privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்பாஜக கூட்டணியை விரட்டியடிக்கும் இசுலாமிய மக்கள் !

பாஜக கூட்டணியை விரட்டியடிக்கும் இசுலாமிய மக்கள் !

-

நாடு முழுவதும் மோடி – பி.ஜே.பி அலை வீசுவதாக தேசிய ஜனநாயக கூட்டணியினர், கார்ப்பரேட் ஊடகங்களின் மூலம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால் இந்த அலை குறித்து இவ்வளவு பில்டப் கொடுக்கும் அறிவாளிகள் அந்த அலையை உள்ளே நுழைய விடாமல் விரட்டி அனுப்பும் செய்திகளை மறைத்தோ இல்லை பத்தோடு ஒன்றாகவோ ஒதுக்குகிறார்கள்.

மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் தே.மு.தி.க வேட்பாளர் ரவீந்திரன் அரும்பாக்கம் ஆசாத் நகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள முற்பட்ட போது இஸ்லாமிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்து விரட்டியடித்துள்ளனர்.

“பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்துக் கொண்டதால் தங்களது பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க மாட்டோம்” என்று ரவீந்திரனுக்கு கருப்பு கொடி காட்டி மறியலில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் கேட்டுக் கொண்டதற்கிணங்க ரவீந்திரன், பிரச்சாரம் செய்யாமல் திரும்பிச் சென்றதையடுத்து அங்கு அமைதி திரும்பியது.

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் மல்லிப்பட்டினம் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றபோது அப்பகுதிக்குள் வாக்கு சேகரிக்க கூடாது என்று எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர் எதிர்ப்புதெரிவித்தனர்.

இதையடுத்து பாஜக வினர் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  பின்னர் பிரச்சாரம் செய்யாமல் பாஜக வினர் திரும்பிச் சென்றதையடுத்து அங்கு அமைதி திரும்பியது.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜக-வினருக்கு எதிர்ப்பு  தெரிவித்து விடுதலை சிறுத்தையினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாலை அணிவித்தே தீருவோம் என பாஜக-வினர் எதிர் மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார் கூட்டணி கட்சியினருடன் பிரச்சாரத்திற்கு கடையநல்லூர் பகுதிக்கு சென்ற போது ஏராளமான இஸ்லாமிய இளைஞர்கள் திரண்டு தங்கள் பகுதிக்குள் நுழையக்கூடாது என தடுத்துள்ளனர்.

மோடி மற்றும்  தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக கோஷமிட்ட அவர்கள், ” ராமர் கோயில் கட்டுவோம் என தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு தங்கள் பகுதிக்குள் எப்படி நுழையலாம்” என  ஆவேமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து  இளைஞர்களை போலீசார் சமாதானப்படுத்திய பின்னர் பா.ஜ. கொடியை அகற்றி விட்டு சதன் திருமலைக்குமார் தங்கள் பகுதிக்குள் வர அனுமதித்துள்ளனர். ஆனால் அதற்கு வேட்பாளரும், தேசிய ஜனநாயக கூட்டணியினரும் சம்மதிக்காமல் பிரச்சாரம் செய்யாமலேயே திரும்பிச் சென்றனர்.

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் தேமுதிக வேட்பாளர் சிவனணைந்த பெருமாள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் ஏர்வாடியில் தங்கள் தெருவில் ஓட்டு கேட்க வரக்கூடாது என்று இஸ்லாமிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்து துரத்தியடித்துள்ளனர்.

இதனால் முரண்பாட்டை தவிர்க்க காவல் துறையினர் அங்கு பிரசாரம் செய்ய வேண்டாம் என்று பாஜ கூட்டணியினரை திரும்பிச் செல்லுமாறு கூறியுள்ளனர். உடனே பாஜ கூட்டணியினர் மெயின்ரோட்டில் பஸ் மறியலில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தைக்கு பின்னர் பாஜ கூட்டணியினர் மெயின்ரோட்டில் மட்டும் பிரச்சாரம் செய்து விட்டுதிரும்பிச் சென்றுள்ளனர்.

மேலப்பாளையத்திலும் சிவனணைந்த பெருமாள் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அப்பகுதி இஸ்லாமிய இளைஞர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கும் அவர் பிரச்சாரத்தில் ஈடுபடாமலேயே திரும்ப வேண்டியதாகி விட்டது.

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் தேமுதிக வேட்பாளர் சிவமுத்துக்குமார் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது  மதவாத கட்சியுடன் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்திருப்பதால் மகபூப்பாளையம் பகுதி இஸ்லாமிய மக்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்களது வீடுகளில் கருப்பு கொடி கட்டிவைத்திருந்தனர்.

இது குறித்த தகவல் வேட்பாளருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்த பகுதிக்குள் நுழையாமல் வேறு பகுதிகளில் பிரசாரம் செய்து முடித்துள்ளார். இதுகுறித்து தமுமுக மாவட்ட தலைவர் சேக் இப்ராகிம் கூறுகையில், ‘‘மதவாத கூட்டணி வைத்துள்ள தேமுதிகவினர் எங்கள் பகுதிக்குள் எப்போது ஓட்டுக் கேட்டுவந்தாலும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவோம்’’ என்றார்.

மேலும் இப்பகுதியின் தேமுதிக எம்எல்ஏ தங்கள் பகுதிக்குள் வந்தால் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் மகபூப்பாளையத்தில் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டிருக்கிறது.

_

வேலூரில் அத்வானி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய தேசிய லீக் கட்சியினர் ‘கருப்புக் கொடி காட்டுவோம்’ என எச்சரிக்கை செய்திருந்தனர். இந்த தகவலையடுத்து, வேலூர் மக்கான் பகுதியில் இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் உமர் முக்தர், வேலூர் மாவட்ட செயலாளரும் வேலூர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளருமான ஷெரீப் பாஷா உள்ளிட்ட 18 பேரை கைது செய்தனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

சுலாமிய மக்களின் இந்த எதிர்ப்பு பாஜக கூட்டணியை மட்டுமல்ல, ஜெயலலிதாவையும் கலங்க வைத்திருக்கிறது. அதனால்தான் அவர் மயிலிறகாலாவது பாஜகவை விமரிசனம் செய்ய வேண்டியதாகி விட்டது. இது நாடகம் என்றாலும் ஆரம்பத்தில் திமுகவும் மோடியை எதிர்த்து பேசுவதை குறைத்து விட்டு பின்னர் அதிகப்படுத்தியிருக்கிறது. இத்தகைய எதிர்ப்பு இந்துமதவெறியர்கள் செல்வாக்கோடு இருக்கும் வட இந்தியாவில் சாத்தியமில்லை. இங்கே சாத்தியமாகியிருப்பதற்கு இசுலாமிய மக்கள் மட்டும் காரணம் அல்ல. பொது அரசியலில் இந்துமதவெறி இங்கே எதிர்க்கப்பட வேண்டும் என்று திராவிட இயக்கம் மற்றும் பொதுவுடமை இயக்கங்கள் செய்த உழைப்பு இன்னமும் செல்வாக்கு செலுத்தவே செய்கிறது.

அதனால்தான் இங்கே பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இசுலாமிய மக்களை பாகிஸ்தானுக்கு விரட்டுவோம் என்று எந்த காவி ரவுடியும் வடக்கு போல பேச முடியவில்லை.  எனவே இதை இன்னும் வீச்சாக செய்ய வேண்டுமென்றால், இசுலாமிய மக்கள் இத்தகைய மதச்சார்பற்ற, புரட்சிகர, ஜனநாயக அமைப்புகளோடு இணைந்து போராட வேண்டும். இல்லையேல் இசுலாமியர்களை மட்டுமல்ல சிறுபான்மை மக்கள் அனைவரையும் இந்துமதவெறியர்கள் தனிமைப்படுத்துவார்கள். அப்படி தனிமைப்படுத்தும் காவிக் கும்பலின் பணிக்கு சில இசுலாமிய அடிப்படை வாத அமைப்புகளும் மறைமுக காரணங்களாக இருக்கின்றன.

ஆனாலும் இதை மீறி இசுலாமிய மக்கள் வர்க்க ரீதியல் பிற ‘மத’ உழைக்கும் மக்களோடு ஒன்றிணைந்து இந்துமதவெறியை ஒழிப்பதற்கு தொடர்ந்து போராடுவார்கள்! என்னதான் மோடி அலை, சுனாமி என்று உசுப்பேத்தினாலும் இங்கே சிறுபான்மை மக்களின் போராட்டத்தை தடுக்க முடியவில்லை, அவர்களை தனிமைப்படுத்தி முடக்க முடியவில்லை. மாறாக இசுலாமிய வேட்பாளர்கள் எங்கேயும் ‘இந்துக்களால்’ தடுக்கப்படவில்லை. காரணம் அந்த ‘இந்துக்கள்’ பார்ப்பனிய எதிர்ப்பு அரசியலில் வளர்ந்தவர்களே அன்றி ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களுக்கு போனவர்கள் இல்லை. இதுதாண்டா பெரியார் மண்ணின் மகத்துவம்!

மேலும் படிக்க

  1. எந்த சிறுபான்மையினரையிம் நம்பி நாங்கள் களத்தில் இறங்கவில்லை சிகப்பு கொடி காரர்களே !

    • பிரிவினைவாதத்தை தூண்டும் எவ்வித செயல்பாடுகளுக்கும் மனிதநேயமிக்க எந்தவொரு மனிதனும் துணை நிற்க மாட்டான்.

    • அதை துணிவோட மேடையில சொல்லுற தைரியம் இருக்கா??? மேடைக்கு பின்னால ஒளிந்துக் கொண்டு சொல்ல வெட்கமாக இல்லையா???

      • மக்கழே உங்களையெல்லாம் பார்த்தால் எனக்கு மிகுந்த சந்தோஷமாகதான் இருக்கு. நானும் ஒரு காலத்துல இப்புடி கூவுனனுந்தேன். ஓவ்வொரு ஊருலயும் கும்பல் கும்பலாக அவர்கள் சேர்ந்து கொண்டு அடிக்கும் கொட்டம், நடத்தும் நாட்டாமையை பார்த்த பிறகு அப்படி இருக்க முடியவில்லை. உதாரனம் ஒன்றில்லை இரண்டில்லை, வினவின் பதிவுல் உள்ள புலகாங்கிதங்களே உதாரனங்கள் !

  2. இவ்வாரு செய்வதர்க்கு இசுலமியா கட்ஷிகலெ காரனம். ஒரு இச்லமிய கட்ஷி பொடியிடும் தொகுதியில் இவ்வார் செஇதல் ஜனனயம் எஙெ என கட்பது. இதையெ ஒரு இச்ல்கமியன் செஇதல் புரட்ஷி என்பதா

  3. சிறுபான்மையினர் ஓட்டு வேண்டானா யான்ட கிரிஷ்னகிரில முஸ்லிம் சேலத்துல சிரிஸ்டியன் nu மோடி கு translate பண்ண சொன்னீங்க,
    இது நீங்க எடுத்த பிட்சை ல இது latest இன்னும் நறையா இருக்கு வேனுமா????

  4. பாரப்பனியத்திற்கு பாடை கட்டுவோம்.

    காவிகளே, தமிழகத்திற்குள் கால் ஊன்ற நினைக்காதீர்.

    அது ஒருபோதும் நடக்காது..

      • நாங்க ஏன் ஓடனும் ,, நாங்க என்ன கைபர் போலன் கணவாய் வழியாவ வந்தோம்…

        • ஆமாம். கைபர் கணவாய் வழியாக வந்த பாரசீகத்து முச்லிம்களின் ஆட்சிதனே முகலாயர் ஆட்சி. பாபரும் ஒளரஙசீப்பும் இந்தியர்கள் இல்லையே, கஜினியும் அராபியந்தானே, அவர்களின் வாரிசுகளும், அவர்களால் அடிமைப்படுத்தப்பட்டு மதமாற்றம் செய்யப் பட்டவர்களும்தான் இன்று இங்கிருக்கும் முச்லிம்கள்.

  5. அனைத்து தரப்பு மக்களையும் அரவனைத்து சென்றால் மட்டும் தான் இந்தியாவில் ஆட்சி செய்யய முடியும் .

    தமிழக மக்களின் ஒற்றுமையை பிரிக்கவோ நசுக்கவோ முடியாது இந்த மன்னில்

    • ///அதனால்தான் இங்கே பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இசுலாமிய மக்களை பாகிஸ்தானுக்கு விரட்டுவோம் என்று எந்த காவி ரவுடியும் வடக்கு போல பேச முடியவில்லை.///

      வினவு அப்பட்டமான (கருணாநிதி) கோயபல்ஸ் வாரிசாகவும், ப(இத்தாலி முஸொலினியின் பாசிஸ்ட் கட்சி முன்னணியினரான அன்தோனியோவின் மகள் சோனியா) பாசிஸ்ட் வாரிசாகவும் திகழ்கிறது. வாழ்த்துக்கள்

      கோவை குண்டுவெடிப்பை செய்த அல்-உம்மாவின் இரு நிறுவனர்களில் ஒருவரான ஜவகரிருல்லாவை மேடையில் தனது வலப்பக்கம் வைத்துக்கொண்டு கருணாநிதி முழங்கியது என்ன? “மோடிகள் தமிழ்னாட்டுக்குள்நுழையவிடமாட்டோம்” மோடி இந்தியர் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவர் தமிழ்னாட்டுக்குள்நுழைய விடமாட்டோம் என்பது அப்பட்டமான பாசிசம். இதை மூடி மறைக்கும் விதமான மேற்கூறிய கட்டுரை கோயபல்சின் வாரிசு வினவு என்பதற்கான அத்தாட்சி.

      கருணாநிதி முதல்வர் ஆகும்போதெல்லாம் முழங்குவது என்ன? இந்தநாட்டை விட்டு பார்ப்பனக் கூட்டம் பயந்துநடுங்கி ஓடவேண்டும். இத்தாலியின் முசோலினி சொன்ன அதே பாசிசக் கருத்துக்கள். இதை மூடி மறைத்து வினவு கோயபல்சின் வாரிசாக, பாசிசத் திலகமாகத் திகழ்கிறது.

      சோனியா செதது என்ன? ஈழத்தில் இனப்படுகொலை. அப்பவித் தமிழர்கள் மீது வான்வழித் தாக்குதல். கிட்லரின் முசோலினியின் யூத இனஒழிப்பு கில்லட்டின் படுகொலைகள் போல இப்போது வான்வழிப் படுகொலை. இதை விடவும் பாசிசம் இந்தநூற்றாண்டில் எங்கு காண்பீர்கள்?

      • ஏம்பா கஞ்சா குமார்
        “அல்-உம்மாவின் இரு நிறுவனர்களில் ஒருவரான ஜவகரிருல்லாவை”
        அல் உம்மாவை ஜவகரிருல்லா எப்பொ நிருவினார்.கஞ்சா அடிச்சா என்ன வென்னாலும் எலுதுவியா?

  6. திரு.Ji M …

    ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழ தமிழர்களை கொன்ற ராஜபட்சே திருப்பதி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு vip லட்டை பிரசாதமாக பெற்று சென்றான். கொல்லப்பட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழ தமிழர்களில் 90 விழுக்காடு இந்து தமிழர்கள் தான். திருப்பதிக்கு வந்து சென்ற போது தமிழ்நாட்டில் இருக்கும் எந்த இந்து மத வெறி அமைப்பு அவன் வருகைக்கு எதிராக திருப்திக்கு சென்று போராடியது. திருப்பதி கோவில் என்ன சோனியாவின் சொத்தா. திருப்பதிக்கு வந்த ராஜபட்சே என்ன வேண்டி இருப்பான்.

    “திருப்பதி ஏழுமலையானே உன் தயவால்… உன் அருளால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை வெற்றிகரமாக அழித்து அவர்கள் போராட்டத்தை நசுக்கி விட்டேன் .. இப்போது ஏதோ போர்குற்ற விசாரணை என்கிற பெயரில் நான் போர் குற்றவாளி என்கிற உண்மையை அம்பலபடுத்தி சர்வதேச சமுகம் என்னை தூக்கில் இட பார்க்கிறது. இந்த சிக்கலில் இருந்தும் என்னை காப்பாற்று உன் சன்னதிக்கு ஒரு லட்சம் பொற்காசுகள் காணிக்கையாக தருகிறேன்” என்று பிரார்த்தனை செய்து போயிருப்பான் … அங்கு அவன் வேண்டுதலை கேட்டு கொண்டு புன்முறுவலோடு அமைதியாக இருந்தது அங்குறையும் வெங்கடேச பெருமான் மட்டும் அல்ல நாமும் தான் …. ஒருவேளை எம்பெருமானும் இத்தாலிய சரக்கிற்கு அடிமையாகி அமைதியாக கருணாநிதி போன்று மௌன சாட்சியாக இருந்தாரோ …

    ஆக, பாசிச கட்சியான பா.ஜ.க வை உள்ளே விடாமல் எதிர்க்கும் இசுலாமியர்களின் தன்மானத்தை பாராட்ட வேண்டும். வடக்கே நீங்கள் போடும் ஆட்டம் தமிழ்நாட்டில் என்றைக்குமே செல்லாது.

    • மர்மயோகி …நன்றி…
      எனக்கு இன்று வரை புலப்படாத விசயங்களில் இதுவும் ஒன்று….
      1,50,000 தமிழர்களின் தலை காவு வாஙகப்பட்டும், கண்டும் காணாமலும்
      எப்படி தமிழ் நாட்டில் தமிழர்கள் இருக்கிறார்கள்?
      ஒருவேளை அவர்களோட சூ….மட்டை எரிகிற வரை சூடு தாங்குவார்களோ?
      இந்த அசமந்த போக்கு தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளுக்கு “உரம்”

  7. தமிழகம் முழுவதும் மோடியின் முகமூடி கிழிந்து தொங்குகின்றது மோடியின் வளர்ச்சி என்ற கட்டு கதை தமிழ் நாட்ல எடுபட வில்லை என்பதற்க்கு இந்த நடவடிக்கையே சான்று.

    ஆக, பாசிச கட்சியான பா.ஜ.க வை உள்ளே விடாமல் எதிர்க்கும் இசுலாமியர்களின் தன்மானத்தை பாராட்ட வேண்டும். வடக்கே நீங்கள் போடும் ஆட்டம் தமிழ்நாட்டில் என்றைக்குமே செல்லாது.

  8. மோடியை முஸ்லிம்கள் மட்டும் ஏன் எதிர்க்க வேண்டும்? இது ஏதோ அவர் மீதியுள்ளோர முன்னேத்திட்டுதான் மறுவேலை பார்ப்பார் என்பது போன்ற செய்தியைத்தான் குடுக்கிறது.

    இது அவர்களுக்கு பலம்தான். அவர்கள் செய்ய வேண்டிய பிரச்சாரத்தை காசு செலவு வைக்காம இவர்களே செய்திருக்கிறார்கள். விஸ்வரூபம் படத்தை ஓட்டிக் குடுத்தது மாதிரி.

  9. எனக்கு ஒன்னு மட்டும் புரியல..
    இதையே இந்துக்கள் முஸ்லீம் லீக் தலைவருக்கு எதிரா செய்திருந்தா, நம்ம வினவு ஆர்ஸ்ஸின் பாசிச கும்பல் மதவெறிய தூண்டுதுனு புலம்பியிருக்கும்..
    பாவம் வினவுக்கு ரொம்பதான் மோடி ஜுரம் வந்திருச்சு!

    • Islamiya Vetpaalargal yaarum Babri masjid katti tharromnu Hindukal irukura areakul varala. intha veena pona BJP thaan Ramar kovil kaatuvomnu muslimhal vaazhum pahuthiyil vanthu vote porukuranga, unga BJP leader Rajnath singh Uttar pradesh ulla Imamhalai meetpanni aatharavu kekkuraru?
      Appadiye ungaluku “Valarchi, Ezhuchi and Sakthi venumna neenga SALEM SIVARAJ VAITHIYAR” a paarkalam athuku MODI theva illai.

    • muslim katchikalin nilaippaadum kaavi katchikalin nilaippaadum ondraa? than samuuka makkalukkaaka kaavi paadupattaal naankal anaivarum varavetkkave saivom. aanaal unmai nilavaram enna oottu vankikkaaka hindu muslimkalukkidaiye ulla nallinakkatthai kedutthu athan muulam aatchi nadattha ninaippathai muulai ulla thesa pakthi ulla enthavoru indiyanum virumbave maattan.

  10. டேய்.. வினவுக்கு மோடி ஜுரம் வந்துச்சோ இல்லயோ உனக்கு தோல்வி பயம் வந்துருச்சு.. போட போய் எப்படி ஏமாத்லனு யோசி

  11. punnaku payal kala. india kulla yaru venna varallam. ivanga bjp ya vara vidayalam athuku kandanam sollama, punnakattam atha perumaya pesura ni yellam yenda news website nadathara

  12. ஓட்டு கேட்கக் கூட வரக்கூடாதுன்னா, அப்ப எங்க ஏரியால யார் வாக்கு கேட்க உள்ளே வரலாம், வரக்கூடாது, யார் நிலம் வாங்கலாம் வாங்கக்கூடாது என்று முடிவு செய்யும் உரிமையும் எங்களுக்கும் உண்டு. இந்துக்கள் இந்துக்களுக்கு மட்டுமே ஓட்டு போடச்சொல்லலாம். ஆக, ஆர்.எஸ்.எஸ் சரியான பாதையில் தான் செல்கிறது.

    இதென்ன பாகிஸ்தானா?

    • எது சரியான பாதை? அமெரிக்காவிற்கு நாட்டை விற்கும் பாதையா?

      அமெரிக்கக் கைக்கூலித்தனத்தை பாரத்மாதாகீ ஜெய், பாரத்மாதாகீ ஜெய் என்று கூச்சலிட்டுக்கொண்டே செய்தால் அது சரியான பாதையாகிவிடுமா?

      RSS, BJP பார்ப்பன பாசிச கும்பல் தான் காங்கிரசை விட நெம்பர் ஒன் ஏகதிபத்திய கைக்கூலிகள், அடிவருடிகள்.

      இதை மறுத்து வாதிட தயாரா?

Leave a Reply to siddhi பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க