உங்கள் ஊருக்கு பஸ் வேண்டுமா? ஓலையூர் மாணவர்களின் போராட்டத்தை முன்னெடுப்போம்!
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுக்காவில் உள்ள ஓலையூர் விருத்தாசலம், ஜெயங்கொண்டம் போகும் வழியில் 5 கி.மீ தொலைவில் உள்ள கிராமம்.
இங்கு 1800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள். இம்மக்கள் விவசாயம் தொடர்பான தேவைகளுக்கும், கொத்தனார், சித்தாள் வேலை, கடை வேலை என பிற வேலைகளுக்கும் விருத்தாசலம் நகரத்தை நோக்கிதான் வருகிறார்கள்.
அரியலூர் மாவட்டத்தில் ஓலையூர் கிராமம் இருந்தாலும் விருத்தாசலம் தான் பிழைப்புக்கு இடம். அதே போன்று பள்ளி, கல்லூரிகளுக்குக் கூட விருத்தாசலம் தான் வரவேண்டும் என்ற நிலை.
அப்படியிருக்கையில் ஓலையூர் மட்டுமல்லாமல் வண்ணாகுடிகாடு, அழகாபுரம், சிலுவைச்சேரி, ஆகிய கிராமங்களின் வழியாக ஆண்டிமடம் செல்லும் பேருந்துகளை நிறுத்திவிட்டு தடம் எண் 37 பேருந்தை மட்டும் இயக்குகிறார்கள். அதனால், பள்ளி, கல்லூரிகளுக்கும், செல்லும் மாணவர்கள் சரியான நேரத்திற்கு போகமுடியவில்லை. மேலும், உயிரை பணயம் வைத்து சாகசம் செய்யும் விதமாக, கூட்ட நெரிசலுடன் பேருந்து பயணம் இருக்கிறது. இதனாலே பல மாணவிகள் மேல் படிப்பை படிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். அதே போன்று, பிழைப்பு தேடி வெளியூர் செல்லுபவர்களும் காலை நேரத்தில் வேலைக்கு போவது கடினமாக உள்ளது. வேலை முடிந்து மாலை வீட்டுக்குப் போக 5 மணிக்கு பேருந்தை விட்டுவிட்டால் இரவு 10.30-க்கு தான் வீடு திரும்ப முடியும் என்ற நிலை.
தெருத்தெருவாக ஓட்டுக்கேட்டு ஜெயித்த பிறகு இனோவா காரில் பறக்கிறார்கள் ஓட்டுக்கட்சிக்காரர்கள் , ஜெயிக்க வைத்தவர்கள் இந்த அவல நிலையில் இருக்கிறார்கள்.
ஆனால் ‘அரசு மக்களுக்காக இருக்கிறது’, ‘நாடு வளர்ச்சி பாதையை நோக்கி போகிறது’ என்கிறார்கள். கிராமங்களின் உள்ள மக்களின் வாழ்க்கையை பற்றி தெரியாத இன்னும் சிலர், ‘நம் நாடு வல்லரசு ஆயிட்டோம்’ என்று பிதற்றுகிறார்கள்.
படிக்க பள்ளிக்கூடம் இல்லாமலும் , மருத்துவ தேவைக்கு போவதற்குக் கூட அவசரத்திற்கு பேருந்து இல்லாமலும் நிலை.
இந்தப் பிரச்சனைக்கு தீர்வாக, “கூடுதலாக பேருந்து விட்டால், பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்” என மக்கள் கூறுகிறார்கள். அதனால், “மனுகொடுத்து பேருந்து வரவழைக்கலாம்” என்று மக்களிடம் வீடுவீடாக கையொப்பம் வாங்கி ஓலையூர் கிராமத்து மாணவர்களும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களும் இணைந்து 16 – 02 – 2015 அன்று விருத்தாசலம் கோட்டாச்சியரிடம் மனுகொடுத்தோம்.மனுவை வாங்கி எங்கள் முன்னாகவே, “உடனடியாக பேருந்து இயக்குவதற்கு முயற்சி செய்கிறேன்” என்று கூறி கொண்டு கையெழுத்து போட்டார்.
ஒரு வாரம் கழித்து, மீண்டும் கோட்டாசியரை சந்தித்து பேருந்து விடுவது குறித்து கேட்டபோது. “நீங்கள் கொடுத்த மனுவை மேலே அனுப்பிவிட்டோம். இன்னொரு மனு கொடுங்கள்” என்று கேட்டார். உடனே நகல் எடுத்து கொடுத்தோம்.
மீண்டும் 2 வாரம் கழித்து கேட்டபோது, “ஐயையோ! ஓலையூர் அரியலூர் மாவட்டம். நீங்க அங்கேதான் மனுகொடுக்க வேண்டும்” என முடித்துக் கொண்டார்.
“முதலில் மனுகொடுக்கும் போதே அரியலூர் மாவட்டம் என்று தெரியும். விருத்தாசலம் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து தான் எங்கள் ஊருக்கு பேருந்து வருகிறது. அதனால் நீங்கள் முயற்சி செய்து முன்பு வந்து கொண்டிருந்த பேருந்துகளை இயக்கினால் போதும்” என்று பேசியிருந்தோம்.
ஆனால் அவர் ”உங்கள் ஊருக்கு பேருந்து இயக்கினால் லாபம் இல்லை” என்ற வக்கிரமான காரணத்தை கூறி தன் வர்க்க புத்தியை காட்டினார்.
இந்த அரசு மக்களுக்கானது இல்லை என்பதை அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுக்காவில் உள்ள கோட்டாசியரிடம் மனுகொடுத்து பேசும்போது மேலும் தெளிவானது. “உங்கள் ஊருக்கு விருத்தாசலம் பணிமனையில் இருந்துதான் பேருந்து விட வேண்டும். அதனால் நீங்கள் விருத்தாசலம் கோட்டாசியரிடம் சொல்லுங்கள்” என்று முடித்துக்கொண்டார்.
பேருந்து கோரும் மாணவர் இளைஞர்களை அரியலூர் – விருத்தாசலம் என்று அலையவிட்டு இது நாள் வரைக்கும் பேருந்தை இயக்காமல் இருந்து வருகிறார்கள். மேலும், வரக்கூடிய தடம் எண் 37 கூட “ஓட்டுனர் இல்லை”, “நடத்துனர் இல்லை” எனக்கூறி அடிக்கடி நிறுத்திவிடுகிறார்கள்.
அப்படி 09 –03 – 2015 அன்று மாலை 5 மணிக்கு வரவேண்டிய பேருந்து வராததால் ஓலையூர் கிராமத்து பள்ளி மாணவர்களும், பு.மா.இ.மு தோழர்களும் பேருந்துகளை பேருந்து நிலையத்தில் இருந்து போகவிடாமல் மறித்து போராட்டம் நடத்தினார்கள்.
திமிராக பேசிய அதிகாரிகள் கண்டித்தும், மக்களுக்கு எதிராக செயல்படும் இந்த அரசையும் கண்டித்து முழுக்கமிட்டார்கள். காவல்துறையினர் வந்து நைச்சியமாக பேசி, “பேருந்தை போகவிடுங்கள். உங்கள் ஊருக்கு பேருந்தைவிடச் சொல்கிறோம்” என்று கூறினார்கள்.
20 நிமிடம் பேருந்தை மறித்தது “இது போன்றுதான் நாமும் நமது ஊர் பேருந்துக்காக போராட வேண்டும்” என்ற உணர்வை உழைக்கும் மக்கள் மத்தியில் விதைத்தது. உடனே பேருந்தும் வந்தது.
போக்குவரத்து அதிகாரிகள் தோழர்களிடம் வந்து, “பேருந்தை நிறுத்தி விட்டார்கள் உங்கள் ஊருக்கு எப்படி பேருந்து வரும்” என்று பார்க்கிறோம் எனப் பேசினார்கள். உடனே ஓலையூர் மக்கள் அதிகாரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த இடத்தைவிட்டு ஓடினார் அதிகாரி.
பத்திரிகை செய்திகள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
மக்களுடைய வரிப் பணத்தில் சம்பளம் வாங்கக் கூடிய அதிகாரிகள் உழைக்கும் மக்களுக்கு எதிராக நடந்து கொள்கின்றனர் என்பதை ஓலையூர் மாணவர்கள் இளைஞர்கள் புரிந்துகொண்டார்கள். இதை எதிர்த்து எந்த ஓட்டுக்கட்சிகளும் கேட்பதுமில்லை, போராடுவதுமில்லை.
பேருந்து கேட்டு மனுகொடுப்பதால் எந்த பயனும் இல்லை அதிகாரத்தை நாம் கையில் எடுத்தால்தான் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பதை நடைமுறையில் உணர்ந்து ஓலையூர் மாணவர்களும் புமாஇமு தோழர்களும் பேருந்துக்கான போராட்டத்தை நடத்தியுள்ளார்கள்.
தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விருத்தாசலம்
///ஆனால் அவர் ”உங்கள் ஊருக்கு பேருந்து இயக்கினால் லாபம் இல்லை” என்ற //
தனியார்களை அனுமதித்தால், இதே காரணத்தை சொல்லி, கூட்டம் அதிகம் ஏறாத வழிதடங்களில் பஸ்களை விட மாட்டார்கள் என்ற மிக பழைய நொண்டி சாக்கை உடைக்கிறது இந்த வரி. அரசு நிறுவனம் தான் இங்கு ஏக போக உரிமை பெற்று ‘சேவை’ செய்கிறது. நிர்வாக சீர்கேடுகள், ஊழல்கள், top heavy management system with too many officers and managers with fat pays while there is acute shortage of drivers, mechanics, etc in the lower levels : இவைகளால் தொடர் நஸ்டம், எனவே பல தடங்களில் போதுமான பேருந்துகளை இயக்க முடியவில்லை.
தனியார்களுக்கு இந்த ஊரின் இருந்து விருதாச்சலம் வரை பஸ்கள் அல்லது மினி பஸ்கள், வேன்களை இயக்க லைசென்ஸ் அளித்தால் பிரச்சனையை தீர்க்கலாம். டிக்டெட் விலைகளை ஒரு பொது கமிட்டி மூலம் தீர்மானிக்கலாம். (அரசு, தனியார், ஊர் பொது மக்கள் அடங்கிய குழு). எத்தனை லைசென்ஸ்கள் அளிக்கலாம் என்பதையும் இந்த கமிட்டியே தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும். இது தான் decentralised governance என்பது. முயற்சி செய்து பார்த்தால் இதில் உள்ள சாதக / பாதக அம்சங்கள் எல்லோருக்கும் தெரிய வரும். 1969க்கு முன்பு தனியார் தான் என்பதையும் மறக்க கூடாது. பரிச்சை முயற்சியாக இந்த பகுதியில் முதலில் செய்து பார்த்தால், இதை எப்படி செம்மையான அமைப்பாக மாற்ற முடியும் என்று அறிய முடியும். விவாதித்து, பொது கருத்து உருவாக்கி, பின் அதை நாடெங்கும் செயல்படுத்தலாம்.
சரி, இதை அரசும் சரி, நீங்களும் சரி பரிசீலித்து செயல்படுத்த உடன்பட மாட்டீர்கள். எனவே அம்மக்களுக்கு விடிவு காலம் வராது…
இதை பற்றி எனது பழைய பதிவு :
http://www.tamilpaper.net/?p=4130
அண்ணன் அதியமான் சொன்ன ஐடியாவில தான் எத்தனை பிராடு புரட்டல்!
அதியமானின் தீர்வு இது: “தனியார்களுக்கு இந்த ஊரின் இருந்து விருதாச்சலம் வரை பஸ்கள் அல்லது மினி பஸ்கள், வேன்களை இயக்க லைசென்ஸ் அளித்தால் பிரச்சனையை தீர்க்கலாம்.”
இப்ப மட்டும் லைசென்ஸ் கொடுப்பது எப்படிதான் அதியமானுக்கு இனிக்குதோ தெரியல! இதே டக்ளஸ் அதியமான் நரசிம்மராவோட தரகுமுதலாளிதுவத்துக்கு சொம்பு தூக்குனப்ப லைசென்ஸ் கோட்டாவை ஒழிச்சதுதான் வளர்ச்சிக்கு முக்கிய காரணமுன்னு வாய் அளந்தாரு. அதாவது தொழிற்சாலைகளுக்கு லைசென்ஸ்ன்னு ஒன்னு வைக்கிறதுனாலே வளர்ச்சி பாதிக்கப்படுவதாக அம்பானிக்காக அழுதாரு. ஒவ்வொரு தடவையும் லைசென்ஸ் வாங்க முதலாளி மாமாக்கள் டில்லிபோக கால்வலிக்குமுன்னு சொன்னவரே இதே தரகர் அதியமான் தான். இப்ப மட்டும் தனியார்களுக்கு லைசென்ஸ்னு தட்ட திருப்பிப் போட்டுத் தட்டுறாரு. அப்ப இதுவரைக்கும் அதியமான் லைசென்ஸ் பத்தி விட்ட பிலாசபியெல்லாம் புருடாவா இருக்கு. அதாவது (தரகுமுதலாளிகளின்) லிபரல் ஜனநாயகத்திற்கு லைசென்ஸ் கோட்டா ஒரு தடைன்னு வாதாடுன அதியமான் இங்கு லைசென்ஸ் முறை வேணும்னு கேட்குறாரே! கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்குன்னுறது எவ்வளவு நெசம்!
—————————————————————–
அதியமானின் இரண்டாவது பிலாசப்பீ! \\டிக்டெட் விலைகளை ஒரு பொது கமிட்டி மூலம் தீர்மானிக்கலாம். (அரசு, தனியார், ஊர் பொது மக்கள் அடங்கிய குழு).\\
ஏற்கனவே மின்சாரத்திற்கு விலை நிர்ணயிக்கிற மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள மக்கள் செருப்ப கழட்டி அடிக்காத குறை. டிக்கெட் விலைக்கு ஒரு பொது கமிட்டி கேட்கிற அதியமான என்ன பண்றது? இதுல அரசு தனியார்ன்னு இரண்டு களவாணிகள உள்ள சேத்துகிட்டு அதுக்கு பேரு பொதுக் கமிட்டியாம். போதா குறைக்கு இதுக்கு பேரு decentralised governanceஆம். அரசு, தனியார்ன்னு இரண்டு உருப்படி சொல்றார்ல. இந்தியாவுல அரசு யாரு? தனியார் யாரு? முதல்ல இத விளக்குங்க அதியமான்.
———————————————
\\1969க்கு முன்பு தனியார் தான் என்பதையும் மறக்க கூடாது. பரிச்சை முயற்சியாக இந்த பகுதியில் முதலில் செய்து பார்த்தால், இதை எப்படி செம்மையான அமைப்பாக மாற்ற முடியும் என்று அறிய முடியும். விவாதித்து, பொது கருத்து உருவாக்கி, பின் அதை நாடெங்கும் செயல்படுத்தலாம்.\\
பரிட்சை முயற்சி இல்லைங்க அதியமான். ஏற்கனவே மினி பஸ் ஓட்டுறவன் எல்லாம் கட்சிக்காரய்ங்க தான். செம்மையான அமைப்பாக மாற்றுவது பற்றி உங்கள மாதிரி ஆளுக யோசிக்கிற பாத்தா அம்மா அடிமைக மினி பஸ்ஸ வைச்சு வியாபாரம் பண்றது உங்களுக்கு பிடிக்கல போல! ஏன் சாராயம் காய்ச்சுற சசிகலா குரூப் மினிபஸ் ஓட்டி பெரிய முதலாளியா வளர்றது உங்களுக்கு ஆகாதா? இதுக்கு மாடல் வேற! அப்படியே நான் ஷாக்காயிட்டேன்!!!
வேணும்னா ஒர் எடுத்துக்காட்டு.
சக்கி மங்கலத்துக்கு இரண்டு அரசுப் பேருந்து தான் உண்டு. ஒன்னு 42L இன்னொன்னு 42K. இதுல 42K கார்சேரி வண்டின்னு நினைக்குறேன். இந்த இரண்டு வண்டியத் தவிர அங்க ஓடுவது மினிபஸ். இந்த மினிபஸ்ஸ நடத்தறவன் கட்சிக்காரன் தான். டிக்கெட் விலை மினிபஸ்ல மிகவும் அதிகம்! இதுல இலாபம் தான் மேட்டருன்னா சக்கிமங்கலத்துக்கு ஏன் கூடுதல் அரசுபஸ் விடல? ஏதாவது டேட்டா கீட்டா இருக்கும் தேடிப்போடுங்க அதியமான்.
அப்புறம் போட்டி காரணமாக விலை குறையும்னு ஓர் ஊசிப்போன கருத்து அடிக்கடி சொல்வீக இல்லயா? இதே மருதையில பீஆர்பி டிரான்ஸ்போர்ட்ன்னு இன்னொரு முதலை. பீர்பிக்கிட்டே பொறுக்கித் தின்ன கைக்கூலிகள் எல்லாம் பேண்டுட்டு பீயக்கூட கிரானைட் சிதறல வைச்சு தொடக்கிறதாதான் மதுரை புல்லாம் பேச்சுகிடக்கு மேலும் வீசிக்கெடக்கு! இதுல பீஆர்பி டிரான்ஸ்போர்ட்ட போன்ற சுரண்டல் பேர்வழிகள தாண்டி அண்ணாமலை படத்துல வர்றமானி ஒரு பாட்டுலேயே பால் பண்ணைக்கு பதிலா பஸ் பண்ணை எப்படி நடத்தி எப்படி சம்பாதிக்கிறதுன்னு சொன்னீகன்னா சுய இன்பமாக போகும்; சாரி டங்கு சிலிப்பாயிடுச்சு; சுயமுன்னேற்றமா போகுமில்ல.
——————————
கடைசியா ஒண்ணு; இந்த ரிப்ளையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் அதியமான். வரிகட்ற மக்கள் என்ன மயிருக்காக தனியார நம்பி மினி பஸ்சுக்காக காத்துகிடக்கணும்? ஒண்ணு அரசு பஸ்ஸவிடு இல்லாட்டி சீட்டுலர்ந்து இறங்கு; ஆட்சியோ ஆட்டோவோ நாங்களே பாத்துக்குறோம். இந்தக் கோணத்தில பதில் சொல்லுங்க. வாசகர்களுக்கும் பயனுள்ளதா இருக்குமில்ல.
——————————-
தென்றல்,
இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்.
அதியமான்,
தென்றலின் பதிலுக்குக் கூடுதலாக எனது சில கருத்துக்கள்.
// அரசு நிறுவனம் தான் இங்கு ஏக போக உரிமை பெற்று ‘சேவை’ செய்கிறது ***//
நாங்கள் ஏதோ தற்போதைய அரசை அப்படியே ஏற்றுக் கொண்டதைப் போன்று பேசுகிறீர்கள். போக்குவரத்து முதல் கொண்டு அணைத்து சேவைகளையும் அரசுதான் அதாவது பொதுவில் தான் செய்துகொள்ளவேண்டும் என்பது தான் எங்கள் கொள்கை. இதற்காக அந்த அரசு பொதுவுடமை அரசாகவும் மாற்றப்படவேண்டும் என்பதும் எங்கள் கொள்கை. மினி பஸ்கள், வேன்கள், இரு சக்கர டாக்சிகள் கூட பொதுவில் இருக்க முடியும் என்பது எங்களின் நிலை.
//1969க்கு முன்பு தனியார் தான் என்பதையும் மறக்க கூடாது.//
சாலையையும் அவர்களே போட்டுக்கொண்டார்களா. அப்போதே ஏன் அரசு அதை செய்யவில்லை என்றும் நாங்கள் கேட்கிறோம். அது வேண்டுமென்றே தான் என்று நாங்கள் சொல்கிறோம்.
1969க்கும் பல காலங்களுக்கு முன்பே மக்கள் பொதுவில் தான் தங்களின் தேவைகளை உற்பத்தி செய்தார்கள் என்பதை மறக்கக்கூடாது. பாதைகள், கிணறுகள் குளங்கள் கால்வாய்கள் வெட்டியது முதற்கொண்டு பலவும் பொதுவில் தான் நடந்தது என்பதை மறக்கக்கூடாது.
//அம்மக்களுக்கு விடிவு காலம் வராது//
அவர்களின் ஒற்றுமையைப்பொருத்து கூடிய விரைவில் அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வென்று காட்டுவார்கள். பொறுத்திருந்து பாருங்கள்.
அதியமான், அதியமான் ரூட் பர்மிட் எடுக்க [விருத்தாசலம் to ஜெயங்கொண்டம் via[வழியா] ஓலையூர்] ரெடியா ? பர்மிட் கொடுக்க தமிழ்நாடு அரசு அரசு ரெடியா இருந்தாலும் எந்த தனியார் மொதலாளி விருத்தாசலம் to ஜெயங்கொண்டம் via[வழியா] ஓலையூர் ரூட்டில் பஸ் ஓட்ட ரெடியா இருக்காரு அதியமான் ? அரசே இனிக்கி I M F கிட்ட கொடுத்த வாக்கு உறுதி படி நட்டம் ஆகும் ரூட்டில் பஸ் ஓட்ட மாட்டேன் என்கின்றது. அப்படி இருக்க எப்படி தனியார் மொதலாளி இந்த நட்டம் ஆகும் ரூட்டில் பஸ் ஓட்டுவாரு. .
///ஆனால் அவர் ”உங்கள் ஊருக்கு பேருந்து இயக்கினால் லாபம் இல்லை” என்ற //
///ரூட் பர்மிட் எடுக்க [விருத்தாசலம் to ஜெயங்கொண்டம் via[வழியா] ஓலையூர்] ரெடியா ? பர்மிட் கொடுக்க தமிழ்நாடு அரசு அரசு ரெடியா இருந்தாலும் எந்த தனியார் மொதலாளி விருத்தாசலம் to ஜெயங்கொண்டம் via[வழியா] ஓலையூர் ரூட்டில் பஸ் ஓட்ட ரெடியா இருக்காரு///
first try this and then we shall know whether this is possible or not. and it need not be full bus, but can be mini bus or vans. and need not be full service but only for peak hours. and no harm in trying. otherwise, what other solution is there ? there are thousands of similar villages all over
TN.
அதியமான் ,
மக்களின் வாழ்வை அழிக்கும் அரசுக்கு ஆதரவா பேசுவதாக நீர் நிணைத்துக்கொண்டு கானல் நீர் கனவு காண்கின்றீர். விருத்தாசலம் to ஜெயங்கொண்டம் via[வழியா] ஓலையூர் ரூட்டில் அரசு பஸ் விடும் வேலையை அங்கு வாழும் மக்கள் போராடி நிறைவேற்றுவார்கள். பிரைவேட்டுக்கு ரூட் கொடுக்க கூடாது [சென்னை மாநகரை தவிர ] என்று எந்த சட்டமும் தமிழ் நாட்டில் இல்லாத போது மேற்கண்ட ரூட்டுக்கு அப்பளை செய்து அனுமதி வாங்கிக்கொள்ள வேண்டியது யாருடைய கடமை ? தனியார் முதலாளிகள் வேலை தானே அது ? அது தான் அரசே நட்டத்தில் இயங்கும் பஸ் ரூட் அது என்று தெளிவாக கூறிவிட்ட பிறகு தனியார் முதலாளிகள் எப்படி அந்த ரூட்டில் பஸ்ஸை இயக்குவார்கள் என்ற கேள்வி உமது பெ பெ பேரறிவுக்கு தோன்றவில்லையா ? நட்டத்தில் இயங்கும் ரூட்டிலும் தனியார் கண்டிப்பாக பஸ்சை இயக்க வேண்டும் என்று அரசு சட்டத்தை கொண்டு வந்தால் உமது தரகு முதலாளித்துவ சிந்தனை அதனை ஏற்குமா ? ஒரு ரூட்டை profitable ஆகவும் மற்றும் ஒரு ரூட்டை service mindலும் இயக்க எந்த முத்தலாளி தாயராக இருக்காரு என்பதை கூறுவதை விட்டுவிட்டு அரசின் தரகு சிந்தனைக்கு புரோக்கர் வேலை செய்து கொண்டு இருந்தால் அப்படி பட்டவரை,மக்களின் வாழ்வாதரத்துக்கு எதிராக பேசுபவரை அவர் எவராக இருந்தாலும் ____________ எப்படி அழைக்க முடியும் ?
சரக்கு சுத்தமா இல்லைங்க இவர் கிட்ட. இதுவரைக்கும் பஸ்சில் பயணிக்க கிலோ மீட்டருக்கு எவ்வளவு பைசா என்று வரையறுக்க படாதது போலவும் , இவரு தான் புதிசா கமிட்டி போடுவது போலவும் போசுராறு அதியமானு. என்னா அறிவு இந்த மக்கள் விரோத ஆட்சியின் ஆதரவு அடிவருடிக்கு !
//ஆனால் அவர் ”உங்கள் ஊருக்கு பேருந்து இயக்கினால் லாபம் இல்லை” என்ற வக்கிரமான காரணத்தை கூறி தன் வர்க்க புத்தியை காட
இவன்களுக்கு வோட்டு போட்டு நமக்கு எந்த நன்மையையும் இல்லை என மக்கள் உணரவேண்டும்