதிக்கும் இந்துக்களின் சகிப்புத் தன்மையையும் எந்த மதத்திலும் காணமுடியாது.

            இஸ்லாத்திலும் எல்லோரும் பள்ளிவாசலுக்குள், தொழுகை நடைபெறும் இடத்துக்குள் நுழைந்து விட முடியாது. காபிர்கள் ‘ஒளு’ செய்யும் தொட்டியில் கழுவி, அதைத் தீட்டுப்படுத்த விடமாட்டார்கள். முஸ்லீமல்லாத, அஸ்வின் போன்ற காபிர்கள் எந்த முஸ்லீம் பெண்ணையும், முஸ்லீமாக மதம் மாறி, சுன்னத்துப் பண்ணாமல் திருமணம் செய்து கொள்ள முடியாது. பார்க்கப் போனால், இந்து மதத்துக்கும் இஸ்லாத்துக்கும் பெரீய வேறுபாடுகள் எதுவும் கிடையாது போல் தெரிகிறது. 🙂

            • //அஸ்வின் போன்ற காபிர்கள் எந்த முஸ்லீம் பெண்ணையும், முஸ்லீமாக மதம் மாறி, சுன்னத்துப் பண்ணாமல் திருமணம் செய்து கொள்ள முடியாது. // ஆமாம், முஸ்லிமாக மாறினால் செய்து கொள்ள முடியும் ஒரு தடையும் இல்லை. பொந்து மதத்தில் செய்து கொள்ள முடியுமா. ? பொந்து மதத்தில் சேர்ந்தால் எந்த சாதியில சேத்துப்பீங்க ?

            • //இஸ்லாத்திலும் எல்லோரும் பள்ளிவாசலுக்குள், தொழுகை நடைபெறும் இடத்துக்குள் நுழைந்து விட முடியாது. காபிர்கள் ‘ஒளு’ செய்யும் தொட்டியில் கழுவி, அதைத் தீட்டுப்படுத்த விடமாட்டார்கள்\\ தீட்டு என்பதெல்லம் இஸ்லாத்தி கிடையவெ கிடையாது சொம்ம கதை அலக்காடேர்கல். மனிதனில் உயர்ந்தவன் தால்ந்தவன் இல்ல எஙிர அடிப்படை தட்துவட்தை கொன்டது தான் இஸ்லாத்தி.

      • உதாரணத்திட்கு போரில் வெற்றிபெற்ற இடங்களில் தோல்வியடைந்தசாராரின் வீட்டுப் பெண்களை என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்கள் இறைதூதர் “அற்புதமாகச்” சொல்லியுள்ளார். அவர்களெல்லாம் உணர்வுகளற்ற சடப்பொருட்கள் தானே.

        சொர்க்கத்தில் ஆண்களுக்குப் பல கன்னிப்பெண்கள் கொடுப்பது/கிடைப்பது போல் பெண்களுக்குக் கட்டிளம் காளையர்களைக் கொடுப்பதாக/கிடைப்பதாக மட்டும் சொன்னதாகத் தெரியவில்லை.

        நரகத்தில் அதிகமாகப் பெண்களைக் கண்டது இறைதூதரின் பார்வைக் கோளாறோ அல்லது சொர்க்கத்தில் ஆண்கள் செய்யும் அட்டூழியத்திலிருந்து தப்புவதற்காக பெண்கள் தாங்களாகவே கேட்டுப் பெற்றுக் கொண்டதோ அல்லது தற்செயலாக நடந்த நிகழ்வோ (random event) தெரியவில்லை.

        • 1400வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பழங்குடியினருக்கு ஏற்ற வகையில் எழுதப்பட்டது தான் குர்ஆன். அப்போது பெண்களுக்கு ஆண் சமூகத்தில் என்ன மரியாதை இருந்ததோ அதை தான் குர்ஆன் பிரதிபலிக்கிறது.குர்ஆனில் எவ்வளவோ நல்ல விடயங்களும் உள்ளது. அதிலுள்ள சில கருத்துக்கள் இன்றளவும் தேவைப்பட்டாலும், சில கருத்துக்கள் காலத்திற்கேற்ப மாற்றப்படவேண்டிய நிலையில் உள்ளது. ஒவ்வொரு மதத்திலும், அம்மதம் தோன்றிய காலத்தில் இருந்த மரபுகளின் படி சரியானதாக இருந்தாலும், காலத்தின் மாற்றத்தில் சில கருத்துக்கள் தவறாகின்றன. கிருத்துவத்தில் ஆதாம் ஏவாள் கதை, உலகம் தோன்றிய வரலாறு, இந்து மதத்தில் சதி, குழந்தை திருமணங்கள், சாதி பாகுபாடு, இசுலாமில் பெண் அடிமைத்தனம், சகிப்புத்தன்மையின்மை, இதெல்லாம் காலத்திற்கேற்ப மாறுவதால் மானுடம் பயனடைகிறது. இன்னும் பழைய பாணியில், தற்போதைய நடைமுறைக்கு ஒவ்வாத வகையில் இருக்கும் விதிகளை அந்தந்த மத குருமார்கள் மாற்றம் செய்ய வேண்டும். எனக்கு இந்து, முசுலிம், கிருத்துவ, பகுத்தறிவு வாதிகள் என்று நண்பர்கள் இருக்கிறார்கள். நான் எந்த மதத்தையும் தனிப்பட்ட வகையில் தாக்குவதில் விருப்பம் இல்லை. எனக்கு இந்து, முசுலிம், கிருத்துவ, பகுத்தறிவாளர்கள் என்று எல்லா வகையிலும் நண்பர்கள் உள்ளார்கள். எல்லா மதங்களிலும் உள்ள குறைகளை நீக்க முயற்சிக்கலாம் என்றே வினவுகிறேன்.

          • உங்கள் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். சகல மதங்களிலும் குறைபாடுகளும் இக்காலத்திற்கு பொருந்தாத விடயங்களும் உள்ளன. அதனை ஏற்றுக்கொள்ளாது எங்கள் மதம் மட்டுமே குறைகளே அற்றது, எக்காலத்திற்கும் பொருத்தமானது என்றும் பீற்றிக்கொள்வது கேலிக்குரியது.

            உதாரணத்திற்கு பின்னூட்டம் 10 இல்:
            //
            குரானும் ஹதீசும் மற்ற மத நூல்களை போல மனிதர்களால் காலத்திற்கு ஏற்றார் போல மாற்ற முடியாது. அது உலகம் அழியும் வரை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். எந்த மாற்றமும் ஆகாது.

            மனித குலத்திற்கு உலகம் அழியும் வரை உன்னத மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.
            //

            • இதில் நீங்கள் கேலி செய்ய என்ன இருக்கிறது. இது எல்லாம் வல்ல இறைவன் வகுத்த சட்டம். மனிதனின் மூளை தன்னுடைய சூழல், மொழி, கலாசாரம், இயற்கை சூழ்நிலை, தான் பார்க்கும் உலகம் இதில் மட்டுமே சிந்திக்கும் ஆற்றல் கொண்டது.

              ஆனால், இறைவன் உலகம் அழியும் வரை அதற்கு பிறகும் நடக்கும் அனைத்தையும் அறிபவன்.

              நீங்கள் சொல்வது போல் மாற்ற வேண்டுமானால், உங்களுடைய அறிவு அந்த இறைவனுடைய அறிவைவிட சிறந்ததாகிவிட்டது என்று பொருளா?

              மறுபடியும் குரான் இறைவனுடைய வார்த்தையா என்று வாதாட கிளம்பி விடுவீர்கள் என்று தெரியும். ஏதாவது இணையத்தில் தேடி இங்கே பதிவிடுவதை தவிர்த்து, நீங்கள் உங்கள் சொந்த கேள்விகள் இருந்தால் ஒவ்வொன்றாக கேட்கவும். நான் அனைத்தும் படித்தவன் இல்லை. எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். மற்றதை படித்துவிட்டு சொல்கிறேன்.

              உங்களுக்கு நேர்வழி கிடைக்க அந்த எல்லாம் வல்ல இறைவன் நாடினால் நிச்சயம் நேர்வழி பெறுவீர்கள்.

              • உங்கள் எல்லாம் வல்ல இறைவன் எனக்கு நேர்வழி காட்டுவது இருக்கட்டும். முதலில் அவரையே பின்பற்றிக் கொண்டு பாகிஸ்தானில் தினமும் பல ஷியா முஸ்லிம்களையும் அஹமதியர்களையும் கொன்று குவிப்பவர்களை நேர்வழி காட்டினால் நன்றாயிருக்குமே?

                தன்னைப் பின்பற்றுபவர்களுக்கே நேர்வழி காட்டமுடியாத இறைவனை, அல்லது அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை அறியமுடியாத இறைவனை, எல்லாம் வல்லவன் அனைத்தையும் அறிபவன் என்று கூறுவது சுத்த அபத்தமாக இல்லையா?

                • உங்களுக்கு மறுமை வாழ்வில் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை.

                  இஸ்லாம் இந்த உலக வாழ்க்கை ஒரு தேர்வு என்கிறது. மறுமை வாழ்வே நிலையான வாழ்க்கை என்கிறது. இந்த உலகத்தில் ஒருவன் பணக்காரனாக, ஒருவன் ஏழையாக, ஒருவன் ஆரோக்கியவனாக, ஒருவன் மாற்று திரனாளியாக பிறந்தது எல்லாமே அவர் அவருக்கு இறைவன் கொடுக்கும் தேர்வு.

                  குரான் (103:3)
                  எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்கள் நஷ்டத்திலில்லை.

                  அல்லாஹ் நன்மை, தீமை அனைத்தையும் தெளிவாக மக்களுக்கு காட்டிவிட்டான். இப்போது மக்கள் தங்களுடைய உலக ஆசைகளினால் தங்கள் மதிகெட்டு குழப்பம் விளைவிக்கின்றார்களோ அவர்களை அல்லாஹ் திருந்துவதற்கு சந்தர்ப்பம் இந்த உலகில் கொடுப்பான். அவர்கள் யாராக இருந்தாலும் சரியே.

                  அவர்கள் திருந்தி பாவமன்னிப்பு கேட்டால் அவர்களின் பாவம் அல்லாஹ் நாடினால் மன்னிப்பான். அவர்கள் திருந்தாவிட்டால், மரணத்திற்கு பிறகு இறைவனிடத்தில் சென்றடையும் பொழுது அவர்களது நீதி விசாரணை நடைபெறும்.

                  நீங்கள் சொன்ன கருத்தை, இதனோடு ஒப்பிட்டு பாருங்கள். உங்களுக்கு இறைவன் நாடினால் உண்மை விளங்கும்.

                  //தன்னைப் பின்பற்றுபவர்களுக்கே நேர்வழி காட்டமுடியாத இறைவனை//
                  இந்த சொற்களே ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளது. அவர்கள் உலகில் அநிதி இழைப்பவர்களானால் அவர்கள் எப்படி அல்லாஹ்வை பின்பற்றுபவர்கள் ஆவார்கள்?

                  பெயரளவில் முஸ்லிமாக ஒருவன் இருந்தால் அவன் அல்லாஹ்வை பின்பற்றுபவன் என்று எப்படி சொல்ல முடியும். இது மற்ற எல்லா மதத்தை பின்பற்றுபவர்களுக்கும் பொருந்தும்.

                  இந்த உலகில் அநிதி செய்பவன் உண்மையில் மறுமை மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பவனே. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் அவன் இறைவன் நம்பிக்கை இல்லாதவனாகவே கருதப்படுவான்.

                  //உங்கள் எல்லாம் வல்ல இறைவன் எனக்கு நேர்வழி காட்டுவது இருக்கட்டும். //
                  இறைவன் எல்லாருக்கும் பொதுவானவன். அவனே அனைத்தையும் படைத்தான். அவனே அனைத்தையும் பரிபாலிக்கின்றான். அவனே அனைத்திற்கும் அதிபதி. இதில் உங்கள் இறைவன் என்னோட இறைவன் என்று என்ன இருக்கிறது?

                  Allah knows the best.

                  • Question no 1

                    If a kid of less then age 7 dies , without taking God’s test, how will god judge?
                    You cant tell me , he will send the soul to take one more test that means rebirth

                    Question no 2

                    God who created everything who is supposed to know everything doesnt know what I will do when he created me , doesn’t know what I will do next and he has no control on me in earth. Because it is upto me to take the test and pass or fail.
                    And that means , God doesnt know what will happen on earth next. If God doesnt know what will happen next, is he/she/it a god?

                    Question no 3
                    God doesnot know how to create only good souls. It knows only to create souls and it is upto the souls to become good or bad.
                    That means he has no control on creation process.If he cannot control creation process , is he/she/it a god?

                    Question no 4
                    God will make one soul as Saudi King and another one as Mumbai slum dweller and test. Is that the right way to test?
                    If you accept the test, Will you accept your place in soceity and not queation Sudi King? Who are you to queation,it is god, who has made him king

                    Question no 5
                    If God can create King and slum dweller and test, why your community is not accpeting that God can create a Hindu/Christian and test.
                    Why do you think , Gods test will fail. How do you know only muslims are taking test properly?

                    Question no 6
                    What is the job of God? Judging and punishing the people? Is he running two hotels one for good people and another one for bad people?
                    Indeed a good job.

                  • //இந்த உலகத்தில் ஒருவன் பணக்காரனாக, ஒருவன் ஏழையாக, ஒருவன் ஆரோக்கியவனாக, ஒருவன் மாற்று திரனாளியாக பிறந்தது எல்லாமே அவர் அவருக்கு இறைவன் கொடுக்கும் தேர்வு.// இந்த ஏழைகளை ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் ஒடுக்க ,அவர்கள் பணக்கார சுரண்டல்காரர்களை எதிர்த்து கேள்வி எழுப்பாமல் இருக்க சொல்லப்பட்ட கட்டு கதைதான் இது.

                  • இஸ்லாம் மதத்தின் பெயரால் நடக்கும் கொடுமைகளை ஆதரிக்காது என்றால், பாகிஸ்தானில் உள்ள சுன்னி முஸ்லிம் மதபோதகர்கள் ஷியா முஸ்லிம்கள் மற்றும் அஹமதியர்களைக் கொல்பவர்கள் நரகத்திற்குப் போவார்கள் என்று வெளிப்படையாகக் கூறலாமே?

                    மேலை நாட்டில் யாருக்கும் சொந்தமில்லாத தற்காலிக இடத்தில் தொழுகைக்கு போகும்போது கூட அஹமதியர்களை தொழுகை செய்யவிடாது விரட்டும் இஸ்லாமியர்களைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

                    அல்லா அனைத்தையும் அறிபவன் என்று கூறிக்கொண்டே இருங்கள். மறுபுறத்தில் அல்லாஹூ அக்பர் என்று ஊளையிட்டுக் கொண்டே அப்பாவிகளைக் கொன்று குவிப்பதுவும் தொடரும். மத அவமதிப்பு (blasphemy) போன்ற பெயர்களில் கேள்விகளுக்கு இடமின்றிக் கொலைகளும் தொடரும்.

              • ///இது எல்லாம் வல்ல இறைவன் வகுத்த சட்டம்////

                இந்த இறைவன் எத்தனை ஆண்டுகள் இந்த பூஉலகில் வாழ்ந்தார் என்று கூறுங்கள்!!!
                மனிதர்கள் நுறு ஆண்டுகள் வாழ்கிறார்கள். ஆண்டவனால் அனுப்பப்பட்ட கடைசி இறை தூதர் மிக குறுகிய காலத்தில்தான் வாழ்ந்தார்!!!!! இயேசு கூட நாற்பது ஆண்டுகள்தான் வாழ்ந்துள்ளார்.
                கருணாநிதிகூட தொண்ணூறு அகவையை தாண்டி உள்ளார். அந்த சிறப்புகூட நபிகளிடம் கிடையாது.கடவுளை யாரும் பார்த்திராத போது “குரானை” கடவுள் இயற்றினார் என்பது அப்பட்டமான பொய்!!!! குரானைக் காட்டிலும் இந்தியாவில் ஏராளமான தத்துவ நூற்கள் உள்ளன. தமிழில் “திருக்குறள்” ஒன்றே போதும்.

      • முகம்மதுநபியின் மூடப்பழக்கவழ்கம்

        5704. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
        உங்கள் மருந்துகளில் ஏதேனும் ஒன்றில் நன்மை ஏதும் இருக்குமானால் குருதி உறிஞ்சும் கருவியால் (உடம்பில்) கீறுவது, அல்லது நெருப்பால் சூடிட்டுக் கொள்வதில் தான் அது இருக்கும். ஆயினும், நான் சூடிட்டுக் கொள்வதை விரும்பவில்லை.
        என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
        Volume :6 Book :76
        507. நாஃபிவு அறிவித்தார்.
        ‘நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஒட்டகத்தைக் குறுக்கே நிறுத்தி அதை நோக்கித் தொழுவார்கள்’ என்று இப்னு உமர்(ரலி) கூறினார். ‘ஒட்டகம் மிரண்டு ஓடிவிட்டால்…?’ என்று கேட்டேன். ‘ஒட்டகத்தின் மீது அமைக்கப்படும் சாய்மானத்தை எடுத்து அதை நோக்கித் தொழுவார்கள்’ என்று கூறியதுடன் அவரும் அவ்வாறே செய்வார்.
        Volume :1 Book :8
        508. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
        (பெண்கள், நாய்கள், கழுதைகள் தொழுபவருக்குக் குறுக்கே சென்றால் தொழுகை முறிந்து விடும் என்று கூறுவதன் மூலம்) எங்களை நாய்களுக்கும் கழுதைகளுக்கும் சமமாக்கி விட்டீர்களே! நான் கட்டிலில் படுத்திருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் கட்டிலுக்கு நேராக நின்று தொழுவார்கள். அவர்களுக்கு நேராக நின்று தொழுவார்கள். அவர்களுக்கு நேராகக் கால்களை நீட்டுவது எனக்குப் பிடிக்காததால் கட்டிலின் கால்கள் வழியாக நழுவிக் சென்று விடுவேன்.
        Volume :1 Book :8
        168. ‘நபி(ஸல்) அவர்கள் செருப்பு அணிவதிலும், தலை முடி சீவுவதிலும், சுத்தம் செய்வதிலும், தங்களின் எல்லா விஷயங்களையும் வலப்புறத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
        Volume :1 Book :4
        144. உங்களில் ஒருவர் மலம் கழிக்கச் சென்றால் அவர் கிப்லாவை முன்னோக்கக் கூடாது. தம் முதுகுப் புறத்தால் (அதை) பின்னால் ஆக்கவும் கூடாது. (எனவே) கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திரும்பிக் கொள்ளுங்கள்’ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ அய்யூபில் அன்ஸாரி(ரலி) அறிவித்தார்.
        (குறிப்பு: மேற்கூறப்பட்ட ஹதீஸ், கிப்லா தெற்கு வடக்காக அமைந்த மதீனா, யமன், சிரியா போன்ற நாடுகளில் வாழும் மக்களுக்கே பொருந்தும்.)
        Volume :1 Book :4

  22. வினவு ஆசிரியர்கள் மீது எனக்கு அபிப்ராயம் உள்ளது. ஆனால் இந்தக் கட்டுரையில் மற்ற இந்து அடிப்படைவாதிகள் அவதூறு பரப்புவது போல் இங்கே அவதூறு பரப்பப்பட்டுள்ளதாகவே நான் கருதுகிறறேன். இஸ்லாம் ஆண் மருத்துவரிடம் சிகிச்சை செய்ய அனுமதிக்கவில்லை என்று உங்களுக்கு யார் சொன்னது. ஒரு கல்லூரி நிர்வாகத்தின் தவறான அனுகுமுறை என்று எழுதியிருக்க வெண்டுமே தவிர. இதில் இஸ்லாத்திற்கான தொடர்பை எதில் இருந்து எடுத்தீர்கள்.? உங்களின் ஆக்கம் நடுநிலையுடள் இருக்கவேண்டும் என்பதில் காட்டும் முக்கியத்துவத்தை மற்றவர்கள் மீது தப்பான எண்ணங்களை உருவாக்கும் இதுபோன்ற ஆக்கங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள். அல்லது சரியான தகவலை வெளியிடுங்கள்.

    கண்டிப்பாக அந்த கல்லூரி நிர்வாகம் செய்தது தவறு. இதற்கும் இஸ்லாத்திற்கும் சம்மந்தம் இல்லை. இஸ்லாமிய அளவுகோளில் நிர்பந்தம் என்று வந்துவிட்டால் எந்தக் கட்டுப்பாடும் இல்லை… இறைவன் உங்களுக்கு நேர்வழிகாட்ட போதுமானவன்.

    • //கண்டிப்பாக அந்த கல்லூரி நிர்வாகம் செய்தது தவறு. இதற்கும் இஸ்லாத்திற்கும் சம்மந்தம் இல்லை. இஸ்லாமிய அளவுகோளில் நிர்பந்தம் என்று வந்துவிட்டால் எந்தக் கட்டுப்பாடும் இல்லை… இறைவன் உங்களுக்கு நேர்வழிகாட்ட போதுமானவன்.// hope the true muslim Abdul Haleem is the first one to fight with the college for its ‘non islmic ways’ which brings bad name to true islam. May be he can ask the ‘எண் 30, அரண்மனைக்காரன் தெரு, மண்ணடி. சென்னை’ people to go directly to that college and protest. Why are they not doing till now? The reason is true Islam/non islamic ways are arguments sake for them.

  23. சில இஸ்லாமிய எதிர்ப்பு வாதிகள் தங்களை எந்த மதமும் சாராதவர்கள் என்று காட்டிக்கொள்கின்றனர். அப்படியானால் இஸ்லாம் குறித்து உங்களின் கருத்துக்களை பொதுமேடையில் விவாதிக்க

    எண் 30, அரண்மனைக்காரன் தெரு, மண்ணடி. சென்னை என்று முகவரியில் தொடர்புகொள்ளுங்கள். உங்களுடன் விவாதிக்க நாம் எப்போதும் தயாராகவே உள்ளோம். வினவு தளத்தில் வந்து விவாதிக்க தயாரா? ஆண்மை இருக்கா என்றெல்லாம் கூக்குரல் விடுவது அநாகரிகம். உங்களை இணையத்தில் யார் என்று தெறியாமல் விவாதிப்பதில் எந்த பயனும் இல்லை நேரடி விவாதத்திற்கு மேற்கொன்ன முகவரியில் தொடர்புகொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களில் ஆண்மை இருந்தால்.

    • Abdul Haleem

      // உங்கள் கருத்துக்களில் ஆண்மை இருந்தால்.// வினவு தளத்திலேயே விவாதிக்கலாமே.
      We are not interested to know who you are, how you look, etc.

    • //அப்படியானால் இஸ்லாம் குறித்து உங்களின் கருத்துக்களை பொதுமேடையில் விவாதிக்க எண் 30, அரண்மனைக்காரன் தெரு, மண்ணடி. சென்னை என்று முகவரியில் தொடர்புகொள்ளுங்கள். உங்களுடன் விவாதிக்க நாம் எப்போதும் தயாராகவே உள்ளோம்.// ஆரம்பிச்சுதானுங்கடா பாய்ங்க …ஏம்பா பாயி அது என்ன “நாம் நாம்”ங்குற . இங்க எல்லாரும் தனி ஆளா தான விவாதிக்குறாங்க . உனக்கு என்ன பிரச்னை விவாதிக்க முடியலையா…வடிவேலு கணக்கா ” எங்க அண்ணன் கிட்ட வந்து பேசிப்பாருங்கடா “ன்னு கூப்பிடுற. ஒன் குரூப்ப இங்க வர சொல்லு.

    • Abdul Haleem

      கருத்துக்களில் பெண்மை இருந்தாலும் வினவு தளத்திலேயே விவாதிக்கலாமே.

      பெண்மையோ ஆண்மையோ, நேர்மைதான் வேண்டும். இருக்கிறதா உங்களிடம்?

    • இவர்கள் நேரிலும் வர மாட்டார்கள், உண்மையான பெயரிலும் வர மாட்டார்கள். திரைக்கும் பின் நின்று சண்டை போடும் தைரியசாலிகள்.

      போலி கணக்கில் இருந்து கொண்டு வாதிடுவதை தவிர்த்து, உண்மை அறிய ஒருபோதும் துணியமாட்டார்கள்.

      இவர்களுக்கு நேர்வழி தர அந்த இறைவனை பிராத்திப்போம் சகோ.

      • சகோ. அமீன்,

        இணையத்தளத்தில் வாதிப்பதற்கும், கருத்தைத் தெரிவிப்பதற்கும் எதற்காக நேரில் வர வேண்டும். இதிலிருந்து உங்களால் மற்றவர்களுடன் வாதாட முடியாது அல்லது மற்றவர்களின் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியவில்லையென்பது தெளிவாகிறது. இணையத்தளங்களில் கருத்தைப் பரிமாறுவதற்கு நேரில் வா, அல்லது அடையாள அட்டையைக் காட்டு, உண்மையான பெயர் என்ன என்று கேட்பது, இணைய வரலாற்றிலேயே இது தான் முதல் முறையாக இருக்க வேண்டும். எத்தனையோ இஸ்லாமிய முல்லாக்களும், பன்னாட்டு முஸ்லீம்களும்,பல இணையத்தளங்களில், எல்லோரது கேள்விகளுக்கும், பதிலளித்து, மற்றவர்களுக்கு இஸ்லாத்தின் மீதுள்ள சந்தேகங்களைத் தீர்க்கிறார்கள். யாருமே நேரில் வந்தால் தான் பதிலளிப்பேன் என்று கூறியதில்லை. ஒவ்வொரு நாளும் பல இணையத்தளங்களில், உலகில் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் இத்தகைய விவாதங்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டின் தமிழ் முஸ்லீம்கள் மட்டும் மண்ணடியில், அரண்மனைக்காரன் தெருவில் முப்பதாம் நம்பருக்கு வந்தால் தான் பதிலளிப்பேன் என்பதைப் பார்க்க சிரிப்பு வருவது மட்டுமல்ல, தமிழன் என்ற முறையில் வெட்கமாக இருக்கிறது. 🙂

        • நீங்கள் அனைவரது கருத்துகளையும் படித்தீர்களா அல்லது இல்லையா என்று தெரியவில்லை. முகம் காமிக்க மறுக்கும் பல பேரோட வேலை, போலி முகவரியில் வந்து இணையத்தில் மூலம், எதையாவது பதிவிறக்கம் செய்து இங்கே போட வேண்டியது. அதற்கு பதில் சொன்னால் அதற்கு சம்பந்தமே இல்லாமல் அல்லது பதிலை படிக்காமலே இன்னொரு கேள்வி கேட்க வேண்டியது.

          உண்மையான பெயரில் வருபவர்களோ அல்லது நேரில் வருபவர்கள், உண்மையை தெரிந்து கொள்ளும் நோக்கதுடன் வருபவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

          வெறும் நேரம் விரயம் செய்யும் இந்த போலி முகவர்களினால் யாருக்கு என்ன பயன்? இவர்களின் நோக்கம் எதிராளிகளை கோமாளியாக்குவது மட்டுமே..

          கீழே பின்னோட்டம் இட்டவர்களை போய் பாருங்க. கருத்து என்ற பெயரில், அல்லாஹ்வையும் நபியையும் (saws) நகைக்கிறார்கள். இவர்கள்தான் சந்தேகம் கேட்க வந்தவர்களா? அல்லது டைம் பாஸ் செய்ய வருபவர்களா?

          • //உண்மையான பெயரில் வருபவர்களோ அல்லது நேரில் வருபவர்கள், உண்மையை தெரிந்து கொள்ளும் நோக்கதுடன் வருபவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.// இது தான் உங்க(தமிழக முஸ்லிம்கள்) பிரச்சன .இங்க என்னமோ எல்லோருக்கும் இஸ்லாம் குறித்து சந்தேகம் இருப்பது போலவும், அதை போக்கி கொள்ள இங்கு விவாதித்து கொண்டிருப்பது போலவும் நீங்களே கற்பனை செய்து கொள்கிறீர்கள். முஸ்லிம்களை தவிர யாருக்கும் இஸ்லாம் பத்தி தெரியாது என்பது உங்கள் கற்பனை. இப்படி தமிழக முஸ்லிம்களை முட்டாள் ஆக்கிய பெருமை ஜையினுலாபுதீனையே சாரும்.

            • //இது தான் உங்க(தமிழக முஸ்லிம்கள்) பிரச்சன .இங்க என்னமோ எல்லோருக்கும் இஸ்லாம் குறித்து சந்தேகம் இருப்பது போலவும், அதை போக்கி கொள்ள இங்கு விவாதித்து கொண்டிருப்பது போலவும் நீங்களே கற்பனை செய்து கொள்கிறீர்கள். //

              உங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை, எந்த விளக்கமும் தேவை இல்லை என்றால், எதற்காக இங்கே வந்து அனைவருது நேரத்தையும் வீணாக்க வேண்டும். உங்கள் வேலையை போய் பார்க்கலாமே?

              • //உங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை, எந்த விளக்கமும் தேவை இல்லை என்றால், எதற்காக இங்கே வந்து அனைவருது நேரத்தையும் வீணாக்க வேண்டும். உங்கள் வேலையை போய் பார்க்கலாமே?//

                பாயி ..இங்க என்ன நடக்குதுன்னே தெரியாமையா பேசிட்டு இருக்கீங்க .இங்க யாருக்கும் இஸ்லாம் குறித்து சந்தேகம் இல்ல. உங்க இஸ்லாமிய மதவெறியர்களையும், இஸ்லாமின் முட்டாள் தனமான பிற்போக்கு தனத்தையும் அம்பலப்படுத்துகிறோம். அதுக்கு நீங்கதான் இங்க சப்பை கட்டு கட்டிகிட்டு இருக்கீங்க..

                • எந்த கமெண்டும் படிக்காமே முதல்லே இருந்து ஆரம்பிக்கிறீங்க.. நீங்க சொல்லுற புளுகாண்டிக்குதான் முதல்ல இருந்து அதாரத்தோடு மறுத்துட்டு இருக்கிறேன். மறுபடியும் மதவெறி முட்டாள்தனம்ன்னு பேசிட்டு இருக்கீங்க.

                  கமெண்ட்சை படிக்கிறவங்களுக்கு யாருக்கு மதவெறி, யாரோட பேச்சு முட்டாள்தனம்னு தெரியும்.

                  உங்களோட மதம் என்னனு சொல்லவே உங்களாலே முடியல.. நீங்க இஸ்லாமை அம்பலபடுத்துரீன்களா? உங்களுக்கே காமெடியா இல்ல?

                  உங்களுக்கு என்ன விளக்கம் சொன்னாலும் அதற்கு நீங்க எதாவது குதுர்க்கமா சொல்ல போறீங்க.. அப்புறம் நான் என்ன செய்ய முடியும்?

                  முதலில் இந்த உலகத்தில் எதற்கு பிறந்தொம்ன்னு புரிஞ்சிக்குங்க. உங்களோட பகுத்தறிவை வைத்து ஆராய்ந்து பாருங்க. உண்மை என்னான்னு தெரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க.

                  இது மிக சிறிய வாழ்க்கை. இதை துளைத்து விட்டால் அப்புறம் கிடைக்காது. உங்களை படைத்த இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டட்டும்.

                  • //உங்களோட மதம் என்னனு சொல்லவே உங்களாலே முடியல.//
                    எனக்கு மதம் இல்லை பாய். கடவுள் என்பது கட்டுக்கதை என்பதே என் நிலைபாடு.
                    //

                    முதலில் இந்த உலகத்தில் எதற்கு பிறந்தொம்ன்னு புரிஞ்சிக்குங்க. உங்களோட பகுத்தறிவை வைத்து ஆராய்ந்து பாருங்க. உண்மை என்னான்னு தெரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க.

                    இது மிக சிறிய வாழ்க்கை. இதை துளைத்து விட்டால் அப்புறம் கிடைக்காது. உங்களை படைத்த இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டட்டும்.//

                    உஙகளுக்கு எப்படி பாய் இதெல்லாம் தெரிஞ்சது.? உங்க பகுத்தறிவை கொண்டு ஆராய்ந்து தெரிஞ்சுகிட்டீங்களா?

                    • உங்களுக்கு ஜாகிர் நாயிக் மீது என்ன அவ்வளவு வெறுப்புன்னு எனக்கு புரியலை.

                      இந்து மதம் பற்றி சொல்லும் முன், உங்களுக்கு தெரிந்த ஹிந்து மதத்தின் படி ஒரு வரியில், கடவுளின் தன்மை மற்றும் இந்த மனித வாழ்க்கையின் நோக்கம் (purpose) பற்றி சொல்லுங்க.

                      உங்கள் சொந்த கருத்து தேவையில்லை. உங்கள் வேதங்களின் அடிப்படையில் பதில் வேண்டும்.

  24. Ameen,

    //கேலி செய்வது ஆறரிவு படைத்த மனிதனுக்கு அழகு இல்லை//

    எனக்கு 5 அறிவு என்றே வைத்துக்கொள்ளலாம். 5 அறிவு படைத்த மனிதனே கேலி செய்யுமளவுக்கு உள்ள மார்க்கத்தை பின்பற்றுவதற்கு எத்தனை அறிவு வேண்டும்.

    //இதோ ஆதாரம்: http://www.daruliftaa.com/node/5696?txt_QuestionID//

    இதெல்லாம் ஒரு ஆதாரமா? கேவலமாக இல்லை? ஹதீதை ஆதாரமாகக் கொண்டு, 100 வரிகளில், பெண்களுக்கு ஆண்கள் மருத்துவம் செய்தல் கூடாது தவறு என்று கூறி விட்டு கடைசியில் ஒரு பாதி வரியில் தேவைப்பட்டால் செய்யலாம் என்று ஒரு ஒன்பதாம் தர முல்லா பத்வா விட்டுருக்கிறார். அதையும் ஆதாரமாகக் காட்ட நீங்கள் வெட்கப்படவில்லை. ஹதீத் குரான் ஆதாரம் இருக்கா? இல்லையா? என்பது தானே கேள்வி.

    //அப்படி செய்ய சொல்லி குரானில் இருக்கிறது என்று காட்டுங்கள். //

    5 முறை அதான் ஒலி எழப்பச்சொல்லி குரானில் இருக்கிறதா? 5 முறை ஒளு செய்யச்சொல்லி குரானில் இருக்கிறதா? குரானில் ஒன்றும் உருப்படியாக இல்லையென்று எனக்குத் தெரியும். ஹதீதை வைத்துக்கொண்டுதான் இவ்வளவு கன்றாவிகளும்.

    This comment may be a duplicate.

    • //ஒன்பதாம் தர முல்லா //

      //குரானில் ஒன்றும் உருப்படியாக இல்லையென்று//

      //கன்றாவிகளும்//

      உங்கள் பதிவில் அறிந்து கொள்ளும் ஆர்வத்தை விட கேலியும் கிண்டலும் தான் அதிகம் இருக்கிறது. இதற்கு மேல் விவாதிக்க உங்களிடம் ஆக்க பூர்வ கருத்துக்கள் இல்லை என்று புரிகிறது.

      உங்கள் காதுகளும், கண்களும், உண்மையை அறிந்து கொள்ளும் சக்தியற்றுவிட்டால், நான் என்ன செய்ய முடியும்.

      நீங்கள் நேர்வழி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    • //எனக்கு 5 அறிவு என்றே வைத்துக்கொள்ளலாம். //

      நீங்கள் ஐந்தறிவு படைத்தவர் என்று என்றுமே நான் சொல்லவில்லை. உங்களுக்கு கேள்வி கேட்கும் அறிவும், இந்த உலகின் செல்வமும், நல்ல உடல் ஆரோக்கியமும் இறைவன் கொடுத்திருக்கும் பொழுது, உங்களை ஐந்தறிவு படைத்தவர் என்று கூற எனக்கு என்ன தகுதி இருக்கிறது சகோ?

      நான் பொதுவான கருத்தைதான் சொன்னேனே தவிர யாரையும் புண்படுத்த அல்ல.

      // 5 அறிவு படைத்த மனிதனே கேலி செய்யுமளவுக்கு உள்ள மார்க்கத்தை பின்பற்றுவதற்கு எத்தனை அறிவு வேண்டும்.//

      கேலி செய்ய அறிவு தேவை இல்லை. அதில் உள்ள உண்மையை பகுத்தரியவே ஆறாம் அறிவு தேவைபடுகிறது. இஸ்லாத்தின் மகத்துவமும் நேர்மையும் நான் புதிதாக சொல்ல தேவை இல்லை. உங்களுடைய கேள்விகளை உண்மை அறியும் தன்மை கொண்டு கேளுங்கள். அதைத்தான் சொல்கிறேன். நீங்கள் சொன்னால் சான்று கேட்கிறீர்கள், சான்று காட்டினால், 9ஆம் தர முல்லா என்று கேலி செய்கிறீர்கள். நான் என்ன செய்ய முடியும்?

  25. இங்கு என்னோடு விவாதிட்ட அனைத்து மாற்று மத சகோதரர்களுக்கும், உங்களோடு விவாதம் செய்து ஜெயிப்பது என்னோட நோக்கம் இல்லை. நீங்கள் உண்மை உணர்ந்து சத்திய மார்கத்தில் வர வேண்டும். அது தான் என்னோட நாட்டம்.

    இதில் என்னுடைய கருத்து உங்களையோ நீங்கள் சார்ந்து இருக்கும் துறையையோ அல்லது மதத்தையோ புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.

    நீங்கள் அனைவரும் திறந்த மனதுடன் இஸ்லாம் பற்றி தெரிந்து கொண்டு, இது போல இஸ்லாத்தில் இல்லாத விஷயங்கள் நடந்தால் அதை தட்டி கேட்ட வேண்டும்.

    இஸ்லாத்தில் இல்லாத விஷயங்கள் இஸ்லாத்தோடு சம்பந்தபடுத்தி சொல்வது மிக பெரிய புரளி தவிர வேறொன்றும் இல்லை.

  26. “உங்கள் காதுகளும், கண்களும், உண்மையை அறிந்து கொள்ளும் சக்தியற்றுவிட்டால், நான் என்ன செய்ய முடியும்.”

    சீல் வெச்சது அல்லாதானே ? அப்போ மத்தவங்க கேட்காவிட்டால் யார் பொறுப்பு ? எதற்காக இவ்வளோ மெனக்கெடுகிறீர்கள் ? நீங்க பேசி சீல் எடுக்கப்படும்னு நம்புறீங்களோ ? சீல் வெக்கறதும் எடுக்கறதும் அல்லாவோட வேலையாச்சே ? நீங்க ஏன் எடைல பூர்ரிங்க.

    அதுசரி, உண்மையெ அல்லா சொல்லுவாரு, அது கேட்காதபடிக்கு காத அடைச்சிருவாரு, பாக்காதபடிக்கு கண்ண கட்டிருவாரு. எல்லாம் சென்ஜிட்டு நீ ஏன்டா கேக்கல பாக்கலனு எரிச்சி தோல் குடுத்து மறுபடியும் எரிப்பாரு.

    இதுல யாரு லூசு ? அல்லாவா இல்ல அவரோட ஏஜென்டா ?

    • முதலில் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுடைய பதில் கருத்தில் மட்டும் இருக்கட்டும். அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்.

      அல்லாஹ் யாருக்கும் அநீதி இழைக்கமாட்டார். மக்கள் திருந்துவதற்கான சந்தர்ப்பம் நிறைய கொடுப்பார். இந்த விவாதங்களே பலருடைய மனங்களை உண்மை அறிந்து கொள்ள தூண்டி இருக்கலாம்.

      //நீங்க ஏன் எடைல பூர்ரிங்க.//

      என்னுடைய பணி உண்மையை சொல்வதே. மக்களின் அறியாமையை என்னால் ஆன மட்டும் போக்க முயற்சிக்கிறேன். அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியின் பக்கம் திருப்புகிறான். தான் நாடியவர்களை வழி கேட்டிலே விட்டு விடுகிறான்.

      மக்கள் தங்கள் பகுத்தறிவு கொண்டு இறைவனை புரிந்து கொள்கிறார்களா அல்லது தங்களுடைய மனம் செல்கின்ற போக்கில் செல்கிறார்கள என்று பார்க்கிறான்.

      இந்த பதில்களை நீங்கள் மட்டுமே பார்க்கவில்லை. அனைவரும் படிக்கின்றனர். யார் இதில் நேர்வழி பெறுகிறார்கள் என்பது அந்த இறைவன் ஒருவனுக்கே தெரியும்.

  27. ///இந்த உலகத்தில் ஒருவன் பணக்காரனாக,ஒருவன் ஏழையாக,ஒருவன் ஆரோக்கியவானாக ஒருவன் மாற்று திரனாளியாக பிறந்தது எல்லாமே அவர் அவருக்கு இறைவன் கொடுக்கும் தேர்வு///

    ஒருவர் இஸ்லாமியராக,ஒருவர் காபிராக பிறந்தது அவர்களுக்கு இறைவன் கொடுக்கும் தேர்வா? இல்லையா?

    • நீங்கள் முதலில் முஸ்லிமுக்கும் காபிருக்கும் பொருள் அறிய வேண்டும்.

      முஸ்லிம்: ஒரே இறைவன் என்ற உண்மை அறிந்து அவனுக்கு கட்டுபடுடல்.
      காபிர்: ஒரே இறைவன் என்ற உண்மை அறிந்தும், தன்னுடைய அகம்பாவத்தால் ஒரு இறைவனுக்கு அடிபணிய மறுப்பது.

      யாரையும், இவர் காபிர் இவர் நரகத்திற்குத்தான் போவார் என்று சொல்ல எந்த முஸ்லிமுக்கும் அனுமதி இல்லை. அவர் அவர் செய்த செயல்கள், அவர்களை படைத்த இறைவன் அறிவான். அவன் அவர்களுக்கு மறுமை நாளில் கூலி கொடுப்பான்.

      இப்போது உங்கள் கேள்விக்கு வருவோம்:
      //ஒருவர் இஸ்லாமியராக,ஒருவர் காபிராக பிறந்தது அவர்களுக்கு இறைவன் கொடுக்கும் தேர்வா? இல்லையா?//
      நான் மேலே சொன்ன விளக்கத்திற்கு ஏற்ப ஒவ்வொரு குழந்தையும் இந்த மண்ணில் பிறக்கையில், ஒரே இறைவனை ஏற்கின்றது. ஆனால், அவர்களுடைய குடும்ப சூழல் காரணமாக, ஒரே இறைவனை வழிபடும் அல்லது பல இறை கொள்கையோடு வளரும்.

      ஒவ்வொருவருக்கும் இறைவன் பகுத்தறிய அறிவு தந்துள்ளான். அக்குழந்தை பகுத்தறியும் வயதை அடையும் முன்பு இறந்துவிட்டால், அக்குழந்தை ஒரு இறைவனை வணங்கியதாகவே கருதப்படும்.

      ஒருவர் பகுத்தறியும் வயதை அடைந்த பின்னரும், ஒரு இறைவனை வணங்க வேண்டும் என்ற உண்மை தனக்கு தெரிந்த பின்னரும், தன்னுடைய சுய லாபத்திற்காக, உலக ஆசைக்காக, கட்டுபாடின்றி வாழ்வதற்காக, கேள்வி கணக்கு பற்றி பயமில்லாமல் யாதொரும் தவறும் செய்வதற்காக ஒரு இறைவனை மறுத்து வந்து அதே நிலையில் இறந்து விட்டால், அவரே காபிராக கருதப்படுவார்.

      ஆனால், இறைவன், தான் நாடியவருக்கு நேரான வழியை எப்பொழுது வேண்டுமானாலும் தர வல்லவன். மேலே கூறிய ஒருவன், இறக்கும் முன், இறைவன் அவனுக்கு நேர்வழி தந்து, அவன் இறக்கும் முன், ஓர் இறை கொள்கையில் வந்து, தான் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டால், எல்லாம் வல்ல இறைவன் தான் நாடினால், அவனுக்கு மன்னிப்பு தர வல்லவன்.

      அந்த மனிதன் நேரான வழியில் வருகிறானா அல்லது தவறான வழியிலியே இருக்கிறானா என்பதே அவனுடைய தேர்வு.

      இதனாலேயே, யாவரையும் காபிர் என்று சொல்ல இஸ்லாத்தில் மனிதனுக்கு உரிமை இல்லை.

      Hope this answers your question.

      • //காபிர்: ஒரே இறைவன் என்ற உண்மை அறிந்தும், தன்னுடைய அகம்பாவத்தால் ஒரு இறைவனுக்கு அடிபணிய மறுப்பது.//

        பாய் நீங்க இப்படி புழுகலாமா? ஒரே இறைவனை ஏத்துகிட்டு இப்னு அப்துல்லாவ ஏததுக்களனா காஃபிர் இல்லையா?

        • இறைவனுக்கு கட்டுபடுதல் என்றால் என்ன? அவன் சொன்னதை செய்வது. இறைவன் மனிதனுக்கு ஒரு rules book தந்து, இதை கடைபிடிக்க சொல்கிறான். அதுவே குரான்.

          குரான் கடவுளின் வார்த்தையான்னு அடுத்தது கேட்பீங்க. அதை நீங்களே சோதித்து அறிந்து கொள்ளலாம். அல்லது இணையத்திலும் பார்க்கலாம். உடனே குரானில் உள்ள தவறுகள்னு எதாவது தளத்தை கட்டுவீங்க. அதற்கு ஆதாரத்துடன் விளக்கத்தையும் அந்த இணையத்திலேயே இருக்கு. தேடினால் கிடைக்கும்.

          சரி, விஷயதுக்கு வருவோம். இறைவன் தன்னுடைய குர்ஆனில் தந்துள்ளதை நடைமுறைபடுத்துவதெ இறை நம்பிக்கையாளனின் கடமை. குரான்படி நபியை (saws) பின்பற்ற சொன்னால் செய்ய வேண்டும்.

          அதற்கு நீங்க முதல்லே குர்ஆனில் என்ன இருக்கிறதுன்னு தெரிஞ்சிக்க திறந்த மனதுடன் முற்படுங்க. உங்களை படைத்தவனை முதல்ல அறிஞ்சிகுங்க. அப்புறம் எல்லா உண்மையும் தானாகவே தெரியும்.

          • //குரான் கடவுளின் வார்த்தையான்னு அடுத்தது கேட்பீங்க.// ஆமாம் பாய், குருட்டு பூனையா சொன்ன எடத்துல பாய …நான் முழுசா படிச்சி பாத்தேன் பாய், ஒரு சைக்கோ உளறி வச்ச மாதிரி இருக்கு.

            அது சரி, ஜிப்ரீல் அல்லா சொன்னதா சொன்னதுதான குர்ரான், ஜிப்ரீல் வானத்தில இருந்து ரெக்கை கட்டிகிட்டு குதிச்சாருனே வச்சிப்போம், ஜிப்ரீல் உண்மையதான் சொன்னாரு என்ன பாய் ஆதாரம்?

            • அப்பன் பாட்டனை பார்த்து அப்படியே கேள்வி கேட்காமல் மக்கள் சென்று கொண்டிருந்த காலத்தில், இஸ்லாம் மக்களை கேள்வி கேட்டு தெளிவுபெற்று நேர்வழிக்கு வரவைத்தது.
              மனிதர்களின் அறிவுக்கு பொருந்துகிற ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.

              //ஆமாம் பாய், குருட்டு பூனையா சொன்ன எடத்துல பாய//

              அதைதான் நானும் சொல்கிறேன். குருட்டு பூனை போல இறைவன் இல்லைன்னு சொல்லிட்டு இருக்கறீங்க. கொஞ்சம் சிந்திச்சி செயல்படுங்க. இஸ்லாம் ஒருவரையும் குருடர்களை போல பின்தொடர சொல்லவில்லை. உண்மையும் பொய்யும் உங்கள் முன்னாள் தெளிவாக எடுத்துரைத்து பட்டுவிட்டது.

              குரான் அல்லாஹ்வினால் கொடுக்கப்படவில்லை என்றால் அதில் எப்படி அத்தனை அறிவியல் உண்மைகளும் இருக்க முடியும். மலைகளை பற்றி, கருவை பற்றி, பெருவெடிப்பு பற்றி, ஆறுகள் மற்றும் கடலை பற்றி, மேகத்தை பற்றி, இப்படி அடுக்கி கொண்டே போகலாம். இந்த குரானை இறைவன் அல்லாத மற்றொரு மனிதன் தந்து இருந்தால் இதில் ஏராளமான முரண்களை பார்த்து இருப்பீர்கள். ஆனால் இது எந்தவித சந்தேகமும் இன்றி தெளிவாக்கப்பட்டுள்ளது.

              உங்களுக்கு இதுலே என்ன சந்தேகம்?

              • //மலைகளை பற்றி, கருவை பற்றி, பெருவெடிப்பு பற்றி, ஆறுகள் மற்றும் கடலை பற்றி, மேகத்தை பற்றி, இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.// ஆமாம், அறிவியல் கண்டுபிடிக்க கண்டுபிடிக்க,நாமளும் அடுக்கி கொண்டே போகலாம்,இதெல்லாம் குர்ரானு அன்னைக்கே சொல்லிட்டுனு ….

                //இதில் ஏராளமான முரண்களை பார்த்து இருப்பீர்கள்.// பல முரண்களை காமிச்சாலும் ,இதையே இன்னும் எத்தனை காலத்திற்க்கு சொல்லி ஊரை ஏமாற்ற போறீங்க.?

                இப்போதான் செங்கொடி தளத்தில் படித்தேன்,

                “சூரியன் சுருட்டப்படும் போது ,நட்சத்திரங்களை உதிரவைக்கப்படும் போது ”

                – முகமதுவுக்கு சூரியனும் ஒரு நட்சத்திரம் தான் என்பது, நட்சத்திரங்கள் சூரியனை போலவே பெரியது என்பதும் தெரியாததால், நட்சத்திரங்கள் உதிருதாம் .

      • திரு.அமீன்

        உங்களின் நீண்ட விளக்கத்திற்கு நன்றி!

        ///ஒவ்வருவருக்கும் இறைவன் பகுத்தறிய அறிவு தந்துள்ளான்///

        இந்த பின்னுட்டத்தில் அதிக இடங்களில் பகுத்தறிவு என்ற வார்த்தையை பயன் படுத்துகிறீர்கள்.பகுத்தறிவால் இறைவனை அறிய வேண்டும் என்கிறீர்கள்.சாதாரண பகுத்தறிவைவிட மேம்பட்ட பகுத்தறிவுவாதிகளாகிய விஞ்ஞானிகள்தான் பிரபஞ்சம்,உயிர்கள்,எல்லாம் தற்செயல் நிகழ்வால் உண்டானது என்கிறார்கள்.ஒரே இறைவன் அவர்களின் பகுத்தறிவுக்கே புலப்படவில்லையே? மற்றவர்களின் பகுத்தறிவுக்கு எப்படி புலப்படும்?

        • ///இறைவன் தான் நாடியவருக்கு நேரான வழியை எப்பொழுது வேண்டுமானாலும் தரவல்லவன்///

          ///அந்த மனிதன் நேரான வழியில் வருகிறானா அல்லது தவறான வழியிலியே இருக்கிறானா என்பதே அவனுடைய தேர்வு///

          நேர்வழி இறைவனால் வழங்க படுவதா? அல்லது மனிதனாக வருவதா என்று குழப்பம் இல்லாமல் கூறுங்களேன்.

          • இறைவன் மனிதனுக்கு சுயமாக சிந்தித்து செயல்படும் அறிவை தந்ததே அவன் உலகினில் பார்க்கும் சான்றுகளை வைத்து இறைவனை அறிந்து இறைவனுக்கு அடிபணியவே.

            எவன் ஒருவன் தான் பார்க்கும் சான்றுகளை வைத்து இறைவனை அறிய முற்படுகிறானோ அவனுக்கு அல்லாஹ் உண்மையை அறிந்து கொண்டு நேரான வழியில் செல்ல அவனுடைய அறிவை விசாலமாக்குகிறான். எவன் ஒருவன், தன்னுடைய கர்வத்தால், பிடிவாதத்தால், அகம்பாவதால் இறைவனுக்கு அடிபணியாமல் இருக்கிறானோ அவனுக்கு அல்லாஹ் விண்வெளியில் பறக்கும் மனிதனுக்கு இதயத்தை சுருக்குவதை போல சுருக்கி விடுகிறான்.

        • எந்த ஒரு விஞ்ஞானியும் இறைவன் இல்லை என்று மறுக்கவில்லை. இவர்களால் இறைவனை கண்டுபிடிக்க முடியவில்லையே தவிர இறைவனே இல்லை என்று மறுக்க முடியவில்லை.

          உதாரணத்திற்கு, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னது “Science without religion is lame, religion without science is blind.”
          டார்வினின் கொள்கையும் தியரி மட்டுமே அன்றி ப்ராக்டிகல் இல்லை.

          உங்களிடம் ஒரு கேள்வி.
          ஒன்றும் இல்லாத பாலைவனத்தில் ஒரு பெரிய மாளிகை கட்டி அதில் அனைத்து மேஜை நாற்காலி வகைகள் அடுக்கி, மாடி மேலே ஒரு குட்டி விமானமும் வைத்து, மாளிகைக்குள் ஒரு அதி நவீன கணினியும் வைத்து, வாசலில் ஒரு bmw car வைத்து விட்டு, இது எல்லாம் தானாகவே தற்செயலாக இங்கே வந்துவிட்டது என்று சொன்னால் எந்த ஒரு ஆறறிவு படைத்த மனிதனும் ஏற்றுக்கொள்வானா?
          நீங்கள் சொல்லும் அந்த தற்செயல் நிகழ்வும் இது போலதான் உள்ளது.

          இறைவன் என்றொருவன் இல்லையென்றால் இங்கே எதுவும் அதன் நிலையில் இருக்காது. அனைத்திற்கும் அதிபதி அவனே. இறைவன் இந்த பிரபஞ்சத்தையும், அதில் உள்ளவற்றையும் எவ்வாறு துல்லியமாக படைத்துள்ளான் என்று எண்ணினால், இவை தற்செயல் அல்ல என்பது புலப்படும்.

          எடுத்துக்காட்டாக மனித கண். அதன் மகத்துவம் அறிய
          http://harunyahya.com/en/Books/2870/miracle-in-the-eye

          நான் முதலில் சொன்னது போல் அல்லாஹ் தன்னுடைய சான்றுகளை மக்களுக்கு நிறைய கொடுத்துள்ளான். மனிதன் அந்த சான்றுகளை வைத்து கடவுளை அறிவதே பகுத்தறிவு. கண்ணால் கண்டு, காதால் கேட்டு அறிவது எப்படி பகுத்தறிவு ஆகும்.

          உதாரணத்திற்கு மூடிய கதவை தொடும்போது வெப்பத்தை உணர்ந்தால், கதவிற்கு அந்த பக்கம் நெருப்பு இருக்கிறது என்று அறிவதே பகுத்தறிவு. நான் நெருப்பை பார்க்கவில்லை அதனால் அங்கே நெருப்பே இல்லை, கதவு தானாக சூடாக இருக்குன்னு சொன்னா இதுக்கு பேரு பகுத்தறிவா?

          • இல்லாத ஒன்றை மறுக்க வேண்டிய அவசியம் இல்லையே பாய். அறிவியாலாருக்கு நிறைய வேலை இருக்கு…அல்லாவாம் ,அவரு படச்சாராம், மொம்மதுனு ஒரு அரபியரு அவருக்கு தூதுவராம், அந்த அரபியருக்கு தூது சொல்ல வானத்துல இருந்து ஒருத்தரு இறங்கி வந்தாராம் , இதெல்லாம் ஒததுக்கணுமாம் இல்லன்னா அந்த அல்லா எண்னை கோப்பறையில் போட்டு வருத்தெடுபாராம் . இத அறிவியலார் இல்லன்னு நிரூபிக்கணுமாம்.

            • சகோ,
              உங்களிடம் ஒரு கேள்வி. ஒரு மிக பெரிய கொள்ளைக்காரன் உலகத்தில் பல அட்டுழியங்கள் செய்து கொண்டு, பல மக்களை கொன்று கொண்டு இருந்தான். அவனுக்கு நீங்கள் எப்படி தண்டனை கொடுப்பீர்கள். அவன் நன்றாக வாழ்ந்துவிட்டு செத்துவிடுவான். உங்கள் கூற்றுப்படி மறுமை இல்லை என்றால், அவன் எவ்வாறு தண்டனை பெறுவான், அவனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்?

              அல்லாஹ் 1,24,000க்கு மேல் நபிமார்களை உலகத்தில் அனுப்பி உள்ளான். முகம்மது (ஸல்) இறுதி தூதர். அனைவரும் ஓர் இறை கொள்கையையே வலியுறுத்தி உள்ளனர்.

              இந்த உலகில் நீங்கள் எப்படி வந்தீர்கள் என்று கேட்டால், உங்கள் தாய் மற்றும் தந்தையை காட்டுவீர்கள். ஒரு குழந்தை தன்னுடைய தாய் மற்றும் தந்தையை குழந்தை பருவத்திலேயே இழந்துவிட்டு, நீ எப்படி வந்தாய் என்று கேட்டால், தற்செயலாக வந்து விட்டேன். தாய் தந்தை யாரும் இல்லாமல் நானே தற்செயலாக உருவானேன் என்று கூறினால், உங்களால் ஏற்க முடியுமா? நீங்களும் அதே நிலையில்தான் உள்ளீர்கள்.

              நீங்கள் குரானை இறைவனுடைய வார்த்தையாக ஏற்கிறீர்கள? இறைவனே இல்லை என்று சொல்கிறேன் அப்புறம் இறைவனுடைய வார்த்தை எங்கே வந்தது என்று கேட்பீர்கள். உங்களிடம் அடுத்த கேள்வி. இது இறைவனுடைய வார்த்தை இல்லை என்றால், 1400 வருடங்கள் கழித்தும் இதில் ஒரு தவறையும் கண்டு பிடிக்க முடியவில்லையே எப்படி?

              ஒரு காலத்தில் மந்திர தந்திரம் பரவலாக இருந்தது. அப்போது குரான் எல்லாத்தையும் விட மிக சிறந்த மந்திரங்கள் இருந்ததாக கருதப்பட்டது. பிறகு, கவிதைகளின் காலம், அப்போதும் குரான் மிக சிறந்த கவிதையாக கருதப்பட்டது. இப்போது அறிவியலின் காலம். இன்றும் குரான் தலை சிறந்த அறிவியல் புத்தகமாக கருதப்படுகிறது. நாளை என்ன இருக்குமோ, கண்டிப்பாக குரான் அதிலும் மிஞ்சும் விதமாகவே இருக்கும். ஆனால், அப்போது நாம் இருக்க மாட்டோம்.

              நீங்கள் கடவுள் நம்பிக்கை இருக்கும் வீட்டில் பிறந்து இருக்கலாம், இப்போது உங்களுடைய அறிவாள் சிந்தித்து கடவுள் இல்லை என்ற நிலைக்கு வந்துள்ளீர். நீங்கள் இன்னமும் நிறைய சிந்திக்க வேண்டும். குரானை படியுங்கள். அதில் உள்ள ஞானத்தை அறிந்து கொள்ள முற்படுங்கள்.

              நீங்கள் கடவுள் மறுப்பாளராக வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் கடவுள் மறுப்பாளராக இறந்து விடாதீர்கள்.

        • //இந்த பின்னுட்டத்தில் அதிக இடங்களில் பகுத்தறிவு என்ற வார்த்தையை பயன் படுத்துகிறீர்கள்.பகுத்தறிவால் இறைவனை அறிய வேண்டும் என்கிறீர்கள்.சாதாரண பகுத்தறிவைவிட மேம்பட்ட பகுத்தறிவுவாதிகளாகிய விஞ்ஞானிகள்தான் பிரபஞ்சம்,உயிர்கள்,எல்லாம் தற்செயல் நிகழ்வால் உண்டானது என்கிறார்கள்.ஒரே இறைவன் அவர்களின் பகுத்தறிவுக்கே புலப்படவில்லையே? மற்றவர்களின் பகுத்தறிவுக்கு எப்படி புலப்படும்?//

          தவளை தவ்வி (தாவி) தவ்வி தான் செல்லும் ஆனால் அதனால் முகட்டுக்கு தாவ முடியாமல் போவதால் முகடு இல்லை என்று ஆகிவிடுமா?

          அணுவை பிளக்க முடியாது என்றார்கள் பின்பு ஒருவர் வந்து அணுவை பிள்ந்தார்

          • ஜவகர்,

            நான் என்ன கேக்கிறேன்னு புரியுதா இல்லையா? விஞ்ஞானிகள் சொன்னதால கடவுள் இல்லேன்னு சொல்லல.விஞ்ஞானிகள் பகுத்தறிவுக்கு ஏன் அல்லா தெரியலன்னு கேக்கிறேன்?

            அவங்க காபிர் தானேன்னு கேட்கிறேன்.மறுமையில் அவங்களுக்கு என்ன தண்டனைனு கேட்கிறேன்?

          • //அணுவை பிளக்க முடியாது என்றார்கள் பின்பு ஒருவர் வந்து அணுவை பிள்ந்தார்// அது தான் அறிவியல். முன் முடிவுகள் அற்றது.ஆராய்ந்து கொண்டே இருக்கும்.அறிவியல் என்பதை விட அதுதான் மனித அறிவின் இயல்பு. மனித வரலாற்றின் பரிணாம வளர்ச்சியே அதன் அடிப்படையில் தான். இதையே “அணுவை பிளக்க முடியாது” என்று முகமது சொன்னாருணு வச்சிப்போம் . இன்னமும் நீங்க எல்லாம் அணுவை பிளக்க முடியாதுன்னு நம்பிகிட்டு இருப்பீங்க.

            • அதைத்தான் நாங்களும் சொல்கிறோம். அறிவியல் மனிதனின் கண்டுபிடிப்பு. அது மனித மூளைக்கு ஏற்ப மட்டுமே வளரும். அதில் இருக்கும் தவறுகள் மனிதனின் வளர்ச்சிக்கு ஏற்ப மாறிக்கொண்டிருக்கும்.

              ஆனால், குரான் இறைவனின் வேதம். அவன் அனைத்தும் அறிந்தவன். அதனாலேயே அவனுடைய புத்தகத்தில் எந்த தவறுகளும் எந்த காலத்திலும் கண்டுபிடிக்க முடியாது.

              உங்கள் உதாரணதிருக்கெ வருவோம்.

              குர்ஆனில் அணுவை பிளக்க முடியும் என்று எழுதி இருக்கென்று வைத்து கொள்வோம். சுமார் 100 வருடங்களுக்கு முன் வரை நீங்கள் என்ன சொல்லி கொண்டிருந்தீர்கள். அணுவை பிளக்க முடியாதுன்னு. அப்போ குர்ஆனில் தவறு இருக்குன்னு சொல்லி இருப்பீங்க. இப்போ அறிவியல் வளர்ந்த அப்புறம் குரான் உண்மைன்னு நிருபணமாகி இருக்கும்.

              அதே போல, குர்ஆனில் இருக்கும் எல்லாமும் மெய்பிக்க நம்முடைய கால அறிவியல் வளரவில்லை. இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு பிறகு, இன்னும் நிறைய குரானுடைய செய்திகள் அறிவியல் உண்மைபடுத்தும்.

              ஆனால், அப்போது குரானையும் அதை தந்த அந்த இறைவனையும் வழிபட நானும் நீங்களும் உயிருடன் இருக்கமாட்டோம்.

              அதனாலேயே, நாம் இந்த உலகில் இருக்கும் பொழுதே இறைவனின் சான்றுகளை வைத்து நம்முடைய பகுத்தறிவு கொண்டு, இறைவனை அறிந்து, அவனை மட்டுமே வழிபட வேண்டும்.

              சரிதானே?

              • பாய் கொஞ்சமாவது லாஜிக்க பேசுங்க…

                //அதில் இருக்கும் தவறுகள் மனிதனின் வளர்ச்சிக்கு ஏற்ப மாறிக்கொண்டிருக்கும்… // முடிவுகள் மாறும். இது விரிவாக பேச வேண்டியது.

                //ஆனால், குரான் இறைவனின் வேதம். அவன் அனைத்தும் அறிந்தவன். //

                இதுக்கு என்ன பாய் ஆதாரம்.

                //அதனாலேயே அவனுடைய புத்தகத்தில் எந்த தவறுகளும் எந்த காலத்திலும் கண்டுபிடிக்க முடியாது.// ஏற்க்கனவே கண்டுபிடிச்சி பல பேரு குர்ரனுடைய டவுசர அவுத்துதாங்க பாய்.

                //இப்போ அறிவியல் வளர்ந்த அப்புறம் குரான் உண்மைன்னு நிருபணமாகி இருக்கும்.// குரான் பொய் ஆன நிகழ்வுகள் நிறைய இருக்கு பாய். அதுல ஒண்ணுதான் , “சூரியன பாயா சுருட்துறதும், நட்சத்திரங்களை உதிர வைப்பதும்.”

                //இன்னும் நிறைய குரானுடைய செய்திகள் அறிவியல் உண்மைபடுத்தும்.// ஏன் , நீங்க இப்போவே அறிவிக்கலாமே …அறிவியல் அறிவிச்சா உடனே பிராக்கெட்டு போட்டு , இத நாங்க அன்னைக்கே சொன்னோம் என்று கத விடுறது.

                • //பாய் கொஞ்சமாவது லாஜிக்க பேசுங்க…//
                  உங்கள் பகுத்தறிவு தலைவர்களுக்கு சிலை வைத்து, வருடாவருடம் அந்த சிலைக்கு மாலையும் அணிவித்து, சிலைக்கும் முன் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தும் பகுத்தறிவுவாதிகள் லாஜிக்கை பற்றி பேச கூடாது..

                  //ஆனால், குரான் இறைவனின் வேதம். அவன் அனைத்தும் அறிந்தவன். இதுக்கு என்ன பாய் ஆதாரம். //
                  குரான் இறைவனின் வேதம் என்பதற்கு அந்த குரானே ஆதாரம். 1400 வருடங்களுக்கு முன் வாழ்ந்த மனிதன் எழுதவேண்டுமானால், அது என்றோ பொய்த்திருக்கும். குரானை இறைவன் தந்ததாலேயே இந்த நாள் வரைக்கும், இனி வரும் காலமும் குரானை பொய்பிக்க முடியாது.

                  //ஏற்கனவே கண்டுபிடிச்சி பல பேரு குர்ரனுடைய…….//
                  நீங்கள் ஒரு சமூகத்தவருடைய உயிரினும் மேலான மத நூலை பற்றி விவாதிக்கின்ற பொழுது, உங்கள் கருத்துக்கள் கண்ணியமாக அமைய வேண்டும். இது போல் கீழ்த்தரமாக வார்த்தைகளை பதிவிடுவது உங்கள் சிந்தனை கேவலமாக இருப்பதைப்போல காட்டுகிறது. கருத்துகளில் பலமில்லாத பொழுது, கீழ்தர வார்த்தைகளை உபயோகிப்பது சாதாரண மனிதர்கள் செய்வது. உங்களை போல் பகுத்தறிவுவாதி என்று சொல்லிக்கொள்பவர் செய்யலாமா?

                  குரானை பொய் என்று ஆதாரடுடன் நிரூபிக்க முடியாம நிறைய பேரு சும்மா வாய் சவடால் செய்து கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவரே முன்னே சொல்லப்பட்ட அலி சினா.. இவருடைய கேள்விகளும் கருத்துகளும் முன்னமே உடைத்தெறிந்து பட்டுவிட்டது. ஆதாரம், நான் முன்னே பதிவிட்ட லிங்க் பார்க்கவும்.

                  ஏற்கனவே சொல்லிடாங்க, ஏற்கனவே சொல்லிடாங்கன்னு சும்மா சொல்வதைவிட, ஏதாவது உருப்படியா சொன்ன நல்லா இருக்கும்.

                  உங்ககிட்ட நேரிடைய நான் சில கேள்விகள் கேட்டேன். இன்று வரைக்கும் பதில் காணோம்.

                  //“சூரியன பாயா சுருட்துறதும், நட்சத்திரங்களை உதிர வைப்பதும்.”//
                  இது உலகம் அழிஞ்ச பிறகு நடக்கும் நிகழ்வு. உலகம் அழியும் என்பதையே நம்பாத பகுத்தறிவுவாதிகள், உலகம் அழிந்த பிறகு நடக்கும் செயல்களைப்பற்றி நம்பவா போகிறீர்கள்?

                  //நீங்க இப்போவே அறிவிக்கலாமே …அறிவியல் அறிவிச்சா உடனே பிராக்கெட்டு போட்டு , இத நாங்க அன்னைக்கே சொன்னோம் என்று கத விடுறது.//

                  குர்ஆனில் முன்பு இல்லாத விஷயம், பிறகு சேர்கப்பத்தடுன்னு உங்களாலே ஆதார பூர்வமாக சொல்ல முடியுமா?

                  அறிவியல் கருவை பற்றி இன்று கூறியதை குரான் அன்றே சொல்லிவிட்டது. அது உங்களுக்கு இடைசொருகளா?

                  அறிவியல் தேனீ பற்றி இன்று கூறியதை குரான் அன்றே சொல்லிவிட்டது. அது உங்களுக்கு இடைசொருகளா?

                  அறிவியல் நிலவு பிளந்திருபதை இன்று கூறியதை குரான் அன்றே சொல்லிவிட்டது. அது உங்களுக்கு இடைசொருகளா?

                  அறிவியல் இரண்டு கடல்களுக்கு இடையே திரை இருப்பது என்று இன்று கூறியதை குரான் அன்றே சொல்லிவிட்டது. அது உங்களுக்கு இடைசொருகளா?

                  அறிவியல் மலைகள் இந்த பூமி ஆடாமல் இருக்க வைக்கப்பட்டது என்று இன்று கூறியதை குரான் அன்றே சொல்லிவிட்டது. அது உங்களுக்கு இடைசொருகளா?

                  அறிவியல் விண்வெளியில் செல்லும் மனிதனின் இதயம் சுருங்கும் என்று இன்று கூறியதை குரான் அன்றே சொல்லிவிட்டது. அது உங்களுக்கு இடைசொருகளா?

                  மேலும் கீழே கொடுக்கப்பட்ட லிங்கில் இருக்கும் எந்த விஷயம் முன்பு குர்ஆனில் இல்லாமல் பிறகு சொருகப்பட்டது என்று ஆதாரமாக சொல்ல வேண்டும். இவன் சொன்னான், அவன் சொன்னான் என்று சப்ப கட்டு கட்டாமல், உருப்படியாக ஆதாரத்தை காட்டுங்கள் சகோ.

                  http://www.miraclesofthequran.com/scientific_index.html

                  உலகம் அழியும் முன்பு சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் என்று குர்ஆனில் இருக்கிறது. அதுவும் நடந்த பிறகு, குர்ஆனில் பிறகு சேர்த்தீர்கள் என்று சொல்வீர்களா?

                  நபி இசா இப்ன் மரியம் (pbuh) உலகிற்கு வருவார்கள் என்று இருக்கிறது. அதுவும் நடந்த பிறகு, குர்ஆனில் பிறகு சேர்த்தீர்கள் என்று சொல்வீர்களா?

                  இது போல் இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.

                  இவர்கள் சொன்னார்கள், அவர்கள் சொன்னார்கள் என்று நீங்கள் வழிகெடுவதைவிட, உங்களுக்கு உங்களை படைத்த இறைவன் கொடுத்த பகுத்தறிவை கொண்டு ஆராய முற்படுங்க. மறுமையில் உங்களுடைய செயல்களுக்கு நீங்களே பொறுப்பு, இன்று உங்களை வழி கெடுக்கும் யாரும் உங்களை அங்கே காப்பாற்ற போவதில்லை.

                  உங்களின் வறட்டு கவுரவம் பாதிக்கப்படும் என்று எண்ணாதீர்கள். வறட்டு கவுரவம் உங்கள் பகுத்தறிவை பாதித்தால், அந்த வறட்டு கவுரவத்தை விடுவதே மேல்.

                  • tell me how many pages in quran and how many pages is given to science in that science how many pages for astronomy,chemistry,physics,biotechnology,and how many pages is about technology.if every thing there in quran read about the medicine for AIDS and CANCER .

                    • To Nagaraj,

                      Did I ever claimed that all science is available in Quran. I was saying all this time that whatever in Quran is scientifically true. Understand?

                      Quran is not the book of Science. It is the book of Signs. Quran has more than 6,000 sentences and in them more than 1,000 deals with science.

                      I am claiming that all these verses said in Quran cannot be denied even in today’s modern Science. I am also claiming that a man before 1,400 years couldn’t have written all these by himself. It proves that Quran is from the Creator of this Universe and who maintains everything in it.

                      Can you show from my comments that I had claimed all scientific facts are available in Quran??

                  • ஆன்மீக நன்னெறி நூலில் அறிவியல் கேள்விகளுக்கு விடை தேடாதீங்க அமீன் பாய். நீங்களாகவே வலைக்குள்ளே மாட்டிக்காதீங்க. குர்ஆன் உங்களை நல்ல மனிதனாக உருவாக பயன்பட்டதா, சந்தோஷம், அடுத்தவரை மதிக்க கற்று கொடுத்ததா, நம்மால் ஆனா உதவியை மற்றவர்களுக்கு செய்யத்தூண்டியதா, மாற்று கருத்து உடையோரையும் மதித்து நடக்க கற்றுக்கொடுத்ததா, நல்லது, அது போதும் அமீன் பாய். அதை விடுத்து அனைத்து அறிவியல் கேள்விகளுக்கும் குர்ஆனில் பதில் உள்ளதுன்னு சொல்லி நீங்களே சொந்த செலவிலே சூனியம் வைச்சிக்காதீங்க 🙂 அப்புறம் நீங்க காலத்துக்கும் இந்த வலையில் விளக்கம் கொடுத்தே தளர்ந்துடுவீங்க. தனி ஆளாய் இத்தனை பேருடைய கேள்விகளுக்கும் பதிலளிக்கும் உங்களது பொறுமையை பாராட்டுகிறேன். அதே சமயம் உங்களது ஆர்வ மிகுதியில் எல்லோரும் உங்களை கிண்டல் செய்யும் வகையில் சில சமயம் பதிலளித்து விடுகிறீர்கள். உங்கள் கடவுளை நம்பாதவர்களுக்கும், உங்கள் கருத்துக்களை ஒத்துக்கொல்லாதவர்களுக்கும் இந்த உலகத்தில் இடம் உள்ளது. உங்கள் கடவுள் உங்களுக்கு mukkiyam, உங்கள் கருத்துக்கள் உங்களுக்கு சரி. எல்லோரும் நீங்கள் வணங்கும் கடவுளை வணங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, உங்கள் கருத்துகளுக்கு ஆமாம் சாமி போட வேண்டும் என்ற அவசியம் இல்லை. May Peace be upon you. ஆக வேண்டிய வேலைகளை பாருங்கள்.

                    • கற்றது கையளவு பாய்,

                      நாகராஜ் அவர்களுக்கு கூறிய பதிலிலேயே உங்களுடைய கேள்விக்கும் பதில் இருக்கிறது.

                      //அதை விடுத்து அனைத்து அறிவியல் கேள்விகளுக்கும் குர்ஆனில் பதில் உள்ளதுன்னு சொல்லி//
                      அனைத்து அறிவியல் கேள்விகளுக்கும் குர்ஆனில் பதில் இருக்கிறதுன்னு நான் சொன்னேனா? நான் சொல்லாத வாக்கியத்தை நான் சொன்னதாக சொல்வது உங்களுக்கே நல்லதா? உங்களால் நீங்க சொன்ன அவதுறை நிரூபிக்க முடியுமா?

                      //அதே சமயம் உங்களது ஆர்வ மிகுதியில் எல்லோரும் உங்களை கிண்டல் செய்யும் வகையில் சில சமயம் பதிலளித்து விடுகிறீர்கள்.//
                      நான் சொல்லும் பதில்களில் தவறுகள் இருந்தால், எது என்பதை தெளிவாக குறிப்பிடலாம். அதை இங்கே ஒருவரும் செய்யவில்லை.. ஆனால் அதை பரிகசிக்கும் பகுத்தறிவுவாதிகள் யாரும் என்னுடைய கேள்விகள் ஒன்றுக்கும் பதில் அளிக்கவில்லை என்பதை பார்க்கும் போது, இவர்களுடைய பகுத்தறிவின் எல்லையை கண்டு சிரிப்பு வருகிறது.

                      //உங்கள் கடவுளை நம்பாதவர்களுக்கும், உங்கள் கருத்துக்களை ஒத்துக்கொல்லாதவர்களுக்கும் இந்த உலகத்தில் இடம் உள்ளது.//
                      மறுபடியும் உங்களுடைய சித்தாந்தத்தை நான் சொல்வதாக சொல்கிறீர்கள். என்னுடைய இறைவனை நம்பாதவர்களுக்கும், என்னுடைய கருத்துகளை நம்பாதவர்களுக்கும் இந்த உலகத்தில் இடம் இல்லை என்று நான் சொன்னேனா?

                      //உங்கள் கடவுள் உங்களுக்கு mukkiyam, உங்கள் கருத்துக்கள் உங்களுக்கு சரி. எல்லோரும் நீங்கள் வணங்கும் கடவுளை வணங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை,//
                      நீங்கள் அனைவருது கருத்துகளையும் படிதீர்களான்னு எனக்கு தெரியலை. இந்த கட்டுரையும், இங்கே மேலே பலர் தந்த கருத்துகளுக்கும் இஸ்லாமை பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் எழுதப்பட்டு இருந்தது. இந்த கட்டுரையில் தனி மனிதன் செய்த தவறை, என்னவோ இஸ்லாம் செய்ததாக சொல்லப்பட்டு இருந்தது. இது மக்களிடம் தவறான கருத்தை கொண்டு செல்கிறது.

                      இஸ்லாம் பற்றி நமக்கு இன்னும் சரியான புரிதல் இல்லை. இன்றைய மீடியாவும், செய்திகளும், திரைப்படங்களும் இஸ்லாமிற்கு எதிராக புனையபடுகிறது. செய்திதாள்களில் வரும் அனைத்து செய்திகளும் உண்மைன்னு நினைக்கிற பாமர மக்கள், இஸ்லாம் பற்றி தவறான சிந்தனைகள் பெறுகின்றனர்.

                      உதாரணம்: தீபாவளிக்கு பொம்மை துப்பாக்கி வைத்து விளையாடும் முஸ்லிம் சிறுவனை பார்த்து, என்ன இப்போவே ட்ரைனிங் எடுக்கிரியானு நகைப்பதும், தாடி வைத்தவர்கள் எல்லாரும் தீவிரவாதிகளாக சித்தரிப்பதும் இங்கே நடந்து கொண்டிருக்கிறதை உங்களால் மறுக்க முடியுமா?

                      //உங்கள் கருத்துகளுக்கு ஆமாம் சாமி போட வேண்டும் என்ற அவசியம் இல்லை//
                      என்னுடைய கருத்துகளுக்கு ஆமாம் சாமி போட சொல்லி நான் யாரையும் கேட்கவில்லை. இஸ்லாமின் மீது தவறாக அவதூறு சொல்ல வேண்டாம்னு தான் சொல்கிறேன்.

                      //ஆக வேண்டிய வேலைகளை பாருங்கள்//
                      இந்த கட்டுரையை எழுதிய ஆசிரியர், அந்த பல்கலைகழகம் செய்த தவறை சுட்டி காட்டி இருந்தால், எனக்கு இங்கே எந்த வேலையும் இல்லை. தவறு செய்தவர்களின் தவறை உலகிற்கு கொண்டு வருவது செய்தியாளர்களின் பணி. அது நல்லதே.
                      ஆனால், இங்கே என்னவோ இஸ்லாம் அந்த தவறை செய்ய சொன்னது போலவும், இஸ்லாம் மதத்தை பின்பற்றும் முஸ்லிம்கள் என்னவோ காட்டுமிராண்டிகள் போலவும் சித்தரித்திருப்பதும் கண்டனத்துக்குரியது.
                      அதே போல, இங்கே ஒரு ஹிந்து கடவுள் அல்லது கிருத்துவ கடவுளை மையப்படுத்தி எழுதி இருந்து, அதை ஒரு ஹிந்து சகோதரனோ அல்லது கிருத்துவ சகோதரனோ தட்டி கேட்டால் அது அவர்களின் உரிமை.
                      இங்கே கருத்திடும் அல்லது வாதிடும் மக்களுக்கு அதை புரிய வைப்பதே என்னோட நோக்கம்.

                      நன்றி

                    • அமீன் பாய், 1400 வருடங்களுக்கு முன்னர் என்று அங்கேயே இருக்கீங்களே, கொஞ்சம் நிகழ்காலத்திற்கு வாருங்கள். உங்கள் கருத்துப்படி பார்த்தால் திருக்குறள் கூட தான் 1330 குறள் வெண்பாக்கள் மூலம் 2௦௦௦ வருடங்களுக்கு முன்னர் எழுதி இருந்தாலும், அதிலுள்ள அத்தனை குறள்களும் இன்றளவும் பொருந்துகிறது. ஆனால் திருக்குறளில் நாம் அறிவியல் கேள்விகளுக்கு விடை காண்கிறோமா என்ன? இல்லை திருக்குறளை எழுதியது கடவுள் என்று கூறுகிறோமா, இல்லை திருவள்ளுவரை இறை தூதர் என்றும் இறைவன் சொல்ல சொல்ல திருவள்ளுவர் திருக்குறளை எழுதினர் என்று சொல்கிறோமா? தம் கட்டி தம் கட்டி வாதித்து என்ன ஆகபோகிறது. ஆகிற வேலையை பார்ப்போம் பாய்.

                  • குரானுக்கு ஆதாரம் குர்ரானெவா சூப்பரு …. நான் குர்ரான் குப்பைங்கறேன். இல்லனு நிரூபிக்க நீங்க அதற்க்கான ஆதாரத்தை வரலாற்றின் அடிப்படையிலோ, அறிவியல் அடிப்படையிலோ நிரூபிக்க வேண்டும். உங்க நம்பிக்கை இல் இருந்து ஆராய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

                    //
                    உங்கள் பகுத்தறிவு தலைவர்களுக்கு சிலை வைத்து, வருடாவருடம் அந்த சிலைக்கு மாலையும் அணிவித்து, சிலைக்கும் முன் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தும் பகுத்தறிவுவாதிகள் லாஜிக்கை பற்றி பேச கூடாது..// இதுக்கு பேருதான் உளறுறது. தர்காவில் ஒவிளியாக்களை கும்பிடுவார்கள் ஓரிறை பற்றி பேச கூடாது என்று நான் சொன்னால் எப்படி இருக்கும் அது போல இருக்கு.

                    //இது உலகம் அழிஞ்ச பிறகு நடக்கும் நிகழ்வு. உலகம் அழியும் என்பதையே நம்பாத பகுத்தறிவுவாதிகள், உலகம் அழிந்த பிறகு நடக்கும் செயல்களைப்பற்றி நம்பவா போகிறீர்கள்?//

                    இது எப்போ நடக்க போவது என்பதல்ல கேள்வி, சூரியனே பாயாக சுருட்டப்படும் போது, சூரியனை விட பல மடங்கு பெரிய நட்சத்திரங்கள் எப்படி உதிர வைக்க படுகின்றன ..ஏன் அவைகை பாயாக சுருட்டப்பட வில்லை. இதுக்கு பகுத்தறிவெல்லாம் வேணாம் , சாதாரண குழந்தை அறிவே போதுமானது.

                    • அஷ்வின் அவர்களே,

                      நான் குர்ஆனில் இருந்து கேட்ட ஒரு கேள்விக்கும் உங்களிடமும் உங்களைப்போல் இங்கே பேசிய எவரிடமும் விடை இல்லை. உங்களிடம் இதற்கு மேல் எதையும் எதிர்பார்க்க முடியாதுன்னு தெரியும்.

                      //நீங்க அதற்க்கான ஆதாரத்தை வரலாற்றின் அடிப்படையிலோ, அறிவியல் அடிப்படையிலோ நிரூபிக்க வேண்டும்//
                      நீங்க நான் எழுதிய எல்லா பதில்களும் படித்து விட்டுதான் இங்கே பதிவிடுகிரீர்களா? அல்லது தூங்கி எழுந்து மனதில் தோன்றியதை பதிவிடுகிரீர்களா? நான் குர்ஆனில் இருந்து போட்ட அத்தனை அறிவியல் ஆதாரங்களும் உங்கள் கண்களுக்கு புலப்படவில்லையா? உங்களுக்கு இதுக்கு மேலே சொல்ல உங்களுடைய பகுத்தறிவு புத்தகத்தில் எந்த பதிலும் இல்லை போல இருக்கு.

                      //நான் குர்ரான் குப்பைங்கறேன்.//
                      இது உங்களுடைய கருத்து. உண்மை அறிய வேண்டும் என்று எண்ணுகிருவர்களுக்கு உண்மை விளங்கும். நான் இதற்கு முன் பல தடவை சொல்லியும், நீங்கள் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள். இது உங்களுடைய பகுத்தறிவுக்கு பொருந்தினால், உங்கள் இஷ்டப்படி பேசுங்கள். உங்களை படைத்தவனின் முன் நீங்கள் நிற்கும் போது அதற்கு நீங்களே பதில் சொல்லி கொள்ளுங்கள்.

                      //இது எப்போ நடக்க போவது என்பதல்ல கேள்வி, சூரியனே பாயாக சுருட்டப்படும் போது, சூரியனை விட பல மடங்கு பெரிய நட்சத்திரங்கள் எப்படி உதிர வைக்க படுகின்றன ..ஏன் அவைகை பாயாக சுருட்டப்பட வில்லை. இதுக்கு பகுத்தறிவெல்லாம் வேணாம் , சாதாரண குழந்தை அறிவே போதுமானது.//
                      நீங்கதான் கடவுளே இல்லேன்னு சொல்லுறீங்க. உலகம் அழியாதுன்னு சொல்லுறீங்க. நீங்க செய்யிற எந்த செயலுக்கும் உங்களுக்கு எந்த கேள்வி கணக்கும் இல்லைன்னு சொல்லுறீங்க. அப்புறம் இது எப்படி நடக்கும்னு கேட்டா, மேலே சொன்ன எல்லாம் நடக்கும் போது, இதுவும் நடக்கும். அப்போ பார்த்துக்குங்க.

                      Since you asked about science again, read below para and let me know your answers.

                      We have come to know that the plants have got sexes which we did not know earlier. QURAN says in SURAH TAHA C 20 V 53 that the plants got sexes, males and females. Today we have come to know that there is two types of water, sweet and salty and there is barrier between them which is mentioned in the QURAN in SURAH FURQAN C 25 V 53 and SURAH RAHMAN C 55 V 19 – 20 . مَرَجَ ٱلۡبَحۡرَيۡنِ يَلۡتَقِيَانِ (١٩) بَيۡنَہُمَا بَرۡزَخٌ۬ لَّا يَبۡغِيَانِ IT IS ALLAH WHO HAS LET FREE TWO BODIES OF FLOWING WATER. THOUGH THEY MEET THEY DO NOT MIX. THERE IS A BARRIER BETWEEN THEM. Today’s science tell us that it is the mountains which prevent the earth from shaking which is mentioning in the QURAN 1400 years ago in the SURAH NABA C 78 V 6 and 7. The QURAN speaks about BIOLOGY that WE HAVE CREATED EVERY LIVING CREATURES FROM WATER. EVERY LIVING THINGS. IN SURAH AMBIA C 21 V 30. QURAN mention this 1400 years ago. The QURAN speaks about ZOOLOGY about the life-span of the spiders in SURAH ANKABURT C 29 V 41. About the ants in SURAH AL NAMAL C 27 V 17 to 18. About the bees in SURAH NAHL C 16 V 68-69. The QURAN speaks about EMBRYOLOGY in SURAH ALAQ C 96 V 1-2 . WE HAVE CREATED HUMAN BEINGS FROM ALAKA (A LEECH-LIKE SUBSTANCE) which we have come to know recently. The QURAN speaks about the embryological stages in SURAH MUMINUM C 23 V 12 TO 14. You can go on talking about the scientific point there are more than thousands of verses in the QURAN which speaks about science.

                      That’s the reason Francis Bacon, very famous philosopher said ‘little knowledge of science takes you away from AL MIGHTY GOD. In-depth knowledge of science makes you a believer in GOD. That’s the reason today scientists are not eliminating GOD. The illuminating the models of GOD ‘LA I LAHA ILLAL LAH”.

                      If you still argue that these are mere guesses, you need to revisit your rational thinking. All the best.

                    • அமீன் அவர்களே: சூரியன் என்பதும் ஒரு நட்சத்திரமே. சூரியனை போல பல கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் நம் அண்டசராசரத்தில் உள்ளன. மற்ற நட்சத்திரங்களோடு ஒப்பிட்டு பார்த்தால் சூரியன் அளவில் சிறிய ஒரு நட்சத்திரம் தான். அதனை விட மிகப்பெரிய நட்சத்திரங்களும் உண்டு. சூரியன் பாயாக சுருட்டப்படும் என்பதும் நட்சத்திரங்கள் உதிர வைக்கப்படும் என்றும் குர்ஆனில் உள்ளதாக இங்கே கூறுகின்றனர். எனக்கு தெரியாது. நீங்கள் தான் அது உண்மையா என்று கூற வேண்டும். குர்ஆனை நீங்கள் முழுவதுமாக நம்புகிறீர்கள், அது உங்கள் விருப்பம், அதே சமயம் சூரியனை பாயாக சுருட்டப்படும் என்றும் நட்சத்திரங்கள் உதிர வைக்கப்படும் என்றும் நாங்கள் நம்பவில்லை. அது எங்கள் விருப்பம். குர்ஆனை நீங்கள் முழுமுதற் புத்தகமாக கருதினால் அதனை படித்தால் மட்டும் போதுமா. மற்ற நூல்களையும் படித்தால் தானே நமது அறிவு வளரும். குர்ஆனை மட்டும் படித்தால் மின்அணுவியல் எப்படி உருவாகி இருக்கும். குர்ஆனை மனித மன வளத்திற்கு, சகமனிதரை சகோதரராக கருதுவதற்காக, மனிதர்களுக்குள் சகிப்புத்தன்மை வளர்வதற்காக படியுங்கள். அறிவியலுக்காக அதற்கென்று எழுதிய புத்தகங்களை படியுங்கள். குர்ஆனை மட்டும் படித்தால் அறிவியல் எப்படி வளரும். குர்ஆன், பைபிள், திருக்குறள், இவை அனைத்தும் மனித குலத்திற்கு பயன்படும் நூல்களே. இல்லையென்று நான் சொல்லவில்லை. என்னை பொறுத்தவரை, குர்ஆனில், பைபிளில் இருக்கும் நற்கருத்துக்களை விட திருக்குறளில் அதிகம் நற்கருத்துக்கள் உள்ளன. இது முழுக்க முழுக்க என் கருத்து. மற்றவரை என் கருத்தை ஏற்க செய்யவேண்டும் என்று எனக்கு விருப்பம் இல்லை. தற்போதைய அனைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் குர்ஆன் அன்றே சொன்னது என்று நீங்கள் சொல்வது நாஸ்டர்டாமஸ் எப்போதோ எழுதியது அனைத்திற்கும் தற்கால நிகழ்வுகளோடு ஒப்பிட்டு கூறுவதைப்போல தான். என்னை பொறுத்தவரை குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன் முகம்மது நபி என்ற மனிதரால் சொல்லப்பட்டு அவரது மைத்துனர் அலி அவர்களால் அந்த கால சமுதாய சடங்குகளை கருத்தில் கொண்டு எழுதப்பட்ட நல்லொழுக்க / நன்னெறி நூல். திருக்குறள், ஆத்திச்சூடி போலதான் குர்ஆனும் பைபிளும்,கீதையும்.

                    • //நீங்கதான் கடவுளே இல்லேன்னு சொல்லுறீங்க. உலகம் அழியாதுன்னு சொல்லுறீங்க. நீங்க செய்யிற எந்த செயலுக்கும் உங்களுக்கு எந்த கேள்வி கணக்கும் இல்லைன்னு சொல்லுறீங்க. அப்புறம் இது எப்படி நடக்கும்னு கேட்டா, மேலே சொன்ன எல்லாம் நடக்கும் போது, இதுவும் நடக்கும். அப்போ பார்த்துக்குங்க.//
                      நட்சத்திரம் சின்னதா இருக்கு அதனால உதிருது, நட்சத்திரங்களை அலங்கார விளக்குகளாக படைத்துள்ளோம் போன்ற குர்ரான் வசனங்கள் , அன்றைய மனிதனுக்கு(முகமதுக்கு) வானத்தை பார்த்து ஏற்பட்ட வியப்புகள். அது நடக்குமா என்பதல்ல கேள்வி. எளிய வாக்கியங்களை கூட உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா….இப்படிதான் குரான் பலரால் அம்பலப்படுத்தப்பட்டு விட்டது. ஆனாலும் நீங்க இன்னும் குரான் அன்னைக்கே சொல்லிட்டுனும் ,எவராலும் மறுக்க முடியாதுன்னும் தேஞ்ச ரெகார்ட் மாதிரி சொன்னதையே சொல்லிட்டு இருக்கீங்க.

      • ///////முஸ்லிம்: ஒரே இறைவன் என்ற உண்மை அறிந்து அவனுக்கு கட்டுபடுடல்.
        காபிர்: ஒரே இறைவன் என்ற உண்மை அறிந்தும், தன்னுடைய அகம்பாவத்தால் ஒரு இறைவனுக்கு அடிபணிய மறுப்பது////

        மனிதர்களை படைத்தது இறைவன் என்று கூறுகிறார்கள். அந்த இறைவன் (நபி) ஏன் நல்ல மனிதர்களை படைக்காமல் காபிர்களை படைத்தார். இறைவனுக்கு அடிபணிய மறுத்த காபிர்களை படைத்தது இறைவனின் குற்றமா அல்லது காபிர்கள் இறைவனைக் காட்டிலும் உயர்ந்தவர்களா?
        யார் குற்றவாளி? இஸ்லாமிய உலகம் முழுவதும் சண்டை சச்சரவுகளை உருவாக்கியது யார் குற்றம்? பிறந்து வளர்ந்த மக்களின் குற்றமா அல்லது அந்த மக்களை படைத்த நபிகளின் குற்றமா?

        குரானில் உள்ளதுதான் கடவுளின் வாக்கு!!! இது ஒரு நகைப்புக்கு உரியது. நடைமுறை வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும். அதை விடுத்து குரானில் அப்படி கூறப்பட்டு உள்ளது இப்படி கூறப்பட்டு உள்ளது என்று கூறுவது மனித சமுதாயத்திற்கு ஏற்புடையதல்ல.

  28. தேவார நாயனார், Ashvin, Raman,

    சுத்தி சுத்தி எல்லோரும் ஒரே கேள்விதான் கேட்டுள்ளீர்கள். இதில் எத்தனை பெயர் நாத்திகர், எத்தனை பெயர் ஆத்திகர் என்ற விவரங்கள் சொன்னால், உங்களுக்கு புரிகின்ற மாதிரி பதில் சொல்ல சுலபமாக இருக்கும். சொல்ல முடியுமா?

    • செப்ப்பாஅ முடியல…..எல்லாருக்கும் புரியுற மாதிரி ஒரே பதிலா சொல்லு பாயி…

      • ஆஹா, தம்பிக்கு ஒரு கேள்வி கேட்டவுடனே இவ்வளவு சலிப்பா? உங்களுடைய மார்கத்தை, வழியை, பாதையை சொல்ல உங்களுக்கு வெட்கமாக இருந்தால், சொல்ல வேண்டாம். ஆனால், சத்திய மார்கத்தில் இருப்பவர்கள் என்றுமே உண்மையை சொல்ல தயங்க மாட்டார்கள்.

        வெவ்வேறு நம்பிக்கை கொண்டுள்ள அனைவருக்கும் ஒரே பதில் எப்படி சரியாகும்? உங்களுக்கு இருக்கும் தவறான நம்பிக்கையை முதலில் போக்க வேண்டும். பிறகு உண்மையை சொல்ல வேண்டும். இல்லையென்றால் செவிடன் காதில் ஊதிய சங்கைபோல் அனைத்தும் வீண்.

        மரணத்திற்கு பிறகான வாழ்க்கையில் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்கிறதை பொருத்தே, என்னுடைய பதில் தர முடியும். புரிகிறதா? உங்களுடைய நம்பிக்கையை சொல்ல வெட்கமாக இருந்தால், சொல்ல வேண்டாம். நிர்பந்தம் இல்லை.

        • 2 இந்து, 2 கிருத்துவர், 2 நாத்திகர் இங்க இருக்காங்க .இப்போ சொல்லுங்க பாயி ஒங்க பதில ….இப்போவாவது சொல்லுவிங்களா …இல்ல மண்ணடிக்கு கூப்பிடுவிங்கீளா ?

          • Ashvin,

            நீங்கள் உங்களதை மட்டும் சொல்லுங்க. மத்தவங்களுக்கு நீங்க ஸ்பான்சர் பண்ணாதீங்க. அவங்க அவங்க சொல்லட்டும்.

            இல்ல நீங்கதான் பல பெயர்களில் கமெண்ட் போட்டுட்டு இருகீங்களான்னு சொல்லுங்க.

            • ஒவ்வொருத்தரா வந்து பேரயும், உங்க கொள்கையையும் இங்க வந்து அமீன் பாய்க்கிட்ட வந்து பதிஞ்சிக்கோங்க .அவரு ஒவ்வொருத்தருக்கும் தனி தனியே விளக்கம் கொடுப்பாரு. விளங்கிக்கிட்டு “அல்லா ஒருவனே ..அவனது தூதர் இப்னு அப்துல்லா மொகமது ” ன்னு கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏத்துக்கோங்க…

    • @Ameen

      The questions, I/Others have asked is to spark your brain with reasoning skills. Not to undermine your relegion but rather to puzzles for you to workout

      You are in deep sh1t, we are trying to help you understand.

      As an example,
      A Pig in a drainage enjoys its surroundings. When others laugh at it,It cant understand and it even invites the others to explore the enjoyment, the fun of drainage.

      This is juts an example to point the situation , and not to blame you as pig.
      Now I dont need your reasoning for your fun rather I am proposing you to come out and look at other side of the world

      As a first step , I wan you to read the book A-Short-History-Nearly-Everything

      http://www.amazon.com/A-Short-History-Nearly-Everything/dp/076790818X

      This book will give you an idea as a human spices how we are struggled to understand the environment scientifically

      After reading this book , lets see if anything sparks …

      Nope, I dont need your green book of everything

      Thanks

      • @Raman,

        I don’t want to reply anything about your disgusting statement about me since it will lower my standards.

        If your ego is blocking you against understanding your own creator, then what can I do..

        Be a witness for me on the day of judgement that I called you towards Islam in this world.

        Nothing else to speak.

        Thanks, bye.

        • //This is juts an example to point the situation , and not to blame you as pig.//
          Read thoroughly. If you cant understand , I will translate it for you

          And I am not surprised with your reply. all brainwashed people will tell the same thing.
          Enjoy your fun filled after life 🙂

          • Read all your lines to understand your hatred comments, not just your example. Ok.. Well.. I couldn’t expect anything more from someone who feels as he have no accountability on whatever he do.

            I would rather happy to be a brainwashed person on a straight path, instead of a freemason on a wrong path.

            Finally, thanks for your wishes. I want you too to have a fun-filled after-life. Hence, you too understand the truth, about your creator & sustainer and to whom you will be brought back, so that you avoid leading a miserable after-life infinitely.

  29. இங்கே இவ்வளவு கருத்து பேசும் ஒருவரும், கீழே உள்ள கட்டுரையை படித்து ஒரு வார்த்தையும் சொல்லவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது.

    https://www.vinavu.com/2014/03/05/cricket-indian-patriotic-chauvnism/

    உங்களுடைய கோவம் இஸ்லாமிய மக்களின் மீது மட்டும்தானா? நல்ல இருக்குன்னா உங்க நடுநிலை ……

  30. Ameen,

    நிறைய மெனக்கெட்டு வருகிறீர்கள். ஆனால் உங்கள் வாதங்களின் தரம் அயர்ச்சியைத்தான் தருகின்றது.

    //பின்பற்ற சொன்னால் செய்ய வேண்டும்.//

    முகமதைப் பின்பற்றுவது நமக்கு பகுத்தறிவைக் கொடுத்த கடவுளை அவமதிக்கும் செயல்.

    //அதில் எப்படி அத்தனை அறிவியல் உண்மைகளும் இருக்க முடியும். மலைகளை பற்றி//

    ஆறாம் வகுப்பு அறிவியல் பாடங்களிலேயே அதைவிட மேலான அறிவியல் உண்மைகள் தெளிவாக நேராக கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

    //1400 வருடங்கள் கழித்தும் இதில் ஒரு தவறையும் கண்டு பிடிக்க முடியவில்லையே எப்படி?//

    உங்கள் மூளைகள் மழுங்கடிக்கப்பட்டிருக்கின்றன. அதனால் தான்.

    Read அல்லாவின் கணக்கு வாத்தி யார்? (http://tamil.alisina.org/?p=124) and respond if you can, which you cannot(as Muhamad challenges to produce a quran like verse and said none can)

    For more errors: http://www.1000mistakes.com

  31. 2000 ஆண்டுகளுக்கு முன் ஏசு கிருஸ்த்து பிறந்து கிருத்துவ மதத்தை தோற்றுவித்தார் என்று கூறுகிறார்கள். அதற்கு 500 ஆண்டுகள் கழித்து 1500 ஆண்டு வாக்கில் இஸ்லாம் மதத்தை “நபிகள்” தோற்றுவித்ததாக கூறுகிறார்கள். இதெல்லாம் உண்மையா என்று தெரியாது. அதற்கு முன் மதம் இருந்தது என்று உறுதிபட கூடமுடிவதில்லை. ஆனால் அறிவியலின்படி மனிதன் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்து வருகிறான் எனது மட்டும் உறுதியாகிறது. அதற்கு முன் எந்த கடவுள் இருந்தார்? அப்போதைய மனிதர்களை யார் படைத்தது? பைபிளும் குரானும் எதில் எழுதி பாதுகாக்கப்பட்டு வந்தது?
    இந்த புத்தகங்கள் எல்லாம் சுமார் 500 ஆண்டுகளுக்கு பிறகுதான் எழுதப்பட்டிருக்க வேண்டும். உலகில் உள்ள மக்களை அரசியல் ரீதியாக வெற்றி கொண்டு ஆள சர்வாதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிதான் இந்த புத்தகங்கள்.

    • மு.நாட்ராயன் அவர்களே,

      //இறைவன் (நபி) //
      //அந்த மக்களை படைத்த நபிகளின் குற்றமா?//
      //கடவுளாக மதிக்கப்பட்டு கடைசி தூதுவராக மதிக்கப்படும் இந்த நபிகள் நாயகத்தை//
      //கடவுள் இருக்கும் இடத்தில் எப்படி போர் குணம் அந்த மக்களுக்கு வரும்!//
      //அந்த இறைவன் (நபி) ஏன் நல்ல மனிதர்களை படைக்காமல் காபிர்களை படைத்தார்.//
      //பிறந்து வளர்ந்த மக்களின் குற்றமா அல்லது அந்த மக்களை படைத்த நபிகளின் குற்றமா?//

      உங்களுக்கு இறைவனுக்கும் நபிமார்களுக்குமே வித்தியாசம் தெரியவில்லை. உங்களுடைய பதிவுகள் அனைத்தும் வரலாறும், உண்மைக்கும் புறம்பாக உள்ளது. நீங்கள் முதலில் இறைவன் யார்? நபிமார்கள் யார்? இறைவன் எதற்காக நபிமார்களை இந்த பூமிக்கு அனுப்ப வேண்டும் என்பதை படியுங்கள். பிறகு இங்கே வந்து கேள்வி கேளுங்கள்.

      நன்றி!

  32. இங்கே பல இஸ்லாமியர்கள் எதற்காக சவுதி அரேபியாவிற்கு கூஜா தூகுகிரார்கள் என்று தெரியவில்லை, அவர்கள் என்ன உங்களுக்கு மாமனா மச்சானா?, உறவினராக இருந்தாலும் தவறு செய்தவனை தண்டிபதே தமிழன் பண்பாடு.

    • ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இங்கே யாரு சவுதி அரேபியாவிற்கு வக்காலத்து வாங்கினார்கள்ன்னு சொல்லுங்க சகோ.

  33. Ameen,

    Actually the article I gave itself has a rebuttal to Sami Zaatri at the end of the article. Let me paste the rebuttal part here.
    //
    இந்த கட்டுரைக்கு பதில் கொடுக்கும் விதமாக Sami Zaatari சொல்கிறார், “இ [இறந்தவர்] தனது விதவனை அல்லது விதவையை விட்டுச் சென்றிருந்தால், விதவனின் அல்லது விதவையின் பங்கு முதலில் 4:11 வாசகத்தின் முதல் பாதியில் சொல்லப்பட்டபடி கணக்கிடப்படும்.”
    திரு Zaatari அவர்கள் இந்த கட்டளை குரானில் எந்த இடத்தில் இருக்கிறது என்று நமக்கு காட்டவில்லை. குரானில் சில வாரிசுகளுக்கு முதலில் பங்கு கொடுக்கவும் மீதியை மற்ற வாரிசுகளுக்கு பிரித்துக்கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. சொத்தைப் பிரிக்கும் விசயத்தில், குரானுக்கு கூட்டல் கழித்தல் கூட தெரியவில்லை என்பதே உண்மை.
    பின்வரும் உதாரணத்தை வைத்து பாகப்பிரிவினை சட்டத்தின் மொண்ணைத்தனத்தை மேலும் புரிந்து கொள்ளலாம். ஒரு மகளையும் பத்து மகன்களையும் கொண்ட ஒரு ஆணை எடுத்துக் கொள்வோம். குரானின் படி, மகள் பாதி சொத்தையும் மற்ற எல்லா மகன்களும் மீதி பாதியையும் தங்களுக்குள் பிரித்துக்கொள்ளவேண்டும். எனவே ஒவ்வொரு மகனும் 1/20 பங்கை பெறுவான். ஒரு ஆண் ஒரு பெண்ணின் பங்கை விட இரு மடங்கு பெறவேண்டும் என்ற மற்றொரு சட்டத்தோடு இது முரண்படுகிறது. ஏதோவொரு வால் சுருட்டிக் கொள்ளவேண்டியதுதான். இரண்டு வாலும் ஆடமுடியாது.
    1400 வருடங்களாக முஸ்லிம்கள் இஸ்லாமைப் பின்பற்றி இந்த சிக்கலான சட்டங்களையும் சமாளித்துக் கொண்டு வருகிறார்கள் என்பது ஆச்சர்யம்தான். எப்படி சாத்தியம்? அவர்கள் தங்களுக்கு ஏற்றவாறு அதற்கு விளக்கங்கள் கொடுத்தும், மாறுதல்கள் செய்தும் இதை சாதிக்கிறார்கள். சொத்து முழுவதையும் ஒரே கூறாக்கி அதில் இருந்து பெண் பிள்ளைகளின் பங்கை விட ஆண் பிள்ளைகளுக்கு இருமடங்கு கொடுத்துக் கொள்கிறார்கள். இந்த தீர்வு ஒரு கட்டளையை பின்பற்றும்போது மற்றொரு கட்டளையை அவமதிக்கிறது.
    //
    Now reply this.

    • Univerbuddy,

      //குரானின் படி, மகள் பாதி சொத்தையும் மற்ற எல்லா மகன்களும் மீதி பாதியையும் தங்களுக்குள் பிரித்துக்கொள்ளவேண்டும்.//
      இந்த வாக்கியம் குர்ஆனில் எங்கே இருக்கிறது?

      எந்த ஒரு வடிகட்டின கிறுக்கனுக்கும் ஒரு கூட்டம் பின்பற்றும் என்பதை நீங்கள் நிருபிக்கிறீர்கள்.

      • Ameen,

        Is that all? Don’t you have anything to say about the Alisina’s reply to Zattari?

        //குர்ஆனில் எங்கே இருக்கிறது?//

        வாசகம் 4:11 ஒரு ஆணுக்கு ஒரே ஒரு மகள் மட்டும் இருந்தால், மற்ற வாரிசுகள் எப்படி இருந்தாலும், அவள் பாதி சொத்தைப் பெறுவாள் என்கிறது.

        ***ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்;***

        See full verse:
        “உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லா உங்களுக்கு உபதேசிக்கின்றார்; பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்; இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம்; இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான். இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்;…” Q. 4:11

        • குர்ஆனில் இருப்பது: (உங்கள் பதிவிலும் இருக்கிறது)
          ***பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்;***

          உங்கள் ஞானி அலி சினா சொன்னது:
          //மகள் பாதி சொத்தையும் மற்ற எல்லா மகன்களும் மீதி பாதியையும் தங்களுக்குள் பிரித்துக்கொள்ளவேண்டும்.//

          நீங்கள் சொல்வது:
          //ஒரு ஆணுக்கு ஒரே ஒரு மகள் மட்டும் இருந்தால், மற்ற வாரிசுகள் எப்படி இருந்தாலும், அவள் பாதி சொத்தைப் பெறுவாள் என்கிறது.//

          இந்த மூன்று வாக்கியங்களும் ஒன்றா? குர்ஆனில் இருக்கும் ஒரு வாக்கியத்தை எடுத்து, உங்களுடைய வசதிக்கேற்ப திரித்து சொல்கிறீர்கள்.

          குர்ஆனில் தெளிவாக, “பெண்கள் மட்டும் இருந்து…” என்று சொல்லி இருக்கிறது. ஆனால், உங்களுடைய ஞானி அலி சினா மற்ற மகன்கள் என்று சொல்கிறார். அதை நீங்கள் இங்கே பதிவிடுகிறீர்கள். உங்களுடைய சொன்ன சரக்கை எதற்கு குரான் சொல்கிறது என்று சொல்கிறீர்கள்.

          நீங்கள் சாமர்த்தியமாக உங்கள் ஞானி அலி சினா மகன்கள் என்று எழுதியதை, வாரிசுகள் என்று மாற்றி விட்டீர்கள். வாரிசுகள் என்றால் யாரை சொல்கிறீர்கள். உங்கள் ஞானி அலி சினா மகன்கள் என்று சொன்னது உங்களுக்கே தவறாகபடுகிறது. அதனால் தான் நீங்கள் வாரிசுகள் என்று மாற்றி விட்டீர்கள்.

          உங்கள் பதிவை படிக்கும் யாருக்கும், உங்களுடைய இரட்டை நிலை புரியும்.

  34. திரு.அமீன்,

    நேரமின்மை காரணமாக உடனடியாக பதில் கூற இயலவில்லை.

    ///உங்களிடம் ஒரு கேள்வி…..அந்த தற்செயல் நிகழ்வும் அது போலத்தான் உள்ளது///

    சிறுபிள்ளைதனமான ஒப்பிடல்.நீங்கள் கூறிய அனைத்தும் மனிதன் அறிவியல் அறிவால் உருவாக்கியது.நீங்கள் சற்று முயன்றால் அவைகளின் உருவாக்கத்தை நேரில் காணலாம்.ஆனால் பிரபஞ்சம் மனிதன் உருவாவதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே உருவானது.எனவே அது பற்றி அனுமானம் செய்ய முடியும்.கடவுள் படைத்தார் என்பது ஒரு அனுமானம் என்றால்,தற்செயல் என்பது மற்றொரு அனுமானம்.கடவுள் படைத்தார் என்பதை அவரவர் மதநம்பிக்கையின் அடிப்படையிலும்,தற்செயல் என்பது அறிவியல் தரவுகளின் அடிப்படையிலும் அமைவது.

    ஆனால் நான் கூறியது அது குறித்து அல்ல.பகுத்தறிவால் கடவுளை அறியமுடியுமா என்பதே என் கேள்வி
    சிறந்த பகுத்தறிவுவாதிகளாகிய அறிவியலாருக்கு ஏன் கடவுள் தெரியவில்லை?

    எப்பேற்பட்ட பகுத்தறிவுவாதிக்கும் மறுமை பற்றி அறிய முடியாது.அது மதம் சார்ந்த நம்பிக்கை மட்டுமே.

    அல்லாவை ஏற்காத விஞ்ஞானிகளுக்கு மறுமையில் என்ன தண்டனை?

    • நீங்கள் கூறும் பகுத்தறிவுக்கு அர்த்தம் அறிந்து பேசுகிறீர்கலான்னு தெரியலை. அறிவுக்கும் பகுத்தறிவுக்கும் உங்களின்படி வித்தியாசம் என்ன?

      கண்களால், செவியால், நுகர்வதால், தொடுவதால் அறிந்து கொள்வது அறிவா அல்லது பகுத்தறிவா?

      கடவுளை கண்களால் பார்த்தபின்பே நம்புவேன் என்று சொல்வது அறிவா அல்லது பகுத்தறிவா?

      ஒன்றை கொண்டு மற்றொன்றை அறிந்து கொள்வது பகுத்தறிவா இல்லையா?

      1400 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட நூலில் இன்று வரையும் எதையும் பொய் என்று நிரூபிக்க முடியவில்லை என்பதே அது சாதாரண மனிதன் எழுதிய நூல் அல்ல. அது இறைவனால் கொடுக்கப்பட நூல் என்பது என் வாதம்.

      உங்களால் தவறு என்று நிரூபிக்க முடிந்தால் நிருபியுங்கள் அல்லது உண்மை தெரிந்து கொள்ளுங்கள்.

      அதை விடுத்து சிறுபிள்ளை தனம், வேலைய பாருங்க என்று சொல்வது எல்லாம் பகுத்தரிவாளிகளுக்கு அழகல்ல.

  35. அமீன்,

    ///நீங்கள் கூறும் பகுத்தறிவுக்கு அர்த்தம் அறிந்து பேசுகிறீர்கலான்னு தெரியலை///

    பகுத்தறிவு என்பது அல்லாவையும்,குரானையும் ஏற்பது மட்டுமே எனில் அதற்கு நான் என்ன செய்ய முடியும்.

    ///அறிவுக்கும் பகுத்தறிவுக்கும் உங்களின்படி வித்தியாசம் என்ன?///
    அறிந்தவைகளின் தொகுப்புதான் அறிவு.மொத்த அறிதலையும் பகுப்பாய்வு செய்து உண்மை காண்பதே பகுத்தறிதல்.

    ///கண்களால்,செவியால்,நுகர்வதால்,தொடுவதால் அறிந்து கொள்வது அறிவா அல்லது பகுத்தறிவா?///

    இன்னும் ஒர் அறிதல் விடுபட்டு விட்டது அது சுவை அறிதல்.இவை அனைத்தும் அறிவுதான்.பகுத்தறிவு எது என்று முன்பே கூறிவிட்டேன்.

    ///ஒன்றை கொண்டு மற்றொன்றை அறிந்து கொள்வது பகுத்தறிவா இல்லையா///

    இதற்கு ஒன்று,மற்றொன்று இரண்டையுமே நாம் நன்றாக அறிந்து இருக்க வேண்டும்.உதாரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது என்றால் மலையில் மழை பெய்திருக்கிறது என அறிந்து கொள்ளலாம்.இதுதான் ஒன்றை கொண்டு மற்றொன்றை அறிதல்.ஆனால் உலகை படைத்தது கடவுள் என்றால் அது அனுமானம் மட்டுமே இருக்க முடியும்,ஏனென்றால் உலக மக்கள் கடவுளை அறிந்தது இல்லை.அனுமானம் எப்போதுமே இறுதியானதும் இல்லை.

    எனக்கு அரபு மொழி தெரியாது,எனவே குரானை வாசித்து அதில் குற்றம் காணவும் முடியாது.என் நோக்கமும் அது இல்லை.

    என் கேள்வி எளிமையானது.அல்லாவை ஏற்காத மனித சமூகத்திற்கு தொண்டு செய்த விஞ்ஞானிகள்,சமூக சீர்திருத்தவாதிகள் முதலியோருக்கு மறுமையில் என்ன தண்டனை என்பதே அது.

    • தனி மனிதனின் செயல்களும், அவர்கள் சொர்கவாதிகளா அல்லது நரகவாதிகளா என்று தீர்மானிக்கும் உரிமையும் இறைவன் ஒருவனுக்கே. தனி மனிதர்களை தீர்பளிக்க மனிதர்கள் யாருக்கும் உரிமை இல்லை.

      ஆனால் பொதுவாக, தன்னை உருவாக்கி, பாதுகாக்கின்ற ஒற்றை இறைவன் மீது நம்பிக்கை வேண்டும், அதே நேரத்தில் நல்லதும் செய்ய வேண்டும்.

      குரான் (103:2,3)
      நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).

      எடுத்துக்காட்டு : நீங்கள் இரண்டு பாடங்களில் தேர்வு எழுதும்போது, ஒன்றில் 100% எடுத்துவிட்டு மற்றொன்றில் 0% எடுத்தீர்கள் என்றால், நீங்கள் தேர்வில் பெற்றீர்களா? இல்லையா? தன்னை படைத்த இறைவனை நம்பாமல், அவனுக்கு கட்டுப்படாமல், அவன் தந்த எல்லாவித இன்பத்தையும் அனுபவித்து கொண்டு அவனையே இல்லை என்று சொல்பவர்கள், நல்லது மட்டும் செய்வதும் அப்படியே.

      இறைவனே யார் என்று தெரியாத ஒரு இனம் இருந்தால், அல்லது இறைவனை அறிந்து கொள்கின்ற பகுத்தறிவு அற்ற இனம் இருந்தால், அவர்களுக்கு இறைவன் மறுமை நாளில் தனி தேர்வு நடத்துவான். அதில் வெற்றி பெற்றவர்களை சொர்க்கம் நரகம் என்று முடிவு செய்வான். அது அவர்களுக்கும், இறைவனுக்கும் நடுவே இருப்பது. ஆனால், பொதுவாக, இறைவன் தன்னை அறிந்து கொண்டு தன்னை வழிபட, தன்னுடைய அத்தாட்சிகளை உலகில் நிறைய வைத்துள்ளான். மனிதன் அனைத்தையும் அறிந்தும் இறைவனுக்கு அடிபணிய மறுத்தால் அவனுக்கு கேடுதான்.

      உலகில் இன்றும் எவ்வளவோ விஞ்ஞானிகளும், சீர்திருத்தவாதியும் தங்களுடைய பகுத்தறிவை கொண்டு இஸ்லாம் மட்டுமே உண்மையான மார்கம் என்று ஏற்கின்றனர். அவர்களுக்கு எப்படி அந்த பகுத்தறிவு கிடைத்தது.
      Read this:
      http://www.islam-guide.com/ch1-1-h.htm

      • அமீன் பாய், காலம் முழுக்க இசுலாம் அல்லாத மற்ற மதத்தை பின்பற்றிய ஒருவர் தன் வாழ்நாள் முழுதும் மக்களுக்காக வாழ்ந்து பல புண்ணிய காரியங்களை செய்தாரென்றால் அவருக்கு அல்லா என்ன கொடுப்பார், சொர்க்கமா? இல்லை நரகமா? காலம் முழுக்க ஒருவர் கடவுளை நம்பாதவராக இருந்து அதே சமயம் மிக மிக நல்லவராக ஒழுக்கமானவராக அனைவருக்கும் பயனுள்ளவராக இருந்தால் அவருக்கு அல்லா என்ன கொடுப்பார், சொர்க்கமா, இல்லை நரகமா? இசுலாம் தோன்றிய காலத்துக்கு முன்னாள் தோன்றி மறைந்த பல கோடி மக்களுக்கு என்ன கொடுத்திருப்பார், சொர்க்கமா, இல்லை நரகமா? அன்னை தெரெசாவுக்கு என்ன கொடுத்திருப்பார்? ஜிகாத் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொன்றவர்களுக்கு கடவுள் 72 கன்னிகள் கொடுத்திருப்பாரா? அஜ்மல் கசாபிற்கு அல்லா என்ன கொடுத்திருப்பார்?

        • உங்கள் பதிவிற்கு பதில் சொல்லும் முன், முதலில் உங்கள் புரிதலில் சில அடிப்படை தவறுகள் இருக்கிறது. இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன் நபி முகம்மது (ஸல்) அவர்களால் தோற்றுவித்த மார்க்கம் இல்லை. முதல் மனிதனாம் அதாம் (ஸல்) இந்த உலகுக்கு வந்ததிலிருந்து பின்பற்றப்பட்ட மார்க்கம் இஸ்லாம். இஸ்லாம் என்றால் தன்னை படைத்த இறைவனுக்கு அடி பணிதல். உலகில் வந்த எல்லா நபிமார்களும் இதையேதான் வலியுறுத்தினர்.

          அதாம் நபி முதல் இறுதி தூதர் முகம்மது நபி (அனைவரின் மீதி சாந்தி உண்டாவதாக) அனைவரும் ஏகத்துவ கொள்கையே சொல்லி வந்தனர். அவர்கள் வாழும் பொது மக்கள் ஒரு இறைவனை வாங்கினர், பின்பு அவர் இறந்தபின்பு மக்கள் தாங்கள் பார்த்து பயப்படும் பொருட்களான விலங்குகள், நெருப்பு, நீர், இன்னும் சிலபேர் அந்த நபிமார்களையே இறைவனாகவும் இறைவனின் குமாரராகவும் வணங்க ஆரம்பித்தனர்.

          குரான் (16:36): மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள்.

          நீங்கள் கேட்ட கேள்வியான //இசுலாம் தோன்றிய காலத்துக்கு முன்னாள் தோன்றி மறைந்த பல கோடி மக்களுக்கு என்ன கொடுத்திருப்பார்,// என்ற கேள்விக்கு இதுவே பதில்.

          நீங்கள் என்னுடைய எல்லா பதில்களையும் படித்தீர்களா என்று தெரியவில்லை. நான் முன்னமே சொன்னது போல, தனி மனிதன் செய்யும் தவறுகளும், நல்லதும் அவனை படைத்த கடவுளக்கே தெரியும். நீங்கள் கேட்ட அன்னை தெரசாவுக்கும், அஜ்மல் கசாபிர்க்கும் என்ன நடக்கும், என்ன நடந்திருக்கும் என்பது நமக்கு தெரியாது.

          நான் முன்னமே சொன்னது போல, இறைவன் ஒருவன் என்று புரிந்தும், தன்னுடைய அகம்பாவத்தால் இறைவனை மருக்கிறவனே, இறைவனின் கோவத்திற்கு ஆளானவன்.

          சிலர் அல்லாஹ்வைப்பற்றி தெரியாமலும், தெரிந்தாலும் சிறிதளவே தெரிந்தும், அல்லது தவறாகவே தெரிந்து அவ்வாறே இறந்தும் விட்டாரோ அவருடைய இறுதி இருப்பிடம், அல்லாஹ்வே முடிவு செய்வான்.

          • ///இறைவன் ஒருவன் என்று புரிந்தும், தன்னுடைய அகம்பாவத்தால் இறைவனை மருக்கிறவனே, இறைவனின் கோவத்திற்கு ஆளானவன்///

            மனிதனுக்கு அகம்பாவத்தை ஏன் இறைவன் படைத்தான். (மனிதனைப் படைத்தது இறைவன்தானே)
            ஒரு இறைவனாக இருப்பவன் ஏன் கோவப்படுகிறான்? இறைவன் சாந்தியே உருவானவராக இருக்கக்கூடாதா.
            இறைவன் ஒருவன் என்று எப்படி புரிந்து கொள்வது.இவன்தான் இறைவன் என்று எப்படி தெரிந்துகொள்வது.
            இறைவனை யார் பார்த்தது.
            நிங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்த யாராவது இறைவனை பார்த்தார்களா.
            அவர் எப்படி இருப்பார்.
            மனிதனைப்போல் இருப்பாரா அல்லது மிருகங்களைப் போல் இருப்பாரா? சொர்க்கம் நரகம் என்பதெல்லாம் எங்கே இருக்கிறது. யார் சொர்க்கம் நரகங்களுக்குப் போவார்கள்.யார் யார் போகமாட்டார்கள்.

              • ///Watch this: https://www.youtube.com/watch?v=UVdkdjzY2Xs////

                இதெல்லாம் மனிதர்கள் வலை தளத்தில் ஏற்றம் செய்தது!!! இதனை யாரும் நம்ப வேண்டியதில்லை. கடவுள் ஏன் மனிதனை அகம்பாவம் உள்ளவனாகவும் தீயவனாகவும் படைத்தார். இப்படி படைத்த கடவுளை ஏன் தொழ வேண்டும். கடவுள் மனிதனை படைக்க வில்லை என்றால் யார் படைத்தது? மக்களை ஏமாற்றி தங்களின் சர்வாதிகார அரசியலை உலகில் புகுத்துவதே இந்த மதம் என்பதெல்லாம். இந்தியாவில் அரசியல் வாதிகள் பேசும் பேச்சை கேட்டாலே இது புரியும். கடவுளின் கடைசி தூதர் என்று அழைக்கப்படும் நபிகள் நாயகம் செய்த கூத்தெல்லாம்தான் குரான் என்ற புத்தகத்தில் உள்ளது.

                • //இதெல்லாம் மனிதர்கள் வலை தளத்தில் ஏற்றம் செய்தது!!!//
                  எனக்கு தெரிந்த வரைக்கும் வலைதளங்களில் உள்ளது அனைத்துமே மனிதர்கள் ஏற்றம் செய்ததே. மரம், செடிகளோ, மிருகங்களோ வலைதளங்களில் ஏற்றம் செய்ததாக நான் கேள்விப்படவில்லை. நீங்கள் ஏதாவது பார்த்துயிருக்கிறீர்களா?

                  //கடவுள் ஏன் மனிதனை அகம்பாவம் உள்ளவனாகவும் தீயவனாகவும் படைத்தார்.//
                  கடவுள் எல்லோரையும் ஒன்றாகவே படைத்தார். மனிதனுக்கு சுயமாக சிந்திக்கும் அறிவு தந்துள்ளார். மனிதனை அகம்பாவம் உள்ளவனாக செய்து கொண்டது அவனே. அவனே தீய காரியங்களில் ஈடுபட்டானே தவிர அவனை படைத்தது இறைவன் அவனை தீய வழியில் செல்ல சொல்லவில்லை.

                  //இப்படி படைத்த கடவுளை ஏன் தொழ வேண்டும்.//
                  என்னை படைத்தது, எனக்கு நல்ல தாய் தந்தையரை தந்து, எனக்கு நேர்வழி கொடுத்து, இந்த உலகத்தில் நான் வாழ்வதற்கு எல்லா விதமான வசதிகளும் தந்து, இந்த உலகத்தில் இறைவனை அறிந்து கொள்ள பகுத்தறிவு தந்து இருக்கும் இறைவனை நன்றி செலுத்துவது என்னுடைய கடமையாக நான் எண்ணுகிறேன். எல்லாவிதமான சுகத்தையும் அனுபவித்து கொண்டு அதை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்த மறுக்கும் சிலரும் இருக்கின்றனர். அதற்கு நான் என்ன செய்ய முடியும்.

                  //கடவுள் மனிதனை படைக்க வில்லை என்றால் யார் படைத்தது?//
                  இறைவன் மனிதனை படைக்கவில்லை என்று யார் சொன்னது?

                  //மக்களை ஏமாற்றி தங்களின் சர்வாதிகார அரசியலை உலகில் புகுத்துவதே இந்த மதம் என்பதெல்லாம். இந்தியாவில் அரசியல் வாதிகள் பேசும் பேச்சை கேட்டாலே இது புரியும். //
                  சர்வாதிகார அரசியல்வாதிகள் சொல்வதுதான் குரான் சொல்கிறது என்று உங்களுக்கு யார் சொன்னது?

                  //கடவுளின் கடைசி தூதர் என்று அழைக்கப்படும் நபிகள் நாயகம் செய்த கூத்தெல்லாம்தான் குரான் என்ற புத்தகத்தில் உள்ளது.//
                  குரானை நீங்கள் ஒருமுறையாவது படித்துள்ளீரா? உங்கள் கற்பனைகளை இங்கே கட்டவிழ்க்க வேண்டாம் நண்பரே.

      • Allah is the most beneficent and merciful. You just need to put effort to understand the truth. I am not saying to become Muslim now itself.. But, start doing some research about your creator. Use your thought process to work. Change will not be made by Allah, unless you took the first step.

        Don’t get into argumentative again here with me, its not going to work out. We have argued a lot before.

        So, put your own effort and start understanding about your Creator.

        You still have time till you live in this world. But, unfortunately, we don’t know when will that time expires.

        May Allah guide you and me to the straight path.

        Thanks.

          • I would prefer a successful completion than a speedy completion :).

            Thats fine, but why are you commenting on MY NAME. Don’t you have a name by yourself? Please comment on your original name.

            Thanks 🙂

        • //Allah is the most beneficent and merciful//

          இதை எப்படி நிருபிப்பது. எப்படி தெரியும்? “அல்லா” (இறைவன்) என்ற ஒன்று இருக்கிறது எப்படி தெரிந்து கொள்வது. இவர் மிகவும் “இரக்கமானவர்” என்று எப்படி தெரிந்து கொள்வது. அல்லாவை வழிபடும் நாடுகளில் எல்லாம் பயங்கரவாதிகள் அதிகமாக உள்ளனர்.
          இஸ்லாமியர்கள் எல்லாம் பயங்கரவாதிகள் இல்லாவிட்டாலும் அதிக அளவு பயங்கரவாதிகள் எல்லாம் இஸ்லாமியர்களே. அல்லா என்று இருப்பதாக கூறுவது முதல் தவறு.
          அவர் இரக்கமானவர் என்று கூறுவது பல தவறுகளை உள்ளடக்கியது.
          உலகமக்களே முஸ்லீம் மதத்தைப் பார்த்தும் அதன் பிற்போக்குத்தனமான பயங்கரவாதத்தைப்பார்த்தும் நடுங்கிக்கொண்டு உள்ளார்கள்! இதை உணராமல் இருப்பது மனிதனுக்கு நல்லதல்ல.
          அல்லா இருகிறார் என்றால், ஏன் ஏசு கிருஸ்துவை நபிகள் பிறப்பதற்கு ஐநுரு ஆண்டுகளுக்கு முன் பிறப்பித்தார். இவரல்லவா முதலில் பிறந்து கடைசி துதராக இருந்திருக்க வேண்டும்.

          • //Allah is the most beneficent and merciful//

            இதை எப்படி நிருபிப்பது. எப்படி தெரியும்? “அல்லா” (இறைவன்) என்ற ஒன்று இருக்கிறது எப்படி தெரிந்து கொள்வது. இவர் மிகவும் “இரக்கமானவர்” என்று எப்படி தெரிந்து கொள்வது. அல்லாவை வழிபடும் நாடுகளில் எல்லாம் பயங்கரவாதிகள் அதிகமாக உள்ளனர்.
            இஸ்லாமியர்கள் எல்லாம் பயங்கரவாதிகள் இல்லாவிட்டாலும் அதிக அளவு பயங்கரவாதிகள் எல்லாம் இஸ்லாமியர்களே. அல்லா என்று இருப்பதாக கூறுவது முதல் தவறு.
            அவர் இரக்கமானவர் என்று கூறுவது பல தவறுகளை உள்ளடக்கியது.
            உலகமக்களே முஸ்லீம் மதத்தைப் பார்த்தும் அதன் பிற்போக்குத்தனமான பயங்கரவாதத்தைப்பார்த்தும் நடுங்கிக்கொண்டு உள்ளார்கள்! இதை உணராமல் இருப்பது மனிதனுக்கு நல்லதல்ல.
            அல்லா இருகிறார் என்றால், ஏன் ஏசு கிருஸ்துவை நபிகள் பிறப்பதற்கு ஐநுரு ஆண்டுகளுக்கு முன் பிறப்பித்தார். இவரல்லவா முதலில் பிறந்து கடைசி துதராக இருந்திருக்க வேண்டும்.

            //இதை எப்படி நிருபிப்பது. எப்படி தெரியும்? “அல்லா” (இறைவன்) என்ற ஒன்று இருக்கிறது எப்படி தெரிந்து கொள்வது. இவர் மிகவும் “இரக்கமானவர்” என்று எப்படி தெரிந்து கொள்வது.//
            Well, I can easily understand that Allah is most beneficent and merciful, when I see people who reject him but still get sustenance in this world from him. 🙂

            //அல்லாவை வழிபடும் நாடுகளில் எல்லாம் பயங்கரவாதிகள் அதிகமாக உள்ளனர்.//
            நல்ல கற்பனை.

            //இஸ்லாமியர்கள் எல்லாம் பயங்கரவாதிகள் இல்லாவிட்டாலும் அதிக அளவு பயங்கரவாதிகள் எல்லாம் இஸ்லாமியர்களே.//
            This question arises in the minds of the people, during any discussion on religion or world affairs. Muslim stereotypes are perpetuated in every form of the media accompanied by gross misinformation about Islam and Muslims. In fact, such misinformation and false propaganda often leads to discrimination and acts of violence against Muslims.

            Oxford Dictionary describes the word terrorism as: ‘the use of violent actions in order to achieve political aims or to force a government to act.’ The word terrorism was first coined in 1790’s during the French Revolution. The years 1793 and 1794 were called as ‘The Reign of Terror’ or ‘Years of Terror.’

            During these years Maximilin Robespierre guillotined thousands of innocents. He arrested more than 500,000 out of which he executed 40,000. More than 200,000 were deported and more than 200,000 were starved and tortured to death in the prisons.

            Today there is a statement, which is being repeatedly bombarded, especially in the western media and that statement is, ‘All Muslims are not Terrorist, but all Terrorist are Muslims.’ But here are the historical records on terrorist attacks that speak a different picture:

            19th century – We hardly find any terrorist attacks done by Muslims.

            1881 – Tsar Alexander was assassinated in a Bomb Blast. He was traveling in a bulletproof carriage in St. Pietersburg Street. The first bomb kills innocent 21 bystanders. The second bomb killed him while he was stepping out of the car. He was killed by Ignacy Hryniewiecki. He was Anarchists.
            1886 – Bomb Blast at Haymarket Square, Chicago, during a labour rally. 12 people were killed; one among them was a policeman. Seven policemen were injured and they died in the hospital. The people responsible were 8 Anarchists all of them were non-Muslims.
            6 September 1901 – The US President, William McKinley, was shot twice by an Anarchist named Leon Czolgosz. He was a non-Muslim.
            1 October 1910 – Bomb blast in Los Angeles at Times newspaper building. 21 were killed. The blast was done by 2 Christians named James and Joseph. They were union leaders.
            28 June 1914 – Archduke of Austria and his wife were assassinated which precipitated the World War I. The members of Young Bosnia assassinated them – most of them were Serbs. They were non-Muslims.
            16 April 1925 – Bomb Blast in St. Nedelya Church in Sofia, the capital of Bulgaria. 10,050 were killed and 500 injured. This was the biggest terrorist attack that was done on the soil of Bulgaria. The Bulgarian Communist Party did it. They were non-Muslims.
            9 October 1934 – King Alexander I of Yugoslavia was assassinated by a gunman by the name of Vlada Georgieff. He was a non-Muslim.
            1 May 1961 – First US plane to be hijacked was not done by a Muslim. It was done by Ramierez Ortiz.
            28 August 1968 – The US Ambassador to Guatemala was assassinated by a non-Muslim.
            30 July 1969 – The US Ambassador to Japan was knifed by a Japanese non-Muslim.
            3 September 1969 – US Ambassador to Brazil was kidnapped by a non-Muslim.
            19 April 1995 – The famous attack of the Oklahoma Bombing in which a truck loaded with bombs ran into the federal building of Oklahoma, in which 166 were killed and 100 were injured. Initially in the press it came as ‘Middle East Conspiracy’. Later on they came to know that it was done by two Christians named Timothy and Terry.
            After World War II

            After World War II from 1941 to 1948, the Jewish Terrorists conducted 259 terrorist attacks.
            22 July 1946 – The famous bombing of King David Hotel was conducted under the leadership of Menachem Begin. 91 were killed, out of which 28 were British, 41 Arabs, 17 Jews and 5 others. The Ignun group dressed up as Arabs to show as though the Muslims did this bombing. Menachem Begin was called terrorist number one by the British government. Later on after a few years Menachem Begin the terrorist number one became the Prime Minister of Israel & got a Noble Prize for Peace. Imagine a person who was a terrorist number getting a Noble Prize for Peace. Menachem Begin and others were fighting to get a Jewish state. Before 1945 Israel did not exist in the World Map. These Jewish group were fighting for a Jewish state and later on with the power they kick the Palestinian out and now the same people are calling the same Palestinian who are fighting for a more just cause for getting their land back. And the Israelis label them today as Terrorist.
            Hitler killed 6 million Jews. The Palestinians welcome the Jews. Later on the Jews kick the Palestinians out of their own land and when the Palestinians are fighting to get their land back they are labeled as Terrorists. It is like I welcome a stranger in my house. After a few days that person throws me out of my house and when I shout out side my house that I want my house back, you call me a Terrorist.
            In Germany from 1968 – 1992, Baader Meinhoff Gang killed several innocent human beings.
            In Italy, Red Brigades kidnapped and killed Aldo Moro, the former Prime Minister of Italy.
            20 March 1995 – Aum Shinrikyo a Buddhist Cult used Nerve Gas in the Tokyo Subway in which 12 people were killed and 5700 were wounded and injured.

            More info read this:
            http://www.globalresearch.ca/non-muslims-carried-out-more-than-90-of-all-terrorist-attacks-in-america/5333619
            http://theamericanmuslim.org/tam.php/features/articles/claim_that_all_terrorists_are_muslims_ignores_history/0012587

            //உலகமக்களே முஸ்லீம் மதத்தைப் பார்த்தும் அதன் பிற்போக்குத்தனமான பயங்கரவாதத்தைப்பார்த்தும் நடுங்கிக்கொண்டு உள்ளார்கள்! இதை உணராமல் இருப்பது மனிதனுக்கு நல்லதல்ல.//
            நீங்க என்ன இதனை நாள் உள்ளே இருந்து வந்தீங்களா? இங்கே பதிவிடுவதற்கு முன், இஸ்லாம் பற்றிய உங்களுடைய அறிவை தெளிவுபடுத்திகொள்ளுங்கள். இன்றைய நவீன உலகில் வேகமாக வளரும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. அதிலும் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள். உடனே இஸ்லாம் எங்கியோ மூலைமுடுக்கில் வளருது என்று சொல்லாதீர்கள். வளர்ந்த நாடுகளான அமெரிக்க, ஐரோப்பா நாடுகளில் மக்கள் நேர்வழி பெற இஸ்லாத்தை தங்கள் மார்கமாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
            Refer: http://en.wikipedia.org/wiki/Growth_of_religion

            முற்போக்கான இந்த வளர்ந்த நாடுகளில் மக்கள் குறிப்பாக பெண்கள் எதனால் இஸ்லாத்தை ஏற்கின்றனர்? அவர்களின் உயிருக்கு பயந்தா? அல்லது உலக வாழ்க்கைக்கு ஆசைபட்டா? இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்கிற தவறான பிரசாரமும் இங்கே பொய்த்து போகிறது.

            //அல்லா இருகிறார் என்றால், ஏன் ஏசு கிருஸ்துவை நபிகள் பிறப்பதற்கு ஐநுரு ஆண்டுகளுக்கு முன் பிறப்பித்தார். இவரல்லவா முதலில் பிறந்து கடைசி துதராக இருந்திருக்க வேண்டும்.//
            உலகில் 1,24,000 நபிமார்களுக்கு மேல் வந்துள்ளனர். அது என்ன இயேசு மட்டும் இங்கே குறிப்பிடுகிறீர்கள்? எதற்காக உங்களுக்கு இந்த ஓரவன்ஜனம்? 🙂
            ஒவ்வொரு நபிமார்களும் இந்த உலகிற்கு வரும்போதும் அவர்கள் ஏக இறைவனின் கொள்கையை பரப்பினர். அவர்கள் இறந்ததும் மக்கள் அவர்களையோ அல்லது கல்லையோ மண்ணையோ வணங்க ஆரம்பித்துவிட்டனர். எப்போது மக்கள் நேர்வழியை விட்டு வெளியே சென்றுவிடுகிறார்களோ, அவர்களுக்கு நேர்வழி காட்ட இறைவன் அடுத்த நபியை அனுப்புகிறான். இவர்கள் உலகில் பல இடங்களில் அந்த அந்த மக்களுக்காக அனுப்பப்பட்டனர். இஸ்ரவேலின் சந்ததிகளுக்கு அனுப்பப்பட்ட நபியே இயேசு ஆவார். இவருக்கு பிறகு சுமார் 200 வருடங்களுக்கு பின் வந்த பால் அடிகளார் இயேசு கிருத்துவை இறைவனின் மகன் என்று சொல்லி மக்களை வழிகெடுக்கிறார். அதன் பின்னரே இறுதி தூதராகவும் இனி வரும் எல்லா மக்களுக்கும் வழிகாட்டியாகவும் முகம்மது நபி (peace be upon all of them) அனுப்பப்படுகிறார். ஒவ்வொரு நபிக்கும் ஒரு அற்புதம் தரப்படுகிறது. இறுதி தூதருக்கு தரப்பட்ட அற்புதமே இந்த குரான். இப்போது புரிகிறதா?

  36. குர்ஆன், பைபிள், கீதை அனைத்தும் மனிதரால் எழுதப்பட்ட புத்தகங்கள். கடவுள் அல்லது தேவதூதர் சொல்ல, அதனை தொடர்ந்து எழுதியது என்று சொன்னால் தான் அந்த கால மனிதர்கள் அந்த புத்தகங்களை மதித்து படிப்பார்கள். மேல்மருவத்தூரில் கூட ஒருவர் கடவுள் என் கனவில் வந்து இங்கு எனக்கு கோவில் காட்டுங்கள் என்று சொன்னதாக சொல்கிறார். அதையும் மக்கள் நம்பி அவரது கல்லாவை நிரப்புகின்றனர். புட்டபர்த்தியிலும் ஒருவர் நான் சத்யசாய்பாபாவின் அடுத்த பிறவி என்று கூறி வாழ்நாள் முழுக்க கல்லா கட்டினார், அதையும் மக்கள் நம்பி அவரை அமோகமாக வாழவிட்டார்கள். யாகவா முனிவர் என்று ஒரு நபர் தான் கடவுளுடன் பேசிக்கொண்டிருப்பதாக கூறினார். அதனை சூப்பர் ஸ்டார் முதற்கொண்டு பெருமளவு மக்கள் நம்பத்தான் செய்தனர். இதோ சமீபத்தில் கூட ஒருவர் தனக்கு குண்டலினி சக்தி இருக்கிறதால் தன்னால் தரையில் இருந்து பறக்க முடியும் என்றார். என்ன செய்வது!! எத்தனை பெரியார் வந்தாலும்….

    • உங்களை போன்ற நாத்திகர்களின் பிரச்சனையே இதுதான். ஒன்று அல்லது இரண்டு மதத்தை பார்க்க வேண்டியது. பிறகு எல்லா மதத்திற்கும் வெள்ளை அடிக்க வேண்டியது.

      நீங்கள் கொஞ்சம் வரலாற்றை படித்தால் உங்களுக்கே உண்மை புரியும். நபிகள் நாயகம் அவர்கள் எவ்வாறு ஏழ்மையாக வாழ்ந்தார் என்று.

      Saheeh Muslim
      Book 009, Number 3507

      I visited Allah’s Messenger (may peace be upon him), and he was lying on a mat. I sat down and he drew up his lower garment over him and he had nothing (else) over him, and that the mat had left its marks on his sides. I looked with my eyes in the storeroom of Allah’s Messenger (may peace be upon him). I found only a handful of barley equal to one sa’ and an equal quantity of the leaves of Mimosa Flava placed in the nook of the cell, and a semi-tanned leather bag hanging (in one side), and I was moved to tears (on seeing this extremely austere living of the Holy Prophet), and he said: Ibn Khattab, what wakes you weep?

      I said: Apostle of Allah, why should I not shed tears? This mat has left its marks on your sides and I do not see in your storeroom (except these few things) that I have seen; Caesar and Chosroes are leading their lives in plenty whereas you are Allah’s Messenger. His chosen one, and that is your store! He said: Ibn Khattab, aren’t you satisfied that for us (there should be the prosperity) of the Hereafter, and for them (there should be the prosperity of) this world? I said: Yes.

      இஸ்லாத்தை அந்த காலத்தில் எதிர்த்த குறைஷிகள், நபி (ஸல்) அவர்களின் குண நலன்களை என்றுமே எதிர்த்ததில்லை. வரலாற்றை படிக்கும் அனைவருக்கும் தெரியும், நபி (ஸல்) அவர்களோ, அவரை பின் பற்றிய சஹாபாக்களோ மிகவும் வருமையுடனே வாழ்ந்தனர் என்று.
      நீங்கள் சொல்லும் பெரியாரும், மனிதன் உருவாக்கின கடவுளை எதிர்த்தாரே தவிர, மனிதனை உருவாக்கின கடவுளை எதிர்க்கவில்லை என்பதே உண்மை.

      நீங்கள் இஸ்லாத்தை புரியாமல் பேசுவதாலேயே நான் விளக்க வேண்டி உள்ளது. எல்லா வியாக்யானமும் உங்களுக்கு தெரியும், என்னுடைய விளக்கம் தேவையில்லை என்று சொன்னீர்கள் என்றால், அதுவும் உங்களுடைய உரிமை. நான் மறுப்பதற்கு ஒன்றும் இல்லை.

      எரிந்து கொண்டிருக்கும் வீட்டில் தூங்கி கொண்டிருக்கும் ஒருவரை எழுப்பி வெளியே கொண்டு வரவே நான் முயல்கிறேன். நான் தூங்கவில்லை, தெரிந்துதான் உள்ளேயே இருக்கிறேன் என்றால், அது உங்கள் உரிமை. நான் என்ன செய்ய முடியும்.

      • வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் லாஜிக்கா ?
        நித்தியானந்தா எளிமையாக வாழ்ந்து காட்டினால் நல்லவராகி விடுவாரா ?

        • Raman அவர்களே,

          உங்களுடைய அறிவு இதை தாண்டி சிந்திக்காதுன்னு தெரியும். நம்பினால் நம்புங்க, நம்பலைன்ன உங்க வேலைய போய் பாருங்க. என்னாலே தூங்கறவங்களை மட்டும்தான் எழுப்ப முடியும்..

  37. கற்றது கையளவு அவர்களே,

    //மற்ற நூல்களையும் படித்தால் தானே நமது அறிவு வளரும். குர்ஆனை மட்டும் படித்தால் மின்அணுவியல் எப்படி உருவாகி இருக்கும். //
    சகோதரரே, மற்ற எந்த புத்தகத்தையும் படிக்க வேண்டாம். குரான் மட்டுமே படிக்க வேண்டும் என்று நான் எங்கே சொன்னேன். மறுபடியும் நான் சொல்லாததை சொல்கிறீர்கள்.

    //அறிவியலுக்காக அதற்கென்று எழுதிய புத்தகங்களை படியுங்கள். குர்ஆனை மட்டும் படித்தால் அறிவியல் எப்படி வளரும்.//
    மறுபடியும் அதே குற்றச்சாட்டு. குரான் மட்டும் படித்தால் போதும் அறிவியல் வளரும் என்று நான் கூறினேனா? அறிவியல் புத்தகம் படிக்க வேண்டாம் அல்லது படிக்க கூடாது என்று நான் சொன்னேனா? அப்படி இஸ்லாம் சொல்வதாக இருந்தால், இங்கே எந்த முஸ்லிமும் ஸ்கூல் போக மாட்டார்கள். நான் சொன்னது குர்ஆனில் இருப்பது அறிவியலின் படி சரி என்பதே அன்றி அனைத்து அறிவியலும் குர்ஆனில் இருக்கிறது என்று இல்லை.

    //தற்போதைய அனைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் குர்ஆன் அன்றே சொன்னது என்று நீங்கள் சொல்வது//
    குர்ஆனில் அனைத்து கண்டுபிடிப்புகளும் இருக்கிறதுன்னு நான் எங்கே சகோ சொன்னேன். நீங்கள் இரண்டு நாட்கள் முன்பு இதே போல கூறிய குற்றச்சாட்டுக்கு நான் விளக்கம் கேட்டேன். நீங்கள் அதற்கு பதில் சொல்லாமல் மறுபடியும் அதே போல சொல்கிறீர்கள். பொய்யை மறுபடியும் மறுபடியும் சொன்னால் அது உண்மை ஆகிவிடாது சகோ.

    என்னுடைய கருத்துகளை உங்கள் மீது திணிப்பது என்னுடைய எண்ணம் இல்லை. இருளில் இருக்கும் ஒரு சக மனிதனுக்கு வெளிச்சம் காட்டவே நான் எண்ணுகிறேன். அந்த ஒளியை ஏற்பதும், ஏற்காமல் விடுவதும் உங்களுடைய உரிமை. அதில் நான் என்றுமே தலையிட முடியாது. இல்லை இல்லை, நான் நேர்வழியில் தான் இருக்கிறேன், நீங்கள் தான் வழி கெட்டு விட்டீர்கள் என்று நீங்கள் சொல்வீர்களானால் அதுவும் உங்கள் உரிமை. ஆனால், இருவரும் நேர்வழியில் செல்கிறோம் என்று சொல்ல முடியாது. யாராவது ஒருவரே சரி. அது யார் என்பதை காலம் பதில் சொல்லும்.

    என்னுடைய பகுத்தறிவுக்கு எட்டிய, உங்களுடைய பகுத்தறிவுக்கு இன்னும் எட்டாத அந்த இறைவன் ஒருவனே. அவன் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டட்டும்.

    நன்றி.

    • இருளில் இருக்கும் ஒரு சக மனிதனுக்கு வெளிச்சம் காட்டவே நீங்கள் எண்ணுகிறீர்கள். நன்றி. அதே எண்ணம் தான் எனக்கும். மதம் என்ற வண்ணக்கண்ணாடியை அணிந்து கொண்டு பார்க்கும் உங்களை அந்த கண்ணாடி இல்லாமலும் உலகை காணலாம் என்றே நானும் எண்ணுகிறேன். பச்சை கண்ணாடி அணிந்தவருக்கு பார்ப்பது எல்லாம் பச்சை நிறத்தில் தோன்றும், காவி கண்ணாடி அணிந்தவருக்கு பார்ப்பது எல்லாம் காவி நிறத்தில் தோன்றும். உண்மையான பார்வை கிடைக்கவேண்டும் என்றால் இந்த வண்ணக்கண்ணாடிகளை துறந்து தெளிந்த பார்வையில் பாருங்கள். உண்மை புரியும். வாழ்நாள் முழுதும் இந்துவாகவோ கிறுத்துவனாகவோ, இல்லை புத்த மதத்தை சார்ந்தவரோ, இல்லை கடவுளை நம்பாதவரோ, அவர் பல புண்ணிய காரியங்களை செய்திருந்தால், அவருக்கு நரகம் தான் கிடைக்கும் என்றால், பரவாயில்லை. என்னை பொறுத்தவரை, நல்ல மனிதனாக வாழ்ந்து, உடனிருப்பவர்களுக்கு பயனுள்ளவாறு வாழ்ந்து, நரகத்துக்கு செல்வது என்பது நல்ல மதவாதியாக வாழ்ந்து சொர்க்கத்துக்கு போவதை விட மேல். பரவாயில்லை, உங்கள் கணிப்புப்படி நாங்கள் மதத்தை துறந்து நரகத்துக்கு போனாலும் எங்களுக்கு கவலை இல்லை. வாழும் வரை மற்ற மனிதர்களுக்கு பயனுள்ளவாறு வாழ்ந்து விட்டு போகிறோம். மதம் உங்கள் கண்களை முழுவதுமாக மறைத்து விட்டது. மதத்தை தாண்டியும் உலகில் எவ்வளவோ விடயங்கள் உள்ளன. கண் திறந்து பாருங்கள் நண்பரே.

      • கற்றது கையளவு அவர்களே,
        //அவருக்கு நரகம் தான் கிடைக்கும்//

        நீங்கள் என்ன செய்தாலும், உங்களுக்கு எந்த கேள்வி கணக்கும் இல்லை என்பது உங்கள் நம்பிக்கையாக இருக்கலாம், அதற்காக ஏன் இப்படி என் மீது அவதூரு சுமத்துகிறீர்கள்? இந்து, கிறுத்துவர், புத்த மதத்தை சார்ந்தவர், கடவுளை நம்பாதவர் எல்லோரும் நரகத்திருக்குதான் போவார்கள் என்று நான் எங்கே சொன்னேன். இஸ்லாம் மதத்தில் இருப்பவர்கள் எல்லோரும் கெட்டவர்களாகவும், மற்ற மதம் மற்றும் நாத்திகர்களும் எல்லோரும் நல்லவர்களாகவும் சித்திரிக்கும் உங்கள் தீய எண்ணத்தை முதலில் மாற்றுங்கள். என்னுடைய கண்ணாடியின் நிறத்தை விமர்சிக்கும் நீங்கள் முதலில் உங்கள் கண்களை சரி செய்யுங்கள். மற்றது தானாக சரியாகும் நண்பரே.

        • //நீங்கள் என்ன செய்தாலும், உங்களுக்கு எந்த கேள்வி கணக்கும் இல்லை என்பது உங்கள் நம்பிக்கையாக இருக்கலாம்,// இது நம்பிக்கை இல்ல பாய். கேள்வி கணக்கு இருக்கு என்பது தான் நம்பிக்கை. இல்லை – என்பது இருக்கு என்னும் ஆதாரமற்ற நம்பிக்கைக்கான மறுப்பு.

          //இந்து, கிறுத்துவர், புத்த மதத்தை சார்ந்தவர், கடவுளை நம்பாதவர் எல்லோரும் நரகத்திருக்குதான் போவார்கள் என்று நான் எங்கே சொன்னேன்.// என்ன பாய் காபிர் மாதிரி பேசுறீங்க,. அல்லாவே குர்ரானுல சொல்றான் பாய்.

          • வாங்க நம்பிக்கை மறுப்பாளரே ரொம்ப நாளா காணோமேன்னு பார்தேன். உங்க கிட்டே கேட்ட ஒரு கேள்விக்கும் உங்ககிட்டேன்னு நேரிடைய ஒரு பதிலும் வரலே. அது என்ன கேள்வி கேட்டா ஓடிட வேண்டியது, அப்புறம் 4 நாள் கழிச்சி வந்து கமெண்ட் போடுறது?

            உங்க நண்பர் கற்றது கையளவுக்கு வக்காலத்து வாங்குறதுக்கு முன்னாடி, என்னோட பதிவையும் அவரோட பதிவையும் நல்லா படிங்க. அவர் எழுதுன விஷமத்தனமான பதிவை படிங்க. அது எப்படி என்ன நடக்குதுன்னே தெரியாம வந்து கமெண்ட் போட வேண்டியது? உங்கள் பகுத்தறிவை கொஞ்சம் உபயோகியுங்க.

            • மதம் என்ற சாயம் பூசிய கண்ணாடியை விலக்கி வைத்து இந்த உலகை பாருங்கள் என்கிறேன். உடனே விஷமத்தனமான பதிவுன்னு தாக்குறீங்க, நடத்துங்க… சரி, மறுபடி கேட்கிறேன். கடவுள் மறுப்பாளர்களுக்கும், அல்லா அல்லாத மற்ற கடவுள்களை வணங்குபவர்களுக்கும், அவர்கள் நல்லவர்களாக, ஒழுக்கத்தோடு,வாழ்வில் பிறர்க்கு பயனுள்ள வகையில் வாழ்ந்து மடிந்தால் அவர்களுக்கு உங்கள் குர்ஆன்படி என்ன கிடைக்கும். சொர்க்கமா, இல்லை நரகமா. இதற்கு நீங்கள் மறுபடி வழவழ கொழகொழ என்றும் தெரியாது என்றும் சொல்லாமல், குர்ஆனில் இப்படிப்பட்ட மனிதர்களுக்கு என்ன கிடைக்கும் என்று சொல்லி விடுங்கள். நான் என்னவோ இசுலாமிய மதத்தை மட்டும் எதிர்ப்பதாக தவறாக நினைக்க வேண்டாம். அனைத்து மதங்களிலும் உள்ள பிற்போக்குத்தனங்களை நான் எதிர்க்கிறேன். இந்து மதத்திலுள்ள குறைகளையும் நான் சுட்டிக்காட்டியுள்ளேன். என்னுடைய மற்ற பதிவுகளை பார்த்தால் உங்களுக்கு தெரியும். மதங்கள் ஒரு மனிதனை நல்லொழுக்க வழியில் நன்னெறியுடன் வாழ வைத்தால் எனக்கு மகிழ்ச்சியே. அதை விடுத்து மனிதர்களை சண்டைக்கோழிகளாக மாற்றும் மதவெறியை தள்ளி வைக்கலாம் என்பதே எனது தனிப்பட்ட விருப்பம். என்னை பொருத்தவரை கடவுள் ஆராய்ச்சியை விட அறிவியல் ஆராய்ச்சி மேல்.

              • கற்றது கையளவு அவர்களே,

                நீங்கள் சொன்னது போல் இந்த கட்டுரை, முஸ்லிம்கள் சில பேர் இஸ்லாத்தை பற்றி சரியாக புரியாமல் அந்த பெண்ணின் அவரச சிகிச்சைக்கு தடையாக இருந்தார்கள் என்று எழுதி இருந்தால் இதில் பிரச்சனையே இல்லை. நான் இங்கே வந்து இவ்வளவு நாட்கள் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், இந்த கட்டுரை என்னவோ இஸ்லாம் அவசர சிகிச்சைக்கு மஹ்ரம் தடையாக இருப்பதுபோல் சித்தரித்து உள்ளது. அதை நீங்கள் ஒத்து கொள்கிறீர்களா?

                சரி, இப்போது உங்களுடைய கேள்விக்கு வருவோம். இஸ்லாம் பற்றிய ஒரு அடிப்படை தவறு இங்கே பல இஸ்லாம் அல்லாத சகோதரர்களிடமும் சில முஸ்லிம் சகோதரர்களிடமும் இருக்கிறது. முஸ்லிம் எல்லோரும் சொர்கத்துக்கு போவார்கள், முஸ்லிம் அல்லாதவர்கள் எல்லோரும் நரகத்திற்கு போவார்கள் என்று யார் சொன்னது?

                இஸ்லாம் படி, இறைவன் நன்மை தீமைகளை உலகில் பிரித்து காட்டிவிட்டான். அதை மக்கள் பின்பற்றுவதும் எதிர்ப்பதும் அவர்களுடைய விருப்பம். அவர்களுக்கு உணவளிப்பதும், இந்த உலகில் அவர்களை வாழவைப்பதும் அவர்களை உருவாக்கின அந்த இறைவனே. இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் அவனை படைத்த இறைவன் முன்பு இறுதி தீர்ப்பு நாளில் கொண்டு வந்து நிறுத்தப்படுவான். அவனின் நன்மை தீமைகளை அவனுடைய உலகின் வாழ்க்கைக்கேற்ப இறைவன் தீர்பளிப்பான். அதை இந்த உலகில் நிர்ணயிக்க மனிதர்கள் யாருக்கும் உரிமை இல்லை. நீங்கள் என்னை எவ்வளவு கேட்டாலும், என்னால் நீங்கள் நினைத்ததை சொல்ல முடியாது. ஏன் என்றால், இந்த உலகில் இவர்கள் சொர்கவாதி, இவர்கள் நரகவாதி என்று நிர்ணயிக்கிற உரிமை எனக்கு இல்லை.

                அல்லாஹ் நிகரற்ற அன்புடையவன். அவனே இந்த உலகையும் இந்த உலகிலிருக்கும் எல்லோரையும் பரிபாலிக்கின்றான். அவர்கள் அவனை வணங்கினாலும், வணங்காவிட்டாலும் சரியே. இதில் நான் எப்படி அவர்கள் சொர்கத்திற்கு போவார்கள், நரகத்திற்கு போவார்கள் என்று சொல்ல முடியும். நாம் மக்களின் வெளி தோற்றத்தை பார்க்கிறோம். இறைவன் அவர்களின் மனங்களை அறிபவன். அவர்களின் எண்ணங்களை அறிபவன். அவன் தீர்ப்பு நாளின் அதிபதி. இறுதி தீர்ப்பு அவனுடையது. இதில் மனிதர்கள் யாரும் தலை இட முடியாது.

                கடவுள் நம்பிக்கை அவரவர் நம்பிக்கை சம்மந்தப்பட்டது. அது என்ன என்று சரியாக புரியாமல், அல்லது தவறாக புரிந்து கொண்டு பேசுவதால்தான் இங்கே பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

                அறிவியல் ஆராய்ச்சி கூடாது என்று நான் சொல்லவே இல்லை. ஆனால், என்னை வழி நடத்துகிற இறைவனை பற்றி நினைக்காமல், அவனுக்கு வழிபடாமல், இந்த உலக வாழ்க்கை மட்டுமே இறுதியானது என்று இந்த உலக வாழ்க்கைக்காக மட்டுமே வாழ்ந்து விட்டு மறுமை வாழ்விற்காக எதுவுமே முயற்சிக்காமல் இறப்பதில் தான் எனக்கு உடன்பாடில்லை. இந்த உலகில் இறைவனின் அத்தாட்சிகளை நான் பார்கிறேன், அவனை வணங்குகிறேன். அவன் எனக்கு போட்ட கட்டுபாடுகள் எனக்கு நல்லது என்றே நான் நினைக்கிறேன். இது என்னோட தனிப்பட்ட விருப்பம். இது தவறு என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.

                இங்கே இஸ்லாமியர்கள், இஸ்லாம் அல்லாதவர்கள், இறை மறுப்பாளர்கள் அனைவரும் பதிவிட்டோம். அவரவர் அவர்களுடைய நம்பிக்கையே உண்மையானது என்று சொன்னார்கள். இஸ்லாமியர்கள் சொல்வது போல், இறைவன் ஒருவனாக இருக்க வேண்டும், அல்லது மற்றவர்கள் சொல்வது போல் பல கடவுள்கள் இருக்க வேண்டும், அல்லது நீங்கள் சொல்வது போல் கடவுளே இல்லாமல் இருக்க வேண்டும். மூன்றும் சரியாக இருக்க முடியாது. எது உண்மையானது என்பது அந்த நேரம் வரும்போது மூன்று தரபினருக்கும் விளங்கிகொள்வோம்.

                ஒருவேளை குரான், வேதங்கள், பைபிள் சொல்வது போல், இறைவன் ஒருவனாக இருந்து, நீங்கள் அவனுக்கு முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டால், இந்த உலகில் நான் உங்களுக்கு ஓர் இறை கொள்கையை எத்தி வைத்ததிற்கு நீங்கள் எனக்கு சாட்சியாக இருங்கள்.

                நன்றி

                • எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும், அப்பொருள்
                  மெய்ப்பொருள் காண்பது அறிவு.

                  அல்லாவை வணங்காமல் இருந்தால் தவறில்லை என்று ஒத்து கொண்டதற்கு நன்றி. உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் (அது கடவுள் என்ற கருத்தை ஒத்துக்கொள்வதாக இருந்தாலும், ஒத்துக்கொல்லாவிடினும்) எங்களுக்கு.

                  • தவறான புரிதல். அல்லாஹ்வை (இறைவனை) வணங்காமல் இருந்தால் தவறில்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால், அந்த நிலையில் இறக்கும் ஒருவர் சொர்கவாதியா அல்லது நரகவாதிய என்று தீர்மானிக்கின்ற உரிமை எனக்கு இல்லை என்றே நான் கூறினேன்.

                    இன்னொரு விளக்கம்: அல்லாஹ் என்ற சொல் இஸ்லாமிற்கு மட்டுமே சொந்தமாகவும், அதை மற்ற ஆத்திகர்களும் வெறுப்பது வியப்பாக உள்ளது. அல்லாஹ் என்பது அரபியில் இறைவன் என்று பொருள். அரபியை தாய் மொழியாக கொண்ட எல்லா மதத்தவரும், தாங்கள் குறிப்பிடுற இறைவனை அல்லாஹ் என்றே சொல்வார்கள்.

                    • இப்போ என்ன சொல்ல வர்றீங்க, அல்லாவை வணங்காமல் இருந்தால் தவறில்லை என்று நீங்கள் சொல்லவில்லை என்கிறீர்கள். அப்போது அல்லாவை வணங்காமல் இருந்தால் தவறு என்று நீங்கள் சொல்வதாக அர்த்தம் கொள்ளலாமா? உங்களுக்கே தெரியாத ஒரு விடயத்தை ஏன் மற்றவர்கள் ஏற்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

                      சரி அல்லா என்றால் இறைவன் என்று கூறுகிறீர்கள், எல்லா மதத்தவருக்கும் அந்த இறைவன் (அல்லா) பெயரை நாங்கள் பொதுவாக பயன்படுத்தி கொள்கிறோம். இனி நாங்கள் இயேசு அல்லா, ஈசன் அல்லா, முருகன் அல்லா, இராமன் அல்லா,முனியாண்டிசுவரர் அல்லா, புத்தன் அல்லா என்று அழைத்து கொள்கிறோம். அப்போது எல்லோரும் அல்லாவை வணங்குவதாக நீங்கள் பெருமை பட்டு கொள்ளலாம்.

                      பாய், ரொம்ப தான் குழம்பி போய் இருக்கிறீர்கள். Relax Please 🙂

                    • இந்துக்களை பொறுத்தவரை இறைவனை வழிபடுவதற்கு எந்த வழி என்றாலும் பரவாயில்லை, அதனை ஒத்துக்கொள்கின்றனர். தீவிர ஆன்மீக உணர்வுமிக்க என்னுடைய நண்பர்கள் இந்து மதத்தில் இருந்தாலும் அல்லா சாமியையும் குழந்தை ஏசுவையும் மேரி மாதாவையும் பத்தோடு பதினொன்றாக இன்னொரு சாமியாக தான் கருதுகிறார்கள். அந்த வகையில் இந்து மதத்தில் (RSS வகை இந்து மதம் அல்ல) மற்ற கடவுளர்களையும் ஒத்து கொள்ளும் மனப்பக்குவம் உள்ளது. எந்த கடவுளையும் எப்படி வேண்டுமானாலும் வணங்க கூடிய சுதந்திரம் இந்து மதத்தில் உள்ளது. இந்து மதத்தில் சாதி வேறுபாடு போன்ற சில தவறுகள் இருந்தாலும், கடவுளை வணங்குவதில் இருக்கும் சுதந்திரம் எனக்கு பிடிக்கும்.

            • ஆமீன், பாய் டென்சன் ஆவாதீங்க. இது வரை கெட்ட ஒரு கேள்விக்கும் நீங்கள் ஒழுக்கமாக பதில் அளிக்க வில்லை.இஸ்லாம் குறித்து விவாதிக்கும் போது அது குறித்து தான் கேள்வி எழுப்புவாங்க. அந்த அடிப்படை கூட விளங்காமல் அல்லது விளங்காத மாதிரி நடித்து கொண்டு அதுலயும் இருக்கு இதுலயும் இருக்குன்னு ஏன் உளறுரீங்க. இந்த லச்சணத்துல உங்களுக்கு தெனமும் பதில் சொல்லனுமாக்கும் . திரும்பவும் சொல்லுறேன், உங்க நம்பிக்கை இல் இருந்து சிந்திக்க வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை. நீங்க ஒரு ஆதாரமும் கொடுக்காம மாற்று ஆதாரம் கேக்குறீங்க .லூசுத்தனமா இல்ல ..

              குறிப்பு : நான் ஒன்னும் கையளவு அவர்களுக்கு ரெப் கிடையாது

              • அமைதி அமைதி, கோவபடுவது நீங்களா அல்லது நானா? பாருங்க எவ்வளவு எழுத்து பிழைகள். அவசரத்தில் எழுதும் போது இப்படிதான் ஆகும். கோவத்தில் பதிவிட்டால், இப்படிதான் அநாகரிகமான வார்த்தைகள் வரும். முதலில் கொஞ்சம் ஆசுவாசபடுத்தி கொள்ளுங்கள். அப்படி என்ன நான் நீங்க கேட்ட கேள்விக்கு ஒழுக்கம் கெட்டு பதில் அளித்துவிட்டேன்? கொஞ்சம் கூற முடியுமா?

                என்னுடைய நம்பிக்கையில் இருந்து உங்களை சிந்திக்க சொல்லவே இல்லை. நீங்கள் எப்படி என்னுடைய மார்க்கம் தவறு என்று சொல்லுகிறீர்களோ, அது போல தான் உங்களுடைய கடவுள் மறுப்பு கொள்கையிலிருந்து வெளியே வந்து நிதானமாக ஆராய சொல்கிறேன்.

                நீங்க என்ன ஆதாரம் கேட்டீங்கன்னு நான் கொடுக்கலைன்னு சொல்றீங்க? உங்க பதிவுகளை படிக்கிரவர்களுக்கே யாரு லூசு தனமா சொல்லுறாங்கன்னு தெரியும். நீங்க கவலைபடாதீங்க. அது என்ன உங்களை பத்தி ஒரு கேள்வி கேட்ட உடனேயே இவ்வளவு கோவம் வருது. அநாகரிகமான வார்த்தைகளை உபயோகிப்பதே உங்களது பழக்கம் என்றால் நீங்க போது தளத்தில் விவாதிப்பதை தவிர்க்கலாம்.

                அவருக்கு போட்ட பதிவில் மூக்கை முளைத்து பதில் அளித்தீர்களே என்று கேட்டால், நீங்கள் அவருக்கு ரெப் இல்லை என்று சொல்கிறீர்கள். நடத்துங்க நண்பரே.

                • ஒழுக்கமா பதில் அளிக்கவில்லை என்றால் ஒழுக்கம் கெட்டு என்று பொருள் இல்லை. உருப்படியா பதில் அளிக்கவில்லை என்று பொருள். அரபியே படிச்சா எப்படி…கொஞ்சம் தமிழும் கத்துக்கோங்க. அல்லாஹ்தான் இந்த உலகத்தை படைத்தான் ,அவன்தான் ரெக்கை கட்டி ஜிப்ரீள அனுப்புனான் , குர்ரான ஏறக்குனான் மொகமதுக்கு என்பதற்க்கு ஆதாரம் ????? இன்னும் நிறைய இருக்க்கு குர்ரான் காமெடி.இதுக்கு பதில் சொல்லுங்க மொதல்ல

                  • ஐயா தமிழ் ஆசிரியரே, உங்களுக்கு ஒழுங்குமுறைக்கும், ஒழுக்கமுறைக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றால் நான் என்ன செய்வது.
                    ஒழுங்குமுறை = discipline
                    ஒழுக்கமுறை = manners

                    நாங்க அரபி கத்துகிட்டாலும், உங்கள போல தமிழ கொலை பண்ண மாட்டோம்.

                    நீங்கள் கேட்ட அதாரம் ஏற்கனவே 29.1.2.3.2.1.1.1 கொடுத்தாகிவிட்டது. அறிவியல் இன்று கண்டுபிடித்த விஷயங்கள் 1400 வருடங்களுக்கு முன் இருந்த ஒரு சாதாரண மனிதனுக்கு எப்படி தெரியும். இந்த கேள்வி கேட்ட அப்புறம் தான் உங்களை ஆளே பார்க்க முடியிலே. இப்போ வந்து நான் ஒழுக்கமா பதில் சொல்லலைன்னு சொல்லுறீங்க.

                    போங்க சார் போய் முதல்லே நல்லா படிச்சிட்டு வாங்க.

          • //அல்லாவே குர்ரானுல சொல்றான் பாய்.//

            Ashvin அவர்களே,

            இது குரான்லே மட்டும் இல்லே, இந்துக்களின் வேதங்களிலும், கிருத்துவர்களின் பைபிள்லேயும் சொல்லி இருக்கிறது. நீங்க இங்கே குரானை மட்டும் சொல்வது, உங்களுடைய அறிவீனதத்தின் சின்னம்மா அல்லது உங்களுடைய சதியின் அடையாளமா?

            உங்களுடைய பதிவுகளை படிக்கும் மக்களுக்கு இதன் மூலம் நீங்கள் கொண்டு செல்லும் கருத்து என்ன? இந்த சூழ்ச்சிதான் இன்று இஸ்லாமிற்கு எதிராக உலகெங்கும் நடக்கிறது. இதில் நீங்கள் பாதிக்கப்பட்டவரா? அல்லது பாதித்தவரா? என்று தெரியவில்லை.

            இறைவனை மறுக்கும் உங்களிடம் சில கேள்விகள்:

            1) நான் ஏன் நல்லவனாக இருக்க வேண்டும்.
            2) நான் ஏன் தவறு செய்ய கூடாது (யாரும் பார்க்காத போதும்).
            3) வாழ்நாள் முழுக்க கெட்டவராக இருக்கும் ஒருவர் இறந்தபின் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறாரே. அவரை போல் ஏன் எல்லாரும் தவறு செய்து சந்தோசமாக இந்த உலகில் வாழ கூடாது?
            4) நான் ஏன் மது, மாது, போதை போன்ற வஸ்த்துகளை உபயோகிக்க கூடாது?
            5) நான் ஏழையாக இருந்தாலும் எதற்க்காக நேர்மையாக இருக்க வேண்டும்.
            6) நான் ஏன் மற்றவர்களை ஏமாற்ற கூடாது?

            மனசாட்சி என்று கூறாதீர்கள். நீங்கள் எந்த தவறையும் திரும்ப திரும்ப செய்யும் போது உங்கள் மனசாட்சி அதை ஏற்றுக்கொள்ளும்.

            கடவுளை மறுக்கும் யாரும் இதற்கு பதில் சொல்லலாம்.

            • //நீங்க இங்கே குரானை மட்டும் சொல்வது, உங்களுடைய அறிவீனதத்தின் சின்னம்மா அல்லது உங்களுடைய சதியின் அடையாளமா?//

              இல்ல பாய், எல்லாம் இந்த அல்லாவோட சதி பாய், அவன்தான் சதி செய்யறதுல கில்லாடியாம்ல…

              • இது என்ன 2014-ன் சிறந்த காமெடியா?

                உங்களுடைய தவறுக்காக எதற்காக உங்களை படைத்தவன் மீது பழி சுமத்துகிறீர்கள்? 🙂

            • சிரிப்பு தான் வருகிறது. இறை நம்பிக்கை இருப்பதால் தான் ஒருவர் நல்லவராக, ஒழுக்கமானவராக இருக்க முடியுமா? இறை நம்பிக்கையையும் ஒழுக்கநெறி வாழ்வையும் முடிச்சு போட வேண்டாம் நண்பரே. இறை நம்பிக்கை உள்ளவர்களிலும் நல்லவர்கள், கெட்டவர்கள் உள்ளனர். இறை நம்பிக்கை இல்லாதவர்களிலும் நல்லவர்கள், கெட்டவர்கள் உள்ளனர். இன்னும் சொல்லப்போனால் கடவுள் பெயர் சொல்லி ஏமாற்றுபவர்களை விட கடவுளை நம்பாதவர்கள் எவ்வளவோ மேல்.

              எந்த குழந்தையும் நல்ல முழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே,
              அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே!

              ஒருவரது வளர்ப்பு முறை, சுற்றுச்சூழல் இவை ஒரு மனிதன் நல்லவனா கெட்டவனா என்பதை தீர்மானிக்கின்றன. ஒருவரது இறை நம்பிக்கையை வைத்து அவரை நல்லவராகவோ கெட்டவராகவோ தீர்மானிப்பது வேடிக்கை தான். அப்போது உங்கள் பார்வையில் இறை நம்பிக்கை உள்ளவர்கள் கெட்டவர்கள் இல்லையா, தவறு செய்யாதவர்கள் இல்லையா,இறை நம்பிக்கையுடன் தவறு செய்யும் அரசியல்வாதிகள் இல்லையா, இறை நம்பிக்கையுடன் மது, மாது, போதை பழக்கம் உள்ளவர்கள் இல்லையா? இறை நம்பிக்கை உள்ளவர்கள் நேர்மையற்றவர்களாக இருப்பதே இல்லையா, என்ன பாஸ் இது, பல நூறு பேரை கொன்ற அஜ்மல் கசாபிற்கு இறை நம்பிக்கை உண்டல்லவா, இலட்சக்கணக்கான ஈழ தமிழர்களை கொன்றொழித்த இராசபக்சேவுக்கு இறை நம்பிக்கை உண்டல்லவா? தவறு செய்வதற்கும் இறை நம்பிக்கைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

              • இறைவன் சொன்ன கட்டளைகளை முழுமையாக பின்பற்றுபவனே, இறை நம்பிக்கையாளன். ஒருவன் இறைவனின் கட்டளையை மீறி தீய செயல்கள் செய்யும் போது, அவன் இறை நம்பிக்கையிலிருந்து வெளியேறிவிடுகிறான். ஒருவன் ஒரே நேரத்தில் இறை நம்பிக்கையாளனாகவும், இறைவனின் கட்டளைகளை மாறு செய்பவனாகவும் இருக்க முடியாது. இறைவனின் பெயரை சொல்லி ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்கள். நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அவர்களை எப்படி நீங்கள் இறை நம்பிக்கையாளர்கள் என்று சொல்கிறீர்கள். அவர்கள் அந்த தவறை செய்துகொண்டிருக்கும் வரை அவர்களும் இறை மறுப்பாளர்களே.

                என் கேள்வி எல்லாம் ஒன்றே. ஒருவனுக்கு எந்த கேள்வி கணக்கும் இல்லை என்றால், அவன் ஏன் நல்லவனாக இருக்க வேண்டும்? அவனும் மற்றவர்களை போல், உலகில் உயிருடன் இருக்கும் வரை, எல்லா தீய செயல்களையும் செய்துவிட்டு பிறகு இராஜ மரியாதையுடன் இறந்துவிடலாமே. எதற்காக அவன் இவ்வளவு துயரங்களையும் அனுபவித்துக்கொண்டு நல்லவனாக, மற்றவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். லாஜிக்க பதில் சொல்லுங்க பார்போம்.

                • இறைவன் சொன்ன கட்டளைகளை கடைபிடிப்பதால் தான் ஒருவர் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இறை என்ற எண்ணம் இல்லாமலும் ஒருவர் ஒழுக்கமாக இருக்க முடியும். நீங்கள் கூறும் புகை, மது, மாது, சூது போன்ற பழக்கங்கள் எனக்கு இல்லை. சிறு வயதில் நாம் தவறு செய்ய யத்தனிக்கும்போது சாமி கண்ணை குத்தும் என்று சொல்லி பெரியவர்கள் நம்மை ஒழுங்கு படுத்துவார்கள். நாம் வளர்ந்த பின், சாமி கண்ணை குத்தும், நரகத்தில் போடும், என்னை கொப்பரையில் வாட்டி வதைக்கும் என்றெல்லாம் எண்ணி பயந்து தவறு செய்யாதிருப்போமானால் இன்னும் நாம் வளரவில்லை என்று தான் அர்த்தம். பகுத்தறிவை பயன்படுத்தி, இது நல்லது, இது கெட்டது என்று நாம் தான் நமது அறிவை பயன்படுத்தி ஒழுக்கமாக வாழ வேண்டும். ஒருவன் ஒழுக்கமாக இருப்பதற்கும் கடவுள் நம்பிக்கை கொண்டிருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கடவுளுக்கு பயந்து தான் நான் ஒழுக்கமாக இருக்கிறேன் என்று நீங்கள் நினைத்தீர்களானால் அது உங்களது அறியாமை தான்.

                  • நீங்கள் என்னுடைய பதிவை தவறாக புரிந்து கொண்டுள்ளீர். இறை நம்பிக்கை இருந்தால் தான் ஒருவன் நல்லவராக இருக்க முடியும் என்றோ, இறை நம்பிக்கை இல்லாதவர் நல்லவர் இல்லை என்றோ நாள் சொல்லவே இல்லை. நான் மேலே சொன்னது, இறைவன் மீது நம்பிக்கை கொண்டவன் தீய காரியங்களை செய்தால், அவனுடைய இறை நம்பிக்கை அங்கே இல்லாமல் போகிறது. அவன் மற்ற நேரங்களில் இறை நம்பிக்கை கொண்டிருந்தாலும், அவன் தவறிழைக்கும் போது, அவன் இறை நம்பிக்கையிலிருந்து வெளியேறிவிடுகிறான். அவன் தன்னுடைய தவறை எண்ணி வருந்தி பாவ மன்னிப்பு கேட்டு, அந்த பாவத்திற்கான பிராயச்சித்தம் செய்யாதவரை.

                    சரி, இப்போ கேள்விக்கு வருவோம். நான் கேட்பதெல்லாம்,
                    1) நாம் ஏன் நல்லவராக இருக்க வேண்டும்?
                    2) என் பக்கத்து வீட்டுக்காரர் ஊரை ஏமாற்றி காசு சேர்த்து பணக்காரராக வாழும்போது நான் மட்டும் எதற்காக ஏழையாக இருந்தாலும் யாரையும் ஏமாற்றாமல் வாழ வேண்டும்?
                    3) நான் ஏன் தவறான வழியில் பணம் சேர்த்து சாகிற வரைக்கும் சொகுசாக வாழ கூடாது?

                    • தீய காரியங்களை செய்தால் இறை நம்பிக்கை அங்கே இல்லாமல் போகிறது என்கிறீர்கள். சரி, நல்ல காரியங்களை செய்தால்?

                      மூன்று கேள்விகள் கேட்டுள்ளீர்கள்.
                      அந்த மூன்று கேள்விகளுக்கும் உங்களுடைய பதில் என்ன?

                      என்னை பொறுத்தவரை ஒருவர் வளர்ந்த விதம், தாய் தந்தை ஆசிரியர் நண்பர்கள் இவர்களின் தாக்கம், சுற்றுப்புற சூழ்நிலைகள் ஒருவர் நல்லவராகவும் கெட்டவராகவும் உருவாக்கும் நிலை ஏற்படுகிறது.

                      அந்த காலங்களில் தவறு செய்யாமல் இருப்பதற்கு ஒரு பயத்தை உருவாக்க தான் சாமி கண்ணை குத்தும், நரகத்தில் போட்டு விடும், என்னை கொப்பரையில் வாட்டி வதைக்கும் என்று பயமுறுத்தி மக்களை நன்னெறி வழியில் நடத்தி செல்லப்பட்டனர். கொஞ்சம் விவரம் தெளிந்த பின், இந்த பயமெல்லாம் இல்லாமலேயும் நல்லவராக வாழலாம் என நாம் தெரிந்து கொள்கிறோம்.

                      நீங்கள் கேள்வி கேட்பதை பார்த்தால் நாம் இறந்த பின் கடவுள் நரகத்தில் தள்ளி விடுவார் என்ற பயத்தினால் தான் மனிதர்கள் நல்லவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் ஒழுக்கமானவர்கலாகவும் இருப்பதாக ஒரு பிரம்மையை ஏற்படுத்துகிறீர்கள். நல்லவராக வாழ்வதற்கு இறை பயம் அல்லது இறை நம்பிக்கை ஒரு தேவையே இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து.

                  • கற்றது கையளவு அவர்களே,

                    //அந்த மூன்று கேள்விகளுக்கும் உங்களுடைய பதில் என்ன?//
                    நான்தான் 1400 வருடங்களுக்கு முன்னரே இன்னமும் இருக்கிறேன்னு சொல்லிடீங்களே சார், அப்புறம் என்னோட பதில் வச்சி என்ன சொல்ல போறீங்க?

                    //நல்லவராக வாழ்வதற்கு இறை பயம் அல்லது இறை நம்பிக்கை ஒரு தேவையே இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து.//
                    நான் “ஏன்? எதற்காக?” என்று கேட்கிறேன், நீங்கள் “எப்படி?” என்பதற்கு பதில் சொல்லிக்கொண்டுள்ளீர். ஒருவன் எப்படி நல்லவன் ஆவான், எப்படி கெட்டவன் ஆவான் என்று கேட்கவில்லை. ஏன் நல்லவனாக இருக்க வேண்டும்? எதற்காக தீய வழியில் செல்ல கூடாது? என்று கேட்கிறேன்.

                    இதைதான், 41.1.1.1.2, 41.1.1.1.2.2.1, 41.1.1.1.2.2.1.1.1 பதிவுகளில் கேட்டுள்ளேன்.

                    இன்னொரு கேள்வி, நான் வாழ்நாள் முழுக்க எல்லா கஷ்டங்களும் சகித்து கொண்டு, ஏழையாகவே வாழ்ந்து இறப்பதற்கும், ஒருவன், எல்லா கொடுமைகளையும் செய்துகொண்டு உலகின் எல்லா ஆடம்பரங்களும் அனுபவித்து கொண்டு இராஜ மரியாதையுடன் இறப்பதற்கும் என்ன வித்தியாசம்? நான் ஏன் அவனை பின்பற்ற கூடாது?

                    • என் பதிலை முழுதாக படித்து பாருங்கள் நண்பரே. உங்கள் மூன்று கேள்விகளுக்கும் பதில் அதில் உள்ளது.

                    • கடவுள் நம்பிக்கை உள்ளதினால் மட்டும் ஒருவர் நல்லவராக நேர்மையானவராக இருக்க முடியும் என்பது உங்களது நம்பிக்கையாக இருக்கலாம். ஆனால் அது அனைவருக்கும் பொருந்தும் என கூற இயலாது. நீங்கள் கொடுமைகள் செய்யக்கூடியவராக இருப்பது உங்கள் விருப்பம். நல்லவராக வாழ தேர்ந்தெடுப்பதும் உங்கள் விருப்பம். இதில் கடவுளை நுழைக்காதீர்கள். Be Good, Do Good, Simple!! Don’t Complicate.

                    • அமீன்,

                      சிறு வயதில் நாம் தவறு செய்யும்போது நம் தந்தையோ, இல்லை ஆசிரியரோ, நாம் தவறு செய்தால் கோலெடுத்து அடித்து விடுவேன் என்று பயமுறுத்துவார்கள். சில சமயம் குழந்தையாக நாம் செய்யும் நல்ல காரியங்களை பாராட்டி ஒரு மிட்டாய் அல்லது சாக்லேட் பரிசாக வழங்குவார்கள். அது அறியாத வயதில், நாம் சரி எது தவறு எது என்று அறியாத வயதில் நம்மை நல்வழிப்படுத்துவதற்காக கோல் ஒரு பயமுறுத்தும் ஆயுதமாக பயன்பட்டது. நாம் வளர்ந்தவுடன் கோல் அடி இல்லாமலேயே, மிட்டாய், சாக்லேட் இல்லாமேலேயே நாம் நல்வழி நடக்க பழகுகின்றோம். அந்த சாக்லேட் போல, கோல் போல தான் மதங்கள் கூறும் சொர்க்கம் நரகம் கதை எல்லாம். நாம் பெரியவராக (வயதில் மட்டும் அல்ல, அறிவிலும், அனுபவத்திலும்) வளர்ந்த பின்னும் நாம் நல்வழி நடக்க கடவுள் சொர்க்கலோகத்தை பரிசாக வழங்குவார் என்றும், பாவம் செய்தால் நரக வேதனையை கொடுப்பார் என்ற கோல்/சாக்லேட் வகை பயமுறுத்தல்கள்/பரிசுகள் நமக்கு தேவைப்படாது. இல்லை, பாவம் செய்தால் நரகம் கிடைக்கும் என்ற அந்த கோல் அடிக்கு பயந்து தான் நீங்கள் பாவம் செய்யாமல் இருப்பீர்களானால் அது உங்கள் அறியாமையை தான் காட்டுகிறது. சக மனிதர்களுக்கு தீங்கு செய்யாமல், அவர்களுக்கு நம்மால் ஆனா நல்லவை செய்து ஒழுக்கத்துடன் வாழ்வதற்கு கடவுள்/இறைவன்/அல்லா/இயேசு/இந்து கடவுள்கள் இவர்களின் தாக்கம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களது சொந்த மதத்தை கொஞ்ச நேரம் மறந்து, ஒரு பொதுவான கண்ணோட்டத்தில் பார்த்தால் உங்களுக்கு நாம் சொன்னதன் அர்த்தம் புரியும். ஆனால் மத கண்ணாடியை அணிந்து கொண்டு தான் பார்ப்பேன் என்றால் நான் சொல்வது உங்களுக்கு விளங்காமலே போகலாம். இசுலாம் மதத்தை இழிவுபடுத்துவது என் நோக்கம் அல்ல. நீங்கள் மீண்டும் மீண்டும் மனிதர்கள் கெட்ட வழிகளில் போகாமல் நல்வழிகளில் போக என்ன காரணம் என்று பல முறை கேட்டு அதற்கு நான் அளித்த பதில்கள் விளங்காமல் மீண்டும் அதே கேள்வியை கேட்பதனால் தான் இந்த பதிலை நான் அளிக்கிறேன். மற்றபடி நீங்கள் உங்கள் மதகோட்பாட்டின்படி நடப்பதற்கு எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. உங்கள் மதம் உங்கள் சக மனிதர்களை காயப்படுத்தாமல் அவர்களுக்கு உங்களால் ஆனா உதவிகளை செய்ய கற்று கொடுத்ததென்றால் அது போதும் எனக்கு.

                  • //Be Good, Do Good, Simple!! Don’t Complicate//

                    நீங்கள் உண்மையிலயே புரியாமல் பதிவிடுகிரீர்களா அல்லது புரிந்தும் புரியாதமாதிரி இருக்கீங்களான்னு தெரியல.

                    Be good, Do Good.. இதெல்லாம் ஓகே. என்னோட கேள்வி, why I should be good, why I should do good? Why don’t I be a criminal and enjoy my life?

                    கேள்வி புரிஞ்சிதா? உங்க பதிவு முழுவதும் 4 தடவை படித்துவிட்டேன். நான் கேட்ட கேள்விக்கு அங்கே பதிலே காணோம்.

                    • என்ன அமீன்,

                      எத்தனை தடவை உங்களுக்கு பதில் சொல்வது. எனது பதிவுகளை முழுவதுமாக படித்தாலே எனது பதில் அதில் அடங்கி இருப்பது உங்களுக்கு தெரியும்.

                      சரி, மிகவும் தெளிவாகவே பதிலளிக்கிறேன்.

                      // Why I should be Good, Why I should do Good, Why dont be a criminal and enjoy my life? //

                      இது தானே உங்கள் கேள்வி.

                      ஒருவன் நல்லவனாகவும், கெட்டவனாகவும் உருவாவதற்கு அவன் வளர்ந்த விதம், பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் சேர்க்கை, சுற்றுப்புற சூழல், அவன் வாழ்வில் அவனுக்கு ஏற்படும் அனுபவங்கள் தீர்மானிக்கின்றன. இது நல்லது, இது கெட்டது என்று அவனது அறிவுக்கு எட்டிய ஒன்றை அந்த மனிதன் தீர்மானிக்கிறான்.

                      என்னை பொறுத்தவரை, நான் வளர்ந்த விதத்தில், பெற்றோரின் அறிவுரை, ஆசிரியரின் நல்லொழுக்க பாடங்கள், பல்வேறு நன்னெறி நூல்கள், நல்ல நண்பர்கள், கெட்ட சகவாசத்தால் வாழ்வை தொலைத்த எனது சில நண்பர்களின் அனுபவங்கள், இதன் மூலம் எனக்கு இது சரி, இது தவறு என்று மனம் தீர்மானித்ததை வைத்து நான் செயல்படுகிறேன்.

                      சிறு வயதில் எனது தெரு முனையில் இருக்கும் சாராயக்கடையில் குடித்து விட்டு போவோர் வருவோரிடம் தகராறு செய்யும், குடிபோதை அதிகமாகி சாக்கடையில் வேட்டியின்றி வெட்கமின்றி விழுந்து கிடக்கும் குடிகாரர்களை கண்டதால் எனக்கு சிறு வயதின் முதல் குடிப்பதன் மேல் ஒரு வெறுப்பு. இது என் ஒருவனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவம். எனது நண்பனுக்கு அவனது தந்தை யாருக்கும் தொந்தரவில்லாது குடிப்பதை பார்த்து அவனும் குடிக்க ஆரம்பிக்கிறான். இதில் எனக்கு தவறாக தெரியும் ஒரு சங்கதி எனது நண்பனுக்கு சரியாக தோன்றும்.

                      தெருவிளக்கு சரியில்லை, சாக்கடை அடைப்பு, மின்சார துண்டிப்பு போன்ற சமயங்களில் என் தந்தை மாநகராட்சிக்கும், மின்சார வாரியத்துக்கும் மாற்றி மாற்றி புகார் கொடுப்பதை பார்த்து வளர்ந்ததால் எனக்கும் அதே பழக்கம் தொற்றிக்கொண்டது. யாருக்கு என்ன நேர்ந்தால் எனக்கென்ன என்று என் தந்தை இருந்திருந்தால் எனக்கும் அதே நினைப்பு வந்திருக்கலாம்.

                      ஆக, ஒருவன் நல்லவனாவதும், கெட்டவனாவதும் அவன் அவனது சுற்றுச்சூழல் மூலம் என்ன கற்றுக்கொள்கிறான், என்ன அனுபவம் அவனுக்கு ஏற்படுகிறது, இதுவே தீர்மானிக்கிறது. இதில் உங்கள் இறை நம்பிக்கை எங்கே வருகிறது? நல்லவனாக வாழ்வதற்கு இறை நம்பிக்கை ஒரு அவசியமே இல்லையே. நல்லவராகவும், கெட்டவராகவும் வாழ்வது உங்கள் இஷ்டம். உங்களை பொறுத்தவரை கெட்டவராக வாழ்ந்தால் இறைவன் தண்டிப்பார் என்ற பயத்தினால் நல்லவராக வாழ்கிறோம் என்று கூறுகிறீர்கள். என்னை பொறுத்தவரை கெட்டவனாக வாழ எனக்கு பிடிக்கவில்லை. நான் வளர்ந்த சூழ்நிலை, கற்ற நூல்களின் வழியில் பகுத்து அறிந்து ஆராய்ந்து பின் நல்லவனாக வாழ நான் முடிவெடுக்கிறேன். இதில் உங்களுக்கு என்ன கஷ்டம்.

              • என் அருமை நண்பர் கற்றது கையளவு அவர்களே, மறுபடியும் மறுபடியும் நீங்கள் அரைத்த மாவையே அரைத்து கொண்டுள்ளீர்.

                நான் கேட்ட கேள்வி: நாம் ஏன் நல்லவராக இருக்க வேண்டும்?
                நீங்கள் பதில் அளிப்பது: நாம் எதனால் நல்லவராக இருக்கிறோம்?

                இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா?

                சரி ஒரு உதாரணம் சொல்லுகிறேன்.

                ஒரு மாணவரிடம் நீங்கள் கேள்வி கேட்கின்றீர்.
                1) நீ ஏன் 99% மதிப்பெண் எடுக்க வேண்டும்.
                பதில்: மருத்துவ கல்வியில் சேருவதற்காக.
                2) நீ எதனால் 99% மதிப்பெண் எடுக்கிறாய்?
                பதில்: நான் காலை எழுந்து படிக்கிறேன், மாலையில் படிக்கிறேன், தேவை இல்லாத செயல்களில் நேரத்தை வீணாக்குவதில்லை.

                நான் முதலாம் கேள்வியை கேட்கிறேன், நீங்கள் இரண்டாவது பதிலை தருகிறீர்கள். இப்போ புரியுதா, நான் கேட்கும் கேள்விக்கும் நீங்கள் கொடுக்கும் பதிலுக்கும் உள்ள வித்தியாசம். இதற்கு மேல் என்னால் விளக்க முடியாது.

                //கற்ற நூல்களின் வழியில் பகுத்து அறிந்து ஆராய்ந்து பின் நல்லவனாக வாழ நான் முடிவெடுக்கிறேன்.//
                நான் ஏன் நல்லவனாக வாழ முடிவு எடுக்க வேண்டும்? நான் கெட்டவனாக வாழ்ந்து வாழ்க்கையை அனுபவித்துவிட்டு இறந்துவிடலாமே? நான் ஏன் நல்லவனாக வாழ வேண்டும்?

                //இதில் எனக்கு தவறாக தெரியும் ஒரு சங்கதி எனது நண்பனுக்கு சரியாக தோன்றும்.//
                எது சரி எது தவறு என்று முடிவெடுப்பது ஒரு தனி தலையங்கம். நாம் எதற்காக நல்லவனாக வாழவேண்டும் என்பதை முடிவு செய்து விட்டு பிறகு எது நல்லது என்பதை பற்றி ஆராய்வோம்.

                • அமீன்,

                  ஏன் நல்லவராக இருக்க வேண்டும் என்று திரும்ப திரும்ப கேட்கிறீர்கள். உங்களுக்கு நல்லவராக இருப்பதற்கு ஒரு குறிக்கோள் உள்ளது. ஆதாவது இறைவன் எங்கே உங்களை நரகத்தில் தள்ளி விடுவாரோ என்ற பயத்தினால் நல்லவராக நீங்கள் இருப்பதாக எனக்கு விளங்குகிறது. எனக்கு இறை பயமும் இல்லை, நரக பயமும் இல்லை. எனக்கு நல்லவனாக வாழ பிடித்திருக்கிறது. கெட்டவராக வாழ்வதால் கூட நமக்கும், நம்மால் மற்றவர்களுக்கு ஏற்படும் தொல்லைகள் பற்றி அறிந்ததனால் இப்படி வாழ எனக்கு பிடித்திருக்கிறது. இந்த உலகில் நாம் நிரந்திரமாக குடியிருக்க போவதில்லை. இருக்கும் வரை மற்றவர்களுக்கு தொல்லை தராமல் அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பயனுள்ள வாழ்க்கையை வாழ்ந்து விட்டு போவோம் என்பது என் விருப்பம்.அவ்வளவு தான். இதற்கு ஏன் நீங்கள் இத்தனை முறை ஒரே கேள்வியை கேட்கிறீர்கள்? ஒருவேளை நீங்கள் எதிர்பார்க்கும் ஏதோ ஒரு குறிப்பிட்ட பதில் என்னிடம் வர வேண்டும் என்று காத்திருக்கிறீர்களா? என்ன பதிலை என்னிடம் எதிர்பார்க்கிறீர்கள்? தெளிவாக இது தான் என் பதில் என்று சொல்லி விட்டேன். சரி, நீங்கள் ஏன் நல்லவராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? நீங்களாவது சொல்லுங்களேன்?

                  • நண்பரே, நீங்கள் நல்லவராக எதற்காக இருக்கிறீர்கள் என்று நான் கேட்கவில்லை. நீங்கள் தன்னிலை விளக்கம் அளிக்க தேவை இல்லை.
                    மதம் என்ற கண்ணாடி என் கண்களை மறைப்பதால், அதை அகற்றிவிட்டு உலகத்தை பார்க்க சொன்னீர்கள். சரி, அப்படியென்றால் நான் வாழ்வது சில காலம் இந்த பூமியில். நாம் இங்கே என்ன செய்தாலும் நமக்கு எந்த கேள்விகணக்கும் இல்லை என்பது உங்கள் கருத்து.
                    ஒருவன் என்ன செய்தாலும் அவனுக்கு எந்த கேள்விகணக்கும் இல்லை என்றால், அவன் எதற்காக நல்லது செய்யவேண்டும் என்று கேட்டேன். அதற்கு நீங்கள் நல்லவராக இருக்கிறீர்கள் என்று சொல்கிறீர்கள். உங்களை எதற்காக எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்?
                    நான் நல்லவனாக எதற்கு இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை.
                    நானும் உலகை ஏமாற்றி சுகபோகமாக வாழ்ந்து இராஜ மரியாதையுடன் இறக்கலாமே என்று கேட்டதற்கு உங்களிடம் எந்த பதிலும் இல்லை.
                    நான் உங்களை குறை கூறவில்லை. உங்களை போல இங்கே நாத்திகம் பேசும் யாருக்கும் இந்த கேள்விக்கு பதில் தெரியாது.

                    //எனக்கு இறை பயமும் இல்லை, நரக பயமும் இல்லை. எனக்கு நல்லவனாக வாழ பிடித்திருக்கிறது.//
                    எனக்கும் எந்த பயமுமில்லை, நான் கெட்டவனாக வாழ பிடிக்கிறது என்று நான் சொன்னால் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? அப்படி கெட்டவனாக வாழ்ந்தால் உங்களால் என்னை என்ன செய்ய முடியும்?

                    //என்பது என் விருப்பம்.அவ்வளவு தான்//
                    இது உங்கள் விருப்பமாக இருக்கலாம். அதை நீங்கள் என் மீது திணிக்க எண்ணினால், பகுத்தறிவுக்கு ஏற்றுக்கொள்ளுமாறு நீங்கள் விளக்க வேண்டும். மதங்களை தவிர்த்து உலகத்தை பார்க்க சொல்கிறீர்கள். மதங்களை தவிர்த்து கேள்வி கேட்டால், இது என் விருப்பம், உங்களுக்கென்ன? என்று கேட்கிறீர்கள்.

                    //நீங்கள் ஏன் நல்லவராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? நீங்களாவது சொல்லுங்களேன்?//
                    இஸ்லாமின்படி இந்த உலக வாழ்க்கை ஒரு தேர்வு. நீங்கள் இங்கே தேர்வு எழுதிகொண்டுள்ளீர். நீங்கள் இளவயது முதல் நீங்கள் வாழும் 50,60,70 காலம் நீங்கள் தேர்வு எழுதுவீர்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் எழுதிவைக்கப்படும். அந்த தேர்வின் முடிவே நீங்கள் சொர்கதிலோ அல்லது நரகத்திலோ உங்களை கொண்டுபோய் சேர்க்கும்..

                    ஒருவன் சொர்க்கம் செல்ல வேண்டுமானால் நான்கு பாடங்களில் அவன் வெற்றி பெற வேண்டும்.(குரான் 103:3)
                    1) ஈமான் (இறைவனையும், தூதுவர்களையும், வானவர்களையும், இறுதி நாளையும், கேள்வி கேட்கப்படுவோம் என்பதையும், சொர்க்கம், நரகம் என்பதையும் நம்ப வேண்டும்)
                    2) நல்ல காரியங்கள் செய்ய வேண்டும்
                    3) சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்யவேண்டும்.
                    4) பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்க வேண்டும்.

                    இந்த நான்கு விஷயங்களிலும் ஒருவன் வெற்றி பெற வேண்டும். ஒன்றில் 100% வாங்கிவிட்டு, மற்றொன்றில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அது உதவாது.

                    இதுவே இஸ்லாத்தின் நிலைப்பாடு. இஸ்லாம் நேர்த்தியான வழிமுறைகளை மக்களுக்கு சொல்லிகொடுக்கிறது. இங்கே இப்படியும் வாழலாம், அப்படியும் வாழலாம் என்ற தான்தோன்றித்தனம் இல்லை. இந்த பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் ஒரு குறிக்கோள் இருக்கிறது. மனிதனுக்கும் ஒரு குறிக்கோள் இருக்கிறது. அது அவனை படைத்த இறைவனை வழிபடுவது. இதுவே அடித்தளம். இந்த உலகத்தில் படைக்கப்பட மற்ற அனைத்தும் மனிதன் அந்த குறிக்கோளை அடைவதற்கு அவனுக்கு உதவுகின்றன. தான் எப்படிவேண்டுமானாலும் வாழலாம் என்ற நிலைப்பாடு பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்து.

        • //இஸ்லாம் மதத்தில் இருப்பவர்கள் எல்லோரும் கெட்டவர்களாகவும், மற்ற மதம் மற்றும் நாத்திகர்களும் எல்லோரும் நல்லவர்களாகவும் சித்திரிக்கும் உங்கள் தீய எண்ணத்தை…// இஸ்லாம் மதத்தினர் எல்லோரும் கெட்டவர்கள் என்றும் மற்ற மதத்தினர் எல்லோரும் நல்லவர்கள் என்று எப்போது நான் சொன்னேன்? எல்லா மதங்களிலும் நல்லவர்களும் உள்ளார்கள், கேட்டவர்களும் உள்ளார்கள். நீங்கள் தான் நான் இருளில் இருப்பதாகவும், நீங்கள் எமக்கு வெளிச்சம் காட்டுவதாகவும் கூறினீர். மதம் என்பது மனிதர்கள் உருவாக்கியது. அனைத்து மதப்புத்தகங்களும் மனிதர்களால் தான் எழுதப்பட்டது. மதத்திரையை விளக்கி பாருங்கள் நண்பரே 🙂

  38. கற்றது கையளவு அவர்களே,

    தீர்ப்பு நாள் அன்று நடக்கும் நிகழ்வுகள் நம்முடைய அறிவின் எல்லைக்கு அப்பாற்பட்டது. குரான், அத்தியாயம் 81ல் அல்லாஹ் விவரிக்கின்றான். அல்லாஹ் “கடல்கள் தீ மூட்டப்படும்” என்கிறான். இது நம்முடைய இன்றைய சூழ்நிலையில் நம்முடைய அறிவாள் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் அப்படி நடக்கவே நடக்காதுன்னு சொல்ல முடியாது. இறந்தவர்கள் மீண்டும் எழுப்பப்படுவார்கள் என்று அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில் கூறுகிறான். இதையும் நம்முடைய அறிவாள் அறிய முடியுமா?

    சில விஷயங்கள் நம்மால் சொல்ல முடியும், அறிவியல் கொண்டு சோதனை செய்து பார்க்க முடியும். சில விஷயங்கள் நம்முடைய கற்பனைக்கு வெளியே இருக்கும்.அதை சொல்ல முடியாது.

    சூரியனை விட மற்ற நட்சத்திரங்கள் பெரியதுன்னு அதை படைத்த இறைவனுக்கு தெரியாதா? இல்லை பெரிய நட்சத்திரம் உதிர கூடாதா? இதில் மட்டும் உங்களுக்கு என்ன பிரச்னை?

    தீர்ப்பு நாளுக்கு முன் சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் என்று அல்லாஹ் சொல்கிறான். இது எப்படி முடியும் என்று கேட்டால், நான் என்ன பதில் சொல்வது. சூரியனை படைத்து அதை அதன் அர்பிட்டில் சுழல வாய்த்த இறைவன் அதை மேற்கிலிருந்து உதிக்கவைக்க சக்தி பெற்றவனே…

    அவனே சூரியனை “சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்ட மற்றும் நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர வைக்க ஆற்றல் பெற்றவன். இது எங்கள் நம்பிக்கை. எப்படி என்று கேள்வி கேட்டால், நடக்கும் போது பார்ப்பீர்கள் என்றே பதில் சொல்ல முடியும்.

    Allah knows the best.

    • தீர்ப்பு நாளன்று கடல் பற்றி எரியும், சூரியன் மேற்கே உதிக்கும்,,,, நடத்துங்க… பூமியும், சூரியனும் அழியக்கூடியவை தான். என்ன, ஒரு 400 கோடி ஆண்டுகள் காத்திருங்கள். அப்போது சூரியனில் உள்ள ஹீலியம் எரிவாயு தீர்ந்து போய், தற்போதைய அளவை விட பெரிதாக வளர்ந்து, சிவப்பு இராட்சன் போல மிகப்பெரிய செவ்வண்ண பந்தாக, பூமியின் சுற்றுப்பாதை வரை வீங்கும். அப்போது பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் வெப்பம் தாளாமல் அழிந்து விடும். கடல்கள் அனைத்தும் வெப்பத்தினால் ஆவியாகி விடும். பூமி தற்போதைய மெர்குரி (புதன்) கிரகத்தை போல சூடான ஒரு கல்லாகி விடும். பின்னர் சூரியன் உட்புறமாக குறுகி அதன் வெப்பம் முழுதும் தீர்ந்து பூமியின் அளவில் ஒரு சிறு கல்லாகி விடும். சூரியனை போல ஏனைய நட்சத்திரங்களுக்கும் இது தான் முடிவு. அதற்குள் மனிதன் வேறு கிரகங்களில் வாழக்கற்றுக்கொண்டு சென்று விடுவான். இது அத்தனையும் நடக்க ஒரு 400 – 500 கோடி ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

      • நான் முன்னே சொன்னது போல், இதை இயக்க இதனை உருவாக்கியவன் வேண்டும் என்று நான் சொல்கிறேன். தானாக நடக்கும் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். நடக்கும் போது இருவரும் தெரிந்து கொள்வோம்.

        • சூரியனின் எரிசக்தி நிரந்தரமானதல்ல, அணுக்கரு இணைவு (Nuclear fusion) எரிபொருள் அனைத்தும் ஒரு நாள் தீரும். அதை தான் நான் குறிப்பிட்டேன். எரிபொருள் தீரும்போது எந்த ஒரு எரியும் பொருளும் அணைவதற்கு முன் சற்று அதிகம் எரிந்து பின்னர் முற்றிலும் அணைந்து விடும். இதற்கு யாரும் இயக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

      • வக்கிர புத்தி கொண்ட எவனோ ஒருவன் போதையில் எழுதியதற்கு என்னிடம் என்ன விளக்கம் எதிர்பார்கிறீர்கள்?

        http://en.wikipedia.org/wiki/The_100:_A_Ranking_of_the_Most_Influential_Persons_in_History

        இதை சொல்பவர் முஸ்லிம் அல்ல.

        இஸ்லாமை இல்லாமல் ஆக்கவேண்டும் என்று உங்கள் அபிமானி மட்டும் அல்ல, அவரை போல பல ஆயிரம் பேர் ஏற்கனவே வந்து போய்விட்டனர். இன்று உலகில் வேகமாக பரவும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. இதை உங்களால் மறுக்க முடியுமா?

        நான் என்னுடைய பதிவு 32.1-ல் சொன்னதுபோல இதுபோல 1000 தளங்கள் யார் வேண்டுமானாலும் எழுதலாம். இதில் அவர் குறிப்பிட்ட ஹதீஸ் எண்கள் ஒன்று கூட சரி இல்லை. நடுநிலை என்று சொல்லிக்கொள்கிற நீங்களே கொஞ்சம் இன்டர்நெட்டில் தேடினால், அவருடைய பித்தலாட்டம் தெரிந்துவிடும். ஆனால், உங்களுக்கு உண்மையை அறிவதை விட என்னை தவறாக சித்தரிக்கிற எண்ணமே மேலோங்கி இருப்பதால், உண்மையை ஆராயாமல் இங்கே பதிவிடுகிறீர்கள்.

        நீங்கள் சொன்ன அதே குறளை உங்களுக்கு நினைவூட்ட எண்ணுகிறேன்.

        எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்
        மெய்ப்பொருள் காண்பது அறிவு.

        • அமீன் பாய், நான் இணையதளங்களில் உள்ள அனைத்தும் உண்மை என்று நம்புபவன் அல்ல. இன்று அந்த லிங்க் ஐ பார்த்தேன். அது உண்மையா என்று தெரிந்து கொள்ள தான் உங்களிடம் விளக்கம் கேட்டேன். உங்களை தவறாக சித்தரிக்கும் எண்ணம் எனக்கு இல்லை நண்பரே.

        • அந்த லிஸ்ட் ஐ பார்த்தேன். வரிசையில் உள்ள மனிதர்களின் முக்கியத்துவம் குறித்து எனக்கு கருத்து வேறுபாடு இல்லையென்றாலும், வரிசை அமைத்ததில் சில கருத்து வேறுபாடு உண்டு. மத போதகர்கள் பற்றி நான் பேசுவது சரியாக இருக்காது. ஆனால் அறிவியல் ஆராய்ச்சியில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன் ஆகியோரை விட நியுட்டன் வரிசையில் மேலே இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. சக்கரத்தை கண்டுபிடித்தது, சிக்கி முக்கி கற்களை கொண்டு நெருப்பை உருவாக்கியது, நீராவி எஞ்சின், மின்சாரம், மின்னணு, தொலை தொடர்பியல், என பல்வேறு வகையில் அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் கடும் உழைப்பின் மூலம், முயற்ச்சியின் மூலம் மனித குலம் பல்வேறு காலங்களில் பயனடைந்து வந்துள்ளது. என்னுடைய வரிசைப்படுத்தலில் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மத குருமார்களை விட ஒரு படி மேலே தான். (இது முழுக்க முழுக்க என் சொந்த கருத்து, மற்றவர்களும் என் கருத்தோடு ஒன்றி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை).

      • அது என்ன கற்றது கையளவு அவர்களே,

        நீங்க மட்டும் அங்கே இங்கேன்னு தேடி கண்டுபிடிச்சி சைட் லின்க் எல்லாம் தந்து பதில் எதிர்பார்கிறீங்க. ஆனா நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லாமல் நைசா நழுவிடுறீங்க. நல்லா இருக்கு உங்க எஸ்கேபிசம்.

        • எனக்கு தெரிந்தவரை நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு அவ்வப்போது விளக்கமளித்து கொண்டு தான் இருக்கிறேன். ஏதாவது கேள்விக்கு பதில் அளிக்கவில்லை என்றால் சொல்லவும், பதிலளிக்கிறேன்.

  39. Ameen,

    //“பெண்கள் மட்டும் இருந்து…” என்று சொல்லி இருக்கிறது.//

    I did some research. The word ‘மட்டும்/ONLY’ is not in the verse in the quran. It has been inserted by others with brackets. Some sites may not show the brackets while others show. Quran dot com shows this bracket.

    Ali Sina knows that the word ‘only’ does not exist in this verse in quran. That is why he has written about it. Only error he has done is in copy pasting the verse from a site without editing it out. The translator has also translated the text as such. I too have not noticed it. But it does not absolve quran.

    • //Only error he (Ali Sina) has done is in copy pasting the verse from a site without editing it out.//
      As per your comment, your so called genius Ali Sina said, //மகள் பாதி சொத்தையும் மற்ற எல்லா மகன்களும் மீதி பாதியையும் தங்களுக்குள் பிரித்துக்கொள்ளவேண்டும்.//
      Where in Quran he took the words “மற்ற எல்லா மகன்களும்” in this verse? Why did he insert his own understanding into this verse and claim it from Quran?

      From where did he copy paste the verse? If he is so genius in Arabic, why is he copy pasting from any website without even reading and understanding it. On top of that, when you claim it as true, don’t you do research in understanding what you paste over here? When you ask question here and when there is mistake in your question itself, then you are trying to blame others. Who is the others whom who claim inserted brackets?

      Basic mistake you are doing here is pulling versus out of context. When I am playing with my Kid, if I say, “Lets play Jungle game, I am the Lion and I am going to eat you… “. If you just pull the sentence “I am going to eat you”, and claim that I am going to eat my Kids, does it make sense? Your’s and your genius Ali Sina’s claims are nonetheless the same.

      The quran clearly explains the inheritance law which you cannot deny. The only thing you can do now is pulling versus out of Context.

  40. அமீன் ..

    //சுத்தி சுத்தி எல்லோரும் ஒரே கேள்விதான் கேட்டுள்ளீர்கள். இதில் எத்தனை பெயர் நாத்திகர், எத்தனை பெயர் ஆத்திகர் என்ற விவரங்கள் சொன்னால், உங்களுக்கு புரிகின்ற மாதிரி பதில் சொல்ல சுலபமாக இருக்கும். சொல்ல முடியுமா?//

    இந்த கேள்வி தமிழ்ஹிந்து தலத்தில் வாசகர் ஒருவரால் கேட்க பட்டது.. உங்களால் பதில் கூற முடியுமா என்று பாருங்களேன்

    இந்து மதம் ஒரு மோசமான மதம் என்று அதை எவ்வளவு கேவல படுத்தமுடியுமோ அவ்வளவு கேவலபடுதுகிறீர்கள் மற்ற மதங்களை போற்றி புகழ்கிறீர்கள். கீழே உள்ள விஷயங்களை படித்து பாருங்கள் அவை போற்றுதலுக்குரிய மதங்கள்தானா என்று! ஒட்டு பொருக்கிதனத்திலிருந்து மாறுங்கள்.

    1. பூமியிலுள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் உணவளிப்பது அல்லாவின் பொருப்பிலுள்ளது ( குர் ஆன்::அத்தியாயம் 11 வசனம் 6)———->அப்படியானால் சோமாலியாவில் பட்டினி சாவிற்கு யார் காரணம்?
    2. வானத்திலிருந்து உணவை அல்லா இறக்குகின்றான் (40:13 மற்றும் 51:22)====>
    அப்படியானால் நமது ரேஷன் கடைகளில் இருக்கும் சரக்குகள் வானத்திலிருந்து வந்தவைதானா? சிலநேரங்களில் அரிசி கெட்ட வாசனை அடிக்கிறது. ஆகவே இனிமேல் வானத்திலிருந்து அனுப்பும்போது நல்ல அரிசியாக பார்த்து அனுப்புங்கள் அல்லாவே! உனக்கு புண்ணியமாக போகட்டும்!
    3.அல்லாவை விடுத்து நீங்கள் அழைக்கும் இணைகடவுல்களுக்கு கால்கள் இருக்கின்றனவா நடப்பதற்கு? கரங்கள் இருக்கின்றனவ பிடிப்பதற்கு? கண்கள் இருக்கின்றனவா பார்பதற்கு காதுகள் உள்ளனவா கேட்பதற்கு? (7:195)———->
    அப்படியானால் இவையெல்லாம் அல்லாவிற்கு இர்க்கின்றதா? ஆம் எனில் அவர் உருவமில்லாதவர் என்று சொல்வதேன்? இல்லை என்றால் இவருக்கும் இணைகடவுல்களுக்கும் என்ன வித்தியாசம்? இரண்டும் ஒன்றுதானே!
    4. மனிதன் எது ஒன்றை செய்தாலும் மலக்குகள் (=வானவர்கள்) அவற்றை எழுதி கொண்டிருக்கிறார்கள். (45 : 28)—————-> உலகில் எத்தனைகோடி ஜனங்கள் இருக்கின்றனர். இவர்கள் செய்வதை எல்லாம் எழுத எத்தனை கோடி பேர் தேவை? அத்தனைகோடி பேர் அங்கே உள்ளனாரா? அப்ப இந்துக்கள் முப்பத்து முக்கோடிதேவர்கள் என்று சொன்னல்மட்டும் கிண்டல் அடிப்பதேன்?

    6.வட்டி வாங்குவோர் நரகவாசிகளாவார்கள் (2 : 274 -278)=========> அப்படியானால் அரசு பணியிலிருக்கும் முஸ்லிம்கள் செலுத்தும் General Provident Fund க்கு 8% வட்டி வாங்குகிறார்களே அவர்களும் நரகத்திற்குத்தான் போவார்களோ? குறைந்த வட்டியானாலும் வட்டி வட்டிதானே? கந்து வட்டி வாங்கினால் மட்டும்தான் தப்பா?
    7. மற்றவர்களின் தெய்வங்களை திட்டாதிர்கள் (6 : 108) =======> அல்லா சொல்படிதான் இவர்கள் நடக்கிறார்களா?

    9. பலவந்தபடுத்தி ஒருவரை முஸ்லிமாக ஆக்கக்கூடாது.(10 : 99)==========>இதுபடிதான் ஔரங்கஷிப் போன்ற முஸ்லிம்கள் நடந்தார்களா? இப்போதும் அவரின் வாரிசுகள் நடக்கிறார்களா?

    11. நபி (ஸல்) அவர்களின் மனைவியர் முஸ்லிம்களின் அன்னையர் ஆவர்.(33 : 6)
    ======> அப்படியானால் ஆயிஷா வின் அப்பா கூட (அவர் முஸ்லிம்தானே) அவளுக்கு அன்னையா? மகள் கிடையாதா?ஆனால் தன வளர்ப்பு மகனின் மனைவி மட்டும் (விவாகரத்துக்கு பிறகு)தனக்கு மனைவி ஆகிவிடுவாள். இது என்ன நியாயமப்பா?
    12. குர் ஆன் அரபு மொழியில் இறக்கி அருளப்பட்டது. நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக! (43 :3,4)=======> உலகத்தில் அரபு மொழி மட்டும்தான் இருந்ததா? தமிழ் தோன்றியது எப்போது என்றே தெரியாத நிலை உள்ளது. அரபு மொழி பின்னர்தான் தோன்றி இருக்கவேண்டும். “நீங்கள் புரிந்துகொள்ள” என்றால் தமிழன் எப்படி புரிந்துகொள்வான்? ( TRANSLATION பற்றி இங்கே சொல்லகூடாது)
    13. பெண்களை அடிக்க அல்லா அனுமதி கொடுக்கிறான் ( 4 : 34) ——————> பெண் உரிமை பேசுவோர் நன்றாக கவனிக்கவேண்டிய வசனமிது..
    14. இயேசு தனது 12 சீடர்களில் சிலர் உயிருடன் இருக்கும்போதே பூமிக்கு மீண்டும் வருவார் ( ஆதாரம்: jOSHUA 10: 12-14) ==========> 12 பேரும் செத்து இப்போது 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் வந்தபாடில்லை.
    15. தினமும் 5 முறை ஒவ்வொரு முஸ்லிமும் முகமது பிறந்த இடத்தை (அதாவது மெக்கா ) நோக்கி தொழவேண்டும் =========> மகா அறிவாளி முகமது பூமி உருண்டையானது என்று அறியாதவர் கலிலியோ பிறப்பதற்கு முன்னாடியே பிறந்து தொலைத்துவிட்டார் நம்ம தீர்க்கதரிசி முகமது. நபி. என்ன செய்ய! (ஆமாம் தீர்கதரிசி என்றல் என்ன அர்த்தம்?)
    இந்த 15 கேள்விகளுக்கு போலி மத சார்பின்மைவாதிகள் நேர்மையான கிறுக்குதனமில்லாத பதில் சொல்வார்களா? பதில் சொல்லமுடியாவிட்டல் இனிமேலாவது இந்து மதத்தை இகழ்ந்து மற்ற மதங்களை புகழ்ந்து பேசுவதையாவது நிறுத்தவேண்டும். 10 மாதம் சுமந்து பெற்ற தாயை தூற்றி எதிர்வீட்டு பொம்பிளையினை போற்றி புகழ்வதற்கு சமம் இது

    (ஆபாசமான சில கருத்துக்கள் நீக்கப்பட்டிருக்கின்றன – வினவு)

    • 1) நீங்கள் வரலாறு தெரியாமல் பேசுகிறீர்கள். சோமாலியா நாட்டிற்கு அல்லாஹ் மீன் வளம் தந்திருந்தான். அங்கே கடலில் கழிவுகளை கொட்டி உலக நாடுகள் தங்களுடைய பங்கில் அங்கே இருந்த இயற்கை வளங்களை அழித்திருக்கின்றனர் என்பது வரலாற்று உண்மை. மேலும் தகவல்கள் அறிய இதை படிக்கவும்: http://en.wikipedia.org/wiki/History_of_Somalia

      2) இது ஒரு கேள்வியா? உங்களுக்கு என்ன வானத்திலிருந்து கொத்து பொரட்டாவும், சிக்கன் சால்னாவும் வேணுமா? நீங்கள் பார்க்கும் மரங்களும், செடிகளும் மழையினால் பழங்களும், காய்களும் தருகிறதே, அது என்ன நீங்கள் உட்கார்ந்து உண்டாக்கினீர்களா? உங்களால் அது முடியுமா? ஒரு ஆத்திகரிடம் இந்த கேள்வி வருவது வேடிக்கையாக இருக்கிறது.

      3) எங்களை விடுங்க. உங்க ஹிந்து சாஸ்திரமே அதை தானே சொல்கிறது. அப்புறம் நீங்கள் ஏன் உருவ வழிபாடு செய்கிறீர்கள்?

      4) இவர்கள் அனைவரும் வானவர்கள். இவர்களுக்கு இறைவன் சொன்ன காரியங்களை நிறைவேற்றுவதுதான் வேலை. முஸ்லிம் யாரும் இவர்களை கடவுளாக வணங்குவதில்லை. ஆனால் நீங்கள் சொல்லும் தேவர்களை நீங்கள் வணங்குகிறீர்கள். அதுதான் வித்தியாசம்.

      5) கேள்வி இல்லை.

      6) அனைத்து ரூபத்திலும் வட்டி வட்டிதான். குறைவானதாக அல்லது நிறைவானதாக இருந்தாலும் சரியே.

      7) நீங்கள் யாரை குறிபிடுகிறீர்கள்? நான் மற்றவர்களின் தெய்வங்களை திட்டினேனா?

      8) கேள்வி இல்லை.

      9) ஔரங்கஜீப் பலவந்தபடுத்தி முஸ்லிம் மதத்தை பரப்பினார் என்று ஆதாரம் இருக்கா? அவரின் வாரிசுகள் என்று யாரை குறிபிடுகிறீர்கள்?

      10) கேள்வி இல்லை.

      11) நாம் பள்ளிகளில் எல்லா இந்தியரும் என்னுடைய சகோதரர்கள் சகோதரிகள் என்று உறுதிமொழி ஏற்கிறோம். உடனே, உங்களுடைய தாய் தந்தை உங்களுக்கு சகோதரர்கள் ஆகிவிடுவார்களா? இதெல்லாம் ஒரு கேள்வியா? அடுத்த கேள்விக்கு: தத்தெடுப்பது இஸ்லாத்தில் இல்லை. இதுவே இதன் விளக்கம்.

      12) குரான் எந்த மொழியில் வந்திருந்தாலும் மற்ற மொழிகாரர்கள் இப்படிதான் தர்கித்திருப்பார்கள். குரான் தமிழில் இறங்காதது தான் நீங்கள் அதை நம்பாததர்க்கு காரணமா?

      13) இதில் கேள்வி இல்லையா? சரி, உங்கள் அருகாமையில் இருக்கும் காவல் நிலையத்தில் சென்று எத்தனை வன்முறைகள் முஸ்லிம் குடும்பங்களில் பதிவாகிறது, எத்தனை வன்முறைகள் முஸ்லிம் அல்லாதவர்களிடம் பதிவாகிறது என்று விசாரியுங்கள். ஏன் நிறைய மண்ணெண்ணெய் அடுப்புகள் முஸ்லிம் அல்லாதவர்கள் வீட்டில் வெடிக்கிரதுன்னு கேளுங்கள். உங்களுக்கே விடை தெரியும்.

      14) இதை நீங்கள் கிருதுவர்களிடம் கேளுங்கள்.

      15) கேள்வி கேட்கும் முன் கொஞ்சமாவது ஆராய மாட்டீர்களா? குரான் (79:30) உலகம் முட்டையை போல உருண்டை என்று சொல்கிறது. உங்கள் கேள்வி உலகத்தை பற்றியா அல்லது தீர்கதரிசி பற்றியா? உலகம் உருண்டைங்குரதுகும், மக்கா பக்கம் பார்த்து தொழுவதற்கும் என்ன சம்பந்தம்? இதில் உங்களுக்கு என்ன பிரச்னை பார்த்தீர்கள்?

      I am not a Islamic scholar. I just replied with whatever knowledge I have. If there is any mistake it belongs to me and if there is any correct, it is from my Rabb Allah (swt).

      • 9) ஔரங்கஜீப் பலவந்தபடுத்தி முஸ்லிம் மதத்தை பரப்பினார் என்று ஆதாரம் இருக்கா?

        Guru Tegh Bahadur (9th Guru of Sikhs) was put in chains and ordered to be tortured until he would accept Islam by Aurangzeb .

        • இது வரலாற்று திரிபு. இங்கே நிறைய அரசியல் சூழ்ச்சிகள் மறைக்கப்பட்டுள்ளது. ஔரங்கஜீபை தூற்றுவதும் அக்பரை போற்றுவதும் வரலாற்றின் திரிபே. உண்மை இங்கே பலபேருக்கு அதிர்ச்சி தகவலாக இருக்கும். இந்தியாவில் முகலாயர்கள் வந்துதான் இஸ்லாம் பரப்பினார்கள் என்பது ஒரு வடிகட்டிய பொய். இஸ்லாம் 7-ம் நூற்றாண்டிலேயே இந்திய வந்துவிட்டது.

          இஸ்லாம் வாளால் பரப்பபட்டது என்பது இன்னொரு வடிகட்டிய பொய். கட்டாய மத மாற்றம் இஸ்லாத்தில் தடை. இந்த நிதர்சன உண்மையை அறியவேண்டுமானால், இன்று ஏன் வளர்ந்த நாடுகளான அமெரிக்காவிலும் லண்டனிலும் மக்கள் லட்சகணக்கில் இஸ்லாம் ஏற்கின்றனர். இவர்கள் வாளுக்கு பயந்து இஸ்லாத்தில் வருகிறார்களா?

          இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்துகிறது என்பது இன்னொரு வடிகட்டிய பொய். அப்படி அடிமை படுத்துகிரதென்றால், இஸ்லாத்திற்கு வருகிற மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் எப்படி பெண்களாக இருக்க முடியும்?

          சிந்தியுங்கள் மக்களே.

  41. Hi Ameen,

    //Where in Quran he took the words “மற்ற எல்லா மகன்களும்” in this verse? Why did he insert his own understanding into this verse and claim it from Quran?//

    Didn’t I say your brains are dumbed out?

    Ali Sina does not say he took it from quran. He is inferring the rule from quran 4.11.

    “வாசகம் 4:11 ஒரு ஆணுக்கு ஒரே ஒரு மகள் மட்டும் இருந்தால், மற்ற வாரிசுகள் எப்படி இருந்தாலும், அவள் பாதி சொத்தைப் பெறுவாள் என்கிறது. ஆனால் இதே வாசகம் ஒரு மகனின் பங்கு மகளின் பங்கை விட இருமடங்கு என்று சொல்வதால், அவளின் சகோதரனுக்கு முழு பங்கும் கிடைக்க வேண்டுமே. இது குழப்பமாக இல்லையா? இந்த சட்டத்தில் நிச்சயமாக பிழை இருக்கிறது.”

    Now, do you accept that there is no Arabic word equivalent to ONLY in the verse 4.11 or not?

    • //Didn’t I say your brains are dumbed out?//
      ஆஹா, தவறை சுட்டி காட்டினால், உடனே கோவப்படக்கூடாது நண்பரே. பொது தலத்தில் ஏதாவது பெயரில் இஷ்டத்துக்கு கமெண்ட் போட வேண்டியது. தவறை சுட்டி காட்டினால், வசை பாட வேண்டியது. இது தான் உங்கள் தானை தலைவர் அலி சினா கற்று தந்த பாடமா?

      நீங்களும் உங்கள் குரு அலி சினாவும் குரான் வாசகம் என்று குரானின் அத்தியாயம் குறிப்பிட்டு கமெண்ட் போடுகிறீர்கள். போட்ட வாசகத்தில் தவறை சுட்டி காட்டினால், உடனே பார்க்காமல் போட்டேன் என்று கூற வேண்டியது. அப்புறம், இது நீங்கள் உய்த்துணர்தது என்று சொல்ல வேண்டியது.

      இதற்கு தான் என்னுடைய முந்தைய பதிவில் சொன்னேன், நீங்கள் முழுவதுமாக படிக்காமல், இடையிலிருந்து வாக்கியத்தை எடுத்து உங்களுடைய கற்பனையை செலுத்துகிறீர்கள் என்று. நான் ஒரு உதாரணமும் தந்தேன். மீண்டும் நான் புடிச்ச முயலுக்கு 3 காலுதான் என்றால் நான் என்ன செய்ய முடியும்?

      போங்க பாஸ், போங்க… இன்னும் நல்லா உங்க குரு அலி சினாவோட சைட் படிச்சிட்டு வந்து பதிவிடுங்க… அதை விட்டு வசை பாடுவது, உங்களுடைய பலகீனத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறது.

      அப்புறம், அது என்ன வேற வேற பெயர்லே வந்து கமெண்ட் போடவேண்டியது? நீங்களே ஒரு கமெண்ட் போடவேண்டியது, அப்புறம் வேற பெயர்லே வந்து, நீங்க அந்த கமெண்டை பாராட்ட வேண்டியது? நல்லா இருக்கு பாஸ் இந்த பொழப்பு. கீப் இட் அப். 🙂

        • If you look at the translations in many places for understanding purpose the words given under braces. Not only in this verse. It doesn’t mean that it is changed or manipulated. Don’t you and your Guru Ali Sina think if this is manipulated then how the native Arabic speaking people will follow? Are they also reading the Translated Quran?

          Now reply Yes or No to this below question before we continue further:
          Do you understand, people reading your’s and your so called scholar’s comments in this page have came to know the falsehood and blasphemy you both are propagating?

  42. Ameen,

    // in many places for understanding purpose the words given under braces.//

    So you agree that Quran is not understandable without insertions given within braces. What is the use of such gibberish?

    //if this is manipulated then how the native Arabic speaking people will follow?//

    Arabs know about Quran. But they want to keep their heads.

    //Are they also reading the Translated Quran?//

    Yes. They read the ‘Tafsirs’ [பொழிப்புரைகள்] to understand Quran. These Tafsirs have lots of brackets, insertions, interpretations, more than translated versions. Without Tafsirs, Quran is just mumbo-jumbo/ om-cream-dream-scream- om-cream-dream-scream…

    • இஸ்லாம் பற்றிய அடிப்படை அறிவும் இல்லாததால் வந்த கேள்விகள். குரான் என்றால் என்ன, ஹதீஸ் என்றால் என்ன, சீராஹ் என்றால் என்ன, தப்சீர் என்றால் என்ன என்று எதுவுமே தெரியாமல் இஸ்லாம் எதிர்ப்பு மட்டுமே தலையில் மேலோங்கி நிற்பதால் வந்த பதிவுகள்.

      குரான் ஒன்றும் ஒரே நாளில் முழுவதுமாக இறங்கிவிடவில்லை. 23 ஆண்டுகளாக அந்த அந்த சூழ்நிலைகளில் மனிதர்களை வழி நடத்த இறைவனால் இறக்கப்பட்டது. தப்சீர் என்பது எந்த அத்தியாயம் எங்கே எந்த சூழ்நிலையில் இறக்கப்பட்டது. அதிலிருந்து முகம்மது நபி நமக்கு சொல்லி தந்த படிப்பினை என்ன என்பதை விளக்குவதே தப்சீர்.

      இங்கே தமிழ் நாட்டில் உயர்வாக பார்க்கின்ற திருக்குறளை நீங்கள் புரிந்து கொள்ள எதற்கு அதனுடைய விளக்கவுரையை படிக்கிறீர்கள்? அதுவும் தவறு என்று சொல்வீர்களா? சொல்ல மாட்டீர்கள் ஏன் என்றால் அதை எழுதியது முஸ்லிம் அல்ல. உடனே நான் திருக்குறளை குறை கூறுகின்றேன் என்று சில பேர்வழிகள் சொல்வார்கள். நான் இங்கே யாரையும் குறை சொல்ல பதிவிடவில்லை. இதை படிக்கின்றவர்கள் புரிந்து கொள்ள மட்டுமே பதிவிடுகிறேன்.

      universalbuddy, உங்களுடைய கருத்துகள் எப்பொழுதும் நடுநிலையாக இருக்காது என்று தெரியும். அதை உங்களுடைய வக்கிர எண்ணம் கொண்ட உங்கள் blog படிக்கின்ற யாருக்கும் புரியும்.

      நான் முன்னமே சொன்னது போல, தூங்குகிறவர்களை மட்டுமே எழுப்ப முடியும்.

    • univerbuddy: You can try google input tools. I am able to type thamizh transliterated words easily and able to achieve 99% gramatic accuracy. You can try that.

        • Univerbuddy:
          If you install Google Input Tools, with little practice, you can type Thamizh as fast as you type english. It is not only for this blog, you can type tamil in any application. Once you start typing, you will be given a few choices of words and you can select the right word. Most of the time, by default the right word is automatically selected 99% of the time. That remaining 1%, you need to know correct tamil grammar. Thats all.

          • Dear கற்றது கையளவு,

            You are very kind. Thanks a lot.

            I know about Google input tools.

            But, for the reasons i cannot explain, i use more English and little necessary Tamil, though i wish i can write everything in Tamil.

          • I can type in Tamil = 15 characters

            to type the above sentence in Tamil using Google inputs, then i need to type

            naan thamizhilil thattachchu seiya mudiyum. = 38 characters.

            Why I need to waste my time and data (to use google input) to type in Tamil when I can easily do it in English?

            again for comparision

            naan ezhithaaga aangilaththil thattachchu seiya mudiyumpothu, etharkaaga naan ennudaiya neraththaiyum dEtavaiyum (googiL ulleedu payanpatuththa) thamizhilil thattachchu seiya veenaakka vendum?

            • @Hisfeet: உங்கள் தாய்மொழி என்ன?
              ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வது சுலபமாக இருக்கலாம்,
              ஆனால் தமிழில் படிப்பதற்கு எங்களுக்கு இனிமையாக இருக்கிறது.
              ஆங்கிலத்தில் பதிவு செய்தால் கூட பரவாயில்லை. தமிங்கிலிஷில் நீங்கள் தட்டச்சு செய்யும்போது அதை படிப்பவர்களுக்கு உங்கள் கருத்தை புரிவதற்கு சிறிது நேரம் எடுக்கிறது. உங்கள் கருத்து உங்களது Target Audience க்கு உடனே சென்றடையவேண்டுமேன்றால் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்ய சிறிது மெனக்கெடலாம். தங்களுக்கு தமிழ் தாய்மொழி இல்லையென்றால் நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதை பொறுத்துக்கொள்ளலாம். தங்களுக்கு தமிழ் தான் தாய்மொழி என்றால் ஆங்கிலத்தில் மட்டுமே தட்டச்சு செய்வது கொஞ்சம் நெருடலாக தான் இருக்கிறது.
              தமிழில் இலக்கணப்பிழை வரும் என்று பயப்படுகிறீர்களா?

  43. http://www.ibtimes.com/child-marriage-should-be-legal-pakistani-legal-advisory-body-1560767
    Pakistani laws presently mandate that the minimum age for marriage is 18 years for a male and 16 for a female
    பாகிஸ்தானில் உள்ள குழந்தைகள் திருமண தடை சட்டம் ஷரியத் சட்டத்திற்கு எதிராக உள்ளதாம் அதனால் அந்த சட்டதை நீக்க வேண்டும் என்று இஸ்லாமிய மையம் கோரிக்கை வைத்துள்ளது.

  44. Bro Nagaraj,

    Hope you are unaware of the consent sex between teens less than 15 in western countries and slowing get into India too. You keep mute in those areas since it is not from Islam. If you think consent sex is fine and only legal marriage should have age limit of 21, then go and check your brains.

    Thanks..

    • I equally condemn those practices. Even though they claim it is consensual, it is unacceptable as the involved children are unable to make correct decision for consenting sex with another person. But why you want to compare man made laws with your so called secular laws? Is that like those who write laws in West are as good as your allah?

      Also islamic practice marries a child (usually a girl child) to an adult solely due to the adult’s consent. Even then, can you point any incidence of a 9 year old boy married to 45 year old woman in islamic country? This clearly shows islamic law is male dominated in nature.

      un mathatha pathi keta athukku pathil sol. athavittutu, america, iropanu poo suthatha!

    • I would encourage you to go and check all the news about #IamLama. No one from Islam supports this act. Infact Muslim officials and Muslim activists are fighting to get him capital punishment. Islam is the only religion on the face of the earth that says to hang Criminals to death for these type of actions.

      I would also encourage you to read Quran and early Islam to understand how Islam is protecting the rights of women when all other societies were brutally crushing the women-hood.

      • Dear Ameen,

        please tell me is it allowed in islam to keep women without marrying. i.e. thirumana seiyamal, vaipattiyaga pengalai vaithukkolvathu islathil unda illaiya?

        Don’t come answering it is not practiced today or it is allowed in other religions etc. Just tell is it there in islam or not.

  45. Ameen,

    //***என்றால் என்ன என்று எதுவுமே தெரியாமல்//

    I know about them very well. That is why I am blogging and commenting. Please don’t waste our time.

    //திருக்குறளை //

    I don’t have time to waste on Thirukkural or on its Tafsirs. And, no one says Thirukkural is revelation from God.

    //உங்களுடைய கருத்துகள் எப்பொழுதும் நடுநிலையாக இருக்காது//

    நடுநிலையென்பது ஏமாற்று வேலை. முகமதியத்தைப் பற்றிய எனது கருத்துக்கள் முகமதியத்திற்கு எதிரானதுதான். எனது கருத்துக்களில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டலாம். குரான் கடவுளின் சரக்கு இல்லை. அது கடவுளின் சரக்கு என்று சொல்லும் தகுதி அதற்கில்லை என்று நான் இங்கே நிறுவியிருக்கிறேன். அதை மறுக்கும் விதமாக நீங்கள் வாதத்தை தொடரலாம்.

    • உங்களுடைய மற்றும் உங்கள் குரு அலி சினாவின் குற்றச்சாட்டுகளை ஏற்கனவே தகுந்த சான்றுகள் மூலம் பொய் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. உங்கள் பதிவுகளில் இருந்த தவறுகளும் சுட்டிக்காட்டப்பட்டுவிட்டது.

        • People who doesn’t understand the true meaning of Islam are leaving Islam even in today’s world. They are not getting any punishment. They are freely following their new doctrine. What is the problem you are facing here?

            • Can you directly ask your question? I hope you are trying to make a point here but if you directly come to your question, then it will be better.

              A person leaving Islam means he is no more believing in Oneness of God. Right? So, he will either associate partner to God or he will reject God.

              As per Islam, God is the Creator and Sustainer and all other things in the universe and beyond it are his creations. He doesn’t like people to associate the Creations of God to God itself. Meaning, when a Man say that Sun, Moon, Stars, Animals, Air, Mountain, Water, Tree, Stone as God, it means he is associating partners with the most exalted.

              As per Islam, associating partners with Allah or rejecting the bounties of Allah bestowed on us is a major sin.

              As per Islam, if a person leaves Islam, there is no punishment to him in this world as long as he is not doing any harm or propagate falsehood about Islam. When he meets his Creator, he will get his reward/punishment there.

              What is your question here?

              • @Ameen
                If a person leaving islam or leaving the doctrines of islam should not be punished

                look for the statements of islamics scholars
                Abu Hanifa and his followers refused the death penalty for female apostates, supporting imprisonment until they re-embrace Islam.
                Muhammad Al-Munajid the owner, writer and administrator for the popular islam-qa.com site advocates that judgement stating that leaving them alive “may encourage others to forsake the truth

                Islamic scholars like the Grand Mufti of Cairo Ali Gomaa have stated that while God will punish apostates in the afterlife they should not be executed by human beings. Ali Gomaa later clarified that leaving Islam without punishment was not what he meant; “What I actually said is that Islam prohibits a Muslim from changing his religion and that apostasy is a crime, which must be punished.

                  • Al Bukhary number 6484

                    Maruq related from ‘Abdullah that the Messenger of Allah, may Allah bless him and grant him peace, said, “The blood of a Muslim man who testifies that there is no god but Allah and I am the Messenger of Allah is not lawful except in three cases: life for life, someone who has been married who then commits fornication, and the one who leaves his deen and leaves the Community.

                    • The hadees said above was taken out of context here. Let me explain you.

                      If someone wants to quit Islam and embrace any other religion he will not be punished as per shariah law. For instance, in the case of Ubaidillah Ibn Jash, he was in Islam and married Umm Salama and migrated to Abyssinia. But afterwards he leaves Islam. Prophet Muhammad (saws) never ordered to kill him.

                      This hadeeth is in the case of war field when someone leaves the side of Islam and helping the opponent then he is ordered to be killed. For Instance, in a war between Pakistan and India, if any of the commander in chief of Indian Army betrays India by letting know the Pakistan army about Indian war secrets then what will be his punishment as per Indian law? The above hadees is in the same context.

                      Allah knows the best.

  46. Hi கற்றது கையளவு.

    //இறை நம்பிக்கை//

    முகமதியர்களின் புத்தகங்களின் (q, h, t, s, etc.) படி இறை நம்பிக்கை என்பது அல்லாவை (முகமதை) ஏற்றுக் கொள்வதுதான். அதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இறை நம்பிக்கை அற்றவர்கள் (Unbelievers).

    This is similar to Christianity, where those who does not believe in Jesus, his resurrection, etc are called Unbelievers. But the diffrence is, in Muhamadism, it gets very nasty levels, i.e.:

    1. non-muslim witness is not acceptable as they are not influenced by allaa but by shaitan.

    2. non-muslim lives are not worth a muslim life. they can be enslaved, killed, without attracting any sin. If killed, the compensation is not equal to a muslim.

    மாற்று மதத்தினர் இறை நம்பிக்கையற்றவர்கள் என்று முகமதியர்களுக்கு தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் இதை மறைத்துத்தான் பேசுவார்கள். The language of Muhamadism is very deceptive.

    • பொது தளத்தில் வதந்திகளையும், அவதூறுகளையும் பரப்பாதீர்கள். தகுந்த ஆதாரத்துடன் பதிவிடுங்கள் நண்பரே.

        • நீங்கள் குரான் மற்றும் ஹதீஸ் படித்தவர் என்றீர்கள். எல்லாம் அறிந்துதான் இங்கே பதிவிடுகிறீர்கள் என்றீர். இப்போ என்னன்னா யாரோ ஒருவருடைய பதிவை எடுத்து சான்றாக சொல்கிறீர்கள். அப்போ உங்களால் குரான் மற்றும் ஹதீஸ்களில் குற்றம் கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஒத்துகொள்ளுகிறீர்களா?

          • Ameen,

            //யாரோ ஒருவருடைய பதிவை எடுத்து சான்றாக சொல்கிறீர்கள்.//

            S. Ibrahim is well known Muhamadan blogger and commenter. I quoted him to show you what a well-known Muhamadan has said on the topic and to let non-muhamadans coming here see it.

            //அப்போ உங்களால் குரான் மற்றும் ஹதீஸ்களில் குற்றம் கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஒத்துகொள்ளுகிறீர்களா?//

            Not so fast. As I already have said, as per the language of the books of Muhamadism, e.g. quran, those who don’t accept allaa, are unbelievers [kaafirs] as against those who accept allaa are believers [Mumeen]. I don’t want to waste my time in giving you the verse numbers.

      • அவதூறுன்னு சொல்லி அல்லாவுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்யாதீர்.

  47. @Ameen
    from adam how many prophets was sent by god is there any mentions of any prophets
    does quran mention any prophets in Russia,China,India,Korea,Japan
    australia(before coming of europians)
    mayan civilization
    Azetec civilization

    • It is an Islamic viewpoint that every nation was sent a Messenger for their guidance. The important matter was the concept of Tawheed i.e., in oneness of Allah. The secondary matter was Shariah which kept changing from tribe to tribe and nation to nation. Allah, the most high, alone knows what is good for His creation. As it is mentioned in the Qur’ân:

      And for every Ummah (a community or a nation), there is a Messenger; when their Messenger comes, the matter will be judged between them with justice, and they will not be wronged. (Qur’ân 10:47)

      And verily, We have sent among every Ummah (community, nation) a Messenger (proclaiming): “Worship Allah (Alone), and avoid (or keep away from) Taghut (all false deities, etc. i.e., do not worship Taghut besides Allah).” Then of them were some whom Allah guided and of them were some upon whom the straying was justified. So travel through the land and see what was the end of those who denied (the truth). (Qur’ân 16:36)

      Some of these Messengers are mentioned in the Qur’ân by Allah and some of them are not as the Qur’ân says:

      And, indeed We have sent Messengers before you (O Muhammad(P)); of some of them We have related to you their story and of some We have not related to you their story, and it was not given to any Messenger that he should bring a sign except by the Leave of Allah. So, when comes the Commandment of Allah, the matter will be decided with truth, and the followers of falsehood will then be lost. (Qur’ân 40:78)

      There were around 1,24,000 messengers sent to this world and of them the last and final messenger is Prophet Mohammad (SAWS).

  48. Difference between True science researched by scientists and pseudo science propagated by religions:

    True Science: Willingness to change with new evidence.
    Pseudo Science: Fixed Ideas

    True Science: Ruthless Peer Review
    Pseudo Science: No Peer Review

    True Science: Takes account of all new discoveries
    Pseudo Science: Selects only favourable discoveries

    True Science: Invites Criticism
    Pseudo Science: Sees Criticism as Conspiracy

    True Science: Verifiable Results
    Pseudo Science: Non Repeatable Results

    True Science: Honestly Limits claim of usefulness
    Pseudo Science: Claims of wide spread usefulness

    True Science: Accurate Measurement
    Pseudo Science: “Ball Park” Measurement

    • Can you give me the scientific errors that you found in Quran? When you search for the site in internet, please also search how it was refuted and proved wrong by Islam.

      Give information here which was not yet properly refuted, because most of the allegations against Quran were propably proved wrong and found available in internet itself.

      • அமீன்: குர்ஆன் – நீங்களே ஒரு நல்ல லிங்க் ஒன்று தாருங்களேன். நாங்கள் ஏதாவது லிங்க் கொடுத்தால் உடனே அந்த லிங்க் ஐ எழுதியவர் குடித்து விட்டு எழுதுகிறார், அது குர்ஆனில் இல்லை என்று கூறுகிறீர்கள். எங்களுக்கு தமிழிலோ, ஆங்கிலத்திலோ நல்ல ஒரு லிங்க் தாருங்கள். படித்து விட்டு பதில் சொல்கிறேன்.

        • நீங்கள் குர்ஆனில் இருப்பதை இங்கே சொல்லி இருந்தால் நான் மறுத்து இருக்க மாட்டேன். அதில் உங்கள் தவறான புரிதலையே போக்க முயன்றிருப்பேன். ஆனால், நீங்கள் சொன்னவர்களோ, குர்ஆனில் இல்லாத ஒன்றை சொல்கின்றனர்.

          சரி, நீங்கள் குரானை படிக்க வேண்டுமானால், http://www.quran.com என்ற தளத்தில் படிக்கலாம். அங்கே உங்களுக்கு பல மொழிகளில் மொழிபெயர்ப்பும் கிடைக்கும். நீங்கள் அதை ஒப்பிட்டும் பார்க்கலாம்.

          நீங்கள் குர்ஆனில் அறிவியல் தவறுகள் தர நினைக்கையில், அந்த அறிவியல் 100% நிரூபிக்கப்பட்ட அறிவியலாக இருக்கட்டும். ஏனென்றால், அறிவியல் நிறைய இடங்களில் u-turn அடித்திருக்கிறது. அதே போல நடைமுறையில் நிரூபிக்கப்படாத கோட்பாடாக மட்டும் இருப்பதும் அறிவியல் மூலமாக உங்களால் நிரூபிக்க முடியாது. உதாரணமாக டார்வின் கோட்பாடு. இது வெறும் கோட்பாடே அன்றி நிரூபிக்கப்படவில்லை.

          உடனே நான் நிறைய நிபந்தனைகள் வைக்கிறேன் என்று என்ன வேண்டாம். நிரூபிக்கமுடியாத அறிவியல் சாட்சிகள் உங்கள் தரப்பு விவாதத்திற்கு பயனளிக்காது. இவற்றை நீங்கள் எடுத்து சொன்னால், இருவருக்குமே நேரம் வீணாகும்.

  49. சென்னைலே நேத்து மழை பெய்ஞ்சதா? புது புதுசா காளான் எல்லாம் வளர்ந்து இருக்கே?

  50. @Ameen

    In reality does sharia law follows a class based rule(judgement is based upon the crime he done and not based on a person’s social/economical status) or non-class based rule

    Give me five examples of a fatwa or capital punishment given to a rich/islamic cleric’s for a crime in last 2 years

    or the ratio of crimes recorded /judgement given in saudi arabia

    If sharia law in saudi arabia is not class based or gender based why the woman in saudi arabia are doing a much of protest for allowing them to drive a car.

    • //does sharia law follows a class based rule//
      In Shariah law there is no class difference between Rich & poor or caste. Islam doesn’t say some born in head and some born in feet.

      The Prophet said: ‘There is no superiority for an Arab over a non-Arab, nor for a non-Arab over an Arab, nor for a fair-skinned person over a person with dark skin, nor for a dark-skinned person over a person with fair skin. Whoever is more pious and God-fearing is more deserving of honour.’ (Musnad Ahmad)

      The Prophet sallallaahu `alayhi wa sallam ( may Allaah exalt his mention ) asked people to be just and kind. As the supreme judge and arbiter, as the leader of Muslims, as generalissimo of a rising power, as a reformer and apostle, he sallallaahu `alayhi wa sallam ( may Allaah exalt his mention ) had always to deal with people and their affairs. He sallallaahu `alayhi wa sallam ( may Allaah exalt his mention ) had often to deal with mutually inimical and warring tribes when showing justice to one carried the danger of antagonizing the other, and yet he sallallaahu `alayhi wa sallam ( may Allaah exalt his mention ) never deviated from the path of justice. In administering justice, he sallallaahu `alayhi wa sallam ( may Allaah exalt his mention ) made no distinction between believers and nonbelievers, friends and foes, high and low. From numerous instances reported in the traditions, a few are given below.

      A woman of the Makhzoom family with good connections was found guilty of theft. For the prestige of the Quraysh, some prominent people including Usaamah Ibn Zayd may Allaah be pleased with him interceded to save her from punishment. The Prophet sallallaahu `alayhi wa sallam ( may Allaah exalt his mention ) refused to condone the crime and expressed displeasure saying: “Many a community ruined itself in the past as they only punished the poor and ignored the offences of the exalted. By Allaah, if Muhammad’s (My) daughter Faatimah would have committed theft, her hand would have been severed.” [Al-Bukhaari]

      The Jews, in spite of their hostility to the Prophet sallallaahu `alayhi wa sallam ( may Allaah exalt his mention ) were so impressed by his impartiality and sense of justice that they used to bring their cases to him sallallaahu `alayhi wa sallam ( may Allaah exalt his mention ) and he decided them according to Jewish law. [Abu Daawood]

      //Give me five examples of a fatwa or capital punishment given to a rich/islamic cleric’s for a crime in last 2 years or the ratio of crimes recorded /judgement given in saudi arabia//
      Do you think I am working in the census department of Saudi?

    • Thats funny my friend. I haven’t asked you to waste your time in commenting here.

      It is Mr.YOU who started with the allegations of your so called scholar Ali Sina and then given incorrect phrases from Quran and couldn’t reply to any of my questions.

      Now you are saying as if I am wasting your time. You are using the word “Kaafir” so many times in your post and when I ask about the meaning, you are saying that I am wasting your time. How can you post something which you have no knowledge of? All your allegations are baseless and now I know you posted everything without having knowledge of what you are speaking about?

      Now understand the meaning of “Kaafir” and don’t use it as something in future anywhere without knowing what you are saying.

      Kaafir comes from the root word “Kufr”. It is the opposite of the word “Shukr”.

      Shukr = Giving Thanks
      Kufr = Not giving thanks

      As per Islam, Allah is the one who gives us everything from the time we wake up in morning, the every second that we breathe, our activities both internal and external, all the blessings we receive in this world. A person when receiving the blessings of Allah and then doesn’t thank his Allah then he is doing “Kufr”. It is not just who don’t believe in Allah. It is applicable for Muslims too.

      It doesn’t mean that he should be only rely on his Lord and shouldn’t take any efforts but expect his food to be in front of him. He has to take the effort from his side, but trust that only if his Lord wishes he will get the fruit of his effort and not just by his efforts.

      For eg: When a Man fills his stomach with food given by his Allah, he should praise his Lord. If he says his food comes from his own abilities and doesn’t thank Allah who gave him the food, then he is doing kufr.

      Islam is very perfect and it teaches universal brotherhood.

      Thanks.

      • //Islam is very perfect and it teaches universal brotherhood.//

        Wondered, how the world would have been if it was really true.
        May be, As you said, Islam and quran may be perfect. But Islamists who interpret the quran are actually doing opposite to what you have claimed as Universal Brotherhood.
        You say Islam is Tolerant. But the people who follow the religion are not tolerant.
        If you say that they are not true Islamists, then the majority of Islamists would have been Non Islamists as they dont follow the True Islam which advocates Universal Brotherhood and Tolerance.
        If this is true, why the fight between Islamists Itself. Shia Vs Sunni; Iraq Vs Iran;
        If every Islamists had followed True Islam as you advocate, then Pakistan, Sudan, Somalia, Syria, Lybia, Egypt, Iran, Iraq, Algeria, Uzbekistan all would have been the most peaceful places in the whole world. The people in these countries would have been living the most happiest and peaceful life. But Alas, the Islamists in USA, Australia, Britain, India, Canada, Germany, Sweden, Norway, Holland, Denmark are actually living a more peaceful life than the Islamists in Hard Core Islamic countries.

        • Thanks for accepting Islam and Quran are perfect.

          I didn’t say all Muslims are correct. There are some people who interpret the Quran for their worldly benefit which I am not supporting. But I don’t accept that it is majority. Tell me truly, how many Muslims who you personally meet each day? What is your honest opinion about them? Are they terrorists and involve in terror activities?

          Today the world population is more than 7 billion and nearly 2 billion of them are Muslims. How many muslims do you think are terrorists in those 2 billion and in the same time how many people are terrorists in the rest of the 5 billion. I have already gave here most of the terrorists attacks happened previously and who and all involved in those attacks. Then how can you claim majority of the muslims are terrorists?

          Did you ever heard a Atheist terrorist or a Christian terrorist? Then why if there is a muslim involved he is termed as Muslim terrorist. Anyone who supports or kills innocent people are terrorist and a threat to the world. Why it is painted by the color of the religion when a muslim involve in it? Is it not time for you think answers for these questions?

          On your question on Shia vs Sunni.. These are formed on a political background and nothing on religion. When you take a lay man in both the parties, they don’t fight within each other. Yes. they have difference of opinion on their creed but it doesn’t give authority to anyone to kill other. To understand the basics of these two parties you first need to understand the early history of Islam and at the same time try to understand how the external forces play role in dividing these muslims.

          //If every Islamists had followed True Islam as you advocate, then Pakistan, Sudan, Somalia, Syria, Lybia, Egypt, Iran, Iraq, Algeria, Uzbekistan all would have been the most peaceful places in the whole world.//
          Well, if you know or try to learn the history of these countries you will knew how these countries were influenced by external forces either on the ruling parties or on the people.

          //the Islamists in USA, Australia, Britain, India, Canada, Germany, Sweden, Norway, Holland, Denmark are actually living a more peaceful life//
          To certain extent true but not 100%. if you just take the example of our own country, there are thousands of muslims who are suffering in prison for decades without any trial. They were arrested without any proof and were kept behind bars without even a FIR. Do you agree it? Even today doors of civilians houses were open in midnight and ladies were raped and gents were killed or arrested in Kashmir. Do you agree? It is been 12 years of the Gujarat incident but still muslims were living in tents. Do you agree? Muslims were killed, gang raped, pregnant women were brutalized in muzaffarnagar but still muslims living in tents. Do you agree? I am not saying Muslims were massacred all over India but there is definitely a second class treatment which everyone agree. But I definitely appreciate those brothers in other religions who understand the situation and support muslims even when their own religious people are against muslims. Media is playing a very big role against the muslim.

          I would like to take a moment here to tell you that do not wear the same glass and view every religion. You are living an atheist life but don’t die as an atheist. Speaking practically, both of our beliefs are totally different. Either of us will be right and it is impossible that both of us to be right. As per you, there is no God and there is no accountability to whatever we do. According to me, there is accountability for everything we do and there is a super power. There is a chance of 50% probability on anyone being right. If you are right, then fine, I die and just go.. nothing going to happen for me.. But, but, but, what if i am right. Once you die, if you are brought infront of your Lord who created you and if he questions you, what will be your answer?

          Think about it thoroughly leaving your personal EGO. This ego will never help us either here or in afterlife.

          • //Did you ever heard a Atheist terrorist or a Christian terrorist? Then why if there is a muslim involved he is termed as Muslim terrorist. Anyone who supports or kills innocent people are terrorist and a threat to the world. Why it is painted by the color of the religion when a muslim involve in it? Is it not time for you think answers for these questions?//

            Ameen, the point, the terrorism is not named after the religion of person involved in terrorism. It is named after the ideology behind the terrorism. For example, most of the drug dealers in Mexico are Christians. But they are not called Christian Terrorists because they are doing it for money not for their religion. Again, there are lot of atrocities committed by Maoists who are Atheists. But they are not doing it for Atheism but for communism. So they are called communist terrorists.

            I for one accept and acknowledge the existence of Christian terrorism. There are attacks on abortion clinics, and in some African countries, some Christian militias are attacking and killing non-Christians. These are acts of Christian terrorism.

            Coming to muslims, are we telling Dawood Ibrahim is a muslim terrorist? What about Idi Amin? We are not telling all evil persons whose religion is islam as islamic terrorists. But when their violence is motivate by their religion, we call it islamic terrorism.

            //if you just take the example of our own country, there are thousands of muslims who are suffering in prison for decades without any trial. They were arrested without any proof and were kept behind bars without even a FIR. Do you agree it? Even today doors of civilians houses were open in midnight and ladies were raped and gents were killed or arrested in Kashmir. Do you agree? It is been 12 years of the Gujarat incident but still muslims were living in tents. Do you agree? Muslims were killed, gang raped, pregnant women were brutalized in muzaffarnagar but still muslims living in tents. Do you agree? I am not saying Muslims were massacred all over India but there is definitely a second class treatment which everyone agree. But I definitely appreciate those brothers in other religions who understand the situation and support muslims even when their own religious people are against muslims. Media is playing a very big role against the muslim.//

            I agree and I am always your brother to voice and act against the injustice you and your people are facing. It is sad that muslims are denied homes for rent, treated with contempt in public places and forced in to isolation. I wish all humans live a peaceful life.

            • Dear brother,

              //are we telling Dawood Ibrahim is a muslim terrorist?//
              You may not be telling, but just go into google and search. You many found tons of sites referring him as Muslim terrorist.
              Eg: https://www.youtube.com/watch?v=B9odurwv2Xc

              //But when their violence is motivate by their religion, we call it islamic terrorism.//
              Which verse of Quran do you think motivate these terrorists to kill innocent people?

              //I wish all humans live a peaceful life//
              That’s my wish too.

      • Ameen,

        //Kaafir comes from the root word “Kufr”. ***
        Kufr = Not giving thanks//

        You muhamadans are well known to be deceivers. Anyone can get the meaning of ‘KAAFIR’ and how it is used by Muhamadans, from the net. What you have given here is just deception. You are a new mushroom in the series of many like Ibrahim, Tamil, Abi, Tippu, etc. Just that you are new breed using new technics like Joker Naik.

        //It is Mr.YOU. ***
        *** without knowing what you are saying.//

        It pains me to see you waste so much time writing so much nonsense irrelevant to the discussion.

        • Cool down Univerbuddy.. People when proved guilty will be blabbering just like this. You also proved the same.

          Allah clearly distinguished Good and Evil. Whoever follows Good will get its reward and whoever does evil will get its punishment on the day of Judgement. I don’t know about Ibrahim, Tamil, Abi or Tippu, but I clearly know about you.

          I had rebutted all your’s and your so called scholar “Ali Sina” allegations and since you don’t have anything else to say, you started scolding me. I am not angry on your comment, but I want you to spend time in knowing the truth. Allah is most merciful and inspite of all these allegations you made against Allah, if you understand the truth and sincerely ask for forgiveness, he will insha Allah forgive you. All your previous sins will be removed and you will be like a new baby without any sins.

          Don’t again start saying that you know everything and don’t give you advice. I am giving you an invitation towards the true religion. Do more analysis on the right path. Don’t follow the deceivers and follow the right one. Insha Allah you will get into right path.

  51. நபிமொழி புகாரி 3320

    குடிபானங்களில் ஈ விழுந்துவிட்டால் அதனை நன்றாக உள்ளே முழுகச் செய்து பிறகு குடியுங்கள். ஏனெனில் அதன் ஒரு இறக்கையில் விஷமும், மறு இறக்கையில் இதற்கான முறிவும் உள்ளது” என்று முகம்மது நபி கூறியுள்ளார்கள்.

    இதுபற்றிய தங்களின் கருத்து என்ன?

      • அமீன் பாய்:
        எனக்கு இந்த ஈ விழுந்த குடிபானம் பற்றிய குர்ஆன் குறிப்பு இது நாள் வரை தெரியவில்லை. இப்போது தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். நீங்கள் கொடுத்த லிங்க் ஐ நீங்கள் முழுவதும் படித்தீர்களா, இல்லை மேம்போக்காக தலைப்பை மட்டும் பார்த்து லிங்க் ஐ போட்டீர்களா என்று தெரியவில்லை.
        மீண்டும் சொல்கிறேன், குர்ஆன் என்பது அறிவியல் புத்தகம் அல்ல. அதில் உள்ள எல்லாம் உண்மை என்று வீம்புக்காக பேசுவதில் பயனில்லை. குர்ஆன் மூலம் உங்களுக்கு வாழ்வில் ஒழுக்கமாக வாழ வழி கிடைத்துள்ளதா, மகிழ்ச்சி, அத்துடன் விடுங்கள், அதை விடுத்து குர்ஆனையும் அறிவியலையும் சேர்த்து குழப்ப வேண்டாம்.
        ஈயின் ஒரு இறக்கையில் விஷம் – ஒரு இறக்கையில் இதற்கான முறிவு – இது எங்கே நிரூபிக்கப்பட்டுள்ளது? ஈயின் இந்திரியத்தில், ஈயின் வயிற்றுக்குள் ஆண்டிபயாடிக்

        குர்ஆனில் சில பகுதியின் விளக்கங்களை ஒரு குறிப்பாக எழுதி முகம்மது நபி தலையணையின் அடியில் வைத்திருந்ததாகவும் அதனை அவர் இறந்த பின் ஒரு ஆடு தின்றுவிட்டதால் தான் சில குறிப்புகள் தவறான கருத்தை புரியும்படி இருப்பதாக நீங்கள் கொடுத்த லிங்கில் உள்ளது.
        குர்ஆன் கடவுள் அளித்த நூலாக இருந்தாலும், அதனை மனதில் மனனம் செய்து வெளிப்படுத்திய முகம்மது நபி ஒரு சாதாரண மனிதர் தான் என்றும் அதனால் அவர் சில தவறுகள் செய்திருக்கலாம் என்றும் அதனால் குர்ஆன் தவறு என்று அர்த்தம் கொள்ள கூடாது என்று தாங்கள் கொடுத்துள்ள லிங்கில் சொல்லப்பட்டிருக்கிறது.
        பல்வேறு ஹதிஸ் களில் குர்ஆனின் மீது வெறுப்பு வரும் வகையில் வேண்டுமென்றே நச்சுகருத்துக்கள் பிற்காலத்தில் இணைக்கப்பட்டதால் குர்ஆனின் மீது தவறில்லை, இசுலாம் மார்க்கத்தில் இருந்து கொண்டே இசுலாமின் மீது கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தில் சில கருத்துக்கள் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது அனைத்தும் நீங்கள் அளித்த லிங்கில் தான் உள்ளது.

        தனக்கு துரோகம் இழைத்த பெண் குரங்கை ஆன் குரங்கு கல்லால் அடித்து கொன்றதையும் நீங்கள் கொடுத்துள்ள லிங்கில் தான் சொல்லப்பட்டுள்ளது. அதற்கான விளக்கத்தை தான் ஆடு தின்றுவிட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது. பாலியல் ரீதியில் துரோகம் செய்தால் கல்லால் அடித்து கொல்ல வேண்டும் என்றால் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள பெரும்பாலான அரபு ஷேக்குகள் கல்லால் அடித்து கொல்ல பட வேண்டும். பாங்காக் நகரை அடுத்து உலகின் இரண்டாம் பெரிய பிராத்தல் நகரம் என்ற பெருமை (??) துபாயை தான் சேருகிறது நண்பரே. இசுலாமின் புனித இடமான சவுதியில் இருந்து துபாய்க்கு வார இறுதியில் வந்து விலைமாதர்களோடு கூத்தடித்து பின் சவுதிக்கு திரும்பும் அரபு பணக்காரர்களை பற்றி நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?

        உடனே, இவர்கள் எல்லாம் இசுலாமை பின்பற்றுபவர்கள் அல்ல என்று கூறி விடுவீர்கள். உலகின் மிக வேகமாக வளரும் மதம் என்று சொல்கிறீர்கள். ஆனால் நீங்கள் சொல்லும் அக்பார்க் தூய்மையான இசுலாமியர்களை கணக்கில் எடுத்தால் இசுலாம் உலகில் ஒரு சிறுபான்மை மதமாக தான் இருக்கும்.

        மேலும், குர்ஆனில் தவறு உள்ளதை போல கிருத்துவரின் பைபிளிலும் பல்வேறு தவறுகள் உள்ளன என்றும் இயேசு செய்த தவறுகளையும் பைபிளில் உள்ள அறிவியல் முரண்பாடுகள் பற்றியும் நீங்கள் கொடுத்துள்ள லிங்கில் உள்ளது. பைபிளில் தவறுகள் உள்ளது என்று சொல்வதினால் குர்ஆனில் உள்ள தவறுகள் சரியாகி விட்டது என்று அர்த்தம் கொள்ளலாமா?

        நீங்கள் உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு என்று கூறி உள்ளீர்கள். மற்ற மதங்களை பற்றி விமர்சிக்க விரும்பவில்லை என்று சொல்கிறீர்கள். ஆனால் உங்களின் பதிவிலேயே இந்து மதத்தினில் உள்ள குறைகளை கூறுகின்றீர்கள். உங்களுக்கும் எனக்கும் உள்ள ஒரு வித்தியாசம் – நீங்கள் இசுலாமில் உள்ள குறைகளை கண்மூடித்தனமாக ஆதரிக்கின்றீர். நான் இந்து மதத்தில் உள்ள குறைகளை திறந்த மனதுடன் ஒத்துக்கொள்கிறேன்.

        இந்து மதத்தில் கோவிலுக்கு போயே தீர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று நான் கூறியதற்கு வேதத்தில் இதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்று கேட்கிறீர்கள். கோவிலுக்கு போயே தீர வேண்டும் என்று எந்த வேத நூலில் கட்டயப்படுத்தபட்டுள்ளது என்று உங்களால் சொல்ல முடியுமா? மேலும், நான் பிறப்பால் இந்து.நான் கோவிலுக்கு தவறாமல் போக வேண்டும் என்றும் இறைவனை தினம் தினம் தொழுக வென்றும் என்றும் யாரும் என்னை கட்டாயபடுத்தியதில்லை.

        இதை வைத்து என்னை இந்து மத ஆதரவாளன், இசுலாமிய மத எதிர்ப்பாளன் என்று கருத வேண்டாம். அனைத்து மதங்களிலும் உள்ள நன்னெறி கருத்துக்களுக்கு, சகோதரத்துவம் வளர்க்கும் கருத்துக்களுக்கு, அமைதியை பரப்பும் கருத்துக்களுக்கு, ஒழுக்கத்தை கற்று கொடுக்கும் கருத்துக்களுக்கு என்றும் என் ஆதரவு உண்டு. மதங்களில் உள்ள நன்னெறி கருத்துக்களை நீங்கள் வாகனங்களின் ஸ்பேர் பார்ட்ஸ் ஆகா உருவகப்படுத்துவது சரியல்ல.

        என் முடிவான கருத்து: இந்து மத வேதங்கள், இசுலாமிய குர்ஆன், கிருத்துவ பைபிள் இவை அனைத்தும் மனிதர்களால் யோசித்து, மனிதர்களால் எழுதப்பட்ட மத நூல்கள் தான். இவற்றில் எத்தனையோ நல்ல விடயங்களும் உண்டு, சில நடைமுறை வாழ்க்கைக்கு ஒவ்வாத கருத்துக்களும் உண்டு. தவறான கருத்துக்களை தவிர்த்து இந்த நூல்களில் உள்ள நல்ல கருத்துக்களின் படி நடப்போம்.

        • நீங்கள் அந்த லிங்கை முழுவதுமாக படித்தீர்களா அல்லது ஹதீஸ் மட்டும் படித்தீர்களா? நீங்கள் சொல்லும் அனைத்தும் பொய் என்று அந்த லின்கிளியே சொல்லப்பட்டு இருக்கிறது. என்னுடைய பதிவில் நான் தெளிவாக சொல்லிவிட்டேன். குரான் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஹதீஸ் மட்டுமே உண்மை என்று. அந்த தளத்திலும் அதுதான் சொல்லப்பட்டு உள்ளது. எது எல்லாம் குரான் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஹதீஸுக்கு மாற்றமாக இருக்கிறதோ அல்லது அந்த ஹதீஸ் சொல்லப்பட்ட வரிசையில் யாராவது பொய் சொல்பவராகவோ அல்லது புத்தி சுவாதீனம் இல்லாதவராகவோ இருந்தால், அந்த ஹதீஸ்கள் அங்கீகரிக்கப்பட்ட ஹதீஸ் இல்லை.

          நீங்கள் கேட்ட கேள்விக்கு மீண்டும் விளக்கம். இந்த லிங்க் படியுங்கள்.
          http://www.yemenpost.net/8/Health/2.htm

          http://sutrisno.hubpages.com/hub/A-Scientific-Study-On-The-Hadeeth-Of-Flay

          //பாங்காக் நகரை அடுத்து உலகின் இரண்டாம் பெரிய பிராத்தல் நகரம் என்ற பெருமை (??) துபாயை தான் சேருகிறது//
          உங்களுக்கு துபாயின் சட்ட திட்டம் எந்த அளவுக்கு தெரியும் என்று தெரியவில்லை. துபாய் ஒரு உலக வர்த்தக மையம். அங்கே மத்திய நீதித்துறையின் சட்டம் செல்லாது. சான்று கீழே உள்ள லிங்கை படிக்கவும்.
          http://en.wikipedia.org/wiki/Application_of_sharia_law_by_country#cite_note-uae-court-109
          http://dubai.usconsulate.gov/emergency_uae_court.html

          //இசுலாமின் புனித இடமான சவுதியில் இருந்து துபாய்க்கு வார இறுதியில் வந்து விலைமாதர்களோடு கூத்தடித்து பின் சவுதிக்கு திரும்பும் அரபு பணக்காரர்களை பற்றி நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?//
          நீங்கள் மறுபடியும் குரானை பின்பற்றாத சில மக்களை பற்றி இங்கே கூறுகிறீர்கள். அவர்களின் தண்டனை அவர்களை படைத்தவனிடம் இருக்கிறது.

          //ஆனால் நீங்கள் சொல்லும் அக்பார்க் தூய்மையான இசுலாமியர்களை கணக்கில் எடுத்தால் இசுலாம் உலகில் ஒரு சிறுபான்மை மதமாக தான் இருக்கும்.//
          உங்களுக்கு முன்னமே நான் ஒரு கேள்வி கேட்டேன். நீங்கள் அதற்கு பதில் அளிக்கவில்லை. உங்களுக்கு தெரிந்த எத்தனை முஸ்லிம்கள் தவறு செய்கிறார்கள். உங்களுக்கு தெரிந்த எத்தனை முஸ்லிம்கள் போதை பொருள் பயன்படுத்துகிறார்கள்? எத்தனை முஸ்லிம்கள் விபசாரம் செய்கிறார்கள்? சொல்ல முடியுமா? நீங்கள் சொல்வதை பார்த்தால் என்னவோ 90% முஸ்லிம்கள் துபாய் சென்று விபசாரத்தில் ஈடுபடுவதை போல உள்ளது.

          //குர்ஆனில் தவறு உள்ளதை போல//
          குர்ஆனில் தவறு இருக்கிறது என்று அந்த லிங்கில் எங்கே கூறி இருக்கிறது?

          //ஆனால் உங்களின் பதிவிலேயே இந்து மதத்தினில் உள்ள குறைகளை கூறுகின்றீர்கள்.//
          எந்த மதத்தையும் குறை கூறுவது என்னுடைய குறிக்கோள் இல்லை. நான் என்னுடைய பதிவில் எங்கே ஹிந்து மதத்தை குறை கூறினேன் என்று சுட்டிக்காட்ட முடியுமா? என்னுடைய தவறிருந்தால் அதை ஏற்றுக்கொள்ள தயங்கமாட்டேன்.

          //கோவிலுக்கு போயே தீர வேண்டும் என்று எந்த வேத நூலில் கட்டயப்படுத்தபட்டுள்ளது என்று உங்களால் சொல்ல முடியுமா?//
          நீங்கள் இவ்வாறு கேள்வி கேட்கின்றீர். அதை உங்களுக்கு விளக்க வேதத்தில் சென்றால் நான் ஹிந்து மதத்தை குறை கூறுகிறேன் என்கிறீர்கள். நீங்கள் என்னுடைய குறையை சுட்டிகாட்டவும். அதுவரை இந்த கேள்வி நிலுவையில் இருக்கட்டும்.

          //நீங்கள் இசுலாமில் உள்ள குறைகளை கண்மூடித்தனமாக ஆதரிக்கின்றீர்.//
          இதைதான் உங்களிடம் முதலிலிருந்து கேட்டுக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் குரான் மற்றும் இஸ்லாமில் என்ன குறை கண்டீர் என்று. நீங்கள் இன்னும் சொல்லவில்லை. உடனே அப்துல் காதர் இப்படி செய்தான், அல்லாபிச்சை இப்படி செய்தான் என்று சொல்லாதீர்கள். அவர்கள் செய்தது குர்ஆனில் இருந்தால் சொல்லுங்கள்.
          இஸ்லாமை புரிந்து கொள்ள குரான் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஹதீஸ் படிக்கவும். நாங்கள் மனிதர்கள். எங்களிடம் குறைகள் இருக்கும். நாங்கள் செய்யும் குறைகளை எங்கள் மார்கள் சொல்லிக்கொடுத்தது என்று சொல்ல வேண்டாம்.

          குர்ஆனில் நீங்கள் நினைக்கும் குறையையும், நீங்கள் நினைக்கும் பெண்ணடிமைத்தனமும் என்ன என்று இங்கே பட்டியலிடுவீர்கள் என்று நினைக்கிறேன். அதிலே நாம் மேலே கலந்தாலோசிப்போம். அதே போல நீங்கள் விருப்பப்பட்டால், நான் ஏன் நாத்திகம் உண்மை இல்லை என்ற கருதுகிறேன் என்பதையும் ஆலோசிக்கலாம்.

  52. அமீன் பாய்,

    பாகிஸ்தானில் உள்ள இசுலாமியர்களை விட இந்தியாவில் உள்ள இசுலாமியர்கள் நன்றாகவே உள்ளனர். உலகில் உள்ள நாடுகளில் இருந்து பாகிஸ்தானுக்கு ஏன் சுற்றுலா செல்ல தயங்குகின்றனர்?

    ஒரு இசுலாமியர் மைனாரிட்டியாக இருக்கும் நாடுகளில் பெரும்பாலும் அவர்கள் நன்றாகவே உள்ளனர். அவர்கள் மெஜாரிடியாக உள்ள நாடுகளில் அங்கு அமைதியாக ஒற்றுமையான சகோதர உணர்வுடன் இருக்கிறார்களா என்றால் இல்லை என்ற பதில் தான் வரும்.

    இசுலாமியர்கள் எனக்கு விரோதியும் அல்ல, இசுலாம் என்ற மார்க்கத்தை நான் வெறுப்பதும் இல்லை. என் ஒரே வருத்தம், இசுலாமியர்களிடம் மற்ற மதத்தவரிடம் சகிப்புத்தன்மை இல்லை என்பதும், கொஞ்சம் பெண்ணடிமைத்தனமும் இருப்பது தான். அல்லாவை தவிர வேறு இறைவன் இல்லை என்று இசுலாமியர்கள் கூறுகின்றனர். இந்து மதத்திலும் குறைகள் உள்ளது. அதே சமயம் நான் பாராட்டக்கூடிய சில அம்சங்களும் உள்ளன. ரம்ஜான் பிரியாணியை இந்துக்கள் மறுப்பதில்லை.
    அல்லா சாமி, இயேசு, மேரி சாமி என்று மற்ற மத கடவுள்களையும் தங்களது பூஜை அறைகளில் அலங்கரிக்கும் இந்துக்களையும் நான் பார்த்திருக்கிறேன். RSS, VHP வகை இந்துத்துவாவிற்கு நான் இன்றும் எதிரி தான் அதே சமயம் வெள்ளேந்தியான இந்துக்களின் மாற்று மத கடவுள்களையும் ஒத்துக்கொள்ளும் மனப்பக்குவமும் சகிப்புதன்மையையும் நான் பார்த்து வியக்கிறேன். இந்து மதத்தில் கடவுளை வழிபடாமல், கோவிலுக்கு போகாமல் இருப்பதற்கு சுதந்திரம் உள்ளது. மற்ற மதத்தினரை தம் மதத்திற்கு மாற்றும் நோக்கமும் இந்து மதத்தில் இல்லை இந்த விடயங்கள் எனக்கு அதில் பிடித்திருக்கின்றது. அதே சமயம் சாதி வேறுபாடு, சில மூட பழக்கவழக்கங்கள், பாலாபிஷேகம் என்ற பெயரில் உணவு பொருளை வீணாக்குவது போன்ற வேதனை தரக்கூடிய பழக்கங்களை நான் தீவிரமாக எதிர்க்கிறேன்

    எல்லா மதங்களிலும் நல்ல விடயங்களும் உள்ளன, தற்கால நடைமுறைக்கு ஒவ்வாத சில விடயங்களும் உள்ளன. நான் அனைத்து மதங்களிலும் உள்ள நல்ல விடயங்களை மட்டும் தேர்ந்தெடுத்து வாழ்ந்து விட்டு போகிறேன்

    • இவ்வளவு நேரம் நீங்கள் நடுநிலை என்று சொல்லிவிட்டு, இஸ்லாமியர்களுக்கு எதிராக நடக்கின்ற அனைத்தும் சரி என்று சொல்லுகிறீர்கள். உங்கள் நடுநிலைமையை நீங்களே எடை போட்டு பார்த்துகொள்ளுங்கள்.

      //இசுலாமியர்களிடம் மற்ற மதத்தவரிடம் சகிப்புத்தன்மை இல்லை //
      மற்ற மதத்தவரிடம் சகிப்புத்தன்மையுடன் நடந்துகொள்ள சொல்கின்ற ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.

      குரான் 109:6 : உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.

      குரான் 2:109 : வேதத்தை உடையவர்களில் பெரும்பாலோர், உண்மை அவர்களுக்கு தெளிவாகத்தெரிந்த பின்னரும், தங்கள் மனதில் உள்ள பொறாமையினால் நீங்கள் நம்பிக்கை கொண்டபின் காஃபிர்களாக மாற வேண்டுமென விரும்புகிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் கட்டளை வரும்வரை அவர்களை மன்னித்து, அவர்கள் போக்கிலே விட்டுவிடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தி உடையவனாக இருக்கிறான்.

      குரான் 2:256 : (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் – அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.

      //கொஞ்சம் பெண்ணடிமைத்தனமும் இருப்பது//
      உண்மைதான். புனித அன்னை மரியம் (அவர்கள் மீது சாந்தி உண்டாவதாக), அன்னை தெரேசா, தேவாலயங்களில் இருக்கும் கன்னியாஸ்திரிகள் தலையை மறைத்து இருப்பது புனிதம். ஒரு இஸ்லாமிய பெண் தலையை மறைத்து இருப்பது உங்களுக்கு பெண்ணடிமைத்தனமாகவே தெரியும்.
      இங்கிலாந்தின் ராணி தகுந்த பாதுகாப்பு இல்லாமல் வெளியே செல்ல கூடாது என்பது உங்களுக்கு பாதுகாப்பாக தெரியும். ஒரு முஸ்லிம் பெண் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்று சொல்வது உங்களுக்கு பெண்ணடிமைத்தனமாகவே தெரியும்.
      பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்துகொண்டும், கணவன் இறந்தால் பெண்களை உடன்கட்டை ஏற்றிகொண்டும், பெண்களை ஆண்களின் அடிமைகளாக நடத்திகொண்டிருந்த காலத்தில் பெண் குழந்தைகள் பிறந்தால் நன்மாராயமாகவும், பெண் குழந்தைகளை சொர்கத்தின் வழியாகவும், அன்னையின் காலடியில் சொர்கமிருக்கிறது என்று பெண்ணை போற்றுவது உங்கள் கண்களில் பெண்ணடிமைத்தனமாகவே தெரியும்.

      இந்துக்களையும் இந்துத்துவாவையும் பிரித்து பார்க்கும் நீங்கள், இந்துக்கள் எல்லோரும் நல்லவர்கள், இந்துத்துவவாதிகள் மட்டுமே கெட்டவர்கள் என்று சொல்லும் நீங்கள், முஸ்லிம் பெயர்தாங்கிகள் செய்யும் தவறை மட்டும் ஏன் ஒட்டுமொத்த இஸ்லாம் சமுதாயத்தினர் மீதும் இஸ்லாம் மீதும் சுமத்துகிறீர்கள்?

      //இந்துக்களின் மாற்று மத கடவுள்களையும் ஒத்துக்கொள்ளும் மனப்பக்குவமும் சகிப்புதன்மையையும் நான் பார்த்து வியக்கிறேன்.//

      நீங்கள் முதலிலிருந்து ஒரு தவறான புரிதலில் இருக்கிறீர்கள். நான் என்ன இந்துக்கள் முஸ்லிம்களுக்கு எதிரிகள் என்று சொன்னேனா? அல்லது இந்துக்கள் செய்யும் எதையாவது தவறு என்று சுட்டிக்காட்டினேனா? என்னுடைய குறிக்கோள் இஸ்லாமில் இருக்கும் தவறான புரிதலை நீக்குவதே அன்றி மற்றவர்களின் தவறை சுட்டிக்காட்டுவது அல்ல. பூஜை அறைகளில் மற்ற கடவுள்களை வணங்குவதே சகிப்புத்தன்மை என்று நீங்கள் எண்ணினால், அது உங்களது அளவீடு. என்னுடைய சகிப்புத்தன்மை என்பது, குரான் 109:6ல் அல்லாஹ் சொன்னதுபோல் உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம். உங்கள் மார்க்கத்தை பின்பற்ற உங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே அளவு என்னுடைய மார்க்கத்தை பின்பற்ற எனக்கு உரிமை கொடுங்கள். அவ்வளவுதான்.

      //இந்து மதத்தில் கடவுளை வழிபடாமல், கோவிலுக்கு போகாமல் இருப்பதற்கு சுதந்திரம் உள்ளது. //
      இந்து மத புராணங்களிலும், இதிகாசங்களிலும், வேதங்களிலும் இது சொல்லப்பட்டிருக்கிறதா? கொஞ்சம் எங்கே சொல்லப்படிருக்கிறது என்று சொல்ல முடியுமா?
      நீங்கள் சொல்லும் இந்து மக்கள் கடவுளை வணங்காமல் இருப்பது போல பெயர்தாங்கி முஸ்லிம்களும் பள்ளிவாசல் பக்கமே வராமலும் இருக்கிறார்கள். இது என்ன சுதந்திரமா? அல்லது உங்கள் கூற்றுப்படி சுதந்திரமாக எடுத்துக்கொண்டாலும், அவர்களின் சுதந்திரத்திற்கு மற்ற முஸ்லிம்கள் என்ன வேலி போடுகிறார்கள்?

      //மற்ற மதத்தினரை தம் மதத்திற்கு மாற்றும் நோக்கமும் இந்து மதத்தில் இல்லை//
      குரான் 2:256 : (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் – அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
      இஸ்லாம் மார்கத்தில் கட்டாய மத மாற்றம் இல்லை. நமக்கு தெரிந்த உண்மையை எல்லோருக்கும் எடுத்துக்கூறுவது எப்படி தவறாகும். அவர்களின் மேல் நம்முடைய கருத்தை திணிப்பதே குற்றம். அவர்களே நேர்வழி பெற இஸ்லாத்தை தேர்ந்தெடுத்தால் இது எப்படி குற்றமாகும்?

      நீங்கள் ஒரு தேர்வு எழுதும்போது உங்களுடைய உற்ற நண்பன் ஒரு தவறான விடை எழுதிவிட்டான் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அவனுக்கு சரியான விடை சொல்ல உங்களுக்கு உரிமையிருக்கிறது என்று வைத்துகொள்வோம். இப்போது நீங்கள் உங்கள் நண்பரை தேர்வில் வெற்றிபெற சரியான விடையை சொல்வீர்களா? அல்லது நாம் வெற்றிபெற்றால் போதும் நண்பன் எப்படியாவது போகட்டும் என்று எண்ணுவீர்களா? மற்றவர்களுக்கு இஸ்லாம்பற்றி சொல்வது ஒரு அழைப்பு மட்டுமே. அந்த அழைப்பை ஏற்பதும் நிராகரிப்பதும் அவர்களின் உரிமை. இதில் தவறு என்ன கண்டீர்கள்.

      நீங்கள் ஒரு பள்ளியின் ஆசிரியராக இருந்து 2+2 என்ன என்று கேள்வி கேட்கிறீர்கள். ஒரு மாணவன் 3 என்று விடை அளிக்கிறான். இன்னொரு மாணவன் 4 என்கிறான். இன்னொரு மாணவன் 5 என்கிறான். நீங்கள் ஒரு ஆசிரியராக முதல் மற்றும் மூன்றாவது மாணவனின் தவறுகளை திருத்துவீர்களா? அல்லது மூன்றுமே சரி என்று சொல்வீர்களா? உங்களின் கடமை என்ன? உண்மையான விடையை நீங்கள் சொல்லாமல் இருப்பது, அந்த இரு மாணவர்களுக்கும் நீங்கள் செய்யும் துரோகம் இல்லையா?

      //நான் அனைத்து மதங்களிலும் உள்ள நல்ல விடயங்களை மட்டும் தேர்ந்தெடுத்து வாழ்ந்து விட்டு போகிறேன்//
      இது மேலோட்டமாக பார்க்கும் பொது மிகவும் நல்லதாக தெரியும். நீங்கள் சொல்வது எப்படி இருக்கிறது என்றால், எனக்கு கார், லாரி, டிராக்டர், சைக்கிள் பிடிக்கும், நாலு வண்டியிலிருந்தும் ஒவ்வொரு சக்கரத்தை எடுத்துக்கொண்டு நான் வண்டி ஓட்டப்போகிறேன் என்பதுபோல இருக்கிறது. ஆனால், இந்த முடிவு உங்கள் உரிமை. நான் அதை கூடாது என்று சொல்ல எனக்கு உரிமை இல்லை. ஆனால், அது ஏன் நல்லதல்ல என்று கூறலாம். அதை ஏற்பதும் ஏற்காமல் விடுவதும், உங்கள் விருப்பம்/உரிமை.

  53. Ameen,

    // how can you claim majority of the muslims are terrorists?//

    Majority of terrorists are Muhamadans. And any peaceful muhamadan can turn into a terrorist at any time because that is what quran teaches him and commands him and that is what many example demonstrate.

    //ever heard a Atheist terrorist or a Christian terrorist//

    It is only Muhamadans who howl Takbeeeer, Allaaaaaaaaaahu akbar while cutting the head of a kaafir. Ever heard of a Christian shout alleeeeeluuuuuuya while cutting the head of another person?

    // these countries were influenced by external forces//

    From its inception, it is Muhamadism which is on offensive on other parts of the world. The first problem with the mentioned countries is Muhamadism.

    //thousands of muslims who are suffering in prison *** //

    In Muhamadist countries, the fate of kaafirs is and was far worst. You Muhamadans are good at playing victims while being the number one victimizers themselves worldwide. But your days of falsehood are numbered, thanks to Internet.

      • Please read the news carefully. This law is made by the saudi arabia king. Not by Allah. We are here to discuss on what Allah said in Quran. We are not here to discuss what saudi king say or does? Understand?

        • Ameen,

          //This law is made by the saudi arabia king. Not by Allah. We are here to discuss on what Allah said in Quran.//

          It is the law of quran. Fitnah (causing trouble in the religiosity of the community, etc) is worst than murder as per quran, and its punishment is death in gory fashion like crucifixion etc. Atheism is number one fitnah. As i said, don’t waste my time asking for verse numbers. (Others can search ‘fitnah’ in the net)

          • //Others can search ‘fitnah’ in the net//
            Ah ha.. Now you don’t have any more truth to directly reply to me.

            Fitnah means trial and testing in life. Quran says, your Wealth is a fitnah if it makes you pride and let you not help poor and needy. Your knowledge is a fitnah if it makes you arrogant and make you to treat others as low and doesn’t teach others. Your Power (Ruler) is a fitnah if it makes you arrogant and do injustice. Your children and relations are also fitnah if they takes you out of god conscience and make you to do sin.

            If you cannot prove your statements from Quran, then I would recommend you to refrain yourself from throwing up all your thoughts here. I know you have some lousy blog which you and your like minded people will read. Go ahead and type your thoughts there instead of writing in public forums.

            • Ameen,

              //Fitnah means trial and testing in life.//
              You being a Muhamadan, you cannot give here the meaning that is used in quran. What is the punishment for this fitnah (trial and testing) as per quran? See below.
              As per Q 5.32 – Murder
              As per Q 5.33 – மரணதண்டனை, அல்லது சிலுவையிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறுகை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்
              An excerpt from http://tamil.alisina.org/?p=128 on Fitnah.
              ///
              “இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன், கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் குழப்பத்தை பரப்புவதற்கோ அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.” [Q 5:32 ]
              ***
              மாறுபடல், இணங்க மறுத்தல், எதிர்த்தல், அதிகாரத்திற்கு எதிராக நடத்தல் போன்ற பொருள்களையுடைய ‘பித்னா’ (fitnah) என்ற அரபு வார்த்தையைத்தான் குழப்பம் விளைவித்தல் என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள். நீங்கள் இஸ்லாமின் கருத்துக்களுடன் இணங்க மறுத்தால், அல்லது எதிர்த்தால் நீங்கள் அதிகாரத்திற்கு எதிராக நடந்து, நாட்டில் குழப்பம் விளைவிக்கிறீர்கள் என்று பொருள். நீங்கள் இஸ்லாமிற்கு எதிராக போர்தொடுக்கிறீர்கள் என்று கருதப்படுவீர்கள். இந்த போர் வன்முறையானதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இஸ்லாமுடன் இணங்க மறுப்பதே அதற்க்கெதிராக போர்தொடுப்பதற்குச் சமம். நீங்கள் இஸ்லாமை கண்டித்தாலோ அல்லது குறைகூறினாலோ, முஸ்லிம்களுக்கு வேறு மதம் எதையேனும் போதித்தாலோ நீங்கள் அதன் அதிகாரத்திற்கு அல்லது ஆட்சிக்கு எதிராக நடந்து கொள்கிறீர்கள் என்று பொருள். இவைகள் எல்லாமே குழப்பங்கள்தான்.
              குழப்பத்தை பரப்புபவர்களுக்கு என்ன தண்டனை?
              “அல்லாவுக்கும் அவர் தூதருக்கும் எதிராக போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; மரணதண்டனை, அல்லது சிலுவையிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறுகை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு” (Q 5:33)
              ///

              • univerbuddy அவர்களே,

                நீங்கள் எவ்வளவு தான் மண்டையை மறைத்தாலும் உங்க கொண்டையை மறைக்க முடியவில்லையே. நீங்கள் எவ்வளவுதான் கடவுள் மறுப்பாளராக இங்கே பேசினாலும், உங்கள் RSS சிந்தனையை இங்கே காட்டிவிட்டீர்கள். ஹெட்கேவர் மற்றும் கோல்வாக்கர் சித்தாந்தத்தை பின்பற்றும் உங்களிடம் எவ்வளவுதான் தூய மார்க்கம் இஸ்லாமை பற்றி எடுத்து சொன்னாலும் நீங்கள் கேட்கப்போவதில்லை.

                ஆனால், குரான் பற்றிய உங்களுடைய தவறான பிரசாரத்தை பொய் என்று நிரூபிக்கவேண்டிய கடமை எனக்கு உள்ளது. அதை நீங்கள் புரிந்து கொள்ளாவிட்டாலும் இதை படிக்கின்ற மற்றவர்கள் புரிந்துகொள்ளுவார்கள்.

                Quran 60:8 மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்க வில்லை – நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.
                Quran 60:9 நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத் தான் – எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்.

                எவர் ஒருவர் புத்தியுடன் நீங்கள் சொன்ன குரான் 5:32 மற்றும் 5:33 வசனங்களை படிக்கிறார்களோ அவர்களுக்கு தெளிவாக புரியும், இந்த வரிகள் கொலை மற்றும் குழப்பம் விளைவிப்பவர்களுக்கு என்று. நீங்க இதை நாத்திகர்களுக்கு என்று எடுத்துக்கொண்டால் அது உங்களுடைய அறிவீனத்தையே காட்டுகிறது. உங்களுடைய ஞானி அலி சினாவின் பொய்களை அப்போதே பொய்ப்பித்தாகிவிட்டது. நீங்கள் அதற்கே விளக்கம் அளிக்கவில்லை. இப்போது மறுபடியும் அலி சினாவின் சித்தாந்தத்தை சொல்கிறீர்கள்.

                நீங்கள் சொல்வதை பார்த்தல், நபி மற்றும் சகாபாக்களின் ஆட்சி காலத்தில் மற்ற மதத்தவர்களும், நாத்திகர்களும் கொல்லப்பட்டார்கள் என்பது போல இருக்கே. உங்களுக்கு வரலாறு தெரியவில்லை என்றால், கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

                Hercules, the Great Roman Emperor, asked many questions about Prophet Mohammad PBUH to Abu Sufian and reached the conclusion of the truth of Mohammad’s Call. He even said: ”if i were in his presence, I would wash his feet”.

                And the beard Of King Al Najashi of Habasha (Ethiopia) became wet with his tears when he heard some of what Prophet Mohammad (PBUH) came with, Al Najashi said: ”these words and what Jesus said, come from the same lantern”.

                And the French Philosopher, Lamartine said: “Mohammad (PBUH) is the Philosopher, Orator, Apostle, Legislator, Warrior, Conqueror of fantasies.

                In all standards by which human greatness is measured, we may well ask: Is there any man greater than Prophet Mohammad?!”

                And the Famous English playwright George Bernard Shaw said: ”The world much needs a man with Mohammad’s bright thinking. If a man like Mohammad were to assume The rule of modern world, he would succeed in solving its problems and bring peace and happiness to it”

                And Michael Hart, said : “My choice of Muhammad to lead the list of the world’s most influential persons may surprise some readers and may be questioned by others, but he was the only man in history who was supremely successful on both the religious and secular levels”

                And The great Indian Leader Mahatma Gandhi said: After i finished the second part of the Biography of Mohammad, i felt i needed to know more about this great personality. He uncontested, won the hearts of millions of people”.

                And Thomas Carlyle, the English writer, said: ”I like Mohammad for his Hypocrisy-free nature… With clear and sound words he addresses the Roman Tsars and Kings of Persia. He guides them to what he loves for them in this life and in the eternal life”

                And George Wells, the English author regards Prophet Mohammad (PBUH) the greatest personality who established a state for justice and tolerance.

                And the researcher Ligtner said: ” i declare my hope to see a day coming in which the Christians will highly respect Jesus through their respect to the Prophet Mohammad (PBUH). Truly the Christian who recognize the religion and right brought by Prophet Mohammad (PBUH) is clearly the true Christian”.

                And the Famous Russian writer LEO Tolstoy believes that Mohammad’s religion will prevai lover the Whole World as it is in conformity with mind and wisdom.

                And Jean-Louis Michon, the french orientalist, said : ”Islam which ordered Jihad or Holy War, had much tolerance with followers of other religions…

                As per the teachings of Mohammad (PBUH), Omar Bin AL Khattab (RA), did not inflect harm on Christians when he conquered Jerusalem.

                And the Well-known French historian Gustav Lobon said Mohammad is the Greatest man that History ever knew.

                And Will Durant, author of the Story of Civilization said: ” if we rated greatness by the influence of the great on people, we will say Mohammad is the greatest of the great in history”

                Do you know what Gandhi said about the vision of India “The best thing to happen to India would be to be reigned by a ruler as just and upright as Umar bin Al Khattab”.. I know people who killed Gandhi will not accept whatever he says.

    • You are commenting all the — that are going around your brain and when I reply you get upset as waste of time. I would recommend you either have guts to answer the questions asked against you or be tolerable when your faults are exposed or just don’t comment here with all thats goes around your veiled brain.

      //Majority of terrorists are Muhamadans.//
      I have given you whole list of terrorists and you don’t have any answer to there. But just saying the false again and again.

      //And any peaceful muhamadan can turn into a terrorist at any time because that is what quran teaches him and commands him and that is what many example demonstrate.//
      You have to prove this point from Quran. I already said you not to comment whatever that comes to your mind. Don’t propagate blasphemy.

      //It is only Muhamadans who howl Takbeeeer, Allaaaaaaaaaahu akbar while cutting the head of a kaafir. Ever heard of a Christian shout alleeeeeluuuuuuya while cutting the head of another person?//

      I pity on you when you ears are muted when saying “Jai Sri Ram” and killing innocent muslims, raping ladies, burning children. This is the impact created by media and some movies such as vishwaroopam.

      //In Muhamadist countries, the fate of kaafirs is and was far worst. You Muhamadans are good at playing victims while being the number one victimizers themselves worldwide. But your days of falsehood are numbered, thanks to Internet.//

      This is again a false propaganda. I know many non-muslims from India who live happily in middle-east countries. If you think they are suffering, why are they not willing to come back to India? If you speak about labourers who suffer in Saudi, then it is same for all religions. Muslims are suffering as labour the same way as a Hindu is suffering. It is not religiously differentiated.

      Mr. Univer, I am not sure why you don’t use your brains while commenting here. All you have here is allegations. When rebutting those allegations, you don’t have an answer. You either move on to new topic or you start saying I am wasting your time. If you have so much sense of time, then why are you commenting here. Do you think you can type whatever here and no one will question you? Change your mentality man and get into your senses before commenting.

      • Ameen,

        //saying “Jai Sri Ram” and killing//

        You can call those shouting the name of Ram while perpetrating atrocities as Hindu terrorists. Having said that, most of the actions of Hindus is the retaliation to the actions of Muhamadans. When comparing hindu terrorists to muhamadans terrorists worldwide, the number of hindu terrorists is insignificant. Muhamadism has infected all the races it attacked. Even new converts from native europeans, african americans, etc become terrorists. All this proves that the fault lies in Muhamadism of Mumins and Kaafirs.

        //I know many non-muslims from India who live happily in middle-east countries. If you think they are suffering, why are they not willing to come back to India? //

        I know they are not happy in middle-east. Many get into slave-like situations. Details are there in the net. But due to Petrol, they get a slightly better salary and so they go there and brave uncertainties. Then, they have to come back even after 20-40 years of work there. While muhamadans who enter illegally into Europe and other places get nationality after some years, their children get the nationality automatically on their birth in those places, immigrants to Gulf countries and their gulf born children can never hope to settle.

        //Muslims are suffering as labour the same way as a Hindu is suffering.//

        Exactly. Muslim workers who work in the sun and high temperatures, can not even drink a gulp of water, during ramadan. If they do they will get exemplary punishment.

        • What I see in all your posts is pure racism. You don’t know the meaning of retaliation, No proof for any of your claim. You don’t have the knowledge of immigration for middle east and other western countries. You also don’t know the what is ramadhan and Muslims are fasting on their wish or in compulsion.

          One question to you, Can you tell me your view about Modi and how India will be if he became the PM of India?

          • Ameen,

            //What I see in all your posts is pure racism//

            What is the race of Muhamadism or Muhamadans? Muhamadism has infected all people of all races and Muhamadans are found in black/brown/white/yellow color. If I critic Muhamadism? How am I a racist?

            // Can you tell me your view about Modi//

            As a Communist, I am not for neither CP nor BJP nor AAP nor any other P.

            As a humanist atheist, I am not for any grouping on cultish bond. But since the muhamadism has achieved to form a biggest fanatical group worldwide and they are out to cover all the women in black, etc, It needs to be neutralized / tamed sooner or sooner than later. We cannot afford to wait for later. If enough number of Indians fear the same, put aside their differences and select BJP lead by Modi, I welcome it. As for me, I have decided to not to vote but contribute for revolution.

  54. Ameen Bhai, assalaamu alaikkum ww, you are doing great job with clear explanation patiently, but these are the people who are already prejudiced against Islam. So let me remind you this ” never argue with stupid people, they will drag you down to their level and then beat you with experience – Mark Twain. May Allah bless you.

    • Walaikkum assalaam warahamatullahi wabarakaatahu bhai. Yes, I agree with you, most of them already prejudiced and skeptical. But, I see some of them really want to know the facts and questioning here. My motive to comment here is to ensure people get the right message from Islam. Agreeing it or Rejecting it is their wish. I believe people who are not commenting here are also reading the post. If by the will of Allah, even one of them understand the truth about Islam and follow right path then it is enough.

      • அமீன் பாயோடு சில விடயங்களில் கருத்து வேற்றுமை இருந்தாலும், அவரது பொறுமையான பதிலளிக்கும் வழிமுறை எனக்கு பிடித்திருக்கிறது. Hats off to you Ameen Bhai. நீங்கள் ஒரு நல்ல மனிதர்.

        • நன்றி நண்பரே. நீங்கள் எல்லா மதங்களுக்கும் ஒரே வர்ணம் அடிக்காமல் இஸ்லாம் மற்றும் நபியை பற்றிய உண்மையை விளங்க முற்பட வேண்டும். நீங்கள் உடனே இஸ்லாமை ஏற்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை. நான் சொல்வதெல்லாம் உண்மையை தெரிந்து கொள்ள சிறிது முயற்சி செய்யுங்கள்.

          நீங்கள் நாத்திகமே உண்மையென்று எண்ணி அதில் பயணப்படுகிறீர்கள். நான் இஸ்லாத்தை பற்றி சொல்லும்போது நீங்கள் எப்படி கண்மூடித்தனம் என்று சொன்னீர்களோ, அதே போலத்தான் நீங்களும் நாத்திகத்தில் கண்மூடித்தனமாக இருக்கிறீர்கள். நீங்கள் செல்கின்ற பாதை சரியாக இருக்குமானால் பிரச்னை இல்லை. ஆனால், ஒருவேளை தவறாக இருந்து நான் சொல்வது சரியாக இருந்துவிட்டால் என்ன ஆகும். உங்களை படைத்த இறைவனின் முன் நீங்கள் நிற்கவைக்கப்பட்டால் நீங்கள் என்ன பதில் சொல்லுவீர்கள்?

          மறுபடியும் உங்களிடம் தர்க்கம் செய்ய நான் விரும்பவில்லை. நீங்கள் இந்த பதிவிற்கு பதில் அளிக்கவேண்டும் என்பதில்லை. நீங்கள் பொறுமையாக உங்கள் பகுத்தறிவு கொண்டு சிந்தித்து பாருங்கள். உங்களை படைத்தவன் ஒருவன் உண்டென்றால் அவன் உங்களுக்கு நேர்வழி காட்டட்டும் என்ற பிராத்தனையுடன் தொடங்குங்கள்.

          நீங்கள் நேர்வழி பெற வாழ்த்துக்கள். அந்த இறைவன் உங்களுக்கும் எனக்கும் நேர்வழி காட்டட்டும்.

          • அமீன் பாய் நண்பரே,

            //நீங்கள் செல்கின்ற பாதை சரியாக இருக்குமானால் பிரச்னை இல்லை. ஆனால், ஒருவேளை தவறாக இருந்து நான் சொல்வது சரியாக இருந்துவிட்டால் என்ன ஆகும்.//
            – அதே எண்ணம் தான் எனக்கும். இருவருக்குமே அவரவர் பார்வையிலிருந்து பார்த்தால் தாம் சொல்வது சரி என்று தான் தோன்றும். என்னை இசுலாம் பற்றி அறிந்து கொள்ள சொல்கிறீர்கள். நான் உங்களை இசுலாமை விட சொல்லவில்லை. எதிலும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதற்கேற்ப குர்ஆன் ஆக இருக்கட்டும், பைபிள், கீதை எதுவாக இருக்கட்டும், அவற்றில் இருந்து மெய்ப்பொருள் அறிந்து, தற்கால வாழ்க்கைக்கு மாறுபட்ட கருத்துக்களை தவிர்த்து, எது உண்மை எது உண்மையல்ல என்று கேள்விகள் கேட்டு தெளிவு பெறுங்கள் என்று தான் சொல்கிறேன். இசுலாம் மார்க்கமோ, இந்து மார்க்கமோ கிருத்துவ மார்க்கமோ முழுக்க முழுக்க தவறென்று சொல்லும் அளவு தலைக்கனம் எனக்கு இல்லை.
            ஏதோ என்னால் முடிந்த வரை உலகின் சாராம்சத்தை, வாழ்வியலை, அறிவியலை கற்றுக்கொண்டு வருகிறேன். இன்னும் கல்லாதது உலகளவு உள்ளது.

            நீங்கள் இசுலாத்தை பின்பற்றுவதை போல நான் அறிவியலை பின்பற்றுகிறேன். அவ்வளவு தான். அறிவியலில் தவறிருந்தால் அதை நேர்மையாக ஒத்துகொள்வேன். அது தான் அறிவியலின் பலம். அதனால் தான் புதிய புதிய கண்டுபிடிப்புகளை நம்மால் கண்டுபிடிக்க முடிகிறது. ஆனால் மதங்கள் தான் வீம்பாக தாம் சொல்வது மட்டும் தான் உண்மை. மற்ற எல்லாம் பொய் என மக்களின் மூளையை மழுங்கடிக்கின்றன.

            உங்களின் பொறுமை என்னை கவர்ந்தாலும், கருத்து ரீதியில் நாம் எதிர்முனையில் தான் இன்னும் இருக்கிறோம் நண்பரே.

            • //நீங்கள் இசுலாத்தை பின்பற்றுவதை போல நான் அறிவியலை பின்பற்றுகிறேன்.//
              //கருத்து ரீதியில் நாம் எதிர்முனையில் தான் இன்னும் இருக்கிறோம்//

              இஸ்லாம் அறிவியலுக்கு எதிரானது என்று யார் சொன்னது. நான் இஸ்லாம் இறைவனின் மார்க்கம் என்று ஏற்றுக்கொண்டதற்கு காரணமே அறிவியல்தான். நான் 29.1.2.2.1.1 சொன்னது போல, ஒரு காலத்தில் மந்திர தந்திரம் பரவலாக இருந்தது. அப்போது குரான் எல்லாத்தையும் விட மிக சிறந்த மந்திரங்கள் இருந்ததாக கருதப்பட்டது. பிறகு, கவிதைகளின் காலம், அப்போதும் குரான் மிக சிறந்த கவிதையாக கருதப்பட்டது. இப்போது அறிவியலின் காலம். இன்றும் குரான் தலை சிறந்த அறிவியல் உள்ளடக்கமாக கருதப்படுகிறது. நாளை என்ன காலம் இருக்குமோ, கண்டிப்பாக குரான் அதிலும் மிஞ்சும் விதமாகவே இருக்கும்.

              நீங்கள் அறிவியலை பின்பற்றுகிறீர்கள் என்று சொன்னீர்கள். நல்லது. நானும் அறிவியலை நம்புகிறேன். எல்லா அறிவியலும் அல்ல, 100% உண்மை என்று நிரூபிக்கப்பட்ட அறிவியலை நம்புகிறேன். ஏனென்றால், மனிதனின் வளர்ச்சிக்கேற்ப அறிவியல் பல இடங்களில் u-turn அடித்திருக்கிறது.

              நான் குரானை 100% நிரூபணமான அறிவியலுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, குர்ஆனில் 1400 வருடங்களுக்கு முன் சொல்லப்பட்ட கருத்துக்கள் இன்றைய அறிவியல் உண்மையென்று நிரூபிக்கிறது. குர்ஆனில் எந்த வாக்கியம் இன்றைய 100% நிரூபிக்கப்பட்ட அறிவியலுக்கு மாறுபடுகிறது என்று சொல்ல முடியுமா?

              குர்ஆனில் இருக்கும் பல கருத்துக்கள் ஒரு 100 வருடங்கள் முன்வரை நிரூபிக்கப்படவில்லை. ஆனால், இன்றைய நவீன அறிவியல் குரானை உண்மை என்று நிரூபிக்கிறது. இன்னும் பல கருத்துக்கள், அறிவியல் இன்னும் வளர்ச்சி அடைந்து நிரூபிக்கும். அல்லது நம்முடைய அறிவியலின் எல்லைக்கு அப்பாற்பட்ட கருத்துக்களை நிரூபிக்காமலேயே விட்டுவிடும்.

              இஸ்லாமுக்கும், நவீன அறிவியலுக்கும் எந்த முரண்பாடும் இல்லாதபோது நான் ஏன் அறிவியலை நம்பினால், இஸ்லாமை விட வேண்டும்.

  55. “Islam is a close corporation and the distinction that it makes between Muslims and non-Muslims is a very real, very positive and very alienating distinction. THE BROTHERHOOD OF ISLAM IS NOT THE UNIVERSAL BROTHERHOOD OF MAN. IT IS BROTHERHOOD OF MUSLIMS FOR MUSLIMS ONLY. There is a fraternity but its benefit is confined to those within that corporation. For those who are outside the corporation, there is nothing but contempt and enmity. … In other words, Islam can NEVER ALLOW a true Muslim to adopt India as his motherland and regard a Hindu as his kith and kin. That is probably the reason why Maulana Mahomed Ali, a great Indian but a true Muslim, preferred to be buried in Jerusalem rather than in India.”

    [Ambedkar: What the Dalit icon wrote of Islam – It is for the Muslim scholars to rebut or validate what Ambedkar has written about Islam. But, the secular politicians, who invoke Ambedkar in everything relating to Dalit politics, and have formed a Dalit-Muslim alliance, should also clarify if they agree to what Ambedkar has written.

    Note: The complete book, “Pakistan or the Partition of India” is available in pdf form]
    http://www.ambedkar.org/pakistan/pakistan.pdf
    http://www.ibtl.in/blog/2019/ambedkar-what-the-dalit-icon-wrote-of-islam/

    • Bro Viyasan,

      Please give proof from Quran for your allegations and we shall discuss on them. I cannot answer for your assumptions.

      Who is Maulana Mahomed Ali? Give me more information about him.

  56. Ameen,

    //5:32 மற்றும் 5:33 *** கொலை மற்றும் குழப்பம் விளைவிப்பவர்களுக்கு//.

    இந்த இடங்களில் அரபியில் பித்னா என்ற வார்த்தைதான் இருக்கிறது என்பதை மறுக்க மாட்டீர்கள் என்ற நம்புகிறேன். அதாவது நீங்கள் கொடுத்த பொருளின் படி இந்த இடங்களில் trail and testing in life இருக்கிறது என்பதையும் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். இதற்குப் போய் மரணதண்டனை, அல்லது சிலுவையிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறுகை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல் போன்ற தன்டனைகள் என்றால் மூளை சரியாக உள்ளவர்கள் தங்கள் அடிவாயால் சிரி்க்க மாட்டார்களா?

    //நீங்க இதை நாத்திகர்களுக்கு என்று எடுத்துக்கொண்டால் அது உங்களுடைய அறிவீனத்தையே காட்டுகிறது. உங்களுடைய ஞானி அலி சினா.//

    அந்த வார்த்தையின் பொருள் என்னவென்று முகமதியர்களான உங்களுக்கு குறிப்பாக முகமதிய நாடுகளின் முகமதியர்களுக்கு தெளிவாக தெரியும். அதனால் தான் ஈரானியரான அலிசினா முகமதியத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார். அதனால் தான் அரேபியா இந்த புதிய சட்டத்தை இயற்றியிருக்கிறது. நான் இங்கே உங்களிடம் விவாதிப்பது உங்களுக்கு உங்கள் கருத்துக்களில் உள்ள பி்த்தலாட்டங்களை சுட்டிக்காட்டி உங்களை திருத்திவிடலாம் என்ற நம்பிக்கையில் அல்ல, விவாதத்தை படிக்கும் காபிர்கள் முகமதியத்தைப்பற்று அறிந்து கொள்ளவே.

    //Quran 60:9 நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து//

    மார்க்க விஷயத்தில் எந்தெந்த வகையான போர்கள் இருக்க முடியும் என்று விளக்க முடியுமா ?

    //நீங்கள் சொல்வதை பார்த்தல், [முகமது] மற்றும் சகாபாக்களின் ஆட்சி காலத்தில் மற்ற மதத்தவர்களும், நாத்திகர்களும் கொல்லப்பட்டார்கள் என்பது போல இருக்கே//

    I can copy-paste a lot of material for this. But I just give one link for the benefit of our readers.

    http://www.islam-watch.org/authors/1522.html?task=view
    By the by,

    Did you read what Babasaheb Ambekar has written about Muhamadism? He is a true visionary of all the mankind.

    • Univerbuddy,

      Hope you are very much confused on thinking what to reply and seeking help from the thoughts of your so called scholar Ali Sina.

      Keep Calm and understand the truth. You said that Quran says to kill Atheist. When I ask proof, you are saying Quran says to kill people who do murder and make conspiracies. Examples of conspiracies are what happened in Gujarat and UP. How can you say Atheists are making conspiracies. Prophet (saws) and his companions rules many places. Do you have proof of Atheist being killed over there without doing any crime?

      If I say Krishna said Arjuna to kill his own brothers, is it correct? Don’t you understand that it is war and Krishna said Arjuna to fight against evil. Your allegations are nothing less than this.

      Ambedkar had said more about Hinduism than Islam, which I don’t want to quote here since it will increase animosity. You have to understand that he didn’t join in RSS rather he became a Buddhist. So you cannot take him to rescue your situation. 🙂

  57. Ameen,

    // You said that Quran says to kill Atheist. //

    Quran is the worst manual one can find. It does not say anything properly. But, as far as the 2 verses I quoted are concerned, it is very clear to Muhamadans as to what FITNAH means and how to deal with FITNAH makers. I trust what Ex-Muhamadans like Ali Sina, M A Khan, Ayaan Hirsi Ali, Wafa Sultan, etc. say about Muhamadism and Muhamadans. Not you who is here to lie. I am done with the subject of FITNAH with you. If anything else comes up, we can discuss.

    • Quran 6:25 – அவர்களில் சிலர் உம் பேச்சைக் கேட்(பது போல் பாவனை செய்)கின்றனர்; நாம் அவர்களுடைய உள்ளங்களில் அதை விளங்கிக் கொள்ளாது இருக்குமாறு திரைகளையும் இன்னும் அவர்கள் காதுகளில் செவிட்டுத் தன்மையும் ஏற்படுத்தினோம்; இன்னும் அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் பார்த்தாலும் அவற்றை நம்பமாட்டார்கள்; இன்னும் இவர்கள் உம்மிடம் வந்தால் உம்மோடு வாதாடுவார்கள்; “இவையெல்லாம் முன்னோர்களுடைய கட்டுக் கதைகளேயன்றி வேறில்லை” என்று இந்நிராகரிப்போர் கூறுவார்கள்.

      உங்கள் செவிகளிலும், கண்களிலும், இதயத்திலும் மூடி இருக்கின்ற திரையை விலக்க நான் எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன். உண்மையை பொய்யிலிருந்து பிரித்து அறிந்துகொள்ளும் பகுத்தறிவு நம் எல்லோருக்கும் கிடைக்க அந்த ஏக இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  58. சவூதி அரேபியாவில் இந்தியர் படுகொலை : குற்றவாளிக்கு 10 நாளில் மரண தண்டனை….!!

    சவூதி அரேபியாவில் இந்தியரை கொன்ற கொலைக் குற்றவாளிக்கு கொலை செய்த 10 நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

    சவூதி அரேபியா தலைநகர் ரியாத் நகரில் கடந்த 31.03.2014 அன்று சவூதி குடிமகன் ஒருவரால் இந்தியா் ஒருவா் பட்டப்பகலில் நடு ரோட்டில் குத்திக் கொல்லப்பட்டார்.

    அதன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

    இந்நிலையில், கொலை செய்த குற்றவாளி கைது செய்யப்பட்டதோடு, நடத்தப்பட்ட விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, குற்றம் நடந்த 10 நாளில் சவூதி நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்ததோடு, தண்டனையும் நிறைவேற்றப்பட்டது.

    இது தான் இஸ்லாம், கொலை செய்யப்பட்டவர் வெளிநாட்டை சேர்ந்தவர் என்றும் பாரபட்சம் பார்க்கப்படவில்லை.

    கொலைசெய்தவர் சொந்த நாட்டின் குடிமகன் என்று சலுகையும் காட்டப்படவில்லை.

    நீதியையும், தர்மத்தையும் கடைபிடிக்கும் உலகின் ஒரே சட்டம் இஸ்லாமிய சட்டமாகும்.

    இது தான் இஸ்லாம்…!!

    –படித்ததில் பிடித்தது.

  59. தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் தருணத்தில் மகனை பறிகொடுத்த தாயே கொலையாளியை காப்பாற்றிய வினோதம்!

    ஈரானில் தூக்குக் கயிறு மாட்டிய பிறகு தனது மகனைக் கொலை செய்த குற்றவாளியையே காப்பாற்றிய தாயின் செயல் பெரும் நெகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    தெருச்சண்டை ஒன்றில் 7 ஆண்டுகளுக்கு முன்னால் அப்துல்லா என்பவரை பலால் என்ற இந்த இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்தார். இதற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    நேற்று தண்டனை நிறைவேற்றும் நாள் வந்தது. அப்போது, தூக்குக் கயிறை பலால் கயிற்றில் சிறை அதிகாரிகள் மாட்டினர். சில நிமிடங்களில் தண்டனை நிறைவேற இருக்கும் நிலையில், கொல்லப்பட்ட அப்துல்லாவின் தாய் ஓடி வந்து, பலாலின் கன்னத்தில் பளார் பளார் என்று அறை விட்டு, அவனது கழுத்தில் இருந்த கயிற்றை அவிழ்த்து விட்டார்.

    இதனை பார்த்த பலாலின் தாயார், அப்துல்லாவின் தாயாரை கட்டி அணைத்து அழுதார். இதனால், பலாலை தூக்கிலிடும் பணி நிறுத்தப்பட்டது.

    நன்றி – வெப்துன்யா

    இஸ்லாமிய சட்டத்தின் படி கொலையுண்டவரின் நெருங்கிய ரத்த பந்தம் கொலையாளியை மன்னிக்கும் பட்சத்தில் தண்டனையை நிருத்தப்படும்.. ஆனால் அதே நேரத்தில் கொலையாளியை கொலையுண்டவரின் நெருங்கிய ரத்த பந்தம் மன்னிக்காத போது ஆட்சியாளராக இருந்தாலும் கூட கொலையாளிக்கு மன்னிப்பு வழங்க அதிகாரம் கிடையாது….

    இஸ்லாத்தை பொறுத்தவரை அநீதி இளைக்கப்பட்டவர்களின் அநீதிக்கு நீதி வழங்கும் சட்டம் ..இது ஏழை பணக்காரன் என்ற எந்தவித ஏற்றத்தாழ்வும் இல்லை.குற்றவாளியை பொறுத்தவரை இது கடுமையான சட்டம் தான் . அதே நேரத்தில் மன்னிப்பு என்ற ஒன்றையும் கொலையுண்டார்களின் குடும்பத்திற்கு அந்த அதிகாரத்தை கொடுத்துள்ளது ..ஆனால் ஏனோ இந்த உண்மைகள் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை..இஸ்லாத்தை பற்றி ஊடகங்களில் வரும் தவறான பொய் செய்திகளின் தாக்கங்கள் போலும்..

    இஸ்லாம் நம்மில் பலருக்கும் தவறாக புரிந்து கொளப்பட்ட மார்க்கம் தான்..

    –முகநூல் பதிவு

  60. படித்ததில் பிடித்தது. நன்றி ராஜ்குமார் அவர்களுக்கு,

    #போலிப் பெரியாரிஸ்டுகள் இன்று பெரியாரின் சிந்தனைகளில் இருந்து முரண்படுகிறார்கள் .,
    அவர்கள் தாழ்த்தப் பட்டோரின் இன இழிவைப் போக்கும் பெரியாரின் செயல் திட்டத்தை ஏற்கவில்லை மாறாக வெறும் மத & கடவுள் எதிர்ப்பை மட்டும் முன் வைக்கிறார்கள் .,
    நாத்திகனுக்கும் சூத்திரப்பட்டம் உண்டு ஆனால் மதம் மாரியவனுக்கு தான் சூத்திரப்பட்டம் இல்லை ., எந்த மதத்தில் தீண்டாமை இல்லையோ?? எந்த மதம் என்னை மனிதனாக மதிக்கிறதோ ???அந்த மதத்துக்கு மாறிவிட்டேன் என்று சொல்லி இன இழிவை நீக்கிக் கொள்ளும் பெரியாரின் செயல் திட்டம் என்ன ஆனது ???..
    ,இதை விட்டு வெறும் கடவுளையும் &இன இழிவுக்கு அரு மருந்தாக நிற்க்கும் பிற மதங்களையும் எதிர்ப்பதால் இவர்கள் தாழ்த்தப் பட்டோருக்கு என்ன நன்மையை கொடுத்துவிட போகிறார்கள் ., பல்ல,பறைய ,சக்கிலிய பட்டம் போய்விடுமா ?? சாரத்தை விட்டு சக்கையை புசிக்கும் இவர்களை போலிப் பெரியாரிஸ்டுகள் என்று நான் சொல்வதில் ஏதும் பிழை உண்டா ??#

Leave a Reply to zahir பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க