privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விவிருத்தாசலத்தில் கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு

விருத்தாசலத்தில் கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு

-

  • அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடமையாக்கு !

  • அனைவருக்கும் தாய்மொழியில் கல்வி வழங்கு!

 

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு

7.6.2014, சனி
விருத்தாசலம்

govt-school-standard-protestமாநாடு – பேரணி
மக்கள் மன்றம், ஜங்ஷன் ரோடு

பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சி
வானொலித்திடல், விருத்தாச்சலம்

பெற்றோர்களே சிந்திப்பீர்!

  • குடிநீருக்காக ரோட்டுக்கு வரும் அறிவார்ந்த பெற்றோர்களே
    அரசுப் பள்ளிக்காக போராடாமல் விட்டில் பூச்சிகளாய் தனியார் பள்ளிகளை நாடுவது ஏன்?
  • காசுக்கான வேசியும் கட்டிய மனைவியும் ஒன்றா?
    கல்வி சேவை அளிக்கும் அரசுப் பள்ளிகளோடு
    கட்டணக் கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளை ஒப்பிடுவதா!
  • ஆங்கிலவழியில் படித்துவிட்டா திருவள்ளுவர் 1330 குறள் படைத்தார்!
  •  தாய்மொழியில் சிந்தித்தவர்கள்தான் உலகின் தலைசிறந்த அறிவாளிகள்!
  • samacheer-kalviஉங்களுக்குத் தெரியுமா?
    அரசுப் பள்ளி மாணவர்கள் சுமார் 1 கோடியே 35 லட்சம்!

    அரசுப் பள்ளிகள் மொத்தம் 56,573!
  • தனியார் பள்ளி மாணவர்கள் சுமார் 27 லட்சம்
    தனியார் மெட்ரிக் பள்ளிகள் சுமார் 16,000
  • தனியார் பள்ளிகளை புறக்கணித்து அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்த போராடுவதுதான்
    நிரந்தரத் தீர்வு!
  • கல்வியை
    அரசு இலவசமாக வழங்குகிறது
    தனியார் அதை காசாக்குகிறது

    எது சிறந்தது? எது வேண்டும்?
  • தனியார் பள்ளி தரம் என போகும் பெற்றோர்களே!
    உயர்கல்வி, வேலைவாய்ப்பில் அரசிடம் வருவது ஏன்?
  • students-court-arrestதாய்மொழி கல்வி சுயசிந்தனையை வளர்க்கும்!
    ஆங்கில வழி கல்வி அடிமைத்தனத்தை உருவாக்கும்!
  • மாணவர்களை மனிதனாக்கும் அரசு கல்வி வளர வேண்டும்
    மார்க் எடுக்கும் எந்திரமாக மாணவர்களை மாற்றும் தனியார் கல்வி ஒழிய வேண்டும்
  • 4,000 சம்பளத்தில் தகுதியற்ற ஆசிரியர்கள் – தனியார் பள்ளி தரமானதா?
    40,000 சம்பளத்தில் தகுதியுடைய ஆசிரியர்கள் – அரசு பள்ளி தரமற்றதா?
  • சுயசிந்தனை, அறிவியல் மனப்பான்மை
    சாதி ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ சமுதாய வளர்ச்சி
    இதுவே கல்வியின் முழுமை!
    காசு, தரம், போட்டி என்று பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் தள்ளி
    பிராய்லர் கோழியாக்குவது கொடுமை
  • கல்வி உரிமைக்காக தொடர்ந்து போராட உங்கள் ஊரில் எமது பெற்றோர் சங்கத்தின் கிளையைத் துவங்க நாங்கள் உதவுகிறோம்.

எங்களோடு இணைந்து செயல்பட உடனே தொடர்பு கொள்ளுங்கள்

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் – கடலூர் மாவட்டம் – 9345067646
மனித உரிமை பாதுகாப்பு மையம், கடலூர் மாவட்டம் 9360061121

—————————

மாநாடு

7-6-2014 சனி, மக்கள் மன்றம், விருத்தாசலம்.

காலை அமர்வு – 10 மணி

தலைமை
திரு வெ வெங்கடேசன், மாவட்ட தலைவர்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
விருத்தாசலம்

வரவேற்புரை
திரு ச. செந்தாமரைக்கந்தன், மாவட்ட செயலாளர்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
விருத்தாசலம்

அரசுப் பள்ளிகளோடு தனியார் பள்ளிகளை ஒப்பிட முடியாது!

பேராசிரியர் ந.சி.சந்திரசேகரன், முதல்வர் (ஓய்வு)
கந்தசாமிகண்டர் கல்லூரி,
நாமக்கல்

இலவச கல்வியின் கழுத்து நெரிக்கும் தீர்ப்புகள்!

வழக்கறிஞர் ச. மீனாட்சி, உயர்நீதிமன்றம், சென்னை
மனித உரிமை பாதுகாப்பு மையம்

ஆங்கிலவழி கல்வி சொர்க்கத்துக்கு போகும் குறுக்கு வழியா?

உதவிப் பேராசிரியர் ஆ இளங்கோவன்,
விலங்கியல் துறை, அண்ணாமலை பல்கலைக் கழகம்,
சிதம்பரம்

கல்வி கொள்ளையர்களாக அதிகாரிகளும், அரசியல்வாதிகளும்!

தோழர் த கணேசன், மாநில அமைப்பாளர்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு

விவாத அரங்கம்

மதிய அமர்வு 2.30 மணி

அரசுப் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்கள் பங்குபெறும்

மாணவர்களுக்காக பள்ளிக் கூடங்களா?
பள்ளிக் கூடங்களுக்காக மாணவர்களா?

தலைமை
பொறியாளர் த.குணசேகரன், மாவட்டத் தலைவர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
விருத்தாசலம்

ஒருங்கிணைப்பு

திரு சி.எஸ்.பி.ரவிக்குமார்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
கொள்ளிடம்

பரிசளிப்பு நிகழ்ச்சி

பேச்சுப்போட்டி

விடுதலைப் போரின் வீரமரபு

ஓவியப்போட்டி

டாஸ்மாக் – சீரழிவு

திருக்குறள் ஒப்புவித்தல்

கல்வி, ஒழுக்கம் அதிகாரம்

போட்டிகள் ஒருங்கிணைப்பு

திரு க. செல்வக்குமார்,  திரு ஆ. செல்வம்,
திரு ப. தீபக்குமார், திரு ரா.குமார், மனித உரிமை பாதுகாப்பு மையம்,
திரு. வா. அன்பழகன், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், விருத்தாசலம்

பேரணி மாலை 5 மணி

துவங்குமிடம்
திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி, விருத்தாசலம்

துவக்கி வைப்பவர்
திரு.வி சோமசுந்தரம், தலைவர், விருத்தாசலம்
தமிழ்நாடு செராமிக் & ரெப்ராக்டரீஸ் மேனுபேக்சரர் அசோசியேசன்

பொதுக்கூட்டம்

மாலை 6 மணி, வானொலித்திடல், விருத்தாசலம்

நம் பிள்ளைக்காக நாம் போராடாமல் யார் போராடுவது?

தலைமை
வழக்கறிஞர் ரெ புஷ்பதேவன், மாவட்டச் செயலாளர்
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
விருத்தாசலம்

முன்னிலை
வழக்கறிஞர் சி.செந்தில், துணைச்செயலாளர்
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
சிதம்பரம்

திரு.ஜி.ராமகிருஷ்ணன், நகர தலைவர்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
சிதம்பரம்

திரு மு.முஜிப்பூர் ரஹ்மான், நகர செயலாளர்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
சிதம்பரம்

திரு கோ. தமிழரசன், தலைமை ஆசிரியர் (ஓய்வு), தலைவர்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், சேத்தியாதோப்பு

உரையாற்றுவோர்

துரை.சண்முகம்,
மக்கள் கலை இலக்கிய கழகம், சென்னை

இமயம்,
எழுத்தாளர், விருத்தாசலம்

கோ பாக்கியராஜ், தலைமை ஆசிரியர்,
அரசு நடுநிலை பள்ளி, இலங்கியனூர்,
மாநிலத் தலைவர், ஆதி திராவிட ஆதிவாசிகள் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கம்

வழக்கறிஞர் சி.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர்
மனித உரிமை பாதுகாப்பு மையம்.

மக்கள் கலை இலக்கியக் கழக மையக் கலைக் குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெறும்

நன்றியுரை
வழக்கறிஞர் ச. செந்தில்குமார்,
இணைச்செயலாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம், கடலூர்.

[நோட்டிசை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு