privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்பொது சிவில் சட்டம் - மாயையும் உண்மையும்

பொது சிவில் சட்டம் – மாயையும் உண்மையும்

-

இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா? பொது சிவில் சட்டம் குறித்த உண்மைகள் – 1

முன்னுரை

னது இந்து ராஷ்டிரக் கனவை நிறைவேற்றிக் கொள்வதற்கு அயோத்தி பிரச்சினைக்கு இணையான முக்கியத்துவம் கொண்ட பிரச்சினையாக “பொது சிவில் சட்டம்” குறித்த பிரச்சினையை பாரதீய ஜனதா எழுப்புகிறது. முசுலீம்களின் நான்கு தார மணமுறை மற்றும் மணவிலக்கு முறையை மட்டும் குறிவைத்துத் தாக்குவதன் மூலம் ‘இந்து தனிநபர் சட்டம் ‘ ரொம்பவும் முற்போக்கானது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது.

பொது சிவில் சட்டம்
பொது சிவில் சட்டம் (படம் : நன்றி outlookindia.com)

“இந்திய உண்மையான மதச்சார்பற்ற நாடென்றால் எல்லா இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டியதுதானே” என்ற பாரதீய ஜனதாவின் கேள்விக்கு, அதன் எதிர்ப்பாளர்களால் முகம் கொடுக்க முடியவில்லை. எனவே “இது முசுலீம்களுக்கு ஆதரவான போலி மதச்சார்பின்மை” என்ற பாரதீய ஜனதாவின் வாதம் பெரும்பான்மை ‘இந்து’க்களிடம் எடுபடுகிறது.

இது போலி மதச்சார்பின்மை என்ற கருத்தை இந்நூல் வேறொரு கோணத்திலிருந்து கூறுகிறது. “அரசு மற்றும் சிவில் சமூகத்தின் மீது எவ்வித அதிகாரமும் செலுத்தவியலாமல் மதத்தைத் துண்டிப்பது” என்ற மதச்சார்பின்மைக் கோட்பாட்டுக்குப் பதிலாக, அனைத்து மதங்களையும் சமமாக நடத்துதல் என்ற மோசடியான விளக்கம் இந்திய மதச்சார்பின்மைக்குத் தரப்பட்டிருப்பதை இந்நூல் சுட்டிக் காட்டுகிறது.

இந்திய அரசியல் சட்டத்தில் மதம், மதச்சார்பின்மை ஆகியவை தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்பதுடன், மதம் – மத நம்பிக்கை குறித்து உச்சநீதி மன்றம் அளித்துள்ள விளக்கங்கள் மதச்சார்பின்மைக் கோட்பாட்டுக்கே எதிரானவை என்பதை ஆதாரங்களுடன் நிறுவுகிறது இந்நூல்.

இந்து – முசுலீம் தனிநபர் சட்டங்கள் பற்றிய ஒப்பீட்டைப் படிக்கும் வாசகர்கள் இந்து சட்டத்தின் ‘முற்போக்கான’ தன்மையைப் புரிந்து கொள்ள முடியும். எதார்த்தத்தில் இல்லாத இந்து மதத்தைச் சட்டத்தின் மூலம் செயற்கையாக உருவாக்கும் முயற்சிதான் ‘இந்து தனிநபர் சட்டம்’ என்பது வரலாற்று விவரங்களுடன் தரப்பட்டுள்ளது. அரசியலிலிருந்து மதத்தைப் பிரிக்கக் கூடாது என்று வாதாடும் பாரதீய ஜனதா, குடும்பத்திலிருந்து மட்டும் மதத்தைப் பிரிக்க வேண்டும் என்று கூறும் இரட்டை வேடத்தின் நோக்கம் ஆராயப்பட்டுள்ளது. இறுதியாக, பாரதீய ஜனதாவிதற்கு எதிராகப் போலி கம்யூனிஸ்டுகள் முதல் பின் நவீனத்துவ அறிஞர்கள் வரை பல தரப்பினரும் வைக்கும் தீர்வுகளுக்கான மறுப்புரை தரப்பட்டுள்ளது. உண்மையான மதச்சார்பின்மைக்கும் மதச்சார்பற்ற சிவில் சட்டத்திற்குமான போராட்டம் மட்டுமே இந்துத்துவத்தை முறியடிக்கும் என்பதை நூல் வலியுறுத்துகிறது.

1995 –இல் ஒரு உச்சநீதி மன்றத் தீர்ப்பு உருவாக்கிய விவாதத்தையொட்டி புதிய கலாச்சாரத்தில் தோழர் சூரியன் எழுதிய தொடர் கட்டுரையை தற்போது நூல் வடிவில் தருகிறோம் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் இந்துத்துவ எதிர்ப்புப் போராட்டத்திற்கு இது பெரிதும் பயன்படும் என நம்புகிறோம்.

பிப்ரவரி’ 2002
ஆசிரியர் குழு,
புதிய கலாச்சாரம்

1. பொது சிவில் சட்டம் : மாயையும் உண்மையும்

பொது சிவில் சட்டம் என்று வழங்கப்படும் ‘ஒரு சீரான உரிமையியல் சட்டம்’ (Uniform Civil Code) குறித்த விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.

பதினான்கு வயதில் ஒரு மகனையும், இரண்டு பெண்களையும் உடைய ஜிதேந்திர மாதுர் என்ற நபர் தனது மனைவி மீனாவை மணவிலக்கு செய்யாமலேயே சுனிதா என்ற இன்னொரு பெண்ணை மணந்து கொண்டார்.

இருந்தாலும் இருதார மணக்குற்றத்துக்காக இவர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. காரணம், இரண்டாவது திருமணம் செய்வதற்கு முன்னால் ஜிதேந்திர மாதுர் அப்துல்லாகானாக மதம் மாறிவிட்டார்; தான் மணக்கவிருந்த சுனிதாவை பேகம் பாத்திமாவாக மதம் மாற்றி டெல்லி ஜூம்மா மசூதியில் வைத்துத் திருமணமும் செய்து கொண்டு விட்டார். இந்த விவகாரம் எதுவுமே முதல் மனைவி மீனாவுக்குத் தெரியாது.

”அன்று காலை இருவருமாக வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென ஒரு காகிதத்தை என் கையில் கொடுத்தார். அது அவருடைய இரண்டாவது திருமணத்தின் (நிக்காஹ் ) பதிவுச் சான்றிதழ். அதிர்ச்சியில் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்றார் மீனா.

ஷா பானு வழக்கு
“ஷாபானு” வழக்கில் வந்த தீர்ப்பிற்கு எதிராக முசுலீம் மதவாதிகள் தொடுத்த தாக்குதலுக்கு ராஜீவ் அரசு பணிந்த்து.

தான் முசுலீமாக மதம் மாறிவிட்டதால் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது தனது சட்டபூர்வ உரிமை என்பது ஜிதேந்திர மாதுரின் வாதம். இந்த ‘நிக்காஹ்’ செல்லாது என அறிவிக்கக்கோரி மீனா தொடுத்த வழக்கில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதி மன்றத்தீர்ப்பு வந்துள்ளது. இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்திற்காகவே இசுலாமுக்கு மதம் மாறியுள்ளதால் இந்தத் திருமணம் செல்லாது என்றும், முசுலீமாக மதம் மாறியிருந்தாலும் முதல் மனைவியை மணவிலக்கு செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்யவியலாது என்றும் நீதிபதி குல்தீப் சிங், நீதிபதி சஹாய் ஆகியோர் அடங்கிய ‘பெஞ்ச்’ தீர்ப்பளித்துள்ளது.

இந்தப் தீர்ப்பைப் பொருத்தவரை, இதை முசுலீம் மதத் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் வரவேற்றுள்ளனர். தீர்ப்பின் இணைப்பாக ”பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு முயல வேண்டும் என்றும், அரசியல் சட்டத்தின் வழிகாட்டுதல் கோட்பாடு தந்துள்ள இந்த வாக்குறுதியை அமல்படுத் வேண்டும்” என்றும் நீதிபதி குறிப்பிட்டிருப்பது பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியிருக்கிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன் “ஷாபானு” வழக்கில் வந்த தீர்ப்பிற்கு எதிராக முசுலீம் மதவாதிகள் தொடுத்த தாக்குதலுக்கு ராஜீவ் அரசு பணிந்த்து. “முசுலீம்களை ராஜீவ் அரசு தாஜா செய்கிறது” என்ற பாரதீய ஜனதா கும்பல் குற்றம் சாட்டியவுடனே அதைச் சமாளிப்பதற்காகப் பூட்டிக் கிடந்த பாபர் மசூதியை இந்துக்களின் வழிபாட்டுக்கு திறந்துவிட்டு ராமஜென்மபூமி விவகாரத்துக்கு உயிரூட்டினார் ராஜீவ். பாபர் மசூதி தரைமட்டமாக்கப்பட்டு விட்டது.

இந்த உச்சநீதி மன்றத் தீர்ப்பையொட்டித் தன்னைச் சந்தித்த முசுலீம் தலைவர்களிடம் ”பொது சிவில் சட்டமெதுவும் கொண்டு வரும் உத்தேசம் அரசுக்கு இல்லை” என்று வாக்குறுதியளித்திருக்கிறார் நரசிம்மராவ். சிறுபான்மையினரைத் “தாஜா” செய்யும் இந்த வாக்குறுதியினால் கோபமடையக்கூடிய இந்து வெறியர்களை சமாதானப்படுத்த, ராவ் எதைத் திறத்துவிடுவார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மதத்தின் அடிப்படையிலான வெவ்வேறு தனிநபர் சட்டங்கள் தேசத்தின் ஒற்றுமையைக் குலைத்துவிடும் என்று ஒருமைப்பாட்டின் பெயரால் கேள்வி எழுப்புகிறது பாரதீய ஜனதா. இடையிடையே பெண்ணுரிமை பற்றிப் பேசுவதற்கும் அவர்கள் தயங்குவதில்லை.

முசுலீம் மதவாதிகளோ ”எமக்கு இறைவன் வகுத்தளித்த சட்டங்களை மாற்றுவதற்கு எந்த மனிதருக்கும் உரிமையில்லை” என்கின்றனர். பொதுச் சட்டம் என்ற பெயரில் இந்துச் சட்டத்தை அனைவரின் மீதும் திணிக்கும் சதியே இது என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பொது சிவில் சட்டமொன்றைக் கொண்டு வருவதற்குரிய இணக்கமான சூழ்நிலை ( குறிப்பாக இந்து -முசுலீம் உறவில் ) இன்னும் உருவாகவில்லையென்றும் அத்தகைய சூழ்நிலை உருவாகும் வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.

ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம்!

ஒரு கையில் மசூதிகளை இடிப்பதற்குக் கடப்பாரையையும், இன்னொரு கையில் ”ஒரே நாடு- ஒரே மக்கள்” என்ற சாட்டைக் குச்சியையும் வைத்திருக்கும் பாரதீய ஜனதா அவ்வப் போது அதைச் சொடுக்குகிறது. உடனே கிளம்புகிற முசுலீம் தலைவர்களின் எதிர்ப்புக் குரலைக் காட்டி ‘மதச்சார்பற்ற சிவில் சட்டத்தின் எதிரிகள் முசுலீம்கள் மட்டும்தான்’ என்று நிறுவுகிறது. பாரதீய ஜனதா மட்டுமல்ல, மீனாவின் வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிபதி குல்தீப் சிங்கும் இதையேதான் கூறுகிறார்.

பொது சிவில் சட்டம்
ஆணாதிக்க மதச் சட்டங்களை புனிதப்படுத்திக் கொள்ளவா பொது சிவில் சட்டம்? (படம் : நன்றி http://www.thehindu.com )

“இந்தியாவுக்குள்ளே இரண்டு தேசங்கள் அல்லது மூன்று தேசங்களாக வாழ்வது குறித்த கோட்பாடுகளையெல்லாம் இந்தியத் தலைவர்கள் ஏற்கவில்லை என்பதும், இந்தியக் குடியரசு எனபது ஒரே தேசம்தான் – இந்தியத் தேசம்தான் என்பதும், அதில் எந்தச் சமூகத்தினரும் மதத்தின் அடிப்படையில் தனித்தன்மை எதையும் கோர முடியாது என்பதும், பிரிவினைக்குப் பிறகு இந்தியாவிலேயே தங்கிவிடுவது என்று முடிவு செய்தவர்களுக்கு நன்றாக தெரியும்.. இந்துக்களும், சீக்கியர்களும், பவுத்தர்களும், ஜைனர்களும் இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பாற்றுவதற்காகத் தங்கள் மத உணர்வுகளைத் தியாகம் செய்திருக்கிறார்கள். சில சமூகத்தினர்தான் அவ்வாறு விட்டுக் கொடுக்க மறுக்கிறார்கள்.”

மத உரிமை, பெண்ணுரிமை, சொத்துரிமை, குடும்பம் ஆகியவை தொடர்பான பிரச்சினை இந்திய ஒருமைப்பாடு குறித்த பிரச்சினையாக மாறிவிட்டது. பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்வதன் வாயிலாக சிறுபான்மை மதத்தினர் (முசுலீம்களும், கிறித்தவர்களும் ) தங்கள் நாட்டுப் பற்றை நிரூபிக்க வேண்டுமென்ற பாரதீய ஜனதாவின் விஷமப் பிரச்சாரம் உச்சநீதி மன்றத்தீர்ப்பினால் புனிதப்படுத்தப்பட்டுவிட்டது.

இத்தனை விவாதங்களுக்கு உட்படுத்தப்படும் பொது சிவில் சட்டம் என்பது தான் என்ன?

  • எந்தவொரு ஆணோ,பெண்ணோ அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் மதம் மாறாமலேயே திருமணம் செய்து கொள்ளும் உரிமைக்கும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமணக் கொள்கைக்கும் எதிராக மதங்கள் வழங்கும் சலுகைகளை நிராகரித்தல்.
  • ஆண், பெண் இருவரின் ஒப்புதலும் இருப்பின் நீதிமன்றத்தில் மணவிலக்கு பெறும் உரிமை.
  • கணவனால் மணவிலக்கு செய்யப்பட்ட மனைவியும், குழந்தைகளும் அவனிடமிருந்து ஜீவனாம்சம் பெறும் உரிமை.
  • பருவம் வராத சிறுவர் – சிறுமிகளுக்கு பெற்றோர்களே காப்பாளர்கள் என்ற மதச்சட்டங்களுக்கு மாறாக, அச்சிறுவர்களின் நலனில் அக்கறை கொண்ட வேறு யாரையேனும் கூட நியமிப்பதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம்.
  • சொத்து மற்றும் பாரம்பரியச் சொத்துக்களில் ஆண் -பெண் இருபாலருக்கும் சம உரிமை.
  • மணமான அல்லது மணமாகாத எந்தவொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் குழந்தையொன்றைத் தத்து எடுத்து கொள்ள சட்ட பூர்வமான உரிமை.

மதச்சார்பின்மைக் கோட்பாட்டின் தொடர்ச்சியாக மேற்கத்திய அரசுகள் கொண்டு வந்த, மேற்கூறிய அம்சங்களைக் கொண்ட “குடிமக்கள் அனைவருக்குமான பொது சிவில் சட்டம்” என்பது திருமணம், சொத்துரிமை, மற்றும் குடும்ப விவகாரங்கள் அனைத்திலும் மதத்தின் அதிகாரத்தைப் பறிக்கிறது; மதச்சார்பற்ற அரசு அவற்றைத் தன் கையில் எடுத்துக் கொள்கிறது.

முசுலீம் சட்டத்திற்கு மட்டுமா முரண்பாடு?

அம்பேத்கர் சட்ட அமைச்சர்
சாதி ஆதிக்கம் மற்றும் ஆணாதிக்கத்தின் அவமானகரமான சின்னமாகக் காட்சியளித்த இந்துச் சட்டத்தைச் சீர்திருத்த அம்பேத்கர் முயன்றபோது அதை மூர்க்கமாக எதிர்த்தவர்கள் பாரதீய ஜனதாவின் மூதாதைகள்தான்.

இத்தகையதொரு பொது சிவில் சட்டத்துடன் முசுலீம் தனிநபர் சட்டம் மட்டுமல்ல, தற்போது அமலில் உள்ள இந்து, கிறித்தவ, பார்சி தனிநபர் சட்டங்கள் அனைத்துமே வெவ்வேறு அளவில் முரண்படுகின்றன.

ஆனால் அத்வானியின் சீடர்கள் பொது சிவில் சட்டத்திற்குத் தரும் விளக்கம் மிகவும் சுருக்கமானது;  “முசுலீம் நாலு பொண்டாட்டி வச்சிக்கலாம்; ‘நமக்கு’ அந்த உரிமை இல்லை. அவன் ‘தலாக் தலாக தலாக்’ னு சொன்னாப் போதும். உடனே விவகாரத்து; நாம் கோர்ட்டுக்கு அலையணும். அதென்ன அவனுக்கு மட்டும் தனிச் சட்டம்?”

நியாயமாக இந்தக் கேள்வி முசுலீம் பெண்களிடம் எழுப்பப்பட வேண்டும். முசுலீம் தனிநபர் சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள்தான். பாரதீய ஜனதாவிற்குத் தங்கள் மேல் தோன்றியுள்ள திடீர்க் கரிசனையை நம்புவதற்கு முசுலீம் பெண்கள் தயாராக இல்லை என்பது ஒருபுறமிருக்க, பாரதீய ஜனதாவும் இப்பிரச்சாரத்தை அவர்களிடம் கொண்டு செல்வதில்லை. மாறாக ,மேற்படி ‘உரிமைகளில்லாத ‘ இந்து ஆண்களிடம் தான் கொண்டு செல்கிறது. அதன் நோக்கமும் கண்ணோட்டமும் இதன் மூலம் அம்பலமாகிறது.

இந்துச் சட்டத்தின் வரலாறு

இது ஒருபுறமிருக்க, ‘நமக்குள்ளேயே’ இந்து சட்டம் விதித்திருக்கும் ஏற்றத்தாழ்வுகள் பற்றியும், நம்முடைய சட்டத்தில் அசிங்கமாக வெளிப்படும் சாதி ஆதிக்கம், ஆணாதிக்கம் பற்றியும் பாரதீய ஜனதா பேசுவதில்லை.

வரலாற்றுப் பழி தீர்ப்பதையே தனது முழுமுதற் கொள்ளையாக அறிவித்திருக்கும் பாரதீய ஜனதா இந்துச் சட்டத்தின் வரலாறு பற்றிச் சாதிக்கும் மவுனம் பொருள் நிறைந்தது. இந்தச் சட்டத்தொகுப்பின் தயாரிப்பின் போது நடைபெற்ற விவாதங்கள் எந்த அளவு அம்பலமாகின்றதோ, அந்த அளவு பாரதீய ஜனதாவின் இந்து ராஷ்டிரக் கனவு சிதைந்து போகும். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் செயற்கை முறையில் பாராளுமன்ற மண்டபத்திற்குள் ‘தயாரிக்கப்பட்ட’ இந்துமதத்தின் குட்டு வெளிப்பட்டுப் போகும்.

சாதி ஆதிக்கம் மற்றும் ஆணாதிக்கத்தின் அவமானகரமான சின்னமாகக் காட்சியளித்த இந்துச் சட்டத்தைச் சீர்திருத்த அம்பேத்கர் முயன்றபோது அதை மூர்க்கமாக எதிர்த்தவர்கள் பாரதீய ஜனதாவின் மூதாதைகள்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

“இச்சமூகம் ஒரு இயக்கமற்ற சமூகமாகும் . கடவுள் அல்லது சுமிருதிகள் தான் சட்டத்தை உருவாக்க வேண்டும். ஆகவே இச்சட்டங்களை மாற்றுவதில் இந்துச் சமூகத்திற்கு எந்த உரிமையும் இல்லை என்றே இச்சமூகம் நம்பி வந்தது . இதனால்தான் இந்துச் சமூகத்தில்தலைமுறை தலைமுறையாகச் சட்டங்கள் மாறாமல் இருந்து வந்தன. தங்களின் சமூக, பொருளாதார, சட்ட வாழ்க்கையை உருவாக்குவதில் தங்களுக்கு இச்சமூகம் என்றும் ஒத்துக் கொண்டதே இல்லை. முதன் முறையாக இம்மாதிரியான நடவடிக்கைகளுக்கு இந்துச் சமூகத்தை நாம் தூண்டுகிறோம்” என்று அரசியல் நிர்ணயசபை விவாதங்களின்போது அம்பேத்கர் குறிப்பிட்டார்.

”கடவுளால் உருவாக்கப்பட்ட சட்டங்களை மாற்றுவதற்கு மனிதனுக்கு உரிமையில்லை’’ என்று கூறும் முசுலீம் மதவாதிகளை இன்று கேலி செய்கின்ற இந்து மதவாதிகள் தங்கள் முதுகைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இராசேந்திரப் பிரசாத்
மசோதா நிறைவேற்றப்பட்டால் தான் ராஜிநாமா செய்து விடுவதாக மிரட்டினார் இராசேந்திரப் பிரசாத்.

ஒரு தார மணம், ஜீவனாம்சம், பெண்ணுக்கும் சொத்துரிமை, வாரிசுச் சட்ட திருத்தம் போன்ற சில திருத்தங்களை உள்ளடக்கிய இந்துச் சட்ட மசோதாவை 1951-ல் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார் அன்றைய சட்ட அமைச்சர் அம்பேத்கர்.

காங்கிரசுக்குள்ளிருந்து இந்து மகாசபையினரும் சநாதனிகளும் சர்தார் பட்டேலின் தலைமையில் இம்மசோதாவை மூர்க்கமாக எதிர்த்தனர். இம்மசோதா நிறைவேற்றப்பட்டால் தான் ராஜிநாமா செய்து விடுவதாக மிரட்டினார் இராசேந்திரப் பிரசாத்.

இந்து மசோதா மீதான விவாத்தையே தடை செய்யத் திட்டமிட்ட சநாதனக் கும்பல், எல்லா மதத்தினருக்கும் சேர்த்து பொது சிவில் சட்டம் கொண்டு வரக்கோரி பிரச்சினையைத் திசை திருப்பியது. அதன் மூலம் முசுலீம்களையும் தூண்டிவிட்டு இந்துச் சட்டத்திற்குச் சமாதி கட்ட முயன்றது.

”இந்துச் சட்ட மசோதாவை எதிரிப்பவர்கள் ஒரே நாளில் பொது சிவில் சட்டத்தின் தீவிர ஆதரவாளர்களாக மாறிவிட்டது எனக்கு வியப்பளிக்கிறது” என்று அவர்களின் முகத்திரையைக் கிழித்தார் அம்பேத்கர்.

பலதார மணம், வைப்பாட்டி முறை ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த இந்துப் பெண்களின் நலனை முன்னிட்டுக் கொண்டு வரப்பட்ட இம்மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்தின் வாயிலில் பெண்களின் ஆர்ப்பட்டமொன்றை நடத்தி அரசை மிரட்டினார்கள், பாரதீய ஜனதாவின் மூதாதைகள். அதுவரை மசோதாவை ஆதர்ப்பதாகக் கூறிய நேரு பல்டியடித்தார்.

திருமணம் மற்றும் மணவிலக்கு பற்றிய பிரிவை மட்டும் ஒரு தனி மசோதாவாக ஆக்கிவிடலாமென்றும் மற்றவைகளைக் கைவிட்டு விடாலாமென்றும் நேரு முன்வைத்த சமரச யோசனையை அம்பேத்கர் ஏற்றார். ஆனால் மசோதாவின் இந்தப் பகுதிகூட நிறைவேற்றப்பட முடியாமல் கைவிடப்பட்டது. இந்நிலையில்தான் அமைச்சராகத் தொடர்ந்து நீடிப்பதில் அர்த்தமில்லை என்று கூறி பதவியை ராஜினாமா செய்தார் அம்பேத்கர்.

இந்துச் சட்டத்தின் அடிப்படைகள்

தற்போது வழக்கில் உள்ள இந்துச் சட்டம் 1955-56-ல் நிறைவேற்றப்பட்டது. இது மூன்று வகைப்பட்ட விசயங்களைத் தன் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

  1. வருண சமூகத்தைக் கட்டிக் காப்பதற்காகவே உருவாக்கப்பட்ட பார்ப்பனியச் சட்ட மரபுகளான சுருதிகள், சுமிருதிகள் மற்றும் அவற்றுக்கான விளக்கவுரைகள்.
  2. சூத்திரர், தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடி மக்களிடையே நிலவி வரும் மரபுகள்.
  3. மேற்கத்திய சட்ட மரபுகளான நியாயம் – நீதி – மனச்சாட்சி, முன்மாதிரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளால் இயற்றப்படும் சட்டங்கள்.

1.சுருதிகள், சுமிருதிகள், விளக்கவுரைகள்

வேதங்கள் ‘ஒலி வடிவில் இறைவனால் முனிவர்களுக்கு அருளப்பட்டவை’ என்பதால் சுருதிகள் என்றழைக்கப்படுகின்றன. சுருதி என்ற சொல்லுக்கு ‘காதால் கேட்டது’ என்று பொருள்.

சுமிருதிகள் என்றால் ‘நினைவில் நின்றவை ‘ எனப் பொருள். வேதங்களின் உட்பொருள் குறித்த ஆதிகால முனிவர்கள் அளித்த விளக்கங்களைக் கேட்டு நெஞ்சில் நிறுத்திக் கொண்டவையே சுமிருதிகள். முற்கால சுமிருதிகளுக்குத் தரும சூத்திரங்கள் என்றும், ‘மனுஸ்மிருதி’ போன்ற பிற்கால சுமிருதிகளுக்குத் தரும சாத்திரங்கள் என்றும் பெயர்.

தரும சாத்திரங்கள் என்றழைக்கப்படும் இச்சட்டங்கள் நாடெங்கும் ஒரே மாதிரியாக அமல்படுத்தப்படவில்லை. புதிதாக எழுகின்ற பிரச்சனைகளுக்கு ஏற்ப இச்சட்டத்தை எவ்வாறு பிரயோகிப்பது என்பதை விளக்கி எழுதப்பட்ட விளக்கவுரைகள் ஏராளமாக உள்ளன. கி.பி- 7-ம் நூற்றாண்டு முதல் 17-ம் நூற்றாண்டு வரை இத்தகைய விளக்கவுரைகள் பல எழுதப்பட்டுள்ளன. நால்வருண முறை என்னும் அடிப்படைச் சட்டத்தில் ஒன்றுபடுகின்ற அதே சமயம் மரபுகள், பழக்கங்கள், ஒவ்வொரு வட்டாரமும் சந்திக்கும் சிறப்பான பிரச்சினைகள் ஆகியவற்றுக்கேற்ப இந்த விளக்கவுரைகள் மாறுபட்டன

2. சூத்திரர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்கள் மத்தியில் நிலவும் மரபுகள்

இன்று உருவாக்கப்பட்டுள்ள இந்து மதத்தின் பெரும்பான்மையினராக உள்ள உழைக்கும் மக்களாகிய மேற்கூறியோர் மத்தியில் (ஒவ்வொரு சாதி அல்லது சமூகக் குழுவிற்குள்ளும்) நிலவி வந்த பண்பாடு, மேல் வருணத்தாரின் பண்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. தனது பண்பாட்டைப் பின்பற்றும்படி முற்காலத்தில் பார்ப்பனியம் இவர்களைக் கட்டாயப்படுத்தவில்லை; மாறாக, அவ்வாறு பின்பற்ற முயன்றோரைத் (எ.கா: நந்தன்) தண்டித்தது.

ஆனால், இந்து மதத்தை அனைத்திந்திய ரீதியில் ஒருங்கிணைக்கும் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக இப்போது ‘கீழ்சாதி மரபு’ களையும் இந்துச் சட்டத்தின் அங்கமாகச் சேர்த்துக் கொண்டது. ஆனால் வேதங்கள், சுமிருதிகளின் அடிப்படையிலான மைய நீரோட்ட இந்துச் சட்டத்திற்கு இவற்றை அடிப்படையாக ஏற்காமல், ‘இழிவான இந்த மரபுகளை’ பின்னிணைப்பாக வைத்துக் கொண்டதன் மூலம் பார்ப்பனியம் தனது ‘புனிதத்தை’க் காப்பாற்றிக் கொண்டது.

3. மேற்கத்திய சட்ட மரபுகள்

நவீன சமூகம் தோற்றுவிக்கும் பிரச்சினைகளுக்கு சுமிருதிகளில் விடை தேடவியலாது என்பதை இந்துச் சட்டத்தை உருவாக்கியவர்கள் புரிந்திருந்தனர். எனவே மதச்சார்பின்மை என்னும் உள்ளடக்கத்தை நீக்கிவிட்டு, மேற்கத்திய சட்ட மரபின் வடிவத்தை அவர்கள் இந்துச் சட்டத்தின் அடிப்படையாகச் சேர்த்துக் கொண்டனர். பாராளுமன்ற ஜனநாயகம் என்ற சட்டத்திற்கேற்ப புதியதொரு இந்து மதத்தை உருவாக்க இது அவசியமாக இருந்தது.

ஆசை வார்த்தைகள், மன்னர்- மானியம், பதவிகள், அச்சுறுத்தல்கள் மற்றும் ஆக்கிரமிப்பு ஆகிய நான்கு உபாயங்களையும் கடைப்பிடித்து ‘இரும்பு மனிதர்’ இந்தியாவை உருவாக்கிவிட்டார். ஆனால் இந்து மதத்தை ஒருங்கிணைத்து புத்துருவாக்கம் செய்வது இந்தியாவை உருவாக்குவதைக் காட்டிலும் கடினமான பணியாக இருந்தது.

தனது வாள்முனையில் இந்தியாவை ஒன்றுபடுத்திய பிரிட்டீஷ் ஆட்சியின் பேனா முனையேகூட ஒருங்கிணைந்த இந்துச் சட்டத்தை உருவாக்கவில்லை. அந்தந்த வட்டாரத்தில் என்ன தரும சாத்திரங்கள் வழக்கில் உள்ளனவோ அவற்றிற்கு பிரிட்டீஷ் நீதிமன்றங்களில் விளக்கம் கூறும் அதிகாரம் பார்ப்பனப் பண்டிதர்களுக்கே இருந்தது.

‘சுதந்திர – ஜனநாயக ‘ இந்தியாவில் இந்த முறையைத் தொடர முடியாதென்பதால் ஒரே சுமிருதியையும், அதற்கு விளக்கம் சொல்ல ஒரே பண்டிதரையும் உருவாக்கும் பணியை இந்துச் சட்டத் தொகுப்பை உருவாக்கிய சநாதனிகள் மேற்கொண்டனர். ( இவ்வாறு தொகுக்கும் போது அடிப்படையான வருண தருமநெறிகளுக்கு ஊறு வந்துவிடக் கூடாதேயென்று திரைமறைவில் காஞ்சி சங்கராச்சாரி செய்த சித்துவேலைகளை வீரமணி அவர்கள் தனி நூலில் அம்பலப்படுத்தியுள்ளார் ) ஒருவாறாக இந்துச் சட்டத் தொகுப்பு எனும் ‘ஒருங்கிணைந்த சுமிருதி’ உருவாக்கப்பட்டது. அதற்கு விளக்கமளிக்க இறுதி அதிகாரம் படைத்த பார்ப்பனப் பண்டிதராக உச்சநீதி மன்றம் ‘நியமனம்’ பெற்றது.

அம்பேத்கரின் ராஜினாமாவுக்குப் பிறகு, இந்து திருமணச் சட்டம் (1955), இந்து தத்தெடுத்தல் மற்றும் பராமரிப்புச் சட்டம் (1955 ) (1956), இந்து காப்பாளர் சட்டம் (1956) ஆகியவை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டன.

(தொடரும்…)

  1. இந்துக்களைப்பற்றி குறை சொல்வதே வினவுவின் வேலை. இந்து சட்டத்தை அம்பேத்கர் சீர்திருத்த முயன்றபோது அதனை எதிர்த்தார்களாம்!! அம்பேத்கார் சொன்னவுடன் அனைத்து இந்துக்களும் கேட்டு நடக்க வேண்டும் என்ற நியதி இல்லை!!!! அவர் கருத்தை அவர் கூறியுள்ளார். அவ்வளவே! அதற்காக அவரது கருத்தை ஏற்கவேண்டும் என்பதில்லை. நாடாளுமன்றத்தில் விவாதித்து சட்டமாக இயற்ற வேண்டும். அவ்வாறு செய்யாமல் அம்பேத்கார் சொன்னார் என்பதற்காக ஒரு சட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை.

    இன்றைய சூழலில் அறிவியல் பூர்வமாக சிந்தித்து பொது சிவில் சட்டம் கொண்டு வரவேண்டும். இந்துக்களின் சட்டத்தைத்தான் பொது சிவில் சட்டமாக்கவேண்டும் என்று யாரும் கூறவில்லை. முசுலிம்களின் சட்டம்தான் “அறிவியல்” சார்ந்தது என்றால் அதையே பொது சிவில் சட்டமாகவும் ஏற்கலாம். இத்துடன் பெண் உரிமையையும் பார்க்கவேண்டும்.

    ஒரு ஆண் பல பெண்களை மணப்பதால் பெண்களுக்கு உரிமை அதிகமாகிறதா இல்லையா என்பதையும் “பகுத்தறிவு” கொண்டு சிந்திக்க வேண்டும். அதேபோல் கிருத்துவர்களின் பெண் உரிமையையும் பார்க்க வேண்டும். அவர்களைப் பொறுத்தளவில் ஒரு ஆணையோ பெண்ணையோ விவாகரத்து செய்துவிட்டு அடுத்த திருமணம் செய்து கொள்ளலாம் என்று உள்ளது. அதைத்தான் ஐரோப்பிய அமெரிக்க கிருத்துவ சமுதாயங்கள் கடைப்பிடிக்கின்றன.வாழ்நாளில் எத்தனை திருமணம் வேண்டுமாலும் செய்து கொள்ளலாம். (அனால் இந்தியாவில் இருப்பவர்கள் அப்படி இல்லைதான். இந்துக்களைப் போல் கடைப்பிடிக்கிறார்கள்) கால மாற்றத்தால் அவர்களும் கிருத்துவ பாதிரிகள் பொய்களைக் கேட்டு அமெரிக்க ஐரோப்பா போல் பல “விவாக ரத்து” திருமணங்கள் செய்யலாம்.. இவர்களும் மாறலாம்.

    பொது சிவில் சட்டம் என்பதை இந்துக்களின் சட்டம் என்று கூறுவது அப்பட்டமான ஏமாற்றுவேலை!! பொது சிவில் சட்டத்தை அனைத்து சட்டங்களையும் ஆராய்ந்து புதிதாக கொண்டுவர வேண்டும். அதைவிடுத்து இந்துக்களின் மீதும் பா.ஜ.க.மீதும் வழக்கம்போல் வசைபாடுவது சரியல்ல.

    • /நாடாளுமன்றத்தில் விவாதித்து சட்டமாக இயற்ற வேண்டும். அவ்வாறு செய்யாமல் அம்பேத்கார் சொன்னார் என்பதற்காக ஒரு சட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை./

      இந்தியை பொது மொழி என்று எந்த நாடாளுமன்றத்தில் விவாதிதீர்கள் அய்யனே! அந்த அடிப்படையில் தானே மும்பை உயர்னீதி மன்றம், இந்தி பொது மொழி அல்ல, ஆங்கிலம் போன்ற மற்றொரு அலுவல் மொழிமட்டுமே என்று தீர்ப்பளித்துள்ளது! அரசியல் சட்டம் , அறிஞர்களால் வரையப்பட்டு, அரசியல் நிர்ணய சபை பின்னர் கேபினெட் மந்திரி சபை இவை ஏதாவதோன்றில் ஆராயப்பட்டு பின்னர் பாராளுமன்றத்தில் , தேவப்பட்டால் விவாதிக்கப்படுகிறது! அம்பெத் கரின் பொது சட்டம் கேபினெட் அளவிலேயே எதிர்க்கபட்டு, இந்துத்வா சக்திகளால், முறியடிக்கப்பட்டுவிட்டது!

      மனிதருள் மாணிக்கம், ரோசாவின் ராசாவும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்! ஒருவேளை அவர் தலையிட்டு இருந்தால் அன்றே பொது சட்டம் நிறைவேறியிருக்கும், அதிக எதிர்ப்பில்லாமல்!

    • இஸ்லாமியர்களை விடுங்கள், இந்தியாவில் பலதார மனம் புரிந்தவர்கள் எண்ணிக்கை ஹிணுக்களே அதிகம் இதற்க்கு என்ன செய்வது?

  2. Dear Vinavu & Author

    //இணக்கமான சூழ்நிலை ( குறிப்பாக இந்து -முசுலீம் உறவில் ) இன்னும் உருவாகவில்லையென்றும் அத்தகைய சூழ்நிலை உருவாகும் வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை//

    ட்ரெண்டு என்னவென்றால் முகமதியர்களின் (உலகின் மற்றும் இந்தியாவின்) தொகை கூடிக்கொண்டே போகிறது. அதாவது அவர்களின் பலம் கூடிக்கொண்டே போகிறது. எப்போது அலை ஓய்வது? இணக்கமான சூழ்நிலை உருவாவது?
    எப்படியோ. நான் பொதுச் சட்டத்தை ஆதரிக்கிறேன். விவாதங்களை வரவேற்கிறேன்.

    //பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்வதன் வாயிலாக சிறுபான்மை மதத்தினர் (முசுலீம்களும், கிறித்தவர்களும் )//

    கிறித்தவர்களுக்கு பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்களுக்கு பொதுமைக்குப் புறம்பான நிலைப்பாடுகள் ஏதும் கிடையாது.

    //நியாயமாக இந்தக் கேள்வி முசுலீம் பெண்களிடம் எழுப்பப்பட வேண்டும். //

    இந்த வரி தெளிவாக இல்லை.
    முசுலீம் பெண்களின் மத்தியில் இருந்து இந்த கேள்விகள் வரவேண்டும் என்று பொருளா. அப்படியென்றால் அந்த கேள்விகளை முசுலீம் பெண்களின் மத்தியில் இருந்து வந்ததே இல்லையா.
    முசுலீம் பெண்களிடம் இந்த கேள்விகளைக் கேட்கப்படவேண்டும் என்று பொருளா. அப்படியென்றால் பாதிக்கப்பட்டவர்களிடமே ஏன் பாதிக்கப்பட்டீர்கள் என்று கேட்க வேண்டுமா.

    //திடீர்க் கரிசனையை நம்புவதற்கு முசுலீம் பெண்கள் தயாராக இல்லை//

    எப்படித் தெரியும். அவர்கள் இதை கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்கள். இல்லாவிட்டால் ஷாபனு அவர்கள் உச்ச நீதிமன்றம் வரை ஏன் போக வேண்டும்.

    //முசுலீம் மதவாதிகளை இன்று கேலி செய்கின்ற இந்து மதவாதிகள் தங்கள் முதுகைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.//

    நல்லவேளை அந்த இந்து மதவாதிகள் தங்களின் நிலைப்பாட்டை நிலைநிறுத்த முடியாமல் போனது. இந்த நல்வாய்ப்பைப் பெற்ற பெண்கள் தங்கள் வருங்காலத்தில் அதை தவறவிடாமல் பார்த்துக்கொள்ள விழிப்புடன் இருக்க வேண்டும். நம் பெண்களுக்காக நாமும் விழிப்புடன் தான் இருக்க வேண்டும்.

    • Univerbuddy,

      \\ட்ரெண்டு என்னவென்றால் முகமதியர்களின் (உலகின் மற்றும் இந்தியாவின்) தொகை கூடிக்கொண்டே போகிறது. அதாவது அவர்களின் பலம் கூடிக்கொண்டே போகிறது. எப்போது அலை ஓய்வது? இணக்கமான சூழ்நிலை உருவாவது?\\
      இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகமாவதற்கும் இணக்கமான சூல்னிலைக்கும் என்ன சம்பந்தம் பட்டி. அதாவது உன்வேர்புட்டி .

      //ஷாபனு அவர்கள் உச்ச நீதிமன்றம் வரை ஏன் போக வேண்டும்.\\ ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் பிரதிநிதியாக ஷாபானுவை கொள்கிறீர்களோ? இதிலிருந்து நீங்கள் சுட்டிக்காட்ட விரும்பும் விஷயம் விரல் விட்டு என்னும் அளவிற்க்கு ஓரிரு பெண்கள் மட்டும் இஸ்லாமிய சட்டத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதா?

      • Zahir,

        //இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகமாவதற்கும் இணக்கமான சூல்னிலைக்கும் என்ன சம்பந்தம் //

        இவரு சொல்றத கேளுங்க.

        http://www.answeringmuslims.com/2012/01/three-stages-of-jihad.html

        // ஓரிரு பெண்கள் மட்டும் இஸ்லாமிய சட்டத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதா?//

        Don’t act smart. I normally give just one example. In this case, I cannot list out 1000s.

        • Univerbutty,
          //இவரு சொல்றத கேளுங்க.\\

          அவருடைய படித்தரம் என்ன , கண்டவன் சொல்வதையும் வேதவாக்காக தாங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்னை ஏன் அப்படி இருக்க சொல்கிறீர்கள் . இவர் சொல்வதை கேட்பதர்க்க்கு முன் இவர் யார் இவரின் பின்னணி என்ன என்று சொல்லுங்கள். இவனுடைய இணையதள முகவரியே சொல்கிறது இவன் யார் என்று… அது எப்படி தங்களுக்கு அலிசேன, மற்றும் இது போன்றவர்கள் சொல்வதெல்லாம் வேதவாக்காக தெரிகிறது என்பதையும் விளக்குங்கள்.
          ஒரு துறை சம்பந்தமான விஷயங்களை அந்தத்துறை சம்பந்தப்பட்டவர்களிடம்தானே கேட்டு தெரிந்துக்கொள்ள முடியும் . ஆனால் தாங்கள் எதிர்மாறாக விவசாயம் சம்பந்தப்பட்ட விஷயத்தை மருத்துவரிடமும் , மருத்துவம் சம்பந்தப்பட்ட விஷயத்தை என்கிநீரிடமும் கேட்டு தெரிந்துக்கொள்ள நினைப்பது போல் உள்ளது தாங்கள் இஸ்லாத்திற்க்கு எதிராக கருத்துசொல்பவர்களின் கருத்தை வைத்து இஸ்லாத்தின் வடிவத்தை பார்ப்பது…

          //In this case, I cannot list out 1000s.\\
          எல்லா சட்டத்திலும் அதிருப்தியாளர்கள் இருக்கவே செய்வார்கள்… அந்த சட்ட திட்டங்களால் நன்மை விளைந்ததா? அல்லது தீமை விளைந்ததா என்பதை பொறுத்துத்தான் சட்டத்தின் தன்மையை பார்க்க முடியும். பல மில்லியன் மக்கள் பின்பற்றும் இந்த மார்க்கத்தில் சில பேர்கள் மட்டுமே மனநிறைவு அடையாமல் இருப்பதை அறியமுடிகிறது … ஆனால் தாங்கள் சொல்லும் ஆயெரக்கனக்கு என்பது தங்களின் மனக்கணக்காக இருக்கலாம் உண்மை நிலவரம் அதுவல்ல…

  3. //எதார்த்தத்தில் இல்லாத இந்து மதத்தைச் சட்டத்தின் மூலம் செயற்கையாக உருவாக்கும் முயற்சிதான் ‘இந்து தனிநபர் சட்டம்’ //

    ‘முஸ்லிம் தனிநபர் சட்டம்’ என்ற ஒன்று உருவாக்க வேண்டிய நிர்பந்தத்தினால் தான் அதல்லாத மற்ற தனிநபர் சட்டங்களும் உருவாக்க வேண்டி வந்தது என்பதுதான் உன்மை.

    • கிழக்கிந்தியக் கம்பெனி 1850களில் Caste Disabilities removal act ஐக் கொண்டுவந்த பொழுது கூப்பாடு போட்டவர்கள் சனாதினிகள். வருணாசிரத்திற்கு தீங்கு ஏற்படுகிறதே என்று பார்ப்பன பேஷ்வாக்களும் பெரியாவாக்களும் கலகம் புரிந்த காலகட்டமே பார்ப்பன இந்துச் சட்டம் இருந்ததை தெளிவாகக் காட்டும். இதில் முசுலீம் தனிநபர் சட்டம் உருவாக்க வேண்டிய நிர்பந்தத்தினால் தான் மற்றதனிநபர் சட்டங்களும் உருவாக்க வேண்டியிருந்தது என்று சொல்வது ஆர் எஸ் எஸ் கைக்கூலித்தனம். இந்துத்துவக்காலிகளின் கீழறுப்பான வேலைக்கு ஊதுகுழலாக இருக்கிறது யுனிவர்படியின் இசுலாமியர்கள் மீதான வன்மம்.

      • பழைய கதைய ஏன் பேசுறிங்க தென்றல் பொது சிவில் சட்டத்தாலா யாருக்கு என்ன பாதிப்பு என்பதை அந்த சட்டத்தின் சரத்துகள் மூலம் எடுத்து உறையுங்கள் அத விட்டுட்டு 1853 ல நடந்த மத கலவரத்த எல்லாம் ஏன் இழுக்கிறீங்க …….

        • தெரியாத மாதிரி நடிக்காததீங்கப்பு. முசுலீம் தனிநபர் சட்டத்தால் தான் இந்து தனிநபர் சட்டம் உருவாக்கப்பட்டது என்ற அப்பட்டமான புளுகலுக்குதான் மேற்கண்ட பதில். காலனியாதிக்கத்தில் சட்டங்கள் மனுதர்மத்தின் அடிப்படையில் பார்ப்பன பண்டிதர்களால் தான் நிறைவேற்றப்பட்டன என்பது கட்டுரையிலும் விளக்கப்பட்டிருக்கிறது. அக்கால கட்டங்களிலேயே இந்திய சமூகத்தின் ஆன்மாவாக பார்ப்பனியம் தான் இருந்தது. ஆக இந்துக்களுக்கென்று தனிநபர் சட்டம் அன்றோ இன்றோ பிற மதத்தால் வந்துவிடவில்லை. சரியா? நீங்கள் இருவரும் தான் மதவெறியர்களாக போனீர்களே. பிறகு எப்படி இதையெல்லாம் பரிசீலிக்கப் போகிறீர்கள்?

          இப்பொழுது உங்கள் கேள்விக்கு வருவோம். இந்திய அரசியலமைப்பு சட்டத்திலேயே பார்ப்பனியத்தைப் புகுத்தி விட்டு, இன்றைக்கு பொதுசிவில் சட்டம் என்று சொல்வது முழுப் பூசணிக்காயை சோற்றில் அமுக்குவது போன்றது.

          பொதுசிவில் சட்டம் என்கிற பொழுது பார்ப்பனியத்தை பூனைப் பீயை பதுக்குவது போல பதுக்கமுடியாது.

          இன்னும் சொல்லப்போனால் பொதுசிவில் சட்டத்தில் உள்ள முக்கியமான சரத்துக்கள் சமூக ஜனநாயகத்திற்காக போராடியவர்களால் கொண்டுவரப்பட்டவை. அதில் உள்ள மறுமணம், சொத்துரிமை மற்றும் விவாகரத்து போன்ற பல பிரிவுகளை இந்துமதமும் இப்பொழுது அதை வழிமொழிகிற பிஜேபி ஆர் எஸ் எஸ் காலிகளும் கடுமையாக எதிர்ப்பவர்கள்.
          நிதர்சனத்தில் கிறித்தவமும் இசுலாமும் இதற்கு இடையூறல்ல.

          இதில் கத்தோலிக்க கிறித்தவம் பார்ப்பனியத்தைப் போன்றது. ஏனெனில் நெதர்லாந்து போன்ற நாடுகளில் விவாகரத்து சட்டம் பல போராட்டங்களுக்கு மத்தியில் தான் கொண்டுவரப்பட்டது. காரணம் தேவன் மணமக்களை தேர்ந்தெடுக்கிறார்; அதை பிரிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை என்கிறது கத்தோலிக்கம். இப்பேர்பட்ட கேலிக்கூத்தான நிலைமையில் தான் முசுலீம்கள் நாலு பொண்டாட்டிகள் வைத்திருக்கிறார்கள் என்ற வன்மத்தோடு படையெடுக்கிறீர்கள். இது மதவெறியன்றி வேறொன்றும் இல்லை.

          மேலும் ஒரு அடி முன்னே சென்றால், நாயர்கள் மற்றும் நம்பூதிரிபாடு சாதிகளின் ஒரே குடும்பத்து சகோதரர்கள் ஒரே மனைவியை திருமணம் செய்கிற போக்கு 80களில் கூட முற்றாக மறைந்துவிடவில்லை. பார்ப்பனியம் இதை சாதிகளின் மரபு என்று வரையறுத்திருக்கிறதா என்ன?

          தமிழ்நாட்டிலும் சரி வடமாநிலங்களிலும் சரி, நீதிபரிபாலனை, பெண்கள் விசயத்தில் கோர்ட் படிக்கட்டுகளை எல்லாம் தாண்டிவிடவில்லை. பெண்களுக்கு முட்டுக்கட்டையாக இந்துமதமும் ஆதிக்கசாதிகளின் பஞ்சாயத்தும் தான் இன்றைய நிலைமையில் கழுத்தை நெறித்துக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக காப் பஞ்சாயத்துக்கள் மனுதர்மத்தின் அடிப்படையில் தான் நிறைவேற்றப்படுகின்றன. இதையே ஆதாரமாக கொண்ட இந்து வெறியர்கள், காப் பஞ்சாயத்தையே தேர்தல் உத்தியாக கொண்ட பிஜேபி தான் பொது சிவில் சட்டம் என்கிறார்கள்! பார்ப்பனியத்தை எதிர்க்காத பொது சிவில் சட்டம் என்பது பிஜேபியின் இந்து ராஷ்ட்ர கனவின் ஒரு பகுதி தான் என்பதில் ஐயம் ஏதும் இருக்காது.

          கடைசியில் பிஜேபியின் பொது சிவில் சட்டத்தில் பொதுவும் கிடையாது, சிவிலும் கிடையாது. வெறும் சட்டம் மட்டுமே இருக்கும். இது பாசிஸ்டுகளின் வழமையான போக்கு அன்றி வேறல்ல.

          • தென்றல் பொது சிவில் சட்டம் எந்த வகையில் இந்து மதத்திற்க்கு ஆதரவானது என்பதை இந்த கட்டுரை தெளிவு படுத்த வில்லை ஏதோ சாணாதானிகள் எதிற்த்தார்கள் முஸிலீம்கள் எதிற்த்தார்கள் என்று எழுதி இருக்கிறார் கட்டுரை புரியும் படி இல்லை எந்த புத்தகத்தை மேற்கோள் காட்டினார்களோ அதை படித்தால் மட்டுமே தெளிவு பெற முடியும் பொது சிவில் சட்டத்தை இசுலாமியர் எதிற்க்க என்ன காரணம் அவர்கள் எந்த வகையில் பாதிக்கபடுகிறார்கள் என்பதை எல்லாம் நீங்கள் விளக்குங்கள் அரசியல சட்டத்த ஒரு மதத்து படி எல்லா மாத்த முடியாது அப்பிடி அரசியல் அமைப்பு சட்டத்துல இந்து மதத்துக்கு சாதகமா என்ன சொல்லி இருக்கு நீங்க விளக்குங்க எனக்கு சந்தேகம் நீங்களும் வினவும் போலி மதச்சார்பின்மை வாதிகளோ……..

          • தென்றல் அவர்களுக்கு,

            //மதவெறியர்களாக போனீர்களே//

            மதவெறிக்கொள்கைகளைப் பற்றி பேசினால் என்னையும் மதவெறியன் என்கிறீர்கள். கழுத்தறுப்பு செய்யும் இயத்தைப் பற்றியும் பேசும் என்னை நானே கழுத்தறுப்பு வேலை செய்வதாகவே முன்னர் ஒருமுறை சாடினீர்கள். உங்கள் வார்த்தைப் பயன்பாடுகள் விநோதமாகவே இருக்கிறது. எப்படியோ. இப்போது எனக்கு பழகிவிட்டது. தொடர்வோம்.

            //மறுமணம், சொத்துரிமை மற்றும் விவாகரத்து போன்ற பல பிரிவுகளை இந்துமதமும் ***ஆர் எஸ் எஸ் காலிகளும் கடுமையாக எதிர்ப்பவர்கள். //

            ‘இந்து’மதத்தில் ஒரு வழிகாட்டியைத்தான் பின்பற்றவேண்டும் என்ற கொடூரம் இல்லையில்லையா. மாற்றத்திற்கு/ தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு இடம் இருக்கிறதில்லையா. போராடித்திருத்திக்கொள்ள வழியிருக்கிறதில்லையா. இது எனக்கு பெரிய விசயமாகத்தான் தெரிகிறது.

            //நெதர்லாந்து போன்ற நாடுகளில் விவாகரத்து சட்டம் ***//

            கிருத்தவ சமூகங்கள் மிகவும் வேகமான மாற்றங்களைக் கொண்டவை தனிநபர் மற்றும் குடும்ப விசயங்களில் சட்டம் தளையிடுவது மிகமிகக் குறைவு. இன்று விவாகரத்தை அனுமதிக்காத சமூகங்கள் ஏதும் இல்லை தானே.

            //நாயர்கள் மற்றும் நம்பூதிரிபாடு சாதிகளின் ஒரே குடும்பத்து சகோதரர்கள் ஒரே மனைவியை திருமணம் செய்கிற போக்கு 80களில் கூட முற்றாக மறைந்துவிடவில்லை.//

            இந்த போக்கு இன்று இல்லை தானே.

            இங்கே ஒரு திருத்தம். ஒரே பெண்ணைத் திருமணம் செய்வதில்லை.

            இந்த இரண்டு சாதிகளும் ஒன்றுக்கொன்று முழுமையாக்குபவை. இவர்கள் ஒன்றாக இடம்பெயர்ந்து இந்கே வந்தவர்கள். சைபரஸ் தீவில் இவர்களைப் போன்ற மக்கள் இருந்திருக்கிறார்கள். ஆரம்ப வழக்கம் பின்வருமாறு. ஒரு சாதியில் (நம்பூதிரி) களில் முதல் ஆணுக்கு மட்டும் குடும்பமுருவாக்கும் உரிமையிருந்தது. சொத்து பிரியாமல் இருப்பதற்கு இந்த ஏற்பாடு. மற்றொரு (நாயர்) சாதியில் பெண்கள் மணம் செய்து கொள்ளாமல் யாருடன் வேண்டுமானாலும் சேரும் சுதந்திரம் தான் வழக்கம். அவர்கள் யாரையும் மணந்து கொள்வதில்லை. பிறக்கும் குழந்தைகளுக்கு அப்பா கிடையாது. முதல் சாதியின் அதிகப்படியான ஆண்கள் இந்த பெண்களுடன் தங்கள் வேட்கையைத் தனித்துக் கொண்டார்கள்.

            இது பெண்வழிச் சமூகத்தையும் ஆண்வழிச் சமூகத்தையும் ஒருங்கே கொண்ட அமைப்பு. இந்த வழக்கத்தில் பெரிதாக எந்த அநீதியும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

            //பெண்களுக்கு முட்டுக்கட்டையாக இந்துமதமும் ஆதிக்கசாதிகளின் பஞ்சாயத்தும் தான்***//

            மாற்றுக் கருத்தில்லை. ஆனால் முகமதியக் குடும்பங்களில் பிறந்த பெணகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஒப்பிடும் போது இவையெல்லாம் ஜுஜூபி.

            முற்றும்.

      • தென்றல் அவர்களுக்கு,

        கடந்த இரு தினங்களாக வேலையின் காரணமாக பதிலளிக்க முடியவில்லை. இன்று மாலையில் முடியும் என்று நம்புகிறேன்.

        நன்றி.

      • தென்றல் அவர்களுக்கு,

        //வருணாசிரத்திற்கு தீங்கு ஏற்படுகிறதே என்று பார்ப்பன பேஷ்வாக்களும் பெரியாவாக்களும் கலகம் புரிந்த காலகட்டமே பார்ப்பன இந்துச் சட்டம் இருந்ததை தெளிவாகக் காட்டும்.//

        நீங்கள் குறிப்பிடும் 1850 சட்டம் ‘இந்து’ வழிபாட்டுத்தலங்களைப்பற்றியது. (இது போன்று முகமதிய தொழுகைத்தலங்களைப்பற்றிய வக்பு சட்டங்களும் இருக்கின்றன.) இது போன்ற சட்டம் இயற்றத் தேவையிருந்த இழிநிலையையும் அந்த சட்டம் பல தடைகளை சந்தித்தையும் நான் கண்டிக்கிறேன்.
        ஆனால், மாற்றங்களின் வேகம் நாம் விரும்பும் வண்ணமில்லாவிட்டாலும் நமது சட்டங்கள் தொடரந்து மாற்றங்கள் அடைந்து வந்ததிருக்கின்றன. எனவே 1950 களில் இயற்றப்பட்ட சட்டம் ‘இந்திய தனிநபர் சட்டம்’ அல்லது ‘தனிநபர் சட்டம்’ என்றிருக்க வேண்டியதே முறை. இதற்கு யாரிடமிருந்து அதிக எதிர்ப்பு வந்திருக்கும் என்று நீங்கள் தான் யோசித்துப் பார்க்கவேண்டும். இந்த பொது சட்டத்தை ‘இந்து’ சட்டம் என்று அழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் அளவிற்கு ‘இந்து’ வெறியர்கள் வெறியர்களாக இருந்திருக்க மாட்டார்கள்.

        நீங்கள் முகமதியர்கள் இந்தியாவின் சிறுபான்மை என்ற அடிப்படையில் பேசிவருகிறீர்கள். நான் முகமதியர்கள் உலகில் 56 நாடுகளையும் 1.5 பில்லியன் மக்களையும் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் பேசி வருகிறேன்.

        தொடரும்…

        • UNIVERBUTTY

          //நீங்கள் முகமதியர்கள் இந்தியாவின் சிறுபான்மை என்ற அடிப்படையில் பேசிவருகிறீர்கள். நான் முகமதியர்கள் உலகில் 56 நாடுகளையும் 1.5 பில்லியன் மக்களையும் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் பேசி வருகிறேன்.\\

          உலக அளவில் இருக்கும் இஸ்லாமிய மக்கள் தொகையை குறிப்பிட்டு பேசும் தாங்கள் உலகளவில் இருக்க வேண்டிய சட்டத்தை பற்றி பேசுகிறீர்களா? அல்லது இந்திய அளவில் பேசுகிறீர்களா? ஏனனில் இந்தியாவில் முஸ்லிம்கள் சிறுபான்மை பொது சிவில் சட்டமும் இந்தியாவுக்கான சட்டம் என்னும் போது தாங்கள் உலகளவில் உள்ள இஸ்லாமியர்களின் எண்ணிக்கையை இங்கு வந்து கலப்பதன் நோக்கம் என்ன என்று விளக்கவும்…

          ஒரு சட்டமானது தவறுகளை குறைக்கும் வகையில் இருத்தல் வேண்டும் தவறுகளை ஊக்குவிக்கும் வகையிலோ அல்லது குற்றவாளிகளை அதிகமாக்கும் வகைலோ இருக்குமானால் அந்த சட்டத்தினால் எவ்வித பயனும் இல்லை அர்த்தமும் இல்லை. குற்றவாளிகளை குறைக்கும் அளவிற்க்கு சட்டம் எங்கு உள்ளது என்பதனை ஆராய்ந்து பாருங்கள் .

      • தென்றல் அவர்களுக்கு,

        //யுனிவர்படியின் இசுலாமியர்கள் மீதான வன்மம்//

        நான் மனுவை புகழ்பவனை எப்படி வெறுக்கிறேனோ அப்படித்தான் பெண்களை கறுப்பில் மூடுபவனையும் வெறுக்கிறேன்.

        தொடரும்…

        • மனுவைப் புகழ்பவனை முதுகில் குத்துவில்லை. கருத்திலும் களத்திலும் பார்ப்பனியத்தை வீழ்த்துவதிலும் அதை மக்கள் திரள் முன் அம்பலப்படுத்துவதிலும் எவ்வகையான நைச்சியமும் தேவையில்லை. ஆனால் உங்களுக்கு? இசுலாமியர்கள் மீதான வன்மத்தை வெளிப்படுத்துவதற்கு கம்யுனிச மூகமூடி தேவைப்படுகிறது! ஏற்கனவே ஒரு முறை நான் இதை தெளிவுபடுத்தியிருக்கிறேன். அதாவது உங்களது ஒருதரப்பு பார்வை இசுலாமிய மதஅடிப்படைவாதிகளை எளிதில் விட்டுவிடுகிறது. சொல்லபோனால் பிஜேவிற்கு சாமரம் வீசுகிறீர்கள் என்று நிறுவ முடியும். இசுலாமியர்கள் குறித்த உங்கள் பின்னூட்டம் எல்லாம் சொல்கிற செய்தி ஆர் எஸ் எஸ்ஸின் அகில பாரதிய வெளியிடூகளாக இருக்கின்றன. எதிரிக்கு எதிரி நண்பனாக மாறுவது இப்படித்தான்.

          இந்தப் பதிவில் முதல் பின்னூட்டத்தில் நீங்கள் வைத்த கருத்தை வாசித்துப்பாருங்கள். கருத்தே இல்லாமல் பஜ்ரங்தள் ஆசாமி கதறுவதைப்போன்று முசுலீம்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போகிறது என்று சொல்கிறீர்கள். பொதுவுடமை வேடம் அணிந்த வஞ்சகர்கள் கூட இதுபோன்று சொல்லத் துணிந்ததில்லை என்பது எமது துணிபு.

          மக்கள் திரள் போராட்டம், வரலாற்றில் இதுபோன்ற பல நபர்களைச் சந்தித்திருக்கிறது. ஆகையால் மக்கள் திரளிற்கு உங்களைப் போன்றவர்களின் அடையாளம் தெரியும். ஆனால் உங்களது அடையாளம் தான் உங்களுக்குத் தெரியவில்லை. எனக்கு இருக்கிற ஒரே தயக்கம் என்னவென்றால் பின்னூட்ட விவாதங்களில் ஈடுபடுகிற உங்களைப்போன்ற நபர்களின் மீது இதுபோன்று விமர்சனங்களை வைக்கிற அளவிற்கு நான் என்னைத் தயார்படுத்தியிருக்கிறேனா என்பது தான். ஏனெனில் நாம் விவாதிக்கிற பிழைப்புவாதம், ஊசலாட்டம், சந்தர்ப்பவாதம், வன்மம் போன்ற பலதரப்பு அபாயங்களில் நானும் தப்பித்துவிடவில்லை. ஆனால் ஒன்றை என்னால் தெளிவாக்கிக்கொள்ள முடியும். “நெறிபிறழாமல் வாழ்வது தற்செயலான நிகழ்வல்ல” என்று ‘போராடும் தருணங்களில்’ என்ற பதிவில் வாசித்திருக்கிறேன். ஒரு வாசிப்பால் என்னசெய்துவிடும் என்கிற கேள்விக்கு பல பதில்கள் இருந்தாலும் விமர்சனங்கள் சுயவிமர்சனங்கள் என்கிற பேச்சுரிமையால் ஒரு தனிமனிதர் வார்க்கப்படுகிறார் என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் இருக்காது என்று நம்புகிறேன்.

          உங்கள் தரப்பில் அப்படியொரு நம்பிக்கை இல்லை என்கிற காரணத்தால் தான் தான் இதுநாள் வரை இசுலாமியர்கள் குறித்த பதிவுகளில் எந்த விவரப்பாடும் இல்லாமல் வன்மத்திற்கு மேல் வன்மமாக கக்கிக்கொண்டுள்ளீர்கள் என்று கருதுகிறேன். சான்றாக ஒன்று; வினவில் சமீபத்தில் பீடி சுற்றும் தொழிலாளர்கள் பற்றிய பதிவு ஒன்று வந்தது. பீடி சுற்றுகிற தொழிலாளர்கள் இசுலாமியர்கள் என்ற ஒருகாரணத்திற்காகவே நீங்கள் ஒருவரியில் “இதைவிட வேறு சொல்லொணாத் துயரங்கள் இருக்கின்றன” என்பதாக எழுதியிருந்தீர்கள். இவங்களைப் பத்தி எதுக்கு எழுதுற என்பதாக உங்கள் எண்ணம் இருந்தது. சமூகத்தின் பொதுப்புத்தியில் இசுலாமியன் குறித்த பார்வையை இந்துத்துவ கும்பல் வலுவாக வேரூன்றியிருக்கிறது. அதையும் தாண்டி வர்க்கம் பேசுகிற தாங்கள் அறிவிக்கப்படாத வெறியராக விளங்குகிறீர்கள் என்பது தான் நான் புரிந்துகொண்டது.

          பயங்கரவாதம் என்ற சொல்லுக்கு இசுலாமியனை பலிகொடுத்துவிட்டு ஆர் எஸ் எஸ் காரன் ஜனநாயகவாதியாக வலம் வருகிறான் என்பதற்கு பதில் ஏதும் இல்லை. விவரம் தெரிந்த திப்புவிற்கும் சாகிருக்கும் விவாதக்களத்திலேயே பல லிட்மஸ் டெஸ்டுகளை வைக்கிறோம். ஆனால் இசுலாமிய சமூகம் பலகோணங்களில் எப்படி இந்துக்கள் பார்ப்பனிய கொடுங்கோன்மையால் சமூக பொருளாதார அரசியல் அதிகாரங்களை வென்றெடுக்க முடியாமல் இருக்கிறார்களோ அப்படித்தான் பல இசுலாமியர்கள் இன்றும் நசுக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். இதை வர்க்கரீதியில் பிளவுப்பட்டிருக்கிற இசுலாமியரும் இந்துவும் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் பொதுவுடமை பேசுகிற நீங்கள் வலதுகும்பலோடு சேர்ந்துகொண்டு எண்ணிக்கை பெருகிவிட்டது என்று நச்சுப்பிரச்சாரம் செய்கிறீர்கள். இது என்ன வகையான அரசியல்?

          மக்கள்திரளின் சமுத்தவத்திற்கு சமூகப்புரட்சி தான் தீர்வு என்பதை பலமுறை வழிமொழிகிற தாங்கள் சம்பந்தமேயில்லாமல் பிஜேபி முன்வைக்கிற பொதுசிவில் சட்டத்தை ஆதரிப்பதாக சொல்கிறீர்கள். இதெல்லாம் கீழறுப்புவேலையில்லையா? தனிமைப்படுத்திக்கொள்வது என்பது இதுதான். இதன் அடுத்த கட்டம் எதிர்முகாமிற்கு சேவகம் செய்வது.

          பல பதிவுகளிலும் உங்களால் வெளிப்படையாக விவாதிக்க முடியாததையும் காண்கிறேன். உங்களது கருத்துக்கள் தடைசெய்யப்படுவதாகவும், பொறுத்துக்கொண்டு பின்னூட்டமிடுவதைப்போல பிலிம் காட்டுகிறீர்கள். இது தேவையல்ல என்பது என் புரிதல். ஏனெனில் நமக்கு விவாதம், பரிசீலனை, சுயபரிசீலனை, மறுக்க முடியாத தரவுகள் போன்ற பல அடையாளங்கள் உள்ளன. இதில் எல்லாம் நம்பிக்கையில்லாத ஒருவர் மட்டுமே முன்முடிவுகளுடன் பிரச்சனைகளை அணுகுவார். மேலும் கம்யுனிசம் என்பது விஞ்ஞான சோசலிசம். ஊக பேரங்களுக்கு அப்பாற்பட்டது. ஒருவர் ஆதாரப்பூர்வமாக வரலாற்று நிலைமைகளுடன் விளக்குகிற பொழுது நாம் ஏற்றுக்கொள்வதை தவிர வேறு உத்தி இல்லை. முகம்மதிசம் என்பதற்கு இதன் அடிப்படையில் எந்த துரும்பையும் தாங்கள் கிள்ளிப்போடவில்லை. இருப்பதெல்லாம் வெறும் வன்மம் மட்டுமே. இனி நீங்கள் பரிசீலியுங்கள்.

          தொழிலாளர்கள் சிறை சென்ற பதிவில் உங்களுக்கும் சிறை செல்லும் ஆர்வம் தொற்றிக்கொண்டதாக பதிவிட்டீர்கள். அப்படியெனில் ஒரு முறை தூக்குமேடைக் குறிப்புகளை வாசியுங்கள். அந்த நூல் முழுவதிலும் தோழர் பூசிக் சிறையில் தான் இருப்பார். ஆனால் கைக்காட்டிய மிரேக் ஒரு சமயத்தில் வெளியில் இருப்பான். இத்தணைக்கும் மிரேக் சாதாரணமான ஆள் அல்லர். அவர் குழுவாக இருந்தபொழுது தோழராக இருந்தார். யுத்தக்களத்தில் நேரடியாக போரிட்டார். ஆனால் தனியாக இருந்த பொழுது தோழராக இருக்கவில்லை. நீங்கள் அப்படித்தான். முகம்மதிசம் என்ற முகமூடிக்குள் தனிமைப்பட்டு போகிறீர்கள். இதனால் உங்களால் இசுலாமிய மதவெறியர்களையும் இந்துத்துவ வெறியர்களையும் அடையாளம் கண்டுகொள்ள முடிவில்லை. ஏனெனில் நீங்களே வெறியராகத்தான் இருக்கிறீர்கள் இப்பொழுதுவரை. இதற்குமேல் உங்களுடன் விவாதிக்க எனக்கு வேறு எதுவும் தோன்றவில்லை.

          • முகமதிசத்தை விமர்சித்தால் இசுலாமியர்கள் மீதான வன்மம் என் கிறீர் மாற்று மதங்களை நீங்கள் விமர்சிப்பது சமுகத்தின் மீது உள்ள பற்றா இல்லை வன்மமா இதற்க்கு பதில் சொல்லும் மதத்தின் பெயரால் பயங்கரவாதம் செய்பவர்கள் அதற்க்கு தங்களிம் மத புத்தகத்தைதான் மேற்க்கோள் காட்டுகிறார்கள் உனிவர்புட்டி இசுலாமிய மத புத்தகங்களில் இருப்பதையேதான் எடுத்து விள்க்குகிறார் இசுலாமிய மதவாதிகளின் முட்டாள்தனங்களை குறை கூறினால் தென்றல் என்ற பொது உடமை வாதிக்கு ஏன் வலிக்கிறது அன்றைக்கு கேட்ட அதே கேள்விதான் இப்பொழுதும் கேட்கிறேன் நீர் வெறும் தென்றலா இல்லை சுவனத் தென்றலா இல்லை பொது உடமை வேசம் போடும் முகமதுவின் பக்தனா

            • தென்றல் என்பவர் பொது உடமைவாதி பெயரில் உள்ள ஒரு இஸ்லாமிய மதவெறியனாகவே நான் நினைக்கிறேன். இவர் பிற மதத்தை பற்றி பேசும் போது அதில் உள்ள சின்ன குறைகளையும் பெரிதுபடுத்தி பேசுவார். அதை இல்லை என்று யாராவது சொன்னால் உடனடியாக மதவெறியன் என்று முத்திரை குத்தி விடுவார். ஆனால் இஸ்லாமியர்கள் அனைவரையும் உத்தமர்கள் போல் பேசுவார். அப்படி இஸ்லாமியர்கள் யாராவது தவறு செய்தாலும் அதற்கும் அமேரிக்காவும், RSSதான் காரணம் என்று கூறுவார். ஒன்று இவர் இஸ்லாமியராக இருக்க வேண்டும் அல்லது ஜிகாதிகள் மேல் உள்ள பயத்தினால் இப்படி எழுதுகிறார்.
              கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். கொஞ்ச நாள் முன்பாக ராமனை பற்றி மிக கேவலமாக ஒரு கட்டுரையை வினவு எழுதியது. இதேபோல் அடிமைப் பெண்கள் குறித்து முகமது நபி கூறியதை பற்றி விமர்சனம் செய்ய தென்றலுக்கு தைரியம் உள்ளதா? ராமனை செருப்பால் அடிக்கும் போராட்டம் நடந்த போதே அமைதியாக இருந்த நாடு இந்தியா. ஆனால் இஸ்லாமை மென்மையாக விமர்சித்த தஸ்லிமா நஸ்லினுக்கு ஏற்பட்ட கதி என்ன? இத்னைக்கும் பங்கலாதேஷ் இஸ்லாமிய மிதவாதிகள் அதிக அளவில் இருக்கும் நாடு. அங்கே இந்த நிலை?
              கொஞ்சம் யோசியுங்கள் மதச்சார்பின்மை என்ற பெயரில் இஸ்லாமிய மதவெறிக்கு குடைபிடித்து நாட்டின் அமைதியை கெடுத்து விடாதீர்கள். ஒருவேளை இந்தியா அழிந்தால் அதனால் மிகவும் பாதிக்கப்பட போவது நிச்சயமாக இஸ்லாமியர்களாக தான் இருக்கும்.இது உங்களுக்கு காமடியாக தெரியலாம். ஆனால் இதுதான் உண்மை

              • முதல் பத்தியில் வைத்திருக்கிற உங்களது ஊகங்கள் எனக்குப் புதிதல்ல. உங்களது ஊகங்கள் உண்மை என்று வைத்துக்கொள்வோம். மதவெறியை போராடி வீழ்த்துவதற்கு உங்கள் தரப்பில் என்ன செய்யப்போகிறீர்கள்? ஆனால் நிதர்சனம் என்னவென்றால் பின்னூட்டம் 7.1 நான் வைத்த கேள்விகளுக்கு ஏற்றோ மறுத்தோ பதிலளிக்க வக்கின்றி இருந்துவிட்டு மதவெறி என்று போங்காட்டம் ஆடுகிறீர்கள். இந்தக் கயமைத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

                இரண்டாவது பத்தியில் சில கேள்விகளை முன்வைத்திருக்கிறீர்கள். அதற்கு சில பார்வைகளை வைப்போம்.

                1. ராமனைப் பற்றி வினவு கேவலமான பதிவு எழுதியதாக சொல்கிறீர்கள். ஒன்று சொந்தப் புத்தி வேண்டும் அல்லது சொல்புத்தி வேண்டும். ராமனைப் பற்றிய அம்பேத்கரின் ஆய்வு வால்மீகி இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில் தாங்கள் எது கேவலம் என்று நினைக்கிறீர்களோ, நீங்களே வால்மீகி இராமாயணத்தைப் படித்து பார்த்து குற்றச்சாட்டை வைக்க வேண்டும். பண்பு நலன்களே இல்லாத ஒரு அரசன் ஆர் எஸ் எஸ்ஸால் கடவுளாக சித்தரிக்கப்படுவது உங்களுக்கு கேவலமாகத் தெரியவில்லை. வினவு எழுதுவது உங்களுக்கு கேவலமாகத் தெரிகிறது என்றால் இங்கு உண்மையில் யார் மதவெறியர்?

                2. அடிமைப் பெண்கள் பற்றி முகம்மது கூறியதை விமர்சனம் செய்ய தைரியம் உள்ளதா என்று ஒரு கேள்வியை முன்வைக்கிறீர்கள். இதற்கு எதற்கு பயப்பட வேண்டும்? பிற்போக்குத்தனம் ஆணாதிக்கம் நம்பிக்கையின் பெயரிலான சுரண்டல்கள் இந்துத்துவத்தைப் போன்று இசுலாத்திற்கும் உண்டு. மேலும் இதே வினவு தளத்தில் தலாக் தொடர்பான பதிவு தோழர் சாகித் அவர்களால் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. அங்கு முகம்மது எவ்விதம் விமர்சிக்கப்பட்டிருக்கிறார் என்பதை வாசித்துவிட்டு வாருங்களேன். தைரியத்தைப் பற்றி பிறகு இன்னும் விரிவாக கதைக்கலாம்.

                3. ராமனை செருப்பால் அடிக்கும் போராட்டம் நடந்த பொழுது இந்திய சமூகம் அமைதியாக இருக்கவில்லை. மாறாக பார்ப்பனிய சமூகம் மெளனித்துப்போனது. இது சகிப்புத்தன்மையல்ல. மாறாக பிழைப்புவாதம். இன்றைக்கு இராமன் தமிழகத்தில் விற்றுத் தீர்க்கமுடியாத பண்டம். இதற்கு பெரியார் கட்டியமைத்த பார்ப்பன எதிர்ப்பு மரபுதான் காரணம். பார்ப்பனிய பீடை தமிழ்நாட்டில் இல்லாததால் தான் மதவெறி அரசியல் காலுன்ற முடியவில்லை.

                4. இப்பொழுது பங்களாதேசுக்கு வருவோம். நீங்கள் சொல்வதைப் போல மதஅடிப்படைவாதம் தஸ்லிமா நஸ்ரின் என்ற அளவிற்கு மட்டும் இல்லை. இசுலாத்தை நம்புகிற பெண்களே பங்களாதேசில் ஆணாதிக்கத்தால் அமில வீச்சிற்கு ஆளாகியிருக்கிறார்களே. இதற்கு என்ன பதில்? அங்குள்ள இசுலாமியத்தலைவன் கலவரத்தைத் தூண்டியதில் இலட்சக்கணக்கான இசுலாமியர்கள் கொல்லப்பட்டார்களே? என்ன காரணம்? அதே பங்களாதேசில் இசுலாமியர்கள் வர்க்கமாக ஒன்றிணைந்து போராடுகிற தொழிலாளர் போராட்டங்கள் நசுக்கப்பட்டதே! என்ன காரணம்? வர்க்கம் என்று வருகிற பொழுது இசுலாமியர்கள் இசுலாமியர்களுக்கு எதிராகவே நின்றார்கள். அப்பொழுது கம்யுனிச எதிர்ப்பு பேசுகிற பதர்கள் எல்லாம் ஓரணியில் திரண்டு கொண்டார்கள். எந்த அரசாவது உங்களுக்கு வாழ்நாளில் மக்கள் மதங்களைத்தாண்டி இதுபோன்ற போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள் என்பதைப் பற்றி சொல்லியதுண்டா? இதைவிடுத்து மதவெறிக்கும்பல்கள் இசுலாமியனை மதம் சார்ந்து மட்டுமே பார்க்கப் பழக்கப்படுத்தியிருக்கிறதென்றால் உண்மையில் நரித்தனம் எங்கிருக்கிறது?

                5. இந்திய நிலைமைக்கு வாருங்கள். இசுலாமியர்களை விட்டுவிட்டு இந்துக்களை எடுத்துக்கொள்வோம். கயர்லாஞ்சியில் சுரேகா மற்றும் பிரியங்காவை தலித்துகள் என்பதற்காக பாலியல் வண்புணர்வு செய்துகொன்றார்களே? இந்துக்களின் சிவில் மற்றும் கிரிமனல் சட்டங்களைக் கூடவிட்டுவிடுங்கள். ஆன்மா எங்கே போயிற்று? எத்துனை இந்துக்கள் எதிர்வினையாற்றினார்கள்? இந்துப் பெண்களை இந்துக்களிடம் இருந்து காப்பாற்ற இந்துக்கள் என்ன செய்தார்கள்?

                6. சரி. இதே விசயத்திலும் இந்திய இசுலாமியப் பெண்களையும் கணக்கில் எடுப்போம். கோவையிலும் மேலப்பாளையத்திலும் இசுலாமிய பெண்கள் இசுலாமிய மதஅடிப்படைவாதிகளால் கொல்லப்பட்டார்களே? இசுலாமியர்களும் கண்டிக்கவில்லை. இந்துக்களும் கண்டிக்கவில்லை. ஆர் எஸ் எஸ் கும்பலுக்கு இதுபோன்ற உள் அரசியலும் தேவையற்ற ஒன்று. பிறகு எங்கிருக்கிறது மதச்சார்பின்மை? சகமனிதனாக ஒரு கொடுமையைக் கண்டிக்க தன் மதத்திற்குள்ளேயே வராத இந்துவெறியர்கள் இசுலாமிய மதத்தவர்களுக்கான ஜனநாயக உரிமையை பெற்றெடுக்க எவ்விதம் வருவார்கள்?

                7. ஆர் எஸ் எஸ் காலிகள் எப்பொழுதும் அரைபக்க உண்மையோடு தான் நிற்பார்கள். அது தஸ்லிமா மதபிற்போக்குவாதிகளால் தாக்கப்பட்டார் என்ற அளவோடு நிறுத்திக்கொள்வார்கள். ஆனால் இசுலாமியர் இசுலாமிய அடிப்படைவாதத்தால் பாதிக்கப்படுவதை கேள்வி எழுப்பமாட்டார்கள். ஏனெனில் அவர்களின் வேலைத்திட்டம் இசுலாமியர்களின் வாழ்வு பற்றியதல்ல. அவர்களின் வேலைத்திட்டம் இசுலாமியர்களை இந்துக்களின் எதிரிகளாக காட்டுவதற்கு தேவையான நிகழ்ச்சிநிரல் மட்டுமே. இந்தப்பதிவு சுட்டிக்காட்டுகிற பொது சிவில் சட்டமும் இந்த வகைப்பட்டதே.

                8. இந்தியா அமிழ்ந்தால் இசுலாமியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்களே. ஒரு இந்துவிற்கு பார்ப்பனியத்தை எதிர்ப்பது என்பது சமத்துவத்தை தேடுவதற்கான முதல் படி. ஆனால் இசுலாமியனுக்கு சமத்துவத்தை தேட குறைந்தபட்சம் இரட்டைத்தாக்குதலைத் தொடுக்க வேண்டும். அது சொந்த மதத்தின் அடிப்படைவாதத்தை எதிர்ப்பதோடு நின்றுவிடவில்லை. மாறாக அவர்கள் பார்ப்பனியத்தோடும் எதிர்த்துப்போராட வேண்டும். ஆக இந்தியா அமிழ்ந்துதான் போயிருக்கிறது. இங்கு இந்துவிற்கே மதசுதந்திரம் கிடையாது. இதில் இசுலாமியர்களுக்கு எப்படி இருக்கும்? ஆக ஒரு இந்துவை இசுலாமியனுக்கு எதிராக நிறுத்துகிற நிகழ்ச்சி நிரலுக்குப்பதிலாக, ஒர் இசுலாமியனையும் இந்துவையும் வர்க்க அரசியலில் மதபிற்போக்குத்தனத்திற்கு எதிராக முதலாளித்துவத்திற்கு எதிராக முன் நிறுத்துவதுதான் பொதுவுடமைவாதிகளின் முதன்மையான நோக்கம் என்பதைப் புரிந்து கொள்கிற பொழுது உங்களைப் போன்றவர்கள், இந்துத்துவ விபூதிக்கு தும்முகிற செம்மறிகள் அன்றி வேறல்ல என்பதைக் கண்டுகொள்ள முடியும்.

                • //இசுலாமியனுக்கு சமத்துவத்தை தேட குறைந்தபட்சம் இரட்டைத்தாக்குதலைத் தொடுக்க வேண்டும். அது சொந்த மதத்தின் அடிப்படைவாதத்தை எதிர்ப்பதோடு நின்றுவிடவில்லை. மாறாக அவர்கள் பார்ப்பனியத்தோடும் எதிர்த்துப்போராட வேண்டும்.// தோழர் தென்றல் இங்குதான் நீர் ஏமாற்றுகிறீர் பார்பானீய சாதி படிநிலைகளில் அதிகம் பாதிப்படைவது இந்துக்கள்தான் ஆனால் அவர்கள் அதை அறிய வில்லை பெரும்பாலும் இசுலாமியர்கள் பார்ப்பனிய்த்துடன் இணைந்தே இருந்து வந்து உள்ளனர் என்பதே எனது பார்வை எனென்றால் தாழ்த்தப்பட்ட இந்துவிற்கு இசுலாமியனும் ஒரு ஆதிக்க சாதியே இதை இல்லை என்று மறுக்க முடியுமா என்னமோ இசுலாமியர்கள் மட்டும் பாதிக்கப்படுவதாக பீலா விடாதிங்க பாஸ்….

                  • ஏமாளி யோசேப்பு,

                    ‘முசுலீம்கள் குறித்து அம்பேத்கர்’ எனும் நூல் ஆனந்த் டெல்டும்டேவால் ஆர் எஸ் எஸ்ஸ்ன் நச்சுப்பிரச்சாரத்திற்கு எதிராக எழுதப்பட்டிருக்கிறது. கீழைக்காற்று வெளியீட்டகத்தில் கிடைக்கிறது. அம்பேத்கர் பார்ப்பனியத்தின் கோவணத்தை உருவியபொழுது முசுலீம் சமூகத்தைப் பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார். இதுவரை இசுலாமியர்கள் மீது நீர் வைத்திருக்கிற கருத்துக்களை அம்பேத்கரின் எழுத்துக்களோடு உரசிப்பாரும். ஏனெனில் இசுலாமிய சமூகத்தையும் கடுமையாக விமர்சித்திருக்கிறோர். அதோடு இசுலாமிய சமூகத்தின் மீதான பார்ப்பனிய தாக்கம் விரிவாக கடைசி இரண்டு பகுதிகளிலும் விளக்கப்பட்டிருக்கிறது. படித்துப்பார்த்து என்னைப்போன்றவர்களிடம் ஏமாறாமல் தற்காத்துக்கொள்ளவும்.

                    • //என்னைப்போன்றவர்களிடம் ஏமாறாமல் தற்காத்துக்கொள்ளவும்.//தோழர் தென்றல் எந்த புத்தகத்தயும் படிச்சு படிப்பறிவுல ஏத்துகிறத விட பட்டறிவுல தெரிஞ்சததான் சொன்னே என்ன எந்த வகையில் ஏமாற்ற போறிங்க இல்ல நான் யாரிடம் ஏமாந்து விட்டேன் என்று நினைக்கிறீர்கள் எனக்கு கொண்ஜம் விளக்குனா பரவாயில்லை ……..

                  • யோசெப்,

                    பார்பனிய படிநிலைகளில் அதிகம் பாதிக்கப்படுவது தாழ்த்தப்பட்ட இந்துக்கள் என்றுக் கூறுவது சரிதான். அதே காரணத்தால் தான் அந்த தாழ்த்தப்பட்ட மக்களில் ஒருப் பகுதி இசுலாமிற்கு மாறினார்கள் மற்றும் கிருத்துவத்திற்க்கும் மாறினார்கள். அது மட்டுமல்லாமல், அம்பேத்கர் மற்றும் அவருடன் தாழ்த்தப்பட்ட மக்கள் புத்த மதத்திற்கு மாறியதும் பார்பனியத்தால் தான்.

                    வரலாறு இப்படி இருக்கையில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எப்படி இசுலாமியரும் ஆதிக்க சாதியாக இருப்பார்கள். இதை வேறு மறுக்க முடியாது என்று சவடால் வேறு அடிக்கிறீர்கள். ஹிந்து மத வெறியால் இசுலாமியர்கள் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள் என்று எங்கே கூறுகிறார்கள்.

                    • நடுனிலமை வாதி சிகப்பு அவர்களே ஒரு தாழ்த்தபட்ட இந்துவை ஆர் எஸ் எஸ் காரன் கீழ்சாதிக்காரனாகத்தான் பார்ப்பான் ஒரு இசுலாமியனும் தாழ்த்தப்பட்ட இந்துவை கீழ்சாதிக்காரனாகத்தான் பார்ப்பான் ஒரு ஆர் எஸ் எஸ் ஒரு முசிலீமை முசுலீமாகத்தான் பார்ப்பான் அவனை கீழ்சாதிக்காரனாக ஒரு போதும் பார்க்க மாட்டான் நீங்க தாழ்த்தப்பட்டவனாக இருந்தால் மட்டுமே இதை உணர்ந்து இருக்க முடியும் நான் சொன்னது உண்மை சவுடால் அல்ல…….

                • //ராமனைப் பற்றிய அம்பேத்கரின் ஆய்வு வால்மீகி இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டது//
                  அதே அம்பேத்கார் இஸ்லாத்தை‌யும் முகமதுவையும் கிழிகிழி என்று கிழித்து தொங்கவிட்டிருக்கிறார். அதைப் பற்றி என்றாவது ஒரு வரியாவவது எழுத வினவுக்கும் தென்றலுக்கும் துப்பில்லை.

                  //பிற்போக்குத்தனம் ஆணாதிக்கம் நம்பிக்கையின் பெயரிலான சுரண்டல்கள் இந்துத்துவத்தைப் போன்று இசுலாத்திற்கும் உண்டு. மேலும் இதே வினவு தளத்தில் தலாக் தொடர்பான பதிவு தோழர் சாகித் அவர்களால் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. அங்கு முகம்மது எவ்விதம் விமர்சிக்கப்பட்டிருக்கிறார் என்பதை வாசித்துவிட்டு வாருங்களேன்.//
                  ராமனை அவன் இவன் என்று ஒருமையில் எழுதியுள்ளீரே இதைப் போல் நபியை எழுதமுடியுமா? எழுதியிருந்தால் ஈராக்கில் கிருஸ்தவர்களுக்கு ஏற்பட்ட கதிதான் வினவுக்கும் ஏற்பட்டிருக்கும்.
                  வினவு இஸ்லாமை விமர்சிப்பதெல்லாம், தொட்டால் பூ மலரும் பாடலில் MGR சரோஜாதேவியின் கண்ணத்தை செல்லமாக தட்டுவாரே அந்த மாதிரி தட்டிவிட்டு, அதோ பார் அடித்துவிட்டேன் அடித்துவிட்டேன் என்று கூச்சல் போடுவது தான்.இதை வீரம் என்று வேறு பீற்றிக்கொள்வது.
                  //இங்கு இந்துவிற்கே மதசுதந்திரம் கிடையாது. இதில் இசுலாமியர்களுக்கு எப்படி இருக்கும்? //
                  ஆமாம் கம்யூனிஸ்ட்களிடம் தான் மத சுகந்திரத்தை கற்று கொள்ள வேண்டும். சீனாவில் உய்குர் பகுதியில் முஸ்லீம்கள் பொது இடத்தில் பர்தா அணிவதற்கும் நோம்பு கடைபிடிப்பதற்குமே தடை விதிக்கப்பட்டுள்ளது.

                  • //பிற்போக்குத்தனம் ஆணாதிக்கம் நம்பிக்கையின் பெயரிலான சுரண்டல்கள் இந்துத்துவத்தைப் போன்று இசுலாத்திற்கும் உண்டு.//

                    கிருத்துவத்திற்கும் கூட உண்டு! ஆனால், பொது சிவில் சட்டம் என்று வரும்போது எங்கள் மத சட்டங்களே பொது சட்டமாக வரவேண்டும் என ஒவ்வொரு சிறுபான்மை குழுவும் வலியுறுத்தும்! இந்து மத சட்டங்கள் கூட ஒவ்வோரு மானிலத்திலும் ஒவ்வொரு விதமாகத்தான் இருக்கிறது!

                    கலைஞர் கருணானிதி 1972ல் சட்டமியற்றும் வரை, பெண்களுக்கு தந்தையின் சொத்தில் பங்கில்லை! கேரளாவில் மருமக்கள் தாயம் என்ற்முறை தோன்று தொட்டு வழங்கப்பட்டு வந்ததால், ஆண்களுக்கு பெண்வழி வரும் சொத்தில் பங்கில்லை! ஏன் திருவிதாங்கூர் அரசுரிமையும் அப்படியே மருமனுக்கு (அம்மான் மகன்)சென்றது !

                    இவ்வாறு இல்லாத இந்துமதத்தில், ஊருக்கு ஒருநீதி வழங்கபட்டதால், பிராமண மத மனுதர்மநீதியை புறந்தள்ளி, அப்பகுதி மக்களின் பழக்கம் என்பதாக ஆயிற்று!

                    பெரியாரின் சுயமரியாதை (சப்தபதி இல்லாத) திருமணம் செல்லாது என்ற கீழ்கோர்ட் தீர்ப்பே, அப்பீலில், திராவிடத்தில் இருந்தவர்கள் அனைவரும் சூத்திரர்களே என்றும், சூத்திரர்களுக்கு ஆரிய முறை திருமண முறை இல்லை எனவே, சீர்திருத்த திருமணம் செல்லும் என்றே தீர்ப்பானது! பின்னர் கலைஞரே அதை சட்டவடிவில் அங்கீகரித்தார்! தற்போது ஒரு உயர்னீதிமன்ற தீர்ப்பால் சடங்குகள் இல்லாமலும், திருமண்மே பதிவு செய்யாமலும் செர்ந்து வாழ்ந்திருந்தாலே அது சட்டப்படியான திருமணமே என்றாகிவிட்டது!

                    இந்துக்களுக்கு ஒரு வேண்டுகோள்! முதலில்நம் வீட்டை சுத்தம் செய்வோம்!

                    ஷாபானு விஷயத்தில் முஸ்லிம் மக்களே பலர் கொதித்தெழுந்தனர்! அவர்கள் மதநம்பிக்கையில் அரசு தலையீடு கூடாது என்பதில் தான் ஒற்றுமை! மற்றபடி சீர்திருத்தக்கருத்துக்கள் அங்கும் தோன்றியுள்ளன!

                    கிருத்துவத்தை பொறுத்தவரை, அவர்கள் உலகமுழுவதும் பரவியுள்ளதால், அந்தந்த பகுதி அரசு சட்டத்தையே ஏற்றுள்ளனர்! பெரும்பகுதியில் அரசாள்பவராக இருந்தது அவர்களல்லவா?

                    அம்பேத்கர், பெரியார் முதலியவர்களின் கருத்துக்களை மதவாதிகள் நேரடியாக ஏற்றுக்கொள்ளாவிடினும், மாற்றங்கள் காலத்தின் கட்டாயத்தால் நடந்தே தீரும்; மனுவாதிகளின் கட்டாயத்தால் அல்ல!

                    பெண்களை சூத்திரருக்கும் கீழான ஈன பிறவியாக கருதிய ஆரிய மத்ததினர், திராவிட பழங்குடியினரிடமிருந்தே இல்வாழ்வு முறையை கற்றனர்! அதற்கான வேத மந்திரங்களை, தமிழில் படிக்க; திராவி கழக வெளியீடான, திரு.வ ஊ சி முன்னுரையுடன் பிரசுரிக்கப்பட்ட திரு. கைவல்யம் எழுதிய ‘ஞானசூரியன்’ படிக்கவும். வலையில் தாத்தாச்சாரியார் வலையத்தையும் நாடலாம்!

                  • //ராமனை அவன் இவன் என்று ஒருமையில் எழுதியுள்ளீரே இதைப் போல் நபியை எழுதமுடியுமா? .//

                    ராமனோ, கிருஷ்னனோ மனிதாபிமானமுள்ள மனிதனாக, அசோகரை போல சித்தரித்திருந்தால் ராமர், கிருஷ்ணர் என்று எழுதலாம்! அவர்கள் ஆரியதாசர்களாக, அயொக்கிய சிகாமணிகளாக, லீலைகள் என்ற பெயரில் பெண்களிடம் அடாவடி செய்த மகானுபாவர்களாய் சித்தரித்து விட்டு, அவதார புருஷர்கள் ஆகவே மரியாதைகொடு என்றால் எப்படி?

                    யெசுவோ,நபிகளோ அப்படி யாரைப்பற்றியும் இழிவான கருத்தை கூறியிருக்கிராரா? இழிவான நடத்தை கொண்டிருந்தார்களா?

                    மதவெறிபிடித்து அலையாதீர் சகோதரரே!

                    • அஜாதசத்ரு,

                      நீங்கள் முகமதைப் பற்றியும் சிறிது தெரிந்து கொள்வது நல்லது. முகமதின் வாழ்க்கைவரலாற்றை கொஞ்சம் படியுங்கள்.

                    • //கிருத்துவத்தை பொறுத்தவரை, அவர்கள் உலகமுழுவதும் பரவியுள்ளதால், அந்தந்த பகுதி அரசு சட்டத்தையே ஏற்றுள்ளனர்! பெரும்பகுதியில் அரசாள்பவராக இருந்தது அவர்களல்லவா?//
                      என்ன சொல்ல வரீங்க இசுலாம் உலகம் முழுதும் பரவ இல்லையா இந்தியாவில் கிறிஸ்தவ வெள்ளைக்காரன் அர்சான்டான் என்ன எல்லாரையும் கிறித்ஸ்தவதுக்கு மாற்றி அவர்களை எல்லாம் மூடர்களாக மாற்றி விட்டார்கள் என்று சொல்லுகிறீர்களா அதனால்தான் அவர்கள் பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கிறார்கள் என்று சொல்லுகிறீர்களா ஒன்னும் புரியலயே
                      //யெசுவோ,நபிகளோ அப்படி யாரைப்பற்றியும் இழிவான கருத்தை கூறியிருக்கிராரா? இழிவான நடத்தை கொண்டிருந்தார்களா?//

                      யேசு கதய விடுங்க அவர் கற்ப்பனை காதாபாத்திரம் அனால் மிகவும் நல்லவர் என்று சித்தரிக்கப்பட்டு இருக்கிறது அவ்வளவே
                      அனால் தனது 52 வயதில் 6 வயது சிறுமியை கல்யானம் செய்து கொண்டு 9 வயதில் அந்த பெண்ணை முதலிரவுநடத்துய உலகம் போற்றும் உத்தமரை பற்றி தெரியுமா திரியவில்லை என்றால் இசுலாமை படியுங்க பாஸ்……

                    • //ஆரியதாசர்களாக, அயொக்கிய சிகாமணிகளாக, லீலைகள் என்ற பெயரில் பெண்களிடம் அடாவடி செய்த மகானுபாவர்களாய் சித்தரித்து விட்டு, அவதார புருஷர்கள் ஆகவே மரியாதைகொடு என்றால் எப்படி?//

                      இதற்கு பதிலாக தனிமனித ஒழுக்கம் குறித்த முகமது நபியின் அருமை, பெருமைகளை விளக்கி நான் போட்ட பதிவை வினவு நீக்கி விட்டது. அது ஏன் என்று விளக்க வேண்டும்? இஸ்லாமிய மதவெறியர்களுக்கும், வினவும் கை கோர்த்து செயல்படுகின்றனரோ என்று சந்தேகப்படவைக்கிறது உங்களின் இந்த நடவடிக்கை.

          • தென்றல் அவர்களுக்கு,

            // பீடி சுற்றும் தொழிலாளர்கள் பற்றிய பதிவு//

            என்னுடைய பின்னூட்டங்கள் சந்தேகத்துடன்தான் பார்க்கப் படுகின்றன என்பதை நான் உணர்ந்தே உள்ளேன். ஆனால் இந்த அளவுக்கா என்பதை அறிய மலைப்பாக இருக்கிறது. அதுவும் இது தென்றலிடம் இருந்து எனும் போது மலைப்பு இரட்டிப்பாகிறது.
            அந்த பதிவில் எனது பின்னூட்டம் இதுதான்.
            ///
            பீடி இலைகளுக்காக மலை மற்றும் காடு வாழ் மக்கள் சுரண்டப்படுவது இதனினும் கொடிய கதை.
            ///
            இதன் நோக்கம் இத்தொழிலில் உள்ள இன்னுமொரு பரிமானத்தைப் பற்றி சுட்டிக்காட்டத்தான். பீடி சுற்றும் தொழிலாளர்களின் கையறுநிலையை சிறுமைப்படுத்த அல்ல.

            தொடரும்…

          • தென்றல் அவர்களுக்கு,

            // கம்யுனிச மூகமூடி தேவைப்படுகிறது!//

            கம்யுனிச மூகமூடி எந்தளவுக்குப் பயன்பட்டிருக்கிறது என்பதை பீடி பதிவுப்பின்னூட்டம் பற்றிய உங்கள் கணிப்பு தெளிவாக்குகிறது. முகமூடியைக் கழட்டி விடலாம் தான். ஆனால் இல்லாத முகமூடியை எப்படி கழட்டுவது. எனவே கம்யூனிசத்தைப்பற்றி பின்னூட்டங்களை தவிர்த்து விடவேண்டியதுதான். நீங்கள் இருக்கிறீர்கள். பார்த்துக் கொள்வீர்கள். எனக்கும் சிறிது நேரம் மிச்சமாகும்.

            // பிஜேவிற்கு சாமரம் வீசுகிறீர்கள்//

            அப்படியென்றால் நீங்கள் பிஜேபிக்கு சாமரம் வீசுவதாக அல்லவா பொருள் வருகிறது. விளக்குங்கள்.

            தொடரும்…

          • தென்றல் அவர்களுக்கு,

            // பிஜேபி முன்வைக்கிற பொதுசிவில் சட்டத்தை ஆதரிப்பதாக சொல்கிறீர்கள். இதெல்லாம் கீழறுப்புவேலையில்லையா?//

            நான் பிஜேபி முன்வைக்கிற சட்டத்தை ஆதரிப்பதாக சொல்லவில்லை. ஜனநாயக சக்திகள் முன்மொழியும் பொது சட்டத்தை தான் ஆதரிக்கிறேன். நான் ஆதரித்தவுடன் சட்டம் நிறைவேறிவிடப்போவதில்லை. அதற்கு பல காலம் ஆகலாம். இப்போதக்கு திறந்த மனதுடன் விவாதங்கள் நடக்கவே நான் விரும்புகிறேன். அதுவும் வினவு இந்த கட்டுரையை வெளியிட்டதால் தான் என் நிலையை தெளிவு படுத்தினேன். இதைக்கூட செய்யமுடியாமல் பின்னூட்டப்பெட்டி இருந்து என்ன பயன்.

            // எண்ணிக்கை பெருகிவிட்டது என்று நச்சுப்பிரச்சாரம்//

            நான் கண்ணால் காண்பதைத்தான் பேசுகிறேன். கிருத்தவர்களும் இருக்கிறார்கள். அவர்களைப்பற்றி இது போன்று யாரேனும் கூறிவிடமுடியுமா. (In Europe there are some Christians who produce more, just to face the Muslim birthrate).

            தொடரும்…

          • தென்றல் அவர்களுக்கு,

            //பிலிம் காட்டுகிறீர்கள்//

            வினவின் பதிவுகளில் இருக்கும் எனக்குப் பட்ட சில குறைபாடுகளை தொடர்ந்து தெரிவிக்கிறேன். சில வெளியிடப்படுவதில்லை என்று கூறினேன். இதில் என்ன பிலிம்.

            // முகம்மதிசம் என்பதற்கு இதன் அடிப்படையில் எந்த துரும்பையும் தாங்கள் கிள்ளிப்போடவில்லை.//

            ஒரு தூலத்தையே அறுத்துப் போட்டிருக்கிறேன். உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. பரவாயில்லை.

            // முகம்மதிசம் என்ற முகமூடிக்குள் தனிமைப்பட்டு போகிறீர்கள்.//

            உன்மைதான். எனக்கும் சங்கடமாகத்தான் இருக்கிறது. மாற்றுவழி கேட்டால் சபீனா இல்லை என்றீர்கள்.

            // இதற்குமேல் உங்களுடன் விவாதிக்க எனக்கு வேறு எதுவும் தோன்றவில்லை.//

            எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவாவது விடுங்கள்.

            முற்றும்.

          • தென்றல் அவர்களுக்கு,

            PS:
            //பல பதிவுகளிலும் உங்களால் வெளிப்படையாக விவாதிக்க முடியாததையும் காண்கிறேன்.//

            இது தெளிவாக இல்லை. முடிந்தால் ஒரு எ.கா. வுடன் விளக்கவும்.

            எனக்கு கிடைக்கும் நேரம், முன்னுரிமை ஆகியவைகளே எனது பின்னூட்டங்களை தீர்மானிக்கின்றன. பல வேளைகளில் நேரமின்மையால் என்னிடம் பதிலிருந்தும் பதியாமல் விட்டுவிடும் நிலை.

          • தென்றல் அவர்களுக்கு,

            PS 2: //முதுகில் குத்தவில்லை//

            ஆரம்பத்தில் ஓராண்டுக்கும் மேலாக பின்னூட்டமிடாமலேயே வினவைப் படித்து வந்தேன். இஸ்லாமியர்களைப் பற்றிய வினவின் பதிவுகளில் உள்ள எனக்குத் தெரிந்த சில குறைகளை தெரிவிக்கவும் இப்ரஹிம் போன்றோரின் தக்கியாவை எதிர் கொள்ளவும் பின்னூட்டமிட ஆரம்பித்தேன். எனக்கு எந்த முகமூடியும் இல்லாமல் தான் இதைத் தொடக்கினேன். பொதுவுடமைப் பற்று உள்ளதால் தான் வினவுக்கு தொடர்ந்து வருகிறேன். வினவில் மட்டும் பின்னூட்டமிடுகிறேன். (I have listed all the posts in which I commented in Vinavu in my new blog CommentsbyUniverbuddy) இடையில் சமூகநீதி, பெண்ணுரிமை கருத்துக்களையும் பகிர ஆரம்பித்தேன். இயற்கையாக பொதுவுடமைக் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பங்களும் வந்தது. நேரமும் இருந்தது. பகிர்ந்தேன். இதனால் வினவுத் தோழர்களுக்கு கூடுதலான நெருக்கடி ஏற்படலாம் என்பதை உணர்ந்துள்ளேன். ஆனால் சமாளித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் தொடர்ந்தேன். பார்ப்பனியத்தை விட முகமதியம் பன்மடங்கு அபாயகரமானதென்று உங்களிடன் வெளிப்படையாக கூறியிருக்கிறேன். அதை சிறிது விளக்கியும் இருக்கிறேன். நான் யாரையும் முதுகில் குத்தவில்லை. என்றும் அதைப்போன்று செய்யமாட்டேன். நெஞ்சிலும் குத்தமாட்டேன். உன்மை மற்றும் நேர்மை தான் எனது தற்காப்பு ஆயுதங்கள்.

            முகமதியத்தினால் பார்ப்பனியம் மேலும் வளர்வதையும் காண்கிறேன். முகமதியத்தைப் பற்றி சிறிதேனும் கறாராகப் பேசாமல் பார்ப்பனியத்தைப் பற்றி மட்டும் பேசுவது பார்ப்பனியத்துக்கு இறைத்த நீராகத்தான் முடியும் என்பது என் ‘துணிபு’. நீங்கள் மற்றும் வினவின் மக்கள் பரிசீலியுங்கள்.

            • யுனிவர்பட்டி பற்றி எனது புரிதலையும் பதிவு செய்கிறேன்.இவர் இணையத்தில் முசுலிம் எதிர்ப்பு பரப்புரை செய்ய நியமிக்கப்பட்டுள்ள சியோனிசத்தின் எடுபிடி ஆவார்.அதனால்தான் கொலை பாதக இசுரேலை வரிந்து கட்டிக் கொண்டு ஆதரிப்பார்.வினவு ஒரு இடதுசாரி தளம் என்பதால் தன்னை ஒரு ”கம்யுனிஸ்ட்” என்று பொய் சொல்லிக்கொண்டு தன் ”வேலையை” செய்து கொண்டிருக்கிறார். இவர் ஒரு பொதுவுடைமையாளர் அல்ல என்பதற்கு ஒரு சில சான்றுகள்.

              உலகிலேயே இசுரேலை ஆதரிக்கும் ஒரே ”கம்யுனிஸ்ட்” இவர்தான்.

              https://www.vinavu.com/2013/09/03/us-eyes-syria/
              இசுலாமிய மதவெறியருடன் சிரியாவை ஆக்கிரமிக்கும் அமெரிக்கா
              பதிவில் இசுரேலை விழுந்து விழுந்து ஆதரிப்பதை காணலாம்.இந்த நூற்றாண்டின் மிக பெரிய நகைச்சுவையாக உலக நாடுகள் அனைத்தும் இசுரேலை ஆதரிப்பார்கள் என்று வேறு பினாத்துகிறார்.அண்மைய காசா ஆக்கிரமிப்பு போர்,ரச்சேல் கொலை என இசுரேலின் அத்தனை அடாவடிகளையும் ஆதரிக்கிறார் இந்த ”கம்யுனிஸ்ட்” .

              உலகிலேயேஅசைவம் உண்ண கூடாது என சொல்லும் ஒரே ”கம்யுனிஸ்ட்” இவர்தான்.அதற்காக எந்த உயிர்களையும் கொல்ல கூடாது என பினாத்தும் ஒரே ”கம்யுனிஸ்ட்” டும் இவர்தான்.ஆயுதம் தாங்கிய எழுச்சியும் எதிர்ப் புரட்சி கும்பலுடனான ஆயுத மோதலும் இன்றி புரட்சி சாத்தியமில்லை என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் இந்த டுபாக்கூர் ”கம்யுனிஸ்ட்” கொல்லாமை பேசி புத்தர் வேடம் போட்டு அலைகிறார் இந்த கருத்துக் கபோதி.அந்த வகையில் மாடுகளுக்கு காயடிக்க கூடாது ,மூக்கணாங்கயிறு போடக்கூடாது என்றெல்லாம் அறிவுக்கு பொருத்தமின்றி பேசி திரிகிறார்.

              வினவு சாதீய எதிர்ப்பு,பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பு பேசுவதால் நம்ம டுபாக்கூர் ”கம்யுனிஸ்ட்” டும் பார்ப்பனிய எதிர்ப்பு பேசப்போய் வாங்குன காசுக்கு மேலேயே கூவிருச்சு,கொய்யால அதுக்காக அம்பி கிட்ட வாங்கி கட்டிக்கிச்சு பாருங்க.மானம்,ரோசம் இருக்குற மனுசனா இருந்தா நாக்க புடிங்கிகிட்டு செத்துருப்பான்.அவர் எழுதியதை திரும்ப எழுதுவதற்கே கை கூசுது.

              பார்ப்பன பெண்கள் சிவப்பாகவும் அழகாகவும் இருப்பதால் அவர்களை கூட்டிக் கொடுத்து பார்ப்பனர்கள் சொத்து சேர்த்ததாக நாக்கில் நரம்பின்றி பேசினார்.பதிலுக்கு அம்பி எந்த மைனர் எழுதி கொடுத்த சொத்தை நீ குடும்பத்தோடு அனுபவித்து வருகிறாயோ என்று கேட்டு விட்டு நீ பெண்ணாக பிறந்திருந்தால் உனது குடும்ப வழக்கப்படி உன்னை வைத்து உன் குடும்பம் காசு பாத்துருக்கும் என்று எழுதினார்.அதுக்கு இந்த மானங்கெட்ட ஜென்மம் ஒரு பதில் சொல்லுச்சு பாருங்க.இப்பவும் ஒன்னும் நஷ்டம் இல்லை.என்னை ஆண் பாலியல் தொழிலாளியாக கருதி கொள்ளலாம் என்றார்.எவ்வளவு கேவலமான சிந்தனை.இப்படி தரம் தாழ்ந்து பேசுபவன் கம்யூனிஸ்டாக இருக்க முடியுமா.இதுதான் இந்த டுபாக்கூர் கம்யூனிஸ்டு பெண்ணுரிமை காக்கும் லட்சணம்.

              இவரது முதன்மையான நோக்கமே முசுலிம்கள் மீது நஞ்சு கக்குவதுதான்,அதற்காக போட்டுக்கொண்ட வேடம்தான் பொதுவுடைமையாளர் பட்டம்.

            • யுனிவர்பட்டி பொதுவுடமைவாதியாக நடிக்கிறார்.அநேகமாக இவர் இணையத்தில் முசுலிம் எதிர்ப்பு பரப்புரை செய்ய நியமிக்கப்பட்டுள்ள சியோனிச முகவராக இருக்க வேண்டும்..அதனால்தான் கொலை பாதக இசுரேலை வரிந்து கட்டிக் கொண்டு ஆதரிப்பார்.வினவு ஒரு இடதுசாரி தளம் என்பதால் தன்னை ஒரு ”கம்யுனிஸ்ட்” என்று பொய் சொல்லிக்கொண்டு தன் ”வேலையை” செய்து கொண்டிருக்கிறார். இவர் ஒரு பொதுவுடைமையாளர் அல்ல என்பதற்கு ஒரு சில சான்றுகள்.

              உலகிலேயே இசுரேலை ஆதரிக்கும் ஒரே ”கம்யுனிஸ்ட்” இவர்தான்.

              https://www.vinavu.com/2013/09/03/us-eyes-syria/
              இசுலாமிய மதவெறியருடன் சிரியாவை ஆக்கிரமிக்கும் அமெரிக்கா
              பதிவில் இவர் இசுரேலை விழுந்து விழுந்து ஆதரிப்பதை காணலாம்.இந்த நூற்றாண்டின் மிக பெரிய நகைச்சுவையாக உலக நாடுகள் அனைத்தும் இசுரேலை ஆதரிப்பார்கள் என்று வேறு கதைக்கிறார்.அண்மைய காசா ஆக்கிரமிப்பு போர்,ரச்சேல் கொலை என இசுரேலின் அத்தனை அடாவடிகளையும் ஆதரிக்கிறார் இந்த ”கம்யுனிஸ்ட்” .

              உலகிலேயேஅசைவம் உண்ண கூடாது என சொல்லும் ஒரே ”கம்யுனிஸ்ட்” இவராகத்தான் இருக்கும்..அதற்காக எந்த உயிர்களையும் கொல்ல கூடாது என புத்தர் அவதாரம் எடுக்கிறார்..ஆயுதம் தாங்கிய எழுச்சியும் எதிர்ப் புரட்சி கும்பலுடனான ஆயுத மோதலும் இன்றி புரட்சி சாத்தியமில்லை என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் இந்த ”கம்யுனிஸ்ட்” கொல்லாமை பேசி வருகிறார் .[ஆனால் இசுரேல் முசுலிம்களான பாலசுதீன மக்களை கொன்று குவித்தால் அது சரிதான் என விதண்டாவாதம் செய்கிறார்.] அந்த வகையில் மாடுகளுக்கு காயடிக்க கூடாது ,மூக்கணாங்கயிறு போடக்கூடாது என்றெல்லாம் அறிவுக்கு பொருத்தமின்றி பேசி வருகிறார்.

              வினவு சாதீய எதிர்ப்பு,பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பு பேசுவதால் இந்த ”கம்யுனிஸ்ட்” டும் பார்ப்பனிய எதிர்ப்பு பேசப்போய் வாங்குன காசுக்கு மேலேயே கூவிட்டாரு, அதுக்காக அம்பி கிட்ட செமத்தியா வாங்கி கட்டிக்கிட்டாரு..அவர் எழுதியதை திரும்ப எழுதுவதற்கே கை கூசுது.

              பார்ப்பன பெண்கள் சிவப்பாக இருப்பதால் அவர்களை கூட்டிக் கொடுத்து பார்ப்பனர்கள் சொத்து சேர்த்ததாக நாக்கில் நரம்பின்றி பேசினார்.பதிலுக்கு அம்பி எந்த மைனர் எழுதி கொடுத்த சொத்தை நீ குடும்பத்தோடு அனுபவித்து வருகிறாயோ என்று கேட்டு விட்டு நீ பெண்ணாக பிறந்திருந்தால் உனது குடும்ப வழக்கப்படி உன்னை வைத்து உன் குடும்பம் காசு பாத்துருக்கும் என்று எழுதினார்.அதுக்கு இவர் சொன்ன பதில் .இப்பவும் ஒன்னும் நஷ்டம் இல்லை.என்னை ஆண் பாலியல் தொழிலாளியாக கருதி கொள்ளலாம் என்றார்.எவ்வளவு கேவலமான சிந்தனை.இப்படி தரம் தாழ்ந்து பேசுபவர் கம்யூனிஸ்டாக இருக்க முடியுமா. பெண்ணுரிமைக்காக போராட வேண்டிய ஒரு கம்யூனிஸ்டு இப்படி பெண்களை இழிவு படுத்தும் வகையில் பேசுவாரா.

              இவரது முதன்மையான நோக்கமே முசுலிம்கள் மீது நஞ்சு கக்குவதுதான்,அதற்காக போட்டுக்கொண்ட வேடம்தான் பொதுவுடைமையாளர் பட்டம்.

              • திப்பு,

                தொகுப்புரைக்கு நன்றி. சிரிப்போ சிரிப்பு.

                ஆனால் சில இடங்களில் கூட்டியும் திரித்தும் சொல்லியிருக்கிறீர்கள். பரவாயில்லை. எல்லா பதிவுகளுக்கும் லிங்க் எனது CommentsbyUniverbuddy என்ற ப்ளாகில் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் படித்துக் கொள்ளலாம்.

                • மீசைல மண் ஒட்டாம தப்பிக்க பாக்குறாரு.அனைத்து பின்னூட்டங்களையும் தொகுத்து வச்சுருக்குற அறிவாளி எதை கூட்டி திரித்து சொல்லியிருக்கிறேன் என்று எடுத்து காட்ட வேண்டியதுதானே.நான் உறுதிபட சொல்கிறேன்.யுனி சொன்னதைத்தான் இங்கு பதிவு செஞ்சுருக்கேன்.நினைவிலிருந்து சற்று சுருக்கி எழுதியதால் ஓரிரு சொற்கள் மாறியிருக்கலாம்.பொருளில் கடுகளவு மாறுபாடும் இருக்காது, நான் திரித்து சொல்லியிருப்பதாக யுனி மெய்ப்பிக்கட்டும் பார்க்கலாம்.

                    • அந்த பதிவில் 700 க்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் இருப்பதால் யார் தேடிப்படிக்க போகிறார்கள் என்ற தைரியத்தில் பொத்தாம் பொதுவா சுட்டி குடுக்குறாரு,குறிப்பான சுட்டிகள் இதோ.

                      ராச ராச சோழன் பார்ப்பன பெண்கள் மீதுள்ள மயக்கத்தால் நிலங்களை அந்த சமூகத்திற்கு இனாமாக கொடுத்ததாக சொல்லி அவனை பாப்பாத்தி தாசன் என சொல்லும் யுனியின் அவதூறு பின்னூட்டம்.இதுக்கெல்லாம் ஆதாரமும் கேட்க கூடாது உத்தரவு வேறு.

                      https://www.vinavu.com/2014/03/05/cricket-indian-patriotic-chauvnism/#comment-131679

                      ஆண்டையை உங்கள் அடிமையாகப் பார்க்க அவ்வளவு விருப்பமா? யாரும் கூறாக போதே நீங்களே

                      கூறிக்கொள்கிறீர்களே? பாப்பாத்திதாசனுக்கு மாற்றி பெயர் வைப்பதில் அவ்வளவு பெருமையா? பாப்பாத்திக்களுக்காகத்தான் இறையிலியாக சில நூறு கிராமங்கள். இதற்கும் ஆதாரம் கேட்காதீர்கள்.

                      இதற்கு அம்பியின் பதில்.

                      https://www.vinavu.com/2014/03/05/cricket-indian-patriotic-chauvnism/#comment-131786

                      எந்த மைனர் எழுதி கொடுத்த சொத்தை நீர் குடும்பத்தோடு அனுபவித்துக் கொண்டிருக்கிறீரோ தெரியவில்லை

                      அதற்கு மானங்கெட்ட தனமா இவர் சொன்ன பதில்.

                      https://www.vinavu.com/2014/03/05/cricket-indian-patriotic-chauvnism/#comment-131883

                      \\Haven’t you heard of male sex workers? Being a பெண்ணுரிமை காவலர் i can also do this.//

                      அதே பதிவில் மேலும் மேலும் பார்ப்பன பெண்களை இழிவு படுத்தும் இவரது அவதூறுகள்.

                      https://www.vinavu.com/2014/03/05/cricket-indian-patriotic-chauvnism/#comment-132027

                      \\if you go back by 1000 years, we had only Paapaathis as exotic visitors//

                      \\, it is not that only the king was enamored of Pappaathis, but the whole society was enamored of them.//

                  • Tippu,

                    The day before i gave the link, I made a detailed comment with almost all the comment numbers to be seen, as the post is 700+ comments long. Vinavu did not publish it. I just had listed the comment numbers. Nothing incriminating. It seems Vinavu does not want those details here in this post. So i too don’t want to prolong in that direction. Thanks.

            • //இப்ரஹிம் போன்றோரின் தக்கியாவை எதிர் கொள்ளவும் பின்னூட்டமிட ஆரம்பித்தேன்\\தர்க்கியா என்ற ஒரு வார்த்தையை வைத்தே பலபேரை அடையாளப்படுத்துவார் போல் தெரிகிறது…? நீர் உம்முடைய கருத்தை ஆரம்பித்தவுடன் அவர் பயந்து பாய்ந்து ஓடிவிட்டாரோ …?

              //முகமதியத்தினால் பார்ப்பனியம் மேலும் வளர்வதையும் காண்கிறேன்\\ அப்படியா? எப்படி என்று கொஞ்சம் விளக்குங்கள் , அதற்க்கு முதலில் முகம்மதியம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை சொல்லுங்களேன் , நாங்களும் தெரிந்துக்கொள்கிறோம். பார்ப்பனியம் முஹம்மதியத்தால் வளர்ந்ததாக கூறுகிறீர்களே , அது எப்படி வளர்ந்தது , அதன் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதை எல்லாம் சேர்த்து பதிவிடுங்கள் நாங்களும் தெரிந்துக்கொள்கிறோம்.

              • Zahir,

                //முகம்மதியம்//

                You keep the talk of prophets to yourself. They are but imaginations in some cases and frauds in others.
                முகமது உருவாக்கிய மதத்தின் பெயர்தான் முகமதியம் (Muhamadanism/ Muhamadism) அதை பின்பற்றுபவர்கள் முகமதியர்கள் (Muhamadans). அம்பேத்கர் கூட இந்த சொற்களை பலமுறை பயன்படுத்தியிருக்கிறார். நீங்கள் வேறுமாதிரி அழைத்துக் கொள்ளலாம். உங்கள் விருப்பம்.

                //முகமதியத்தினால் பார்ப்பனியம் மேலும் வளர்வதையும் காண்கிறேன்.//

                1. The murders in UP after a ‘love’ affaire, leading to violence, congregations of ‘khap’ panchayat, election of BJP in most of UP constituency.
                2. Khap panchayats decreeing the banning of cell-phones to girls, etc, in response to ‘love’ affaires involving Muhamadans and Hindus. Etc.

                In West also, the Christian fundamentalism is on the raise, in response to Muhamadans. As the quran says that Jesus was not crucified, the Muhamadans are against crosses in public buildings. The most of European schools had removed crosses from class rooms due to enlightenment well before Muhamadans had gone there and settled. Now Christian fundamentalists demand the reinstatement of crosses in schools. Same goes for Christmas lighting, halal food, pork, etc.

                // அவர் பயந்து பாய்ந்து ஓடிவிட்டாரோ …?//

                அப்படித்தான் நினைக்கிறேன். ஓடியவர் பல மாதங்கள் கழித்து திரும்ப ஒருமுறை வந்தார். மறுபடியும் கேள்விக்கு பதில் சொல்லாமல் ஓடிவிட்டார்.

                • //ou keep the talk of prophets to yourself. They are but imaginations in some cases and frauds in others.
                  முகமது உருவாக்கிய மதத்தின் பெயர்தான் முகமதியம் (Muhamadanism/ Muhamadism) அதை பின்பற்றுபவர்கள் முகமதியர்கள் (Muhamadans). அம்பேத்கர் கூட இந்த சொற்களை பலமுறை பயன்படுத்தியிருக்கிறார். நீங்கள் வேறுமாதிரி அழைத்துக் கொள்ளலாம். உங்கள் விருப்பம்\\
                  ப்ளீஸ் , தாங்கள் எங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தாங்கள் முகம்மதியம் என்று கூருவதர்க்கு ஆதாராம் கேட்டால் அதனை கொடுப்பதை விட்டுவிட்டு சம்பந்தமே இல்லாமல் பிதற்றுவதும் ஏனோ? அம்பேத்கர் முகம்மதியம் என்று சொன்னதாகவே வைத்துக்கொண்டாலும் அவர் சொன்னதால் அது ஆதாரப்போர்வமாகாது , யார் வேண்டுமானாலும் எந்த கருத்தையும் தெரிவிக்கலாம் ஆனால் அந்த கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் ஆதாரங்கள் இருக்குதல் வேண்டும் . ஆதாரம் இல்லா கருத்து வெறும் பிதற்றலே அன்றி வேறில்லை. அது அம்பேத்கர் சொன்னாலும் சரி என்னப்பன் சொன்னாலும் சரியே. இந்த உலகத்தில் நான் அதிகம் நேசிப்பது என் தந்தையை , அதே நேரத்தில் அவர் உலகம் தட்டை என்ற ஆதாரம் அற்ற ஒரு வாதத்தை சொன்னால் அதற்க்கு நான் ஆதாரம் கேட்ப்பேன் ஆதாரம் இல்லா நிலையில் அதனை மறுத்து எந்தந்தைக்கான தேவையான விளக்கத்தை தான் சொல்லித்தருவேனே அன்றி அவர் மீது நான் கொண்ட அன்பால் அவர்சொல்வதை அப்படியே ஏற்க்க வேண்டும் என்பதில்லை , அவர் அறியாத விஷயத்தில் தெளிவுப்படுத்துவதையே நான் அவருக்கு அளிக்கும் மரியாதையாக நான் உணர்கிறேன். இதே நிலை தான் அம்பேத்கர் விஷயத்திலும் அவர் சொல்வதில் உண்மை இருப்பின் எட்ப்பேன் இல்லையேல் எனக்கு தெரிந்த உண்மையை அறிவிக்க முற்படவே செய்வேன்.

                  முகம்மதியம் என்ற வார்த்தையை உங்களை போன்று மற்றவர்கள் யாரேனும் பயன்படுத்தி உள்ளனரா? என்று நான் கேட்டிருந்தால் ஒருவேளை தாங்கள் கொடுத்த விளக்கம் சரியாக இருந்திருக்கும் . ஆனால், நான் கேட்டதோ அதற்க்கான அடிப்படையான ஆதாரம் . உதாரனதிட்க்கு நீர் ஏனையா பாலை கல் என்று வாதிடுகிறீர் , இது கல் தான் என்றால் அதற்க்கான ஆதாரத்தை தாரும் என்றால் , இல்லை இல்லை பாலை கல் என்று நான் மட்டும் சொல்லவில்லை என்னைப்போன்றே என் பக்கத்துவீட்டுக்காரனும் சொல்கிறான் என்று வாதிட்டால் அவனை கோமாளியாக மட்டுமே பார்க்கமுடியுமே தவிர அறிவாளியாக அல்ல. நீர் சொல்லும் விளக்கமும் அவ்வாறுதான் உள்ளது.

                  //அப்படித்தான் நினைக்கிறேன். ஓடியவர் பல மாதங்கள் கழித்து திரும்ப ஒருமுறை வந்தார். மறுபடியும் கேள்விக்கு பதில் சொல்லாமல் ஓடிவிட்டார்.\\

                  இப்போது எனக்கு புரிந்து விட்டது இப்ராகிம் என்ற தோழர் உமக்கு விளக்கம் கொடுக்க முடியாமலோ அல்லது தர்க்கம் பண்ண திராணி இல்லாமலோ ஓடவில்லை . மாறாக உம்முடன் விவாதிப்பதில் பிரயோஜனம் இல்லை விவாதிக்கும் அளவுக்கு உமக்கு அறிவு முதிர்ச்சி இல்லை என்று உணர்ந்ததால் ஓடி இருப்பார்.

                • //1. The murders in UP after a ‘love’ affaire, leading to violence, congregations of ‘khap’ panchayat, election of BJP in most of UP constituency.
                  2. Khap panchayats decreeing the banning of cell-phones to girls, etc, in response to ‘love’ affaires involving Muhamadans and Hindus. Etc……\\

                  Let the readers consider, whether your commands are relevant or irrelevant. In my point of view , given commands were irrelevant to Islamic concepts.

                  • Zahir,

                    //given commands were irrelevant to Islamic concepts//

                    மேலோட்டமாகப் பார்த்தால் சம்மந்தம் இல்லாதது போல் தான் தோன்றும். எல்லாவற்றையுமே ஒரே பின்னூட்டத்தில் சொல்லிவிட முடியாதில்லையா. விளக்கத்தை அடுத்த கட்டத்திற்காக வைத்திருந்தேன். நீங்கள் கேட்டதால் அடுத்த கட்டமும் வந்துவிட்டது.

                    முகமதியம் தனது ஆண்களை எந்த பெண்களை வேண்டுமானாலும் கவர்ந்து கொள்ளச் சொல்கிறது. தனது பெண்களை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்க மறுக்கிறது. இதில் தான் மற்றவர்களுக்கு அபாயம் இருக்கிறது. மற்றவர்களின் பெண்களைக் கட்டிக் கொண்டு தங்கள் பெண்களை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்தால் பிரச்சனையில்லை. மற்றவர்களின் பெண்களையும் கட்டிக்கொண்டு தங்கள் பெண்களையும் கட்டிக்கொள்வதால் மற்றவர்களுக்கு பெண்கள் குறைகிறது. முகமதியர்களுக்கு மனைவிகள் கூடுகிறது. விளைவுகள் மற்றவர்களுக்கு சாதகமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை பாதகமாக இருக்கின்றன. இதைப் புரிந்து கொள்பவர்கள் முகமதியத்தை எதிர்க்கவே செய்வர். அது தான் நடந்து கொண்டிருக்கிறது.

                    எதிர்வினைகளைப் பொருத்து அடுத்த கட்டத்திற்கு நகரலாம்.

                    • Univerbuddy,

                      தாங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது இஸ்லாம் அல்ல. மேலும் நான் ஏற்கனவே பல இடத்தில் சுட்டி காட்டி உள்ளேன் தங்களின் இயலாமையை மற்றும் அறியாமையை இன்னும் தாங்கள் உணர்வது போல் தெரியவில்லை . எனவே , நானும் உங்களின் கால்புனர்வுக்கும் அறியாமை கணைகளுக்கும் பதில் அளிக்கிறேன் , நிச்சயமாக தங்களின் காழ்புணர்வு பகுத்தறிவை தின்று ஏப்பம் விட்டு மீண்டும் ஒன்றுமே புரியாததுபோல் திரும்பவும் சொன்னதையே சொல்ல எத்தளிக்கவே முயல்வீர்கள் என்பதையும் நான் அறிவேன் . அனினும் மற்றவர்களின் முன் உங்களின் முகத்திரை கிழிவது தான் திண்ணம்.

                      //மேலோட்டமாகப் பார்த்தால் சம்மந்தம் இல்லாதது போல் தான் தோன்றும். எல்லாவற்றையுமே ஒரே பின்னூட்டத்தில் சொல்லிவிட முடியாதில்லையா. விளக்கத்தை அடுத்த கட்டத்திற்காக வைத்திருந்தேன். நீங்கள் கேட்டதால் அடுத்த கட்டமும் வந்துவிட்டது.\\ மேலோட்டமாக பார்த்தாலும் சம்பந்தம் இல்லை கீலோட்டமாக பார்த்தாலும் சம்பந்தம் இருக்காது இன்னும் உங்களின் அடிப்படை இல்லா கருத்துக்கள் நீரோட்டமாக சென்று சாக்கடையாகவே மாறும் என்பதுதான் உண்மை.

                      //விளக்கத்தை அடுத்த கட்டத்திற்காக வைத்திருந்தேன். நீங்கள் கேட்டதால் அடுத்த கட்டமும் வந்துவிட்டது.\\ நான் கேட்ட எந்த விளக்கத்திட்க்குதான் உருப்படியான பதிலை தந்துள்ளீர்கள். முகம்மதியர்கள் என்று அழைக்கும் விஷயத்தில் கேட்ட விளக்கம் மற்றும் ஆதாரத்திட்க்கு சற்றும் பொருத்தமே இல்லாமல் அம்பேத்கரை தோண்டி எடுத்து விவாதத்தில் விட்டீர்கள். இப்போது என்ன ஆர் எஸ் எஸ் காரன் சொன்னான் என்று சொல்லி ஆதாரம் காட்டப்பூகிரீர்களா?

                      //முகமதியம்\\ இதற்க்கான விளக்கத்தை ஆதாரத்துடன் நிரூபிக்காமல் இந்த வார்த்தையை பயன்படுத்தும் உரிமை இல்லை.

                      //தனது ஆண்களை எந்த பெண்களை வேண்டுமானாலும் கவர்ந்து கொள்ளச் சொல்கிறது. தனது பெண்களை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்க மறுக்கிறது. இதில் தான் மற்றவர்களுக்கு அபாயம் இருக்கிறது. மற்றவர்களின் பெண்களைக் கட்டிக் கொண்டு தங்கள் பெண்களை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்தால் பிரச்சனையில்லை. \\ உமக்கு கிடைத்த ஒரே துருப்பு சீட்டு பெண்கள் பெண்கள் …. இதை பற்றி மட்டுமே பேசி தப்பித்துவிடலாம் என்ற நினைப்போ.
                      உண்மையில் உம்முடைய அறியாமைக்கு ஒரு அளவே இல்லாமல் போனதைய. இஸ்லாமியர்கள் மட்டும் அல்ல பெண்ணை பெற்ற ஒவ்வொரு தந்தையுமே தன்னுடைய பெண்கள் விஷயத்தில் அதிக கவனத்தை செலுத்தவே செய்வார்கள் இதுதான் பொதுவான நடைமுறை . மேலும் கவர்ந்து செல்வது என்பதற்கான அர்த்தம் தெரிந்துதான் அதனை பதிவிட்டிருக்கிரீர? அல்லது திருமணம் சைதுக்கொலவ்துதான் உம்முடைய பார்வையில் கவர்ந்து செல்வதா?
                      உம்முடைய கிறுக்குத்தனமான உளறலுக்கு முடிவே இல்லையா?

                      பொதுவாகவே ஆணின் திருமணத்தை காட்டிலும் பெண்ணின் திருமணத்தில் பெற்றோர்கள் அதிக சிரமத்தையும் முயட்சியைமோ எடுப்பார்கள் . ஏனன்றால் நாளை பெண்ணின் வாழ்வில் முறிவு ஏற்பட்டால் பாதிப்புல்லாக்கப்படுவது பென்வீட்டாரே? எனவே , அனைத்து சமுதாயமும் தன்னுடைய சமுதாயத்திலேயே சிறந்த ஆணை ( தீய பழக்கங்கள் இல்லாதவரை) தான் தேர்ந்தெடுப்பார்கள். அதேநேரத்தில் தன்வீட்டிட்க்கு வரக்கூடிய பெண்ணை தேர்ந்தெடுப்பதிலும் கூட நல்லவர்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். எனவே , யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுப்பார்கள் என்பதெல்லாம் வெறும் பிதற்றலே , வரும் பெண்ணின் நடத்தையை வைத்துதான் தனது மகனின் வாழ்வின் சுகம் இருக்கும் பட்சத்தில் எப்படி யாரைவேண்டுமானாலும் திருமணம் செய்ய ஒப்புக்கொள்வார்கள்.
                      கொஞ்சமாவது அறிவுடனே கருத்தை பதிவு செய்யுங்கள் . மேலும் தாங்கள் சொல்வது காதல் சம்பந்தமான சமாச்சாரமாக இருப்பின் , இஸ்லாத்தின் அடிப்படையில் திருமன்த்திட்க்கு பின்பு தான் காதல் . திருமன்த்திட்க்கு முன்பு இருவர் தனிமையில் சந்திப்பதையே தவறு என்று சொல்லக்கூடிய மார்க்கத்தில் இவ்வாறான அவதுருகளை அள்ளி வீசுவது உம்முடைய அறிவீனத்தின் அடையாளமே தவிர அதற்கும் இஸ்லாத்திற்க்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. மற்ற சமுதாயத்தில் உள்ளது போல் இஸ்லாத்திலும் சில சகோதரர்கள் தவறு செய்யலாம் ஆனால் அந்த தவறை இஸ்லாம் தவறாகவே பார்க்கிறது என்பதையும் புரிந்துக்கொள்க.

                    • மற்றவர்களின் பெண்களைக் கட்டிக் கொண்டு தங்கள் பெண்களை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்தால் பிரச்சனையில்லை.\\ ஏன் அவரவர் சமுதாயத்தில் என்ன பெண் பற்றாக்கொறையா உள்ளது? என்ன வாதமைய உம்முடைய வாதம்.
                      இஸ்லாத்தில் காதல் கத்தரிக்காய் எல்லாம் திருமனத்திற்க்கு பிறகுதான் என்று நான் ஏற்கனவே சொல்லி உள்ளேன். எனவே , உம்முடைய வாதம் அர்த்தமற்றது..

                      //மற்றவர்களின் பெண்களைக் கட்டிக் கொண்டு தங்கள் பெண்களை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்தால் பிரச்சனையில்லை. மற்றவர்களின் பெண்களையும் கட்டிக்கொண்டு தங்கள் பெண்களையும் கட்டிக்கொள்வதால் மற்றவர்களுக்கு பெண்கள் குறைகிறது. முகமதியர்களுக்கு மனைவிகள் கூடுகிறது. விளைவுகள் மற்றவர்களுக்கு சாதகமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை பாதகமாக இருக்கின்றன.\\

                      உம்முடைய அர்த்தமற்ற பிதற்றல்களுக்கு அளவே இல்லையா? முதலில் மாற்று மத அல்லது சமுதாய பெண்களை திருமனம செய்தல் சிறந்தது என்று எங்கேனும் குரானிலோ , ஹதித்லோ குறிப்பிடப்பட்டுள்ளதா? அல்லது இதை ஒரு வணக்கமாக எண்ணி இஸ்லாமியர்கள் தான் செய்து வருகிறார்களா? உம்முடைய கேணத்தனமான வாதம் இன்னும் எத்தனை கோணங்களில் வருமோ புரியவில்லை.

                      இஸ்லாமியர்களில் ஒருத்திக்கு மேல் திருமணம் செய்த எத்தனை பேரை உமக்கு தெரியும்..ஒருத்திக்கு மேல் திருமணம் சையும் பட்சத்தில் அவர்களை சரிசமமாக நடத்தப்படுதல் வேண்டும் என்ற கட்டாயசட்டமும் அவர்கள் மீது உள்ளது. சும்மா எதையாவது அடித்துவிடவேண்டியது… எனக்கு தெரிந்து இரு மனைவிகள் கொண்ட மாற்று மத மற்றும் மதனம்பிக்கையே இல்லாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எ.கா. திரு கலைஞர் கருணாநிதி,திரு பஸ்வான், நடிகர் சரத்குமார், கோவிந்த இன்னும் நீண்டுக்கொண்டே போகும்.இவர்கள் யாரும் இஸ்லாமியர்கள் அல்லவே? இவர்கள் எத்தன அடிப்படையில் திருமணம் செய்தார்கள் இவர்கள் பின்பற்றும் கொள்கையோ மதமோ இவர்களை கட்டளை இட்டுள்ளதா? அல்லது தடுத்துள்ளதா? இஸ்லாத்தில் வழங்கப்பட்ட 4 திருமணம் வரை செய்யலாம் என்பது அனுமதி ஆனால் திருமணம் சைதுக்கொண்ட மனைவிமார்களை சரிசமமாக நடத்த வேண்டும் என்பது அனுமதி அல்ல கட்டாய கட்டளை மீறுவோர் தண்டனைக்கொல்லாக்கப்படுவார்கள்.

                      //எதிர்வினைகளைப் பொருத்து அடுத்த கட்டத்திற்கு நகரலாம்\\ ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விகளுக்கே செய்வினை வைத்தால் போல் ஆதாரமில்லாமல் ஒலரிக்கொட்ட ஆரம்பித்துவிட்டீர்கள் . இனி என்ன நடக்கப்போகிறது என்ற ஆர்வத்தில் தான் நானும் உள்ளேன். ஆனால் பேசும் விஷயம் விற்று பிதற்றலாகவோ அல்லது ஆதாரமில்லாத குற்றசாட்டாகவோ இருக்க வேண்டாம் . ஏனனில் எழுதும் உமக்கும் படிக்கும் எமக்கும் எவ்விதத்திலும் வாசகர்களுக்கும் பயன் அளிக்காது.

          • தென்றல் எங்கு போய் விட்டீர்கள் எங்களுக்கு போர் அடிக்கிறது மீண்டும் அஸ்கர் அலி என்ற இன்ஜினியர் எழுதுய புத்தகத்த புரட்டி படிக்கிறீர்களா படியும் நன்றாக…..

            • அதற்குத்தான் பதிவு குறித்து விவாதிக்க வேண்டும். அஸ்கர் அலி இன்ஜினியரைப் படித்திருந்தால் இசுலாமிய அடிப்படைவாதம் என்பதன் அடிப்படையில் இருந்து தலாக்கிற்கும் குலாக்கிற்கும் பதில் சொல்லி மத அடிப்படைவாதத்தை கண்டிப்பதோடு பிஜேபி அரசியலை அம்பலப்படுத்தியிருக்க முடியும். ஹதீசு படிக்கிற நீங்கள் அஸ்கர் அலி அம்பேத்கர் போன்றவர்களை மட்டும் கண்டும் காணாமல் ஒதுக்குவது இஸ்லாமியர்கள் மீதிருக்கிற வெறுப்பு அரசியல் தான் காரணம் என்கிறேன் நான்.

              இந்த விவாதித்தில் இசுலாமியர் குறித்து பொதுசிவில் சட்டம் குறித்து என்ன விவாதிக்கப்பட்டது? மேலும் எந்த இந்துவிற்கும் இந்து தனிநபர் சட்டம் பற்றி தெரியாது என்பதை இரண்டாவது பதிவைப் படித்த பிறகுதான் தெரிகிறது.

              உங்கள் வழிக்கு வருவோம். பொது சிவில் சட்டம் என்று சொல்கிறீர்கள் இல்லையா? இரண்டாவது பதிவில் ஒவ்வொரு இந்து சாதியும் பொது சிவில் சட்டத்திற்குள் வரமுடியாதபடிக்கு ஆளுக்கொரு முறைகளை கைக்கொள்வது விவரிக்கப்பட்டிருக்கிறது.

              உத்திரப்பிரதேசத்தில் ஜாட் சாதி ஓட்டுக்களை பெறுகிற பிஜேபி ஜாட் சாதியிடம் பொது சிவில் சட்டத்தை வலியுறுத்துமா? இதுவரை வலியுறுத்தியிருக்கிறதா? கண்ணன் மற்றும் குமாரும் பதில் சொன்னால் நன்றாக இருக்கும்.

              மருமக்கள் தாயம் பின்பற்றுகிற கேரள இந்துக்களிடம் பொது சிவில் சட்டத்தை எந்த ஆர் எஸ் எஸ் காலியாவது வலியுறுத்தியிருக்கிறதா?

              இந்த இரண்டு கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

              • //பொது சிவில் சட்டம் என்று சொல்கிறீர்கள் இல்லையா? இரண்டாவது பதிவில் ஒவ்வொரு இந்து சாதியும் பொது சிவில் சட்டத்திற்குள் வரமுடியாதபடிக்கு ஆளுக்கொரு முறைகளை கைக்கொள்வது விவரிக்கப்பட்டிருக்கிறது.

                உத்திரப்பிரதேசத்தில் ஜாட் சாதி ஓட்டுக்களை பெறுகிற பிஜேபி ஜாட் சாதியிடம் பொது சிவில் சட்டத்தை வலியுறுத்துமா? இதுவரை வலியுறுத்தியிருக்கிறதா? கண்ணன் மற்றும் குமாரும் பதில் சொன்னால் நன்றாக இருக்கும்.//

                இந்தியாவில் ஒவ்வொறு சாதிக்கும் ஒவ்வொரு வகையான பழக்க வழக்கங்கள் இருப்பது உண்மைதான் திருமணம் ,மணமுறிவு,தத்துஎடுப்பது,சொத்துரிமை போன்றவற்றில் சாதிக்கேற்ப்ப வழக்கம் இருந்தது அனால் இப்ப அதெல்லாம் மாறிடுச்சு 20 வருசத்துக்கு முன்னால எல்லாம் கிரமத்துல சாதி நாட்டாமைகள் கலியானம் செய்து வைப்பார்கள் விகாகரத்தும் பன்ணி வைப்பார்கள் விவாகர்த்து பெற்ற ஆண் வேறொரு பெண்ணையும் பெண் வேறொரு ஆணையும் திருமனம் செய்து கொள்ளுவார்கள் இதுக்காக கோர்ட் போணது இல்லை அய்யர கூப்பிட்டும் கல்யாணம் பண்ணதும் இல்லை இப்ப அப்பிடியா நடக்குது அவங்கவுங்க வசதிக்கு தகுந்தாப்புல சத்திரமோ கல்யாணமண்டவமோ பார்த்து கல்யாணம் பண்ணிக்கிறாங்க கல்யாணத்த ரிஸிட்டர் பன்ணி இருந்தா கோர்ட்டுக்கு போய் விவாகரத்து வாங்கிகிறாங்க அது போல சொத்து பிரச்சனையயும் தங்களுக்குள் பேசியோ இல்லை கோர்டுக்கு போயோ முடுச்சுக்கிறாங்க அதனால் ஒரு சில சாதியினர் எதிர்ப்பார்கள் என்பதற்க்காக ஒட்டு மொத்த இந்துக்களும் எதிர்ப்பார்கள் என்று சொல்ல முடியாது ஏனென்றால் இந்து மதம் கிறிஸ்தவ மதம் கால மாற்ற்த்துக்கு ஏற்றார்போல் தன்னை மாற்றிக்கொள்ளும் அனா இசுலாம் அப்பிடியா கடவுள் என்ற பெயரில் முகமது சொன்ன கட்டளைகளை யாரும் மாற்ற முடியாது மாற்றவும் கூடாது அது எவ்வளவும் முட்டாள்தனமானதாகவும் காலத்துக்கு பொருந்தாதாகவும் இருந்தால் கூட ,அதுவும் காபிர் (மதசார்பு அற்றவர்கள் கம்மூனிஸ்டுகள் சோசலிஸ்டுகள்)நாடுகள் மாற்ற நினைப்பது தகுமா எனவே பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் பழைமை வாதம் பேசும் சாதிகள் எதிர்க்கலாம் அனால் இசுலாம் குண்டு அல்லவா வெடிக்கும் ………

              • இசுலாம பத்தி தெரிஞ்சுக்க குராண், கதிஸ் ,முகமதின் வாழ்க்கை வரலாறு படிச்சா போதாதா எதுக்கு அஸ்கர் அலி ,பாக்கர் அலி, முகமது அலி ,ஜைனில் அபூதீன் எல்லாம் ஏன் படிக்கனும் கிகிகிகிகீகீ….. எனக்கு இதான் புரியல ஏன்னு சொல்லி விளக்குங்க நீங்கதான் எப்பவும் 2 பக்கத்துக்கு விளக்கம் குடுப்பீங்களே நல்லா குடுங்க……

                • நக்கல் ,கிண்டல் ,கேலி எல்லாம் இருக்கட்டும் mr pj .., முதலில் அவிங்க சொன்ன அஸ்கர் அலி புக்கை படிங்க ! அப்புரமா வந்து பேசுங்க ! நீயிங்க இப்ப போடும் மதவெறி மொக்கையாள தான் தமிழ் நாட்டில் மழை பெய மாட்டேன் என்கின்றது !

                  • //நக்கல் ,கிண்டல் ,கேலி எல்லாம் இருக்கட்டும் ம்ர் ப்ஜ் .., முதலில் அவிங்க சொன்ன அஸ்கர் அலி புக்கை படிங்க ! அப்புரமா வந்து பேசுங்க//

                    நீங்க இந்த தாயத்த கையில கட்டிக்கிட்டா ராத்திரி 12 மணிக்கு கூட சுடுகாட்டுக்கு போகலாம்

                    அடேய் நான் எதுக்குடா ராத்திரி 12 மணிக்கு சுடுகாட்டுக்கு போகனும்

                    மோடி மஸ்தான் தென்றல்தான் அஸ்கர் அலி எழுதிய புக்க படிக்க சொல்லி விளம்பரம் பன்னுராறு கிகீகிகீ … சும்மா ஜோக் சிரிங்க பாஸ் சிரியச எடுத்துக்காதிங்க….

            • //தென்றல் எங்கு போய் விட்டீர்கள் எங்களுக்கு போர் அடிக்கிறது மீண்டும் அஸ்கர் அலி என்ற இன்ஜினியர் எழுதுய புத்தகத்த புரட்டி படிக்கிறீர்களா படியும் நன்றாக\\ உமக்கு போர் அடிப்பதாக இருந்தால் உம்மிடம் நான் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கவேண்டியது தானே. தன்னை பெரிய அறிவாளியாக நினைத்து ஆதாரம் இல்லாமல் கண்டதையும் பதிவிட்ட உம்மால் என்கேள்விக்கு எப்படி பதில் சொல்ல இயலும் . இதில் வெற்று பிதற்றல் வேறு தென்றலிடம்.

  4. எல்லோருக்கும் ஒரே மாதிரியான சட்டம் வந்தா நல்லதுதான இது மத சார்பு அற்ற நாடு எந்த மதத்துக்கும் தனி சிறப்பான சட்டத்த இயற்ற கூடாது ,எப்பவோ இந்து மதவாதிகள் இந்து சட்டத்த எதிர்த்தார்கள் என்பதற்க்காக இசுலாமிய காட்டுமிரான்டி சரிய சட்டங்களை ஆதரிக்கும் இசுலாமிய மத வாதிகள எல்லோரும் ஆதரிக்கவேண்டும் ஒருவரின் தவறு இன்னொருவரின் தவறை சரி கட்டுமா, இங்கு இருக்கும் முசிலீம்கள் தங்களுக்கு சரிய சட்ட்த்தினை அமுல் படுத்த சொன்னால் இந்து மத ஆதரவளர்களும் தங்களின் சாதிய அமைப்பு முறையை பேனும் மனுதர்ம சட்டத்தை அமுல் படுத்த உரிமை கோருவதில் என்ன தவறு என்வே மத சார்பற்ற இந்தியாவிற்க்கு பொது சிவில் சட்டம் அவசியமானதே

    • /இங்கு இருக்கும் முசிலீம்கள் தங்களுக்கு சரிய சட்ட்த்தினை அமுல் படுத்த சொன்னால் இந்து மத ஆதரவளர்களும் தங்களின் சாதிய அமைப்பு முறையை பேனும் மனுதர்ம சட்டத்தை அமுல் படுத்த உரிமை கோருவதில் என்ன தவறு என்வே மத சார்பற்ற இந்தியாவிற்க்கு பொது சிவில் சட்டம் அவசியமானதே……./

      பி ஜெ அய்யஙகார்! இந்துக்கள் மீது முதலில் உங்கள் மனுதர்ம சட்டத்தை அமுல்படுத்தி பாருங்கள்! அப்புறம் மற்ற மத்தவரை செர்க்கலாம்! ஆடுநனையுதேன்னு, ஓனாய் கதறிக்கதறி அழுததாம்!

      • தோழர் அஜாத சத்ரு என்னை எந்த வகையில் அய்யங்கார் என் கிறீர் முதலில் முகமதின் வாழ்க்கை வரலாற்றை படித்து பார்க்கவும் என்னை பொருத்தவரையில் ஜெயலலிதாவும் முகமதும் ஒன்று என்றே தோன்றுகிறது ஜெயலலிதா கொள்ளை அடித்த பணத்தை குடுத்து தனக்கென்று ஒரு அடிமை பட்டாளத்தை உருவாக்கி வைத்து இருக்கிறார் அது போலத்தான் முகமதும் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தான் கொள்ளை அடித்த பணத்தை தாராளமாக வழங்கி தனகென ஒரு அடிமை பட்டாளத்தை உருவாக்கி வைத்து இருந்தார் அவர்கள்தான் முகமதின் தோழர்களாம் போய் படிங்க பாஸ் கதிஸ் புத்தகங்கள் இபின் இசாக் என்பவர் எழுதிய முகமதின் சரித்திரம் எல்லாம் படிங்க பின்ன வந்து பேசுங்க……

        • //ஜெயலலிதா கொள்ளை அடித்த பணத்தை குடுத்து தனக்கென்று ஒரு அடிமை பட்டாளத்தை உருவாக்கி வைத்து இருக்கிறார் அது போலத்தான் முகமதும் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தான் கொள்ளை அடித்த பணத்தை தாராளமாக வழங்கி தனகென ஒரு அடிமை பட்டாளத்தை உருவாக்கி வைத்து இருந்தார் அவர்கள்தான் முகமதின் தோழர்களாம்//

          அண்ணாந்து பார்த்து அடுத்தவன்மேல் எச்சில் துப்பக்கூடாது! உமது ஆதிசங்கரன் முதல் அனைத்து மட அதிபதிகளும் செய்வது அதுதானேஅய்யா! அதனால் தன் அவர்களை சுற்றி ஒரு அடியார் கூட்டம்(தெவரடியார் உட்பட)!

          ‘பிச்சை எடுத்ததாம் பெருமாள், அதை பிடிங்கிச்சாம் அனுமார்!’ என்று யதார்த்ததை பழமொழிகள் உணர்த்தவில்லையா!

          முத்லில், இந்துவாகிய எனக்கு இந்து மதத்தில் என்ன உரிமை என்று கேட்டால்,’கொட்டை பாக்கு ரெண்டு பணம்’ என்ற பாணியில், அங்கே பார், அவனைப்பார் என்று திசைதிருப்புதல் ஏன்!

        • //தோழர் அஜாத சத்ரு என்னை எந்த வகையில் அய்யங்கார் என் கிறீர் முதலில் முகமதின் வாழ்க்கை வரலாற்றை படித்து பார்க்கவும் என்னை பொருத்தவரையில் ஜெயலலிதாவும் முகமதும் ஒன்று என்றே தோன்றுகிறது ஜெயலலிதா கொள்ளை அடித்த பணத்தை குடுத்து தனக்கென்று ஒரு அடிமை பட்டாளத்தை உருவாக்கி வைத்து இருக்கிறார்\\
          ஜோசப் ,
          வாயிருக்கிறது என்ற ஒரே காரனத்திட்க்காக வாய்க்கு வந்ததை எல்லாம் உலரக்கூடாது… ஜெயலலிதா சேர்த்த சொத்து மதிப்பு என்ன முஹம்மது (ஸல்) அவர்கள் சொத்து என்று எதையேனும் தன்னுடைய பிள்ளைகளுக்கு வைத்துவிட்டு போனார்கள் என்ற ஆதாரத்தை காட்டும் பார்ப்போம். நீரே ஒரு காவி காழ்ப்புணர்வு கொண்ட வேஷதாரி பெயரளவு கிறித்துவர். உமக்கு சொந்த புத்தியும் இல்லை சொல் புத்தியும் இல்லை . எங்கே முடிந்தால் ஓடாமல் விவாதத்தை தொடரும் பார்ப்போம்.

  5. கடிதம் மூலம் தலாக் பதிவில் நண்பர் அதியமானுடன் நடந்த விவாதத்திலிருந்து …..

    RSS கும்பலின் ஒரே நாடு,ஒரே மக்கள்,ஒரே கலாச்சாரம் என்ற மதவெறி கொள்கையை நீங்கள் ஏற்கிறீர்களா.பல்வேறு தேசிய இனங்கள்,பல்வேறு மொழி பேசும் மக்கள்,[கவனிக்கவும்.தேசிய ஆட்சி மொழியாக திணிக்கப்படும் இந்தியை தாய்மொழியாக கொண்டோர் இந்திய மக்கள் தொகையில் சிறுபான்மையினரே] பரந்து விரிந்த வேறுபட்ட பல கலாசாரங்களை பின்பற்றும் மக்கள் வாழும் நாட்டில் ஒருமைபாட்டுக்கு உலை வைக்க இதை விட முட்டாள்தனமான ஒரு கொள்கை இருக்க முடியுமா.

    இசுலாமிய நாடாக தன்னை அறிவித்துக் கொண்டுள்ள பாகிசுதானில் இந்து மக்களுக்கு தனியே உரிமையியல் சட்டம் இருப்பது உங்களுக்கு தெரியுமா.அதில் திருத்தம் செய்வது தேவைப்படும்போது இந்தியாவிலிருந்து இந்து மதத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் சென்று உதவுவது உங்களுக்கு தெரியுமா.

    பார்க்க.http://pakistanhindupost.blogspot.in/2011/01/indian-lawyers-to-help-draft-pakistani.html

    மதசார்பு நாடான பாக்கில் இந்த அளவுக்கு சிறுபான்மையினர் மத உரிமையில் சனநாயகம் பேணப்படும் போது இந்தியாவில் பொது உரிமையியல் சட்டம் போட்டுவிட்டு எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு மதசார்பற்ற நாடு என பீற்றுவது.இப்போது இருப்பதே போலி மத சார்பின்மை.மதசார்பின்மை பேசிக் கொண்டே அப்பட்டமான இந்து மத சார்புடன்தான் இந்தியா இருக்கிறது.சான்று தேடி பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.மத உணர்வுகளை தூண்டி,மக்களிடையே பகைமையை வளர்க்கும் அமைப்புகள் தேர்தலில் நிற்க அனுமதிக்க கூடாது என சொல்லும் அரசியல் சட்டம் அமுலில் உள்ள நாட்டில்தான் பா.ச.க. நடுவணிலும்,பல மாநிலங்களிலும் ஆட்சிக்கு வர முடிகிறது.அது மட்டுமல்ல பவுத்த நாடுகளான தாய்லாந்திலும் இலங்கையிலும் மத சிறுபான்மையினருக்கு தனியே உரிமையியல் சட்டங்கள் உள்ளனவே.

    அண்மையில் நார்வே நாட்டில் கையால் சோறு ஊட்டிய குற்றத்துக்காக குழந்தையை பெற்றோருடமிருந்து பிரித்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும்போது என்ன வாதம் எடுத்து வைக்கப்பட்டது.
    ”எங்கள் கலாச்சாரப்படி எங்கள் குழந்தைகளை வளர்க்க எங்களுக்கு உரிமை உண்டு”.இதுதானே.ஆக நார்வேயில் சென்றேறிகள் கோரும் உரிமையை இந்த நாட்டின் ஆதிகுடிகளான முசுலிம்களுக்கும், கிருத்துவ, சீக்கிய மக்களுக்கும் மறுப்பது என்ன வகை நீதி.

    முசுலிம் தனியார் சட்டம் நான்கு பொருட்களில் மட்டுமே செல்லுபடியாகும்.வாரிசுரிமை,திருமணம்.மணமுறிவு,வக்பு சட்டங்கள். இந்த நான்கும் முசுலிம் சமூகத்தினர் அவர்களுக்குள்ளாகவே நடத்திக் கொள்வன.அப்படி செய்து கொள்வதால் பிற பிரிவு மக்களுக்கோ,இந்த நாட்டின் ஒருமைப்பாட்டுக்கோ ஏதேனும் குந்தகம் விளைந்து விடும் என்று சொல்லமுடியுமா.

    ஏனைய உரிமையியல் விவகாரங்கள் அனைத்தும் பொதுவான சட்டத்தின் கீழ்தான் வருகின்றன.எடுத்துக்காட்டாக,ஒரு முசுலிம் வாங்கிய கடன் குறித்த வழக்கு நீதிமன்றத்துக்கு வருகிறது என வைத்துக் கொள்வோம். அந்த வழக்கில் அந்த முசுலிம் தனது மத சட்டங்களின்படி வட்டி தர வேண்டியதில்லை என வாதிட முடியாது.இப்படியாக பிற பிரிவு மக்களுக்கு இடையூறு தராத வகையில் இசுலாமிய மக்கள் தனி சட்டம் கொண்டிருப்பதில் குறை கூற என்ன இருக்கிறது.

    https://www.vinavu.com/2012/03/09/the-talaq-question/#comment-58135

    • ////இசுலாமிய நாடாக தன்னை அறிவித்துக் கொண்டுள்ள பாகிசுதானில் இந்து மக்களுக்கு தனியே உரிமையியல் சட்டம் இருப்பது உங்களுக்கு தெரியுமா////

      மதசார்பான நாட்டில் சிறுபான்மையினரானவர்களுக்கு தனி சட்டம் உள்ளது. ஆனால் இந்தியா மதசார்பற்ற நாடு. இதில் மதவேறுபாடு கூடாது. அனைத்து மக்களும் இந்நாட்டவரே! ஆகையால் இங்கு பொது சிவில் சட்டம் அவசியமே. எந்த மதத்தையும் சாராத சிவில் சட்டம் தேவை. ஒரு வேலை இந்தியாவை மதசார்பான இந்து நாடாக அறிவித்தால்(?) அப்போது பாகிஸ்தானில் இருப்பது போல் சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்களுக்கு தனி சிவில் சட்டம் வழங்கலாம். வளர்ந்த நாடுகளில் எல்லாம் பொது சிவில் சட்டமே உள்ளது. அதுதான் அறிவியல் பூர்வமானது. அதை விடுத்து மனிதர்களை மதரீதியாக பிரித்து சட்டம் இயற்றுவது தவிர்க்கப்பட வேண்டும்.

      • \\எந்த மதத்தையும் சாராத சிவில் சட்டம் தேவை. //

        இதுதான் சாத்தான் மறை ஓதுவதோ.இந்து மதத்தின் அடிப்படையில் பசு வதை தடை சட்டம் போடும் யோக்கியர்கள் மதம் சாரா உரிமையியல் சட்டம் போடுவார்களா என்ன.அப்பட்டமான இந்துத்துவ வெறியர்களான சங் கும்பலும் பூடகமான இந்துத்துவ வெறியர்களான காங்கிரசு கும்பலும் மாறி மாறி ஆளும் இந்த நாட்டில் மதசார்பற்ற உரிமையியல் சட்டம் குதிரைக்கு கொம்பு முளைத்தால் வரலாம்.

        \\ஒரு வேலை இந்தியாவை மதசார்பான இந்து நாடாக அறிவித்தால்(?) //

        இப்போது மட்டும் என்ன வாழ்கிறதாம்.

        \\வளர்ந்த நாடுகளில் எல்லாம் பொது சிவில் சட்டமே உள்ளது. அதுதான் அறிவியல் பூர்வமானது//

        மேலை நாடுகளின் சனநாயக மாண்பில் கடுகளவும் இல்லாத இந்தியாவில் பொது உரிமையியல் சட்டம் அநீதிக்கு வழி வகுப்பதாகவே இருக்கும்.அவன் ஸ்காட்லாந்துக்கு தனி நாடாக பிரிந்து செல்ல உரிமை உண்டென ஒப்புக்கொண்டு வாக்கெடுப்பு நடத்துறான்.இங்கு அப்படி கனவு கண்டால் கூட கைது செய்யப்படலாம்.அத்தகைய சனநாயக பண்பு கொண்ட நாடாக வளர்ந்த பின் இந்த யோக்கியர்கள் பொது உரிமையியல் சட்டம் கொண்டு வரட்டும்.

        • //மேலை நாடுகளின் சனநாயக மாண்பில் கடுகளவும் இல்லாத இந்தியாவில் பொது உரிமையியல் சட்டம் அநீதிக்கு வழி வகுப்பதாகவே இருக்கும்//

          முகமது பிறந்த புனித பூமியான சவூதியில் மற்றும் உலகத்தில் உள்ள மற்ற எல்லா இஸ்லாமிய நாடுகளில் இருப்பதை விட இங்கு சிறப்பான ஜனநாயம் இருப்பதாகவே நினைக்கிறேன். இஸ்லாமிய நாடுகளில் சிறுபான்மையினருக்கு தரப்படும் அதிகபட்ச உரிமையே உயிரோடு இருக்கும் உரிமைதான். இப்போது தூய இஸ்லாமியர்கள் என்று தங்களை கூறிக்கொள்பவர்கள்(ஜ.எஸ்) அதையும் எடுத்து வருகின்றனர்.
          ஆனால் இஸ்லாமியர்கள் சிறுபான்மையாக இருக்கும் நாடுகளில் உள்ள பத்திரிக்கை சுகந்திரம் மற்றும் மனித உரிமை சுகந்திரத்தை பயன்படுத்தி தங்களின் மதவெறியை ஜிகாதிகள் வளர்த்து வருகின்றனர். இதற்கு சிறந்த உதராணம் அமேரிக்கா மற்றும் ஜரோப்பிய நாடுகளில் இருந்து 15000 மேற்பட்ட ஜிகாதிகள் போரில் ஈடுபட ஈராக்கிற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் அனைத்து உரிமைகளையும் அனுபவித்து வருகின்றனர். இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுக்க உள்ள இஸ்லாமிய மத வெறியர்கள் தாங்கள் வசிக்கும் நாடுகளுக்கு கொஞ்சம் கூட நன்றி உணர்ச்சி‌யோ தேசப்பற்றோ இல்லாமல் இருப்பதற்கு இதுவே சிறந்த சாட்சி.

          • இசுலாமிய நாடுகள் பலவும் கடுகளவும் சனநாயகம் இல்லாத மன்னராட்சி நாடுகள்தான்.இந்த உண்மையை எந்த அறிவாளியும் கண்டுபிடித்து சொல்ல வேண்டிய தேவையில்லை.இங்கு பொது உரிமையியல் சட்டம் கொண்டு வருவதற்கு ஆதரவாக கருத்துரைப்போர் மேலை நாடுகளில் அப்படித்தான் இருக்கிறது.அதனால் இந்தியாவிலும் பொது உரிமையியல் சட்டம் கொண்டு வர வேண்டும் என்கிறார்கள்.அதற்கு எதிர்வாதமாகத்தான் அவன்கிட்ட இருக்கும் சனநாயக பண்பில் கடுகளவும் இல்லாத இந்தியாவில், மதவெறியர்கள் ஆளும் இந்தியாவில் பொது உரிமையியல் சட்டம் கொண்டு வருவது மதசார்பற்றதாக இருக்காது என சொல்கிறோம்..இன்றைய இந்திய ஆளும் வர்க்கம் பொது உரிமையியல் சட்டம் கொண்டு வந்தால் நிச்சயம் அது பார்ப்பனிய இந்து மத கலாச்சாரத்தை அனைத்து பிரிவு மக்கள் மீதும் திணிப்பதாகவே இருக்கும்.அதற்கான அடிப்படையை இப்போதே பல மாநிலங்கள் இயற்றியிருக்கும் பசுவதை தடை சட்டம், மதமாற்ற தடை சட்டம் போன்றவற்றில் காணலாம் என சொல்கிறோம்.இதற்கு பதில் சொல்ல வக்கற்றவர்கள்,இந்தியாவின் சனநாயக ”மாண்புகளை” எடுத்து வைக்க முடியாமல் கொடுங்கோல் அரசுகளை காட்டி தப்பிக்க பார்க்கிறார்கள்.

            \\இஸ்லாமிய நாடுகளில் சிறுபான்மையினருக்கு தரப்படும் அதிகபட்ச உரிமையே உயிரோடு இருக்கும் உரிமைதான் //

            இந்தியாவில் முசுலிம்களுக்கு அந்த உயிரோடு இருக்கும் உரிமையை கூட மறுக்கிறதே RSS பயங்கரவாத கும்பல். எவனோ போட்ட முகநூல் பதிவுக்காக முசுலிம் என்று அடையாளம் தெரியும் வகையில் தாடி வைத்து இருந்த ஒரே காரணத்திற்காக கொல்லப்பட்டார் மோசின் சேக் என்ற இளைஞர்.அவரோடு உடனிருந்த அவரது நண்பர் ரியாசு தாடி வைக்காத காரணத்தால் சங் பயங்கரவாத கும்பலிடமிருந்து உயிர் தப்பினார்.இது பானை சோற்றுக்கான ஒரு சோறு பதம்தான்.இந்திய முசுலிம்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்களுக்கு எதிரான ஆயிரக்கணக்கான சிறுதும் பெரிதுமான மதகலவரவங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது,அவற்றில் செத்தவர்கள் போக மீதி இருக்கும் முசுலிம்கள் உயிரோடு இருப்பது கூட பலருக்கும் பொறுக்கவில்லை.முசுலிம்கள் மக்கள் தொகை கூடிக்கொண்டே போவதாக வெறிக்கூச்சல் போடுகிறார்கள்.

            இந்த மத கலவரங்களை நடத்தும் அயோக்கியர்கள் இன்று இந்தியாவின் ஆட்சியாளர்கள். இவர்களுக்கு மாற்றாக இருக்கும் ”வகுப்புவாத எதிர்ப்பு போராளிகள் ” காங்கிரசு கும்பலின் யோக்கியதை என்ன.2004 தேர்தலில் மதகலவர தடுப்பு சட்டம் கொண்டு வருவோம் என வாக்குறுதி கொடுத்து வாக்குப்பொறுக்கி ஆட்சிக்கு வந்த அவர்கள் பத்து ஆண்டுகள் ஆண்டும் அந்த சட்டத்தை கொண்டுவரவே இல்லை.

            \\அமேரிக்கா மற்றும் ஜரோப்பிய நாடுகளில் இருந்து 15000 மேற்பட்ட ஜிகாதிகள் போரில் ஈடுபட ஈராக்கிற்கு சென்றுள்ளனர் //

            ஆர்,எஸ்,எஸ் சாகாவில் பொய் சொல்ல நன்றாகவே பயிற்சி கொடுத்துள்ளார்கள்.

            யோக்கியரே உங்களுக்கு தெரிந்த இந்த விவரம் எல்லாம் அந்த நாடுகளின் அரசுகளுக்கும் அவற்றின் உளவு நிறுவனங்களுக்கும் எப்படி தெரியாமல் போனது.அல்லது தெரிந்தும் அந்த நாடுகளின் அரசுகளே அனுப்பி வைத்தனவோ.IS தீவிரவாதிகளை முசுலிம் சமூகம் கடுமையாக கண்டிக்கிறது பார்க்க

            ;http://www.thehindu.com/todays-paper/tp-international/uk-parliament-votes-to-join-air-strikes-against-is-in-iraq/article6451346.ece

            \\இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுக்க உள்ள இஸ்லாமிய மத வெறியர்கள் தாங்கள் வசிக்கும் நாடுகளுக்கு கொஞ்சம் கூட நன்றி உணர்ச்சி‌யோ தேசப்பற்றோ இல்லாமல் இருப்பதற்கு இதுவே சிறந்த சாட்சி.//

            அடிமைகள் இப்படி சொல்கிறார்கள்.அவர்களின் எஜமானர்களோ இப்படி சொல்கிறார்கள்.

            ”முசுலிம்கள் நாட்டுக்காக உயிரையும் தருவார்கள்.”

            • //இந்தியாவில் முசுலிம்களுக்கு அந்த உயிரோடு இருக்கும் உரிமையை கூட மறுக்கிறதே RSS பயங்கரவாத கும்பல். //
              ஆமாம் உயிரோடு இருக்கும் உரிமை இல்லாமல் தான் சுகந்திரத்தின் போது 10 சதவீகதத்திற்கும் குறைவாக இருந்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை இன்று 15 சதவிகிதம் ஆகி உள்ளது. அதே சுகந்திரத்தின் போது பங்களாதேஷில் இருந்த இந்துக்களின் எண்ணிக்கை 30 சதவிகிதம். ஆனால் இன்று 10 சதவிகிதம் கூட இல்லை. இதெல்லாம் இஸ்லாமின் பெருந்தன்மைக்கு சிறு துளிதான்.
              .// எவனோ போட்ட முகநூல் பதிவுக்காக முசுலிம் என்று அடையாளம் தெரியும் வகையில் தாடி வைத்து இருந்த ஒரே காரணத்திற்காக கொல்லப்பட்டார் மோசின் சேக் என்ற இளைஞர்.அவரோடு உடனிருந்த அவரது நண்பர் ரியாசு தாடி வைக்காத காரணத்தால் சங் பயங்கரவாத கும்பலிடமிருந்து உயிர் தப்பினார்//
              இதெல்லாம் விதிவிலக்குள். ஆனால் இஸ்லாமிய நாடுகளில் வாழும் சிறுபான்மையினர் படும் துயரத்தோடு ஒப்படும் போது இதெல்லாம் கடலில விழுந்த சக்கரை மாதிரிதான். பாகிஸ்தானில் சர்சில் துப்பாக்கியால் சுட்டு 85 கிருஸ்தவர்களை படுகொலை செய்தது, தினம் தினம் இந்து பெண்களை கடத்தி சென்று கட்டாய மதமாற்றம் செய்வது எல்லாம் சாதாரணம். இப்போது ஆப்பிரிக்காவில் போகோ ஹோம் என்னும் தீவிரவாத குழு கிருஸ்தவர்களை துப்பாக்கி முனையில் மதம்மாற்றி கொண்டு இருக்கிறது.
              பாக்கிஸ்தானிலும் பங்களாதேஷிலும் 1947 பிறகு ஆயிரக்கனக்கான இந்து கோயில்கள் இடிக்கப்பட்டும், தீ வைத்து கொழுத்தப்பட்டும் விட்டன. அங்கே இதெல்லாம் ஒரு செய்தியே கிடையாது. மிகமிக சதாரணமான விசயம். ஆனால் இந்தியாவில் தொழுகைக்கு பயன்படுத்தப்படாத ஒரு மசுதி இடிக்கப்பட்டதற்கே இங்குள்ள போலி மதச்சார்பின்மைவாதிகளும், ஜிகாதிகளும் தங்களுக்கு இழைக்கப்பட்ட பெரிய அநீதியாக குதிக்கிறார்கள்.
              //.IS தீவிரவாதிகளை முசுலிம் சமூகம் கடுமையாக கண்டிக்கிறது //
              இதெல்லாம் சும்மா ”நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் நீ அழுகுற மாதிரி அழு” என்று
              //எஜமானர்களோ இப்படி சொல்கிறார்கள்.
              ”முசுலிம்கள் நாட்டுக்காக உயிரையும் தருவார்கள்.”//
              என்ன செய்ய ஓட்டரசியலுக்காக சில சமயம் இந்த மாதிரி பேச வேண்டியுள்ளது. தமுமுக மற்றும் பிஜே போன்ற அரேபிய அடிமைகள் மதச்சார்பின்மை பற்றி பேசவில்லையா? அந்த மாதிரிதான் இதுவும்

      • மு.நாட்ராயன்,

        //மதசார்பான நாட்டில் சிறுபான்மையினரானவர்களுக்கு தனி சட்டம் உள்ளது. ஆனால் இந்தியா மதசார்பற்ற நாடு. இதில் மதவேறுபாடு கூடாது. அனைத்து மக்களும் இந்நாட்டவரே!\\
        தங்களின் கருத்து பதிவில் தான் என்ன ஒரு மாற்றம் , அன்று இஸ்லாமும் கிருத்துவமும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கடவுள்கல் என்றீர்க . இன்று நாம் அனைவரும் இந்தியர்கள் என்று கூருகிரீர்கல். எது எப்படியோ இது நல்ல வாயாக தெரிகிறது அப்படி சொன்ன வாயை என்னவென்று சொல்வது?

        இப்போது பொது சிவில் சட்டம் கொண்டுவர என்ன அவசியம் என்று யாரும் விளக்கவே இல்லை. இரண்டாவது இஸ்லாமியர்களில் 4 மனைவியை கட்டுவதாக கருத்து பதியப்பட்டுள்ளது. 100 இல் எத்தனை சதவீதம் அப்படிக்கட்டி உள்ளார்கள் என்ற புள்ளி விவரம் உள்ளதா? நாலு மனைவிகள் வரை கட்டலாம் என்பது இஸ்லாத்தில் வழங்கப்பட்ட அனுமதிதான் கட்டளை அல்ல. மேலும் சின்ன வீடு வைத்துக்கொள்வதை காட்டிலும் இது சிறந்தது என்றே நினைக்கிறேன்.

    • திப்பு,

      //பாகிசுதானில் இந்து மக்களுக்கு தனியே உரிமையியல் சட்டம் //

      முகமதியத்தைப் பொறுத்தவரையில் முகமதியர்களுக்கு ஒரு சட்டம் மற்றவர்களுக்கு ஒரு சட்டம்தான். பாகிசுதானில் அப்படியில்லாவிட்டால் தான் ஆச்சரியம்.

      • இதுவே , அனைவருக்கும் ஒரே சட்டம் என்னும் முறை அங்கு கொண்டுவந்திருந்தால் , பார்த்தீர்களே பாகிஸ்தானிலேயே இதுதான் ஹிந்துக்களின் நிலைமை அதே நிலைமையை இங்கு கொண்டுவருவதில் என்ன தவறு என்று வாதிட்டிருப்பார்கள். நிலைமை அப்படி இல்லாததால் இந்த அந்தர் பல்டி அடிக்க நேரிட்டுவிட்டது போலும். முதலில் பாகிஸ்தானோ இந்தியாவோ அங்குள்ள ஹிந்துக்களும் சரி இங்குள்ள இஸ்லாமியர்களும் சரி அந்தந்த நாட்டின் குடிமக்கள் அவர்கள் எந்தமதத்தை தேர்ந்தெடுப்பது எந்த மதத்தையும் தேர்ந்தெடுக்காமல் இருப்பது இவ்விரண்டுமே அவரவர்களின் மனநிலையை பொருத்தது. இதை ஒரு பிரச்சனையாக பார்ப்பது அந்தந்த குடிமக்களுக்கு அவர்கள் சையும் துரோகம்.

      • எனது மத அடிப்படையில் அமைந்த சட்டப்படிதான் பிற மதத்தவனான நீயும் நடந்து கொள்ள வேண்டும் எனபது சனநாயகமா.உனது மத அடிப்படையில் அமைந்த சட்டப்படி நீ நடந்து கொள் என்பது சனநாயகமா.

    • திப்பு பாய்,

      //இப்படியாக பிற பிரிவு மக்களுக்கு இடையூறு தராத வகையில் இசுலாமிய மக்கள் தனி சட்டம் கொண்டிருப்பதில் குறை கூற என்ன இருக்கிறது.//

      எம்பொண்டாட்டிங்கள நான் அடிச்சா உனக்கெங்கெய்யா வலிக்குதீங்கிறீங்க. வலிக்கு பாய். விட்டுருங்க.

      • ஒரே நாடு,ஒரே மக்கள்,ஒரே சட்டம் என்று வெறிக்கூச்சல் போட்டு இந்த நாட்டின் பன்முகத்தன்மையை மறுத்து பொது உரிமையியல் சட்டம் கொண்டு வர எத்தணிக்கிறது பார்ப்பனிய இந்து மதவெறி கும்பல்.ஒவ்வொரு சமூகத்துக்கும் தனித்தனியே உரிமையியல் சட்டம் இருப்பது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு உகந்ததல்ல என்று அந்த நரிகள் ஊளையிடுவதற்கு எதிர்வாதமாக ”இசுலாமிய மக்கள் தங்களுக்குள் நடத்திக் கொள்ளும் நான்கு பொருட்களில் தனி சட்டம் கொண்டிருப்பதால் இந்திய சமூகத்தின் பிற பிரிவு மக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை” என்று சொல்கிறோம்.அந்த நான்கு பொருட்களை தவிர்த்து ஏனைய உரிமையியல் சட்டங்கள் பொதுவானவைதான் என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.இதற்கு பதில் சொல்ல வக்கற்றவர்கள் வாதத்தை திசை திருப்புகிறார்கள்.

          • \\ Could you tell us what are those 4 things?//

            எதிராளிகள் என்ன வாதம் வைக்கிறார்கள் என்று முழுமையாக படிக்காமலே முசுலிம்,பாக்கிசுத்தான்,திப்பு போன்ற சொற்களை பார்த்தவுடனே ஆத்திரம் கண்ணை மறைக்க யுனி முசுலிம் எதிர்ப்பு நஞ்சு கக்க ஆரம்பிச்சுருவார் போல.

            அய்யா, அறிவாளியே; நீங்கள் எந்த பின்னூட்டத்திற்கு எதிர்வாதம் வைத்திர்களோ அந்த 5 ஆம் எண் பின்னூட்டத்திலேயே அந்த நான்கு பொருட்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

            • திப்பு,

              தென்றலின் பின்னூட்டங்கள் சிறிது காட்டமாக இருந்ததால் உங்கள் அந்த பின்னூட்டத்தை ஊன்றிப் படிக்கவில்லை என்பது உன்மைதான். மன்னிக்கவும்.

              வக்பு கூட தனிநபர் சட்டத்திலா வருகிறது?

              மற்ற மூன்றுமே பெண்ணுரிமையை சிறிதும் மதிக்காத ஆணாதிக்கச் சட்டங்கள். அவற்றை காலாவதியாக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது.

              //இசுலாமிய நாடுகள் பலவும் கடுகளவும் சனநாயகம் இல்லாத மன்னராட்சி நாடுகள்தான்//

              கிலாபா (அதாவது முகமதிய முறையிலான ஆட்சி) கூட கடுகளவும் சனநாயகம் இல்லாதது தான். இதில் பெண்களின் காபிர்களின் முர்தாதுகளின் முநாபிக்குகளின் நிலை பரிதாபம் தான்.

              • இந்த மூன்று பொருட்களிலும் இந்தியாவில் அமுலில் உள்ள ஏனைய மத சட்டங்களை விட முசுலிம் தனியார் சட்டத்தில் பெண்ணுரிமை கூடுதலாகவே பேணப்பட்டுள்ளது.2005 -ல் இந்து திருமண சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து பெண்களுக்கு சொத்தில் வாரிசுரிமை தரப்படுவதற்கு முன்னரே 1937 முசுலிம் தனியார் சட்டத்தில் பெண்களுக்கு சொத்தில் வாரிசுரிமை தரப்பட்டுள்ளது.ஆண்களுக்கு மணமுறிவு செய்யும் உரிமை தலாக் என்ற பெயரில் தரப்பட்டுள்ளது போல பெண்களுக்கு அந்த உரிமை குலா என்ற பெயரில் தரப்பட்டுள்ளது.

                தலாக் ஆணாதிக்கத்தின் அடையாளம் என்போர்,இசுலாமிய மதத்தில் மணமுறிவு எளிதானது என குறை கூறுவோர் மணவிலக்கு பெறுவது கடினமாக ஆக்கப்பட்டுள்ள சமுதாயங்களில் எரிவளி அடுப்பு வெடித்து ஒரே நாளில் மணவிலக்கு பெற்றுத் தருவதையும் மணவிலக்கு பெறுவது எளிதாக இருப்பதால் இசுலாமிய குடும்பங்களில் அத்தகைய கைக்கூலி சாவுகள்
                [Dowry death ] நிகழ்வதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

                • திப்பு,

                  2005 -ல் இந்து திருமண சட்டத்தில் திருத்தத்தினால் பெண்களுக்கு ஆண்களுக்கு இணையான சொத்துரிமை நிலை நாட்டப்பட்டு ஒரு பெரிய அநீதி சரி செய்யப்பட்டுள்ளது. ஆனால் முகமதிய சட்டம் அன்றும் இன்றும் ஒரே மாதிரி அநீதி தான்.

                  தலாக் போன்றதல்ல குலா. ஒரு ஆண் தலாக் என்று மூன்று முறை சொன்னால் போதும். பெண் முல்லாவிடம் முறையிட வேண்டும். முல்லா ஒத்துக் கொள்ள வேண்டும். அவர் கணவனுடன் செல்லவே வலியுறுத்துவார். இந்த வழியில் விலக்கு பெற காலம் ஆகும். ஆணின் வசதியை ஒப்பிடும் போது இது அநீதியான வேறுபாடு. எரிவளி உருளையை வெடிக்க வைத்துத்தான் அவர்கள் ஒரே நாளில் விலக்கு பெறமுடியும் போல் இருக்கிறது. அதுவுமில்லாமல் அந்த பெண் நிக்காவன்று பெற்ற பெண்கொடையை திருப்பி யளிக்க வேண்டும். மேலும் குழந்தைகளையும் வைத்துக் கொள்ள முடியாது.

                  சில முகமதிய ஆண்கள் தங்களுக்கு இருக்கும் எளிய வழியையும் பின்பற்றுவதில்லை. ஏனென்றால் அவர்கள் கொடுத்த பெண்கொடையும் திருப்பிப் பெற்றுக்கொள்வதற்காக அவர்கள் அடிக்கிற அடியில் அந்த பெண்ணே பெண்கொடை திருப்பிக் கொடுத்துவிட்டு குலா வாங்கிக் கொண்டு போய்விடுவாள். (முகமதிய ஆண்கள் தங்கள் பீபிகளை ஏன் அடிக்கிறாய் என்று யாரும் கேட்க முடியாதில்லையா.)

                  • \\ஒரே மாதிரி அநீதி தான்//

                    எது அநீதி என்பதே விவாதத்திற்குரியது.இன்று மட்டுமல்ல என்றுமே முதுமை அடைந்த பெற்றோரை பராமரிக்கும் பொறுப்பு மகன்களுக்கே வந்து சேர்கிறது.ஒரு வணிகர் வணிகத்தில் கிடைக்கும் ஆதாயத்தை வைத்து சொத்துக்களை வாங்குகிறார் என வைத்துகொள்வோம்.அவரது கடையில் அவரது மகன்களும் சேர்ந்து உழைக்கிறார்கள்.மகள்களோ திருமணம் முடித்து வேறு ஒரு வீட்டில் வாழப்போய் விடுகிறார்கள்.மகனுக்கு 40 வயதும் மகளுக்கு 35 வயதும் இருக்கும்போது தந்தை உயில் எழுதி வைக்காமல் இறந்து போனால் மகனுக்கும் மகளுக்கும் சம பங்கு எனபது நீதியா அநீதியா.

                    \\தலாக் போன்றதல்ல குலா ஒரு ஆண் தலாக் என்று மூன்று முறை சொன்னால் போதும். பெண் முல்லாவிடம் முறையிட வேண்டும் //

                    திருமணத்திற்கு இரண்டு சாட்சிகள் கட்டாயம் என்பது போல தலாக் சொல்வதற்கும் இரண்டு சாட்சிகள் வேண்டும்.நடைமுறையில் இதன் பொருள் மணவிலக்கு கோரும் ஆணும் சமூக பெரியவர்களை நாடித்தான் போக வேண்டும்.

                    \\முல்லா ஒத்துக் கொள்ள வேண்டும்//

                    பெண்ணின் முடிவே இறுதியானது,முல்லாவின் ஒப்புதல் கட்டாயமில்லை.

                    \\ஆணின் வசதியை ஒப்பிடும் போது இது அநீதியான வேறுபாடு. எரிவளி உருளையை வெடிக்க வைத்துத்தான் அவர்கள் ஒரே நாளில் விலக்கு பெறமுடியும் போல் இருக்கிறது.//

                    பெண் அடுப்பை வெடிக்க வைத்து தன்னைத்தானே மாய்த்துக் கொண்டால் அது தற்கொலை.கைக்கூலி சாவு என்பது விரைவில் மணவிலக்கு பெற்று வேறொரு திருமணம் முடிக்க கட்டிய மனைவியை கொல்லும் கயவனின் கொடுஞ்செயல்.முல்லாவிடம் முட்டி மோதியாவது மணவிலக்கு பெறும் வாய்ப்பு இருக்கும்போது ஒரு முசுலிம் பெண் ஏன் தன்னைத்தானே மாய்த்துக் .கொள்ள வேண்டும்.கல்லானாலும் கணவன் என வரலட்சுமி நோன்பிருந்து மண்சோறு உண்ணும் அப்பாவி பெண்கள் வேண்டுமானால் அப்படி செய்து கொள்ளலாம்.ஒரு அப்பாவி,படிக்காத,பாமர முசுலிம் பெண் கூட அப்படி செய்து கொள்ள மாட்டார்.

                    \\அந்த பெண் நிக்காவன்று பெற்ற பெண்கொடையை திருப்பி யளிக்க வேண்டும் //

                    இது யுனியின் வழக்கமான பொய்,பித்தலாட்டம்.மணக்கொடை திருமணம் முடிந்த மறு கணத்திலிருந்து அந்த பெண்ணுக்கு சொந்தம்.எந்த நிலையிலும் கணவன் அதை திருப்பி கேட்க முடியாது.

                    \\சில முகமதிய ஆண்கள் தங்களுக்கு இருக்கும் எளிய வழியையும் பின்பற்றுவதில்லை. ஏனென்றால் அவர்கள் கொடுத்த பெண்கொடையும் திருப்பிப் பெற்றுக்கொள்வதற்காக அவர்கள் அடிக்கிற அடியில் அந்த பெண்ணே பெண்கொடை திருப்பிக் கொடுத்துவிட்டு குலா வாங்கிக் கொண்டு போய்விடுவாள். //

                    யுனியின் அவதூறுகளில் ஒன்று.மணக்கொடையை திருப்பி வாங்க முடியாது எனும்போது ஒரு முசுலிம் ஆண் ஏன் மனைவியை அடிப்பதன் மூலம் தன்னை விட்டு விலகச்செய்ய வேண்டும்.அவனுக்குத்தான் எளிதாக மணவிலக்கு பெற வாய்ப்பு இருக்கிறதே.

                    மணவிலக்கு பெற வேண்டுமானால் நீதி மன்றத்தில் மனு செய்து,அதன் பின் ஓராண்டு காலம் வாழ்க்கை துணையின்றி பிரிந்திருந்து காண்பித்து,அதன் பிறகு நீண்ட நெடிய சட்டப்போராட்டங்களுக்கு பிறகு [இன்றைய இந்தியாவில் இதற்கு குறைந்தது நான்கைந்து ஆண்டுகளாவது ஆகும்.நீதிமன்றம் திருப்தி அடையும் வகையில் தக்க காரணம் சொல்ல முடியாவிட்டால் பெண்ணின் ஒழுக்கத்தின் மீது அபாண்டமாக பழி சுமத்தும் அயோக்கியத்தனமும் நடப்பதுண்டு ] மணவிலக்கு பெற சொல்லும் ”முற்போக்கான” சட்டங்கள் வேண்டுமானால் மனைவியை அடித்தே துரத்த கணவனை தூண்டலாம்.

                    • திப்பு,

                      // பெற்றோரை பராமரிக்கும் பொறுப்பு மகன்களுக்கே//

                      பெண்களும் இதைச் செய்யமுடியும் செய்யவிடவேண்டும் செய்கிறார்கள். இருக்கட்டும். ஆண்களுக்கு இருக்கும் (எங்கும் எப்போதும் சென்று வரும், etc) வசதியை வைத்து அவர்களால், தங்களுக்கு கிடைத்த சொத்தை வைத்து, பெண்களைவிட அதிக பொருள் ஈட்டமுடியும் என்பதால் இதற்கென்று கூடுதல் சொத்து தேவையில்லை. அதை எதிர்பார்ப்பது அவமானம். அதையும் மீறி உதவி தேவை படும் பட்சத்தில் தன் சகோதரிகளும் தங்களுக்கு கிடைத்த சொத்தை வைத்து எவ்வளவு பொருள் ஈட்டமுடிந்ததோ அவ்வளவு பங்கு கொடுக்கலாம். எனவே சமபங்கீடுதான் நீதியானது.

                      // தலாக் சொல்வதற்கும் இரண்டு சாட்சிகள் வேண்டும்//

                      இது முகமதியம் அல்ல. நீங்கள் விடும் சரடியம்.

                      // தன்னைத்தானே மாய்த்துக் கொண்டால் அது தற்கொலை//

                      நான் சொன்னது வேறு. முகமதிய ஆண்களைப் போல மற்றவர்களும் ஒரே நாளில் விலக்கு வாங்க உருளையை வெடிக்க வைக்கிறார்கள் என்று கூறினீர்கள். சரி. ஒரு முகமதியப் பெண்ணும் ஆண்களைப் போல ஒரே நாளில் விலக்கு வாங்க உருளையை வெடிக்க வைத்து அந்த ஆணைக் கொல்வதைத்தவிர வேறு வழியில்லை என்றேன்.

                      // மணக்கொடை *** கணவன் அதை திருப்பி கேட்க முடியாது.//

                      இதுவும் முகமதியம் அல்ல. நீங்கள் விடும் சரடியம்.

                      நிக்காவின் போது மணக்கொடை (மஹர்) கொடுக்க வேண்டும். பெண்ணாக பார்த்து அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டால் தேவையில்லை. எனவே பொதுவாக பெண்ணே அதை வேண்டாம் என்று சொன்னதைப் போல பாவித்து எதையும் கொடுக்காமலேயே தான் நிக்காக்கள் நடக்கின்றன.

                      கணவன் தலாக் செய்தால் அவன் மஹர் கொடுத்திருந்தால் அதை திரும்பக் கேட்க முடியாது. ஆனால் பெண்ணாக விலக்குக் கேட்டால் அவள் மஹர் பெற்றிருந்தால் அதை திருப்பித்தர வேண்டும். கணவன் தன் பீவியை ஏன் அடிக்கிறாய் என்று விளக்கம் கேட்கமுடியாது. இதுதான் முகமதியம். ஆதாரங்கள் இனையத்தில் இரைந்து கிடக்கின்றன.

                    • திப்பு,

                      // மகன்களும் சேர்ந்து உழைக்கிறார்கள்.மகள்களோ திருமணம் முடித்து வேறு ஒரு வீட்டில் வாழப்போய் விடுகிறார்கள்//

                      மகன்கள் கடையில் வேலை செய்தபோது மகள்களும் வீட்டில் வேலை செய்திருக்கிறார்கள். வீட்டு வேலை ஒன்றும் மதிப்பற்றதல்ல. அனுமதித்திருந்தால் அவர்கள் கடையிலும் வேலை செய்திருக்கலாம். மகன்களும் கூட பிரிந்து சென்று விடுகிறார்கள். ஒரு மகன் மட்டும் தொடர்ந்து தாய்தந்தையுடன் வாழ்ந்து கடையிலும் வேலை செய்கிறான் என்றால் அவனுக்கென்று ஒரு சிறப்புப் பங்கினை எடுத்துக்கொள்ள முடிய வேண்டும். எந்த மகன்/மகள் எத்தனை ஆண்டுகள் கடை/வீடு வேலை செய்தார்கள் எனபதை வைத்து அவர்களுக்கிடையே சுமூகமாக பிரித்துக் கொள்வதற்கும் வாயப்பு இருக்கவேண்டும். கணக்குப் போடுவது சிக்கலாக இருக்கும் போது ஏதோ ஒரு வழியில் அவர்களுக்குள் அதை எளிமைப் படுத்திக் கொள்ள வழியிருக்க வேண்டும். பெண்கள் ஒரு கட்டத்தில் திருமணமாகி போய்விட்டாலும் கூட அவர்களுக்கு சமமான பங்கு கொடுப்பதால் ஆண் மகன்கள் ஒன்றும் குறைந்து போய்விடமாட்டார்கள். தங்கள் சகோதரிகளிடம் தாராளமாக இருப்பதே ஆண்களின் அழகு. அது போன்ற எளிய தாராள சட்டங்களே ஒரு நல்ல சமூகத்தின் அழகு. மருமகள்களும் தங்கள் பங்கை கொண்டுவருவார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.

                    • \\மகன்கள் கடையில் வேலை செய்தபோது மகள்களும் வீட்டில் வேலை செய்திருக்கிறார்கள். வீட்டு வேலை ஒன்றும் மதிப்பற்றதல்ல.//

                      விவாதிக்க சரக்கில்லன்னா விட்டுத்தொலையுமய்யா,வீம்புக்கு இழுத்துக்கிட்டு கிடக்காதீர்,
                      மகள்தான் திருமணம் முடித்து வேறு வீட்டுக்கு போய் விடுகிறாரே.அப்புறம் எப்படி வீட்டு வேலை செய்வார்.

                      \\அனுமதித்திருந்தால் அவர்கள் கடையிலும் வேலை செய்திருக்கலாம் //

                      பெண்களின் இயற்கையான நிலைமை ஆண்கள் அளவுக்கு வேலை செய்ய அனுமதிப்பதில்லை. திருமணம்,தாய்மை அடையும் கட்டத்தில் ஏற்படும் உடல் சோர்வு,மகப்பேறு,பாலூட்டுதல் என அவர்களின் நிலைமை கடினமானது,இதற்கே உருவ வழிபாட்டில் நம்பிக்கை உள்ளோர் அவர்களுக்கு கோவில் கட்டி கும்பிடலாம்.இதையே நபிகள் நாயகம் மனிதர்கள் காலில் விழுந்து வணங்க அனுமதிப்பதாக இருந்தால் தாயின் காலில் விழுந்து வணங்க சொல்லியிருப்பேன் என்றார்கள்.

                      ஆகவே ஆண்களின் உழைப்பே கூடுதலானது,

                      \\பெண்கள் ஒரு கட்டத்தில் திருமணமாகி போய்விட்டாலும் கூட அவர்களுக்கு சமமான பங்கு கொடுப்பதால் ஆண் மகன்கள் ஒன்றும் குறைந்து போய்விடமாட்டார்கள். தங்கள் சகோதரிகளிடம் தாராளமாக இருப்பதே ஆண்களின் அழகு. //

                      அது காலம் காலமாக நடைமுறையில்தான் உள்ளது.தாய்மாமன் சீர் கேள்விப்பட்டதில்லையா.
                      பாகப்பிரிவினை செய்யும்போது ஒருவருக்கொருவர் தாராளாமாக இருந்து கொள்வதுதான் நபிவழி.

                      ”நீங்கள் சொத்துக்களை குவித்து வைத்து பாகப்பிரிவினை செய்யும்போது அந்த வழியாக செல்லும் வழிப்போக்கர் யாசகம் கேட்டால் அந்த குவியலில் இருந்து அவருக்கும் ஏதாவது கொடுங்கள்” என்று நபிகள் நாயகம் சொல்லி இருக்கிறார்கள்.

                      வழில போறவனுக்கே குடுக்கும்போது கூடப் பொறந்த அக்கா,தங்கச்சிக்கு அண்ணன் தம்பிக்கு தாராளமா குடுக்க மாட்டாங்களா என்ன.

                    • \\// தலாக் சொல்வதற்கும் இரண்டு சாட்சிகள் வேண்டும்//
                      இது முகமதியம் அல்ல. நீங்கள் விடும் சரடியம்.//
                      உம்மை போன்று விவாதத்தில் வெல்வதற்காக பொய் சொல்லியும்,இட்டுக்கட்டியும் பேசும் அற்பன் அல்ல நான்.
                      திருமறை குரான்.65;1
                      O Prophet, when you [Muslims] divorce women, divorce them for [the commencement of] their waiting period and keep count of the waiting period, and fear Allah , your Lord. Do not turn them out of their [husbands’] houses, nor should they [themselves] leave [during that period] unless they are committing a clear immorality. And those are the limits [set by] Allah . And whoever transgresses the limits of Allah has certainly wronged himself. You know not; perhaps Allah will bring about after that a [different] matter.

                      திருமறை குரான்.65;2
                      And when they have [nearly] fulfilled their term, either retain them according to acceptable terms or part with them according to acceptable terms. And bring to witness two just men from among you and establish the testimony for [the acceptance of] Allah . That is instructed to whoever should believe in Allah and the Last day. And whoever fears Allah – He will make for him a way out
                      \\ஒரு முகமதியப் பெண்ணும் ஆண்களைப் போல ஒரே நாளில் விலக்கு வாங்க உருளையை வெடிக்க வைத்து அந்த ஆணைக் கொல்வதைத்தவிர வேறு வழியில்லை என்றேன்.//
                      பெண்ணினத்தையே இழிவு படுத்தும் வெறிப்பேச்சு.கைக்கூலி சாவு என்பது பெண்களுக்கு மட்டுமாக தனி ஒதுக்கீடு செய்திருக்கிறது இந்திய சமூகம்.இதுவரை வரதட்சனை கொடுமை செய்கிறான் என்பதற்காக மனைவியால் கணவன் கொல்லப்பட்டதாக வரலாறு இல்லை.
                      முதலிலேயே சொல்லி இருக்கேன்.முல்லாவிடம் முட்டி மோதியாவது மணவிலக்கு பெற முடியும் என்கிறபோது ஒரு முசுலிம் பெண் ஏன் கொலை செய்ய வேண்டும்.
                      \\// மணக்கொடை *** கணவன் அதை திருப்பி கேட்க முடியாது.//
                      இதுவும் முகமதியம் அல்ல. நீங்கள் விடும் சரடியம்.//
                      Holy Quran Chapter 4 Surah Nisaa verses 20-21:
                      But if ye decide to take one wife in place of another even if ye had given the latter a whole treasure for dower take not the least bit of it back: would ye take it by slander and a manifest wrong?

                      \\கணவன் தலாக் செய்தால் அவன் மஹர் கொடுத்திருந்தால் அதை திரும்பக் கேட்க முடியாது. ஆனால் பெண்ணாக விலக்குக் கேட்டால் அவள் மஹர் பெற்றிருந்தால் அதை திருப்பித்தர வேண்டும்//
                      உண்மைதான் ஆனால் பகுதியளவு மட்டும்..முழு மகர் தொகையையும் எனபது கட்டாயமல்ல.குலா கேட்கும் பெண் மகரையோ,அதில் பகுதியளவோ திருப்பி செலுத்த வேண்டியிருக்கும்.
                      பார்க்க;
                      திருமறை.;(2:229-230)

                      “Divorce is twice; then either to retain in the recognized manner or to release in fairness. And it is not lawful for you to take back anything from what you have given them, unless both apprehend that they would not beable to maintain the limits set by Allah. Now, if you apprehend that they would not maintain the limits set by Allah, then, there is no sin on them in what she gives up to secure her release. These are the limits set by Allah. Therefore, do not exceed them. And whosoever exceeds limits set by Allah, then, those are the transgressors. Thereafter, if he divorces her, she shall no longer remain lawful for him unless she marries a man other than him. Should he too divorce her, then there is no sin on them in their returning to each other, if they think they would maintain the limits set by Allah. And these are the limits set by Allah that He makes clear to a people who know.”

                      அவர்கள் வாழ்ந்த காலம்,பெண்ணின் பொருளாதார நிலை,கணவனின் நிலை இவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு காஜி அந்த தொகையை முடிவு செய்வார்.பணம் பறிக்கும் நோக்கில் யாரும் மகரையும் குலாவையும் பயன் படுத்தி விடாமல் தடுக்கும் பாதுகாப்பு வலயமாக இது உள்ளது.

                      \\கணவன் தன் பீவியை ஏன் அடிக்கிறாய் என்று விளக்கம் கேட்கமுடியாது. இதுதான் முகமதியம்.ஆதாரங்கள் இனையத்தில் இரைந்து கிடக்கின்றன.//

                      பிற மத நம்பிக்கைகள் மீது வாந்தி எடுத்து நாறடிக்கும் உம்மை போன்ற கழிசடைகளுக்கு இணையத்தில் பஞ்சமில்லை.அதனால் இது போன்ற அவதூறுகள் இங்கு கொட்டிக் கிடக்கின்றன.அதற்கான மறுப்புகளும் இதே இணையத்தில் காணக்கிடைக்கின்றன.

                      பார்க்க;http://www.islamicfinder.org/articles/article.php?id=307

                      சுட்டியிலிருந்து; Does Islam Allow Wife Beating?

                      Quran is very clear on this issue. Almighty Allah says: “Men are the protectors and maintainers of women, because Allah has given the one more strength than the other, and because they support them from their means. Therefore, the righteous women are devoutly obedient and guard in the husband’s absence what Allah would have them to guard. As to those women on whose part you fear disloyalty and ill-conduct, admonish them (first), (next), refuse to share their beds, (and last) beat them (lightly); but if they return to obedience, seek not against them means (of annoyance); for Allah is most High and Great (above you all). If you fear a breach between them twain, appoint (two) arbiters, one from his family and the other from hers. If they wish for peace, Allah will cause their reconciliation; for Allah has full knowledge and is acquainted with all things.” (Quran: An-Nisaa 34-35)

                      It is important to read the section fully. One should not take part of the verse and use it to justify one’s own misconduct. This verse neither permits violence nor condones it. It guides us to ways to handle delicate family situation with care and wisdom. The word “beating” is used in the verse, but it does not mean “physical abuse”. The Prophet (p.b.u.h.) explained it “dharban ghayra mubarrih” which means “a light tap that leaves no mark”. He further said that face must be avoided. Some other scholars are of the view that it is no more than a light touch by siwak, or toothbrush.

                      Generally, the Prophet (p.b.u.h.) used to discourage his followers from taking even this measure. He never hit any female, and he used to say that the best of men are those who do not hit their wives. In one Hadith he expressed his extreme repulsion from this behavior and said, “How does anyone of you beat his wife as he beats the stallion camel and then embrace (sleep with) her?” (Al-Bukhari, English Translation, vol. 8, Hadith 68, pp. 42-43)

                      It is also important to note that even this “light strike” mentioned in the verse is not to be used to correct some minor problem, but it is permissible to resort to only in a situation of some serious moral misconduct when admonishing the wife fails, and avoiding from sleeping with her would not help. If this disciplinary action can correct a situation and save the marriage, then one should use it.”

                      Dr. Jamal Badawi, professor at Saint Mary’s University in Halifax, Nova Scotia, Canada, and a cross-appointed faculty member in the Departments of Religious Studies and Management, adds:

                      “If the problem relates to the wife’s behavior, the husband may exhort her and appeal for reason. In most cases, this measure is likely to be sufficient. In cases where the problem persists, the husband may express his displeasure in another peaceful manner, by sleeping in a separate bed from hers. There are cases, however, in which a wife persists in bad habits and showing contempt of her husband and disregard for her marital obligations. Instead of divorce, the husband may resort to another measure that may save the marriage, at least in some cases. Such a measure is more accurately described as a gentle tap on the body, but never on the face, making it more of a symbolic measure than a punitive one.

                    • திப்பு,

                      // மகள்தான் திருமணம் முடித்து வேறு வீட்டுக்கு போய் விடுகிறாரே.அப்புறம் எப்படி வீட்டு வேலை செய்வார்.//

                      எல்லா பெண்களையுமா வீட்டு வேலை செய்யும் வயது வருவதற்குமுன் நிக்கா வேலை செய்ய அனுப்பிவிடுகிறீர்கள். வியப்பிலும் வியப்பாக இருக்கிறது. எனக்குத் தெரிந்து ஒரு ஆறு வயது பெண் கூட வீட்டில் பாத்திரம் கழுவுவது கூட்டிப் பெருக்குவது போன்ற வேலைகளைச் செய்கிறார்கள். அதற்கும் முன்னதாகவே எல்லா பெண்களும் நிக்கா வேலைக்கு அனுப்பப்படுவதில்லை என்றே நான் நினைக்கிறேன்.

                      // தாய்மை அடையும் கட்டத்தில் ஏற்படும் உடல் சோர்வு,மகப்பேறு,பாலூட்டுதல் என அவர்களின் நிலைமை கடினமானது//

                      இதற்காகவேனும் அவர்களுக்கு சம பங்கு கொடுக்க வேண்டும். தர்கா எல்லாம் கட்ட வேண்டாம் காலிலும் விழவேண்டாம். சம உரிமை கொடுத்தாலே போதும்.

                      //குரான்.65;2 *** bring to witness two just men from among you and establish the testimony for [the acceptance of] Allah//

                      இந்கே தான் உங்கள் பித்தலாட்டம் பல்லிளிக்கிறது. இந்த வாசகம் இருமுறை தலாக் சொல்லி மூன்று மாதங்கள் உடலுறவில்லாமல் இருந்ததன் பின்னர் பிரிந்து செல்லும் போது இரு சாட்சிகளைக் கொள்ளவும் என்கிறது. தலாக் சொல்வதற்கே இரு சாட்சிகள் என்று எங்கே இருக்கிறது.

                      //
                      Quran Chapter 4 Surah Nisaa verses 20-21:
                      But if ye decide to take one wife in place of another even if ye had given the latter a whole treasure for dower take not the least bit of it back: would ye take it by slander and a manifest wrong?//

                      கணவன் தானாக பெண்ணைத் துரத்தினால் தான் அவன் கொடுத்த தொகையைத்திருப்பிப் கேட்க முடியாது. அதைத்தான் நீங்கள் கொடுத்த வாசகம் சொல்கிறது. நான் இதைப் பற்றிப் பேசவில்லை. மனைவியாக விலக்கு கேட்கும் போது அவள் தன் விடுதலையைப் பெற தான் பெற்ற மஹரை திருப்பித்தர வேண்டும் என்றுதான் நான் சொன்னேன்.

                      //.;(2:229-230)//
                      // And it is not lawful for you to take back anything from what you have given them, unless both apprehend that they would not beable to maintain the limits set by Allah. Now, if you apprehend that they would not maintain the limits set by Allah, then, there is no sin on them in what she gives up to secure her release.//

                      இந்த பகுதி மிகவும் புதுமையாக இருக்கிறது. எனக்கு புதிதாகவும் இருக்கிறது. இருமுறை தலாக் சொன்ன பிறகு கணவன் மனைவி பிரிந்து போகுமுன் ஒரே வீட்டில் மூன்று மாதம் உடலுறவில்லாமல் பிரிந்து வாழவேண்டும். இதுவரை நான் அறிந்ததே. இந்த வாசகம் ஒரு புது சரத்தை அறிமுகப்படுத்துகிறது. ஒரே வீட்டில் உடலுறவில்லாமல் பிரிந்து வாழ முடியாது என்று அஞ்சினால் அந்த பெண் தனக்குக் கொடுத்த மகரைத் (அல்லது அதன் பகுதியளவைத்) திருப்பிக் கொடுத்துவிட்டு தனது விடுதலையைத் தேடிக்கொள்ளலாம் என்கிறது. அதாவது ஆண் தலாக் சொல்லியிருந்தாலும், அல்லா விதித்த ஒரே வீட்டில் மூன்று மாதம் உடலுறவில்லாமல் பிரிந்து வாழவேண்டும் என்ற விதியை மீறாமல் காப்பாற்ற வேண்டும் என்றால் அது பெண் தனக்குக் கொடுக்கப்பட்ட மகரைத் (அல்லது அதன் பகுதியளவைத்) திருப்பிக் கொடுத்துவிட்டுப் இடத்தைக் காலி செய்து கொண்டு போனால் தான் முடியும் போல் தெரிகிறது. அருமையான மார்க்கம்.

                    • முன்னரே ஒரு பதிவில் குறிப்பிட்டவாறு பேசு பொருள் எதுவாக இருந்தாலும், யுனி போன்ற முசுலிம் எதிர்ப்பு மத வெறியர்கள் விவாதத்தை இசுலாம் குறித்ததாக மடை மாற்றி தங்களின் நஞ்சு கக்கும் வேலையை செய்து வருகிறார்கள்.இந்த பதிவை எடுத்துக் கொண்டால் இது பொது உரிமையியல் சட்டம் பற்றியது. முசுலிம்கள் தங்களுக்குள் நடத்திக் கொள்ளும் நான்கு பொருட்களில் தனி சட்டம் கொண்டிருப்பதால் பிற பிரிவு மக்களுக்கோ இந்த நாட்டின் ஒருமைப்பாட்டுக்கோ யாதொரு தீங்கும் இல்லை என்று 5 ஆம் எண் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறேன்.இதற்கு ஒரு பதிலும் சொல்ல வக்கற்றவர்கள் விவாதத்தை மடை மாற்றி இசுலாத்தின் மீதும் முசுலிம்கள் மீதும் நஞ்சு கக்கும் வேலையை செய்து வருகிறார்கள்.

                      \\வீட்டு வேலை//

                      ஆறு வயது முதல் திருமணம் ஆகும் வரை மகள்கள் வீட்டில் வேலை செய்கிறார்கள் என்றால் மகன்கள் கடைக்கு போய் பொருட்கள் வாங்கி வருவது,தந்தைக்கு சாப்பாடு எடுத்துப்போவது,மாலை பள்ளிக்கூடம் விட்டு வந்த பின் தொழில் நிமித்தமாக பெற்றோர் ஏவும் வேலைகளை செய்வது விடுமுறை நாட்களில் தந்தையின் தொழிலில் சேர்ந்து உழைப்பது,என்று வேலை செய்கிறார்கள்.கடையில் கல்லாவை பார்த்துக் கொள்ள தனதாள் வேண்டும் என்று மகனின் பள்ளிப்படிப்பை பாதியிலேயே இடை நிறுத்தம் செய்வதும் உண்டு.விவசாய குடும்பங்களில் மாடு மேய்ப்பது,வாய்க்காலில் தண்ணீர் திருப்புவது,தண்ணீர் மோட்டார் போடுவதற்கு இரவு நேரங்களில் தோட்டத்திற்கு போவது,அங்கேயே படுத்திருந்து தண்ணீர் பாய்ந்து முடித்த பின் மோட்டாரை நிறுத்துவது என
                      மகன்களின் குழந்தை பருவ உழைப்பும் சாதாரணமானதல்ல.

                      \\இதற்காகவேனும் அவர்களுக்கு சம பங்கு கொடுக்க வேண்டும்//

                      விதண்டாவாதியே,தாய்மை அடையும் கட்டத்தில் ஏற்படும் உடல் சோர்வு,மகப்பேறு,பாலூட்டுதல் என அவர்களின் நிலைமை கடினமானது என்பதால் கணவனின் சொத்தில் பங்கு கேட்பதுதான் நியாயம்.[அது இசுலாமிய மதத்தில் தனியார் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.புகுந்த வீட்டிற்காக செய்யும் தியாகங்களுக்கு ஈடாக பிறந்த வீட்டு சொத்தில் கூடுதல் உரிமை கோருவது எப்படி நியாயமாகும்.

                      \\bring to witness two just men //

                      வீம்புக்கு சாமர்த்தியம் காட்ட வேண்டாம்.சாட்சிகளை வைத்துத்தான் மணமுறிவை முழுமையாக்க முடியும் என்பது தெளிவா இருக்கா இல்லையா.இதைத்தான் \\திருமணத்திற்கு இரண்டு சாட்சிகள் கட்டாயம் என்பது போல தலாக் சொல்வதற்கும் இரண்டு சாட்சிகள் வேண்டும்.நடைமுறையில் இதன் பொருள் மணவிலக்கு கோரும் ஆணும் சமூக பெரியவர்களை நாடித்தான் போக வேண்டும்.// என்று சொல்லி இருக்கேன்.இதில் என்ன பித்தலாட்டம் இருக்கு.நீரோ முதல்ல சாட்சி வரணுமா கடைசியா வரணுமாண்ணு மயிர் பிளக்கும் வாதம் பண்றீர்.

                    • திப்பு,

                      // ஒரு பதிலும் சொல்ல வக்கற்றவர்கள் //

                      முசுலிம்கள் தங்களுக்குள் நடத்திக் கொள்ளும் தனி சட்டங்கள் ஆணாதிக்க சட்டங்கள் எனவும் அவற்றை காலாவதியாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது எனவும் பதில் கூறியிருக்கிறேன். இதற்கு மேல் நீர் எதை எதிர்பார்க்கிறீர். எதிராளியை முட்டாள் அது இது என்று பேசும் நீங்கள் கொஞ்சமாவது லாஜிக்கோட எழுத முயலுங்கள்.

                      //மகன்களின் குழந்தை பருவ உழைப்பும் சாதாரணமானதல்ல.//

                      யார் இல்லை என்று சொன்னார்கள். நான் அவர்களுக்கு பெண்களுக்கு கொடுக்கும் பங்கில் பாதியைக் கொடுப்பதுதான் சரி என்றா சொன்னேன்.

                      //புகுந்த வீட்டிற்காக செய்யும் தியாகங்களுக்கு***//

                      புகுந்த வீட்டில் மகள்களுக்கு பிறக்கும் குழந்தைகளை நீங்கள் மகன்களின் குழந்தைகளுக்குக் கட்டிக்கொள்வதில்லையா (மகர் கொடுக்காமலேயே அல்லது வாங்காமலேயே). அவர்கள் அங்கே தியாகம் செய்யாமல் உங்களின் குழந்தைகளுக்கு நிக்கா உறவுகள் எப்படிக் கிடைக்கும்? இருக்கட்டும். கணவனின் சொத்தில் பங்கு கேட்க வேண்டும் என்றால் எப்போது? குழந்தைகள் பிறக்கப்பிறக்க அதற்கேற்றாற் போல் கணவன் சொத்தில் பங்கு வந்து கொண்டே இருக்கும் படி இசுலாமிய மதத்தில் ஏற்பாடு இருக்கிறதா? அல்லது அதற்குத்தான் அவர்களுக்கு உணவு உடை உறைவிடம் கொடுக்கிறோம் என்று சொல்வீர்களா. அப்படியென்றால் மறுபடியும் அவர்களின் வீட்டு வேலை மதிப்பில்லாமல் போய்விடுமே. அல்லது தாய்மை, குழந்தைப் பேறு, குழந்தைகளுக்கு பாலூட்டுதல் வளர்த்தல் குடும்பத்தினர்களுக்காக சமையல் மற்றும் வீட்டு வேலை எல்லாவற்றிற்கும் சேர்த்துத் தான் அவர்களுக்கு உணவு உடை உறைவிடம் கொடுக்கிறோம் என்று சொல்வீர்களா. பயமாகத்தான் இருக்கிறது.

                      //சாட்சிகளை வைத்துத்தான் மணமுறிவை முழுமையாக்க முடியும் என்பது தெளிவா இருக்கா இல்லையா//

                      ஆமா பாய் ரொம்ப தெளிவா இருக்கு. யாருக்கும் தெரியாமா தலாக் தலாக் சொல்லிருவீங்க. யாருக்கும் தெரியாமா வீட்லயே ‘உறவில்லாம’ 3 மாசம் கழிப்பீங்க. கடைசி நாள்ல 2 பேர கூப்ட்டு, பாருங்கய்யா இனிமே எனக்கும் இந்த பொண்ணுக்கும் ஒரு உறவுமில்லன்னு தலாக் சொல்வீங்க. இதுக்கு மேல என்ன வேனுங்குறீரு. போதும் போதும் இதுவே உங்ககிட்டயிருந்து அதிகந்தாங்கறேன். ஆனா இப்படியே உங்கள விடப்படாதுன்னும் சொல்றேன்.

                    • . ”குழந்தைகள் பிறக்கப்பிறக்க அதற்கேற்றாற் போல் கணவன் சொத்தில் பங்கு வந்து கொண்டே இருக்கும் படி இசுலாமிய மதத்தில் ஏற்பாடு இருக்கிறதா? ”

                      நீர் பாலியல் தொழிலாளி மனநிலை உடையவன் [நானாக சொல்லவில்லை.உமது வாயால் ஒப்புக்கொண்டதுதான்] என்பதால் குடும்ப வாழ்க்கையையும் வணிக நோக்கிலேயே பாக்குற.குடும்பம்யா இது. உமது தொழிலில் வேண்டுமானால் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல பலனை எதிர்பாக்கலாம்.அப்படி குடும்பம் நடத்த முடியாது.

                      கணவனின் சொத்துக்கு மனைவி என்ற முறையில்தான் வாரிசுரிமை வருகிறது.குழந்தை பேறுக்கும் வாரிசுரிமைக்கும் தொடர்பில்லை.உமது கூறு கெட்ட வாதப்படி பார்த்தால் சொத்தே இல்லாத கணவனுக்கு பிள்ளை பெறவே உரிமை இருக்காதே.அதே போல் குழந்தை பேறு வாய்க்கபெறாத பெண்ணுக்கு கணவன் சொத்தில் உரிமை இல்லாமல் போகுமே.
                      [இப்படி கூறு கெட்ட வாதம் வச்சா முட்டாள்தனம்னு சொல்லித்தான் ஆகணும்.அப்புறம் முட்டாள்னு திட்டுறேன்னு ஒப்பாரி வச்சா எப்படி]

                      குழந்தை பேறுக்காக பெண்கள் படும் துன்பங்களால் ஆண்கள் அளவுக்கு உழைக்க முடியாது என்று சொன்னேன்.அதுக்கு நீர் அந்த துன்பங்களுக்காக பெண்களுக்கு சொத்துல சம பங்கு குடுங்கன்னு சொன்னீரு.அதுக்கு நான் புகுந்த வீட்டிற்காக செய்யும் தியாகங்களுக்கு ஈடாக பிறந்த வீட்டு சொத்தில் கூடுதல் உரிமை கோருவது எப்படி நியாயமாகும் என்று கேட்டதுக்கு இந்த சொத்தை வாதத்தை வைக்கீரீர்.

                      \\புகுந்த வீட்டில் மகள்களுக்கு பிறக்கும் குழந்தைகளை நீங்கள் மகன்களின் குழந்தைகளுக்குக் கட்டிக்கொள்வதில்லையா (மகர் கொடுக்காமலேயே அல்லது வாங்காமலேயே). அவர்கள் அங்கே தியாகம் செய்யாமல் உங்களின் குழந்தைகளுக்கு நிக்கா உறவுகள் எப்படிக் கிடைக்கும்? இருக்கட்டும். //

                      மகர் கொடுத்துத்தான் திருமணம் செய்ய வேண்டும்.மகர் கொடுக்காமலேயே அல்லது வாங்காமலேயே என்ற பேச்சுக்கே இடமில்லை.மேலும் உறவுகள் வலுப்பெற வேண்டும்,தலைமுறைகள் கடந்தும் தொடர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் சொந்தத்தில் சம்பந்தம் செய்து கொள்கிறார்கள்.இந்த மாதிரியான அன்பில் விளையும் உறவுகளை சொத்தால் அளப்பது அற்பத்தனம்.

                      அப்புறம் எல்லாமே காசு பணந்தானா உமக்கு.மகன்கள் சகோதரிகள் வாக்கப்பட்ட வீட்டில் பெண் எடுத்து பெண் கொடுக்கிறார்கள் என்றால் மகள்கள் சகோதரர்கள் வீட்டில் பெண் எடுத்து பெண் கொடுக்கிறார்கள்.இப்ப கணக்கு நேராயிடுதுதா இல்லையா .

                      மகர் கொடுத்துத்தான் முசுலிம்கள் திருமணம் செய்கிறார்கள்.உமக்கு ஐயம் இருந்தால் ஒரு பத்து முசுலிம் திருமணங்களுக்கு நேரில் அழைத்து சென்று காட்டுகிறேன்.பயப்பட வேண்டாம்.உம்மை ஒன்றும் கொலை செய்து விட மாட்டேன்.நாயை அடித்து பீயை சுமக்கும் அளவுக்கு நான் முட்டாளில்லை.அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து விட்டே திருமண சத்திரத்திற்கு போகலாம்.என்ன தயாரா.

                      ”நான் அவர்களுக்கு பெண்களுக்கு கொடுக்கும் பங்கில் பாதியைக் கொடுப்பதுதான் சரி என்றா சொன்னேன்.”

                      ஆண்களின் குழந்தை பருவ உழைப்பு பிந்தைய கால உழைப்பு எல்லாமும் சேர்ந்து அவர்களுக்கு சொத்தில் அளிக்கப்படும் கூடுதல் உரிமையை நியாயப்படுத்துகின்றன என்று பொருள்.அது உமது மூளைக்கு எட்டவில்லை என்றால் அதற்கு நான் என்ன செய்வது.

                      \\இதுவே உங்ககிட்டயிருந்து அதிகந்தாங்கறேன்.//

                      முதல்ல தலாக் சொல்ல சாட்சியே தேவையில்லை என அடித்து விட்டீர்.சாட்சி வேணும்னு நான் சொல்றது பொய் என்றும் குற்றம் சாட்டினீர்.சாட்சி கட்டாயம்னு ஆதாரம் காட்டி இருக்கிறேன்.ஆகா எதிராளியை பொய்யன் என தவறாக சொல்லி விட்டோமே என்ற குற்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாம இப்ப வெட்டி வியாக்கியானம் பேசுறீரு.

                      .ஒரே வீட்டில் வசிப்பது என்பது பெண் விரும்பினால் பயன்படுத்திக் கொள்ள கூடிய அனுமதியே அன்றி கட்டாயமில்லை.தலாக் பற்றி சொல்லும்போது ”நடைமுறையில்” என்ற பதத்தை பயன்படுத்தியிருக்கிறேன்,கவனிக்கவும்.மணமுறிவு என்பதே மிகவும் துன்பகரமானது.சண்டையும் சச்சரவுமாக காலம் கழியும்.அந்த சமயத்தில் பெண் பிறந்த வீட்டுக்கு வந்து விடுவார் என்பதுதான் எதார்த்தம்.சென்னையில் தலைமை காஜி அலுவலகம் ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ளது.மணமுறிவு வழக்காடுபவர்கள் அங்குதான் வருவார்கள்.அந்த அலுவலகத்துக்கு போனால் ஆண் அல்லது பெண் என எந்த தரப்பை கேட்டாலும் சொல்வார்கள்.பெண் எங்கே இருக்கிறார் என்று.

                      \\ஆனா இப்படியே உங்கள விடப்படாதுன்னும் சொல்றேன்.//

                      உம்மை போன்ற கழிசடைகளுக்கு வீர வசனம் ஒரு கேடா.

                    • //பெண்ணின் முடிவே இறுதியானது,முல்லாவின் ஒப்புதல் கட்டாயமில்லை.//
                      திப்பு பாய் இது ஏட்டளவில் மட்டுமே உள்ளது. ஆனால் நடைமுறையில்? முல்லாவின் கட்டாயம் என்பது தான் நடைமுறை சாத்தியம்

              • \\கிலாபா (அதாவது முகமதிய முறையிலான ஆட்சி) கூட கடுகளவும் சனநாயகம் இல்லாததுதான்//

                கையில் மை வைத்துக்கொண்டு ஆளும் வர்க்கங்கள் கைகாட்டும் ஒரு சில நபர்களில் ஒருவருக்கு வாக்கு போடுவதுதான் சனநாயகம் என்று எண்ணியிருப்போருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்,

                கலிபா ஆட்சி முறை பரம்பரை அரசுரிமை அல்ல,மக்களின் ஆதரவு பெற்றவர்தான் கலிபாவாக வர முடியும்.நபிகளார் காலத்திற்கு பின் அவரது அரசுக்கு வாரிசாக வந்தவர்கள் அவரது குருதி சொந்தங்கள் அல்ல.முதல் மூன்று கலிபாக்கள் நபிகளாரின் தோழர்கள்.[நபிகளாருக்கு சீடர்கள் யாரும் கிடையாது.தோழர்கள்தான் இருந்தார்கள்].நான்காவதாக வந்தவர்தான் அவரது மருமகன்.அதற்கு பின்னரும் வாரிசுரிமை யாருக்கும் தரப்படவில்லை.மக்களின் கருத்தறிந்துதான் கலிபாக்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதுதான் இசுலாமிய நெறி.அப்படி தேர்ந்தெடுக்கப்படும் கலிபாவையும் நீதி பிறழ்ந்து நடந்தால் சாதாரண குடிமக்கள் கேள்வி கேட்டு தடுக்க முடியும்.அப்படியான நிகழ்வுகள் இசுலாமிய வரலாற்றில் நடந்திருக்கின்றன.

                • திப்பு,

                  //சனநாயகம்//

                  வாக்குப்போடுவதைத்தான் சனநாயகம் என்று சுருக்கிவிட்டீர்கள். அது அவ்வளவு தான் என்று முகமதியரான நீங்கள் நினைப்பது ஒன்றும் ஆச்சரியப் படவேண்டிய விசயமில்லை.

                  // மக்களின் ஆதரவு பெற்றவர்தான் கலிபாவாக வர முடியும்//

                  மக்களின் ஆதரவை கலிபாக்கள் எப்படிப் பெற்றார்கள்? வாரிசு முறைதான் பின்பற்றப்பட்டது. சீடர் தோழர் எல்லாம் ஒன்று தான். தோழர்களில் யார் நன்கு வளைந்தார்கள் என்ற சீனியாரிட்டி முறையில் OPS வந்ததைப் போலத்தான். உங்கள் ஒப்பேற்றல் ஒரே சிரிப்பாய் இருக்கிறது. மருமகனுக்குப் பின்னும் வாரிசு முறையில் தான் கலிபாக்கள் வந்தனர். தற்போது உள்ள கலிபா தன் கும்பலில் தனக்குள்ள சீனியாரிட்டியில் [வயதல்ல] வந்திருக்கிறார்.

                  காபிர்களின் மற்றவர்களின் நிலையைப் பற்றி கூறியிருந்தேனே. அதற்கு ஒரு பதிலும் இல்லையே.

                  • \\வாக்குப்போடுவதைத்தான் சனநாயகம் என்று சுருக்கிவிட்டீர்கள்.//

                    யுனிக்கு தமிழ் தெரியுமா தெரியாதா.அது மட்டுமே சனநாயகம் ஆகாது என்பதுதான் நான் எழுதியதற்கு பொருள் .

                    \\அது அவ்வளவு தான் என்று முகமதியரான நீங்கள் நினைப்பது ஒன்றும் ஆச்சரியப் படவேண்டிய விசயமில்லை.//

                    இதைத்தான் முசுலிம்கள் மீதான உங்களுடைய வன்மம் என்கிறோம்.முசுலிம்னாலே முட்டாளாத்தான் இருப்பான்.அதுனாலதான் நீயும் இப்படி பேசுற என்கிறீர்.
                    நீர் அரைகுறையான பொருள் சொல்லி விட்டு என்னை முட்டாள் என்கிறீர்.

                    அண்மையில் கூட உம்மை கழிசடை,அரைவேக்காடு என்று அம்பி அழைத்தார்.பொருத்தமான பட்டம்தான்.உம்மை போன்ற மதவெறி கழிசடையை,எதிராளி எழுதுவதை திரித்து புரட்டி பொருள் சொல்லும் அரைவேக்காட்டை எல்லாம் அவை நாகரீகம் கருதி மரியாதை கொடுத்து அழைத்து பேச வேண்டியிருக்கு.

                    \\மக்களின் ஆதரவை கலிபாக்கள் எப்படிப் பெற்றார்கள்? வாரிசு முறைதான் பின்பற்றப்பட்டது. //

                    நபிகளாரின் இறப்புக்கு பின் கூடியிருந்த மக்கள் கூட்டமே அபுபக்கரை கலிபாவாக்கியது.நபிகளாருக்கு பின் கலிபாவாக வந்த அபுபக்கர்,உமர்,உதுமான் ஆகியோர் அவரது வாரிசுகள் அல்ல.நான்காவதாக வந்த அலியை வேண்டுமானால் மருமகன் என்ற முறையில் வாரிசு என சொல்லலாம்.[நபிகளாருக்கு ஆண் பிள்ளை கிடையாது] அவரும் தகுதி அடிப்படையில்தான் வந்தாரே ஒழிய வாரிசு அடிப்படையில் அல்ல.நபிகளார் காலத்திற்கு பின் பிணக்குகள் வந்த போது நபிகளாரின் குருதி வாரிசுகளுக்கு எதிராகவே நபித்தோழர்கள் வாளேந்தி இருக்கிறார்கள்.

                    \\ சீடர் தோழர் எல்லாம் ஒன்று தான். //

                    நீர் ஒரு மங்குனி அமைச்சர் என்பதை மணிக்கொருமுறை மெய்ப்பித்துக் கொண்டே இருக்குறீர். இங்கு எல்லோருக்கும் தெரிந்த தமிழையே திரித்து புரட்டி பொருள் சொல்லும் நீர் உண்மையிலேயே அரைவேக்காடுதான்.

                    \\தோழர்களில் யார் நன்கு வளைந்தார்கள் என்ற சீனியாரிட்டி முறையில் OPS வந்ததைப் போலத்தான். உங்கள் ஒப்பேற்றல் ஒரே சிரிப்பாய் இருக்கிறது. //

                    நபியின் தோழர்கள் சுய மரியாதை மிக்க மாமனிதர்கள்.இறைவனை தவிர்த்து வேறு யார் முன்னும் பணிந்து நிற்காதவர்கள்.அப்படி பணிந்து நின்று காரியம் சாதிப்பதை அறவே வெறுத்து ஒதுக்கியவர்கள்.அவர்கள் அப்படி இருந்ததற்கு காரணம் நபிகள் நாயகம் வாழ்க்கை நெறியாக அவர்களுக்கு கற்றுக் கொடுத்திருந்த இசுலாம்தான்.இதை விளக்க இசுலாமிய வரலாற்றிலிருந்து ஒரு நிகழ்வை பதிவு செய்கிறேன்.

                    நபிகள் அனுப்பிய தூதுக் குழு ஒன்று எத்தியோப்பிய மன்னரை சந்திக்க சென்றிருந்தது.மன்னர் தர்பார் மண்டபத்திற்கு வந்த போது அவையில் இருந்தவர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள் நபியின் தோழர்கள் மட்டும் உட்கார்ந்தபடியே மன்னருக்கு இசுலாமிய முறைப்படி முகமன் கூறினார்கள்.இதனால் துணுக்குற்ற தலைமை அமைச்சர் ஏன் நீங்கள் எழுந்து நிற்கவில்லை என்று கேட்டார்.அவர்கள் சொன்னார்கள். நாங்கள் இறைவனுக்கு மட்டுமே நின்று மரியாதை செலுத்துவோம்.மனிதர்களுக்கு அல்ல என்று. ஆச்சரியப்பட்ட தலைமை அமைச்சர் ,உங்கள் மன்னர்,இறை தூதராக நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ள முகமதுவுக்கும் அப்படித்தானா என்று கேட்டார்.முகமதுவுக்கு மட்டுமல்ல அவரை விட பெரிய ஆள் என்று ஒருவர் இருந்தாலும் அவருக்கும் அப்படித்தான் என்று பதில் அளித்தார்கள் நபியின் தோழர்கள்.அதே போன்று மனிதர்களின் காலில் விழுந்து வணங்குவதையும் இசுலாம் தடை செய்கிறது.இவ்வளவு சுய மரியாதை மிக்க நபித்தோழர்களை ஜெயலலிதாவின் காலை நக்கிப்பிழைக்கும் அடிமைகளுடன் ஒப்பிடுகிறீர்.
                    அதுசரி.நக்குற நாய்க்கு செக்கென்ன,சிவலிங்கமென்ன எல்லாம் ஒண்ணுதான்.

                    \\மருமகனுக்குப் பின்னும் வாரிசு முறையில் தான் கலிபாக்கள் வந்தனர்//

                    அலிக்கு பின் வந்த முஆவியா அவரது வாரிசு அல்ல.

                    \\தற்போது உள்ள கலிபா தன் கும்பலில் தனக்குள்ள சீனியாரிட்டியில் [வயதல்ல] வந்திருக்கிறார்.//

                    தற்போது தன்னை கலிபா என கூறிக்கொள்ளும் அமெரிக்க கைக்கூலியை கலிபாவாக ஏற்கும் இழிநிலையில் முசுலிம்கள் இல்லை.IS இயக்கத்தையே இசுலாத்திற்கு எதிரானவர்கள் என்று பல இசுலாமிய அறிஞர்கள் கூறி வருகிறார்கள்.

                    \\காபிர்களின் மற்றவர்களின் நிலையைப் பற்றி கூறியிருந்தேனே. அதற்கு ஒரு பதிலும் இல்லையே.//

                    இந்த மதவெறி ஊளைக்கு பதில் ஒரு கேடா.முசுலிம்கள் ஆட்சியில் மாற்று மதத்தவர்கள் வாழ முடியாது என்று கள்ளப்பரப்புரை செய்வோரின் முகத்தில் வரலாறு கரி பூசிக் கொண்டிருக்கிறது.கிட்டத்தட்ட பதினான்கு நூற்றாண்டுகள் மைய கிழக்கு ஆசிய,வட ஆப்பிரிக்க பகுதிகளை முசுலிம்கள் ஆட்சி செய்து வருகிறார்கள்.இன்றளவும் அங்கு கிறித்தவர்களும் பிற நம்பிக்கைகளை பின்பற்றுவோரும் வாழ்ந்து வருகிறார்கள்.

                  • திப்பு,

                    // மக்கள் கூட்டமே அபுபக்கரை கலிபாவாக்கியது//

                    மக்களாட்சி என்பது வாக்குப் போடுவது மட்டுமல்ல. காலத்திற்கேற்ற சட்டங்கள் இயற்றுவதும் மாற்றங்கள் செய்வதும் தான். உலகமெங்கும் முகமதியர்கள் (முஸ்லிம்களல்ல) மக்களாட்சி முறையை ஷைத்தானின் வேலையென்றுதான் கூவி வருகிறார்கள். அவர்களுக்கு எல்லா சட்டங்களும் தயாராக இருக்கிறது. மனிதர்கள் ஒன்று கூடி தயாரித்துக் கொள்ளும் சட்டங்களை அவர்கள் ஏற்பதில்லை மதிப்பதில்லை. இதைத்தான் நான் மேலே குறிப்பிட்டேன்.

                    // தூதுக் குழு//

                    இது முகமதியர்களின் உத்திகளில் ஒன்று. அதாவது அடாவடியாக நடந்து கொண்டு தங்கள் கருத்தை நிலைநாட்ட முயற்சிப்பது. அந்த குழு பிறகு எழுந்து நின்று மரியாதை செலுத்த வைக்கப்பட்டிருக்கலாம். அதைப்பற்றி பதிவுகள் இருக்காது.

                    // அலிக்கு பின் வந்த முஆவியா அவரது வாரிசு அல்ல.//

                    முகமதுக்கு ஆண்குழந்தை இருந்திருந்து அவர் கலிபாவாக வரவில்லை என்றால் வாரிசு முறையில்லை என்று ஒத்துக் கொள்ளலாம். முதல் நால்வரும் சீனியாரிட்டியில் வந்தவர்கள். இதற்கும் வாரிசு முறைக்கும் வேறுபாடு இல்லை. பிறகு வந்த பல கலிபாக்கள் வாரிசு முறையில் வந்தவைதான். கலிபாக்களின் வரலாற்றைப் பார்ப்பவர்கள் தெரிந்து கொள்ளட்டும். பிறகு வந்த அனைவரும், தற்போதைய கலிபாவை உட்பட, ஏதோ ஒரு விதத்தில் முகமதின் அல்லது முகமதின் குலமான குரைசியின் வாரிசாகத்தான் காட்டிக்கொள்கிறார்கள்.

                    // முசுலிம்கள் ஆட்சியில் மாற்று மதத்தவர்கள் வாழ முடியாது என்று கள்ளப்பரப்புரை//

                    அவர்கள் தங்கள் தலையைத் தக்கவைத்துக் கொள்ளவே ஒரு வரி கட்டினார்கள் எனும் போது அவர்களின் நிலை பரிதாபம் என்று தானே நான் சொல்லியிருக்கிறேன். முற்றிலுமாக வாழ முடியாது என்று நான் சொல்லவில்லையே. எகிப்தில் பெரும்பான்மையாக இருந்த கிருத்தவர்கள் இன்று 10 சதம் அளவிற்கு குறைந்து போயுள்ளார்கள். இதே நிலைதான் பல முகமதியநாடுகளிலும். பாகிஸ்தானிலும் பங்களாதேசிலும் இந்துக்களின் மக்கள் தொகையின் தொடர்ச்சியான குறைவையும் கணக்கில் கொள்ள வேண்டும். மாற்று மத பெண்கள் தொடர்ச்சியாக கடத்தப்பட்டு முஸ்லிமாக்கப்பட்டு அபகரிக்கப்படுவதும் அவர்களின் எண்ணிக்கை குறைவிற்குக் காரணமாக இருக்கிறது. மேலும் முநாபிக்குகளும் முர்தாதுகளும் முஸ்லிம்களாக நடித்து செத்து செத்து வாழ வேண்டியும் இருக்கும் நிலையும் பரிதாபமாகத்தான் எனக்குப் படுகிறது.

                    தொடரும்.

                    • //காலத்திற்கேற்ற சட்டங்கள் இயற்றுவதும் மாற்றங்கள் செய்வதும் தான். உலகமெங்கும் முகமதியர்கள் (முஸ்லிம்களல்ல) மக்களாட்சி முறையை ஷைத்தானின் வேலையென்றுதான் கூவி வருகிறார்கள். அவர்களுக்கு எல்லா சட்டங்களும் தயாராக இருக்கிறது. மனிதர்கள் ஒன்று கூடி தயாரித்துக் கொள்ளும் சட்டங்களை அவர்கள் ஏற்பதில்லை மதிப்பதில்லை. இதைத்தான் நான் மேலே குறிப்பிட்டேன்.\\
                      காலத்தையும் நேரத்தையும் பார்த்து சட்டம் ஏற்றப்படுதல் வேண்டுமா அல்லது எல்லா காலத்திற்க்கும் பொருந்தும் வகையில் சட்டம் இயற்றப்படுதல் வேண்டுமா? மனிதனால் உருவாக்கப்படும் சட்டம் நிச்சயமாக குறிப்பிட்ட காலம் வரைதான் பயனளிக்கும் . ஏனனில் மனிதனின் முற்போக்கு சிந்தனை குறிப்பிட்ட எல்லைவரைதான் பயணிக்கும் . ஆனால் படைத்தவனின் சட்டம் மனிதன் உயிர்வாழும் வரை உயிர்வாழ கூடியது பயன் அளிக்கக்குடியது என்பதுதான் நிதர்சனம்.

                      //முகம்மதியர்கள்|\\ அப்படியாரும் இல்லை இஸ்லாமியர்கள் தான் உள்ளனர் . இல்லாத ஒன்றை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை.

                      //அதைப்பற்றி பதிவுகள் இருக்காது\\ பதிவுகளில் இல்லாதவிஷயங்கள் எல்லாம் தங்களின் கனவுலகத்தில் காண்கிறீர்களோ . இதைதான் முன்னவே சொன்னேன் இஸ்லாமியர்கள் என்று ஒரு வார்த்தையை கேட்டுவிட்டாளே தாங்கள் தங்களின் கற்பனை குதிரையில் இல்லாத ஊருக்கும் அதிலுள்ள தெருவுக்கும் பயணம் செய்கிறீர்கள் என்று… உங்களின் கனவு கலையும் நாள் எந்நாளோ அன்றுதான் நிஜ உலகிற்க்கு வருவீர்கள் போல் தெரிகிறது.

                      //முகமதுக்கு ஆண்குழந்தை இருந்திருந்து அவர் கலிபாவாக வரவில்லை என்றால் வாரிசு முறையில்லை என்று ஒத்துக் கொள்ளலாம். \\ அட கிறுக்கு பயலே அதான் மறு + மகன் இருந்தாரே , அவரும் ரத்த சொந்தம் ஆயேற்றே. வாரிசு முறை என்ற ஒன்று இருந்திருந்தால் அவருக்கு கொடுத்திருக்கலாம் தானே . இதெல்லாம் உம்முடைய அறிவுக்கு எட்டாதோ?

                      //முதல் நால்வரும் சீனியாரிட்டியில் வந்தவர்கள். இதற்கும் வாரிசு முறைக்கும் வேறுபாடு இல்லை\\ சீனியாரிட்டியும் வாரிசுரிமையும் ஒன்று என்று சொன்ன ஒரே ஒரு அறிவாளி தாங்கள் தான். இந்த கருத்தை உட்திரமெரூர் கல்வெட்டில் எழுதிவைத்து விட்டு பக்கத்திலேயே உக்கார்ந்துக்கொள்ளும் . ஏனென்றால் பின்னாடி வரும் யாராவது இந்த அறிய கருத்தை தம்முடையது என்று சொந்தம் கொண்டாடி விடுவர்.

                      தூக்கட்தில் இருந்து கொஞ்சம் முழிங்க சார் . அநியாயத்துக்கு உலருகிரீரே.

                      //அவர்கள் தங்கள் தலையைத் தக்கவைத்துக் கொள்ளவே ஒரு வரி கட்டினார்கள் எனும் போது அவர்களின் நிலை பரிதாபம் என்று தானே நான் சொல்லியிருக்கிறேன். முற்றிலுமாக வாழ முடியாது என்று நான் சொல்லவில்லையே.\\ ஜிஸ்யா வரி பற்றி முதலில் அறிந்துக்கொண்டு உலரும். இந்த வரியை கட்டியவர்களின் உயிருக்கும் உடமைக்கும் உள்நாட்டில் மட்டும் அல்ல வெளி ஆளுகையில் இருந்து அச்சுரத்தல் வந்தாலும் சிஷ்ய வரி வாங்கும் அரசானது அவர்களை காப்பற்றுவத்ர்க்காக போராடும் . இதுவும் உம்முடைய கண்களில் படுவதற்கு சாத்தியம் இல்லை .ஏனன்றால் தங்களின் இஸ்லாமிய எதிர்ப்பு கொள்கைக்கு இது எந்த விதத்திலும் உதவாதே.
                      //எகிப்தில் பெரும்பான்மையாக இருந்த கிருத்தவர்கள் இன்று 10 சதம் அளவிற்கு குறைந்து போயுள்ளார்கள். இதே நிலைதான் பல முகமதியநாடுகளிலும். பாகிஸ்தானிலும் பங்களாதேசிலும் இந்துக்களின் மக்கள் தொகையின் தொடர்ச்சியான குறைவையும் கணக்கில் கொள்ள வேண்டும். \\ எந்த மதத்தின் மீதும் ஈடுபாடு பற்றுதல் இல்லை என்று பீற்றிக்கொள்ளும் உமக்கேன் அந்த கவலை. ஒன்று நாத்திகனாய் இரு இல்லை ஆத்திகனாய் இரு . இந்த இரண்டிற்க்கும் மத்தியில் நடிகனாய் இன்னும் எத்தனை நாள் வளம் வரப்போவதாக உத்தேசம்.

                      //மாற்று மத பெண்கள் தொடர்ச்சியாக கடத்தப்பட்டு முஸ்லிமாக்கப்பட்டு அபகரிக்கப்படுவதும் அவர்களின் எண்ணிக்கை குறைவிற்குக் காரணமாக இருக்கிறது. \\ அட கிறுக்கு பயலே , நீ எந்த கால கட்டத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறாய் . ஒரு வேலை நீ சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில் 1).இஸ்லாத்திற்க்கு எதிராக எது வந்தாலும் ப்ரசொரிக்கும் ஊடகங்கள் அதனை வெளி இடாமல் இருக்குமா? 2)கடத்தப்படும் போது அரசாங்கமும் காவல் துறையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்குமா? அப்படி எங்கேனும் நடந்திருந்தால் தயவுசைது இங்கே ஆதாரத்தோடு பதிவிடு சம்பந்தப்பட்ட காவல்துறையை அணுகி தக்க நடவடிக்கை எடுத்து நாட்டின் அமைதிக்கு வழிவகுப்போம். 3) கடத்தப்படும் பெண்கள் என்ன ஊமைகளா அல்லது புத்தி சுவாதீனம் இல்லாதவர்களா . ஏனன்றால் அவ்வாறு இருந்தால் மட்டுமே சம்பந்தப்பட்டவர்களின் மீது புகார் கொடுக்காமல் இருப்பார்கள் .தற்போது ஊமைகளுக்கு கூட எழுத்து முறை உள்ளது . எனவே , புத்தி சுவாதீனம் இல்லாதவர்களாக இருப்பார்களோ? விளக்கவும்.
                      \\முநாபிக்குகளும் முர்தாதுகளும் முஸ்லிம்களாக நடித்து செத்து செத்து வாழ வேண்டியும் இருக்கும் நிலையும் பரிதாபமாகத்தான் எனக்குப் படுகிறது.\\ இதிலிருந்து உங்களுக்கு முனாபிக் முர்தத் என்ற இரு அரபி வார்த்தைகள் தெரிந்திருக்கிறது என்று புரியமுடிகிறது.
                      தாங்கள் இவ்விரண்டில் எந்த வகை . ஏனன்றால் ஒரு இடத்தில் தன்னை ஒரு சமூக சீர்திருத்தவாதியாகவும் பொதுவுடமைவாதியாகவும் அடையாளப்படுத்திக்கொள்ளும் தாங்கள் பல இடங்களின் தங்களின் அடிப்படை இல்லாத காழ்ப்புணர்வு கருத்துக்களால் நயவஞ்சகராக காட்சியளிக்கிரீர்கள் . நீங்கள் நல்லவரா? கெட்டவரா? அங்கிள்.

                    • \\மக்களாட்சி என்பது வாக்குப் போடுவது மட்டுமல்ல……………மனிதர்கள் ஒன்று கூடி தயாரித்துக் கொள்ளும் சட்டங்களை அவர்கள் ஏற்பதில்லை //

                      பினாத்தலுக்கு அளவே இல்லையா.நான்கு பொருட்கள் தவிர்த்து மீதியுள்ள பொதுவான சட்டங்களை இந்திய முசுலிம்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா.முசுலிம்கள் பெரும்பான்மையாக வாழும் துருக்கி மதசார்பற்ற நாடாக இருக்கவில்லையா.உலகிலேயே அதிகமான முசுலிம் மக்கள் தொகை கொண்ட இந்தோனேசியாவில் குற்றங்களுக்கு சரியத் சட்டம் அமுலில் இல்லை

                      \\இது முகமதியர்களின் உத்திகளில் ஒன்று. அதாவது அடாவடியாக நடந்து கொண்டு தங்கள் கருத்தை நிலைநாட்ட முயற்சிப்பது.//

                      உமது விதண்டாவாதத்துக்கு அளவே இல்லையா.அடாவடி என்பதன் பொருள் என்ன.தன்னளவில் ஒரு செயலை செய்ய மறுப்பது அடாவடி ஆகாது.உமது ஆட்டு மூளையில் ஏற எளிமையா சொல்றேன்.குற்றவாளி செயலலிதாவுக்காக அ.தி.மு.க காலிகள் கட்டாயப்படுத்தி கடை அடைக்க சொல்வது அடாவடி.அப்படி அடைக்க முடியாது என மறுப்பது அடாவடி ஆகாது.

                      காரியம் பெரிதா வீரியம் பெரிதா,Be Roman while in Rome,பாம்பு திங்குற ஊருக்கு போனா நடுத்துண்டு நம்மளுக்கு போன்ற பழமொழிகள் பழங்காலத்திலேயே மனிதர்களிடம் காரியவாதம் வேரூன்றியிருந்ததை காட்டுகின்றன.ஆனால் நபித்தோழர்களோ போன காரியம் ஆவலன்னாலும் பரவாயில்லை,சுய மரியாதை கொள்கையை விட்டுக்கொடுக்க முடியாது என உறுதியாக இருந்திருக்கின்றனர்.மான, ரோஷம் உள்ள மனிதர்கள் மட்டுமே அந்த உணர்வை புரிந்து கொள்ள முடியும்.உம்மை போன்ற கூலிக்கு மாரடிக்கும் ஆசாமிகளுக்கு புரியாதுதான்.

                      \\அந்த குழு பிறகு எழுந்து நின்று மரியாதை செலுத்த வைக்கப்பட்டிருக்கலாம். அதைப்பற்றி பதிவுகள் இருக்காது.//

                      இசுலாம் பற்றியும் நபிகளார் பற்றியும் வைக்கப்படும் விமர்சனங்களுக்கும் தேவையான தகவல்களை அளிப்பதே ஹதீது தொகுப்புகள்தான்.அந்த அளவுக்கு விருப்பு வெறுப்பு இன்றி வரலாற்று நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.21 ஆம் நூற்றாண்டில் அரைவேக்காடுகள் கேள்வி கேட்பார்களே என பயந்து அந்த குழு பிறகு எழுந்து நின்று மரியாதை செலுத்த வைக்கப்பட்டிருந்தால் அதை மறைத்திருப்பார்கள் என்று மன நோயாளிகள் மட்டுமே நம்பலாம்.

                      \\முதல் நால்வரும் சீனியாரிட்டியில் வந்தவர்கள். இதற்கும் வாரிசு முறைக்கும் வேறுபாடு இல்லை//

                      என்ன அறிவு,என்ன அறிவு.

                      \\பிறகு வந்த பல கலிபாக்கள் வாரிசு முறையில் வந்தவைதான். கலிபாக்களின் வரலாற்றைப் பார்ப்பவர்கள் தெரிந்து கொள்ளட்டும். //

                      தாராளமாக.இசுலாமிய வரலாறு திறந்த புத்தகம்.யார் வேண்டுமானாலும் படித்து தெரிந்து கொள்ளலாம்.அப்படி படிப்பதை முசுலிம்களும் விரும்புகிறோம்.உம்மை போன்றோரின் அவதூறுகளுக்கு அதுவே சிறந்த பதிலாக அமையும்.

                      \\எகிப்தில் பெரும்பான்மையாக இருந்த கிருத்தவர்கள் இன்று 10 சதம் அளவிற்கு குறைந்து போயுள்ளார்கள்…………………மாற்று மத பெண்கள் தொடர்ச்சியாக கடத்தப்பட்டு முஸ்லிமாக்கப்பட்டு அபகரிக்கப்படுவதும் அவர்களின் எண்ணிக்கை குறைவிற்குக் காரணமாக இருக்கிறது.//

                      ஆட்சி அதிகாரம்,வலுபிரயோகம் மூலமாக மத மாற்றம் செய்ய முடியாது.மத நம்பிக்கை என்பது ஒரு மனிதனின் உள்ளத்தில் ஏற்பட வேண்டியது.கட்டாயப்படுத்துவது எப்படி ஏற்கனவே உள்ள மத நம்பிக்கையை நீக்கி விட்டு புதிய நம்பிக்கையை அந்த இடத்தில் இருத்தும்.தானாக மாற்றம் ஏற்பட்டால்தான் உண்டு.

                      இதனை விளக்க அருமையான சான்று ஒன்று உள்ளது.உலகிலேயே அதிக முசுலிம் மக்கள் தொகை கொண்ட நாடான இந்தோனேசியாவில் வரலாற்றின் எந்த கால கட்டத்திலும் முசுலிம்கள் ஆட்சி செய்ததில்லை.

                      பெண்களை கடத்துவதாக சொல்வது பற்றி சகோதரர் சகிர் பதில் சொல்லி இருக்கிறார்.

                      \\முநாபிக்குகளும் முர்தாதுகளும் முஸ்லிம்களாக நடித்து செத்து செத்து வாழ வேண்டியும் இருக்கும் நிலையும் பரிதாபமாகத்தான் எனக்குப் படுகிறது.//

                      முதலில் முநாபிக் முர்தாது சொற்களுக்கு தமிழில் பொருள் சொல்லும்.உமது பித்தலாட்டம் தானாகவே அம்பலமாகும்.யார் யாருக்கு தீங்கு செய்ய கூடும் என்பதையும் படிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம்.

                • திப்பு ,

                  உண்மையில் துங்குபவர்களை எழுப்பிவிடலாம் ஆனால் தூன்குவது போல் நடிப்பவர்களை எழுப்பவே முடியாது… உனிவெர்புட்ட்ய் ஆனா இவருக்கு சொந்த அறிவு என்ற ஒன்று இல்லை சுய சிந்தனையும் இல்லை என்பதைத்தான் கருத்துக்கு கருத்து நிரூபிட்துக்கொண்டிருக்கிரார்.. முந்தைய நாட்களில் அலிசேன என்ற கிறுக்கு கைகூலியை பின்பற்றி அவன் சொன்ன விஷயங்களை எல்லாம் இங்கு பட்டியல் இட்டார் . ஆனால் அளிசெனாவின் எந்தகருத்தும் புதியதும் இல்லை அது ஏற்கனவே சில இஸ்ரேவேல தோழர்கள் மற்றும் கிருத்துவ நண்பர்களால் எழுப்பப்பட்ட கேள்விகள் அதற்க்கான தெளிவான பதில்கள் மற்றும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டதை எல்லாம் அமீன் என்ற தோழர் வெளி இட்டபோது சாயம் வெளுத்ததை உணர்ந்து அலிசெனாவை ஓரம்கட்டிவிட்டு , பின்பு இன்னும் இஸ்லாத்திற்க்கு எதிராக யாருடைய கருத்துக்களாவது உள்ளதா என்று தேடி கண்டுபிடித்து அன்ச்வேரிங் இஸ்லாம் என்ற இணைய லிங்கை போட்டார் , பின்பு முஹம்மதியத்துக்கான ஆதாரம் கேட்கப்பட்ட போது கொடுக்க முடியாமையால் அம்பேத்கரை வம்பில் இழுத்துவிட்டார். மொத்தத்தில் தனக்கு சுய சிந்தனை என்ற ஒன்றும் ஆராய்ந்து உணரும் தன்மையையும் தன்னிடம் இல்லாமையால் மற்றவர்களின் கருத்துக்களில் தன்னுடைய கருத்துக்களாக வெளி இடுகிறார்.

                  இவருக்கு தாங்கள் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் வீன்விரையமானதே…

          • Univerbuddy,

            //Muhamadans and kaffirs)\\ There is no religion in this face named as muhammadans and there is no human who worships muhammad(sal) as God. So, in what basis you are quoting muhammadans. Please clarify….

            //Man and Woman are equal.\\ There are equal not the same..

              • Univerbuddy

                //Muhamadans=followers of Muhamad\\… What do you mean to say by this , Muslim only follows and believes in Mohammed (sal). whether following one particular person could create new religion? so, who ever got followers are considered as separate religions in your point of view. Let the people identify your stupidity.

                We Muslims believe in Adam(alai) to Mohammed(sal) as prophets.So, in this case what will you name us.

                Again and again saying there is no religion named as mohammaden and there is no human says mohammed(sal) as God and he is a prophet of god for whom believes in Islaam that’s it . So, your wording muhammadan is meaningless and baseless.

  6. வினவு பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறதா? அப்படியெனில் ஏன்? பி.ஜெ.பி கூறும் பொது சிவில் சட்டம் ஒரு வகையான மனுநீதி சட்டமாகத்தான் இருக்கும் என்பதை எவ்வாறு சொல்கிறீர்கள்? பி.ஜெ.பி யின் யோக்கிதை நமக்கு தெரிந்த சங்கதிதான் ஆனால் சரியான வகையிலான பொது சிவில் சட்டம் வரும் வகையில் வினவு தன் பனியினை செய்யலாமே?

  7. முதலில் ஒரு முக்கியமான விசயத்தை கூறிவிடுகிறேன். பிஜேபி ஒன்றும் இந்து மத சட்டத்தை பிற மதத்தவர்களை ஏற்றுக்கொள்ள சொல்லி வற்புறுத்தவில்லை. அனைத்து மதத்தவர்களுக்கும் ஒரே மாதிரியான பொதுவான சிவில் சட்டத்தை தான் அமல்படுத்த சொல்கிறது.70 சதவிகிதம் கிருஸ்தவர்கள் வாழும் கோவாவில் தற்போது பொது சிவில்சட்டம் தான் நடைமுறையில் இருக்கிறது. அங்கு பிஜேபிதான் ஆளும் கட்சி. அங்கு என்ன இந்து திருமண சட்டமா நடைமுறை படுத்தப்பட்டுவிட்டது? கிருஸ்தவர்களுக்கு பொது சிவில்சட்டம் கொண்டு வருவதில் எந்த பிரச்சனையும் இல்லை. இதை எதிர்க்க கூடியவர்கள் இஸ்லாமிய பிற்போக்கு மதவெறியர்கள் மற்றும் அவர்களுக்கு கூஜா தூக்ககூடிய போலி மதச்சார்பின்மைவாதிகள் தான். இதனால் பெரிதும் பாதிக்கப்படக் கூடியர்கள் இஸ்லாமிய பெண்கள்.
    ஜரோப்பிய நாடுகள் மற்றும் அமேரிக்கா போன்ற நாடுகளில் பொது சிவில்சட்டம் தானே நடைமுறையில் உள்ளது. அப்படியென்றால் அவர்களெல்லாம் மதச்சார்பற்ற நாடுகள் இல்லையா? இன்னும் ஒரு மேலாதிக தகவல் ”ஷபானு“ விசயத்தில் இஸ்லாமிய மதவெறியர்களிடம் ராஜீவ் அரசு பணிந்ததை கண்டித்து அவரது அமைச்சரவையில் இருந்த ஒ‌ரு முஸ்லீம் அமைச்சர் தம் பதவியை ராஜினாமா செய்தார். எனவே தயவுசெய்து இஸ்லாமியர்கள் அனைவரும் இந்த சட்டத்தை எதிர்பதாக கூறாதீர்கள். இஸ்லாமியர்கள் அனைவரையும் வகாபி மதவெறியர்களின் பக்கம் நீங்களே தள்ளிவிட்டு விடாதீர்கள்.

    • வழிபாட்டு உரிமைக்கு வாயே திறக்காதே பிஜேபி, பொதுசிவில் சட்டம் என்று சொல்வது வெறும் பம்மாத்து என்று தெரிந்தும் தெரியாது போல் நடிக்கிறார் கண்ணன். ஒருவேளை அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது சிவில் சட்டத்தில் வராதோ என்னவோ? பார்ப்பனர்களின் மரபு தான் இந்துக்களின் மரபு என்று அரசியல் சாசனத்தில் எழுதிவைத்துவிட்டு, இப்பொழுது ஆர் எஸ் எஸ் பொதுசிவில் சட்டம் பேசுவதை எந்த மானமுள்ள இந்தமத பக்தன் ஏற்பனா?

      ஒரு இந்துவிற்கே பொதுசிவில் சட்டத்தில் எந்த உரிமையும் இல்லை என்கிற பொழுது முசுலீம் பெண்களுக்காக பிஜேபி பொதுசிவில் சட்டத்தைக் கொண்டு வருகிறது என்று சொல்வது கடைந்தெடுத்த நாதாரித்தனம்.

    • Kannan

      //இதை எதிர்க்க கூடியவர்கள் இஸ்லாமிய பிற்போக்கு மதவெறியர்கள் மற்றும் அவர்களுக்கு கூஜா தூக்ககூடிய போலி மதச்சார்பின்மைவாதிகள் தான். \\
      சட்டமில்லாதவர்கள் தங்களுக்கென்று ஒரு புது சட்டத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் , ஆனால் இஸ்லாமியர்களுக்கென்று ஒரு சட்டம் இருக்கிறது அதனை இஸ்லாமியர்களே ஏற்றுக்கொள்கிறார்கள் அதனை அவர்கள் ஒரு குறையாகவோ, அடக்குமுரையாகவோ சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியாதபோது மற்றவர்கள் ஏன் அதனை அடக்குமுறை என்று சொல்லி தைய தக்க என்று குதிக்கவேண்டும்.

      முதலில் உள்ள சட்டத்தில் பொதுத்தன்மையை கொண்டுவாரட்டும் , ஆண்டிக்கு ஒரு சட்டம் ஆள்பவனுக்கு ஒரு சட்டம் என்ற நிலை மாறட்டும் . பின்பு இந்த பொதுச்சட்டம் சன்பந்தமான விவாதத்திற்க்கு வருவோம். உள்ள சட்டத்தில் இல்லாத பொதுத்தன்மையா பொது சிவில் சட்டத்தினால் வந்து விட போகிறது…

  8. பொது சிவில் சட்டம் தேவையில்லை என்றால் மதச் சட்டங்களில் மாற்றம் செய்ய வேண்டும், என்னென்ன மாற்றம் வேண்டும் என்று கூட எழுதலாமே.அரசியல் சட்டத்தின் வழிகாட்டு நெறிகளில் பொது சிவில் சட்டம் ஏன் குறிப்பிடப்பட்டது.அண்மையில் சட்ட கமிஷன் கிறித்துவ தனி நபர் சட்டங்களில் மாற்றம் தேவை என்று பரிந்துரை செய்ததே. அது ஏன் என்று வினவிற்கு தெரியுமா. மேரி ராய் தன் பூர்விக சொத்தில் நியாயமான பங்கு கேட்டு ஏன் நீதிமன்றம் சென்றார்.அந்த வழக்கு பற்றி வினவில் எழுதுவீர்களா.
    பொது சிவில் சட்டத்தை எதிர்ப்போம் ஏனெனில் அதை பாஜக கூறுகிறது, மத சட்டங்களில் மாற்றம் பற்றி உருப்படியாக எதையும் தெரிவிக்க மாட்டோம். இதுதான் இவர்களின் வாதம். அம்பேத்கர் கொண்டுவர விரும்பிய திருத்தம் பின்னர் நிறைவேறியது. அதற்கு பின்னரும் ஹிந்து தனி நபர் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. எனவே பழைய கதைக்கு இன்று தேவையில்லை. இன்று என்ன தேவை, என்ன செய்ய வேண்டும் என்றுதான் சிந்திக்க வேண்டும். பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டால் பெண்ணுரிமை மேம்படும், அனைவருக்கும் ஒரே சட்டம் என்றாகி பாலின பாகுபாடு மறையும்.
    ‘ஜரோப்பிய நாடுகள் மற்றும் அமேரிக்கா போன்ற நாடுகளில் பொது சிவில்சட்டம் தானே நடைமுறையில் உள்ளது.’
    ஆகவே பொது சிவில் சட்டம் முதலாளித்துவ இந்த்துவ சதி என்பது உறுதியாகிறது என்று வினவில் எழுதுவார்கள் :).

  9. அனைத்து மதங்களுக்குமான பொது சிவில் சட்டம் கொண்டுவரும் முன் இந்து மதத்திற்கான பொது சட்டத்தை பிராமணர்களையும் உள்ளடக்கி கொண்டுவர வேண்டும்.கோவில் கருவறையில் இருந்து துவங்கவேண்டும். சங்கராச்சாரிகளாக பிற சாதியினரும் வர வேண்டும்.பெண்கள் உள்ளிட்ட அனைவரும் அர்ச்சகர் ஆக வேண்டும்.இதில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டால் அதன் பின் அனைத்து மதங்களுக்குமான பொது சிவில் சட்டத்தை கொண்டுவரலாம்.

    • /சங்கராச்சாரிகளாக பிற சாதியினரும் வர வேண்டும்.பெண்கள் உள்ளிட்ட அனைவரும் அர்ச்சகர் ஆக வேண்டும்/

      இதை கண்டிப்பாக எல்லா இந்தூவும் ஆதரிக்கவேண்டும்! ஜெயேந்திரர், தேவனாதன் போன்றோர் பெண் விக்கிரகஙளை தொட்டு அபிஷேக ஆராதனை செய்வதை எந்த பக்தர் ஏற்றுக்கொள்வார்? பெண் சாமிகளுக்கு பெண் பூசாரிகளையே அர்ச்சகராக நியமிக்க வேண்டும்!

  10. பிராமணர்களையும் உள்ளடக்கி கொண்டுவர வேண்டும் என்றால், அது நிச்சயம் மனுஸ்மிருதியாகத்தன் இருக்கவேண்டும்! சங்கராச்சாரியை விசாரிப்பதா, அது அபச்சாரம் என்று அரண்டோடிய கட்ஜு போன்ற நீதி அரசர்கள், அங்கீகரிக்கபட்ட அரசியல் சட்டத்தைவிட, அவாளின் மனுதர்மமே பொது சட்டமாக்குவர்! வரலாறு காணாத விளக்கமளித்து, அயோத்தி ராமன் சிக்கலை அரைநொடியில் தீர்த்துவைதத அநீதி அரசர்களுக்கா பஞ்சம்? இவர்களுக்கு எந்த சட்டம் இருந்தாலும், இட்லிகடை புகழ் சு சாமி பாஷையில், தார்மீகம், பண்பாடு, அது, இது என்று மூக்கை நுழைத்துவிட முடியுமே! தில்லைநடராசனுக்கு நேர்ந்த கதி எந்த சட்டத்தின் படி நடந்தது? பழக்க வழக்கங்கள் வேறு வேறாக இருக்குனம்போது பொது சட்டம் தேவயற்றது! அது ஆதிக்க வெறி கும்பலின் ஏக இந்தியா, ஏக சட்டம் என ஆரம்பித்து, ஏக மொழி, ஏக பண்பாடு ஆகவே ஏக மதம் என விரியும்! மாற்றங்களை அந்தந்த சமூகங்களே விரும்பி ஏற்றுக்கொள்ள தடையேதுமில்லையே!

    • அஜாத சத்ரு,நான் பொது சிவில் சட்டத்தை எந்த வடிவத்தில் வந்தாலும் எதிர்க்கிறேன்.ஏனெனில் அதன் பின்புலத்தில் உள்ள பார்ப்பன பயங்கரவாதிகளின் நோக்கம் அனைவரும் அறிந்ததே!நடப்பிலுள்ள எல்லா சட்டங்களும் ஏன் நீதிமன்றங்களும் கூட பார்ப்பனியத்திடம் பம்மிக் கொண்டிருக்கும் போது பொது சிவில் சட்டம் வந்தால் கருவறைத் தீண்டாமையை கடைபிடிக்கும் பார்ப்பனர்களை தண்டிக்குமா? அதனால் தான் சட்ட விதிவிலக்கு பெற்ற இனமாக உலா வந்து கொண்டிருக்கும் பிராமணர்களையும் உள்ளடக்கிய என தெரிவித்தேன்.மற்றபடி பொது சட்டம் தேவையற்றது.மதம் தனிநபர் விவகாரம்.மதசார்பற்ற அரசின் வரம்பிற்கு அப்பாற்பட்டதாகவே கருதுகிறேன்.

  11. //எந்தவொரு ஆணோ,பெண்ணோ அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் மதம் மாறாமலேயே திருமணம் செய்து கொள்ளும் உரிமைக்கும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமணக் கொள்கைக்கும் எதிராக மதங்கள் வழங்கும் சலுகைகளை நிராகரித்தல்.

    ஆண், பெண் இருவரின் ஒப்புதலும் இருப்பின் நீதிமன்றத்தில் மணவிலக்கு பெறும் உரிமை.

    கணவனால் மணவிலக்கு செய்யப்பட்ட மனைவியும், குழந்தைகளும் அவனிடமிருந்து ஜீவனாம்சம் பெறும் உரிமை.

    பருவம் வராத சிறுவர் – சிறுமிகளுக்கு பெற்றோர்களே காப்பாளர்கள் என்ற மதச்சட்டங்களுக்கு மாறாக, அச்சிறுவர்களின் நலனில் அக்கறை கொண்ட வேறு யாரையேனும் கூட நியமிப்பதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம்.

    சொத்து மற்றும் பாரம்பரியச் சொத்துக்களில் ஆண் -பெண் இருபாலருக்கும் சம உரிமை.

    மணமான அல்லது மணமாகாத எந்தவொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் குழந்தையொன்றைத் தத்து எடுத்து கொள்ள சட்ட பூர்வமான உரிமை.//
    ம்
    மேற்க்கண்ட ச்ரத்துகளில் யாருக்கு என்ன பிரச்சனை தென்றல் இத கேட்டநெதர்லாந்து கேரளானு ஏன் ஊர் சுத்துறிங்க மத வெறி மன்னு வெறினு புலம்புறீங்களே…….

    • கட்டுரையை வாசிப்பதாக எண்ணமில்லை!!. சரத்துக்கள் மீதான பிரச்சனை இல்லை ஜோசப்பு. கட்டுரை கறாராக இந்தக் கேள்வியை முன்வைக்கிறது; இதற்கு பதில் சொல்லும்;

      “குடும்பத்தில் இருந்து மதத்தைப் பிரிக்க வேண்டும் என்கிற பாரதிய ஜனதா, அரசியலில் மதம் இருக்க வேண்டும் என்று சொல்வது ஏன்”?

      இந்தப் பொது சிவில் சட்டம் மதச் சார்பின்மை என்று கதறுகிற பொழுது, எது மதச் சார்பின்மை என்பதையும் இக்கட்டுரை முன்வைக்கிறது இப்படி, “அரசு மற்றும் சிவில் சமூகத்தின் மீது எவ்வித அதிகாரமும் செலுத்தவியலாமல் மதத்தைத் துண்டிப்பது” என்ற மதச்சார்பின்மைக் கோட்பாட்டுக்குப் பதிலாக, அனைத்து மதங்களையும் சமமாக நடத்துதல் என்ற மோசடியான விளக்கம் இந்திய மதச்சார்பின்மைக்குத் தரப்பட்டிருப்பதை இந்நூல் சுட்டிக் காட்டுகிறது.”

      இப்பொழுது புரிகிறதா பாசகா முன்வைக்கும் பொதுசிவில் சட்டம் என்பது அயோக்கியத்தனமானது என்று. முதலில் இந்தக் கட்டுரையை திருப்பி வாசிங்கப்பு யோசேப்பு!!

      —–
      குறிப்பு: நெதர்லாந்து கேரளா மட்டுமல்ல; மத அடிப்படைவாதத்தை முறியடிப்பதில் இருந்து தொடங்குகிறது பொது சிவில் சட்டத்திற்கான போராட்டம்.

    • p.joseph,

      //கணவனால் மணவிலக்கு செய்யப்பட்ட மனைவியும், குழந்தைகளும் அவனிடமிருந்து ஜீவனாம்சம் பெறும் உரிமை.\\
      மணவிலக்கு செய்யப்பட்ட பின்பு அந்த பெண்ணுக்கும் ஆணுக்குமான உறவு என்ன ? இவர் அவளுக்கு பணம் கொடுப்பதை எந்த உறவின் அடிப்படையில் நியாயப்படுத்தமுடியும்? மேலும் இந்த ஜீவனாம்ச தொகையை யார் நிர்ணயிப்பார்கள் எதன் அடிப்படையில் நிர்ணயிப்பார்கள். விவாகரத்து பெற்ற ஆணுக்கு தன்னுடன் தொடர்பில்லாதவளுக்கு எந்தரீதியில் அவன் மனம்வந்து(நொந்து) கொடுப்பான்.

      மேலும் இந்த ஜீவனாம்ச முறையால் சம்பந்தப்பட்ட பெண் வருவாயை பெறுவாள் ஆனால் மறுவாழ்க்கை துணை பற்றிய சிந்தனை அடைப்பட்டு விடுமே. மேலும் இதனை தவறாக பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகாது என்ற நம்பிக்கையை தங்களால் கொடுக்க முடியுமா? ஏனன்றால் இன்று போடப்படும் பெரும்பான்மையான வரதட்ச்சனை கொடுமை வழக்கானது புனையப்பட்டதுதான் என்ற கருத்தை காவல்துறை அதிகாரிகள் சொல்வதை வைத்தே இப்படி சிந்திக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.

      ஜீவனாம்சமும் வேணும் , தனக்கென்று தேவையை நிறைவேற்றிக்கொள்ள துணையும் வேண்டும் என்ற நிலையில் உள்ள பெண்மணி எந்த நிலைக்கு தள்ளப்படுவாள். இது எவ்வாறான முடிவின் பக்கம் கொண்டுச்செல்லும் என்பதையும் சேர்த்தே பதிவிடுங்கள்.

      //பருவம் வராத சிறுவர் – சிறுமிகளுக்கு பெற்றோர்களே காப்பாளர்கள் என்ற மதச்சட்டங்களுக்கு மாறாக, அச்சிறுவர்களின் நலனில் அக்கறை…\\

      புதுசா எஅதோ சிந்திக்கிறேன் என்று நினைத்து ஒருசிலர் பொருந்தாத விஷயத்தை எல்லாம் பதிவிடுகிறார்கள்… பெற்ற தாயும் தந்தையுமே ஒரு நல்ல காப்பாளராக இல்லாத பட்சத்தில் யாரை காப்பாளராக நாம் நியமிக்கமுடியும் ? பெற்ற பிள்ளையை நல்லமுறையில் காப்பதுதான் ஒரு நல்ல பெற்றோரின் கடமை, அந்த கடமையை உணராத பெற்றோருக்கு அதனை ஒரு தண்டனையாகவாவது நீதிமன்றம் சாட்டுதல் வேண்டுமே தவிர மற்றவனின் பாதுகாப்பில் வளர்க்கும் விஷயமானது இன்னும் அந்த பிள்ளைகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும்.

      //சொத்து மற்றும் பாரம்பரியச் சொத்துக்களில் ஆண் -பெண் இருபாலருக்கும் சம உரிமை\\ எதன் அடிப்படையில் அவர்களுக்கு சமயுரிமை என்று கூருகிரீர்கல்? மணவிலக்கு பெற்றால் ஜீவனாம்சம் பெரும் விஷயத்தில் இல்லா சமயுரிமை இதில் மட்டும் ஏன்? இன்னும் கணவனின் சொத்தும் மனைவிக்கு தான் கிடைக்கும் இங்கு அப்பனின் சொத்தும் சம அளவுக்கு கிடைக்கும் பெண்களுக்கு அப்போ தன குடும்பத்தை பாரமரிக்க பாதுக்காக்கும் கடமை எல்லாம் ஆண்களுக்கு இருக்க அவர்களுக்கான செலவின் அளவும் அதிகம் எனும்போது எதன் அடிப்படையில் சமஉரிமை. இங்கு ஆண் பெரும் வருமானம் மற்றும் சொத்தின் பெரும்பகுதி குடும்பத்திட்க்கே செலவு செய்யப்படும்போது , அவர்களுக்கு சதவிகிதத்தில் அதிகம் தருவதுதான் அறிவுப்போர்வமானது என்பதே என்னுடைய கருத்து.

  12. திரு யோசெப்,

    அரியணையில் அமர்ந்திருக்கும் ஹிந்துத்வா பாசிசம் எதற்காக பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும்? கொஞ்சம் கூட சிந்திக்க மாட்டீர்களா?

    நன்றி.

  13. ஒருவனுக்கு எதற்கு ஒருத்தி? ஒருத்திக்கு எதற்கு ஒருவன்? திருமணம் என்பதே பெண்ணடிமை சாசனம்! பழைய ஆரிய குடியிருப்புகளில் இந்த ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமணமுறை பின்பற்றப்படவில்லை! கிரேக்கர்களும் மண்முறைக்கு கட்டுப்பட்டவர்கள் இல்லை! மகளிர் ஆணுக்கு அடிமையாகமல் சுதந்திரமாக இருக்க அப்போது முடிந்தது! டேவிட், சாலமன் காலத்துக்கு பின்னரே அரசனை மகிழ்வித்து அவனை வழிக்கு கொண்டுவர மதகுருக்களால் ஆசிர்வதிக்கபட்ட மணமுறை கொண்டுவரப்பட்டது! பழைய ஏற்பாடு, ஜெனீசிஸ் வரலாற்றுப்படியும், ராகுல சங்கிருத்தியாயனின் ‘லிச்சாவி குடியரசு-வால்காவிலிருந்து கங்கைவரை’ குறிப்புப்படியும், அரசனை மததின் பிடியில் வைத்திருகவே தெய்வங்களால் ஆசிர்வதிக்கப்படும் மணமுறை புரோகித குருமார்களால் ஏற்படுத்தப்பட்டது!

    உலகெங்கும் சாதாரண மக்களிடம் பணம் பிடிங்கியே அவர்களின் திருமணம் ஆசீர்வதிக்கபட்டது! கருப்பு முத்து என்னும் மொழிபெர்ப்பு நூலை ஒருமுறை வாசித்திருக்கிரேன்! தேவாலயத்தில் திருமணம் செய்துகொள்ள வசதியற்ற ஒர் மீனவ தம்பதியினர் பற்றிய,நெஞ்சைநெகிழவைக்கும் இலக்கியம் அது!

    தொல்காப்பியனாரும் ‘அய்யமும் வழுவும்’ தோன்றிய பின்னரே, அய்யர் முறை வகுத்ததை சுட்டுகிறார் ! இதெற்கெல்லாம் தீர்வு ஆணும் பெண்ணும் மனமொத்து,சடஙகுகளின்றி செர்ந்து வாழவும், மனமொடிந்தால் குறைந்த பட்ச வாழ்வாதாரத்துடுடன் பிரிந்து விடவும் எளிய மணமுறிவு முறை, மதங்களுக்கு அப்பாற்பட்டு அரசே செயல்படுத்தலாம்!

  14. // இதெற்கெல்லாம் தீர்வு ஆணும் பெண்ணும் மனமொத்து,சடஙகுகளின்றி செர்ந்து வாழவும், மனமொடிந்தால் குறைந்த பட்ச வாழ்வாதாரத்துடுடன் பிரிந்து விடவும் எளிய மணமுறிவு முறை, மதங்களுக்கு அப்பாற்பட்டு அரசே செயல்படுத்தலாம்! //

    தனி மனித ஒழுக்கம்னா என்னவென்றே தெரியாத இந்த தேசத்தில் நீங்கள் கூறும் இந்த வாழ்வியல் கோட்பாடு எந்த வகையில் சரியானதாக இருக்கும்?

  15. பொது சிவில் சட்டம் கொண்டுவருவது ஒரு பக்கம் இருக்கட்டும் . இன்று சட்டம் பொதுவாக இருக்கிறதா? என்பதே கேள்விக்குறியாக இருக்கிறதே… அதிக பணபலமும் ஆள்பலமும் கொண்டவர்களுக்கும் சாமானியர்களும் ஒரே மாதிரியான நீதி தான் வழங்கப்படுகிறதா? தயவுசைத்து நான் திசை திருப்பும் நோக்கத்தில் எழுதுவதாக எண்ணவேண்டாம் . எந்த சட்டம் கொண்டுவந்தாலும் அந்த சட்டத்திலிருந்து ஒரு சாரார் தப்பிக்கும் போக்கு இருப்பதை தான் நான் சுத்திக்காட்ட விரும்புகிறேன். அன்று நடந்த ஜெ சொத்துக்குவிப்பு வழக்குமுதல் இன்றுவரை உள்ள பெங்களூர் சொத்து குவிப்பு வழக்குவரை சம்பந்தப்பட்டவர்கள் பெற்ற தண்டனை என்ன? இதுபோன்றே 2 g வழக்கு , போபர்ஸ், மாட்டுத்தீவன ஊழல் போன்ற அனைத்திலும் இவர்களுக்கு கிடைத்த அல்லது கிடைக்கப்போகும் தண்டனை என்ன என்று யாராலும் சொல்ல இயலாது ஏனன்றால் சம்பந்தப்பட்டவர்களின் ஆயுளே கூட முடிந்துவிடும் ஆனாலும் கேசின் ஆயுள் நீட்டிப்பு பெற்றிருக்கும். ஆனால் சாமானியன் தனது வறுமைக்காக வாழ்வியலுக்காக 50,000 மோ அல்லது ஒரு லட்சமோ கடன்பெற்றிருந்தால் அவன் மீது இதே சட்டம் வன்மத்தை காட்டுவதும், கோடிகளை வாங்கிய பெருமுதலாளிகள் கூலாக வந்து வாயிதா வாங்கியே தன் வாழ்க்கையை நடத்துவதும் தான் விசித்தரமாக உள்ளது… இந்தநிலைகள் அனைத்தும் மாறுமா உங்களின் பொது சட்டத்தால் . சட்டத்தின் பெயரில் பொது , தனியார் என்ற அடைமொழிகள் இருப்பதால் எவ்வித பிரயோஜனமும் இல்லை உண்மையில் சட்டம் பொதுவாக இருக்கிறதா?

  16. /தனி மனித ஒழுக்கம்னா என்னவென்றே தெரியாத இந்த தேசத்தில் நீங்கள் கூறும் இந்த வாழ்வியல் கோட்பாடு எந்த வகையில் சரியானதாக இருக்கும்?/

    சமூதாயத்தின் முதல் பணியே தனிமனித ஒழுக்க கல்வி(சிட்டிசன்ஷிப்) புகட்டுவது தானே! அது எல்லா ஒழுக்கங்களுக்கும் அடித்தளமல்லவா? முக்கியமாக இந்திய சமூதயத்தை பிடித்த கேன்சரான லஞ்சத்தை ஒழிக்க தேவை தனிமனித ஒழுக்கமே! ஆனால், லஞ்சம் கொடுப்பது தனிபட்ட வியாபாரியின் உரிமை என்றல்லவா தேச பக்தர் டாடாவும், அம்பானிகளும் சாதித்து விட்டனரே! அதைநீதிபதிகளும் ஒப்புகொண்டு தானே 2ஜி வழக்குநடக்கிறது?

  17. தனி மனித ஒழுக்கம் என்ற பெயரில் மதமோ, சட்டமோ மனிதரை(ஆணொ அல்லது பெண்ணொ)அடிமைப்படுத்துதல் கூடாது! கிரேக்க, ரொமானிய வரலாற்றுபடியும், நம்து வேதிய மனுதர்மப்படியும் சட்டங்கள் மனிதரை அடக்கியாளவே ஏற்படுத்தப்பட்டன!

    மனிதனை நல்வழிபடுத்த நல்லொழுக்கை போதித்தது, வரலாற்றில் தெள்ளென தெரிவது புத்தர் போதனைகள் மட்டுமே! பழைய ஏற்பாடான மோசசின் பத்து கட்டளைகளும், பின்னர் புதிய ஏற்பாட்டின்படி கிருத்துவின் போதனைகளும் போற்றத்தக்கவையே, ஏனெனில் மனித குலம் அனைத்துக்கும் பொதுவானவையெ!

    தமிழரின் திருக்குறளும், ஒன்றே குலம்-ஒருவனே தேவன் கொளகையும் சிறந்ததே; துரதிர்ஸ்டவசமாக பட்டிமன்றங்களில் மட்டுமே இவை பேசப்படுகின்றன!

    வேதகால ஒரே பிரம்மம் என்ற கொள்கையும் அப்போதே வழக்கொழிந்தது! வேதமும், பிற சமஸ்கிருத தத்துவங்களும் (அத்துவைதம் போல) , சதசுகளில் வித்தையை காட்டி ஒரு சாரார் பிழைக்கவே, பயன்பட்டது!

    மாறாக, இந்த நல்ல கோட்பாடுகளையெல்லாம் போதித்த மத வாதிகள், தாங்கள் ஆதிக்கம் செலுத்திய மற்ற இனத்தவரை இழிவாகவும், மிகக்கொடுமையாகவும் நடத்தினரே!

    கிருத்துவமும், இஸ்லாமும் இந்த சூழ்னிலையில் தோன்றியவைதான்! கிரேக்க, ரொமானிய கொள்ளையரை எதிர்த்து யூதர்களும், யூதர்களை எதிர்த்து இஸ்ரவேலர்களும்(பின்னர் கிருத்த்வர்கள்), கிருத்துவ மேலாட்சியை எதிர்த்து முசல்மான் களும் தோன்றினர்!

    ஆக, எந்தநல்ல கோட்பாடும், கெட்ட மதவாதிகளினால், அடுத்த இனத்தவரை ஒடுக்கி அழிக்கவே, அவை அன்னியமாகிவிட்டது!

    இந்தியாவில், மதத்தின் போர்வையில்நடப்பது, ஆதிக்க சக்திகளின் போராட்டமே! இச்சூழலில் பொதுசட்டம் என்பது, ஆதிக்க மதவாதிகளால் மெஜாரிட்டி அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டால், அது தீங்காகவே முடியும்! சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி! அம்பி அடுத்த ரவுண்ட்?

    • \\
      தமிழரின் திருக்குறளும், ஒன்றே குலம்-ஒருவனே தேவன் கொளகையும் சிறந்ததே
      \\

      ஒன்றே குலம்-ஒருவனே தேவன் என்பது அண்ணாவின் பச்சோந்தி கொள்கை. தமிழர் கொள்கையல்ல.

      \\
      வேதகால ஒரே பிரம்மம் என்ற கொள்கையும் அப்போதே வழக்கொழிந்தது
      \\

      வேதங்களில் இந்திரன், வருணன், வாயு அக்கினி மற்றும் பிற கடவுள்கள் இருந்தனர், பிரம்மம் என்பது மனித படைப்புகளில் பிந்தையது. அத்துவைத காலத்தையொட்டியது.

      \\
      கிருத்துவமும், இஸ்லாமும் இந்த சூழ்னிலையில் தோன்றியவைதான்! கிரேக்க, ரொமானிய கொள்ளையரை எதிர்த்து யூதர்களும், யூதர்களை எதிர்த்து இஸ்ரவேலர்களும்(பின்னர் கிருத்த்வர்கள்), கிருத்துவ மேலாட்சியை எதிர்த்து முசல்மான் களும் தோன்றினர்!
      \\

      யூதர் காலம் கிரேக்க ரோமானிய காலங்களுக்கு முந்தையது. அவற்றுடன் சிறிதும் ஒன்றாதது. யூதர் என்போர் இசுரவேலரில் ஒரு பகுதியினர். சாலமோன் ராசாவின் இறைபற்று அவரது மனைவியரால் சீர்கெட்ட பின்னர் யெகோவா சினங்கொண்டு இசுரயேலை இரண்டாக பிரித்ததாக பைபிளில் ராஜாக்களின் ஏட்டிலே உள்ளது. எவ்வாறாயினும் யூதர்களும் இசுரயேலர்களும் ஒன்றே.

      இசுலாம் தன்னையும் ஒரு தூதனாக தீர்க்கதரிசியாக கருதிக்கொண்டவரின் எண்ணம் வழியே தன்னிச்சையாக உருவாகியது. எதையும் எதிர்த்து அல்ல. பிற மதத்தையெல்லாம் அது அடக்கி ஒடுக்கியது வேறு விஷயம். கிரித்தவம் ஆட்சிமதமாக ரோம அரசின் கடைசி காலத்தில் அமைந்தது. அரேபியாவில் கிறித்தவர் இருந்தனர், ஆட்சியாளராக அல்ல. புத்தம் போல கிறித்தவம் போல இசுலாம் ஒரு கலகக்கார மதமல்ல.

      தோழர் அஜாதசத்ரு. வீட்டுப்பாடத்தை நன்றாக செய்துவிட்டு வாரும்.

      • அய்யா நண்டு! வளையை விட்டு வெளியே வந்தமைக்குநன்றி!

        \\ஒன்றே குலம்-ஒருவனே தேவன் என்பது அண்ணாவின் பச்சோந்தி கொள்கை. தமிழர் கொள்கையல்ல.\\

        அய்யா கணியன் பூங்க்ன்றனாரின் ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ தொடங்கி திருமூலரின்

        “ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
        நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான் ஐந்து
        வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
        சென்றனன் தானிருந் தானுணர்ந் தேட்டே”
        பாடலும்,

        வள்ளலாரின் ‘அருட்பெருஞ்சோதியும்’ உங்களுக்கு தமிழர் கொள்கையாக படவில்லையா?

        ஆரியமாயை எழுதிய அண்ணா உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால், அது தனி விஷயம் !

        //வேதங்களில் இந்திரன், வருணன், வாயு அக்கினி மற்றும் பிற கடவுள்கள் இருந்தனர், பிரம்மம் என்பது மனித படைப்புகளில் பிந்தையது. அத்துவைத காலத்தையொட்டியது.//

        உங்கள் வேத ஆராய்ச்சிக்குநான் வரவில்லை; வேறு ஆளை பாரும்!

        // சாலமோன் ராசாவின் இறைபற்று அவரது மனைவியரால் சீர்கெட்ட பின்னர் யெகோவா சினங்கொண்டு இசுரயேலை இரண்டாக பிரித்ததாக பைபிளில் ராஜாக்களின் ஏட்டிலே உள்ளது. எவ்வாறாயினும் யூதர்களும் இசுரயேலர்களும் ஒன்றே.//

        டேவிட் எதிரிகளையெல்லாம் அடக்கியாண்டு. தன் தோன்றிதனமாக , பல மனைவியருடன் ஆட்சிசெய்தார்! குருமார்களை உதாசினம் செய்தார்! சாலமன், தந்தையை வென்று சிற்றன்னையை கவர்ந்தார்! பின்னர் வேற்றின ராணியான ஷீபா மூலம் ஒரு ஆண் மகவை பெற்றார்! யூத இனத்தை சேராத ராணியை குருமார்கள் ஒப்புக்கொள்ளவில்லை! டேவிட் காலத்தில் அடஙகியிருந்த குருமார்கள் சாலமன் காலத்தில் கலகம் செய்தனர்! ர்

        கிரேக்க ஆட்சியில் யூதர்கள் அடிமைப்பட்டது பிற்காலத்தில்தான், அப்போது ஜீசஸ் சிலுவையி அறையப்பட்டது அப்போது தான்!

        இச்லாம் தன்னிச்சையாக உருவாக வில்லை! கான்ச்டான்டின அரசன் அரேபிய மக்களை செய்த கொடுமையினாலும், கிருத்துவ மத மாற்ற முயற்சியினாலும் தோன்றிய எதிர்வினையே!

        பைபில் பழைய ஏற்பாடு, ஜுடாயிச்ம், ஜெனீசஸ், பென் குர், கிங் சாலமன் முதலிய திரைப்படங்களின் தாக்கமும் உண்டு!

        நபிகளின் வரலாறு படித்ததில்லை! ஆனால் அவர்களின் பண்டிகைகள, ஈகை, தொழுகை,இறைசமத்துவம் முதலியவை அவர்கள் மீது நன்மதிப்பை ஏற்படுத்துகின்றன!

        வீட்டுப்பாடத்தை நன்றாக செய்துவிட்டு,ஆதாரத்துடன் கூறினால் ஏற்று கொள்கிறேன்!

        நண்டு மீண்டும் வருக!

        • // உங்கள் வேத ஆராய்ச்சிக்குநான் வரவில்லை; வேறு ஆளை பாரும்! //

          அய்யா,

          நீங்களா இப்படி பேசுவது.. புராண ஆராய்ச்சி என்ற பெயரில் மனதில் தோன்றியதையெல்லாம் அல்லும் பகலும் எடுத்துவிட்டுக்கொண்டு எங்களையெல்லாம் பரவசப் படுத்தி எடுத்துக் கொண்டிருந்தவரல்லவா தாங்கள்.. வேத ஆராய்சி மேல் இத்தனை வெறுப்பு ஏன் வந்தது..?!!

          // இச்லாம் தன்னிச்சையாக உருவாக வில்லை! கான்ச்டான்டின அரசன் அரேபிய மக்களை செய்த கொடுமையினாலும், கிருத்துவ மத மாற்ற முயற்சியினாலும் தோன்றிய எதிர்வினையே!

          பைபில் பழைய ஏற்பாடு, ஜுடாயிச்ம், ஜெனீசஸ், பென் குர், கிங் சாலமன் முதலிய திரைப்படங்களின் தாக்கமும் உண்டு! //

          இசுலாம் உருவாக பென் ஹர், கிங் சாலமன் திரைப்படங்களின் தாக்கமும் உண்டா..?! பராசக்தி திரைப்படத்தை ஏன் விட்டுவிட்டீர்கள் உடன்பிறப்பே..

          • //பைபில் பழைய ஏற்பாடு, ஜுடாயிச்ம், ஜெனீசஸ், பென் குர், கிங் சாலமன் முதலிய திரைப்படங்களின் தாக்கமும் உண்டு! //

            தாக்கம் எனக்கு உண்டு ! இச்லாதிற்கு அல்ல, தவறாக பொருள்படும்படி ஆகிவிட்டது என் தவறுதான்! இசுலாமிய தோழர்கள் மன்னிக்கவும்! சுட்டி காட்டிய அம்பிக்கு நன்றி!

            //நீங்களா இப்படி பேசுவது.. புராண ஆராய்ச்சி என்ற பெயரில் மனதில் தோன்றியதையெல்லாம் அல்லும் பகலும் எடுத்துவிட்டுக்கொண்டு எங்களையெல்லாம் பரவசப் படுத்தி எடுத்துக் கொண்டிருந்தவரல்லவா தாங்கள்.. வேத ஆராய்சி மேல் இத்தனை வெறுப்பு ஏன் வந்தது..?!!//

            நான் ஆதாரமின்றி எதையும் பேசவில்லை! நானே ஆராய்ச்சி செய்தும் பேச வில்லை! ஆராய்ச்சி செய்த அறிஞர்கள் கருத்துக்கு உங்களால் பதிலளிக்க முடியவில்லை! என்னை எப்படி வளைக்கலாம் என தருணம் பார்த்து கொண்டிருந்த அம்பியின் அரிப்பு தீர்ந்ததா?

            • ஏராளமான தருணங்கள் வந்து கொண்டேதான் இருக்கிறது அய்யா.. சில சமயங்களில் அரிப்பை அடக்க முடியாமல் குறுக்கிட நேர்கிறது.. நீங்கள் தொடருங்கள்..

        • டேவிட் எதிரிகளையெல்லாம் அடக்கியாண்டு. தன் தோன்றிதனமாக , பல மனைவியருடன் ஆட்சிசெய்தார்! குருமார்களை உதாசினம் செய்தார்! சாலமன், தந்தையை வென்று சிற்றன்னையை கவர்ந்தார்! பின்னர் வேற்றின ராணியான ஷீபா மூலம் ஒரு ஆண் மகவை பெற்றார்! யூத இனத்தை சேராத ராணியை குருமார்கள் ஒப்புக்கொள்ளவில்லை! டேவிட் காலத்தில் அடஙகியிருந்த குருமார்கள் சாலமன் காலத்தில் கலகம் செய்தனர்! ர்

          சிற்றன்னை அல்ல சிற்றன்னைகள். ஆனால் கவர்ந்தது சாலமோன் ராசா அல்ல. அவரது அண்ணன் அப்சலோம். (ஆதாரம் சாமுவேலின் 2ம் புத்தகம் 16 அத்தி 22 வசனம்). ஷீபா அரசியை சாலமோன் காதலித்தார், ஆனால் அவர் மூலம் உண்டான மக்களை அரசனாக்க வில்லை, (ஆதாரம் : ராஜாக்களின் 1ம் புத்தகம் 10 அத்தி 13 வசனம்).

          மேலும் பார்க்க 1 ராஜக்கள் 11: 11-13. இசுரவேல் இரண்டானதற்கு காரணம். யூதரும் இசுரவேலரும் ஒருவரே.

          1 ராஜாக்கள் 14:21 ரெகோபயாமின் அம்மா நாமா என்ற அம்மோனியாள். ஷீபாவின் ராணியல்ல.

          \\
          கிரேக்க ஆட்சியில் யூதர்கள் அடிமைப்பட்டது பிற்காலத்தில்தான், அப்போது ஜீசஸ் சிலுவையி அறையப்பட்டது அப்போது தான்!
          \\

          யேசு கிறித்து சிலுவையில் அறையப்பட்டது ரோமானிய ஆட்சியில். கிரேக்கர் ஆட்சியில் அல்ல.

          \\
          இச்லாம் தன்னிச்சையாக உருவாக வில்லை! கான்ச்டான்டின அரசன் அரேபிய மக்களை செய்த கொடுமையினாலும், கிருத்துவ மத மாற்ற முயற்சியினாலும் தோன்றிய எதிர்வினையே!
          \\

          கான்ச்டன்டைன் ராஜாவின் காலம் 306 337 வரை. இவர்தான் மகா கான்ச்டன்டின் என்று அழைக்கப் படுபவர். இவரது மகன் பெயரன் அனைவரும் 1 2 3 என்று அவரது பெயரையே இட்டுக்கொண்டாராயினும் வரலாற்று கான்ச்டன்டீன் இவரே. முகம்மதுவின் காலம் 570 – 632 வரை. எப்படிப்பார்த்தாலும் சரி வரவில்லையே.

          \\
          பைபில் பழைய ஏற்பாடு, ஜுடாயிச்ம், ஜெனீசஸ், பென் குர், கிங் சாலமன் முதலிய திரைப்படங்களின் தாக்கமும் உண்டு!
          \\

          காலிவுடு திரைப்படங்களை பார்த்து பைபிள் எழுதினரா. ம்ம்ம். நடக்கட்டும் நடக்கட்டும்…

        • ஒன்றே குலம் ஒருவனே தேவன் எவ்வாறு சந்தர்ப்ப வாதம், பச்சோந்தித்தனம் என்பதற்கு வினவில் அண்ணாவைப் பற்றி வந்த கட்டுரைகளை படிக்கவும்.
          அதுவும் யாதும் ஓரே யாவரும் கேளிர் என்பதும் ஒன்றல்ல என்பது விளங்கும்.

          வேதங்கள் என்பன நாடோடிக் கும்பலின் கட்டுக்கதைகளேயன்றி வேறல்ல என்பது எனக்கும் தெரியும். ஆனால் வேதங்களில் பிரம்மம் குறிப்பிடப்படவில்லை. மூடர்கள் இடையே அயோக்கிய பாப்பாரர்கள் பிரம்மம்தான் வேதங்களில் குறிக்கப்பட்ட கடவுள் என்று அடித்து விடுவர். மற்றவரை பற்றி பரவாயில்லை. அஜாதசத்துரு அதை நம்பியதால்தான் வருத்தப்பட்டேன். வேதகால கடவுளர் இயற்கை கடவுளர். அதையே பிரம்மம் மும்மூர்த்தி மாட்டுசாணி என்று அல்வா கிண்டி கொடுக்கின்றனர். நீங்களுமா என்பதுதான் எனது ஆதங்கம்.

          \\
          நபிகளின் வரலாறு படித்ததில்லை! ஆனால் அவர்களின் பண்டிகைகள, ஈகை, தொழுகை,இறைசமத்துவம் முதலியவை அவர்கள் மீது நன்மதிப்பை ஏற்படுத்துகின்றன!
          \\

          வரலாறுதான் படியுங்களேன். பின்னும் மதிப்பு மிஞ்சுகிறதா பார்ப்போம்.

          http://www.islamwb.com/books/Sahih%20Bukhari%20(English).pdf

          • ஏது!நண்டுவிற்குபின் ஏதோ சிண்டு இருக்கும்போல் தெரிகிறதே!

            //ஒன்றே குலம் ஒருவனே தேவன் எவ்வாறு சந்தர்ப்ப வாதம், பச்சோந்தித்தனம் என்பதற்கு வினவில் அண்ணாவைப் பற்றி வந்த கட்டுரைகளை படிக்கவும்.//

            மீன்டும் அவை மறுசுற்றுக்கு வரும்போது படிக்கிறேன்! அண்ணா சந்தர்ப்பவாதம்/சமரசம் செய்திருக்கலாம்! திருமூலரும் சந்தர்ப்பவாதியா? சிவ வாக்கியர் முதலிய சாதி மறுப்பு சித்தர்களும், திருவள்ளுவரும் கூட சந்தர்ப்பவாதி என கூறுகிறீரா?

            முகமதுநபி பற்றிய உங்கள் வலை பக்கத்தை, சுமார் 1900 பக்கம், படிக்க எனக்கு சிறிது காலம் ஆகுமே! பொறுத்து கொள்ளுங்கள்!

            • தோழர் அஜாதசத்துரு. நீங்கள் ஆதாரங்களையும் வீட்டுப்பாட நோட்டையும் காட்ட சொன்னீர்கள். காட்டிவிட்டேன்.

              நண்டுக்கு ரைமிங்ஙாக சிண்டு … நன்றாக உள்ளது.

              ஆனால் இதன் மூலம் என்ன கூற வருகின்றீர் என்று தெரியவில்லை. நான் அளித்த பதிலுக்கு சம்பந்தமில்லாத கேள்வி. ஒரு வேளை உங்கள் தவறு தெரியாதிருக்க வேறு போக்கில் திருப்பும் எண்ணமாக இருக்கலாம். இது Argumentum ad hominem, red herring வகையை சார்ந்தது. ஆனால் எனது எண்ணம் உங்கள் அறியாமையை எடுத்து விளம்ப அல்ல. அவ்வாறு பொருள் படுமாயின் மன்னிக்கக் கோருகிறேன்.

              எதையும் பற்றி கருத்து கூறும் முன்னரோ அல்லது விவாதிக்கும் முன்னரோ அந்த பொருளைப் பற்றி தீர கற்ற பின்னரே முன் வர வேண்டும். இல்லையாயின் மற்றவரின் எள்ளலுக்கு ஆளாக நேரிடும்.

              இதுகாறும் தங்கள் பின்னூட்டங்களை பார்த்து வருகிறேன். தங்களது இடதுசாரி போக்கு மனமகிழ்வளிக்கிறது. ஆயினும் கருத்து கூறும் முன்னர் அதைப் பற்றி கற்றறிந்து வாரும் நண்பரே.

              மேலும் படிக்க. http://en.wikipedia.org/wiki/List_of_fallacies

              • நண்டு அவர்களே! உஙகள் மேதாவி தனத்தைநான் மெச்ச முடியாது!
                //ஆயினும் கருத்து கூறும் முன்னர் அதைப் பற்றி கற்றறிந்து வாரும் நண்பரே//

                கருத்துக்கு பதிலளிக்க முடியாமல் திசைதிருப்பலாக “அஷ்ட மகிஷ பந்தனம்” தெரியுமா என்ற தெனாலிராமன் போல் பேசுகிறிர்கள்! அம்பிகளின் பின்பாட்டும் இருபதால் சிண்டுவோ என்றேன்!

                //எதையும் பற்றி கருத்து கூறும் முன்னரோ அல்லது விவாதிக்கும் முன்னரோ அந்த பொருளைப் பற்றி தீர கற்ற பின்னரே முன் வர வேண்டும். இல்லையாயின் மற்றவரின் எள்ளலுக்கு ஆளாக நேரிடும்.//

                அறிவுரைக்குநன்றி! ஆனால் கொஞ்சம் கண்ணாடியில் தங்கள் முகத்தையும் பார்த்து கொள்வது நல்லது! முகம்மது அவர்களைப்பற்றியும், அண்ணாவைபற்றியும் ஓரளவாவது அறியாமல் உங்களைப் போல காழ்ப்புணர்ச்சியுடன் உளரக்கூடாது என்பதே என் எண்ணம்; அதையும் தெரிவித்திருக்கிறேன்! கள்ள உள்ளம் படைத்தோரின் எள்ளலுக்குநான் அஞ்சுவதில்லை!நல்ல கருத்தை ஏற்க தயங்கியதுமில்லை!நானே பெரிய அறிவு ஜீவி என பறைசாற்றி கொண்டதுமில்லை! ஆண்வக்காரர்களுக்கு இது புரியாது!

          • //ஆனால் வேதங்களில் பிரம்மம் குறிப்பிடப்படவில்லை. மூடர்கள் இடையே அயோக்கிய பாப்பாரர்கள் பிரம்மம்தான் வேதங்களில் குறிக்கப்பட்ட கடவுள் என்று அடித்து விடுவர்.//

            எதை வைத்து வேதத்தில் பிரம்மத்தை பற்றி குறிப்பிடப்படவில்லை என்று கூறுகிறீர்கள்.

            • ரிக்கு வேதத்தில் பிரம்மா என்று 379 இடத்தில் வருகின்றது. அவை எவற்றிலும் முழுமுதற்கடவுள் என்று பொருட்படுவதாக இல்லை. மந்திரம் ஓதுபவராக, சில மந்திரங்களின் கடவுளாக மட்டுமே வருகிறது.

              இணைப்புகளை தந்துள்ளேன்.

              http://www.detlef108.de/RV-D-UTF8.html

              http://www.sanskritweb.net/rigveda/griffith.pdf

              http://gretil.sub.uni-goettingen.de/gretil/1_sanskr/1_veda/1_sam/1_rv/rvh1-10u.htm

              தரவிறக்கம் செய்து சரிபார்த்துக் கொள்ளவும். ரிக்கு வேத ‘மந்திரங்கள்’ ஒரு கடவுளை அல்லது கடவுளர்களை அழைப்பதாக, அல்லது ஒரு நிகழ்வாக மற்றும் பலவாறு எழுதப்பட்டவை. அதில் எவற்றிலும் பிரம்மா அல்லது பிரம்மம் என்ற கடவுள் இல்லை. ப்ரம்மணச்பதி என்ற கடவுள் அழைக்கப்படுகிறான். ஆனால் அது பிரம்மம் என்று பொருட்படும் படியாக இல்லை.

              10வது மண்டலத்திலே புருஷசூக்தம் என்று ஒன்று உள்ளது. அதுதான் பிரம்மம் என்று புளுகுணி வாயால் பேலுவர். அதாகப்பட்டது, புருசன் என்ற ஒருவன் இருந்தானாம். அவனது தலையிலிருந்து பிராமணனனும் தோளிலிருந்து சத்திரியனும் கவட்டிலிருந்து சூத்திரனும் வந்தனர் என்று போகும். ரிக்கு வேதத்திலே அதிகமாக இட்டுக்கட்டப்பட்டதும் காலத்தால் பிந்தையதும் இடைச்செறுகல்கள் மிகுந்ததுமான பகுதி இந்த 10வது பகுதிதான்.அதனால் மற்ற பகுதிகள் ஏதோ மந்திர தந்திரங்கள் நிறைந்தவை, புனிதமானவை என்று கொள்ள வேண்டாம்.
              ஆபாச கவிதைகள், கொலைக்கதைகள், பல உண்டு. அவையெல்லாம் பப்பிளிக் கக்கூசு கவிதைகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாதவை. அவற்றையெல்லாம் மொழிபெயர்ப்பு செய்ய முடியாது, அச்சிலேற்ற முடியாது என்று கிரிஃபித் என்ற ஆங்கிலேய கனவான் அவர்கள் லத்தீனில் மொழிபெயர்த்துள்ளார்கள், அல்லது மொழிபெயர்க்காமலேயே விட்டுவிட்டார்கள்.

              • அய்யாநண்டு அவர்களே! உங்கள் வேதங்களை நாங்கள் படித்ததில்லை!நீங்களாவது, இதுதானய்யா வேதம் என்று தமிழில் கொடுத்தீர்களானால் நல்லது! அல்லது அப்படி உலகம் உய்ய என்ன கருத்து அதிலுள்ளது, அதை வேத விற்பன்னராகிய நீங்கள் எப்படி கடைபிடித்து இந்த பாரதநாட்டை முன்னேற்ற இருக்கிறீர்கள் அல்லது வெறும் விவாதப்பொருளாக 200(சுமார்) உபனிஷத்துகளுடன் பண்டிதர்களின் மேதாவிலாசத்தை காட்டமட்டுமே பயன்படுகிறதா என்பதையும் விளக்கினால் நலம்! இந்த வேத ரகஸ்யங்களை அறியாமல் நான் முகமதுவையும், யேசுவையும் விமரிசிப்பது? எல்லாம் அறிந்து கொண்டுதான் வாயை திறக்க வேண்டுமென்றால்,நான் சனகாதி முனிவர்களுடன் ஒருவனாக தட்சிணாமுர்த்தத்தை அல்லவாநாட வேண்டும்?

                • அவை எனது வேதங்கள் இல்லை. எனக்கு வேதங்கள் என்று ஒன்றும் கிடையாது. அவற்றில் ஒரு பெரிய புண்ணாக்கும் இல்லை என்பதால்தான் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை. இணைப்புக்களை வடமொழி மூலத்திலும் ஆங்கில மொழிமாற்றத்திலும் கொடுத்துள்ளேன். படித்து பார்த்து எதேனும் ஈரவெங்காயத்தை கண்டுபிடித்து பாரதநாட்டை முன்னேற்றுங்கள். வேதரகசியங்களை அறிந்து இயேசு, முகம்மதுக்களை விமரிசியுங்கள் என்று கூறவில்லை. மாறாக இயேசுவையும் முகம்மதுக்களை பற்றி படித்தபின்னர் விமரிசியுங்கள் என்றுதான் கூறினேன்.

                  நான் முன்னமிட்ட பதிவுகளை பார்த்த எவரும் வேதங்களை பற்றி எனக்கு என்ன மதிப்பு உள்ளது என்று அறிந்துகொள்வர். அதில் பிரம்மம் என்ற ஈரவெஙாயம் உள்ளதாக அடித்து விட்டதுநீங்கள்தான். அப்படி ஒன்றும் புனிதமானவையல்ல, வேத கடவுளாரெல்லாம் இயற்கை கடவுளர்தான், மேலான தத்துவங்கள் ஒன்றும் கிடையாது என்று தான் கூறவிரும்பினேன்.

                  வரலாறு தெரியாது, விமரிசிக்கப்போகும்நபரை பற்றியோ பொருளை பற்றியோ ஒன்றும் அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, நாவை சுழட்டினால் என்ன வார்த்தைகள் வருமோ அவற்றை அப்படியே எழுதி விடலாம், எவனுக்கு என்ன தெரியும் என்றுநினைப்பது பாப்பானின் எண்ணம்.

                  யாரும் சொன்னாலும் கேட்டுக்கொள்ள முடியாது, தனது தவறை சுட்டிக்காட்டினால் கோபம் வரும், ஏனெனில் என்னால் தவறிழைக்க முடியாது. ஆனால் குட்டு வெளிப்பட்டு போய் அவ்வாறு முட்டுச்சந்தில் கொண்டு நிறுத்திவிட்டால் நண்டு சிண்டு என்று வசை பாட வேண்டும், சொல்லாததை சொன்னதாக திசைதிருப்பிவிட வேண்டும். என்ன ஐய்யா.

                  யூத சமூகம் எங்ஙனம் உருவானது, அதன் மேல் கிரேக்க ரோமானிய கலாச்சாரங்களின் தாக்கம் என்ன, கிறித்தவ மதம் தோன்றிய சமூக காரணங்கள் என்ன, இயேசு யார், வரலாற்று மனிதரா அல்லவா, அது எங்ஙனம் அவசியமற்றது, முகம்மது யார், அவர் முன் அரேபியர் எங்ஙனம் வாழ்ந்தனர், அவர்தம் சமூகம் எப்படியிருந்தது, எதை பற்றியும் தெரியாது. கான்ஸ்டன்டைன் யார், கிறித்தவத்துக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு என்ன, எதுவும் தெரியாது, வாயிக்கு வந்ததை உளறி கொட்ட வேண்டியது.

                  முகம்மதுவை பற்றியும் ஒன்றும் தெரியாது. அவர் மேல் ஏன் மதிப்பு என்றால் அவர் ஈந்தாராம், ஐந்து முறை குனிந்து நிமிர்ந்து தொழுதாராம், ஓரிறை நம்பிக்கை கொண்டாராம், அதனால்தானாம். இறைநம்பிக்கை உள்ளவர் எவ்வாறு பொது உடைமைவாதியாக இருக்க முடியும் என்று தெரியவில்லை. நான் அண்ணாவை பற்றியும் படித்துள்ளேன், முகம்மதுவை பற்றியும் படித்துள்ளேன், அவர்களை பற்றிய புகழுரைகளையும் தூற்றுதல்களையும் படித்துள்ளேன். அவர்களை பற்றிய ஒரு கருத்துருவாக்கம் எனக்கு உள்ளது. அதனால் விமரிசிக்கிறேன். மற்றபடி உம்மைப் போல் தன்னையும் ஒரு அறிவாளியாக கருதி வாயிக்கு வந்ததை உளறிக் கொட்டி வைப்பது நானல்ல. நான் பார்ப்பான் என்று நீங்களாக முடிவெடுத்துக் கொண்டால் எப்படி.

                  • //அதில் பிரம்மம் என்ற ஈரவெஙாயம் உள்ளதாக அடித்து விட்டது நீங்கள்தான். அப்படி ஒன்றும் புனிதமானவையல்ல, வேத கடவுளாரெல்லாம் இயற்கை கடவுளர்தான், மேலான தத்துவங்கள் ஒன்றும் கிடையாது என்று தான் கூறவிரும்பினேன்.//

                    உங்கள் கருத்துக்குநன்றி! ஆனால் டாக்டர் ராதாகிருஷ்ணன் உங்களிடமிருந்து மாறுபடுகிரார்!

                    “யாகங்கள் மூலமே பிரபஞ்சம் உட்பட எல்லாமே உண்டாவதாக சொன்ன புரோகிதர்கள், யாகங்களை அந்தந்த தேவனிடம் கொண்டு சேர்ப்பதற்காக பிரமணஸ்பதி என்ற கடவுளை படைத்தனர். வேத கால இறுதியில், (நண்டு கவனிக்கவும்-இறுதியில்), இந்த பிராமணஸ்பதி படிப்படியாக பிரம்மமாக மாற்றப்பட்டது………”

                    “…….பிரார்த்தனைகளுடைய தலைவனான் பிராமணஸ்பதி சூக்தங்களுடைய தலைவனும், சடஙு விதிகளுடைய அதிபதியும் ஆவான், ரிக் வேதத்தில் ‘பிரம்மம்’என்ற ஓசையின் ஒரு சூக்தம். அதாவது கடவுளை போற்றுகின்ற பிரார்த்தனை என்பதாகும். அது பிரார்த்தனையை இயற்றுவதற்கு ரிஷிக்கு உதவுகின்ற ஆத்ம தியான சக்தியிலிருந்து பிரார்த்திக்க படுகின்ற லட்சியத்தின் பொருளாக மாறியது. வைதீக பிரார்த்தனையுடைய காரணம் என்ற நிலையிலிருந்து இப்பொழுது யாகத்தின் வலிமை என அதன் பொருளாகிவிட்டது. பிராமணங்களில் உலக உயர்வும் யாகத்தால் கிடைப்பதுஎன்று சொல்லபட்டிருப்பதால், பிரமத்திற்கு பிரமாண்டத்தை படைக்கின்ற தத்துவம் என்ற பொருளும் வரத்தொடஙகிற்று” என ‘பாரதீய தர்சனம், பக்கம் 102 -ல் குறிப்பிடுகிறார்.

                    //யூத சமூகம் எங்ஙனம் உருவானது, அதன் மேல் கிரேக்க ரோமானிய கலாச்சாரங்களின் தாக்கம் என்ன, கிறித்தவ மதம் தோன்றிய சமூக காரணங்கள் என்ன, இயேசு யார், வரலாற்று மனிதரா அல்லவா, அது எங்ஙனம் அவசியமற்றது, முகம்மது யார், அவர் முன் அரேபியர் எங்ஙனம் வாழ்ந்தனர், அவர்தம் சமூகம் எப்படியிருந்தது, எதை பற்றியும் தெரியாது. கான்ஸ்டன்டைன் யார், கிறித்தவத்துக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு என்ன, எதுவும் தெரியாது, வாயிக்கு வந்ததை உளறி கொட்ட வேண்டியது.//

                    என்ன இருந்தாலும் நண்டுவிற்கு என்மேல் இந்த காண்டு கூடாது! நான் இவை பற்றி எந்த கருத்தும் கூறவில்லையே! எனக்கு தெரிந்தது திரைப்பட வரலாறுகளே என்றுதானே கூறியுள்ளேன்? வாயிக்கு வந்ததை உளருவது நீங்கள்தானே!

                    உங்கள் கருத்தை கூற விரும்பினால் தாரளமாக நீங்களே எடுத்துரைக்கலாமே! உங்களது இடிப்புரை தேவையற்றது, முறையற்றதும் கூட!

  18. அய்யா உனிவர்புட்டி, பொது சிவில் சட்டம் வேண்டும் என்றால், பொது உடமை/ சமூக உடமை அரசியல் சட்டம் மட்டுமே தரமுடியும்! ஒரு பக்கம் இந்துத்வா பேசிவிட்டு, மத, மொழி சிறுபான்மையினர அடிமைப்படுதத, பொது சிவில் சட்டம் கோருவது, “ஆடு நனைகிறதே என்று, அழுததாம் ஓனாய்!” என்பது போலத்தான்! இந்துககளுக்குள் பொது வழிப்பாட்டு சட்டம் இல்லை, பொது சடங்குகள் இல்லை, பொது கலாச்சாரமும் இல்லை! ஆளுக்கொரு சாதி, சாதிக்கொருநீதி பாராட்டும் இந்து மதததை தூக்கிபிடிக்கும் ஆர் எஸ் எஸ் போன்ற மதவாத கும்பலின் பிடியிலிருந்து இந்து மக்களை முதலில் காப்பாற்றுங்கள்!

  19. அஜாதசத்ரு,

    //இந்து மக்களை முதலில் காப்பாற்றுங்கள்!//

    நான் எந்த மதத்தையும் சார்ந்தவன் இல்லை. எனக்கு எல்லோரும் மனிதர்கள் தான். சக உறவுகள் தான். ஒரு பக்கம் இந்துத்வா பேசிவிட்டு, மறு பக்கம் பொது சிவில் சட்டம் கோருவது, “ஆடு நனைகிறதே என்று, அழுததாம் ஓனாய்!” என்பது போலத்தான் என்பதை ஒத்துக் கொள்கிறேன். அதை நான் கண்டிக்கவும் செய்கிறேன்.
    பொது சிவில் சட்டம் வேண்டும் என்றால், பொது உடமை/ சமூக உடமை அரசியல் சட்டம் மட்டுமே தரமுடியும் என்கறீர்கள். நான் போர்த்திக்கொண்டும் படுத்துக்கொள்ளலாம் படுத்துக்கொண்டும் போர்த்திக்கொள்ளலாம் என்கிறேன்.
    முகமதிய குடும்பங்களில் பேர்பாதி உள்ள பெண்களும் காப்பாற்றப்பட வேண்டியவர்களே.

    • நண்பர் யுனிவர்படி,

      இடையில் புகுந்ததற்கு மன்னிக்கவும். ஆட்சியில் இருப்பது ஹிந்துத்வா சனாதன சக்திகள். அவர்கள் எதற்காக இந்த பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரத் துடிக்கிறார்கள் என்பதை சற்று பார்த்தாலே போதும். தன சொந்த நாட்டை சேர்ந்த மக்களுக்கு துளியும் ஜனநாயகம் அளிக்கத ஹிந்து மதம் ஏனைய மத மக்களுக்கு நன்மை செய்யும் என்பது தண்ணீரில் எழுதிய எழுத்தாகும். அதே போல தாங்கள் இசுலாமிய சமுதாயம் அதிகரித்து வருவது குறித்து மிகுந்த கவலை கொள்வது போல தெரிகிறது. இதையே தான் அவர்களும் கோயபல்சு பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

      ஒரு நாட்டில் , சமுதாயத்தில் மக்கள் தொகை பெருகுகிறது என்பது குறித்த தங்களது மார்க்சிய பார்வை என்ன? இந்தியாவில் கூட இந்துக்களின்(!) எண்ணிக்கை 10 ஆண்டுகளுக்கு முன்பை விட இன்றைக்கு மிக அதிகம் தான். அதனால் என்ன? பொத்தாம் பொதுவாக நாம் இதை மற்ற சிறுபான்மை மக்களுக்கு ஆபத்தாக கருத்துருவாக்கம் செய்ய முடியுமா?

      அப்புறம், தற்போதய சமூக பொருளாதாரச் சூழலில், பொது சிவில் சட்டம் என்பது , தேசிய நதி நீர் இணைப்பு திட்டம் போன்றது. சும்மா தேச(ஹிந்து) பக்தி வெறியைத் தூண்டி விடுவதை தவிர வேறொன்றுமில்லை.

      நன்றி.

      • நண்பர் சிவப்பு,

        //***ஹிந்து மதம் ஏனைய மத மக்களுக்கு நன்மை செய்யும் என்பது தண்ணீரில் எழுதிய எழுத்தாகும்.//

        உன்மைதான். நண்பர் அஜாதசத்ருவுக்கான பதிலில் இதைப் பற்றி பேசியிருக்கிறேன். இந்துக்களிடம் சக தோழமையில்லை. இதைப்பற்றி அண்ணல் அம்பேத்கர் அழகாக எழுதியிருக்கிறார். இதன் காரணத்தினால் தான் இந்தியாவின் மீது படையெடுத்த முகமதியர்கள் தில்லி வரை தங்கள் ரோஜா தோட்டத்தில் உலா வருவதைப் போல வரமுடிந்தது என்கிறார். இந்துக்கள் தங்கள் பெண்களையும் சரியாக நடத்தவில்லை. மற்ற வகுப்பின் பெண்களின் நிலையைப் பற்றி அவர்கள் கவலைப்பட்டு அதற்காக போதுமான எண்ணிக்கையிலான மக்கள் போராட்டங்கள் செய்து தியாகங்கள் புரிவார்கள் என்பதற்கு வாய்ப்புகள் குறைவுதான்.

        //இசுலாமிய சமுதாயம் அதிகரித்து வருவது குறித்து மிகுந்த கவலை கொள்வது போல தெரிகிறது//

        ஆம். மிகுந்த கவலை தான். எனது பெண் சந்ததிகள் கறுப்பில் மூடப்படுவதையோ, ஆண் பெண் சந்ததிகள் தங்கள் முகம் மூக்கு கை கால் களை எண்ணற்ற எண்ணிக்கையில் துடைத்துக் கொள்வதைப் போன்ற மூடத்தனங்களை செய்யவோ விரும்பவில்லை. முகமதியர்களின் தொகை பெருக பெருக மற்றவர்களின் எண்ணிக்கை முகமதியர்களாக மாற்றப்படுவது அதிகரிக்கும். அப்படித்தான் மொராக்கோவிலிருந்து இந்தோனேசியா வரை அதன் ஆதி மக்கள் முகமதியர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். லெபனானின் வரலாறு மிகவும் சமீபத்தியது. பாக்கிஸ்தானில் இந்துப் பெண்கள் எகிப்தில் கிருத்துவப் பெண்கள், etc கடத்தப்படுவது இன்றும் நடப்பது. வரலாறிலிருந்து நான் பாடத்தைக் கற்கிறேன். இனையம் இருப்பதால் இது முடிந்திருக்கிறது. தவறுகள் சரிசெய்யப்படுவதற்காகத் தான் நான் மெனக்கெடுகிறேன்.

        //மக்கள் தொகை பெருகுகிறது என்பது குறித்த தங்களது மார்க்சிய பார்வை என்ன?//

        என்னிடம் இந்த கேள்விக்கு நன்றி. ஒரு ஆரோக்கியமான பொதுவுடமை சமூகம் தனது மக்கள் தொகையை இயல்பாகவே ஒரு சமநிலையில் வைத்துக் கொள்ளும் என்பதை என்னால் யுகிக்க முடிகிறது. (எனது கற்பனைக் குதிரையுடன் பயணம் செய்து அனுபவத்தைப் உங்களுக்கு பகிரத் தயார்.)

        //இந்துக்களின்(!) எண்ணிக்கை 10 ஆண்டுகளுக்கு முன்பை விட இன்றைக்கு மிக அதிகம்//

        விகிதத்தில் பாருங்கள். வித்தியாசம் புரியும்.

        //பொத்தாம் பொதுவாக நாம் இதை மற்ற சிறுபான்மை மக்களுக்கு ஆபத்தாக கருத்துருவாக்கம் செய்ய முடியுமா?//

        கிருத்தவர்களின் (மதமாற்றத்தினால் அல்ல பிறப்பினால்) எண்ணிக்கை கூடுகிறது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். சொன்னவனைத்தான் ஒருமாதிர் பார்ப்பார்கள்.

        //பொது சிவில் சட்டம் என்பது , தேசிய நதி நீர் இணைப்பு திட்டம் போன்றது.//

        நதி நீர் இணைப்பு என்பது மிகவும் அதிக (cement, iron, etc) வளங்களைக் கோரி கற்பனை செய்ய முடியாத அளவு இயற்கை சீரழிவுகளை (inundation, salt deposit, changes in water etc) உருவாக்கும். பொது சட்டம் என்பது அப்படியல்ல. நாம் பெண்களுக்கு சமத்துவத்தை வெல்வதுதான் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கு உள்ள ஒரே வழி என்பது என் துணிபு. நாளையோ அல்லது மறுநாளோ இதை செய்து தான் தீர வேண்டும். மதங்களை துறந்து தான் ஆக வேண்டும். தீயவற்றை உதறித்தான் தீர வேண்டும். குறிப்பாக பொதுநல வர்க்கம் இதைச் செய்ய வேண்டும். இதற்கு ஒளிவுமறைவில்லாத விவாதம் முக்கியம். இந்த நோக்கத்தில் தான் நான் வினவிற்கு வருகிறேன்.

        • //முகமதியர்களின் தொகை பெருக பெருக மற்றவர்களின் எண்ணிக்கை முகமதியர்களாக மாற்றப்படுவது அதிகரிக்கும். அப்படித்தான் மொராக்கோவிலிருந்து இந்தோனேசியா வரை அதன் ஆதி மக்கள் முகமதியர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். லெபனானின் வரலாறு மிகவும் சமீபத்தியது. பாக்கிஸ்தானில் இந்துப் பெண்கள் எகிப்தில் கிருத்துவப் பெண்கள், etc கடத்தப்படுவது இன்றும் நடப்பது. வரலாறிலிருந்து நான் பாடத்தைக் கற்கிறேன். இனையம் இருப்பதால் இது முடிந்திருக்கிறது. தவறுகள் சரிசெய்யப்படுவதற்காகத் தான் நான் மெனக்கெடுகிறேன்.\\ மீண்டும் ஒரு அர்த்தமற்ற பிதற்றல்.. தாங்கள் சொல்வது ஒரு வாதத்திற்க்கு உண்மையாக கொண்டாலும் கூட , அவ்வாறு கட்டாய மதமாற்றத்தால் யாருக்கு என்ன பயன் . இவ்வாறான அர்த்தமற்ற அடிப்படை அற்ற கருத்துக்களை பதிவிடுவதை தான் முட்டாள்தனம் என்கிறேன். வழிபாட்டில் வழிமுறைகளை வைக்கலாம் , ஆனால் கட்டாயப்படுத்தி இறைவனை வழிபட செய்ய இயலுமா? வழிபாடு என்பதே மனரீதியாக நிறைந்த மனதுடன் சையப்படவேண்டியது . இதனை கட்டாயப்படுத்தி சையச்சொன்னால் அது வழிபாடாகாது மாறாக தண்டனையாகவே உணரப்படும் . மேலும் இந்தவகைலான வழிபாட்டு முறையா பின்வரும் சந்ததியர்களுக்கு சொல்லிக்கொடுத்திருப்பார்கள். தாங்கள் மனநிறைவு அடையாத ஒரு விஷயத்தைய தன்னுடைய சந்ததிகள் செய்யவேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புவார்கள்? என்னைய நீர் இப்போது தான் இப்படியா அல்லது எப்போதுமே இப்படித்தான. ? எப்படி இப்படி அர்த்தமற்ற உளறலை போட்டு அதற்க்கு மெனக்கெடுவதாக கொஞ்சம் கூட உறுத்தல் இல்லாமல் பதிவிடுகிரீர். நாத்திகன் என்ற ரீதியில் வழிப்பாட்டு முறை வேண்டுமானால் உமக்கு விளங்காமல் இருக்காமல் , மனித சமுதாயத்தின் சாதாரண மனநிலை பற்றிய அறிவு கூடவ உமக்கு விளங்கவில்லை.

          //என்னிடம் இந்த கேள்விக்கு நன்றி\\ என்னையும் ஒரு மனிதனாய் மதித்து இந்த கேள்வியை கேட்டமைக்கு நன்றி என்பதுபோல் உள்ளது.

          //எனது கற்பனைக் குதிரையுடன் பயணம் செய்து அனுபவத்தைப் உங்களுக்கு பகிரத் தயார்\\ உம்முடைய கற்பனை குதிரை இல்லாத ஊரில் பொல்லாத தெருவை தேடி அல்லவே அலைகிறது . இதனால் யாருக்கு என்ன பயன்.
          //விகிதத்தில் பாருங்கள். வித்தியாசம் புரியும்.\\ தாங்கள் வேண்டுமானால் தங்களின் நாதாரி எழுத்துப்பிழை நாத்திகர் வேடத்தை கலைத்துவிட்டு சாமியார் வேடத்தில் அவதரித்து மனம்வந்து மதமாரியவர்களையும் , அறியாமையால் மதம்மாரியவர்களையும் மந்திரங்கள் போட்டு திரும்பவும் ஹிந்து மதத்திற்க்கு வருவதற்கு பாடுபடுன்களேன்.

          //இதற்கு ஒளிவுமறைவில்லாத விவாதம் முக்கியம். இந்த நோக்கத்தில் தான் நான் வினவிற்கு வருகிறேன்.\\ உம்முடைய கருத்துக்களை படிப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும் தாங்கள் எதற்கு வினவுக்கு வருகிறீர்கள் என்று.
          //ஒளிவுமறைவில்லாத விவாதம் முக்கியம்\\ ஓ இந்த வார்த்திகள் எல்லாம் கூட தங்களுக்கு தெரியுமா?

  20. //நான் போர்த்திக்கொண்டும் படுத்துக்கொள்ளலாம் படுத்துக்கொண்டும் போர்த்திக்கொள்ளலாம் என்கிறேன்.//

    நன்றி! எப்படியாவது போர்த்தி கொண்டால் சரிதான்!

    //முகமதிய குடும்பங்களில் பேர்பாதி உள்ள பெண்களும் காப்பாற்றப்பட வேண்டியவர்களே.//

    ஒப்புக்கொள்கிறேன்!நண்பரே! மெஜாரிடியாக உள்ள நாம் சீர்திருத்தத்தை துவக்கினால், மற்றவர்கள் பின்தொடருவார்கள்! ‘அவரை முதலில் திருந்தச்சொல்,நான் திருந்துகிறேன்’ என்பது போன்ற வீராவேசங்கள் வெறும் தற்காப்புகளே!

    எனது இசுலாமிய நண்பர்கள் மூலமாக சில நற்செய்தி மலர் புத்தகங்களையும், தமிழில் குரான் புத்தகமும் கிடைக்கப் பெற்றேன்! படித்ததும் மீண்டும் பேசலாம்!

    ஆனால், கிறித்துவர்களை போலன்றி இசுலாமியர்கள் நம்மை நீண்ட நாள் ஆண்டாலும், கட்டாய மதமாற்றம் செய்யவில்லை!

    இந்து பார்பன பூசாரிகள் போல கோவில்களை ஆக்கிரமித்து மக்களை ஏமாற்றவில்லை!

    அவர்களின் அரபு மொழியின் இந்திய வடிவமே இந்தி என்று அறிகிறேன்! அதை தேவனாகரி எழுத்தில் கொண்டு வந்து சம்ஸ்கிருத மயமாக்கப்பட்டு வருகிறது!

    ராஜஸ்தான் முதலிய வடனாட்டு மக்களின் வாழ்க்கை முறை இசுலாமியர்களை போலவே உள்ளது, (பெண்களின் புர்கா உட்பட)! சதி, பால்ய விவாகம் போன்ற விஷயங்களில் அவர்களைவிட கொடுமையாக உள்ளது!

    பொதுவாக, இரு சமூகங்களிலும், பணக்காரர்களைவிட, ஏழைகளே அதிகம் பாதிப்படைகின்றனர்!
    சட்டங்கள் கூட கிராமப்புற மக்களை சென்றடைவது இல்லை!

    பல்வேறு பழக்க வழக்கங்கள் கொண்ட,கட்டாயமாக்கப்பட்ட ஒரே இறைனெறி இல்லாத இந்து மத பார்பன மனு சட்டத்தை, பொது சட்டமாக யார் அங்கீகரிப்பர்? வீணான மதவெறி சண்டையையே இது கிளப்பி விடும்!

    கிறித்துவத்திலும், ஒவ்வொருநாட்டிலும் அவரவர் பழைய சட்டங்களே நடைமுறை படுத்தபடுகிறது!

    ரோமன் கத்தோலிக்கர்கள் மட்டுமே பொதுவான மதசட்டம் கொண்டிருக்கிறார்கள்! மற்ற பிரிவுகள் அவரவர் வழக்கப்படிதானே நடக்கின்றனர்?

    இந்துத்வா கோலோச்சும் இந்த தருணத்தில், பொது சிவில் சட்டம் என்பது, தேன் கூட்டை கலைக்கும் முயற்சியே!

    நகர வாழ்வு, எல்லா மத மக்களையும் மாற்றி வருகிறது! தங்கள் ஆதிக்கம் குறைவதைகண்ட மதவெறியாளர்களே துள்ளி குதிக்கிறார்கள், வன்முறையை கிளப்பிவிடுகிறார்கள்!

    நன்றி!நண்பரே!

    • நண்பர் அஜாதசத்ரு,

      // மெஜாரிடியாக உள்ள நாம்//

      இன்றைய உலகில் இந்துக்களை விட முகமதியர்களே அதிகம். 55 நாடுகள் மற்றும் 1.5 பில்லியன் மக்கள். அவர்களின் போக்கு நம்மை வெகுவாக பாதிக்கும் நிலை தான் உள்ளது.

      // கட்டாய மதமாற்றம் செய்யவில்லை!//

      இந்தியாவும் ஒரு மொராக்கோவாகவோ (west end) அல்லது இந்தோனேசியாவாகவோ (east end) மாறவில்லை என்பது உன்மைதான். நமது நாட்டின் ஏதோ ஒரு அம்சம் அதை தடுத்திருக்கிறது என்று இதைப் புரிந்து கொள்ளலாம். அல்லது விதிவிலக்காகவும் பார்க்கலாம். இருந்தாலும் சிந்து சமவெளியும் காஸ்மீரப் பள்ளத்தாக்கும் வங்கத்தின் பெரும்பகுதியும் இதிலிருந்து தப்பவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

      // சதி, பால்ய விவாகம் போன்ற விஷயங்களில் அவர்களைவிட கொடுமையாக உள்ளது!//

      சதியைப் பற்றி இன்னும் பேசத் தேவையில்லை என்பதுதான் இப்போதைய நிலை. பால்ய மணம் இன்னும் சிறிய அளவில் தொடர்கிறது. சாதியை பாதுகாக்கவும் பெண்களின் தேர்வு செய்யும் உரிமையை மறுக்கவும் செய்யப்படுவதால் அது அருவருக்கத்தக்கது தான்.

      // பார்பன மனு சட்டத்தை, பொது சட்டமாக யார் அங்கீகரிப்பர்?//

      மனு சட்டத்தை, பொது சட்டமாக நானும் ஏற்றுக் கொள்ளவில்லை. சனநாயக சக்திகள் அதை கடைசிவரை எதிர்க்கவே செய்வர். ஆனால் உன்மையிலேயே மனிதர்கள் எல்லோருக்குமான ஒரு பொதுமையான சட்டம் வேண்டும். அதற்காக நாம் போராடவேண்டும்.

      // கிறித்துவத்திலும், ஒவ்வொருநாட்டிலும் அவரவர் பழைய சட்டங்களே நடைமுறை படுத்தபடுகிறது!//

      இது தெளிவாக இல்லை. எப்படியே, கிருத்துவர்களின் சட்டம் ஒரு பொது சட்டம் போன்றது தான்.

      // பொது சிவில் சட்டம் என்பது, தேன் கூட்டை கலைக்கும் முயற்சியே!//

      இதற்கு எதிர்ப்பு வருவது இயற்கையே. இந்தியாவின் அல்லது இந்துக்களின் ஜனநாயகத்தன்மை கூடினால் தான் இந்த சட்டம் சாத்தியமாகும். தற்போதைய நிலையில் இது சாத்தியமில்லை தான். தேன் கூட்டை கலைக்காமலேயே தேன் எடுப்பது தான் சிறந்த வழி. தகுந்த நேரத்தில் இது சாத்தியமாக வேண்டும். வேண்டுமானால் தேனீக்கள் அமைதியாவதற்காக சிறிது புகை போட்டுக் கொள்ளலாம். 🙂

    • பாலைவனப்பகுதிகளில் மணற்புயல் அடிக்கடி வரும். அப்போது அதிலிருந்து தங்களது கண்கள் மற்றும் சருமத்தை பாதுகாப்பதற்கு தான் அந்த காலங்களில் அரேபிய பகுதிகளில் மக்கள் தலை முதல் கால் வரை போர்த்திய உடைகளை அணிந்தனர்.

      பின்னர் முழுக்க போர்த்தியவர்களில் ஆண் பெண் வித்தியாசம் அறிய ஆண்கள் வெள்ளை உடையையும், பெண்கள் கருப்பு உடையையும் அணிந்தனர்.

      ஆனால் பின்னர் வந்த சந்ததியினர் அதையே ஒரு நம்பிக்கையாக எண்ணி பின்பற்றுகின்றனர்.

      ராஜஸ்தான், அரேபிய பிரதேசங்கள் பாலைவனங்களாக இருப்பதால் அங்கு இத்தகைய உடைகளை மக்கள் அணிகின்றனர். மற்றபடி இதற்கு மதக்காரணம் பூசப்பட்டது பிற்பாடு தான்.

  21. ஆகா, இன்னுமா இந்த மதச்சண்டை ஓயவில்லை?

    விடுங்கப்பா, ஆகிற வேலை ஏதாவது இருந்தால் பார்ப்போம்.
    உங்க மதம் பெரிதா, எங்க மதம் பெரிதா, இந்த சண்டை ஓயவே ஓயாது.

    அவரவர் அவர்களுக்கு பிடித்த மார்க்கத்தை தேர்ந்தெடுத்து கொள்ளட்டும். மதமே வேண்டாம் என்று எங்களை போல சுயேட்சையாக நின்றாலும் சரி தான்.

    என் மதம் மட்டும் தான் ஒரே மார்க்கம், என் கடவுள் மட்டும் தான் ஒரே கடவுள் என்பதெல்லாம் வீண் வேலை.

    உருப்படியாக ஏதாவது செய்வோம்.

    • கற்றது கையளவு,
      இங்கு யார் மதம் அல்லது மார்க்கம் பெரியது பற்றிய விவாதமே இல்லை.இன்னும் அம்மாதிரியான விவாதத்தை தொடர்வதற்கான நிர்பந்தமும் ஏற்படவில்லை. ஆனால் இங்கு உனிவேர்புட்டி போன்ற ஒரு சிலர் தன்னை ஒரு நாத்திகவாதி என்று அடையாள படுத்திக்கொண்டே இஸ்லாத்தின் மீது ஆதாரமில்லாத குற்றசாட்டுக்களை அடுக்குகிறார்கள் , அதற்க்கான ஆதாரத்தையும் விளக்கத்தையும் கேட்டால் சம்பந்தமே இல்லாமல் உளறுகிறார்கள். எனவே , தான் அவர்கள் வைக்கும் குற்றசாட்டிட்க்கு சிறிதும் இஸ்லாம் சம்பந்தப்படவில்லை என்பதை உணர்த்தவே ஆதாரத்தின் அடிப்படைலும் விளக்கத்தின் அடிப்படைலும் விவாதம் செய்ய நிர்பந்திக்கப்பட்டோம். தாங்கள் வேண்டுமானால் இங்கு பதிவு செய்யப்பட்ட கருத்துக்களை பார்த்து யாரிடம் இருந்து பிரச்சனை எழுந்தது என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.

      எப்படி உங்களுக்கு இறைவன் இல்லை என்ற சித்தாந்தம் மனநிறைவை தருகிறதோ அது போன்றே இறைவன் இருக்கிறான் என்ற சித்தாந்தம் எங்களுக்கு மனநிறைவை தருகிறது . ஆனால் இங்கு ஒரு சிலர் தன்னை ஒரு நாத்திகவாதியாக காட்டிக்கொள்வதால் எந்த சித்தாந்தையும் கீழ்த்தரமாக விமர்சிக்கலாம் என்று நினைக்கிறார்.

    • கற்றது கையளவு அவர்களே,

      \\ஆகா, இன்னுமா இந்த மதச்சண்டை ஓயவில்லை?……………..உங்க மதம் பெரிதா, எங்க மதம் பெரிதா, இந்த சண்டை ஓயவே ஓயாது//

      நாங்கள் ஒரு நாளும் என் மதம்தான் உயர்ந்தது,பெரியது என வாதிட்டதில்லை.அது இசுலாமிய நெறிகளுக்கும் எதிரானது.திருமறை குர் ஆன் 109.1 லிருந்து 109.5 வரையிலான வசனங்கள் தெளிவாக அறிவிக்கின்றன.

      Say, ‘O unbelievers,I do not worship what you worship .
      Nor are you worshippers of what I worship.
      Nor will I be a worshipper of what you worship.
      Nor will you be worshippers of what I worship.
      For you is your religion, and for me is my religion.

      இசுலாத்தை ஏற்காதவர்கள் அவரவர் மார்க்கங்களை பின்பற்றிக்கொள்ளலாம் என தெளிவாக சொல்கின்றன இவ்வசனங்கள்.கடைசி வசனம் உங்கள் மதம் உங்களுக்கு எனது மதம் எனக்கு என்று சொல்வதன் மூலம் அனைத்து மதங்களையும் சமமான அளவில் வைப்பதையும் உணரலாம்.

      இங்கு விவாதிப்பதே உலகிலேயே மிகப்பெரிய தீய சக்தி இசுலாம்தான் என அபாண்டமாக பேசுகின்ற யுனிவர் போன்ற முசுலிம் எதிர்ப்பு மதவெறியர்களின் பித்தலாட்டத்தை எதிர்கொள்ளவே.இதில் வேடிக்கை என்னவென்றால் யுனி தனது மத அடையாளத்தை மறைத்துக்கொண்டு கடவுள் மறுப்பாளர் வேடம் கட்டி ஆடுவதுதான்.கடவுள் மறுப்பாளர் என்றால் அனைத்து மதங்களையும் சம அளவில் வைத்து விமரிசிப்பதுதானே நேர்மை.இவரோ இசுலாமிய மதத்தை மட்டும் குறி வைப்பதன் காரணம் அவரும் ஒரு மதவாதி என்பதால்தான்.தனது மத அடையாளத்தை வெளிக்காட்டினால் அது குறித்த விமரிசனங்களுக்கு முகம் கொடுக்க முடியாது என்று அடையாளத்தை மறைக்கும் கோழை இவர்.

      • திரு திப்பு அவர்களே,

        நமது மிகப்பெரிய சொத்து என்ன?

        காசா, நகையா, நிலமா, படைபலமா? அதிகாரமா?

        இது எதுவுமே இல்லை.

        இப்போதைய காலகட்டத்தில் நமது மிகப்பெரும் சொத்து என்பது நமக்கு கிடைத்த நேரம் தான்.

        அதை நமக்கோ அல்லது மற்றோருக்கோ பயனுள்ள வழியில் செலவிடுவது நல்லது.

        நான் சமீப காலங்களில் அதிக அளவில் விவாதங்களில் ஈடுபடுவதில்லை என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். ஏன் என்றால் சில விவாதங்கள் ஒரு இலக்கில்லாமல் ஒருவரை மற்றவர் சீண்டுவதற்கும், பதில் தாக்குதல் நடத்துவதுற்குமே செலவிடப்படுகிறது.

        வாழ்வில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு சமயம் வரும். அப்போது நாம் வாழ்நாளில் எத்தனை மணி நேரம் வீணாக செலவழித்தோம் என்று நாம் வருந்தும் நேரம் அது.

        மக்களுக்கும், நாட்டுக்கும் பயனுள்ள வகையில் சில யோசனைகள், சில தீர்வுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் நான் வினவு தளத்தில் பதிவிட்டு வந்தேன்.
        சில சமயங்களில் ஆர்வமிகுதியில் நானும் சில தேவையில்லாத விடயங்களுக்காக நீண்ட விவாதங்களிலும் கலந்து கொண்டிருக்கிறேன். அதற்காக வருந்தவும் செய்கிறேன்.

        மக்களுக்கு பயனுள்ள ஏதாவது ஒரு யோசனை, ஒரு தீர்வு பற்றி பேசுங்கள்.
        நம் நேரத்தை பயனுள்ளதாக்குவோம்.
        தனி மனித தாக்குதல், மற்ற மத, இனத்தவரை தாக்குதல் இவையெல்லாம் ஒரு தீர்வுக்கு நம்மை கொண்டு செல்லாது.

        கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பவர்களின் தூண்டிலுக்கு நாம் இறையாகவேண்டாமே.

        தெளிவாக யோசிப்போம், தெளிவாக பேசுவோம். நம் குறிக்கோளுக்கு இந்த விவாதம் பயனளிக்குமா என்று முதலில் யோசித்து பின் பதிவிடுவோம்.

        இல்லை என்றால் நாட்டில் வேலை இல்லாமல் நேரத்தை வீணடிக்கும் எண்ணற்றோர் பட்டியலில் நாமும் இணைய வேண்டியிருக்கும்.

        உருப்படியான விவாதங்களில் எனது பங்கு இருப்பதை நான் விரும்புகிறேன்.

        நன்றி.

        • univerbutty,

          Again again u r proving that, u don’t have any knowledge and self thinking. let the others also know your reality.

          Friends,

          Like alisina univerbuddy also mental. never accepts their faults even we give N no of evidence and explanation.

  22. //இந்தியாவின் அல்லது இந்துக்களின் ஜனநாயகத்தன்மை கூடினால் தான் இந்த சட்டம் சாத்தியமாகும்\\
    அது என்ன ஹிந்துக்களின் ஜனநாயகம்,, பல நேரங்களில் உம்முடைய காவி வேஷம் வெளியில் தெரியாமல் இல்லை. முதலில் இந்த இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்பட்ட அந்த நான்கு சட்டதிட்டத்தினால் மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை என்பதை விளக்க முடியுமா? மிஞ்சி மிஞ்சி போனால் அந்த சட்டங்கள் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கிறது என்பீர். அது உம்முடைய தனிப்பட்ட கருத்து சம்பந்தப்பட்ட இஸ்லாமியர்கள் அப்படி பார்க்க வில்லையே , சம்பந்தப்பட்டவர்களுக்கே அது பிரச்சனையாகவோ அடக்குமுரையாகவோ தெரியாத பட்சத்தில் தங்களுக்கு ஏன் காரணமில்லாமல் வேர்த்து வடிகிறது . அதுவும் குறிப்பாக இஸ்லாமியர்கள் என்று வந்துவிட்டாலே தங்களின் சிந்தனை ஏன் கற்பனை குதிரையில் பயணம் செய்து இல்லாத ஊரையெல்லாம் சுற்றுகிறது..

    நாங்கள் அல்லாஹ்வை இறைவனாக ஏற்க்கிறோம் . மேலும் , படைத்த இறைவனை தவிர்த்து மற்ற எவராலும் என்றைக்கும் பொருந்தும் சட்டத்தை உருவாக்க இயலாது என்பதை ஆணித்தரமாக நம்புகிறோம் . இது எங்களின் நம்பிக்கை அது உங்களுக்கு கேளிக்கூத்தாகவோ அறிவுக்கு போருந்தாதாகவோ தோன்றினால் நீங்கள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டாம் அது உங்களின் சுதந்திரம் . ஆனால் அதே நேரத்தில் எங்களை பின்பற்றக்கூடாது என்று கூருவது தான்தோன்றித்தனம் மற்றும் சர்வாதிகார போக்கு.

    எப்படி ஒரு பொருளை உருவாக்கியவரால் தான் அந்த பொருள்சார்ந்த சிறந்த செயல்முறை விளக்கத்தை தரமுடியும் என்பதை நம்புகிறோமோ . அது போன்றே மனித சமுதாயத்தை உருவாக்கிய இறைவனே கொடுத்த சட்டதிட்டங்களே என்றென்றும் பயனளிக்கும் என்று நம்புவதில் எவ்வித தவறும் இருப்பதாக உணரமுடியவில்லை.

    • Zahir கண்ணு,

      //சம்பந்தப்பட்டவர்களுக்கே அது பிரச்சனையாகவோ அடக்குமுரையாகவோ தெரியாத பட்சத்தில்***//

      குழந்தையிலிருந்தே அடிமைத்தனத்தில் வளர்க்கப்படுபவர்கள் பலருக்கு அது இயல்பாகவே தோன்றலாம். அதற்காக மற்றவர்கள் அவர்களை விடுவிக்க முயலக்கூடாது என்று பொருளல்ல.

      //எங்களை பின்பற்றக்கூடாது என்று கூருவது தான்தோன்றித்தனம்//

      பின்பற்றாதவர்களை இழிபிறவிகள் (Worst of creatures) என்று அழைப்பது என்னத் தனம்? சின்னத்தனம் தானே?

      //மாற்று மத அல்லது சமுதாய பெண்களை திருமனம செய்தல் சிறந்தது என்று எங்கேனும் குரானிலோ , ஹதித்லோ குறிப்பிடப்பட்டுள்ளதா?//

      நீங்கள் இந்த விசயத்தில் கோடு போட்டால் ரோடு போடக்கூடியவர்கள். உங்கள் புத்தகங்களில் மற்றும் உங்கள் வழிகாட்டியின் வாழ்ந்து காட்டிய நெறிமுறைகளில் ரோடுகளே இருக்கின்றன. இதை ஒரு வணக்கமாக எண்ணித்தான் இஸ்லாமியர்கள் செய்து வந்திருக்கிறார்கள், வெள்ளையர்களின் ஆதிக்கத்திற்குட்படும் வரையில்.

      //மீறுவோர் தண்டனைக்கொல்லாக்கப்படுவார்கள்.//

      புதுக்கதை. என்ன தன்டனை?

      //இஸ்லாத்தின் அடிப்படையில் திருமன்த்திட்க்கு பின்பு தான் காதல்//

      அதனால்தான் முகமதியம் இயற்கைக்குப் புறம்பானது என்கிறேன்.

      • Univerbuddy,

        மொத்தத்தில் நான் கேட்ட பல கேள்விகளுக்கும் உம்மிடத்தில் பதில்களும் இல்லை விளக்கமும் இல்லை. உமக்கு சுயசிந்தனை என்ற ஒன்று இல்லை என்பதையும் அடிக்கடி நிரூபிக்கும் வகையில் மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களை ஆராயாமல் அப்படியே இங்கே வாந்தி எடுத்து மாட்டிக்கொல்வதிளிருந்து தெரிகிறது. எனவே , இனிமேலும் உம்மிடம் விவாதம் சைவத்தில் ஒரு பிரயோஜனமும் இல்லை. இங்குள்ள பலரும் உம்முடைய கையாலாகாத்தனத்தையும் , கிறுக்குத்தனத்தையும் புரிந்து இருப்பார் என்றே எண்ணுகிறேன். இனி வரும் காலங்களிலாவது ஆதாரம் இல்லாமல் காழ்ப்புணர்வில் உளறுவதை தவிர்த்து சற்று அறிவை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்_____ .

    • ///நாங்கள் அல்லாஹ்வை இறைவனாக ஏற்க்கிறோம் . மேலும் , படைத்த இறைவனை தவிர்த்து மற்ற எவராலும் என்றைக்கும் பொருந்தும் சட்டத்தை உருவாக்க இயலாது என்பதை ஆணித்தரமாக நம்புகிறோம்///
      இந்த அல்லா முஸ்லீம்களை மட்டும்தான் படைத்தார? மற்றவர்களை எந்த கடவுள் படைத்தார் என்று கூறமுடியுமா? உலகில் எழு நூறு கோடி மக்களுக்கு மேல் வாழ்ந்து வருகின்றனர். அதில் சுமார் இருநூறு கோடிக்கும் குறைவாகத்தான் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். உலகில் கடவுள் இருக்கிறார் என்றால் ஒருவர்தான் இருக்க முடியும். இந்த உலகில் பல கடவுள்கள் இங்குள்ள மக்களை படைத்தார்களா? இன்றைய சூழ்நிலையில் இஸ்லாமிய நாடுகள் அனைத்திலும் பயங்கரவாதங்கள் அரங்கேறுகின்றன. இதற்கும் இந்த அல்லாதான் பொறுப்பா? மனிதனின் கழுத்தை அறுத்து கொல்கிறார்களே இதற்கும் இந்த அல்லாதான் பொறுப்பா? ஏன் இந்த அல்லா இப்படியெல்லாம் செய்ய துண்டுகிறார். எல்லா கடவுளர்களும் ஒரே இடத்தில் இருக்கிறார்களா அல்லது வெவ்வேறு இடத்தில் இருந்த மனிதனை படைக்கிறார்களா?

      • //இந்த அல்லா முஸ்லீம்களை மட்டும்தான் படைத்தார? மற்றவர்களை எந்த கடவுள் படைத்தார் என்று கூறமுடியுமா? உலகில் எழு நூறு கோடி மக்களுக்கு மேல் வாழ்ந்து வருகின்றனர். அதில் சுமார் இருநூறு கோடிக்கும் குறைவாகத்தான் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். உலகில் கடவுள் இருக்கிறார் என்றால் ஒருவர்தான் இருக்க முடியும்.\\
        இஸ்லாமியர்களான நாங்கள் அல்லாஹ்வை இறைவனாக எட்க்கிறோம் என்ற என்னுடைய வாதத்திலிருந்து சற்றும் சம்பந்தமே இல்லாமல் மற்றவர்களை எல்லாம் யார் படைத்தார் என்ற கேள்வி கேட்பதிலிருந்து எதனை விளக்க முயல்கிறீர்? தாங்கள் சொல்வதுபோல் வெளி ஊர் கடவுள் உல்லூர் கடவுள் என்ற கொள்கைகள் எல்லாம் எங்களுக்கு இல்லை. இஸ்லாமியர்களின் அடிப்படை நம்பிக்கையே தெரியாமல் இப்படி ஒரு கேள்வியை எழுப்பி உள்ளீர்கள் என்றே எண்ணுகிறேன். முஸ்லிம்களை மட்டும் தான் இறைவன் படைத்தான் என்று நான் எங்குமே பதிவிடவில்லையே. தோழரே , சற்று தூன்காமல் படிக்கவும்.

        முதல் மனிதன் ஆதம் (அலை) முதல் உலக அழிவுநாள் வரை பிரக்கக்கூடிய அனைத்து மனிதனையும் படைத்தது ஒரே இறைவன் தான் . இன்னும் உலகத்தில் உள்ள அனைத்த ஜீவராசிகளையும் படித்ததும் அதே இறைவன் தான் என்பதுதான் இஸ்லாமியர்களின் நம்பிக்கை.

        //இன்றைய சூழ்நிலையில் இஸ்லாமிய நாடுகள் அனைத்திலும் பயங்கரவாதங்கள் அரங்கேறுகின்றன. இதற்கும் இந்த அல்லாதான் பொறுப்பா? மனிதனின் கழுத்தை அறுத்து கொல்கிறார்களே இதற்கும் இந்த அல்லாதான் பொறுப்பா? ஏன் இந்த அல்லா இப்படியெல்லாம் செய்ய துண்டுகிறார். எல்லா கடவுளர்களும் ஒரே இடத்தில் இருக்கிறார்களா அல்லது வெவ்வேறு இடத்தில் இருந்த மனிதனை படைக்கிறார்களா?\\

        ஒட்டு மொத்தத்தில் தங்களின் வாதத்தில் எவ்வித அறிவுப்பூர்வமான விஷயத்தையும் காணமுடியவில்லை. பயங்கரவாதம் எல்லா இடங்களிலும் தான் நடக்கிறது . அதற்க்கு அந்த செயலை செய்பவர்கள் தான் தண்டனைக்குல்லாக்கப்படுதல் வேண்டும் . அதை விடுத்து தவறு சையும் ஒரு சிறு கூட்டட்தை வைத்து அவர்கள் சார்ந்துள்ள அந்த மதத்தையே தவறாக உருவகப்படுத்தும் உம்முடைய அறியாமையை என்ன வென்று சொல்ல இயலும். இங்குள்ள ஆர் எஸ் எஸ் , மொவைச்டுகள் போன்றோர் சையும் தீயக்காரியங்களுக்கு ஹிந்து மதத்தையோ அல்லது அதனை சார்ந்தோரையோ குற்றம் சாட்ட முடியுமா? அப்படி குற்றம் சாட்டினால் நிச்சயமாக அதுவொரு அறிவீனமே அன்றி வேறில்லை. அப்படி இருக்கையில் மனிதர்கள் ஒருசிலர் சையும் குற்றங்களுக்கு படைத்த இறைவன் எப்படி பொறுப்பாக முடியும். என்னைய உம்மவாதம் கிருக்குத்தனத்தின் உச்சக்கட்டமாய் உள்ளதே. இம்மாதிரியான மனித உயெரை எடுப்போருக்கு தண்டனையாக கொலைசைதவனுக்கு மரண தண்டனையை விதிக்கிறது இஸ்லாமிய சட்டம். ஆனால் அது மிகவும் கடுமையானது என்று வாதிடுவோரும் இருக்கத்தான் செய்கிறார்கள். கடுமையானவர்களிடம் கடுமையான சட்டத்தை கையாள்வதில் என்ன தவறு இருக்க முடியும்.

        //மனிதனின் கழுத்தை அறுத்து கொல்கிறார்களே இதற்கும் இந்த அல்லாதான் பொறுப்பா? ஏன் இந்த அல்லா இப்படியெல்லாம் செய்ய துண்டுகிறார். \\ எதன் அடிப்படையில் இம்மாதிரியான கேள்விகளை கேட்கிறீர்கள் என்று புரியவில்லை.தகுந்த காரணமின்றி மனிதனின் கழுத்தை அறுத்து கொள்வது தவறு அதற்க்கு குற்றவாளிக்கு மரணதண்டைனயோ ,பாதிக்கப்பட்ட குடும்பத்தின் உறுப்பினர்கள் மன்னித்தால் மட்டுமே அவருக்கு இந்த தண்டனைளிருந்து விலக்கு அளிக்கப்படும் இதுதான் இஸ்லாமிய ஷரியத் சட்டம். இப்படி இருக்க என்னமோ கொலை செய்பவனுக்கு சுவர்க்கத்தில் வீடு கட்டித்தரப்படும் என்று இறைவன் சொன்னதால் தான் இவர்கள் எல்லாம் கொளைசைவதாக ஒரு பிம்பந்தை அல்லவே உருவாக்குகிறீர். நாட்ராயன் சற்றே நட்டு கலன்றவரை போல் கருத்தை பதிவு செய்வதும் முறையா?

        //எல்லா கடவுளர்களும் ஒரே இடத்தில் இருக்கிறார்களா அல்லது வெவ்வேறு இடத்தில் இருந்த மனிதனை படைக்கிறார்களா\\ இஸ்லாமியனான என்னை பொறுத்தவரை அனைத்து ஜீவராசிகளையும் படைத்தது ஒரே இறைவன் தான் . அவனுக்கு நல்ல பல பெயர்கள் இருக்கலாம். எனவே , வெவ்வேறு கடவுள்கள் என்ற வாதத்திற்கே ஆன்மீகத்தில் இடமில்லை. என்ன வணங்கும் அனைவருமே தன்னுடைய கடவுள் தான் உண்மை என்பார்கள் . எனினும் அனைவராலும் வணங்கப்படும் இறைவன் ஒருவனே.

        இன்னும் கொஞ்சம் விட்டால் ஒவ்வொரு கடவுளும் எங்கே மனிதர்களை படைக்கும் பாக்டரி வைத்துள்ளார்கள் என்பீர்கள் போல் உள்ளதே.

  23. அய்யா உனிவர்புட்டி அவர்களே!
    மதம் மக்களை கட்டுப்படுத்துகிறது! ஆதிக்க சக்திகளே மதத்தை கட்டுப்படுத்துகிறார்கள்! ஒரெ மதததை சேர்ந்த பலநாடுகள்,குழு கலாசாரத்தால்,மொழியால் பிளவுபட்டிருக்கிறார்கள்! எந்தநாளிலும் மத அடிப்படையில் அவர்கள் ஒன்றுசெர முடியாது! ஈராக், ஈரான்(மெசபடோமியா) பகுதி மக்கள் னமக்கு தூரத்து உறவினரே! தற்போது அவர்கள் இச்லாமியர்களாயிருந்தாலும் அவர்களுக்குள் கலீபா-முல்லா ஆதிக்க போட்டியில் ஷியா என்றும், சன்னி என்றும் பிரிந்து ஒருவரை ஒருவர் அடித்துகொள்கின்றனர்!

    துருக்கி மக்களோ தாங்கள் அய்ரொப்பியர்கள் என பெருமை கொள்கின்றனர்! மத அடிப்படைவாதம் அங்கு எடுபடவில்லை! குர்டிஷ் இன மக்கள், இச்லாமியர் என்றாலும், இன அடிப்படையில் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள், தமிழரை போல!

    உலக கிருத்துவர்களும் தங்கள் தங்கள் பிரதேச கலாச்சாரத்திற்கு ஏற்ப பிளவு பட்டாயிற்று! போப்பாண்டவரின் ஆதிக்கம் வலிவிழந்துவிட்டது!

    இரண்டு உலக போர்கள் புதிய ஆதிக்க சக்தியாக முதலாளித்துவத்தை அரியணையிலேற்றியிருக்கிறது! மாற்றாக வந்த சோஷலிச அரசுகள் சிதைக்கப்பட்டு, மீள்வதற்கு போராடுகின்றன!

    இதில் இந்து மெஜொரிட்டி, இஸ்லாமிய மெஜாரிட்டி எல்லாம் அந்தந்த முதலாளி தீர்மானிப்பதுதான்!
    இல்லவிட்டால் பல இஸ்லாமியநாடுகள் பினாமி அரசாக அமெரிக்காவை ஆதரிக்குமா?

    இலங்கையில் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டபோது இங்குள்ள இந்தூக்கள் என்ன செய்தார்கள்?

    ரோமன் கத்தோலிசம், சிரியன் ஒர்தோடாக்ஸ், ரஷ்யன் ஒர்தோடாக்ஸ், சிலோன் பெந்தகொஷ்தே, செவெந்த் டே அட்வென்டிஸ்டுகள் என பல பிரிவுகள்!

  24. திப்பு,

    // இப்ப கணக்கு நேராயிடுதுதா இல்லையா .//

    இல்லை. தனது குழந்தைகளின் நிக்கா உறவுகளுக்காகவும் பெண்கள் மட்டுமே தியாகம் செய்ய வேண்டும் என்பது அநீதி. இருக்கட்டும்.
    தாய்மைத் தொடர்பான தியாகங்களுக்கு கணவன் சொத்தில் தான் பங்கு கேட்க முடியும் என்றால் அது எப்போது. பொதுவாக கணவன் முதுமையடைந்து மௌத் ஆனபிறகு தான் அது முடியும். அந்த சமயத்தில் அந்த பெண்ணும் வயதானவராகத்தான் இருப்பார். அப்போது அவருடைய தேவைகள் குறைவே. அந்த தேவைகளை பூர்த்தி செய்யவேண்டிய கடமை அவரின் குழந்தைகளுக்கு இருக்கிறது. சொத்தை வைத்து என்ன அவர் செய்வார்.
    பிறகு, ஆண்களின் சிறப்பு தகுதிகளுக்கு இணையாக பெண்களுக்கு சிறப்பு தகுதிகள் தாய்மை, பாலூட்டல் மற்றும் குழந்தை வளர்ப்பு. இந்த தகுதிகள் இல்லாவிட்டால் மனித இனமே இல்லை. இதில் புகுந்த வீடு பிறந்த வீடு என்று பிரிப்பதே மோசடி. எந்த இடத்திலும் சம பங்கு தான் நீதி.

    // மகர் கொடுத்துத்தான் முசுலிம்கள் திருமணம் செய்கிறார்கள்//

    மகர் அடையாள மகரா இல்லை உன்மையானதா.
    அழைப்புக்கு நன்றி. நான் நேராக வர விரும்பவில்லை.

    // ஒரே வீட்டில் வசிப்பது என்பது பெண் விரும்பினால் பயன்படுத்திக் கொள்ள கூடிய அனுமதியே அன்றி கட்டாயமில்லை//

    நான் விவாதிப்பது முகமதியத்தைப் பற்றித்தான். மக்கள் அதை மேம்படுத்தி வாழ்கிறார்கள் என்றால் அதை வரவேற்கும் முதல் ஆள் நான்தான். நீங்கள் கொடுத்த வாசகத்தில் அவ்வாறு போவது immoral என்கிறது. கவனித்துப் படிக்கவும்.

    // நான்கு பொருட்கள் தவிர்த்து மீதியுள்ள பொதுவான சட்டங்களை இந்திய முசுலிம்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா.//

    இந்த 3 விசயங்களில் தான் மனித நாகரிகமே அடங்கியிருக்கிறது. மற்றவையெல்லாம் misc. தான்.

    //துருக்கி மதசார்பற்ற நாடாக இருக்கவில்லையா//

    பெயருக்குத்தான். அதுவும் ஐரோப்பாவின் தாக்கத்தாலும், Attaturk மற்றும் அவரின் ரானுவத்தினர் போன்ற தைரியமான மனிதர்களாலும் (They were the examples of murtads & munafiqs) தான். இன்று Trend மாறிவிட்டது. Attaturk காலத்தில் பெண்கள் முக்காடு புர்கா போன்றவை போடமுடியாது. இப்போது அது இல்லாமல் பெண்கள் வெளியே போகமுடியாது.

    // இந்தோனேசியாவில் குற்றங்களுக்கு சரியத் சட்டம் அமுலில் இல்லை//

    பசியைப் போக்கிக் கொள்ள ஒரு ரொட்டியைத் திருடினாலும் கையை வெட்டிவிடவேண்டும் போன்ற கொடூரங்களை மனிதர்கள் தவிர்க்கவே விரும்புவார்கள்.

    // விருப்பு வெறுப்பு இன்றி வரலாற்று நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன//

    இல்லை. மழுப்பல்கள் மறைத்தல்கள் நிறைந்தது தான் அது.

    // வலுபிரயோகம் மூலமாக மத மாற்றம் செய்ய முடியாது//

    சுன்னத் செய்ய முடியும். தொழுகைக்கு வருகிறார்களா, குழந்தைகள் முகமதியர்களாக வளர்க்கப்படுகிறார்களா போன்றவற்றை கவனிக்க முடியும். வீட்டில் கிடைக்காத பாடங்கள் மதரசாவில் தினிக்கப்படும். Etc. பெற்றோர்களால் ஏதும் செய்யமுடியாமலேயே குழந்தைகள் முகமதியர்களாக மாற்றப்படுவர். இரண்டாம் தலைமுறையில் சிறிய சிக்கல்கூட இருக்காது.

    // இந்தோனேசியாவில் வரலாற்றின் எந்த கால கட்டத்திலும் முசுலிம்கள் ஆட்சி செய்ததில்லை.//

    பொய். அது மலாக்கா சுல்தானின் ஆட்சியின் கீழ் இருந்தது. மலாக்கா சுல்தானும் ஒரு சதியின் மூலம் தான் முகமதியராக மாறிக் கொண்டார். அப்போதுதான் அதன் மக்கள் மாற்றப் பட்டார்கள். பிறகு அது போர்த்துக்கீசியர்களின் வசம் சென்றது. தற்போதும் முகமதியநாடாகத்தான் அது உள்ளது. மலேசியா இந்தோனேசியா எப்படி முகமதிய நாடுகளாக்கப்பட்டன என்பதை அறிய படிக்கவும் Islamic Jihad by M A Khan p 99-108 (p 111-120 in pdf available for free download from islam-watch dot org)

    // முநாபிக் முர்தாது சொற்களுக்கு தமிழில் பொருள்//

    முர்தாது = முகமதியக் குடும்பங்களில் பிறந்து முகமதியத்தை கைவிட்டவர்கள். இவர்களால் இதை வெளிப்படையாக அறிவித்துக் கொள்ளமுடியாது. நடிக்க வேண்டும்.
    முநாபிக் = முகமதியக் குடும்பங்களில் பிறந்து முகமதியத்தை சரியாக பின்பற்றாதவர்களை மற்றவர்கள் இப்படி அழைப்பார்கள் நெருக்கடிக்குள்ளாக்குவார்கள். இவர்களும் நடிக்க வேண்டும்.

    • யுனி நல்ல ஒரு மனநல மருத்துவரை பார்ப்பது நல்லது.துவக்கத்திலேயே வைத்தியம் பார்த்துக்கொள்வது நோயை எளிதில் குணப்படுத்த உதவும்.நாங்க சொல்றது எதுவுமே மண்டையில ஏறாம சொன்னதையே திரும்ப திரும்ப சொல்றாரு.இது மனநோயின் அறிகுறி இல்லையா.

      \\தாய்மைத் தொடர்பான தியாகங்களுக்கு கணவன் சொத்தில் தான் பங்கு கேட்க முடியும் என்றால் ……………..சம பங்கு தான் நீதி.//

      நான் சொன்னது என்ன ன்னு புத்தில ஏறலையா.நல்லா படியும்.”கணவனின் சொத்துக்கு மனைவி என்ற முறையில்தான் வாரிசுரிமை வருகிறது.குழந்தை பேறுக்கும் வாரிசுரிமைக்கும் தொடர்பில்லை.உமது கூறு கெட்ட வாதப்படி பார்த்தால் சொத்தே இல்லாத கணவனுக்கு பிள்ளை பெறவே உரிமை இருக்காதே.அதே போல் குழந்தை பேறு வாய்க்கபெறாத பெண்ணுக்கு கணவன் சொத்தில் உரிமை இல்லாமல் போகுமே.”

      \\ தனது குழந்தைகளின் நிக்கா உறவுகளுக்காகவும் பெண்கள் மட்டுமே தியாகம் செய்ய வேண்டும் என்பது அநீதி. //

      அண்ணன் தனது குழந்தைகளுக்கு தங்கை வீட்டு பிள்ளைகளை மணம் முடித்து வைக்கிறார்.அதே போல் அக்கா தம்பியின் குழந்தைகளை மருமக்களாக்கி கொள்கிறார்.திருமணம் என்பது இருவழிப்பாதை போன்றதுதான்.இந்த பக்கமிருந்து அந்தப்பக்கமும் அந்த பக்கமிருந்து .இந்த பக்கமும் பிள்ளைகள் மணம் முடித்து வருகிறார்கள்.போகிறார்கள்.இதில் யாருக்கு என்ன அநீதி இருக்கு.கணக்கு நேராத்தான் இருக்கு.உமது கோணல் புத்திக்குத்தான் அது எட்டவில்லை.

      \\நீங்கள் கொடுத்த வாசகத்தில் அவ்வாறு போவது immoral என்கிறது. கவனித்துப் படிக்கவும்.//

      உமது வழக்கமான பித்தலாட்டம்.நான் கொடுத்த மேற்கோள்கீழே ;இதில் எங்கே அவ்வாறு போவது immoral என்று இருக்கிறது.முறை தவறி நடந்தால் வெளியேற்றலாம் என்றுதான் இருக்கிறது.

      திருமறை குரான்.65;1
      O Prophet, when you [Muslims] divorce women, divorce them for [the commencement of] their waiting period and keep count of the waiting period, and fear Allah , your Lord. Do not turn them out of their [husbands’] houses, nor should they [themselves] leave [during that period] unless they are committing a clear immorality. And those are the limits [set by] Allah . And whoever transgresses the limits of Allah has certainly wronged himself. You know not; perhaps Allah will bring about after that a [different] matter.

      மீதி வாதங்கள் அனைத்தும் மதவெறி ஊளை.

      \\பொய். அது மலாக்கா சுல்தானின் ஆட்சியின் கீழ் இருந்தது//

      இன்றைய மலேசிய நாட்டு சுல்தான் ஒருவரின் ஆட்சியின் கீழ் சுமத்ரா தீவின் ஒரு பகுதி இருந்தது உண்மை.ஆனால் அது பதினைந்தாம் நூற்றாண்டில் அதுவும் சொற்ப காலம். ஆனால் அரபு மற்றும் இந்திய வணிகர்கள் மூலம் சுமத்ரா தீவுகளில் ஏழாம் நூற்றாண்டிலேயே இசுலாம் பரவி விட்டது.

      \\முநாபிக்//

      தவறான விளக்கம்.முனாபிக் [நயவஞ்சகன் ]என்பவன் முசுலிம்களிடம் முசுலிமாக நடித்து கொண்டு இசுலாத்தின் எதிரிகளுடன் சேர்ந்து செயல்படுபவன்.உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் அவனால் முசுலிம்களுக்குதான் தீங்கு நேரும்.

      முர்தாத் எதற்கெடுத்தாலும் முகமதிய லா பேசும் யோக்கியர் இசுலாத்தை விட்டு வெளியேறியவர்களை எப்படி நடத்த வேண்டும் என்ற சட்டத்தையும் சொல்லலாமே

      • இந்த முன்னேறிய சமுகத்தில் கூட அயர்லாந்து என்ற நாட்டில் மருத்துவ காரணத்துக்காக கூட கருத்தடை தடை செய்தவர்க்ள் முல்லாக்களா ?அல்லது பாதிரிகளா ?திப்பு ? ஒரு இந்திய பெண் கூட உயிர் இழந்தாரே ! கேள்வி இடம் மாறிவிட்டது அல்லவா ? உணிவேர்….க்கு திருப்பி அனுப்பவும் .

    • \\தாய்மைத் தொடர்பான தியாகங்களுக்கு கணவன் சொத்தில் தான் பங்கு கேட்க முடியும் என்றால் ……………..சம பங்கு தான் நீதி.////

      நான் சொன்னது என்ன ன்னு புத்தில ஏறலையா.நல்லா படியும்.”கணவனின் சொத்துக்கு மனைவி என்ற முறையில்தான் வாரிசுரிமை வருகிறது.குழந்தை பேறுக்கும் வாரிசுரிமைக்கும் தொடர்பில்லை.உமது கூறு கெட்ட வாதப்படி பார்த்தால் சொத்தே இல்லாத கணவனுக்கு பிள்ளை பெறவே உரிமை இருக்காதே.அதே போல் குழந்தை பேறு வாய்க்கபெறாத பெண்ணுக்கு கணவன் சொத்தில் உரிமை இல்லாமல் போகுமே.”

      \\ தனது குழந்தைகளின் நிக்கா உறவுகளுக்காகவும் பெண்கள் மட்டுமே தியாகம் செய்ய வேண்டும் என்பது அநீதி. //

      அண்ணன் தனது குழந்தைகளுக்கு தங்கை வீட்டு பிள்ளைகளை மணம் முடித்து வைக்கிறார்.அதே போல் அக்கா தம்பியின் குழந்தைகளை மருமக்களாக்கி கொள்கிறார்.திருமணம் என்பது இருவழிப்பாதை போன்றதுதான்.இந்த பக்கமிருந்து அந்தப்பக்கமும் அந்த பக்கமிருந்து .இந்த பக்கமும் பிள்ளைகள் மணம் முடித்து வருகிறார்கள்.போகிறார்கள்.இதில் யாருக்கு என்ன அநீதி இருக்கு.கணக்கு நேராத்தான் இருக்கு.உமது கோணல் புத்திக்குத்தான் அது எட்டவில்லை.

      \\நீங்கள் கொடுத்த வாசகத்தில் அவ்வாறு போவது immoral என்கிறது. கவனித்துப் படிக்கவும்.//

      உமது வழக்கமான பித்தலாட்டம்.நான் கொடுத்த மேற்கோள்கீழே ;இதில் எங்கே அவ்வாறு போவது immoral என்று இருக்கிறது.முறை தவறி நடந்தால் வெளியேற்றலாம் என்றுதான் இருக்கிறது.

      திருமறை குரான்.65;1
      O Prophet, when you [Muslims] divorce women, divorce them for [the commencement of] their waiting period and keep count of the waiting period, and fear Allah , your Lord. Do not turn them out of their [husbands’] houses, nor should they [themselves] leave [during that period] unless they are committing a clear immorality. And those are the limits [set by] Allah . And whoever transgresses the limits of Allah has certainly wronged himself. You know not; perhaps Allah will bring about after that a [different] matter.

      மீதி வாதங்கள் அனைத்தும் மதவெறி ஊளை.

      \\பொய். அது மலாக்கா சுல்தானின் ஆட்சியின் கீழ் இருந்தது//

      இன்றைய மலேசிய நாட்டு சுல்தான் ஒருவரின் ஆட்சியின் கீழ் சுமத்ரா தீவின் ஒரு பகுதி இருந்தது உண்மை.ஆனால் அது பதினைந்தாம் நூற்றாண்டில் அதுவும் சொற்ப காலம். ஆனால் அரபு மற்றும் இந்திய வணிகர்கள் மூலம் சுமத்ரா தீவுகளில் ஏழாம் நூற்றாண்டிலேயே இசுலாம் பரவி விட்டது.

      \\முநாபிக்//

      தவறான விளக்கம்.முனாபிக் [நயவஞ்சகன் ]என்பவன் முசுலிம்களிடம் முசுலிமாக நடித்து கொண்டு இசுலாத்தின் எதிரிகளுடன் சேர்ந்து செயல்படுபவன்.உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் அவனால் முசுலிம்களுக்குதான் தீங்கு நேரும்.

      முர்தாத் எதற்கெடுத்தாலும் முகமதிய லா பேசும் யோக்கியர் இசுலாத்தை விட்டு வெளியேறியவர்களை எப்படி நடத்த வேண்டும் என்ற சட்டத்தையும் சொல்லலாமே

      • திப்பு,

        //கணக்கு நேராத்தான் இருக்கு//

        எங்கே இருக்கிறது. அண்ணனுக்கோ தம்பிக்கோ குழந்தை பிறந்தால் கணக்கு சரிதான். ஆனால் அப்படி நடப்பதில்லையே. அதற்கும் பெண்கள் தானே தேவைப் படுகிறார்கள்.
        தொகுப்பாக பார்க்கலாம். ஆண்களுக்கு இருக்கும் எல்லா சிறப்புத்தகுதிகளும் பெண்களுக்கும் இருக்கின்றன. ஆண்களின் இடையூறு இல்லாவிட்டால் பெண்கள் அந்த எல்லாவற்றையும் செயல்படுத்த முடியும். செயல்படுத்திக் கொண்டுமிருக்கிறார்கள். மகப்பேறு பாலூட்டல் குழந்தைகள் வளர்ப்பு போன்றவை கூடுதலான தகுதிகள். மாதமாக இருக்கும் போதும் பாலூட்டும் போதும் குழந்தைகள் சிறு வயதாக இருக்கும் போதும் அவர்கள் குழந்தைக்கு அருகிலேயே இருக்கவேண்டியிருக்கிறது. மற்றபடி அவர்களால் எல்லாவற்றையும் செய்ய முடியும். தேவைப்பட்டால் அவர்கள் தங்கள் குழந்தையைத் அவர்கள் வைலைசெய்யுமிடத்துக்கு தூக்கிக் கொண்டு போயும் வேலை செய்கிறார்கள்.
        இவை எல்லாம் வக்கிரபுத்தியுள்ள ஆண்களுக்குப் புரிய வைப்பது கடினம் தான்.

        //வணிகர்கள் மூலம் சுமத்ரா தீவுகளில் ஏழாம் நூற்றாண்டிலேயே இசுலாம் பரவி விட்டது.//

        ஏழாம் நூற்றாண்டில் முகமது இசுலாமை அறிவித்தவுடனேயே வணிகர்கள் சுமத்ரா வரைக்கும் வந்து பரப்பிவிட்டார்களோ. முகமதுக்கு முன்னரே அரேபிய வணிகர்கள் இந்தியாவுக்கும் மற்ற பகுதிகளுக்கு சென்று கொண்டு தான் இருந்தார்கள். முகமதுக்கு முன்னரே அவர்களுக்கு அல்லாவைத் தெரியும். அரேபியாவின் கட்டுப்பாடு முகமதிடன் போனவுடனேயே அரேபிய வணிகர்களும் முகமதியர்களாக வேண்டிய நிலையினால் தான் அவர்களும் முகமதியர்களாக எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். அப்புறம், இந்த விதத்தில் பரவியது ஒரு சிறிய விகிதம் தான்.

        //எங்கே அவ்வாறு போவது immoral என்று இருக்கிறது.//

        குரான் புரியாத செய்யுள்கள் தான். ஆனால் நீங்கள் கொடுத்தது வாசகம் ஒரளவுக்கு எளிதான ஆங்கிலத்தில் தானே உள்ளது. மறுபடியும் படியுங்கள். Do not turn them out of their [husbands’] houses, nor should they [themselves] leave [during that period] unless they are committing a clear immorality.

        //சொத்தே இல்லாத கணவனுக்கு பிள்ளை பெறவே உரிமை இருக்காதே.//

        இதை இரண்டாவது முறையாக எழுதியிருப்பதால் இதற்கு பதில் கூறுகிறேன். உலகில் சொத்தில்லாதவர்கள் என்று யாருமே கிடையாது. இந்த உலகமே உழைக்கும் கைகளுக்குத்தான் சொந்தம். வேறுவிதத்தில் கூறினால் உழைப்பாளியின் கைகளும் மனதும் தான் இந்த உலகின் ஆகப் பெரிய சொத்துக்கள்.

        //குழந்தை பேறு வாய்க்கபெறாத பெண்ணுக்கு கணவன் சொத்தில் உரிமை இல்லாமல் போகுமே//

        இல்லற வாழ்க்கை குழந்தைப் பேறில் தொடங்கி அதிலேயே முடிந்துவிடுவதில்லை. நிக்கா என்றாலே உவத்தல் ஒப்பந்தம் என்று தான் பொருள். குழந்தைகொடுத்தல் ஒப்பந்தம் என்று பொருளல்ல. குழந்தை பேறு வாய்க்கபெறாததற்கு கணவனும் காரணமாக இருக்கலாமில்லையா. யார் காரணம் என்று அருதியிட்டு கூறமுடியாதில்லையா. குழந்தைப் பேறு தவிர்த்த மற்ற சேவைகளுக்கே ஒரு பெண்ணிற்கு சம பங்கு உரிமை சரியானதே. குழந்தைப் பேறு என்பது ஒரு எக்ஸ்ட்ரா போனஸ் தான். அந்த கொடைக்கு ஆண்களால் ஈடு கட்டவே முடியாது.

        //முனாபிக் [நயவஞ்சகன் ]//

        நான் கொடுத்தது சரியான விளக்கம் தான். நீங்கள் அதை முகமதியர்கள் மொழியில் அலங்காரமாக கூறியிருக்கிறீர்கள். அவ்வளவுதான் வேறுபாடு.

    • \\பசியைப் போக்கிக் கொள்ள ஒரு ரொட்டியைத் திருடினாலும் கையை வெட்டிவிடவேண்டும்//

      திருடுபவர்கள் விதிவிலக்கின்றி உலகின் இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்ற வெறியில்தான் திருடுகிறார்கள்.சங்கிலி பறிக்கும் கயவர்களும்,கன்னக்கோல் களவாணிகளும் திருடுவதற்கு காரணம் பசியா.பசியால் வாடுபவர்கள் திருடுவதில்லை.பிச்சைதான் எடுப்பார்கள்.

      • //திருடுபவர்கள் விதிவிலக்கின்றி உலகின் இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்ற வெறியில்தான் திருடுகிறார்கள்.சங்கிலி பறிக்கும் கயவர்களும்,கன்னக்கோல் களவாணிகளும் திருடுவதற்கு காரணம் பசியா.பசியால் வாடுபவர்கள் திருடுவதில்லை.பிச்சைதான் எடுப்பார்கள்//.சூப்பர் திப்பு இடு அப்பிடியே மிஸ்டர் 20 %குத்தான் பொருந்தும் அதாவது யூதர்கள் ,குரைசிகுல வனிகர்கள் கிட்ட கொள்ளை அடிச்சு அதில் 20 % அல்லாவுக்குனு எட்த்துகிட்ட நபிக்குதான் பொருந்தும்……….

        • நபிகள் நாயகமும் அவரது தோழர்களும் மக்காவை சேர்ந்த குரைசிகளின் வணிக குழுக்களை வழி மறித்து ஒட்டகங்களையும் வணிக பொருட்களையும் பறிமுதல் செய்தது உண்மை.அதை திருட்டு என சொல்வது உண்மையை உணர மாட்டாமல் உளறும் மடமை.

          .பட்டபகலில் நீர் சாய்வு நாற்காலியில் செய்தி தாள் படித்தவாறு குறட்டை விட்டு தூங்கிப் போன பிறகு திருடனொருவன் உள்ளே புகுந்து கைப்பேசியை எடுத்து போவதைப்போல அதுவும் ஒரு திருட்டு என்கிறீர்.

          ஐய்யா அது யுத்த களம்யா.மக்கத்து குரைசிகளுக்கும் மதீனத்து முசுலிம்களுக்கும் மோதலும் முறுகலும் நடந்து வந்தது.மக்காவில் முசுலிம்களுக்கு சொல்லவொண்ணா கொடுமைகள் இழைத்த குரைசிகள் அக்கொடுமைகளை தாங்க முடியாமல் மதீனாவுக்கு இடம் பெயர்ந்து சென்று விட்ட முசுலிம்களின் சொத்துக்களை அரபு மக்களின் குல தர்மத்துக்கு எதிராக அபகரித்து கொண்டனர்.இப்படி அவர்களுக்குள் நேர் செய்ய வேண்டிய கணக்குகள் இருந்தன.

          மேலும் மதீனாவை தாக்கி முசுலிம்களை அழிக்க எத்தணித்துக்கொண்டிருந்த மக்கத்து குரைசிகளை பொருளாதார ரீதியாக வலுவீனப்படுத்த வேண்டிய அவசியமும் முசுலிம்களுக்கு இருந்தது.இத்தகைய தாக்குதல்களை எதிர்பார்த்து வணிக குழுக்களும் நூற்றுக்கணக்கில் ஆயுதம் தாங்கிய காவலர்கள் துணையுடன்தான் பயணித்தன.ஆக ஒரு வேளை தோற்றால் உயிரையே பறிக்க கூடிய யுத்தம் இன்றி பொருட்களை அடைய முடியாது.இது எப்படி திருட்டாகும்.யுத்தம்யா.யுத்தம்.அப்படியான ஒரு வழிமறிப்பை தடுக்க வந்த குரைசி படையுடன் நடந்த சண்டைதான் பத்ரு போர்.முசுலிம்கள் சந்தித்த முதல் பெரும் போர்.அதில் வெறும் முன்னூறு பேர் கொண்ட முசுலிம் படை ஆயிரத்திற்கும் மேற்பட்ட குரைசிகளின் படையை தோற்கடித்தது.

          யூதர்கள் முசுலிம்களின் ஆட்சியில் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறிய;

          http://en.wikipedia.org/wiki/History_of_the_Jews_under_Muslim_rule

          http://en.wikipedia.org/wiki/Dhimmi

          • //நபிகள் நாயகமும் அவரது தோழர்களும் மக்காவை சேர்ந்த குரைசிகளின் வணிக குழுக்களை வழி மறித்து ஒட்டகங்களையும் வணிக பொருட்களையும் பறிமுதல் செய்தது உண்மை.அதை திருட்டு என சொல்வது உண்மையை உணர மாட்டாமல் உளறும் மடமை.//
            முகமது நபிக்கு கொள்ளை அடிக்க ஒரு ரீசன் தேவைப்படுது அதனால அவரு கைய வெட்ட வேனாம் ஆனா பசிக்காக திருடியவன் கையை வெட்டலாம் சூப்பர் சேம் சைடு கோல்
            //பட்டபகலில் நீர் சாய்வு நாற்காலியில் செய்தி தாள் படித்தவாறு குறட்டை விட்டு தூங்கிப் போன பிறகு திருடனொருவன் உள்ளே புகுந்து கைப்பேசியை எடுத்து போவதைப்போல அதுவும் ஒரு திருட்டு என்கிறீர்.//

            இது போன்ற திருட்டையும் அதாவது இசுலாமிய மொழியில் போர் செய்து இருக்கிறார் நபி அமைதியாக இருந்த பனுனதிர் ,பனு முத்தலிக் குல யூதர்கள் மீது ,அஸல் செய்வது குறித்து அழகான வழிகாட்டுதலையும் கொடுத்து இருக்கிறார் நமது கன்னுமணி முகமது இப்னு அப்துல்லா

            குன் என்றால் அனைத்தையும் படைக்கும் அருளானுக்கு எதுக்கய்யா போர் மற்றவர்கள் மீது குன் என்றால் யூதர்களும் முனாபிக்களும் குறைசிகளும் அழிந்து இருக்க மாட்டார்களா சும்மா தமாசுக்குதான் சொன்னேன் சிரிங்க சீரியசா எடுத்துக்காதிங்க திப்பு …..

            அப்புறம் இது பொது சிவில் சட்டம் குறித்த வாதம் என்பதால் இத்துடன் இதை முடித்துக் கொள்கிறேன் மேலும் விவாதக்க அவசியம் இல்லை ஏனென்றால் இது வெறும் மத விவாதமாக சுருங்கி கட்டுரையின் நோக்கத்தை சிதைத்து விடும்…

    • \\இந்த 3 விசயங்களில் தான் மனித நாகரிகமே அடங்கியிருக்கிறது. மற்றவையெல்லாம் misc. தான்.//

      பாலியல் வன்முறை.,பெண் சீண்டல்,வன்பகடி,குழந்தைகளையும் உழைக்க வைத்து ஆதாயம் பார்ப்பது,அரசியல்,சமூக,பொருளாதார ஆதிக்கத்திற்காக மக்களை பிரித்து மோத விடுவது,இன்னோரன்ன கொடுமைகள் எல்லாம் யுனிக்கு சில்லறை பொருட்களாக தெரியுது.

      கணவனின் சொத்தில் மனைவிக்கு வாரிசுரிமையை மறுக்காத,தந்தையின் சொத்தில் மகளுக்கு வாரிசுரிமையை மறுக்காத,மண விலக்கு செய்யும் உரிமையை கணவனுக்கு மட்டுமின்றி மனைவிக்கும் அளிக்கின்ற, வரதட்சணை எனும் பெண் வீட்டார் மீது நிகழ்த்தப்படும் அயோக்கியத்தனத்தை தடை செய்கின்ற,மாறாக மணப்பெண்ணுக்கு தட்சணை கொடுத்து திருமணம் செய்ய சொல்கின்ற இசுலாமிய சட்டம் யுனிக்கு நாகரீகம் அற்றதாக தெரிகிறது என்றால் அதுதான் கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.

    • பைபிள் , கீதை ஆகியவற்றில் இருந்து பெண் அடிமைதனத்துக்கு பல பல உதாரனங்களை கொடுக்க முடியும் . எனவே கொஞ்சம் அடக்கி வாசியுங்க உணிவேர் …… இல்லை என்றால் என் பதில்கள் உங்கள் வாயை அடைக்கு விதத்தில் வருமையா !

      • ////என் பதில்கள் உங்கள் வாயை அடைக்கு விதத்தில் வருமையா !/////

        இதிலிருந்து பெண் அடிமைத்தனம் இஸ்லாமில் அதிகமாக உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி. மற்றமதங்களில் இருப்பதால்தான் இஸ்லாமியத்தில் பெண் அடிமைத்தனம் உள்ளது!!!! ஏற்றுக்கொள்கிறோம்!!!!!!!

      • தமிழ்-தாகம்,

        // என் பதில்கள் உங்கள் வாயை அடைக்கு[ம்]//

        மொத பின்னூட்டத்தலயே இவ்வளவு சௌண்டு விட்ட ஆகாதய்யா. நான் சிறிது நாட்கள் பதில் கூறாவிட்டால் வாயை அடைத்து விட்டதாகச் சொல்லிக் கொல்லலாம். இப்பக் கொஞ்சம் அடக்கி வாசிங்கய்யா. கீழே உள்ள பதில்கள படிச்ட்டு சௌண்டு விடறத இல்ல Escape ஆகறதான்னு பாருமைய்யா.

        //பைபிள் , கீதை ஆகியவற்றில் இருந்து பெண் அடிமைதனத்துக்கு பல பல உதாரனங்களை***//

        பைபிளை கிருத்தவர்கள் கண்ணை முடிக்கொண்டு பின்பற்றுவதில்லை. பழைய ஏற்பாட்டில் இருப்பதெல்லாம் வரலாறுகள் தான். குரானில் பெண் அடிமைத்தனத்திற்குக் காரணமான வாசகங்களைப் போல அவைகள் கட்டளைகல்ல. கிருத்தவர்கள் அவற்றை வரலாறாகத்தான் படிக்கிறார்கள்.

        கீதைக்கும் ‘இந்து’ மதத்துக்கும் பெரிய சம்பந்தம் ஒன்றுமில்லை. அது பெரும்பாலான ‘இந்துக்களின்’ வீடுகளில் இருப்பதில்லை. இன்னும் வேடிக்கை பல ‘இந்துக்கள்’ இந்த வார்த்தையைக் கூட கேள்விப் பட்டிருக்கமாட்டார்கள். அதை பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் எத்தனைப் பேர் வாங்குகிறார்கள் படிக்கிறார்கள் என்பதே ஒரு பெரிய கேள்விக்குறிதான்.

        குரான் அப்படியல்ல. ஆளாளுக்கு வைத்திருப்பார்கள். கண்டிப்பாக படிக்கவும் வேண்டும். மனப்பாடமே செய்யவேண்டும். இல்லாவிட்டால் பிரம்படிதான். இந்த அடியிலேயே இறந்த சிறுவர்சிறுமிகளும் உண்டு. குரானின் பெண் அடிமைத்தனத்திற்குக் காரணமான வாசகங்கள் முகமதியர்களுக்கான நேரடியான கட்டளைகள். இதில் அவர்களுக்கு சிறிதும் சந்தேகம் இல்லை.

        //அயர்லாந்து என்ற நாட்டில் மருத்துவ காரணத்துக்காக கூட கருத்தடை தடை செய்தவர்க்ள் முல்லாக்களா ?அல்லது பாதிரிகளா ?//
        //ஒரு இந்திய பெண் கூட உயிர் இழந்தாரே !//

        அயர்லாந்தில் தடுத்தவர்கள் பாதிரிகளல்ல. சட்டத்திற்குப் பயந்து மருத்துவர்களே தயங்கியிருக்கிறார்கள். அவர்கள் அந்த தாயின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்பதை உணரந்து கொள்ளவில்லை. அந்த இறப்பிற்குப் பிறகு அந்த நாடே அதிர்ச்சிக்குள்ளாயிற்று. அதனால் உடனே அவர்கள் நாடாளுமன்றம் சட்டத்தில் திருத்தம் செய்திருக்கிறது என்பதைக் கவனித்தீர்களா.
        முகமதிய நாடுகளில் இதைவிட அல்பமான விசயத்திற்குக் கூட பெண்களின் உயிர்கள் காவு வாங்கப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா.
        2002 ல் அரேபியாவில் ஒரு பெண்கள் பள்ளியில் நடந்த தீவிபத்தில் பெண்கள் கட்டிடத்தை விட்டு வெளியே ஒடித் தப்பிக்க வந்த போது அவர்களை வெளியே விடவில்லை. அவசரத்தில் ஒடி வந்த அவர்கள் தங்கள் புர்காவைப் மாட்டிக்கொள்ளாமல் வந்து விட்டார்கள். அவர்களை மறுபடியும் போய் அதை மாட்டிக் கொண்டு வந்தால் தான் வெளியே விடுவோம் என்று கேட்டை சாத்திவிட்டார்கள். மற்ற ஆண்களுக்கு முன்னால் பெண்கள் புர்கா இல்லாமல் காணப்படக்கூடாதாம். இதனால் ஏற்பட்ட தாமதத்தில் தீ நன்கு பரவி 15க்கும் (உன்மையில் எண்ணிக்கை இன்னும் அதிகமாகத்தான் இருக்கும்) மேற்பட்ட பெண்கள் தீயில் கருகி மாண்டார்கள். இது போன்று வேறு ஏதேனும் மனித சமூகத்தில் நடக்குமா. இந்த கோர சம்பவம் நடந்ததன் பிறகேனும் அவர்கள் அந்த அருவருக்கத்தக்க சட்டத்தை மாற்ற முடிந்ததா.

        http://en.wikipedia.org/wiki/2002_Mecca_girls'_school_fire

        இதே சவுதியில் இதே போன்ற ஒரு அற்பக் காரணத்தினால் சில மாதங்களுக்கு முன்னர் கூட ஒரு பெண் இறந்து போனாள். வினவில் ஒரு பதிவே வந்திருக்கிறது.

        https://www.vinavu.com/2014/02/25/islamic-fundamentalism-kills-girl-student/

        இப்போதாவது வித்தியாசம் புரிந்து கொள்ள முயலுங்கய்யா.

      • தமிழ்-தாகம்,

        கொஞ்சம் பொறுமையா , உனிவெர்புட்ட்ய் இக்கு சொந்த புத்தி என்று ஒன்று கிடையாது எனவே தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில்களை இணையத்தில் யாரவது சொல்லி உள்ளார்களா என்று தேடுவதற்கு கால அவகாசம் வேண்டாமா? கொஞ்சம் டைம் கொடுங்க மாமா எப்படியாவது எங்கிருதாவது கோப்பி செய்து இங்கு பேஸ்ட் சைவர்.

  25. Zahir,

    நான் நல்லவர்தான் கண்ணு. நீயே வளரவளர தெரிஞ்சுக்குவ செல்லம்.

    // படைத்தவனின் சட்டம்//

    கண்ணு இன்னும் ஜட்டி போடாம சுத்திட்ருந்தா எப்படி. பூன அத எலிக்குட்டின்னு நெனச்சு கடிச்சுரும்.

    // மறு + மகன் இருந்தாரே//

    மைய்யத்தை வச்சிக்கிட்டு மௌத்தை அறிவிக்காம 3-4 நாட்கள் இழுபறி நடந்துச்சு. கடசியில வயதுல மூத்த அபுபக்கர் தான் வின்னரு. ஆனாலும் சில ஆண்டுல அவர தீத்துக் கட்டியாச்சு. அடுத்தவரு வந்தாரு. அவரயும் முடிச்சாச்சு. அப்புறமா மறு + மகன். புறவு அவரும் சதக். அப்டியே போவுது கத. இன்னி வரக்கும் நிக்கல.

    //ஊடகங்கள்//

    இது மாரி விசயங்களுக்கு மாற்று ஊடகங்களத்தான் கண்ணு பாக்கனும்.

    //அரசாங்கமும் காவல் துறை//

    அவிங்கெல்லாம் உங்க ஆளுக தான். ஒன்னும் வேலயாவது. கம்பளைன்ட் பன்னப் போன ஆளில்லாம பண்ணிருவாங்க.

    //புத்தி சுவாதீனம் இல்லாதவர்களா//

    கூல் ட்ரிங்ஸ்ல மருந்து போட்டோ எப்டியோ மொத பொண்ண கெடுத்துருவாங்க. அப்றோம் பொண்ண பேச உட்டாத்தான. அது மீறி பேசுனா உயிரோட இருக்க மிடியுமா. வளரவளர புரிஞ்சுப்ப.

    மீதி கத நாளக்கி. இப்ப தூங்கு செல்லம். மாமாவுக்கு வேற வேல இருக்கு.

    • உனிவெர்புட்ட்ய் ,

      //நான் நல்லவர்தான் கண்ணு. நீயே வளரவளர தெரிஞ்சுக்குவ செல்லம்\\ ஒரு சிலர் வயதால் வளர்வதை மட்டும் கணக்கில் எடுத்து பேசிவருகிறார்கள் . ஆனால் வயசுதான் சேர்ந்த அறிவு வளர்ச்சியும் மிக முக்கியம் என்பதை உணர்வதில்லை என்பதை அவர்களின் காழ்ப்புணர்வு கருத்துக்களாலேயே அடையாளம்கண்டுக்கொள்ளலாம். தாங்கள் எவ்வகை என்பதை தங்களின் கருத்துக்களை படிப்பவர்கள் தீர்மானத்திட்க்கே விட்டு தங்களின் அர்த்தமற்ற கேள்விகளுக்கு வருகிறேன்.
      //கண்ணு இன்னும் ஜட்டி போடாம சுத்திட்ருந்தா எப்படி. பூன அத எலிக்குட்டின்னு நெனச்சு கடிச்சுரும்.\\ பூனை உங்கள் அளவுக்கு முட்டாளாக இருக்காது என்றே எண்ணுகிறேன். கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்று சொன்ன பூனையை காட்டிலும் காழ்ப்புணர்வு கண்ணாடியை மாட்டிக்கொண்டு பார்க்கப்படும் பொருளின் மீதெல்லாம் தனது விஷத்தை தூவும் மனிதர்கள் மோசமானவர்கள் என்று புரியும் காலம் வரும்.

      //அப்டியே போவுது கத\\ அதான் தாங்கள் சொல்வது கதை என்று தாங்களே சொல்லுவிட்டீர்களே , உண்மை சரித்திரம் தாங்கள் சொல்வதிலிருந்து எவ்வகையில் வேறுபட்டது என்பதை படிப்பவர்கள் புரிந்துக்கொள்வார்கள். தங்களின் பார்வையில் ஒரு இஸ்லாமியன் சிறுநீர் கழித்தாலும் அதனை அமிலத்தை வெளி இடுவதாகவே பரப்ப நினைப்பீர்கள்.

      \\இது மாரி விசயங்களுக்கு மாற்று ஊடகங்களத்தான் கண்ணு பாக்கனும்// அந்த மாற்று ஊடகங்கள் சார்பு ஊடகங்களாக இருக்கக்கூடிய நிலையை தானே கண்ணு பார்க்கமுடிகிறது. இங்க்லாந்து காரன் தனது பாராளுமன்றத்தில் காஷ்மீர் வெள்ள பெருக்கு சம்பந்தமான ஒரு விவாதத்தை கொண்டுவந்ததை தப்பு என்று கணடனத்தை பதிவு செய்த இந்தியாவை ஆதரித்த ஊடகங்கள் . தன சொந்த நாட்டை ஆளவிடாமல் அவர்களுக்குள் பகை மூட்டி வேடிக்கை பார்க்கும் அமெரிக்காவின் செயலுக்கு ஒத்து ஊதும் ஊடகங்களை என்ன என்று சொல்வது. தங்கள் என்ன சப்ப கட்டு கட்டலாம் என்று யோசித்து பதிவிடுங்கள்.

      //அவிங்கெல்லாம் உங்க ஆளுக தான். ஒன்னும் வேலயாவது. கம்பளைன்ட் பன்னப் போன ஆளில்லாம பண்ணிருவாங்க.\\ இது ஒரு வெற்று வாதம் என்பதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை உமக்கே தெரியவேண்டும்.

      //கூல் ட்ரிங்ஸ்ல மருந்து போட்டோ எப்டியோ மொத பொண்ண கெடுத்துருவாங்க. அப்றோம் பொண்ண பேச உட்டாத்தான. அது மீறி பேசுனா உயிரோட இருக்க மிடியுமா. வளரவளர புரிஞ்சுப்ப.\\ இதுவும் ஒரு சப்பைகட்டே , ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதான் வளர்ச்சி என்ற பாடல் வரிகள் உங்களை போன்றோரின் கருத்துக்களை பார்க்கும்போது பாடத்தோன்றுகிறது.. இந்த நவீன கால கட்டத்தில் இன்டர்நெட் facebook , youtube என்று போய்கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் இப்படியெல்லாம் அறிவுக்கு பொருந்தாத கருத்துக்களை பதிவிட கேவலமாக இல்லையா உமக்கு. அந்தப்பெண் தான் பாதிக்கப்பட்டதை இதில் எதன் மூலம் பதிவிட்டாலும் விஷயம் பூதாகரம் ஆகும் என்று உம்முடைய மண்டையில் எழவில்லையா? இல்லை அப்படி நினைக்க ஏதேனும் தடுக்கிறதா? ஈழத்தமிழர்கள் பிரச்சனை வெளிவந்ததே இதன் வாயிலாகத்தான் என்பதாவது தெர்யுமா அதுவும் தெரியாதா? மூலையை வளர்த்துக்கோங்க பாஸ். ஏதோ பழைய படங்களில் வந்த வில்லன் கதைகளை எல்லாம் சொல்லி சிரிப்பு காட்டுகிறார். இன்னும் இவருடைய இணையதளத்தில் பார்த்தால் இதைவிட பெரிய சிரிப்பு கதைகளை எல்லாம் எழுதி வைத்துள்ளார்.

      \\மீதி கத நாளக்கி. இப்ப தூங்கு செல்லம். // எது எப்படியோ கடைசிலாவது ஒத்துக்கொண்டீரே தாங்கள் சொல்வதெல்லாம் கதை தான் என்று. தாங்கள் படங்களுக்கு ஏதேனும் கதை எழுதலாமே , நல்ல வருமானம் வரும். ஆனால் , தங்களின் கதையை படமாய் எடுப்பவனும் பார்ப்பவனும் முட்டாளாய் தான் இருக்க முடியும். இந்த கதைகளை எல்லாம் தோழர் ஜோசப் இடம் சொல்லுங்கள் அவருடைய இணையத்தில் இதெல்லாம் உண்மை என்று கட்பூரம் ஏற்றி சத்தியம் செய்து பதிவுசைதுக்கொல்வார். மீண்டும் புதிய கதைகளுடன் வருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் வயதளவில் அங்கிள் , அறிவளவில் சின்ன பாப்பா.

  26. அய்யா உனிவர்புட்டி அவர்களே!
    //கிருத்தவர்களின் (மதமாற்றத்தினால் அல்ல பிறப்பினால்) எண்ணிக்கை கூடுகிறது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். சொன்னவனைத்தான் ஒருமாதிர் பார்ப்பார்கள்.//

    சாதி இந்துக்களால் புறக்கணிக்கபட்ட மக்கள் மற்ற சம்த்துவம் நல்கும் மார்க்கத்தை நாடுவது எந்த வகையில் குற்றம்? அதனால் இந்துகளின் ஜனத்தொகை குறைகிறதா? அல்லது இசுலாமியர்கள்நாலு பெண்டாட்டி வைத்திருக்க அவர்கள் சட்டம் அனுமதிக்கிறதே என்று ஆதங்கமா?

    கட்சி மாறும் தடைசட்டம் போல மதமற்றத்திற்கும் தடை கேட் கிறீர்களா? நிரந்தர கொத்தடிமையாக வேண்டும் என் கிறீர்களா?

    //சதியைப் பற்றி இன்னும் பேசத் தேவையில்லை என்பதுதான் இப்போதைய நிலை. பால்ய மணம் இன்னும் சிறிய அளவில் தொடர்கிறது.//

    ராஜஸ்தானில் சதி மாதா ரூப் கன்வர் நிகழ்வு தாங்கள் அறியாமலிருக்கலாம்! பால்ய மணம் இன்னும் சிறிய அளவில் அல்ல, மீண்டும் பெரிய அளவில் வர முயற்சிகள் நடக்கின்றன!

    //ஆனால் உன்மையிலேயே மனிதர்கள் எல்லோருக்குமான ஒரு பொதுமையான சட்டம் வேண்டும். அதற்காக நாம் போராடவேண்டும்.//

    நன்றி! உண்மையிலேயே மனிதர்கள் எல்லோருக்குமான ஒரு பொதுமையான சட்டம், மனித உரிமை சட்டம் மட்டுமே! அது அய்நாவிலும் அங்கீகரிக்கப்பட்டது! இன்னும் (பெரும்பாலும்)ஏட்டளவிலேயே இருக்கிறது !

    • நண்பர் அஜாதசத்ரு.

      //நிரந்தர கொத்தடிமையாக வேண்டும் என் கிறீர்களா?//

      நான் எழுதியுள்ள வரியில் உள்ள அடைப்புக்குள் உள்ளதை விட்டுவிட்டுப்படியுங்கள். புரியும் என்று நம்புகிறேன்.

      //நாலு பெண்டாட்டி வைத்திருக்க அவர்கள் சட்டம் அனுமதிக்கிறதே என்று ஆதங்கமா?//

      நாலு பெண்டாட்டி மட்டுமல்ல n வைப்பாட்டியையும் வைத்துக்கொள்ளலாம். இதில் ஆதங்கமில்லை. ஆத்திரம். ஒரு சமூகத்தின் இயற்கையான ஆண்பெண் விகிதம் 1:1 எனும் போது 1:4+n என்பது எப்படி சாத்தியம் என்று யோசித்துப் பார்க்கும் போது உங்களுக்கு ஆத்திரம் வராவிட்டால் உங்களுடன் உரையாடிப் பயனில்லை.

      // மதமற்றத்திற்கும் தடை கேட் கிறீர்களா?//

      மனமாற்றத்தைக் கேட்கிறேன். மதங்களுக்கே தடை கேட்கிறேன்.

      பி.கு. உங்கள் வரிகள் மற்ற பதிவுகளில் உள்ளவற்றைப் போல் தெளிவாக கோர்வையாக இல்லை.

      • /நாலு பெண்டாட்டி மட்டுமல்ல n வைப்பாட்டியையும் வைத்துக்கொள்ளலாம். இதில் ஆதங்கமில்லை. ஆத்திரம். ஒரு சமூகத்தின் இயற்கையான ஆண்பெண் விகிதம் 1:1 எனும் போது 1:4+n என்பது எப்படி சாத்தியம் என்று யோசித்துப் பார்க்கும் போது உங்களுக்கு ஆத்திரம் வராவிட்டால் உங்களுடன் உரையாடிப் பயனில்லை.\\
        அட கிறுக்கு மாமா, நாலு மனைவியர்கள் வரை திருமணம் செய்துக்கொள்ளலாம் என்பது அனுமதி தான், கட்டளை அல்ல. இரணடாவது மனைவியர்கள் மத்தியில் நடுநிலையை கையாள்தல் வேண்டும் இல்லையேல் மறுமையில் செய்த தவறுக்கு ஏற்ப்ப தண்டனை உண்டு என்பதுதான் இஸ்லாமியர்களின் நம்பிக்கை. நீர் நம்பவேண்டாம்.

        சரி இவ்வாறு அனுமதி கொடுக்கப்பட்ட இஸ்லாமியர்களில் எத்தனை சதவீதம் பேர் நாலு திருமணம் அல்ல . ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்துள்ளார்கள் என்ற புள்ளிவிவரம் உள்ளதா ? உம்மிடம். நடைமுறையில் நான் பார்த்ததில் இஸ்லாமியர்களை விட மாற்று மத சகோதரர்களே அதிகம் இம்மாதிரியான திருமணங்களை செய்துவருகிறார்கள். தேவை இருக்கிறவன் அனுமதித்தாலும் அனுமதிக்கவில்லை என்றாலும் தனக்கு வேண்டியதை சட்டத்தையும் , நடைமுறையையும் மீறியே கூட அடைந்தே தீருவான். என்ன சட்டபூர்வமாக அனுமதித்தால் தகப்பன் பெயர் தெரிந்த தலைமுறைகள் உருவாகும் இல்லையேல் , தகப்பன் பேர் தெரியா தலைமுறை உருவாகும் . இவர்களுக்கு சொத்தும் கிடைக்காது.. சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மனைவி என்ற அந்தஸ்தும் கிடைக்காது. எது சிறந்தது என்று அறிவுடையவர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளட்டும். உம்மை போன்ற்றோர் வெற்று நியாயம் பேசியே காலத்தை ஓட்டட்டும்.

        // 1:4+n என்பது எப்படி சாத்தியம் என்று யோசித்துப் பார்க்கும்\\ உண்மைதான் இதற்க்கு சாத்தியமே இல்லை ஏற்கனவே 4 திருமணங்கள் முடித்தவன் எதற்கு அதற்க்கு மேலும் N தேடவேண்டும்.முதலில் இந்த நான்கு திருமனம செய்பவர்களை பார்ப்பதே அபூர்வம் அதனை தாண்டி செய்தவர்களில் இன்னும் +N தேர்ந்தெடுப்பார்கள் என்றால் அது அபூர்வத்திலும் அபூர்வம். சரி இப்படி 4 திருமணம் முடித்தவர்களில் சிலரே இவ்வகையான +N தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால் ஊருக்கு முன் ஒன்றை மட்டும் சட்டரீதியாக காட்டி சட்டத்திற்க்கு போரம்பாக வைக்கும் பிறவிகள் எத்தனை இருக்கும் ? இந்த கணக்கீடை அனேகமாக அடுத்த பதிவில் உனிவெர்புட்ட்ய் வெளி இடுவார் என்று எண்ணுகிறேன்.

        உன்னுடைய கருத்தை பார்த்தால் மூட்திரம் கூட வராத பொது ஆத்திரம் எப்படிப்பா வரும். சும்மா விளையாட்டுக்கு சொன்ன மாமா.

        \\மனமாற்றத்தைக் கேட்கிறேன். மதங்களுக்கே தடை கேட்கிறேன்.\\ அனேகமாக உமக்கு யானைக்கான மதம் தான் சரியாக இருக்கும். மனமாற்றம் இல்லாத மதமாற்றமே நடைமுறையில் பெரும் சிக்கல்.

        • Zahir கண்ணு,

          // இஸ்லாமியர்களில் எத்தனை சதவீதம் பேர் நாலு திருமணம் அல்ல . ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்துள்ளார்கள்//

          தற்போதைய இந்திய சட்டத்தின் படி முகமதியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்து கொள்ளலாம். இந்தியாவில் இந்த பிரச்சனை குறைவு என்றாலும் மற்ற மக்களைவிட இவர்களிடம் அதிகம் தான். கடந்த வாரத்தில் கூட ‘சொல்வதெல்லாம் உன்மை’ யில் ஒரு இரண்டாம் நிக்கா செய்த முகமதியரும் அவரைப் பிரிந்து வேறு தொடர்புகளுடன் வாழும் அவரின் முதல் மணைவியும் வந்திருந்தார்கள். முகமதியர் தனது மனைவிகளை ஒரே வீட்டில் வைத்திருக்கக் கூடாது. ஆகையால் நமக்கு அருகில் உள்ளவர்கள் ஒரே மனைவியுடன் தான் வாழ்வதாகத் தெரியும்.
          ஐரோப்பாவில் இந்த பிரச்சனை மிக அதிகம். அங்கே குழந்தைகளுடன் வாழும் பெண்களுக்கு உதவித்தொகை கிடைக்கிறது. சொல்லவா வேண்டும். அங்கே அவர்களின் தொகை கூடினால் இங்கே என்ன பிரச்சனை என்று கூறும் நிலையில் நாம் இல்லை. முகமதிய நாடுகளைப் பற்றி சொல்லவேண்டியதில்லை. கிழவர்கள் வளைகுடாவிலிருந்து இளம்பெண் தேடி ஹைதராபாத்திற்குக்கூட வருகிறார்கள்.
          அப்புறம், 1:4+n என்பது full jihad ன் போது தான் எளிதாகும் என்பதை யூகிப்பது ஒன்றும் கடினமில்லை.

          • univerbuddy,

            //தற்போதைய இந்திய சட்டத்தின் படி முகமதியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்து கொள்ளலாம். இந்தியாவில் இந்த பிரச்சனை குறைவு என்றாலும் மற்ற மக்களைவிட இவர்களிடம் அதிகம் தான். கடந்த வாரத்தில் கூட ‘சொல்வதெல்லாம் உன்மை’ யில் ஒரு இரண்டாம் நிக்கா செய்த முகமதியரும் அவரைப் பிரிந்து வேறு தொடர்புகளுடன் வாழும் அவரின் முதல் மணைவியும் வந்திருந்தார்கள். \\

            உம்முடைய வாயாலேயே ஒற்றுக்கொள்ளும் அளவுக்கு இங்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் குறைவு தான். மேலும் , தான் முன்னாடி கிறுக்குத்தனமாக உளறியதை சமாளிக்கவே சம்பந்தமில்லாமல் ஐரோப்பா அமெரிக்காவை எல்லாம் வந்து உள்ளார் என்பதையும் புரியமுடிகிறது. அங்கு எல்லாம் இரண்டாவது கல்யாணம் அல்ல . கல்யாணமே அபூர்வம்தான் என்பது அனைவரும் அறிந்த உண்மை . பின்பு எத்தன அடிப்படையில் ஐரோப்பாவை இந்தியாவுடன் ஒப்பிடுகிறீர் என்பதை விளக்கவில்லை. அங்குள்ள கலாச்சாரம் living together without marriage . என்பதும் நான் சொல்லித்தெரிய வேண்டிய விஷயம் இல்லை. இப்படியே சம்பந்தம் இல்லாதவிஷயன்களை எல்லாம் கோர்த்து கோர்த்து கிறுக்குத்தனமாய் உலருகிரீரே இது நியாயமா?

            //முகமதிய நாடுகளைப் பற்றி சொல்லவேண்டியதில்லை. கிழவர்கள் வளைகுடாவிலிருந்து இளம்பெண் தேடி ஹைதராபாத்திற்குக்கூட வருகிறார்கள்.\\ இந்த கேவலமான விஷயங்கள் எல்லா இடங்களிலும் தான் நடக்கிறது .அரபு நாடுகளில் இந்த மாதிரியான விஷயம் நடந்தால் தலை துண்டிக்கப்படும் என்ற பயத்தினால் இங்கு வந்து இந்த அனாச்சாரங்களை செய்வதிலிருந்து தங்களால் எதனை புரிய முடிகிறது. மேலும் அவர்கள் இங்கு வந்து அனாச்சாரம் செய்கிறார்கள் அவர்களில் கிழவர்கள் தான் தான் என்னும் விஷயம் எல்லாம் உமக்கு எப்படி தெரியும் ? நீர் தான் அதற்க்கான தரகரா? இப்படி நடக்கிறது என்று உமக்கு ஆதாரம் பூர்வமாக தெரிந்தால் போலீஸ் இடம் தெரியப்படுத்தவேண்டியது தானே. இங்குள்ள போலிசும் இஸ்லாமியர்கள் என்று உளறப்போகிரீரா?

            //அப்புறம், 1:4+n என்பது full jihad ன் போது தான் எளிதாகும் என்பதை யூகிப்பது ஒன்றும் கடினமில்லை.\\ இது உம்முடைய கிறுக்கு வாதத்தின் உச்சக்கட்டம். முதலில் ஜிஹாத் என்பது பற்றி அறிந்து பின்பு உம்முடைய காழ்புணர்வு வாதத்தை பதிவிடவும்.

            தோழர்களே ,

            என்னால் முடிந்த வரை இங்குள்ள காழ்புணர்வு கிறுக்கர்களின் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை என்பதை இவர்களுடன் ஏற்பட்ட விவாதம் ,இவர்களின் அடிப்படை , ஆதாரம் இல்லா குற்றச்சாட்டுக்கள் , கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இவர்களிடமிருந்து வந்த சப்பைக்கட்டுகள் போன்றவைகளே சான்றுகளாக எண்ணி , இனியும் இவர்களுடம் விவாதம் செய்வது மடமை என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்ளலாம் என்று எண்ணுகிறேன் . ஆகவே , தயவு கூர்ந்து சொல்லப்படும் விஷயத்தின் எதார்த்த நிலை மற்றும் உண்மை நிலையை ஆய்வு செய்த பின்னர் ஒரு முடிவுக்கு வாருங்கள்.

            • Zahir கண்ணு,

              //இங்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் குறைவு தான்.//

              நான் சொன்னது, உன்மை நிலவரத்தை மற்றவர்களால் அறிந்து கொள்ளமுடியாது என்று தான்.
              இப்போதெல்லாம் முகத்தையே மூடிய புர்கா பரவலாகிவிட்டதை மனதில் கொள்ளவும். ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். ஒரு வீதியில் ஒரு முகமதியர் வசிக்கிறார். அவர் வீட்டிலிருந்து வெளியே வரும் பெண் முகத்தையே மூடிய புர்கா அணிபவர். ஒரு நாள் அந்த முகமதியரை வேறு ஒரு பகுதியில் பார்க்கிறீர். அவருடன் ஒரு புர்கா பெண். இந்த பெண்ணும் அந்தப் பெண்ணும் ஒரே பெண்ணா இல்லை வேறுவேறா. எப்படி தெரிந்து கொள்வது?

              அப்புறம் சொல்ல மறநதுவிட்டேன். டீவியில் வந்த அந்த ஜோடிக்கு 4 குழந்தைகள்.

              //எத்தன அடிப்படையில் ஐரோப்பாவை இந்தியாவுடன் ஒப்பிடுகிறீர்//

              நான் பேசியது ஐரோப்பியர்களைப் பற்றியல்ல. ஐரோப்பாவில் குடியேறியுள்ள முகமதியர்களைப் பற்றி. இதைக்கூட புரிந்து கொள்ளாமல் கேள்வி மேல் கேள்வி கேட்கிறீர்கள்.
              அவர்கள் தங்கள் சொந்த நாட்டிலிருந்தும் நிக்கா செய்து பெண்ணைக் கூட்டி வருகின்றனர். ஐரோப்பாவில் பிறந்த முகமதியப் பெண்களையும் கட்டிக் கொள்கின்றனர். வெவ்வேறு பெண்ணை வெவ்வேறு வீட்டில் வைத்து குடும்பம் நடத்துகின்றனர். அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் அதில் ஒரு குடும்பம் தந்தையில்லாக் குடும்பம். அதனால் அரசின் உதவியும் பெறும் ஒவ்வொரு குழந்தைக்கும் கணக்குப் போட்டு பணம் கொடுக்கிறார்கள். சொல்லவா வேண்டும்.

              • தோழர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்,

                நான் சொன்னது, உன்மை நிலவரத்தை மற்றவர்களால் அறிந்து கொள்ளமுடியாது என்று தான்.
                //இப்போதெல்லாம் முகத்தையே மூடிய புர்கா பரவலாகிவிட்டதை மனதில் கொள்ளவும். ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். ஒரு வீதியில் ஒரு முகமதியர் வசிக்கிறார். அவர் வீட்டிலிருந்து வெளியே வரும் பெண் முகத்தையே மூடிய புர்கா அணிபவர். ஒரு நாள் அந்த முகமதியரை வேறு ஒரு பகுதியில் பார்க்கிறீர். அவருடன் ஒரு புர்கா பெண். இந்த பெண்ணும் அந்தப் பெண்ணும் ஒரே பெண்ணா இல்லை வேறுவேறா. எப்படி தெரிந்து கொள்வது?\\
                1) முதலில் அடுத்தவன் மனைவியை நீ என்ன மையத்துக்கு பாக்கணும்? என்று இங்குள்ள தோழர்களில் யாரும் கேட்க்க மாட்டீர்களா?

                2) சட்டரீதியாக அனுமதி இருக்கும் ஒரு சமுதாயத்தில் இருக்கும் ஒருவனுக்கு ஏன் தன்னுடைய இரண்டாவது மனைவி உடன் மறைந்து வாழவேண்டும் ? அதன் பின்னணி என்ன? மேலும் அனுமதி உள்ளவனே மறைந்து வாழ்வானேயானால் அனுமதிமறுக்கப்பட்டவன் இcசூல்னிலையில் எப்படி வாழ்வான்? திருமணம் என்பது யாருக்கும் தெரியாமல் நடத்தப்படும் சடங்கு இல்லையே , சம்பந்தப்பட்ட குடும்பத்தார்கள் , மாற்றுமத தோழர்கள் உடன் வேலைசைவோர் என்று பலரும் கூடும் ஒரு நிகழ்ச்சியின் வாயிலாகத்தானே சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கை தொடர்கிறது? இதனை எப்படி மறைக்க முடியும் ?
                கேக்குறவன் கேனையனாக இருந்தால் கேப்பையில் நெய் வடியும் என்று பொய்யையும் துணிந்துசொல்வார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று .

                //அப்புறம் சொல்ல மறநதுவிட்டேன். டீவியில் வந்த அந்த ஜோடிக்கு 4 குழந்தைகள்.\\ இதுவரை சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் இந்தமாதிரியான சமாச்சாரம் ஒன்றே ஒன்று தான் வந்துள்ளதா?
                ஏதோ, அந்த பெண் இஸ்லாமியப்பெண் என்பதால் சட்டரீதியாக நீதிமன்றத்தை கூட அனுகமுடிகிறது. இதுவே , மாற்றுமத சகோதரிக்கு இம்மாதிரியான ஒரு நிகழ்வு நடந்திருந்தால் சட்டத்தின் உதவியை பெற இயலுமா? என்ற கேள்வி இங்குள்ள தோழர்களுக்கு எழவே இல்லையா? இரண்டாவது திருமணமே செல்லாது என்ற நிலையில் அந்த சகோதரி என்ன நிலைக்கு தள்ளப்படுவாள் ? மீடியாவை, நீதிமன்றத்தை என்று எதன்மூலம்தான் அவளுக்கு நல்ல தீர்வை தரமுடியும்?

                //நான் பேசியது ஐரோப்பியர்களைப் பற்றியல்ல. ஐரோப்பாவில் குடியேறியுள்ள முகமதியர்களைப் பற்றி. \\ எனக்கு தெரியும் கால்ப்புனர்வாளர்கள் இந்த அந்தர் பெல்ட்டி அடிப்பார்கள் என்று? முதலில் எனக்கு ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்தட்டும் ? இவ்வகையான கால்ப்புனர்வாலர்களின் பெண்ணுரிமை புராணம் உண்மையில் பெண்ணுரிமை சம்பந்தப்பட்டதா? அல்லது இதனை சம்பந்தப்படுத்தி இஸ்லாத்தை களங்கப்படுத்திவிடலாம் என்பதா? ஏனனில் திருமணம் சைதுக்கொல்லாமலே பிள்ளைகளை பெற்றுக்கொள்ளும் ஒரு நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்துக்கொண்டு பிள்ளைகளை பெற்றுக்கொள்ளும் நபர் எந்தரீதியில் தங்களுக்கு கெட்டவராக தெரிகிறார். மேலும் , நான் முன்னவே சொன்னது போன்று திருமணம் என்பது ரகசியமாக வைக்கவேண்டிய ஒருவிஷயம் அன்று அப்படி இருக்குமானால் அது திருமணமே இல்லை. இஸ்லாமியத்திருமனங்களில் சாட்சிகள் மற்றும் மணமக்களின் சம்மதம் மிக முக்கியம் கட்டாயமும் கூட.

                மேலும் , தாங்கள் சொல்வது போன்று தன்பிள்ளைகளை பராமரிக்காமல் ஒரு தகப்பன் இருப்பானேயானால் , சம்பந்தப்பட்ட மனைவியானவள் நீதிமன்றத்தை அணுகுவதுதான் சரி. ஏனன்றால் , மனைவி மக்களை நல்ல முறையில் நடத்துவது கணவனின் கட்டாய கடமை, இந்த கடமையை நிறைவேற்ற தகுதி இல்லை என்று ஒருவன் கருதுவானேயானால் அவன் திருமணம் செய்தல் கூடாது என்பதுதான் இஸ்லாமிய சட்டம்.

                • Zahir கண்ணு,

                  எனது பின்னூட்டங்கள் உனக்கு புரியவில்லையா இல்லை புரியாதது போல் ஏதோ பதிலளிப்பது வசதியாக இருக்கிறதா.

                  ஒரு முகமதியர் தன்னுடைய இரண்டாவது மனைவி உடன் மறைந்து வாழ்கிறார் என்று நான் சொல்லவில்லை. நான் சொல்வது இரண்டு.
                  1. அவர் தனது முதல் மணைவிக்குத் மற்றும் அவரின் குடும்பத்தினருக்குத் தெரியாமலேயே இரண்டாவது நிக்கா செய்யமுடியும். செய்கிறார்கள்.
                  2. ஒரு முகமதியர் எத்தனை நிக்கா செய்து வாழ்கிறார் என்பதை மற்றவர்கள், அதாவது அவருக்குச் சம்பந்தப்படாதவர்கள், அறியமுடியாது. மணைவிகளை வேறு வேறு வீட்டில் வைத்து வாழ்க்கை நடத்துவது கட்டாயம் என்பதாலும், பெண்கள் சிறிது காலமாக முகத்தை மூடிய புர்கா அணிவதாலும் இதை அறிவது தற்போது சாத்தியமில்லை.

                  //திருமணம் சைதுக்கொல்லாமலே பிள்ளைகளை பெற்றுக்கொள்ளும் ஒரு நாட்டில் ***//

                  திருமணம் என்பது ஒரு வகையான சடங்கு. அதுவும் இன்றுள்ளவைகள் மூடநம்பிக்கையின் அடிப்படையிலான மதங்கள் வகுத்த சடங்கு. ஐரோப்பியாவின் பெரும்பாலான மக்கள் இந்த மதக்குழியிலிருந்து விடுபட்டுவிட்டார்கள். அங்கே இளைஞர்இளைஞிகள் ஒருவரை ஒருவர் சந்தித்து பழகி காதலின் பேரில் இணைந்து வாழ்கிறார்கள். காதல் ஜோடி கிடைக்காதவர்கள் தனித்தே வாழ்கிறார்கள். ஆண்களோ பெண்களோ ஏமாற்றிவிட்டு சென்றுவிடுவார்களோ என்று பயப்படுவதில்லை. குறிப்பிட்ட கால ஜோடிவாழ்க்கைக்குப்பிறகே குழந்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். கடைசிவரை அன்பாக ஒன்றாக வாழ்கிறார்கள். சில ஜோடிகள் இடையில் பிரிந்தாலும் குழந்தைகள் பெண்களே வளர்க்க முடியும். வளர்ப்பில் ஆணின் பங்கும் கட்டாயம் இருக்கும். அவர்கள் ஒன்றாக வாழும் வரையில் பெண்ணோ ஆணோ வேறு உறவுகளைக் கொள்வதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் அந்த சமூகங்களை மனித நாகரிகத்தின் இன்றைய உச்சகட்ட சமூகங்களாகவே நான் பார்க்கிறேன். கட்டிய மணைவிக்குத் தெரியாமல் அல்லது பிரியாமல் வேறு பெண்களை சேர்த்துக் கொள்வது அருவருக்கத்தக்கதாகவே நான் பார்க்கிறேன்.

                  //இஸ்லாமியத்திருமனங்களில் சாட்சிகள் மற்றும் மணமக்களின் சம்மதம் மிக முக்கியம்//

                  முல்லாவின் சாட்சியும் வேறு இரண்டு சாட்சி யிருந்தால் போதும். இது மற்ற பதிவுத்திருமணம் போன்றதுதான். மணமகளின் சம்மதம் இல்லாமல் தான் பல நிக்காக்கள் நடை பெறுகின்றன. அவர்கள் கன்னியாக இருக்கவேண்டும் என்பதால் முடிந்தவரை இளம்வயதிலேயே அவர்களை முடக்கி விடப்படுகிறார்கள். அப்படி சம்மதித்தாலும் அப்பாவி வயதில் உள்ள சிறுமிகளின் சம்மதம் எப்படி சேர்ப்புடையதாக இருக்கும். அப்புறம், மற்ற மணைவிகளுக்கு இது தெரியாமல் தான் நடக்கும். கட்டிக்கொள்ளவிருக்கும் பெண்ணுக்கும் மற்ற மணைவிகளைப் பற்றித் தெரியுமா என்பதும் பெரிய கேள்விக்குறிதான்.

                  //தாங்கள் சொல்வது போன்று தன்பிள்ளைகளை பராமரிக்காமல் ஒரு தகப்பன்***//

                  வேண்டுமென்றே புரியாதது போல் நடிக்கிற கண்ணு. முடிந்த வரை ஐரோப்பாவில் கிடைக்கும் எல்லா அரசு உதவியையும் பெற்றுக் கொள்கிறார்கள் என்று கூறுகிறேன். அரசைப்பொறுத்தவரையில் 2/3/4 மனைவிகள் குழந்தைகளுடன் கைவிடப்பட்ட அல்லது பிரிந்து வாழும் பெண்கள். அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவிப்பணம் கிடைக்கும். இந்தத்தொகை ஜிஸ்யா என்று அஞ்சம் சௌத்ரி என்ற முல்லாவால் கூறப்பட்டிருக்கிறது.

                  கடைசியாக,

                  //அடுத்தவன் மனைவியை நீ என்ன மையத்துக்கு பாக்கணும்? //

                  என்ன மையத்துக்கு பாக்கக்கூடாது. எதிரில் வரும் பெண்ணை நாம் பார்க்கத்தான் வேண்டும். அது எனது அம்மாவாக சகோதரியாக மணைவியாக மகளாக உறவினராக நண்பியாக தெரிந்தவராகவோ இருக்கமுடியும். அப்படியிருக்கும் பட்சத்தில் அவர்களிடம் நாம் பேசுவோம். விசாரிப்போம். ஒரு ஆணுடன் வருகிறார் என்பதற்காக மட்டும் ஒரு பெண்ணை நாம் பார்க்கக் கூடாது என்பது கூறு கெட்டப்பேச்சு. அந்த ஆணுக்கும் அந்த பெண்ணுக்கும் என்ன தொடர்பு. முதுகில் துப்பாக்கியை அ கத்தியை வைத்துக்கொண்டு கடத்திக் கொண்டு கூட போகலாமில்லையா. தெரியாதவர்களாக இருந்தாலும் முகத்தைப் பார்க்கத்தான் வேண்டும். அப்போதுதான் அது யார் என்று தெரிந்து கொள்ளலாம். அது வேறு பெண் என்றாலும் அவர்களின் அழகையும் ரசிக்கலாம். ஆணுக்கும் பெண்ணுக்கும் மற்ற பாலினத்தாரை பார்ப்பது பார்த்து ரசிப்பது என்பது ஒரு உயிரியல் தேவை. நம்மைச்சுற்றி வருவது போவது யார் என்பதையும் அறிந்து கொள்ளவேண்டும். திருடன்திருடி கடத்தல்காரின்காரி போன்ற சமூக விரோதிகளா என்பதையும் கவனிக்க வேண்டும். கேமரா வைப்பது எதற்கு.
                  இவ்வளவு விசயம் இருக்கு கண்ணு. இதெல்லாம் நீ எப்ப புரிஞ்சிக்கறது. ம்ம்ம்.

                  • univerbuddy,
                    //1. அவர் தனது முதல் மணைவிக்குத் மற்றும் அவரின் குடும்பத்தினருக்குத் தெரியாமலேயே இரண்டாவது நிக்கா செய்யமுடியும். செய்கிறார்கள்…..\\
                    அனுமதி வழங்கப்பட்ட ஒரு விஷயத்தை அவன் ஏன் மறைக்க வேண்டும் என்கிறேன், நான் சொல்வதுதான் உமக்கு புரியவில்லை. அல்லது புரியாத்ததுபோல் நடிக்கிறீர். திருமணம் என்பது ரகசியமாக செய்யப்பட வேண்டிய விஷயம் அல்லவே, ஊருக்கே தெரியும் விதத்தில் சையும் ஒரு விஷயம்தான் திருமணம் என்னும்போது அதனை ஏன் மற்றைய மனைவியர்களுக்கு தெரியாத விதத்தில் செய்தல் வேண்டும் . அப்படி ஒரு அவசியம் இல்லையே , இவ்வாறு செய்வது சம்பந்தப்பட்டவனின் தவறு அதற்கும் இஸ்லாத்திற்க்கும் என்ன சம்பந்தம். இவ்வளவு விளக்கம் சொல்லியும் புரியவில்லை விளங்கவில்லை என்றால் , விளன்காதவனிடம் விளக்கம் சொல்லி பயன் இல்லை என்பதே அர்த்தம்.

                    //….சில ஜோடிகள் இடையில் பிரிந்தாலும் குழந்தைகள் பெண்களே வளர்க்க முடியும். வளர்ப்பில் ஆணின் பங்கும் கட்டாயம் இருக்கும். அவர்கள் ஒன்றாக வாழும் வரையில் பெண்ணோ ஆணோ வேறு உறவுகளைக் கொள்வதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் அந்த சமூகங்களை மனித நாகரிகத்தின் இன்றைய உச்சகட்ட சமூகங்களாகவே நான் பார்க்கிறேன்.\\
                    1) திருமணம் இல்லா இல்வாழ்க்கை தங்களின் பார்வையில் சிறப்பானது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்வது கீழ்த்தரமானது என்றால் குறை யாரிடத்தில் என்பதை படிப்பவர்கள் புரிந்துக்கொள்ளட்டும்.

                    //வேறு உறவுகளைக் கொள்வதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. \\
                    2)எந்தவிதமான சம்பந்தமும் இல்லாத ஒரு பெண் எத்தன அடிப்படையில் தனது துணை மற்றவர்களுடன் சேர்ந்து சுற்றுவதை தடை செய்ய இயலும் .
                    தாங்களே அடித்துவிடும் வடிகட்டிய பொய் அல்லது மடமை.

                    \\அரசைப்பொறுத்தவரையில் 2/3/4 மனைவிகள் குழந்தைகளுடன் கைவிடப்பட்ட அல்லது பிரிந்து வாழும் பெண்கள். அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவிப்பணம் கிடைக்கும்.\\ அரசாங்கம் ஏன் இந்தமாதிரியான ஒரு முடிவை எடுக்குதல் வேண்டும். திருமனம முடித்தவன் தான் தன்னுடைய மனைவி மற்றும் குலனதைகளுக்கான செலவுகளை மேட்கொள்தல் வேண்டும் என்ற கட்டாய சட்டத்தை நிறைவேற்றுவதால் இதனை தவிர்த்து இருக்கலாமே? இதில் அரசாங்கம் சையும் தவறு என்னும் ரீதியில் மட்டுமே புரியமுடிகிறது. ஒரு அரசாங்கம் தனது மக்களுக்கு உழைத்து வாழும் விஷயத்தில் தனது பங்களிப்பை செம்மைப்படுத்துதல் வேண்டுமே தவிர மானியம் , கருணை தொகை போன்றவற்றை கொடுத்து மக்களை யாசகராக்குதல் கூடாது என்பதே என்னுடைய நிலைப்பாடு. எனவே , உம்முடைய இந்த குற்றச்சாட்டிட்க்கும் எந்த ஒரு அடிப்படை காரணத்தையும் காண முடியவில்லை.

                    \\எதிரில் வரும் பெண்ணை நாம் பார்க்கத்தான் வேண்டும். அது எனது அம்மாவாக சகோதரியாக மணைவியாக மகளாக உறவினராக நண்பியாக தெரிந்தவராகவோ இருக்கமுடியும். அப்படியிருக்கும் பட்சத்தில் அவர்களிடம் நாம் பேசுவோம். விசாரிப்போம். ஒரு ஆணுடன் வருகிறார் என்பதற்காக மட்டும் ஒரு பெண்ணை நாம் பார்க்கக் கூடாது என்பது கூறு கெட்டப்பேச்சு. // உம்முடைய முன் கருத்துக்கள் அனைத்தையுமே படிப்போர் தெளிவாகவே புரிந்துக்கொள்வார் தாங்கள் பெண்களை எந்தரீதியில் பார்ப்பீர்கள் என்பதையும், தங்களின் பார்வையில் மேன்மை இருக்குமா அல்லது அதற்க்கு மாற்றமானது இருக்குமா என்பதையும் புரிந்துக்கொள்வார்கள்.

                    \\அது வேறு பெண் என்றாலும் அவர்களின் அழகையும் ரசிக்கலாம். ஆணுக்கும் பெண்ணுக்கும் மற்ற பாலினத்தாரை பார்ப்பது பார்த்து ரசிப்பது என்பது ஒரு உயிரியல் தேவை. // இதுதான் உன்னுடைய உண்மையான அடையாளம், பெண்கள் உன்னை பொறுத்தவரை பொழுதுபோக்கு சாதனம் ஆனால் எங்களின் நிலைப்பாடு முற்றிலும் வேறு.

                    \\இவ்வளவு விசயம் இருக்கு கண்ணு. இதெல்லாம் நீ எப்ப புரிஞ்சிக்கறது// உண்மையில் நீர் சொல்லவரும் விஷயம் எது அதனை நியாயப்படுத்த கொடுக்கப்படும் சப்பைக்கட்டுகள் எவை என்பதை எல்லாம் புரியாமல் இல்லை. ஆனால் உன்னுடைய சுயரூபட்தை அறியும் தோழர்கள் உமக்கு செருப்பு அபிஷேகம் தான் பண்ணுவார்களே அன்றி உம்முடன் சேர்ந்து உம்முடைய கருத்துக்களையே பிரதிப்பளிப்பார்கள் என்று கனவில் கூட நினைக்காதீர்.

                    நீர் என்னதான் சாந்தமான ஆடு வேஷம் போட்டாலும் உம்முடைய குள்ளனரித்தன்மை வெளியில் தெரியாமல் இல்லை என்பதை புரிந்துக்கொள்ளும்.

                  • //முல்லாவின் சாட்சியும் வேறு இரண்டு சாட்சி யிருந்தால் போதும். இது மற்ற பதிவுத்திருமணம் போன்றதுதான். மணமகளின் சம்மதம் இல்லாமல் தான் பல நிக்காக்கள் நடை பெறுகின்றன. அவர்கள் கன்னியாக இருக்கவேண்டும் என்பதால் முடிந்தவரை இளம்வயதிலேயே அவர்களை முடக்கி விடப்படுகிறார்கள். அப்படி சம்மதித்தாலும் அப்பாவி வயதில் உள்ள சிறுமிகளின் சம்மதம் எப்படி சேர்ப்புடையதாக இருக்கும். அப்புறம், மற்ற மணைவிகளுக்கு இது தெரியாமல் தான் நடக்கும். கட்டிக்கொள்ளவிருக்கும் பெண்ணுக்கும் மற்ற மணைவிகளைப் பற்றித் தெரியுமா என்பதும் பெரிய கேள்விக்குறிதான்.\\
                    இதனை வெறும் பிதற்றலாகவே பார்க்க முடியும் ஏனனில் அனைவரும் கூடும் இடத்தில் வைத்து மக்களின் முன்னாள் சம்பந்தப்பட்ட மணப்பெண் மற்றும் மாப்பிள்ளை இடம் சம்பந்தம் பெற்ற பின்னரே நிக்காஹ் சைதுவைக்கப்படுகிறது . இதில் சம்பந்தப்பட்டவர்களில் ஒருவர் மறுத்தாலும் நிக்காஹ் நடைபெறாது. இவ்வாறு நின்ற திருமணங்களும் இருக்கவே செய்கிறது என்பது உண்மையில் எதார்த்தம். மேலும் , தோழர்கள் அடுத்தமுறை இஸ்லாமிய திருமனத்திற்க்கு சல்லும் போது கவனித்து பார்த்து உண்மையை அறிந்துக்கொள்ளுங்கள்.

                    உண்மையில் கிறுக்கனை போன்று நடிப்பவர்களை குணப்படுத்தும் மருத்துவம் இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை.

                    • Zahir கண்ணு,

                      // அனுமதி வழங்கப்பட்ட ஒரு விஷயத்தை//

                      என்ன அனுமதி? யார் வாழ்க்கை? யார் அனுமதி கொடுப்பது? நிக்கா என்பது ஒப்பந்தம் தானே? அதை ஆண் மீறினால் ஒப்பந்தம் முழுவதுமாகவோ பகுதியளவிலோ முறிந்து போக வில்லையா? பெண்ணும் முழுவதுமாகவோ பகுதியளவிலோ வேறு ஒப்பந்தம் போட்டுக்கொள்ளமுடியுமா?

                      உன்மையில் குரானில் முகமதியர்கள் பலதாரத்தை நியாயப்படுத்திக் காட்டும் ஒரே வாசகமும் ஒரு சிறிய கோடுதான். அதைத்தான் இந்த ஆண்கள் ரோடாக எடுத்துக் கொண்டு உலகமே சற்றிவந்து விட்டார்கள். உன்மையில் அந்த வாசகம் அனாதைப் பெண்களுக்கான் குறைந்தபட்ச பாதுகாப்பைப்பற்றியது.
                      முகமதியர்களின் தாக்குதல்களின் போது முகமதியர்களின் தரப்பிலும் சிலர் இறக்கத்தான் செய்தார்கள். ஆதலால் சில பெண்கள் கணவனை இழக்கவும் சில குழந்தைகள் தந்தையை இழக்கவும் செய்தார்கள். முகமதியத்தைப் பொறுத்தவரை அந்த மனைவிகளும் குழந்தைகளும் இப்பொழுது அநாதைகள். ஒவ்வொரு உயிர்த்தியாகிக்கும் ஒரு பாதுகாவலன் (Kafala) நியமிக்கப்பட்டான். அவன் தியாகியின் கொள்ளைச்சொத்தில் உள்ள பங்கிற்கும் அவனின் அநாதைகளுக்கும் பொறுப்பாவான். தியாகிக்கோ அவன் குடும்பத்திற்கோ சொந்தமானவனோ தெரிந்தவனோ பாதுகாவலனாகலாம்

                      “நீங்கள் உங்கள் பாதுகாப்பில் உள்ள அநாதைப்பெண்களிடம் நியாயமாக நடந்து கொள்ள முடியாது (அதாவது அத்து மீறாமல் கையைவைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது) என்று அஞ்சினால் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற் போல் அவர்களில் இருவரையோ, மூவரையோ, நால்வரையோ நிக்கா செய்து கொள்ளுங்கள்” என்பதுதான் அந்த வாசகத்தின் முதல் பகுதி.

                      மேலதிக விபரங்களுக்கு படிக்கவும் ‘பலதாரம் ஹராமில்லையா?’
                      http://questionstomuhamadhians.blogspot.com/2013/08/blog-post_29.html

                      // ஏன் மற்றைய மனைவியர்களுக்கு தெரியாத விதத்தில் செய்தல் வேண்டும்//

                      தெரிந்து செய்தால் அவர்கள் பிரச்சனை பண்ணுவார்கள். அவர்களின் குடும்பமும் கூட்டமும் பிரச்சனை செய்யும். முகமதின் மகளின் கணவன் அலி இரண்டாவது நிக்கா செய்யும் ஆசையில் முகமதின் அனுமதியைக் கேட்டிருக்கிறான். முகமதினால் ஒரேமூச்சில் 3 முறை மறுக்கப்பட்டிருக்கிறது. அதாவது தெள்ளத்தெளிவாக மறுக்கப்பட்டிருக்கிறது. முத்தலாக் போல. அலியினால் மீறிச்செய்யமுடியவில்லை. அப்போ உஷாரானவங்க தான் உங்க ஆளுங்க. பெண்வீட்டாருக்குத் தெரியாமல் செய்வதே சரி என்பதுதான் இதன் பாடம். இந்த பெண்களையும் அநாதைகளாகப் பாவித்து விட்டால், மறுப்பார் யாருமில்லை. பிரச்சனை ஒழிந்தது. நிக்கா நடந்ததற்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

                      // எந்தவிதமான சம்பந்தமும் இல்லாத ஒரு பெண் எத்தன அடிப்படையில் தனது துணை மற்றவர்களுடன் சேர்ந்து சுற்றுவதை தடை செய்ய இயலும்//

                      ஒரு ஆணும் ஒரு பெண்ணும் மனம் ஒத்து ஒருவரை ஒருவர் விரும்பித் தங்களுக்குள் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் செய்து கொள்ளும் ஒப்பந்தம் தான் மற்ற எல்லா ஒப்பந்தங்களைவிட பலம் வாய்ந்தது. இத நீ புரிஞ்சிக்கறது கஸ்டந்தான் கண்ணு.

                      // ஒரு அரசாங்கம் தனது மக்களுக்கு உழைத்து வாழும் விஷயத்தில் தனது பங்களிப்பை செம்மைப்படுத்துதல் வேண்டுமே தவிர***//

                      தனியாக வாழும், கணவனால் கைவிடப்பட்ட, கைக்குழந்தைகளை வைத்திருக்கும், ஒரு பெண்ணுக்கு உதவும் நல்ல மனதில் இயற்றப்பட்ட சட்டங்கள் அவை. நெல்லுக்குப் பாய்வது சில புல்லுக்கும் பாயும் தானே. ஆனால் பெரும்பாலும் புற்களுக்கே பாய்ந்து கொண்டிருக்கிறது. யார் மீது குற்றம்.

                      // அனைவரும் கூடும் இடத்தில் வைத்து மக்களின் முன்னாள் சம்பந்தப்பட்ட மணப்பெண் மற்றும் மாப்பிள்ளை இடம் சம்பந்தம் பெற்ற பின்னரே நிக்காஹ் சைதுவைக்கப்படுகிறது//

                      இதை நான் மறுக்கவில்லையே. ஆனால் எல்லா நிக்காவும் இப்படி நடப்பதில்லையே. ஐதராபாதுக்கு வரும் சேக்குகள் இப்படியா நிக்கா செய்கிறார்கள்? சிறுமிகள் மறுப்பது எப்பாதோதான் நடக்கிறது என்பது உன்மைதான். பெண்களில் பலர், குறிப்பாக ஐரோப்பாவிலிருந்து கொண்டுவரப்படுபவர்கள், தங்கள் உயிருக்கு பயந்து தான் மறுத்துப்பேசாமல் தான் இதற்கு ஆட்படுகிறார்கள்.

                    • \\என்ன அனுமதி? யார் வாழ்க்கை? யார் அனுமதி கொடுப்பது? நிக்கா என்பது ஒப்பந்தம் தானே? அதை ஆண் மீறினால் ஒப்பந்தம் முழுவதுமாகவோ பகுதியளவிலோ முறிந்து போக வில்லையா?….//

                      என்னதான் சொல்லவருகிறீர்… திருமணம் என்ற நடைமுறையே அறிவீனம் , மிருகங்கள் போல் விருப்பட்டவர்களுடன் விரும்பியவாறு வாழ்வதுதான் உயரிய நாகரீகம் என்றெல்லாம் பிதற்றும் நீர் எதற்க்காக ஒன்றுக்கு மேற்பட்ட திருமனம செய்வது ஒப்பந்தம் மீறுதல் போன்ற வார்த்தைகளை எல்லாம் எத்தன அடிப்படையில் உபயோகிக்கீரீர்?

                      வரை இல்லா வாழ்வுமுறை நாகரீகமாக தெரியும் உமக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமனம செய்பவர்களை வெறுக்கும் நிலைக்கு தள்ளப்படுவது எதனால் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றவர்கள் என்பதாலா?

                      இதில் வேறு என்னவோ குரானுக்கு புதிய விளக்கவுரைகளை வேறு இவரது கருத்துக்கு ஒப்ப ஒளரும் கூட்டட்தினரிடம் இருந்து எடுத்துவந்து வெற்று பிதற்றல் வேறு.

                      ஏன் மற்றைய மனைவியர்கள் தெரியாதவகையில் திருமணம் செய்தல் வேண்டும் என்ற விளக்கத்தை உம்மிடம் கேட்க்க வில்லை. மாறாக அதற்க்கான அவசியமே இல்லை என்றுதான் சொல்கிறேன். மனைவிமார்களை சமமாக நடத்தும் ஒருவன் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் சைவத்தில் தவறில்லை எனவே அதனை மறைக்கவேண்டிய அவசியம் இல்லை என்றுதான் சொல்கிறேன்.

                      நீர் சொல்வதுபோல் இரண்டாமவள் வந்தவுடன் முதலாமவளை தனக்கு உகந்தவள் அல்ல என்று கழட்டிவிடும் செயலில் ஈடுபடுவதுதான் பெண்களின் மகத்துவம் குறைத்து அவர்களை போதை மற்றும் பொழுதுபோக்கு பொருலாகக்கொல்லும் செயல் என்கிறோம்.

                      //ஒரு ஆணும் ஒரு பெண்ணும் மனம் ஒத்து ஒருவரை ஒருவர் விரும்பித் தங்களுக்குள் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் செய்து கொள்ளும் ஒப்பந்தம் தான் மற்ற எல்லா ஒப்பந்தங்களைவிட பலம் வாய்ந்தது. இத நீ புரிஞ்சிக்கறது கஸ்டந்தான் கண்ணு.\\
                      நீர் சொல்லும் இந்த பரஸ்பரம் எத்தனை நாடுகளில் உள்ளது என்பதை காட்டிலும் இதற்க்கு மாற்றமான செயல்முறையில் ஈடுபடும் ஆண்களின் சதவீதம் எத்தனை என்பதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. இன்னாரின் கணவர் இன்னார் என்று தெரியும் விதத்தில் செய்யப்படும் திருமணத்திலேயே சின்னவீடு குடுசைவீடு தேடி அலைவோர் கூட்டம் அதிகம் அதிலும் இம்மாதிரியான தவறான உறவு கேவலமானது என்று உணரும் நம்மவர்களே இதனை செய்யும்போது , மற்றவர்கள் இதனை செய்யமாட்டார்கள் என்று எதிர்பார்ப்பது மடமை. மேலும் உம்மிடமிருந்து அதனை மட்டுமே எதிர்பார்க்க முடியும் என்பதையும்,
                      உம்மால் இதுபோன்ற நடைமுறைக்கு பொருந்தாத சப்பைக்கட்டுகளை மட்டும் வைத்து தான் காலத்தை ஊட்ட முடியும் என்பதையும் நான் நன்றாகவே புரிந்துக்கொண்டேன்.

                      //தனியாக வாழும், கணவனால் கைவிடப்பட்ட, கைக்குழந்தைகளை வைத்திருக்கும், ஒரு பெண்ணுக்கு உதவும் நல்ல மனதில் இயற்றப்பட்ட சட்டங்கள் \\ திரும்பவும் அந்தர் பல்ட்டி அந்த நாடுகளில் கணவன் மனைவி வாழ்வுமுறையே அபூர்வம் என்கிறபோது இது கணவனால் கைவிடப்பட்ட….. தேவைக்கேற்ப்ப கதைகளை மாற்றி சொல்லும் உம்முடைய திறமை அருமைளும் அருமை.

                      //ஐதராபாதுக்கு வரும் சேக்குகள் இப்படியா நிக்கா செய்கிறார்கள்? சிறுமிகள் மறுப்பது எப்பாதோதான் நடக்கிறது என்பது உன்மைதான். பெண்களில் பலர்,…….\\ மொத்தத்தில் உமக்கு நல்லசெயல்கள் செய்வோர் அனைவரும் தீண்டத்தகாதவர்கள். எனவே, தான் தேடி தேடி எங்கெல்லாம் ஒருசில கேவலமான ஜென்மங்கள் கேவலத்தை செய்கிறதோ அந்த கேவலத்தை ஒரு உதாரணமாக எடுத்து போட்டு தன்னுடைய வாதத்திற்க்கு வலுசேர்க்க நினைகிரீர். நீர் தேடிப்பிடித்து சொல்லும் போதே தெரியவில்லையா இத்தகையோர் சொற்பமானவர்கள் தான் என்பது? அறிவ வளரப்பாரும்… அதுசரி இருந்தா தானே வளர்ப்பதற்கு…

                      உம்முடன் விவாதித்ததில் என் நேரம் செலவானதுதான் உண்மை . எந்த ஒரு விஷயத்தையும் தெரிந்துக்கொள்ளும் மனபாவம் உம்மிடத்தில் இல்லை இரண்டாவது ஆதாரத்துடன் கருத்தை பதிவு சையும் தன்மையும் உம்மிடத்தில் அறவே இல்லை. சற்றும் அறிவுக்கு பொருந்தாத விஷயத்தை எல்லாம் குற்றச்சாட்டாக வைக்கிறீர் , திரும்பவும் அதிலிருந்து கேள்வி கேட்டால் சம்பந்தமில்லாமல் வேறொரு குற்றச்சாட்டின் பக்கம் மீள்கிறாய். எனவே , இனிமேலும் என்னுடைய பொன்னான நேரத்தை உம்மை போன்ற முட்டாள்களிடம் கழிக்க விருப்பம் இல்லை.

          • அய்யா யுனிவெர்புட்டி! ஒருவனுக்கு ஒருத்தி என சொன்னது கிறுத்துவர்களே ! கிறுத்துவர்களே இறைவனே அப்படி படைத்ததாக கூறுவர்! ஆனால் ஆதாம் -ஏவாள் கதையில்தான் அப்படி! பின்னர் ஆபிரகாம் இரண்டு மனைவிகள் கொண்டிருந்தார்! அவர்களின் கிளைகளே இச்ரவேலர் எனும் யூதர்களாகவும், பின்னர் இச்லாமியர் என அறியப்பட்ட அராபியராகவும் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளது!

            யேசுவின் காலத்திற்கு பின்னரே, ஒருவனுக்கு ஒருத்தி உட்பட பல சமூக சீர்திருத்தங்கள், ஏற்படுகின்றன!

            இந்தியாவில் பலதார மணம் தடை செய்யப்பட்டதும்(இந்துக்களுக்கு) இருபதாம் நூற்றாண்டில்தான்!

            ஏகப்பட்ட கோபிகைகளையும் மாற்றான் மனைவியாகிய பிருந்தையையும் புணர்ந்த கிருஷ்ணன், ராமாவதாரத்தில் ஏகபத்தினியுடன் இருந்தான் என்பதே பின்னர் உட்ட ரீல்தான், வால்மீகி அப்படி சொல்லவில்லை!

            வேறு எந்த கடவுளரும் ஒரே துணையுடன் இல்லை! சாதாரண் மனிதரும் அப்படியொரு ஒழுக்கத்தை கடைபிடிக்கவில்லை! முக்கூடற்பள்ளு இதை நையாண்டியாக இடித்துரைக்கிரது!

            இப்போதும் 1:4+ன் இந்துக்கள் உள்ளார்கள்! சட்டத்திற்கு பயந்து ஏன் குமைகிறீர்கள்?

            சிவகாசி ஜெயாக்களும், இரண்டாவது மனைவியாகவும், கல்யாணமில்லாமலே பிள்ளை பெற்றுகொண்டும் பல புகழ்பெற்ற பெண்மைகள் இந்துமதத்திலும் உண்டு!

            அப்புறம் என்ன சட்டம், கருப்பு, வெங்காயம் என்றுதான் பெரியார் சாடினார்! இருவர் மனமொத்து , எந்த ஏற்பாடு வேண்டுமாலும் செய்து கொண்டு வாழட்டுமே!

            குற்ப்பிட்ட மதசட்டங்களை கடைபிடிக்க விரும்புவோர் தாரளமாக கடைபிடிக்கலாம்! விரும்பாதவர்கள் ஸ்பெசல் மேரேஜ் சட்டத்தை நாடலாம்!

            • அய்யா அஜாதசத்ரு,

              //ஒருவனுக்கு ஒருத்தி என சொன்னது கிறுத்துவர்களே//

              கிறுத்துவர்களும் சொல்லியிருக்கிறார்கள். முகமதியர்களும் கூட அப்படி வாழ்கிறார்கள். ஏனென்றால் அது தான் இயற்கையான ஆண்பெண் விகிதம். முதல் மணைவிக்கு குழந்தையில்லாவிட்டால் அடுத்து ஒரு மணம் செய்து கொள்வதும் ஏற்றுக் கொள்ளக்கூடியது தான். முதல் மணைவியிடம் விலக்குப் பெறாமல் அல்லது அவருக்குத் தெரியாமல் வேறு பெண்களுடன் வாழ்வது நம்பிக்கை துரோகம். அது குற்றமாகத்தான் பார்க்கப்படவேண்டும். அப்படிப்பட்ட குடும்பங்கள் மனதளவில் ஆரோக்கியமற்ற குழந்தைகளையே உருவாக்கும். அதனால் சமூகத்திற்கும் கேடு தான்.

              //சாதாரண் மனிதரும் அப்படியொரு ஒழுக்கத்தை கடைபிடிக்கவில்லை!//

              அதற்காகத்தான் சட்டங்கள். தண்டனைகள். கட்டுப்பாடு வேண்டாமென்றால் பெண்களுக்கு மட்டும் ஏன் கட்டுப்பாடு? அவர்களும் 2/3/4/5+n தொடர்புகளை வைத்துக் கொள்ளட்டுமே.

              //1:4+ன் இந்துக்கள் உள்ளார்கள்!//

              தாரசை இழுப்பதற்கு காந்தம் வைத்ததைப் போன்ற வாதம் இது.

              //இருவர் மனமொத்து , எந்த ஏற்பாடு வேண்டுமாலும் செய்து கொண்டு வாழட்டுமே!//

              இருவர் மனமொத்து செய்யும் ஏற்பாட்டை நான் என்ன சொன்னேன். தொடர்ந்து உளறிக்கொண்டே இருக்கிறீர்கள்.
              நீங்கள் ஒரு பெண் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கணவன் ஒரு நாள் வீட்டிற்கு வரவில்லை. ஏதோ சாக்கு. அப்புறம் தொடர்ந்து அடிக்கடி வருவதில்லை. அவன் வேறு பெண்ணை நிக்கா செய்து வேறு வீட்டில் வைத்திருக்கிறான். உங்களுக்கு அதைப் பற்றி அவன் சொல்லத் தேவையில்லை. உங்கள் நிலையென்ன. நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா.

              .//குற்ப்பிட்ட மதசட்டங்களை கடைபிடிக்க விரும்புவோர் தாரளமாக கடைபிடிக்கலாம்!//

              மதசட்டங்கள் என்பதெல்லாம் ஏமாற்று வேலை. இது போன்ற போக்குகள் சமூகத்தின் அமைதியைக் கெடுக்கும். குழப்பத்தை அதிகரிக்கும். பொதுச் சட்டம் தான் சரியானது.

              • திருமண சட்டங்களால், அது மதசட்டமானாலும்சரி, பொது சட்டமானாலும் சரி, பெண்களை அடிமையாக்கவே பயன்படுகின்றன!

                //உங்கள் கணவன் ஒரு நாள் வீட்டிற்கு வரவில்லை. ஏதோ சாக்கு. அப்புறம் தொடர்ந்து அடிக்கடி வருவதில்லை. அவன் வேறு பெண்ணை நிக்கா செய்து வேறு வீட்டில் வைத்திருக்கிறான். உங்களுக்கு அதைப் பற்றி அவன் சொல்லத் தேவையில்லை. உங்கள் நிலையென்ன//

                இதில் நிக்காவை ஏன் இழுகக்கிறீர்கள்? எந்த மத கட்டுபாடு இருந்தாலும், ஈர்ப்பு குறைந்தால், அன்பு மறைந்தால் ஒரே வீட்டில் விரொதிகளாய்தான் இருப்பர்! வேறு பெண்ணை நாடுவ்தும் இப்போதும் நடக்கிறது, எப்போதும் நடக்கும்!

                ஆனால் பெண்கள்நிலை? இன்னாருடைய மனைவி என்றுதானே பெண் அறியப்படுகிறாள்? அவளுக்கு மட்டும்தானே விபசாரி பட்டம்? ஆணுக்கு இல்லையே!

                கங்கையை தலையில் வைத்து கொண்ட சிவனாகட்டும், அடுத்தவன் மனைவியை பலாத்காரம் செய்த கண்ணனாகட்டும், ஆணாதிக்க சமூகத்தால் புறக்கணிக்க பட்டார்களா? ஏகப்பத்தினி விரதன் என்று போற்றபடும் ராமனும் சீதையை தீக்குளிக்க வைத்தவன் தானே!

                கல்யாணம் என்பது பெண்ணை அடிமைப்படுத்தும் சடங்கு! எந்த பொது சட்டம் வந்தாலும் அது ஆணாதிக்க சட்டமாகத்தான் இருக்கும்! புரட்சி செல்விகள் மலிந்து வரும் இந்த நாட்டிலிருந்து கொண்டு நீஙகள் இப்படி பேசலாமா? மத்தியிலும் , மானிலங்களிலும் பல பெண்களுடன் தொடர்புடைய பிரபலங்களை சட்டமோ சமூகமோ என்ன செய்தது?

                விபசார தடை சட்டம் யாரிடம் பாய்கிறது? மேட்டுகுடி விபச்சாரிகள் அரசாங்கத்தையே ஆட்டுவிக்கும்போது, அபலைகளே அவமானத்துக்கு உள்ளாவது அறிவீர்களா? தனினபர் ஒழுக்கம் அல்லது மதம் சார்ந்தவை, கூடியவரை அரசு தலையீடு அற்றதாக இருக்கவேண்டும்!

                • அஜாதசத்ரு,

                  //நிக்காவை ஏன் இழுகக்கிறீர்கள்?//

                  இதில் நிக்காவைத்தான் இழுக்கமுடியும். ஏனென்றால் அது ஈர்ப்பு குறைந்தால், அன்பு மறைந்தால் செய்து கொள்வதல்ல. முகமதியர்கள் 2 பெண்களைக் கட்டிக்கொண்டாலும் எத்தனை பெண்களைக் கட்டிக்கொண்டாலும் அவர்களிடம் ஒரே மாதிரி அன்பாகத்தான் நடந்து கொள்ளவேண்டுமாம். சமமாக நடத்த வேண்டுமாம். இந்த பெண்ணிடம் ஒரு இரவைக் கழித்தால் அடுத்தப் பெண்ணிடமும் ஒரு இரவைக் கழிக்க வேண்டுமாம். ஜாகிர் சொல்லியிருக்கிறதைப் படியுங்கள்.

                  //ஒரே வீட்டில் விரொதிகளாய்//

                  அன்பு மறைந்தால் பிரிந்து விடலாம். குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால் அவர்களின் நலனுக்காக ஒன்றாக வாழலாம். இது நமது குழந்தைகளுக்காக நாம் செய்யும் சிறிய தியாகம் தான். உடலின்பத்திற்காக தன் கையே தனக்குதவி என்றிருக்கலாம். எப்போதேனும் விலை மாதுக்களை சேதுக்களை நாடலாம். இதெல்லாம் முடியாதென்றால் இன்னாருடைய கணவனில்லை மனைவியில்லை என்று விலக்கு வாங்கிக் கொண்டு வேறு மணம் செய்து கொள்ளலாம். அல்லது தனித்து வாழலாம்.
                  பெண்களுக்கு மட்டும் ஏன் ஈர்ப்பு குறையாது. அவர்களுக்கு ஈர்ப்பு குறைந்தால் மட்டும் பட்டங்கள் கொடுக்கிறீர்கள். மண்ணில் தோள்வரைப் புதைத்து தலையைக் கற்களால் அடித்துக் கொள்ள வேண்டும் என்று சிலர் ஊளையிடுகிறார்கள்.
                  கங்கை போன்ற கதைகளையெல்லாம் பெண்களா எழுதினார்கள். ஆண்கள் தான் கற்பித்து இருக்கிறார்கள். பெண்களுக்கு இந்த நிலையை மாற்ற நீதியை விரும்பும் ஆண்கள் தான் உதவவேண்டும்.

                  //எந்த பொது சட்டம் வந்தாலும் அது ஆணாதிக்க சட்டமாகத்தான் இருக்கும்!//

                  எப்படி என்று கூறுங்கள்.

                  //புரட்சி செல்விகள் மலிந்து வரும் இந்த நாட்டிலிருந்து கொண்டு//

                  என்ன சொல்லவருகிறீர்கள். புரியவில்லை. தெளிவு படுத்துங்கள்.

                  //பல பெண்களுடன் தொடர்புடைய பிரபலங்களை சட்டமோ சமூகமோ என்ன செய்தது?//

                  ஏதோ ஒரு காரணத்திற்காக முதல் மனைவி ஏற்றுக் கொள்கிறார் என்றால் அல்லது ஆமோதிக்கவில்லை என்றாலும் இது நடக்கலாம். ஒரு சாராருக்கு இது சட்டப்படியானது எனும் போது மறுசாராருக்கு அது சட்டத்திற்குப் புறம்பானதென்றால் அதை இந்த ஆண்கள் ஏற்றுக்கொள்வார்களா. நடக்காதுதான். அந்த மனைவிகளும் இப்படி செய்தால் சமநிலை வந்துவிடும். விடுவார்களா.

                  //அரசு தலையீடு அற்றதாக இருக்கவேண்டும்//

                  தனிநபர் வாழ்க்கையில் அரசுகளைவிட மதங்களே அதாவது மதத்தை வைத்துப்பிழைக்கும் கூட்டமே அதிகமாக தலையீடு செய்கின்றன. விபசார தடை சட்டமும் அப்படிப்பட்ட மதத்தலைகள் திணித்த சட்டம்தான். பெண்களை மட்டும் குறிவைத்துத்தான் இது செயல்படுகிறது. இதையும் சரிசெய்துதான் ஆகவேண்டும். விலைமாதுக்கள் வேண்டுமென்றால் விலைசேதுக்கள் கூட வேண்டும்.
                  எப்படியோ, பெண்கள் தங்களால் முடிந்த வழியில் ஆண்களுக்கு பதில் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் இருப்பார்கள்.

                  • Ajaathasathru,

                    //இரணடாவது மனைவியர்கள் மத்தியில் நடுநிலையை கையாள்தல் வேண்டும் இல்லையேல் மறுமையில் செய்த தவறுக்கு ஏற்ப்ப தண்டனை உண்டு என்பதுதான் இஸ்லாமியர்களின் நம்பிக்கை. நீர் நம்பவேண்டாம்.\\

                    //இதில் நிக்காவைத்தான் இழுக்கமுடியும். ஏனென்றால் அது ஈர்ப்பு குறைந்தால், அன்பு மறைந்தால் செய்து கொள்வதல்ல. முகமதியர்கள் 2 பெண்களைக் கட்டிக்கொண்டாலும் எத்தனை பெண்களைக் கட்டிக்கொண்டாலும் அவர்களிடம் ஒரே மாதிரி அன்பாகத்தான் நடந்து கொள்ளவேண்டுமாம். சமமாக நடத்த வேண்டுமாம். இந்த பெண்ணிடம் ஒரு இரவைக் கழித்தால் அடுத்தப் பெண்ணிடமும் ஒரு இரவைக் கழிக்க வேண்டுமாம். ஜாகிர் சொல்லியிருக்கிறதைப் படியுங்கள்.\\
                    மேற்கண்ட என்னுடைய கருத்துக்கும் கீழ்க்கண்ட உனிவெர்புட்ட்ய் இன் புரிதலுக்கும் எந்தவிதத்திலாவது சம்பந்தம் உள்ளதா? என்பதை தங்களின் புரிதலுக்கே விட்டு விடுகிறேன். இவருடைய சிந்தனை எல்லாம் முழுக்க முழுக்க அந்த சிறுபகுதி இன் சுகத்தை பற்றியது மட்டுமே, அதனை தாண்டி அன்பு பாசம் , பிள்ளை பாசம் , மனைவியர்களின் பிள்ளைகளை சமமாக பாவித்து வாழ்க்கையில் உயர்த்தும் தன்மை பற்றியது எல்லாம் மனைவியர்களிடையே சமஉரிமை என்ற அணுகுமுறைக்குள் பொருந்தாதா?

                    வெளியில் பெண்களின் உரிமை வேண்டும் சமஉரிமை வேண்டும் என்று பீற்றும் இதுபோன்ற நபர்களின் உண்மை மனநிலை இதுதானோ என்று எண்ணத்தோன்றுகிறது.இவர்களின் கண்ணோட்டத்தில் இல்வாழ்க்கை என்பது கட்டில் வாழ்க்கை மட்டுமே .

                    //எப்போதேனும் விலை மாதுக்களை சேதுக்களை நாடலாம். இதெல்லாம் முடியாதென்றால் இன்னாருடைய கணவனில்லை மனைவியில்லை என்று விலக்கு வாங்கிக் கொண்டு வேறு மணம் செய்து கொள்ளலாம். அல்லது தனித்து வாழலாம்.
                    பெண்களுக்கு மட்டும் ஏன் ஈர்ப்பு குறையாது. அவர்களுக்கு ஈர்ப்பு குறைந்தால் மட்டும் பட்டங்கள் கொடுக்கிறீர்கள். \\ சுற்றி சுற்றி இவரின் சிந்தனை எதில் வட்டமிடுகிறது என்பதை தங்களின் புரிதலுக்கே விட்டுவிடுகிறேன்.

                    //மண்ணில் தோள்வரைப் புதைத்து தலையைக் கற்களால் அடித்துக் கொள்ள வேண்டும் என்று சிலர் ஊளையிடுகிறார்கள்.\\ இதே குற்றத்தை செய்த ஆணுக்கு மட்டும் என்ன அரசு சிம்மாசனம் பரிசாக அளிக்கப்படுகிறதா? என்ற கேள்வியை தாங்கள் கேட்க்க வில்லையா? கேள்விகள் கேட்டால் தான் கால்ப்புனர்வாலர்களுக்கு அறிவு வரும்.

                    \\விபசார தடை சட்டமும் அப்படிப்பட்ட மதத்தலைகள் திணித்த சட்டம்தான். \\ உனிவெர்புட்ட்ய் சொல்ல வரும் அறியக்கருத்து என்னவென்றால் விபச்சாரம் செய்வது ஊக்கிவிக்கப்படிதல் வேண்டும் . விபச்சாரம் இல்லா உலகம் அல்ல , விபச்சாரமே உலகமாய் பறந்து இருத்தல் வேண்டும். என்ன ஒரு கருத்து?

                    \\விலைமாதுக்கள் வேண்டுமென்றால் விலைசேதுக்கள் கூட வேண்டும்.\\ விலைமாதுக்கள் வேண்டாம் என்பதல்ல கருத்து உனிவெரின் கருத்து விளைசேதுக்கள் என்று எங்களுக்கும் வாய்ப்பு வழங்குதல் வேண்டும் என்று ஆண்களின் சம உரிமைக்கு குரல் கொடுக்கிறார் தானே வந்த தானிய தலைவன்.

                    மொத்தத்தில் இவர் சொல்ல வருவது மற்றஜீவராசிகளை போன்று நாமும் வரையறை இல்லா வாழ்வுமுறையை கையாள்வோம் என்கிறார்.

      • தோழர் உனிவர்புட்டி இன்னுமா இந்த (அரை) அறிவு ஜீவி ஜாகிருடன் விவாதம் புரிந்து கொண்டு இருக்கிறீர் _______ உம்முடைய முயற்ச்சியை பாராட்டுகின்றேன்….

        • ஜோசப்,

          கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கு இல்லாதவனுக்கு எதற்கு இந்த வெற்று பிதற்றல். உம்முடைய மனநோய் அதிகமாகுவதை உணர்ந்து தகுந்த சிகிட்ச்சை எடுத்துக்கொள்ளும். முன்னொருநாள் தமிழை ஜாகிர் என்று என்னுடைய பெயரைக்கொண்டு அழைத்தீர் . இப்போது தமிழ் தாகத்தை சரவணன் என்கிறீர். இன்னும் என்ன என்ன கோமாளித்தனம் பண்ணப்போரிரோ தெரியவில்லை… தொடரட்டும் உம்முடைய கோமாளித்தனம்.

  27. பி ஜெ! இன்னுமா புரியலே! நான் இந்த விஷயத்தில் ‘கற்றது கைமனண்ணளைவை’ எதிரொலிக்கிறேன்!

    ”விடுங்கப்பா, ஆகிற வேலை ஏதாவது இருந்தால் பார்ப்போம்.
    உங்க மதம் பெரிதா, எங்க மதம் பெரிதா, இந்த சண்டை ஓயவே ஓயாது.

    அவரவர் அவர்களுக்கு பிடித்த மார்க்கத்தை தேர்ந்தெடுத்து கொள்ளட்டும். மதமே வேண்டாம் என்று எங்களை போல சுயேட்சையாக நின்றாலும் சரி தான்.”

    பகுத்தறிவு வளர்ந்து, சொத்துரிமைகள் அழிந்து, முழுமையான சோஷலிச சமூதாயம் மலர்ந்தால், இந்த வாதங்களுக்கு அவசியமே ஏற்படாது! மலருமா?

    பகுத்தறிவு என்றாலே சிலர் துள்ளி குதிப்பார்களே……….

  28. //பகுத்தறிவு வளர்ந்து, சொத்துரிமைகள் அழிந்து, முழுமையான சோஷலிச சமூதாயம் மலர்ந்தால், இந்த வாதங்களுக்கு அவசியமே ஏற்படாது! மலருமா?//
    மலரனும் அஜாதசத்ரு மலர்ந்தே ஆகும் அதற்க்காகத்தானே நாங்களும் இசுலாமை விமர்சிக்கிறோம் இசுலாமியர்கள் இசுலாமை விட்டு வெளியேற வேண்டும் எனென்றால் மாற்று மத நம்பிக்கையை விட இசுலாம் அதிகமான வெறியைத்தூண்டுகிறது இந்தியாவில் அது கொஞ்சம் மட்டுக்குள் இருப்பதால் குண்டு சில குண்டு வெடிப்புகளுடன் நின்று விடுகிறது அனால் ஈரானில் அது பல கொலைகளுக்கு காரணமாக இருக்கிறது ஏனென்றால் இசுலாம் மட்டுமே அரசியல் சார்ந்து இயங்குகிறது இசுலாமியர்களின் ஆசை முகமது நபி காட்டிய இசுலாமிய அரசினை அமைப்பதே அனால் எது முகமது காட்டிய சரியான வழி என்பதில் அவர்களுக்கே பல குழப்பங்கள் இருப்பதால் அவர்களுக்குள் அடித்துக்கொள்கிறார்கள் உலக ரவுடி அமெரிக்கா தலையிட்டு அந்த நாட்டில் தனது அடிமையின் அரசினை வஞ்சகமாக உருவாக்கி விடுகிறது முகமதிசம் பற்றி தெரியாத கம்மூனிஸ்டுகளும், தென்றல்,அஜாதசத்ரு போன்றவர்களும் முகம்திசத்தை விமர்சிப்பதை எதிற்க்கிறார்கள் அல்லது அதற்க்கு ஏகாதிபத்தியம் மட்டுமே காரணம் என்று கூறிக்கொண்டு முகமதிசத்த கண்டும் காணாமல் விட்டு விடுகிறார்கள் அல்லது முகமதியர்கள் செய்யும் எல்லா தவறுகளுக்கும் வக்காலத்து வாங்குகிறார்கள் ,இசுலாமியர்கள் மட்டும் அல்ல அனைத்து மதத்தவரும் தங்களின் மததை ஆய்வு செய்து உழைக்கும் மக்களுக்கு அதில் விடிவு உண்டா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அது வரை இந்த விவாதம் நீண்டு கொண்டுதான் இருக்கும்……..

    • //முகமதிசம் பற்றி தெரியாத கம்மூனிஸ்டுகளும், தென்றல்,அஜாதசத்ரு போன்றவர்களும் முகம்திசத்தை விமர்சிப்பதை எதிற்க்கிறார்கள் அல்லது அதற்க்கு ஏகாதிபத்தியம் மட்டுமே காரணம் என்று கூறிக்கொண்டு முகமதிசத்த கண்டும் காணாமல் விட்டு விடுகிறார்கள் அல்லது முகமதியர்கள் செய்யும் எல்லா தவறுகளுக்கும் வக்காலத்து வாங்குகிறார்கள் ,இசுலாமியர்கள் மட்டும் அல்ல அனைத்து மதத்தவரும் தங்களின் மததை ஆய்வு செய்து உழைக்கும் மக்களுக்கு அதில் விடிவு உண்டா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அது வரை இந்த விவாதம் நீண்டு கொண்டுதான் இருக்கும்……..\\
      ஜோசப்,
      \\முகமதிசம் பற்றி தெரியாத கம்மூனிஸ்டுகளும், தென்றல்,அஜாதசத்ரு போன்றவர்களும் முகம்திசத்தை விமர்சிப்பதை எதிற்க்கிறார்கள் அல்லது அதற்க்கு ஏகாதிபத்தியம் மட்டுமே காரணம் என்று கூறிக்கொண்டு முகமதிசத்த கண்டும் காணாமல் விட்டு விடுகிறார்கள் அல்லது முகமதியர்கள் செய்யும் எல்லா தவறுகளுக்கும் வக்காலத்து வாங்குகிறார்கள் ,இசுலாமியர்கள் மட்டும் அல்ல அனைத்து மதத்தவரும் தங்களின் மததை ஆய்வு செய்து உழைக்கும் மக்களுக்கு அதில் விடிவு உண்டா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அது வரை இந்த விவாதம் நீண்டு கொண்டுதான் இருக்கும்……..\\

      இஸ்லாமியர்களின் மீது இவ்வகையான வன்மத்தை காட்டும் நீர் எதன் அடிப்படையில் வெறி ஊட்டப்படுகிரீர் என்பதை பற்றி முதலில் விவாதிக்கத்தயாரா?

      இதுவரை நடந்த ஒரு விவாதத்திலாவது முறையான பதில் அளித்ததுண்டா, முதலில் ஓடாமல் பதில் அளித்ததுண்டா?

      அது என்ன முஹம்மடிசம் சையும் குற்றங்களை கண்டும் காணாமல் விட்டுகிரார்கள் . குற்றவாளிகளே இல்லாத ஒரு மனித சமுதாயத்தை காட்டும் பார்ப்போம். குற்றம் செய்வோரை குற்றவாளிகளாய் பார்ப்பதில் யாருக்கும் பிரச்சனை இல்லை ஆனால் அதற்க்கு சம்பந்தமே இல்லாமல் மதச்சாயம் பூசுவதை தான் தவறு என்கிறோம். அப்போ எந்த மதத்தையும் பின்பற்றாதவர்கள் சையும் குற்றத்திற்க்கு யாரை பலியாக்குவீர்கள். முதலில் அவரவர்கள் நாட்டில் நடப்பது அரசியல் சண்டை இதற்கும் இஸ்லாத்திற்க்கும் என்ன சம்பந்தம். ஒரு நாட்டின் சொந்த பிரச்சனையில் அமெரிக்க போன்ற நாடுகள் தலை இட்டு ஆதாயம் தேடிகிறதே இந்த பயங்கரவாதத்தை , தீவிரவாதத்தை என்ன பெயர் சொல்லி அழைப்பீர்கள் ? நல்ல வேலையாக நம் நாட்டில் என்னை வளம் இல்லை இல்லையேல் இன்று நாமும் இவர்களின் சூல்cசிக்கு இலக்காகி இருப்போம்.

      • பல விவாதத்தில் பலரிடம் அடி வாங்கி ஓடி போனவருங்க இந்த pj. பழைய விவாதத்தை எல்லாம் படித்து பாருங்க! பெண் பிள்ளைகள் விவாதித்தால் உடனே ஊட்டை கவனீங்க அக்கா என்று ஆண் ஆதிக்கத்துடன் பேசி தன் சுயம் என்ன என்று தன்னை அறியாமலே பேசுவாரு இந்த pj.

        • வாங்க சரவணன் இது என்ன புது அவதாரம் எப்பிடுயும் தசாவதாரம் எடுக்கனுமுனு முடிவு பண்ணிட்டீங்களா பகவானே என்ன ஆள விடுங்க பாஸ் கிகீகிகீ…..

  29. நண்பர் பி ஜெ!
    //இசுலாமியர்கள் மட்டும் அல்ல அனைத்து மதத்தவரும் தங்களின் மததை ஆய்வு செய்து உழைக்கும் மக்களுக்கு அதில் விடிவு உண்டா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் //

    உங்களின் இந்த கருத்தை நான் ஏற்கிறேன்!

    //அஜாதசத்ரு போன்றவர்களும் முகம்திசத்தை விமர்சிப்பதை எதிற்க்கிறார்கள் //

    யாரும் அவரவர், அவரவர் மதத்தை முற்றிலுமாய்ந்து விமரிசிக்க வேண்டும்! இந்து மதத்தை ஆய்ந்து அறியாத இந்தூவும், கிருத்துவ,முகமதிய வரலாறு அறியாத அஜாதசத்ருவும் முகமதிய மதத்தை ஆராய முனைவது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்! அதுமட்டுமல்ல, அது திசைதிருப்பும் முயற்சியாக கூட இருக்கலாம்!

  30. ///ஏகாதிபத்தியம் மட்டுமே காரணம் என்று கூறிக்கொண்டு முகமதிசத்த கண்டும் காணாமல் விட்டு விடுகிறார்கள் அல்லது முகமதியர்கள் செய்யும் எல்லா தவறுகளுக்கும் வக்காலத்து வாங்குகிறார்கள்///

    உண்மை! உண்மை!! முற்றிலும் உண்மை!!! இவர்கள் செய்யும் ஒவ்வொரு குற்றத்திற்கும் அமெரிக்காவை இழுக்கிறார்கள். அதுதான் ஏன் என்று தெரியவில்லை. ஒரே காரணம். அமெரிக்க ஒரு ஜனநாயக நாடு. இஸ்லாமிய நாடுகள் ஜனநாயகத்தை விரும்புவதில்லை. அதேபோல் கம்யூனிஸ்ட் களும் ஜனநாயகத்தை எதிர்க்கிறார்கள்.

    _________!!!

    • மு.நாட்ராயன்
      //உண்மை! உண்மை!! முற்றிலும் உண்மை!!! இவர்கள் செய்யும் ஒவ்வொரு குற்றத்திற்கும் அமெரிக்காவை இழுக்கிறார்கள். அதுதான் ஏன் என்று தெரியவில்லை. ஒரே காரணம். அமெரிக்க ஒரு ஜனநாயக நாடு. இஸ்லாமிய நாடுகள் ஜனநாயகத்தை விரும்புவதில்லை. அதேபோல் கம்யூனிஸ்ட் களும் ஜனநாயகத்தை எதிர்க்கிறார்கள். \\ உண்மை அற்ற விஷயத்தை இன்னும் எத்தனை முறை உண்மை உண்மை என்று பிதற்றினாலும் அவை வெறும் பிதற்றலே அன்றி உண்மை ஆகா…

      அமெரிக்காவை யாரும் இழுக்க வில்லை அமெரிக்க தான் வரின்சிக்கட்டிக்கொண்டு மற்ற நாடுகளின் விஷயத்தில் மூக்கை நுழைக்கிறது என்கிறோம். தன சொந்த நாட்டிலேயே கருப்பருக்கு ஒரு படித்தரம் வெள்ளையனுக்கு ஒரு படித்தரம் பார்க்கும் இவர்கள் தான் மற்றவர்களுக்கு சமாதானம் மற்றும் நாட்டாமை பன்னத்தகுதியானவர்களா?

      இவர்கள் நுழையாதவரை எந்த நாடும் அழிவை சந்திக்காது என்பது தான் நடைமுறையில் பார்ப்பது… இதனை இல்லை என்று மறுக்க இயலுமா உம்மால். சும்மாவே , அதாரம் இல்லாமல் அடுக்குவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படை செல்லும் முன் இவ்வளவு உயிரிழப்புக்கள் இல்லை . இராக்கிலும் இதே நிலை தான் என்பதை நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை என்றே நம்புகிறேன்.

  31. பொது சிவில் சட்டம் வேண்டாம் என்று கூறும் இவர்கள் பொது கிரிமினல் சட்டத்தை ஏற்றுக்கொல்கிரார்கலாம்!!!!! அதையும் அல்லாவின் பெயரால் “இஸ்லாமிய கிரிமினல் சட்டம்” என்று கூறி தனியாக வேண்டும் என்று கூறலாமே? இதற்க்கு புதிய விளக்கம் கொடுப்பார்கள்>>

  32. சொல்லி வச்ச மாதிரி ”கனவான்களுக்கு” இது பொது சிவில் சட்டம் பற்றிய விவாதம் என்பது ”இப்ப”த்தான் நினைவுக்கு வருது.இதைத்தானய்யா நான் முதல்ல இருந்தே சொல்லிட்டு இருக்கேன்.

    ஆனா இந்த அப்பாடக்கருங்க யாரும் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே இல்லை.முசுலிம் தனியார் சட்டத்தால் பிற சமுதாய மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை.அதனால் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு என்ன கேடு விளைந்து விடும் என்பதற்கு அவர்களிடம் பதிலில்லை.முசுலிம் சட்டங்கள் ஆணாதிக்க சட்டங்கள் என்று வாதத்தை திசை திருப்புகிறார்களே அன்றி ஒருமைப்பாட்டுக்கு என்ன கேடு என்று சொல்ல முடியவில்லை அவர்களால்.

    • திப்பு,

      //முசுலிம் சட்டங்கள் ஆணாதிக்க சட்டங்கள் என்று வாதத்தை திசை திருப்புகிறார்களே அன்றி//

      ஒருமைப்பாட்டுக்கு கேடு என்பதற்காக நான் பொது சட்டத்தைக் கோரவில்லை. முசுலிம் சட்டங்கள் ஆணாதிக்க சட்டங்கள் என்பதற்காகத்தான் அவற்றைக் காலாவதியாக்க வேண்டும் என்கிறேன். இதில் திசை திருப்பல் எங்கே இருக்கிறது.

      ஒருமைப்பாட்டுக்கு கேடு என்று சொன்னவர்கள் எப்படி சொல்லியிருப்பார்கள் என்று யூகித்து பார்த்து கீழே உள்ள பதிலை எழுதியிருக்கிறேன். நீங்கள் வலியுறுத்தியதால் இதற்குள் இறந்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. எனவே வினவு, தென்றல், சிவப்பு, அஜாதசத்ரு போன்ற நண்பர்கள் கோபித்துக் கொள்ள மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

      மதங்கள் மனிதர்களைப் பிரிக்கிறது. மதக்குழுக்கள் தனித்து இயங்க எத்தனிக்கின்றன. ஒரு மதச்சார்பற்ற நாட்டில் மக்கள் தங்கள் நம்பிக்கைகளை சாக்காக வைத்துக் கொண்டு பொதுமைக்குப் புறம்பான நடைமுறைகளை பின்பற்றுவது அனுமதிப்பது கூடாது. அமேரிக்கா ஐரோப்போ போன்ற பல நாடுகளில் இது தான் நிலவரம். ஆனால் இந்தியா போன்ற நாடுகளின் நிலை வேறு. இது காலப்போக்கில் பிரிவினைக்கே இட்டுச் செல்லும். Balkanization is the very very recent example. காஸ்மீரில் இந்த பிரிவினைப்போக்கு வேறூன்றி வளர்ந்திருக்கிறது. ஆம்பூர் வானியம்பாடி போன்ற பகுதிகளில் இந்த அடையாளங்கள் முளைவிட ஆரம்பித்திருக்கிறது.

      Let us see some theory. ஒருமைப்பாடு என்பது Territorial மட்டுமில்லை Legal and administrative ம் கூடத்தான். நாட்டில் அமைதி வேண்டி பெருங்குழு சிறுங்குழுவை தனக்குள் சேர்த்துக் கொள்ளவே விரும்பும். இதற்காக தன்னுள் ஒரளவுக்கு மாற்றங்களையும் அனுமதிக்கும். சிருங்குழுவும் அமைதி வேண்டி பெருங்குழுவுடன் படிப்படியாக இணைத்துக் கொள்ளும். இதற்காக தன்னுள் சில மாற்றங்களையும் அனுமதிக்கும். இந்த பரஸ்பர இணைவையே நான் விரும்புகிறேன்.

      இந்தியாவை எ.கா.வாகக் கொண்டு இதை விளக்க முயறிசிப்போம். இங்கே பெரும்பான்மையாக இருப்பது ‘இந்து’க்குழு. சிறுங்குழு முகமதியக்குழு. இந்த சிறுங்குழுவுக்கு பெருந்குழுவை சிறிது சிறிதாக கொறித்தோ எப்படியே தன்னகத்தே இணைத்துக் கொள்ளும் நாட்டம் தான் உள்ளது. பிரிவினை நாட்டமும் உள்ளது. இணைந்து கொள்ளும் நாட்டமில்லை. இந்நிலை பெருங்குழுவுக்கு அவமானகரமானது தான். தங்களால் முடிந்த வரை வழிகளைத் தேடுவார்கள். இணைப்புக்கு தடையாக உள்ள அம்சங்களை நீக்குவது ஒரு வழி. பொது சட்டம் அதில் ஒன்று. பெருங்குழுவின் சட்டத்திற்குப் புறம்பான ஒன்று (எ..கா. பலதாரம், முத்தலாக்) சிறுங்குழுவில் ஏற்புடையது எனும் போது சிறுந்குழுவிலிருந்து பெருங்குழுவிற்கு வருவது கசப்பாக இருக்கிறது. அதே சமயம் சிலருக்கு பெருங்குழுவிலிருந்து சிறுந்குழுவிற்குப் போவதற்கு இனிக்கிறது. இந்த அம்சம் குழுக்களின் படிப்படியான இணைப்புக்கு தடையாக உள்ளது. அதே சமயம் சிறுந்குழு Ghetto க்களை ஒருவாக்கி சிறிது சிறிதாக பிராந்திய அளவில் பெருங்குழுவாக மாறி பிரிவினைக்கு இட்டுச் செல்லும். நடந்துமிருக்கின்றன.

      • \\மதங்கள் மனிதர்களைப் பிரிக்கிறது. //

        ஆம்,பிரிவினைதான்.ஆனால் அந்த பிரிவினையை வைத்து பிரிவுகளை வைத்து பகைமையை தூண்டுவதுதான் கூடாது.

        மதங்களே இல்லாமல் போனாலும் மனித இனத்தில் பிரிவினைகள் இருக்கத்தான் செய்யும்.நிறம்,மொழி,இனம்,நாடு,கலாச்சாரம்,உணவு,உடை,நடையுடை பாவனைகள் என பல அம்சங்களின் அடிப்படையில் பிரிவினைகள் இருக்கத்தான் செய்யும்.பிரிவினை என்பதுதான் இயற்கையானது.ஒரே சீரான ஒருமைப்பாடு [uniformity]என்பது செயற்கையானது.கனவில் கூட சாதிக்க முடியாதது.

        கோடி கோடி மக்களை ஒப்பிட்டாலும் ஒரே மாதிரியான கைரேகைகள் இருப்பதில்லை,ஒரே இரண்டு நபர்கள் ஆயிரம் முறை சதுரங்கம் ஆடினாலும் இரண்டு ஆட்டங்கள் கூட ஒரே மாதிரி இருப்பதில்லை,அதை போலத்தான் உலக மக்கள் அனைவரும் ஒரே மதத்தை ஏற்பதில்லை.பொதுவுடமையோ ,முதலாளித்துவமோ,பின் நவீனத்துவமோ,இருத்தலியலோ [existentialism ]ஒரே சித்தாந்தத்தை ஏற்பதில்லை.. பிரிந்து பட்ட மக்கள் திரள்களை,குழுக்களை அரவணைப்பதன் மூலம் ஒருங்கிணைத்து செல்வதுதான் உண்மையான சனநாயகம்.அதற்கு அம்மக்களின் தனிச்சிறப்பான பழக்க வழக்கங்களை மதித்து அதன்படி நடந்து கொள்ள உரிமையளிப்பதுதான் உண்மையான சனநாயகம்.முதலாளித்துவ சனநாயகம் கூட தனது இருப்பையே கேள்விக்குறியாக்கும் பொதுவுடைமை கொள்கைகளை பரப்புரை செய்ய அனுமதிக்கிறது.அப்படி இருக்கும்போது பல்வேறு கலாச்சாரங்களை கடைபிடிக்கும் மக்களை ஒரே சட்டத்திற்குள் அடைப்பது பட்டியில் ஆடுகளை அடைப்பதற்கு ஒப்பாகும்.

        \\காஸ்மீரில் இந்த பிரிவினைப்போக்கு வேறூன்றி வளர்ந்திருக்கிறது//

        கசுமீர் விடுதலைப்போராட்டம் வரலாற்றுக் காரணங்களின் அடிப்படையிலானது.மதத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை.முசுலிம்கள் என்ற முறையில் போராடினால் பாகிசுதானோடு இணைய வேண்டும் என்றல்லவா போராடியிருப்பார்கள்.ஆனால் அவர்கள் முழக்கம் எல்லாம் ”ஆசாதி” அல்லவா.

        ULFA தனி நாடு கேட்டு போராடுவதற்கு காரணம் இந்து திருமண சட்டம்தான் காரணம் என சொல்வீரா.

        \\இந்நிலை பெருங்குழுவுக்கு அவமானகரமானது தான்//

        அப்படியே RSS வெறிக்கூச்சல்.இந்து மக்கள் தங்கள் உரிமையிலிருந்து கடுகளவும் முசுலிம்களுக்காக விட்டுத்தர வேண்டியதில்லை.விட்டுத்தரவும் இல்லை.முசுலிம் தனியார் சட்டம் முசுலிம்கள் தங்களுக்குள் நடத்திக்கொள்ளும் பொருட்கள் பற்றியது.இதில் இந்து மக்களுக்கு என்ன பாதிப்பு இருக்க முடியும்.

        \\எ..கா. பலதாரம், முத்தலாக்) சிறுங்குழுவில் ஏற்புடையது எனும் போது சிறுந்குழுவிலிருந்து பெருங்குழுவிற்கு வருவது கசப்பாக இருக்கிறது. அதே சமயம் சிலருக்கு பெருங்குழுவிலிருந்து சிறுந்குழுவிற்குப் போவதற்கு இனிக்கிறது//

        இந்து மக்களை இதை விட கேவலமாக அவமதிக்க முடியாது.கட்டுன மனைவியை விரட்டி விடுவதற்கும் இன்னொரு மனைவி கட்டுவதற்கும் தங்களின் மத நம்பிக்கை,உறவுகள்,அத்தனையும் துறந்து விட்டு இந்துக்கள் முசுலிம்களாக மாறுவார்கள் என்று சொன்னால் இதை விட கிறுக்குத்தனம் இந்த உலகில் இருக்குமா.

        \\ ஆம்பூர் வானியம்பாடி போன்ற பகுதிகளில் இந்த அடையாளங்கள் முளைவிட ஆரம்பித்திருக்கிறது.//
        \\அதே சமயம் சிறுந்குழு Ghetto க்களை ஒருவாக்கி சிறிது சிறிதாக பிராந்திய அளவில் பெருங்குழுவாக மாறி பிரிவினைக்கு இட்டுச் செல்லும். நடந்துமிருக்கின்றன.//

        கற்பனையில் ஆதாரங்கள் தேடி தேடி வெட்ட வெளியை பார்த்து பேசிக்கொண்டிருக்கும் நிலைமை வரப்போகிறது.சீக்கிரம் மன நல மருத்துவரை பார்க்கவும்.

        • //மக்களை ஒரே சட்டத்திற்குள் அடைப்பது பட்டியில் ஆடுகளை அடைப்பதற்கு ஒப்பாகும்.//
          இசுலாம்(மகமது விட்ட ரீல்)க்குள் 200 கோடி மக்கள அடைத்து வைக்கப்பட்டு உள்ல போது பொது சிவில் சட்டம் மூலம் 100 கோடி பேர அடைக்க முடியாத என்ன
          //ற்பனையில் ஆதாரங்கள் தேடி தேடி வெட்ட வெளியை பார்த்து பேசிக்கொண்டிருக்கும் நிலைமை வரப்போகிறது.சீக்கிரம் மன நல மருத்துவரை பார்க்கவும்.//
          வெட்ட வெளியில் பேசி முகமது சொன்ன குரானை நம்பும் நீங்களே நல்லா இருக்கும்போது உனிவர் புட்டி ஏன் மனநலம்ருத்துவர பாக்கனும் …..

        • திப்பு,

          // பிரிவுகளை வைத்து பகைமையை தூண்டுவதுதான் கூடாது.//

          சரியாகச் சொன்னீர்கள். பகைமையைத் தூண்டாமல் இருப்பதோடு நட்பை வேண்டுவதாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் குழுக்களுக்கிடையே அமைதி நிலவும். இணைவும் ஏற்படும். குழுக்கள் குழுக்களாகவே காலத்திற்கும் இருந்துவிடமுடியாதல்லவா. அது கூடாதல்லவா.

          // ஒரே மாதிரியான கைரேகைகள் இருப்பதில்லை//

          அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். அப்படியிருக்கும் போது மூடநம்பிக்கைகளின் அடிப்படையிலான குழுக்களுக்கான நியாயம் எங்கே இருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு மாற்றுப்பாலினத்தவரும் தனித்தனியாக அவரவர்களே தங்கள் நெறிகளை வகுத்துக் கொள்ளட்டுமே.

          // அம்மக்களின் தனிச்சிறப்பான பழக்க வழக்கங்களை மதித்து அதன்படி நடந்து கொள்ள உரிமையளிப்பதுதான் உண்மையான சனநாயகம்//

          அந்த தனிச்சிறப்பான பழக்க வழக்கங்கள் உன்மையான சனநாயகமா என்பதைப் பார்த்துத்தான் அங்கீகரிக்க வேண்டும்.

          // முதலாளித்துவ சனநாயகம் கூட தனது இருப்பையே கேள்விக்குறியாக்கும் பொதுவுடைமை கொள்கைகளை பரப்புரை செய்ய அனுமதிக்கிறது//

          பொதுவுடமை கொள்கைகளின் இருப்புக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. பொது நலத்தில் அக்கறையுள்ள மக்கள் இருக்கும் வரை அது அமலில் இருக்கும். முதலாளித்துவ சனநாயகம் தனது ஆதிக்கத்தை பகுதி அளவு நிலை நிறுத்தியிருந்தாலும் அது பொதுவுடமை சனநாயகத்துடன் போட்டியில் தான் வாழ்கிறது.

          // பல்வேறு கலாச்சாரங்களை கடைபிடிக்கும் மக்களை ஒரே சட்டத்திற்குள் அடைப்பது பட்டியில் ஆடுகளை அடைப்பதற்கு ஒப்பாகும்.//

          வேறுபட்ட கலாச்சாரங்கள் என்று ஒன்றுமில்லை. மனிதனின் நன்னெறிகள் பொதுவானவைதான். 2-3 பட்டிகள் தான் முடியும் எனும் போது ஒரே பட்டி எவ்வாறு தவறாகும்.

          // அவர்கள் முழக்கம் எல்லாம் ”ஆசாதி” அல்லவா//

          காஸ்மீர் பாகிஸ்தானுடன் இணைய விரும்பினால் தான் முகமதியம் காரணமாக இருக்க முடியும் என்பது தக்கியா. அரேபிய தீபகற்பம் கூட பல நாடுகளாக பிரிந்துதான் கிடக்கிறது. அவர்கள் விரும்பும் ஆசாதி காபிர் கட்டுப்பாட்டிலிருந்து பிரிந்து போகும் ஆசாதி. அதைத்தான் நானும் சொல்கிறேன்.

          // அப்படியே RSS வெறிக்கூச்சல்//

          RSS காலணியைப் போட்டுக்கொண்டு பேசுகிறேன் என்று சொல்லிவிட்டுத்தான் பேசுகிறேன்.
          அரேபியா போன்ற நாடுகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் சையது இப்ரஹிம் சொன்னதைப் போல ஒரு 10க்கு10 அளவிலான ‘மூத்திர சந்து’ அளவுக்காகவாவது ஒரு கோயிலைக் கட்டிக் கொள்ளமுடிகிறதா. அங்கே நெற்றியில் பொட்டை கூட வைத்துக்கொள்ளக்கூடாது என்று கேள்விபட்டேன். அப்படி இருக்கும் போது இங்கிருக்கும் நிலை RSS க்கு அவமானகரமானது தான்.

          // *** அத்தனையும் துறந்து விட்டு இந்துக்கள் முசுலிம்களாக மாறுவார்கள் என்று சொன்னால்***//

          இந்துக்களோ முசுலிம்களோ வக்கிரபுத்தியுள்ள ஆண்கள் ஒன்று தான். இப்போதைக்கு விகிதம் இந்துக்களுக்கு சார்பாக இருக்கிறது. சிலபத்தாண்டுகளில் இந்த வித்தியாசம் குறையும். அப்போது நான் கொடுத்த Theory Practical கட்டத்திற்குப் போகும். அப்படித்தான் இந்தோனேசியா மலேசியா போன்றவை முகமதிய பெரும்பான்மையாக மாறியிருக்கின்றன. மனித நாகரிகத்தின் எதிர்காலம் பெண்களின் கைகளில் தான் இருக்கின்றன.

          // கற்பனையில் ஆதாரங்கள்//

          ஆதாரங்கள் என் கண்முன்னே. Balkanization. Northern Nigeria. A part of Mali, Southern Thailand, Some islands in Philippines & Sharia zones in Europe. Mopla rebellion is a little old example. We have so many examples in the last 14 centuries.

        • திப்பு,

          உண்மையான கிறுக்கர்களுக்குத்தான் மனநிலை மருத்துவர் கூட உதவமுடியும். ஆனால் தாங்கள் பேசிக்கொண்டிருப்பது கிறுக்கனை போன்று நடித்தே ( தெளிவாக நாம் சொல்லும் விஷயங்களில் உள்ள உண்மைகள் அறிந்தும் அறியாதது போலவும் , புரியாதது போலவும் ) தம்முடைய காரியத்தை சாதித்துக்குள்ள துடிக்கும் நடிகர்களிடம். எனவே , இவர்களுக்கு சிகிச்சை செய்ய நினைக்கும் மனநல மருத்துவரானவர் தன மனநிலையை இழந்து வேறொரு மனநல மருத்துவரிடம் செல்லவே நேரிடும்.

  33. //முசுலிம் தனியார் சட்டத்தால் பிற சமுதாய மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை.அதனால் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு என்ன கேடு விளைந்து விடும் என்பதற்கு அவர்களிடம் பதிலில்லை.முசுலிம் சட்டங்கள் ஆணாதிக்க சட்டங்கள் என்று வாதத்தை திசை திருப்புகிறார்களே அன்றி ஒருமைப்பாட்டுக்கு என்ன கேடு என்று சொல்ல முடியவில்லை//

    அய்யா திப்பு ஒரிஜினல் முஸ்லீம் நீங்கதான் அல்லா மாறியே மிகவும் ஞானம் உடையவராக இருக்கிறீர்கள் பொது சிவில் சட்டத்தை ஏற்ப்பதில் உங்களுக்கு என்ன கஸ்டம் உங்களின் அல்லாவின் அடிமையாக்கும் இசுலாம்தானே அவனவன் குரூப் குரூப் பா தனது மத சட்டப்படிநட்ந்துக்குவேன்னு உங்களமாறி அடம் புடிச்சா என்ன ஆகுறது உங்க மதத்து படியே சட்டம் நடந்தா அதுல குற்ற்ம் இல்லனா ஒரு பொம்பல கோர்ட் வரிக்கும் போகலனா யாரு உங்கள கேக்க போறாக இசுலாமிய சட்டங்கள் பெணடிமைத்தனம் மட்டும் அல்ல சொத்து பிரிப்பதிலும் முட்டாள் தனமான கணக்கை குரான் சொல்லுகிறது அதுனாலதான் பொது சிவில் சட்டம் வேண்டும் என்கிறோம்…….

    • பின் குறிப்பு என்டா வெளிக்குறுக்கும்போது வெள்ளரிக்கா திங்கிற போயா உன் வேலய பாத்துக்கிட்டு அப்பிடித்தான் திம்பேன் தொட்டுகிட்டு கூட தின்பேன் நீ ஏன்யா கேக்குற கிகீகிகீ சும்மா ஜோக்கு சிரிங்க பாஸ் முறைக்காதிங்க…….

      • போலியான மத சார்பின்மை உள்ள இந்தியாவில், அதுவும் மோடியின் ஹிந்து பாசிச ஆட்சியில், பொது சிவில் சட்டம் வேண்டும் என்று கூவும் p.ஜோசப் மற்றும் உணிவேர்…. இவர்களின் அறிவு அவர்களின் பின்னுடங்க்களை படிப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கின்றது.

  34. //போலியான மத சார்பின்மை உள்ள இந்தியாவில், அதுவும் மோடியின் ஹிந்து பாசிச ஆட்சியில், பொது சிவில் சட்டம் வேண்டும் என்று கூவும் ப்.ஜோசப் மற்றும் உணிவேர்…. இவர்களின் அறிவு அவர்களின் பின்னுடங்க்களை படிப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கின்றது.//
    பொது சிவில் சட்டம் வேனுமுனுதான் சொன்னோம் அத மோடி கொன்டு வந்தா சரியாத்தான் இருக்குமுனு சொல்லல சரவணன் ……

    • இன்றைய பிஜேபி,பாசிச அரசியல் சூழலில் பொது சிவில் சட்டம் வேண்டுமா ? வேண்டும் என்று கேட்பது குரங்கு அப்பத்தை பங்கிட கதைதான் ஆகும் என்பது ஒலக அறிவாளிகள் p.ஜோசப் மற்றும் உணிவேர்… ஆகியவர்கலுக்கு சொல்லி தான் தெரிய வேண்டுமா ? அல்லது காங்கிரஸ் போன்ற தேச துரோக ஆட்சியாளர்களின் gov மூலமாகவா பொது சிவில் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று சொல்ல வருகின்றிர்களா ? யார் இதனை செய்ய வேண்டும் என்ற தெளிவு கூட இன்றி வினவில் கூவுவது rss அடிவருடி தனம் இன்றி வேறு என்னவென்று தெளிவாக்க முடியுமா p.ஜோசப் மற்றும் உணிவேர்… ஆகிய அறிவு சிவிகளா ?

      திரு அம்பேத்கார் நிறைவேற்றிய சிவில் சட்டம் தவறு எனில் அதில் திருத்தங்களை தான் கொண்டு வரவேண்டுமே அன்றி ,இன்றைய பாசிச அரசியல் சூழலில் அதனை முழுமையாக மாற்றி பொது சிவில் சட்டம் கொண்டு வர துடிக்கும் p.ஜோசப் மற்றும் உணிவேர்… ஆகியவர்களின் பின்னணி என்னவோ ?

      மேலும் திரு சரவணனின் வினவு பின்னுட்டங்கள் ,அவரின் கருத்துகளுடன் பிறருடன் நானும் உடன் படுபவன் என்ற முறையில் கூறுவது என்ன என்ன்றால் அவரின் புகழில் நான் குளிர் காய விரும்பவில்லை p.ஜோசெப்! மேலும் கக்குசில் இருந்து மூல நோய் காரணமாக கிகீகிகீ என்று
      கத்துவதை விட்டு விட்டு நல்ல மருத்துவரை பார்களாமே!

  35. திப்பு பாய் ,zahirbukhar பாய் நீங்க கொஞ்சம் ஒதுகிகொள்ளுங்கள்! இப்படி இந்திய அரசியலில் நேரம்,காலம் தெரியாமல்,பாசிச மோடியின் ஆட்சியில் பொது சிவில் சட்டம் வேண்டும் என்று ஊளையிடும் இவர்களை நான் பார்த்து கொள்கிறேன். எனக்கு தான் சரவணன் என்று புது பெயர் கொடுத்து உள்ளாரே p.ஜோசப் ! எனவே அவரின் சிசியன் என்பதை நிருபிக்க வேண்டாமா நான் ? மேலும் கிருஸ்துவ சிறுபான்மையினரா தம்மை காட்டிகொள்ளும் இவர்கள் இருவரின் [p.ஜோசப், உணிவேர் ]பின்னணி என்ன என்பதை இரண்டு நாள் நான் இடையுறு இன்றி விவாதித்தாலே காண்டு பிடித்து விடுவேன்.

    [1]மேற்கு ஆசியாவில் நடக்கும் அமெரிக்க ,uk ,பிரிஞ்ச கிருஸ்துவ அடக்கு முறைக்கு இவர்கள் என்ன மயிர் பிளக்கும் விளக்கம் வேத்து உள்ளார்கள் என்ரும் கேட்டு பார்போம்.!

    [2]கிருஸ்துவ காலனிய ஆதிகத்தில் இருந்து விடுபட்ட மேற்கு ஆசிய நாடுகள் மீண்டும் அடிமைகளாக மாற்ற பட்டதன் [லிபியா ,இராக் ]பின்னணியில் அமெரிக்க சிலுவை ராசாக்களின் பங்கு என்ன என்பதையும் கேட்டு பாப்போம் !

    [3]ஒலகம் முழுக்க பஞ்சாயத்து செய்யும்,பெரியண்ணன் வேலை செய்யும்,காட்டுமிராண்டி வேலை செய்யும் USA ,UK ,பிரான்ஸ் அதன் எழவு எடுத்த பெரும்பான்மை மக்கள் எல்லாம் யாரு ? கிருஸ்தவர்கள் தானே என்று கேட்டு பாப்போம் !

    • தமிழ்-தாகம்,

      ஜோசப் மற்றும் உனிவெர்புட்ட்ய் இவர்கள் இருவரும் கிருத்துவர்கள் எனும் நோக்கில் நீங்கள் அனுகிவீர்கள் ஆனால் எங்களுக்கும் கிருத்துவத்துக்கும் சம்பந்தம் இல்லை நாங்கள் கிறுத்துவர்களே அல்ல என்று கட்பூரம் ஏற்றியோ அல்லது உருண்டு பிராண்டோ சத்தியம் செய்வார்கள். மேலும் , இவர்கள் நாத்திக வேடமிட்ட மதவெறி கூட்டம் என்பது இவர்களின் கருத்து படிக்கும் எவரும் எளிதில் புரியவே செய்வார்கள் என்பதில் ஐயம் வேண்டாம்.

      மேலும் , இவர்கள் மனிதர்கள் தானே தெரியாமல் தவறு செய்திருப்பார்கள் நாம் உண்மையை சொல்லி அவர்களிடம் உள்ள காழ்ப்புணர்வை அகற்றி விடலாம் என்ற நோக்கில் தாங்கள் அணுகினாலும், இவர்கள தம்மை ஒரு மனிதப்புனிதர்கலாகவோ அல்லது மனிதசமுதாயத்திட்க்கு சற்றும் சம்பந்தமில்லாத வேற்று கிரகவாசிகளை போல் தம்மை காட்டிக்கொண்டு கதை அளப்பார்கள்.

      \\எனக்கு தான் சரவணன் என்று புது பெயர் கொடுத்து உள்ளாரே p.ஜோசப் \\ தோழரே , இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல , தன்னை ஒரு பெரிய தீர்க்கதரிசியாக எண்ணிக்கொள்ளும் ஜோசப், தமிழை ஏற்கனவே நான் என்று எண்ணி பலமுறை என்பெயரை கொண்டு அழைத்து நன்றாக வான்கிக்கட்டிக்கொண்டவர்தான் இந்த கிறுக்கு கிருத்துவர்.

    • தமிழ்-தாகம்,

      //உணிவேர் ]பின்னணி//

      கிருஸ்துவ சிறுபான்மையினராக என்னை எங்கும் காட்டிகொள்ளவில்லை. நான் ‘இந்து’க்குடும்பத்தில் பிறந்தவன் தான். இதை முன்னரே வெளிப்படுத்தியிருக்கிறேன். நான் நாத்திகவாதி என்ற சிறுபான்மையினராகத்தான் உணர்கிறேன். அப்படித்தான் காட்டிக் கொள்கிறேன். உங்கள் கேள்விகள் என்னை கிருத்தவராக எண்ணி எழுதப்பட்டிருப்பதால் அவற்றிற்கு நான் பதிலளிக்க வேண்டியதில்லை.

      இருப்பினும் அவற்றிற்கு எனக்குத் தெரிந்த பதிலளிக்க முடியும்.
      1. ஐரோப்பிய கிருத்தவர்கள் முகமதியர்களை தாக்கத் தொடங்குவதற்கு முன்னரே முகமதியர்கள் கிருத்தவர்களைத் தாக்க ஆரம்பித்து விட்டார்கள். எகிப்தும் சிரயாவும் கிருத்தவமாகத்தான் இருந்தது. துருக்கியை மையமாகக் கொண்டு கான்ஸ்டான்டைன் பேரரசு முகமதியர்களின் கட்டுப்பாட்டிற்குள் போகுமுன் கிருத்தவமாகத்தான் இருந்தது. ஸ்பெய்ன்னின் நிலையும் அதேதான். முகமதியர்கள் வியன்னா வரையும் மத்திய ப்ரான்ஸ் வரையும் சென்று தாக்கியிருக்கிறார்கள். பிறகு தான் கிருத்தவர்கள் முழித்துக் கொண்டார்கள். திருப்பி அடித்தார்கள். துரத்தினார்கள். முழுமையாக இல்லை. பாக்கியிருக்கிறது. ஏனென்றால் கிருத்தவர்கள் கண்ணுக்குக் கண் என்று கிளம்பவில்லை. தற்போதைக்கு அவர்களின் நிலை சற்று உயர்ந்துதான் இருக்கிறது. நல்லவேளை.

      2. லிபியா மற்றும் இராக் மீண்டும் முகமதியக்குழுக்களின் கட்டுப்பாட்டிற்கு போய்விட்டன. இதைத் தான் அடிமைகளாக மாற்ற பட்டன என்கிறீர்களா. இதில் அமெரிக்க சிலுவை ராசாக்களின் பங்கு என்ன என்று எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளவும்.

      3. அங்கே பெரும்பான்மை மக்கள் கிருஸ்தவர்கள் அல்ல. மதமற்றவர்கள் அல்லது பெயரளவிற்கு கிருஸ்தவர்கள்.

      • உநிவேர்புட்டிக்கு என் விளக்கம் I

        ஹிந்து குடும்பத்தில் பிறந்த நாத்திக பெரியார் முதலில் தன் மதத்தின் அழுக்கை நீக்க தான் போராடினார் என்ற சிறு உண்மை ஆத்திகனான எனக்கு கூடதெரிந்த உண்மை ,உமக்கு தெரியாத போது நீர் எப்படி ஐயா நாத்திகன் ? ! அது போல நீர் உன் மத அழுக்கை துடைக்க முயலாமல் அடுத்தவன் பின்புரத்தை கழுவ முயல்வது ஏன் ? உன் பின்னுட்டங்கள் எல்லாம் குறிப்பாக இஸ்லாமிய மக்களுக்கு எதிராகவே வருகின்றனவே ! அது எப்படி ?

        கீழ் உள்ள கட்டுரைகளை நீர் படித்து விமர்சனம் செய்யாதது ஏன் ?

        எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையக் கொலை – உண்மை அறியும் குழு அறிக்கை
        https://www.vinavu.com/2014/10/22/sp-patnam-police-murder-hrpc-fact-finding-report/

        தீபாவளி தேவையா ? தந்தை பெரியார்
        https://www.vinavu.com/2014/10/21/periyar-on-diwali/

        ஏன் இதற்கு உம் rss முகமூடி தடுக்கின்றதோ ?

      • உநிவேர்புட்டிக்கு என் விளக்கம் II

        சிலுவை போர்களில் நல்லவன் கேட்டவன் என்ற பாகுபாடு பார்க்கும் உமது வரலாற்று சீந்தனை எம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றது ! வரலாற்று இயக்கவியல் பொருள் முதல் வாத கோட்பாடு படி அறிவை செலுத்தி சிலுவை போர்களை பாருமையா !

        அமெரிக்காவின்.பிரான்ஸ் தூன்டுத்ளில் நைஜீர் நாட்டின் கூலி படைகளும் ,இஸ்லாமிய மத அடிப்படை வாதிகளும் கை கோர்த்த நிகழ்வு தான் லிபிய அடிமை தனம் என்பது கூட உம,உமக்கு தெரியாதா ? கம்யூனிஸ்ட் இணைய தளம் மட்டும் அல்லாமால் , முதலாளித்துவ சார்பு பத்திரிக்கை கூட இதனை எளிமையாக விளக்கியுள்ளனவே ;நீர் படிப்பது இல்லையா ?

        ஈராக்கில் நிகழும் சண்டைக்கு அடிமை ISIS அதன் எஜமான் அமெரிக்கா தான் காரணம் என்பது; உலகம் அறீந்த உண்மை; உமக்கு மட்டும் தெரியாதது ஏன் ?

  36. //இந்திய அரசியலில் நேரம்,காலம் தெரியாமல்,பாசிச மோடியின் ஆட்சியில் பொது சிவில் சட்டம் வேண்டும் என்று ஊளையிடும் இவர்களை நான் பார்த்து கொள்கிறேன்//
    மிஸ்டர் தமிழ் தாகம் என்ற சரவணனின் சீடரே என்னை ஒருகை பார்க்க போகிறேன் என்று சொல்லுகிறீர் என்ன பார்க்க போகிறீர் நான் எப்பிடி கக்கூசில் மூலம் வந்து முக்குகிறேன் என்பதையா சரி பாரும் உன் இஸ்டம் ,நாங்கள் எல்லாம் கிறிஸ்தவ வெறியர்கள் என்று சொல்லி ஏன் இசுலாமிய மூடத்தனத்திற்க்கு செம்பு தூக்குகிறீர் உஙளுக்கு திப்புவும் ஜாகிரும் மட்டும்தான் நடுனிலைமை வாதியாக தெரிவதால் எங்களை எல்லாம் மத வெறியராக காண்கிறீர் எனென்றாரல் ஒருவரில் எழுத்தை வைத்தே அவருக்கு மூல நோய் இருக்கிறது என்பதை அரியும் ஞானி அல்லவா நீர் ,நான் பொது சிவில் சட்டம் வேண்டும் என்றுதான் கூறினேன் அது இந்து மத வெறியர் மோடி கொண்டு வந்தால் அதில் இந்து மதத்திற்க்கு ஆதரவாக எதாகிலும் சரத்து இருந்தால் அதை கண்டிப்பாக எதிர்ப்பேன் அதை விடுத்து என் மத சட்டம்தான் சிறந்தது அதை தவிர்த்து பொதுவான சட்டமா இதை ஏற்கா மாட்டேன் அது நான் கொண்ட கடவுளின் புத்தகமான துருமறைக்கு எதிரானது என்று சொல்ல மாட்டேன் நான் மட்டும் அல்ல பெரும்பான்மை கிறிஸ்தவ இந்து மததை சார்ந்தவர்களும் சொல்ல மாட்டார்கள் அனால் முட்டாள் மூமீன்கள் சொல்லுவார்கள் சொல்லுவது மட்டும் இல்லாமல் உங்கலைப்போன்ற அரைகுறை தற்க்குறிகளையும் தூண்டி விட்டு அதில் குளிர் காய நினைப்பார்கள் சரி விடுங்க எனக்கு ஐரொப்பிய அமெரிக்க நாடுகளில் இருந்து பணம் வருகிறது அதை நீங்கள் இரண்டு நாள்கள் என்னுடன் விவாதம் செய்து கண்டு பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவே வாரும் எனது வீட்டுக்கு உங்களுக்கும் பாதி பனத்த தருகிறேன் வைத்துக்கொண்டு சந்தோசமாக வாழ்ந்து கொள்ளும் எனது வீட்டு முகவரி தருகிறேண் உமது தனிப்பட்ட இமயில் ஐடி தாரும் அனிப்பி வைக்கிறேன்…..

    • Mr.P.J ,

      ரஜனி விடயத்தில் சம்மந்தம் இல்லாம உளரிகொட்டியது …….

      “/ஏசு முதல் ரஜினி வரை எல்லொருக்கும் ஆசி வழங்கிய இமயத்து பாபாவின் இயற்பெயர் என்ன – கஞ்சாச் செடி!// இது இசுலாமியர்களுக்கு மட்டும் ஆதரவான அமைப்பு என்பதற்க்கு இந்த ஒற்றை வரி சாட்சி சானாதான இந்துக்கள் கூட ஏசுவை திராட்சை மது அருந்தியவர் என்று குறிப்பிட்டு பேசி இருக்கிறார்கள் ஆனால் அதையும் மீறி ஏசுவை கஞ்சா அடிக்கும் ஒரு கிறுக்கனைப்போல சித்தரிப்பதை மத உணர்வு உள்ளவர்கள் மட்டும் அல்ல கம்மூனிசத்தை உருவாக்கிய மார்க்ஸ் கூட சிந்தித்து இருக்கமாட்டார் என்பது அவரது சில கருத்துகளை படித்த எந்தன் நிலைப்பாடு வாழ்க உமது கமூனிச சிந்தனை”

      என்று துவங்கும் உங்கள் புகழ் ,

      “பின் குறிப்பு என்டா வெளிக்குறுக்கும்போது வெள்ளரிக்கா திங்கிற போயா உன் வேலய பாத்துக்கிட்டு அப்பிடித்தான் திம்பேன் தொட்டுகிட்டு கூட தின்பேன் நீ ஏன்யா கேக்குற கிகீகிகீ சும்மா ஜோக்கு சிரிங்க பாஸ் முறைக்காதிங்க”……. என்று கூறி…….

      மூல நோயில் முடிவடைந்தமைக்காக பரிதாபப்டுகின்றேன்.

      மேலும் ஐரொப்பிய அமெரிக்க நாடுகளில் இருந்து பணம் வருகிறது என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தமைக்கும் நன்றி. அதில் பங்கை உம்முடன் சேர்ந்து மதவெறியை கிள்ப்பூம் உணிவேர்…. அனுப்பவும்

      • நான் என்ன உளரி கொட்டியுள்ளேன் என்பதை விளக்காமல் வெறும் தனி மனித தாக்குதலில் இரங்கும் உம்மை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது நீங்களும் வெளிக்கிறுக்கும் போது வெள்ளரிக்கா தின்பவர்தான் போல இருக்கிறது….

  37. –>சம்மந்தம் இல்லாம வெல்லெரிக்காவை வெளிக்கி இருக்கும் போது தின்னுவது ,

    –>இது இசுலாமியர்களுக்கு மட்டும் ஆதரவான அமைப்பு என்பதற்க்கு இந்த ஒற்றை வரி சாட்சி சானாதான இந்துக்கள் கூட ஏசுவை திராட்சை மது அருந்தியவர் என்று குறிப்பிட்டு பேசி இருக்கிறார்கள் ஆனால் அதையும் மீறி ஏசுவை கஞ்சா அடிக்கும் ஒரு கிறுக்கனைப்போல சித்தரிப்பதை மத உணர்வு உள்ளவர்கள் மட்டும் அல்ல கம்மூனிசத்தை உருவாக்கிய மார்க்ஸ் கூட சிந்தித்து இருக்கமாட்டார் என்பது அவரது சில கருத்துகளை படித்த எந்தன் நிலைப்பாடு வாழ்க உமது கமூனிச சிந்தனை”

    என்று எல்லாம் திப்பு இடமும் ,வினவு இடமும் உளரி கொட்டியுள்ளது யாரு ? Mr.PJ ?

    • தமிழ் தாகம் என்ற சரவணனின் சீடரே ரெம்பத்தான் துள்ளுரிங்க _______ இங்கு நடக்கும் விவாதம் பொது சிவில் சட்டம் பற்றியது இது வேண்டுமா வேண்டாமா என்று வாசகர்களைன கேட்கிறது வினவு இது எங்களால முடியாது எங்களுக்கு அல்லானு ஒரு கடவுள் முகமது என்பவர் மூலம் சட்டங்கள் குடுத்து இருக்கிறார் அதனால் அதனைத்தான் பின்பற்றுவோம் என்று சொல்லுகிறார்கள் திப்புவும் ஜாகிரும் அது போலத்தானே இந்துக்களும் நாங்க இந்து மத சட்டத்தைதான் பயன்படுத்துவோம் என்று சொல்லுவதில் என்னய்யா தவறு இப்படி கிறிஸ்தவ இசுலாமிய இந்துனு சொல்லிக்கிட்டு ஒவ்வொருத்தனு சட்டத்த கூறு போடாதிக பொதுவான சிவில் சட்டம் கொண்டு வாருங்கள் அதுதான் மதச்சார்பற்ற நாட்டிற்க்கு அழகு முன்னேறிய கிறிஸ்தவ நாடுகளே பொது சிவில் சட்டத்தை அமுல் படுத்தும் போது மத சார்பற்ற இந்தியா ஏன் அமுல்படுத்த கூடாது ,ஒரு வேளை அது இந்து மதத்துக்கு மட்டும் ஆதரவாக இருக்கும் மோடி கொண்டு வந்தால், இந்து மததிற்க்கு ஆதரவான் சர்த்துகளை சுட்டிக்காட்டி எதிற்ப்பு செய்யுங்கள் அதை விடுத்து இசுலாமியன் இசுலாமுய சட்டப்படிதான் வாழ்வான் என்று இசுலாமியர்களுக்கு செம்பு தூக்கினால் இந்துக்களும் இந்து மதத்தின் படிதான் வாழ்வோம் என்று சொல்லுவதில் என்னயா தவறு அதனால் தமில் தாகம் ____________ நியாத்த பேசுங்க….

      • Mr PJ வுக்கு என் விளக்கம் I

        [1]மோடிகிட்ட இந்த வேலையை கொடுத்து வேலியில் போகும் ஓணானை மடியில் கட்டிகிட்டு குத்துதே குடையுதே என்று கூற நான் ஒன்றும் Mr P J கிடையாது. மோடி என்ற சாத்தான் வேதம் ஒதுமாம், அதை இவரு[PJ]சரி செய்வாராம். கேட்பவனர் கேனையர் என்றால் மட்டுமே மோடி அரசிடம் இருந்து சரியான சிவில் சட்டம் வரும் என்பதை நம்புவாரு !
        //ஒரு வேளை அது இந்து மதத்துக்கு மட்டும் ஆதரவாக இருக்கும் மோடி கொண்டு வந்தால், இந்து மததிற்க்கு ஆதரவான் சர்த்துகளை சுட்டிக்காட்டி எதிற்ப்பு செய்யுங்கள்//

        [2]தனது இந்து ராஷ்டிரக் கனவை நிறைவேற்றிக் கொள்வதற்கு அயோத்தி பிரச்சினைக்கு இணையான முக்கியத்துவம் கொண்ட பிரச்சினையாக “பொது சிவில் சட்டம்” குறித்த பிரச்சினையை பாரதீய ஜனதா எழுப்புகிறது. வினவு அல்ல !
        //தமிழ் தாகம் என்ற சரவணனின் சீடரே ரெம்பத்தான் துள்ளுரிங்க _______ இங்கு நடக்கும் விவாதம் பொது சிவில் சட்டம் பற்றியது இது வேண்டுமா வேண்டாமா என்று வாசகர்களைன கேட்கிறது வினவு//

        [3]மத சார்பற்ற நாடு என்பதற்கு உள்ள வரையரையை ஒழுங்கா படிக்கணும் ! அதை விட்டு விட்டு மோடிக்கு சொம்பு தூக்கி வேலை செய்யணும் என்ற கட்டாயம் pj வுக்கு இருந்தால் ,அதை எதிர்க்க வேண்டிய கட்டாயம் மத சார்பற்ற ஹிந்துவாக எமக்கும் இருக்கு ! திரு அம்பேத்கார் இயறிய சிவில் சட்டத்தில் தவறு என்ன என்பதை இது வரை ஹிந்து மதவாத பாசிச ஓநாய்கலோ அல்லது அதன் அடிவருடிகளே அறிவு பூர்வமாக கூற துப்பு இன்றி ஊளையிடுவது தான் இந்த பினுட்டத்தில் நடக்கிறது ! அனைத்து ஹிந்துக்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் ,அனைத்து இஸ்லாமியருக்கும் பொதுவான சிவில் சட்டம், அனைத்து கிருஸ்துவருக்கும் பொதுவான சிவில் சட்டம் என்று இருப்பதில் என்ன தவறு உள்ளது ?
        //அதை விடுத்து இசுலாமியன் இசுலாமுய சட்டப்படிதான் வாழ்வான் என்று இசுலாமியர்களுக்கு செம்பு தூக்கினால் இந்துக்களும் இந்து மதத்தின் படிதான் வாழ்வோம் என்று சொல்லுவதில் என்னயா தவறு அதனால் தமில் தாகம் ____________ நியாத்த பேசுங்க….//

      • \\ரெம்பத்தான் துள்ளுரிங்க//

        துள்ளுவது நீர்தான் ஜோசப்.கொஞ்சம் கூட நாகரீகம் இல்லாமல் வெள்ளரிக்காய் உவமை கூறும் நீர்தான் உண்மையில் அப்படி திங்குரீர்.

        இந்து பள்ளர் சாதியிலிருந்து கிருத்துவராக மாறிய நீர் மாட்டுக்கறி உண்பதில்லை ஏனென்றால் அது ”தாழ்ந்த சாதி” க்காரர்களின் உணவு என்று காரணம் சொல்கிறீர்.

        இதன் பொருள் சாதிகள் இல்லை என்ற கொள்கையுடைய கிருத்துவத்திற்கு மாறினாலும் பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வருணாசிரம தர்மத்தை ,பார்ப்பனியத்தை நீர் இன்னும் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறீர் என்பதுதானே.

        ஆக கிருத்துவம் என்ற வெள்ளரிக்காயை பார்ப்பனியம் என்ற மலத்தில் முக்கி எடுத்து திங்கும் நீர் மற்றவர்களை வக்கணை பேசுகிறீர்.

        நாங்கள் முசுலிம் தனியார் சட்டங்களின் நல்ல அம்சங்களை எடுத்து சொல்கிறோம்.சொத்துரிமையில் ஆணாதிக்கம் என்ற குற்றச்சாட்டிற்கு ஆண்களின் கூடுதல் உழைப்பை சுட்டிக்காட்டுகிறோம்.பிற சமுதாய மக்களுக்கு அதனால் பாதிப்பு இல்லை என்கிறோம்.உண்மையான சனநாயக சக்திகள் ஆட்சிக்கு வந்து பொது சட்டம் இயற்ற முற்பட்டால் இவை போன்ற விவாதங்கள் அவர்களுக்கு உதவியாகவே இருக்கும்.நல்ல அம்சங்கள் எங்கிருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம்தானே.

        பொதுவாக பிற மதங்களை குறை சொல்லி எழுதும் பழக்கம் எனக்கு இல்லை என்றாலும் இந்த இடத்தில் நீர் திங்கும் வெள்ளரிக்காயின் யோக்கியதையை சொல்ல வேண்டியிருக்கிறது.அப்போதாவது உமது ஆணவம் அடங்கட்டும்.

        உங்க கிருத்துவ தனியார் சட்டப்படி கணவன் விலைமாதர்கள் தொடர்பால் மறைமுக நோய்களுக்கு ஆளாகி இருந்தால் இரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் மனைவி மணவிலக்கு கோர முடியும்.இந்த இரண்டு ஆண்டுகளில் ஏதாவது ஒரு நாள் கணவன் மனைவிக்கு நோயை கொடுத்து விட்டால் என்னாவது என்று முட்டாள் பாதிரிகளுக்கு தெரியாமல் போய் விட்டதே.

        உங்க கிருத்துவ தனியார் சட்டப்படி கணவன் மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டால் ஏழு ஆண்டுகள் அவள் காத்திருக்க வேண்டும்.அதன்பிறகே அவள் மணவிலக்கு கோர முடியும்.வாழ்வின் வசந்த காலத்தில் ஏழு ஆண்டுகளை தனிமையில் கழித்து விட்டு அதன் பிறகு மணவிலக்கு வாங்கி அப்புறமா மாப்பிள்ளை பார்த்து மறுமணம் செய்து அவள் வாழ்ந்தாப்புலதான்.இப்படி சட்டம் போடும் கிறுக்கு பாதிரிகளை எதை கொண்டு அடித்தால் தகும்.

        இது மாதிரிக்குத்தான்.இன்னும் வேணும்னாலும் எடுத்து உடுறேன்.

        இப்படி ஓட்டையும் உடைசலுமாக உங்க மதம் இருக்கு .அதுனால புதுசா உங்களுக்கு சட்டம் தேவைப்படுது.எங்களிடம் பெரிய குறைகள் இல்லை.உண்மையான மதசார்பற்ற சக்திகள் பொது சட்டம் கொண்டு வந்தால் அதில் 90 விழுக்காடு நாங்கள் ஏற்கனவே கடைப்பிடிப்பதாகவே இருக்கும்.

        பி.கு.

        இந்த விவாதத்தை படிக்கும் பிற கிருத்துவ சகோதரர்களுக்கு

        இந்த ஜோசப் முசுலிம்களை வாய்க்கு வந்தபடி முட்டாள்கள்,காட்டுமிராண்டிகள் என்றெல்லாம் தூற்றுவது எங்களுக்கு எந்த வகையான உணர்வுகளை ஏற்படுத்தும் என்பதை அவருக்கு உணர்த்துவதற்காகவே பாதிரியார்களை கடுமையான சொற்களால் குறித்துள்ளேன்.உண்மையில் அப்படி அவமதிக்கும் நோக்கம் ஏதுமில்லை.

        • ”ஆக கிருத்துவம் என்ற வெள்ளரிக்காயை பார்ப்பனியம் என்ற மலத்தில் முக்கி எடுத்து திங்கும் நீர் ” என்பதை ”ஆக கிருத்துவம் என்ற வெள்ளரிக்காயை சாதி வெறி என்ற மலத்தில் முக்கி எடுத்து திங்கும் நீர் ”என்று திருத்தி படிக்கவும்.

          நான் மாட்டுக்கறி உண்பதில்லை.அது எனக்கு புடிக்காதுன்னு சொல்றது ஒரு மனிதனின் தனிப்பட்ட உரிமை.அது தாழ்ந்த சாதிக்காரன் சாப்புடறது,அதுனால நான் சாப்பிட மாட்டேன் ஏன்னா நான் உயர்ந்த சாதி என்பது அப்பட்டமான சாதிவெறி.மலத்தை போல நாற்றமடிக்கும் இந்த சாதிவெறியை மனதில் தேக்கி வைத்துள்ள ஜோசப் மற்றவர்களை தூற்றுகிறார்.

          • நண்பர் திப்பு ,

            நானும் Mr PJ எழுதிய மாட்டு கறியை மேட்டரை வேறு ஒரு பின்னுட்டத்தில் படித்தேன்!

            மாட்டு கறியை PJ சொல்லும் உலகம் முழுவதும் உள்ள “முன்னேறிய கிருஸ்துவ சமுக மக்கள்” ஐரோப்பில் அவிச்சு தீங்கராங்க! ,

            உலகம் முழுவதும் உள்ள பாய்ங்க திங்கராங்க !

            ஹிந்துக்கள் ஆகிய நாங்களும் தீங்கரோம் !

            இவருக்கு[ PJ ] வுக்கு தீங்க பிடிகாட்டி மூடிகிட்டு போவ வேன்டியது தானே ? அதை விட்டு விட்டு எங்க சாதியில் திங்க மாட்டாங்க என்ற சாதி பெருமை படும் இவர், ஒவொரு தன் சாதிகாரர் வீட்டுக்கும் போயி நோட்டம் பார்த்தாரா ?

            • தமிழ்-தாகம் மற்றும் திப்பு,

              இங்கு ஜோசப் என்னும் கிருத்துவர் தன்னுடைய கருத்தை பதிவிட மட்டுமே ஜோசப் என்ற முகமூடியை அணிந்துக்கொல்வார்… தேவைப்படும்போது பள்ளர் இன மக்களில் ஒருவராக தன்னை காட்டிக்கொள்ள முகமூடியை கலட்டுவார். மேலும் , சில நேரங்களில் தன்னை பகுத்தறிவு பகலவனாக காண்பித்துக்கொள்ள நாத்திகவாதியாக அவதாரம் எடுப்பார் .அதிலும், இவருடைய பகுத்தறிவானது இஸ்லாமியர்களை மற்றும் தனியாக பகுத்து சாடும் வகையில் காழ்ப்புணர்வை வெளி இடுவார்.

              • _______பல வண்ண முக மூடி தான் இன்று கிழீந்து தொங்குதே பாய் .சரி விடுங்க பாய் !

                ஹிந்து ,முஸ்லிம் சகோதரர்களா நாம விவாதத்தை தொடரலாம் வாங்க பாய் !

                எனக்கு தெரிஞ்ச ஹிந்து மத சிவில் சட்டததில் உள்ள குறைகளை நான் எடுத்து கூறியுளேன்.

                உங்க சட்டத்தில் உள்ள மேன் படுத்த வேண்டிய சிவில் கூறுகள் எதேனும்இருக்கா பாய் ? மாற்றம் எதேனும் தேவையா பாய்?

                ஏன் கேட்கின்றேன் என்றால் ஹிந்து ,இஸ்லாமிய ,கிருஸ்துவ சிவில் சட்டங்கள் அறிவு பூர்வமாகவும் ,இன்றைய காலத்தின் தேவைக்கு ஏற்ப நவீன மயமாக பட்டால் தான் அதன் சிறப்பு அம்சங்களை ஒருங்கினைத்து திரு சையப் அலிகான் மற்றும் பிற மத நல்லிணக்க மக்கள் விரும்புவது போன்ற சிறப்பான பொதுவான சிவில் சட்டத்தை வடிவமைப்பது பற்றிய நிலைக்கு நாம் முன்னேற முடியும்

        • திப்பு,

          நானும் மாட்டுக்கறியைப் பற்றிய ஜோசப்பின் அந்த பின்னூட்டத்தைப் படித்தேன். ஆனால் பல வாரங்கள் மாதங்கள் கழித்து. அது எனது spam ல் இருந்தது. இதைப்பற்றி அந்த பதிவிலேயை நீங்கள் முதலில் எழுதிய போது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. spam ல் இருந்ததை படித்ததும் தான் புரிந்தது. அவருடைய அந்த கருத்து அவருடைய நம்பகத்தன்மையை குலைத்துவிட்டது. தலித் வேசம் போடுபவரோ என்றுதான் தோன்றியது. நானே முகமூடி என்று சந்தேகிக்கப்படும் போது இதையெல்லாம் பேசி பயன் என்ன என்று விட்டுவிட்டேன். As it is better late than never, I am giving my opinion now. Let him clarify his position.

          • ஆண்ணன் உனிவர்புட்டி நான் தாழ்த்தபட்டவனாக நடிப்பவன் அல்ல எந்த இடத்திலும் எனது சாதி இதுதான் என்று ஆதிக்க சக்திகளுக்கு ஓங்கி குரல் குடுப்பவன் எனது வீட்டில் எங்களது தந்தையார் இரண்டு காளை மாடுகளை வளர்த்தார் உழவு செய்வதற்க்காக அவைகள் எனது தந்தையாரிடம் மிகவும் பாசம் கொண்டு இருந்தன ஒரு முறை தேனிக்களின் பிடியில் அதாவது கடந்தை என்று சொல்லப்படக்கூடிய தேனிக்கள் அவரை சூழ்ந்து கொண்ட போது மாடுகள் அவரை காப்பாறின என்று சொல்லுவார் அவர் தண்ணீருக்குள் மூழ்கி தனது உயிரை காப்பாற்றிக்கொண்டாராம் இந்த தேனிக்களின் தாக்குதலில் ஒரு மாடு இறந்து விட்டது என்று சொல்லுவார் அதனால் மாட்டிறைச்சி உண்ண வேண்டாம் என்று சொல்லுவார் அதனால் சிறு வயதில் இருந்து மாட்டிறைச்சி உண்டது இல்லை அது மட்டும் இல்லாமல் மாட்டை அருத்து உணவை உண்டு வருபகர்கள் நம்மை விட தாழ்ந்தவர்கள் என்று நம்ப வைக்கப்பட்டேன் அதைத்தான் எனது பின்னூட்டத்தில் சொல்லி இருந்தேன் இன்றும் சொல்லுகிறேன் நான் ஒருத்தரையும் இழிவாக நினைத்தும் இல்லை அனால் இசுலாமியர்கள் எனது சாதியை சார்ந்தவர்களை இசுலாமிய மதத்திற்க்கு மாறினால் உனக்கு சம உரிமை கிடைக்கும் நாங்கள் உஙகளுக்கு சவுதியில் வேலை வாங்கி தறுகிறோம் என்று ஏமாற்றி அவனை சவுதி முதலாளிக்கு அடிமையாக் விற்று விடுகின்றனர் இதில் பாதிக்கப்பட்ட எத்துனையோ சகோதரர்கள் எனது இனத்தில் உண்டு நான் ஒன்றை கேட்கிறேன் நீங்களே சொல்லுங்களேன் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்கள் வந்தார்கள் தங்களின் மதத்தை பரப்ப பள்ளிக்கூடங்கலை ஆரம்பித்தார்கள் படித்து நீங்கள் படித்து முன்னேறுங்கள் என்று சொன்னார்கள் இதில் எது சரியானது நீங்களே முடிவு செய்யுங்கள் ஆனாலும் எனக்கு கிறிஸ்தவ மதத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை அதுவும் போலித்தனமான மதமே …..

            • Mr PJ மாட்டு இறைச்சி உண்பவர்கள் தாழ்ந்தவர்கள் என்று செயபாட்டு வினையில்[pasive voice ] நம்ப வைக்க பட்டாராம் ! ஆனா செயவினையில் [active voice ] இவரு யாறையும் இழிவாக நினைத்தும் இல்லையாமாம் ! அடியாத்தி ! அங்க ஒரு அம்பி பூரிக்கும் ,காஞ்சிக்கும் காக்கா பிடிக்குது ! இங்க ஒரு RSS முளை சலவை செயபட்ட ராசா படிநிலை சாதிவெறிக்கு மணியாட்டுது !

              //அது மட்டும் இல்லாமல் மாட்டை அருத்து உணவை உண்டு வருபகர்கள் நம்மை விட தாழ்ந்தவர்கள் என்று நம்ப வைக்கப்பட்டேன் அதைத்தான் எனது பின்னூட்டத்தில் சொல்லி இருந்தேன் இன்றும் சொல்லுகிறேன் நான் ஒருத்தரையும் இழிவாக நினைத்தும் இல்லை//

            • இது தான் பாய்ங்க மேல் உள்ள Mr. PJ வின் வன்மத்துக்கு காரணம் என்றால் ஒரு நல்ல மன நல மருத்துவரை சென்று பார்ப்பது நன்று! ஏன் PJ?, எந்த சாதியில் ,மதத்தில் 420 பிராடு இல்லை ? அப்படி பார்த்தா வாரம் ஒரு சாதி மேலும் ,வருடம் ஒரு மதத்தின் மீதும் அல்லவா அந்நியன் கோபமும் ,மகாநதி பழிதீர்தலும் pj மனசுக்குள் நிகழ வேண்டும் ! அதே அடிப்படையில் பார்த்தல் சாதி வேத்துமை பார்க்கும் பாதிரிகளை கூட இவரு மனதிலும் ,எழுத்திலும் “பாதிரி-சம்காரம்” அல்லவா செய்து இருக்க வேண்டும்.அடியாத்தி எதுவுமே நடக்கலையே ? ஆனா பாயிங்க பின் பூரத்தை மட்டும் PJ கழுவி கழுவி ஊத்துறாரே அது எப்படி ? அது எதுக்கு ? யாரு கொடுத்த காசு குரைக்குது ?

            • தம்பி ஜோசப்,

              விளக்கத்திற்கு நன்றி. இப்போது புரிகிறது. உங்கள் எழுத்து நடை தெளிவில்லாமல் இருப்பதால் வந்த தவறான புரிதல் இப்போது சரியாக்கப்பட்டுவிட்டது. உங்கள் பின்னூட்டங்களில் கூடுதல் கவனம் தேவை. நன்றி.

              • வேலிக்கு ஓனான் சாட்சியாகிறதே!!! ஆச்சிரியக்குறி!!!

                //…ஒரு முறை தேனிக்களின் பிடியில் அதாவது கடந்தை என்று சொல்லப்படக்கூடிய தேனிக்கள் அவரை சூழ்ந்து கொண்ட போது மாடுகள் அவரை காப்பாறின என்று சொல்லுவார் அவர் தண்ணீருக்குள் மூழ்கி தனது உயிரை காப்பாற்றிக்கொண்டாராம் இந்த தேனிக்களின் தாக்குதலில் ஒரு மாடு இறந்து விட்டது என்று சொல்லுவார் அதனால் மாட்டிறைச்சி உண்ண வேண்டாம் என்று சொல்லுவார் \\ இதுவரை ஓக்கே நல்லவிதமாகத்தான் உள்ளது.. இன்னும் எண்கள் வீட்டிலும் இதே நிலைதான் என்குடும்பத்தார்கள் மாட்டை பாசத்தோடு வளர்த்தவர்கள் என்ற ரீதியில் அதனை உண்ணமாட்டார்கள் . எனவே , இப்படி இருப்பதில் அவர்களின் செண்டிமெண்ட் தெரிகிறது.. பிரச்சனை இல்லை.

                ஆனால் பிரச்சனையே இதற்க்கு பிறகு வரும் வார்த்தைகளால் தான்.
                //மாட்டை அருத்து உணவை உண்டு வருபகர்கள் நம்மை விட தாழ்ந்தவர்கள் என்று நம்ப வைக்கப்பட்டேன் அதைத்தான் எனது பின்னூட்டத்தில் சொல்லி இருந்தேன் இன்றும் சொல்லுகிறேன் நான் ஒருத்தரையும் இழிவாக நினைத்தும் இல்லை \\ நம்பவைக்கப்பட்டதாகவே எடுத்துக்கொண்டாலும் , இப்போதாவது அப்படி அவர்கள் சொல்வதில் உள்ள அர்த்தமற்ற தன்மையை புரிந்து, தற்போது அதுபோன்ற வார்த்தைகளை சொன்னதற்கு மன்னிப்பே கேட்க்காவிட்டாலும் கூட , இப்போது என்னிலையை மாற்றிக்கொண்டேன் என்று கூராமல் // இன்றும் சொல்லுகிறேன்\\ என்று கூரி அது தாழ்த்தப்பட்டவர்களின் உணவு என்பதில் உண்மை இருப்பதாகவே கருதுவதாக ஜோசப் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார் என்பதை அறிவுடையோர் சிந்திக்கட்டும்.

                உனி சிந்திக்க வாய்ப்பில்லை அவர் வழக்கம்போல் இதற்கும் ஏதாவது சப்பைக்கட்டை தேடி நியாயப்படுத்தட்டும்.
                //உஙகளுக்கு சவுதியில் வேலை வாங்கி தறுகிறோம் என்று ஏமாற்றி அவனை சவுதி முதலாளிக்கு அடிமையாக் விற்று விடுகின்றனர் இதில் பாதிக்கப்பட்ட எத்துனையோ சகோதரர்கள் எனது இனத்தில் உண்டு நான் ஒன்றை கேட்கிறேன்\\ ஏமாறுபவனும் ஏமாற்றுபவனும் எல்லா குழுக்களிலும் இருக்கவே செய்கிறார்கள். அது சம்பந்தப்பட்டவனின் தவறு அதனை சட்டத்தின் மூலம் தண்டிக்கவும் தடுக்கவும் பார்ப்பதுதான் புத்திசாலித்தனமே அன்றி,, இந்த செயலை செய்தது உன்னுடைய குடும்பத்தில் உள்ளவன் தானே மதத்தில் உள்ளவந்தானே , கிராமத்தில் உள்ளவந்தானே என்று ஆரம்பித்தால் உலகில் உள்ள அனைவரும் குற்றவாளிகள் என்ற நிலையில் உமக்கு தெரியவரும்.

              • வினவு இதை கூட யாரோ ஒரு மதவெறி குள்ள நரியை பார்த்து தான் சொல்லி இருக்கு அல்லவா அண்டர்…?

                @@@@சிலர் தங்களது இதயத்தில் இசுலாமிய வெறுப்பையும் வார்த்தையில் ‘மத நல்லிணக்கத்தையும்’ ஏன் பொதுவுடமை பற்று அல்லது நாத்திக நாட்டம் என்பதாகவும் வைத்துக் கொண்டு தந்திரமாக பேசுகிறார்கள்.

                யார் அந்த மதவெறி குள்ள நரி உணிவேர் ?

  38. எலக்ரானிக் மீடியா உபயத்திலும், எலெக்சன் கமிஷன் உபயத்திலும் மதவாத அலை ஓங்குகிறது! ஊழலுக்கு எதிரி என புறப்பட்டவர்கள் ஊழல் உச்சனீதி மன்றம் வரை சென்று, அவா தயவில் மீண்டும் வருவேன் என கொக்கரிக்கிறது! சந்தடி சாக்கில் திராவிட கட்சிகள் எல்லாமே ஊழல்வாதிகள் தானென்று உச்சா கொட்டிகொண்டு வருகின்றன மதவாத ஓனாய்கள்! (குஜராத் ஊழல்கள் பார்பன இந்துத்வா மீடியாக்களால் ஏற்கெனவே இருட்டடிப்பு செய்யபட்டுவிட்டன) தமிழன் தன்மானம் குலைக்கவே அதிமுக உருவாக்கப்பட்டது! அதன் பணி செவ்வனே செய்தாகிவிட்டது! இனி அகில இந்தியாவில் இந்துவா மதவாதிகளை எதிர்க்க, குறைந்த பட்சம் வாயைத்திறந்து பேச ஆளிருக்கிறதா? இப்பொது எந்த புதுச்சட்டமும், பொது சட்டமாக இருக்காது, இந்துத்வா சட்டமாகவே இருக்கும்!

    தயவு செய்து நண்பர்கள் தமிழ் தாகமும், பி.ஜெ வும் காமடியை விடுத்து கட்டுரையின் மூலப்பொருளுக்கு வாருங்கள்!

  39. \\நேரத்தை உம்மை போன்ற முட்டாள்களிடம் கழிக்க விருப்பம் இல்லை//

    சரியான முடிவு சகிர்,

    இந்த யுனி கூலிக்கு மாரடிக்கும் ஆசாமி. முசுலிம்கள் மீது பாய்ந்து குதறி அவர்கள் மீது நஞ்சும்,வன்மமும் கக்குவதை தன் எஜமானர்கள் பார்வைக்கு காட்டி நல்ல பெயர் எடுக்க வேண்டும் .அதில் குறைவு இருந்து கூலியில் ஏதும் குறைவு வந்து விடக்கூடாது என்ற வெறியோடு இருப்பவர்.அதற்காக அடுக்கடுக்காக பொய்யும் புரட்டுமாக கிறுக்குத்தனமான வாதங்களையெல்லாம் வைப்பவர்.எடுத்துக்காட்டாக

    ஒரு முசுலிம் தனது இரண்டாவது திருமணத்தை மற்றவர்கள் அறியாமல் மறைத்து விடலாம் என்கிறார்.வேறு வேறு வீட்டில் மனைவிகளை வைப்பதனாலும் முகத்தை மூடி புர்கா அணிவதாலும் அப்படி மறைத்து விடலாம் என்கிறார்.இப்படி ஒரு கிறுக்கனை இந்த உலகம் பார்த்திருக்காது.எங்கோ வேற ஒரு ஊர்ல சின்ன வீடு வச்சிருப்பதும்,கள்ள உறவுகளுமே கொஞ்ச நாள்ல அம்பலத்துக்கு வந்துருது.இதுல பாய் ரெண்டாவது கல்யாணத்தை மறச்சுருவாராம்.அந்த இரண்டாவது மனைவியின் பெற்றோர் உறவினர் அப்படி வெளியுலகத்துக்கு அறிவிக்காம இருந்தா ஒத்துக்குவாங்களா.இரண்டாவது மனைவியின் குழந்தைகளுக்கு தந்தையின் சொத்தில் முதல் மனைவியின் குழந்தைகளைப் போலவே உரிமை உண்டு எனும் போது திருமணத்தை மறைத்து வைக்க இரண்டாவது மனைவியின் தரப்பு எப்படி ஒப்புக் கொள்ளும்.

    அப்புறம் மாற்று மத பெண்களை கடத்திக் கொண்டு போய் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ஆபாச படம் பிடித்து அதை காட்டி மிரட்டி ,,இப்படி போவுது இவரோட லவ் ஜிகாத் கிறுக்கு கதை.முசுலிம்னா மாபியா கும்பலா என்ன .இப்படிப்பட்ட கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டு அரசியல் நடத்துன பா.ஜ.க.இப்போ சந்தி சிரிக்க கேவலப்பட்டு கிடக்கு.பார்க்க.

    http://www.thehindu.com/news/national/other-states/uturn-by-meerut-girl-on-love-jihad/article6494076.ece

    பா.ஜ.க மாதிரி அவ்வளோ பெரிய அப்பாடக்கருங்களே மாட்டிக்கிட்டு கேவலப்பட்டு போனானுங்க.இந்த யுனி எம்மாத்திரம்.கெட்டிக்காரன் புளுகுனாலும் அது எட்டு நாளைக்குத்தானே செல்லுபடியாகும்.

    மாற்று மத பெண்ணை ஒரு முசுலிம் இளைஞனோ இந்து இளைஞனோ காதலித்து கல்யாணம் செய்தால் அது குடும்பம் நடத்துவதர்குதானே இருக்கும்.யுனி சொல்ற மாதிரி எந்த கிறுக்கனாவது தன் மனைவியை ஆபாசமாக படம் பிடிப்பானா.இந்த மாதிரி கட்டுக்கதையை நல்ல மனநிலையில் உள்ளவன் சொல்வானா.

    ஆகவே நீங்கள் எடுத்த முடிவு சரியானது சகிர்.நானும் அப்படித்தான் இந்த காரியக்கிறுக்கனுடன் விவாதிப்பதற்கு பாறாங்கல்லில் முட்டிக்கொள்ளலாம் என விவாதத்தை நிறுத்திக் கொண்டு விட்டேன்.

  40. உனிவர்புட்டி-ஜாகிர் விவாதங்கள் பயனுள்ளதாகவே இருந்தது! இருவரும் ஒப்புகொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும், ஆணாதிக்க சமூதாயம் இன்னும் பெண்களுக்கு சரியான, சமமான அங்கீகாரம் தரவில்லை என்பது தெள்ளதெளிவு! என்னதான் நல்ல எண்ணத்துடன் சட்டங்கள் இயற்றினாலும், ஜமாத்துகள்(சமூதாயம்) அதன் நோக்கத்தை சிதறடித்து விடும்! பெண்களை பாதுகாக்கிறேன் என்று அவர்களை ஜடப்பொருளாக விற்றுவிடுகிறார்கள்!

    நாற்பது வருடங்களுக்கு முன், எனது இஸ்லாமிய நண்பர் தனது 13 வயது பெண்ணுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்தார்! எனது பள்ளி தோழர், இந்து, தனது 15 வயதிலேயே அக்காள் மகளை (12 வயது), திருமணம் செய்தார்! இதெல்லாம் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து உள்ளவர்கள் செய்த செயல்!
    இப்போது திருமண வயது பற்றிய சட்டமிருப்பதால் வெளிப்படையாக யாரும் செய்வதில்லை! சமீபத்தில் ஒரு புகழ் பெற்ற இந்துத்வா நாளேட்டில் ஒரு வாசகர் பதிவு! இந்து மதத்தில் குழந்தை திருமணம் என்பது ஒருநிச்சயதார்த்தம் போன்ற ஒரு சம்பிரதாய சடங்கு தான்! பெண் வயதுக்கு வந்த பின்னரே ‘சாந்தி’ செய்யப்படும் என்றார்! நடை முறையில் எப்படி இது சாத்தியப்படும்? இடைக்காலத்தில் ஆண் இறந்தாலோ, கருத்து மாறுபட்டாலோ பெண்ணின் நிலை என்ன? அவளீன் கல்வி என்ன வாகும்? என்ற கேள்விகளெல்லாம் எழுந்தன, ஆனால் பதிலளீக்கபடவில்லை!

    திருமணச்சடங்கு என்பது மதவாதிகள், ஆணாதிக்க மதவாதிகள், சமுதாயத்தின்மேல் திணித்ததுதான்!
    பெண்களின் பாதுகாப்பற்ற, படிப்பறிவு அற்ற அபலைத்தன்மையை பயன்படுத்தி அவர்களை ஆண்வீட்டாரிடம் ‘விற்று’ விடுவதுதான் எல்லா சமுதாயத்திலும் நடக்கிறது! சிறப்பு திருமண சட்டமும், சில மூற்போக்கான கோர்ட் தீர்ப்புகளும் பெண்களுக்கு நலம் பயக்கின்றன! ஆனால், பெற்றோர்களை பராமரிக்கும் ஆணின் பொறுப்பு பெண்களுக்கும் உண்டு என்பது எந்த ஆணாலும் ஏற்று கொள்ளபடுவதில்லை! பெண் மட்டுமே புகுந்த வீட்டுக்கு, மாமனார், மாமியார், நாத்தனார் களுடன் அட்ஜஸ்ட் செய்து கொள்ளவேண்டியிருக்கின்றது! எந்த பொது சட்டத்தாலும் இன்னிலை மாற்றப்படுமா?

    எனது மற்றொரு நண்பர், மிக உயர்ந்த பதவி வகித்த இஸ்லாமியர் கருத்து எனக்கு அதிர்ச்சியளித்தது! பெண்களை அடிக்க கணவனுக்கு உரிமை உள்ளது என்றார்! ஆணின் குடும்பத்திற்கு சமைத்து போடுவது மருமளின் கடமை என்றார்! மகனும், மருமகளும் அய் டி துறையில்! இந்து பெற்றோர் மன முதிர்வும் இதற்கு குறைந்ததல்ல! கிராமத்திலிருந்து வந்திருந்த தாத்தா பாட்டி குறை பட்டு கொண்டனர், ஆச்சாரமாக வீட்டில் சமைக்காமல், மருமகள் பக்கத்துலுள்ள சைவ உண்வகத்தில் சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்! மருமகளின் சம்பளத்தையெண்ணி அவரிடம் நேரிடையாக சண்டை போடாத மாமியார், பக்கத்து வீடுகளுக்கு சென்று புலம்புகிறார்!

    மாறிவரும் பொருளாதார சூழ்னிலையில், இனி பெண்களும் சம உரிமை கேட்டு போராடுவர்! அப்போது மத கட்டுப்பாடுகளைவிட சிறப்பு திருமண சட்டம் அவர்களுக்கு கைகொடுக்கும்! இப்போதைக்கு இந்துத்வா ஆபத்தே எல்லோரும் எதிர்க்க வேண்டியது என கூறிக்கொள்கிறென்!

    • Mr Ajaathasathru,

      உலகில் எந்த மதமும் பெண்களுக்கு சம உரிமை கொடுத்து இருக்காத போது, அதன் அடிப்படையில் இஸ்லாமிய மதத்தை மட்டும் உணிவேர் தாக்குவது தான் உங்களுக்கு சரியான சிந்தனையாக இருக்கிறதா? ஏன் “ஹிந்து நாத்திகவாதியாக” தன்னை காட்டிக்கொள்ளும் உணிவேர் முதலில் நாம் பிறந்த ஹிந்து மத பெண் அடிமைதனத்தை தானே முதலில் தாக்க வேண்டும் ? பின்பு தானே மற்ற மத அழுக்கை நிக்க முயலவேண்டும்?

      ஹிந்து மத ஆத்திகவாதியான[சிவ பக்தன்] எமக்கு தெரிந்த இந்த உண்மை கூட உங்களுக்கும் ,உணிவேர்க்கும் தெரியவில்லையே ! ஏன் ஐயா ?

      //உனிவர்புட்டி-ஜாகிர் விவாதங்கள் பயனுள்ளதாகவே இருந்தது! //

      • தமிழ்-தாகம்,

        நான் உங்களைப் போல (இதைப்பற்றி யாரும் கேட்காதபோதே வலிந்து கூறுவானேன்) எந்த பக்தனும் கிடையாது. பக்தர்களுக்குத் தெரிந்த ‘உண்மைகள்’ மற்றவர்களுக்குத் தெரியத் தேவையில்லை. பெரியாரைப் போலவே செய்வதற்கு நான் ஒன்றும் பெரியாரில்லையே. நான் நாத்திகவாதி தான். “ஹிந்து நாத்திகவாதியாக” அல்ல. வேண்டுமானால் என்னை ஒரு சிறிய நாத்திகன் என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

        //அடுத்தவன் பின்புரத்தை கழுவ முயல்வது ஏன் ?//

        பிறப்பை வைத்து மதத்தை அல்லது மதஅடையாளத்தை ஒட்டுவதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. உலக மக்கள் எல்லோருக்கும் ஒரு பொது அடையாளம் இருக்கிறது. அதைத்தான் நான் ஏற்கிறேன். திப்புவும் ஜாகிரும் எனக்கு அடுத்தவர்கள் இல்லை. எனது உறவுகள் தான். ஜாகிரை கண்ணு கண்ணு என்று வாய் நிறைய அழைத்து அவனை எனது உறவுக்குழந்தையாகவே உணர்கிறேன் என்றால் அது மிகையல்ல. ஜாகிர் ஆய்போய்விட்டால் கண்டிப்பாக கழுவிவிடுவேன். எனது குழந்தைகளுக்குச் செய்வதைப் போலவே. அவன் உச்சா போவதற்கு ஜிப் ‘அதில்’ மாட்டாமல் திறந்து மூடுவேன்.
        முகமது மெக்காவின் மீது மோசடியாக எதிர்பார்க்காத போது படையெடுத்து அதை தனது கட்டுப்பாட்டிற்குள் கொணர்ந்து அதன் கோயில்களில் இருந்த சிலைகளை உடைத்து மெக்காவினரின் வழிபாட்டுமுறையை மாற்றுவதற்கு முன் மெக்காவினர் எந்த மதத்தைப் பின்பற்றினார்களோ அது தான் எனது தாய் மதம். நம் நாட்டின் மதமும் அது தான். உலகின் பொது மதமும் அதுதான். இதற்கு ஒரு பெயர் இருந்தால் நல்லது தான். இல்லாமல் இருப்பதும் குறையில்லை. தேவைப்பட்டால் இதற்கு மனிதமதம் என்று பெயர் வைக்கிறேன். சில மனிதர்களின் சூழ்ச்சிகள் தான் மக்களை வெகு தூரம் இட்டுச் சென்றிருக்கிறது. தவறுகள் சரிசெய்யப்படவேண்டும். மெக்காப் போர்கள் மதீனா போர்கள் சிலுவை போர்கள் நைஜீரியா லிபியா ISIS போன்ற பிரச்சனைகளெல்லாம் மனித மதத்தில் படிந்த அழுக்குகளால் தான். அதாவது நமது மதத்தில் படிந்த அழுக்கைத் தான் நான் துவைத்துக் கொண்டிருக்கிறேன். இந்த கேள்விக்கு நன்றி. எனது/நமது நிலையை தெளிவுபடுத்த உதவியிருக்கிறீர்கள்.

        //***கட்டுரைகளை நீர் படித்து விமர்சனம் செய்யாதது ஏன் ?//

        கட்டுரையை ஏற்றுக் கொள்ளும் போது விமர்சனம் செய்ய என்ன இருக்கிறது. நீங்கள் வேண்டுமானால் குருவை மிஞ்சிய சீடனாக படிக்கும் எல்லா கட்டுரையிலும் ஏதேனும் எழுதிவையுங்கள். (Latest update: You seem to be back to full form). எனக்கும் வினவுக்கும் மற்றவர்களுக்கும் வேலைகள் நிறைய இருக்கின்றன.

        //பொருள் முதல் வாத கோட்பாடு படி அறிவை செலுத்தி சிலுவை போர்களை பாருமையா !//

        அந்தக் கோட்பாடெல்லாம் எனக்குத் தெரியாது. நீங்கள் வேண்டுமானால் அதன்படி சிலுவை போர்களை விளக்கிப் புரிய வையுங்கள். பார்க்கலாம்.

        //இஸ்லாமிய மதத்தை மட்டும் உணிவேர் தாக்குவது//

        இதற்கு ஏற்கனவே பல வழிகளில் பதிலளித்திருக்கிறேன். மேல உள்ள வரிகளில் கூட இதற்கு பதிலிருக்கிறது.

        • உநிவேர்புட்டிக்கு என் விளக்கம் III

          [1]முதலில் நாம பிறந்த ஹிந்து மதத்தின் அழுக்கை கழுவும் வேலையை செய்யும் ஐயா !அதுக்கு அப்பூரம் அடுத்தவர் பின் அழுக்கை கழுவுவது பத்தி யோசிப்போம்.
          // நான் நாத்திகவாதி தான்//

          [2]உமக்கு நிறைய வேலை இருப்பதால் தான் நீர் மற்றவரின் பின் அழுக்கை கழுவுவது பத்தி நிறைய யோசனை செய்விர்கலாக்கும் !
          //எனக்கும் — வேலைகள் நிறைய இருக்கின்றன.//

          [3]இன்று தன்னை நாத்திகவாதி என்று சொல்பவருக்கு நேற்று வரை தம்மை poli-கம்யுனிஸ்டு என்று பறைசாற்றியது மறந்தது ஏன் ?
          //அந்தக் கோட்பாடெல்லாம் எனக்குத் தெரியாது. நீங்கள் வேண்டுமானால் அதன்படி சிலுவை போர்களை விளக்கிப் புரிய வையுங்கள். பார்க்கலாம்.//

          • தமிழ்-தாகம்,

            1. இதற்கு தெளிவாக பதில் கொடுத்தேன். திரும்பவும் அதே கேள்வியைக் கேட்கிறீர்கள். வேறு விதத்தில் பதில் கூறுகிறேன். புரிகிறதா என்று பார்க்கவும். நான் எனக்கு முன்னால் இருக்கும் திப்புவின் முதுகைத் தேய்க்கிறேன். எனது முதுகை என் பின்னால் உள்ள நீங்கள் தேயுங்கள். நாம் மூவரோ நால்வரோ வட்டமாக நின்று கொண்டு இதை செய்தால் எல்லோருடைய முதுகிலுள்ள அழுக்கும் சுத்தமாகுமில்லையா. (எங்கே, நீங்களும் தேயுங்கள். பலே. அப்படித்தான். சுகமாக இருக்கிறது.)

            2. நான் மற்றவர் என்று நினைக்கவில்லை. நம்மவர் என்றே நினைக்கிறேன். சுத்தப்படுத்துவது எனது முக்கியமான வேலைதான்.

            3. அந்தக் கோட்பாடு தெரியாமல் பொதுவுடமைவாதியாக இருக்க முடியாதா. நான் பொதுவுடமைவாத்தியார்களின் எழுத்துக்களை இன்னும் படிக்கவில்லைதான். அதற்காக ஒருவர் பொதுவுடமைவாதியாக உணரமுடியாதா. கூடாதா. பொதுவுடமைவாதியாக உணர்பவர் ஒருவர் முகமதியத்தை விமர்சிக்கக்கூடாதா.

            • சிந்தனையாளர்களின் பார்வைக்கு சில விளக்கங்கள் …
              //எனது உறவுகள் தான். ஜாகிரை கண்ணு கண்ணு என்று வாய் நிறைய அழைத்து அவனை எனது உறவுக்குழந்தையாகவே உணர்கிறேன் என்றால் அது மிகையல்ல. ஜாகிர் ஆய்போய்விட்டால் கண்டிப்பாக கழுவிவிடுவேன். எனது குழந்தைகளுக்குச் செய்வதைப் போலவே. அவன் உச்சா போவதற்கு ஜிப் ‘அதில்’ மாட்டாமல் திறந்து மூடுவேன்.\\
              உனி வெளிப்படையாக தன்னை நல்லவராக அடையாலப்படுத்திக்கொன்டாலும் உண்மையில் அவர் யார் அவரின் மனநிலை என்ன என்பதை அவரின் வெப்சைட் மிக சிறப்பாக பிரதிப்பளிப்பதை பார்ப்பவர்கள் யாவரும் எளிதில் புரிந்துக்கொள்ளவே முடியும்.
              நான் ஆய் போனாலும் கலுவிவிடுவேன் சொல்லும் இவர்தான் இஸ்லாமியர்கள் தொழுகைக்காக தன்னை சுத்தம் சைதுக்கொல்வதை கூட விமர்சனமாக வைத்துள்ளார் என்பதை இவரின் வேப்சிடை பார்த்த போது தான் தெரியவருகிறது.. உள் ஒன்று வைத்து வெளி ஒன்று பேசுபவர்களிடம் நல்லவையை எதிர்பார்க்குதல் அறிவீனம் என்பதை அனைவரும் புரிதல் நன்று.
              ஆய் போவதை கழுவுவதற்கும் , ஜிப்பை போட்டு விடுவதற்கும் ஒரு ஆள் தேவைப்படும் அளவிட்ட்கு சிறுவனோ அல்லது புத்தி சுவாதீனம் இல்லாதவனோ இல்லை. இந்த மாதிரியான சிருபுள்ளத்தனமான சிந்தனையாளர்கள் தங்களின் இவ்வகையான கருத்துக்களை பதிவிடுவதன் மூலம் எதனை தெரியப்படுத்த விரும்புகிறார்கள் என்பதை புரியமுடியவில்லை.
              //நம் நாட்டின் மதமும் அது தான். உலகின் பொது மதமும் அதுதான். இதற்கு ஒரு பெயர் இருந்தால் நல்லது தான். இல்லாமல் இருப்பதும் குறையில்லை. \\ தன்னை நாத்திகவாதியாக அறிவித்துக்கொள்ளும் எந்தஒரு உண்மையான நாத்திகனும் சிறை வணக்கத்தை மற்றும் வழிபாட்டு முறையை மறுக்கவே முயல்வான். ஆனால் இவரின் இரட்டை நிலை புரியும் வகையில் அவரது பின்னூட்டம் இருப்பதை சிந்தனையாளர்களின் பார்வைக்கே விட்டுவிடுகிறேன். போர்த்தியது பசுன்தூளாக இருப்பினும் தன்னுடைய நரித்தன்மையை ஊளை இட்டு காட்டும் இவரின் இயல்பை அனைவரும் புரிதல் நன்று.

              \\இதற்கு ஏற்கனவே பல வழிகளில் பதிலளித்திருக்கிறேன்// நேர் வழியில் பதில்சொள்ளத்தேரியாதவனுக்கு பலவழிகள் நிச்சயம் தேவைப்படவே சையும். அதில் பல குறுக்குவழி என்பதை அறியமுடிகிறது..

              \\நான் எனக்கு முன்னால் இருக்கும் திப்புவின் முதுகைத் தேய்க்கிறேன். எனது முதுகை என் பின்னால் உள்ள நீங்கள் தேயுங்கள். நாம் மூவரோ நால்வரோ வட்டமாக நின்று கொண்டு இதை செய்தால் எல்லோருடைய முதுகிலுள்ள அழுக்கும் சுத்தமாகுமில்லையா. (எங்கே, நீங்களும் தேயுங்கள். பலே. அப்படித்தான். சுகமாக இருக்கிறது.)// அழுக்கு இருக்கும் இடம் முதுகாக இருக்கும் பட்சத்தில் மற்றவர்களின் உதவியை தேடுவதில் தவறில்லை. ஆனால் பலருக்கு காழ்ப்புணர்வு என்னும் அழுக்கானது சிந்தனையில் அல்லவா மொத்தமாக குடிகொண்டுள்ளது… இதனை சம்பந்தப்பட்டவர்கள் தானையா சுத்தம் படுத்திக்கொள்ள வேண்டும்.மற்றவர்கள் அதனை சுட்டிக்காட்ட முடியும் தேய்த்து சுத்தம் செய்ய இயலாதே.. என்ன செய்ய..

              \\அதற்காக ஒருவர் பொதுவுடமைவாதியாக உணரமுடியாதா. கூடாதா. பொதுவுடமைவாதியாக உணர்பவர் ஒருவர் முகமதியத்தை விமர்சிக்கக்கூடாதா.// சிலர் விமர்சனம் செய்வதற்காகவே பொதுவுடமைவாதி என்ற அவதாரம் எடுக்கிறார்களே என்பதில் தான் பிரச்சனை. மேலும் , ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம் ஆனால் அதில் உண்மை இல்லை என்றால் விமர்சனம் மக்கள் மன்றத்தில் நிற்க்காது..

              • Zahir கண்ணு,

                //எந்தஒரு உண்மையான நாத்திகனும் சிறை வணக்கத்தை மற்றும் வழிபாட்டு முறையை மறுக்கவே முயல்வான்.//

                அந்த பதில் தமிழ்தாகத்துக்கான பதில். உனக்கில்ல. அவருக்காச்சும் புரிஞ்சுச்சோ இல்லையோ தெரியல. இப்ப உனக்குப்புரியற மாதிரி சொல்றேன். கேட்டுக்க. தமிழ்தாகம் என்ன கேட்டார். ஏனய்யா உங்க தாய் மதத்தவுட்டுபுட்டு மத்த மதத்த கொற சொல்றியே இது சரியான்னு கேட்டார். அதுக்கு நானு உலகப் பொதுமதமான மனிதமதம் தான் என் தாய் மதம்னும் நான் இந்து மதத்தோட நாத்திகவாதியில்ல மாறா மனிதமதத்தோட நாத்திகவாதின்னும் என்னோட தாய் மதமான மனிதமதத்தல ஏற்பட்ட ஒரு அழுக்குதான் முகமதியம்னும் அதப்பத்தி நான் பேசறது சரிதான்னும் சொல்லியிருக்கேன். இப்பவாச்சும் உனக்கு புரிஞ்சிச்சா இல்லையா. தல சுத்துதா. சரிசரி இநதா கொஞ்சம் தண்ணிக் குடி. சரியாயிடும்.

                அப்பால, மனிதமதத்துல சிலை வழிபாடு ஒரு பிரச்சனதான். அதப்பத்தி வேறஇடத்தல பேசி இருக்கேன். சமயம் வரும்போது இன்னும் நிறய பேசலாம்.

                • வா ராசா அண்டர் படி வா வா இப்படி வழிக்கு ! மதமே மனுசனுக்கு போதை என்று ஞானி மார்க்ஸ் கூறியதாவது தெரியுமா தெரியாதா ? இல்லை அதனையும் விலாவாரியாக விளக்க வேண்டுமா? கடவுளை நினை மனிதனை மற என்றா கூறினார் நமது அறிவு கடல் பெரியார் ? இல்லையே ! உண்மை அப்படி இருக்கும் போது மொகமத் அழித்த மனித மதம் மட்டும் உமக்கு ஸ்பெஷல் போதையா ? நீர் நாத்திகனும் கிடையாது ! நீர் கோமுநிஸ்ட்டும் கிடையாது ! 420 என்ற சட்ட பிரிவு தெரியமா அண்டர்…..?

                  மேலும் ரவுண்டு கட்டி வக்காந்து அடுத்தவன் முதுகில் அழுக்கு எடுப்பது உமக்கே வக்கிரமா தெரியவில்லையா அண்டர்??? இதில் சுகமாக இருக்கு என்று பாக்கிய ராசு படம் மாதிரி முக்கல் முனங்கள் சாத்தம் வேறு கொடுகின்றாய் ! என் கோபத்தை பார்த்து விட்டு என் வீட்டு நாய் குட்டி பிஞ்ச செருப்பை எடுத்து மறைத்து விட்டது ___________________ ..


                  • Hi TT,

                    SK called me Underwear buddy. You call me அண்டர் படி. Not much difference.

                    நீங்கள் குருவை மிஞ்சிய சீடன் இல்லை. 2 பெயர்களை மாற்றிய குருவுக்கு மற்றுமொரு பெயர் மாற்றிக்கொள்ள ஒன்றும் கஸ்டம் இருக்கப் போவதில்லை.

                    Now that you are back, we can go to 700+ comments soon. I am going to have lot of troubles with loading and scrolling this article in my same old computer. You seem to be enjoying this game of getting new pseudos. But, தென்றல் கூறியதைப்போல, ‘மிடியல’.

                    முகமதியத்தைப்பற்றி ஏன் பேசக்கூடாது என்ற எனது கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு நான் 420யா இல்லையா என்று வகைப்படுத்தவும்.

                    • Univerbuddy, வினவு சொலுவது போல நீர் இவ் விவாதத்தை கட்டுரையின் கருபொருளில் இருந்து மத வெறி ஓலமாக மாத்திகிட்டு இருக்க , எனவே உமது பின்னுட்டத்தை படித்து மட்டுபடுத்துவது ,அல்லது பதில் கூறுவது என்பது வினவின் வேலையே ! எனவே அடுத்தவர் வேளையில் நான் தலையிட்டு என் நேரத்தையும் ,அவர்களின் உரிமையையும் வீண் அடிக்க விரும்ப வில்லை உணிவேர் !ஆனால் நீர் எழுதும் ,எழுத போகும் மத வெறி கருத்துகள் இனி வினவில் வெளிவரும் என்றால் நான் web-admin வினவிடம் கேள்வி கேட்பேன் உணிவேர்.

                      கட்டுரையின் கருபொருள் மீது நீர் எதேனும் கருத்து சொன்னால் மட்டுமே ,அது தவறாக இருக்கும் பச்சத்தில் உம்மிடம் இனி உரையாடுவேன் உணிவேர்.

                      //முகமதியத்தைப்பற்றி ஏன் பேசக்கூடாது என்ற எனது கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு நான் 420யா இல்லையா என்று வகைப்படுத்தவும்.//

                • சிந்தனையாளர்களின் பார்வைக்கு சில விளக்கங்கள்…

                  சொல்லப்பட்ட விஷயத்தில் உண்மை இருப்பின் எப்படி சொன்னாலும் புரியவே சையும் , ஆளுக்கேத்தே விளக்கம் கொடுக்க அவசியம் இல்லை. மேலும் விளக்கம் கொடுப்பவருக்கே அது புரியவில்லை என்பதுபோல் தெரிகிறது… மனிதமதம் என்ற ஒரு புதிய சித்தாந்தை சொல்ல முனைகிறார். ஏற்கனவே , இருக்கும் மதத்திலேயே ஆயிரம் ஏற்றத்தாழ்வுகள் இறைவனால் அல்ல பின்னால் வந்த மனிதர்களால் ஏற்படுத்தி ஆகிவிட்டது.. பற்றாக்கொரைக்கு இவரும் ஆரம்பித்துவிட்டார் இவரின் பிதற்றலை…

                  … அறிவுள்ளவர்கள் புரிந்துக்கொள்ளுங்கள்..

  41. பின் குறிப்பு இந்து மதம் என்பது சாதிப்பிரிவினை கோட்பாடோ (பிராமனியம்) அது போல இசுலாம் அரேபிய ஆதிக்க வேறி கோட்ப்பாடு அவ்வளவே இதில் யாருக்கய்யா சப்போர்ட் செய்ய போகிறீர்…

  42. திப்புவிற்க்கு இறையாவேசம் வந்து விட்டது ,யா அல்லா, அதனால்தான் கககககே குடுத்த சட்டங்கள் அனைத்தும் சரியானவை கிறிஸ்துவ சட்டங்கள் எல்லாம் தவறானவை எங்களின் கககககே குடுத்த சட்டங்கள் இருக்கும்போது எதுக்கு பொது சிவில் சட்டம், பொது சிவில் சட்டம் என்று வருகிறபோது கிறிஸ்தவ மூடத்தனமான சட்டங்களும்தான் திருத்தப்படும் அனாலும் இவரு சொன்ன மாறி கிறிஸ்தவ திருமண முறிவு சட்டங்கள் இருக்குதானு தெரியல் யேதோ அடிச்சி விடுராறு இன்னும் சொல்ல போறதாவேற சொல்லுறாரு ஆக இவரும் ககே ஆயிட்டாறு மத வெறியினால் என்ன செய்ய மாட்டிறைச்சி தின்பதில்லை என்பதால் பார்ப்பனிய வெறியன் என்கிறார் அனால் இது போதாது இன்னும் கூடுதலாக கககககேயை போல திட்ட வேண்டும் என்னை என்று அவரை கேட்டுக்கொள்ளுகிறேன் அதோடல்லாமல் இன்னும் திட்டுவதற்க்கும் அதிகமான பொய்களை பேசுவதற்க்கும் அவருக்கு ஞானத்தை அளிக்கவேண்டும் என்று கககககே கண்டுபிடிச்ச அல்லாவை தூ..ஆ.. செய்கிறேன்…

    • ஜோசப்,

      மாட்டுக்கறியைப் பற்றி நீங்கள் கொடுத்த பதிலைப்பற்றி ஏதேனும் தெளிவு படுத்த விரும்பினால் செய்யவும். நன்றி.

    • கீழ உழுந்தாலும் மீசையில மண் ஒட்டல ங்கிறாரு .

      \\ இவரு சொன்ன மாறி கிறிஸ்தவ திருமண முறிவு சட்டங்கள் இருக்குதானு தெரியல் யேதோ அடிச்சி விடுராறு இன்னும் சொல்ல போறதாவேற சொல்லுறாரு ஆக இவரும் ககே ஆயிட்டாறு //

      ஆதாரம் இன்றி எதையும் நான் பேசுவதில்லை.

      பார்க்க.http://en.wikipedia.org/wiki/Christian_Personal_Law

      சுட்டியிலிருந்து,

      Both husband and wife can seek a divorce on the grounds of,

      Adultery
      Cruelty
      Desertion for more than seven years
      Insanity for more than two years
      Incurable leprosy for more than two years
      Conversion to another religion
      Willful refusal to consummate the marriage
      Not being heard of for 7 years
      Venereal disease in communicable form for two years
      Failure to obey the order for restitution of conjugal rights.

      இப்ப சொல்லுவே ; யாரு லூசு.

      \\ மாட்டிறைச்சி தின்பதில்லை என்பதால் பார்ப்பனிய வெறியன் என்கிறார் //

      அறிவாளியே,மாட்டிறைச்சி தின்பதில்லை என்பதால் சாதி வெறியன் என்று அழைக்கவில்லை.மாட்டிறைச்சி உண்ணாமைக்கு ஒரு காரணம் சொன்னீரு பாரு அதுலதான் சாதி வெறி கொப்பளிக்குது.வெளங்காத மாதிரி நடிக்காதே.

      \\அனால் இது போதாது இன்னும் கூடுதலாக கககககேயை போல திட்ட வேண்டும் என்னை என்று அவரை கேட்டுக்கொள்ளுகிறேன்//

      நாயை அடிப்பானேன்.பீயை சுமப்பானேன்.பாரு,உள்ளதை சொன்னதற்கே,நீர் எழுதியதை எடுத்துக்காண்பித்ததற்கே கககககே என்று திட்டுகிறீர்.தேவையின்றி யாரையும் திட்டுவதற்கு நான் உம்மை போல மதவெறி கொண்டு அலையவில்லையே .

  43. திப்பு ,

    “கககககேயை” என்று என்ன பொருள் படி கூறுராறு pj ?

    இதுவும் pj கூறும் கிகிகி கீ ,வேள்ளேரிக்கா மாதிரி கக்குசு மேட்டர் தானா ?

  44. அய்யா தமிழ் தாகம் கககககே என்றால் காக்க வலிப்பில் கடவுளை கண்ட கழன்ட கேஸு என்று பொருள் அதாவது டெம்போரல் லேப் என்று சொல்லப்படக்கூடிய மூளையின் ஒரு பகுதியில் அடி பட்டவர்களுக்கு ஒரு விதமான காக்க வலிப்பு வறுகிறது அந்த நோயினால் பாதிக்கப்பட்டவ்சர்கள் கடவுளின் காட்சி தனக்கு கிடைத்தாகவும் தான் கடவுளால் தேரிந்து எடுக்கப்பட்டு தாங்கள் உலகத்தையே மாற்றும் ஆன்மிக பணி தங்களுக்கு குடுக்கப்பட்டுள்ளதாகவும் எண்ணி செயல்களை செய்வார்களாம் ,இதை ஒரு மருத்துவ ஆய்வாளர் தனது ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்து உள்ளார் உலகில் மதத்தை பரப்பிய பெரும்பாலனவர்களுடைய வாழ்க்கை வரலாற்றின் மூலம் இந்த நோயின் பாதிப்புக்கு உள்ளான மத அமைப்பாளர்கள் யார் யார் என்று அவர்கலின் வாழ்க்கை வரலாற்றின் மூலம் ஆய்ந்து வெளியிட்டு உள்ளார் அவர் குறிப்பிட்டு மூன்று நபர்களை அடையாளப்படுத்தி இருக்கிறார் அவர்கள் மூன்று பேறும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இருக்க சாத்திய கூற்கள் அவர்களின் வாழக்கை வரலாற்றி உண்டு எஙிறார் முதலாவதுப் நபர் 7வத் டே அட்வன்டீஸ் மிசன் என்ற கிறிஸ்துவ நிருவனத்தை ஆரம்பித்த பெண்மனி இரண்டாவது செயின்ட் பால் என்று சொல்லப்படும் கிறிஸ்தவ மததில் அதிக நூல்கலை எழுதியவர் அப்பொச்THஆள்ற் ஏன்று கிறிஸ்தவர்களால் அழைக்கப்பவர் மூன்றாவது முகமது நபி இவர்கள் அனைவரும் தலையில் அடிபட்டதால் கடவுளின் காட்சி தமக்கு கிடைத்தாக நம்பியவர்கள் இவர்களின் வாழ்க்கை வரலாற்றிலும் இவர்களுக்கு தலையில் அடிபட்டதாக பதிவு செய்யப்பட்டு உள்லது முதாலாவது அமெரிக்க பெண்மணியும் தனது தலையில் கல்லெறி விழுந்த பிறகே கடவுளின் காட்சியை கண்டதாக சொல்கிறார் அது போல பவுல் என்பவரும் குதிரையில் சென்றபோது தலையில அடிபட்டு கடவுளின் காட்சியை கன்டதாக பைபிள் கூறுகிறது அதே போல முகமதுவும் தலையில் அடிபட்ட பிறகே கடவுளின் தூதர் அவரை கண்டு பேசியதாக சொல்லிகிறார் அதானால் இஅவர்களை எல்லாம் காகக வலிப்பு வந்துதான் கடவுளின் காட்சி வந்ததாகவும் தனக்கு பிரபஞ்சத்தை காக்கும் ஆன்மீக பணி இருப்பதாகவும் கருதியதாக அய்வு அறிக்கையில் சொல்லி உள்ளார் எனவேதான் முகமதை காக்க வலிப்பில் கடவுளைக்கண்ட கழண்ட கேஸீ என்றேன் சரிதானா…

    • தான் பிறக்கும் போதே பல ஆயிரம் குழந்தைகளை காவு வாங்கியது, அப்பன் பெயர் தெரியாத குழந்தையா இருந்ததாலே பிதாமகன் என்று தன்னை பறைசாற்றிகொண்டது, அப்பத்தில்மோடி மஸ்தான் வேலை செய்தது, அப்ப அப்ப கடவுளிடம் கம்முனிகேசன் செய்து புலம்பியது, என்று பல பல பலான விடயங்கள் எல்லாம் ஹோலி புக் பைபிளில் இருக்கே ! அதை பற்றியும் , அதன் நாயகன் பிதாமகன் பற்றியும் ஒரு வாட்டி நீர் சிந்ததது உண்டா Mr PJ ?

      உம் சாமியின் யோக்கியதை என்ன என்று சிந்ததது விட்டு,சிரித்து விட்டு அப்பூரம் வந்து அடுத்தவன் சாமியை பற்றி நற-துபம் போடுமையா ! எனக்கும் பிதாமக்னுக்கும் தொடர்பே இல்லை ; நான் நாத்திக வாதி என்ற ஜம்பம் எல்லாம் வேன்ன்டாமையா ! உம் மத உணர்வு ரஜினி விடயத்தில் நல்லா எமக்கு தெரியுமையா ! நீர் எழுதிய “ரஜினி ,பாபா ,ஏசு” பின்னுட்டத்தை ஒரு முறை படித்து விட்டு இதுக்கும் பின்னுட்டம் போடுமையா !

      சாதிவெறி ,மதவெறி கலவையா இருப்பது என்பது நீர் உம்மை ஒப்புகொண்ட வரைமுறையா? சாதிவெறி ,மதவெறி கலவையாஇருப்பதற்கு ஒரு நாளாவது நீர் வருந்தியது உண்டா Mr.PJ ?

      //எனவேதான் முகமதை காக்க வலிப்பில் கடவுளைக்கண்ட கழண்ட கேஸீ என்றேன் சரிதானா…//

  45. கட்டுரையின் மைய கருவில் இருந்து விலகி தனி நபர் தாக்குதலில் நண்பர்கள் இறங்கி விட்டனர். சிம்மாசனம் ஏறியதில் இருந்து தனது ஹிந்துத்வா சித்தாந்தத்தை ஒவ்வொன்றாக , படி படியாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் ஹிந்துவெறி பாசிசம் எதற்காக போது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் . தனது சொந்த மத மக்களுக்கே போது சிவில் உரிமைகளை வழங்காத இந்த பாசிசம் எப்படி ஒட்டு மொத்த மக்களுக்கு பொதுவான நீதியை வழங்க முடியும் என்ற ஒரு சிறிய அடிப்படையை கூட புரிந்துக் கொள்ள முயலாமல் விவாதத்தை எங்கெங்கோ கொண்டு சென்று விட்டனர். இசுலாமிய எதிர்ப்பு என்பது எப்படிப் பொதுப் புத்தியில் உறைந்து விட்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு சாட்சி.

    நன்றி.

  46. //தான் பிறக்கும் போதே பல ஆயிரம் குழந்தைகளை காவு வாங்கியது, அப்பன் பெயர் தெரியாத குழந்தையா இருந்ததாலே பிதாமகன் என்று தன்னை பறைசாற்றிகொண்டது, அப்பத்தில்மோடி மஸ்தான் வேலை செய்தது, அப்ப அப்ப கடவுளிடம் கம்முனிகேசன் செய்து புலம்பியது, என்று பல பல பலான விடயங்கள் எல்லாம் ஹோலி புக் பைபிளில் இருக்கே ! அதை பற்றியும் , அதன் நாயகன் பிதாமகன் பற்றியும் ஒரு வாட்டி நீர் சிந்ததது உண்டா Mர் PJ ?// யேசு என்பவர் பிறந்தார் வாழ்ந்தார் என்று ஒப்பு கொண்டமைக்காக கிறிஸ்தவர்கள் நன்றி பாராட்டுவார்கள் உமக்கு சரிதான் விடும் யேசு என்ற கதா பாத்திரத்தின் போதனைகள் மிகவும் சிறந்ததது என்றுதான் நான் நினைக்கிறேன் அதோடல்லாமல் கம்மூனிசத்திற்க்கு மிகவும் நெருக்கமானது வன்முறை அற்றது அன்பை மட்டும் அடிப்படையாக கொண்டது ஆனால் காககககே கண்டுபிடித்த போதனைகள் வன் முறையானது அடுத்த மதத்துகாரன கொல்லும்படி ஏவுவது வேண்டும் என்றால் குரான் வாசகங்களை எடுத்து சொல்கிறேன் நீர் விரும்பினால் அடுத்தவனை அதாவது காபீரை கொல்லு குத்து அவனை கண்ட இடத்துல வெட்டு அவர்களை நான் மறுமையில் தண்டிப்பேன் ஆனாலும் மூமீன்களாகிய நீங்கள் அவர்களை இந்த உலகத்தில் கொல்லுங்கல் நான் அவர்களை மெளமையில் தோலை உரித்து உரித்து தன்டிப்பேன் என்று சொல்லி இருக்கிறார் அய்யா அல்லா என்ற கடவுள் உமக்கு வேண்டுமானால் குரான் வசனங்கலை தருகிறேன் அய்யா அதனால்தால் மனசாட்சி இல்லாமல் மற்றவனுடைய கழுத்தை அறுக்கிறான் தீவிரவாத மூமீன் அப்படி அருக்கும்போது அல்லாகு அப்பர் என்றும் முழங்குகிறான் அய்யா எத்தன வீடியோ பதிவு வேண்டும் உமக்கு உமது தனிப்பட்ட மெயில் ஐடி தாரும் நானே அனுப்பி வைக்கிறேன் வன்முறை சார்ந்த குரான் வசனங்களையும் அதை சொல்லி மூமீஙள் மாற்று மதத்தவன் கழுத்தறுத்த வீடியோக்களையும் யா அல்லா அல்கம்துலில்லா அனுப்பி வைக்கிறேன் …

    • நண்பர்கள் கவனத்திற்கு….
      இந்தக்கட்டுரை தொடர்பான விவாதங்கள் தனிப்பட்ட தன் மதம் உயர்ந்தது, பிற தாழ்ந்தது என்பதாக மாறிவிட்டது. சில நேரம் தவறான கருத்துக்களை எதிர்கொள்வது என்ற பெயரில் இவை ஆரம்பித்தாலும் பிறகு அது அந்த நிலையிலிருந்து தடம் மாறி முன்னது போல உருவெடுத்துவிட்டது. பொது சிவில் சட்டம் என்றால் என்ன, மதச்சார்பின்மை மற்றும் மத நல்லிணக்கம் குறித்த புரிதல், உறவு, தவறு, சரி, இந்தியாவில் மதச்சார்பின்மை குறித்து நிலவும் கருத்து, அதற்கும் மேற்கத்திய மதச்சார்பின்மைக்கும் உள்ள உறவு, ஒரு அரசு, சட்டம் முதலியவை மதத்தோடு உறவு கொண்டிருக்கலாமா, பொது சிவில் சட்டம் குறித்து ஆவேசமாக முன்வைக்கும் சங்க பரிவாரங்களின் கருத்து, அவற்றின் உட்கிடை முதலியவை பற்றி அதிகம் இங்கே பேசப்படவில்லை. விவாதங்கள் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினாலும் அது எங்கள் கையில் இல்லை. ஏதோ இந்த அளவிலாவது விவாதம் நடைபெறுகிறதே என்று இந்த கருத்துக்களை வெளியிட்டால் அது எந்த வரம்பையும் கொண்டிருக்காமல் போய்விடுகிறது.

      சிலர் தங்களது இதயத்தில் இசுலாமிய வெறுப்பையும் வார்த்தையில் ‘மத நல்லிணக்கத்தையும்’ ஏன் பொதுவுடமை பற்று அல்லது நாத்திக நாட்டம் என்பதாகவும் வைத்துக் கொண்டு தந்திரமாக பேசுகிறார்கள். அதன் உள்ளர்த்தம் புரிந்த நண்பர்கள் அதை தடுக்கப் போய் தாங்கள் பேச விரும்பும் பொருளை விட்டு எதிர்தரப்பு உருவாக்கியிருக்கும் நிகழ்ச்சிநிரலில் சிக்கி விடுகிறார்கள். ஜோசப் போன்றவர்கள் கொஞ்சம் அறியாமையும் அவசரமும் ஏட்டிக்குப் போட்டியுமாக பேசுகிறார்கள். அதை திறமையாக எதிர்கொண்டு உணர்த்துவதற்கு பதில் அந்த அப்பாவிகளை தூண்டிவிட்டு அவர்கள் உள்ளத்தில் இல்லாத வார்த்தைகள் பொருளையெல்லாம் புதிதாக உருவாக்கும் படி கூட இந்த விவாதம் அமைந்து விடுகிறது. அதுதான் காக்காய் வலிப்பு என்று அவர் எழுதுகிறார். இந்த விவாதங்களில் தலையிட்டு நெறிப்படுத்துவது என்பது நாங்கள் செய்ய முடியாது. அது நேரம் குறித்த பிரச்சினை மட்டுமல்ல, வாசகர் இப்படித்தான் விவாதித்தே ஆக வேண்டும் என்று கட்டளையிடுதவதாகவும் ஆகிவிடும். புரிந்து கொண்டு விவாதிக்குமாறு நண்பர்களை கோருகிறோம்.

      சாரமாக பொருளை குறித்து, அதன் விவாத வரம்புகளில் நின்று கொண்டு ஆழமாகவிவாதிப்பது, உரையாடுவோர்க்கு உள்நோக்கநம் கற்பிக்காமல் இருப்பது (அவர்களுக்கு அப்படி ஒரு நோக்கம் இருந்தாலும்), தனிப்பட்ட மதப்பற்று, மதவெறுப்பை தவிர்ப்பது, சிவில் வாழ்க்கையை கட்டுப்படுத்தும் பங்கை மதத்திற்கு கொடுக்கலாமா, அதையும் பெரும்பான்மை மதத்தின் எண்ணிக்கையிலும், கருத்திலும் நன்று கொண்டு பேசுவது சரியா, அதன் உண்மையான பொருள் என்ன? என்பதையெல்லாம் பேசலாமே?

      • ஜோசப் என்ன வினவின் செல்ல பிள்ளையா ?! அவரின் மதவெறி பேச்சை மட்டுபடுதாமல் ஏன் வேடிக்கை பார்கின்றது வினவு அணி ?!

      • வினவு மற்றும் வினவு வாசக நண்பர்களுக்கு,

        இந்த விவாதம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதென்று நினைத்தேன். ஆனால் வேறு ஒரு கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. Good. Let us reach at least 500 comments.

      • வினவு மற்றும் வினவு வாசக நண்பர்களுக்கு,
        நான் RSS வகையறாக்களுக்கோ வேறு எந்த குழுக்களுக்கோ எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத தனி மனிதன். இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். குறைந்த பட்சம் என் வார்த்தையை ஏற்றுக் கொண்டு அதன் படியே அணுகவேண்டும். எனது கருத்துக்களுக்கு உள் நோக்கம் கற்பிப்பது நேர விரயம் தான். நேரத்தைக் கருதி சுருக்கமான பின்னூட்டங்களையே இடுகிறேன். எனது கருத்துக்களைப் பற்றிய கேள்விகளுக்கு பதில் கொடுக்க கடமைப்பட்டிருக்கிறேன். ஒவ்வாரு வார்த்தையையும் அது எழுப்பக்கூடிய கேள்விகளையும் யோசித்துத் தான் எழுதுகிறேன். அடுத்தடுத்த கட்டத்திற்கு நகரும் போது தான் நிலைகள் தெளிவு பெறும்.
        பதிவை ஒட்டியே விவாதிப்பது தான் என் வழக்கம். இங்கேயும் அப்படித்தான் செய்திருக்கிறேன். எனது பதில்கள் கேள்விகளுக்கேற்ப இருக்கின்றன. அவைகளில் சில விலகியிருப்பதைப் போலத்தோன்றினாலும் சம்பந்தமில்லாமல் நான் எதையும் எழுதுவதில்லை.சுவையைக்கூட்டுவதற்காக சில இடங்களில் கண்ணே மணியே என்று போட்டிருக்கிறேன்.

        தொடர்ந்து பொறுமையாக விவாதிப்போம். நன்றி.

  47. வினவு தளத்திற்க்கு கட்டுரையின் மைய பொருளான் பொது சிவில் சட்டம் என்பதில் இருந்து இது ஒரு மத விவாதமாக அமைந்ததற்க்காக வருந்துகிறேன் மன்னிப்பு கேட்டுக்கொள்ளுகிறேன் அனாலும் முன்பே நான் சொல்லீருந்தேன் இது கட்டுரையிம் மையப்பொருளை விட்டு விலகி விடக்கூடாது என்று பொது சிவில் சட்டம் தொடர்பான எனது புரிதல்களை மட்டுமே விவாதத்திற்கு வைத்தேன் அதில் தவறுகள் இருக்கலாம, எல்லோறும் எல்லாம் தெரிந்தவர்கள் அல்ல …,,

  48. Uniform civil code is a must,Muslim woman should have the right to divorce husband if he marries again and that should be the reason for granting divorce,it should be considered as something equivalent to adultery.

    • அனைத்து ஹிந்து சாதியினரும் பெருமாள் கோவிலில்,சிவன் கோவிலில் அர்சகர் ஆகலாம் என்ற விடயத்தில் உமது மனதில் கட்டமைக்க பட்டு உள்ள “Uniform civil code” என்ன சொல்லுது ஹரிகுமார் ?

      • The rule says that the plougher of the land gets to own the land,so the family or community which chose service of god even when it was not lucrative,even when muslim invaders were slaughtering the priests for being priests,when english government was trying to convert poor brahmin priests with all kinds of freebies and even later there are so many of them who continued to carry on this profession even after getting nothing for it,they ll get to decide who gets to be the priest,not the government or the communist tea cup dreamers.

        Ambedkar’s contribution is very minor as we speak about reform in hinduism,reform in hinduism has always existed since the time of buddha and people choose to be conservative or liberal as per the need.

        Hindu Mahasabha had a fundamental problem that the government did nothing to change the personal law of muslims whereas it wanted to intefere in the personal laws of all the other religions.That’s the reason for the protest and not how you view it.

        Otherwise Hindu religion has been seeing reforms since Raja Ram Mohan roy,it is very funny that you are talking about 1951 even today,when neither RSS or HMB had an issue with reform in hindu religion or personal law as per the need of the day and hour.

        • ஹரிகுமார் ,

          ஆண்டு , ஆண்டு காலமாக வதைக்க பட்டது யார் ? ஆரிய பார்பனர்களா ? இந்திய பழங்க்குடி மக்களா ? எந்த அரசு வந்தாலும் தன் நிலையை தக்க வைத்து கொண்டு கோவிலில் பூசை வேலையில் இருக்கும் பார்பனர்கள், அதே ஹிந்து மதத்தின் பிற சாதி மக்களுடன் கோவில் பூசை வேலைகளை இன்று பங்கிடு செய்வதற்கு என்னையா துன்பம் உமக்கு ? இது தான் நீர் கோரும் “Uniform civil code”ன் இலச்சனமா ?

          //The rule says that the plougher of the land gets to own the land,so the family or community which chose service of god even when it was not lucrative,even when muslim invaders were slaughtering the priests for being priests,when english government was trying to convert poor brahmin priests with all kinds of freebies and even later there are so many of them who continued to carry on this profession even after getting nothing for it,they ll get to decide who gets to be the priest,not the government or the communist tea cup dreamers.//

          திரு அம்பேத்கார் அவர்கள் முயன்ற குறைந்த பச்ச இந்துச் சட்டத்தை சீர்திருத்தும் முயற்சிக்கு கூட ஹிந்து மதவாதிகள் அன்று[1951] முட்டுக்கட்டை போட்டு விட்டு இன்று நீர் “Uniform civil code” வேண்டும் என்று முதலை கண்ணீர் வடிப்பதால் என்னையா பயன் ? முதலில் ஹிந்து மதத்தில் உள்ள சாதி ஆதிக்கம் மற்றும் ஆணாதிக்கத்தின் அவமானகரமான உள்ள சட்டத்தை சரி செய்ய வேண்டாமா ஹரி ?
          //Ambedkar’s contribution is very minor as we speak about reform in hinduism,reform in hinduism has always existed since the time of buddha and people choose to be conservative or liberal as per the need.//

          ஹிந்து மதத்தில் உள்ள சாதி ஆதிக்கம் மற்றும் ஆணாதிக்கத்தின் அவமானகரமான உள்ள சட்டத்தை சரி செய்ய முயன்றால் அவர்கள்[Islam people] எப்போது ,ஏன்,எதற்கு ஐயா குறுக்கே வரபோகின்றார்கள் ?
          //Hindu Mahasabha had a fundamental problem that the government did nothing to change the personal law of muslims whereas it wanted to intefere in the personal laws of all the other religions.That’s the reason for the protest and not how you view it.//

          ராஜாராம் காலத்தில்-“பழகாலத்தில் ” நடந்த ஹிந்து மத சீர் திருத்தங்கள் உமக்கு மிகவும் நன்றாகவும் ,இனிமையாகவும் அதே சமையம் 1951ல் திரு அம்பேத்கார் முயன்ற சட்ட வடிவ ஹிந்து மத சீர் திருத்தங்கள் உமக்கு funny யாக்வும் இருக்க காரணம் என்ன ஹரிகுமார் ? காலபிழையா ?இல்லை வருணாசிர சாதிய பேதமா ஹரி ? எமக்கு இரண்டு பேருடைய ஹிந்து மத சீர் திருத்த முயற்சிகளும் சரியாக படுகின்றது . உமக்கு மட்டும் திரு அம்பேத்கார் அவர்களின் ஹிந்து மத சீர் திருத்த முயற்சிகளை சுட்டிகாட்டுதால் அது ஏன் funny யாக தெரிகிறது ஹரி ?
          //Otherwise Hindu religion has been seeing reforms since Raja Ram Mohan roy,it is very funny that you are talking about 1951 even today,when neither RSS or HMB had an issue with reform in hindu religion or personal law as per the need of the day and hour.//

          • Thamizh thirst,

            I never ridiculed Ambedkar or his efforts,i just said Ambedkar is one amongst the so many,you talk of Ambedkar but you forget someone like Sri Narayana Guru of Kerala.

            __________

            You misunderstand me,nobody says people other than brahmins cant be a priest.There are communities like kambar/valluvar who are already priests in many small temples but this has to be done gradually and not once for all.

            For the time being,i do not support such moves as i do not trust the kind of people tamizhnadu government ll appoint as priests in big temples.

            Secondly,if people other than brahmins becomes priests then all their blood relatives until 6 generations should not convert to any other religion for atleast 200 years also should declare themselves to be under general category and not seek any quota benefits.

            If religious laws have to be modified,then both hindu & islamic laws have to be modified,not just one law.

            Hindu women get maximum rights in every sense of the word atleast on paper,secondly hindu people get reservation in education/jobs/promotions and other aid like PCR and so many things under SC/ST or OBC reservation.

            Indian government tries earnestly to remove all caste/sect barriers amongst hindus and promote egalitarianism and RSS is the first organization to start doing that,thats why u see obc/dalit people of north india voting a lot for Modi.

            • ஹரிகுமார் ,

              திரு அம்பேத்கார் அவர்கள் ஹிந்து சிவில் சட்டத்தில் 1951 ஆம் ஆண்டு மாற்றம் கொண்டு வர முயன்றார் என்று கூறும் போது உமது பதில் என்ன ? அதனை மாற்றி பேசக்கூடாது ! 1951ஐ விட ராஜாராம் காலம் முந்தையது என்பது உமக்கு தெரியாதா ?Yes பெரியார் ,ராஜாராம் , நாராயண குரு என்று பலரும் ஹிந்து மத கசடுகளை நீக்க முயன்றது உண்மை தான்.ஆனால் ஒரு பார்ப்பன சநாதனியாவது அதனை வரவேற்றது உண்டா ?

              சிறு தெய்வ கோவில் வழிபாட்டுக்கு கிராம பூசாரிகள் ,பார்பனர்கள் அல்லாதவர்கள் இருகின்ற விடயம் எலாருக்கும் தெரியும் ஹரி ! நான் கேட்பது “Uniform civil code” வரும் என்றால் அதில் நான் கேட்பது அனைத்து ஹிந்து சாதியினரும் பெருமாள் கோவிலில்[ஆகம ],சிவன் கோவிலில்[ஆகம ] அர்சகர் ஆகலாம் என்ற விடயத்தில் உமது மனதில் கட்டமைக்க பட்டு உள்ள “Uniform civil code” என்ன சொல்லுது ஹரிகுமார் என்பது ஆகும் ?ஆகம விதிகளை படித்து விட்டு நிற்கும் பிற சாதி மாணவர்களுக்கு பதில் என்னையா ?அது என்ன gradually and not once for all.? ஏன் அப்படி ஹரி ? Why not immediately?

              ஆகம விதிகளை படித்து விட்டு நிற்கும்பிற சாதி மாணவர்களுக்கு அர்சகர் ஆக தடையாக இருப்பது யாரையா ? கோர்ட் படியேறி கொடிபிடித்து நந்தியாக குறுக்கே நிற்பது பார்ப்பன சநாதனிகள் தானே ஹரி !

              என்ன சொல்ல வரிங்க ஹரி ? வேத்து மதத்திற்கு மாறி பின்பு ஹிந்து மதத்துக்கு வரும் பார்பனர்களுக்கு சவுண்டி பாப்பான் கருமாதிக்கு மட்டும் வேதம் ஓத வேண்டும் என்பதை தானே ?

              ஏன் ஹரி இது என்ன பிளாக் மெயிலா இருக்கு ! பாய்ங்க அவிங்க சட்டத்தை மாற்றுவது வரை ஹிந்துக்கள் நம் சட்டதை மாற்ற கூடாது என்பது ஏன் ? அது வரைக்கும் ஹிந்து மதத்தில் உள்ள பிற சாதிகள் இழி நிலையிலேயே இருக்கனுமா ? அம்மாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்னையா சம்மந்தம் ? எதுக்கு ஐயா நம்ம ஹிந்து சட்டத்தை பற்றி பேசினால் பாய்ங்களை இழுகின்றாய் ?

              Hari, Remaining your this feedback contents are irreverent to the context of this essay so I discuss that matters in relevant context Ok?

    • சாதி ஆதிக்கம் மற்றும் ஆணாதிக்கத்தின் அவமானகரமான சின்னமாகக் காட்சியளித்த இந்துச் சட்டத்தைச் சீர்திருத்த அம்பேத்கர் முயன்றபோது அதனை ஹிந்து மதவாதிகள் எதிர்த்தது ஏன் ஹரிகுமார் ?

      ****ஒரு தார மணம், ஜீவனாம்சம், பெண்ணுக்கும் சொத்துரிமை, வாரிசுச் சட்ட திருத்தம் போன்ற சில திருத்தங்களை உள்ளடக்கிய இந்துச் சட்ட மசோதாவை 1951-ல் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார் அன்றைய சட்ட அமைச்சர் அம்பேத்கர். அதனை ஹிந்து மதவாதிகள் எதிர்த்தது ஏன் ஹரிகுமார் ?

      ****பலதார மணம், வைப்பாட்டி முறை ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த இந்துப் பெண்களின் நலனை முன்னிட்டுக் கொண்டு வரப்பட்ட இம்மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்தின் வாயிலில் பெண்களின் ஆர்ப்பட்டமொன்றை நடத்தி அரசை மிரட்டினார்கள், பாரதீய ஜனதாவின் மூதாதைகள். அதுவரை மசோதாவை ஆதர்ப்பதாகக் கூறிய நேரு பல்டியடித்தார். ஏன் இப்படி பிற்போக்கு தனம் ஹரிகுமார் ?

  49. உம்ம கருத்துப்படி இந்து மதம் ஆரிய மதம். (வரலாற்று ஆசிரியர்கள் பலர் ஆரியத்தை மறுத்தும் நாங்க விடமாட்டோம்ல. எங்களுக்கு அரசியல் பண்ண வசதியா இருக்கு – விட்ருவோமா?)

    உம்ம கருத்துப்படி பிராமணர்கள் மட்டுமே இந்து மதத்தை சார்ந்தவர்; மற்றவர் வேறு. (ஒரு விஷயத்த கேள்வி பட்டவுடன் புல்லரிக்குமே அந்த மாதிரி விஷயம்பா இது)

    உம்ம கருத்துப்படி பிராமணர்கள் இன்றும் மனு நீதியை follow பண்ணுகிறார்கள். (இந்தியா முற்றும் இன்றும் மனுநீதி தான் இயங்குகிறது என்ற கண்டுபிடிப்பு இருக்கே – அடடே ஆச்சரியகுறி)

    உம்ம கருத்துப்படி பிராமணர்கள் மட்டுமே இந்துக்கள்னு பிரிச்சு விட்டோம்னா அவர்கள் சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்கள்.

    உம்ம கருத்துப்படி சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்கள் அவரவர் சட்டத்தை follow பண்ணலாம்.

    சரிதானே?

  50. பொதுசிவில் சட்டம் தொடர்பான ஆர் எஸ் எஸ் காலிகளின் அயோக்கித்தனமான நிகழ்ச்சி நிரலை அடையாளம் கண்டுகொள்ள வேண்டுமானால் நாம் அரிக்குமாரின் பின்னூட்டத்தைக் கவனிக்கலாம்.

    இசுலாமிய பெண்கள் தன் கணவர் இன்னொரு மணம் புரிகிற பொழுது விவகாரத்து செய்கிற உரிமை இருக்க வேண்டும் என்கிறார். மேலும் மற்றொரு திருமணம் விபச்சாரத்திற்கு இணையானதாக கருதப்பட வேண்டும் என்கிறார். இதில் இரதரப்பையும் கவனிக்க வேண்டியது இப்பதிவு தொடர்பான விவாதத்திற்கு வலு சேர்க்கும்.

    முதலில் விவகாரத்து, மறுமணம், சொத்துரிமை இசுலாமிய சமுதாயத்தில் உண்டு. அங்கிருந்து தான் பொது சிவில் சட்டத்திற்கான சில சரத்துக்களையே உருவ வேண்டியிருக்கிறது. சொத்துரிமைச் சட்டத்தின் அம்சங்களும் இதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன. இது ஒருபுறமிருக்க இசுலாமிய சமூகத்தின் ஆணாதிக்க மரபுகளுக்கு எதிராக போராட வேண்டிய தேவை பார்ப்பனியத்திற்கு பாடை கட்டுகிற சமூக மாற்றத்தின் ஒரு பகுதியாகத்தான் இருக்கிறது. சமூக மாற்றத்திற்காக போராடுகிற எந்த ஒரு கம்யுனிஸ்டும் பொது சிவில் சட்டத்தை முதன்மையானதாக வைத்துப்போராடப்போவதில்லை. ஏனெனில் வர்க்கமாக அணிதிரள்வதுதான் நமது முதன்மையான நோக்கம். அரசின் தன்மையை மக்கள் திரள் முன் அம்பலப்படுத்தும் போக்கில் தான் சட்டப்போராட்டங்களே முன்னெடுக்கப்படுகின்றன. கோயில் விசயத்திலேயே இந்த அரசு யாருக்கானது என்பதை நடைமுறையிலேயே உணர்ந்தோம்.

    நிலைமை இவ்விதம் இருக்க ஆர் எஸ் எஸ் பாசிஸ்டுகள் கோறுவது சமூகம் மாற்றமல்ல. மேலும் ஆர் எஸ் எஸ் கோருகிற பொது சிவில் சட்டத்தில் பொதுவும் கிடையாது. சிவிலும் கிடையாது. இவர்கள் பொது சிவில் சட்டத்தைக் கோருகிறார்கள் என்றால் இதன் உள்ளரசியலை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு ஜோசப், கண்ணன், குமார் போன்றவர்கள் எல்லாம் விரல் சூப்பும் மழலையாக இருக்கிறார்கள். ஆர் எஸ் எஸ் காலிகளின் நோக்கம் சமத்துவமான சமூகம் அல்ல. இவர்கள் விரும்புவது இந்து-ராஷ்ட்டிரம். அங்கு இசுலாமியர்கள் இருக்கக் கூடாது என்பது தான். இந்து சமூகத்தையே பொது சிவில் சட்டத்திற்குள் அடக்க முடியாத அளவிற்கு பார்ப்பனிய சமூகத்தில் நடக்கிற அட்டூழியங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. மதத்தின் பெயரால் சிவில் உரிமைகளில் தலையிடுகிற இந்துப்பாசிசத்தை ஆர் எஸ் எஸ் காலிகள் பேசாது இருப்பதேன்?

    1. உ.பியில் ஜாட் சாதியினர் அண்ணன் மனைவியை தம்பியே திருமணம் செய்துகொள்வதை இந்து சட்டத்தின் கீழ் செல்லாத திருமணம் என்று அறிவிக்க இயலாது என்று பார்த்தோம். இதை விபச்சாரம் என்று அறிவிக்க முன்வருவார்களா அரிக்குமார் போன்ற இந்துத்துவக் காலிகள்?

    2. குழந்தைத் திருமணம் இந்து-பார்ப்பனியத்தின் மிக முக்கியமான சடங்குகளில் ஒன்று. வட இந்தியாவில் இந்துமதத்தை காரணம் காட்டித்தான் இன்றளவும் இத்திருமணங்கள் நடைபெறுகின்றன. குழந்தைத் திருமணம் செல்லாது என்று சொல்வதற்கு இந்து-சட்டத்தில் ஏதேனும் வழிவகை இருக்கிறதா?

    3. திருமணம் பற்றி பேசிக்கொண்டிருக்கிற பொழுது, பார்ப்பனிய இந்து மதத்தில் ஓர் ஆணோ பெண்ணோ திருமணம் செய்யாமல் இருக்க உரிமை உள்ளதா? ஏன் இதைக் கேட்கிறேன் என்றால் நடைமுறையில் ஓர் ஆணோ பெண்ணோ பார்ப்பனிய மதத்தில் திருமணம் செய்யாமல் இருந்தால் இந்திரலோகம் போக முடியாது என்ற நம்பிக்கையின் காரணமாக இறந்தவர்களுக்கு வாழை மரத்துடன் கல்யாணம் செய்கிற கூத்து இன்றும் நடைபெறுகிறது. ஆக பொது சிவில் சட்டத்தை வரையறுக்கிற பொழுது இந்து சாதிகளின் பல்வேறு சடங்குகள் தனிமனிதர்களின் உரிமைக்கு எதிரானது என்று ஆர் எஸ் எஸ் காலிகள் அறிவிப்பார்களா? உடன்கட்டை ஏறுதலையே இந்து மத நம்பிக்கையில் அரசு தலையிடுகிறது என்று சொன்னவர்கள் வாழை மரத்திற்கு தாலி கட்டுவதை வேண்டாம் என்பார்களா?

    இவ்வளவு கேடுகெட்ட நாதாரித்தனம் இந்துப்-பார்ப்பனியத்தில் இருக்கிற பொழுது பொது சிவில் சட்டம் என்ற பெயரில் குறிப்பிட்ட மதத்தை தாக்குவது வாக்குவங்கி அரசியல் மட்டுமில்லாது நிரந்தரமாக இந்தியாவை இந்து மயமாக்குவது என்ற நிகழ்ச்சி நிரல் தான் என்பதை நம்மால் எளிதில் இனங்கண்டு கொள்ள இயலும். ஏனெனில் சிவில் உரிமைகளுக்கான சட்டம் இந்துக்களுக்குப் பொதுவானது என்ற மாயைக்குப்பின்னே இந்து சட்டம் பல பார்ப்பனியச் சடங்குகளை மதத்தின் பெயரிலே அனுமதிக்கிறது. உண்மையில் பொது சிவில் சட்டம் கொண்டுவருவதற்கான குறைந்தபட்ச கோரிக்கை பார்ப்பனியத்தின் சுயமுகத்தை தோலுரிப்பதில் இருந்துதான் தொடங்கவே இயலும்.

    நிதர்சனம் இவ்வாறிருக்க அரிக்குமாரின் வாதமோ வழமையான ஆர் எஸ் எஸ் காலிகளின் அவதூறுப்பிரச்சாரமாக இருப்பதோடு மட்டுமில்லாமல் இந்து சாதிகளிடையே மறுமண விவகாரத்து உரிமை உள்ளது போல் எழுதுகிறார். இதன் தந்திரத்தை அடையாளம் கண்டுகொள்வது நமது கடமையாகிறது.

    • Stop giving long irrelevant sermons,if you want to debate about communism,you may need a time machine so that you can travel back to China/Russia 40-50 years ago,communism is dead meat,russia today is an orthodox christian country and china is a han nationalist country,their communist ideals are in the dust bin or in the gutter.

      coming to the argument,hindu personal law says any man or woman can have only one spouse,anything beyond that is illegal.That rule applies for all hindus regardless of caste or sect.

      Muslim personal Law certainly has grounds for divorce/remarriage/property claims but they are biased in favour of men.Can a muslim woman claim divorce on the grounds of her husband marrying twice? no,she cannot.thats the only valid point here which you can never answer or refute.thats why u r giving a pazhaya ottai record speech. have asked this to a muslim girl,my friend’s wife that whether a muslim girl can divorce her husband on these grounds?

      she responded that no and she was so ashamed to say this,she even went on to say about how women are used by the muslim community as mere pleasure objects and they are denied education and awareness and how apart from some communities like dawoodi bohras/urdu muslims,most tamil muslim girls are dependent on their local jamaat which is basically lecherous old men with no values or integrity.

      she doesnt have the choice to go to a normal court and claim justice and nobody ll even support her.

      more than 90% women ll leave islam if given a chance due to such stupid old rules.

      Regarding the otehr things u said,Jats are no more backward like you thought,if a Jat woman marries twice that ll be adultery,every religion or society encourages man or woman to marry and have children and have family life.That is fundamental illaram,there still are many people who die alone and they are cremated with all due rituals.

      I request you to stop living in the past whether it is 1930/1951 or 1990 and try to make arguments relevant in 2014.
      ____________

      Let muslims divide their wealth as they please but they must not be allowed to marry twice.

      • ஹரிகுமார் ,

        @@@@தந்தை வழி வாரிசுரிமை மற்றும் கூட்டுக் குடும்பம் என்ற கோட்பாட்டையே இந்து சட்டம் பின்பற்றுகிறது. எனினும் கேரளத்தில் சில சமூகத்தினர் மத்தியில் நிலவும் ‘மருமக்கள் தாயம்’ மற்றும் ‘ அரிய சந்தானம்’ எனும் தாய்வழிக் குடும்ப முறையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

        @@@அதேபோல, இந்துச் சட்டத்தால் தடை செய்யப்பட்ட மண உறவுகளில் (அதாவது சிறிய தந்தையின் மகனை அல்லது மகளை மணம் செய்யக்கூடாது என்பன போன்றவை) பழங்குடியினர் மற்றும் சில சமூகத்தினர் திருமணம் செய்வது நீண்டகால மரபாக இருப்பதால் அதுவும் இந்துச் சட்டத்தால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

        @@@கோவா மாநில இந்துக்களில் சில பிரிவினரிடையே நிலவும் இருதார மணமும் சட்டத்தால அங்கீகரிக்கட்டுள்ளது. ஒருதார மணச் சட்டம் அவர்களுக்குச செல்லாது.

        @@@அண்ணன் மறைவிற்குப் பின் அவரது மனைவியைத் தம்பி திருமணம் செய்து கொள்ளலாம் என்ற ஜாட் சாதியினரின் மரபும் இந்துச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒருதார மணச் சட்டம் இங்கேயும் செல்லாது.

        @@@கேரளத்து மாப்ளா முசுலீம்களும், சித்தூர் மாவட்ட கிறித்தவர்களில் சிலரும் (வன்னியர்கள்) வாரிசுரிமை குறித்த பிரச்சினையில் மட்டும் அவர்களது மரபுப்படி இன்றும் இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ்தான் வருகின்றனர்.
        //coming to the argument,hindu personal law says any man or woman can have only one spouse,anything beyond that is illegal.That rule applies for all hindus regardless of
        caste or sect.//

      • இந்துத் திருமணச் சட்டத்தில் மொத்தம் 8 வகைத் திருமணங்கள் பற்றிக் கூறப்படுகின்றன. அவற்றின் பிரம்ம வகைப்பட்ட திருமணங்கள் மூன்று உயர் வர்ணத்தாருக்கும், அசுர வகைப்பட்ட திருமணங்கள் ‘சூத்திரர்’ க்கும் மனு நீதியால் அனுமதிக்கப் பட்டிருந்தன. பிரம்ம வகைப்பட்ட திருமணங்களை சூத்திரரும் நடத்தலாம் என்ற திருத்தம் பிரிட்டிஷ் ஆட்சியில்தான் அனுமதிக்கப்பட்டது.

        பெண்ணுக்கும் அவள் வீட்டாருக்கும் பொருள் தந்து (பரிசம் ) பெண்ணை மண முடிப்பது அசுரத் திருமணம் என்றும், பெண்ணுடன் பொன்னையும் பொருளையும் மணமகனுக்குத் தானமாகக் கொடுப்பது (கன்னிகாதானம் ) பிரம்ம வகைப்பட்ட திருமணம் என்றும் மனுநீதி கூறுகிறது. இவை வெறுமனே பழைய ஏட்டுச் சுவடிகளில் இல்லை; இன்றும் இந்து திருமண சட்டத்தின் அடிப்படையாக உள்ளன. வரதட்சிணையை பார்ப்பன சாத்திரம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறது; சட்டமோ அதைத் தடுப்பதாக முணுமுணுக்கிறது.
        These Hindu act is Relevant to Present Mr !

        //I request you to stop living in the past whether it is 1930/1951 or 1990 and try to make arguments relevant in 2014.//

      • \\coming to the argument,hindu personal law says any man or woman can have only one spouse,anything beyond that is illegal.That rule applies for all hindus regardless of caste or sect.\\

        கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லவும். இந்து தனி நபர் சட்டத்தில் பார்ப்பனிய மதச் சடங்குளின் கீழ் வருகிற இரண்டாவது திருமணத்தை செல்லாது என்று சொல்ல வழிவகை இருக்கிறதா? திருமணத்தை இரத்து செய்ய இந்து தனிநபர் சட்டத்தில் இடம் இருக்கிறதா?

        \\Can a muslim woman claim divorce on the grounds of her husband marrying twice? no,she cannot.thats the only valid point here which you can never answer or refute.thats why u r giving a pazhaya ottai record speech. have asked this to a muslim girl,my friend’s wife that whether a muslim girl can divorce her husband on these grounds?\\

        அதே கேள்வியைத்தான் நானும் முன்வைக்கிறேன். பொது சிவில் சட்டம் என்று சொல்கிற பொழுது இந்துப் பெண் தனது கணவர் இரண்டாவது திருணம் செய்வதை ஒட்டி விவகாரத்து செய்ய இடமிருக்கிறதா?

        எனது பெரியப்பன் தன் முதல் மனைவியின் தங்கையையே இரண்டாவதுதாரமாக மணம் புரிந்துகொண்டவர். இத்துணைக்கும் அந்தப் பெண் படிப்பதற்காக வீட்டிற்கு வந்தவள். மணமும் பெரியப்பனுக்கு 50வயதுக்குமேலே தான் நடைபெற்றது. ஆக அதற்கு முன்பு வரை பாலியல் கொடுமையைத் தான் அந்தப்பெண் அனுபவித்திருக்க வேண்டும். அதாவது இந்துப் பார்ப்பனியத்தில் வன்புணர்வு செய்துவிட்டு தாலிகட்டிக்கொண்டால் அது அங்கீகாரமாகிவிடுகிறது!

        விவகாரத்துச் சட்ட அம்சங்களின் படி முதல் மனைவி வழக்கு தொடுக்கும் பட்சத்தில் மட்டுமே முதல் திருமணம் செல்லாது என்று அறிவிக்க இயலும். அந்த வேலையை முதல் மனைவியும் செய்யவில்லை. ஏனென்றால் அப்படியொரு உரிமையை சாதிச் சங்கம் வழங்கவில்லை. இதுதான் இந்துப்பார்ப்பனியம். ஒரு பெண் கணவனின் நிழலில் தான் வாழ வேண்டும் என்ற அடிமை மரபு பார்ப்பனிய இந்து மதத்தின் பிரத்யேக அம்சங்களில் ஒன்று. அதுதான் இன்றுவரை கோலோச்சுகிறது.

        ஜமாத்தைச் சுட்டிக்காட்டுகிற புடுங்கிகள் இந்து சாதிகளில் ஆணாதிக்க பஞ்சாயத்தைப் பற்றி வாய்திறக்க மறுப்பது ஏன்? இது ஒரு புறமிருக்க பிறன் மனை நாடுதல் தவறு என்று ஒருவேளை சட்டம் சொல்லுமேயானால் நீதிமன்றம் சூ-மோட்டோ கேஸ் தாக்கல் செய்து பெரியப்பனை கைது செய்ய இயலும். ஆனால் அப்படியொரு நிலைமை இருந்தால் இந்தியாவை சிறைச்சாலை என்று தான் அழைக்க வேண்டும். யாரை கைது செய்து யாரை ரிலீஸ் பண்ணுவ?

        பெரியப்பன் கதை இப்படி இருக்கிற பொழுது எங்க வீட்டு ஓனர் செட்டியார். அவருக்கு மூன்று மனைவிகள். மனைவி விருப்பப்பட்டு புகார் கொடுக்க இடம் இருக்கிறதா என்று நியாயம் பொளக்கும் அரிக்குமார் அவர்கள் இத்தைகைய திருமணங்களே தவறு என்று சொல்ல முன்வராதது ஏன்? ஏனென்றால் அடுத்த மதத்தை விட பிறன் மனைநாடுதல் பார்ப்பனியத்தால் நியாயப்படுத்தப்படுகிறது. பெண்ணை வண்புணர்வு செய்துவிட்டு தாலிகட்டிக்கொண்டால் அது திருமணமாகிவிடுகிறது. இவ்வளவு துயரங்கள் இந்துப் பெண்கள் அனுபவிக்கிற பொழுது அரிக்குமார் போன்றவர்களால் தவறு என்று சொல்லவோ தட்டிக்கேட்கவோ துப்பில்லை. ஆனால் இசுலாமிய பெண்களின் மீது கரிசனமாக இருக்கிறார் என்றால் அரிக்குமார் சுட்டிக்காட்ட விரும்புகிற யோக்கியதை தான் என்ன?

        திருப்திக்கு அலுமேலு மங்கா,

        கல்யாணமே பண்ணாத பிள்ளையாருக்கு சித்தி புத்தி,

        தினமும் கல்யாண உற்சவம் நடக்கிற திருவிடந்தையில் வீற்றிருக்கும் கலியாணப்பெருமாளுக்கு 360 மனைவிகள்,

        பிரம்மனுக்கு ஆயிரக்கணக்கில்,

        இந்திரனுக்கு இலட்சணக்கணக்கில்,

        என்று பார்ப்பனியக் கலாச்சாரத்திலேயே இல்லாத ‘ஒரு பொண்டாட்டிக் கதை’ சட்டத்தால் புடுங்கப்படுகிறது என்று சொல்வதும் அதற்கும் பொது சிவில் சட்டம் என்று பெயர் வைப்பதும் பித்தலாட்டமின்றி வேறென்ன?

      • இது தவிர அரிக்குமார் ஜமாத்தின் கொடுமைகளை சுட்டிக்காட்ட விழைகிறார். அதையும் விவாதிப்போம்.

        இசுலாத்தின் ஆணாதிக்க மரபுகள் பெண்ணை இரண்டாம் பட்சமாக கருதுவதற்கு ஒருவர் ஜமாத்தைக் கூட சுட்டிக்காட்ட தேவையில்லை. ஏனெனில் அடிப்படைவாதியாக இருக்கிற ஓர் ஆண் தலாக்கை ஓர் ஆயுதமாக பயன்படுத்த இயலும் என்பதற்கு நமக்கு சான்றுகள் உள்ளன. அதாவது ஜமாத்தை அணுகாமலேயே முத்தலாக் சொன்ன நிகழ்வுகள் சொத்துப் பிரச்சனை காரணமாக ஜமாத்தை அணுகாமலேயே முடிக்கப்பட்டிருகின்றன. இசுலாத்திற்குள் இருக்கிற இறை நம்பிக்கையாளர்களே இதை அநீதி என்று கண்டிக்கிற பொழுது ஆர் எஸ் எஸ்ஸோ அல்லது யுனிவர்பட்டி போன்ற மதவெறியர்களோ இதன் தன்மையை சுட்டிக்காட்ட விரும்புவதில்லை. ஏனெனில் இக்குற்றங்கள் எல்லாம் ஜமாத்திற்கு அப்பாற்பட்டு செய்யப்பட்ட விசயங்கள் என்ற யாரேனும் சொல்லக்கூடும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். இது வாதத்தின் ஒரு பகுதி.
        மற்றொரு வாதத்தையும் கவனிப்போம். அப்படியானால் ஜமாத் என்பது ஜனநாயகமான அமைப்பா என்ற கேள்வி வரும்? ஆனால் இங்கும் பல விசயங்கள் துட்டு இருக்கவன் பக்கமே நீதி வழங்கப்பட்டிருக்கின்றன. அதற்கு ஒர் உதாரணத்தையும் பிறகு பரிசீலிக்கலாம். அதற்கு முன்பாக தீட்சிதப் பார்ப்பனர்களும் தங்களுக்குள்ளே பஞ்சாயத்து போர்டு வைத்திருக்கிறார்கள் என்பது எத்துணை இந்து சகோதரர்களுக்கு தெரியும்?

        சிதம்பரம் போராட்டம் நடைபெற்ற பொழுது தீட்தரின் மனைவி ஒருவரே தன் கணவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது எப்படி என்று மனித உரிமை வழக்கறிஞர்களிடம் விசாரித்ததாக தோழர் ஒருவர் கூறினார். உள்சாதிப் பஞ்சாயத்தால் ஜீவனாம்சம், சொத்து உரிமை மறுக்கப்பட்டவர்களாக தீட்சிதப் பெண்கள் இருக்கிறார்கள் என்பதைக் கவனிக்க.

        இசுலாமிய உதாரணத்திற்கு வருவோம். சோயப் மாலிக்-சானியா மிர்சா-ஆயிசா விவகாரம் நீதிமன்றத்தின் படிக்கட்டுகளையும் மிதிக்கவில்லை. ஜமாத்தும் ஒரு பொருட்டாக கருதவில்லை. பணம் படைத்தவர்களுக்கு ஒரு நீதி என்பது இவ்விசயத்தில் தெரிந்தது. ஆயிசா எழுப்பிய புகார் தான் சோயப் மாலிக்-சானியா மிர்சா விவகாரத்தை விவாதித்திற்கு கொண்டுவந்தது. இதிலேயே ஹரிக்குமாரின் பொய்பிரச்சாரம் அடிபட்டு போகிறது. அதாவது இசுலாமிய பெண்கள் தன் கணவர் இரண்டாவது திருமணம் செய்கிற பொழுது விவகாரத்து செய்ய இயலுமா என்று கேட்டார். ஆம் என்பதற்கு ஆயிசாவைச் சுட்டிக்காட்டலாம். ஆனால் இதை நீதிப் பரிபாலனை என்று நான் கருதவில்லை. ஆயிசாவின் விவகாரம் பலவிசயங்களில் ஆணாதிக்கத்திற்கு உட்பட்ட வடிவங்களில் தான் நிகழ்ந்தது. அது என்ன விதமானது என்பதை இசுலாமியர்கள் மீது நஞ்சு கக்குகிற ஹரிக்குமார், யுனிவர்பட்டி போன்றவர்கள் யோக்கியவானாக இருந்தால் எடுத்துவைக்கட்டும். ஆனால் விவாதத்தை கவனிக்கிற எவர் ஒருவரும் இவர்கள் இசுலாமியர்கள் மீது அவதூறையும் வன்மத்தையும் கக்குகிறார்கள் என்பது தெளிவாகத் தெரியும். இதில் யுனிவர்படி 1:4, புர்கா போடுவதன் மூலமாக இரண்டாவது திருமணத்தை மறைக்கின்றனர் என்று பல புரளிகளை கிளப்பிவிட்டவர். இதன் வாதங்களை நிரகாரிப்பதோடு மட்டுமில்லாமல் இசுலாமிய பிற்போக்குத் தனங்களையும் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

        இந்து சகோதரர்கள் இதைக் கவனித்து ஆர் எஸ் எஸ் சூழ்ச்சியையும் இந்துத்துவ வெறியர்களின் தந்திரத்தையும் கருத்திலும் களத்திலும் முறியடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

        • தென்றல் அவர்களுக்கு,

          நீங்கள் விவாதத்தின் தொடக்கத்திலேயே என்னிடம் விவாதிக்க மறுத்து விட்டீர்கள். தொடர்ந்திருந்தால் நான் ‘புரளி’ கிளப்பவேண்டிய தேவை வந்திருக்காது. பரவாயில்லை. இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. தொடர்வோம்.

        • தென்றல் அவர்களுக்கு,

          1. பொது சட்டத்திற்கு ஆதரவாக சைப் அலி கான் எழுதியிருக்கும் பதிவு வினவில் வந்திருக்கிறது. (கூடவே அவர் மதத்தைப்பற்றி பேசியிருப்பது நான் கூறியிருக்கும் மனிதமதம் போன்றுதான் இருக்கிறது.)

          2. பொது சட்டத்தில் காணப்போகும் சில சரத்துக்கள் இஸ்லாமிய சமூகத்திலிருந்து உருவப்பட்டது தான் என்கிறீர்கள். நல்லது தான். எதிர்ப்பு குறைவதற்கு இது உதவலாம். இந்த சரத்துக்கள் முகமதியத்தின் தோற்றத்திற்கு முன்னரே அரேபிய சமூகத்தில் இன்னும் சிறப்பான வடிவிலேயே இருந்தவைகள் தான்.

          3. குழந்தைத் திருமணம் செல்லாது என்று சொல்வதற்கு இந்து-சட்டத்தில் ஏதேனும் வழிவகை இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள். பொது சட்டத்தில் வழிவகை உருவாக்கிக் கொள்ளலாமே. கண்டிப்பாக இதையும் செய்யத்தான் வேண்டும். நீங்கள் நிவர்த்தி செய்யப்பட வேண்டிய குறைகளை பட்டியலிடுங்கள். பயன்படுத்திக் கொள்ளலாம்.

          4. வாழை மரத்துடன் கல்யாணம் செய்வது போன்ற கூத்துக்களை சட்டத்தைக் கொண்டு ஏதையும் செய்ய முடியாதுதான். அதே போல இது போன்ற கூத்துக்கள் சட்ட ஒழுங்குக்கு பாதகமாக இல்லை என்று தான் நினைக்கிறேன். இந்த சமூகத்தில் திருமணம் நடப்பதற்கு ஜாதகம் போன்ற ஏராளமான தடைகள் இருக்கின்றன. அவைகளை மீறி திருமணம் நடப்பது பெரிய அதிர்ஸ்டம் தான். 30 வயதாகியும் மணமாகாதவர்கள் ஒரு பெரிய ஏக்கத்தை சுமநது கொண்டுதான் வாழந்து வருகிறார்கள். அவர்களை சுற்றியிருப்பவர்களுக்கு இது நன்கு புரியும். இந்த சமூகம் தான் இந்த தடைகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. கடைசியில் பரிகாரமாக வாழைமரத்திற்கு கட்டிவைக்கிறார்கள் போல இருக்கிறது. உயிருடன் இருப்பவர்களுக்கும் இந்த மரம் பயன்பட்டிருக்கலாம். இறந்தவர்களுக்கு அவர்கள் விரும்பும் வஸ்துக்களை வைத்துப் படைப்பதைப் போன்றது தான் இதுவும்.

          5. பொது சிவில் சட்டம் கொண்டுவருவதற்கான குறைந்தபட்ச கோரிக்கை பார்ப்பனியத்தின் சுயமுகத்தை தோலுரிப்பதில் இருந்துதான் தொடங்கவே இயலும் என்கிறீர்கள். நல்லது தானே. உங்கள் செயல்திட்டமும் இதை ஒட்டித்தானே இருக்கிறது.

          6. //***இவ்வளவு துயரங்கள் இந்துப் பெண்கள் அனுபவிக்கிற பொழுது***//

          நான் இவற்றை மறுக்கவில்லை. பொது சட்டம் இஸ்லாமிய பெண்களுக்காக மட்டுமில்லை மற்றப் பெண்களுக்கும் கூடத்தான்.

          7. //பார்ப்பனியக் கலாச்சாரத்திலேயே இல்லாத ‘ஒரு பொண்டாட்டிக் கதை’ சட்டத்தால் புடுங்கப்படுகிறது//

          பார்ப்பனிய கட்டுக்கதைகள் அ கலாச்சாரம் இந்திய ‘கலாச்சார’த்தின் ஒரு பகுதிதான். அவற்றிற்கு தகுதிக்கு மீறிய இடம் கொடுப்பது எடையை சுமந்து கொண்டு எதிர்நீச்சல் போடுவதற்கு ஒப்பானது.

          8. //ஆயிசாவின் விவகாரம் பலவிசயங்களில் ஆணாதிக்கத்திற்கு உட்பட்ட வடிவங்களில் தான் நிகழ்ந்தது//

          இந்த விவகாரம் எனக்கு புதியது. அதைப்பற்றிய ஒரே ஒரு செய்தியை மட்டும் இப்போது பார்த்தேன். முகமதியம் ஆணாதிக்கத்திற்கு மிகவும் ஏற்புடையது என்று இந்த விவகாரம் நிறுவுகிறது. இந்த விவாதத்தில் இந்த கோணத்தில் நானும் பேசியிருக்கிறேன். சைப் அலி கான் கூட இதை ஒத்துக் கொண்டிருக்கிறார்,

          9. // யுனிவர்படி 1:4, புர்கா போடுவதன் மூலமாக இரண்டாவது திருமணத்தை மறைக்கின்றனர் என்று பல புரளிகளை கிளப்பிவிட்டவர்.//

          இதைப் புரளி என்று எப்படி சொல்ல முடியும். முகமூடி-புர்காவை அணிந்த பெண்களுடன் வரும் ஆண்கள் எனது கூற்றைப் புரளி என்று நிரூபிக்க ஒரே வழிதான் உண்டு. பெண்கள் முகமூடி-புர்காவை அணியாவிட்டால் பல புரளிகள் தானே அடங்கிவிடும்.

          • சைப் அலிகான் எழுதியிருக்கும் பதிவை யுனிவர்படி தனக்கு சாதகாமக சுட்டிக்காட்டுவது பித்தலாட்டமாகும். எப்படியென்று பார்ப்போம். முதலாவதாக சைப் அலிகானின் பதிவு ஆர் எஸ் எஸ் காலிகள் கிளப்பிவிட்ட லவ் ஜிகாத்தைத் தோலுரிக்கிறது. லவ் ஜிகாத்தை ஆம் என்று வலியுறுத்தியவர் யுனிவர்படி. மேலும் சிறுபான்மைக் கோட்பாடு என்பதன் பெயரில் பல புரளிகளைக் கட்டவிழ்த்துவிட்டவர். யுனிவர்படியின் சிறுபான்மை தியரியை வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறேன். சைப் அலிகானின் பதிவையும் வாசகர்கள் படிக்கட்டும். லவ் ஜிகாத்தும் யுனிவர்படியின் தியரியும் எந்தளவு நச்சுப் பிரச்சாரம் என்பதும் ஒன்றையொன்று எவ்வாறு இட்டு நிரப்புகின்றன என்பதை மற்றவர்கள் பரிசீலிக்கட்டும்.

            யுனிவர்படியின் லவ்ஜிகாத் புரளி:

            “முகமதியம் தனது ஆண்களை எந்த பெண்களை வேண்டுமானாலும் கவர்ந்து கொள்ளச் சொல்கிறது. தனது பெண்களை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்க மறுக்கிறது. இதில் தான் மற்றவர்களுக்கு அபாயம் இருக்கிறது. மற்றவர்களின் பெண்களைக் கட்டிக் கொண்டு தங்கள் பெண்களை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்தால் பிரச்சனையில்லை. மற்றவர்களின் பெண்களையும் கட்டிக்கொண்டு தங்கள் பெண்களையும் கட்டிக்கொள்வதால் மற்றவர்களுக்கு பெண்கள் குறைகிறது. முகமதியர்களுக்கு மனைவிகள் கூடுகிறது. விளைவுகள் மற்றவர்களுக்கு சாதகமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை பாதகமாக இருக்கின்றன. இதைப் புரிந்து கொள்பவர்கள் முகமதியத்தை எதிர்க்கவே செய்வர். அது தான் நடந்து கொண்டிருக்கிறது.”

            ஆர் எஸ் எஸ்ஸின் லவ் ஜிகாத் பிராச்சாரத்தை நியாப்படுத்துகிற யுனிவர் படியின் கருத்து இது. ஆனால் தன் நடைமுறை வாழ்க்கையில் சைப் அலிகான் இதுபோன்ற பிரச்சாரங்களை எவ்விதம் எதிர்கொண்டார் என்பதை விவரித்திருக்கிறார். தன் குடும்பம் இதுபோன்ற பிரச்சாரங்களால் படுகிற நெருக்கடிகளையும் குறிப்பிடுகிறார். ஒரு சினிமா பிரபலத்தையே ஆர் எஸ் எஸ்ஸின் இதுபோன்ற பிரச்சாரங்கள் நெருக்கடியில் தள்ளுகிறது என்றால் எந்த ஒரு ஆதரவும் பின்புலமும் இல்லாத பல இசுலாமியக்குடும்பங்கள் கும்பல்-வன்முறைக்கு இரையாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு மதவெறியை தனது ஆதாரமாகக் கொள்ளாத இந்துவோ இசுலாமியனோ என்ன தீர்வு சொல்லப்போகிறார்கள்?

            இது ஒரு புறமிருக்க யுனிவர்படியின் கருத்துருவாக்கம் மேலும் இவ்வாறு நீள்கிறது:

            “Let us see some theory. ஒருமைப்பாடு என்பது Territorial மட்டுமில்லை Legal and administrative ம் கூடத்தான். நாட்டில் அமைதி வேண்டி பெருங்குழு சிறுங்குழுவை தனக்குள் சேர்த்துக் கொள்ளவே விரும்பும். இதற்காக தன்னுள் ஒரளவுக்கு மாற்றங்களையும் அனுமதிக்கும். சிருங்குழுவும் அமைதி வேண்டி பெருங்குழுவுடன் படிப்படியாக இணைத்துக் கொள்ளும். இதற்காக தன்னுள் சில மாற்றங்களையும் அனுமதிக்கும். இந்த பரஸ்பர இணைவையே நான் விரும்புகிறேன்.”

            இதைத்தான் ஆர் எஸ் எஸ் வெறியன் கோல்வால்கர் சொன்னார். முசுலீம்கள் இரண்டாம் தர குடிமக்களாக வாழவேண்டியவர்கள் என்று. இந்தியா ஒரு இந்து நாடு என்று சொல்கிற பாசிசத்தின் வேர்தான் இது. ஆனால் மதச்சார்பின்மை என்பதன் வரையறை அரசில் மதம் தலையிடாமல் இருப்பது என்பதாகும். ஆனால் யுனிவர்படி பரஸ்பர இணைவு என்றும் அமைதி வேண்டி இணைவது என்று ஒரு பக்கம் மிரட்டலாகவும் இசுலாமியர்களை கலகக்காரர்களாகவும் காட்டுகிறார்.

            சிவில் சமூகத்தின் உரிமைகளில் இந்து மதமோ அல்லது இசுலாமோ தலையிடக்கூடாது என்று சொல்வதை மதச்சார்பின்மை என்று சொல்கிற பொழுது யுனிவர்படி பரஸ்பர இணைவு என்பதன் பெயரில் இந்துத்துவத்தின் கீழ் சிறுபான்மையினரை இருத்துக்கிறார். இது எப்படி மதச்சார்பின்மையாக இருக்க முடியும்?

            இங்கு தியரியை வைத்துவிட்டு அடுத்த பத்தியிலேயே தனது அவதூறுகளை இவ்விதம் அவிழ்த்துவிடுகிறார்; அதன் பகுதி இவ்வாறு போகிறது.

            “இந்தியாவை எ.கா.வாகக் கொண்டு இதை விளக்க முயறிசிப்போம். இங்கே பெரும்பான்மையாக இருப்பது ‘இந்து’க்குழு. சிறுங்குழு முகமதியக்குழு. இந்த சிறுங்குழுவுக்கு பெருந்குழுவை சிறிது சிறிதாக கொறித்தோ எப்படியே தன்னகத்தே இணைத்துக் கொள்ளும் நாட்டம் தான் உள்ளது. பிரிவினை நாட்டமும் உள்ளது. இணைந்து கொள்ளும் நாட்டமில்லை. இந்நிலை பெருங்குழுவுக்கு அவமானகரமானது தான். தங்களால் முடிந்த வரை வழிகளைத் தேடுவார்கள். இணைப்புக்கு தடையாக உள்ள அம்சங்களை நீக்குவது ஒரு வழி. பொது சட்டம் அதில் ஒன்று. பெருங்குழுவின் சட்டத்திற்குப் புறம்பான ஒன்று (எ..கா. பலதாரம், முத்தலாக்) சிறுங்குழுவில் ஏற்புடையது எனும் போது சிறுந்குழுவிலிருந்து பெருங்குழுவிற்கு வருவது கசப்பாக இருக்கிறது. அதே சமயம் சிலருக்கு பெருங்குழுவிலிருந்து சிறுந்குழுவிற்குப் போவதற்கு இனிக்கிறது. இந்த அம்சம் குழுக்களின் படிப்படியான இணைப்புக்கு தடையாக உள்ளது. அதே சமயம் சிறுந்குழு Ghetto க்களை ஒருவாக்கி சிறிது சிறிதாக பிராந்திய அளவில் பெருங்குழுவாக மாறி பிரிவினைக்கு இட்டுச் செல்லும். நடந்துமிருக்கின்றன.”

            சைப் அலிகானும் சரி நமது வாசக நண்பர் சாகீரும் சரி இதுபோன்ற அவதூறுகளுக்கு சரியான பதிலடியைக் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக சாகீர் இதே தளத்தில் நான் ஒரு தமிழன் என்றும் இந்தியன் என்றும் மதவெறியர்களின் முகத்தில் காறி உமிழ்ந்திருக்கிறார். ஆனால் யுனிவர்படி போன்றவர்கள் சிறுங்குழுவிற்கு பிரிவினை நாட்டம் உள்ளது என்று பச்சையாக ஆர் எஸ் எஸ் காலிகளைப் போன்று புளுகுகிறார்.

            இந்திய சுதந்திரப்போராட்டத்தில் பங்கெடுக்காத ஒரே இயக்கம் இந்துத்துவ இயக்கம் என்கிற உண்மையை மறைத்துவிட்டு இந்தியாவின் இறையாண்மைக்கு பெருங்குழு என்பதன் பெயரில் இந்துத்துவத்தை அரியணையில் ஏற்றுகிறார். சிறுபான்மையினர்கள் பிரிவினை நாட்டம் கொண்டவர்களாக இருப்பதாகவும் இந்தியாவை இசுலாமிய மயமாக்குகிறார்கள் என்றும் எப்படி ஆர் எஸ் எஸ் வட இந்தியாவில் கலவரங்களைக் கட்டவிழ்த்துவிடுகிறதோ அதே வேலையை இங்கு யுனிவர்படி செய்கிறார்.

            நிதர்சனம் என்னவென்றால் இந்தியாவிற்கு பெரும்பான்மை என்ற ஒன்று கிடையாது. இந்தியாவை இந்து நாடு என்ற வரையறுத்தவர்கள் எல்லாம் ஆங்கிலேயனின் காலை நக்கிப் பிழைத்தவர்கள் என்பது வரலாறு. விவரம் தெரியாதவர்கள் விடுதலைப்போரின் வீரமரபைப் படித்துப்பாருங்கள். அல்லது ஆர் எஸ் எஸ்ஸின் ஞான கங்கையை வாசித்துப் பாருங்கள். இந்தியாவின் பன்முகக் கலாச்சாரம் என்பது யுனிவர்படி கதைப்பதைப்போல பெரும்பான்மை சிறுபான்மையாக இருப்பதில்லை என்பதை விளக்கித் தெரியவேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம் என்றால் மதப்பாசிசம் முறியடிக்கப்படவேண்டியது என்பதை நாம் உணர்ந்து செயல்படவேண்டிய தருணம் இது.

          • \\ வாழை மரத்துடன் கல்யாணம் செய்வது போன்ற கூத்துக்களை சட்டத்தைக் கொண்டு ஏதையும் செய்ய முடியாதுதான். அதே போல இது போன்ற கூத்துக்கள் சட்ட ஒழுங்குக்கு பாதகமாக இல்லை என்று தான் நினைக்கிறேன்.\\

            இங்கு தான் நைச்சியமாக பார்ப்பனியத்தை உட்புகுத்துகிறார் யுனிவர்படி. இந்துச் சட்டமும் இதைத்தான் செய்கிறது. இந்துவாக இருப்பவரின் சிவில் உரிமைகளுக்கு பார்ப்பனியமும் இந்து மதமும் ஒரு பெரியமுட்டுக்கட்டை. ஒரு பக்கம் பொது சிவில் சட்டம் பேசிவிட்டு மறுபக்கம் பார்ப்பனியக் கொடூரங்களை மதத்தின் பெயரில் நியாயப்படுத்துவதற்கு என்ன பெயர்? அதற்கு நீங்கள் சொல்கிற சால்ஜாப்பு சட்டம் ஒழுங்கு கெடவில்லை என்பது. இது மிக மோசடியான வாதமாகும். யுனிவர்படியின் கருத்தை ஏற்றுக்கொண்டால் நாம் இசுலாமிய அடிப்படைவாதிகள் சொல்வதையும் ஏற்கவேண்டும். அவர்களும் தான் சொல்கிறார்கள் சட்டம் ஒழுங்கு கெடவில்லை என்று.

            பலதார மணம் இந்து சமூகத்தில் நடக்கிற பொழுது இந்துப் பெண்கள் சாதியைக்காக்கும் பொருட்டு புகார் தருவதில்லை. பெரியப்பன் கதையையும் விளக்கியிருந்தேன்.அதாவது பாதிக்கப்பட்டவர் பேசாமல் இருந்தாலே அக்குற்றம் சட்டம் ஒழுங்கை பாதிப்பதில்லை என்றாகிவிடுகிறது. இது மோசடி இல்லையா?

            பொது சிவில் சட்டம் என்கிற பொழுது மதத்தை சட்டத்தில் இருந்து பிரிக்கவேண்டுமில்லையா? இந்து சமூகத்தில் கல்யாணம் ஆகாத ஒருவர் இறக்கிற பொழுது மதநம்பிக்கையின் படி வாழை மரத்திற்கு தாலிகட்டுவது சரி என்றால் இதில் சிவில் சட்டம் ஒரு இந்துவையும் இசுலாமியனையும் எப்படி சமமாக பாவிக்கும்? வழிபாட்டு உரிமையும் பார்ப்பனர்களுக்கே வழங்கப்பட்டிருக்கிறது. பொது சிவில் சட்டம் கூட குடிமையியல் சட்டங்களின் கீழ் வருகிறது. ஆனால் பார்ப்பனர்களுக்கான அதிகாரங்கள் அரசியல் சாசனத்தின் கீழ் வருகிறது என்றால் இதன் நிகழ்ச்சிநிரல் பித்தலாட்டமில்லையா? இதைப் பற்றியெல்லாம் தாங்கள் பேசவில்லை.

            இப்பொழுது இந்துப்பார்ப்பனியம், சட்டம் ஒழுங்கிற்கு பாதகமாக இல்லை என்கிறீர்கள். கம்யுனிஸ்டுகள் இதற்கும் போராட்டங்கள் நடத்தி பார்ப்பனியச் சட்ட ஒழுங்கிற்கு பாதகத்தை ஏற்படுத்தினால் தான் சிவில் உரிமைகள் காக்கப்படும் என்பது சரிதான். போராட்டங்கள் இன்றி எதுவுமில்லை என்பதை வலியுறுத்துவதற்கு இவ்வாதத்தை பயன்படுத்தலாம்.

          • \\ பார்ப்பனிய கட்டுக்கதைகள் அ கலாச்சாரம் இந்திய ‘கலாச்சார’த்தின் ஒரு பகுதிதான். அவற்றிற்கு தகுதிக்கு மீறிய இடம் கொடுப்பது எடையை சுமந்து கொண்டு எதிர்நீச்சல் போடுவதற்கு ஒப்பானது.\\

            இதற்கு இந்தத்துவ வெறியராக இருக்கும் அரிக்குமார் தேவலை. அரிக்குமார் வாதாடுகிற பொழுது கூட முன்னொரு காலத்தில் நடந்ததை எதற்குப் பேசுகிறீர்கள் என்றும் 2014க்குப் பொருந்தக்கூடியதைப் பேசுங்கள் என்றும் கூறினார். 2014லிலும் பார்ப்பனியம் தான் கோலோச்சுகிறது என்பது அவருக்கு தெரிந்திருந்தாலும் சமாளிப்பிற்கு பேசிப்பார்க்கிறார். ஆனால் தாங்களோ ஒரே போடாக பார்ப்பனீயக் கலாச்சாரத்தைப் பற்றி பேசுவது எடையை சுமந்து கொண்டு எதிர் நீச்சல் போடுவதற்கு ஒப்பானது என்று சரடுவிடுகிறீர்கள். உங்கள் வாதப்படியே வருவோம். உங்கள் 1:4 முகம்மதியக் கருத்திற்கு திப்புவும் சாகீரும் என்ன கேட்டார்கள். இந்தக் காலத்தில் எந்த இசுலாமியன் பலதார மணம் முடித்திருக்கின்றனர் என்று கேட்டார்களா இல்லையா? ஆனால் அப்பொழுது பதில் சொல்லாமல் முகம்மதியத்தின் அடிப்படைக் கூறே பல மனைவிகள் தான் என்று கூறியதன் மூலம் அளவிற்கு மீறி எடையைச் சுமந்தது யார்? இசுலாமியனைப் பொதுபுத்தியில் வரையறுத்தது யார்?

            சைப் அலிகான் இசுலாமிய மதமரபுகள் காலத்திற்கு ஒவ்வாதவை என்று சொல்கிற பொழுது காது கொடுத்து கேட்பது போல் பாசாங்கு செய்கிறீர்கள். ஆனால் தாங்கள் கொட்டாம்பட்டி பாயையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை தங்களுடைய பழைய பின்னூட்டங்களைப் பார்த்தீர்களேயானால் நன்கு தெரியும். இது ஒரு சந்தர்ப்பவாதம்.

            வரலாற்று வழிப் பார்வைக்கு வருவோம். இசுலாமியம் மெக்காவைவிட்டு மெதினாவிற்கு நகர்ந்த பொழுது சொத்துச் சண்டைக்காக அடித்துகொண்டு நாறியது என்பது சமூக வரலாற்று வழிப்பார்வை. சகோரத்துவம் என்பது முகம்மதுவின் காலத்திலேயே காலில் போட்டு நசுக்கப்பட்டது என்பதை அஸ்கர் அலி ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டியிருக்கிறார். கலிபாக்களில் ஒருவரான உமர் முகம்மதுவின் கொள்கைகளை செயல்படுத்த விழைந்ததால் தான் போரிலே கொல்லப்பட்டார். துருக்கி முசுலீமும் இந்திய முசுலீமும் ஒன்று கிடையாது. இவர்களின் கலாச்சாரம் பண்பாடு என்பது அக்குவேறு ஆணிவேறாக வேறு. ஆனால் 55 நாடுகளில் இசுலாமியர்கள் இருக்கிறார்கள். ஐயகோ ஆபத்து என்று கதறுவீர்கள். இவ்விதம் சமூகத்தின் வர்க்கப்பார்வையை நாம் சுட்டிக்காட்டுகிற பொழுது எப்படி ஒரு இசுலாமிய மதவெறியர் எங்களது குரானிலேயே எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறதோ என்று சொல்வாரோ அதே போன்று குரான் தான் தீமைகளுக்கு காரணம் என்று அடித்துவிடுகீறிர்கள். இப்படி சொல்வதன் மூலமாக இசுலாமியச் சமூகத்திலேயே பிற்போக்குத்தனங்களுக்கு எதிராக போராடியவர்களை, நியாயத்தின் பக்கம் நின்றவர்களை அவர்கள் முசுலீம்கள் என்ற ஒற்றைக்காரணத்திற்காக உங்கள் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றபடி இசுலாமிய மக்களை சித்திரிக்கிறீர்கள். இது தான் கீழறுப்பு வேலையாகும்.

            இதே நிகழ்ச்சி நிரலை பார்ப்பனியத்திற்கு பொருத்துகிற பொழுது எத்தனையோ மத நம்பிக்கையாளர்கள் பார்ப்பனிய எதேச்சதிகாரத்தை எதிர்த்து போராடியிருக்கிறார்கள். ஆனால் எப்படி சவூதி போன்ற நாட்டிலே ஆளும் வர்க்கம் இசுலாம் என்ற மதத்தை ஒடுக்கும் கருவியாக பயன்படுத்துகிறோ எப்படி இலங்கையில் புத்தம் அரசிற்கு ஒடுக்கும் கருவியாக இருக்கிறதோ இந்தியாவில் இந்துபாசிசம் கோலோச்சுகிறது. இதில் மதத்தை ஒருகருவியாக பாவிக்கிற ஒட்டுண்ணிகள் மக்களைக் கேடான வழியில் நகர்த்துகிற பொழுது நாம் பிரச்சாரத்தை சுவற்றிற்கு மண்ணிற்கும் மத்தியில் எடுக்கவில்லை. பார்ப்பனியத்தின் கொடுரங்களை அதே மக்கள் மத்தியில் தான் பேசுகிறோம். இசுலாமிய மதஅடிப்படைவாதத்தை அதே இசுலாமிய மக்களுக்கு மத்தியில் தான் பேசுகிறோம். ஆனால் உங்கள் ‘மனித மதத்திற்கு’ இசுலாமியர்கள் தேவையில்லை என்று சொல்வது மட்டுமின்றி ஆர் எஸ் எஸ் காலிகளின் பாசிசத்தைப் பறைசாற்றுவதற்கு பாயின்டு எடுத்துதருகிறீர்கள்.

            ஆர் எஸ் எஸ் இந்துமதத்தின் கொடூரத்தை இந்துக்களிடையே பேசுவதில்லை. அவர்கள் செய்வதெல்லாம் யார் இந்து என்று வரையறுப்பதல்ல அவர்களின் நோக்கம் யார் இசுலாமியன் என்று வரையறுப்பது? இதை இனம் கண்டு முறியடிப்பது ஒவ்வொரு மதநம்பிக்கையாளரின் கடமையாகிறது.

            வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கிற நிகழ்ச்சி நிரலிலே இசுலாமியனும் இந்துவும் கைகோர்த்துதான் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக போராடவிருக்கிறார்கள். ஆகவே உங்களுக்கு இருப்பது ஒரே ஒரு வாய்ப்பு மட்டும்தான். அரிக்குமாரைப்போன்று ஒருவரியில் ‘கம்யுனிசம் என்பது பிணச் சதை’ சொல்லிவிட்டு போங்கள். இவரைப்போன்ற நபர்களை மக்கள் திரள் எதிர்கொள்வது எளிது. ஆனால் உங்களைப்போன்றவர்கள் நயவஞ்சமானவர்கள்.

            • தென்றல் அவர்களுக்கு,

              விவாதத்தை சூடேற்றிவிட்டீர்கள். Great.
              நீங்கள் எழுப்பியுள்ள எல்லா கேள்விகளுக்கும் விடைதரவிருக்கிறேன். முற்றும் போடும் வரை பதில்கள் வரும். உங்கள் கேள்விகளில் சில உங்கள் தவறான புரிதலினால் விளைந்தது. விளக்கங்கள் வருகின்றன.

          • சோயப் மாலிக்-சானியா மிர்சா- ஆயிசா விவகாரம் தங்களுக்கு புதிது என்று சொன்னாலும் தான் முன்வைக்கிற ஆணாதிக்கத்தோடு அவ்விவகாரம் ஒத்துபோகிறது என்று சொல்கிறீர்கள். அதற்கு சார்பாக கீழ்க்கண்ட வாதத்தை முன்வைக்கிறீர்கள்.

            “நான் படித்த ஒரு செய்தியின் படி, நீஙகள் இடமிருந்து வலமாக பார்க்கிறீர்கள். ஆயிசா விலக்கு பெறவில்லை. சோயப் தான் தலாக் சொல்லி ஆயிசாவை தள்ளி வைத்தார். அதுவும் வேறு வழியில்லாமல். இல்லாவிட்டால் சானியா என்ற புதுப்பெண் கிடைக்க மாட்டாள் என்பதற்காக.”

            சோயம் மாலிக் என்றுமட்டுமில்லை இந்துமதத்தில் சசி தரூரும் அப்படித்தான் இருக்கிறார். சசி தரூரைப்பொறுத்தவரை அதிகாரப்பூர்வ எண்ணிக்கை நான்கு. இதில் நான்காவது மனைவி திப்பு சொல்வதைப் போல உருளை வளி வெடித்து சாகவில்லை. மாறாக விசம் அருந்திச் செத்திருக்கிறார். இவரது மரணம் மர்மம் மிகுந்தது என்றுதான் முதல் தகவல் அறிக்கை கூறுகிறது. அப்பொழுது அவர் காங்கிரசில் இருந்தார். இப்பொழுது அவர் மோடிக்குச் சாதகமாக பேசுவதில் இருந்து சுனந்தா புஷ்கரின் மரணம் எத்தகையது என்று யாராலும் ஊகிக்க முடியும். அதாவது நுகர்வுக்கலாச்சாரத்திற்கு ஆணாதிக்கம் மதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டிய எந்த அவசியமுமில்லை என்பது மேட்டுக்குடிகளின் செயலில் இருந்து தெரிகிறது. அவர்களுடைய அடவாடிகளுக்கு மதம் ஒரு பிரச்சனையாக இருப்பதேயில்லை. அப்படியானால் இசுலாமியர்கள் மட்டும் ஏன் தனித்து விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள்?

            சோயப் மாலிக்-சானியாவிற்கு திருமணம் என்று சொல்கிற பொழுது ஆயிசா தான் முதலில் பிரச்சனையை வெளியில் கொண்டு வந்திருந்தார். முதலில் இது சிவில் சட்ட வழக்கு அல்ல. நம் பார்வையில் இது கிரிமினல் வழக்காகும். வண்புணர்வு மற்றும் ஏமாற்றி மோசம் செய்தல் போன்ற வழக்குகள் இசுலாமியராக இருந்தாலும் மாலிக் மீது பாய முடியும். இந்திய வரலாற்றில் பொது கிரிமினல் சட்டங்கள் அப்சல் குரு போன்ற அப்பாவிகளை சாட்சியங்களே இன்றி தூக்கில் போடுகிறது; ஆனால் அதே பொது கிரிமினல் சட்டங்கள் மோடி போன்ற ஆட்களை சாட்சியங்கள் இருந்தும் விடுவிக்கிறது. கிரிமினல் சட்டங்களின் பொதுத்தன்மையே இப்படி இருக்கிற பொழுது சோயப் மாலிக் மீது சட்டமோ வழக்கோ பாயவில்லை. சோயப் மாலிக் வேறு நாட்டவராக இருந்தாலும் இந்திய சட்டங்களின் படி நடவடிக்கை எடுக்க இயலும். ஆனால் இங்கு நீதி பணக்காரர்களின் கண்ணசைவிற்கு ஏற்பத்தான் நடைபெறுகிறது. நிதர்சனம் இப்படியிருக்கிற பொழுது ஆயிசாவிற்கு என்னவகையான நீதி வழங்கப்பட்டிருக்க முடியும்?

            நாம் இங்கு உணர வேண்டியது மேட்டுக்குடிகள் என்றைக்கும் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கிறார்கள். மாலிக்கும் சசி தரூரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதான விவாதம் பொதுவில் வைக்கப்படவேயில்லை. இதில் சிவில் சட்டம் இவர்களின் கிரிமினல் நடவடிக்கைகளை எப்படி தண்டிக்க இயலும்? ஆயிசாவின் தரப்பில் இருந்து எப்படி இதை அணுகுவது? சாதிப் பஞ்சாயத்தில் செட்டில்மெண்ட் என்பதாகத்தான் ஜமாத்திலும் முடிந்திருக்க முடியும். பொது சிவில் சட்டத்தின் கீழ் சசி தரூரையும் சோயப் மாலிக்கையும் தண்டிக்க இயலுமா? தட்டிவிடுங்கள் அய்யா உங்களது கோட்பாடுகளை.

        • தென்றல் அவர்களுக்கு,

          // இசுலாமிய பெண்கள் தன் கணவர் இரண்டாவது திருமணம் செய்கிற பொழுது விவகாரத்து செய்ய இயலுமா என்று கேட்டார். ஆம் என்பதற்கு ஆயிசாவைச் சுட்டிக்காட்டலாம்//

          நான் படித்த ஒரு செய்தியின் படி, நீஙகள் இடமிருந்து வலமாக பார்க்கிறீர்கள். ஆயிசா விலக்கு பெறவில்லை. சோயப் தான் தலாக் சொல்லி ஆயிசாவை தள்ளி வைத்தார். அதுவும் வேறு வழியில்லாமல். இல்லாவிட்டால் சானியா என்ற புதுப்பெண் கிடைக்க மாட்டாள் என்பதற்காக.

  51. வினவுக்கும் ,வினவு வாசகர்களுக்கும்,

    ஒவொரு மதமும் அதன் மக்களும் முதலில் தம் தம் மதத்தில் உள்ள ஆண் ,பெண் முரண்பாடுகளுடன் கூடிய சட்டத்தை, வருணாசிர படிநிலை சாதிய முரண்பாடுகளை சரி செய்யவேண்டும் என்று கூறி தம்மை பிரதிநிதி படுத்தி கொண்டு பேச வேண்டுமே தவிர அடுத்தவர் மதத்தின் முரண்பாடுகளை முன்னிருதுவதன் மூலம், தன் மதம் சரியாக சட்டத்தை கொண்டு உள்ளது என்று மறைமுகமா கூறுவது தான் இங்கு இப்போது மத வெறி பின்னுட்டமாக வடிவேடுக்கின்றது என்ற சிறிய உண்மை உணிவேர் ,ஜோசப் ,ஹரி போன்றவர்களுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். நான் என் மதம் ஆகிய ஹிந்து மதத்தின் ஒரு சில குறைகள மட்டுமே என் பின்னுட்டம் 51.1,51.2 ல் சுட்டி காட்டி உள்ளேன். அதற்கு நான் கொடுக்கும் விடை யாது எனில் முதலில் நான் என் மத சட்ட அழுக்குகளை நீக்க முனைய வேண்டும் என்பதாகும் !கோவிலை விட்டு பார்பனை நீக்க வேண்டும் என்று நான் கோரவில்லை ! ஆனால் கோவிலில் ஹிந்து அனைத்து சாதியினரும் அர்சகர் ஆக ஹிந்து சிவில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று கோருகின்றேன். ஹிந்து சிவில் சட்டத்தில் பாலின வேறுபாடு அற்ற நிலையை கொண்டு வர [பின்னுட்டம் 51.2ல் ]சட்ட திருத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். என் மதமே சனாதன சாதிய இழி நிலையில் துயரும் போது நான் இஸ்லாமியர்களை பற்றி அவர்கள் மத சிவில் சட்டங்களை பற்றி குறை கூற எனக்கு என்ன தகுதி உள்ளது என்று சுயமாக சீந்தனை செய்கிறேன். நான் வணங்கும் சிவனிடமே சாதிய பேதமும் சனாதன படிநிலை பேரமும் உள்ள போது அடுத்தவர் மத நெறிகளை குறை கூறவோ ,குதர்க்கம் பேசவோ எனக்கோ என் போன்ற ஹிந்து மத பக்தர்க்ளுக்கோ ஏது உரிமை உள்ளது? நான் முதலில் என் மத மாசுக்களை கலைய முனைவேன் என்பதை வினவுக்கும் ,வினவு வாசகர்களுக்கும் உறுதி அளிக்கின்றேன்!

  52. Tamizh thirst,

    You have every right to take the stance you take but in a communist website like here,there is no barrier of religion.All religions and their people live in the same country and i have every right to criticize my religion or any other religion.

    If I am not ready to reflect upon my religion conciously and merely critize others,then you have a point but thats not the case,a true rationalist is never burdened by any constraints he is in,muslims will be criticized and they deserve to be criticized the most for their backward stone age practices.

    The Hindu right exists only because communists and others treat muslims as their love child & hindus get a step motherly treatment in their own country instead of being fair.

    • mr Harikumar,

      ஹிந்து மத சிவில் சட்டமே சாதிய இழி நிலையிலும் அதனை எதிர்கொள்ளும் ஹிந்து மக்களிடம் பாகுபாடு காட்டிக்கொண்டும் இருக்கும் போது, ஹரி குமார் என்ற சிவ பெயருடன் வினாவுக்கு வந்து, இங்கு பேசும் உமது நிலைப்பாடு மற்ற மதங்க்களை “any other religion” பற்றி பேசுவது என்றால் ஏன் இந்த கயமைத்தனம் mr hari ?

      கம்யூனிஸ்ட் வெப் சைட் என்றால் எதனையும் பின்னுட்டத்தில் பேசலாம் என்று கிடையாது ஹரி. நாட்டின் இறையாமைக்கு எதிரா மத சார்பின்மைக்கு எதிரா ஹிந்து திவிர வாதியா பேச உமக்கு வேறு நல்ல திவிரவாத வெப் சைட் உம் மதம் விருப்பூம் rss இடம் ஏதாவது வெப் சைட் இருக்கா அல்லது வேறு ஏதாவது மதவாத வெப் சைட் இருக்கா என்று நீர் தான் தேடிப்பார்க்க வேண்டும். RSS ,ISS போன்ற மதவாத திவிர வாத இயக்கங்களை முன்னிறுத்தும் மதவெறியர்களின் பின்னுட்டம்/கருத்து சுதந்திரம் தடை செய்ய படவேண்டும் என்பது தான் நாட்டின் மக்களின் விருப்பம் என்பது எல்லாருக்கும் தெரியுமே ஹரி

      அது தான் சொல்லுறோம் இல்ல மத சார்பற்ற நாட்டில் ஹிந்து ,இஸ்லாமிய திவிரவாதிகலானவர்களுக்கு ஏதும் பேச கருத்து சுதந்திரம் கிடையாது ஹரி. நம் நாட்டில் மக்களிடம் மதநல்லிணக்கத்தின் மீதான வெறுப்பை உமிழும் தீய சக்திகளை தடை செய்யவேண்டும் என்பது தான் பொது சிவில் சட்டத்தில் முதல் வாகியமாக் இருக்கவேண்டும் என்பது என் அறிவு பூர்வமான அவா ! உமது நிலை என்ன ஹரி ?

      சும்மா பேச்சுக்கு பேச கூடா து mr ஹரி ! நாட்டில் உள்ள ஒடுக்கபட்ட ,பிற்பட்ட ஹிந்து மக்களின் நலனுக்காக குரல் கொடுப்பது கம்யூனிஸ்ட் மக்கள் தான். சிதம்பரம் நடராஜர் கோவிலில் பார்பனர்கள் [தீச்சதர்கள் ] ஆதிக்கத்தை எதிர்த்து பிற சாதி ஹிந்து மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது கம்யூனிஸ்ட் மக்கள் தான் என்பது எல்லாருக்கும் தெரியும். ஹிந்து பழம் குடி மக்களை முதலாளிகள் அவர்களளின் பூர்விக இடத்தை விட்டு துறத்தும் போது அதற்க்கு எதிரா போராடுவதும் கம்யூனிஸ்ட் மக்கள் தான்! இப்படிபட்ட அவலங்களுக்கு RSS என்ன செய்யுது ஹரி ? முதலாகளுக்கும் பார்பனர்களுக்கும் வால்பிடித்து பிற சாதி ஹிந்து மக்களை இழிவுபடுத்துது ஹரி !

  53. வினவு,

    ஹிந்து சிவில் சட்டத்தில் ஹிந்து பார்பனர்களுக்கு மட்டும் உள்ள ,ஆனால் ஹிந்து பிற சாதிகளுக்கு இல்லாத சலுகைகளை இங்கு வினவின் பின்னுட்டமாகவோ அல்லது தனி கட்டுரையாகவோ தரவும்.

    மேலும் ஹிந்து சிவில் சட்டத்தில் உள்ள ஆணாதிக்க அம்சங்களை பட்டியல் இடவும்

    மேலும் India கிரிமினல் சட்டத்தில் குற்றம் இழைக்கும் பார்பனர்களுக்கு என்று மனு தர்மம் கோருவது போன்று சிறை தண்டனையில் எதேனும் சிறப்பு சலுகைகள் உள்ளனவா ? fist class provision like that?

    வீவாதத்திற்கு உதவும் அல்லவா vinavu?

  54. வினவு மற்றும் வினவு வாசக நண்பர்களுக்கு,

    நம் எல்லோருடைய வசதிக்காக இந்த விவாதத்தை இப்பதிவின் இரண்டாம் பகுதிக்கு நகர்த்துகிறேன். தொடுப்பு கீழே.
    https://www.vinavu.com/2014/10/09/common-civil-code-busting-the-myths-2/

    விவாதிப்பவர்கள் மற்றும் விவாதத்தை தொடர்பவர்கள் அந்த பதிவிற்கு சந்தா சேர்ந்து கொள்ளவும். நன்றி.

  55. இந்து சமூதாயத்தில் பெண் ஜீன்ஸ் போடுவதையெ ஜீரணிக்க முடியாத அரிகுமார், இஸ்லாமிய பெண்களுக்கு வக்காலத்து வாங்குவது வேடிக்கையாக இருக்கிறது! பொது சிவில் சட்டமென்பது இவர்களுக்கு, இந்துத்வா வாதிகளுக்கு, மனு சாஸ்திரமாத்தான் இருக்கவேண்டும்! இல்லையென்றால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் விஷயத்தில் இப்படி வழுக்குவாரா?

    “திருமணம் என்பது, ஒரு ஆணும், ஒரு பெண்ணும் என இருவர் சம்பந்தபட்டதாகத்தான் இருக்க வேண்டும். அரசு தலையீடு இருக்ககூடாது” என அம்பெத்கர் குறிப்பிட்டுள்ளதாக அறிகிறென்! ஆனால் வாரிசு உரிமை, சொத்து பங்கீடு முதலியன இப்போது சிலநீதி மன்ற தீர்ப்புகளின் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது!

    இந்து என்ற மதம் எப்படி வரையறுக்கப்பட்டதோ அப்படியே இந்து லா எனப்படும் சட்டமும், பன்முக கலாச்சார பின்னணியில் அவரவர் சமூக பழக்கவழக்கம் என கொழகொழத்துவிட்டது! மணவிலக்குக்கு பின் ஜீவனாம்சம் எனும் விதி தற்போது பெண்களுக்கு எதிராக ஆணுக்கும் பொருத்தமாகிவிட்டது!

    பலதார மணம் தண்டனைக்குட்பட்டாலும், பல கணவர் முறை இன்றும் கேரள,கர்னாடக மலைப்பகுதிகளில் நடை முறையில் உள்ளது, எல்லம்மாவிற்கு பொட்டு கட்டுதல் போல!

    படித்து,நாகரிகத்தில் புரளும் சிலரே மத அடிப்படையில் மண உரவை பார்க்கிரார்கள்! கிராமங்களில் இன்னமும் பண்டைய பழக்கமே கோலோச்சுகிறது! கோர்ட்டு படியேறி நீதி ‘வாங்க’ முடியாதவர்களுக்கு உள்ளுர் பஞ்சாயத்தே உச்சனீதி மன்றம்! படியளக்கும் சமூகமே பரமசிவன்!

Leave a Reply to தமிழ்-தாகம் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க