privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் – 04/07/2014

ஒரு வரிச் செய்திகள் – 04/07/2014

-

vinavu news 5செய்தி: மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்கி ரயில்வே சாதனை – டில்லி ஆக்ரா இடையே வெற்றிகர சோதனை ஓட்டம்.

நீதி: 150 கி.மீ வேக ரயிலுக்கு 10 கி.மீ வேகத்தை கூட்டியதெல்லாம் சாதனை என்றால் விலைவாசி உயர்வை ராக்கெட் வேகத்தில் கொண்டு சென்ற காங்-பாஜக அரசுகள் வேதனை அடையாதா?

~~~~~~~~~~~

செய்தி: குழந்தைகள் இறப்பை தடுக்கும் வகையில் 3 புதிய  தடுப்பூசிகள் அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக அளிக்க  உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

நீதி: பின்னாளில் கலவரங்களில் சாகாமல் காப்பாற்றப்படுவதற்கு, இசுலாமியர்கள் குழந்தைகளாக இருக்கும் போதே ஏதும் தடுப்பூசி இருக்கிறதா பிரதமர் அவர்களே?

~~~~~~~~~~~~

செய்தி: ஜம்மு காஷ்மீருக்கு முதல் முறையாக செல்லும் பிரதமர் மோடி, வைஷ்ணோ தேவி ஆன்மீகத் தலத்தை இணைக்கும் காட்ரா – டெல்லி ரெயிலை துவக்கி வைக்கிறார்.

செய்தி: ஜம்முவில் இந்து பக்தர்களின் புனிதப் பயணத்திற்கு ஆவண செய்யும் மோடிக்கு, இந்திய ராணுவத்தால் வாழ்விழந்த காஷ்மீர் மக்கள் முழு அடைப்பு நடத்தி எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். புனிதத்தை விட பாவத்தின் அளவு அதிகம் இல்லையா?

~~~~~~~~~~~

செய்தி: கேரள கவர்னராக இருக்கும் ஷீலா தீட்சித் டெல்லி முதலமைச்சராக இருந்த போது அவரது 4 படுக்கையறை பங்களாவில், 31 ஏசி இயந்திரங்களையும், 25 ஹீட்டர்களையும், 15 கூலர்களையும், 12 சுடு நீராக்கிகளையும், 16 காற்று தூய்விப்பான்களையும் பயன்படுத்தியிருக்கிறார்.

நீதி: முதலமைச்சராக வாழ்வதன் பெருமை என்னவென்பதை இந்த சிறுமை பட்டியல் விளக்குகிறது.

~~~~~~~~~~

செய்தி: இளைஞர்களை கவரும் பொருட்டு இந்திய விமானப்படை, ‘Guardians of the Skies’ (GOTS) –  “விண்ணின் பாதுகாவலர்கள்” எனும் செல்பேசி முப்பரிமாண வீடியோ கேமை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

நீதி: நாட்டுக்காக தியாகம் செய்யுங்கள் என்று இளைஞர்களை கவர முடியாது என்பது உண்மையென்றாலும், விமானப்படை வீடியோ கேமை வெளியிட்டு இளைஞர்களை இழுக்கிறது என்றால் நாளையே படையில் சேருபவன் எப்படி ஐயா தியாகம் செய்வான்?

~~~~~~~~~~~

செய்தி: அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த, அனைத்து மாநில உணவு அமைச்சர்கள் கூட்டத்தை, மத்திய அரசு இன்று நடத்துகிறது.

நீதி: டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு கட்டணம் உயர்வு, ரயில் கட்டண உயர்வு அனைத்தும் நிறைவேற்றி விட்டு எதற்கையா இந்தக் கூட்டம்? நடத்தாமலிருந்தால் சமோசா – தேநீர் செலவாவது மிச்சமாகுமே?

~~~~~~~~~~~

செய்தி: மவுலிவாக்கம் கட்டிட விபத்து பற்றி விசாரிக்கவும், வருங்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் முன்னாள் நீதிபதி ரெகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

நீதி: இந்த கண்துடைப்பு கமிஷன் கண்டு பிடிக்கப் போகும் வழிமுறை என்ன? இனி கட்டிடம் கட்ட கமிஷனை வாங்கும் அதிமுக அமைச்சர்கள்  பூமி பூஜைக்கு செல்ல மாட்டார்கள் என்பதா?

~~~~~~~~~~~

செய்தி: கச்சத்தீவுப் பிரச்னையில் காங்கிரஸ் கூட்டணி அரசின் நிலைப்பாட்டை, பாரதிய ஜனதா தலைமையிலான அரசும் பின்பற்றுவது ஏற்கத்தக்கது அல்ல என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

நீதி: இந்துமதவெறியர்களுடன் கூட்டணி வைத்த உங்களையே எவரும் ஏற்காத போது பாஜக நிலையை நீங்கள் ஏற்றாலோ, ஏற்காவிட்டாலோ, ஏப்பம் விட்டாலோ எங்களுக்கு என்ன?

~~~~~~~~~~~~

செய்தி:  தர்மபுரி மாவட்டம், நத்தம்காலனியில் இன்று நடைபெறும் இளவரசன் நினைவுதின நிகழ்ச்சியில் அஞ்சலி செலுத்துவதற்கு அரசியல் கட்சிகளுக்கு அனுமதி கிடையாது என்று சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதி: ஆமாம், நத்தம் காலனியை எரிப்பதற்கு சாதி வெறியர்களுக்கு அனுமதி உண்டு. எரித்ததை எதிர்ப்பதற்கு தலித் மக்களுக்கு அல்ல!

~~~~~~~~~~~

செய்தி: பேய் பிடித்ததாக கூறி தொழிலாளி தலையில் உறவினர்கள் 3 அங்குல அளவுக்கு தலையில் இறங்கிய ஆணியை, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் அகற்றினார்கள்.

நீதி: உறவினர்களின் தலையில் இருக்கும் பார்ப்பனிய மூடநம்பிக்கை எனும் ஆணியை அகற்றும் மருத்துவர்கள் பற்றாக்குறை என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?

~~~~~~~~~~

செய்தி: திரிணாமூல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தபாஸ் பாலின் பாலியல் வன்புணர்ச்சி மிரட்டல், இந்திய அளவில் பிரபலமாக அனைத்து ஊடகங்களில் அடிபடுவதால், “தங்களுக்கு எதிராக தவறான தகவலோடு பிரச்சாரம் செய்யப்படு”வதாக மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார்.

நீதி: எனில் ஊடகங்களால் பிரபலமான ஆட்டோ சங்கருக்கும், டாக்டர் பிரகாஷுக்கும் இந்த நீதி பொருந்துமில்லையா தீதி?

~~~~~~~~~~

செய்தி: தபாஸ் பால் “ரேப் மிரட்டல்” என்று பேசியது நாக்கு பிறழ்வால்தான் என்று அவருக்கு ஆதரவு தெரிவித்தார், குடியரசுத் தலைவரின் மகனும் காங்கிரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான அபிஜித் முகர்ஜி.

நீதி: ரப்பர் ஸ்டாம்பின் பிள்ளை இப்படி தப்பு தப்பாகத்தானே பேசும்?

~~~~~~~~~~~~

செய்தி: தமிழக காங்கிரஸில் இருக்கும் முக்கியத் தலைவர்கள் அனை வருமே மாநில தலைவர் பதவி கேட்டு கட்சித் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆளாளுக்கு ஒரு மேலிடத் தலைவரை பிடித்து காய் நகர்த்தி வருகின்றனர்.

நீதி: ஓட்டுப் போட நாலு பேர் இல்லேனாலும், நாற்காலி சண்டைக்கு நாலு பேர் இருக்கான் பாரு!

~~~~~~~~~~~~

செய்தி: இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்களிலேயே ஒபாமாதான் மிக மோசமான அதிபர் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

நீதி: 2-ம் உலகப் போருக்கு பிந்தைய அனைத்து அமெரிக்க அதிபர்களும் மோசம் எனும் போது, அதில் சுமாரான மோசம், மீடியமான மோசம், பயங்கர மோசம் என்ற பாகுபாடு மோசமில்லையா?

~~~~~~~~~~~~

செய்தி: வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் அடுத்த வாரம் இந்தியா வருகிறார்.

நீதி: போனவாட்டி ‘நெக்லஸ்’ வாங்குன சுஷ்மா இந்த வாட்டி ஒட்டியாணம் வாங்குவாரா?

~~~~~~~~~~~~~

 

  1. செய்தி: தர்மபுரி மாவட்டம், நத்தம்காலனியில் இன்று நடைபெறும் இளவரசன் நினைவுதின நிகழ்ச்சியில் அஞ்சலி செலுத்துவதற்கு அரசியல் கட்சிகளுக்கு அனுமதி கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    யார்னாலும் செத்தவுடன் பெரிய தியாகியாக்கிவிடுவதும், அவர்களை தங்களின் இன/மத/ஜாதிய அடையாளமாக்குவதும் தமிழர்களின் மூடப்பழக்கம்

    ஆட்டோ சங்கர்

    • இவ்வகையான பாதிப்புகளை ஏற்படுத்தியவன் மனிதனாக தன்னுடைய மனிதாபிமானத்தை காட்டி இருந்தால் இன்று பாதிக்கப்பட்டவர்கள் துயருடன் இழந்தோரை தியாகிகளாக பார்க்க வேண்டிய நிலை வந்திருக்காதே.

  2. செய்தி: குழந்தைகள் இறப்பை தடுக்கும் வகையில் 3 புதிய தடுப்பூசிகள் அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக அளிக்க உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

    நீதி: பின்னாளில் கலவரங்களில் சாகாமல் காப்பாற்றப்படுவதற்கு, இசுலாமியர்கள் குழந்தைகளாக இருக்கும் போதே ஏதும் தடுப்பூசி இருக்கிறதா பிரதமர் அவர்களே?

    னீங்க அவர் எது செய்தாலும் கிண்டல் பண்ணவேண்டுமென முடிவெடுத்து ரொம்பநாள் ஆயிற்றூ…அவர் ஜெயிக்க மாட்டார் என்று கூவினீரக்ள்..இந்து அவர் பாரதப்பிரதமர்…

    • அய்யா கிண்டல் சையும் வகையில் தான் அவருடைய செயல்பாடுகள் உள்ளதைய.. இவர் ஜெயித்தது பெரிய விஷயமே இல்லை, காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக பிறந்த சில மாதமே ஆனா கட்சியான ஆம் ஆட்மிக்கே டெல்லி மக்கள் ஆதரவு கொடுத்து வெற்றிபெற செய்தனர். அப்படி இருக்கையில் கோடிகளில் பணம் செலவு செய்து விளம்பரம் செய்தும் நீங்கள் வெற்றி பெற முடியவில்லை என்றால் , பின்பு தனக்கு தானே குழியை நோண்டி புதைத்துக்கொள்ள வேண்டியதுதான்.
      இப்போதைக்கு தேர்தலின் முடிவு மோடி இன் ஆட்சி வந்துள்ளது, இந்த ஐந்து ஆண்டுகளின் ஆட்சி இன் முடிவு உங்களின் கட்சி இன் ஆயுளை தேர்ந்தெடுக்கும்.

  3. செய்தி: பேய் பிடித்ததாக கூறி தொழிலாளி தலையில் உறவினர்கள் 3 அங்குல அளவுக்கு தலையில் இறங்கிய ஆணியை, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் அகற்றினார்கள்.

    நீதி: உறவினர்களின் தலையில் இருக்கும் பார்ப்பனிய மூடநம்பிக்கை எனும் ஆணியை அகற்றும் மருத்துவர்கள் பற்றாக்குறை என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?

    இது பார்ப்பானிய மூடநம்பிக்கையா அல்லது அந்த வர்க்கத்தின் மூடநம்பிக்கையா???

    இதே ஆணிய ஒரு அய்யர் (உங்க பாசையில் பார்ப்பன்) தலையில் அடிக்க முடியுமா ?

    இல்லை ஒரு தேவர் நாடார் அல்லது கவுண்டர் தலையில் அடிக்க முடியுமா ?

  4. There is a new entrant by name Auto Shankar.It seems that he has come directly from BhodhGaya.He need not have selected the name Auto Shankar.Even without his knick name his opinions are notorious.

    • இவர் Paiya என்ற பெயரில் ‘கருத்து’போடுபவர். இடையில் சந்தன பாண்டியனாக வந்து தற்போது ஆட்டோ சங்கராக மாறியிருக்கிறார்.

  5. பைய்யாவே இந்த வேஷம் போட்டார் என்றால்..வாழ்நாளெல்லாம் வேஷம் காட்டுபவர்கள் எம்புட்டு காட்டுவார்கள். பெருமாளே………….

    • பெருமாளை நம்பியோர் கைவிடப்படார்….அதுதான் கண்டுபுச்சிட்டாரே சிபீஅய்

      அது ஒன்னுமில்லை நம்ம பாரதப்பிரதமருக்காக உங்களிடம் சண்டை போட்டுப் போட்டு எனக்கு வெருத்துப்போயிரூச்சு,,,,,மோடி, இந்துதுவா, பார்ப்பாணியம் எல்லாம் உங்கள் வியாபார விசயங்கள் என அறிந்த பிறகு ஒரு முடிவெடுத்தேன்,,,,மோடி பிரதமராகும் வரை வினவுப்பக்கமும் டாஸ்மாக் பக்கமும் வரக்கூடாது என்று…..

      மனம் கொஞ்சம் அமைதியடைந்தது….மொடி பாரதப்பிரதமர் ஆனவுடன் இனி இவர்களுடன் சண்டைபோடுவது வீன் என ஒடுங்கியே இருந்தேன்…ஆனால் ஆட்டோகாரர்கள் பண்னும் ஆய்ரமாயிரம் அட்ராசிட்டிகளினைத் தட்டிக்கேட்த்காமல் அவர்களைப் புகழ்ந்து எழுத்ய போது ஆட்டொ சங்கர் எனும் பெயரில் எழுதினேன்…

      https://www.vinavu.com/2014/06/19/auto-drivers-meet-discusses-issues/

  6. karutthukkal niyaayamaanathaaka irunthaal peyar maatri pathivida thevai illai. nam karutthil ulla niyaayam kelviketporidam pathil solvatharkku ookkamalikkum.

  7. பையாவே வேசத்துக்கு ஒரு காரணம் கூறும்போது,பெருமாளும் கைவிட்டுட்டு அதுக்கு ஒரு காரணம் சொல்லத் தெரியாமலா இருப்பாரு……………

  8. ///செய்தி: குழந்தைகள் இறப்பை தடுக்கும் வகையில் 3 புதிய தடுப்பூசிகள் அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக அளிக்க உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

    நீதி: பின்னாளில் கலவரங்களில் சாகாமல் காப்பாற்றப்படுவதற்கு, இசுலாமியர்கள் குழந்தைகளாக இருக்கும் போதே ஏதும் தடுப்பூசி இருக்கிறதா பிரதமர் அவர்களே?

    Opposing this statement.

Leave a Reply to ஆட்டோ சங்கர் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க