privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்ஆபாச பத்திரிகைகள் எரிப்புப் போராட்டம்

ஆபாச பத்திரிகைகள் எரிப்புப் போராட்டம்

-

5 வயது சிறுமி முதல் 50 வயது மூதாட்டி வரை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகும் செய்திகள் நாட்டையே உலுக்குகிறது. நாள்தோறும் அதிகரித்து வரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு உண்மையான காரணம் என்ன என்று யோசிக்க வேண்டாமா? இதை தெரிந்துகொள்ள ஒரு 5 நிமிடம் ஒதுக்கி இந்த நோட்டீசை படிக்குமாறு அன்புடன் உங்களை கேட்டுக்கொள்கிறோம்.

செய்தித்தாளில் எங்கோ ஒரு மூலையில் அருவெருப்பாக இருக்கும் ஆபாச செய்திகள் இன்று ’கள்ளக்காதல்’ சினிமா நடிகர் நடிகைகள் பற்றிய கிசு, கிசுக்கள் – ஆபாசமான படங்கள், விளம்பரங்கள் என்று தினத்தந்தி, தினமலர் வகையறா பத்திரிக்கைகளின் முக்கிய செய்தியாகி விட்டன.

ஆபாச பத்திரிகைகள் எரிப்புஇது போதாதென்று மாணவர்கள், இளைஞர்களைக் குறிவைத்து ஆபாச வக்கிரங்களைத் தூண்டுவதற்கென்றே ஆனந்த விகடனின் டைம்பாஸ் -ம், நக்கீரனின் சினிக்கூத்தும் தனிப் பத்திரிக்கைகளாகவே வெளிவருகின்றன. “5 ரூபாயிலே டைம்பாஸ் ” என்று கூவி கூவி பள்ளி மாணவர்களையும் சுண்டி இழுத்து சீரழிக்கிறார்கள். ஒரு விபச்சார புரோக்கர் மறைவாக செய்யும் தொழிலை, தங்களுடைய லாபவெறிக்காக ’புனிதக் கடமையைப்போல‘ பகிரங்கமாக செய்து வருகிறார்கள் மானங்கெட்ட பத்திரிக்கை முதலாளிகள்.

டைம் பாஸ்
இளைஞர்களைக் குறிவைத்து ஆபாச வக்கிரங்களைத் தூண்டுவதற்கென்றே ஆனந்த விகடனின் டைம்பாஸ் -ம், நக்கீரனின் சினிக்கூத்தும் தனிப் பத்திரிக்கைகளாகவே வெளிவருகின்றன.

இன்னொரு பக்கம் சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். இவைகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை. சினிமாவில் “இரட்டை அர்த்த வசனங்கள்” என்று அருவெருப்பாக பேசப்பட்ட ஆபாச வசனங்கள் இப்போது நேரடியாக – பச்சையாகவே பேசப்படுகிறது. இன்று வெளிவரும் படங்களில் ஏ படம், யு படம் என்று எந்த வித்தியாசமாவது இருக்கிறதா? இல்லை. அனைத்துமே ஆபாசப் படங்கள்தான். இவற்றைத்தான் ‘இப்போதைய டிரெண்ட், மக்கள் விருப்புகிறார்கள்’ என்ற பெயரில் நம்மீதே பழியைப் போட்டு இந்த கேவலங்களை அனைவரையும் ரசிக்கவும் கற்றுக்கொடுத்துள்ளார்கள் சினிமா கழிசடைகள்.

ஆபாச பத்திரிகைகள் எரிப்புசாராயத்திற்கு அடிமையானவனைப் போலத்தான் சினிமாவில் வரும் இந்த ஆபாசங்களை பார்த்துப் பார்த்து ரசித்தவர்கள் அதோடு விட்டுவிடுவதில்லை. தங்கள் குடும்பத்திலும், நண்பர்களுடனும் அதையே பேசுகிறார்கள், ஆபாசவெறி தலைக்கேறி பின்னர் அதைப்போலவே வக்கிரமாக நடந்துகொள்கிறார்கள். நாட்டில் பாலியல் வக்கிரங்கள் பெருக இவை எல்லாம் காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

சினிமா தியேட்டருக்கு போய்தான் கெட்டுவிடுவோம் என்று நினைக்க வேண்டியதில்லை. அனைத்துத் தரப்பினரையும் மலிவாக சீரழிவின் உச்சத்திற்கே கொண்டு சென்றுவிட்டது தொலைக்காட்சி. நல்லது கெட்டது அறியாத பச்சைப் பிள்ளைகளையும், வெவ்வேறு கணவன், மனைவியையும் ஜோடி சேர்த்து ஆடவிட்டு, ஊரே பார்த்து ரசிக்கும் வக்கிரத்தை “ஜோடி நெ.1”, “மானாட மயிலாட” என நிகழ்ச்சிகளாக்கி கொடுப்பதையும், இந்த நிகழ்ச்சிகளில் பங்குபெற மாணவர்கள், இளைஞர்கள் ’தவம்’ கிடப்பதையும் என்னவென்று சொல்வது.

ஆபாச பத்திரிகைகள் எரிப்பு

தொலைக்காட்சிகளில் வரும் எந்த விளம்பரத்தையாவது சகிக்க முடிகிறதா? ஆண்கள் கட்டும் லுங்கி விளம்பரத்திலும் பெண்களை ஆபாசமாக காட்டுகிறார்கள் என்றால் இதைவிட வக்கிரமானது வேறு எதாவது இருக்க முடியுமா? கார்ப்பரேட் முதலாளிகளின் லாபவெறிக்காக மார்க்கெட்டில் குவிந்திருக்கும் விதமான செல்போன்களும், மெமரிகார்டுகளும் மாணவர்கள், இளைஞர்கள், இளம்பெண்களை பிடித்து இழுக்கின்றன. இதன் விளைவு, செல்போனில் உள்ள பேஸ்புக், வாட்ஸ் அப் தான் உலகம் என்று இளம்தலைமுறை மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

இந்த சீரழிவுகளில் இருந்து இளம் தலைமுறையை மீட்டெடுப்பது யார்? கடுமையான நடவடிக்கைகள் மூலம் அரசுதான் இதனை செய்ய வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள். ஆனால், உண்மை என்ன தெரியுமா? மேலிருந்து சீரழிவு கலாச்சாரத்தை மாணவர்கள் – இளைஞர்கள், மக்கள் மீது திட்டமிட்டு திணிப்பதே இந்த அரசுதான். படித்து அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டிய மாணவர்களுக்கு குடித்து சீரழிய கற்றுத்தரும் இந்த அரசிடமே தீர்வை எதிர்பார்ப்பது எப்படி சரியானது?

ஆபாச பத்திரிகைகள் எரிப்பு

இந்த சீரழிவுகள் எல்லாம் எப்பொழுதிருந்து அதிகரித்து வருகிறது என்று சற்று யோசித்துப் பாருங்கள். பன்னாட்டுக் கம்பெனிகளின் லாபவெறிக்காக 1991-க்குப் பின் நம் நாட்டில் புகுத்தப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வரும் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகள்தான் இந்த மேலைநாட்டு சீரழிவு கலாச்சாரத்தையும் இறக்குமதி செய்துள்ளது. இந்த கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரமும், இயற்கை வளங்களும் சூறையாடப்படுவதன் விளைவாக பாதிக்கப்பட்டு வாழ்கையை இழந்து வரும் உழைக்கும் மக்கள், அதை எதிர்த்துப் போராடாமல் இருக்கத்தான் திட்டமிட்டு கலாச்சார சீரழிவுகளில் மூழ்கடிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆபாச பத்திரிகைகள் எரிப்புஏற்கனவே இச்சமூகத்தில் நிறைந்துள்ள ஆணாதிக்கத்தோடு இந்த தெள்ளவாரி கலாச்சாரமும் சேர்ந்து பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளையும், சமூக சீரழிவையும் தீவிரப்படுத்தி வருகின்றன. இதற்கான தீர்வை இந்த சீரழிந்த அரசமைப்புக்குள்ளேயே தேடமுடியாது. பாலியல் வக்கிரங்களை பரப்பிவரும் மறுகாலனியாக்க தெள்ளவாரி கலாச்சாரத்தை துடைத்தெறிய இந்த அரசமைப்புக்கு வெளியே உழைக்கும் மக்கள் அணிதிரண்டு போராடித்தான் தீர்க்க முடியும். அதற்கான மாற்று அதிகார அமைப்புகளை கட்டியெழுப்புவோம். அரசியல் எழுச்சிக்கு உருவாக்குவோம். அதற்கான தொடக்கமாக மாணவ – மாணவிகள், இளைஞர்கள், இளம்பெண்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் அமைப்பாக அணிதிரள்வோம். பாலியல் வக்கிரங்களைத் தூண்டும் ஆபாச பத்திரிக்கைகளைத் தீயிட்டு கொளுத்துவோம்!

அன்பார்ந்த மாணவ – மாணவிகளே, இளைஞர்களே, உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே

எமது பு.மா..மு சார்பில் வரும் டிசம்பர், 17 ந்தேதி சென்னையில் பாலியல் வக்கிரங்களைத் தூண்டும் ஆபாச பத்திரிக்கைகள் எரிப்புப் போராட்டம் நடத்த உள்ளோம்.

protest-against-vulgarity-poster

இதை ஆதரியுங்கள். இப்போராட்டத்தில் எங்களோடு இணையுங்கள்.

பாலியல் வக்கிரங்களைத் தூண்டும்
ஆபாச பத்திரிக்கைகளைத் தீயிட்டு கொளுத்துவோம்!

டிசம்பர், 17, 2014. சென்னையில்

ஆபாச பத்திரிகைகள் எரிப்புப் போராட்டம்

எங்களைத் தொடர்புகொள்ள 9445112675.

துண்டறிக்கை

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
சென்னை