privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கமுசுலீம் பயங்கரவாதம் : புதிய தலைமுறை மாலனின் 'நூல்' ஆய்வு

முசுலீம் பயங்கரவாதம் : புதிய தலைமுறை மாலனின் ‘நூல்’ ஆய்வு

-

யங்கரவாதிகள் வைக்கும் குண்டுகளை விட பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்கள்தான், அதிகம் குண்டுகளை வைப்பது மட்டுமல்ல அழிவுகளையும் செய்கிறார்கள். அங்கீகரிக்கப்பட்ட அரசு பயங்கரவாதம் இப்படித்தான் அங்கீகாரமற்ற பயங்கரவாதத்தை வைத்து உயிர் வாழ்கிறது.

செப்டம்பர் 11, 2001-ல் நியூயார்க்கின் இரட்டை கோபுரங்களின் மீது நிகழ்த்தப்பட்ட விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து “நீங்கள் எங்கள் பக்கம் இல்லை என்றால் பயங்கரவாதிகள் பக்கம்தான்” என்று அறிவித்து விட்டு உலக அளவில் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா உள்ளிட்டு பல நாடுகளுக்கு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்து வரும் சீனியர் புஷ், ஜூனியர் புஷ், கிளிண்டன், ஒபாமா குழுவினரின் அமெரிக்க அரசுதான் இந்த உலகின் ஆகப்பெரிய பயங்கரவாதி.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த ரயில்
குண்டுவெடிப்பு நிகழ்ந்த ரயில்

இந்த பயங்கரவாதிகள் தமது மேலாதிக்க நோக்கிற்காக உருவாக்கிய அல்கைதா, பின்லேடன் போன்ற குட்டி பயங்கரவாதத்தை வைத்து மக்களிடையே அச்சத்தை ஊட்டி முதலாளிகளின் வயிறு வளர்க்கிறார்கள். அமெரிக்க பயங்கரவாதம் உலகளாவியது என்றால் அந்தந்த நாடுகளில் இத்தகைய ஆளும் வர்க்க பயங்கரவாதங்கள் அளவிலும், வீச்சிலும் குறைவென்றாலும் இருக்கத்தான் செய்கின்றன.

தமிழகத்தின் ஜூனியர் புஷ்-ஆக விரும்பும் இப்போதைய முதல்வர் லேடி அல்லது எதிர்காலத்தில் பிரதமராக விரும்பும் கேடி மோடியை கொம்பு சீவி விடுவதற்கென்றே, கார்ப்பரேட் ஊடகங்களும் அவற்றின் தொழில்முறை பத்திரிகையாளர்களும், சமூக வலைத்தளங்களில் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளும் என ஒரு பெரும் படையே வேலை செய்து வருகின்றது.

பெங்களூரிலிருந்து கவுகாத்தி செல்லும் காசிரங்கா விரைவு ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் மே 1-ம் தேதி காலை 7.15-க்கு நுழைந்தது . சில நிமிடங்களுக்குள் S-4, மற்றும் S-5 பெட்டிகளில் நடந்த குண்டு வெடிப்புகளில் சுவாதி என்ற 24 வயது கணிணி பொறியாளர் சம்பவ இடத்திலேயே இறந்தார். 14 பேர் காயமடைந்தனர். ஒரு குண்டு வெடிப்பில் ஒரு அப்பாவி இளம்பெண் இறந்ததற்கு வருந்துவதும், அந்த வருத்தத்தையே இசுலாமியர்களை கொல்ல வேண்டும் என்று வெறியாக திருப்புவதும் ஒன்றல்ல.

அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் இந்த குண்டு வெடிப்பிற்கு நிகரான பயங்கரவாதச் செயலை குண்டு இல்லாமலே இணையத்தில் நடத்தினார் ஒரு ஆசாமி. யார் அவர்? கிழக்கு பதிப்பகத்தில் குப்பை கொட்டிக் கொண்டும், தனது உடலில் டன் கணக்கில் பார்ப்பனக் கொழுப்பையும் ஏற்றிக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ் குண்டர் ஹரன் பிரசன்னாதான் அந்த நபர். சரியாக 8.24 மணிக்கு இது குறித்த அவரது பேஸ்புக் நிலைத்தகவல் வெளியாகிறது. அதற்குள் தொலைக்காட்சியில் செய்தியைப் பார்த்து, தகவல்களை திரட்டி, தீர்ப்பு எழுதியிருந்தார் அந்த இந்துமதவெறியர். ஆறு பேர் மரணம் என்று கேள்விக் குறியுடன் வாந்தி எடுத்திருந்தார் இவர்.

ஹரன் பிரசன்னா ஃபேஸ்புக்அவரது நோக்கம் குண்டு வைத்தவர்களின் நோக்கத்துக்கு இணையானதுதான், அப்பாவி மக்களை அச்சுறுத்துவதும், முடிந்த மட்டும் உயிர்ப்பலி நடத்துவதும்தான்.

சென்னை சென்ட்ரலில் குண்டுவெடிப்பு. ஆறு பேர் மரணம்? (மரணம் உறுதி செய்யப்படவில்லை.). :(( பதட்டமாக உள்ளது. ஜெயலலிதாவின் கையாலாகத்தனம் இது. பயங்கரவாதிகள் எந்த வகையில் வந்தாலும் அதை வேரறுக்கவேண்டிய அரசு, அவர்களின் வால் பிடித்தால் இப்படித்தான் நடக்கும். Innocence of Muslims, விஸ்வரூபம், தலைவா படப் பிரச்சினையின்போதே அரசு தீர்க்கமான முடிவுகளை எடுக்கவில்லை. தனது அரசியலுக்காக அதை ஜெயலலிதா பயன்படுத்திக்கொண்டார். ஜெயலலிதாவின் ஒரே பிளஸ் பாயிண்ட்டும் இந்த ஆட்சியில் கோவிந்தா. இனியாவது அவர் விழித்துக்கொள்ளவில்லை என்றால், ஒட்டுமொத்த டாட்டா பைபைதான்.

–    முகநூலில் ஹரன் பிரசன்னா.

அதாவது தன் சார்பாகவும் தனது பாசிச பார்ப்பனிய இயக்கத்தின் சார்பாகவும் செயல்படும் அரசாங்கம், சிறுபான்மை முசுலீம் மக்கள் மீது, அரச பயங்கரவாத செயல்களை நிகழ்த்த கருத்து உருவாக்கம் செய்கிறார் ஹரன் பிரசன்னா. மேற்கண்ட இரண்டு திரைப்படங்கள் தொடர்பாக இசுலாமிய மக்கள் ஆர்ப்பாட்டம் செய்வதை அனுமதிக்காமல், தடியடி, துப்பாக்கிச் சூடு, கைது, தூக்கு, போலி என்கவுண்டர், நாடுகடத்தல் என்று ஒடுக்கியிருந்தால் இப்போது குண்டு வெடித்திருக்காதாம். ஒரு குண்டு வெடித்து அழுகுரல் ஓய்வதற்குள் ஒரு ஆர்.எஸ்.எஸ் ‘குண்டு’ வெறியன் எப்படி ஆடுகிறார் பாருங்கள்!

ஹரன் பிரசன்னா
ஹரன் பிரசன்னா

இந்த நிலைத்தகவலின் பின்னூட்டங்களில் ஹரன் பிரசன்னாவை கண்டித்து வாதாடியவர் தமிழகத்தின் ‘மூத்த பத்திரிகையாளர்’ மாலன். அப்படி என்ன கண்டித்தார்? அதாவது குண்டு வெடித்து இரண்டு மணிநேரத்திற்குள் இதற்கு முதலமைச்சர்தான் பொறுப்பு என்று பேசுவது சரியா என்பதே மாலனது கேள்வி. இதே கேள்வியைத்தான் துக்ளக்கிலும் சோ கேட்டிருக்கிறார். அந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு எந்த கெட்ட பெயரும் வந்து விடக்கூடாது என்பதே சோ மற்றும் மாலனது ஆதங்கம். ஒரு நூல் இன்னொரு நூலை விட்டுக் கொடுக்காது என்ற நூல் விதிப்படி இது இயல்பான ஒரு நூல்தான். இவ்வளவிற்கும் ஹரன் பிரசன்னா ஜெயலலிதாவை விட்டுக் கொடுக்கவில்லை. முசுலீம்களை ஒடுக்குவதில் மட்டும் அவர் அசால்ட்டாக இருக்கிறார் என்பதே இந்த இந்துமதவெறிக் குண்டனது ஆதங்கம்.

ஹரன் பிரசன்னா பதிவில் ஒட்டுமொத்த இசுலாமிய மக்கள் இழிவு படுத்தப்படுவதை விட ஜெயலலிதாவுக்கு கெட்டபெயர் வருவதை மாலனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.ஆனால் இதே குண்டு வெடிப்பு கருணாநிதி ஆட்சியில் நடந்திருந்தால் இந்த நூல்கள் நாவலே எழுதி கண்டித்து கிழித்திருக்கும்.

ஆளூர் ஷாநவாஸ்
ஆளூர் ஷாநவாஸ்

அந்த பயத்தில்தான் கருணா நிதி இப்போது ஆட்சியில் இல்லை என்றாலும் குண்டு வெடிப்பிற்கு காரணமாக இலங்கை ஜாஹீர் ஹூசைனை கைது செய்து சரியாக விசாரிக்காததே என்று ஒரு அறிக்கையே விட்டு விட்டார். ஆட்சியில் இல்லை என்றாலும் அக்ரஹாரத்தின் ஆசிர்வாதம் இல்லை என்றால் தொழில் நடத்த முடியாது எனும் கருணாநிதியின் பயமே இந்த அறிக்கையின் பின்னணி. இதை ஃபேஸ்புக்கில் கொஞ்சம் தைரியமாக கண்டித்த விடுதலை சிறுத்தைகளின் ஆளூர் ஷாநவாசை உடன்பிறப்புகள் உண்டு இல்லை என்று பிய்த்து உதறி விட்டனர். அதிலும் அபி அப்பா போன்ற உ.பிறப்புகள், “இனி எந்தக்காலத்திலும் ஷாநாவாசிற்கு திமுக கூட்டணியில் தொகுதி கிடைக்கவே கிடைக்காது” என்று மிரட்டுமளவு சென்றுவிட்டனர். திமுகவில் யாருக்கு சீட்டு கிடைக்கும் என்பது இந்த தேர்தலில் விருதுநகர், திருநெல்வேலி போன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை கேட்டால் சொல்வார்கள் – கோடிஸ்வரர்களுக்கு மட்டும்தான் என்று.

இனி ஆளுர் ஷாநவாஸ் இந்த உடன்பிறப்புகளின் மனம் கோணாமலும், மார்க்க சகோதரர்களின் அவலங்களை பேச முடியாமலும் போகலாம். மீறி உண்மைகளை பேச வேண்டுமென்றால், அதற்கு ஓட்டுக் கட்சி அரசியல் பொருத்தமா, புரட்சிகர அரசியல் பொருத்தமா என்று அவர் பரிசீலிப்பாரா, தெரியவில்லை. போகட்டும், நாம் இப்போது மாலனுக்கு திரும்புவோம்.

1980-களில் திசைகள் இதழ் நடத்தியது முதல் இன்று புதிய தலைமுறை நடத்துவது வரை இடையில் குமுதம், குங்குமம், தமிழ் இந்தியா டுடே என்று பல இதழ்களில், இளைஞர்களுக்காக அரசவைக் கோமாளி அப்துல் கலாம் டைப்பில் மொக்கை உபதேசங்கள் போட்டு ‘சமூக சேவை’ செய்தவர் இந்த மாலன். சன் நியூஸ் தொலைக்காட்சி சேனலிலும் பரபரப்பாக பணியாற்றியவர். மாலனின் பார்ப்பனிய இந்துத்துவ கண்ணோட்டம் என்பது அருண் ஜெட்லி, காலம் சென்ற பிரமோத் மகாஜன் போன்ற லிபரல் வலதுசாரிகளின் மாடர்ன் காவி கலர் குழுவில் பொருந்தக் கூடியது. சில நேரம் சேது சமுத்திர திட்டத்தை, இந்து மத நம்பிக்கை அடிப்படையில் ரத்து செய்ய வேண்டும் என்று அம்மணமாகவும் வாதாடக் கூடியது. அப்போது லிபரல் போய், முழுக்காவி ஜட்டியில் இந்த மாலன் ஒரு சூப்பர் மேனாக தோன்றுவார்.

இப்பேற்பட்ட மாலன், மே 15, 2014 தேதியிட்ட புதிய தலைமுறை இதழில் தனது ‘குண்டு வெடிப்பை’ நிகழ்த்தியிருக்கிறார். ஒரு வாரம் முன்பு ஹரன் பிரசன்னாவிடம் வாதிட்ட மாலனது புரட்சித் தலைவி போற்றி அறம் இப்போதும் அதையே வேறு முறையில் செய்கிறது. அதாவது முசுலீம் பயங்கரவாதத்துக்கு எதிராக எழுதி உம்மாவை பலி கொடுத்தால் அம்மாவை காப்பாற்றலாமாம். அதே பணியை காக்கி சட்டை போட்டு செய்யும் காவல் துறை கிளப்பிவிடும் கட்டுக்கதைகளின் அடிப்படையில் கட்டுரை எழுதுகிறார் மாலன்.

மேலும் இப்படி அம்மாவை காப்பாற்றுவதோடு மாலனுக்கு இப்போது படியளக்கும் பகவான் பச்சமுத்து பாஜகவோடு கூட்டணி வைத்திருப்பதால் அந்த வகையிலும் இந்த குண்டு பயங்கரவாத அரசியல் தேவைப்படுகிறது.

‘உழைப்பாளர் தின விடுமுறையை சோம்பலுடன் தொலைக்காட்சி பார்த்துக் கழிக்கலாம் என்ற டிவிப் பெட்டியை திறந்தவர்களுக்கு அதிகாலையிலேயே’ அதிர்ச்சி காத்திருந்ததாம். கட்டுரையை ஆரம்பிக்கும் போதே மாலன், நாராயணா, நாராயணா என்று உழைப்பாளர் தினத்தை போராட்டமாக எதிர் கொள்ளக் கூடாது என மக்கள் கருத்தாக உவமை போடுகிறார்.

அன்றைக்கு ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்தது. இல்லாவிடில் குண்டு ஆந்திரத்தில் வெடித்திருக்கும். அதாவது திட்டமிட்ட கூடுர் ரயில் நிலையம் திருப்பதிக்கு அருகில் இருக்கிறதாம். அங்கு மோடி வருவதால் அவரை பார்க்க வருபவர்களை பீதியூட்டவே குண்டு வைத்திருப்பதாக பீதி கிளப்புகிறார். மேலும், கூடூர் அருகில் ரயில் ஓடிக் கொண்டிருந்த போது குண்டு வெடித்திருந்தால் அப்பாவி மக்களின் உயிர்ச்சேதம் அதிகமாகியிருக்குமாம். அப்படி நடக்கவில்லை என்று கடவுளுக்கு நன்றியும் சொல்லிக் கொள்கிறார். சரி, இப்படி புலனாய்வு புலி போல எழுதுவதற்கு என்ன ஆதாரம்? ஆதாரங்களை விட மோடிக்கு கொடி பிடித்தால் பச்ச முத்துவுக்கு மனது குளிரும் என்ற ஆதாயமே மாலனுக்கு முக்கியம்.

மாலன்
மர்ம திரைக்கதை எழுதும் மாலன்

கிழக்கு பதிப்பகத்தில் டவுன்லோடு பல்ப் பிக்ஷன்களையே இசுலாமிய பயங்கரவாதமாக கதை சொன்ன பா.ராகவன் போல கதை சொல்கிறார் மாலன். சென்னை ரயில்குண்டு வெடிப்பின் பின் இருக்கும் மர்மங்களையெல்லாம் ஒரு திரைப்படம் போல விளக்குகிறார். மும்பை தாக்குதலுக்கு பிறகு மேற்கு கடற்கரைகளில் இந்தியா தனது பாதுகாப்பு வசதிகளை பலப்படுத்தி விடவே பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தற்போது தமிழகத்தின் கிழக்கு கடற்கரையை குறி வைத்திருப்பதாகவும், வட மாநிலத்து இளைஞர்களை மூளை சலவை செய்து அனுப்பினாலும் உச்சரிப்பு காட்டிக் கொடுத்து விடுவதாலும், இலங்கை தமிழ் முசுலீம்களை மூளைச்சலவை செய்து தமிழகத்திற்குள் அனுப்பி வைப்பதாக கூறுகிறார்.

சரி இப்படி ஒரு உலக அரசியலை கற்றுத் தேர்ந்த மேதை தான் எழுதுவதற்கு ஒரு தர்க்கமோ இல்லை தரமோ இருக்க வேண்டும் என்று நினைக்க வில்லை போலும். தற்போது இலங்கையில் ராஜபக்ஷே தலைமையிலான சிங்கள இனவெறி அங்குள்ள இசுலாமிய மக்களை குறிவைத்து தாக்கி வருகிறது. அங்கேயே பல்வேறு மிரட்டல்களை எதிர்கொள்ளும் இசுலாமிய மக்களிடமிருந்து பக்கத்து தமிழ்நாட்டில் பயங்கரவாதம் செய்ய ஏதோ டூர் போவது போல வருகிறார்கள் என்றால் இது என்ன விசுவரூபம் திரைக்கதையா?

மேலும் இவர்கள் சொல்வது போல ‘இசுலாமிய’ பயங்கரவாதம் ஒன்று இருப்பதாகவே வைத்துக் கொண்டாலும் அது ஒரு ஒடுக்கப்பட்ட சமூக பின்னணியிலிருந்து மட்டுமே வருகிறது. அதை மதத்துடன் மட்டும் இணைத்து பார்ப்பது அறிவீனம். காஷ்மீரில் தனது குடும்பத்தினரை இந்திய ராணுவத்திற்கு பலி கொடுக்கும் ஒரு இளைஞன், பழி வாங்க தனது உயிரை கொடுப்பது போல, மற்ற மாநிலங்களில் உள்ள முசுலீம்கள் மதமென்ற முறையில் வருந்தினாலும் உயிரைக் கொடுப்பது சாத்தியமற்றது. இது எல்லா போராட்டங்களுக்கும் பொருந்தக் கூடியது. இந்தியாவில் இந்துமதவெறியர்களை ஜனநாயக முறையில் தண்டிக்க முடியாது என்பதை அவர்களது கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஒரு முசுலீம் மட்டுமே குண்டு வைப்பதற்கான மன எழுச்சியை பெற முடியும். ஆகவே இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வந்து குண்டு வைப்பது என்ற கருத்தே எந்த அடிப்படையிலும் சாத்தியமற்றதே.

ஆனால் இலங்கையை பௌத்த நாடு என்ற முறையில் அகண்ட பாரதத்தில் முடிந்து வைத்திருக்கும் இந்துமதவெறியர்கள் ராஜபக்சேவுடன் இயல்பான நட்பில்தான் இருக்கிறார்கள். எனவே இத்தகைய பூச்சாண்டியை கிளப்பி விட்டால் அதை நிரூபிப்பதற்கு ராஜபக்சேவும் உதவி செய்யலாம். கூடுதலாக இலங்கை தமிழ் முசுலீம்கள் மத்தியில் ஒரு இனப்படுகொலையை நடத்துவதற்கான நியாயத்தை வழங்குவதோடு, தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்கள் மீதான ஒடுக்குமுறை சட்டங்கள் நிறைவேற்றுவதற்குமான ஆதரவையும் விதைப்பதில் மாலன் முன்னோடியாக நிற்கிறார்.

புலனாய்வு
புலனாய்வு செய்யும் படையினர்

பீகார் குண்டுவெடிப்பின் போது சிக்கிய இமிதாஸ் அன்சாரி என்ற தீவிரவாதி இதனை ஒப்புக் கொண்டாராம். அப்புறம் ஒரே மாதிரியான குண்டு என்ற கணக்கீட்டுடன், இந்தியன் முகாஜிதீன் கதைகளையும் கனகச்சிதமாக எழுதி உள்ளனர். அடுத்து குண்டுவெடிப்புக்கு முந்தைய நாள் கைதான ஜாகிர் உசேன் திருச்சி சிறையில் முன்னர் போலி பாஸ்போர்ட் வழக்கில் கைதாகி இருந்த போது அங்கிருந்த தமீம் அன்சாரியுடன் தொடர்பிருந்திருக்கலாம் என காவல்துறை கருதுகிறதாம். இப்படி மாலன் பயங்கரமாக ஆய்வு செய்து எழுதுகிறார்.

இந்த ஆய்வின் இலட்சணம் என்ன?

2012 செப்டம்பரில் தமீம் அன்சாரி என்ற வெங்காய வியாபாரியை தீவிரவாதி எனக் கைது செய்தது போலீசு.

தமீம் அன்சாரி மாணவப் பருவம் தொட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் வெகு மக்கள் அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். இந்திய மாணவர் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளராகவும் மாநிலத் துணைச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் செயல்பட்டுள்ளார். அறிவியல் மன்றத்திலும் (Science Forum) மாவட்டச் செயலாளராக இருமுறை இருந்துள்ளார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பல ஆண்டுகளாக உறுப்பினராக இருந்துள்ளார். அன்சாரி எந்த நாளிலும் முஸ்லிம் அமைப்புகளில் இருந்ததில்லை.

அன்சாரி மூலமாக பாகிஸ்தான் உளவுத் துறை பெற விரும்பியதாகச் சொல்லப்படும் தகவல்கள் யாவும் மிக எளிதில் கூகுள் முதலான இணையத் தளங்களில் கிடைப்பவை. எடுத்துக்காட்டாக வெலிங்டன் பாரக்சை பாகிஸ்தான் தூதர் சுபைர் கொடுத்த ப்ளாக்பெர்ரி செல்போனின் மூலம் காருக்குள் அமர்ந்தவாறு அன்சாரி படம் எடுத்து அனுப்பினாராம். வெலிங்டன் பாரக்ஸ் படம் கூகுளில் மிகத் தெளிவாகக் கிடைக்கிறது. செல்போனில் எடுக்கப்படும் படத்தைக் காட்டிலும் அது கூடுதல் விவரங்களைக் கொண்டது. தவிரவும் வெலிங்டன் பாரக்ஸ் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதனுடைய வடிவமைப்பு உலகறிந்த இரகசியம்.  செல்போனில் வெளியிலிருந்து படமெடுத்து இலங்கை வழியாகக் கடத்தப்பட வேண்டிய அளவுக்கு அது யாருமறியா ஒன்றல்ல. (அ மார்க்சின் பேஸ்புக் நிலைத்தகவல்)

இப்படி பல கட்டுக்கதைகளும் சோடிக்கப்பட்ட அம்மா போலீசின் வழக்கை, மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்து தமீம் அன்சாரியை விடுதலை செய்தது. ஆனால் அன்சாரி விடுதலை ஆவதற்கு முன்னாடியே இந்த வழக்கு போலியானது என்று வினவிலும் விரிவாக எழுதியிருக்கிறோம்.

இப்போது கட்டுரை எழுதும் மாலனோ “ஆனால் போதுமான ஆதாரங்கள் இல்லை, ஊகத்தின் பேரில் காவல்துறை செயல்பட்டுள்ளது என மதுரை உயர்நீதி மன்றக் கிளை அவரை விடுதலை செய்தது” என்று கூறி விட்டு தொடர்ந்து, “தமீம் அன்சாரி மீது தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், அவர் ஆறு மாதங்களில் ஐந்து முறை இலங்கை சென்றதாகவும், இலங்கையிலுள்ள பாக். தூதரகத்திலுள்ள சில அதிகாரிகளின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது” என்று நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட போலீஸ் கூறும் கதையை தனது பயங்கரவாத பிரச்சாரத்துக்காக அவிழ்த்து விடுகிறார்.

ஜாகிர் உசேன்
கைது செய்து அழைத்து செல்லப்படும் ஜாகிர் உசைன்.

முடிவாக இரண்டு எச்சரிக்கைகளை விடுக்கிறார் மாலன். ஒன்று இலங்கையை பாகிஸ்தான் உளவு அமைப்பு தனது துணைக் கேந்திர மையமாக பயன்படுத்துகிறது. இரண்டு, மதம் என்ற பெயரால் தமிழர்களை மூளைச்சலவை செய்து தனது பயங்கரவாத திட்டங்களில் ஈடுபடுத்துகிறது. இங்கே மாலன் முசுலீம் என்ற அடையாளத்தை மறைத்து விட்டு குறிப்பிட்டாலும் அந்த தமிழர்கள் முசுலீம்கள் மட்டும்தான். ஏன் அவர்களை இந்தியர்கள் என்று குறிப்பிடவில்லை? இந்து இந்தியாவுக்கு முசுலீம்கள் மட்டுமல்ல, தமிழர்களும் பிடிக்காது என்பது இங்கே மதச்சார்பற்ற பத்தியம் இருக்கும் மாலனிடமும் அப்பட்டமாக வெளிப்படுகிறது. இப்படி மதச்சார்பின்மை வேடத்தை போடத்தெரியாமல் மாலன் போட்டாலும் அவரது வார்த்தைகளில் அப்பட்டமாக இசுலாமிய மக்கள் மீதான வெறுப்பு வெளிப்படுகிறது.

மூளைச் சலவை செய்யப்பட்டு ஒருவர் தனது உயிரை கொடுக்க முடியும் என்று மாலன் முதல் அமெரிக்க காலன்கள் வரை திரும்ப திரும்ப ஓதுவதில் ஒடுக்கப்படும் மக்கள் மீதான ஒரு மேட்டிமைத்தனமும், இகழ்ச்சியும் அடங்கியிருக்கிறது. ஏற்கனவே கூறியது போல பாலஸ்தீனத்தில் ஒரு இசுலாமிய பெண் தனது உயிரை பணயம் வைத்து இசுரேல் மீது தாக்குதல் நடத்துகிறாள் என்றால் அதற்கு பாரிய சமூக அரசியல் காரணங்கள் உள்ளன. அந்த நியாயங்களுக்கு பதில் சொல்லாதவரை, இந்த குண்டுகளை யாரும் தடுக்க முடியாது. அதை ஏதோ படிப்பறிவு அற்ற ஏழை முசுலீம் மரணத்திற்கு பிந்தைய மதத்தின் சொர்க்க வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு செய்கிறான் என்பது வன்மமும் முட்டாள்தனமும் நிறைந்த கருத்து. இதையே திருப்பிக் கேட்டால் மேற்கண்ட பார்ப்பனக் கொழுப்பு ஆர்.எஸ்.எஸ் குண்டர் ஹரன் பிரசன்னா தனது உயிரை பணயம் வைத்து பாகிஸ்தான் இராணுவத்தின் மேல் குண்டுடன் பாய்வாரா? இதைக் கேட்ட மாத்திரத்திலேயே பாரதமாதாவை கடாசி விட்டு பதறி ஓடிவிடுவார்.

மாலனைப் போன்றே கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்ட ஊடகங்களின் புளுகுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக அம்பலமாகிக் கொண்டிருந்தும், தமது பொய்ப் பிரச்சாரத்துக்காக எந்த பத்திரிகையும் மன்னிப்பு கேட்கவில்லை.

குண்டு வைத்ததாக சந்தேகிக்கப்பட்டவரின் புகைப்படம்
குண்டு வைத்ததாக சந்தேகிக்கப்பட்டவர் என்று போலீசும் ஊடகங்களும் பரப்பிய புகைப்படம்

குண்டு வெடித்த நாளில் ரயில் நின்றவுடன் இறங்கி அவசர அவசரமாக ஓடிய ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டு “இதோ பிடித்து விட்டோம் தீவிரவாதியை” என்று தலைப்புச் செய்திகள் தீட்டினார்கள். மதுரையில் அத்வானியை கொல்ல வைக்கப்பட்ட வெடிகுண்டிலும், பெங்களூரு பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டிலும், பாட்னாவில் மோடியை குறிவைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டிலும், சென்னையில் இப்போது வெடித்துள்ள குண்டிலும் கன் பவுடருடன் அம்மோனியம் நைட்ரேட் கலந்து தான் தயாரித்துள்ளனர் என்றும், எனவே ஒரே டீம்தான் செய்திருக்கும் என்றனர்; தற்போது இந்தியன் முஜாகிதீன் என்ற பெயரில் செயல்படும் அமைப்பினர்தான் இதனை நடத்தியிருப்பதாக செய்தி பரப்பினர்; அந்த இயக்கத்தின் பொறுப்பாளர்களான யாசின் பட்கல், ரியாஸ் பட்கல் கைதான பிறகு தற்போது இந்த அமைப்பை வழி நடத்துபவன் அபுபக்கர் சித்திக் என்றும், அவன்தான் சென்னை குண்டு வெடிப்பதற்கு முன் 9 வது பிளாட்ஃபார்மில் ஓடுபவன் என்றும் கதை கட்டியது நக்கீரன் புலனாய்வு பத்திரிகை.

இதில் அல் உம்மா எனும் அக்மார்க் தமிழ் முசுலீம் குழுவை நாடு கடத்தி ஐ.எஸ்.ஐயின் உதவியுடன் இந்திய முஜாகிதீன் அமைப்பாக மாறியதாக கூசாமல் பொய் பேசுகிறது நக்கீரன்.

போலீஸ் பக்ரூதின் குழுவிடம் விசாரித்த போது அபுபக்கர் சித்திக்தான் அடுத்த தலைவன், என்றும், தற்போது கடத்தி வரப்பட்ட 100 கிலோ வெடிமருந்தில் 50 கிலோ மீதியிருப்பதாகவும், இது ஒரு ஒத்திகைதான் என்றும், மோடி ஆட்சிக்கு வந்து இசுலாமியர்களுக்கு எதிராக எதாவது நடந்தால் பதிலடி கொடுக்க தயராக இருப்பதாகவும் கதை கட்டினார்கள். ஏற்கெனவே பிடிபட்டவர்கள் மூலமாக மீதியுள்ள வெடிமருந்துகளை கைப்பற்றியிருக்கலாமே என நக்கீரன் தரப்பில் கேட்டதற்கு அதிகாரிகள் ” அது ஒரு பெரிய டீம், அந்த டீமிற்குள் சின்ன சின்ன டீம்கள் நிறைந்திருக்கும். ஒரு டீமில் இருப்பவர்களும் இன்னொரு டீமில் இருப்பவர்களும் எந்தவித தொடர்பிலும் இருக்க மாட்டார்கள். எல்லா டீம்களையும் இணைத்திருக்கும் அபுபக்கர் சித்திக் பிடிபட்டால் மட்டுமே எங்கெங்கே எவ்வளவு வெடிமருந்துகள் பதுக்கப்பட்டிருக்கிறது? எங்கெங்கே யார் யார் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்? என்று தெரிந்து கொள்ள முடியும்” என்றார்களாம்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பில் இருக்கும் அபுபக்கர் சித்திக் பற்றி அந்த அதிகாரி ”அபுபக்கர் சித்திக் தனது ஆட்கள் மூலம் நடத்தும் டேஞ்சரஸ் ஆபரேஷ்ன்களின்போது அருகே ஸ்பாட்டில் இருந்து அதை கண்காணிக்க கூடியவன். ஆடிட்டர் ரமேஷ், வேலூர் வெள்ளையப்பன், டாக்டர் அரவிந்த் ரெட்டி மர்டரின்போது அபுபக்கர் சித்திக் ஸ்பாட்டில் இருந்திருக்கிறான். அதே போல பெங்களூரு, பாட்னா போன்ற குண்டுவெடிப்புகளின் போதும் ஸ்பாட்டில் இருந்திருக்கிறான். எனவே கௌகாத்தி ரயில் குண்டுவெடிப்பிலும் அவன் ஸ்பாட்டில் இருந்திருக்கலாம். அவனது தற்போதைய புகைப்படம் எங்களிடம் இல்லாத்தால் அவன் அலட்சியமாக தப்பிச் செல்கிறான். போலீஸ் பக்ரூதின் டீமிடம் விசாரித்த வகையில் அபுபக்கர் சித்திக் 6 அடி உயரம் கொண்டவன். வழுக்கை தலையுடன் இருப்பவன். பளீரென்று ஹெடெக் ஆசாமியாக உலவுகிறவன். ரயிலில் இருந்து அவசரமாக ஓடுபவன் சித்திக்காகத்தான் இருக்க வேண்டும். விரைவில் அவனை மடக்கி விடுவோம்” என்றாராம்.

கடைசியில் பார்த்தால் அன்று ஓடியவர் கேரளாவை சேர்ந்த ஐடி பொறியாளர் என்றும், அன்று விடுமுறைக்காக இலங்கை செல்ல திட்டமிட்டிருந்த அவர் ரயில் தாமதமானதால் விமானத்தை பிடிக்க ஓடியிருப்பதும் தற்போது வெளியாகவே இப்போது அவரை அப்பாவி என்கிறது சிபிசிஐடி. கதை எழுதிய போது அபுபக்கர் எப்போதும் அசைன்மெண்ட் நடக்கும்போது ஸ்பாட்டில் இருப்பார் என்று நக்கீரன் கூறிய கதை எல்லாம் புஸ்வாணமானதுதான் மிச்சம். ஆனால் இந்த புஸ்வாணம் இசுலாமிய மக்கள் மீதான வெறுப்பிலிருந்தும், பொது வாசகரிடம் இருக்கும் இந்துத்துவ உளவியலை திருப்தி செய்யும் மோசடியான ஊடக தர்மத்திலிருந்தும் வெளிப்படுகிறது.

குண்டுவெடிப்புக்கு முந்தைய தினம்தான் இலங்கை கண்டியை சேர்ந்த வியாபாரி ஜாகிர் உசேன் என்பவரை தீவிரவாதி என்று சொல்லி க்யூ பிரிவு போலீசார் கைது செய்திருந்தார்கள். இந்தியாவினுள் ஊடுருவதற்கு இலங்கையை பயன்படுத்த முடிவு செய்த பாகிஸ்தான் உளவுத் துறை அங்குள்ள முஸ்லீம்களுக்கு பயிற்சி கொடுத்து தமிழ்நாட்டுக்கு அனுப்புவதாக கிளப்பி விட்டன பத்திரிகைகள்.

ஜாகிர் உசேன் குறித்து தற்போதும் ஊடகங்களில் புதிது புதிதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இவற்றில் தனிப்பட்ட கிரிமனல் குற்றங்களை தவிர்த்து அவர் பாக் உளவாளி என்று இவர்கள் கூறும் காரணங்கள் எந்த வித அடிப்படையற்றும் இருக்கின்றன. இது குறித்து ஏற்கனவே மேலே எழுதியிருக்கிறோம். பொறுத்திருந்து பார்ப்போம்.

இவரைப் போலவே இன்னும் 25 பேரை ட்ரெயின் பண்ணி தமிழகத்தில் ஐஎஸ்ஐ இறக்கி விட்டிருப்பதாக உசேன் விசாரணையில் கூறியதாக கிளப்பி விட்டிருக்கிறது ஜூவி. மோடியின் குட்புக்கில் ஏற்கனவே இடம்பிடித்து விட்டாலும் இனி சூப்பர் குட் புக்கை நோக்கி போக வேண்டும் என்பதால் ஜுவியின் இந்த வேகம் புரிந்து கொள்ளக் கூடியதே.

போலீசால் சோடிக்கப்பட்ட பொய் வழக்கில் சிறையில் இருந்த தமீம் அன்சாரியுடன் தொடர்பு வைத்திருந்ததால் ஜாகிர் உசைன் தீவிரவாதி என்று போலீசும் ஊடகப் புலிகளும் அடையாளம் கண்டிருக்கிறார்கள். இதன்படி பார்த்தால் தமீம் அன்சாரியை குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் விடுதலை செய்து விட்டது. ஜாகிர் உசைனும் அப்படி விடுதலை ஆகிவிட்டால், பெயர் கெட்டுப் போகும் என்பதால் போலி மோதலில் சுட்டுக் கொல்லலாமா என்று இப்போது அம்மா போலிசு ஆலோசித்து வந்தாலும் வரலாம். அப்படி வரவில்லை என்றாலும் மாலன், ஜூவி போன்ற அக்மார்க் பார்ப்பன ஊடகங்கள் அதை இலக்கிய நயத்துடன் எடுத்துக் கொடுத்தாலும் கொடுப்பார்கள்.

விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் முதலில், கவுகாத்தி போகும் ரயிலில் ஜோலார்பேட்டை, காட்பாடியில் ஏறியவர்களை சந்தேகப்பட்டார்கள். முன்பதிவு செய்யாத பயணசீட்டு எடுத்து விட்டு முன்பதிவு செய்த பெட்டியில் பயணித்தவர்கள்தான் காரணம் என்றார்கள். அப்போது பேசப்பட்ட செல்பேசி அழைப்புகளை ஆராய்ந்தார்கள். பெங்களூருவில் தட்கலில் பதிவு செய்தவர்கள் கொடுத்த ஆதாரங்கள் போலியானவை என்ற ரீதியில் விசாரணையை நீட்டித்தார்கள். குற்றவாளியை நெருங்கி விட்டதாக அடுத்து தகவல்களை காவல்துறையினர் கசிய விட்டனர்.

இப்போது குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் குறித்து துப்பு எதுவும் துலங்கவில்லை என்றும் தகவல் கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் பரிசு எனவும் கூறியிருக்கின்றனர். கடைசியில் எல்லா திரைக்கதைகளும் முதல் காட்சி முடிவதற்குள்ளேயே டப்பாவிற்குள் போய்விட்டன.

குண்டு என்றால் அது முசுலீம்தான் வைக்க வேண்டுமென்று நம்பாதீர்கள் என அசீமனாந்தாவே இப்படி ஆதார பூர்வமாக கூறிவிட்ட பின்னரும் ஊடகங்கள் இப்படித்தான் இந்துமதவெறியுடன் எழுதுகின்றன. இதே வேகமும் கற்பனையும் ஆர்.எஸ்.எஸ் நடத்திய குண்டு வெடிப்புகளில் இவர்கள் காட்டுவதில்லை. ஒரு சமூக குற்றத்தை உள்ளது உள்ளபடியும் அதே நேரம் சமூக நல்லிணக்கத்தை நோக்கியும் இருக்க வேண்டும் என்பது இவர்களது நோக்கமல்ல.

இதனால் இந்த குண்டுவெடிப்பு யாரால் நடத்தப்பட்டிருக்கும், அல்லது படவில்லை என்ற கேள்விக்கு வினவு பதிலளிக்கவில்லை. ஏனெனில் அது குறித்து இன்னும் நமக்கு போதிய தகவல்கள் ஆதாரங்களுடன் தெரியவரவில்லை. இது இந்துமதவெறியர்கள் மோடியின் இமேஜைக் கூட்டுவதற்காக வைத்திருக்கலாம் என்று சிலர் கருதினாலும் அப்படி குண்டு வைத்து வெற்றி பெற வேண்டிய பலவீனமான நிலையில் பாஜக இல்லை. அல்லது எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் ஏதோ சில திறை மறைவு இந்துமதவெறிய இயக்கங்கள் இதை பாஜகவின் நலனுக்காகவும் செய்திருக்கலாம். அல்லது, இந்துமதவெறியர்களின் கலவரங்களால் வாழ்க்கையையும், நம்பிக்கையையும் பறிகொடுத்த சில இசுலாமிய இளைஞர்கள் கூட வைத்திருக்கலாம். ஆனால் அது தற்கொலைப் பாதை என்பதையும் அதன் மூலம் இந்துமதவெறியை வீழ்த்த முடியாது, முசுலீம் மக்களுக்கு மேலும் துன்பத்தையே இத்தகைய குண்டு வெடிப்புகள் கொண்டு வரும் என்பதையும் விளக்கத் தேவையில்லை. எப்படியிருப்பினும் இந்த குண்டு வெடிப்பை நாம் கண்டிக்கிறோம்.

இந்துக்களோ இல்லை முசுலீம்களோ உழைக்கும் மக்கள் என்ற வகையில் அணிதிரண்டு போராடுவதன் மூலமும், அந்த போராட்டத்தின் மூலம் இந்துமதவெறியை வீழ்த்துவதே இத்தகைய குண்டுவெடிப்புகளிலிருந்து மக்களை காக்கும்.

இந்த முயற்சி நடக்க கூடாது என்பதற்கே தமிழ் ஊடகங்களும், மாலன் போன்ற அறிஞர்களும்தான் இசுலாமிய பயங்கரவாதம் குறித்து தமிழ் மக்களுக்கு வகுப்பு எடுக்கிறார்கள். விதிகளையும், நீதிகளையும் வகுக்கிறார்கள். பார்ப்பன இந்துமதவெறி தமிழகத்தில் காலூன்றி விட்டது என்பதற்கு மோடி வெற்றி பெற வேண்டும் என்ற அவசியமில்லை. புதிய தலைமுறை, நக்கீரன், ஜூவி போன்ற பத்திரிகைகளின் கருத்துக்களை கவனித்தாலே போதும்.

தமிழகத்தை பார்ப்பனியத்தின் கல்லறையாக்குவதற்கு நாம் இன்னும் அதிகம் போராட வேண்டும். போராடுவோம்.

  1. Vinavu,

    //‘இசுலாமிய’ பயங்கரவாதம் ஒன்று இருப்பதாகவே வைத்துக் கொண்டாலும் அது ஒரு ஒடுக்கப்பட்ட சமூக பின்னணியிலிருந்து மட்டுமே வருகிறது.//

    If it is limited to India or other such countries only.

    //முசுலீம் மரணத்திற்கு பிந்தைய மதத்தின் சொர்க்க வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு செய்கிறான் என்பது வன்மமும் முட்டாள்தனமும் நிறைந்த கருத்து//

    But this is what they believe. As unbelievers, you don’t understand what a believer believes. This is what they themselves say. They value death more than we value life.

    //அது தற்கொலைப் பாதை என்பதையும் அதன் மூலம் இந்துமதவெறியை வீழ்த்த முடியாது, முசுலீம் மக்களுக்கு மேலும் துன்பத்தையே இத்தகைய குண்டு வெடிப்புகள் கொண்டு வரும் என்பதையும் விளக்கத் தேவையில்லை//

    Here they differ. You can’t explain this to them. They believe that these actions produce a ‘Chilling’ effect thereby enforcing their blasphemy laws on to kaafirs.

  2. முஸ்லீம்களை எப்பிடி ஒடுக்க பட்ட மக்களுடன் இணைக்கிறீகள் என்று எனக்கு புரியவில்லை அதுவும் இல்லாமல் முஸ்லீம்கள் எல்லாம் அப்பாவிகளாக சித்தரிக்கிறீகள் இது என்ன நடுநிலையோ தெரியல குண்டு வைத்தது முஸ்லீம்கள் இல்லை என்று ஏன் நிறுவ முயல்கிறீகள் என்று தெரியவில்லை எனக்கு உங்கள் இனையதளம் நடத்துவதற்கு இஸ்லாமிய தேசங்களில் இருந்து பணம் வருகிறதோ என்ற சந்தேகம் வருகிறது மொத்தத்தில் நியாம் இல்லாத இசுலாமிய சார்பு கட்டுரை உங்கள விட இசுலாமிய இனையதளங்கள் பரவாயில்லை போல தெரிகிறது இஸுலாமிய செம்பு தூக்குறத கைவிடுங்கள்

    • அய்யா வினவு வகை அரசியல் தெரியாதவர்கள்தான் தேவையற்ற பின்னூட்டமிடுகிறார்கள்…வினவு கொஞ்சம் மார்க்சிஸ்ட் வகை அரசியல்…”மூசுலிம் ஆதரவு = முற்போக்கிற்கான முகவரி” என்பது மார்க்சிய சாஸ்திரம், வேதம் என்பது தெரியாமல் பின்னூட்டமிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்….

      ///அதை மதத்துடன் மட்டும் இணைத்து பார்ப்பது அறிவீனம் /////
      வஹாபி பார்த்தா சந்தோசப்டுவார்…. எனக்காகபிறந்த கண்மணியேன்னு

    • //முஸ்லீம்கள் எல்லாம் அப்பாவிகளாக சித்தரிக்கிறீகள் இது என்ன நடுநிலையோ //
      //குண்டு வைத்தது முஸ்லீம்கள் இல்லை என்று ஏன் நிறுவ முயல்கிறீகள்//
      ஜோசப்பிற்கு
      மேலே குறிப்பிட்டுள்ளதை (உங்களின் கருத்தை)சற்று மாற்றி கேளுங்கள் அதாவது
      முஸ்லீம்கள் எல்லாம் குற்றவளிகளா? அதேநேரத்தில் மற்றவர்கள் எல்லம் யோக்கியர்களா?
      குண்டு வைத்தது முஸ்லீம்கள் என்று ஏன் நிறுவ முயல்கிறீகள்?

      //இஸுலாமிய செம்பு தூக்குறத கைவிடுங்கள்//
      எங்களுக்கு யாரும் செம்பு தூக்க வேண்டிய அவசியம் இல்லை உண்மையை தீரத்துடன் பகிர்ந்தால் போதும்

      • ஜவஹர்

        இங்கு முஸ்லிம்கள் மீது சந்தேகம் மட்டுமே உள்ளது,ஆதாரம் எதுவும் இல்லை.

      • முஸ்லீம்கள் எல்லாம் குற்றவாளிகள் என்று நான் சொல்லவில்லை குண்டு வெடிப்புகளுக்கு இசுலாமிய தீவிரவாதிகளே பொறுப்பேற்று இருக்கிறார்கள் இந்து மத அமைபுகளும் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி இருக்கின்றன ஆனல் இருவரில் ஒரு கூட்டத்தை பயங்கரவாதி என்றும் இன்னொறு கூட்டத்தை அப்பாவிகள் அவர்களின் எதிர் விணை என்று சொல்வதைத்தான் ஏற்க முடியவில்லை இரு கூட்டமும் மத வெறியில் சலைத்தவர்கள் இல்லை இதில் ஒரு கூட்டதிற்க்கு மட்டும் அப்பாவி வேசம் போடுவது ஏன் இதை சொல்லுறதுனால என்ன கிறிஸ்தவ மத வெறியன் என்று சொல்லி விட மாட்டீர்கள் என்று நம்புகிறேன் இந்தியாவிலும் பிற தேசங்களிலும் இசுலாமிய தேசங்க்ளிலிம் குண்டு வைப்பது கிறிஸ்தவ இந்து தீவிரவாதிகள் என்று சொல்லி விடாதிர்கள்

    • முட்டாள்தானமான கருத்துகள் எல்லாவிதமான மக்களுக்கான குரலாகத்தான் வினவு இருக்கிறது இந்தியாவில் முஸ்லிம்கள்தான் அதிகமான பாதிக்க படுகிறார்கள் தமிழகத்தில் இல்லை எனலாம் ஆனால் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்படும் சமூகம் இஸ்லாமியர்கள் என்பாதல் அதற்கான ஆதராவு அதிகமாக இருக்கிறது.இது மார்க்ஸிட் என்பதை தெளிவாக புரிந்துக் கொள்ளவும்

  3. May 2009 train hijack and May 2014 train blast What is the relation ?
    ———————————————————————————————————

    நினைவு இருக்கும் என நினைக்கின்றேன் !

    May 2009 சென்னை centralல் இருந்து கடத்தி அதிவேகத்தில் ஒட்டி மோதி கவிழ்கப்பட்ட எலெக்ட்ரிக் train நிகழ்வு யாரால் நிகழ்த்தப்ட்டது? எத்தகைய அரசியல் சூழல் ? இலங்கையில் சிங்கள பேறீனவாதம் ஈழத்து தமிழீனத்தை சிதைத்து கொண்டு இருந்த நேரம். தமிழகம் கொந்தளித்து கொண்டு இருந்த நேரம். நம் தமிழர் உணர்வுகளை அடக்க RAW – Research and Analysis Wing என்ற இந்திய உளவு நிறுவனம் மூலம் ரயிலை கடத்தி பங்கரவாத பீதீயை மக்கள் மனதில் விதைத்து ஒட்டு பொறுக்கிய சதிகாரன் யார் ? அன்றும் இன்றும் ஆட்சி யில் இருக்கும் ஈழ கொலைகார , இந்திய மக்கள் விரோத காங்கிரஸ் !

    ——————————————————–

    மே 1 2014 சென்ட்ரல் ரயில் குண்டு வெடிப்பு யாரால் ,எதற்காக நிகழத்தப்பட்டது ? இதனால் யாருக்கு லாபம் ? “இது இந்துமதவெறியர்கள் மோடியின் இமேஜைக் கூட்டுவதற்காக வைத்திருக்கலாம் என்று சிலர் கருதினாலும் அப்படி குண்டு வைத்து வெற்றி பெற வேண்டிய பலவீனமான நிலையில் பாஜக இல்லை” என்று வினவு வலிந்து உண்மைக்கு புரம்பாக கூறுவது ஏன் ? வினவின் வாதம் தவறு

    சாத்தியங்கள்:
    [1]6 கட்ட தேர்தல் post poll secret surveys பாஜக வுக்கு மிக்க நம்பிக்கை அளிக்காத நிலையில் யார் நலனுக்காக யார் குண்டு வெடிப்பு பயங்கரவாதத்தை நிகழ்த்தீ இருக்க முடியும் என்று நம்மால் உணர முடியும். மீதி கட்ட தேர்தலில் பாஜக வெற்றி பெற RAW or IB யில் உள்ள பாஜக வுக்கு ஆதரவான ஆட்கள் இக் குண்டு வெடிப்பு பயங்கரவாதத்தை நிகழ்த்தீ இருக்க முடியும்!

    [2]6 கட்ட தேர்தல் post poll secret surveys பாஜக வுக்கு மிக்க நம்பிக்கை அளிக்காத நிலையில் மீதி 3 கட்ட தேர்தலில் பாஜக வெற்றி பெற RSS தீவீரவாதிகள் கூட இக் குண்டு வெடிப்பு பயங்கரவாதத்தை நிகழ்த்தீ இருக்க முடியும்!

    ஹரன் பிரசன்னா, மால”ம்” போன்ற இந்து மத சார்புகள் இஸ்லாமியர்கள் தான் இக் குண்டு வெடிப்பு பயங்கரவாதத்தை நிகழ்த்தினார்கள் என்று ஆதாரம் இல்லாமல் கூறும் போது ,இக் குண்டு வெடிப்பினால் யாருக்கு [லாபம் பாஜக-க்கு ] என்று நாம் ஆய்வது சரி தானே ?

    • //மதுரையில் அத்வானியை கொல்ல வைக்கப்பட்ட வெடிகுண்டிலும், பெங்களூரு பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டிலும், பாட்னாவில் மோடியை குறிவைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டிலும், சென்னையில் இப்போது வெடித்துள்ள குண்டிலும் கன் பவுடருடன் அம்மோனியம் நைட்ரேட் கலந்து தான் தயாரித்துள்ளனர் என்றும், எனவே ஒரே டீம்தான் செய்திருக்கும் என்றனர்//

      சரி தான். அது ஒரே டீம்தான். அது இந்துமதவெறி RSS கும்பல் தான். இந்தியாவில் எங்கு குண்டு வெடித்தாலும் அது இஸ்லாமியர்களின் சதிச்செயல் தான் என்று ஆதாரமே இல்லாமல் பலர் கூறும் போது, ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தவுடன் மறுகணமே அது மோடியை கொள்ளத்தான், பா.ஜ.க வை பயமுறுத்தத்தான் என்று இந்து மதவெறியர்களும் பா.ஜ.க வினரும் கதறும் போது நாங்கள் ஏன் பா.ஜ.க வினரை சந்தேகப்படக்கூடாது? (ஏற்கனவே தமிழகத்தில் ஒரு முறை அரசியலில் பிரபலமாவதற்காக தன் வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசிய பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம்).

  4. தவறான பாதையில் வினவு செல்வதாக எனக்கு தோன்றுகிறது.
    தீவிரவாதத்தை ஆதரிக்காதீர்கள். அது இரு முனை கத்தி. குண்டு வெடிப்பில் இறந்த சகோதரி உங்கள் சொந்த சகோதரியாக இருந்தால் இப்படி தான் பதிவிட்டிருப்பீர்களோ?

    • [1]கசப்பு கடை பாய் ,மொகல் பிரியானி கடை பாய் தான் இக் குண்டு வெடிப்பை நிகழ்த்தீனார்கள் என்று ஹரன் பிரசன்னா, மால”ம்” போன்ற RSS பூசாரிகள் இந்து மத சார்புடன் கூறும் போது , கற்றது கையளவு அவர்கள் வினவை குறை கூறுவது ஏன் ?ஹரன் பிரசன்னா, மால”ம்” போன்றவர்களீன் இஸ்லாமீய வெறுப்பு அரசீயலுக்கு கற்றது கையளவு தூபம் போட்டு ஊது வத்தி கொளுத்துவது ஏன் ?

      [2]விசாரணை நடைபெறும் போதே இஸ்லாமியர்கள் தான் இக் குண்டு வெடிப்பு பயங்கரவாதத்தை நிகழ்த்தினார்கள் என்று ஹரன் பிரசன்னா, மால”ம்” போன்ற RSS பூசாரிகள் ஆதாரம் இல்லாமல் கூறும் போது ,நாம் இக் குண்டு வெடிப்பினால் யாருக்கு லாபம்[ பாஜக-க்கு ] என்று ஆய்வது சரி தானே ?

      [3]கற்றது கையளவு அவர்கள் அனிந்து உள்ள ஒவ்வொரு முகமுடீயீன் ஒவ்வொரு layer ஆக தற்போது எடுத்துகொண்டு உள்ளார்!

      [a]கற்றது கையளவு அவர்கள் அனிந்து உள்ள கம்யுனிச வெறுப்பு முகமுடி layer விலக்கபட்டது.
      [b]கற்றது கையளவு அவர்கள் அனிந்து உள்ள மத சார்பீன்மை முகமுடி layer விலக்கபட்டது.

      • சரவணன் அவர்களே,

        கசாப்பு கடை பாய் தான் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தினார் என்று ஹரன் பிரசன்னா, மாலன் போன்றோர் கூறுவதற்கும், இந்த குண்டு வெடிப்பை நடத்தியது இந்து தீவிரவாதிகள் என்று வினவு/சரவணன் கூறுவதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது?

        Prejudice என்பது கூடாது தான். குண்டு வைத்தது இசுலாமியர் தான் என்று நான் எப்போது சொன்னேன். குண்டு வைத்தது இசுலாமியரோ, இல்லை இசுலாமியர் இல்லை என்றோ வினவு எப்படி முடிவுக்கு வரலாம். இன்னும் விசாரணை முடிவுக்கு வரவில்லை. அதற்குள் வினவு அதன் கட்டுரைகளில் தீவிரவாத செயல்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கிறது என்பதை தானே கூறினேன்.

        //இசுலாமிய’ பயங்கரவாதம் ஒன்று இருப்பதாகவே வைத்துக் கொண்டாலும் அது ஒரு ஒடுக்கப்பட்ட சமூக பின்னணியிலிருந்து மட்டுமே வருகிறது. அதை மதத்துடன் மட்டும் இணைத்து பார்ப்பது அறிவீனம். காஷ்மீரில் தனது குடும்பத்தினரை இந்திய ராணுவத்திற்கு பலி கொடுக்கும் ஒரு இளைஞன், பழி வாங்க தனது உயிரை கொடுப்பது போல, மற்ற மாநிலங்களில் உள்ள முசுலீம்கள் மதமென்ற முறையில் வருந்தினாலும் உயிரைக் கொடுப்பது சாத்தியமற்றது. இது எல்லா போராட்டங்களுக்கும் பொருந்தக் கூடியது. இந்தியாவில் இந்துமதவெறியர்களை ஜனநாயக முறையில் தண்டிக்க முடியாது என்பதை அவர்களது கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஒரு முசுலீம் மட்டுமே குண்டு வைப்பதற்கான மன எழுச்சியை பெற முடியும். //
        மேலே குறிப்பிட்ட வினவு கட்டுரையின் பகுதியில் தீவிரவாதத்தை ஆதரிக்கும் நிலைப்படை வினவு எடுத்திருக்கிறது என்று தானே கூறினேனே.

        ஐயா சரவணன், எனக்கு எந்த முகமூடியும் தேவை இல்லை. எந்த layer உம் போட்டு என்னை மறைக்கவில்லை. எத்தனையோ பதிவுகளில் இந்து மதத்தில் உள்ள குறைகளை வெளிப்படையாக நான் விமர்சித்திருப்பது உங்களுக்கு தெரியவில்லை என்றால் அதற்கு நான் பொறுப்பல்ல.

        • கற்றது கையளவு,

          [1]விசாரணை நடைபெறும் போதே இஸ்லாமியர்கள் தான் இக் குண்டு வெடிப்பு பயங்கரவாதத்தை நிகழ்த்தினார்கள் என்று ஹரன் பிரசன்னா, மால”ம்” போன்ற RSS பூசாரிகள் ஆதாரம் இல்லாமல் கூறும் போது ,நாம் இக் குண்டு வெடிப்பினால் யாருக்கு லாபம்[ பாஜக-க்கு ] என்று ஆய்வது சரி தானே ?
          //கசாப்பு கடை பாய் தான் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தினார் என்று ஹரன் பிரசன்னா, மாலன் போன்றோர் கூறுவதற்கும், இந்த குண்டு வெடிப்பை நடத்தியது இந்து தீவிரவாதிகள் என்று வினவு/சரவணன் கூறுவதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது? //

          [2]vinavu said://இந்த குண்டுவெடிப்பு யாரால் நடத்தப்பட்டிருக்கும், அல்லது படவில்லை என்ற கேள்விக்கு வினவு பதிலளிக்கவில்லை. ஏனெனில் அது குறித்து இன்னும் நமக்கு போதிய தகவல்கள் ஆதாரங்களுடன் தெரியவரவில்லை. இது இந்துமதவெறியர்கள் மோடியின் இமேஜைக் கூட்டுவதற்காக வைத்திருக்கலாம் என்று சிலர் கருதினாலும் அப்படி குண்டு வைத்து வெற்றி பெற வேண்டிய பலவீனமான நிலையில் பாஜக இல்லை. அல்லது எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் ஏதோ சில திறை மறைவு இந்துமதவெறிய இயக்கங்கள் இதை பாஜகவின் நலனுக்காகவும் செய்திருக்கலாம். அல்லது, இந்துமதவெறியர்களின் கலவரங்களால் வாழ்க்கையையும், நம்பிக்கையையும் பறிகொடுத்த சில இசுலாமிய இளைஞர்கள் கூட வைத்திருக்கலாம். ஆனால் அது தற்கொலைப் பாதை என்பதையும் அதன் மூலம் இந்துமதவெறியை வீழ்த்த முடியாது, முசுலீம் மக்களுக்கு மேலும் துன்பத்தையே இத்தகைய குண்டு வெடிப்புகள் கொண்டு வரும் என்பதையும் விளக்கத் தேவையில்லை. எப்படியிருப்பினும் இந்த குண்டு வெடிப்பை நாம் கண்டிக்கிறோம்.//

          //Prejudice என்பது கூடாது தான். குண்டு வைத்தது இசுலாமியர் தான் என்று நான் எப்போது சொன்னேன். குண்டு வைத்தது இசுலாமியரோ, இல்லை இசுலாமியர் இல்லை என்றோ வினவு எப்படி முடிவுக்கு வரலாம். இன்னும் விசாரணை முடிவுக்கு வரவில்லை. அதற்குள் வினவு அதன் கட்டுரைகளில் தீவிரவாத செயல்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கிறது என்பதை தானே கூறினேன். //

          • கற்றது அகராதி/கையளவு,

            ஹரன் பிரசன்னா, மாலன் போன்ற RSS பூசாரிகள் விசாரணை நடைபெறும் போதே ஆதாரம் இல்லாமல் இஸ்லாமியர்கள் தான் சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு பயங்கரவாதத்தை நிகழ்த்தினார்கள் என்று கூறும் போது அதற்கு இக் கட்டுரை மூலம் வினவு [பொருத்தமான மறுப்பு] fitting replay கொடுப்பது கற்றது கையளவுக்கு இதயமதீர்வது/மனசு நோவுவது ஏனோ ?

            [1]வினவின் பொருத்தமான மறுப்பை கற்றது கையளவு “தீவிரவாத செயல்களுக்கு ஆதரவாக கருத்து” என்று கயமைத்தனமாக/மடமைத்தனமாக அவதூறு கூறுவது தான் உங்கள் ஜனநாயகமா ?

            [2] மேலும் கட்டுரையீன் நோக்கம் ஆதாரம் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட சமுகத்தை பயங்கரவாதிகளாக சித்தரிக்காதீர்கள் என்பது தானே ? அதில் என்ன குற்றம் கண்டீர்கள் கற்றது அகராதி அளவு ?

            //Prejudice என்பது கூடாது தான். குண்டு வைத்தது இசுலாமியர் தான் என்று நான் எப்போது சொன்னேன். குண்டு வைத்தது இசுலாமியரோ, இல்லை இசுலாமியர் இல்லை என்றோ வினவு எப்படி முடிவுக்கு வரலாம். இன்னும் விசாரணை முடிவுக்கு வரவில்லை. அதற்குள் வினவு அதன் கட்டுரைகளில் தீவிரவாத செயல்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கிறது என்பதை தானே கூறினேன். //

        • கற்றது கையளவு,

          வினவின் அடுத்த வரியை நீங்கள் எடிட் செய்தது ஏனோ ?

          வினவு told in the next line :

          “ஆகவே இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வந்து குண்டு வைப்பது என்ற கருத்தே எந்த அடிப்படையிலும் சாத்தியமற்றதே.”

          கற்றது கையளவின் அறிவுக்கு இது வினவு தரும் தீவீரவாத ஆதரவாக படும் கயமைத்தனம்/மடமைத்தனம் ஏன் ?

          vinavu said://இசுலாமிய’ பயங்கரவாதம் ஒன்று இருப்பதாகவே வைத்துக் கொண்டாலும் அது ஒரு ஒடுக்கப்பட்ட சமூக பின்னணியிலிருந்து மட்டுமே வருகிறது. அதை மதத்துடன் மட்டும் இணைத்து பார்ப்பது அறிவீனம். காஷ்மீரில் தனது குடும்பத்தினரை இந்திய ராணுவத்திற்கு பலி கொடுக்கும் ஒரு இளைஞன், பழி வாங்க தனது உயிரை கொடுப்பது போல, மற்ற மாநிலங்களில் உள்ள முசுலீம்கள் மதமென்ற முறையில் வருந்தினாலும் உயிரைக் கொடுப்பது சாத்தியமற்றது. இது எல்லா போராட்டங்களுக்கும் பொருந்தக் கூடியது. இந்தியாவில் இந்துமதவெறியர்களை ஜனநாயக முறையில் தண்டிக்க முடியாது என்பதை அவர்களது கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஒரு முசுலீம் மட்டுமே குண்டு வைப்பதற்கான மன எழுச்சியை பெற முடியும். //
          kk criticized vinavu ://மேலே குறிப்பிட்ட வினவு கட்டுரையின் பகுதியில் தீவிரவாதத்தை ஆதரிக்கும் நிலைப்படை வினவு எடுத்திருக்கிறது என்று தானே கூறினேனே. //

    • // அது இரு முனை கத்தி. குண்டு வெடிப்பில் இறந்த சகோதரி உங்கள் சொந்த சகோதரியாக இருந்தால் இப்படி தான் பதிவிட்டிருப்பீர்களோ?//

      இதைத்தான்நானும் கேக்கிறேன்
      உன் சகோதரனை தீவிரவாதி என்று ஆதரமே இல்லாமால் சொன்னால் ஏற்றுக்கொள்வாயா?

      பல குன்டு வெட்ப்புகளைநிகழ்தியது இந்து தீவிரவாதிகள்தான் என்பது பல வழக்குகளில்நிறுபனம் ஆன போதும் அவர்களைச் சந்தேகம் கொள்ளமல் இஸ்லாமியர்கள்மீது பழி போடுவது சரியா?

      இதுநக்கீரன் போல மாம வேலை பார்க்கும் புலனாய்வு இதழுக்கு புரியாது…

      சிறுபான்மையினரின் ஓட்டுக்காக மலம் தின்னும் அரசியல்வாதி(கருணா நீதி, வைகோ போன்ற)களுக்கு புரியாது…

      இறந்த ஒரு சகோதரிக்காக கவலைப்படும் “கைக்கு” கற்றது கையளவு அல்ல கிழிந்தது முகமூடி

      • ஹிந்து தீவிரவாதிகள் என்று கூறப்படும் நபர்கள் மீது வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டு உள்ளது.

        இன்னும் குற்றம் நிரூபணம் ஆகவில்லை.

        ஹிந்து மற்றும் கிறித்தவ மத குருமார்கள் மற்ற மதத்தினர் மீது ஜிஹத் நடத்த கட்டளை இடுவதில்லை.

        மேலும் இன்று சௌதி அரபியாவின் பண பலத்தாலும், வாஹபி எனப்படும் மிகுந்த பிர்போக்கன இஸ்லாமிய பேராண்மையை நிறுவ துடிக்கும் சிட்தந்தால் பல ஏழை எளிய முஸ்லிம் மக்கள் மூளை சலவை செய்யப்பட்டு தீவிரவாதிகதளாக மாறுகின்றனர்.

        இதார்க்கு உதாரணம் இன்று கைது செய்யப்பட்டு இருக்கும் bhatkal போன்ற தீவிரவாதிகளே.

        • //ஹிந்து தீவிரவாதிகள் என்று கூறப்படும் நபர்கள் மீது வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டு உள்ளது.

          இன்னும் குற்றம் நிரூபணம் ஆகவில்லை.

          ஹிந்து மற்றும் கிறித்தவ மத குருமார்கள் மற்ற மதத்தினர் மீது ஜிஹத் நடத்த கட்டளை இடுவதில்லை.//

          இந்து தீவிரவாதிகள் மீது வழக்குகள் வழக்கு பதிய காவல் துறையினர் முன்வருவதே இல்லை ஒரு வேலை வழக்கு பதிந்தாலும் அதில் அக்கரை காட்டுவதில்லை என்பதே உண்மை.

          யாரேனும் அக்கரை காட்டினால் அவருக்கு கர்கரேயின்நிலை தான் என்பதே உண்மை.

          ஆர். எஸ். எஸ் அமைப்பு எதர்க்காக உள்ளது?

          அமெரிக்க என்னும்நாடே கிறிதுவ தீவிரவாதநாடே…

          • உங்களுடைய சொந்த யூகங்களை வைத்து எந்த முடிவும் எடுக்க முடியாது.

            மாலேகொண் குண்டு வெடிப்பு சம்பந்தமாக மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

            அவர்கள் ஹிந்து அல்லது காவி தீவிரவாதி என்று மத்திய உள்துரய் அமைச்சர் சிண்டே கூறினார்.

            ஆனால் இன்று வரை எந்த குற்றமும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகவில்லை.

            அவர்களுக்கு எந்த தண்டனையும் குடுக்கப்படவில்லை.

            அவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்குமாறு வேண்டுகிறேன்.

            தண்டனை கொடுக்காமல் நாட்களை கடத்துவதால் அரசின் வழக்கு பலவீனமானதோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.

            rss அமைப்பு ஹிந்துக்களின் பாதுகாப்பிர்க்காக உள்ளது.

            • ஒரு உண்மையை அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும்!!

              1) தீவிரவாதத்தை இந்த நாட்டில்
              அரங்கேற்றுவது யார் ?

              2) சம்ஜயோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன்
              யார் ?

              3) சபர்மதி எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன்
              யார் ?

              4) மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்தவன் யார் ?

              5) அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தவன் யார் ?

              6) கோவாவில் குண்டு வெடிப்பு நடத்தியவன்
              யார் ?

              7) மாலேகானில் குண்டு வைத்தவன் யார் ?

              8) நாடெங்கும் குண்டு வைத்து விட்டு அந்த
              பழியை முஸ்லிம்கள் மீது போடுபவன் யார் ?

              9) குஜராத்தில் 3000
              முஸ்லிம்களை கொன்று குவித்தவன் யார் ?

              10) நாடு முழுவதும் கலவரத்தை நடத்துபவன்
              யார் ?

              11) நம் தேசத்தந்தை மகாத்மா அவர்களை கையில்
              இஸ்மாயில் என்று பச்சை குத்திக்
              கொண்டு காந்தியை கொன்றவன் யார் ?

              12) விநாயக சதுர்த்தி ஊர்வலத்தின்
              போது முஸ்லிம் மக்கள் வாழும்
              பகுதியில் கலவரத்தை துண்டுபவன் யார் ?

              13) பெங்களூரில் பாகிஸ்த்தான்
              கொடியை ஏற்றி தேச துரோக
              செயலை செய்து விட்டு முஸ்லிம்கள்
              மீது பழியை போட்டு பிறகு மாட்டி கொண்டவன்
              யார் ?

              14) மாவீரன் கார்க்ரேவை கொன்றவன் யார் ?
              ஆந்திராவில்
              மாட்டு தலையை வெட்டி போட்டு கலவரத்தை தூண்டியவன்
              யார்?

              15) பாபர்
              மஸ்ஜித்தை இடித்து தரைமட்டமாக்கி உலக
              அரங்கில் இந்தியாவை தலை குனிய வைத்தவன்
              யார் ?

              16) இந்த நாட்டின் இறையாண்மையை இல்லாமல்
              ஆக்குபவன் யார் ?

              2003 மார்ச் 13:- மும்பை ரெயிலில் நடந்த
              குண்டு வெடிப்பில் 11 பேர் பலி.

              2003 ஆக 25:- மும்பையில் 2 கார் குண்டுகள்
              வெடித்து 60 பேர் பலி.

              2005 அக் 29:- டெல்லியில் நடந்த தொடர்
              குண்டு வெடிப்பில் 60 பேர் பலி.

              2006 மார்ச் 7:- காசியில் நடந்த தொடர்
              குண்டு வெடிப்பில் 15 பேர் பலி.

              2006 ஜூலை 11:- மும்பை ரெயில்களில் 7
              குண்டுகள் வெடித்தன. 180 பேர் பலி.

              2006 செப் 8:- மலேகானில் நடந்த
              குண்டு வெடிப்பில் 35 பேர் பலி.

              2007 பிப் 19:- பாகிஸ்தானுக்கு சென்ற ரெயிலில் குண்டு வெடித்து 66 பயணிகள் பலி.

              2007 மே 18:- ஐதராபாத் மசூதியில் குண்டு வெடித்து 11 பேர் பலி.

              2007 ஆக 25:- ஐதராபாத்தில் நடந்த தொடர்குண்டு வெடிப்பில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

              2008 மே 13:- ஜெய்ப்பூரில் 7 இடங்களில் குண்டு வெடித்தது. 63 பேர் பலி.

              2008 ஜூலை 25:- பெங்களூரில் 8 இடங்களில் குண்டு வெடித்தது. 1 பெண் பலி.

            • “!அக்டோபர் 11 -2007அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பை நிகழ்த்தியது யார் ??
              ☆தேவேந்திர குப்தா (ர்ச்ச்)
              ☆விஷ்ணு பிரசாத் (ர்ச்ச்)
              ☆சந்திர சேகர் (ர்ச்ச்)
              மே 18 – 2007 மெக்கா மசூதி குண்டுவெடிப்பு நிகழ்த்தியது யார் ?
              சந்தீப் டாங்கே (ர்ச்ச்)
              ராமச்சந்திரா கல்சங்காரா
              (ர்ச்ச்)
              டவ்சர்களின் முயற்ச்சியால் 14 பேர் பலி 50 பேர் படுகாயம் ..!
              அக்டோபர் 2009 மார்கோவில் குண்டு வைத்தது யார் ??
              தீவிரவாத இயக்கமான சனாதன் சன்ஷ்தாவை சேர்ந்த 11 பேர் அத்துனையும் காவிகள் .
              செப்டம்பர் 8 – 2006 மலேகான் மசூதி அருகில் 3குண்டுவெடிப்பு நிகழ்த்தியது யார் ??
              அபினவ் பாரத் & ராஷ்டிரிய ஜாகரன் மஞ்ச் அமைப்பை சார்ந்த
              ☆பிரக்யா சிங் தாக்கூர்
              ☆கர்னல் புரோஹித்
              ☆சுவாமி அமிர்தானந்
              இந்த காவிகளால் 37 பேர் கொல்லப்பட்டனர் 100 படுகாய மடைந்தனர் ..!
              பிரவரி 18 -2007 சம்ஜவ்தா எக்ஸ்ப்ரஸ் ரயில் குண்டுவெடிப்பு யார் நிகழ்த்தியது ?
              ☆சந்தீப் டாங்கே (ர்ச்ச்)
              ☆ராஞ்சி (ர்ச்ச் )
              இவர்களின் சாதனையால் 68 பேர் கொல்லபட்டார்கள் ..!
              ஜூன் 4 -2008 தானே ^ குண்டுவெடிப்பு யார் நிகழ்த்தியது ??
              ☆ஹனுமந்த் கட்கிரி (ர்ச்ச்)
              ☆மகேஷ் தினகர் (ர்ச்ச்)
              2006 ஏப்ரல் காவிகளின் குண்டு உற்பத்தி பட்டறையில் தயாரிப்பின் பொழுது வெடித்தது பஜ்ரங்கள் தல் உறுப்பினர் இரண்டு பேர் மரணம் ஆகஸ்ட் 2006 லும் பஜ்ராங்க்தல் உறுப்பினர் தவறான தயாரிப்பில் கான்பூரில் 2 பேர் மரணம் ..!
              இதன் பின்னணியில் மகாராஸ்ட்ராவில் பல மசூதிகளில் தொடர் குண்டுவெடிப்பு !இதுமட்டுமா??
              இல்லை இன்னும் இருக்கிறது …
              2002 போபால் ரயில் நிலையத்தில் கண்டெடுக்க பட்ட வெடிகுண்டு கருவி இந்துத்துவாவின் தொண்டர்கள்
              ☆ராம் நாராயணன்
              ☆கலசங்கரா
              ☆சுனில் ராம் தேவ் – ஆகியோருக்கு தொடர்புடையது ..!
              இன்னும் ஏராளம் ! பெற்றோல் குண்டு கடத்தல் நாடகம் கற்பழிப்பு ஏராளம் ஏராளம் …ஒட்டு மொத்த தீவிரவாதிகளும் மூன்று எழுத்தில் அடங்கி கொண்டு நாடகமா ஆடுகிறீர்கள் ??
              இது தான் இந்துக்களின் பாதுகாப்பா?

    • கற்றது கையளவு,
      நீங்கள் தரும் பின்னூட்டங்கள் குருட்டு தனமாகவும் , குத்து மதிப்பாகவும், உண்மைக்கு புறம்பாகவும் உள்ளன. வினவு கட்டுரைகளை படித்து தான் பின்னூட்டங்கள் தருகின்றீர்களா ?
      கீழே உள்ள உங்கள் பின்னூட்டம் வினவு கட்டுரையுடன் எப்படி முரண் படுகின்றது என்பதை பாருங்கள் !

      From கற்றது கையளவு blind full feed back: //தீவிரவாதத்தை ஆதரிக்காதீர்கள். அது இரு முனை கத்தி. குண்டு வெடிப்பில் இறந்த சகோதரி உங்கள் சொந்த சகோதரியாக இருந்தால் இப்படி தான் பதிவிட்டிருப்பீர்களோ?//

      From Vinavu Essay://இந்துமதவெறியர்களின் கலவரங்களால் வாழ்க்கையையும், நம்பிக்கையையும் பறிகொடுத்த சில இசுலாமிய இளைஞர்கள் கூட வைத்திருக்கலாம். ஆனால் அது தற்கொலைப் பாதை என்பதையும் அதன் மூலம் இந்துமதவெறியை வீழ்த்த முடியாது, முசுலீம் மக்களுக்கு மேலும் துன்பத்தையே இத்தகைய குண்டு வெடிப்புகள் கொண்டு வரும் என்பதையும் விளக்கத் தேவையில்லை. எப்படியிருப்பினும் இந்த குண்டு வெடிப்பை நாம் கண்டிக்கிறோம்.

      இந்துக்களோ இல்லை முசுலீம்களோ உழைக்கும் மக்கள் என்ற வகையில் அணிதிரண்டு போராடுவதன் மூலமும், அந்த போராட்டத்தின் மூலம் இந்துமதவெறியை வீழ்த்துவதே இத்தகைய குண்டுவெடிப்புகளிலிருந்து மக்களை காக்கும்.//

      • நான் குருடனாகவே இருந்துவிட்டு போகிறேன். நானும் சில காலமாக வினவின் அனைத்து பதிவுகளையும் படித்துக்கொண்டு தான் இருக்கிறேன். என்னை பொறுத்தவரை தீவிரவாதம் என்பது எந்த மதத்தின் வழி, சாதியின் வழியிலும் வெளிப்பட்டாலும் அது தீவிரமாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று தான். ஆனால் வினவின் கட்டுரைகளில் இந்து தீவிரவாதத்தை முழுமனதோடு தாக்குவதை போலல்லாமல் அந்த தீவிரவாதத்தை இசுலாமியர் செய்திருந்தால் மேற்கண்ட வகையில் மயிலிறகால் தடவி கண்டிப்பது தான் எனக்கு வருத்தத்தை அளித்தது. இது சோ ஜெயலலிதாவை கண்டிப்பது போல இருக்கிறது. ஏற்கனவே “ஆடிட்டர் ரமேஷ் படுகொலை : செத்தவனெல்லாம் உத்தமன் அல்ல ! ” என்ற கட்டுரையில் ஒரு கொலையை மறைமுகமாக ஆதரித்தபோதே வினவின் போக்கு எனக்கு வருத்தத்தை அளித்தது. என் கருத்தை நான் வெளிப்படையாக சொல்வது நண்பர் சரவணனுக்கு ஏனோ பிடிக்கவில்லை. உடனே [1],[2], [3] என்று அடுக்க ஆரம்பித்து விடுகிறார்.

        வன்முறையினால் தீர்வு கிடைக்கும் என்று நம்பினால் அங்கு இப்படி தான் யாரையோ பழிவாங்குவதற்காக அப்பாவி மக்களை பலி கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும். தவறு எங்கிருந்தாலும், யார் செய்தாலும் அது தவறு தான்.

    • Same what you have to Think, Kattrathu Kalavu.., if your innocent brother is arrested by polices and portrait by the Indian (Prostitute) Medias as a Terrorist,………..,?? Do not be double standard.

      • How do you know 100% that Thameem Ansari, Zakir Hussain and Al-Umma group are all innocent?
        Still the trial is not fully over. Let us wait and see. Just because the arrested persons are muslims doesn’t mean that all muslims are terrorists. At the same time, just because the arrested persons are muslims doesn’t mean that they are innocent. Let us wait and see how the trial goes and then decide.

  5. Comment by P.Joseph://முஸ்லீம்களை எப்பிடி ஒடுக்க பட்ட மக்களுடன் இணைக்கிறீகள் என்று எனக்கு புரியவில்லை அதுவும் இல்லாமல் முஸ்லீம்கள் எல்லாம் அப்பாவிகளாக சித்தரிக்கிறீகள் இது என்ன நடுநிலையோ தெரியல குண்டு வைத்தது முஸ்லீம்கள் இல்லை என்று ஏன் நிறுவ முயல்கிறீகள் என்று தெரியவில்லை //

    REPEAT

  6. அது என்ன மாலன்?நாராயணன் என்னும் திருனாமத்தின் புனை பெயர்…..
    சொந்தமாக மருந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கி நடத்த தெரியாத நாராயனன்…மக்களுக்கு எப்படி தொழில் தொடங்குவது என்று உபடேசம்…..

  7. இந்துக்களோ இல்லை முசுலீம்களோ உழைக்கும் மக்கள் என்ற வகையில் அணிதிரண்டு போராடுவதன் மூலமும், அந்த போராட்டத்தின் மூலம் இந்துமதவெறியை வீழ்த்துவதே இத்தகைய குண்டுவெடிப்புகளிலிருந்து மக்களை காக்கும்.

    இந்த முயற்சி நடக்க கூடாது என்பதற்கே தமிழ் ஊடகங்களும், மாலன் போன்ற அறிஞர்களும்தான் இசுலாமிய பயங்கரவாதம் குறித்து தமிழ் மக்களுக்கு வகுப்பு எடுக்கிறார்கள். விதிகளையும், நீதிகளையும் வகுக்கிறார்கள்.

    • இந்து மதவெறி, முஸ்லீம் மதவெறி, கிறித்துவ மதவெறி, சீக்கிய, புத்த, சமண, சைவ, வைணவ என அத்தனை மதவெறிகளும் ஒழிந்து இவ்வுலகம் அன்பினால் மட்டுமே என்றைக்கு ஆட்சி செய்யப்படுகிறதோ அதுவே அனைவருக்குமான நன்னாள்!

  8. சரியான ஆதாரங்கள் எதுவுமின்றி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஒரு சமூகம் மீது பழியைப் போடுபவர்கள், அவர்கள் அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், காவல்துறையினர், என யாராக இருப்பினும் பெரிய தவறு செய்கிறார்கள். இப்படிப் பழி சொல்பவர்களின் வக்கிரத்தினை சிறுபான்மைச் சமூகங்கள் காலம் காலமாக உலகெங்கும் அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர். உதாரணத்திற்கு இந்தியாவில் முஸ்லிம்கள், பாகிஸ்தானில் இந்துக்கள், முகம்மதியர்கள், மற்றும் ஷியா முஸ்லிம்கள், இலங்கையில் தமிழர்கள், என சிறுபான்மையினர் பாதிக்கப்படும் தேசங்களின் பட்டியல் மிக மிக நீண்டது. ஏனோ சிறுபான்மையினரின் வலிகளை பெரும்பான்மை சமூகத்தில் உள்ள பலரும் புரிந்துகொள்வதில்லை.

  9. //குண்டு என்றால் அது முசுலீம்தான் வைக்க வேண்டுமென்று நம்பாதீர்கள் என அசீமனாந்தாவே இப்படி ஆதார பூர்வமாக கூறிவிட்ட பின்னரும் ஊடகங்கள் இப்படித்தான் இந்துமதவெறியுடன் எழுதுகின்றன.//

    சரியாக சொன்னீர்கள். ஊடக விபச்சாரம் செய்யும் மாமா-மாமி பத்திரிக்கைகளுக்கு பார்பதெல்லாம் மஞ்சலாகதான் தெரியும்

    • சரி அய்யா உண்மையில் குண்டு வச்ச முசுலீம்களை கூட தண்டிக்க கூடாது என்று சொல்வது எந்த வகையான கம்யூனிசம்?

  10. தேர்தல் நேரத்தில் வைக்கப்படும் குண்டு பா.ஜ.கவுக்கு தான் உதவும். இதனை கூட உணர முடியாமலா இஸ்லாமிய பயங்கரவாதிகள் இருப்பார்கள் என்பதே சிந்திக்கும் இஸ்லாமிய நண்பர்களின் வாதமாக உள்ளது. இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு உண்மையிலேயே இப்படி ஒரு நல்லெண்ணம் இருக்குமானால், அவர்கள் தேர்தல் நேரம் என்றில்லை, எப்போதுமே குண்டு வைக்கும் முடிவை எடுக்க மாட்டார்கள்.

    தேர்தலற்ற பொழுதுகளிலே சிறுபான்மை மக்களை அதிகம் துன்புறுத்துபவர்கள், இந்து மதவெறியர்கள். தேர்தல் நேரத்தில் தம்மை புனிதமானவர்களாக காட்டிக் கொள்ளவே அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். தேர்தல் நேரத்தில் மதவெறியாக எதையும் பேசி மாட்டிக் கொள்பவர்கள், மதச்சார்பற்ற கட்சிகளில் தஞ்சம் புகுந்திருக்கும் தீவிர இஸ்லாமியர்களே. தாம் முன்னே களப்பணியாற்றிய மதவெறி நடவடிக்கைகளுக்கான அறுவடை திருநாளாக இந்து மதவெறியர்கள் தேர்தலை பார்க்கிறார்கள்.

    இதற்கு பல காரணங்கள் இருக்கக்கூடும். அதில் ஒன்றாக கருத முடிவது, தேர்தலில் தனது இயல்பான ஆதரவு தளத்தையும் மீறி பா.ஜ.க வாக்குகளை அள்ள துடிக்கிறது. இந்த நேரத்தில் பா.ஜ.க செய்யும் சிறிய மீறலையும் ஊடகங்கள் விழிப்பாக இருந்து பா.ஜ.கவுக்கு நினைவுபடுத்தும். இது பொது வாசகர் ஒருவருக்கு ஏதோ பா.ஜ.கவை கண்டிப்பதாக இருக்கும். ஆனால், தந்திரமான மொழியில் பாஜகவுக்கு செய்யப்படும் அறிவுரையாகவே இருக்கும்.

    • Sukdev,

      “தேர்தல் நேரத்தில் வைக்கப்படும் குண்டு பா.ஜ.கவுக்கு தான் உதவும். இதனை கூட உணர முடியாமலா இஸ்லாமிய பயங்கரவாதிகள் இருப்பார்கள் என்பதே சிந்திக்கும் இஸ்லாமிய நண்பர்களின் வாதமாக உள்ளது.”

      [1]என்ற கருத்துடன் வினவு கட்டுரையோ அல்லது வேறு எவராவது இங்கு பின்னூட்டங்கள் எழுதியுள்ளாகளா என்ன ?

      [2] கட்டுரையீன் நோக்கம் ஆதாரம் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட சமுகத்தை பயங்கரவாதிகளாக சித்தரிக்காதீர்கள் என்பது தானே ?

      [3]முன்பு ஒருமுறை கிறிஸ்டியன் மக்கள் நடத்தும் வழிபாடுகள் தான் இந்து மத வெறிக்கு அனுகூலமாக உள்ளது என்று உள் நோக்கத்துடன் எழுதீனிர்கள்!

      [4] தற்போது

      “நீங்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு உண்மையிலேயே இப்படி ஒரு நல்லெண்ணம் இருக்குமானால், அவர்கள் தேர்தல் நேரம் என்றில்லை, எப்போதுமே குண்டு வைக்கும் முடிவை எடுக்க மாட்டார்கள்”

      என்று கூறுவதன் உள் அர்த்தம் என்ன ? சென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்புகளை நீகழ்த்தியது இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்பது தானே ? ஆதாரம் இருக்கா ?

      //தேர்தல் நேரத்தில் வைக்கப்படும் குண்டு பா.ஜ.கவுக்கு தான் உதவும். இதனை கூட உணர முடியாமலா இஸ்லாமிய பயங்கரவாதிகள் இருப்பார்கள் என்பதே சிந்திக்கும் இஸ்லாமிய நண்பர்களின் வாதமாக உள்ளது. இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு உண்மையிலேயே இப்படி ஒரு நல்லெண்ணம் இருக்குமானால், அவர்கள் தேர்தல் நேரம் என்றில்லை, எப்போதுமே குண்டு வைக்கும் முடிவை எடுக்க மாட்டார்கள். //

    • Sukdev,

      [1]தேர்தல் நேரத்தில் வைக்கப்படும் குண்டு பா.ஜ.கவுக்கு தான் உதவும். மேலும் 6 கட்ட தேர்தல் post poll secret surveys பாஜக வுக்கு மிக்க நம்பிக்கை அளிக்காத நிலையில் யார் நலனுக்காக யார் குண்டு வெடிப்பு பயங்கரவாதத்தை நிகழ்த்தீ இருக்க முடியும் என்று நம்மால் உணர முடியும். மீதி கட்ட தேர்தலில் பாஜக வெற்றி பெற RAW or IB யில் உள்ள பாஜக வுக்கு ஆதரவான ஆட்கள் இக் குண்டு வெடிப்பு பயங்கரவாதத்தை நிகழ்த்தீ இருக்க முடியும்! அல்லது RSS தீவீரவாதிகள் கூட இக் குண்டு வெடிப்பு பயங்கரவாதத்தை நிகழ்த்தீ இருக்க முடியும்!

      [2]குண்டு வெடிப்பால் ஆதாயம் பா.ஜ.கவுக்கு மட்டுமே இருக்கும் போது “இஸ்லாமிய பயங்கரவாதிகள்” என்று நீங்கள் உண்மைக்கு மாறாக கூறுவது ஏன் ?

      //“தேர்தல் நேரத்தில் வைக்கப்படும் குண்டு பா.ஜ.கவுக்கு தான் உதவும். இதனை கூட உணர முடியாமலா இஸ்லாமிய பயங்கரவாதிகள் இருப்பார்கள் என்பதே சிந்திக்கும் இஸ்லாமிய நண்பர்களின் வாதமாக உள்ளது.”//

    • Sukdev,

      இத் தேர்தல் கூட்டங்களில் “மோடியை ஆதரிக்காவீட்டால் பாக்கிஸ்தான் போ” என்று வன்மத்துடன் கூறியது யார் ?

      இந்து மதவெறியர்களா ?

      இல்லை மதச்சார்பற்ற கட்சிகளில் தஞ்சம் புகுந்திருக்கும் தீவிர இஸ்லாமியர்களா ?

      //தேர்தலற்ற பொழுதுகளிலே சிறுபான்மை மக்களை அதிகம் துன்புறுத்துபவர்கள், இந்து மதவெறியர்கள். தேர்தல் நேரத்தில் தம்மை புனிதமானவர்களாக காட்டிக் கொள்ளவே அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். தேர்தல் நேரத்தில் மதவெறியாக எதையும் பேசி மாட்டிக் கொள்பவர்கள், மதச்சார்பற்ற கட்சிகளில் தஞ்சம் புகுந்திருக்கும் தீவிர இஸ்லாமியர்களே. தாம் முன்னே களப்பணியாற்றிய மதவெறி நடவடிக்கைகளுக்கான அறுவடை திருநாளாக இந்து மதவெறியர்கள் தேர்தலை பார்க்கிறார்கள்.//

  11. சௌதி அண்மையில் நாத்திகர்களை எல்லாம் பயங்கரவாதிகள் என சட்டத்தை இயற்றியதுதாம். நிங்க ஏன் அங்க போகக்கூடாது

    • மன்னிக்கவும் R Chandrasekaran!
      உங்கள் பெயரையும் RSS பூசாரிகள் பட்டியளில் சேர்க்க மறந்தமைக்காக மன்னிக்கவும் R Chandrasekaran!

      • எதல வேணாலும் சேருங்க சரவணா.. நா செப்புன செய்தி உண்மை இல்ல பொய் ரெண்டுல ஒண்ணு செப்புங்கண்ணா…

    • We are ready to go anywhere in the world, but in India we have lot of rubbish and garbage came from Kyber pass (aryans), so we have to be in India till to remove or destroy it.

      • Nobody will take you anywhere,you ll get racially abused in every single muslim country and you are not good enough to be in a good muslim country like malaysia/indonesia.

  12. Sukdev,

    “பா.ஜ.க செய்யும் சிறிய மீறலையும் ஊடகங்கள் விழிப்பாக இருந்து பா.ஜ.கவுக்கு நினைவுபடுத்தும். இது பொது வாசகர் ஒருவருக்கு ஏதோ பா.ஜ.கவை கண்டிப்பதாக இருக்கும். ஆனால், தந்திரமான மொழியில் பாஜகவுக்கு செய்யப்படும் அறிவுரையாகவே இருக்கும்”

    என்று மென்மையாக வீமர்சனம் செய்வதன் உள் நோக்கம் என்ன ?

    //இந்த நேரத்தில் பா.ஜ.க செய்யும் சிறிய மீறலையும் ஊடகங்கள் விழிப்பாக இருந்து பா.ஜ.கவுக்கு நினைவுபடுத்தும். இது பொது வாசகர் ஒருவருக்கு ஏதோ பா.ஜ.கவை கண்டிப்பதாக இருக்கும். ஆனால், தந்திரமான மொழியில் பாஜகவுக்கு செய்யப்படும் அறிவுரையாகவே இருக்கும்.//

    • Saravanan

      //தேர்தல் நேரத்தில் வைக்கப்படும் குண்டு பா.ஜ.கவுக்கு தான் உதவும். இதனை கூட உணர முடியாமலா இஸ்லாமிய பயங்கரவாதிகள் இருப்பார்கள் என்பதே சிந்திக்கும் இஸ்லாமிய நண்பர்களின் வாதமாக உள்ளது.//

      ஆளூர் ஷாநவாஸின் கருத்து இது தான். சென்ட்ரல் ரயில் குண்டு வெடிப்பை இஸ்லாமிய பயங்கரவாதிகள் தான் செய்திருப்பார்கள் என்ற முன் அனுமானம் எனக்கு இல்லை. வினவு குறிப்பிட்டுள்ளது போல இந்து பயங்கரவாதிகள் அல்லது இஸ்லாமிய பயங்கரவாதிகளில் எவரேனும் ஒருவர் செய்திருக்கக்கூடும் என்பதில் நான் முரண்படவில்லை. கட்டுரையின் மையமான விஷயத்திலும் எனக்கு முரண் இல்லை. எனது கருத்தாக தோன்றியதை மட்டுமே பகிர்ந்தேன்.

      எனது முந்தைய பின்னூட்டம் ஒன்றில் இந்து பயங்கரவாதம் வளர கிறிஸ்தவ மக்களின் வழிபாடு காரணம் என்று நான் குறிப்பிட்டுள்ளதாக கூறியிருக்கிறீர்கள். நான் பொதுவான கிறிஸ்தவ வழிபாட்டு முறையை அதில் குறிப்பிடவில்லை. பெந்திகோஸ்த் வழிபாட்டு முறையில் இருக்கும் பிரச்சினையை மட்டுமே சொன்னேன்.

      சிந்திக்கும் இஸ்லாமிய நண்பர்களிடம் ஆர்.எஸ்.எஸ் பற்றிய அச்சம் இருக்கின்ற அளவுக்கு இஸ்லாமிய பயங்கரவாதிகள் தழைக்க சித்தாந்த வெதுவெதுப்பை வழங்கும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், இஸ்லாமிய அமைப்புகள் குறித்து எச்சரிக்கை உணர்வு இருப்பதில்லை. இந்த இஸ்லாமிய அமைப்புகள்/ மார்க்க அறிஞர்கள் பயங்கரவாதிகளை நேரடியாக உற்பத்தி செய்வதில்லை. ஆனால், அவர்கள் உருவாவதற்கான சித்தாந்த அடிப்படையை அமைக்கிறார்கள்.

      இந்து மதவெறியர்களுக்கு தேர்தல் நேரத்தில் ஆவேச பேச்சுக்கள் தேவையில்லை என்று குறிப்பிட்டதை வைத்து அவர்கள் நல்லவர்கள் என்று நான் சொன்னதாக நீங்கள் புரிந்து கொள்வது தவறு. மிக மோசமான சந்தர்ப்பவாதிகள் என்பது தானே நான் சொன்னதன் பொருள். இதில் எங்கே இருக்கிறது மென்மையான விமர்சனம். ‘மோடியை விமர்சிப்பவர்கள் பாகிஸ்தானுக்கு போங்கள்’ என்று சொன்ன கிரிராஜ் சிங் மற்றும் இந்துக்கள் வாழும் பகுதியில் சொத்து வாங்கிய இஸ்லாமியரை அங்கிருந்து வெளியேற உத்தரவிட்ட பிரவீண் தொகாடியா, ஜாட் விவசாயிகளிடம் முஸ்லிம்கள் மீதுள்ள வஞ்சத்தை இந்த தேர்தலில் தீர்த்து விடுங்கள் என்று கூறிய அமித் ஷா போன்றோரை மோடியே கண்டிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதா, இல்லையா?

      டைம்ஸ் நவ், தி இந்து மாதிரியான ஊடகங்கள் இவர்களை fringe elements என்று குறிப்பிட்டு ஜெட்லி, ரவி சங்கர் பிரசாத் போன்ற நல்லவர்களிடம் நியாயம் பேசுவார்கள். அந்த fringe elements வேறு. பா.ஜ.க வேறல்ல. ஒரே முகம்; வேறுவேறு முகமூடிகள் என்பதே எனது முந்தைய பின்னூட்டத்தின் இறுதி வரிகளின் பொருள்.

      • Sukdev,

        “இந்து பயங்கரவாதம் வளர கிறிஸ்தவ மக்களின் வழிபாடு முறையில் இருக்கும் பிரச்சினை காரணம் அல்ல , ஆனால் பெந்திகோஸ்த் வழிபாட்டு முறையில் இருக்கும் பிரச்சினையை காரணம்”

        இது தானே உங்கள் கருத்து ?

        [1]பிறப்பால் இந்துக்களான நாம் செய்யாத வழிபாடுகளா! இந்துக்களீன் கோவில் திருவீழாக்கள், பூசை முறைகள்,கடா வெட்டு ஆகியவை சமுக மயம் ஆக்கபட்டு உள்ள போது, பெந்திகோஸ்த் வழிபாட்டு முறையில் என்ன தவறு கண்டீர்கள் ? பெந்திகோஸ்த் வழிபாட்டு முறை இந்து தீவீரவாதத்தை வளர்க்கும் என்று கூறுவது அறிவுக்கு எதிராக உள்ளது !

        [2] மேலும் ம க இ க போன்ற அமைப்புகள் அனைத்து சாதி இந்து மக்களீன் வழிபாட்டு உரிமைக்காக திருவரங்கம் கருவறை நூழைவு போராட்டம் , சிதம்பரம் கோவில் தமிழ் வழிபாட்டு உரிமைக்கான போராட்டம் நடத்தும் போது, அப் போரட்டங்கள் மிக சரியானவையாக இருக்கும் போது, சிறுபான்மை மக்களீன் பெந்திகோஸ்த் வழிபாட்டு முறையில் என்ன தவறு கண்டீர்கள் ?

        //எனது முந்தைய பின்னூட்டம் ஒன்றில் இந்து பயங்கரவாதம் வளர கிறிஸ்தவ மக்களின் வழிபாடு காரணம் என்று நான் குறிப்பிட்டுள்ளதாக கூறியிருக்கிறீர்கள். நான் பொதுவான கிறிஸ்தவ வழிபாட்டு முறையை அதில் குறிப்பிடவில்லை. பெந்திகோஸ்த் வழிபாட்டு முறையில் இருக்கும் பிரச்சினையை மட்டுமே சொன்னேன். //

      • Sukdev,

        [1]உங்கள் கருத்து, RSS-BJP யீன் விஜய பாரதம் என்ற பத்திரிக்கையை படிப்பது போன்றே உள்ளது.
        [2]இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் செய்யும் சித்தாந்த வெதுவெதுப்பு தான் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தழைக்க காரணம் என்றால் இன்று அனைத்து இஸ்லாமிய மக்களும் பயங்கரவாதிகளாக மாறி இருக்க வேண்டுமே ! நடைமுறை அப்படியா உள்ளது ? இஸ்லாமிய மக்கள் இந்து மதவாதத்துக்கு எதிராக ம க இ க போன்ற புரட்சிகர அமைப்புகளுடன் இணையும் இத் தருணத்தில், அவர்களை பயங்கரவாதிகளாக நீங்கள் சிததரிப்பது தவறு.

        //சிந்திக்கும் இஸ்லாமிய நண்பர்களிடம் ஆர்.எஸ்.எஸ் பற்றிய அச்சம் இருக்கின்ற அளவுக்கு இஸ்லாமிய பயங்கரவாதிகள் தழைக்க சித்தாந்த வெதுவெதுப்பை வழங்கும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், இஸ்லாமிய அமைப்புகள் குறித்து எச்சரிக்கை உணர்வு இருப்பதில்லை. இந்த இஸ்லாமிய அமைப்புகள்/ மார்க்க அறிஞர்கள் பயங்கரவாதிகளை நேரடியாக உற்பத்தி செய்வதில்லை. ஆனால், அவர்கள் உருவாவதற்கான சித்தாந்த அடிப்படையை அமைக்கிறார்கள். //

      • மோடி இவர்களை கண்டிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதை வைத்து வினவு வாசகர்களுக்கு நீங்கள் கூறும் கருத்து என்ன ?

        //இதில் எங்கே இருக்கிறது மென்மையான விமர்சனம். ‘மோடியை விமர்சிப்பவர்கள் பாகிஸ்தானுக்கு போங்கள்’ என்று சொன்ன கிரிராஜ் சிங் மற்றும் இந்துக்கள் வாழும் பகுதியில் சொத்து வாங்கிய இஸ்லாமியரை அங்கிருந்து வெளியேற உத்தரவிட்ட பிரவீண் தொகாடியா, ஜாட் விவசாயிகளிடம் முஸ்லிம்கள் மீதுள்ள வஞ்சத்தை இந்த தேர்தலில் தீர்த்து விடுங்கள் என்று கூறிய அமித் ஷா போன்றோரை மோடியே கண்டிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதா, இல்லையா?
        //

      • sukdav,

        [1]இது எல்லாம் தாங்கள் கூறிய பொன்மொழிகள் தானே ?
        [2]இது தான் சுக்தேவ் அவர்களீன் மத சார்பற்ற தன்மையோ ?
        [3]நம் இந்து மத மக்கள், பொது இடங்களில் கோவில் திருவிழா , மற்றும் கடவுள் சார் நடவடிக்கைகளில் ஈடுபடும்போது சிறுபான்மை மக்களுக்கு அவ் உரிமையை சுக்தேவ் மறுப்பதன் உள்நோக்கம் என்ன ?

        sukdev//முஸ்லிம் மக்கள் சிலர் அந்த கூட்ட நெரிசலின் மத்தியிலும் வட்டம் அமைத்து கைகளை விரித்து நமாஸ் செய்து கொண்டிருந்தனர். மத விவகாரத்தில் சற்று நீக்கு போக்குடன் இருக்கும் மக்களை பொறாமை கொள்ளவும், தமது மத உணர்வின் வீழ்ச்சி குறித்த குற்ற மனப்பான்மையை ஏற்படுத்தும் வண்ணம் அவர்கள் நடவடிக்கை இருந்தது. //

        sukdev//பெந்திகொஸ்து கூட்டத்தை பார்த்தால் பயம் வருகிறது. சும்மா இருக்கிற ‘இந்துக்களை’ ஆர்.எஸ்.எஸின் ஷாகாக்களுக்கு இவர்கள் கத்தல் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நெட்டித் தள்ளுகின்றன. //

        sukdev//முஸ்லிம் மக்கள் சிலர் அந்த கூட்ட நெரிசலின் மத்தியிலும் வட்டம் அமைத்து கைகளை விரித்து நமாஸ் செய்து கொண்டிருந்தனர்//

        • Saravanan,

          என்னை இந்துத்துவவாதி என்று சொன்னால் ஹரிகுமார் போன்றார் விலா நோக சிரிப்பார்கள். இஸ்லாமிய மதவாதிகளின் பேச்சுக்களை கேட்டு அனைவரும் பயங்கரவாதிகளாக மாறி விட்டார்களா என்று கேட்கிறீர்கள். நரம்புகள் புடைக்க கர்ச்சித்து, முட்டி மடித்து எச்சரிக்கை விடுத்து பேசும் சீமானின் உரைகளை கேட்டு தமிழர்கள் அனைவரும் நியோ-நாஜிகளாக மாறி விட்டார்களா என்றும் கேட்கலாம் தானே? மக்கள் தங்கள் சொந்த வாழ்க்கை தேவைகள் நிமித்தம் இந்த மதவாதிகளையும்/ இனவாதிகளையும் முறியடித்து வருகிறார்கள். பி.ஜெ யின் கூட்டத்துக்கு போய் வந்த அனுபவத்தை தோழர்கள் பதிவு செய்திருப்பார்கள். படிக்கவும். தாலிபான்களை மிகவும் வெளிப்படையாக ஆதரிப்பவர்கள் இந்த இஸ்லாமியக் குழுக்கள். மதவாதத்தையும், மதவெறியையும் பிரிக்கும் கோடு மெலிதானது.

          பெந்திகொஸ்து என்றில்லை. மையநீரோட்ட கிறிஸ்தவ வழிபாட்டு முறையே கூட பெந்திகொஸ்துகளுக்கு போட்டியாக தான் இன்று நடத்தப்படுகின்றன. விநாயகன் சிலையை இந்து முன்னணி தெருவில் இறக்கி இழுப்பது போல கடந்த சில ஆண்டுகளாக கிறிஸ்மஸ் காலத்தில் கிறித்தவ குடில்களை பெரும் பொருட்செலவில் தெருக்களில் அமைத்து சூழலை மாசுபடுத்தி வருகிறார்கள்.

          இடித்த இடத்தில் பாபர் மசூதியை கட்டிக்கொடு என்று கேட்பது ஜனநாயக கோரிக்கை. ஆனால், இந்து மதவெறியர்களுக்கு போட்டியாக இவர்கள் ஈடுபடும் மதவாத நடவடிக்கைகளை ஜனநாயக உரிமையாக பாவிப்பது அறியாமை. நீங்கள் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு அதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்பதில் அது வெளிப்படுகிறது. உண்மையில், இந்துத்துவவாதிகள் விரும்பும் விளையாட்டை தான் இவர்கள் ஆடுகிறார்களே தவிர வேறல்ல.

          மட்டையடியாக கருத்துக்களை வைப்பவர்களிடம் ஒரு நேர்மை இருக்கும். ஆனால், அது உங்களிடம் குறைபடுகிறது. எனது கருத்துக்களை அழகாக வெட்டித் திரித்து உங்கள் நோக்கத்துக்கு பயன்படுத்துகிறீர்கள். எனவே இதுவே உங்களுக்கான எனது கடைசி பதில்.

          • Sukdev,

            “நரம்புகள் புடைக்க கர்ச்சித்து, முட்டி மடித்து எச்சரிக்கை விடுத்து பேசும் சீமானின் உரைகளை கேட்டு தமிழர்கள் அனைவரும் நியோ-நாஜிகளாக மாறி விட்டார்களா என்றும் கேட்கலாம் தானே?”

            இந்த கேள்வியை……

            “சிந்திக்கும் இஸ்லாமிய நண்பர்களிடம் ஆர்.எஸ்.எஸ் பற்றிய அச்சம் இருக்கின்ற அளவுக்கு இஸ்லாமிய பயங்கரவாதிகள் தழைக்க சித்தாந்த வெதுவெதுப்பை வழங்கும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், இஸ்லாமிய அமைப்புகள் குறித்து எச்சரிக்கை உணர்வு இருப்பதில்லை. இந்த இஸ்லாமிய அமைப்புகள்/ மார்க்க அறிஞர்கள் பயங்கரவாதிகளை நேரடியாக உற்பத்தி செய்வதில்லை. ஆனால், அவர்கள் உருவாவதற்கான சித்தாந்த அடிப்படையை அமைக்கிறார்கள்”

            என்று போசும் உங்களை பார்த்து நான் அல்லவா கேட்க வேண்டும் !. 🙂

          • Sukdev,

            ஏன் உங்களுக்குள் இந்த கருத்து முரண்பாடு?

            sukdev://எனது முந்தைய பின்னூட்டம் ஒன்றில் இந்து பயங்கரவாதம் வளர கிறிஸ்தவ மக்களின் வழிபாடு காரணம் என்று நான் குறிப்பிட்டுள்ளதாக கூறியிருக்கிறீர்கள். நான் பொதுவான கிறிஸ்தவ வழிபாட்டு முறையை அதில் குறிப்பிடவில்லை. பெந்திகோஸ்த் வழிபாட்டு முறையில் இருக்கும் பிரச்சினையை மட்டுமே சொன்னேன். //

            sukdev://பெந்திகொஸ்து என்றில்லை. மையநீரோட்ட கிறிஸ்தவ வழிபாட்டு முறையே கூட பெந்திகொஸ்துகளுக்கு போட்டியாக தான் இன்று நடத்தப்படுகின்றன. விநாயகன் சிலையை இந்து முன்னணி தெருவில் இறக்கி இழுப்பது போல கடந்த சில ஆண்டுகளாக கிறிஸ்மஸ் காலத்தில் கிறித்தவ குடில்களை பெரும் பொருட்செலவில் தெருக்களில் அமைத்து சூழலை மாசுபடுத்தி வருகிறார்கள்.//

          • Sukdev,

            எந்த இஸ்லாமியக் குழுக்கள்?
            மதவாதத்தையும், மதவெறியையும் பிரிக்கும் கோடு மெலிதானது என்பதை மட்டையடீக்காமல் வீளக்கவும் !

            //பி.ஜெ யின் கூட்டத்துக்கு போய் வந்த அனுபவத்தை தோழர்கள் பதிவு செய்திருப்பார்கள். படிக்கவும். தாலிபான்களை மிகவும் வெளிப்படையாக ஆதரிப்பவர்கள் இந்த இஸ்லாமியக் குழுக்கள். மதவாதத்தையும், மதவெறியையும் பிரிக்கும் கோடு மெலிதானது.//

            இந்துக்களான நாம் செய்யாத வழிபாடுகளா! இந்துக்களீன் மாரியம்மன் கோவில் திருவீழாக்கள், பூசை முறைகள்,கடா வெட்டு ஆகியவை சமுக மயம் ஆக்கபட்டு உள்ள போது, பெந்திகோஸ்த் வழிபாட்டு முறையில்,கிறிஸ்தவ மக்களின் வழிபாடு முறையில் என்ன தவறு கண்டீர்கள் ?
            மாரியம்மன் கோவில் தேர் தீருவிழா ,மாதா கோவில் தேர் தீருவிழா. இவற்றில் என்ன தவறு கண்டிர்கள் ? பொரும்பான்மை இந்துக்கள் நாம் கொண்டாடும் போது மத சிறுபான்மை மக்களும் கொண்டாலாம் அல்லவா ?

            //இடித்த இடத்தில் பாபர் மசூதியை கட்டிக்கொடு என்று கேட்பது ஜனநாயக கோரிக்கை. ஆனால், இந்து மதவெறியர்களுக்கு போட்டியாக இவர்கள் ஈடுபடும் மதவாத நடவடிக்கைகளை ஜனநாயக உரிமையாக பாவிப்பது அறியாமை. நீங்கள் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு அதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்பதில் அது வெளிப்படுகிறது. உண்மையில், இந்துத்துவவாதிகள் விரும்பும் விளையாட்டை தான் இவர்கள் ஆடுகிறார்களே தவிர வேறல்ல. //

            நீங்கள் வெளியீடும் உங்கள் தவறான கருத்துகளை உங்களால் ஞாயப்படுத்த முடியாததால் வரும் மனச்சோர்வு இது ! உங்கள் பதில் கருத்துகளை வெளியீடுவ்து அல்லது வெளியீடாதது உங்கள் உரிமை. ஆனால் உங்கள் திரிபுவாத கருத்துகளை அம்பலம் செய்வது எமது கடமை !

            //மட்டையடியாக கருத்துக்களை வைப்பவர்களிடம் ஒரு நேர்மை இருக்கும். ஆனால், அது உங்களிடம் குறைபடுகிறது. எனது கருத்துக்களை அழகாக வெட்டித் திரித்து உங்கள் நோக்கத்துக்கு பயன்படுத்துகிறீர்கள். எனவே இதுவே உங்களுக்கான எனது கடைசி பதில்.//

  13. வினவு உங்கள் மண்டையை மறைத்த நீங்கள் உங்கள் கொண்டையை மறந்ததேன் ?

    நைஜீரியாவில் 200 சிறுமிகள் போகோ ஹராம் என்ற தீவிரவாதிகள் கடத்தி கொண்டு அடைத்து வைத்துள்ளர்கள்

    இந்த தீவிரவாத அமைப்பு சரியத் சட்டத்தை நாட்டில் கொண்டு வரவேண்டும் என்பதற்கு எப்படி செய்துள்ளதாக சொல்கிறார்கள்.

    சிலமாதங்களுக்கு முன் கென்யாவில் மாலில் புகுந்து தீவிரவாதிகள் முஸ்லிம்களை வெளியேற சொல்லிவிட்டு
    முஸ்லிம் அல்லாதவர்களை சுட்டு கொன்றார்கள்

    அதுவும் முகமது நபியின் தாயார் பெயர் தெரியதாதால்
    ஒரு அப்பாவி இந்தியர் சுட்டு கொல்லப்பட்டார்

    ஹிந்து மதவெறி என்று கூவும் வினவு மேலே சொன்ன இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் பற்றி ஏதேனும் செய்திகள் போட்டதுண்டா ?????

    • போகோ ஹராமின் பின்னணியில் அமெரிக்காவின் கரங்கள்?
      அபூஜா:நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகளை கடத்திச் சென்ற போகோ ஹராம் போராளிகள், அமெரிக்காவின் உருவாக்கம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நைஜீரிய செயற்பாட்டாளர்களும், அரசியல் சிந்தனையாளர்களும் இந்த சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.
      நாட்டின் வடக்கு பகுதியில் போகோ ஹராம் போராளிகள் நடத்தும் தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாகவும், நாட்டில் ஸ்திரத்த்னமையற்ற சூழலை உருவாக்கி ஆக்கிரமிப்பிற்கான முயற்சி நடப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

      எரிசக்தி உற்பத்தியில் உலகில் நைஜீரியா 7-வது இடத்தில் உள்ளது. ஆப்பிரிக்காவில் முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவிற்கு எரிபொருள் வழங்குவதில் நைஜீரியா உலகில் 5-வது இடத்தை வகிக்கிறது. நாட்டின் தெற்கு பகுதியில் தற்போது எரிபொருள் உற்பத்தி நடந்தாலும், வடக்கு பகுதியிலும் பெருமளவில் எரிபொருள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்குதான் போகோ ஹராம் போராளிகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். மேலும் 170 மில்லியன் அதாவது 17 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நைஜீரியா ஆப்பிக்காவில் அமெரிக்காவின் மிகப்பெரிய சந்தையாகும். நைஜீரியாவின் எரிபொருள் வளம், உற்பத்தி மீது நோட்டமிட்டு அந்நாட்டை மீண்டும் காலனியாதிக்க நாடாக மாற்றும் முயற்சியை போகோ ஹராம் போராளிகள் மூலம் அமெரிக்கா நடத்துவதாக செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

      கடத்திச் செல்லப்பட்ட மாணவிகளை மீட்க அமெரிக்காவின் உதவியை நாடியுள்ள நைஜீரியா அதிபர், ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு நாட்டில் நுழையும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். 2005-ஆம் ஆண்டு போகோ ஹராம் உருவாக்கப்பட்ட காலக்கட்டத்தில் அமெரிக்க இண்டலிஜன்ஸ் தயாரித்த அறிக்கியில் 2015-ஆம் ஆண்டு நைஜீரியா தகர்ந்துபோகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. போகோ ஹராம் தாக்குதல்களின் பின்னால் அமெரிக்கா இருப்பதை உறுதிச் செய்வதே இவ்வறிக்கை என்று செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
      செய்தி:இஸ்லாம் ஆன்லைவ்.

      – See more at: http://www.thoothuonline.com/archives/65760#sthash.bZYmuSqK.dpuf

      • After all the analysis, they will end in USA. People love conspiracy theories.

        It is all US fault. And the people who are against the western education(Boko haram) are basically doing it for money. They are all innocent poor muslims.

        LOL..

  14. இந்த நாட்டில் எங்கு குண்டு வெடித்தாலும் அது முஸ்லீம் பயங்கரவாதிகளின் வேலைதான் என்று எண்ணும் மக்களின் மனநிலை மாறவேண்டும். இந்த தேசத்தில் அரசியல் கட்சிகள் இருக்கும் வரை அவர்களின் சுயலாபத்திற்காக அவர்களே நிகழ்த்தும் இது போன்ற குண்டு வெடிப்புகள் தொடரத்தான் செய்யும்.

  15. இலங்கையில் தமிழ் முஸ்லீம்களா
    கிலோ என்னவிலை
    இலங்கையிலுள்ள யாரும் அவ்வாறு கூறுவதில்லை.

    • இலங்கையில் தமிழ் முஸ்லீம்கள் கிடையாது. அவர்களை அப்படி அழைத்தால் அடி தான் விழும்.. இலங்கையில் தமிழ் பேசும் முஸ்லீம்கள் தாங்கள் எல்லோரும் அரபுக்களின் வழி வந்தவர்கள் என்று ‘நிரூபிக்க’ வரலாறைத் திரி, திரி என்று திரித்துப் படாத பாடு படும் பரிதாபத்தை, வினவில் கட்டுரை எழுதுகிறவர்கள் பார்த்ததுமில்லை அறியவும் மாட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் அரபுக்களோ தமிழ் பேசும் முஸ்லீம்களை அரபுக்களாக மட்டுமல்ல, மனிதர்களாகக் கூட மதிப்பதில்லை என்கிறார்கள் மத்திய கிழக்கிற்கு வேலை தேடிப் போனவர்கள். 🙂

  16. வினவு மொக்கைங்களா.. மாலன் பார்ப்பனர் கிடையாது. சும்மா ஏசி ரூம் ல உக்காந்து எதாவது மொக்க கட்டுரை எழுதி யாரையாவது கோத்து விட வேண்டியது… குண்டு வெச்சவன் யாருன்னே தெரியாம வக்காலத்து வாங்கறியே அவங்கள விட ஆபத்தானவன் உங்கள மாதிரி ஓண்ணுக்கும் உதவாத முற்போக்கு மார்க்ஸிஸ்டு குப்பைங்க தான்…

    • இந்த ‘karthik’ நான் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு வினவு கோட்பாடுகளுடன் ஒத்திசைவு இருக்கிற அதேநேரம் மாறுபட்ட கருத்துகள் உள்ளன. ஆனால் அதற்காக இதுபோல தரம் தாழ்ந்து எழுதமாட்டேன்.

      • Dear Karthik,

        I am only including the name karthik in my comment 21 who wrote comment 17.
        I am extremely sorry for not clearly mentioning him in my comment 21.

  17. வினவு ஒரு துலுக்கரின் பத்திரிக்கை. இதில் துலுக்கர்களுக்கு ஆதரவான கருத்துக்களைத்தவிர வேறு எதனை எதிர்பார்க்க இயலும்? இங்கே, இந்துக்களும் அல்லது இந்துக்கள் பெயர் தாங்கிய துலுக்கர்களும் இதுபோன்ற துலுக்க தீவிரவாதிப்பயலுகளுக்கு ஆதரவுக்குரல் கொடுத்து பேசிக்கொண்டிருக்கும்வரை இந்தியா நிம்மதியற்ற நிலையில்தான் இருக்கப்போகிறது 🙁

    கடைசி இந்துவும் ஒரு துலுக்கரால் வெட்டுண்டு சாகும்வரை நடுநிலை ( இந்து ) நாய்கள் அனைத்தும் திருந்தாது.

    பி.கு.: நடுநிலை நாய்கள் என்ற சொற்களை தவறான பன்னாடைகளுக்கு உபயோகித்துவிட்டேன். அருள்கூர்ந்து நாய் இனம் எனை மன்னிக்க வேண்டிக்கொள்கிறேன்.

    • [1]ராம் போன்ற மனித இரத்த-கொலை வெறி பிடித்த RSS ,BJP,VHP [ஓ]நாய்களை விட நடுநிலை ( இந்து ) நாய்கள் நல்ல நாய்கள் தான்.

      [2]ராம் போன்ற இரத்த-கொலை வெறி பிடித்த RSS ,BJP,VHP [ஓ]நாய்கள் மனித இரத்தத்தை அருந்துவது போல நடுநிலை ( இந்து ) நாய்கள் மனித இரத்தத்தை ஒருபோதும் அருந்தாது.

      //கடைசி இந்துவும் ஒரு துலுக்கரால் வெட்டுண்டு சாகும்வரை நடுநிலை ( இந்து ) நாய்கள் அனைத்தும் திருந்தாது.//

  18. மதத்தை காப்பாற்ற உயிரை கொடுத்தால், சுவர்கத்தில் 72 நிரந்தர கன்னிகளுடன்???? 100 ஆண் பலத்தோடு????? ஜல்சா பண்ணலாம் என்பதை நம்பும் முட்டாள், வீட்டுக்கு வீடு குண்டு வைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

  19. நரேந்திர மோடியும், குஜராத்தின் தீண்டாமை வன்கொடுமைகளும்!
    ——————————————————————————————————————-

    [1]நரேந்திர மோடி எழுதிய நூல் ஒன்று 2007 ஆம் ஆண்டு வெளி வந்தது. அதன் பெயர் கர்மயோகம். அவர் எழுதிய நூல் என்பதைவிட அவருடைய உரைகளின் தொகுப்பு என்று தான் கூற வேண்டும். அந்த நூலில் தலித் மக்களைப் பற்றி குறிப்பிடும்போது அவர்கள் மலம் அள்ளுதல் போன்ற பணிகளை செய்வதற்குக் காரணம், அவர்கள் அந்தப் பணிகளை புனிதமாகக் கருதுகின்றார்கள். “Experience in spirituality” ஆன்மீக அனுபவம் எனக் கூறுகின்றார். இதனால்தான் அவர்கள் மலம் அள்ளுதல் முதலான தொழில்களை இத்தனை காலமாக செய்கின்றார்களே அல்லாமல் அவர்கள் தங்களுக்கு வேறு தொழில்கள் கிடைக்கவில்லை என்பதனால் அல்ல என்கின்றார்.

    [2]“நான் அவர்கள் (தலித்கள்) இந்தப் பணியை தங்கள் வயிறுகளை நிரப்புவதற்காகத்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள் என நம்பவில்லை. இதற்காகத்தான் அவர்கள் செய்கின்றார்கள் என்றால் நிச்சயமாக அவர்கள் இந்த அசிங்கமான தொழிலை இத்தனை தலைமுறையாகச் செய்து கொண்டிருக்க மாட்டார்கள். வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் இந்த மக்களில் யாருக்கோ, இந்தப் பணியைச் செய்வது மொத்த மனித இனத்திற்கும் செய்திட வேண்டிய பணி என்ற ஞானோதயம் ஏற்பட்டிருக்கின்றது. அதனால்தான் கடவுள் அவர்கள் மீது பணித்த இந்த கடமையை அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் மீது கடவுள் அருள் செய்த இந்தக் கடமையைத்தான் அவர்கள் செய்ய வேண்டும்.

    [3]இந்த துப்புரவு பணி, ஓர் உள்ளார்ந்த ஆன்மீக நடவடிக்கையாக, பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த ஆன்மிகப் பணிதான், தலைமுறை தலைமுறையாக நடந்து கொண்டிருக்கின்றது. இதல்லாமல் இந்த துப்புரவு பணிகளைச் செய்பவர்களின் தலைமுறைகளுக்கு வேறு வேலைகளோ, வாணிபங்களோ கிடைக்கவில்லை என நம்ப முடியவில்லை.” இதிலிருந்து பெறப்படும் உண்மை மனித மலம் அள்ளுவது பிணம் தூக்குவது முதலான பணிகள் ஆன்மிக தேடலும், நாடலுமாம். அதனால் அவர்கள் அந்தப் பணியைச் செய்திட வேண்டுமாம்.

    [4]மனித உரிமை ஆர்வலர் சுகாஷ் கட்டேடர், இந்த நூலை தடை செய்ய வேண்டும். மோடியைக் கைது செய்து வன்கொடுமைச் சட்டத்தின்படி சட்டத்தின் முன் நிறுத்திட வேண்டும் என்று அகில இந்திய அளவில் குரல் எழுப்பினார். இந்தப் பின்னணியில் இந்த நூல் திரும்பப் பெறப்பட்டது

  20. Gopalahari,RAM,karthik,கார்த்திக் ராம்! ,

    மோடியீன் கூற்று படி “Experience in spirituality” “[ஆன்மீக அனுபவம்]” கிடைக்கும் மலம் அல்லும் புனித பணியை இனி நீங்கள் செய்யலாமே !

    மோடியீன் கூற்று படி மலம் அல்லும் புனித பணியை இனி நீங்கள் செய்தால் உங்களுக்கும் கடவுள் அருள் கிடைக்குமே !

  21. // விநாயகன் சிலையை இந்து முன்னணி தெருவில் இறக்கி இழுப்பது போல கடந்த சில ஆண்டுகளாக கிறிஸ்மஸ் காலத்தில் கிறித்தவ குடில்களை பெரும் பொருட்செலவில் தெருக்களில் அமைத்து சூழலை மாசுபடுத்தி வருகிறார்கள்.//

    நீங்கள் விநாயகர் சதுர்த்தியை மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பிரச்சினையாக பார்ப்பதற்கு இந்துத்வா பொறுப்பேற்காது

    • feroz நீங்களுமா?

      நான் ‘சூழலை மாசுபடுத்துகிறார்கள்’ என்றது சுற்றுசூழலை மாசுபடுத்தும் பிரச்சினையை அல்ல. மதவாதிகள் ஏட்டிக்குப் போட்டியாக ஏதாவது செய்து சமூக நல்லிணக்கத்தை குலைக்கிறார்கள் என்பதே சேதி. ‘இந்து’ ஒற்றுமையை வலியுறுத்தி விநாயகன் சிலை ஊர்வலம் நடத்தப்படுகிறது என்றால் மற்ற மதத்தவரும் ஏதாவது ஒன்றை தமது மதவாத நடவடிக்கைக்கு கண்டுபிடிக்கிறார்கள்.

      ஒரு பத்து வருடத்திற்கு முன்பு வரை குமரி மாவட்டத்தின் பகுதிகளில் கிறிஸ்மஸ் குடில்கள் வீட்டு முற்றத்தில் அமைத்து வந்தார்கள். பாறை குன்றுகளுக்கு சென்று தருவை புற்களை வெட்டி வருவார்கள். பாறை இடுக்குகளில் வளரும் தருவை புற்களை அறுக்க தாவி தாவி செல்ல வேண்டும். அண்ணன்மார்களுடன் செல்வதே பாதுகாப்பு. கருநாகங்கள் சீறிப் பாயும். பிறகு வெட்டிய தருவை புற்களை தோளில் சுமந்து வருவார்கள். அந்த உணர்வு அலாதியானது.

      இன்று தருவை புற்கள் குட்டியானை வண்டிகளில் தெருக்களில் இறங்குகின்றன. குடில்கள் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு ஊர்ப்பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் வந்து குடில்களை திறக்கிறார்கள். இது தேவயற்றது. இரவு நேரங்களில் இந்த குடில்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கோரப்படுகின்றன. இத்தகைய தேவையற்ற மதநடவடிக்கைகளை மத உரிமையாக பாவிக்க முடியாது என்பதே எனது முந்தைய பின்னூட்டத்தில் தெரிவித்து இருந்தேன்.

  22. Articles which didnt appear in Vinavu:
    1. Chinese sword carrying muslims killed over 100 in China railway station.
    2. African mall non muslims were massacred after asking for terrorist mother’s name.
    3. US muslim soldier killed fellow american soldiers in texas.
    4. Nigeria non muslim girls abducted by muslim terrorists.
    5. Bomb blasts in Pakistani churches.

  23. The Truths Which have not seen by AAR:
    ————————————————————–

    Note to AAR:
    தீவீர வாதத்துக்கு எதீரா ஒலகம் எல்லாம் சுற்றி தகவல் சேகரித்த RSS நிருபர் திரு AAR அவர்களுக்கு அவர் தம் சொந்தங்கள் [ RSS குடும்பம்] நீகழ்த்தும் இந்து மத பயங்கரவாத செயல்கள் பற்றீய தகவல் குறைவாக இருப்பதால் கீழ் கண்ட தவல்களை நான் அவருக்கு தருகின்றேன் !

    [1]அகமதாபாத் நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முசுலீம்களின் காலனியான நரோடா பாட்டியாவில் நடந்த தாக்குதலின்பொழுது 97 பேர் கொல்லப்பட்டனர். இந்த 97 பேரில் 30 பேர் ஆண்கள்; 32 பேர் பெண்கள்; 35 பேர் குழந்தைகள் மற்றும் சிறுவர்-சிறுமியர்.

    [2]இப்படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள 32 பேரில், அப்படுகொலை நடந்த சமயத்திலும் தற்பொழுதும் நரோடா பாட்டியா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவுள்ள மாயாபென் கோட்னானி; குஜராத் மாநில பஜ்ரங் தள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாபு பஜ்ரங்கி; பா.ஜ.க.வைச் சேர்ந்த அகமதாபாத் மாநகராட்சி மன்ற உறுப்பினர் கிஷன் கோரானி ஆகியோரோடு, விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்த பிபின் பாஞ்சால், அசோக் சிந்தி, சுரேஷ் சாரா உள்ளிட்டு, அவ்வமைப்பைச் சேர்ந்த ஏழு உள்ளூர் தலைவர்களும் அடக்கம்.

    [3]பெண்களையும் குழந்தைகளையும் தீயில் போட்டுத் துடிதுடிக்கக் கொன்ற வெறியாட்டத்துக்குத் தலைமை தாங்கிய மாயாபென் கோட்னானி ஒரு மகப்பேறு மருத்துவர் என்பது முரண்நகைக்கு எடுத்துக்காட்டு; அப்படிபட்ட ஈவிரக்கமற்ற கொலைகாரியை, மோடி தனது அமைச்சரவையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத் துறையின் துணை அமைச்சராக்கி அழகு பார்த்தார் என்பது அவரது குரூரப் புத்திக்கு எடுத்துக்காட்டு

    [4]மலேகான் நகரில் முஸ்லிம்கள் 80 சதவீதத்தினராக இருப்பதால், எங்களது முதலாவது குண்டுவெடிப்பை மலேகானில் நடத்தினோம்.. ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்.

    [5]கடந்த 2006-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தின் நான்டெட் நகரில் வெடிகுண்டுகள் தயாரித்தபோது விபத்து நடந்து ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் இருவர் மாண்டனர். ஐந்துபேர் படுகாயமடைந்தனர்

    [6]மே.வங்கத்தைச் சேர்ந்த நாப குமார் எனப்படும் அசீமானந்தா, 1977-இல் ஆர்.எஸ்.எஸ்-இன் முழுநேர ஊழியனாகி மே.வங்கத்திலும் பின்னர் அந்தமானிலும் ஆர்.எஸ்.எஸ்.-இன் பரிவாரங்களில் ஒன்றான வனவாசி கல்யாண் ஆசிரமத் தலைவராகப் பணியாற்றியுள்ளான். பின்னர் 1997-இல், இவன் குஜராத்தின் டாங் மாவட்டத்தில் ஷப்ரிதாம் என்னும் ஆசிரமத்தை நிறுவிக் கொண்டு சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் கிறித்துவர்களுக்கும் எதிராக ஆத்திரமூட்டும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தான். இவன் குஜராத் முதல்வர் மோடி, ம.பி. முதல்வர் சிவராஜ்சிங் சௌகான், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களான சுதர்சன், மோகன் பாகவத் ஆகியோருக்கு நெருக்கமானவன். பயங்கரவாதிகளின் சித்தாந்த குருவான இவன்தான் அஜ்மீர், ஐதராபாத், மலேகான் முதலான இடங்களில் குண்டுவைக்க இலக்குகளைத் தீர்மானித்து வழிகாட்டியுள்ளான். 2008-இல் பெண் சாமியாரான பிரக்யா சிங் கைது செய்யப்பட்ட பிறகு, அசீமானந்தா தப்பியோடி தலைமறைவாகிவிட்டான். கடந்த 2010 நவம்பர் 19-ஆம் தேதியன்று அரித்துவாரில் பதுங்கியிருந்தபோது சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டான்.தன்னோடு இக்குண்டுவைப்பு சதியில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ். மத்தியக் கமிட்டி உறுப்பினர் இந்திரேஷ் குமார், மத்தியப் பிரதேச ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரான (பிரச்சாரக்) சுனில் ஜோஷி, இந்தூர் மாநகர ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரான சந்தீப் டாங்கே, மூத்த ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரான ராம்ஜி, தேவேந்திர குப்தா, மேல்மட்ட உறுப்பினரான சிவம் தாக்கத், முன்னாள் இராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோஹித், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரான யோகி ஆதித்யானந்த், குஜராத்தின் விவேகானந்தா சேவா கேந்திரத்தின் பாரத் பாய், அந்த அமைப்பின் மாநில அமைப்பாளரான டாக்டர் அசோக், முக்கிய பிரமுகர்களான லோகேஷ் சர்மா, ராஜேஷ் மிஸ்ரா, ஜம்முவைச் சேர்ந்த சாரதா பீட சாமியார் தயானந்த் பாண்டே ஆகியோரின் பெயர்களையும் அவன் வாக்குமூலமாக அறிவித்துள்ளான்.

Leave a Reply to harikumar பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க