கல்விக் கூடங்கள், மருத்துவ மனைகள், நிர்வாக அலுவலகங்கள் என்று சமூகத்தில் உள்ள பெருவாரியான முக்கியமான இடங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுது. முக்கியமா பள்ளிகளில் நடக்கும் தீண்டாமை மிகவும் கொடுமையானது. சாதிய கட்டுமானங்களோட இருக்கும் கிராமத்தில் பெற்றோர்களே சாதிய பாகுபாட்டோடதான் பிள்ளைகளை வளர்ப்பார்கள். அதை மேலும் வலுப்படுத்தும் விதமாகவும், தூண்டுதலாகவும் பள்ளியில் வேலை செய்பவர்கள் இருந்தால் பிள்ளைகளின் மனநிலையில ஏற்படும் விளைவு மிகவும் கொடுமையானது. அப்படி ஒரு பள்ளியில் நடந்த அவலம் தான் இது.
தமிழக மாவட்டம் ஒன்றில் உள்ள ஒரு கிராமத்து நடுநிலைப் பள்ளியில் வேலை செய்தவருதான் அலுவலக உதவியாளர் (பியூன்) சண்முகம். இவர் முக்குலத்தோர் பிரிவில் வரும் சாதியை சேர்ந்தவர். அந்தப் பள்ளியில் வேலை செய்த தலைமை ஆசிரியர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் தலித் சமூகத்தை சேர்ந்தவங்க. ‘மேல்’ சாதி என்ற இறுமாப்போடு தலித் ஆசிரியர்களை மதிக்க மாட்டார் இந்த சண்முகம். அது மட்டும் இல்லாது ‘கீழ்ச்’ சாதி மாணவர்கள், ‘மேல்’ சாதி மாணவர்கள் என பாகுபாடு பார்த்து பழக மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதும், மாணவர்கள் யார், யாரு கூட பழக்கம் வச்சுக்கனும் என்பதை தீர்மானிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்.
எந்த குறையும் இல்லாமல் சண்முகம் அவருக்கு உண்டான வேலையை முறையாக செய்வார். கூடவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தைகளுக்கு தமிழ், கணக்கு என்று ஆரம்ப பாடம் நடத்துவார். ஆனால் சாதியை மனதில் வைத்துக் கொண்டு மற்றவர்களை நக்கல் செய்து நடந்துக் கொள்ளும் குருர புத்திக்காரர். தோட்டக் கலை ஆசிரியர் ஒரு தலித் சமூகத்தை சேர்ந்தவர், ஒரு அப்பாவி. அவரிடம் சண்முகம் “இந்தாய்யா நீ அந்த ஆறாம் வகுப்பு கட்டிடத்துக்குத் தானே போறே, அப்புடியே இந்த அட்டவணையை அந்த வகுப்புல கொடுத்துடு” என்று உத்தரவிடுவார். ஆசிரியர்களுக்கு உதவி செய்யும் அலுவலக உதவியாளர் வேலை இங்கு தலை கீழாக இருக்கும். இதை ஒரு ஏளனத்தோடு செய்வார் சண்முகம்.
எங்கள் பள்ளியில் சைவ வெள்ளாளர் ஒருவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்தார். அவர் ஒரு பொறுக்கி, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தரக்கூடியவர். அப்படிப்பட்ட அயோக்கியனுக்கு சாதியால் உயர்ந்தவர் என்ற ஓரே காரணத்துக்காக கீழ்படிந்து வேலை செய்வார் இந்த சண்முகம். ஆனால் அதன் பிறகு வந்த தலைமை ஆசிரியர் சாமிக்கண்ணு ஒரு தலித் என்பதால் ஏதாவது வேலை சொன்னால் “இப்பதானே சொல்லிருக்கிங்க, செய்றேன் பொறுங்க ஏன் பறக்கறீங்க’’ என்று எதிர்த்து பேசுவார்.
ஒரு முறை தேர்வின் போது ஆதிக்க சாதி மாணவர்களிடம் முன்கூட்டியே வினாத் தாளை எடுத்துக் கொடுத்து “கேள்விகளை குறித்துக் கொண்டு நல்ல மதிப்பெண் எடுங்க. ஏன் மதிப்பெண் குறைவா வாங்கிட்டு இந்தாள் கிட்ட கைகட்டி நிக்கணுமா” என்று கூறினார். “பாடமா நடத்துறாங்க, பிள்ளைங்களுக்கு ஒரு வாய்ப்பாடு தெரியல. க,ங,ச… தெரியல, மூணாவது நாலாவது படிச்சவன் எல்லாம் சாதி சலுகையில் வேலைக்கு வந்துட்டாய்ங்க. நான் அந்த காலத்துல எட்டாவது படிச்சவன் பியூனா போய்ட்டேன்” என்று அங்கலாய்த்துக் கொள்வார். இதில் மாணவர்கள் மீதான அபிமானம் போல சாதிவெறி வெளிப்படும்.
எங்க பள்ளியில் ஒரு பெண் ஆசிரியர் இருந்தார். அவரும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்தான். மிகவும் தைரியமானவர். சண்முகத்துக்கு பயப்பட மாட்டார். அவருடன் மாணவிகள் நெருக்கமாக பழகுவார்கள். அவர் ஒருவர்தான் பெண் என்பதால் சில மாணவிகள் அவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள். டீச்சர் சாப்பாடு கொண்டு வரும் பாத்திரத்தையும் சேத்து குளத்துக்கு கொண்டு போய் கழுவுவார்கள். இதை பொறுத்துக் கொள்ள சண்முகத்தால் முடியாது. மாணவிகளை தனியாக கூப்பிட்டு திட்டுவார். “அவ யாரு? நீங்க யாரு? அவளுக்கு போய் நீங்க தட்டுக் கழுவறதா? கொஞ்சம் கூட வெட்கமா இல்ல? வீட்டுக்கு போங்க. உங்க அப்பாருகிட்ட வந்து சொல்றேன்” என்று மாணவிகளை ஏதோ செய்யக் கூடாத தப்பு செய்து விட்டது போல மிரட்டுவாரு. மாணவிகள் இயல்பா சாதி வேறுபாடு இல்லாம இருக்குறது கூட சண்முகத்துக்கு பொறுக்காது.
சாதி இறுமாப்பினால் அவர் ஒரு தலைமை ஆசிரியருக்கு உண்டான மிடுக்குடன் நடந்து கொள்வார். வெவ்வேறு சாதி மாணவர்கள் ஒருவர் தோளில் ஒருவர் கை போட்டுக் கொண்டு சினேகமாக இருந்தால் பழகினால் இவரால் பொறுத்துக் கொள்ள முடியாது. “இங்க வாங்க என்ன ஒட்டிக்கிட்டேதான் பொறந்திங்களா, பிரிஞ்சு இருக்க மாட்டிங்களா, ஒருத்தன் செய்றதத்தான் இன்னொருத்தன் செய்வீங்க, அவன் மாடு மேய்ப்பான் நீயும் மாடு மேய்க்கப் போறியா. போய் படிக்கிற வேலையை பாருங்க” என்று அவர் செய்யும் அட்வைஸில் சாதி வாசம் தெரியும்.
“வாட மாப்பிள்ளை, என்ன மருமகளே, வீட்டுல உங்க அப்பாரு இருக்காரா, என்ன குழம்பு இன்னைக்கு ஒங்க வீட்டுல. மாமா கேட்டேன்னு கொஞ்சம் வாங்கிட்டு வா” என்று மாணவர்களை முறை சொல்லி கூப்பிட்றதும் உரிமையோடு நடந்துக்கற விதமும் ஊர்க் காரங்களுக்கும் இவருக்கும் அதிக நெருக்கம் போல் காட்டிக் கொள்வார். அதனால் இவர் பற்றிய புகார்களை ஊரில் முக்கியமாக கருதப்படும் யாரிடம் சொன்னாலும் எடுபடாது. ஊர் காரவங்களுக்குள்ளும் சாதி பாகுபாடு இருக்கும். ஆனால் ஆசிரியர்களிடம் அதை காட்டிக் கொள்ளாமல், “அவருக்கு வாய் கொஞ்சம் அதிகம் தான் நீங்க கொஞ்சம் அனுசரிச்சு போங்க சார்! இன்னும் ரெண்டு மூனு வருசத்துல ரிட்டேர் ஆயிருவாரு” என்று சமரசமா பேசுவாங்க.
பள்ளிக்கூடத்துலயும் ஊருலயும் சண்முகத்துக்கும் ஊருக்காரங்களுக்கும் பெரிசா ஒன்னும் வித்தியாசம் இருக்காது. இதுல அவங்ககிட்ட பஞாசாயத்துக்கு போன என்ன பெருசா நடந்துர போகுது. வீட்ல பெத்தவங்க பிள்ளைங்க கிட்ட நடந்துக்குற லட்சணம் கேக்கவே ஆத்திரமா இருக்கும். “கைகாலல்லாம் பாரு வெள்ள வெள்ளையா பறையவீட்டு புள்ள மாதிரி புட்டாங்காச்சு போயிருக்கு, இங்க வா எண்ணைய தடவுவோம். பறச்செரிக்கி கணக்கா தலையப் பாரு எவ்வள பேனு, ஈறுன்னு, பறபுத்தி சிறுபுத்தின்னு அவந்தான் நக்கி நக்கி சாப்புடுவான் ஒனக்கென்ன வந்துச்சு எழுந்து போய் கைய கழுவு, என்னடா ஒங்கப்பாரு பறையோட்டு கலருமாரி செக்கச் செவேல்ன்னு சட்டத்தச்சு போட்ருக்கான்”னு பக்கது வீட்டு கொழந்தையில இருந்து எல்லா குழந்தைகள் கிட்டேயும் பேச்சோட பேச்சா சாதிவெறி எனும் பிசாச மனசுல ஒட்டவச்சுருவாங்க.
என்னதான் படிச்சுட்டு தாழ்த்தப்பட்டவங்க ஆசிரியரா பதவி அதிகாரத்துல இருந்தாலும் சாதிண்ணு வரும் போது அதிகாரத்துக்கு மதிப்பில்லாம போகுது. ஊர்க் காரங்களும், சண்முகமும் ஒரே சாதின்னு சொல்லிக்கிட்டாலும் அவர்களுக்கு இடையிலும் வேறுபாடு இருந்துச்சு. ஏரியா வேறவேற என்பதாலும் திருமண முறையில் இருவரும் வெவ்வேறு பழக்கத்தை கடைபிடப்பதாலும் இருவரும் ஒன்றல்ல என சொல்வார்கள். இருந்தாலும் தாழ்த்தப் பட்டவங்கன்னு வரும்போது அவர்களுக்கு எதிரா ஒண்ணு கூடிருவாங்க.
நான் மேல குறிப்பிட்டவை 80-90-களில் நடந்தவை. சமீபத்தில் அந்த கிராமத்துக்கு பக்கத்து ஊர்ல தெரிந்த நண்பருக்கு வீடு வாடகைக்கு வேணுன்னு தேடிட்டு போனோம். அப்பதான் அந்த ஏரியா புதுசா அங்கொண்ணும் இங்கொண்ணுமா வீடுகளோட உருவாயிட்டு இருந்துச்சு. வாடகை கொறச்சலா இருக்குமேன்னு அந்த பக்கம் தேடினோம். எதுவும் தென்படல. புதுசா ஒரு வீடு கட்டிட்டு இருந்த எடத்துல ஒரு பெரியவரு நின்னாரு. அவருட்ட கேக்கலாம்னு கிட்டக்க போனா, அது நம்ம பள்ளிக்கூட சண்முகம்.
அவருக்கு எங்களை அடையாளம் தெரியல, “நீங்க எந்த ஊரு? உங்களுக்கு என்ன வேணும்?”னு கேட்டார். விசயத்த சொன்னதும், ”நீங்க என்ன ‘ஆளுங்க’ இந்த ஏரியாவுல தாழ்த்தப் பட்டவங்களுக்கு எடம் விக்கவும் மாட்டாங்க, வாடகைக்கு வீடு தரவும் மாட்டாங்க, நான் நல்ல விசாரிச்சுட்டுதான் இங்க எடம் வாங்கி என் பொண்ணுக்காக வீடு கட்டுறேன். நீங்க என்ன ஆளுங்கன்னு தெரிஞ்சுகிட்டா இங்க ஒரு வீடு இருக்கு, போய் பாருங்கப்பான்னு சொல்லலாம். இல்ல இங்கெல்லாம் கெடைக்காதுப்பான்னு வெவரத்த சொல்லலாம். உங்களுக்கு அலைச்சல் இல்லாம போகும் அதனாலதான் கேட்கிறேன்”னு சொல்லிக்கிட்டே “தண்ணி குடிக்கிறீங்களா” என்றார்.
“உங்களுக்கு எங்களை தெரியல, ஆனா எங்களுக்கு உங்களை தெரியும். உங்க கையால தண்ணிக் குடிச்சாலே அது பாவம்”ன்னு சொல்லிட்டு எழுந்து வந்துட்டோம்.
– சரசம்மா
(சம்பவம் உண்மை – பெயர்கள் கற்பனை)
இப்படிபட்ட சண்முகங்கள்தான் பொட்டுனு போகாமா 100யை தாணடி வாழ்வாங்கே……..
எனக்கு என்னுமோ வினவு தாழ்த்தப்பட்ட மக்களை எவளவு படித்தாலும் ,பொருளாதரத்தில் முன்னுக்கு வந்தாலும் அங்கீகாரம் கொடுக்க மறுக்கும் கொனம் புரிந்துகொள்ள முடியவில்லை , எத்தனையோ பள்ளிகள் ,கல்லுரிகலிஎல் தலித் மக்கள் பேரும் புகலோடும் பணியாற்றி கொண்டு இருக்கிறார்கள் அவர்களை பற்றி எழுதினால் என்னை போன்ற படித்த மக்களை மென் மென் மேலும் வளர முடியும் , அதை செயுங்கள் , தற்பொழுது தலித் மக்களுக்கு வேண்டியது ஊக்கம்,ஆதரவு ,சாதி வெறியர்கள் நாய் வாலை போன்றது அவர்களை திருத்த முடியாது , ஆனால் நாய் வாலை வெட்ட முடியும்” மக்கள் புரட்சி முலம் ” அந்த நம்பிக்கை நமக்கு உண்டு .
பள்ளிக் கூடம், கிராம நிர்வாக அலுவலகம், காவல் நிலையம், தாலுகா அலுவலகம், அரசியல் கட்சிகள், கட்சி வேட்பாளர்கள் அமைச்சர்கள், கல்லூரி விண்ணப்பங்கள், இடங்கள், வேலைக்கான விண்ணப்பங்கள், வேலை வாய்ப்பு, பதவி உயர்வு இப்படி பல இடங்களிலும் சாதி பார்க்கப்படுகிறது.
நமக்கு வசதியான இடங்களுக்கு மட்டும் சாதி வேண்டும் மற்ற இடங்களில் சாதி வேண்டாம் என்பதும் ஏமாற்று வேலையே.
ஒருவேளை “வினவு“ அரசாங்கம் அமைத்தால் ரப்பரை வைத்து சாதியை ஒழித்துவிடுமோ என்னவோ?
மற்றநாடுகளில் மத இனத்தால்தான் மக்கள் பிரிந்துள்ளனர் ஆனால் ஆசியாக் கண்டதிலே உள்ள இந்தியா எனும் நாட்டினிலே இவற்றுடன் ஜாதி என்ற உலகத்திலேயே அறியாத பீடையும் கொண்ட மோசமான மனிதர்கள் வாழும் நாடு என்றுரைத்த கார்ல்மார்க்சுதான் நினைவிற்கு வருகிறார் உன் போன்றவர்களை நினைக்கும் போது.
Karl Marx? Hahahahaha.
His own country slaughtered Jews/Gypsies/handicapped/Black/Slav people for being that.
Indiavai neril kanaamal,kelvi gnanathil karuthu sollum karl marxay vida,ingu vanthu paartha che guevara avargalin karuthai kandu ariyalame.
ஹரி குமார், நீங்க எப்ப ஜெர்மன் போனீங்க? (அதுவும் இரண்டாம் உலகப் போர் நடக்கும் போது).
சே குவேராவ உங்களுக்கு ஆதரவா சொன்ன விசயங்கள மட்டும் ஏத்துக்கிரீங்கலே.
ஏன் இந்தியாவிலே இருந்து சாதிக் கொடுமைய அனுபவிச்சு. அத சமூக அறிவியலோடு ஆராந்து சொன்ன அம்போத்கார் சொல்றது மட்டும் எப்படி உங்களுக்கு கேட்காம போச்சு. selective amnesia?
So u mean to say that Hitler/Nazis did nothing and that they are also German like Karl Marx?
When did i say i am opposed to Ambedkar?
When did i ever say i have any issues with Dalit people and their development through reservations or otherwise?
I respect Che Guevara a lot,because he took real risks in life to learn about people and did what he thought was correct,che guevara did not say anything to favour me or my thoughts,he was honest as always.
it will be a problem for most pseudo communists in india as they can never be like ernesto guevara.
//Indiavai neril kanaamal,kelvi gnanathil karuthu sollum karl marx//
நீங்க தான் கார்ல் மாக்ஸ் இந்தியா வந்து எதையுமே பார்க்காம எப்படி இந்தியாவ பத்தி எழுத முடியும்னு கேட்டீங்க. அதுக்கு தான் நான் கேட்டேன் நீங்க எப்ப ஜெர்மன் போனீங்கனு!
இன்னமும் புரியலைனா ஒன்னும் பன்ன முடியாது.
சே குவெரா ஆதரிக்கும் நீங்கள் மாவோயிஸ்டை ஆதரிக்க தயாரா?
நீங்கள் அம்பேத்காருடன் ஒத்துபோகிறீர்கள் என்றால் இந்து மதத்தையும் அதன் அடித்தளமான சாதியையும் விட்டிருக்க வேண்டும். அதற்கு எதிராகவும் போராடியிருக்க வேண்டும். எதாவது செய்தீர்களா?
//pseudo communists in india as they can never be like ernesto guevara//
சரி யாரு ஒரிஜினல் கம்யுனிஸ்டுனு சொல்லுங்க. அவுங்களுக்கு என்ன கொள்கைகள் இருக்கனும்னு சொல்லுங்க.
(மார்க்சயே நீங்க ஒத்துக்கள ஆனா சே குவெராவ ஒத்துக்கிறீங்க எதுக்கு T shirt ல போட்டுக்கிறதுக்கா?)
உன்னால் வரலாற்று சம்பவங்களை நிரூபிக்க முடியுமா?…இறக்கும் தருவாயில் கூட பள்ளிக்கட்டிடத்தின் ஏழ்மையை மாற்ற நினைத்த சேகுவேராவை நினைக்கும் மனிதன் தவறுக்கு துணை போகமாட்டான்.
where am i opposing good rural school/education.my grandpa was a good strict teacher himself,i exactly know how those schools are,my parents went to govt schools in villages.
ayya,neengal yoogam edhuvum seyyamal enathu karuthukkalai padikkumaaru vendugiren.
நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?தவறு நாம் வாழும் சமூகத்தில் நிரம்பியுள்ளது,நீங்கள் எங்களால் வெறுக்கப் படவில்லை.இந்த சமூகத்தில் உள்ள அசிங்கங்களை எங்களால் எதிர்க்காமல் இருந்தால் மனசாட்சி என் போன்றவர்களை கொன்றுவிடும்.
” நமக்கு வசதியான இடங்களுக்கு மட்டும் சாதி வேண்டும் மற்ற இடங்களில் சாதி வேண்டாம் என்பதும் ஏமாற்று வேலையே. ”
பெருமாள்தேவனின் கூற்று முற்றிலும் உண்மை. உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற பாகுபாடில்லாமல் அனைவருமே வசதியான இடங்களில் பயன்படுத்திகொள்வதற்க்காக சாதியை சுமப்பதையே விரும்புகிறார்கள் என்பது யதார்த்தம். இந்த சூழ்நிலை ஒழியும் வரை சுத்தமான சாதி ஒழிப்பை அரசாங்கம் விரும்பினால்கூட மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் !!!
//”மூணாவது நாலாவது படிச்சவன் எல்லாம் சாதி சலுகையில் வேலைக்கு வந்துட்டாய்ங்க. நான் அந்த காலத்துல எட்டாவது படிச்சவன் பியூனா போய்ட்டேன்”//
நியாயமான கேள்வி… மூணாவது படித்தவன் ஆறாவது வகூப்புக்கு பாடம் சொல்லி கொடுக்க முடியுமா ?
//எங்கள் பள்ளியில் சைவ வெள்ளாளர் ஒருவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்தார். அவர் ஒரு பொறுக்கி, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தரக்கூடியவர்//
தற்குறிப்பேற்ற அணி… மேல் சாதி தலைமை ஆசிரியர் என்று சும்மா போட்டா சுவாரசியம் இருக்காதுன்னு பொறுக்கி என்று அணிந்துரைக்கும் உங்கள் சாதி வெறி தெரிகிறது….
பாலியல் தொந்திரவு தரக்கூடியவர் (கூடியவர் !!! – ஊகமா ?) என்று தெரிந்தும் நீர் ஏன் அமைதியாய் அவரை பொறுத்துக்கொண்டிருந்தீர் ? _________
//டீச்சர் சாப்பாடு கொண்டு வரும் பாத்திரத்தையும் சேத்து குளத்துக்கு கொண்டு போய் கழுவுவார்கள்//
இதை எப்படி அனுமதிக்க முடியும்… இதே மேல் சாதி ஆசிரியர் செய்தால் வினாவில் தனிப்பதிவே எழுதி மாணவர்களை அடிமையாக்கும் ஆசிரியர் சமூக பார்ப்பனீஇயம் என்று தலைப்பு வருமா வராதா ?
//மாணவர்கள் ஒருவர் தோளில் ஒருவர் கை போட்டுக் கொண்டு சினேகமாக இருந்தால் பழகினால் இவரால் பொறுத்துக் கொள்ள முடியாது//
இதை எந்த கல்வி நிறுவனமும் அனுமதிப்பதில்லை… பியூன் முதல் பிரின்சிபால் வரை கண்டிப்பார்கள்… இதில் என்ன குற்றம் கண்டீர்?
//என்னதான் படிச்சுட்டு தாழ்த்தப்பட்டவங்க ஆசிரியரா பதவி அதிகாரத்துல இருந்தாலும் சாதிண்ணு வரும் போது அதிகாரத்துக்கு மதிப்பில்லாம போகுது//
ஆசரியர் பணிக்கும் அதிகாரத்திற்கும் என்ன தொடர்பு? அந்த காலத்தில் நன்கு படித்து விருப்பத்தோடு பணிக்கு வந்த ஆசிரியர் பணியை தொண்டாக செய்தார்கள்…. இன்றோ 20 30 மதிப்பெண் பெற்று கோட்டாவில் பணிக்கு வந்து பணியை பதவியாய் நினைப்பதால் தான் வாரமொரு ஆசரியர் மீது ஒழுங்கீன நடவடிக்கை என்று செய்தி வருகிறது…
ஒரு நாட்டின் ஆசரியர்கள் தான் அந்நாட்டின் எதிர்காலத்தில் அதிக பங்கு வகிப்பவர்கள்… அவர்கள் நாட்டை செதுக்கும் சிற்பிகள்… அந்த பணிக்கு வருபவர்கள் விருப்பமும் தகுதியும் இருக்க கூடியவர்களாக இருத்தல் நலம்… வேறு எங்கும் வேலை கிடைக்காமல் இறுதியில் ஆசிரயர் பணியை தேர்ந்தெடுக்கும் துரதிர்ஷ்ட சூழல் நாட்டுக்கு உகந்ததல்ல…
Where is the Author? Why he is not answering these questions?
பெயரிலேயெ சாதி ஒட்டிகிட்டு இருக்கிர பெருமாள்தேவன் இப்படித்தான். எத்தனை பெரியார் வந்தாலும் நீங்கள் எல்லாம் திருந்த மாட்டிங்க.
அருமை!சரியான பதிலடி!
//நமக்கு வசதியான இடங்களுக்கு மட்டும் சாதி வேண்டும் மற்ற இடங்களில் சாதி வேண்டாம் என்பதும் ஏமாற்று வேலையே. //
//எங்கள் பள்ளியில் சைவ வெள்ளாளர் ஒருவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்தார். அவர் ஒரு பொறுக்கி, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தரக்கூடியவர். அப்படிப்பட்ட அயோக்கியனுக்கு சாதியால் உயர்ந்தவர் என்ற ஓரே காரணத்துக்காக கீழ்படிந்து வேலை செய்வார் இந்த சண்முகம்.//
அப்போ! சண்முகமும் யாருக்கோ அடிமையாதான் இருக்கானா? அப்போ சண்முகத்தப்பத்தியும் கொஞ்சம் எழுதுங்க வினவு!!
இந்த சன்முகம் என்ற கேரக்டரை பற்றி படிக்கும் போது டாக்டர் அம்பேத்காருக்காக குதிரை வண்டி ஓட்டமட்டேன் என்று சொன்ன ஆதிக்க சாதி குதிரை வண்டிகாரன் தான் நாபகத்திற்கு வருகின்றான்.
கல்வியிலும்,பொருளதாரத்திலும் தலித்கள் முன்னேறினாலும் ஆதிக்க சாதிவெறி தலித்களை விடுவதில்லை
இன்றைய தமிழக அரசோ சாதிவெறியை ஒழிப்பதற்க்கு பதிலாக வளர்த்து வருகின்றது எடுத்துகாட்டு பரமக்குடி துப்பக்கி சூடும், தேவர் சிலைக்கு 13கீலோ தங்க கவசமும்.
சாதி வெறியை ஒழிப்ப தற்க்கு ஒரே வழி புரட்சிகர அமைப்பின்கீழ் மக்களை அணிதிரட்டி போராடுவதன் மூலம் முடியும்.
பெயருக்கு பின்னாடி ஜாதி பேரு எழுதி வெரி புடிச்சி அலைரநம்ம ஆலுங்க இருககுர வர ஜாதியும் ஒழியாது…….தேசமும் வெலங்காது…………….