privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கமொழிப்போர் தியாகிகள் நாள் - கோவை, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம்

மொழிப்போர் தியாகிகள் நாள் – கோவை, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம்

-

மிழ்நாட்டு மாணவர்களின் இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் பொன்விழா ஆண்டினை நினைவு கூர்ந்து அப்படி ஒரு மொழிப்போரினை மீண்டும் துவக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தமிழகம் முழுவதும் பேருந்து, ரயில், குடியிருப்புப் பகுதிகள் என எல்லா இடங்களிலும் மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறது.  சைக்கிள் பேரணி, கல்லூரிகளில் வாயில் நாடகம் என பல வடிவங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

ஜனவரி 25, 2015 அன்று மொழிப்போர் தியாகிகள் நாள் புரட்சிகர அமைப்புகளால் தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டது. அது தொடர்பான தகவல்கள், புகைப்படங்களின் இரண்டாவது பகுதி.

2. கோவையில் மொழிப்போர் தியாகிகள் தின அரங்குக் கூட்டம்

பிறந்திருக்கும் 2015 இந்தித் திணிப்பிற்கு எதிரான மாணவர் போராட்டத்தின் பொன்விழா ஆண்டு.

50 வருடங்களுக்கு முன்பு இதே தமிழகத்தில் மொழிக்காக மொழியின் தனித் தன்மையை காக்க மத்திய அரசை எதிர்த்து  ஒரு போராட்டத்தை ஒரு தேசிய இனம் நடத்தியது. அது அமைதியான உண்ணா விரத போராட்டம் அல்ல. உள் நாட்டுக்குள்ளேயே மக்களை, ஒரு தேசிய இனத்தை கட்டுப்படுத்த முடியாமல் ராணுவத்தை ஏவும் அளவுக்கு வீரியமான பிரமாண்டமான போராட்டமாக விரிந்தது. இந்த இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டத்தின் கேந்திரமான கண்ணி மாணவர்களும் இளைஞர்களுமே.

மொழி என்னும் ஒரு தொடர்பு ஊடகத்திற்காக, ஒரு போராட்டத்துக்கு இத்துணை உயிர் இழப்பு, அரச ஒடுக்கு முறை என்பதை இந்தித் திணிப்பிற்கு எதிரானது என்று மட்டும் அல்லாது, பண்பாட்டு ரீதியான பார்ப்பனிய இந்துத்துவா பண்பாட்டு படையெடுப்புக்கு எதிரான ஒரு போர் என கொள்ள வேண்டும். அப்படி பாரிய பொருளில் புரிந்து கொள்ளும் போதே இதன் முழுப் பரிமாணத்தையும் நம்மால் விளங்கிக் கொள்ள இயலும்.

ஒரு வகையில் பார்த்தால் முழு இந்தியாவிலும் இந்தி பேசாத மக்களையும் அவரவர்தம் தேசிய இனத்தையும் பாதுகாக்க தூண்டியதே தமிழக மாணவர் போராட்டம் தான். அப்போதே, பிற மாநில மாணவர் அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அதன் வாயிலாக போராட்டங்களை முன்னெடுத்து சென்றவர்கள் தமிழகத்தில் உருவாகிய தமிழ்நாடு மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டக் குழுவினர். தமிழகத்தில், தேசியக் கட்சிகளுக்கு மாற்றாக முதன் முதலாக ஒரு மாநிலக் கட்சி மாநிலத்தில் ஆட்சியில் அமர காரணமாய் இருந்ததும் இந்தப் போராட்டமே. அப்படி தமிழகம் முழுவதும் வீச்சான போராட்டத்தில் தமிழகம் கனன்று கொண்டிருந்த தருணங்கள் அவை.

தமிழ் மக்களின் மரபிலேயே மறை பொருளாக இருந்த பார்ப்பனிய எதிர்ப்புணர்வை ஊதுகுழல் கொண்டு வெளிக் கொணர்ந்த திராவிடக் கட்சிகளின் கை மீறி தமிழகமெங்கிலும் தன்னெழுச்சியாக நடை பெறத் துவங்கியது போராட்டம். பல நூறு மாணவர்கள் ராணுவத்தின் வெறியாட்டத்திற்கு பலியாயினர். சுடச்சுட மிளிரும் பொன் போல,  உயிர்பலிகள் போராட்டத்தின் அடியுரமாக மாறி ஆளும் வர்க்கத்தை கலக்கத்திற்குள்ளாக்கியது. வேறு வழியே இல்லாது இறுதியில் அரசு பணிந்தது. இந்தியுடன் ஆங்கிலமும் தொடரும் என அறிவித்தது.

பார்ப்பனியத்தை தோற்கடிக்க வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்திய தேசிய இனம் இன்று உலகமயமாக்கலின் கீழ் படிப்படியாக சிதைந்து வருகிறது. இந்த போராட்டத்தின் முழுப் பலனையும் அறுவடை செய்த திராவிடக் கட்சிகளையும் விழுங்கி செரித்திருக்கிறது இந்த உலகமயமாக்கல்.

நிலவும் பாரதிய ஜனதா ஆட்சி வந்து 7 மாதங்களுக்குள் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு அம்பலப்பட்டு வருகிறது. மக்கள் நாளுக்கு நாள் நெருக்கடிக்குள் சிக்குண்டு வருகின்றனர். இந்த அரசு எந்திரமும் அதன் கட்டமைப்பும் மீள முடியாத நெருக்கடிக்குள் சிக்கி வருகிறது. மக்களின் போராட்டங்களின் வரைமுறைகளும் எல்லைகளும் உடைந்து வருகின்றன.

எதிர் வரும் 2015-ம் ஆண்டு முழுக்க முழுக்க மக்கள் உரிமைக்கான போராட்டங்களின் ஆண்டாக திகழும் என்று அதன் துவக்க மாதத்திலேயே நினைவுபடுத்துகிறது பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து மாணவர்கள் நடத்தும் இந்த போராட்டம்.

கோவையில் சனவரி 25 அன்று ஆரிய பார்ப்பன எதிர்ப்பு தமிழ் மரபின் வீரியமான குறியீடான தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும் மொழிப்போரின் அவசியம் குறித்து முழக்கமெழுப்பியவாறு ஊர்வலமும், மொழிப் போர் தியாகிகள் நாள் நினைவேந்தல் அரங்குக் கூட்டமும் நடைபெற்றது.

கோவை பெரியார் மாலை
மொழிப்போர் நினைவு நாளில் கோவையில் காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பு.மா.இ.மு. தோழர்கள்

காலை 10:00 மணிக்கு கோவை காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து நாற்சந்திகளும் அதிர முழக்கமிட்டோம். அதன் பின்னர், பேருந்து நிலையத்துக்குள் சென்று பரவலாக துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தோம்.

கோவை பேரணி
மொழிப்போரை நினைவு கூர்ந்து முழக்கங்கள் – கோவை வீதிகளில்

காந்திபுரத்திலிருந்து வி‌.கே‌.கே மேனன் சாலை வழியாக சித்தாபுதூர் சாலையைச் சுற்றி மீண்டும் காந்திபுரம் வரை முழக்கமிட்டபடியே ஊர்வலமாகவும் பிரசுர விநியோகமும் செய்யப்பட்டது.

போக்குவரத்து நெரிசலான கோவையின் பிரதானமான சாலைகளான அவற்றில் நம் தோழர்கள் முழக்கமிட்டபடியும் இரு மருங்கிலும் உள்ள கடைகளிலும் வீடுகளிலும் பிரசுரங்களை விநியோகித்த வாறும் இளம் மாணவர்களிடம் விளக்கி பேசியவாறும் வந்தது, மக்கள் மத்தியில் பரவலான கவன ஈர்ப்பை ஏற்படுத்தியது. பலரும் துண்டுப் பிரசுரங்களை கேட்டு கேட்டு வாங்கினர். போக்குவரத்து காவலர்களும் துண்டுப் பிரசுரங்களை வாங்கினர்.

ஊர்வலம் முடிந்தவுடன் டூவீலரில் அமர்ந்து இரு புறமும் கொடிகளை பிடித்தவாறே அரங்குக் கூட்டத்திற்கு சென்றோம்.

காலை 11:30 வாக்கில் கூட்டம் துவங்கியது. கூட்டத்திற்கு பு.மா.இ.மு வின் கோவை மாவட்ட அமைப்பாளர் தோழர் பாபு தலைமை தாங்கினார். அவர் தனது தலைமை உரையில், இந்தித் திணிப்பு போராட்டத்தை பற்றியும் அது இந்தித் திணிப்பு மட்டுமல்ல, பார்ப்பன பண்பாட்டு திணிப்பு என்பதனை பற்றி விளக்கி பேசினார்.

பு.மா.இ.மு வின் கோவை மாவட்ட அமைப்பாளர் தோழர் பாபு
பு.மா.இ.மு வின் கோவை மாவட்ட அமைப்பாளர் தோழர் பாபு

அடுத்ததாக சிறப்புரையாற்றிய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கோவை மாவட்ட செயலர் மணிவண்ணன் இந்தித் திணிப்பு போராட்டத்தை பற்றியும் தனது 12-வது வயதில் தான் அதில் கலந்து கொண்டதை பற்றியும் காங்கிரஸின் துரோகத்தையும் விளக்கிப் பேசினார். அடுத்து அவர் தற்போதைய மாநில மற்றும் தேசிய அரசியல் கட்சிகளும் தமிழ்த்தேசிய இயக்கங்களும் இந்த நிகழ்வை ஒட்டி கடனுக்கென்று செய்வதை போல் மக்களிடம் பிரச்சாரம் செய்வதை அம்பலப்படுத்தி பேசினார். இத்துடன் சமீபத்திய விடயங்களான பெருமாள் முருகன் விவகாரம் முதலியவற்றில் இந்துத்துவ நடவடிக்கைகளை விளக்கி பேசியது இளைஞர்களுக்கு பலனுள்ளதாக இருந்தது.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கோவை மாவட்ட செயலர் மணிவண்ணன்
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கோவை மாவட்ட செயலர் மணிவண்ணன்

இறுதியாக பு.மா.இ.மு வின் தோழர் திலீபனின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.

தோழர் திலீபன்
பு.மா.இ.மு வின் தோழர் திலீபனின் நன்றியுரை

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கோவை.

3. கடலூரில் பேரணி, உறுதியேற்பு, பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

23/01/15 அன்று கடலூர் பெரியார் கலை கல்லூரி மாணவர்கள் மத்தியில் துண்டு பிரசாரம் அடித்து விநியோகம் செய்து பெரியார் சிலை முன் மாணவர்கள் கூடி சமஸ்கிருத மயமாக்கலுக்கு எதிராக உறுதி மொழி ஏற்றனர்.

கடலூரில் சமஸ்கிருத மயமாக்கலுக்கு எதிராக உறுதிமொழி
கடலூரில் சமஸ்கிருத மயமாக்கலுக்கு எதிராக உறுதிமொழி

கடலூர் நகரம் முழுவதும்

  • மொழிப்போர் தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்தி வீறுகொண்டெழுவோம்!
  • தமிழ் தேசிய இனத்தின் கடவுள் – ஆன்மீக மறுப்பு, வேத, வைதீக – பார்ப்பன, சமஸ்கிருத – இந்தி எதிர்ப்பு பாரம்பரியத்தை போர்வாளாக ஏந்துவோம்!
  • மீண்டும் படையெடுத்து வருகிற ஆரிய – பார்ப்பன, வேத, வைதீக, சமஸ்கிருத – இந்தி ஆதிக்க பண்பாட்டை போரிட்டுவீழ்த்துவோம்!
  • ஆரிய – பார்ப்பன எதிர்ப்புப் போரின் தளப்பிரதேசமாக தமிழ்நாட்டை மீண்டும் கட்டியமைப்போம்!

என்ற முழக்கங்களைக் கொண்ட சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டன.

கடலூரில் சமஸ்கிருத மயமாக்கலுக்கு எதிராக
பெரியார் சிலைக்கு மாலை

துண்டு பிரசுரம் அடித்து அரசு பள்ளிகளிலும்,  K.N.C பெண்கள் கலை கல்லூரிகளிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம், ஜனநாயக சிந்தனையாளர்களிடம் விநியோகிக்கபட்டது.

25/01/15 அன்று பகுதி இளைஞர் மாணவர்கள் கலந்து கொண்டார்கள். அன்று பெரியார் சிலை குப்பை கூளங்களாக இருந்ததை தோழர்கள் சுத்தம் செய்தனர்.

அப்போது அங்கு வந்த தமிழ் உணர்வாளர் ஒருவர் அந்த சிலை சுத்தம் செய்த தோழர்களிடம், “இன்று என்ன நாள் பெரியாரை சிலையை சுத்தம் செய்றீங்க” என்று கேட்டார்.

“மொழிப்போர் தியாகிகளின் பொன்விழா” என்றதும்,

“பெரியாரை வைத்து பிழைக்கிறவர்கள் ஒன்றும் செய்யாதபோது கம்யுனிஸ்டு தோழர்கள் ஆன நீங்கள் வந்து செய்றீங்க” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

காலை 10.30 மணிக்கு உழவர் சந்தையில் பேரணி  தொடங்கியது  தோழர்கள் போர்க்குணத்தோடு முழக்கமிட்டு நடந்து வந்தனர்.

தோழர் புருஷோத் வரவேற்று பேசினார். தொடர்ந்து தோழர் கருணாமூர்த்தி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

மீண்டும் படையெடுத்து வருகிற பார்ப்பன பயங்கரவாதிகளை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என்றும் தமிழில் பயின்றவர்களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை தரவேண்டும் என்றும் பள்ளிகளில் பயிற்று மொழியாக தமிழை முன்னிறுத்த வேண்டும், வழக்காடும் மொழியாக நீதிமன்றங்களில் தமிழே பயன்படுத்த வேண்டும், அலுவலகங்களில் தமிழே அலுவல்மொழியாக பயன்படுத்த வேண்டும் என்றும் விளக்கவுரையாற்றினார்.

கடலூர் மொழிப்போர் நினைவுநாள்
பெரியாரின் சிலைக்கு தோழர் செந்தமிழ் மாலை அணிவித்தார்

பெரியாரின் சிலைக்கு தோழர் செந்தமிழ் மாலை அணிவித்தார்.  பார்ப்பனிய எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.

வீர வணக்கம்! வீர வணக்கம்!
மொழிப்போர் தியாகிகளுக்கு!
வீர வணக்கம்! வீர வணக்கம்!

நெஞ்சிலேந்துவோம்! நெஞ்சிலேந்துவோம்
மொழிப்போர் தியாகிகளின்
நினைவை நெஞ்சிலேந்துவோம்!
போர்வாளாக ஏந்துவோம்!
தமிழ் தேசிய இனத்தின்
கடவுள் மறுப்பு – ஆன்மீக மறுப்பு,
வேத, வைதீக – பார்ப்பன,
சமஸ்கிருத – இந்தி எதிர்ப்பு
பாரம்………பரியத்தை
போர்வாளாக ஏந்துவோம்!

போரிட்டு வீழ்த்துவோம்!
மீண்டும் படையெடுத்து வருகிற
ஆரிய – பார்ப்பன, வேத, வைதீக,
சமஸ்கிருத – இந்தி
ஆதிக்க பண்பாட்டை
போரிட்டு வீழ்த்துவோம்!

கட்டியமைப்போம்! கட்டியமைப்போம்!
ஆரிய – பார்ப்பன எதிர்ப்புப் போரின்
தளப்பிரதேசமாக தமிழ் நாட்டை
கட்டியமைப்போம்! கட்டியமைப்போம்!

இவன்
புரட்சிகர மாணவர்
இளைஞர் முன்னணி
கடலூர்
தொடர்புக்கு
:9791776709

4,5. சிதம்பரம், விருத்தாசலம்

சிதம்பரத்தில் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி பிரச்சாரம் செய்து மாணவர்களுக்கு சமஸ்கிருத பண்பாட்டு படையெடுப்பை எதிர்ப்பதற்கு உறுதிமொழி செய்வித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

விருத்தாசலம் பகுதியில்  தியாகி இராசேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து உறுதியேற்புப் கூட்டம் நடத்த திட்டமிட்டு மக்கள் கூடும் இடங்களிலும் கல்லூரியிலும் சுவர்விளம்பரம் எழுதப்பட்டது.  பேருந்து, தாலுக்கா அலுவலகம், மற்றும் தனிநபர்களிடமும் பிரசுரம் கொடுத்து மீண்டும் படையெடுத்து வருகிற வேத, வைதீக, சமஸ்கிருத இந்தி ஆதிக்க பண்பாட்டை போரிட்டு வீழ்த்த வேண்டிய அவசியத்தை விளக்கி பிரச்சாரம் செய்யப்பட்டது.

virudai-anit-hindi-imposition-protest-01கல்லூரி, பள்ளிகளுக்கு சனவரி 25 விடுமுறை நாள் என்பதால் 23-1-2015 அன்று பள்ளி கல்லூரிகளில் உறுதியேற்பு கூட்டம் நடத்தப்பட்டது. காலை 7 மணிக்கு விருத்தாசலம் நகரிலிருந்து பல்வேறு கல்லூரிகளுக்கு செல்லும் பேருந்துக்கு காத்திருந்த மாணவர்களிடம் பிரசுரம் கொடுத்து பேருந்துகளிலும் மொழிப்போர்த் தியாகிகளின் தியாகத்தையும், இன்றைய சூழ்நிலையில் மீண்டும் அப்படிபட்ட தியாகம் தேவைப்படுவதையும் விளக்கிப் பேசியவுடன் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

virudai-anit-hindi-imposition-protest-02விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி நுழைவாயிலில் மாணவர்களிடம் இந்தித் திணிப்புப் எதிர்த்து போராட உறுதியேற்க கூறியபோது ஆளும்வர்க்கம் சொல்லக்கூடிய சடங்குத்தனமான உறுதிமொழி மட்டுமே பழகியிருந்த மாணவர்களிடம் கையை மேலே உயர்த்தி வர்க்க ரீதியான உணர்வைவூட்டும் உறுதிமொழியை மாணவர்கள் ஏற்றனர். அதேபோன்று அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வகுப்பறைகளுக்கு சென்று மாணவர்களிடத்தில் பேசியதில் இந்தித் திணிப்பை எதிர்த்து போராட உறுதிமொழி ஏற்றனர்.

virudai-anit-hindi-imposition-protest-03விருத்தாசலம் புமாஇமு தோழர்களும், அண்ணாமாலை பல்கலைக் கழகக மாணவர்களும் பங்கேற்று மொழிப்போர் தியாகி ராசேந்திரன் சாலையில் துவங்கி ராசேந்திரன் சிலையை நோக்கி சென்ற பேரணி ஆரிய – பார்ப்பன எதிர்ப்புப் போருக்கு மக்களை அறைகூவி அழைக்கின்ற முழக்கங்களை விண்ணதிர முழக்கமிட்டு சென்றது அப்பகுதி மக்களுக்கும் மாணவர்களுக்கும் புதிய விசயமாக இருந்தது.

virudai-anit-hindi-imposition-protest-06தி.மு.க, அ.தி.மு.க தொடங்கி எல்லா ஓட்டுக்கட்சிகளும் மொழிப்போர் உணர்வை ஊட்டுவதற்கு மாறாக சவக்களையுடன் அமைதி ஊர்வலமாகவே சென்றனர்.

  • அரசுப் பள்ளிகளில் ஆங்கிலத்தை திணித்து தழிழை ஒழிக்கமுனையும், தில்லைக் கோவிலை சிந்தாமல் சிதறாமல் பார்ப்பன தீட்சிதர்க்கு அள்ளிகொடுத்த பார்ப்பன பாசிச ஜெயாவின் பாதந்தாங்கிகள் தியாகி இராசேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்தது வெட்ககேடான ஒன்று.
  • தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் கருணாநிதி தமிழுக்காக தமிழ் வளர்ச்சிக்காக துரும்பைக்கூட அசைக்காதவர் அவருடைய உடன்பிறப்புகள் பிழைப்புக்காக மாலை அணிவித்தனர்.
  • தமிழ் மொழியின் விரோதியான பாஜக வின் ஐந்தாம் படைகளான தேமுதிக, பாமக, மதிமுக, ஆகியவர்களும் சம்பிரதாயத்துக்கு வந்து மாலை அணிவித்தார்கள்.
  • வாண்டையார் சாதிவெறிக் கும்பலோ  ஊளையிட்டுக்கொண்டு சென்றன.

அம்மா, தளபதி கேப்டன் வாழ்க என்று முழக்கமிட்ட இந்த ஓட்டுப் பொறுக்கிகள் இன்று நடக்கும் பார்ப்பன – சமஸ்கிருத பண்பாட்டு ஆக்கரமிப்புக்கு எதிராக மறந்தும் குரல் கூட எழுப்பவில்லை. இதற்கான தகுதியோ உணர்வோ ஆற்றலோ கிடையாது என்பதை பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்திக் கொண்டனர்.

தமிழ் தேசிய இனத்தின் கடவுள் – ஆன்மீக மறுப்பு, வேத, வைதிக – பார்ப்பன, சமஸ்கிருத – இந்தி எதிர்ப்பு போராட்ட பாரம்பரியத்தை போர்வாளாக ஏந்த அறைகூவி அழைத்த புமாஇமு பேரணி சிலையை அடைந்ததும் உணர்ச்சி ஊட்டும் வகையில் இந்தித் திணிப்பு எதிர்புப் போராட்டத்திற்கு அறைகூவி மாணவர்கள் முழக்கமிட்டனர்.

மொழிப்போர் தியாகி ராசேந்திரன் சிலைக்கு விருத்தாசலம் பு. மா. இ. மு அமைப்பாளர் தோழர் முருகானந்தம், மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு, அண்ணாமலை பல்கலைகழக பு.மா.இ.மு மாணவர் அஞ்சாநெஞ்சன் ஆகியோர் மாலையிட்டு முழக்கமிட்டனர்.

virudai-anit-hindi-imposition-protest-05அதன்பின் தோழர் ராஜு சிறப்புரையாற்றினார்.

“தமிழறிஞர்களை விட தமிழ் உழைக்கும் மக்களே மொழியைக் காக்க போராடி உயிர் துறந்து பார்ப்பன பண்பாட்டு ஆக்கிரமிப்பை முறியடித்தனர். 1000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த ஆரிய பார்ப்பன பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிரான போர் இன்று வரை தொடர்கிறது.

1965-ல் வீறுகொண்டெழுந்த மாணவர்கள், இளைஞர்களின் மொழியை காப்பதற்கான போராட்டம் இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து தேசிய இனங்களின் தாய்மொழிகளையும் காத்தது. உலகில் வேறெங்கும் இல்லாத அளவு மைய அரசு ராணுவத்தை ஏவி நூற்றுக்கணக்கான மாணவர்கள் இளைஞர்களை சுட்டுப் பொசுக்கி மொழியை காப்பதற்கான போராட்டத்தை ஒழித்துக்கட்ட முனைந்தது.

தோழர் ராஜூ உரை
தோழர் ராஜூ உரை

சுட்டு கொல்லக் கொல்ல போராட்டத் தீ மேலும் மேலும் பற்றி படர்ந்து இந்திய அரசை ஆட்டம் காண வைத்தது. பயந்து போன மத்திய அரசு இந்தி திணிப்பை கைவிட்டு, அனைத்து தேசிய இனங்களின் மொழிகளை அங்கிகரித்தது.

இன்றோ பார்ப்பன பாசிச பாஜக மீண்டும் ஒரு பண்பாட்டு ஆக்கிரமிப்புப் போரை தொடுத்துள்ளது.

  • பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வை கற்பிக்கும் மனுதர்மம், பகவத்கீதை உட்பட பல பிற்போக்கு மூடத்தனத்தை கற்பிக்கும், இவற்றிற்காக கொலை, களவு, பொய், கற்பழிப்பு போன்ற கிரிமினல் குற்றங்களை செய்யத்தூண்டும் வேத நூல்களை கொண்டதே சமஸ்கிருத மொழியின் பண்பாடு.
  • ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” , “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என சமத்துவத்தை உயர்த்திப் பிடித்த “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” கொல்லாமை, கள்ளுண்ணாமை, பொய் சொல்லாமை, பிறன்மனை நோக்காகமை போன்ற உயரிய அறங்களை கற்பிக்கின்ற பண்பாடுதான் நமது பண்பாடு.

இந்த தமிழையும் தமிழ் பண்பாட்டையும் காக்க ஆரிய பார்ப்பன பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக மொழிப்போர் தியாகிகளின் வழியில் மீண்டும் வீறுகொண்டெழ உறுதியேற்போம்” என அறைகூவி அழைத்து தனது உரையை முடித்தார்.

அதன்பின் ஆரிய பார்ப்பன எதிர்ப்பு போரின் தளப்பிரதேசமாக தமிழகத்தை கட்டி அமைப்போம் என மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுகொண்டனர்.

virudai-anit-hindi-imposition-protest-12தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
அமைப்புக் குழு
விருத்தாசலம்

(சென்னையில் நடந்த பிரச்சாரம், தெருமுனைக்கூட்டம்)

– தொடரும் (திருச்சி, வேதாரண்யம், விழுப்புரம், கரூர், பெண்ணாகரம், புதுச்சேரி நிகழ்வுகள் மற்றும் அறந்தாங்கியில் நடக்கவிருக்கும் பொதுக்கூட்டம் பற்றிய செய்திகள்)

  1. சிங்கப்பூர், ஏன் இலங்கையில் கூட பாஸ்போர்ட் தமிழில் அச்சடிக்கப்படுகிறது. ஏன் இந்தியாவில் ஹிந்தியில் மட்டும் அச்சடிக்கப்படுகிறது ? தமிழ் என் புறக்கணிக்கப்படுகிறது ? திராவிட ஓட்டுக்கட்சிகள் என்ன செய்து விட்டன ??

Leave a Reply to இளவரசன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க