privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைவச்சா குடுமி போனால் மழை !

வச்சா குடுமி போனால் மழை !

-

கொண்டைகள் கூட்டம்
குளத்தினில் பார்த்து
கெண்டைகள் நடுங்கின.

kudumiபூணூல் பாம்புகள் புடைசூழ
தண்ணீர் பாம்புகள் பயந்தன.

கலவர சத்தம் கேட்டு
மேலே வந்த தவளைகள்
வேதநிலவரத்தால் மிரண்டுபோய்
தண்ணீர்க்கடியில் தப்பின.

பார்ப்பன பாசியில்
வழுக்கி விழுந்தது
படித்துறைப் பாசி.

கறவை மாட்டுக்கு
பொட்டுத் தண்ணீரில்லை,
பார்ப்பன தொந்திக்கும்
கருங்கல் நந்திக்கும்
‘செட்டு’ தண்ணீர்.

முழுநிர்வாணமாய்
கொள்ளிக்கட்டை பிடித்தால்
மழைவரும் எனும் நம்பிக்கை
மடத்தனம், அசிங்கம் என்றால்,
அரைநிர்வாணத்தோடு
அர்ச்சகர்களை குளத்தில் இறக்கிவிடும்
வருண ஜபம் மட்டும் சுவிங்கமா?

nandhiசூத்திர சம்புகன் நம்பிக்கை
சவம்!
பார்ப்பன அம்பிகளின் நம்பிக்கைக்கு
ஜபம்!

எப்படியோ!
வருண ஜபத்தின் புண்ணியத்தால்
யாகம், கும்பம், கலச ஆவாகனம்
புண்ணியாவாஜனம், சிறப்பு பூஜை
என பார்ப்பனக் காட்டில் மழை!

பூணூல் அறிக்கைக்கு பல கோடி,
படித்த பையன் கேட்கிறான்
வானிலை மையம், வானிலை அறிக்கை
நாட்டுக்கு எதுக்கு டாடி?

மழை வாரா காரணத்தை
மறைக்கும் மறைகளின் பயங்கரம்
அரசும், பார்ப்பனியமும்!

kudumi-2காட்டு மரக் கொள்ளை
ஆற்று மணல் கொள்ளை
இயற்கையைச் சீரழிக்கும்
கனிமவளக் கொள்ளையென
பருவகாலத்தை சீரழித்த பங்காளிகளோடு
வருண ஜபத்தில் தப்பிக்கிறார்கள் கயவர்கள்.

மழைக்கொலை செய்த பாவிகளே
வருண ஜபம் செய்வதைப் பார்த்து
காறித்துப்புகிறது சூரியன்!

புத்திவராத தேசத்தில்
மழைவந்து என்ன ஆகப் போகிறது?
என்று தோலை உரிக்கிறது கோடை!

துரை.சண்முகம்

மேலும் படிக்க