privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்அரசு பேருந்து வர வேண்டுமா ? வழிகாட்டும் ஓலையூர்

அரசு பேருந்து வர வேண்டுமா ? வழிகாட்டும் ஓலையூர்

-

உங்கள் ஊருக்கு பஸ் வேண்டுமா? ஓலையூர் மாணவர்களின் போராட்டத்தை முன்னெடுப்போம்!

ரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுக்காவில் உள்ள ஓலையூர் விருத்தாசலம், ஜெயங்கொண்டம் போகும் வழியில் 5 கி.மீ தொலைவில் உள்ள கிராமம்.

இங்கு 1800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள். இம்மக்கள் விவசாயம் தொடர்பான தேவைகளுக்கும், கொத்தனார், சித்தாள் வேலை, கடை வேலை என பிற வேலைகளுக்கும் விருத்தாசலம் நகரத்தை நோக்கிதான் வருகிறார்கள்.

பேருந்து மறியல் போராட்டம்
மக்கள் விவசாயம் தொடர்பான தேவைகளுக்கும், கொத்தனார், சித்தாள் வேலை, கடை வேலை என பிற வேலைகளுக்கும் விருத்தாசலம் நகரத்தை நோக்கிதான் வருகிறார்கள்

அரியலூர் மாவட்டத்தில் ஓலையூர் கிராமம் இருந்தாலும் விருத்தாசலம் தான் பிழைப்புக்கு இடம். அதே போன்று பள்ளி, கல்லூரிகளுக்குக் கூட விருத்தாசலம் தான் வரவேண்டும் என்ற நிலை.

அப்படியிருக்கையில் ஓலையூர் மட்டுமல்லாமல் வண்ணாகுடிகாடு, அழகாபுரம், சிலுவைச்சேரி, ஆகிய கிராமங்களின் வழியாக ஆண்டிமடம் செல்லும் பேருந்துகளை நிறுத்திவிட்டு தடம் எண் 37 பேருந்தை மட்டும் இயக்குகிறார்கள். அதனால், பள்ளி, கல்லூரிகளுக்கும், செல்லும் மாணவர்கள் சரியான நேரத்திற்கு போகமுடியவில்லை. மேலும், உயிரை பணயம் வைத்து சாகசம் செய்யும் விதமாக, கூட்ட நெரிசலுடன் பேருந்து பயணம் இருக்கிறது. இதனாலே பல மாணவிகள் மேல் படிப்பை படிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். அதே போன்று, பிழைப்பு தேடி வெளியூர் செல்லுபவர்களும் காலை நேரத்தில் வேலைக்கு போவது கடினமாக உள்ளது. வேலை முடிந்து மாலை வீட்டுக்குப் போக 5 மணிக்கு பேருந்தை விட்டுவிட்டால் இரவு 10.30-க்கு தான் வீடு திரும்ப முடியும் என்ற நிலை.

பேருந்து மறியல் போராட்டம்
பல மாணவிகள் மேல் படிப்பை படிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். அதே போன்று, பிழைப்பு தேடி வெளியூர் செல்லுபவர்களும் காலை நேரத்தில் வேலைக்கு போவது கடினமாக உள்ளது.

தெருத்தெருவாக ஓட்டுக்கேட்டு ஜெயித்த பிறகு இனோவா காரில் பறக்கிறார்கள் ஓட்டுக்கட்சிக்காரர்கள் , ஜெயிக்க வைத்தவர்கள் இந்த அவல நிலையில் இருக்கிறார்கள்.

ஆனால் ‘அரசு மக்களுக்காக இருக்கிறது’, ‘நாடு வளர்ச்சி பாதையை நோக்கி போகிறது’ என்கிறார்கள். கிராமங்களின் உள்ள மக்களின் வாழ்க்கையை பற்றி தெரியாத இன்னும் சிலர், ‘நம் நாடு வல்லரசு ஆயிட்டோம்’ என்று பிதற்றுகிறார்கள்.

படிக்க பள்ளிக்கூடம் இல்லாமலும் , மருத்துவ தேவைக்கு போவதற்குக் கூட அவசரத்திற்கு பேருந்து இல்லாமலும் நிலை.

பேருந்து மறியல் போராட்டம்
கிராமங்களின் உள்ள மக்களின் வாழ்க்கையை பற்றி தெரியாத இன்னும் சிலர், ‘நம் நாடு வல்லரசு ஆயிட்டோம்’ என்று பிதற்றுகிறார்கள்.

இந்தப் பிரச்சனைக்கு தீர்வாக, “கூடுதலாக பேருந்து விட்டால், பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்” என மக்கள் கூறுகிறார்கள். அதனால், “மனுகொடுத்து பேருந்து வரவழைக்கலாம்” என்று மக்களிடம் வீடுவீடாக கையொப்பம் வாங்கி ஓலையூர் கிராமத்து மாணவர்களும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களும் இணைந்து 16 – 02 – 2015 அன்று விருத்தாசலம் கோட்டாச்சியரிடம் மனுகொடுத்தோம்.மனுவை வாங்கி எங்கள் முன்னாகவே, “உடனடியாக பேருந்து இயக்குவதற்கு முயற்சி செய்கிறேன்” என்று கூறி கொண்டு கையெழுத்து போட்டார்.

ஒரு வாரம் கழித்து, மீண்டும் கோட்டாசியரை சந்தித்து பேருந்து விடுவது குறித்து கேட்டபோது. “நீங்கள் கொடுத்த மனுவை மேலே அனுப்பிவிட்டோம். இன்னொரு மனு கொடுங்கள்” என்று கேட்டார். உடனே நகல் எடுத்து கொடுத்தோம்.

பேருந்து மறியல் போராட்டம்
“நீங்கள் கொடுத்த மனுவை மேலே அனுப்பிவிட்டோம். இன்னொரு மனு கொடுங்கள்”

மீண்டும் 2 வாரம் கழித்து கேட்டபோது, “ஐயையோ! ஓலையூர் அரியலூர் மாவட்டம். நீங்க அங்கேதான் மனுகொடுக்க வேண்டும்” என முடித்துக் கொண்டார்.

“முதலில் மனுகொடுக்கும் போதே அரியலூர் மாவட்டம் என்று தெரியும். விருத்தாசலம் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து தான் எங்கள் ஊருக்கு பேருந்து வருகிறது. அதனால் நீங்கள் முயற்சி செய்து முன்பு வந்து கொண்டிருந்த பேருந்துகளை இயக்கினால் போதும்” என்று பேசியிருந்தோம்.

ஆனால் அவர் ”உங்கள் ஊருக்கு பேருந்து இயக்கினால் லாபம் இல்லை” என்ற வக்கிரமான காரணத்தை கூறி தன் வர்க்க புத்தியை காட்டினார்.

இந்த அரசு மக்களுக்கானது இல்லை என்பதை அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுக்காவில் உள்ள கோட்டாசியரிடம் மனுகொடுத்து பேசும்போது மேலும் தெளிவானது. “உங்கள் ஊருக்கு விருத்தாசலம் பணிமனையில் இருந்துதான் பேருந்து விட வேண்டும். அதனால் நீங்கள் விருத்தாசலம் கோட்டாசியரிடம் சொல்லுங்கள்” என்று முடித்துக்கொண்டார்.

பேருந்து மறியல் போராட்டம்
பேருந்து கோரும் மாணவர் இளைஞர்களை அரியலூர் – விருத்தாசலம் என்று அலையவிட்டு இது நாள் வரைக்கும் பேருந்தை இயக்காமல் இருந்து வருகிறார்கள்.

பேருந்து கோரும் மாணவர் இளைஞர்களை அரியலூர் – விருத்தாசலம் என்று அலையவிட்டு இது நாள் வரைக்கும் பேருந்தை இயக்காமல் இருந்து வருகிறார்கள். மேலும், வரக்கூடிய தடம் எண் 37 கூட “ஓட்டுனர் இல்லை”, “நடத்துனர் இல்லை” எனக்கூறி அடிக்கடி நிறுத்திவிடுகிறார்கள்.

அப்படி 09 –03 – 2015 அன்று மாலை 5 மணிக்கு வரவேண்டிய பேருந்து வராததால் ஓலையூர் கிராமத்து பள்ளி மாணவர்களும், பு.மா.இ.மு தோழர்களும் பேருந்துகளை பேருந்து நிலையத்தில் இருந்து போகவிடாமல் மறித்து போராட்டம் நடத்தினார்கள்.

திமிராக பேசிய அதிகாரிகள் கண்டித்தும், மக்களுக்கு எதிராக செயல்படும் இந்த அரசையும் கண்டித்து முழுக்கமிட்டார்கள். காவல்துறையினர் வந்து நைச்சியமாக பேசி, “பேருந்தை போகவிடுங்கள். உங்கள் ஊருக்கு பேருந்தைவிடச் சொல்கிறோம்” என்று கூறினார்கள்.

பேருந்து மறியல் போராட்டம்
“இது போன்றுதான் நாமும் நமது ஊர் பேருந்துக்காக போராட வேண்டும்”

20 நிமிடம் பேருந்தை மறித்தது “இது போன்றுதான் நாமும் நமது ஊர் பேருந்துக்காக போராட வேண்டும்” என்ற உணர்வை உழைக்கும் மக்கள் மத்தியில் விதைத்தது. உடனே பேருந்தும் வந்தது.

போக்குவரத்து அதிகாரிகள் தோழர்களிடம் வந்து, “பேருந்தை நிறுத்தி விட்டார்கள் உங்கள் ஊருக்கு எப்படி பேருந்து வரும்” என்று பார்க்கிறோம் எனப் பேசினார்கள். உடனே ஓலையூர் மக்கள் அதிகாரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த இடத்தைவிட்டு ஓடினார் அதிகாரி.

பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

மக்களுடைய வரிப் பணத்தில் சம்பளம் வாங்கக் கூடிய அதிகாரிகள் உழைக்கும் மக்களுக்கு எதிராக நடந்து கொள்கின்றனர் என்பதை ஓலையூர் மாணவர்கள் இளைஞர்கள் புரிந்துகொண்டார்கள். இதை எதிர்த்து எந்த ஓட்டுக்கட்சிகளும் கேட்பதுமில்லை, போராடுவதுமில்லை.

பேருந்து கேட்டு மனுகொடுப்பதால் எந்த பயனும் இல்லை அதிகாரத்தை நாம் கையில் எடுத்தால்தான் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பதை நடைமுறையில் உணர்ந்து  ஓலையூர் மாணவர்களும் புமாஇமு தோழர்களும் பேருந்துக்கான போராட்டத்தை நடத்தியுள்ளார்கள்.

தகவல்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விருத்தாசலம்