ஆர்.எஸ்.எஸ் ஆசியுடன் ஆறு கோடி இந்துக்களிடம் பிக்பாக்கெட் அடிக்கும் சொர்ணாக்காதான் பராசக்தி என்றால், பாரதமாதாவை பயங்கரமாதா என்றே அழைக்க வேண்டும்!
இந்து ராஷ்டிரத்தில் நாத்திகர்களுக்கும், கிறித்தவ நீதிபதிகளுக்கும் மட்டுமல்ல, ஊழல் முறைகேடுகளை எதிர்ப்போருக்கும் இடமில்லை! மனுநீதி வெர்ஷன் – 2 !
பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமன் பிறந்தானா என்று நீதிமன்றம் ஆராயக் கூடாது – அது இந்துக்களின் நம்பிக்கை!
அம்மா ஊழல் செய்தாரா என்றெல்லாம் நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது – இது இந்து மகாசபாவின் ஆணை!
கிறித்தவ வெறி பிடித்த குருட்டு நீதிபதி எழுதிய தீர்ப்பு என்று இந்துமதவெறியர் சாபம் விடுகிறார்! அந்த நீதிபதிக்கு கல்லறையில் கூட இடமில்லை என்று பொள்ளாச்சி கிறித்தவர் ஜோஸ்தாமஸ் பிரார்த்திக்கிறார். ஊழலுக்கு ஆதரவாக இதுதாண்டா மத நல்லிணக்கம்!
கரசேவைக்கு ஆளனுப்பி, நரவேட்டை மோடி பதவியேற்புக்கு நேரில் சென்று அருள்பாலித்த தாய்க்கு தமிழ் மு. உசேன் போன்ற பக்தர்கள் இருக்கையில் என்ன கவலை!
புகைப்படங்கள் – வினவு செய்தியாளர்கள்