privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கசொர்ணாக்கா திருநெல்வேலிய காணலையாமே?

சொர்ணாக்கா திருநெல்வேலிய காணலையாமே?

-

வீடியோ

vinavu cartoons 9.9 (5)

தில்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாயா
தில்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாயா

vinavu cartoons 9.9 (2)

vinavu cartoons 9.9 (4)vinavu cartoons 9.9 (7)vinavu cartoons 9.9 (3)vinavu cartoons 9.9 (1)vinavu cartoons 9.9 (8)

bjp-09

நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலுக்கு பா.ஜ.க வேட்பாளரான வெள்ளையம்மாள் வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளான நேற்று தனது கைக்குழந்தையுடன், கணவர் ராஜா, வக்கீல் மகாராஜன் ஆகியோருடன் வந்து தனது வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான மனுவை பூர்த்தி செய்து கொடுத்து விட்டு சென்று விட்டார். இதைத் தொடர்ந்து நெல்லை மேயராக அ.தி.மு.க வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்துள்ளதாக அ.தி.மு.க அறிவித்துள்ளது.

நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் மிரட்டலுக்கு பயந்தே பா.ஜ.க வேட்பாளர் வாபஸ் என்றும் “மனுதாக்கல் செய்யப்பட்ட பல இடங்களில் பா.ஜ.க.வினரின் மனுக்களை ஏற்கப்பட்டதாக முதலில் நோட்டீசு போர்டில் தகவல் வெளியிடப்படுகிறது. அதன் பின்னர், மனு நிராகரிக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்” என்றும் பா.ஜ.க மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் புலம்பியிருக்கிறார். வெள்ளையம்மாள் 3 நாட்களாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனின் பாதுகாப்பில் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே பாரதீய ஜனதா கட்சி டெல்லி மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கு ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை பணம் கொடுத்து வளைக்க முயற்சித்துள்ளது.

டெல்லி மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசு பதவி விலகிய பிறகு சட்டமன்றம் கலைக்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்தியில் மோடி தலைமையில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததை அடுத்து, சட்ட மன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பா.ஜ.கவை ஆட்சி அமைக்க அழைப்பதற்கு அனுமதி கேட்டு டெல்லி துணை நிலை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்பி உள்ளார்.

தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையை சரிக்கட்ட, ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் ஒருவருக்கு ரூ 4 கோடி கொடுத்து தங்கள் பக்கம் இழுக்க பாரதீய ஜனதா முயற்சித்திருக்கிறது. சங்கம் விகார் தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி சட்ட மன்ற உறுப்பினர் தினேஷ் மொகானியாவுக்கு, பா.ஜ.க டெல்லி துணைத் தலைவர் ஷெர்சிங்க் தாகர் ரூ 4 கோடி கொடுப்பதாகவும், அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதாகவும், தேர்தலில் தோற்றால் ஏதாவது வாரியத் தலைவர் பதவி தருவதாகவும் உறுதி அளித்திருக்கிறார். இது தொடர்பான உரையாடல், காட்சிப் பதிவுகள் தன்னிடம் இருப்பதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியிருக்கிறார்.

லேடியும் சரி, கேடியும் சரி அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு ‘ஜனநாயக’த்தை விலைக்கு வாங்குவதில் வல்லவர்கள் என்பதைத் தவிர இது வேறு எதைக் காட்டுகிறது?

நெல்லை தவிர இன்னும் சில இடங்களில் அ.தி.மு.கவுக்கு வழி விட்ட பா.ஜ.க வேட்பாளர்கள்.

1. பா.ஜனதா வேட்பாளர் வாபஸ் பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவிப்பு – “நான் வாபஸ் கடிதம் கொடுக்கவில்லை” என்கிறார் பா.ஜனதா வேட்பாளர்.

– மதுரை மாநகராட்சி 85-வது வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் அ.தி.மு.க போட்டியின்றி தேர்வு

2. ஆலந்தூர் மண்டல 166-வது வட்ட இடைத்தேர்தல் : பா.ஜனதா வேட்பாளர் திடீர் வாபஸ்; அ.தி.மு.க போட்டியின்றி தேர்வு.

– பா.ஜனதாவினர் அவர்கள் கட்சி வேட்பாளர் நீதிசேவியர் வீட்டின் முன் போராட்டம்

3. ஆவடி நகராட்சி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் திடீர் வாபஸ் – அ.தி.மு.க வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

– ஆவடி நகராட்சி 33-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் தரணி திடீரெடனு தனது மனுவை வாபஸ் பெற்றார். அவருடன் மாற்று வேட்பாளர் ஸ்ரீகிருஷ்ணவேணியும் மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். இருவரும் பா.ஜ.கவில் இருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்து கொண்டனர்.

4. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் நகரமன்ற தலைவர் பதவிக்கு பா.ஜனதா வேட்பாளர் உட்பட 4 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து சுயேச்சை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் அ.தி.மு.க வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

5. சென்னையை அடுத்த தாம்பரம் நகராட்சி 7-வது வார்டு, 33-வது வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்களின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

6. பல்லாவரம் நகராட்சி 2-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் அ.தி.மு.க தவிர பா.ஜ.க வேட்பாளர் உட்பட மற்றவர்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றதால் அ.தி.மு.க போட்டியின்றி வெற்றி பெற்றது.

  1. ஒரு பெண்ணை அதுவும் ஒரு கட்சியின் மாநில தலைவியை சொர்ணாக்கான்னு கூப்பிடுறீங்களே? இது தானா உங்க பெணீயம்? ஈயம் அதிகமாயி பல்லிளிக்குது கொஞ்சம் குறைச்சிகோங்க..

    • சந்தோஷ் இதே நியாயத்தை 4 முறை முதல்வராக இருந்த 92 வயது முதியவரை ‘கருணா’ என்றும் ‘மஞ்சப்பை’ என்றும் ஏன் ‘தீயசக்தி’ என்றெல்லாம் பின்னூட்டம் இடும் தினமலம் போன்ற ஊடகங்களில் போய் கூறுவீர்களா? சொர்ணாக்கா என்கிற ஒப்புவமை அந்தம்மா ஊடகங்களில் நிகழும் விவாதங்களில் விடுகின்ற சவுண்டுக்கு பொருத்தமானதே! எடுத்துவைக்க நியாயமான வாதங்கள் இல்லாத ஒரு துர்பாக்கியமான நிலையிலே எல்லா காவிகட்சி பிரபலங்களும் இதனையே செய்துவந்தாலும் இந்தம்மா அதிலே ஒரு தனி ரகம்!

      • வினவுக்கு மற்றும் தோழர்களுக்கு,

        நான் திரைப்படங்கள் தொலைக்காட்சிகள் பார்ப்பது குறைவு. எனவே ‘சொர்ணாக்கா’ என்ற சாதாரண விழிச்சொல்லில் இருக்கும் மறை பொருள் எனக்கு விளங்கவில்லை. பதிவில் உள்ள வீடியோவைக்கூட நான் பார்க்கவில்லை. ரமேஷ் அவர்களின் (அவருக்கு நன்றி) விளக்கத்தால் ஓரளவு புரிந்து கொண்டேன். வடிவேல் காமெடி வடிவத்தில் இந்த பதிவு எழுதப்பட்டிருக்கிறது என்று யூகிக்கிறேன். வடிவேல் காமெடியே தோலின் நிறத்தை வைத்து (இந்திய நிறவாதம்) சில மக்களை நக்கல் செய்து மகிழ்வதற்காகத்தான் என்பது என் கருத்து.

        தோழர்கள் இது போன்ற ‘காமெடிகளைத்’ தவிர்ப்பதே நல்லது.

  2. என்ன சார் தப்ப புரிஞ்சிகிட்டிங்கா

    சொர்ணாக்கா

    சொர்ணம் = தங்கம்
    அக்கா = சகோதரி

    சொர்ணாக்கா = தங்கம் சகோதரி

  3. IAS ஆபிசர் அம்மா மேல அசிட் ஊத்தின ,கல்லூரி மாணவிகளை பஸ்சுடன் சேர்த்து எரித்த ஓரிஜினல் சொர்ணா அக்கா மேல வினவுக்கு பயம் போல ! இல்லை வெள்ளையா இருகிரவன் பொய் சொல்ல மாட்டான் என்ற வடிவர் வாசகம் போல வெள்ளையா இருக்கும் ஓரிஜினல் சொர்ணா அக்கா அதாங்க அடிமைகள் தலைவி ……….. கருப்பா இருக்கும் நாடார் குல பெண் சிங்கம்,வணிகர் தங்கம், ஈழம் கரு அறுத்த காங்கிரஸ் தமிழ் அறிஞர் குமரிமுத்துவின் அன்பு புதல்வியை பார்த்தா வினவு சொர்ணா அக்கா என்பது ?

    பட்டத்தை மாற்றி கூறியதால் ஓரிஜினல் சொர்ணா அக்கா கோபம் கொண்டு அசோக் பில்லர் ஈபில் டவர் வினவு corporate ஆபீஸ்சை தாக்கிட போறாங்க பாத்துங்க!

    ஐயே சாமி…. நான் என்ன சொல்லிகிட்டு இருக்கேன். வாபஸ் வாங்கிடறேன்!

    தலைவி வாழ்க வாழ்க ! அம்மா வாழ்க ! நாங்கள் அடிமைகள் …,எங்கள் தலைவி “க்மாஸ்டா” அம்மா வாழ்க வாழ்க !

  4. பேப்பர்ல எந்த போட்டாவ பாத்தாலும் ஓபி யும் மத்த மந்திரிகளும் குணிந்து கொண்டு இருப்பதும் அம்மா சிரித்துகொன்டு நிற்ப்பதும் பார்த்தால் ஒன்றல்ல நாற்ப்பது சொர்னாக்கா க்கு சமம்னு தோனுது அது மட்டும் இல்லாம சொர்னாக்கா என்ற சினிமா காரக்டர் சாயலிலேயே ஒரு பெண் மந்திரி வேற இவங்க சொர்னாக்காவுக்கே சொர்னாக்காபா……..

  5. இதற்குப் பெயர் தான் “முற்போக்கு” போலிருக்கிறது. அரசியல் இன்னும் முற்றுமுழுதாக ஆண்களில் கைகளில் தான் உள்ளது, அந்த ஆண்களின் உலகில் ஒரு பெண், அதுவும் ஒரு தமிழ்ப்பெண் தலைமைப்பதவியைப் பெற்றுக் கொண்டதை, என்ன தான் கருத்து வேறுபாடிருந்தாலும், பாராட்டியிருக்க வேண்டும். பாராட்ட மனம் வராது விட்டால் ஒன்றும் பேசமால் பொத்திக் கொண்டாவது இருந்திருக்கலாம். தமிழ்நாட்டில் பார்ப்பனக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு கட்சிக்கு உண்மையான ஒரு தமிழச்சி தலைமைப்பதவி ஏற்பதென்பது நினைத்துப் பார்க்கக் முடியாதது. தமிழ்நாட்டுத் தமிழர்களின் சுயவெறுப்பு உண்மையான தமிழர்களைத் தலைமைத்துவமேற்க அனுமதிப்பதில்லை, அதை தமிழ்நாட்டுத் தமிழர்களால் தாங்க முடியாது. டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும், வெள்ளைத்தோலோடு மினு, மினு என்று குஸ்பு போல இருந்தால், தலைவியாக ஏற்றுக் கொள்வதோடு, உரிய மரியாதையையும் தமிழ்நாட்டு ‘முற்போக்குகள்’ நிச்சயமாகக் கொடுத்திருப்பார்கள்.

    முதலமைச்சர் ஜெயலலிதாவை, இலங்கை அரசு அவமதித்தற்கும், இந்த ‘சொர்ணாக்கா’ நையாண்டிக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. இரண்டுமே பெண்களை இழிவுபடுத்தும் செயல். இந்துமதத்தை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக, தமிழ்நாட்டிலேயே ஒரு தமிழ்ப் பெண்ணை இப்படி நக்கலடிப்பது மிகவும் கண்டிக்கத்தகது. இதற்குப் பெயர் முற்போக்கல்ல, காடைத்தனம்.

    • மிக சரியாக கூறினீர்கள். முகவரி இல்லாமல் கருத்து தெரிவிக்க முடிகிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதலாம் என சமூக வலைதளங்கள் பலவற்றிலும் இது போல பதிவிடுவோர்களுக்கு சாட்டையடி கொடுத்துள்ளீர்கள்

  6. சரியாக சொன்னீர்கள் வியாசன். கருணா, டக்ளஸ் போன்ற தமிழர்கள் ராஜபக்சே கட்டுப்பாட்டில் இருக்கும் அரசில் மதிப்புடன் வலம் வருவது கண்டு பொருக்க முடியாமல் சிலர் ஊழையிடுவது போல தமிழிசை என்ற தமிழர் மோடியின் கட்சியில் ஒரு பதவியில் அமர்வது சிலருக்கு பொருக்கமுடியவில்லை.

    வாழ்க டக்ளஸ்! வாழ்க தமிழிசை! வாழ்க தமிழினம்!

  7. இதைத் தான் நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன என்பார்கள் இலங்கையில். கருணா, டக்ளஸ் போன்றவர்களுடன் தமிழிசையை ஒப்பிடலாமா என்பது கூடத் தெரியாமல், அதாவது செக்குக்கும், சிவலிங்கத்துக்கும் வேறுபாடு தெரியாத ஒரு சிலர் தான் முற்போக்கு என்ற முகமூடியைப் போர்த்துக் கொண்டு அலைகிறார்கள் என்று நீங்கள் நக்கலடிக்கிறீர்கள் என்பது போலத் தோன்றுகிறது. அதனால் ஒப்பீடு செய்யும் போது, கொஞ்சம் யோசித்துச் செய்யுங்கள். 🙂

    செல்வி. தமிழிசை எத்தனை ஆயிரம் தமிழர்களின் அழிவுக்குக் காரணமாக இருந்தார் அல்லது எவ்வாறு தமிழர்களைக் காட்டிக் கொடுத்தார், எப்படி அவர்களின் நலன்களுக்கெதிராக் நடந்து கொண்டார் என்று ஒரு சில உதாரணங்களையாவது தந்து விட்டு, டக்ளசையும், கருணாவையும், தமிழிசையுடன் ஒப்பிட்டால், மற்றவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

    உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, ஒரு அரசியல் கட்சியின் தலைவியை, அதுவும் ஒரு தமிழ்ப்பெண்ணை, தமிழ்நாட்டில் தமிழர்களே “சொர்ணாக்கா” என்று வர்ணிப்பது சரியென்றால், ஜெயலலிதாவின் அரசியலும், கருத்துக்களும் பிடிக்காததால் அவரைப் பற்றி, பாலியல் வக்கிரத்துடன், நகைச்சுவைப் படம் வெளியிட்ட சிங்களவர்களை ஏன் இந்தியர்கள் எல்லாம் குற்றம் கூறினார்கள், அவர்களை மன்னிப்புக் கேட்க வைத்தார்கள். எல்லோரும் கண்டனம் தெரிவித்தார்கள். நடிகர்கள் எல்லாம் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.பார்ப்பன ஜெயாவுக்கு ஒரு நீதி சூத்திர தமிழிசைக்கு ஒரு நீதியா?

    “சூத்திரனுக்கொரு நீதி, தண்டச்சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதியா”?

    • இனவெறியர்கள் எல்லோருமே ஒரே மாதிரித்தான் இருக்கிறார்கள். சிங்களவன் ஜெயலலிதாவை பாலியல் வக்கிரத்திடன் பதிவிட்டால் இந்துத்துவ வெறியரான வியாசன் குஸ்புவை பார்த்து வெள்ளைத்தோல் மினுமினு என்று பாலியல் வக்கிரத்தைக்கொட்டுகிறார். இவரது யோக்கியதையே அப்பட்டமான பாலியல் வக்கிரம் என் கிற பொழுது இவர் பொளக்கிற நியாயம் கடைந்தெடுத்த காடைத்தனம். என்னசெய்வது? மதவெறியர்களாக இருந்தாலும் இனவெறியர்களாக இருந்தாலும் பிற இனத்துப் பெண்களை சூறையாடுவதும் இறந்தபின்பு புணர்வதும் தோல்நலம் புனைந்துரைப்பதும் வழமையான ஒன்றுதானே!!

      இப்பொழுது சொர்ணாக்காவிற்கு வருவோம். அமெரிக்காவிற்கு அடிபணிகிற மோடி “கைப்பிள்ளை” என்கிற பொழுது மைக்கே இல்லாமல் கத்துகிற இந்துவெறியர் தமிழிசை “சொர்ணாக்கா” இல்லாமல் வேறு என்ன? இதில் வியாசன் கண்ட இழிவை விளக்குவாரா?

      எது இழிவு என்பதற்கு நமக்கு துரோகமான வரலாறே உண்டு. சங்கராச்சாரி சவுந்தர்ய லகரியில் உமையவளை பாலியல்பண்டமாக சித்தரிப்பதையே ஒன்றும் செய்யாமல் இருந்தவர்கள் வியாசன் போன்ற இந்துத்துவ வெறியர்கள். இதில் சைவம் தமிழர்களின் மதம் என்று நம்மிடம் விற்றுவிட்டு பார்ப்பனிய ஊதுகுழலாக இருப்பதோடு மட்டுமில்லாமல் இறைவியையே பாலியல் வக்கிரத்திற்கு கூட்டிக்கொடுத்துவிட்டு இங்கு வந்து ஒழுக்கம் பற்றி வகுப்பெடுக்கிறார்கள்; அதுவும் வெள்ளைத்தோலின் மினுமினுப்பு குறிப்போடு!!

      இவருடைய வாதங்களில் தமிழும் கிடையாது; தமிழ் தேசியமும் கிடையாது. இதுபோதாது என்று தமிழிசை தமிழர் என்பதுதான் தமிழ்தேசியமா என்றால் இந்துத்துவமே உன்பெயர் தான் தமிழ் தேசியமா?

      ஏனெனில் நெக்குருக உருக, தமிழ் தேசியத்தைக் கூவி விற்ற காசி ஆனந்தன், வியாசனுக்கு “நாய் கூட சீண்டாத புளிச்சமாவாம்” வியாசன் பயன்படுத்திய வார்த்தைகளை மீண்டும் கவனிக்க. ஆனால் கூவி கூவி மதவெறியை கிளப்புகிற தமிழிசை இவருக்கு தமிழராம். இந்துத்துவக் கைக்கூலிகளிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

      • இந்த தென்றலோ, முன்றல் எல்லாம் ஏன் தமிழில் எழுதக் கிழம்பியதென்று தான் எனக்குத் தெரியவில்லை. ஒன்றில் இவருக்கு நன்றாக அறளை பெயர்ந்து விட்டது, அதனால் படிப்பது நினைவுக்கு நிற்பது குறைவு, அல்லது மற்றவர்களின் கருத்துக்களை விளங்கிக் கொள்ள முடிவதில்லை. இவர் இப்படிப் புரியாமல், மற்றவர்களின் கருத்துக்களை திரிப்பது இது முதல் முறையல்ல. இந்தக் காரணத்துக்கவும், முன்பின் தெரியாமல் சந்தில வந்து சிந்து பாடும் இவரது வழக்கத்தினாலும் தான் நான் இவருக்குப் பதிலெழுதுவதை நிறுத்தினேன். தமிழ் கூடச் சரியாகப் புரியாது விட்டால் கேட்டுப் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, சும்மா உளறக் கூடாது.

        //ஏனெனில் நெக்குருக உருக, தமிழ் தேசியத்தைக் கூவி விற்ற காசி ஆனந்தன், வியாசனுக்கு “நாய் கூட சீண்டாத புளிச்சமாவாம்” வியாசன் பயன்படுத்திய வார்த்தைகளை மீண்டும் கவனிக்க.///

        உண்மையில் எனது பதிலில் நான் காசி ஆனந்தனைத் தாக்கவோ அல்லது இழிவு படுத்தவோ இல்லை, தேவையில்லாமல் காசி ஆனந்தனை வம்புக்கிழுத்த ஒருவரிடம், எப்படா ஊருக்கு, மட்டக்களப்புக்குப் போய், பச்சைப்பசேலென்ற மட்டக்களப்பு வயல்வெளிகளில் காலாற நடந்து தேங்காய்ப்பூ புட்டும், பொரித்த இறால் (கடலுணவு இலங்கையில் நிறைய உண்டு), உண்பேன் என்ற ஏக்கம் காசி ஆனந்தனுக்கிருந்தாலும், அதற்கு முடியாத நிலையில் நாயும் தின்னாத புளிச்சமாவை (தோசை, இட்லி) சாப்பிட்டுக் கொண்டு, சிவனே என்று கிடக்கிறார், அவரை ஏன் வம்புக்கிழுக்கிறாய் என்பது தான் நான் கேட்ட கேள்வி.

        ஆனால் அதை எப்படியெல்லாம் திரிக்கிறார் தோழர் தென்றல் என்பதைப் பாருங்கள். இந்தாளுக்கு உண்மையில் தமிழ் தெரியுமா அல்லது இவரும் வீட்டில் வேறு மொழி பேசும் ‘திராவிடத் தமிழரோ என்னவோ, எந்தப் புற்றில் எந்தப் பாம்பிருக்கிறதென்று யாருக்குத் தெரியும். 🙂

        • //இந்துத்துவ வெறியரான வியாசன் குஸ்புவை பார்த்து வெள்ளைத்தோல் மினுமினு என்று பாலியல் வக்கிரத்தைக்கொட்டுகிறார்.///

          நான் கூறியது என்னவென்றால், ஒரு தமிழரேயில்லாத குஸ்புவைக் கூட அவர் அரசியலில் ஈடுபடும் போது யாரும் சொர்ணக்கா என்று வர்ணிக்கவில்லை. ஏனென்றால் அவர் வெள்ளையாக இருக்கிறார், தமிழிசை சாதாரண தமிழராக இருக்கின்றார். தமிழ்நாட்டுத் தமிழர்களின் வெள்ளைத்தோலாசை உலகறிந்ததொன்று, இதைப் பற்றி பலரும் பேசியிருக்கிறார்கள். வெள்ளைத்தோல் என்றதுமே அண்ணன் தென்றலுக்கு அது பாலியலாகத் தெரிவதற்கு நான் பொறுப்பல்ல. இதே காரணத்துக்காக, இவரைப் போன்றவர்களுக்காகத் தான் முழு உழுந்துக்கு என்னே பூசிய மாதிரி இருக்கின்ற உண்மையான தமிழர்களைப் பற்றிய கிராமக் கதையாக இருந்தாலும் கூட வெள்ளைத்தோலுடன் இருக்கிற தமிழரல்லாத கதாநாயகிகளைத் தேடி தமிழ்ப்பட இயக்குனர்கள் அலைகிறார்கள் என்பது தெளிவாகிறது. 🙂

          • *முழு உழுந்துக்கு எண்ணெய் பூசிய மாதிரி – அதாவது கறுப்பாக- பெரும்பான்மைத் தமிழர்களின் நிறம்.

              • பார்த்தீர்களா, உங்களின் கேள்வியிலிருந்தே தெரிகிறது, கறுப்பு என்றால் அழகில்லை என்ற கருத்து எந்தளவுக்கு தமிழர்களின் மனதில், குறிப்பாக தமிழ்நாட்டுத் தமிழர்களின் மனதில் பதிந்து விட்டது என்பது. அந்தக் கருத்து, தமிழ்ச் சினிமா மூலம் சிறு குழந்தைகளின் மனதில் கூட விதைக்கப்பட்டு, கறுப்பாக இருக்கும் தமிழ்க் குழந்தைகள் கூட தாங்கள் அழகில்லாதவர்கள் என்று நினைக்கச் செய்து, அவர்கள் தமது தன்னம்பிக்கையை இழந்து, வெள்ளைத் தோலுள்ளவர்களை ஏக்கத்துடன் பார்க்கும் நிலையைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தி விட்டது. உண்மையில் பெரும்பான்மைத் தமிழர்களின் நிறம் கறுப்பு அல்லது மண்ணிறம் (brown) தானே தவிர, வெள்ளையல்ல.

                தமது தமிழ் நண்பர்களுடன் தமிழ்ப்படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும் வெள்ளையர்களும், கறுப்பர்களும், படம் முடிந்ததும் கேட்கும் முதல் கேள்வி, தமிழ்ப்படத்தின் கதாநாயகனும், கதாநாயகியும் ஏன் இவ்வளவு வெள்ளையாக இருக்கிறார்கள், ஆனால் அதுவல்ல தமிழர்களின் நிறம் என்பது தான். தமிழர்களுக்கு அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு வெள்ளைத்தோல் மோகம் அதிகம், அது தான் காரணம் என்பதை எப்படி விளக்குவதென்று தெரியாமல் நான் பலமுறை சங்கடப்பட்டதுண்டு. அதனால் நான் இப்பொழுதெல்லாம் தமிழ்ப்படங்களைப் பற்றி யாருடனும் பேச்சே எடுப்பதில்லை. 🙂

                • //பார்த்தீர்களா, உங்களின் கேள்வியிலிருந்தே தெரிகிறது, கறுப்பு என்றால் அழகில்லை என்ற கருத்து எந்தளவுக்கு தமிழர்களின் மனதில், குறிப்பாக தமிழ்நாட்டுத் தமிழர்களின் மனதில் பதிந்து விட்டது என்பது//எங்கள போல கருப்பா இருக்குறவங்கள குறிக்க பெரும்பாலும் பிரானணர்கள்தான் உளுந்துக்கு எண்ணை பூசினா மாறினு சொல்லுவா அதான் கேட்டேன் மத்தபடி எனக்கு வெள்ளைத்தோல் மோகம் எல்லாம் இல்லை…..

          • \\ தமிழ்நாட்டுத் தமிழர்களின் வெள்ளைத்தோலாசை உலகறிந்ததொன்று, இதைப் பற்றி பலரும் பேசியிருக்கிறார்கள். \\

            மேட்டுக்குடிகளின் பணக்காரத்திமிரும், பாலியல் வக்கிரமும் மக்களை இழிவுபடுத்துவதில் எப்பொழுதும் தயங்குவதில்லை. இதே வரிசையில் வியாசன் தற்பொழுது தனது அயோக்கியத்தனத்தை தமிழ்நாட்டுத் தமிழர்கள் மீது சுமத்துகிறார். புளிச்சமாவு, வெள்ளைத்தோலாசை, கழிவறை கிடையாது என்று தமிழ்நாட்டுத்தமிழர்களைப்பற்றி கைவசம் பல சரக்குகளை அவிழ்த்துவிடுகிறார். ஆனால் இந்துத்துவத்திற்கு முட்டுக்கொடுக்கிற பொழுது இதே அயோக்கியர்கள் தமிழர் வேடம் போட்டு தமிழிசை தமிழர், மோடி தமிழர் நலன், என்று கைக்கூலி வேலை பார்க்கின்றனர். பிறப்பின் அடிப்படையில் இனங்களை வரையறுத்து மனுவாதிகளாக தங்களை அடையாளப்படுத்துகின்றனர். ஓர் இனவெறியருக்கு மதவெறியருக்கு இதுபோன்ற கசடுகள் தவிர வேறு எதுவும் வரலாற்றில் இருப்பதில்லை என்பது தெளிவு.

            • பார்த்தீர்களா இந்த அநியாயத்தை, நான் வெள்ளைத்தோல் என்று குறிப்பிட்டதுமே தோழர் தென்றலுக்கு பாலியல் சிந்தனைகள் வந்ததாலோ என்னவோ அதற்கு பாலியல் வக்கிரமெனக் கருத்துக் கற்பித்தவர் தோழர் தென்றல். வெள்ளைத்தோல் மோகம் கொண்டவர்களுக்குத் தான் வெள்ளைத்தோல் என்று பேச்சுவழக்கில் குறிப்பிடுவது கூடப் பாலியல் வக்கிரமாகத் தோன்றும்.

              இங்கு பேசப்படுவது என்னவென்றால் ஒரு தமிழ்ப்பெண்ணாகிய செல்வி. தமிழிசையின் அரசியல் எவ்வாறாக இருந்தாலும், தமிழர்களே அவரை இழிவுபடுத்தும் வகையில் ‘சொர்ணாக்கா’ என்று வக்கிரமாக அழைப்பது சரியா? குஸ்பு போன்ற தமிழரல்லாத பெண்களுக்கு அரசியலில் அளித்த மரியாதையையாவது இந்த தமிழ்ப்பெண்ணுக்கு ‘முற்போக்கு’ தமிழர்கள் ஏன் கொடுக்கவில்லை என்பது தான். தோழர் தென்றல் இடையில் புகுந்து வழக்கம் போல், பேசிக்கொண்டிருந்த விடயத்தை திசை திருப்பி விட்டார்.

              • வியாசன்,

                //குஸ்பு போன்ற தமிழரல்லாத பெண்களுக்கு அரசியலில் அளித்த மரியாதையையாவது இந்த தமிழ்ப்பெண்ணுக்கு ‘முற்போக்கு’ தமிழர்கள் ஏன் கொடுக்கவில்லை.//

                குஸ்புவின் அரசியலுக்கு தோழர்களிடம் (அதாவது ‘முற்போக்கு’ தமிழர்களிடம்) குறிப்பிட்ட மரியாதை ஒன்றும் கிடையாது. நீங்கள் தவறானவர்களிடம் இந்த கேள்வியைக் கேட்டு நீங்கள் தான் சிண்டு முடியும் வேலையைச் செய்கிறீர்கள்.

          • //தமிழ்நாட்டுத் தமிழர்களின் வெள்ளைத்தோலாசை உலகறிந்ததொன்று, இதைப் பற்றி பலரும் பேசியிருக்கிறார்கள். வெள்ளைத்தோல் என்றதுமே அண்ணன் தென்றலுக்கு அது பாலியலாகத் தெரிவதற்கு நான் பொறுப்பல்ல. //

            அது சரி.. அப்போ அந்த “மினு மினு” என்று ஒன்னு சொன்னீங்களே அது பாலியல சேர்ந்ததா? இல்லையா? சும்மா ஒரு டவுட்டு..:)

            • தமிழ்நாட்டில் ‘மினு மினு’ என்ற சொல்லைக் கேட்டவுடனும் சிலருக்கு பாலியல் எண்ணம் ஏற்பட்டு விடும் என்று நீங்கள் கூறும்வரை எனக்குத் தெரியாது. எங்கிருந்து வினவிலுள்ள பதிவுகளை வாசிக்கிறீர்களோ தெரியாது, அதனால் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தாமலிருக்க, இனிமேல் மினு, மினு என்ற சொல்லை வினவில் எழுதாமலேயே தவிர்த்து விடுகிறேன். சரியா, இப்ப உங்களின் பிரச்சனை தீர்ந்து விட்டதல்லவா?? 🙂

              • //தமிழ்நாட்டில் ‘மினு மினு’ என்ற சொல்லைக் கேட்டவுடனும் சிலருக்கு பாலியல் எண்ணம் ஏற்பட்டு விடும் என்று நீங்கள் கூறும்வரை எனக்குத் தெரியாது.//

                நல்லா இருக்கு உங்க வாதம். “மினு மினு” என்பதே கவர்ச்சிக்கு பயன்படுத்தும் சொல்லாக இருக்கும்போது ‘எனக்கு தெரியாது’ என்றால் எப்படி. எதையாவது பேசவேண்டியது. அப்புறம் மற்றவர்களை நக்கல் எடுப்பது.

                • தமிழ் வளமான மொழி, தமிழில் ஒரு பொருளுக்குப் பல சொற்கள் உள்ளன அத்துடன் ஒரு சொல்லே வெவ்வேறு பொருள்படுவதுமுண்டு. மினு மினு என்பது உடலின் கவர்ச்சியை மட்டும் குறிக்கப் பயன்படுவதல்ல. மினு மினு என்பதற்கு ஒளிர் விடும் அல்லது ஒளி வீசும் என்ற கருத்துமுண்டு. மினு மினுக்கும் மீன்கள், நட்சத்திரங்கள், வண்ண விளக்குகள், நகைகள், பல், சப்பாத்து எல்லாவற்றையும் பார்த்தவுடன் நரம்பு, நாளங்களில் எல்லாம் புத்துணர்ச்சியுண்டாகி, உங்களுக்குப் பாலியல் உணர்வு வந்தால் ஒரு உளவியல் நிபுணரை விரைவில் அணுக வேண்டுமே தவிர, இப்படி வினவில் நேரத்தை வீணாக்கக் கூடாது. இதை என்னுடைய அன்பான வேண்டுகோளாக எடுத்துக் கொள்ளவும். நன்றி. 🙂

                  மினு மினுக்கும் – ஒளிர் விடும்
                  மினு மினுக்கும் மின்மினிகள்
                  மினு மினுக்கும் மீன்கள்
                  மினு மினுக்கும் விண்மீன்கள்
                  மினு மினுக்கும் பாதரசத் துளிகள்
                  மினு மினுக்கும் வண்ண விளக்குகள்
                  மினு மினுக்கும் நகைகள்
                  மினு மினுக்கும் பற்கள்
                  மினு மினுக்கும் பட்டாசுகள் (பூந்திரிகள்)
                  மினு மினுக்கும் திருமண அழைப்பிதழ்
                  மினு மினுக்கும் சப்பாத்து
                  மினு மினுக்கும் மூக்குத்தி

                  “மினுமினுக்கும் வானத்தில் மழை ரசித்திடப் போவோமா… முதல் துளி எதுவென தேடிப் பார்ப்போமா”

                  • யாரு யாரோட நேரத்தை வீணாக்குவது. எங்களுக்கும் தெரியும் ‘மினு மினுப்போட’ அர்த்தம். நல்லா திரிக்கிறீங்க கதைய. நீங்கள் வெள்ளைத்தோலோட அந்த மினு மினுப்ப சேர்த்து பேசும்போது அது கவர்ச்சியத்தான் குறிக்கும். இது சின்ன பிள்ளைங்கள கேட்ட கூட சொல்லும். வாதத்தை நல்லா இழுத்து விட்டு.. கதைய இன்னும் நல்லா திரியுங்க.

                    இதுக்கும் மேல நான் வாதம் பண்ணா.. எனக்கும் கிறுக்கு பிடிக்க வச்சிருவீங்க. வாரேன்.

        • ஆமாம் வியாசன். உமது மறுமொழியை படித்துவிட்டு காசி ஆனந்தனின் மீது உள்ள கரிசனத்தைத் தவறாக புரிந்துவிட்டோமோ என்று குற்ற உணர்வால் நெஞ்சம் கலங்கியது!!! நீர் சொல்வது போல சரியாக வாசித்திருந்தால் உமது தமிழர் விரோதப் போக்கை சரியாக அம்பலப்படுத்தியிருக்கிற முடியும்.

          “தமிழ்நாட்டான்களின் நாயும் சீண்டாத புளிச்சமாவு” என்று முன்னர் நீர் கூறியதை எனது மறுமொழியில் தவறவிட்டதற்காக வருந்துகிறேன்! நீராவது இதைச் சுட்டிக்காட்டக்கூடாதா? தமிழர்கள் மற்றும் காசி ஆனந்தனின் மீதுள்ள உமது கரிசனத்தை மெச்சுகிறேன். இனி நீர் பேசுகிற தமிழ் தேசியத்தை, நாயும் சீண்டாத புளிச்சமாவைத் தின்னும் தமிழ்நாட்டார்கள் இனி சீண்டமாட்டார்கள் என்று நம்புவோமாக!

          • புளிச்ச்சமாவில் செய்த உணவுவகைகள் தமிழ்நாட்டான்களின் முக்கிய உணவு என்பது நான் சொல்லித் தான் மற்றவர்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. ஒரு முறை சொன்னால் போதாதா? காசி ஆனந்தனுடன் சிண்டு முடிந்து விடப் பார்த்தார் முடியவில்லை, அதனால் தமிழ்நாட்டான்களுடன் சிண்டு முடித்து விடப் பார்க்கிறார்கள், இந்தாளுக்கு இதே வேலையாகப் போய் விட்டது, மற்றவர்கள் கூறுவதைத் திரிப்பது அல்லது சிண்டு முடிந்து விடுவது, அதை விட்டால் வேறு வேலையே கிடையாது, இடைக்கிடை சம்பந்தா சம்பந்தமில்லாமல் வர்க்கம், சொர்க்கம் என்று உளறல் வேறு. 🙂

            • தமிழ்நாட்டு மக்கள், தமிழ்நாட்டவர் என்று கூறலாமே வியாசன், ஏன் தமிழ்நாட்டான் என்ற ஏகவசனம்?

              தங்களின் பதிவுகளில் சமீப காலமாக தமிழ்நாடு தங்களது இலங்கையை விட மட்டமாக சித்தரிக்க முயலுகிறீர்கள். இது தவறு. தங்களுக்கு இட்லி, தோசை பிடிக்கவில்லை என்றால் அதை உங்கள் வரையில் வைத்து கொள்ளுங்கள். ஒட்டுமொத்த தமிழர்களையும் தமிழ்நாட்டையும் இதில் ஏன் இழுக்கிறீர்கள்.

              வெயிலும் புழுதியும் தமிழ்நாட்டில் மட்டும் தான் உள்ளதா?
              தங்களது மனதில் இனவெறி வன்ம வெயிலும் மேட்டிமை மனப்பான்மை புழுதியும் உள்ளது, கொஞ்சம் துடைத்து கொள்ளுங்கள்.

              இலங்கை தமிழருக்கும் தமிழ்நாட்டு தமிழருக்கும் இடையே நல்ல ஒரு சகோதரத்துவ உறவு உள்ளது.தங்களது பேச்சில் தங்களது இலங்கை பெருமையும் தமிழக இகழ்ச்சியும் நிரம்பி வழிகிறது. இன்றும் நீங்கள் எங்களது சகோதரர் தான், நாம் அனைவரும் ஒரு கொடியிலிருந்து மலர்ந்தவர்கள் தான்.

          • எங்கு (அப்பம் ரொட்டி சோறு) கிடைக்கிறதோ அதுவோ எனது தாய்நாடு என்கிற முதுமொழி நான் அடைக்கலம் தேடிய நாட்டில் உள்ளது.

            இந்த வாசகமே நான் வாழ்வில் கண்ட பொன்மொழி.

            மதங்கள் மாறலாம் இனங்கள் மாறலாம். ஒருமனிதனுக்கரிய அடிப்படைத் தேவைகள் ஒருபோதும் மாறப்போவதில்லை. இந்த அடிப்படைத் தேவைகளுக்காக போராடுபவர்களையே கம்யூனிஸ்ட் என்று சொல்வார்கள்.

            இத்துடன் இப்போதைக்கு நிறுத்துவோம்.

            திரு தென்றல்! எல்லாவித புனைவு போலிகளையும் உடைத்து கொண்டு தான் புரட்ச்சி முன்வரும்.

            வரலாற்று ரீதியில் வாழ்வின் நடைமுறை ரீதியில் சிங்களமக்களை போல் இனத்தை தன்நலமற்றமக்களை காண்பது அரிது. அப்படி காண்பதாக இருந்தால் இந்தியாவில் ஏதோ ஒரு பழங்குடி மக்களுடன் சாகவாசம் வைத்திருக்க வேண்டும். இல்லை அமேசன் காட்டில எஞ்சிப்போச இந்திய குடிமக்களுடன் உறவு வைத்திருக்க வேண்டும்.

            வியாசன் வியாசன்போன்றவர்கள் நிறையவே இருக்கிறார்கள்.
            வினவில் அறிமுகமாகிய வியாசன் பசி எப்படியிருக்கும் கஞ்சி எப்படியிருக்கும் என்பதை பற்றி அறியாத புட்டிபால் குடித்து வளர்ந்த குழுகுழு குழுந்தை.

            இந்த அறுவார் ஆல்தான் முப்பது வருடம் யுத்தம் நடந்தது என நினைக்கிறேன்.

            வியாசனுக்கு வியாசன் போன்றவர்களுக்கு பதில் சொல்வது சிங்களவர்கள் ஒழீக! தெலுங்கர்கள் ஒழிக!! என்பது போன்ற கருத்துக்களை வினவில் காணவில்லைய்லையா

            • //இந்த அறுவார் ஆல்தான் முப்பது வருடம் யுத்தம் நடந்தது என நினைக்கிறேன்.//

              ஈழத்தமிழர்கள் மத்தியில் மாவோ போன்ற போலிக் கம்யூனிசம் பேசுகிறவர்களும், தமிழர் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டே தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் முதுகில் குத்தி, சிங்களவர்களிடம் காட்டிக் கொடுத்த பச்சோந்திகள் எங்களின் பங்குக்கு அதிகமாகவே இருந்ததால் தான் முப்பது வருட யுத்தத்தினால் கூட நல்ல முடிவு கிடைக்காமல் போய்விட்டது.

              உந்த குறுக்கால போவார் இருக்கும் வரை ஈழத்தமிழர்களுக்கு விடிவு கிடையாது.

              • Mao,

                //வரலாற்று ரீதியில் வாழ்வின் நடைமுறை ரீதியில் சிங்களமக்களை போல் இனத்தை தன்நலமற்றமக்களை காண்பது அரிது.//

                நீங்கள் நன்றி காண்பிப்பது நியாயமானது தான், அது இயற்கையும் கூட. ஆனால் என்னைப் போன்ற ஈழத்தமிழர்களுக்கு, சிங்கள மக்களைப் பற்றிய உங்களின் மேற்கூறிய கருத்தை வரலாற்று ரீதியாக, உதாரணங்களுடன் விளக்கினால் மிகவும் நல்லது ஐயா. செய்வீர்களா, நீங்கள் செய்வீர்களா? 🙂

                • தம்பி வியாசன்! பூனை கண்னை மூடிவிட்டால் பூமி இருண்டதாகி விடாது.

                  வியாசன் போன்ற தமிழர்கள் இலங்கை நகராம் கொழும்பை தவிர்த்திட முடியுமா? ஈழப் போராட்டத்தில் முதல் சேர்த்தவர்கள் தொடர்மாடிக் கட்டிடம் கட்டி சொந்தக்காரர்களாக இருப்பதும் இலங்கை தலைநகர் கொழும்பில் தான்.

                  ஆகவே பிள்ளைவாள் வடக்குதமிழ்மக்களின் பொறுக்கி தனத்திற்கு ஆயிரம் உதாரணங்கள் என்னிடம் இருக்கிறது.

                  __________ அடுத்த உதாரணம்…

                  யாழ் குடிமகனே! தமிழனே என முத்திரை குத்திக் கொண்டவனே என்றைக்காவது மலையகமக்களை உன் இனத்துடன் சேர்த்து கதைத்தது உண்டா?

                  அப்படி இல்லையாயில் உனது என்ன விடுதலை? போராட்டம்??
                  நக்கி பிழைத்து வாழ்வது ஒரு வாழ்கை என கனவு காண்பவர்களுடன் எப்படி விவாதிப்பது நிரூபிப்பது.

                  முப்பது வருடபோராட்டம் தரும் சான்றுகள் என்ன?

                  போதைவஸ்துகள் எப்படி கடத்தினார்கள். எத்தனையாயிரம் தமிழ்மக்களை சொந்நாட்டில் அகதியாக்கினார்கள் என்பது பற்றியா?.

                  எப்படி கொழும்பில் இருந்து வரும் அரிசி பருப்பு மூட்டைகளை கொள்ளையடித்து ஈழப்டீபராட்டத்திற்கு ஆதரவு தேடியானார்கள் என்பது பற்றியே இனி என்ன விளக்கம் தேவை பிள்ளைவாள்.

                  வெள்ளைகாரனுக்கும் அவன் சட்டத்திற்கும் விசுவாசகமாக பணிபுரிந்தவன்.யாழ்பாணத்து பண்டிதன்.இரண்டாவது தமிழ்நாட்டில் பிராமணன்.

                  இவர்களே உடல்உழைப்பு இல்லாமல் பொருள் தேட முயற்சித்தவர்கள். இன்று நிலைமை எவ்வளவோ மாறி விட்ட போதிலும் வியாசனின் மற்றவனை அடக்கியாளுகிற குணம்சமம் மாறவில்லை என்பதை தான் கடல் கடந்து வாழ்தாலும் சில போதையான வர்க்ககருத்துக்கள் மாற முடியாது என்பதை நிரூபிக்கின்றன.

                  • Mao,

                    ஈழத்தமிழர்களை இழிவுபடுத்துவது தான் உங்களின் வேலைத்திட்டமாக இருக்கலாம். அதனால் நீங்கள் ஈழத்தமிழர்களை இழிவுபடுத்துவது எதிர்பார்த்தது தான், உங்களைப் போன்ற எத்தனையோ பேர் இணையத்தளங்களில் உள்ளனர். அது பிரச்சனையல்ல.

                    என்னுடைய கேள்வி என்னவென்றால், “வரலாற்று ரீதியில் வாழ்வின் நடைமுறை ரீதியில் சிங்களமக்களை போல் இனத்தை தன்நலமற்றமக்களை காண்பது அரிது” என்ற உங்களின் கருத்துக்கு வரலாற்று ரீதியாக, உதாரணங்களுடன், என்னைப்போன்ற ஈழத்தில் சிங்களவர்களுடன் பழக வாய்ப்புக் கிடைக்காத தமிழர்களுக்காக விளக்குங்கள் என்று கேட்டால், நீங்கள் ஈழத்தமிழர்கள் பற்றியே தொடர்ந்து உளறுகிறீர்கள். உங்களுக்கு கேள்வி இன்னும் புரியவில்லையா??

                  • //தம்பி வியாசன்! பூனை கண்னை மூடிவிட்டால் பூமி இருண்டதாகி விடாது.//

                    மாவோ அண்ணா! உங்களின் மேற்கூறிய உளறலில் உங்களின் அறியாமை தெரிகிறது. உங்களின் கேள்விகள் எல்லாவற்றுக்கும் நான் நிச்சயமாகப் பதிலளிக்கிறேன், முதலில் சிங்களவர்களைப் பற்றிய உங்களின் கருத்துக்கு வரலாற்று ரீதியாக உதாரணங்களுடன் விளக்கமாக பதிலளிக்கவும். நன்றி.

                    • பொதுவாகவே இப்போது எல்லாம் வியாசனின் பதில்களில் முரட்டு தனம் ,ஏளனம் எல்லாம் குறைந்து விவேகமும் ,பொறுப்புணர்வும் கூடியுள்ளது. வாழ்த்துக்கள் வியாசன். ஆனால் வியாசனின் பழைய குணங்கள் வேறு ஒருவருக்கு தெற்றியுள்ளதை நினத்தால் தான் மனத்திற்கு வருத்தமாக உள்ளது

        • வியாசன்,

          //நாயும் சீண்டாத புளிச்சமாவு//

          இவ்வாறு சொல்வதால் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? நாய் சாப்பிடாததை நாங்கள் சாப்பிடுவதால் இழுக்கா? நாய் சாப்பிடுவதை மட்டும் தான் நீங்கள் சாப்பிடுகிறீர்களா?

          (இட்லி தோசையை எங்கள் நாய் சாப்பிடாது என்பது எனக்குத் தெரியும். இது எல்லா நாய்களுக்கும் பொதுவா என்று எனக்குத் தெரியவில்லை.)

    • வியாசன்,

      இந்தியர்கள் எல்லாரும் சிங்களவர்களை குற்றம் கூறினார்களா? நல்ல வேடிக்கை போங்கள். இங்கே தமிழ் பெண் என்ற வகையில், உங்களுக்கு சொர்ணக்கா என்று கூறினால் கோவம் வருகிறது. இங்கே மோடி என்ற ஒரு கேடுகெட்ட அரசியல் ரவுடிக்கு அடியாளாக இருப்பதால் அவரை சொர்ணக்கா என்று விளிக்கிறார்கள். மற்றபடி அந்தப் பெயருக்கு வேறேதாவது வில்லங்கமான விளக்கம் இருக்கிறதா என்றுத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

      நன்றி.

      • தனிப்பட்ட முறையிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்த கண்டனங்களைத் தவிர, இந்திய மக்களின் சார்பின் இந்திய அரசு இலங்கைத் தூதரை அழைத்து கண்டனத்தைத் தெரிவித்ததுடன், இலங்கையிடமிருந்து ‘unqualified apology’ ஐயும் பெற்றுக் கொண்டது. அரசியல் வேறுபாடுகளுக்காக விமர்சனம் செய்வதிலும் கண்ணியமும், கட்டுப்பாடும் தேவை. செல்வி. தமிழிசையை ‘சொர்ணாக்கா’ என்று வர்ணித்தற்கும், சிங்களவர்கள் செல்வி.ஜெயலலிதாவை சித்தரித்த முறைக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. உண்மையில் வினவு நிர்வாகத்துக்கு அரசியல் புரிந்துணர்வும், கண்ணியமும் இருந்தால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்காது விட்டாலும் அந்தக் காணொளியை நீக்க வேண்டும்.

        • கொலைகார மோடிக்கு அடியாளாக இருந்தமைக்கு சொர்ணாக்கா தமிழிசை மன்னிப்பு கேட்கவேண்டும்.

          தலித்கள் உள்ளிட்ட சூத்திர பஞ்சம மக்களை கொடுமைபடுத்தும் பார்பன இந்து மதத்தை ஆத்ரித்ததற்காக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்

        • வியாசன்,

          தாங்கள் தமிழ் இனம்,தமிழ் மொழி என்று முன்மொழிந்து மற்ற யாவற்றையும் பின் தள்ளுகிறீர்கள். பி.ஜே.பி கட்சி தமிழர்களுக்கு(ஈழ தமிழ் மக்கள் உள்ளிட்ட) மட்டுமல்ல இங்கு உள்ள எல்லா இன மக்களுக்கும் பிரச்சினையானது. அப்படி இருக்கையில் தமிழையும் இசையையும் பெயரில் மட்டும் தாங்கியவரை சொர்ணக்கா என்று விளித்தவுடன் உங்களுக்கு வரும் கோவம் இன வெறிக்குத் தான் அழைத்து செல்லும்.தங்கள் பின்னூட்டங்களும் அப்படி தான் இருக்கின்றன.

          பல்வேறு இனங்கள் வாழும் ஒரு நாட்டில், அதுவும் இந்த ஏகாதிபத்திய சூழலில் ஒரு சிறுபான்மை இனம் தனித்து நின்று வெற்றி வாகை சூட முடியுமா? அதுவும் புலித்தலைமையின் சர்வாதிகாரப் போக்கினால் இழந்துப் போன நட்பு சக்திகள் தமிழினத்திலே உண்டு. சிங்கள மக்களை உள்ளடக்கிய ஒரு புரட்சி ஒன்றுத் தான் ஈழத் தமிழ் மக்களுக்கு ஒரு விடிவைத் தருமேயொழிய தங்களைப் போல் தமிழ்(சைவ)வெறியைக் கக்கிக் கொண்டிருப்பவர்களால் ஒருபோதும் முடியா.

          நன்றி.

          • //சிங்கள மக்களை உள்ளடக்கிய ஒரு புரட்சி ஒன்றுத் தான் ஈழத் தமிழ் மக்களுக்கு ஒரு விடிவைத் தருமேயொழிய//

            இந்தக் கம்யூனிசப் புண்ணாக்கெல்லாம் கேட்கிறதற்கு நன்றாக இருக்குமே தவிர நடைமுறையில் சாத்தியமாகாது. அதுவும் சிங்களவர்களிடம் சாத்தியமாகாது. இதெல்லாம் ஈழத்தமிழர்கள் பலமுறை கேட்டுக் காது புளிச்சுப்போன கதைகள் தான். இலங்கையில் சிங்களக் கம்யூனிஸ்டுகள் தான் இனியில்லை என்ற இனவெறியர்கள். 🙂

  8. @rajan & @ தென்றல்..

    ஏன்யா ஒரு பெண்ணை அசிங்கமா சொர்ணாக்கான்னு கூப்பிடுறியேன்னு சொன்னா… மூட்டு சந்துல அவன் திட்னானே அவனை கேட்டியா மூத்தர சந்துல திட்னவனை கேட்டியான்னு கேக்கறீங்க? தப்பை ஒத்துக்க தில் வேணுங்கண்ணா..

    அவங்க எப்படியே வாதிட்டுட்டு போறாங்க..முடிந்தால் அவங்க வாதத்தை எதிர்கொள்ளுங்க எதிர் கருத்தை சொல்லுங்க.. அதை விட்டு அவங்க உருவத்தையும் ஆளுமையையும் எப்படி தாக்கலாம்.. நல்லா இருக்குங்க உங்க முற்ப்போக்கும் பகுத்தறிவும்..

    • /ஏன்யா ஒரு பெண்ணை அசிங்கமா சொர்ணாக்கான்னு கூப்பிடுறியேன்னு சொன்/

      இன்னாயா நீ. சொர்ணாகானா இன்னானு தெரியுமா உனக்கு. அது ஒரு சினிமா கேரக்டர். ஆ வூனு சவுண்டு போட்டுகினு கொலைகார அமைச்சருக்கு அடியாளா இருக்கும்.

      நம்ப தமிழிசை அக்கா அதவிட பின்னி பெடலெக்கும். டி வி விவதத்துல அக்கா வூடு கட்டும் பாரு கோக்காகீக்கும். நம்ம அண்ணாத்தே அமித்ஷா அக்காவதான் அடியாளா தேர்ந்தெடுத்துக்கீறாரு. இது தமிழருக்கு கெடச்ச மருவாதினு நம்ம அண்ணாத்த வியாசனே சொல்லீக்காரு பாத்தீல்ல.

      மேட்ச் பண்ணிபாரு அமித்ஷா மோடி – சினிமா அமைச்சர்;அக்கா – சொர்ணாக்கா
      கரீக்டா வரும்.

      • எங்க ரமேஷ் சார் மற்றும் எங்க ம க இ க காரர்களே , [இந்த பின்னுட்டமாவது வெளிவருமா ?]

        தமிழிசை சவுந்தரராஜன் அக்கா அவிங்க கொஞ்சம் ஓவரா உணர்சிவசபட்டு ,தொலைகாட்சியில் சவுண்ட் விடுவது என்று வினவு கூறுவது எல்லாம் சரிதான். கிராமத்து பொம்மளைங்க பேசவது போல அவிங்க பேசுவதால மட்டும் சொர்ணா அக்கா என்று கூற முடியுமா? கூறலாமா ? அராஜகத்துக்கு குறியீடான சொர்ணா அக்கா என்ற பட்டத்தை யாருக்கு உண்மையில் தந்து இருக்க வேண்டும் ? அதை பற்றி நான் விவரித்து எழுதினாலும் வினவு தடை செய்கின்றது. என்ன செய்ய ? சரி யார் உண்மையான “வெள்ளை சொர்ணா அக்கா” என்று தெரிந்து கொள்ள என் பின்னுட்டம் 5ஐ பார்க்கவும் !

        சரி அந்த சுப்ரமணி மீனவர்களுக்கு எதிரா சவுண்டு விட்ட அப்ப இந்த தமிழிசை சவுந்தரராஜன் அக்கா தட்டி கேட்டாங்கலா இல்லையா ? அப்படி நா அவிங்க தமிழச்சிதானே ? திமுக ,அதிமுக காரங்க எல்லாம் ஏன் தமிழ் நாட்டில் காங்கிரஸ்காரன் கூட தமிழன் என்று தான் சொல்லிகிறாங்க.அவிங்க மேல வராத சந்தேகம் தமிழிசை சவுந்தரராஜன் அக்கா மேலே மட்டும் வர காரணம் என்ன ?

        ம க இ க காரங்க என்றால் ஓட்டு பொறுக்கி கட்சிகளை அரசியல் ரீதியா மட்டும் தான் தாக்கி பேசுவாங்க,கண்ணியம் மீறாம பேசுவாங்க எனபது தான் இது வரைக்கும் வரலாறாக இருந்தது. ஹும் எப்படி இருந்த கம்யுனிஸ்டுகள் இப்படி ஆகிட்டாங்காலே !

        அராஜகம் செய்து எதிர் கட்சிகாரனை இடைதேர்தலில் நிக்க விடாத அதிமுக தலைவர்க்கு

        [“டெல்லியிலே ஆம் ஆத்மிக்கு ரேட்டு வைத்தது பிஜேபி, நெல்லையிலே பிஜேபிக்கு ஆப்பு வைத்தார் அம்மா. திருநெல்வேலியே காணலையே சொர்ணாக்கா.. கட்டுரை, கார்ட்டூன், வீடியோ.”]

        அம்மா என்று பாசமா அழைக்கும் இந்த கட்டுரையை எழுதியவர், தமிழிசை சவுந்தரராஜன் அக்காவை பார்த்து வாய்கிழிய படத்துக்கு படம் “சொர்ணா அக்கா” என்று அழைக்கும் மர்மம் என்ன ?

        ஹிந்து ,ஹிந்தி ,பாசிச ஹிந்தியா என்ற கொள்கையுடன் நிற்கும் பிஜேபி , தமிழிசை சவுந்தரராஜன் அக்கா அரசியலை விமர்சனம் செய்ங்க தப்பே இல்லை ,நானும் சேர்ந்து விமர்சனம் செய்கின்றேன். ஆனா “சொர்ணா அக்கா” என்ற பேச்சு எல்லாம் எல்லாம் ம க இ க காரங்களுக்கு தேவையா ?_______

        • அக்கா டயானா உண்மைதான் அவங்கள சொர்னாக்கானு சொல்ல காரணம் அவர்கள் பிஜேபி யில் இருப்பது மட்டுதான்………..

          • ஒரு பேச்சுக்கு கேட்கின்றேன் :

            பிஜேபியில் தமிழ் நாட்டு தலைவரா இருப்பதால தமிழிசை சவுந்தரராஜன் அக்காவை “சொர்னாக்கானு” வினவு ,ம க இ க காரர்கள் அழைக்கின்றார்கள் என்றால் அதே அளவு கோல் படி TNTJ தலைவரை[பி.ஜைனுல் ஆபிதீன் ] “ஒசாமா பின்லேடன்” என்று தானே அழைக்க வேண்டும் ,கார்ட்டூன் போட வேண்டும். போட்டார்களா வினவு ?

            • டி.என்.டி.ஜே ஆளுங்களை ‘பொறுக்கி தளபதி’ ‘அ0டியாள்’ என்றும் ‘தமிழக தாலிபான்’ என்றும் வினவு ஏற்கனவே எழுதியிருக்காங்க.

              சும்மா எதுவும் தெரியாம உளராதீங்க. இதுக்கு ஆமா சாமி போட ஜோசப் வேற.. போய் தேடி படிங்க .

              ஆனா பாருங்க சொர்ணாக்கவையும். பின்லேடனையும் கம்பேர் பண்ணீங்க பாருங்க அட அட என்ன அறிவு என்ன அறிவு.

              • ஹிந்து மதவெறியை கக்கும் தமிழிசை சவுந்தரராஜன், இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தை ஊளையிடும் TNTJ தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் இருவரையும் நாம் ஒப்புமைபடுத்த ,உருவம் செய்த விடயங்கலான “சொர்னாக்கா” மற்றும் “ஒசாமா பின்லேடன்” என்ற குறியீடுகளை மட்டுமே பிடித்துக்கொண்டு அவற்றை தவறு என்று நீங்கள் கூறுவதை ஏன் என்று நீங்கள் தான் விளக்க வேண்டும் ரமேஷ்.

                //ஆனா பாருங்க சொர்ணாக்கவையும். பின்லேடனையும் கம்பேர் பண்ணீங்க பாருங்க அட அட என்ன அறிவு என்ன அறிவு.//

                • டயானா,
                  ///குறியீடுகளை மட்டுமே பிடித்துக்கொண்டு அவற்றை தவறு என்று நீங்கள் கூறுவதை ஏன் என்று நீங்கள் தான் விளக்க வேண்டும்///

                  – இது உங்களுக்கு பொருந்தாதா பாஸ்?

                  //ம க இ க – வினவுக்கு எழவு வீட்டில் கட்டி அழாமல் குவாட்டர் அடித்து விட்டு குத்தாட்டம் போடும் பொடியன்களுடன் தான் ஒப்பிட முடியும்///

                  மேட்டிமைத்தனத்தில் ஊறிப்போய் விமர்சனம் என்ற பெயரில் அவதூறை அள்ளிவீசும் அளவிற்கு சென்றுள்ளீர்கள்.

                  தமிழிசையின் இந்து மதவெறி அரசியலை விமர்சிக்கலாம் எனும் போது அதற்கு குறியீட்டை பயன் படுத்துவதில் என்ன தவறு?

                  மேலும் அந்த குறியீடு அவர் தமிழர் என்பதால் பயன்படுத்தப்படவில்லை, மாறாக அவரது அரசியலை, அராஜக விவாத முறையை வைத்தே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர் தமிழர் என்பதால் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அயோக்கியத்தனமாக திரித்துக் கூறுகிறீர்கள்.

                  பரந்துபட்ட மக்களுக்கு புரியும் வகையில் குறியீடுகளை வைப்பதில் என்ன தவறு?
                  பரந்துபட்ட மக்களின் மொழி பல நேரங்களில் நயமாக இருப்பதில்லை, அதனாலேயே அவர்கள் அநாகரீகமானவர்கள் என்பது நடுத்தரவர்க்கத்தின், மேட்டுக்குடிகளின் முடிவு.

                  கொக்கோ கோலாவிற்கு எதிரான பிரச்சாரத்தில் ‘குண்டி கழுவ தண்ணியில்லை’ என்பது பரவலாக பயன்படுத்தப்பட்டது பல சீமான்களுக்கு நயமாக இல்லைதான்.

                  இங்கும் அதே மாதிரியாக பரந்துபட்ட மக்களுக்கு புரியும் வகையில்/மொழியில் வினவு எழுதியிருப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?

                  எந்த குறியீடு சரி தவறு என்பதற்கு நீங்கள் தான் அத்தாரிட்டியா?

                  ஒரு பேச்சுக்கு ‘சொர்ணாக்கா’ என்ற குறியீடு தவறு என்று வைத்துக்கொண்டாலும் கூட, நீங்கள் இதையே ஒரு சாக்காக வைத்துக்கொண்டு வினவின் மீது வன்மத்தை வெளிப்படுத்துகிறீர்கள்.

                  நன்று! உங்கள் வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள் செந்தில்குமரன்..

                  • இதே வாதத்தையும் விளக்கத்தையும் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவை அவமதித்த விடயத்தில் இலங்கை அரசும், அந்தக் கட்டுரையை எழுதியவரும், அந்தப் படங்களை வெளியிட்ட இலங்கை பாதுகாப்பு அமைச்சும் அளித்தன. ஆனால் இந்திய மத்திய அரசும், தமிழ்நாடு அரசும், இந்திய ஊடகங்களும், ஜெயலலிதாவும் கூட ஏற்றுக் கொள்ளவில்லை. இலங்கை நிபந்தனையில்லாத மன்னிப்புக் கேட்கும் வரை ஓயவில்லை. கடைசியில் இலங்கை மன்னிப்புக் கேட்டது. ஆனால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்காது விட்டாலும் கூட, அந்த காணொளியையாவது அகற்றலாம், அதற்குக் கூட மறுத்து அடம்பிடிக்கும் வினவு நிர்வாகத்துக்கு ராஜபக்ச அரசுக்குள்ள ஊடகதர்மம்/ பண்பாடு கூடக் கிடையாதா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.

                    அபப்டியானால், அதுவும் தமிழ்நாட்டில் பார்ப்பன ஜெயாவுக்கு ஒரு நீதி, சூத்திர தமிழச்சி தமிழிசைக்கு ஒரு நீதியா என்பதை நினைக்க நெஞ்சு பொறுக்குதில்லையே!

                    ///மேலும் அந்த குறியீடு அவர் தமிழர் என்பதால் பயன்படுத்தப்படவில்லை, மாறாக அவரது அரசியலை, அராஜக விவாத முறையை வைத்தே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர் தமிழர் என்பதால் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அயோக்கியத்தனமாக திரித்துக் கூறுகிறீர்கள்.///

                    • இரு அரசுக்கும் இடையிலான பிரச்சனையாக பரிமாணம் ஆனது ஜெயாவை அவதூரு செய்த நிகழ்வு. எனவே இராஜாங்க நலன்களை காக்க இலங்கை அரசு மன்னிப்பு கேட்டது. ஆனால் தமிழிசை சர்சையில் அப்படி இல்லை. அது இரு வேறு துருங்கலான வலதுசாரிகளுக்கும், இடது திவிர கம்யுனிஸ்டுகளுக்கும் இடையில் நிகழும் கொள்கைகளுக்கான போர். ஆம் தமிழிசை மீதான இத்தகைய குறியீடுகள் தவிர்க்கபட்டு இருக்கலாம். ஆமாம் vhp லீடர் தமிழச்சிகளின் அடிவயிற்றை தடவி… என்று எல்லாம் பேசும் போது எங்கு சென்றிர்கள் நிங்களும் ,தயானாவும் ? தமிழச்சிகளை வினவு பெயர் சொல் கொண்டும் ,vhp வினைச்சொல் கொண்டும் தாக்குகின்றன்ர். பொதுவில் பெண்ணியம் வாயை முடி, இரண்டு தவறான பொருள் மற்றும் வினை குரியீடுகலையுமே அரசியல் காரணமாகவும் ,பெண்ணியவாதிகளிடம் உள்ள சாதிய,மத ,இன பிரிவினை காரணமாகவும் தன் அறிவாயுதங்களை மொவுனித்து வெறுமனே வேடிக்கை பார்கின்றது. மேலும் எதன் காரணமாக இத்தகைய குறியீடு தமிழிசைக்கு வழங்கபடுகின்றது என்பதை விளக்காமல் சம்ம்ந்தபட்டவர்கள் மொவுனமாக இருப்பதும் சர்சையை மேலும் சிக்கல் ஆக்குகின்றது.

            • கேலிச் சித்திரம் என்று சொல்லிவிட்டு, பிஜேவை ஒசாமாவாக சித்தரிக்க சொல்கிற பார்வை ஒசாமா பின்லேடனை அசிங்கப்படுத்துவது போல் இருக்கிறது. ஏனெனில் இருவருமே அமெரிக்கா வளர்த்தெடுத்த வஹாபிய கைக்கூலிகள் என்கிற பொழுது கேலிச் சித்திரம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு டிண்டிஜேவுடன் ஒரு காமெடி டைம் என்ற பதிவைப்பார்த்து தெரிந்து கொள்ளவும். மற்றபடி உங்களைப்போன்ற சந்தர்ப்பவாதிகள் ஒசாமாபின்லேடன் போன்ற அமெரிக்க தியாகிகளை கொச்சைப்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

              • தென்றல் அவர்களுக்கு,

                //ஒசாமாபின்லேடன் போன்ற அமெரிக்க தியாகி//

                பின்லேடன் பலருக்கு தியாகிதான். ஆனால் உங்களுக்கு எப்படி? ஆப்கானிஸ்தானிலிருந்து கம்யூனிசத்தை விரட்ட அமெரிக்காவின் கூட்டாளியல்லவா பின்லேடன்?

                • ஒசாமா பலபேருக்குத் தியாகியா? புதுக்கதையாவுள்ள இருக்கு! அமெரிக்கத் தியாகி என்பதற்கு நமக்கு வரலாற்று ரீதியிலான தகவல்கள் இருக்கின்றன. வேற எதை எதிர்பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லையே! அப்புறம் ஒசாமா போன்ற கைக்கூலிகளால் எல்லாம் கம்யுனிசத்தை ஒழிக்க இயலாது. ஆப்கானிஸ்தானிலும் மார்க்சிய-லெனினிய குழுக்கள் இருக்கின்றன. பல இசுலாமியர்கள் இதில் தங்களை இணைத்துக்கொண்டவர்களாக இன்றளவும் இருக்கின்றனர். தாலிபான்களுக்கு மத்தியில் கம்யுனிஸ்டுகளின் சமரசமற்ற போராட்டம் நமக்கு அறியக் கிடைக்கின்றன.

                  • தென்றல் அவர்களுக்கு,

                    ஒசாமாவை தியாகியாக பலபேர் போற்றுவது உங்களுக்கு புதுக்கதையா இருப்பது வியப்பாகத்தான் இருக்கிறது. பரவாயில்லை.

                    கொல்லப்பட்டவர்கள் தியாகிகள் என்ற பொருளில் அச்சொல்லை பயன்படுத்துகிறீர்கள் போலிருக்கிறது.

                    அமெரிக்காவால் கொல்லப்பட்டால் அமெரிக்கத் தியாகி.
                    ஐஎஸ்ஸால் கொல்லப்பட்டால் ஐஎஸ் தியாகி.

                    சரியா? (தமிழில் உங்கள் அளவுக்கு எனக்கு புலமையில்லை. ஆகையால் இது விநோதமான பயன்பாடாகத்தான் எனக்குப் படுகிறது.)

            • டயானா ,

              உங்க லொள்ளுக்கு ஒரு அளவில்லையா? ஒசாமாவிற்க்கும் இந்த சொர்ணக்காவிற்க்கும் என்ன சம்மந்தம்? ஒசாமா, அமெரிக்க ஊட்டி வளர்த்தப் பிள்ளை. வளர்த்தக் கடா மாருல பாஞ்சதால வளர்த்தவனே பந்த கடா போட்டுட்டான். சொர்ணக்காவிர்க்கு அப்படி எதாவது பின்னணி இருக்கா?

        • \\ சரி அந்த சுப்ரமணி மீனவர்களுக்கு எதிரா சவுண்டு விட்ட அப்ப இந்த தமிழிசை சவுந்தரராஜன் அக்கா தட்டி கேட்டாங்கலா இல்லையா ? அப்படி நா அவிங்க தமிழச்சிதானே ?\\

          டயானா, இந்தக்கேள்வியில் இரண்டு சந்தர்ப்பவாதங்கள் உள்ளன. ஒன்று; புலிகள் சிங்கள இராவணுத்தை முற்றுகையிட்ட பொழுது, அவர்களை விடுவிக்கவில்லையென்றால் இந்தியா, இராணுவம் அனுப்பும் என்று சொன்னது பிஜேபி அரசுதான். அப்பொழுது தமிழசை என்ன செய்துகொண்டிருந்தார்? ஒட்டுமொத்த மக்களையும் அழித்துவிட்டு, இப்பொழுது சு.சாமியை கண்டித்தார் என்று சொல்வதற்கு உங்களுக்கு சிறிதும் வெட்கமில்லையா? கம்யுனிச வெறுப்பிற்காக பதிவிடலாம் டயானா. ஆனால் எங்கே போயிற்று உங்களது தமிழ் தேசியவிறுப்பு? உங்களது சந்தர்ப்பவாதம் சு.சாமியைவிட கேடுகெட்டதனமாக இருக்கிறது.

          இரண்டாவது சந்தர்ப்பவாதம். தமிழிசை தமிழச்சிதானே என்ற கேள்வி. பதிவிற்கு சற்றும் பொருந்தாத ஒன்று. தமிழிசை தமிழச்சி என்பது இங்குவிவாதமே அல்ல. ஏனெனில் தமிழிசை தமிழச்சிதான். சம்பந்தமேயில்லாமல் அப்படியொரு விவாதத்தை துவக்கியவர் வியாசன் தான். அழுத்தமாக(!!!) அவர் முன்வைத்த அரசியல் தமிழிசை தமிழச்சி என்பதற்காக சொர்ணாக்கா என்பதாகவும், வெள்ளைத்தோலும் மினுமினுப்பும் கொண்ட குஷ்புவை கொண்டாடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இப்படிச்சொன்னதன் வாயிலாக அவரது பாலியல் வக்கிரம் தான் வெளிப்பட்டதேயன்றி சொர்ணக்கா, எப்படி இழிவு என்பதை இக்கணம் வரை விளக்கவில்லை. அதே வழியில் ஒட்டுப்புல்லாக நீங்களும் இருக்கிறீர்கள். இந்நிலையில் தமிழிசை தமிழச்சிதானே என்று கேட்பது கடைந்தெடுத்த களவாணித்தனம் என்பதை பரிசிலீயுங்கள். தமிழ் தேசியர் என்ற முகமூடியையாவது சரியாக அணிந்துகொள்ளுங்கள்.

          • திமுக , அதிமுக , காங்கிரஸ் , பிஜேபி ,மாதிமுக ,கம்யூனிஸ்ட் என்று எல்லா கட்சிகளும் ஈழ விடுதளை போர் நடக்கும் போதே அவர்களுக்கு துரோகமும் செய்ததும் அல்லது வன்மத்துடன் எதிர் நிலை எடுத்ததும் பற்றி புத்தகம் எழுதினால் அதில் உங்கள் ம க இ க – வினவுக்கு எழவு வீட்டில் கட்டி அழாமல் குவாட்டர் அடித்து விட்டு குத்தாட்டம் போடும் பொடியன்களுடன் தான் ஒப்பிட முடியும், ஏன் என்றால் ஈழ அழிவுக்கு உலகமே அழுத போது வினவில் கட்டுரை எல்லாம் போட்டு LTTE மற்றும் பிரபாகர்னை வசை பாடிய கேடு கேட்ட ஜென்மங்கள் வினவில் இருக்கும் அறிவு ,புரட்சி “புளிகள்” தானே! “தமிழிசை தமிழச்சிதானே என்று கேட்பது கடைந்தெடுத்த களவாணித்தனம்” என்று கூறும் தென்றலுக்கு நான் பதில் கூறுவதுயாது எனில் தரகு வட இந்திய குஜராத்தி,சேட்டுகளுக்காகவும் பரிந்து பேசும் தாங்கள் இங்கு வாழும் தமிழ் மக்களின் அரசியல் நிலை கண்டு வ்ருந்தவேண்டுமே தவிர ,கடுமையாக விமர்சிக்க வேண்டுமே தவிர , கண்ணியம் இன்றி கார்ட்டூன் படம் என்ற பெயரில் அவதூரு செய்ய கூடாது என்பது தான்.

            • ப்பூ! இம்புட்டுதானா? மகஇக வெறுப்பு என்று ஒருவரியில் சொல்லிவிட்டு போவதற்கு எதற்காக விமர்சன முகமூடி? அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என்று காத்திருந்து கண்ணீர் வடிக்கிற உங்களைப் போன்ற பிழைப்புவாதிகள் கம்யுனிஸ்டுகளின் நிலையை பார்த்தீர்களா என்று கதறவதும் வருந்தி அழுவதும் இப்பொழுது நிர்மலமாக தன் மனதைத் திறந்துகாட்டுவதும் சகிக்கவொண்ணா அருவெறுப்பாகும். சாதி மத வெறியர்களிடம் இருக்கும் நேர்மையான சந்தர்ப்பவாதத்தை முடிந்தால் கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் எப்பொழுதும் தனக்கு உவந்த அரசியலுடன் தான் களம் இறங்குகிறார்கள். வெளிப்படையாக தங்கள் நோக்கம் இன்னவென்று சமூகத்தில் அறிவிக்கிறார்கள்! ஆனால் உங்களைப் போன்ற ஒட்டுப்புற்களின் அரசியல் எதற்கும் லாயக்கற்ற குப்புறத்தள்ளும் கைக்கூலி வேலையாக இருக்கிறது! இருக்கிற ஒரே வாய்ப்பு, தாங்கள் சார்ந்திருக்கிற அரசியலின் அடிப்படையில் புரட்சிகர அமைப்புகளின் ஈழநிலைப்பாட்டை கேள்விக்கு உட்படுத்தி விமர்சனத்தை முன்வையுங்கள். இதைவிடுத்து இப்பொழுது அணிந்திருக்கும் விமர்சன வேசத்தைக் கலையுங்கள். இதைவிட பச்சையான சந்தர்ப்பவாதம் என்ற ஒன்று உலக வரலாற்றில் எதுவும் கிடையாது என்பது திண்ணம்!

          • //இந்தியா, இராணுவம் அனுப்பும் என்று சொன்னது பிஜேபி அரசுதான். அப்பொழுது தமிழசை என்ன செய்துகொண்டிருந்தார்?///

            அடக்கடவுளே இந்த ஆள் பதிலெழுது முன்பு கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தேழுதுவதில்லையா. டாக்டர் தமிழிசை பாஜகவில் அரசியலில் ஈடுபட்டு வெறும் 15 வருடங்கள் தான் ஆகின்றன என்பதை கூகிளில் தேடினாலே அறிந்து கொள்ளலாம். அப்படியானால் 2000 ஆண்டில் புலிகள் சிங்கள இராணுவத்தை முற்றுகையிட்ட போது அவர் என்ன செய்திருக்க முடியும். அரசியலில் இல்லாத போது அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை தென்றல் அவரிடம் தான் கேட்க வேண்டும். புத்திசாலித்தனமாக பதிலெழுதுவதாக நினைத்துக் கொண்டு, சம்பந்தா சம்பந்தமில்லாமல் பிதற்றுகிறார் தோழர் தென்றல். வெள்ளைத்தோல் என்றதுமே பாலியல் நினைப்பு தோழர் தென்றலுக்கு வந்து விடுகிறது அதற்கு மற்றவர்கள் எப்படி பொறுப்பாக முடியும்? 🙂

            • நீர் யோசித்து எழுதிய பதிலின் இலட்சணம் பல்லிளிக்கிறது வியாசன். உம்முடைய வாதப்படியே வந்தாலும் 2000இல் தமிழிசை பிஜேபியில் தான் இல்லையே? பிறகு ஈழத்தை கறுவறுத்த துரோகிகளை விமர்சிப்பதற்கு என்ன தயக்கம்? ஏம்ப்பா இப்படி சேம் சைடுகோல் போட்டு மானத்த வாங்குற!

              இந்த இலட்சணத்தில் அவருடைய அரசியலை குகூளில் தெரிந்துகொள்ளும் அளவிற்கு புளிச்சமாவை தின்னும் எந்த தமிழ்நாட்டானும் மானங்கெட்டவனாக இல்லை என்பதை நோக்கித் தெளிக. அப்படியும் கூகுள் பார்க்க ஆசைப்பட்டால் 2003 அக்டோபர், வாஜ்பாயும்-ரணில் விக்ரமசிங்கே சேர்ந்து வெளியிட்ட கூட்டறிக்கை கூகுளில் காணக்கிடைக்கிறது. தமிழசை போன்ற இந்துவெறியர்களின் அப்பொழுதைய முகவரி என்ன?

              அவ்வளவு ஏன்? தமிழசை சின்னஞ்சிறு சிறுமி என்று கூட வைத்துக்கொள்ளும். 80களிலும் சரி ஈழத்து மக்கள் அழிக்கப்பட்ட பொழுதும் சரி, வெள்ளைத்தோல் மோகம் கொண்ட தமிழ்நாட்டான்களின் பச்சிளம் குழந்தை முதல் பல்லுப்போன கிழவிவரை போராடியிருக்கிறார்கள். இதே தமிழகத்தில் ஈழத்திற்காக அரசியலே தெரியாத செங்கொடி போன்ற சிறுமிகள் தீக்குளித்தே இறந்திருக்கிறார்கள்! இதற்கு பிற்பாடுதான் சுஸ்மா சுவராஜ்கள் வைரநெக்லஸ் வாங்கினார்கள். ஆனால் உமக்கோ தமிழ்நாட்டு தமிழர்களை வெள்ளைத்தோல் என்ற அளவு மட்டும்தான் தெரிகிறது. கடைசியில் இந்துத்துவத்திற்கு காவடி தூக்கி தமிழ் தேசிய மூகமுடியை காற்றில் பறக்கவிட்டதுதான் மிச்சம்! முதலில் உமது அம்மணத்தை மறைக்க முயற்சி செய்யும் வியாசன்.

        • \\ கிராமத்து பொம்மளைங்க பேசவது போல அவிங்க பேசுவதால மட்டும் சொர்ணா அக்கா என்று கூற முடியுமா? கூறலாமா ?\\

          டயானா இது உங்களின் மேட்டிமைத்தனத்தையே காட்டுகிறது. கிராமத்து பெண்கள் பேசுவது எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று உங்களுக்கு தெரியவில்லை போல் இருக்கிறது. தமிழிசை கிராமத்து பெண்கள் போல பேசினால் அதற்காக ஒருவர் பாராட்டவே செய்வார். ஆனால் அவர் கிராமத்து பெண்கள் போல எல்லாம் பேசவில்லை. வட இந்தியாவில் மாயா கோட்னானியைத் தெரியுமா? அதுதான் குல்பகர்-சொசைட்டி மக்களை முன்நின்று எரித்தாரே. அவர் போலத்தான் அரசியல் செய்கிறார் தமிழிசை. இத்துனைக்கும் தமிழிசை மருத்துவர். ஆனால் இந்துத்துவத்தில் கோட்னானியும் தமிழிசையும் ஒன்றுதான். ஒருவேளை உங்கள் வாதப்படியே அவர் கிராமத்து பெண் போல பேசியிருந்தாலும் உங்களது பார்வையோ கிராமத்து பெண்கள் போல பேசுவதை நாகரிகமற்ற ஒன்றாக கருதுகிறது! போஸ்கோ, வேதாந்தாவின் போராட்டங்களில் பழங்குடிகள் மற்றும் கிராமத்து பெண்கள் எப்படி பேசினார்கள் என்பதை பார்த்து தெரிந்து கொண்டு உங்களது அவதூறைத் தொடரவும்.

          ஒன்றை வேண்டுமானால் ஒத்துக்கொள்ளலாம். சேற்றில் இறங்கி உழைக்கிற மக்களுக்கு சேத்தன் பகத்தை மவுனமாக வாசிக்கத் தெரியாது இல்லையா? வியாசன் தான் வில்லேஜ் இடியட் என்பதை பயன்படுத்துகிறார் என்றால் உங்களுக்கும் அதே மேட்டுக்குடி பார்வைதான் இருக்கிறது. நீங்கள் முன்வைக்கிற பார்வையிலேயே நேர்மை இல்லை என்கிறபொழுது, உங்களது கேள்வியில் என்ன நியாயம் இருக்க முடியும்?

          ஒரு கேள்வி: உங்களுடைய வாதங்களைக் கவனிக்கிற பொழுது தமிழிசையின் அரசியலை விமர்சிக்க “சொர்ணாக்கா” கேலிச்சித்திரம் பொருந்தாது என்று சொல்கிறீர்களே தவிர, சொர்ணாக்கா என்ற கேலிச்சித்திரத்தை பொதுவில் பயன்படுத்துவதை மறுக்கவில்லை. இத்தகைய நிலைப்பாடு ஏன் என்பதை விளக்கமுடியுமா? அவர் தமிழர், சு.சாமியைக் கண்டித்தார் போன்ற வாதங்கள் கேலிக்கூத்தாக இருக்கின்றன. எனவே யோசித்து வலுவாக எழுதவும்.

  9. ஒருவர் பதவிகு கச்டப்படு வந்த் எருக்கிரர் டமில இசை .என்ட வைரு எரிகிரை.tamilesai is a good doctor from a reputed madras medical college.known for its 200+ years of standing. please go her clinic she will give very good medicine for your gastritis. stop barking at tamil isai a true tamil lady.

  10. இங்கே கனத்த இதயத்தோடு ஒரு தமிழச்சி ‘அவமரியாதை’ செய்யப் படுவதை கண்டிக்கும் கனவான் வியாசன் அவர்கள்,வேறெங்கோ அதே தமிழ்நாட்டின் தமிழனை மாவை புளிக்க வைத்து செய்யப்பட்ட உணவை சாப்பிடும் “தமிழ்நாட்டான்களின் …..” என்றெல்லாம் இழிவு செய்திருக்கிறார்.தமிழகத்தின் இட்லி தோசை என்பதே ஒரு உயர் குல உணவாக நம்பப்படுகின்ற நிலையில் ஒபாமாவும் ”ரசித்து”உண்டதாக தமிழக உயர் குல பத்திரிக்கைகளும் கொண்டாடிய ஒரு உணவுதான் வியாசனால் கேலி செய்யப்படுகின்றது. தமிழகத்தின் தமிழர்களை “தமிழ்நாட்டான்கள்” என்று விளிக்கும் மேதமை அவருக்கு எப்படி அமைந்தது? ஸ்ரீமான் வியாசன் அவர்கள் தமது வலைப்பக்கத்தில் சமீபத்தில் “தமிழ்நாட்டு முஸ்லீம்களும் விநாயகர் ஊர்வலங்களை வரவேற்றால் என்ன?” என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறார்.அவர் ஈழத் தமிழர் என்பதால் அவர் தமிழக விநாயகர் ஊர்வலங்களை பற்றிய புரிதல் இல்லாமல் எழுதியிருக்கக் கூடும் என்று நினைத்து அவருக்கு ஒரு பதில் போட்டிருந்தேன். வலைப்பக்கம் எதுவும் சொந்தமாக இல்லாத ஒரு அன்றாடங்காய்சியான எனது பதிலை பெரிய மனது பீடிகையுடன் வெளியிட்டுள்ளார். அவருடன் நடந்த சிறு விவாதத்திலேயே அவர் புரியாமல் அல்ல நன்கு ‘புரிந்தே’ பதிவெழுதி இருக்கிறார் என்பது விளங்கி ”தூங்குகிறவர்களை எழுப்பலாம் தூங்குவது போல நடிப்பவர்களை …..?” என்று முடித்துக் கொண்டேன். எனக்கு ஏற்பட்ட ஒரு ஆவலில் சமீபத்திய வினவின் விநாயகர் ஊர்வலம் பற்றிய 2 பதிவுகளில் வியாசனின் பின்னூட்டங்கள் இடம் பெற்றுள்ளனவா எனப்பார்த்தால் எதுவுமில்லை. ஆக அவருக்கு விநாயகர் ஊர்வலம் பற்றிய ஒரு புரிதல் இருந்தும் அதனையெல்லாம் மறைத்துக் கொண்டு அப்பாவித்தனமான பாவத்தோடு “தமிழ்நாட்டு முஸ்லீம்களும் விநாயகர் ஊர்வலங்களை வரவேற்றால் என்ன?” என்று கேள்வி எழுப்புகிறார். ஆனால் அந்த ஊர்வலம் நடக்கும் முறை மறுக்க இயலாத வீடியோ ஆதாரத்தோடு வினவில் பதிவாக வரும் போது அங்கே வந்து ஒரு கருத்தை சொல்லாமல் மறைந்து கொள்கிறார்.அதே சமயத்தில் சொர்ணக்கா என்று தமிழிசை அழைக்கப்படும் போது அதிலே பெண்ணுரிமைக்கு எதிரான தொனி இருப்பதாக ஒரு ‘லா பாயின்ட்’ கண்டு கொண்டு தமிழ்நாட்டிலேயே “ஒரு தமிழ்ப் பெண்ணை இப்படி நக்கலடிப்பது மிகவும் கண்டிக்கத்தகது” என்று மல்லுக்கு நிற்கிறார்.கடைசியில் பார்த்தால் இங்கே வினவில் சற்று கண்ணியமாக ”தமிழ்நாட்டுத் தமிழர்களின் சுயவெறுப்பு”,”தமிழ்நாட்டுத் தமிழர்களால் தாங்க முடியாது”,”தமிழ்நாட்டுத் தமிழர்களின் வெள்ளைத்தோலாசை” என்று நம்மை விமர்சனம் செய்யும் வியாசன், வேறெங்கோ தமிழ்நாட்டுத் தமிழர் இல்லாத ஒரு தளத்தில் “தமிழ்நாட்டான்களின் நாயும் சீண்டாத புளிச்சமாவு” என்று ஒரு இழிவான தொனியில் நம்மை குறிப்பிட்டுருக்கிறார். பொதுவாக தமிழ்நாட்டு தமிழர்களிடையே ஈழத் தமிழரின் பால் இருக்கின்ற பரிவான ஒரு பார்வைக்கு முற்றிலும் எதிராகவும் பொருந்தி போகாத ஒரு பார்வையை கொண்டிருக்கிறார்.இந்த பார்வையை அவருக்கு வழங்கியது தேசம் தொலைந்து நாடு கடந்து வாழ நேர்ந்தும் விட்டுத் தொலைக்க முடியாத அவரது கொழுப்பெடுத்த “யாழ்பாணத்து சைவ வேளாள பெருமிதம்” என்கிற அளவில் புரிந்து கொள்வதே சரியாக இருக்கும். அவர் தனது “அக்கறையை” தயவு செய்து ‘தமிழ்நாட்டான்களின்’ மேல் விசமத்தனமாக காட்டாமல் இருப்பது நலம்.

    • //வேறெங்கோ தமிழ்நாட்டுத் தமிழர் இல்லாத ஒரு தளத்தில் “தமிழ்நாட்டான்களின் நாயும் சீண்டாத புளிச்சமாவு” என்று ஒரு இழிவான தொனியில் நம்மை குறிப்பிட்டுருக்கிறார்///

      வேறெங்கோ அல்ல இங்கே தான் குறிப்பிட்டேன். தேவையில்லாமல் ஈழத்தமிழர்களையும், காசி ஆனந்தனையும் இழிவுபடுத்திய மாவோ என்றவரின் கருத்துக்கு நான் பதிலளித்த போது, தமிழ்நாட்டான்களின் நாயும் சீண்டாத புளிச்சமாவு” என்ற பதம் பொருத்தமானதாகத் தான் எனக்குப் பட்டது. அது தமிழ்நாட்டில் காசி ஆனந்தனின் பரிதாப நிலையை தெளிவாக விளக்குவதற்குப் பொருத்தமாக இருந்தது. ஆனால் உங்களைப் போன்றவர்களின் மனதை அது புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன். உங்களைப் போன்றவர்கள் என் மீதுள்ள காழ்ப்புணர்வைத் தீர்த்துக் கொள்ள, அதாவது சில தமிழ்நாட்டுத் தமிழர்களையாவது எனக்கேதிராக உசுப்பி விட அதைப் பாவிக்கலாம் எனபதும் எனக்கு முன்பே தெரியும். 🙂

      உண்மையில் நான் அடிக்கடி தமிழ்நாட்டுக்குப் போவதுண்டு, தமிழ்நாட்டில் என்ன தான் இருக்கிறது. அந்த வெய்யிலிலும் புழுதியிலும் இவ்வளவு காசைக் கொடுத்துப் போய்க் காய்வதை விட வேறெங்காவது போகலாமே என்று எனது நண்பர்களும், பெற்றோரும் அடிக்கடி அறிவுரை கூறினாலும் எனக்கு வேறு நாடுகளுக்குப் போவதை விட தமிழ்நாட்டில் விடுமுறையைக் கழிப்பது தான் பிடிக்கும். என்னைப் போன்ற பல தமிழர்களை அதிலும் தமிழ்ப் பாரம்பரியத்தில், வரலாற்றில், பழமையான கோயில்களில், தமிழர்களின் கட்டிடக் கலையில், அதன் அழகில் ஈடுபாடு கொண்ட தமிழர்களை இழுக்கும் ஏதோ ஒருவகையான காந்தசக்தி தமிழ்நாட்டில் உண்டு. அங்கு என்னை மீண்டும் மீண்டும் போகத் தூண்டும் ஏதோ ஒன்று இருக்கின்றது, ஆனால் நிச்சயமாக அது தமிழ்நாட்டின் உணவல்ல. வெய்யிலும், புழுதியுமாக இருந்தாலும் அங்கிருக்கும் போது நாங்கள் அந்நிய தேசத்தில் இருப்பது போல் உணர்வதில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

      • சங்கராச்சாரி மற்றும் வியாசனின் தியாகங்கள் மெச்சத்தக்கவை!!!

        சங்கராச்சாரி சேரிக்குள் சென்று தலித்துகளை கோயிலுக்குள் வரும் பொழுது குளித்துவிட்டு வரவும் என்று சொன்ன மனிதர்குல மாணிக்கம். வியாசனோ, தன் பெற்றோர் நண்பர்களின் அறிவுரையையும் உதாசீனப்படுத்தி, வெயிலிலும் புழுதியுலும் தமிழ்நாட்டுப் பராம்பரியம் என்ற ஒற்றைக் காரணத்திற்காக காய்பவர்! பெருந்தகைமையாளனுக்கு பாராட்டுக்கள். பரிசாக இரண்டு கப்பு புளிச்சமாவு பார்சல்!

      • நான் தாயகம் காண விரும்பும் உங்கள் உணர்வுகளை பாராட்டுவதா அல்லது அருண் செல்வரத்தினம் போன்ற ISI யாழ்உளவாளிகளை திட்டுவதா என்று யோசனையில் இருக்கின்றேன். எது எப்படியாயினும் அடிக்கடி தமிழகம் வராதிர்கள். உங்கள் நலனுக்காக சொல்கின்றேன் நண்பரே

        • RamKrishnan,

          உங்களின் அன்புக்கும் கரிசனைக்கும் எப்படி நன்றிக் கடன் செலுத்துவதென்று எனக்குத் தெரியவில்லை. 🙂 வேண்டுமென்றால் அருண் செல்வரத்தினம் போன்றவர்களைத் திட்டிக் கொண்டே, தமிழ்நாட்டைத், தமிழ்நாட்டுக் கோயில்களை வாழ்வில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டுமென விரும்பும், அதற்காகவே தமிழ்நாட்டுக்கு வருவது மட்டுமன்றி, அங்கே பெருமளவு பணத்தையும் செலவு செய்யும் ஈழத்தமிழர்களைப் பாராட்டுங்கள்.

          • ஸ்ரீமான் வியாசனின் மேட்டிமைத்தனத்துக்கு அல்லது நேரடியாக சொல்ல வேண்டுமானால் ஒரு அசட்டுத்தனமான திமிருக்கு ஈடான ஒரு பாத்திரத்தை சொல்ல நினைக்கிறேன்.வடிவேலுவின் ஏதாவது ஒரு பாத்திரம் சரியாக இருக்கலாம் .தெரிந்தவர்கள் சொல்லுங்கள். அவர் தனது தமிழக பற்றினை விளக்க முற்பட்டு ”உண்மையில் நான் அடிக்கடி தமிழ்நாட்டுக்குப் போவதுண்டு………” என ஆரம்பிக்கிறார்.அப்படியே நேரடியாக “எனக்கு வேறு நாடுகளுக்குப் போவதை விட தமிழ்நாட்டில் ………… அங்கிருக்கும் போது நாங்கள் அந்நிய தேசத்தில் இருப்பது போல் உணர்வதில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்” என முடித்திருக்கலாம். ஆனால் அவரது மேற்சொன்ன மேட்டிமைத்தனம் அப்படி முடிக்க விடாமல் இடையிலேயே “தமிழ்நாட்டில் என்ன தான் இருக்கிறது. அந்த வெய்யிலிலும் புழுதியிலும் இவ்வளவு காசைக் கொடுத்துப் போய்க் காய்வதை விட வேறெங்காவது போகலாமே என்று எனது நண்பர்களும், பெற்றோரும் அடிக்கடி அறிவுரை கூறினாலும்……” என்று அலட்ட ஆரம்பிக்கிறது. பல்வேறு ஐரோப்பியர்களும் அவர்களது தட்ப வெப்பத்திற்கு முற்றிலும் மாறான இந்திய போன்ற தெற்காசிய நாடுகளுக்கு முகம் சுழிக்காமல் வந்து செல்லும் போது பூகோள ரீதியில் கிட்டத்தட்ட சம சூழ்நிலை நிலவும் இலங்கை தமிழர்களான இவரது நண்பர்களும் பெற்றோர்களும் வெறுக்கிறார்களாம். இவரது நண்பர்களும் பெற்றோரும் போன்ற இலங்கைத் தமிழர்களின் பொதுப்புத்தி இப்படித்தான் என்று நாம் வியாசனின் கூற்றை வைத்து முடிவுக்கு வரவேண்டியதில்லை.வரவும் கூடாது என்பதே சரியாக இருக்க முடியும்.இதற்கு பின்னும் வியாசனின் அகம் அழியவில்லை.ஒரு வரி எழுதினாலும் அதில் தனது இயல்பை பதிக்க தவறுவதில்லை.அடுத்து ராமகிரிஷ்ணனுக்கான பதிலில் “தமிழ்நாட்டுக்கு வருவது மட்டுமன்றி, அங்கே பெருமளவு பணத்தையும் செலவு செய்யும் ஈழத்தமிழர்களைப் பாராட்டுங்கள்” என்று அவர்களின் ஈகைக்குணத்தை மெச்சிக் கொள்கிறார். இவரது கருத்துப்படியே பார்த்தாலும் இவர் இட்லி தோசை கூட உண்ண விரும்பாத ஒரு மனிதராக இருக்கின்ற போது தமிழ்நாட்டின் ஒரு சாயா கடைக்கு கூட இவரது பெரும் பணத்தின் ஒரு சிறு பகுதியும் போகாது என்பது உறுதி.இந்தநிலையில் இவர் கொண்டு வருகின்ற ‘பெரும்’பணம் பன்னாட்டு கம்பெனிகள் பாட்டிலில் அடைத்து விற்கும் தண்ணீர் முதலாக நட்சத்திர ஓட்டல் அறை வாடகை போன்ற வழியிலேயெ செலவாகுமேயன்றி சாமனிய “தமிழ்நாட்டன்களின்” வாழ்வில் ஒளியேற்றி விடாது என்பது உறுதி.எனவே நாம் வியாசன் போன்ற சீமான்களிடம் நன்றி கடன் பட வேண்டிய துர்பாக்கிய நிலையிலிருந்து நம்மை காத்துக் கொள்ள அவரே அருள்பாலித்தார் என அமைதி கொள்ளலாம்.(எனக்கு தெரிந்தவரை தமிழ்நாட்டுக்கு வருகின்ற பல வெளிநாட்டில் வாழ்கிறவர்கள் தத்தமது நாட்டில் அதிக விலைக்கு விற்கப்படும் பூஜை பொருட்கள் முதல் அனைத்து அத்யாவசிய சமையலுக்கான மளிகை பொருட்களே வாங்கி மூட்டை கட்டி செல்கின்றனர். ஆக அவர்கள் இங்கே செலவு செய்யும் பெரும்பணம் அங்கே இதனை விடவும் பெரும் பணம் செலவு செய்ய வேண்டியிருக்கிற அடிப்படையில் ஒரு சிக்கன நடவடிக்கையே)

  11. லூசு வினவு , விவாதம் என்று வந்தால் உமக்கு ஜால்ரா அடிக்கும் தென்றலின் கருத்துகளை மட்டும் வெளியிட்டு என் கருத்துகளை தடை செய்யும் போது உமக்கே வெட்கமாக இல்லை ? இதுக்கு ,இப்படி செய்வதற்கு நீங்க இந்த vinavu.com ஐ மூடிட்டு, வேற எதாவது உருப்படியா வேலை செய்யலாம்.

  12. என் கருத்துகளின் உண்மை கண்டு பயந்து அவற்றை எதிர் கொள்ள இயலாமல் தடை செய்யும் வினவு , நீர் ஒன்று செய்யலாம். வினவை மூடிவிட்டு தமிழர் விரோத தினமலர் ,தினமணி அல்லது அமில ஹிந்து பத்திரிக்கைகளில் proof reader வேலைக்கு செல்லலாம். என்ன ஒரு நடுநிலை இலாத மானகேடான செயலை செய்து கொண்டு இருக்கின்றிர்கள் ?

    • அரசியல் ரீதியில் கண்டனம், அருமையான, கடுமையான விமர்சன விளக்கம் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு [பெயருக்கு]கொடுத்து உள்ளீர்கள் விஜய். நன்று

  13. டெல்லியில் ஆட்சியமைக்க பணம் கொடுக்கும் பிஜேபி, தமிழகத்தில் பணம் வாங்கிக்கொண்டு தேர்தலில் இருந்து வாபஸ் பெறுகிறார்கள் இதை பற்றி வியாசன் என்ன சொல்கிறார்?

  14. தமிழிசையை எப்படி சொர்ணாக்கா என சொல்லப்போயிற்று என ரொம்பவே தாண்டிக்குதிக்கிறார்கள் அம்பிகளும் அம்பிகளின் அடிப்பொடிகளும்.எடுத்த எடுப்பிலேயே முதல் பின்னூட்டமாக சந்தோஷ் என்ற அம்பி இந்த திரியை கொளுத்திப்போட்டுட்டர்.தொடர்ந்து வியாசன் டயானா போன்றோர் சாமியாடி வருகிறார்கள்.

    அதுவும் ”அறிவாளி” வியாசன் ஏறுக்கு மாறாக உளறிக் கொட்டுகிறார்.

    \\முதலமைச்சர் ஜெயலலிதாவை, இலங்கை அரசு அவமதித்தற்கும், இந்த ‘சொர்ணாக்கா’ நையாண்டிக்கும் பெரிய வேறுபாடு கிடையாது//

    ஜெயலலிதாவை சிங்கள இனவெறியர்கள் எப்படி அவமதித்தார்கள்.அவர் ஈழப்பிரச்னை,மீனவர் பிரச்னை பற்றி தமிழக முதல்வர் என்ற பொறுப்பில் இருந்து தலைமை அமைச்சர் என்ற முறையில் மோடிக்கு முறையீடு எழுதுவதை ”காதல் கடிதங்கள்” எழுதுகிறார் என்றார்கள்.இது அப்பட்டமான ஆணாதிக்க வக்கிரம்.இப்போதைய தமிழக முதல்வர் ஒரு பெண்ணாக இருக்கும் ஒரே காரணத்தால்தான் இப்படி ஒரு வக்கிரம் சிங்கள இனவெறியர்களிடத்தில் கொப்பளித்தது.
    அது போன்று தனிப்பட்ட முறையில் தமிழிசையை வினவு தோழர்கள் இழிவுபடுத்தவில்லை.தமிழிசையின் அரசியலை,அவரது விவாத முறையை வைத்துத்தான் சொர்ணாக்கா என அழைப்பதாக தோழர்கள் விளக்கம் அளித்தாலும் மீண்டும் மீண்டும் இதையே சொல்லிக்கொண்டிருக்கிறார் வியாசன். முசுலிம்களையும், கிருத்துவர்களையும், தாழ்த்தப்பட்டோரையும் வேட்டையாடி கொல்வதையே கொள்கையாக கொண்டிருக்கும் ஒரு கும்பலுக்கு தலைமை ஏற்றிருக்கும் தமிழிசையை,அந்த கொலை பாதகத்தை ஆதரித்து நாள்தோறும் தொலைக்காட்சிகளில் ஊளையிடும் அவரை ”சொர்ணாக்கா” என அழைப்பதில் என்ன தவறு.

    வியாசனின் மற்றொரு உளறல்.அப்பட்டமான தமிழின எதிரிகளான பா.ச.க.கும்பலின் ஈழ எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தமிழிசை பொறுப்பாக மாட்டாராம்.ஏனென்றால் அவர் அப்போது அரசியலுக்கு வரவில்லையாம்.
    என்ன ஒரு அறிவு.அய்யா அறிவாளியே;ஒருவர் ஒரு அரசியல் கொள்கையை ஏற்று அந்த கொள்கையையுடைய கட்சியில் இணைகிறார் என்றால் அக்கட்சியின் அத்தனை செயல்பாடுகளுக்கும் அவரும் பொறுப்பாகிறார்.அதனால்தான் தோழர்கள் ஸ்டாலின் மாவோ குறித்த அவதூறுகளுக்கு பொதுவுடமையாளர்கள் பதில் சொல்கிறார்கள்.பாபர் மசூதி இடிப்பில் காங்கிரசின் துரோகத்துக்கு இப்போதைய தலைமை அப்போது அரசியலுக்கு வரவில்லை என சப்பை கட்டு கட்ட முடியாது.ஒத்துழையாமை இயக்கத்தை பாதியிலேயே நிறுத்தி இந்திய விடுதலை போருக்கு காந்தியார் இழைத்த துரோகத்துக்கு காந்தியவாதி என சொல்லிக்கொள்வோர் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.அதேபோன்று பா.ச.க.கும்பலின் ஈழ எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தமிழிசை பொறுப்பேற்றுத்தான் ஆகவேண்டும்.

    பி.கு.

    தமிழ் மக்களை ”தமிழ் நாட்டான்கள்” என மரியாதையுடன் அழைக்கிறார் வியாசன்.இதே போன்ற மரியாதையை நாங்களும் வியாசனுக்கு அளித்து ”ஈழ நாட்டான்” என அழைக்கலாமா.அனைத்து ஈழ மக்களையும் குறிக்கும் வகையில் ‘ஈழ நாட்டான்கள்” என அழைக்க மாட்டோம் என உறுதி அளிக்கிறேன்.இவரது வக்கிரம் நிரம்பிய திமிர்த்தனத்திற்கு ஈழமக்களை பொறுப்பாக்கி அவர்களை இழிவுபடுத்த கூடாது.முடியாது.இல்லையா.

    • கற்றதுகையளவு,

      நான் ஈழநாட்டான் தான் நீங்கள் என்னை தாராளமாக ஈழநாட்டான் என்றே அழைக்கலாம். அதை விட தமிழில் ஒருவரை அதாவது என்னை மட்டும் குறிக்கும் போது ஈழநாட்டான் என்பது தான் சரியானது, தமிழ் உங்களின் தாய்மொழியல்ல என்பதால் உங்களுக்கு அது தெரியாமல் இருக்கலாம். 🙂 உதாரணமாக, தெலுங்கர்களைக் குறிக்க இலங்கையில் சிங்களத்திலும், தமிழிலும் வடுகர்கள்(Vaduge) என்ற சொல்லைப் பாவிப்பார்கள். அதில் ஒருவரை மட்டும் அழைப்பதாக இருந்தால் வடுகன் என்று தான் குறிப்பிட வேண்டும்.

      • வியாசனின் ”டக்கு” இவ்வளவுதானா;[ஏதோ கெட்ட சொல் என நினைக்க வேண்டாம்.ஒரு நகைச்சுவை காட்சியில் கருணாஸ் பயன்படுத்தும் ”டக்னு திரும்பி பாருங்க” தான் இது.]

        முன் வைத்த வாதங்களுக்கு ஒரு பதிலும் சொல்லாமல் அல்லது சொல்ல முடியாமல் ”ஈழ நாட்டான்” பற்றி மட்டும் பேசுகிறார்.அதுவும் யார் இந்த மறுமொழியை எழுதியது என்பதை கூட கவனிக்காமல் நண்பர் கற்றது கையளவு அவர்களை இழுத்து வைத்துக்கொண்டு பேசுகிறார்.அவர் மற்றவர்களை அறளை பெயர்ந்து போனவர்கள் என்று வக்கணை பேசுவதுண்டு.உண்மையில் அவர்தான் அறளை பெயர்ந்து போய் அலைகிறார் என்று இதிலிருந்து தெளிவாகிறது. அறளை பெயர்ந்த நிலையிலும் வியாசனுக்கு வக்கிர புத்தி போகவில்லை.நான் ”ஈழ நாட்டான்” என்றால் நீ ”வடுகன்” என நண்பர் கற்றது கையளவு அவர்களை பழிக்கிறார்.

        \\தெலுங்கர்களைக் குறிக்க இலங்கையில் சிங்களத்திலும், தமிழிலும் வடுகர்கள்(Vaduge) என்ற சொல்லைப் பாவிப்பார்கள். அதில் ஒருவரை மட்டும் அழைப்பதாக இருந்தால் வடுகன் என்று தான் குறிப்பிட வேண்டும்.//

        எதற்கெடுத்தாலும் இலங்கையில் அப்படி இலங்கையில் இப்படி என ஓடி ஒளியும் உத்தியை என்றுதான் வியாசன் கைவிடுவாரோ தெரியவில்லை.அய்யா அறிவாளியே,இலங்கையில் தெலுங்கு மொழி பேசுவோரை எப்படி அழைப்பார்கள் என்பது விவாதமில்லை.

        ஒரு இனத்தையே அவன்கள் அதாவது ”தமிழ் நாட்டான்கள்” என விளிப்பது மரியாதை அற்ற செயல் என்பதைத்தான் சுட்டிக்காட்டுகிறோம்.அது தரும் இழிவை,அதன் அவமரியாதை பொருளை சொல்பவர் உணர்ந்து கொள்ளட்டும் என்பதற்காகத்தான் ”உன்னை ஈழ நாட்டான் என்று சொன்னால் ஏத்துக்குவியா” என சொரணை வருகிறாற் போல் கேட்கிறோம்.ஆனால் வியாசனோ ”நான் ஈழநாட்டான் தான் நீங்கள் என்னை தாராளமாக ஈழநாட்டான் என்றே அழைக்கலாம்” என மழுங்கத்தனமாக சொல்கிறார்.இந்த மழுங்க வேடத்துக்கு ஒருமை பன்மை விளக்கம் வேறு.ஒரு தனிமனிதனை பற்றி பேசுவதாக இருந்தாலும் முன்னிலையில் ”நீங்கள்” என்றும் படர்க்கையில் ”அவர்” ”அவர்கள்” என பன்மையில் பேசுவதுதான் தமிழர் பண்பாடு.இந்த அடிப்படை நாகரீகத்தை கூட பேணாத வியாசன் தன்னை தமிழ் தேசியவாதி என சொல்லிக்கொள்கிறார்.வெட்கக்கேடு.

      • நண்பர் வியாசன் அவர்களே,

        ஒருவரை மரியாதையாக அழைக்கும்போது பன்மையாக அழைப்பது வழக்கம்.
        நீ என்று அழைப்பதை விட நீங்கள், தாங்கள் என்று அழைத்து பழக்கப்பட்டவன் நான்.
        ஒருவன் என்று அழைப்பதை விட ஒருவர் என்று கூறுவது மேலானது.

        இலக்கண வழியில் தாங்கள் கூறுவது சரி, அனால் நடைமுறையில் அது அடுத்தவரை மரியாதை குறைவாக கூறும் வார்த்தை தான். தங்களது தாய் தந்தையரை, வீட்டில் வயதான பெரியோரை நீங்கள் இப்படித்தான் அவன், இவன், நீ, வா, போ, என்று அழைத்து பழகுவீர்களா வியாசன் அவர்களே?

        அடுத்தவரை அவன், இவன், அந்த நாட்டான், இந்த நாட்டான் என்று கூறுவதை நீங்கள் தவிர்ப்பது நல்லது. பொதுவாக விவாதங்களில் தோல்வியடையும் நேரத்தில் சிலர் மரியாதை குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவர். அது அவர்களின் தோல்வியை குறிக்கும். தாங்கள் ஏன் இப்படி ஆனீர்கள் வியாசன் அவர்களே?

    • நல்லா கொடுத்தீங்க சூடு, வியாசனுக்கு. இருந்தாலும் ( :)) பொம்மைய தூக்கிகிட்டு வருவாரு வக்கணையா வியாக்கியானம் பண்ண. இவரை போன்றவர்கள் தமிழ் தேசியம் பேசும்போது வயித்த கலக்குது.

    • திப்பு சுல்தானின் பிதற்றலுக்கு என்னுடைய பதிலை வினவு வெளியிடவில்லை. ஏனென்றால் அதில் நான் முஸ்லீம்களின் (இலங்கை முஸ்லீம்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டுத் தமிழர்களின்) ஈழத்தமிழர் எதிர்ப்பைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். வினவு ஒரு நடுநிலையற்ற இணையத்தளம் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் இப்பொழுது முன்பிருந்ததை விட மோசமாகப் போகிறது. வினவுக்கு ஜால்ரா அடிப்பவர்களின் பதில் மட்டும் தான் இங்கு வெளியிடப்படும், அதனால் இனிமேல் நான் இங்கு மறுமொழி எழுதி எனது நேரத்தை வீணாக்கப் போவதில்லை. திப்பு சுல்தான் போன்றவர்களும், வெளியில் மட்டும் தமிழ் பேசும் தூயதமிழர்களும் இங்கே தமதிட்டம் போல் தனி ஆவர்த்தனம் பண்ணலாம். எனது பதில்களை வெளியிடாமல் (இதையும் வெளியிடுவார்களோ தெரியாது), எனக்குச் சூடு கொடுத்து விட்டதாகப் பீற்றிக் கொள்வதில் அர்த்தமேயில்லை. 🙂

      • எவ்வி எவ்வி பார்த்தும் எட்டாத திராட்சை பழத்தை பார்த்து நரி ஒன்று சீச்சீ ….இந்த பழம் புளிக்கும் என்று பழித்து விட்டு ஓடிப்போன கதையாக வியாசன் இனிமேல் வினவு பக்கம் எட்டிப்பார்க்க மாட்டேன் என்கிறார்.வாதங்களுக்கு பதில் சொல்ல வக்கற்றுப்போய் அவர் அவதூறு பின்னூட்டம் போட்டிருக்க வேண்டும்.அதனால்தான் அது மட்டுறுத்தலில் அடிபட்டு போயிருக்கும்.

        \\திப்பு சுல்தானின் பிதற்றலுக்கு என்னுடைய பதிலை வினவு வெளியிடவில்லை. ஏனென்றால் அதில் நான் முஸ்லீம்களின் (இலங்கை முஸ்லீம்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டுத் தமிழர்களின்) ஈழத்தமிழர் எதிர்ப்பைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன்//

        ஈழப்பிரச்னை பற்றி பேசும்போதெல்லாம் வியாசன் இலங்கை முசுலிம்கள் மீதும் தமிழக முசுலிம்கள் மீதும் நஞ்சு கக்கி எத்தனையோ பின்னூட்டங்கள் போட்டிருக்கிறார். அவற்றையெல்லாம் வினவு வெளியிட்டு இருக்கிறது.இப்போது அவரது பின்னூட்டம் ஆபாச அவதூறுகள் அடங்கியதாக இருந்திருக்க வேண்டும்.அதனால் அது மட்டுறுத்தலில் அடிபட்டு போயிருக்க வேண்டும்.

        பி.கு.

        வினவில் இனிமேல் பின்னூட்டம் போட மாட்டேன் என்ற வியாசனின் சபதம் பிரசவ வைராக்கியம் போன்று தற்காலிகமானதுதான்.சொறி,சிரங்கு பிடித்தவனின் கை சொரியாமல் இருக்க முடியாது.அதுபோல் எப்போதுமே கடைசி பின்னூட்டம் போட்டு ”வெற்றி” பெற துடிக்கும், மதவெறியும் இனவெறியும் நிரம்பிய அவரது மூளை பிறர் மீது நஞ்சு கக்காமல் இருக்க முடியாது.

        • கம்யுனிஸ்டுகள் என்போர் வட துருவம் முதல் தென் துருவம் வரை கொள்கை அடிப்படையில் சமுக அவலங்களை விமர்சித்து போராடும் பண்புடையவர்கள் என்பது உலகறிந்தது. ஆனால் தமிழக கம்யுனிஸ்டுகள் மற்றும் திப்பு ஆகியவர்கள் பயன் படுத்தும் திரைப்பட நகை சுவை வார்த்தைகள் அவர்களின் கொள்கை வரட்சியை அல்லவா காட்டுகின்றது? இதனை உணர்ந்தார்களா என்று தெரியவில்லை.

      • ஐதராபாத்தில் மெட்ராஸ் கபே திரைப்படம் திரையிடுவதற்கு எதிராக தானும் தன்னுடைய இரு பிள்ளைகளுடன் மட்டுமே போராடிய வீரத் தமிழர். “அப்துல் காதர்” எனும் தமிழர் ஐதராபத்தில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி. இவர் ஒரு சிறந்த தமிழ் உணர்வாளர். தமிழகத்தில் மாணவர் போராட்டம் நடக்கும் போது இவர் தன்னுடைய குழந்தைகள், மனைவி, அம்மா , அப்பா என அனைவருடன் ஐதராபாத்தில் நடந்த உண்ணா நிலை போராட்டத்தில் கலந்து கொண்டார். சென்னையில் நடந்த பல்வேறு போராட்டங்களில் இவர் ஐதராபத்தில் இருந்து சென்னை வந்து கலந்து கொண்டுள்ளார். அணு உலை போராட்டங்கள், ஈழத் தமிழர் போராட்டங்கள் என தமிழர் நலம் சார்ந்த பல்வேறு போராட்டங்களில் கலந்து கொள்வார்.

        இந்நிலையில், இந்தியா முழுவதும் தமிழர்களுக்கு எதிரான மெட்ராஸ் கபே திரையிடப்படுகிறது என்று அறிந்தவுடன் தான் வசிக்கும் ஐதராபாத் நகரிலும் திரையரங்கம் முன்னே ஆர்ப்பாட்டம் செய்யவேண்டும் என எண்ணினார். அதற்காக பல தமிழர்களையும் அழைத்தார். ஆனால் அங்கு இருந்து வெகு சில உணர்வாளர்களும் வெளி ஊர் சென்று விட்டதால் யாராலும் வர இயலவில்லை. எனினும் இவருடைய போராட்ட எண்ணம் மாறவில்லை. காலை 11 மணிக்கு படம் தொடங்கப்பட இருக்கிறது என்பதை அறிந்து 10.30 மணிக்கு தானும் தன் இரு பிள்ளைகளையும் ( 10 வயது பெண் பிள்ளை 8 வயது ஆண் பிள்ளை ) அழைத்துக் கொண்டு திரையரங்க வாசலில் பதாகைகள் பிடித்து நின்று கொண்டார். மெட்ராஸ் கபே படத்திற்கு எதிராக அரை மணி நேரம் அனைவரும் முழக்கமிட்டனர். இதை பார்த்து சுமார் பல நூறு பேர்கள் அங்கு கூடி விட்டனர்.

        இது குறித்து அப்துல் காதர் மேலும் கூறுகையில்…

        எங்களால் முடிந்தது தனியாக இன்று போராட்டத்தை எடுத்துச் சென்றோம் ! பொதுமக்கள் ஆதரவு இருந்தது ஒரு போக்குவரத்து துறை காவலர் உதவிகள் செய்தார் பொதுமக்கள் கூடியவுடன் அவர்களிடம் இந்தியா இலங்கை கூட்டுப்படுகொலைகளை பற்றியும் தமிழர்கள் எதற்காக இப்படத்தை எதிர்க்கிறோம் என்று பரப்புரை செய்தேன். அந்த நேரத்தில் அங்கு வந்த சுல்தான் பஜார் காவல்நிலைய ஆய்வாளர் வந்து என்னவென்று கேட்டார் உனக்கு எந்த ஊர் என்று கேட்டார் . ஏன் இங்கு வந்து போராடுகிறீர்கள் என்று கேட்டார் வந்திருந்த கூட்டம் மொத்தமும் தமிழர்கள் என்று நினைத்தார். நான் மட்டும் தான் என்றவுடன் காவல் வண்டியில் ஏறச் சொன்னார். குழந்தைகளை கண்டதும் எங்களது கைகளில் இருந்த விளக்க பதாகைகளை பறித்துவிட்டு இங்கே நிற்க கூடாது என்று போக சொன்னார். அவர் பெயர் ஆனந்த். எங்கள் கடமையை நாங்கள் செய்துவிட்டோம் என்று நிறைவு கொள்கிறோம். குறைந்தது நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு செய்தியை கொண்டு சேர்த்துவிட்டோம் என்றார் அப்துல் காதர்.

        @@@@@திப்பு சுல்தானின் பிதற்றலுக்கு என்னுடைய பதிலை வினவு வெளியிடவில்லை. ஏனென்றால் அதில் நான் முஸ்லீம்களின் (இலங்கை முஸ்லீம்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டுத் தமிழர்களின்) ஈழத்தமிழர் எதிர்ப்பைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன்@@@

        • நன்றி நண்பரே,தமிழக முசுலிம்களின் இன,மொழிப்பற்று உலகறிந்த ஒன்று.ஒரு பகலை போன்று வெளிப்படையானது.மத,இனவெறி பூனைகள்தான் கண்ணை மூடிக்கொண்டு ஒரே இருட்டு என சாதிக்கின்றன.இந்த இனவெறியர்களுக்கு முசுலிம் எதிர்ப்பு மதவெறியர்களுக்கு சாட்டையால் அடித்தாற் போன்ற இன்னொரு உண்மையை இங்கு பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும்.

          ஈழத் தமிழருக்காக தீக்குளித்த முதல் தமிழகத் தமிழன் “அப்துல் ரவூப்” என்ற முசுலிம் இளைஞன் .ஈழத்தமிழர்களுக்காக திருச்சியில் 15.12.1995 அன்று தன்னையெரித்து ஈகைச்சாவடைந்தான் அப்துல் ரவூப் என்ற அந்த மாவீரன்.தியாகங்களில் சிகரம் போன்றது உயிர்த்தியாகம்.இனத்திற்காக அப்படியான தியாகத்திற்கே அணியமாக இருக்கும் இளைஞர்களை ஈன்றெடுக்கும் தமிழ் முசுலிம் சமூகத்தை தமிழின எதிரிகளாக காட்ட முயல்கிறார்கள் இந்த மதவெறியர்கள்.சொந்த நாட்டு மக்கள் இன ஒடுக்குமுறையில் அழுந்தி சாகும்போது போராட துப்புக்கெட்டு வேறுநாட்டுக்கு ஓடிப்போன இந்த ஓடுகாலிகள் தியாகத்தின் விளைநிலமாக விளங்கும் முசுலிம் சமூகத்தை தூற்றுகிறார்கள்.

          அப்துல் ரவூபின் ஈகம் குறித்து வழக்குரைஞர் உமர் கயான் எழுதிய ”முதல் நெருப்பு” என்ற நூல் வெளியீட்டு விழாவிற்கான அப்துல் ரவூபின் தந்தையின் செய்தி இது.

          தமிழகத்தில் ஈழ நெருப்பை மூட்டிய அப்துல் ரவூப்

          என் மகன் அப்துல் ரவூஃப்-ன் ஈகம் பற்றிய சுருக்கமான வரலாற்று நிகழ்வுகளை ‘முதல் நெருப்பு’ என்ற தலைப்பில் வழக்கறிஞர் தம்பி சே.ஜெ. உமர் கயான் நூலாக்கித் தந்துள்ளார். பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அப்துல் ரவூஃப் பிறந்து, வாழ்ந்து மறைந்த ஊரில் தரவுகளை திரட்டித் தொகுத்து பதிவு செய்வது கடினமானதுதான். அப்துல் ரவூஃப்-ன் ஈகம் பற்றிய வரலாற்றை பதிவு செய்ய பலர் முன்வந்த போதும் தம்பி உமர் கயான் மூலம் நிறைவேறியுள்ளது. இந்நூலில் பல்வேறு செய்திகள், நிகழ்வுகள் விடுபட்டு போயிருப்பினும் இந்நூலாளர் அதையும் சுட்டிக் காட்டி அடுத்த பதிப்பில் சேர்க்கலாம் என்று கூறியிருப்பது என் மனதிற்கு இதமாக உள்ளது.

          அப்துல் ரவூஃப்ன் ஈகத்திற்கு பிறகு தம்பி வழக்குரைஞர் தமிழகன் (தமிழ் காவிரி மாத இதழின் ஆசிரியர், தமிழக ஆறுகள் இணைப்பு இயக்கத்தின் தலைவர், திருச்சி) அவர்கள் ரவூஃபின் சுருக்கமான வரலாற்றுடன் நெருப்பின் வரிகள் என்னும் கவிதைத் தொகுப்பினை வெளியிட்டார். அது ஒரு ஆவணமாக இன்றுள்ளது.
          அப்துல் ரவூஃப் நெருப்பானான் என்ற செய்தி கிடைத்து நான் ஓடிச்சென்று அவனைப் பாத்தபோது, அவனது உள்ளாடை கங்குகளில் கணன்ற நெருப்பினை என் கையாலேயே அணைத்தேன். என்ன ராஜா இவ்வாறு செய்துவிட்டாயே என்று கேட்டபோது, அவன் சொன்னான் “பாபு அழாதீர்கள், நெஞ்சை நிமிர்த்தி நில்லுங்கள், மாவீரனைப் பெற்ற தந்தையாக நில்லுங்கள், ஈழத் தமிழரை காப்பதற்காக உங்கள் மகன் உயிர்த்தியாகம் செய்திருக்கிறான் என்று பெருமைப்படுங்கள்” என்று படபடத்தான்.

          அதையும் மீறி நான் அழுதபோது அவன் சொன்னான், “என்ன பாபு உங்களையே நான் மாவீரனாக நினைத்துக் கொண்டிருக்கிறேன், நீங்களே அழலாமா?”

          “கண்ணா ஈழத்தமிழரை காப்பாற்ற எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள், எத்தனையோ வழிமுறைகள் இருக்கிறது” என்று கூறியபோது, “இதனைத் தவிர எனக்கு வேறு வழித் தெரியவில்லை பாபு” என்றான்.

          மருத்துவமனையில் கணீர் குரலில் அவன் பேசிய பேச்சுக்கள் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
          முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மறைவிற்குப் பிறகு நடக்கக் கூடாத சம்பவம் தமிழகத்திலே நடந்துவிட்டதே என எண்ணி தமிழக மக்கள், ஈழத் தமிழர்கள், விடுதலைப்புலிகள் பேரில் வெறுப்புடன் இருந்த நேரம், ஈழத்தில் சிங்களக் காடையர்களால் தமிழர்கள் ஈவூ இரக்கமின்றி கொன்று குவிப்பதை அறிந்தும், வாய்திறவாமல் மௌன சாட்சியாக இருந்த நேரம், யாழ் நகர மக்கள் 5 லட்சம்பேர் தம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள புலம் பெயர்ந்து காடுகளில் தஞ்சம் புகுந்தும், வெளிநாடுகளில் ஏதிலிகளாக தஞ்சம் அடைந்த நேரம், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள், இனி ஈழம் என்பது கனவுதானோ என்று எண்ணிய நேரம், தாய் தமிழகத்தின் ஆதரவு எமக்கில்லையோ என விடுதலைப் புலிகள் சோர்ந்திருந்த நேரம், அப்துல் ரவூஃப் தன் உயிரை ஈகம் செய்தது தமிழ் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்ற வரலாற்றுப் பதிவாக இந்நூல் இருக்கும்.

          எந்தக் கட்சியையும் சார்ந்தவன் அல்ல என்று ஓங்கிய குரலில் அவன் ஒலித்தபோதும், அவன் ஏற்றுக் கொண்ட தலைவர் வைகோ மட்டுமே என்பது எனக்கும் ரவூஃப்க்கும் மட்டுமே தெரிந்த உண்மை.
          அவனது மறைவிற்குப் பிறகு, மகனே போன பிறகு அவன் நிழற்படங்கள் எதற்கு, அவன் போற்றிய காசி ஆனந்தனின் கவிதை நூல்கள், வைகோவின் பாராளுமன்ற பேச்சு தொகுப்பு நூல்கள், இன்ன பிற நூல்கள் அத்தனையையும் அவனது தாய் சாம்பலாக்கியபோது, மௌனமாக பார்த்ததைத் தவிர என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

          ரவூஃப்-ன் மறைவைத் தொடர்ந்து, அணி அணியாக, தனித்தனியாக, கட்சி, சாதி மத வேறுபாடுகள் இன்றி எங்களை சந்தித்து ஆறுதல் கூறியவர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றேன்.
          ரவூஃப் மறைந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு தமிழீழ விடுதலைப் புலிகள் ஈழத்திலிருந்து தலைவர் ரகசியமாக இருவரை அனுப்பி ஆறுதல் கூறினார். அப்துல் ரவூஃப்-ற்காக மாவீரர் கல் நடப்பட்டுள்ளது என்ற செய்தியைக் கூறியதுடன், தைரியமுடன் இருங்கள் என்று கூறிய தேசியத் தலைவர் தம்பி பிரபாகரன் அவர்களையும் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.

          துக்கத்தைப் பகிர்ந்து கொண்ட அத்துணை அரசியல் தலைவர்களையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

          பா.ம.க. கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா இராமதாசு அவர்கள் தன்னுடைய வாக்குறுதியின்படி எனக்கும், என் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி, இன்றளவும் காப்பாக இருந்து வருவதை நெஞ்சார்ந்த நன்றியுடன் நினைவு கூறுகின்றேன்.

          அப்துல் ரவூஃப்-ன் அண்ணன் ஆசிக் அலி (பொறியாளர்)-க்கு தமிழக அரசில் வேலை வாங்கிக் கொடுக்க பெருமுயற்சி செய்து, இயலாமல் போனாலும் அவர் எங்கள் குடும்ப நல வாழ்விற்கு முயன்றதை வாழ்நாள் முழுமையும் நினைத்து ஆறுதல் பெறுகிறோம்.

          அருமைத் தம்பி செந்தமிழன் சீமான், 15 ஆண்டுகளுக்குப் பிறகு, ஈகி அப்துல் ரவூஃப்-ஐ கண்டறிந்து வீரவணக்கம் செய்து தமிழகம் முழுமையும் அவன் புகழ் பரப்பி வருவதையும், அவன் பெயரில் நாம் தமிழர் மாணவர் பாசறையின் குறியீடாக ஆக்கியுள்ளதை நெஞ்சம் நெகிழ அவரை வாழ்த்துகிறோம்.

          “உன் முடிவு எங்களுக்கு முன்னுதாரணமல்ல
          ஆனாலும் மூடப்பட்ட உன் புதைகுழி
          சடலத்திற்காக
          தயாரிக்கப்பட்ட சிறையல்ல
          ஒரு இனப்புரட்சிக்காய்
          நீ தொடங்கி வைத்த அலுவலக அறை”
          – வழக்குரைஞர் ஆ. இராசா
          (முன்னாள் மத்திய அமைச்சர்)

          உலகிலேயே, தம் இனத்திற்காக முதல்முதலாக தன்னுயிரை ஈகம் செய்தவரின் தந்தை என்ற பெருமிதத்தோடு நிறைவு செய்கிறேன்.

          தமிழோடு தமிழராய் வாழ்வோம்

          வாழ்த்துக்களுடன்
          அ.அசன்முகமது,
          பெரம்பலூர்.

          நன்றி;தேசக்காற்று இணைய தளம்.

          http://thesakkaatu.com/doc12578.html

          • வினவில் இடப்படும் இத்தகைய பதிவுகள் நம் தமிழரை மதம் கடந்தும் இணைக்கும் என்றால் அதில் எனக்கு மிக்க மகிழ்வே

      • அன்புள்ள வியாசன் அவர்களே,

        //வெளியில் மட்டும் தமிழ் பேசும் தூயதமிழர்களும் //

        இதன் மூலமாக என்ன சொல்ல வருகிறீர்கள்?

    • வினவில் விலக்கப்பட்டவர்களுடன் பேசி என்ன செய்ய போகின்றிர்கள் ? சந்தோஷ்,வியாசன் ,டயனா ஆகியோர் குரல்கள் இனி வினவில் ஒலிக்காது என்னும் போது அவர்களை பற்றி எழுதவும் தான் வேண்டுமா ? நான் படித்த வினவு விவாதங்களிலேயே இது தான் மிகவும் ஒரு தலைபச்சமாகவும், வினவுடன் ஒன்றுபருக்கு மட்டும் சாதகமாகவும் இருக்கும் கருத்து எடிட்டிங் நிகழ்வு.

      [தமிழிசையை எப்படி சொர்ணாக்கா என சொல்லப்போயிற்று என ரொம்பவே தாண்டிக்குதிக்கிறார்கள் அம்பிகளும் அம்பிகளின் அடிப்பொடிகளும்.எடுத்த எடுப்பிலேயே முதல் பின்னூட்டமாக சந்தோஷ் என்ற அம்பி இந்த திரியை கொளுத்திப்போட்டுட்டர்.தொடர்ந்து வியாசன் டயானா போன்றோர் சாமியாடி வருகிறார்கள்.]

      • வியாசனின் பின்னூட்டத்தை வினவு வெளியிடவில்லை என தாண்டிக்குதிக்கும் யோக்கியர்கள் வசவு மழை பொழியும் வியாசனின் பின்னூட்டங்கள் வினவில் வெளியான போது எங்கே போனார்கள்.இங்கேதான் இருந்தார்கள் என்றால் சகலத்தையும் மூடிக்கொண்டு கள்ள மவுனம் சாதித்திருக்கிறார்களே அது ஏனோ.

        முசுலிம்கள் குறித்த வியாசனின் வசவுகள்.

        ”தொப்பி பிரட்டிகள்.”

        ”துலுக்கன்.”

        தமிழகத்தில் வாழும் பிற மொழி பேசுவோர் குறித்த வியாசனின் வசவு

        ”வந்தான் வரத்தான்”

        தெலுங்கர்கள் குறித்த வியாசனின் வசவு.

        ”வடுகன்”

        தமிழக மக்கள் குறித்த வியாசனின் வசவுகள்.

        ”தமிழ்நாட்டான்கள்”

        ”நாய் கூட திங்காத உணவை தின்பவர்கள்”

        ”தலித்கள் உட்பட தமிழ்நாட்டு தமிழர்கள் புலம் பெயர் ஈழத்தமிழர்களிடம் காசு கேட்டு நக்குகிறார்கள் ”

        இதெற்கெல்லாம் என்ன சொல்கிறீர்கள் யோக்கியர்களே.

    • //தமிழிசையை எப்படி சொர்ணாக்கா என சொல்லப்போயிற்று என ரொம்பவே தாண்டிக்குதிக்கிறார்கள் அம்பிகளும் அம்பிகளின் அடிப்பொடிகளும்.எடுத்த எடுப்பிலேயே முதல் பின்னூட்டமாக சந்தோஷ் என்ற அம்பி இந்த திரியை கொளுத்திப்போட்டுட்டர்.தொடர்ந்து வியாசன் டயானா போன்றோர் சாமியாடி வருகிறார்கள்.//
      திப்பு அண்ணன் ஏரியாவுக்கு புதுசு போல.. இதெல்லாம் காந்தி காலத்து டெக்னிக் புதுசா எதாச்சும் சொல்லுங்க..நானெல்லாம் 10 வருஷமா பதிவுலகத்துல இருக்கேன்.. நான் வந்த புதுசுல இப்படி தான் ஆரம்பிப்பாங்க.. இன்னமும் எம்முட்டு நாள் தான் அதையெ வெச்சிட்டு இருப்பிங்க.. ஒரு innovation வேணாம்.. புதுசா எதாச்சும் கண்டுபுடிச்சி திட்டுங்க..

      • சந்தோஷ்ஜீ ,தமிழக பிஜேபி தலைவரை வினவில் “சொர்ணாக்கா” என்றழைக்கும் போது இங்கு ‘அம்பிகள்’ யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததன் காரணமென்னவோ ? இதுவே பிராமண மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களையோ , பிராமண ஜெ வையோ யாரேனும் “சொர்ணாக்கா” என்றழைத்திருந்தால் ‘அம்பிகள்’ வினவுக்கு வந்து சதிராட்டமாடியிருபார்களல்லவா ?[சதிராட்டம் + ஆடி +இருபார்கள் +அல்லவா ?]

        • ஆவியக்கா (அல்லது ஆவியண்ணே) ,

          // தமிழக பிஜேபி தலைவரை வினவில் “சொர்ணாக்கா” என்றழைக்கும் போது இங்கு ‘அம்பிகள்’ யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததன் காரணமென்னவோ ? //

          என்னுடைய கண்டனப் பின்னூட்டம் வெளியாகவில்லை.. ஏன் எனத் தெரியவில்லை.. இன்னும் வினவின் பின்னூட்ட சனநாயகத்தின் மீது நம்பிக்கை இழக்காததால் மறுபடியும் உங்கள் பார்வைக்கு :

          ’பார்ப்பன பாஜக’ ஒரு தமிழச்சியான தமிழிசை அவர்களை மாநிலத் தலைவராக்கியதில் ஏற்பட்ட அதிர்ச்சியில் சொர்ணாக்கா அந்தக்கா இந்தக்கா என்று குளறுகிறார்கள்.. இது போன்ற அவதூறுகள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை..

          இங்ஙனம்,
          அறிவுசீவி அடாவடி அருந்ததி ராயக்காவின் தம்புடு அம்பி

          // ‘அம்பிகள்’ வினவுக்கு வந்து சதிராட்டமாடியிருபார்களல்லவா ?[சதிராட்டம் + ஆடி +இருபார்கள் +அல்லவா ? //

          இத்தனை காலம் அம்பிகளுக்காக அம்பிகள் மட்டுமே ஆடிய சதிராட்டத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தீர்களல்லவா.. இப்போது நீங்களும் கொஞ்சம் ஆடுங்கள்.. பிறகு அம்பிகளும் வந்து சேர்ந்து கொள்வார்கள்.. நாமாடுமாட்டத்தில் (நாம்+ஆடும்+ஆட்டத்தில்) இந்த ராயக்கா கூட்டத்தின் கொட்டம் அடக்கப்படும்.. இந்த வாரம் நடக்கப் போகும் பெரியாரிய-மாவோயியப் புரட்சி நிறுத்தப்படும்.. ஸ்டார்ட் மூசிக்..

  15. இட்டலி தோசைமாவு ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளாது என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன்.ஆனால்…

    ஈழத்தில் சிங்களவர்களுக்கு எதிரான கோஷமும் தமிழ்நாட்டு இணைத்தளத்தில் தெலுங்கர் ஒழிக!(கட்டப்பொம்மன் கட்டுரையில்) என்ற கோஷமும் அரசியலில் மன்னிக்க முடியாத குற்றம்.

    எவ்வளவு இனவெறி வியாசன் மனத்தில் குடிகொண்டு உள்ளது என்பது யாருக்கும் புரிந்துகொள்ள சிரமம் இருக்காது.

    நாய்வாலை நேராக்க முடியாது.

    அரசியலை அந்தந்த நாட்டுயரசாங்கத்திற்கு எதிராக விமர்சனம் வைக்கலாமே ஒழிய அந்தநாட்டு மக்களுக்கு எதிராக அல்ல.
    இதற்கு அமெரிக்கா என்றாலும் விதிவிலக்கல்ல.

    • இனிமேல் மாவோவும் தனதிட்டம் போல், கம்யூனிசம் என்ற போர்வையில் ஈழத்தமிழர் எதிர்புப் பிரச்சாரம் செய்து சிங்களவர்களிடம் Brownie Points எடுக்கலாம், யாரும் கேள்வியோ, விளக்கமோ கேட்க மாட்டார்கள். கேட்ட கேள்விக்குப் பதில் தர வக்கில்லை, என்னைப் பற்றி விமர்சனம் பண்ண ஓடி வந்து விட்டார். 🙂

        • ராம்கிருஷ்ணன் சார் ,Brownie Points என்பது ஒருவர் , எதிர் கொள்கை உடையவர்களுக்கு செய்யும் நன்மையான, ஆதாயமான ஆதரவுக்காக ,அவர்களிடம் இருந்து பெரும் அருவ,புலப்படாத [intangible] பெற்று விசா, பாஸ்போர்ட், நாணய நிதியம், கல்வி உதவித்தொகை போன்ற நன்மைகள். [ Ex acquiring visa ,passport, monetary fund, scholarship for education]. சுதந்திர ஈழத்துக்கு எதிரான சிங்கள அரசின் பரப்புரையில் சிங்கள அரசுக்கு ஆதரவாக கனடா,usa, ஐரோப்பிய நாடுகளில் வாழும் ஈழ தமிழர்களே சிலர் நடந்து கொண்டு பெரும் புலப்படாத [intangible] நன்மைகள் Brownie Points எனப்படும்.

          உதாரணத்துக்கு பலரை காட்ட முடியும். பிரபல பத்திரிக்கையாளர் ஜெயராஜ், ஈழம் கடந்து வாழும் ஈழ தமிழ் எழுத்தாளர் சிலர், தமிழ் நாட்டில் பணம் செலுத்தி “கத்தி” படம் தயாரிக்கும் தயாரிப்பாளர், நீங்கள் கூறிய ISI க்கு உளவு பார்த்த ஈழ-யாழ்பானத்துக்காரன் செலவா.., என்று பலரை காட்ட முடியும்.

    • Brownie Points பொருள் புரிந்ததாயையா ? ஈழத்தவன் என்ற சொல்லை பயன் படுத்தாமல் பல இடங்களில் இலங்கையன் என்ற சொல்லை தங்கள் சொற்பயன்பாட்டினை கொண்டு வந்த போதே நினைத்தேன் Brownie Points பற்றி !

      தங்களின் தமிழ் மொழி தடுமாற்றம், தங்களை “தமிழை வலிய ஏதோ ஒரு சிறந்த நோக்கத்துடன் கற்று வினவில் சிங்கலவனுக்கு ஆதரவாக பரப்புரையாற்றிகொண்டுயுள்ளிர்கள்” என்று புரிந்துகொள்ள வைக்கின்றது.

  16. அரை மணி நேரம் செலவு செய்து மொத்த பதிவுகளையும் படித்த பின்பு மேற்படி விவாதத்தில் பங்கு கொண்டவர்கள் வக்கிர புத்தியுள்ளவர்களாகவே கருத தோன்றியது. ஒருவர் தான் தான் சிங்களமக்களுக்காக வக்காலத்து வாங்க பிறந்தவர் போல எழுதுகிறார், இன்னொருவர் பெண்ணீயத்தை தாங்கி பிடிக்கிறார் இதற்கு நடுவில் பார்பனரை அனைவரும் சேர்ந்து உருட்டுகின்றனர்.
    ஒருவருக்கொருவர் தங்களது கருத்தை ஆரோக்கியமான விதத்தில் விவாதிப்பதாக தெரியவில்லை. தனிப்பட்ட நமர்மீதான காழ்புணர்ச்சியும் தனிநபர் தாக்குதலும் அதிகமாக உள்ளது. இதனால் விவாதத்திற்கு எடுத்துகொள்ளபட்ட தலைப்பு திசைமாறி எங்கெங்கோ சென்றுவிட்டது.
    தமிழிசை அவர்களுக்கு தொலைகாட்சி ஊடகம் மேடையாக கிடைத்து அவரது கருத்தை உரத்து கூறியதால் அவர் சொர்ணாக்கா ஆனார்.
    இங்கு பதிவிட்டவர்கள் அனைவரும் மனம் போனபடி தங்களது கருத்தை நாகரீகமற்ற முறையில் பதிவிட்டவர்களை என்னவென்று சொல்வது?

    • பெண்ணியத்தையை தாங்கி பிடிப்பது தவறா ?அதன் பெயர் தான் வக்கிர புத்தியா? ஏன் ?எதற்கு ? எப்படி ? என்று விளக்க முடியுமா?

  17. Narendra Modi Born: September 17, 1950 (age 63), Vadnagar

    Jayalalithaa Born: February 24, 1948 (age 66), Melukote

    வினவு கார்டூன் : ……….பெங்களுர் கேசு தீர்ப்ப கொண்டாடம்ணுணே !

    என்ன முறை ஐயா ? அண்ணன் ? தம்பி ?

Leave a Reply to வியாசன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க