privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காநைஜீரியா போகோ ஹராம்: அமெரிக்க ஆசியுடன் 'ஜிகாத்'!

நைஜீரியா போகோ ஹராம்: அமெரிக்க ஆசியுடன் ‘ஜிகாத்’!

-

டந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி முன்னிரவு. நைஜீரிய நாட்டின் வடகிழக்கு பிராந்தியமான போர்னோ மாநிலத்திற்கு உட்பட்ட சிபோக் பகுதியினுள் டொயோட்டா ஜீப்புகளில் ஆயுதம் ஏந்திய ஜிஹாதி தீவிரவாதிகள் நுழைகிறார்கள். சிபோக் ஒரு ஒதுக்குப்புறமான கிராமப் பகுதி. அங்கே இருந்த உறைவிடப் பள்ளி ஒன்றில் இறுதித் தேர்வுகளை எழுத நூற்றுக்கணக்கான மாணவிகள் குழுமியிருக்கிறார்கள். பள்ளிக் கட்டிடத்தை சுற்றி வளைக்கும் ‘ஜிகாதி’கள், அங்கே பரீட்சைக்காக கூடியிருந்த மாணவிகளில் சுமார் 300 பேரை துப்பாக்கி முனையில் கடத்திக் கொண்டு நைஜீரியா – காமரூன் எல்லைப் பகுதியை ஒட்டிய சம்பீசிய வனப் பகுதிக்குள் புகுந்து விடுகிறார்கள்.

கடத்தப்பட்ட நைஜீரிய மாணவியர்
கடத்தப்பட்ட நைஜீரிய மாணவியர்

கடத்தப்பட்ட மாணவிகளில் சுமார் 50 பேர் வரை செல்லும் வழியில் தப்பி விட்டார்கள் என்று செய்திகள் வந்துள்ளன. எனினும், தப்பிய மாணவிகளின் எண்ணிக்கையையோ தீவிரவாதிகள் பிடியிலிருக்கும் மாணவிகளின் எண்ணிக்கையையோ இது வரை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. சுமார் 267 மாணவிகள் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. கடத்தப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை தொடர்பாக மாறுபட்ட செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வந்துள்ளன. சில செய்திகள் 300 என்றும், வேறு சில செய்திகள் 276 என்றும், சில செய்திகள் 267 என்றும் வெவ்வேறு எண்ணிக்கைகள் சொல்லப்படுகின்றது.

மாணவிகள் கடத்தப்பட்ட அதே நாளில் அருகில் இருந்த  இன்னொரு நகரத்துக்குள் நுழைந்த தீவிரவாதக் குழுவினர் 300-க்கும் மேற்பட்ட அப்பாவிகளைச் சுட்டுக் கொன்றிருக்கின்றனர். மாணவிகள் கடத்தப்பட்ட சில நாட்களுக்குள் ‘ஜிகாதி’ தீவிரவாத குழுவின் சார்பாக காணொளிக் காட்சி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பேசியிருக்கும் அக்குழுவின் தலைவன் அபூபக்கர் ஷெகா, கடத்தப்பட்ட மாணவிகளை அடிமைகளாக விற்க தனக்கு அல்லா கட்டளை இட்டிருப்பதாகவும், அவ்வாறு விற்பதை இஸ்லாம் அனுமதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கடத்தப்பட்ட மாணவிகளில் கிருத்துவ மதத்தைச் சேர்ந்தவர்களை கட்டாயமாக இசுலாத்திற்கு மதம் மாற்றியிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

சர்வதேச சமூகங்களின் நீலிக் கண்ணீர்

தங்கள் அமைப்பை போகோ ஹராம் என்று அழைத்துக் கொள்ளும் இந்த இயக்கத்தின் பின்னணி குறித்தும் இந்தக் கடத்தல் சம்பவம் குறித்தும் நாம் அறிந்து கொள்ளும் முன் வேறு சில அடிப்படைத் தகவல்களைப் பார்த்து விடுவது நல்லது. அதற்கும் முன், இந்த சம்பவம் சர்வதேச அளவில் எழுப்பியிருக்கும் அதிர்வலைகளின் பரிமாணத்தையும் பார்த்து விடுவோம்.

மாணவிகள் கடத்தப்பட்டு ஒருவாரம் கழித்து நைஜீரியாவின் முன்னாள் கல்வி அமைச்சர் ஒபியாகிலி ஆற்றிய உரையில் ”எங்கள் பெண்களைத் திரும்ப கொண்டு வாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இதை இப்ராஹிம் அப்துல்லாஹி என்பவர் தனது ட்விட்டர் கணக்கில் தனிச்செய்தியோடைத் தலைப்பாக (ஹேஷ்டேக்) குறிப்பிடுகிறார்(#Bringbackourgirls). அடுத்த சில நாட்களுக்கு இந்த தலைப்பு மில்லியன் முறைகளுக்கும் மேல் சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்படுகிறது.

மே மாத துவக்கத்தில் மிஷேல் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், பிரிட்டன் பிரதமர் ஜேம்ஸ் கேமரூன் போன்ற பிரபலங்கள் இதே தலைப்பில் கீச்சுகள் அனுப்பியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் சூடுபிடித்தது. மே 11-ம் தேதி வரை சுமார் 30 லட்சம் பேரால் இந்தச் செய்தியோடைத் தலைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. உலக அளவில் பல்வேறு அரசியல் தலைவர்கள் நைஜீரிய பெண்களின் நிலைமை குறித்து தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து மேற்கத்திய உலகின் பல்வேறு நகரங்களில் நம்மூர் ‘ஆம் ஆத்மி வகைப்பட்ட’ மெழுகுவர்த்தி ஊர்வலங்களும், கூட்டுப் பிரார்த்தனைகளும் நடக்கத் துவங்கியுள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகள் கடத்தப்பட்ட பெண்களை மீட்க எந்த வகையான உதவிகளையும் செய்வதாக உத்திரவாதம் அளித்துள்ளன. நைஜீரியாவுக்கு ’உதவி’ செய்யும் பொருட்டு தனது போர் விமானங்களையும், உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளையும் நைஜீரியாவில் இறக்கியிருக்கிறது அமெரிக்கா.

#Bringbackourgirls

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

போகோ ஹராம் : நதிமூலம்

”மேற்கத்திய கல்வி தீங்கானது” என்பதே போகோ ஹராம் என்கிற திருநாமத்தின் பொருள். இந்த அமைப்பின் அதிகாரபூர்வமான பெயர் ‘ஜாமாத்துல் அஹ்லிஸ் சுன்னா லித்தாவதி வல்-ஜிகாத்’ (இறைத் தூதரின் போதனைகளையும் ஜிஹாதையும் முன்னெடுத்துச் செல்லும் கடப்பாடு கொண்டவர்கள்). 1995-ம் ஆண்டு இசுலாமிய இளைஞர்களுக்கான ஷபாப் என்கிற இயக்கம் துவங்கப்படுகிறது. அதன் தலைவராக இருந்த மல்லாம் லாவல் மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றதை அடுத்து 2002-ம் ஆண்டு ஷபாப் இயக்கத்தை முகம்மது யூசூப் என்கிற அடிப்படைவாதி கைப்பற்றுகிறார். அதிலிருந்து இந்த அமைப்பு சுன்னி இசுலாத்தின் கடுங்கோட்பாட்டுவாத அடிப்படைகளைக் கொண்ட சலாஃபி (வஹாபி) பிரிவோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது.

தாலிபான்களைப் போலவே, ‘பெண்கள் படிக்க கூடாது, வெளியிடங்களுக்குச் செல்லக் கூடாது, குரானைத் தவிர்த்து எதையும் கற்க கூடாது’ போன்ற பல ’கூடாதுகளின்’ பட்டியல் ஒன்றை வைத்திருக்கும் போகோ ஹராம், அதை அமுல்படுத்துவதற்குத் தோதாக ஷரியா சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சியை நைஜீரியாவில் அமைப்பது ஒன்றே தமது குறிக்கோள் என்று அறிவித்துக் கொண்டது. சில்லறைத் தாக்குதல்களையும், ஆட்கடத்தல்களையும் செய்து வந்த போகோ ஹராமின் மேல் இரண்டாயிரங்களின் இறுதியில் எடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் விளைவாக 2009-ம் ஆண்டு யூசூப் கொல்லப்படுகிறார்; அதிலிருந்து அமைப்பின் இரண்டாம் இடத்தில் இருந்த அபூபக்கர் ஷெகா தலைமைப் பொறுப்பை ஏற்கிறார்.

அபூபக்கர்
போகோ ஹராம் தலைவன் அபூபக்கர்

அபூபக்கர் தலைமைக்கு வந்த காலகட்டத்தின் சர்வதேச அரசியல் நிலைமை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதற்கு சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்பதாக அமெரிக்காவின் வால் வீதியில் துவங்கும் பொருளாதார பெருமந்தம் உலகு தழுவிய அளவுக்கு முதலாளித்துவ கட்டமைப்பு நெருக்கடியாக முற்றி வளர்ந்திருந்தது. அமெரிக்க பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் மண்ணைக் கவ்விக் கொண்டிருந்த சமயம் அது. அதே நேரத்தில் கிழக்கு ஐரோப்பிய, மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ’வண்ணப்புரட்சிகள்’ நடப்பதற்கான சமூக பொருளாதார சூழல் ’கனிந்து’ வந்தது.

தனது சூதாட்டப் பொருளாதாரத்தை மீட்க வேண்டுமென்றால் இது வரை, தான் கால் பதித்திராத பிரதேசங்களில் நுழைந்தாக வேண்டும் என்கிற கட்டாயம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருந்தது. மூன்றாம் உலக நாடுகளின் உள்விவகாரங்கள் வரை தலையிட்ட அமெரிக்கா, அந்நாடுகளின் பொதுத் துறைகளையும் இயற்கை வளங்களையும் பன்னாட்டு தொழிற்கழகங்களுக்குத் திறந்து விட பல்வேறு வகைகளில் நிர்பந்தித்துக் கொண்டிருந்தது. இந்தியாவின் பொருளாதார தர வரிசையை எஸ்&பி குறைத்ததையும் மன்மோகன் சிங்கை கையாலாகாதவர் (under acheiver) என்று டைம் பத்திரிகையில் முகப்புக் கட்டுரை வெளிவந்ததையும் இந்த இடத்தில் நினைவு படுத்திப் பார்த்துக் கொள்ளலாம். இரண்டாயிரங்களின் இறுதியில் அரபு வசந்தத்திற்கான தயாரிப்புகளில் அமெரிக்கா தீவிரமாக இருந்தது.

அதே காலப்பகுதியில் ஆப்பிரிக்க கண்டத்தை முற்று முழுதாக எந்தப் போட்டியுமின்றி கபளீகரம் செய்யும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. போகோ ஹராம் அமெரிக்காவின் கைகளில் இருந்த துருப்புச் சீட்டுகளில் ஒன்று.

முகம்மது யூசூபின் தலைமையில் இருந்த வரை, போகோ ஹராமின் கட்டுப்பாட்டு பிராந்தியம் என்பது ஒரு சில மாவட்டங்களுக்குள் சுருங்கியிருந்தது. அபூபக்கர் ஷெகா தலைமைப் பொறுப்பை ஏற்ற கடந்த ஐந்தாண்டுகளுக்குள் நைஜீரியாவின் சரிபாதி பகுதிகளில் செல்வாக்கு செலுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ள போகோ ஹராமின் வளர்ச்சி திகைப்பூட்டக்கூடியது. போகோ ஹராமின் நிதி வலைப்பின்னலைத் தொடர்ந்து சென்றால் அது இங்கிலாந்தில் உள்ள அல் முண்டாடா என்கிற அறக்கட்டளைக்கும் அமெரிக்காவின் மத்திய கிழக்கு அடியாள் சவூதி அரேபியாவினுள்ளும் அழைத்து செல்கிறது.

போகோ ஹராம்
போகோ ஹராம் தீவிரவாதிகள்

லிபியாவில் முவாம்மர் கடாஃபியை எதிர்த்துப் போராடிய கூட்டணியில் பங்கு பெற்றிருந்த இசுலாமிய மக்ரீபிற்கான அல்-குவைதா (Al-qaeda in Islamic Magreb / Magreb stands for North western African continent) என்கிற அமைப்பு அமெரிக்க உளவுப்படையான சி.ஐ.ஏவிடமிருந்து சவூதி வழியாக நேரடியாக ஆயுதங்களைப் பெற்றது. பின்னர் லிபியாவில் தனது அமெரிக்க அடிவருடிக் ’கடமையை’ முடித்துக் கொள்ளும் மேற்படி அமைப்பு, தனது கவனத்தை அல்ஜீரியாவை நோக்கித் திருப்புகிறது.

அமெரிக்கா பிச்சையாக அளித்த ஆயுதங்களுடனும், அமெரிக்கா வகுத்துக் கொடுத்த திட்டத்துடனும் அல்ஜீரியாவில் ஷரியா சட்டத்தை அமுல்படுத்தவும், அமெரிக்க ‘ஜிகாத்’தை வழி நடத்தும் இசுலாமிய மக்ரீபிற்கான அல்-குவைதா அமைப்பு தான் போகோ ஹராமின் ஆயுதப் புரவலர். அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள அவ்வமைப்பின் தலைவர் அபூ மௌஸப் அப்தல் வாதௌத் என்பவர் நைஜீரியாவில் உள்ள கிருத்துவ சிறுபான்மையினரை எதிர்த்துப் போராட போகோ ஹராம் அமைப்பிற்கு தாம் ஆயுதங்களை வழங்கி வருவதாக வெளிப்படையாகவே குறிப்பிடுகிறார். 2011-ம் ஆண்டு வரை போகோ ஹராம் அமைப்பை சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க அமெரிக்க அரசுத் துறை மறுத்து வந்தது – போதுமான வளர்ச்சியை போகோ ஹராம் அடைய வழங்கப்பட்ட இடைவெளி அது.

ஏனெனில், ஆப்கானிய முஜாஹின்கள், அல்-குவைதா, பின் லாடன் போலவே போகோ ஹராம் என்பதும் அமெரிக்கா பெற்றெடுத்த கள்ளக் குழந்தை தான். நைஜீரியா, நைஜர், மாலி ஆகிய நாடுகளில் போகோ ஹராம் செயல்பட்டு வருகிறது. இதே போன்ற இசுலாமிய கைக்கூலி அமைப்புகளை வேறு பல ஆப்பிரிக்க நாடுகளிலும் உருவாக்கி விட்டுள்ளது அமெரிக்கா.

சோமாலியா மற்றும் கென்யாவில் அல்-ஷபாப்,
அல்ஜீரியா மற்றும் மாலியில் இசுலாமிய மக்ரீபிற்கான அல்-குவைதா,
எகிப்தில் இசுலாமிய சகோதரத்துவ கூட்டணி
லிபியாவில் இசுலாமிய போராளிகள் கூட்டணி

மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் அல்-குவைதா என்கிற குடை அமைப்பின் பல்வேறு கிளைகள் (Franchise). இசுலாமிய சர்வதேசியம் இயங்கும் முறையும் அமெரிக்காவின் மெக்டொனால்ட் சங்கிலித் தொடர் துரித உணவகம் செயல்படும் முறையும் ஏறக்குறைய ஒன்று தான்.

இசுலாமிய சர்வதேசியமும் மெக்டொனால்டு மயமாதலும்

உலகெங்கும் கிளைகளைப் பரப்பியிருக்கும் மெக்டொனால்டு துரித உணவகத்தின் பல்வேறு தின் பண்டங்கள் அந்தந்த கிளைகளில் தயாரிக்கப்படுபவை அல்ல. அங்கே விற்கப்படும் குப்பை உணவுகளின் கச்சாப் பொருட்களான உறைய வைக்கப்பட்ட கோழி இறைச்சி, ஏற்கனவே வெட்டி உறைய வைக்கப்பட்ட உருளைக் கிழங்கு போன்ற சமாச்சாரங்கள் மையப்படுத்தப்பட்ட தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டு அதன் கிளைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடும். கிளைகளை பொறுப்பேற்று நடத்துபவர்கள் பனிப்பெட்டியில் இருந்து கச்சாப் பொருளை எடுத்து அவ்வப்போதைக்கு பொரித்து அந்தந்த நாட்டின் உள்ளூர் சுவை பாரம்பரியத்திற்கு ஏற்ப மசாலாக்களை தடவி விற்பார்கள்.

போகோ ஹராம் ஆயுதங்கள்
போகோ ஹராம் ஆயுதங்கள்

இன்றைய தேதியில் ‘ஜிகாத்’ மெக்டொனால்டுமயமாகி இருக்கிறது (Mcdonaldization). ஒரு ‘ஜிகாத்’தை துவங்கி நடத்துவதற்கு போதுமான அளவிற்கு சலாபிசம் வஹாபியம் போன்ற சித்தாந்த பயிற்சிகளை சவூதி மதகுருமார்களை வைத்து அமெரிக்காவே அளித்து விடுகிறது. மற்றபடி எந்த நாட்டில் ‘ஜிகாது’ நடக்க உள்ளதோ அந்த நாட்டின் உள்ளூர் விவகாரங்களுக்கு ஏற்ப முழக்கங்களையும் வழங்கி விடுகிறார்கள். ‘ஜிகாது’க்கு பொருத்தமான முழக்கங்களையும் (அது சில வேளைகளில் அமெரிக்க எதிர்ப்பு கோஷங்களாக கூட இருக்கிறது) கையில் தயாராக கொடுத்து விடுகிறார்கள்.

போகோ ஹராம் போன்ற ஜிஹாதிகளின் கடமை எளிமையானது. காஃபிர் அமெரிக்காவுக்கும், இசுலாமிய சவூதிக்கும் ஏற்பட்ட கள்ளத் தொடர்பில் பிறந்த அமெரிக்க ’ஜிஹாதின்’ கச்சாப் பொருளின் மேல் உள்ளூர் மசாலாவை (உதாரணம் – விசுவரூபம் எதிர்ப்பு, இசுலாமியர்களுக்கு இடஒதுக்கீடு போன்றவை) தடவி யாவாரத்தை சிறப்பாக நடத்த வேண்டியது தான்.

அமெரிக்காவுக்கு ஆப்பிரிக்காவின் மேல் இவ்வளவு அக்கறை ஏன்? ஏன் சொந்த முறையில் போகோ ஹராம் போன்ற ‘ஜிகாதி’களை வளர்க்க வேண்டும்?

ஆப்பிரிக்காவின் வளம்

ஆப்பிரிக்க கண்டம் அள்ளித் தீராத இயற்கை வளங்களைச் சுமந்து கொண்டிருக்கும் பெரும் நிலப்பரப்பு. சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பிய காலனியவாதிகளில் நடத்திய மாபெரும் சூறையாடல்களுக்கு ஈடு கொடுத்து இன்னமும் தன்னுள் ஏராளமான கனிம வளங்களைக் கொண்டிருக்கிறது. நைஜீரியா உள்ளிட்ட வடக்கு மற்றும் வட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் சமீப காலத்தில் ஏராளமான எண்ணெய் வளம் கண்டறியப்பட்டுள்ளது.

போகோ ஹராம் தலைவனின் பேச்சு
போகோ ஹராம் தலைவனின் பேச்சு

ஆப்பிரிக்க நாடுகள் அரசியல் ரீதியில் சுயேச்சையான முடிவுகளை எடுக்கக் கூடிய சுதந்திர நாடுகள் அல்ல. பெரும்பாலும் தமது முந்தைய காலனிய காலத்து எஜமானர்களான ஐரோப்பிய நாடுகளை மறைமுகமாகவோ அமெரிக்காவை நேரடியாகவோ அண்டிப் பிழைக்கும் ஒட்டுண்ணித் தரகு வர்க்கங்களே ஆப்பிரிக்க நாடுகளை ஆட்சி செய்து வருகின்றன. எனினும், நைஜீரியா போன்ற ஓரிரு ஆப்பிரிக்க நாடுகள் அமெரிக்காவுக்கு திறந்து வைத்த அதே வாயிற் கதவை சீனாவுக்கும் திறந்து விட்டிருக்கின்றன.

நைஜீரியாவுக்கு இராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்து வரும் சீனா, அதன் தொலைத் தொடர்புத் துறையில் ஏராளமான முதலீடுகளைச் செய்து வருகிறது. சமீபத்தில் சுமார் 2,300 கோடி டாலர்கள் மதிப்பில் மூன்று எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், எண்ணெய் துரப்பணம் மற்றும் புதிய எண்ணெய் வயல்களைக் கவளங்களைக் கண்டறிவதற்கும் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி உள்ளது.

தனது பொருளாதார சிக்கலில் இருந்து மீளத் துடிக்கும் அமெரிக்காவின் சுரண்டல் வெறியும் அடங்காத எண்ணெய்ப் பசியும் சிறு அளவுக்கு பெயரளவிலான போட்டியைக் கூட விரும்புவதில்லை. அந்த வகையில் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சீனாவை விரட்டுவது, ஏற்கனவே ஆப்பிரிக்க நாடுகளில் கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கும் தனது ஐரோப்பிய கூட்டாளிகளின் செயல்பாடுகளை தனது தலைமையில் மறுஒழுங்கமைப்பது என்கிற நோக்கங்களோடு செயல்பட்டு வருகிறது.

ஆப்பிரிக்காம்

இரண்டாயிரங்களின் மத்திய காலப்பகுதி வரை அமெரிக்காவின் மத்திய கிழக்கு இராணுவ கட்டுப்பாட்டு கேந்திரம் மற்றும் ஐரோப்பியாவிற்கான அமெரிக்காவின் இராணுவ கட்டுப்பாட்டு கேந்திரத்தின் பொறுப்பில் ஆப்பிரிக்கா இருந்தது. 2008-ல் ஜார்ஜ் புஷ்ஷின் இறுதி நாட்களில் ஆப்பிரிக்காவுக்கென தனிச்சிறப்பான இராணுவ கட்டுப்பாட்டுக் கேந்திரமாக ஆப்பிரிக்காம் (USAFRICOM – United States African Command) ஏற்படுத்தப்பட்டது.

ஆப்பிரிக்காம்
ஆப்பிரிக்காம் – வரைபடம்.

ஆப்பிரிக்காமின் இராணுவ தளம் சூயஸ் கால்வாயின் முகப்பில் அமைந்திருக்கும் வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபௌட்டியில் அமைந்திருக்கிறது. இசுலாமிய தீவிரவாதத்திலிருந்தும் சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்தும் வடகிழக்கு ஆப்பிரிக்க முனைக்கு விடுதலை அளிப்பது (Operation Enduring Freedom – Horn of Africa) என்கிற பெயரில் உள்ளே நுழையவும் கேம்ப் லெமான்னியர் என்ற தற்காலிய இராணுவ தளத்தை ஆப்பிரிக்காமின் நிரந்தரமான இராணுவ தளமாக அமைத்துக் கொள்ளவும் வழி செய்து கொடுத்தது ’ஜிஹாதிகள்’ தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சில நூறு இராணுவ வீரர்களோடு சோம்பிக் கிடந்த ஜிபௌட்டியின் லெமான்னியர் இராணுவ முகாம், இன்று ‘இசுலாமிய ஜிஹாதின்’ அச்சுறுத்தலைத் தொடர்ந்து பல்லாயிரம் வீரர்களைக் கொண்ட மாபெரும் இராணுவ செயல் கேந்திரமாக குறுகிய காலத்திலேயே வளர்ந்துள்ளதாக அமெரிக்காவின் ‘ஆர்மி டைம்ஸ்’ குறிப்பிடுகிறது.

அமெரிக்க வைஸ் அட்மிரல் ராபர்ட் மில்லர், “ஆப்பிரிக்காவில் இருந்து உலகச் சந்தைக்கு இயற்கை வளங்கள் சுலபமாக சென்று சேர்வதை உறுதி செய்வது தான்” ஆப்பிரிகாமின் கடமை என்று வெளிப்படையாகவே அறிவிக்கிறார். அமெரிக்காவின் எண்ணெய் தேவையை உத்திரவாதப்படுத்தும் வகையில் தீவிரவாத எதிர்ப்புப் போரில் ஈடுபடுவதே ஆப்பிரிகாமின் நோக்கம் என்கிறார் அமெரிக்க இராணுவ ஜெனரல் வில்லியம் வார்ட்.

ஆக, எந்த நாட்டிற்குள்ளும் அமெரிக்கா நுழைவதற்குத் தேவையான அடிப்படை முகாந்திரங்களையும் அரசியல் தேவைகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் கைக்கூலிகள் தான் ஜிஹாதிகள். ”அமெரிக்காவை வெட்டுவேன், அமெரிக்கர்களைக் குத்துவேன்” என்கிற பாணியில் போகோ ஹராமின் ‘ஜிஹாதி தலைவர்கள்’ வெளியிட்ட சவடால் வீடியோக்கள் எல்லாம் சி.ஐ.ஏ.வின் திரைக்கதை வசனத்தில் உருவானவை தாம். இது போன்ற வீடியோக்களையும் சில சில்லறைத்தனமான தாக்குதல் சம்பவங்களையும் சி.என்.என் போன்ற ஊடகங்களின் மூலம் ஊதிப் பெருக்கிக் காட்டுவதன் மூலம் உருவாவது தான் ‘இசுலாமிய தீவிரவாத பூச்சாண்டி’.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (மே 20-ம் தேதி) இரவு போகோ ஹராம் தீவிரவாதிகள் என்ற சந்தேகிக்கப்படுபவர்கள் வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள மூன்று கிராமங்களை தாக்கி 48 பேரை கொன்று குவித்திருக்கும் செய்தி இப்போது மேற்கத்திய ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஆப்பரேஷன் நைஜீரியாவுக்கு அமெரிக்க ‘உதவி’

போகோ  ஹராமின் மூலம் நைஜீரியாவுக்கான இசுலாமிய தீவிரவாத பூச்சாண்டியை உருவாக்கி முடித்து விட்ட அமெரிக்கா, தனது தலையீட்டுக்கான பொதுக்கருத்தையும் உருவாக்கி முடித்துள்ளது. நைஜீரியாவின் அதிபர் குட்லக் ஜொனாதன் துவக்கத்தில் அமெரிக்க தலையீட்டை ஏற்பதில் சுணக்கம் காட்டுகிறார், உடனடியாக ஜொனாதன் எப்பேர்பட்ட கையாலாகாதவர் என்பதையும் மாணவிகள் கடத்தப்பட்ட அதே சமயத்தில் அவர் கலந்து கொண்ட குடி விருந்தில் அடித்த சரக்கின் விலை என்ன என்பதையெல்லாம் விவரிக்கும் ‘ஆய்வு’ கட்டுரைகள் மேற்கத்திய ஊடகங்களில் பரபரப்பாக கசியத் துவங்கியன.

உடனே ‘விழித்துக்’ கொண்ட ஜொனாதன், அமெரிக்காவின் உதவியைத் தாம் ஆவலோடு எதிர்பார்த்துக் கிடப்பதாக அறிவித்து முவாம்மர் கடாபியின் நிலை தனக்கு ஏற்படுவதைத் தற்காலிகமாக தவிர்த்துக் கொண்டார். அமெரிக்கா தற்போது மாணவிகளைத் ‘தேடி’ வருகிறது. விரைவில் இசுலாமிய பூச்சாண்டியை ஒழித்து அமெரிக்காவின் நிரந்தர இராணுவதளம் ஒன்றின் நிழலில் ‘ஜனநாயகத்தின்’ மகாத்மியம் நைஜீரியாவில் நிலைநாட்டப்படக் கூடும். மாலி, சூடான், சோமாலியா, அல்ஜீரியா, சாட், நைஜர் உள்ளிட்ட பிற வடக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ’ஜிகாத்’ உக்கிரமாக நடந்து வருகிறது – டாம்ஹாக் எரிகணைகள் ’ஜனநாயகத்தின்’ நற்செய்தியை ஓசையோடு அறிவிக்கும் ஆசையோடு லெமான்னியர் முகாமில் காத்துக்கிடக்கின்றன.

ஆனால், அப்பாவி ஆப்பிரிக்கர்களோ ‘ஜிகாத்’தையும் அதன் அப்பனான அமெரிக்காவையும் வீழ்த்தவல்ல வர்க்கப் போராட்டம் ஒன்றுக்காக நீண்ட காலமாக காத்துக் கிடக்கின்றனர்.

–    தமிழரசன்

  1. Dear Vinavu & தமிழரசன்,

    //அமெரிக்க ‘ஜிகாத்’//
    //போகோ ஹராம் என்பதும் அமெரிக்கா பெற்றெடுத்த *** குழந்தை தான்.//

    Blaming US for everything is such a simpleton approach. I have read ‘ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்’. I understand US’s reach and control. But still even ‘jihad’ is by US is very long shot. Please give credit to Muhamadans at least for Jihad.

    //2011-ம் ஆண்டு வரை போகோ ஹராம் அமைப்பை சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க அமெரிக்க அரசுத் துறை மறுத்து வந்தது//

    I think it is still not done, as Obama follows a soft approach with Jihadists.

    //‘விழித்துக்’ கொண்ட ஜொனாதன், *** முவாம்மர் கடாபியின் நிலை தனக்கு ஏற்படுவதைத் தற்காலிகமாக தவிர்த்துக் கொண்டார்.//

    Jonathan is a Christian unlike Kaddafi. Nigeria is slightly Christian majority country unlike Libya. Comparison is not amusing.

  2. முசுலீம் தீவிரவாதிகள் எது பன்னாலும் அதுக்கு அமெரிக்கா சதிதான் காரணம் குரான கூட எதிரிகளை கண்ட இடத்தில் வெட்டுங்கள் அவர்களை பிடரிகளிலிம் கைகளிலும் வெட்டுங்கள் என்கிற வாசகம் கூட அமெரிக்கா குரானுல இறக்கீரிச்சோ என்னவோ தெரியல முசுலீம்களுக்கு அல்லானா அமெரிக்கானு வினவு சொல்ல வருதா ஒன்னும் புரியல இசுலாமியர்களை கொன்றது இந்தியாவில் இந்து மத வெறி மியான்மரில் பவுத்த மத வெறி முசுலீம்கள் மட்டும் மத வெறில செய்யல அது அமெரிக்கா சதி அழகான நடுனிலமை அல்லா வினவு தள எழுத்தாளர்களுக்கு சொர்கம் தருவார்

  3. எல்லாவ்ற்றிற்கும் அமெரிக்காவை குறை சொல்ல முடியாது. இஸ்லாம் எல்லாவற்றயும் புனிதப்படுத்தவல்லது என்று ஒரு சாரார் முஸ்லீம் வெறித்தனமாக நம்புகின்றனர். அவர்கள் எல்லா நாடுகளுலும் அவர்கள் வலிமைக்கு ஏற்ப பிரச்சனை செய்கின்றனர். பெண்கள் படிக்கக் கூடாது என்று சொல்லுவது முதல் வினவு அலுவலகத்தில் வந்து சண்டை பிடித்த இயக்கம் வரையில் எல்லாம் ஒன்றுதான். அவ்ர்களை முழுமையாக இயக்குவது சொர்க்கம் போவது உறுதி என்ற நம்பிக்கை.

    இதை மாற்ற முடியாது. இது நாள் வரை எத்தனை பார்ப்பன, பாசிச கும்பல் என்று பிஜேபி முதல் ஜெயலலிதா … எத்தனையோ பேரை விமர்சித்துள்ளீர்கள். ஏதாவது ஒரு கட்சியோ, அமைப்போ உங்கள் அலுவலத்திற்கு வந்ததுண்டா? ஒரே ஒரு முறை இஸ்லாமிய இயக்கங்களின் கலாச்சார போலீஸ் வேலையை எழுதினீர்கள். உடனே சண்டை போட வந்து விட்டார்கள்.

    அவர்களை இயக்குவது அதீத மத நம்பிக்கை. அதற்கு அமெரிக்கா எல்லாம் தேவையில்லை.

  4. Seems Vinavu got afraid of TNTJ – to cool off they are compensating with two articles.
    1. Mynmar buddhist against muslims
    Truth is Muslims were troubling Buddhists with usual rape and murder and forming a ghetto. Buddhist retaliated.
    2. Now USA responsible for muslim terrorist Boko Haram
    I cannot find even a remote link between Boko Haram and USA. Please read the series of article in Economists last 2 issues on Boko Haram.

  5. முக்கியமான பங்காலி இஸ்ரேலை எதிலும் வினவு குறிப்பிடாமல் இருப்பதற்கு காரணம் என்னவோ!!!! இந்த விஷாயத்தில் உதவ வருகிறோம் என பொய் சொல்லி உள்ளே சென்ற இஸ்ரேலை கட்டுரை மறந்து விட்டதோ!!!!

  6. @ Univerbuddy, Joseph & AAR

    இசுலாம் என்கிற மதத்தின் தோற்றமும் அந்தக் காலத்தில் அதற்காக எழுதப்பட்ட புனித நூலின் நோக்கமும் வேறு. அது கொலை செய்யப் பிறந்த மதமல்ல. பதூயின் இன பழங்குடி அரபிகளை பண்படுத்தியது இசுலாம். இசுலாத்தின் தோற்றத்திற்குப் பின் அரபுலகில் ஏற்பட்ட அறிவுப் புரட்சியை இன்றைய மேற்கத்திய வரலாற்றாரியர்கள் மறைக்கவே செய்கின்றனர். அரபிகளை காட்டுமிராண்டிகளாக காட்டுவதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. ஆனால், ஐரோப்பாவுக்கு வானவியலையும், கணிதத்தையும், உலோகவியலையும் கற்பித்தது அரபுலகம் தான்.

    இசுலாம் செய்த கொலைகள் என்று நீங்கள் சொன்னால் கிருத்துவம் செய்த கொலைகளையும் கணக்கிலெடுத்தே பரிசீலிக்க வேண்டும். சுமார் 20 கோடி செவ்விந்தியர்களை அழித்தது, குருசேட் போர்களில் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தது, அன்மைக் கால வரலாற்றில் கோவா மற்றும் கொங்கன் கரையோரங்களில் நடந்த இன்க்விசிஷன்கள் என்று அந்தப் பட்டியல் மிக நீண்டது.

    என்றாலும் கிருத்துவின் வாழ்வும் பிறப்பும் அவரது காலத்துக்கு பிந்தைய கொலைகளுக்காக ஏற்பட்டதல்ல. ரோமானிய சாம்ராஜ்ஜியத்தின் அடிமைகளின் விடுதலைக்கான ஏக்கப் பெருமூச்சின் பதிலாக இயேசு கிருஸ்து அமைந்தார்.

    ஒரு சமூகத்தின் ஏதோவொரு சிக்கலுக்கு அந்தக் காலகட்டத்திற்கு பொருத்தமான தீர்வாக வரும் இயேசு முகம்மது நபி போன்றவர்களைப் பின்பற்றி பின்னர் மதங்கள் உருவாகிறது. அது தனிப்பட்ட நம்பிக்கை என்னும் எல்லைக்குள் இருக்கும் வரை சிக்கலில்லை. அதிகாரத்தோடு இணைந்து அதன் ஒரு கருவியாக மாறும் போது அபாயகரமான கொலைக்கருவியாகிறது.

    அந்த வகையில் தான் வஹாபியத்தை (அல்லது சலாபியம்) பார்க்க வேண்டும். வஹாபியத்தின் தோற்றமே பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சேவைக்காக ஏற்பட்டது தான். இன்றளவும் வஹாபியத்தின் கருமையமாக விளங்கும் சவூதி அமெரிக்க ஏகாதிபத்தின் கால் நக்கியாக இருப்பது ஆச்சர்யத்துக்குரியதல்ல.

    ஆப்கானிய முஜாஹித்தீன்களை உண்ட்டாக்கியதே அமெரிக்கா தான் (ப்ரெஸென்ஸ்கி என்கிற சி.ஐ.ஏ அதிகாரி தான் முஜாஹித்தீன்களின் தகப்பன் – இதை அவரே தனது நூலில் வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார்). பின்லேடன் யார்? இந்தக் கட்டுரையின் இடையில் வினவின் முந்தைய கட்டுரைக்கான ஒரு இணைப்பு உள்ளது. வாசித்துப் புரிந்து கொள்ளுங்கள்.

    இசுலாத்தில் வஹாபிகள் எப்படியோ ஏறக்குறைய சிந்தனை / கொள்கை அடிப்படையில் கிருத்துவத்தில் உள்ள பெந்தெகோஸ்தேவினரை குறிப்பிடலாம். அவர்கள் ஏ.கே 47ஐயும் இவர்கள் பைபிலையும் கையில் ஏந்தியிருக்கிறார்கள் என்பதைத் தவிர்த்து வித்தியாசங்கள் ஏதுமில்லை. இரண்டுமே மதக் கடுங்கோட்பாட்டுவாதம் தான். இரண்டுமே மக்களை கும்பல் கும்பலாக மூளைச் சலவை செய்பவை தான். இரண்டுமே சமகால சமூக பொருளாதார பிரச்சினைகளை மக்கள் காணாமல் தடுக்கும் வேலையைத் தான் செய்கின்றன.

    பெந்தெகொஸ்தேவின் கூட்டங்களுக்குச் சென்று பாருங்கள் – தவ்ஹீது வஹாபிகள் (பி.ஜே கும்பல்) எத்தனையோ மேல் என்கிற முடிவுக்கு வருவீர்கள். காதை அடைக்கும் அந்த ‘பல்லாக்கா ஷப்பாரப்பா ராயாஷாப்பா” என்று அந்நிய பாஷை என்கிற பெயரில் அவர்கள் போடும் காட்டுக் கூச்சலும், கேள்வி முறையின்றி விழுந்து புரளும் கும்பலும்…. இது வஹாபியத்தை விட ஆபத்தானது.

    வினவு நண்பர்கள் பெந்தெகொஸ்தே கூட்டம் பற்றிக் கூட எழுத வேண்டும். வஹாபிகளின் மேலான விமர்சனங்களுக்கு குதூகலிக்கும் யுனிவர்பட்டி போன்றவர்கள் அப்போது அதை எப்படி பரிசீலிப்பார்கள் என்று பார்க்க ஆசை 🙂

    • //பெந்தெகொஸ்தேவின் கூட்டங்களுக்குச் சென்று பாருங்கள் – தவ்ஹீது வஹாபிகள் (பி.ஜே கும்பல்) எத்தனையோ மேல் என்கிற முடிவுக்கு வருவீர்கள். காதை அடைக்கும் அந்த ‘பல்லாக்கா ஷப்பாரப்பா ராயாஷாப்பா” என்று அந்நிய பாஷை என்கிற பெயரில் அவர்கள் போடும் காட்டுக் கூச்சலும், கேள்வி முறையின்றி விழுந்து புரளும் கும்பலும்…. இது வஹாபியத்தை விட ஆபத்தானது//
      .சீனா வில் மார்க்கெட்டில் குன்டு வெடிப்பு 35 பேர் சாவு
      நைஜீரியாவில் 125 பேர் கொலை 200 மானவிகள் கடத்தல்
      கென்யாவில் 7 பேர் எரித்து கொலை
      இதை மாரி நெறைய செத்து போனார்கள் பெந்தகொஸ்தெவின் முட்டாள்தனமான் காட்டு கூச்சலினால் அதனால் இசுலாமிய தீவிரவாதத்தை விட பெந்தகொஸ்தெ ஆபத்தானது அதை தடை செய்வோம்
      கமூனிசம் வாழ்க பச்சைகொடியும் வாழ்க அண்னன் மன்னாறு என்கிற முகமதும் வாழ்க அல்லாகு அக்பர்

    • @manaru:
      Ali Sina, ex-Muslim, who is well versed in Quran and Haddith is willing to reward 50,000USD to any one who can win debate against him on evils of islam. Please take up your arguments with Ali Sina.

      Non-muslims like me are not interested in the contents of islam but our point is simple whatever maybe the contents but it should not affect non-muslims.
      Whats the actual reality – wherever islam is there, there is trouble for others. If others retaliate, then muslims start complaining that they are victims.

    • Hi Mannaru,

      // அவர்கள் ஏ.கே 47ஐயும் இவர்கள் பைபிலையும்//

      ஒரு கொடிய துப்பாக்கிக்கும் ஒரு புத்தகத்திற்கும் இடையே வித்தியாசங்கள் ஏதுமில்லை என்று கூறும் உங்களிடம் எதை பேசி என்ன பயன். எனினும் மற்ற வாசகர்களுக்காக உங்கள் கருத்துக்களுக்கு பதில் கூறுகிறேன்.

      //பதூயின் இன பழங்குடி அரபிகளை பண்படுத்தியது இசுலாம்//

      Nothing can be farther from truth than this. Muhamadism offered nothing but death to many tribes. Only those tribes who feared their lives and surrendered to Muhamad could live. It gave sex slaves and booty to jihadists and blood and slavery to kaafirs.

      //ஐரோப்பாவுக்கு வானவியலையும், கணிதத்தையும், உலோகவியலையும் கற்பித்தது அரபுலகம் தான்.//

      Goaded by booty and women, Arabs conquered all the lands around them and far from them. During their centuries of expeditions and interactions, the contributions of the people like, Iranians, Iraqis, Syrians, Indians, Egyptians, Ethiopians, Spanish, etc were carried around. This took place in spite of Arabs, who were only interested in Jihad and resulting booties.

      //கிருத்துவம் செய்த கொலைகளையும்//

      No one denies it. But if you count it, the toll of Muhamadans is an unbeatable record. In all the lands they conquered, in all the routes they took, they created terror and death. In India alone, an estimate says 80 million murders. Their killings in African can never be counted. From Morocco to Philippines their toll is unimaginable. Christians come only second with a big difference from no.1.

      //குருசேட் போர்களில்//

      Crusade took place in 11th century. 4 century before, it self, Muhamadans started creating troubles in Europe. They first conquered Spain in 8th century. They kept on attacking coastal villages in Europe, killing men, enslaving White women and selling them in Muhamadan countries. It is a pity that Chirstians could only retaliate in 11th century. Even then their attack was short lived as they did not establish their rule in Muhamadan lands. They just came to claim Jerusalem. Within very short period they lost their control on it. All the while they did not stop attacking European coastal villages and ships for booty and white women. (Have you ever wondered why Muhamadans are light skinned? Now you know). Till France attacked north African countries like Algeria, Tunisia, Morocco, etc and occupied them.

      //இன்க்விசிஷன்கள்//

      This is not teaching of Jesus. The danger of Muhamadism and puritanical movements in Muhamadism are important reasons for the appearance of inquisition.

      //ரோமானிய சாம்ராஜ்ஜியத்தின் அடிமைகளின் விடுதலைக்கான ஏக்கப் பெருமூச்சின் பதிலாக இயேசு கிருஸ்து அமைந்தார்.//

      It is not true. We don’t know fully what Jesus taught. But his main disciples like peter and paul wanted slaves to continue to be slaves even if they accept Christianism. The Church did nothing to abolish slavery. It is only the enlightened Europeans who strived for it and achieved. But If I do not give credit to the Church for having easily let its hold on the power go without lot of burning in stakes, I would be a thankless moron.

      //நபி//

      இறைத்தூது என்பது ஏமாற்று வேலை.

      //வஹாபியத்தை (அல்லது சலாபியம்)//

      முகமதியம் இவை எல்லாவற்றிற்கும் எல்லாவிதத்திலும் பாட்டன்.

      //ஆப்கானிய முஜாஹித்தீன்களை உண்ட்டாக்கியதே அமெரிக்கா தான்//

      Muhamadans were (still are) not happy about Communism put in place in Afghanistan with the help of Soviet Russia. US helped them in all ways to fight Communism. Twisting the facts is favorite tool of fascists.

      //காட்டுக் கூச்சலும், கேள்வி முறையின்றி விழுந்து புரளும் கும்பலும்…. இது வஹாபியத்தை விட ஆபத்தானது.//

      Takbeeeeeer Allaaaaaaaaaaaahu Akbar என்று கத்துவதும் கழுத்தை அறுப்பதும் கைகால்களை வெட்டுவதும் போன்றவற்றை விட இது கொடூரமானதில்லை.

      //வினவு நண்பர்கள் பெந்தெகொஸ்தே கூட்டம் பற்றிக் கூட எழுத வேண்டும்.//

      When Pentocoste terrorists kidnap 300 muslim girls and enslave them, etc Vinavu would write about them and your desire of seeing my comments on them would be fulfilled. Ok?

      • நன்பர் யுனிவர்புட்டி நீங்க என்னதான் விளக்கம் குடுத்தாலும் அத மன்னறும் தென்றலும் ஏத்துகிட மாட்டாங்க ஏன்னா அவங்க ஒரு முடுவு பன்னிட்டு வாதம் பன்றாங்க கம்யூனிசம்னா இதுதான் போல இருக்கு

    • கிருத்துவர்கள் மேல் குறை கூறுவதால் இசுலாம் எப்படி தூய்மையானதாக மாறி விடும்?
      இருக்கும் குறைகளை அந்தந்த மதங்கள் நிவர்த்தி செய்யும் வேலையை கவனிக்கலாம்

  7. இஸ்லாமிய பயங்கர வாதத்தால் உலகமே அச்சத்துடன் இருக்கிறது. இது நைஜீரியாவில் மட்டும் அல்ல ____________ இப்படி எத்தனையோ சொல்லலாம். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் ஈராக், ஈரான், பாகிஸ்தான்,பாலஸ்தீனம், மற்றும் பல இஸ்லாமிய நாடுகளிலும் இதே நிலைதான். முஸ்லீம் பெண்கள் கல்வி கற்கக்கூடாது என்றால் அவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் போக பொருளாக வைத்திருக்கவேண்டியதுதான்!! அது அவர்களின் அல்லா கொடுத்த மகிமை!!! யாரும் தலையிட வேண்டியதில்லைதான். ஆனால் மற்றவர்களின் உரிமையில் தலையிட ____________ என்ன உரிமை இருக்கிறது? இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்கள் தங்களின் நிலையை தெளிவு படுத்தவேண்டும். இங்கு அதே நிலைதான். ஆனால் இந்கு முஸ்லீம்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால் பலவற்றை மறைக்கிறார்கள். முஸ்லீம்களின் எண்ணிக்கை கூடும்போது பெண்களை பள்ளிக்கு அனுப்பமாட்டார்கள். இதற்குமுன் வினவு இந்த இஸ்லாமிற்கு தான் வக்கலாத்து வாங்கியது.

    இஸ்ரேல் தனது நாட்டை பாதுகாத்து வருகிறது. இதற்கு நிங்கள் முதற்கொண்டு இந்த இஸ்லாமியர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறிர்கள். _____________ “ஜிகாத்” என்பதற்கு பல்வேறு பொருள் கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். __________________

  8. பெந்தேகொஸ்தெ சர்ச்சுகளுக்கு போவது பெரும்பான்மை உழைக்கும் மக்கள்தான் ஆதிதிராவிட ,பள்ளர்,நாடார் இன உழைக்கும் மக்கள் தங்களின் உலக கஸ்டங்களை மறக்க இது போன்று கொஞ்சம் ஆடி குதித்து சத்தம் போட்டு யேசுவை வணங்குகிறார்கள் அவர்களுக்கு அமெரிக்காவும் தெரியாது கொலை செய்வதும் குண்டு வைப்பதும் தெரியாது அதனால் அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் இசுலாமிய தீவிரவாதிகளை விட நல்ல கருத்து வினவும் பெந்தகோஸ்த தீவிரவாதிகளின் அமெரிக்க சார்பயும் கொலைவெறி தாக்குதல்களையும் அம்பலப்படுத்த வேண்டும் மன்னாரின் கோரிக்கையை ஏற்று என்று கேட்டுக்கொள்கிறேன்

    • வொய் டென்சன் திரு யோசேப்பு அவர்களே?

      மத அடிப்படைவாதம் கடுங்கோட்பாட்டுவாதம் ஆகியவை சாமானியர்களான இசுலாமியர்களிடமும் கிருத்துவர்களிடமும் (ஏன் இந்துக்களிடமும்) ஏற்படுத்தும் விளைவுகள் ஒன்றாக இருப்பது உங்களுக்குத் தெரியாதா?

      பின்லேடன் / தாலிபான் வகையினங்கள் செய்யும் கொலைகளுக்கான நீங்கள் எல்லா பாய்மார்களின் மேலும் போட முடியும் என்றால், அமெரிக்கா செய்த கொலைகளுக்கான பொருப்பை ஏன் கிருஸ்துவத்தின் மேல் போட்டுப் பார்க்க கூடாது?

      நான் தெளிவாகத் தானே சொன்னேன்? கிருஸ்தவமோ இசுலாமோ இந்து மதமோ – அது தனிப்பட்டவர்களின் இறை நம்பிக்கையாக மட்டும் இருக்கும் போது யாருக்கு என்ன பிரச்சினை வந்து விடப்போகிறது. எந்த மதமாக இருந்தாலும் அது அதிகாரத்தோடு இணையும் போது, அதிகார வர்க்கத்தின் கரங்களில் ஒரு கருவியாகும் போது மக்களைக் கொல்கிறது.

      க்ருசேட் போர்கள் மற்றும் இன்க்விசிஷன்கள் மற்றும் அமெரிக்க அபாரிஜின்கள் அழிப்பு, ஆப்ரிக்க பழங்குடிகள் அழித்தொழிப்பு – இதையெல்லாம் எந்த முல்லாவின் கணக்கில் வரவு வைத்திருக்கிறீர்கள் யோசேப்பு?

      யோசித்து சொல்லுங்க. அதுவரைக்கும் உங்களுக்காக மத்தேயுவின் புஸ்தகத்தின் பத்தாவது அதிகாரத்திலிருந்து இந்த வசனங்களை டெடிகேட் செய்கிறேன் 😉 என்ஜாய்

      பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.

      எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.

      ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.

      தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.

      • MATHTHEW 10:34:- Do not suppose that I have come to bring peace to the earth.
        I did not come to bring peace, but A SWORD. – பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.

        “The first important observation is to recognize that Jesus does NOT speak about “THE SWORD”, but about “A SWORD”.

        Jesus is not a prophet of the sword. The sword of violence, force and war has no place in his message. What kind of sword is he talking about?

        The above passage speaks about the consequence of being obedient to the command of Jesus that we are to preach his message. Some will listen and accept it but many will reject it and react violently.

        We will be hated for the message of repentance that we have to bring. We will be hated because we call people from evil to light and because this message exposes their evil deeds.
        For many it will mean that even our own family will turn against us.

        What kind of sword? It is the sword of division that God’s word brings. It is the division of truth from error, and the reaction of the darkness against the light. The sword that Jesus brings is the sword that his followers have to suffer, a sword that is applied to them, NOT A SWORD THAT THEY WIELD AGAINST OTHERS.”

  9. உங்க கூட மத விவாதம் பன்ன என்னால முடியாது யேசுவ கூட நீங்க திட்டலாம் எல்லா கிறிஸ்துவர்களையும் திட்டலாம் எனக்கு எந்த டென்சனும் இல்ல மதம் பெரிய போதை தான் அதுக்கு நீங்க மட்டும் அடிமையா இருங்க என்னையும் அதுல இழுக்காதிங்க பைபிளோ குரானோ எனக்கு தெரியாது

  10. தோழர்கள் யுனிவர்படி, ஜோசப் மற்றும் ஏஏஆர்,

    தோழர் மன்னாரின் கருத்தை வரவேற்கிறேன். அவர் வைத்த கருத்துக்களில் பார்வையைச் செலுத்துவது அவசியம் என்று கருதுகிறேன்.

    1. மதவெறிக்கு அச்சாணியாக ஏகே 47தான் கைகளில் இருக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி இருந்திருந்தால் புலிகேசியின் கையில் வாளைப் பிடிங்கிவிட்டு கிளுகிளுப்பையை நாசர் கொடுத்திருக்கமாட்டார்.
    2. ஜோசப் சொல்வது ஒருவிதத்தில் சரி, பெந்தோகொஸ்தே எளிய மக்களாலும் ஒடுக்கப்பட்ட மக்களாலும் கடைபிடிக்கப்படுகிறது. அவர்கள் வஹாபிகளா? ஆனால் மன்னார் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்; “வஹாபியத்தின் தோற்றமே பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சேவைக்காக ஏற்பட்டது தான்”
    3. பெந்தோகொஸ்தேவும் இதர கிறித்துவமும் ஏகாதிபத்தியத்திற்காகத்தான். அதனால் தான் ஆப்ரிக்க விவசாயி இப்படிச் சொல்கிறான்; வெள்ளையர்கள் இங்கு வந்த போது அவர்கள் கையில் பைபிள் இருந்தது; எங்கள் கைகளில் நிலம் இருந்தது; இன்று அவர்கள் கைகளில் நிலம் இருக்கிறது; எங்கள் கைகளில் பைபிள் இருக்கிறது. ஏகாதிபத்தியத்தின் சமூக பருண்மைகளை புரிந்துகொள்ளாமல் வெறும் இசுலாம் மதவெறியாக குறுக்குவதில் என்ன பலன்?
    4. மன்னார் சொல்கிற “பல்லாக்கா ஷப்பாரப்பா ராயாஷாப்பா” க்கு சர்வதேச தன்மை உண்டு!!! தோழர் ஜோசப் இங்கு கவனிக்க வேண்டும். நீங்கள் சொல்வதைப் போல பறையர்களும் நாடார்களும் மட்டும் இதைச் சொல்லவில்லை. ஐரோப்பாவில் ஆளும் வர்க்கத்தால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன. உதாரணம்: Exorcism of Emily Rose. ரோசுக்கு பல பிசாசுகள் பிடித்திருக்கும். ஹீப்ரு மொழி கூட பேசுவாள் (கோர்ட் ஆவணத்தில் இருக்கிறது). ஆனால் அவருக்கு ஹீப்ரு மொழியே தெரியாது! பாதிரியார் பேய் விரட்ட போய் எமிலி சவுக்கடி வாங்கியே இறந்து போவாள்! மேரி மாதாவிடம் அடைக்கலம் புகுவாள்! எமிலி தொடர்பாக நடந்த ஷப்பாரப்பா உள்பட அனைத்தும் உண்மை என பாதிரியாரை கொலைக் குற்றத்தில் இருந்து விடுவித்தது கோர்ட். சமீபத்தில் மிகவும் திட்டமிட்டு மக்களிடம் நினைவுபடுத்தப்பட்ட கிறித்துவம் இது. திரைப்படமாக வந்தது. எமிலி ரோஸ் இப்பொழுது திருச்சபையால் புனிதராக அறிவிக்கப்படிருக்கிறார். கூட்டம் கூட்டமாக மக்கள் அவரது கல்லறைக்கு வருகை தருகிறார்கள். இதன் பிண்ணனியில் தான் மன்னாரின் கருத்து வலுப்பெறுகிறது இப்படி “இரண்டுமே சமகால சமூக பொருளாதார பிரச்சினைகளை மக்கள் காணாமல் தடுக்கும் வேலையைத் தான் செய்கின்றன.” இதற்கு நீங்கள் மூவரும் பதில் சொல்ல வேண்டும்.
    5. ஜோசப் சொல்வதைப் போல கிறித்தவம் எளிய மக்களுக்கானது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அங்கேயேயும் வஹாபிசம் உண்டு. கத்தோலிக்க திருச்சபையின் ஆறரை மணித் திருப்பலியின் முதல் வசனமே இப்படித்தான் தொடங்கும் “அருள் நிறை மரியே வாழ்க! கர்த்தருக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவள் நீரே” ஏனென்றால் அவள் மாமிசத்தின் இணைவின் மூலமாக இயேசுவை பெற்றடுக்கவில்லை. ஆராதனைக்கு வந்தவர்களை பாவிகள் என்று பார்ப்பதற்கு கத்தோலிக்கம் சொல்லும் காரணம் செக்ஸ் வைத்துக்கொள்கிற மனிதன் பாவி! பாவத்திலிருந்து விடுபட ஞாயிறு தோறும் பாவ மன்னிப்பு! ஒது முறிந்தால் என்ன செய்வது என்று நாக்கை மடக்குகிற பிஜே மட்டும் வெறியனல்ல. இவர்களும் தான். இவ்வகையில் பாவ மன்னிப்பும் துவா செய்வதும் வஹாபிசம் நிர்பந்திக்கிற இருமைகள் தான்! அது அரசையும் ஆளும் வர்க்கத்தையும் பாதுகாக்கிறது! மன்னார் சொல்வதைப் போல “சமகால சமூக பொருளாதார பிரச்சினைகளை மக்கள் காணாமல் தடுக்கும் வேலையைத் தான் செய்கின்றன.” கத்தோலிக்கத்தை வெள்ளைப்பார்ப்பனீயம் என்று சொல்வதில் இதுபோன்ற அராஜகவாதங்கள் பல உண்டு. சைவபிள்ளைகள் ஆச்சாரம் நிறைந்த இந்த கிறித்துவத்தைத்தான் ஏற்றுக்கொண்டார்கள் எனில் மதவெறிக்கு சாம்பல் புதனும் ஒருநாள் தான்! வஹாபிஸ்டுகள் நைஜிரீயாவில் மட்டுமல்ல திருநெல்வேலியிலும் உண்டு!

    மையமாக என் கேள்வி இதுதான்; மதவெறி வஹாபிஸ்டுகளுக்கு மட்டும் சொந்தமானதா? மதம் இன்று அடைந்திருக்கிற பரிமாணங்கள் என்ன? கட்டுரை இதை வைத்து தான் இயங்குவதாக கருதுகிறேன்.

    குறிப்பு: மன்னாரை முகம்மது என்று அவதூறு செய்வதைப் போல் பால் தினகரனின் கூட்டத்தை விமர்சிக்கவில்லை என்று அற்புத சுகமளிக்கும் கூட்டத்திற்குள் மறுமொழி இடுபவர்களை அடைக்கக் கூடாது என வேண்டுகிறேன். மேலும் சனிக்கிழமை புரட்சி நடந்தாலும் தோழர்கள் கலந்து கொள்வார்கள். ஆகையால் அவர்கள் அட்வெண்டிஸ்டுகளும் அல்லர்.

    • Hi Thendral,

      Mannar has copy-pasted Muhamadans’ [I don’t use Wahabi or some other names] text as a comment. (Now he has made another similar comment)
      You say /மன்னாரின் கருத்தை வரவேற்கிறேன்/. I think you have read my reply to him.
      //ஏகே 47தான் கைகளில் இருக்க வேண்டிய அவசியமில்லை//

      I think this is in reply to my comment. True. But Muhamadans have a viler book in their hand in addition to the deadly weapon. So that is a deadly combination that I indeed fear.

      //மதவெறி [முகமதியர்]களுக்கு மட்டும் சொந்தமானதா?//

      இல்லை. ஆனால் தனது தன்மையால் முகமதியம் தனது பின்பற்றிகளை ஒரு குறிப்பான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.

    • என்னா அண்ணன் தென்றல் உங்க மத வெரி எப்பிடி தனிஞிருச்சா இல்ல மேலும் அதிகமாகுமா நீங்க கொஞ்சம் திரிசூலம் பக்கம் வாரிங்களா உங்களுக்கு உழைக்கும் மக்கள் யாருனு காட்டுரேன் அவங்களுடய பெந்தகோஸ்தே மத வெரியும் நீங்க தெரிஞ்சுக்கலாம் அதொட இசுலாமிய மத வெரியும் தெரிஞ்சுக்கலாம் வரீங்களா

      • தோழர் ஜோசப்,

        மதவெறியில் எந்த வெறி குறைந்தது. அதிகமானது என்பது ஒரு விவாதமாக இருக்க முடியாது. உழைக்கும் வர்க்கங்களின் பண்பாடு இசுலாம், கிறித்துவம் மற்றும் இந்து மதங்களைத் தாண்டி நாம் அறிந்து கொள்ள முடியும். நமக்கு தெளிவான லட்சியம் உண்டு; அது உழுபவனுக்கு நிலம்; உழைப்பவனுக்கு அதிகாரம். இதைச் சிதைக்கிற எந்த ஒரு இயக்கத்தையும் நாம் கண்டுகொள்வது அவசியம் என்று கருதுகிறேன்.

        தோழர் ஸ்டாலின் சொல்வதைப் போல சகலவிதமான சந்தர்ப்பவாதங்களுக்கும் எதிராக ஈவு இரக்கமற்ற போராட்டங்களை நிகழ்த்துவது தான் பாட்டாளிகள் தங்கள் துன்பங்களிலிருந்து விடுவித்துக் கொள்கிற முன் நிபந்தனை. அதனால் தான் இசுலாம் என்பதோடு மட்டுமில்லாமல் பெந்தோகோஸ்தே, இந்து, பவுத்தம் என்பதையும் சேர்க்கிறோம். நான்கையும் தனித்தனியாக கண்டிக்க வேண்டுமா? தேவைப்படாது என்று நினைக்கிறேன். ஏனெனில் எந்தப் பதிவு குறித்தும் சிந்திக்கிறவர்களை கருத்துகள் உந்தித் தள்ளும். போராட்டத்தைக் கோரும். மக்களைக் கருத்துகள் பற்றுகிற பொழுது அது ஆகச் சிறந்த பவுதிக சக்தி என்பதை நிரூபித்தது கம்யுனிசம் தான். அதனால் தான் ஆளும் வர்க்கம் கம்யுனிசத்தை பூதம் என்கிறது.

        இப்பொழுது விசயத்திற்கு வருவோம்.

        மதங்களுக்கு சமூக பொருளியல் நிகழ்வுகள் உண்டு. அதை அந்த தளத்தில் நோக்குகிறோம் என்பதன் பொருள் அதை ஆதரிக்கிறோம் என்பதல்ல. மாறாக, பாட்டாளிகள் நாம் வர்க்கமாக திரள்கிறோம் திரள வேண்டும் என்பது தான்.

        தோழர் யுனிவர்படி மற்றும் நீங்கள் வைக்கிற கருத்துகளில் நல்லெண்ணங்கள் உண்டு. அதன் அடிப்படையில் மதத்தை சாடுகீறிர்கள். ஆனால் இவை மட்டும் போதுமானவையல்ல என்று நினைக்கிறேன். தத்துவ துறையில் இதை எம்பயரிசம் (அனுபவவாதம்) என்பார்கள். ஒரு கட்டத்தில் நல்லெண்ணங்கள் என்பதைத் தாண்டி யுனிவர்படி மற்றும் நீங்கள் சார்ந்து நிற்கிற கருத்து இசுலாம் வெறி என்று அடையாளப்படுத்துவதோடு நின்றுவிடுவதாக கருதுகிறேன். இதில் ஒரு யந்திரத்தனம் உண்டு. ஏனெனில் தவ்ஹீத் போன்ற காலிகளை மத நம்பிக்கையாளர்களே எளிதில் இனங்கண்டு புறக்கணிக்கிறார்கள். மதத்திற்கு, அதன் அராஜகவாதத்திற்கு பலியாகிற மக்களை நாம் எப்படி அணுகு வேண்டும் என்பதை மக்களிடம் இருந்துதான் கற்றுகொள்ள முடியும். சான்றாக அரேபியாவில் நாத்திகத்தை சார்ந்து இயங்குபவர்கள் எப்படி வந்தார்கள்? எது அவர்களை நோக்கி உந்தித் தள்ளியது?

        மார்க்சும் எங்கெல்சும் பாட்டாளி வர்க்கமே அனைத்து வர்க்கங்களுக்கும் தலைமையேற்க தகுதியானது என்று முடிவிற்கு வர காரணமாக அமைந்தது எது? ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறு தான் என்று எங்கெல்சை சொல்ல வைத்தது எது?

        இதற்கு பதில் தேட வேண்டுமானால் வர்க்க எதிரிகளை சரியாக இணங்கண்டு கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஒரு விவாதம் தான் இது. ஒரு கட்டத்தில் இசுலாம் பெந்தேகொஸ்தேவை தாண்டிச் சிந்திக்கிற பொறிகளை அடைந்துதான் தீர வேண்டும். நீங்கள் இது குறித்து சிந்தியுங்கள். இசுலாம் வெறி என்று மட்டும் சொல்லி நகர்கிற பொழுது இந்துத்துவ வெறியை கத்தோலிக்க பார்ப்பனீய வாதத்தை பெந்தேகோஸ்தேவின் ஷபரப்பாவை எப்படி எதிர்கொள்வீர்கள்? இந்த விவாதத்திலேயே இந்துத்துவம் அல்லது கிறித்துவம் சிறந்தது என்று பதிவிடுவதற்கு எது காரணமாக அமைந்தது?

        இதற்கு திரிசூலம் வரத் தேவையில்லை என்று கருதுகிறேன். என்ன சொல்கீறிர்கள்?

        • Hi Thendral,

          // மதவெறியில் எந்த வெறி குறைந்தது. அதிகமானது என்பது ஒரு விவாதமாக இருக்க முடியாது.//

          I differ. Will your communism allow a certain section of women and girls forced into being enveloped in black? Such questions are too many to list.

          //உழைப்பவனுக்கு அதிகாரம். இதைச் சிதைக்கிற எந்த ஒரு இயக்கத்தையும் நாம் கண்டுகொள்வது அவசியம்//

          I agree.

          // நான்கையும் தனித்தனியாக கண்டிக்க வேண்டுமா?//

          Yes. As per the quality and quantity.

          // தவ்ஹீத் போன்ற காலிகளை மத நம்பிக்கையாளர்களே எளிதில் இனங்கண்டு புறக்கணிக்கிறார்கள்.//

          I am not worried about TJ at all. I am worried about Muhamadism. TJ is just one manifestation of it out of a million forms. Till believers identify and ignore Muhamadism, we need to expose it.

          // வர்க்க எதிரிகளை சரியாக இணங்கண்டு கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஒரு விவாதம் தான் இது.//

          You think Mannaru’s comments are such debate? You should be kidding.

          // இசுலாம் வெறி என்று மட்டும் சொல்லி நகர்கிற பொழுது இந்துத்துவ வெறியை கத்தோலிக்க பார்ப்பனீய வாதத்தை பெந்தேகோஸ்தேவின் ஷபரப்பாவை எப்படி எதிர்கொள்வீர்கள்?//

          Other fanaticisms are fuelled by Muhamadism and are growing in response to it. If we don’t speak about the unique nature of Muhamadism and expose it, other fanaticisms will grow in strength by mimicking it. Already this is what is happening since a long time. Thus by exposing the no.1 we address all others too.

  11. ##இசுலாம் என்கிற மதத்தின் தோற்றமும் அந்தக் காலத்தில் அதற்காக எழுதப்பட்ட புனித நூலின் நோக்கமும் வேறு. அது கொலை செய்யப் பிறந்த மதமல்ல. பதூயின் இன பழங்குடி அரபிகளை பண்படுத்தியது இசுலாம்.##
    வரலாறு தெரியாமல் மன்னாறு புனித நூலின் மகத்துவத்தை பாராட்டுகிறார். பதூன்களிடமும், இஸ்ரவேலர்களிடமும் இருந்த சிறப்பான பண்புகளை அழித்ததுதான் இசுலாம். குறிப்பாக பெண்களை சிறப்பிடத்தில் வைத்திருந்த பதூயின்களின் பண்பாட்டை சிதைத்தது இசுலாம்.
    பதூயின்களை இசுலாம் பண்படுத்தியது எப்படி?
    குர்ஆன் வசனம் 9: 5 —- புனித மாதங்கள் சென்றுவிட்டாள் இணைவைப்பவர்களை – அவர்களை நீங்கள் கண்ட இடங்களில் கொல்லுங்கள். அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகை இடுங்கள்; (அவர்கள்) நடமாடும் பாதைகளெல்லாம் அவர்களுக்காக நோட்டமிட்டவர்களாக உட்கார்ந்திருங்கள்.ஆனால் அவர்கள் பாவமன்னிப்பு கோரி , தொழுகையை கடைபிடித்து வந்தால் அவர்களுடைய பாதையை குறுக்கிடாமல் விட்டு விடுங்கள்.

    இசுலாத்திற்கு மாறிவிட்டாள் பதூயின்களிடம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடாதீர்கள் என்பது கடைசிவரியின் பொருள். இப்படி நிறைய வசனங்கள் உண்டு.

  12. இஸ்லாம் மற்றும் கிறிஸ்து சம்பத்தப்பட்ட புத்தகங்களில் எல்லாம் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதெல்லாம் இப்போது பிரச்சனை இல்லை. நடைமுறை வாழ்க்கையில் முஸ்லீம்களும் கிருஸ்துவர்களும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைத்தான் பார்க்கவேண்டும். குரானிலும் பைப்பிளிலும் சொல்லப்பட்டுள்ள கருத்துப்படிதான் உலகத்தில் இந்த மதத்தை சார்ந்தவர்கள் நடந்து வருகிறார்களா என்பதையும் யோசிக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு முறையில் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். ____________________. இதுவெல்லாம் அரபு, அரேபியா, ஆப்கனிஸ்தான் மற்றும் பிற இஸ்லாமிய நாடுகளில். அங்கெல்லாம் மதசார்ப்பின்மைதான் வேண்டும் என்று கேட்பதில்லை. அதேபோல் கிருத்துவர்கள் தேவைக்கு ஏற்றபடி விவாக ரத்து செய்துவிட்டு_______மணம் முடித்துக்கொள்கிறார்கள். ________________.இதெல்லாம் ஐரோப்பா மற்றும் அமெரிக்க போன்ற கிருத்துவர்கள் அதிகம் வாழும் நாடுகளில் சகஜம். ஆனால் இந்தியாவில் வாழும் முஸ்லீம்களும் கிருத்துவர்களும் அப்படி நடந்துகொள்வதில்லை. இந்துக்களின் கோட்பாடுபடிதான் நடந்து கொள்கிறார்கள்.

  13. //“நைஜீரியா போகோ ஹராம்: அமெரிக்க ஆசியுடன் ‘ஜிகாத்’!”//

    எல்லாத்துக்கும் அமெரிக்கா தான் காரணம்னா, மறைமுகமாக நீங்க சொல்ல வர்றது, ‘இஸ்லாமியர்களுக்கு சொந்த அறிவு’ இல்லைன்னா?

    நிதின் கட்காரி ஏதாச்சும் சொன்னா, உடனே ‘சிவன் கோயில்’, ஆர்.எஸ்.எஸ்.ல்லாம் உள்ள வருது. ஆனா, போகோ ஹராம் செய்யுறதெல்லாம் வெளிப்படையா இஸ்லாம் என்ற மதத்தின் கீழ். அப்படிப்பட்ட இஸ்லாம் பத்தி எதுவும் காணோம். ஏன் சார்? ஏதாச்சும் பயமா? 😀

  14. அய்யோ தென்றல் நீங்க என்ன சொல்ல வறிங்க ஒன்னும் புரியல திரிசுலம் கல் உடைக்கும் தொழிலாளி ஏர்போர்ட் ல மூட்டை தூக்குற கிறிஸ்டியனயும் போகோ காராம் தீவிரவாதியும் எப்பிடி மத வெறில ஒன்னா ஆவாங்க இத நிரூபிக்க 37 வரில விளக்கமா இவங்க மதத்தால எமாத்த படுகிறார்கள் அவர்கள் மதத்த வச்சு தீவிரவாதத வச்சு அடுத்தவன கஸ்டபடுத்துரான் 2 பேரும் ஒன்னுனு எப்பிடி சொல்லுறிங்களோ தெரியல அதுவும் இவ்வளவு பெரிய விளக்கம் நான் திரிசூலம் வாங்கனு சொன்னது அவங்க அப்பாவித்தனத்த பாக்கத்தான் அதுவும் இல்லாம மன்னாறு என்கிற பெயரில் ஆன்லைன் பிஜை ல பேசுரமாறி மன்னாரு பைபிள சொல்லி மத விவாதத்துகு கூப்பிட்டிஙக இப்ப தென்றல்ன்ற பேருல அதுக்கு வக்காளத்து வாங்குறிங்க அதத்தான் கேட்டேன் உங்கள் மத வெறி குறஞ்சு இருக்கா இன்னும் அதிகம் ஆகுமானு

    • காரணம் இல்லாமல் திரிசூலம் வாருங்கள் என்று கூப்பிட்டவுடன் பயந்து போய்விட்டேன். மண்ணடியில் நேரடி விவாதம் கணக்காக எதாவது இருந்தால் என்ன செய்வது?!!!

      மதங்களை நம்புகிற தொழிலாளர்களை வந்து பார்த்தால் மதவெறி என்னவென்று தெரியும் என்று கேட்டிருக்கிறீர்கள். நன்று. இதைத்தான் நானும் கோருகிறேன். மன்னாரின் கருத்தும் இதுதான். நீங்கள் தான் பைபிளில் இருப்பதை சுட்டிகாட்டுகிற பொழுது மன்னாரை இசுலாமிய மதவெறியோடு கோர்த்து விடுகிறீர்கள். இசுலாமிய மதவெறிக்கு வக்காலத்து வாங்குவதாக என்னையும் கருதுகீறிர்கள். ஆனால் இந்தப் பார்வை தவறு.

      போகோ ஹராம்மின் மதவெறியை கடவுள் நம்பிக்கை உள்ள எந்த தொழிலாளியோடும் மன்னாரும் நானும் ஒப்பிடவில்லை. உண்மையில் சொல்லப்போனால் அந்த தவறை நீங்களும் யுனிவர்படியும் தான் செய்கீறிர்கள். கேள்வியை திருப்பிக் கேட்டால் புரியும் என்று நினைக்கிறேன். கொட்டாம்பட்டியில் பழம் விற்கும் பாயும் போகோ ஹராம் மதவெறியனும் ஒன்றா?

      உழைக்கும் வர்க்கங்களின் பண்பாடு மதங்களின் அதிராகத்திற்கு அப்பாற்பட்டது என்பதை ஏற்றுக்கொள்வீர்களேயானால் (ஏற்றுக்கொண்டதால் தான் திரிசூலத்திற்கு அழைத்தீர்கள் என்று கருதுகிறேன்) கிறித்துவத்தின் பிற்போக்குத்தனம் மற்றும் கடுங்கோட்பாட்டுவாதத்தை விமர்சிக்க ஏன் தயக்கம்?

      இசுலாமிய பிற்போக்குத்தனத்தால் அமீனா பவஷர் கொல்லப்பட்டிருக்கிறார். கிறித்துவத்தில் எமிலி ரோசை பிசாசு விரட்டுகிறேன் என்று அடித்தே கொன்றிருக்கிறார்கள். சொல்லப்போனால், கத்தோலிக்க திருச்சபை தவறை மறைக்க அவரை புனிதராக அறிவித்திருக்கிறது.

      வேண்டுமானால் இசுலாம் பெந்தேகொஸ்தே வெறிக்கு மற்றொரு எடுத்துக்காட்டு வைப்போமே.

      பெண்கள் கார் ஓட்டலாமா கூடாதா என்று இசுலாமில் ஒரு விவாதம்! முசுலீம் நாடுகள் கார் ஓட்டிய பெண்ணுக்கு சவுக்கடி கொடுக்கிறது. இதில் இருவகையான இசுலாமிய வாதம் உண்டு. ஒன்று. மதவெறியுடன் கூடிய அடிப்படைவாதம். சவுக்கடி கொடுப்பது இந்த வகை. இரண்டு. ஹதிசுக்குள் ஆதாரம் தேடுகிற சந்தர்ப்பவாதம். ஆயிசா ஒட்டகத்தின் மேல் சென்றதை நபிகள் கண்டிக்கவில்லை. ஆகையால் பர்தா போட்ட பாத்திமா இப்பொழுது டாட்டா சுமோ ஓட்டலாம். அதை இசுலாம் அனுமதிக்கிறது. இரண்டாவது தான் மிகவும் நூதனமான உழைக்கும் மக்களை சுரண்டுகிற காலித்தன வகையைச் சார்ந்தவை.

      பெந்தேகொஸ்தேவிற்கு வருவோம். சர்க்கரைச் சத்தில் கால் அழுகிக் கிடந்தாலும் மருத்துவம் பார்க்காத தேவ ஆட்டுக்குட்டிகள் இங்கும் உண்டு. சங்கீதத்தில் இருந்து ஒரு வசனம் சொல்வார்கள் இப்படி; உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவருடைய நிழலிலே தங்குவான். அது போதும் நோயை சொஸ்தமாக்க! இறந்த பிணத்தை இயேசு மீட்பார் என்று ஒரு மாதமாக திருச்சியில் வைத்து ஜெபம் செய்யவில்லையா? இது வெறும் பிற்போக்குத்தனம் அல்ல மதவெறி. அதே சமயம் பால் தினகரன் குடும்பம் அப்போல்லா ஹாஸ்பிட்டலில் பல இலட்சம் கட்டிவிட்டு அங்கேயே அற்புத சுகமளிக்கும் சுவிசேசங்களை ஒளிபரப்பு செய்தார்கள். இது கிறித்துவத்தின் மற்றொரு பணக்கார பரிமாணம். அதவாது இசுலாம் படி ஒட்டகமும் காரும் ஒன்று!!! இவர்களுக்கு அப்போல்லவும் அற்புத சுகமளிக்கும் சுவிசேசமும் ஒன்று!!! இவைதான் மதங்கள் இன்று அடைந்திருக்கிற பரிணாமங்கள்.

      இந்து வெறியும் லேசுபட்டதல்ல. வஹாபிகள் என்று சொல்கிற பொழுது சாதி இந்துக்கள் நெய் ஊற்றி தின்றதற்காக தாழ்த்தப்பட்டவர்களை தாக்கியிருக்கிறார்கள். தில்லையில் தமிழில் பாடினால் தீட்டு என்று சொல்கிற சோ போன்ற வஹாபிகள் இங்கு உண்டு. வேதத்தின் புருச்சூக்தமே வர்ணத்தை வழிமொழிகிறது! செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக நான்கு தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் அடித்தே கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்து மதத்தின் தீவிரவாதம் இசுலாமிய மதவெறியுடன் எந்த வகையிலும் குறைச்சல் அல்ல.

      யுனிவர்படியின் மற்றும் உங்களின் கருத்துப் படி தீவிரவாத பொறியமைவுகள் இசுலாத்தில் மட்டும் தான் அடிப்படையிலேயே இருக்கிறது என்று சொல்லிவிட்டு நகர்கிற பொழுது விமர்சனம் அரை குறையாக இருக்கிறது. இது எதைவிடவும் ஆபத்தானது. வர்க்கப் பார்வையை முற்றாக புறக்கணிக்கிறது.

      பொதுப் புத்தியில் இசுலாமியன் என்றால் இப்படித்தான் என்று சொல்லிவிட்டு நகர்கிறது (உதாரணம்: பின்னூட்டம் 10.1). இப்படிச் செய்தால் இதில் குளிர்காயப் போவது பிஜே, பால் தினகரன், ஆர் எஸ் எஸ் போன்ற தெள்ளவாரிகள் தான்.

      போகோ ஹராமை, ஆர் எஸ் எஸ்ஸை, கத்தோலிக்க திருச்சபையை உழைக்கும் மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தி அம்பலப்படுத்துவதுதான் நோக்கமே தவிர பிஜே க்கு முட்டுக்கொடுப்பதல்ல.

      மதம் உங்களுக்கு ஒரு பிரச்சனை இல்லை என்றால் இதை புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

      • Hi Thendral,

        You are not replying to my comments. You are also not addressing my points. But you are repeating your opinion about my stand in replies to Joseph.

        // மன்னாரின் கருத்தும் இதுதான்.//

        Thendral, you are losing your credibility. I request you to reread his comment and my reply to him. If possible reply to my replies.

        // கொட்டாம்பட்டியில் பழம் விற்கும் பாயும் போகோ ஹராம் மதவெறியனும் ஒன்றா//

        If both force their women and girls into black envelop, then the difference is only in degree. If the fruit vendor is doing it for the fear of repercussions from Jamaath, then I can understand his inability. But he has to do something against black envelopes. Otherwise, the difference is only in degree.

        // அமீனா & எமிலி //

        We can see 1000s of Ameenas, but only few exceptional Emilies. In addition, can this Ameena be declared ‘Saint’?

        // பெண்கள் கார் ஓட்டலாமா கூடாதா என்று இசுலாமில் ஒரு விவாதம்!//

        Does such kind of debate happen in any other group?

        // சர்க்கரைச் சத்தில் கால் அழுகிக் கிடந்தாலும் மருத்துவம் பார்க்காத தேவ ஆட்டுக்குட்டிகள்//

        As against Ameena, who became ill (fainted/collapsed?) and so cannot ask for help, walk out, call a auto/taxi, and go to the hospital, this diabetic man can do all this but he chooses not to. It is his choice. (If you know what the program for diabetes is, you may also prefer divine intervention to all those injections and dietary program). Don’t you see the difference?

        // இறந்த பிணத்தை இயேசு மீட்பார் என்று *** ஜெபம் செய்யவில்லைய இது வெறும் பிற்போக்குத்தனம் அல்ல மதவெறி.//

        This மதவெறி does not affect others much (provided the decaying body is kept in airtight coffin).

        // இந்து வெறியும் லேசுபட்டதல்ல***//

        I agree.

        // இந்து மதத்தின் தீவிரவாதம் இசுலாமிய மதவெறியுடன் எந்த வகையிலும் குறைச்சல் அல்ல//

        I see a difference. Hindus don’t have a clear cut ‘gods word’ or ‘perfect example’ that is accepted by all Hindus. It is not the case with Muhamadans. We can discuss it.

        // யுனிவர்படியின் *** கருத்துப் படி தீவிரவாத பொறியமைவுகள் இசுலாத்தில் மட்டும் தான் அடிப்படையிலேயே இருக்கிறது//

        Muhamadism specifically prohibits having pity (for women involved in unmuhamadanistic relation with men). It says to beat boys and girls to make them pray. Can such examples be seen elsewhere?

        // இதில் குளிர்காயப் போவது பிஜே//

        I think that when non-muhamadans know about Muhamadism well, PJs won’t have much of followers. As a result, it would be ditto to other groups too.

        • தோழர் யுனிவர்படி,

          உங்களது பின்னூட்டத்தின் நோக்கம் மற்றும் அது கொண்டுபோய் நிறுத்துகிற முட்டுச் சந்துதான் எனக்குப் பிரச்சனை. மற்றபடி, உங்களது பின்னூட்டங்களின் கருத்துகளை நான் நிராகரிக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

          இருக்கிற மதத்திலேயே எந்த மதம் கொடிய மதம் என்ற கேள்வி சரியானதாக எனக்குப்படவில்லை. ஏனெனில் மதம் என்பதே கொடியதுதான்.

          This is the definition of problem. I construct all of my feedbacks based on this platform. I have shown multiple examples on this plot. Quantities and qualities of atrocities committed by various religious outfits are part of a problem. They are not a problem itself. They are all effects. Where is the cause then?

          I opine that without class nature and socio-economic aspects, addressing religion is a crude and vague attempt.

          இதன் அடிப்படையில் தான் மதம் தொடர்பான கருத்துக்களை உள்வாங்குகிறேன். ஆகையால் மதவெறி என்று வருகிற பொழுது இசுலாம் மட்டுமல்ல, இந்து, கிறித்தவம் மற்றும் பெளத்தமும் தப்பிப்பதில்லை. உங்களது சில பின்னூட்டங்களுக்கு அடுத்த திரியில் இந்த வகையில் நின்று பதிலளிக்க முயற்சி செய்திருக்கிறேன்.

        • தங்களது குறிப்பிட்ட பின்னூட்டங்களுக்கான சில பார்வைகள்;

          \\If both force their women and girls into black envelop, then the difference is only in degree. If the fruit vendor is doing it for the fear of repercussions from Jamaath, then I can understand his inability. But he has to do something against black envelopes. Otherwise, the difference is only in degree.\\

          ஹிஜாப்பிற்கு எதிராக போராடுவதற்கு முதலில் நாம் பாட்டாளிகளை அணி திரட்ட வேண்டும். உற்பத்தி சக்திகளை உழைப்பாளிகளுக்கு சார்பாக்குகிற பொழுதுதான் இதுபோன்ற கருப்புத்திரைகளை வீசி எறியமுடியும். இப்படியொரு சாத்தியம் சோசலிச அரசில் கசகசஸ்தானிலும் கிர்கிஸ்தானிலும் நிகழ்த்தப்பட்டிருக்கிறது (இதே நாட்டில் தோழர்கள் பிரச்சாரத்திற்கு சென்ற பொழுது மத அடிப்படைவாதிகள் சுடுதண்ணீரையும் ஊற்றியிருக்கிறார்கள் என்பதையும் நினைவில் கொள்க). நாத்திகத்தை இந்த நாடுகளில் “free thinking” என்று வரையறுத்திருக்கிறார்கள்.

          பர்தா போன்ற விசயங்கள் அரசால் மேலிருந்து கீழாக அனைத்து நிலைகளிலும் பாதுகாக்கப்படுகின்றன. எனவே இதை அகற்ற மக்களை அடிமைத் திரையிலிருந்து அகற்ற வேண்டும். ஆளும் வர்க்கத்தை அகற்ற வேண்டும். உழைப்பின் பலன் உறுதியாக்கப்பட்டால் தான் பண்பாடு கலச்சாரம் பற்றி பேச முடியும். அப்பொழுது பர்தா மட்டுமில்லை, தீட்டு, வெள்ளைப் புடவை, தாலி, மெட்டி, போன்ற பல பிற்போக்குத்தனங்களுக்கு முடிவு கட்ட முடியும். இதில் பல அனுபவங்களை பல்வேறு நாட்டு பொதுவுடமை இயக்கங்கள் பருண்மையாகப் பெற்றிருக்கின்றன. எனவே இதுபோன்ற சீர்திருத்தப் பாதையை கம்யுனிஸ்டுகள் தங்களது வேலைத்திட்டத்தில் முதன்மையானதாக கோர முடியாது என்று அறுதியிடுகிறேன்.

          \\ Muhamadism specifically prohibits having pity (for women involved in unmuhamadanistic relation with men). It says to beat boys and girls to make them pray. Can such examples be seen elsewhere?\\

          பெண்களைப் பொறுத்தவரை ஜனநாயகம் துளியும் இசுலாமில் கிடையாது என்பது தெரியும். மற்ற மதங்களில் மட்டும் என்ன வாழ்கிறது? மாதவிடாய் காலங்களில் இன்றைக்கும் பெண்கள் வீட்டிற்குள் புழங்க அனுமதிக்காத மதம் எந்த மதம்? கணவனுடன் உடன் கட்டை ஏறினால் மோட்சம் கிடைக்கும் என்று சொன்னது எந்த மதம்? விதவைகள் கிறித்துவ இசுலாம் மதத்தில் இருக்கிறார்களா? கன்னி மரியாள் மட்டும் புனிதமானவள் மற்றவரெல்லாம் பாவிகள் என்று சொன்னது எந்த மதம்? மதத்தின் ஒரு பகுதியினரை வேசிமகன் என்று எந்த மதம் சொல்கிறது? மதம் அனைத்துமே மனித குலத்திற்கு எதிரானவை என்கிற பொழுது கழுதைவிட்டையில் முன்விட்டை என்ன? பின் விட்டை என்ன?

          \\I see a difference. Hindus don’t have a clear cut ‘gods word’ or ‘perfect example’ that is accepted by all Hindus. It is not the case with Muhamadans. We can discuss it.\\

          சாதியால் உயிர் வாழ்கிற இந்து அமைப்பு கடவுள் வார்த்தையால் மக்களை ஒன்றினைக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்களா? அப்படியெல்லாம் இறங்கிவருகிற அளவிற்கு பேச்சுக்கு நடிக்கிற அளவிற்கு கூட பார்ப்பனீயம் மனிதத்தன்மையை தன்னகத்தே கொண்டிருக்கவில்லை. இந்தியாவில் மதமாற்றத்திற்கு காரணமே இந்துமதத்தின் கொடூரம் தான். பிரம்மன் பிராமணன், விஷ்ணு சத்ரியன், சிவன் சூத்திரன். எந்தக் கடவுளை பொதுவாகக் கொள்வது? Accepted by all Hindus என்பதற்கும் Gods word என்பதற்கும் என்ன அர்த்தம்?

          \\ This மதவெறி does not affect others much (provided the decaying body is kept in airtight coffin).\\

          பெரும்பாலான ஒடுக்கப்பட்ட மக்கள் இந்த வகை கிறித்துவத்திற்கு பலியாகி இருக்கிறார்கள். ஆதிக்க சாதிகளைப் போன்று மரியாளின் கத்தோலிக்கத்தை தேர்ந்தெடுக்கவில்லை. ஆக இது போன்ற செயல்களால் நம் உழைக்கும் வர்க்கத்தையே இந்தவெறி விழுங்கியிருக்கிறது எனில் இது பிரச்சனையா? பிரச்சனையில்லையா?

          காலனிய நாடுகளில் கிறித்துவம் பரப்புரை மதமாக இருக்கிற பொழுது மதவெறி என்பது மக்களைக் கொல்வதற்காக அல்ல. ஆகையால் தான் this மதவெறி does not affect others much என்று குறைத்து மதிப்பிடுகீறிர்கள் என்று கருதுகிறேன்.

          மக்கள் சுரண்டலை உணர்ந்து கொண்டு போராடாமல் இருப்பதற்கு போரட்டத்தைக் காயடிக்கிற பல்லாக்க ஷபராபா மதவெறியா இல்லையா?

          மதவெறிக்கான பார்வை இப்படியிருக்க, நீங்கள் சொல்வதைப் போல போகோ ஹராம் போல பெந்தேகோஸ்தே இந்தியாவில் மக்களை ஆயுதங்களுடன் கொன்று குவிக்குமா என்றால் தீர்க்கமாய் இல்லையென்று சொல்லலாம். ஏனெனில் இந்தியாவில் ஆர் எஸ் எஸ் இருக்கும் பொழுது மக்களைக் கொல்கிற வேலைகளைச் செய்வதற்கு தரகு முதலாளிகள் பெந்தேகோஸ்தேவைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் என்ன?

          போகோ ஹராம் இந்தியாவில் நடக்கவில்லையா? ஆப்பிரிக்காவில் தலைமை தாங்கியது இசுலாமிய வெறியர்கள். இந்தியாவில் தலைமை தாங்கியதும் தாங்கப் போவதும் ஆர் எஸ் எஸ் காரர்களே.

          மற்றபடி பெந்தேகோஸ்தேவை வெறி என்று மதிப்பிடுவதற்கு காரணம் போராட்ட குணத்தை காயடிக்கிறது என்பது தான்.
          ———————————————-
          கிறித்துவம் பரப்புரை மதமாக இல்லாமல் அரசாளும் மதமாக இருக்கின்ற நாடுகளில் பாசிசத்திற்கும் (இத்தாலி) நாசிசத்திற்கும் (ஜெர்மனி) முட்டுக் கொடுத்த வடிவம் முழுக்க முழுக்க மதவெறி வடிவமே.

          அமெரிக்காவில் பியுரிடானிசத்திற்கு அச்சாணியாக இருந்தது கிறித்தவமே.

          அமெரிக்க ஆங்கிலோ சாக்சன் போன்ற வெறியர்கள் கறுப்பின மக்களை கேள்வி கேட்பாரில்லாமல் கொன்று குவிப்பதற்கு ஆதாரமாக ஜிகாத்திற்கு குரானைப் போன்று பைபிள் தான் இருந்தது.
          ——————————————-

          • Hi Thendral,

            // பின்னூட்டத்தின் நோக்கம்//

            Same as yours.

            //முட்டுச் சந்து//

            Why? Please explain, if possible.

            //எந்த மதம் கொடிய மதம் என்ற கேள்வி//

            We know weapons are dangerous. One weapon is more dangerous than another.

            // class nature //

            I don’t ignore this aspect.

            //சீர்திருத்தப் பாதையை கம்யுனிஸ்டுகள் தங்களது வேலைத்திட்டத்தில் முதன்மையானதாக கோர முடியாது//

            ஏன் என்று விளக்கவும்?

            //கழுதைவிட்டைகள்//

            பன்றிவிட்டைகள்?

            //சாதியால் உயிர் வாழ்கிற இந்து அமைப்பு***//

            I am fully aware of it. I accept this problem. The same problem lies in Oumma too. At least Hindu society does not a book said to be ‘revealed’ that is acceptable (known by, read by, valued by, etc) to all ‘Hindus’ (all Indians known by this name in general). At least you agree that ‘Hindus’ don’t have a ‘perfect example’. For me this constitutes a very big difference.

            // போரட்டத்தைக் காயடிக்கிற பல்லாக்க ஷபராபா மதவெறியா இல்லையா?//

            I agree to it in this sense.

            // பாசிசத்திற்கும் (இத்தாலி) நாசிசத்திற்கும் (ஜெர்மனி) முட்டுக் கொடுத்த வடிவம் முழுக்க முழுக்க மதவெறி வடிவமே.//

            I agree partially. Hitler was not a practicing Christian. He seemed to have revered Muhamad.

            //ஆங்கிலோ சாக்சன் *** வெறியர்கள் கறுப்பின மக்களை கேள்வி கேட்பாரில்லாமல் கொன்று குவிப்பதற்கு//

            குவித்தற்கு is the right word. It has stopped since some decades. It lasted around 3 centuries. But, Quran’s work started 14 centuries back and is still on, particularly in Africa.

            • தோழர் யுனிவர்படி,

              //முட்டுச் சந்து// Why? Please explain, if possible.

              முட்டுச் சந்து என்று சொல்வதற்கு முதல் காரணம் இசுலாமிய மதவெறியை கடுங்கோட்பாட்டுவாதத்தை சாடுகிற பொழுது அதற்குண்டான அரசியல் பார்வையை உங்களது நியாயமான கோபம் பார்க்க மறுக்கிறது என்பதாகும். இந்தப்பதிவின் முதல் பின்னூட்டத்தில் அமெரிக்க ஆசியுடன் ஜிகாத் என்பதை தாங்கள் விவாதித்தில் பரிசீலிக்கவில்லை.

              ஜிகாத்தை இசுலாமிய வெறியோடு மட்டுமே சம்பந்தப்படுத்துவது அரைபக்க உண்மை மட்டுமே. கமலகாசனும் இதைத்தான் சொல்கிறார் “ஒட்டகமுதுகின் மேல் சமவெளி கிடையாது” என்று. இருவருக்கும் என்ன வித்தியாசம்?

              ஆங்கில இந்துவில் பிரவீண் சாமியும் தமிழ் இந்துவில் ஆர் எஸ் எஸ் ஆர்கனைசர் இதழின் முன்னால் தலைமை எடிட்டர் சாரியும் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். இருவரும் இந்த விடயத்தில் ஏன் வேறுபடவில்லை?

              ஏகாதிபத்தியக் கைக்கூலிகள் என்று வருகிற பொழுது வஹாபிசம் பேசுகிற பிஜேவும் உண்டு. பாசிசம் பேசுகிற ஆர் எஸ் எஸ்ஸும் உண்டு. இருவரையும் வேறுபடுத்தி தனிமைப்படுத்தி பார்ப்பதற்கு ஆதாரமாய் இருப்பது இவர்கள் இருவரும் ஒரே புள்ளியில் இணைகிறார்கள் என்பதுதான்.

              அரேபிய இசுலாமில் எண்ணெய் வளம் உண்டு. இந்திய இசுலாமில் என்ன வளம் உண்டு? சகோதரத்துவம் என்பது மயிரளவிற்கும் கிடையாது என்பதால் இவர்கள் இருவரையும் இயக்குவது இசுலாம் அல்ல. இருவரும் வழுக்கிச் சறுக்குகிற வர்க்கப் பிசுக்கு இதில் உண்டு. இதன் அர்த்தம் இசுலாமிய வெறியர்களுக்கு அடிப்படை வெறும் குரானும் ஹதீசும் மட்டுமல்ல என்பதே.

              இசுலாம் முகம்மதுவின் காலத்திலேயே அடிபட்ட ஒன்று. புனிதப் பவுலின் திருவெளிப்பாட்டை ஏங்கெல்ஸ் அறுத்துக் கூறுபோடுகிற பொழுது (இப்படிச் சொல்கிற பொழுது ஜோசப் போன்ற நண்பர்கள் எளிதில் முரண்படுகிறார்கள்; கொந்தளிக்கிறார்கள்), அஸ்கர் அலி இன்ஞினியரும் பிளந்து காண்பித்திருக்கிறார்.

              1) மெக்காவில் இறக்கப்பட்ட(!!!) வசனங்களும் மதீனாவில் இறக்கப்பட்ட வசனங்களும் வர்க்கச்சார்புடையவை. தேவைப்படுகிற பொழுது தேவையான வசனங்கள் ஒரு பக்கச் சார்பாக வந்து விழுந்தது. சீர்திருத்த இயக்கங்களும் இங்கிருந்துதான் ஆரம்பிக்கன்றன.

              2) லா இலாகா இல்லல்லாஹி என்பதைத் தாண்டி செல்வந்தர்கள் வணங்கிய தேவதைகளை முகம்மது ஆதரிக்க வேண்டியிருந்தது! பிறகு இது சைத்தானின் வேலை என்று சமாளிக்கவும் வேண்டியிருந்தது!

              3) மதினாவில் தொழுகை மெக்கா நோக்கி நடைபெறவில்லை. செல்வந்த கிறித்தவர்களின் ஆதிக்கத்தை தகர்ப்பதற்கு முன் செருசலேமை நோக்கித்தான் தொழுகையே நடந்தது!

              4) வட்டி நூதனமாக வசூலிக்கப்பட்டது.

              5) உமரின் ஆட்சி சிறந்த இசுலாமிய ஆட்சி என்று இங்கு கூவுகிற பதர்களுக்குத் தெரியுமா; செல்வத்திற்காக நடந்த உக்கிரமான போர்கள் உமரின் காலத்தில் தான் என்று?. உமர் யாரால் எதற்காகக் கொல்லப்பட்டார்?

              இந்து ஐந்து எடுத்துக்காட்டிலும் அப்பொழுதே சமூகம் வர்க்கங்களாக பிரிந்துபோனதையும் குரானோ ஹதிசோ இசுலாமிய அதிகார வர்க்கங்களை ஒரு போதும் கட்டுப்படுத்தவில்லை என்பது தானே? இந்த அடிப்படையில் பார்த்தால் போகோ ஹராமை புரிந்து கொள்ள முடியாதா? இசுலாமிய மதச் சண்டை ஆர் எஸ் எஸ் இயக்கத்தையும் சேர்த்துதானே விளக்குகிறது? இப்படி நடைபெறுவதற்கு மதம் மட்டும் தான் மூல காரணமா?

              ——————————————–
              இரண்டாவதாக திப்பு சுல்தானைப் பற்றிய பதிவில் வைக்கப்பட்ட தங்களது பின்னூட்டங்கள் முழுக்க முழுக்க அவர் ஒரு இசுலாமிய வெறியர் என்று காட்டுவதாகவே இருந்தது. சிவிலியன் போர்வையில் ராம் பெயர் கொண்ட மோதிரத்தை அணிந்து தப்பிக்க முயற்சி செய்தார் என்று எழுதுகிற அளவிற்கு உங்களுக்கு அப்படியொரு சினம்! மதபிற்போக்கு தனங்களை மிக அருகில் இருந்து அவதானித்து இருப்பீர்கள் என்று கருதுகிறேன். அதனால் தான் அப்படியொரு கதைப்பு! திப்புவை அவதூறு செய்வதற்கு காரணமாய் திளங்கியது எந்த விடயங்கள்? அது ஆர் எஸ் எஸோடு கத்தோலிக்க திமிர்தனத்தோடு எந்தவகையில் வேறுபடுகிறது?
              —————-

              மூன்றவதாக மியான்மர் பவுத்த வெறிக்கு இசுலாமின் அடிப்படைவாதமும் ஒரு காரணம் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். அடிப்படைவாதத்தால் இரு மதங்கள் அடித்துக்கொண்டதாக எந்த வரலாறும் கிடையாது. நீங்கள் கூறுவது இயல்பென்றால் தமிழகத்தில் சமணம் அழிக்கப்பட்டு இந்து மதம் எப்படி திணிக்கப்பட்டது? அர்ஜீன் சம்பந் போன்றவர்கள் திணமணியில் சமண மதத்தின் கொடூரங்கள் என்று எழுதுகிற பொழுது உங்களது கருத்தும் இசுலாமிய வெறி தான் இனச் சுத்திகரிப்பிற்கு வழிவகுத்தது என்று கூறமுடியுமா? இந்தப் பார்வை சரியா?
              —–

              இது கொண்டு வந்து நிறுத்துகிற முட்டுச் சந்து இதுதான்: வர்க்கமாய் அணி திரள்வதற்கு பதிலாக பொதுப்புத்தியில் இசுலாமியனை வரையறுப்பதில் கொண்டு போய் முடிவதாக அஞ்சுகிறேன். இந்தப் பார்வை மற்றொருமொரு மியான்மர் நிகழ்வை இந்தியாவில் நிகழ்த்துவதற்கு போதுமானது. ஏனெனில் மோடி ஏற்கனவே சொல்லியிருக்கிறார் இப்படி “ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு”

              மூன்றாம் விதியைப் பயன்படுத்துகிற மோடி போன்ற பாசிஸ்டுகள் முதல் விதியின் காரணகர்த்தாக்கள் தாங்கள் தான் என்பதை மறந்துவிடுகிறார்கள். கம்யுனிஸ்டுகள் அதை இப்படி அம்பலப்படுத்துகிறார்கள் “புறவிசையின் உதவியின்றி, அமைதிநிலையிலோ அல்லது இயக்க நிலையிலோ உள்ள ஒரு பொருள் தொடந்து அதன் நிலையிலேயே இருக்கும்”

              மேலும் புறவிசைகள் என்னென்ன வகைப்பட்டவை என்றும் சொல்ல கம்யுனிஸ்டுகள் கடமைப் பற்றிருக்கிறார்கள்.
              ———-

              அடுத்த திரியில் சீர்திருத்த இயக்கம் கம்யுனிஸ்டுகளின் முதன்மையான வேலைத்திட்டம் அல்ல என்பதற்கான எனது பார்வையை வைக்கிறேன்.

              ————————

              • நண்பர்களே,
                பொதுவாக தனிப்பட்ட மத நம்பிக்கை/கடவுள் நம்பிக்கை இருப்பது குறித்து பிரச்சினை இல்லை. அது அரசியலுடன் கலக்கும் போது தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. அது இந்து மதமாகட்டும் , இசுலாமிய மதமாகட்டும் , கிருத்துவமாகட்டும் அல்லது பௌத்தமாகட்டும், அந்த மதங்களை பெரும்பானமையாக பின்பற்றும் நாடுகளில் , தனிநபரைத் தாண்டி மதம் ஆளும்/அதிகார வர்க்கத்துடன் இறுகிக் கலந்திருக்கிறது என்பதே பிரச்சினை.

                ஏனெனில் மதம் ஒரு சமூக மக்களை ஆட்டுவிக்கும் போது , ஒருபுறம் அவர்களைத் தொடர்ந்து அறியாமையில் ஆழ்த்திட மத நூற்களும் சடங்குகளும் மறுபுறம் அவர்களைச் சுரண்ட மற்றும் அதை ஒரு அதிகாரமாய் நிலைநிறுத்த அரசியலும் வேண்டும்.

                ஏகாதிபத்தியம், இதைக் கச்சிதமாக பயன்படுத்திக் கொள்கிறது. அதுவும் பின்லேடன் ,அபூபக்கர் போன்ற அடிப்படைவாதிகளை வளர்த்து ஆளாக்குவதன் மூலம் குறிப்பிட்ட சமூக மக்களை என்றென்றும் மத பிற்போக்குதனங்களை விட்டு வெளியில் தப்பிச் செல்லாமல் பார்த்துக் கொள்கிறது. அவர்களால் அதற்கு ஏதும் பிரச்சினை வரும்போது மட்டும் அவர்களைக காலி செய்துத தன்னை மீட்பனாகப பிரகடனம் செய்துக கொள்கிறது .

                இங்கே நாம் வெறும் மதம்,அடிப்படைவாதம் அதனால் ஜனநாயக மறுப்பு என்றுச சுருக்கிப் பார்ப்பதால், அமெரிக்காவின் பின்னணிச் சதியைப் புரிந்துக் கொள்ளாமல் போகக் கூடும். இங்கே சமூகத்திற்கும் அடிப்படைவாதத்திற்கும் உள்ள முரண்பாட்டை விட ஏகாதிபத்தியத்திற்கும் நாட்டிற்கும் உள்ள முரண்பாடுதான் பிரதானமாகும். வெறும் அடிப்படைவாதத்தை மட்டுமே முன்னிறுத்தி பார்த்தால் சீர்திருத்தம் நோக்கியே நம் சிந்தனை ஓடும்.

                கட்டுரை மத அடிப்படைவாதத்தை கடுமையாக எதிர்க்காமல், அப்பிரச்சினையின் மூலக் காரணத்தை முன் வைக்கின்றது . ஏனெனில் தேசிய ஊடகங்களில் இருந்து , சமூக வலைதளங்கள் வரை அனைவரும் இதை வெறும் மத அடிப்படைவாதப் பிரச்சினையாக மட்டுமே பார்ப்பதால், பெரும்பான்மையான இசுலாமியர்கள் அம்முத்திரைக் குத்தப்பட்டு தனிமைபடுத்தபடுவார்கள்.

                நன்றி

                • தோழர் சிவப்பு,

                  //அமெரிக்காவின் பின்னணிச் சதி//

                  எல்லாவற்றிற்கும் அமெரிக்காவை சந்தேகிப்பது சரியான அனுகுமுறையல்ல. குறிப்பாக Boko Haram பிரச்சனையில் இது தவறு.

                  //ஏகாதிபத்தியத்திற்கும் நாட்டிற்கும் உள்ள முரண்பாடுதான் பிரதானமாகும்.//

                  இந்த பிரதான முரன்பாடு எவ்வளவு முக்கியமோ அதே போலத்தான் ஆண் பெண் இடையிலான முரன்பாடும். ஆண் பெண் இடையிலான முரன்பாடு தான் Boko Haram ஐ பெண்களைக் கடத்த வைத்திருக்கிறது.

                  //கட்டுரை *** மூலக் காரணத்தை முன் வைக்கின்றது//

                  No. it is pointing to Capitalism, while the real reason is quranic misogyny,

                  //பெரும்பான்மையான இசுலாமியர்கள் *** தனிமைபடுத்தபடுவார்கள். //

                  நாம் எதுவும் பேசாமல் இருந்தாலும் இதுதான் நடக்கும். பாரபட்சமின்றி விவாதிப்பதே சிறந்தது. Muhamadans are not only minority in some countries. They are majority in 55 countries.

              • Hi Thendral,

                // இசுலாமிய மதவெறியை கடுங்கோட்பாட்டுவாதத்தை சாடுகிற பொழுது அதற்குண்டான அரசியல் பார்வையை உங்களது நியாயமான கோபம் பார்க்க மறுக்கிறது//

                Muhamadism [இசுலாமிய கடுங்கோட்பாட்டுவாதம்] is the result of Muhamad’s narcissism and misogyny (which is a result of his mother abandoning him). It cannot be explained in Class. Muhamad was born in a relatively modest family.

                // அமெரிக்க ஆசியுடன் ஜிகாத்//

                Boko Haram has got some of its weapons from Libyan rebels who were armed by US. I accept this. But the allegation that Boko Haram is a product of US is not right. I won’t accept it.

                // கமலகாசன்//

                I am not interested in him since a decade.

                //பிரவீண் சாமி, ஆர் எஸ் எஸ் ஆர்கனைசர் இதழின் முன்னால் தலைமை எடிட்டர் சாரி//

                I never heard of them.

                // செல்வந்த கிறித்தவர்களின் ஆதிக்கத்தை தகர்ப்பதற்கு முன்//

                Muhamad wanted to project himself as a messenger of a god more widely known than those of quraish. Countries like Syria, Egypt, Ethiopia, etc were then under Christianism. So he wanted to brow-beat quraish with talks of Jerusalem. He also wanted to impress the jews in the peninsula. When none of this worked out, he changed his ‘direction’. This is about Muhamad, not about the influence of ‘rich’ christians.

                // இரண்டாவதாக திப்பு //

                Tippu was a controversial figure. I don’t have to see him as Vinavu does. Vinavu’s stand on his is nearly ‘hagiographic’. Tippu is written in plural while British are written in singular (in another post), etc. Tippu is a foreigner to us as much as a British. My comments are in reaction to the ‘strange’ stand of Vinavu. All i have written, in essense, is ‘We can never know’ about true Tippu. Certainly he is not a representative of working people. As for the ring, i have written as ‘probably’. Where is my anger against Tippu? My anger is against Vinavu for having a ‘strange’ stand on this topic.

                // அது ஆர் எஸ் எஸோடு கத்தோலிக்க திமிர்தனத்தோடு எந்தவகையில் வேறுபடுகிறது?//

                I am not well versed with RSS’s discourse. I know Parppanism. I critic it without reserve. I say what i want to say without worrying about what RSS’s opinion on the issue. In addition, Muhamadism has a global reach not RSS. I view the issue of Muhamadism in global perspective.

                // மூன்றவதாக மியான்மர்.//

                I stand by what i have said. It is not by hiding we can avoid problems. If we don’t speak about it, Extreme right is there to profit. As for ‘Samanam’ in Tamilagam, it met the same fate of Christianism in Egypt, Syria, Zorastrianism in Persia, etc at the hand of Muhamadists. But in Burma, it is not Burmese who has invaded Muhamadan lands.

                // முட்டுச் சந்து இதுதான்: வர்க்கமாய் அணி திரள்வதற்கு பதிலாக//

                I want working people to come together as a Class. (I want also others to come join in, in the interest of solidarity and sustainability of humanity.) But I don’t think it will happen without discussing the issues of division. At least you have not convinced me so far why we should be mum on Muhamadism while critiquing all other isms without any reserve.

                //மோடி போன்ற பாசிஸ்டுகள்//

                Muhamadism is pure fascism. Muhamadists are also fascists. While talking so much about Modi and RSS, we should not forget about Muhamadists who have got global presence.

                Finally,
                அமைதிநிலையிலோ அல்லது இயக்க நிலையிலோ உள்ள ஒரு பொருள் மற்ற பொருள்களின் அமைதிநிலையையோ அல்லது இயக்க நிலையையோ பாதிக்காமல் இருக்கிறதா?

  15. //கொட்டாம்பட்டியில் பழம் விற்கும் பாயும் போகோ ஹராம் மதவெறியனும் ஒன்றா?//இந்த ஈர வெங்காயத்தான் நானும் சொன்னேன் நீங்கதான் தீவிரவாதிகளுக்கு பெந்தகோஸ்த மத வெறியும் ஒன்னுனு விளக்கம் குடுத்திங்க போதும் இத்தோட நிறுத்திக்குவம் இனி பேச வேண்டாம் இசுலாமிய தாவா பணி செய்யுறவங்க மாறியே பேசுறிங்க அப்புறம் உழைக்கும் மக்கள சந்திக்க பயப்பட வேண்டாம் காட்டுக்குள்ள 200 பேர கடத்தி வச்சுட்டு அரசாங்கத்த மிரட்டுறவனதான் ச்ந்திக்க பயப்படனும்

  16. (இப்படிச் சொல்கிற பொழுது ஜோசப் போன்ற நண்பர்கள் எளிதில் முரண்படுகிறார்கள்; கொந்தளிக்கிறார்கள்) ஏன்பா யாருப்பா இங்க கொந்தளிச்சது நல்லா எனது பின்னூட்டத்தயும் மன்னாறு பேச்சயும் கவனிச்சு படிச்சு சொல்லுங்க கொந்தளிக்கிறது நீங்களா இல்ல நானா மத வெறிக்கு யாரு வக்காளத்து வாங்குறது நானா இல்ல நீங்களா என்னதான் நீங்க இசுலாமிய தீவிரவாத செயல்களுக்கு அடுத்த மதங்களை நீங்க துணைக்கு இழுத்தாலும் முசுலீம்களுக்கு நீங்க காபிர்தான் நாங்க சுயமாக சிந்திக்க தெரியாத்வர்கள் நீங்க மட்டும்தான் அறிவாளிகள் ரெம்ப நல்லாதான் சொல்லுறிங்க ஜோசப் என்கிற பெயர் மட்டும் பாத்துட்டு என்ன மதவெறியன் ஆக்கிட்டிங்க அதாவது பெந்தகோஸ்த மதவெறியன் நான் கேள்விபட்டது போல கண்மூடித்தனமாக கம்யூனிஸ்டுகள் இசுலாமியத்தயும் அதன் தீவிரவாத நடைமுறைகளையும் ஆதரிப்பார்கள் என்று அது உண்மையே யுனிவர்புட்டிட சொன்னது மாறி முட்டு சந்துனு தெரிஞ்சே அதுக்குள்ள ஏன் போறிங்க

    • நண்பர் p.joseph,

      [1]கம்யூனிஸ்ட்டுகள் யாரிடம் இருந்து ஆதரவை எதீர் பார்கீன்றனர் என்று நீங்கள் உணர்ந்து கொண்டால் , இவ் வீவாதமே [உங்களுக்கும் தென்றலுக்கும் நடைபெறும் ] தேவை அற்றது ஆகீவிடும்.

      [2]ஏழை எளீய மக்கள் மதம் என்ற பெயரில் பிரிக்கபட்டு உள்ளது யாருக்கு லாபம் ? யாருக்கு நட்டம் என்று யோசியுங்கள்.

  17. ஜோசப் என்ற பெயருக்காகவெல்லாம் உங்களை பெந்தேகோஸ்தே மதவெறியன் ஆக்கவில்லை. இது அவதூறு. இப்படியெல்லாம் ஒருவரை மதவெறியராக்கிவிட முடியாது என்பதை நினைவில் கொள்க.

    பின்னூட்டம் பத்தில் சிறப்பான கருத்தை வைத்த ஜோசப் அதற்கடுத்த பின்னூட்டங்களில் என்ன மாதிரியான நிலையை எடுத்தார் என்பதை கவனிக்க.

    இசுலாமியத்தின் தீவிரவாத நடைமுறைகளை இங்கு யாரும் ஆதரிக்கவில்லை. பிற மதங்களை ஒப்பீடு செய்வது ஏகாதிபத்தியத்தின் பருண்மைகளையும் மதங்கள் மக்களைச் சுரண்டுவதையும் புரிந்துகொள்வதற்காகத்தான். கிறித்துவம், இசுலாம், இந்து மற்றும் புத்த மதத்தின் தீவிரவாத அடிப்படைகளை தொகுத்து பின்னூட்டங்களில் வைத்திருக்கிறேன். அவை சரியா தவறா அல்லது உங்களது பார்வை என்ன என்று விவாதிக்காமல் தனிநபர் வாதத்திலேயே காலத்தைக் கழிப்பது என்ன பலனைத்தரும்?

    பெயரை வைத்து மதவெறியுடன் இணைக்கிறார்கள் என்று ஆதங்கப்படுகிற ஜோசப், இஸ்ராத் ஜகானை போட்டுத்தள்ளிய இந்த சமூகத்தை ஏன் விமர்சிக்க முன்வரக் கூடாது? 10.1இல் பிரதீப் வைக்கிற பார்வையின் அபாயகரம் தான் இன்று நாம் முறியடிக்கவேண்டியது. இதற்காக தற்பொழுது வரை என்ன முயற்சி எடுத்திருக்கீறிர்கள்?

    இப்படிச் சொல்வது உங்களுடன் முரண்பட்டு நிற்பதற்காக அல்ல. உங்களைப்போன்றவர்களும் இதன் அரசியலை அக்குவேறு ஆணிவேறாக பிரிக்க வேண்டும்; வர்க்கமாய் அணிதிரள வேண்டும் என்பதற்காகத்தான்.

    • தென்றல்,
      மத அடிப்படைவாதம் எப்படி ஏழை எளீய உழைக்கும் மக்களை பிரித்து ஆள முயல்கின்றது என்பதை மிக எளிமையாக கூற முயலுங்க்ளேன் ! நண்பர் joe அவர்கள் புரிந்து கொள்வார் !

      • தோழர் சரவணன்,

        ஜோசப்பிற்கு புரிந்து கொள்வது கூட பிரச்சனையல்ல. பின்னூட்டம் பத்தில் தன் நிலைப்பாட்டை தெளிவாகச் சொன்னார் இப்படி; “உங்க கூட மத விவாதம் பன்ன என்னால முடியாது யேசுவ கூட நீங்க திட்டலாம் எல்லா கிறிஸ்துவர்களையும் திட்டலாம் எனக்கு எந்த டென்சனும் இல்ல மதம் பெரிய போதை தான் அதுக்கு நீங்க மட்டும் அடிமையா இருங்க என்னையும் அதுல இழுக்காதிங்க பைபிளோ குரானோ எனக்கு தெரியாது.”

        ஆனால் பல்லாக்க ஷபராப்பா ராயஷப்பா என்று சொல்கிற பெந்தேகொஸ்தேவும் மதவெறியின் கீழ் வருகிறது என்று கிறித்துவத்தின் பல அடிப்படைகளை கேள்விக்கு உட்படுத்தியிருந்தோம். உழைக்கும் வர்க்கங்களின் மத நம்பிக்கையைத் தாண்டி மதங்கள் எப்படி ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்கிறது என்பதையும் விவாதித்திருந்தோம் (11,11.2.1,16,16.1.1.1,16.1.1.2,16.1.1.2.1.1). ஆனால் முகம்மதியத்திற்கு சார்பாக நின்று வாதிடுவதாக கருதுகிறார். இன்னும் விவாதிக்கிற பொழுது பல பரிமாணங்களை புரிந்து கொள்ள முடியும் என்று கருதுகிறேன்.

        முகம்மதிசம் தீவிரவாதம் என்று சொல்வதோடு திருப்திபட்டுக் கொள்கிற நண்பர்கள் கட்டுரை விவாதிக்கிற அரசியலுக்குள் துளியும் செல்லவில்லை என்பதுதான் இங்கு மிகவும் பின்னடைவான விடயம்.

  18. எல்லா மதங்களும் மனிதனை பிரிப்பது அடிமை ஆக்குவது போரட்ட குணத்தை மாற்றி வழிபாட்டை ஆதரிப்பது இதையெல்லாம் நான் ஒப்புகொள்கிறேன் ஆனால் மற்ற மதங்களை போண்றது அல்ல இசுலாம் அதற்கு அரசியல் பார்வை உண்டு அரசியலையும் இசுலாமையும் பிரிக்க முடியாது அரசியல் வெற்றிக்கு வன்முறையை பயன்படுத்தகூடியது ஒருவர் வன்முறையாளராக மாற மத தீவிரவாதியாக மாற அமெரிக்கா ஆதரவு தேவை இல்லை அவர்கள் படிக்கும் குரானிலேயே அது இருக்கிறது அப்பாவி இசுலாமியன் கொல்லப்பட்டால் கண்டிக்க பட வேண்டியதே (இர்சாத் ஜாகான்)இசுலாமியர்கள் குறைவாக இருக்கும் வரை அவர்கள் செயல்பாடுகள் வேறு அவர்கள் அதிகமாக இருக்கும் இடங்களிள் அவர்கள் செயல்பாடுகள் வேறு எடுத்துகாட்டாக எங்கள் ஊரில் முசுலீம்கள் அதிகம் தாழ்த்தபட்டவர்கள் வணங்கும் கோவில் நிலத்தில் எங்களுக்கு புதைக்கும் இடம் வேண்டும் என்று கேட்டு பிரச்சனை செய்தார்கள் தாழ்த்தபட்ட மக்கள் இடம் குடுக்ககூடாது என்று போராட்டம் நடத்தி வழக்கினை சந்தித்து வருகிறார்கள் அவர்களுக்கு மாற்று மத நம்பிக்கை பற்றி கவலை இல்லை அனால் அவர்களின் மதத்தை மட்டும் மற்றவர்கள் மதித்து போற்ற வேண்டும் என்று எதிர் பார்கிறார்கள் நைஜிரியாவில் அமெரிக்கா 200 குழந்தைகளை பொகொ காரம் தீவிரவாதிகள் மூலம் கடத்தி சென்று வைத்துக்கொண்டு அவர்களை விடுவிக்க அந்த நாட்டிற்கு உதவி செய்யபோவதாக நாடகமாடுகிறது என்கிற வினவின் கருத்தை ஏற்று கொள்ள முடியாது என்பதுதான் என் பின்னூட்டத்தின் நோக்கம் அதை மதவாத்துடன் இனைத்தது மன்னாறு தான் மீண்டும் சொல்லுகிறேன் எல்லா மதங்களிலும் உள்ள மூடத்தனங்களை இசுலாமிய தீவிரவாத்திற்கு ஆதரவாக ஒன்று சேர்க்காதீர்கள்

    • தோழர் p.joseph,

      மனிதனுக்குள் உள்ள மிருகம் பற்றி பார்க்கலாமா ?

      [1]மேற்கு ஆசிய இஸ்லாமிய நாடுகள்[ஈராக்,லிபியா] மீது அமெரிக்க தொடுத்த போரை எப்படி பார்கீன்றீர்கள் joe ? அதனை வரலாற்று சிலுவை போர்களீன் தொடர்சியாக பார்க்கலாமா ? அப்படி பார்த்தால் கிருஸ்தவம் தானே பல இலச்ச கணக்கான உயிர் பலி களுக்கு காரணம் ஆகிறது ?

      [2] ஒரு வேலை இது சிலுவை போர் இல்லை என்று மறுத்தால் ….. சிலுவை போர்கள் போப் தாலைமையில் தான் நடக்க வேண்டுமா என்ன ? கிருஸ்துவ நாடான USA கூட தலைமை தாங்கி ஈராக்கீல் மக்களை கொன்றது joeவை பொறுத்த வரை சரியா ?

      [3] நீங்கள் கூறுவது போல இஸ்லாத்தில் மத அடிப்படை வாதம் சீறீது அதிகம் என்று எடுத்துகொண்டால் , அதை வளர்த்து வீட்டது கிருஸ்துவ நாடான USA தானே ? திரு பின்லேடன் அவர்களை ஆப்கான்-கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக கொம்பு சீவி வீட்டவர்கள் யார் ? அதே USA தானே ?

      //எல்லா மதங்களும் மனிதனை பிரிப்பது அடிமை ஆக்குவது போரட்ட குணத்தை மாற்றி வழிபாட்டை ஆதரிப்பது இதையெல்லாம் நான் ஒப்புகொள்கிறேன் ஆனால் மற்ற மதங்களை போண்றது அல்ல இசுலாம் அதற்கு அரசியல் பார்வை உண்டு அரசியலையும் இசுலாமையும் பிரிக்க முடியாது //

    • நண்பர் p.joseph,

      [1] அரசியலுடன் தன்னை இணைத்துகொள்ளாத மதம் ஏதாவது உண்டா joe ?

      [2]இலங்கையில் பொவுத்தம் அரசு ஆள்வதும் அதன் மூலம் தமிழர்களை சிதைப்பது …….

      [3]USA கிறிஸ்துவ நாடு ஈராக் மற்றும் லிபியா மக்களை கொன்று குவித்ததும் …….

      [4]சவுதி அரேபியா கடவுள் நம்பிக்கை அற்றவர்களை கடுமையாக தண்டிப்பதும் ……..

      இதற்கு எல்லாம் காரணமான மதங்களுக்கு அரசியல் பார்வை இல்லை என்றா நினைக்கீண்றீர்கள் joe ?
      இஸ்லாம் மட்டும் அல்ல joe, அனைத்து மதங்கலுமே அரசியல் அதிகாரத்தை கைபற்ற முனைகின்றன joe !

      அதனால் தான் அதிகாரம் உழைக்கும் மக்களை வழி நடத்தும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வேண்டும் என்கிறோம்

      //ஆனால் மற்ற மதங்களை போண்றது அல்ல இசுலாம் அதற்கு அரசியல் பார்வை உண்டு அரசியலையும் இசுலாமையும் பிரிக்க முடியாது அரசியல் வெற்றிக்கு வன்முறையை பயன்படுத்தகூடியது //

    • தோழர் p.joseph,

      [1]வெறும் 4 இந்து குடும்பங்கள் வாழும் லப்பை குடி காடு என்னும் ஊரில் அவர்களுக்கு என்று கோவில் கட்ட இடம் ,சுடு காடு என்று வசதிகளை செய்து கொடுத்தது யார் தெரியுமா ? இஸ்லாம் மக்கள் !

      [2]நான் என் கல்லூரி நாட்களில் என்னுடன் படித்த இந்து நண்பனை காண அவன் வீட்டுக்கு[New house opening function] நண்பர்களுடன் லப்பை குடி காடுக்கு சென்று இருந்தேன்.பளீங்கு கற்கள் மூலம் அழகு செய்ய பட்ட இஸ்லாமிய மக்களீன் வழிபாட்டு தளத்துக்கு உள் சென்றும் பார்த்தோம். எவ்வித தடையும் இல்லை.

      [3]பஸ் நிலையத்தில் இஸ்லாமிய மத வாதீகளின் வட்ட banner கள் கடும் மத வாதத்தை வெளிபடுத்தின !இப்பொது என்ன முடிவுக்கு joe வருவீர்கள் ? அவ் ஊர் மக்கள் அனைவருமே மத அடிப்படை வாதிகள் என்றா ? இல்லை ஒரு சிலர் மட்டும் மத அடிப்படை வாதிகள் என்றா ?
      அவ் ஊர் ஹிந்து நண்பன் சொன்னான் “ஒன்னு ரெண்டு போர் அப்படி இருந்தா மத்தவங்க [இஸ்லாமிய மக்களீன்] என்ன செய்வாங்க ?

      ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற generalization முடிவுக்கு நாம் வரலாமா ஜோ ?

  19. தோழர் தென்றல்,p.joseph,

    ஒவொரு மதவாதிகுள்ளும் மனிதம் இருப்பதும் , ஒவொரு மனிதனுக்குள்ளும் மிருகம் இருப்பதையும் வாழ்வில் தினமும் நான் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றேன் !பல உத்தரணங்கள் தர முடியும்

    [1]பாபர் மசுதி இடிக்கபட்ட நாட்கள் அவை. திருச்சி புத்தூர் நால் ரோட்டில் கல்லூரியில் இருந்து கடலூர் செல்ல பேரூந்துக்காக இரவு நேரம் காத்து இருந்த போது ஒரு பெந்த கொஸ்து பீரசங்கி அவர்களை சந்தீக்க நேர்ந்தது. பாபர் மசுதியை இடித்த அன்று, அன்று இரவு முழுதும் கண்ணிர் வீட்டு அழுததை அவர் வலி உணர்வுடன் கூறினார்.

    [2]அதே காலகட்டத்தில் என் அம்மா மாரீயம்மன் கோவில் ஐயர் அவர்களிடம் பேசும் போது பாபர் மசுதி இடிக்கபட்டது பற்றி ஐயர் கூறியது :

    “அவாள் எல்லாம் பாவம் செய்யறாள்…தேவை இல்லாமல் பிரச்சனை செய்யறாள் ”

    [3]இஸ்லாத் மீது தீவீர நாட்டம் கொண்ட என் இஸ்லாமிய நண்பன் மொஹெமத் எலியாஸ் கூறீயது :

    மசூதி கூட வேண்டாம் ; எங்க மக்களை இந்தியாவில் நிம்மதீய வாழ விடுவீங்க்கலா

    இவை எல்லாம் மதம் சார் மக்களுக்குள்ளும் மதம் இருப்பதை தானே காட்டு கின்றது !

    Note:
    தென்றல், மசூதியை இடித்த BJP இடம் மனிதம் எங்கு போனது என்றோ , அல்லது என் கருத்துகள் அனுபவ வாதம் என்றோ கூறி விவாதத்தை முடித்து வீடாதீர்கள்!

    • correction: இவை எல்லாம் மதம் சார் மக்களுக்குள்ளும் மனிதம் இருப்பதை தானே காட்டுகின்றது! !

  20. தொழர் சரவணன் எல்லா மனிதர்களுக்குள்ளும் மனிதம் இருப்பது உன்மைதான் ஆனால் நைஜீரியாவில் மனித தன்மையை திருடியது யார் அமெரிக்காவா இல்லை இசுலாமா நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் 200 பள்ளி பிள்ளைகள் உங்கள் கண் முன் நிறுத்தி அவர்களின் வேதனையை பாருங்கள் அவர்களை கட்டாயபடுத்தி இசுலாமிற்க்கு மாற்றிய செயல் யாருடையது மத வெறியர்களுடயதுதானே இதற்க்கு முன்பு அமெரிக்கா இசுலாமிய தீவிரவாதிகளுக்கு ஆயுதம் குடுத்து உதவி செய்து இருக்கலாம் ஆனால் இப்பொழுது நடந்த விசயங்களுக்கு இசுலாமிய தீவிரவாதம் மட்டுமே பொருப்பு அதை மற்றவர்கள் மேல் திணிக்க கூடாது என்பதே என் நிலைப்பாடு அனால் இங்கு தென்றல் மன்னாறு வினவு உட்பட இசுலாமிற்க்கு சாதகமாக பேசி அதன் தவற்றினை அமெரிக்கா சார்பு என்று மழுப்ப முனைகிறார்கள் அதைத்தான் நான் கண்டிக்கிறேன் இதை தவறு என்று நீங்கள் சொல்கிறீர்களா மத வெறிக்கு வக்காளத்து வாங்காதீர்கள் என்பதே எனது கோரிக்கை இந்த கட்டுரையை முழுமையாக படித்து இருப்பீர்கள் என்கிற நம்பிக்கையில் கேட் கிறேன் தயவு செய்து உண்மையை உணருங்கள் தீவிரவாதால் பாதிக்கப்பட்டது அமெரிக்க மக்களும்தான் அதை சிந்தித்து பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கயுடன் எழுதியிருக்கிறேன்

    • தோழர் ஜோ ,

      [1]நம்ம ஊர் TNTJ கோமாளி மத அடிப்படை வாதிகளுக்கு ஆயுதம் கிடைத்தால் குரானை சாட்சியாக காட்டி என்ன செய்வார்களோ அதை தான் நைஜீரியா போகோ ஹராம் இயக்கம் செய்து உள்ளது.

      [2]இது போன்றே Cristian based USA வும் ஈராக் போரில் பல மனித உரிமை மீறல்களை செய்து உள்ளது.பல இலச்சம் மனிதர்களை கொன்று உள்ளது.

      [3]ஈழம் இருதி போரில் சிங்கள-பொவுத்தம் 1இலச்சம் தமிழர்களை கொன்று உள்ளது.பல ஆயிரம் நம் தங்கைகளை சீதைத்து உள்ளது.

      [4]பாபர் மசூதி இடிக்கபட்ட போது ஹிந்துக்களால் கொள்ளபட்ட முஸ்லீம்கள் பல ஆயிரம்.குஜாரத் கலவரத்தில் ஹிந்துக்களால் கொள்ளபட்ட முஸ்லீம்கள் 2000 மேல் !

      இப் பீன்னனியீல் நான் சில கேள்விகளை எழுப்ப போகிறேன்.

      [i]ஹிந்துக்கள் ,பொவுத்தர்கள்,கிருத்துவர்கள் மத வெறி எல்லாம் தீவீரவாதமாக பார்க்க படாத போது இஸ்லாமிய மத வெறி மட்டும் தீவீர வாதமாக பார்க்க படுவது ஏன் ? இஸ்லாமிய மத வெறியுடன் ஒப்பீடு செய்யும் போது ஹிந்துக்கள் பொவுத்தர்கள்,கிருத்துவர்கள் மத வெறி எப்படி குறைவானது ?

      [ii]இஸ்லாமிய மத வெறிக்கு சவூதியும்[money] அதன் பின்னனியீல் USA [weapons] இருபதற்கு காரணம் என்ன ?

      [iii]தீவிரவாதால் பாதிக்கப்பட்டது அமெரிக்க மக்களும்தான் என்றால் திரு பின்லேடன் அவர்களை ஆப்கான்-கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக கொம்பு சீவி வீட்டவர்கள் யார் ? அதே USA தானே ?

    • தோழர் ஜோ ,

      மத வெறியர்களால் உலகம் முழுவது கொல்லபட்ட மக்களை எண்ணிக்கை அடீப்படையீல் பார்த்தால் …..

      [1] Cristian based USA [வியட்னாம்,கொரியா,ஈராக் ,லிபியா போர்கள்]கொன்ற மக்களீன் எண்ணிக்கை 10 இலச்சம் மேல்.

      [2]சிங்கள-பொவுத்தம் 2.5 இலச்சம் தமிழர்களை கடந்த 35 ஆண்டுகளில் கொன்று உள்ளது.

      [3]இந்தியா,பாக் வீடுதலை அடைந்த போதும் அதற்கு பீன்பூம் கொல்லபட்ட ஹிந்துக்கள் 2 இலச்சம் ,இஸ்லாமியர்கள் 3 இலச்சம்

      இப்போது கூறுங்கள் மத வெறியுடன் மக்களை கொல்லும் வேலையில் முதல் இடம் வகிப்பது Cristian based USA வா ? இல்லை இஸ்லாமிய மத வெறியா ?

      Note:

      Dear Jo, If any special[தனி சிறப்பு ] is actually incorporate-ted with Islamic Religious Fundamentalism comparing with other religious fundamentalism then you pls inform me in this debate

  21. Hi Saravanan,

    Your replies to Joesph are very naïve. Let me show you how.
    //இஸ்லாம் மட்டும் அல்ல joe, அனைத்து மதங்கலுமே அரசியல் அதிகாரத்தை கைபற்ற முனைகின்றன joe !//

    No. Though, it is true that religion is one of the tools to get power over the people, Muhamadism is both faith and state. As per its very design, if it has enough power, fortunately it does not have, the Law (sharia) is ready-made and head of the Muhamadanistic lands is Khalif. Local authority and judegeship lie in the mullahs of the mosques. You need to pay taxes at the Mosques. All other religions allow people to have separate institutions of state and religion, enact laws, select administers, etc. Muhamadans are aspiring to achive their pure form of the society. Even recently Oumma had a Khalifa who had control over all the muhamadan lands (Search for khilafath movement.)

    // ஊர் மக்கள் அனைவருமே மத அடிப்படை வாதிகள் என்றா ? இல்லை ஒரு சிலர் மட்டும் மத அடிப்படை வாதிகள் என்றா ?//

    The fact that a majority are not fanatics is not a consolation. Because, it is only fanactics, who are a minority, who call the shots. It is only the written fanatical rules which are used by fanatics. So the problem lies in ‘written text’. For example, even if parents want to divide their property to their sons and daughters equally, it is not possible. Because, the fanatics will come knocking.

    // மத வெறியர்களால் உலகம் முழுவது கொல்லபட்ட மக்களை எண்ணிக்கை அடீப்படையீல் பார்த்தால் ….//

    Let me be frank. Your figures are downright ridiculous. You need to have a universal view.
    Muhamadism is the youngest of all the religions. But its toll cannot be matched even by oldest religion. Muhamadism, during its jihad over kaffirs, have conquered around 55 countries and in another approximately same number of countries they have some pockets of strong influence. Muhamadism has occupied all the middle east (barring Israel since some decades), around half of Africa, pockets of Europe, Central Asia, All of Indonesia and Malaysia, pockets of Thailand, Philippines, etc. In all these places, significant number of local population was decimated. At every attack on a village/town/country, Muhamadans are mandated to take no prisoners for 3 days and kill all the males (including boys with pubescent hair). During all these massacres, the count of toll can never be made. Even a conservative count would make the Christian’s toll pale into insignificance. The toll in India alone is estimated at around 80 million. The toll in Africa can never be counted and it should be more than India’s count. Lebanon is a very recent example of how a country becomes a Muhamadan majority country.

    // USA வும் ஈராக் போரில் பல மனித உரிமை மீறல்களை செய்து உள்ளது.பல இலச்சம் மனிதர்களை கொன்று உள்ளது.//

    Count of lakhs is exaggerated. Human rights violations are also exaggerated.

    // இஸ்லாமிய மத வெறிக்கு சவூதியும்[money] அதன் பின்னனியீல் USA [weapons]//

    Muhamadism predates US and discovery of Saudi oil. Very recent, pre-oil and closer to home example of its true face is Mopla riots and other riots in Bengal and todays Pakistan, against Kaafirs.

    // இஸ்லாமிய மத வெறி மட்டும் தீவீர வாதமாக பார்க்க படுவது ஏன் ?//

    I hope now you know. In addition, let me add some more points.
    Killing kaafirs is a mandated duty. No other religion is so categorical in this aspect. Thus, it is not by accident that Muhamadans cry ‘Allaahu Akbar’, while killing, while others don’t use such cries. (I am not against calling those who cry ‘jai sri ram’ as ‘hindu terrorists’. But bear in mind that their number pales into insignificance when compared to those who cry ‘Allaahu Akbar’)
    Muhamad himself has said that he became victorious by terror. He attacked villages at the dawn, without any warning, when least expected. You are sleeping home, having sweet dreams at the early morning and your house in attacked. How would you feel? That is TERROR. Compare this with the actions of Jesus, Buddha, etc.

    We can discuss any or all of the above.

    • Univerbuddy,

      [1]To make this discussion useful to every one , You pls replay in Tamil.

      [2]I am really struggling to understand the content of yours.I do not have any starting point to replay to your feedback.

      [3]Yes my feedback is very basic but that is showing truth about all religions

      [4]Why are you showing love to USA gov in the context of Iraq war.? It is true that USA committed human right violations in IRAQ and also I am not exaggerating this matter. More over in Iraq war USA gov killed lakes of people. It is also not exaggerated.

      • Hi Saravanan,

        //struggling to understand the content of yours//

        மன்னிக்கவும். முடிந்த வரை தமிழில் எழதுவேன்.

        //Why are you showing love to USA gov in the context of Iraq war.? //

        அப்படி ஒன்றும் இல்லை. உங்கள் கருத்துக்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்பது என் கருத்து. ஈராக்கில் நடந்தவைகளையும் தற்போது சிரியாவில் நடப்பவைகளையும் (தலைகள் கொய்தல், கிருத்துவ சிவிலியன்களை கொல்தல், etc) ஒப்பிட்டுப் பார்த்தால் வேறுபாட்டைப் புரிந்து கொள்ளலாம்.

      • Saravanan,

        மேலே உள்ள பதிலில் குறிப்பாக ஏதேனும் புரியவில்லையென்றால் கூறவும். அவற்றை தமிழில் விளக்குகிறேன்.

  22. தோழர் யுனிவர்படி,

    முகம்மதியத்தின் உலகளாவிய தன்மை (Global Perspective) அதன் பெரும்பான்மை (Majority) மற்றும் பாசிசி போக்குகளை குறிப்பிட்டிருக்கீறிர்கள்.

    55 நாடுகளில் முகம்மதியம் பெரும்பான்மையாக இருந்தாலும் அனைத்து நாடுகளிலும் வர்க்கப்போராட்டம் நடைபெறுகிறது என்பதுதான் நாம் பெறவேண்டிய மற்றும் அழுத்தம் கொடுக்க வேண்டிய பார்வை என்று கருதுகிறேன். இந்த நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்கம் தன்னை விடுவித்துக்கொள்ள பலமுனைகளிலும் போராட வேண்டியிருக்கிறது. அதில் பிற்போக்குத்தனம் மற்றும் அடிப்படைவாதத்திற்கு எதிரான போராட்டங்களும் தேவை.

    ஆனால் முதலில் மதத்தை அகற்றிவிட்டு பாட்டாளிவர்க்கம் தனக்குண்டான அரசியல் விடுதலையை பெற இயலுமா என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் ஓட்டாண்டிகளாகவும் கஞ்சிக்கு வழியற்றவர்களாகவும் மறுபுறத்தில் பல கோடிக்கு செல்வந்தர்களாகவும் உற்பத்தி சக்திகளில் தனியுரிமை கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.

    பாகிஸ்தானிலும் பங்களாதேசிலும் அடிப்படைவாதத்தை மற்றும் பிற்போக்குத்தனத்தைப் பற்றி பேசுகிற மீடியாக்கள் அங்கு செயல்படும் தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் தொழிலாளர் சார்ந்த அரசியல் செயல்பாடுகளை திட்டமிட்டு புறக்கணிக்கின்றன. ஏனெனில் இவர்களுக்குத் தேவையானது இசுலாமியனை இப்படித்தான் என்று வரையறுத்து பாசிசத்தை கட்டவிழ்ப்பது மற்றும் வர்க்கப்பார்வை பெறாமல் தடுப்பது.

    ஓர் உதாரணத்தை பரிசீலிப்போம். ஈரானிய நடிகை ஹடாமி விருதுவாங்குகிற பொழுது 83வயது தாத்தாவிற்கு முத்தம் கொடுத்தது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. மத அமைப்புகள் பத்வா கொடுக்க முயற்சி செய்த பொழுது ஹடாமி மன்னிப்பு கோரினார். இது ஹடாமிக்கு எதிரான மிகவும் பிற்போக்குத்தனமான அடவாடியான செயல். இந்திய ஊடகங்களும் இதற்கு பெரிய போகஸ் கொடுத்து எழுதின. ஆனால் அதே ஈரானில் ஆப்கன் அகதிகள் (ஏழை முசுலீம்கள்) ஈரானிய முதலாளிகளால் (பணக்கார முசுலீம்கள்) பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாவதை (விபச்சாரம் உள்பட) எந்த மீடியாவும் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் இது வர்க்கப் உணர்வை தூண்டிவிடும். அவர்களுக்கு தேவை Communal Polarization. அதில் அவர்கள் நூறு சதம் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நீங்கள் சொல்வதைப் போல் அடிப்படைவாதம் இவர்களுக்கு துணையாகி இருக்கிறது.

    ஆனால் மதங்களை வெறும் அடிப்படைவாதங்களை கொண்டு மட்டும் மதிப்பிட முடியாது. அது முதலாளியத்தோடு வைத்திருக்கிற கள்ளகூட்டின் பரிணாமத்தை புரிந்துகொள்ளவேண்டும். ஏகத்துவம் ஏகாதிபத்தியத்திற்கு முட்டுகொடுக்கிற காலித்தனத்தை அம்பலப்படுத்தவேண்டும்.

    ஆன்மிக இச்சைகளை சொர்க்கத்தில் ரிசர்வ் செய்வதுவிட்டு இங்கு ஏகாதிபத்தியத்திற்கு ஏவல் நாய்களாக இருக்கிற காலிகளை அம்பலப்படுத்த வேண்டும். இதுதான் நமக்கு முக்கியமானது. இதில் சில உதாரணங்களை பரிசிலீப்போம்.

    ——————————–

    கன்னியகுமாரியில் பெரும்பாலான சர்ச்சுகளில் ஆராதனை நேரத்தில் மைக்கை அணைத்துவிட்டு வசந்த குமாருக்கு ஓட்டு போடுங்கள் என்று பாதிரியார்கள் மன்றாட்டு திருப்பலி நடத்தியிருகிறார்கள். ஆனால் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் பெரும்பாலான பாதிரியார்கள் கொரில்லா இயக்கத்தில் ஏகாதிபத்தியற்கு எதிராக இணைந்திருக்கின்றனர். விடுதலை இறையியல் வகையிலான பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். கிறித்துவம் மறுகாலனியாதிக்க நாடுகளில் ஏவல் விலங்காகவும் சோசலிச நாடுகளில் விடுதலை இயக்கமாகவும் மாறியது எப்படி? அப்படி இருந்தும் கூட விடுதலை இறையியல் அங்கு தோல்வி அடைந்திருக்கிறது. ஏனெனில் தேசிய முதலாளிகள் பாட்டாளிகளின் வெற்றியை அபகரித்திருக்கிறார்கள். கிறித்தவம் வெயிலுக்குப் பதிலாக வெள்ளாவியில் விழ வைத்திருக்கிறது. இது ஒரு வகை. மதம் எவ்வகையிலும் பாட்டாளிகளுக்கு உகந்தது அல்ல.

    இதனால் பாட்டாளிகளை மதத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டுமா? இல்லை. ஏனெனில் பாட்டாளிகளே மதங்களை அப்புறப்படுத்துகிறார்கள். அரசியல் விடுதலை பெற்ற பாட்டாளிகளுக்கு ஆன்மிக விடுதலை ஒரு பொருட்டாக இருக்கப்போவதில்லை. சோசலிச சமூகத்தில் மதங்கள் சீண்டுவாரற்று கிடக்கும். முதலாளித்துவ ஆதரவு ஊடகங்கள் இதை மதஉரிமை மறுக்கப்படுகின்றன என்றும் மக்களின் வழிபாட்டு உரிமையை எதிர்த்தார்கள் என்றும் கூக்குரல் இடுவார்கள். ஆனால் உண்மை இதுதான். பிற்போக்குத்தனங்களை அடிப்படைவாதங்களை மக்களே தூக்கி எறிகிறார்கள். இதற்கு தேவையாக இருப்பது பாட்டாளிகளுக்கான ஓர் அரசு.

    —————————————

    முகம்மதியத்தை பிற்போக்குத்தனம் மற்றும் பாசிசம் என்று வரையறுக்கிற பொழுது சீனாவின் டாவோயிசமும் அவ்வகைப்பட்டது தான். மாவோவின் காலத்திலேயே மனிதர்களை உயிரோடு புதைக்கிற சடங்குகளும் நடைபெற்றன. கம்யுனிஸ்டுகள் மற்றும் விவசாயிகள் இதை நடைமுறை எதார்தத்தில் முறியடித்துக்காட்டினர். ஹூனான் விவசாயிகள் சங்கம் நிலப்பிரபுகளுக்கும் மேட்டுக்குடி கணவான்களுக்கும் எதிராக நடத்திக்காட்டிய வர்க்கப் போராட்டம் ஏழைவிவசாயிகளை மதச் சடங்குகளைத் தாண்டி சிந்திக்கவைத்தது. கோயில்கள் கட்சி அலுவலகமாக மாறின. பிரதான ஆளும் வர்க்கமான கோமிங்டாங்கின் பல்வேறு சதிசெயல்கள் முறியடிக்கப்பட்டன. மதம் என்னவானது என்பதைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.

  23. தோழர் யுனிவர்படி,

    வர்க்கப்போராட்டம் தொடர்பாக

    \\I want working people to come together as a Class. (I want also others to come join in, in the interest of solidarity and sustainability of humanity.) But I don’t think it will happen without discussing the issues of division. \\

    துருக்கியின் ஆளும் வர்க்கம் இசுலாமிய மத அடிப்படைவாதத்தைச் சேர்ந்தது. அங்குள்ள AKP கட்சி அனத்தோலியா (கடுங்கோட்பாட்டு இசுலாமைச் சேர்ந்தவை) பிரிவு முசுலீம்களின் ஆதரவுடன் தான் ஆட்சி அமைத்தது. இதில் அலாவி பிரிவினர் கீழ்மக்களாக கருதப்படுகின்றனர். துருக்கி ஜனாதிபதி எர்டோகன் கடந்த பத்தாண்டுகளில் இசுலாமிய முதலாளித்துவத்திற்குத்தான் முட்டுக் கொடுத்தார். இதை அங்குஇருக்கிற மக்கள் எளிதில் இனங்கண்டு சமரசமற்ற போராட்டங்களை மார்க்சிய லெனிய கட்சிகளின் தலைமையில் நிகழ்த்திகாட்டியிருக்கிறார்கள். இதில் DHKP கம்யுனிச கொரில்லா இயக்கமாகும்.

    ரெய்ஹன்லி குண்டுவெடிப்பு சம்பவம் துருக்கி அரசிற்கு முன் கூட்டியே தெரியும் என்பதை அம்பலப்படுத்தியது துருக்கி கம்யுனிஸ்டுகள் தான்! இவைதவிர தாக்சிம் மற்றும் கெய்சில் நடைபெற்ற மக்கள் குவிவு (Occupy) போராட்டங்கள், இடதுசாரி தொழிற்சங்க கட்சிகளின் மேதின ஆர்பாட்டங்கள் பாட்டாளி வர்க்கத்திற்கு உந்துதலாக அமைந்திருக்கின்றன. இத்தனைக்கும் இதில் கடுங்கோட்பாட்டுவாதிகள் ஆதரவு தராமல் இருந்தும் இந்த போராட்டங்களில் ஈடுபட்ட இசுலாமிய தொழிலாளர்களை எப்படி? எதன் அடிப்படையில் எடை போடுவீர்கள்?

    \\At least you have not convinced me so far why we should be mum on Muhamadism while critiquing all other isms without any reserve.\\

    அடிப்படைவாதத்திற்கும் பிற்போக்குத்தனத்திற்கும் எதிரான எந்தவொரு இயக்கத்திற்கும் எதிராக நாம் மெளனம் சாதிக்கவில்லை அது இசுலாமாக இருந்தாலும் சரி. பிறகு தவ்ஹித் போன்ற காலிகள் ஆளும் வர்க்கத்திற்கு ஜெயலலிதாவிற்கு சார்பாக இங்கு வந்து ஏன் ஊளையிட வேண்டும்? அவர்களின் பிழைப்பிற்கு நாம் இடைஞ்சலாக இருக்கிறோம் என்பதனால் தானே?

  24. தோழர் யுனிவர்படி,

    Misogyny தொடர்பாக,

    இசுலாம் மிசோகைனி (Misogyny) என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்து மதம் மட்டும் என்ன கைனி? நிர்பயா தாழ்த்தப்பட்ட ஆண்களால் கற்பழித்து கொல்லப்பட்ட பொழுது இந்திய சமூகம் கொந்தளித்து தன் மனசாட்சியை பதிவு செய்தது. ஆனால் மூன்று நாட்களுக்கு முன்பு 14,15வயது தாழ்த்தப்பட்ட சிறுமிகள் ஆதிக்க சாதிகளால் கற்பழித்து மரத்தில் தொங்கவிடப்பட்ட பொழுது இந்திய சமூகத்தில் அது எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. இதுதான் இந்துமதத்தின் கைனி!

    பாரதம் பதினேழாவது பகடைக்காயில் பாண்டவர்களின் திரவுபதியை வைத்தே சூதாடியது. இது இந்துமதத்தின் மற்றுமொரு பஞ்சகைனி.

    தவறுக்கு தவறு ஈடாகது எனினும் பெண்களைப் பொறுத்தவரை இசுலாமும் இந்துமதமும் வேறுவேறு அல்ல. கல்லால் அடித்து கொன்றுவிட்டு குருதிப்பணம் கொடுத்து தப்பித்துக் கொள்ளும் இசுலாம். கீழ்மை நீதிமன்றங்களால் தண்டனைக்குள்ளாக்கப்பட்ட ஆதிக்க சாதிகள் உயர்நீதி மன்றங்களுக்கு பணம் கொடுத்து தப்பித்துக்கொள்ளும். கயர்லாஞ்சி போட்மாங்கேவிற்கும் சிண்டூரிலும் இப்பொழுது உத்திரப்பிரதேசத்திலும் நடந்ததும் நடப்பதும் இவைகள் தான்.

  25. தோழர் தென்றல் இசுலாமை ஒரு மதமாக மட்டும் பார்க்கிறீர்கள் அது மற்ற மதத்தவர்கள்(யூத கிறிஸ்தவ, சிலைவழிபாட்டினர்) மீது உள்ள வெறுப்பினை கொன்டு கட்டமைக்கபட்டது அவர்களை கொலை செய்யவும் கொள்ளை அடிக்கவும் உரிமை கொண்டது இது தவறு இல்லை என்கிறது முகமது அவர்கள் காலத்திலேயே இதை செய்து காட்டியுள்ளார் அது போகோ காரம் என்று தொடர்கிறது மீண்டும் உங்களிடம் சொல்லுவது போகோ காரம் தீவிரவாத்திற்க்கு மதம் 80 சதம் பொறுப்பு மற்றவை அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு வெறி எனவே மத தீவிரவாதத்த கண்டியுங்கள் அதை மற்ற மத நம்பிக்கையுடன் இணைத்து வக்காளத்து வாங்காதீர்கள் இல்லை என்றால் இந்த விவாதம் நீண்டதாக மாறி விடும் மதம் சார்பற்ற நீங்கள் மத தீவிரவாத்தை கண்டிப்பதில் என்ன தயக்கம்

    • தோழர் ஜோசப்,

      நீங்கள் சொல்வது பகுதியளவு சரி. மதங்களில் அடிப்படைவாதம் இருக்கபோய்தான் அமெரிக்கா உள்ளே நுழைந்தது என்பது சரி. ஆனால் இசுலாம் அனைத்து நாடுகளிலும் ஒன்றாக இருக்கவில்லை. குரானில் கொலைச் செய்தி இருப்பதாகச் சொன்னாலும் சமூகம் இதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இயங்கவில்லை. வர்க்கமா மதமா என்று வருகிற பொழுது வர்க்கச் சார்புதான் முதன்மையாக வந்து நிற்கிறது. வர்க்கப்பார்வையோடு இதை அணுகுகிற பொழுது நாம் சிறப்பான இடம் நோக்கி நகர முடியும். கார் ஓட்ட ஹதீசுக்குள் ஆதாரம் தேடுகிற அளவிற்கு அதிகார வர்க்கத்தை இயக்குவது ஏகத்துவம் அல்ல; ஏகாதிபத்தியமே.

      இன்னும் ஆப்ரிக்க தொடர்பான இசுலாமிற்கு வர்க்கமாய் பதில் தேடவில்லை. யுனிவர்படியின் சில கேள்விகளுக்கு பதில் அளிப்பது விடுபட்டிருக்கிறது. பொறுத்திருந்து கவனியுங்கள்.

      மத தீவிரவாதத்தை மதநம்பிக்கையாளர்களே கண்டிக்கிறார்கள் எனும் பொழுது மதச்சார்பற்ற நான் கண்டிக்கவில்லை என்பது பொருந்தாத கருத்து. துருக்கி, பாகிஸ்தான், பங்களாதேஷ் தொடர்பான நான் வைத்த விவாதங்கள் பலன் தருமா என்று விவாதியுங்கள். சோசலிச சமூகத்தில் மதத்தின் பங்கு குறித்து சீனாவை வைத்து சொன்ன கருத்துக்கள் உங்கள் பார்வையில் என்ன பாத்திரம் வகிக்கிறது என்பது குறித்து சிந்தியுங்கள்.

  26. தோழர் யுனிவர்படி,

    \\Killing kaafirs is a mandated duty. No other religion is so categorical in this aspect.\\

    அடிமைச் சமூகத்தில் காபிர்களை கொல்வது நடந்தேறியது. ஆனால் ஒரு ஆண்டைக்கு, அதிகார வர்க்கத்திற்கு போரிலே சிறைபிடிக்கிற நபர்களை கொல்வதை விட அடிமையாக வைத்துக்கொள்வதுதான் லாபகரமானது. அடிமைச் சமூகம் இப்படியும் உருவானதாக சமூகவியலாளர்கள் அறுதியிடுகின்றனர். எகிப்திய அடிமைகள் “வாழ்கின்ற செத்தவர்கள்” எனும் பொருளில் அழைக்கப்பட்டனர். (எர்மக்கோவா மற்றும் ராட்னிக்காவோவின் வர்க்கம் மற்றும் வர்க்கப்போராட்டம் என்றால் என்ன? என்ற சமூக நூலை வாசியுங்கள்)

    இசுலாம் எங்கெல்லாம் அரசாளும் மதமாக இருந்ததோ எங்கெல்லாம் இனக்குழு சண்டையாக முற்றியதோ அங்கெல்லாம் மனிதர்கள் கொல்லப்பட்டதைவிட அடிமைகளாக அடக்கிவைக்கப்பட்டனர் என்பது தான் வர்க்கப்பார்வை. குரான் இந்த வகையில் அதிகார வர்க்கத்தின் பார்வையில் இருந்து இறக்கப்பட்டதாக (!) கருதுகிறேன். இப்படி அணுகுகிற பொழுது காபீர்கள் கொல்லப்பட்டதை விட அடிமைச்சமூகமாகவே இருத்தப்பட்டார்கள் என்று முடிவிற்கு வரவேண்டும். வர்க்கப்பார்வையில் வரலாறு குரானையே ஹதீசையோ தழுவி நிற்கவில்லை. இன்றைய சூழ்நிலையில் நிலைமை கீழ்க்கண்ட படிதான் நடக்கிறது.

    (1) ஆப்ரிக்க சூழ்நிலையில் போகோ ஹராம் நடக்கிறது. 1950களில் காலனி ஆட்சி ஆப்ரிக்காவில் நீங்கி மறுகாலனியாதிக்கம் வந்தபிறகும் அங்கு நிலவுவது இனக்குழு அரசியலே. வர்க்கம் வலுப்பெற வேண்டியிருக்கிற நிலையில் படுபிற்போக்குத்தனங்களின் கீற்றுகள் அங்கு காணப்படவே செய்யும். பெண்களுக்கு கந்து அகற்றுதல் ஆரம்பித்து போகோ ஹராம் வரை நீள்கிறது. அமெரிக்க இதை பயன்படுத்தவே செய்யும்.

    (2) இந்திய சூழ்நிலையில் தவ்ஹீத் ஜமாத்தும் சுன்னத் ஜமாத்தும் தொழும்போது குசு போடலாமா கூடாத என்கிற அளவிற்கு விவாத கிளுகிளுப்பில் இருக்கிறார்கள்.

    (3) இந்தியாவில் இசுலாத்தில் மனு என்று மற்றுமொரு பரிமாணம். அன்சாரி பிரிவினர் ஹஜ்ஜிற்கு தலைமையேற்க முடியாது என்பது எங்கும் இல்லாத அவலம். மூல நூல்களை அரேபிய மொழியில் கற்காதவர்கள் மதராசாக்களில் தீண்டத்தகவாதர்களாக நடத்தப்படுகின்றனர்.

    (4) பர்ஸ் கனமாக இருக்கிற அரேபியாவில் ஒட்டகமும் காரும் ஒன்று என்று விவாதிக்கிற அளவிற்கு இசுலாம் எண்ணெய் வளத்தோடு இருக்கிறது.

    (5) ஷாவை தூக்கியெறிந்த கொமய்னியின் அடிப்படைவாதம் ஈரானில் ஆப்கன் அகதிகளை கொடூரமாகச் சுரண்டுகிறது.

    (6) பங்களாதேசின் ஆயத்த ஆடை தொழிலாளிகளுக்கு தொழிற்சங்கத்தைக் கட்டுவதுதான் வாழ்வதற்கான முன்நிபந்தனை.

    (7) துருக்கி மக்கள் மேதின ஆர்பாட்டங்களை இசுலாமிய முதலாளித்துவத்திற்கு எதிராக எழுச்சியோடு நடத்துகிறார்கள்.

    இவ்வளவு நடைபெறுகிற பொழுது எல்லாவற்றுக்கும் குரானும் ஹதீசும் தான் காரணம் என்று ஒற்றைப்புள்ளியில் நிற்பது பின்னடைவே. இசுலாம் (பிற மதங்களும் தான்) எங்கும் யாருக்கும் பொதுவாக இருக்கவில்லை. சமூகம் இசுலாமாக இயங்கவில்லை வர்க்கமாக இயங்குகிறது எனில் நாம் கைகொள்ள வேண்டிய செயல்திட்டம் என்ன?

  27. தோழர் தென்றல்,

    //பாட்டாளிகளை மதத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டுமா? இல்லை. ஏனெனில் பாட்டாளிகளே மதங்களை அப்புறப்படுத்துகிறார்கள். ***. இதற்கு தேவையாக இருப்பது பாட்டாளிகளுக்கான ஓர் அரசு. //

    Wonderful words. I just could not control my tears at the significance of this text. I agree with this 100%. I have envisioned such scenarios.
    பாட்டாளிகள் அதிகாரத்திற்கு வந்த பிறகு மதத்தின் கட்டுகளில் இருந்து விடுபடுவது எளிது/எளிதாகலாம் என்று கூறுகிறீர்கள். இதை நானும் ஒரு விதத்தில் ஒத்துக் கொள்கிறேன்.
    ரஸ்யவிலும் சீனாவிலும் பாட்டாளி மக்களின் அரசு அமையமுடிந்ததற்கு அங்கு நிலவிய ஒற்றை மதமும் நமது ஜாதிகளைப்போன்ற பிரிவினைகள் இல்லாததும் ஒரு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். ரஸ்யாவில் பெற்ற அதிகாரத்தினால் அண்டை நாடுகளான கசக்ஸ்தான் கிர்கிஸ்தான் போன்ற நாடுகளில் முகமதியத்தின் கூர்மையை சற்று மொன்னையாக்க முடிந்தது என்பது உன்மை.
    It is certain that we need take charge of the things, so that so many wasteful actions and consumptions in the name of religion and others are made irrelevant. For this we Communists need to equip ourselves in all the ways, including the discourse against all regressive ideas, as for as possible, so that we can avoid bad surprises later. I know you would not say no to this.

    //[துருக்கியின் ] போராட்டங்களில் ஈடுபட்ட இசுலாமிய தொழிலாளர்களை எப்படி? எதன் அடிப்படையில் எடை போடுவீர்கள்?//

    I know that Muhamadism’s first victims are muslims. I know muslim workers working in the hot sun cannot even have a sip of water at the time of Ramadan. I stand in solidarity with those workers.

    //எந்தவொரு இயக்கத்திற்கும் எதிராக நாம் மெளனம் சாதிக்கவில்லை அது இசுலாமாக இருந்தாலும் சரி.//

    I know. That is why I am adding to the discussion. However, I see a slight bias towards Muhamadism in Vinavu’s stand. அமெரிக்கா ஆசியுடன் ஜிகாத் என்றும் அதைப்போன்ற கருத்தை வலியுறுத்துவதையும் தான் நான் விமர்சிக்கிறேன்.

    // 14,15வயது தாழ்த்தப்பட்ட சிறுமிகள் ஆதிக்க சாதிகளால் கற்பழித்து மரத்தில் தொங்கவிடப்பட்ட பொழுது இந்திய சமூகத்தில் அது எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. இதுதான் இந்துமதத்தின் கைனி!//

    இதை ஒத்துக் கொள்கிறேன். வெட்கப் படுகிறேன்.

    //திரவுபதியை வைத்தே சூதாடியது. இது இந்துமதத்தின் மற்றுமொரு பஞ்சகைனி.//

    இது நடப்பில் இல்லாதது. ஆனால் முகமதியத்தின் பெண் விரோத செயல்கள் அனைத்துமே தற்போதும் நடப்பில் இருக்கின்றன.

    //பெண்களைப் பொறுத்தவரை இசுலாமும் இந்துமதமும் வேறுவேறு அல்ல.//

    தவறு. பெண்ணின் சாட்சிக்கு பாதி மதிப்பு, சொத்தில் பாதி பங்கு, பர்கா, மணவிலக்கு பெறமுடியாதது, குழந்தைகளை வைத்துக் கொள்ள முடியாதது, ஜீவனாம்சம் பெறமுடியாதது, போன்ற பெண் விரோத விதிகள் முகமதியத்தை வேறு எந்த மதத்திற்கும் ஈடாக்காது.

    //கல்லால் அடித்து கொன்றுவிட்டு குருதிப்பணம் கொடுத்து தப்பித்துக் கொள்ளும் இசுலாம்.//

    கல்லால் அடித்துக் கொல்வது நடத்தை சரியில்லாத [அதாவது முகமதிய விதிகளின் படி நடக்கத் தவறிய] பெண்களுக்கு ஒரு தண்டனை. அதற்காத யாரும் தண்டம் [குருதிப்பணம்] கட்டத் தேவையில்லை.

    Continued…

  28. தோழர் தென்றல்,

    //அதிகார வர்க்கத்திற்கு போரிலே சிறைபிடிக்கிற நபர்களை கொல்வதை விட அடிமையாக வைத்துக்கொள்வதுதான் லாபகரமானது//
    //காபீர்கள் கொல்லப்பட்டதை விட அடிமைச்சமூகமாகவே இருத்தப்பட்டார்கள் என்று முடிவிற்கு வரவேண்டும்.//

    முகமதியத்தில் போரிடாமல் சரணடைந்தாலும் கொல்லவேண்டும். மூன்று நாட்கள் யாரையும் கைதியாக பிடிக்கக் கூடாது. கிடைத்த அனைத்து ஆண்களையும் கொல்லவேண்டும். பிறகு மட்டுமே மற்ற ஆண்களை அடிமையாக்க முடியும்.

    //குரான் இந்த வகையில் அதிகார வர்க்கத்தின் பார்வையில் இருந்து இறக்கப்பட்டதாக (!) கருதுகிறேன்.//

    I have already said what is the result of Muhamadism above.

    //எல்லாவற்றுக்கும் குரானும் ஹதீசும் தான் காரணம் என்று ஒற்றைப்புள்ளியில் நிற்பது பின்னடைவே.//

    இப்படித்தான் முகமதிய சமுகம் இயங்குகிறது என்பது மிகவும் வேதனையான விஷயம். சில வருடஙகளுக்கு முன்பு கூட (Until I read Ali Sina’s faithfreedom.org) இதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. மற்றவர்களுக்கும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது எனது பணிகளுள் ஒன்றாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன். முகமதியத்தின் அபாயத்தை தணிப்பதற்கு இந்த விழிப்புணர்வு தான் சிறந்த வழி.

    //கார் ஓட்ட ஹதீசுக்குள் ஆதாரம் தேடுகிற அளவிற்கு அதிகார வர்க்கத்தை இயக்குவது ஏகத்துவம் அல்ல//

    ஒட்டகமும் காரும் ஒன்று என்று விவாதிப்பது முதலில் அரேபியாவின் பெண்கள்தான். கூடுதலாக கார்களை விற்க முடிந்தால் ஏகாதிபத்தியத்திற்கு நலமே. ஆனால் முகமதியஆணின் ஏகாதிபத்தியத்திற்கு அது விரும்பத்தக்கதாக இல்லை. இதில் வாகனம் மட்டும் பிரச்சனையில்லை. ஒட்டகத்தின் மீதுள்ள பெண்ணிடம் ஆண் யாரேனும் இருக்கிறார்களா என்று உறுதி செய்து கொள்ள முடியும். காரில் அப்படி முடியாதே. (For more details read about ‘Mahram’). முகமதிய சமூகம் இரண்டு வகை வர்க்கமாக இயங்குகிறது.

Leave a Reply to p.joseph பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க