privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅம்மா கரடிகள் - டாஸ்மாக் குரங்குகள் - மாண்புமிகு கழுதைகள்

அம்மா கரடிகள் – டாஸ்மாக் குரங்குகள் – மாண்புமிகு கழுதைகள்

-

வனங்களின் குடலுருவ வட்டமிடும் மூலதன வல்லூறுகள்

காடுகள் பேசும்.. மலைகள் எதிரொலிக்கும்
தமிழகமே
வனவிலங்கு
சரணாலயமாகத்தான்
இருக்கிறது.
தனியாக எதற்கு
கொடைக்கானலில் ஒன்று?

கொடைக்கானல் மலை
தமிழகமே வனவிலங்கு சரணாலயமாகத்தான் இருக்கிறது.

வார்டுக்கு வார்டு
திரியும்
‘அம்மா’ கரடிகள்
இலக்கு வைத்து கடிக்கும்
டாஸ்மாக் குரங்குகள்.
அம்மா அடித்துப் போட்டதை
இழுத்துப் போகும்
‘மாண்புமிகு’ கழுதைப் புலிகள்.
மணல் லாரியில்
ஆற்றைக் கொல்லும்
‘ரத்தத்தின் ரத்தமான’ நரிகள்
முதலமைச்சர் நாற்காலியில்
மூட்டை’ பூச்சி.
அத்தனைக்கும் காவலிருக்கும்
அய்.ஏ.எஸ். மலைப்பாம்புகள்.
கால் வைக்கும் இடமெல்லாம்
காக்கி அட்டைகள்.

ஆட்கொல்லி விலங்குகளே
ஆளும் நாட்டில்
கரடி மட்டும் என்ன
கட்டிப் பிடித்து முத்தமா தரும்?

கொடைக்கானல்
மொத்தத்தில் இது மக்கள் வாழ்வாதாரம் பறிக்கும் கார்ப்பரேட் யுத்தம்!

மனிதனை
காப்பாற்றுவதாகச் சொல்லி
விலங்குகளைச் சுடுவது,
விலங்குகளை
காப்பாற்றுவதாகச் சொல்லி
மனிதர்களைச் சுடுவது,
மொத்தத்தில் இது
மக்கள் வாழ்வாதாரம் பறிக்கும்
கார்ப்பரேட் யுத்தம்!

நாட்டைக் காப்பாற்றவே
வக்கில்லாதவர்கள்
காட்டைக் காப்பற்றப்
போகிறார்களாம்,

ஆறு காப்பாற்றி வைத்திருந்த
மணலை
அள்ளித் தீர்த்தவன் எவன்?
மணல் காப்பாற்றி வைத்த
தண்ணீரை
உறிஞ்சிக் கொன்றவன் எவன்?

கொடைக்கானல்
மழை மேகங்களில் தாகம் தணிந்த மரங்களை மலைகளில் வெட்டி விற்றது யார்?

எட்டிப்பிடித்து
இலை நாவுகளால்
மழை மேகங்களில்
தாகம் தணிந்த மரங்களை
மலைகளில்
வெட்டி விற்றது யார்?

சந்தனப்பூக்களின் வாசமும்
தேக்கு மரங்களின் சுவாசமும்
மூலிகைச் செடிகளின் நேசமும்
நிறைந்து இறங்கிய அருவிகள்
கோக்,பெப்ஸியின் அமிலமும்
குடித்த சாராய பாட்டிலும் தீண்டி
விழுந்து துடிப்பது யாரால்?

தேன் கூடு கட்டி
பலாச் சுளை பிளந்து
வாசம் பரவிய கானகத்தே
வந்திறங்கிய
ஈரக்காற்று இருந்த இடத்தில்,
ரிசார்ட்டுகளை கட்டி
பாறை முகம் பிளந்து
நாசம் செய்தது யார்?

கொடைக்கானல்
நோட்டுவாசிகளால் கானகம் அழித்து விட்டு

நோட்டு வாசிகளால்
கானகம் அழித்துவிட்டு
கடைசியில்
காட்டு வாசிகள் மேல்
பழியைப் போட்டு
காடு மலை விட்டு துரத்துவது
கார்ப்பரேட்டு
நிலப்பறிப்புக்கே!

வழியில் கிடக்கும்
கொடியையும்
எடுத்து படரவிட்ட
கைகள்
எங்கள் கைகள்….

நெளியும்
பாம்புகள் கண்களும்
எங்களை எதிரியாகப்பார்த்ததில்லை…
அது தன் வழிப்போக
தாண்டிப் போகும்
சகவாசிகள் !
ஆதிவாசிகள்!

மரத்தின் கனிகளை
பறவைகளோடு
பங்குபோட்டுக் கொள்ளுமளவுக்கு
நாகரீகமானவர்கள்
வனவாசிகள்,
பச்சை மரத்தின்
ரத்தத்தை அறுக்குமளவுக்கு
மரத்துப்போகவில்லை
காட்டு வாசிகள்

காட்டுப் பூச்சிகளின்
உணர்ச்சி ஒலிகளை
ஒருபோதும் தடைசெய்ததில்லை
எங்கள் அதிகாரம்,
யானைகளை
பிச்சை எடுக்க வைக்க
எங்களுக்கு தெரியாது!

காடுகள் மலைகளை
கெள்ளி எடுத்து காசாக்கும்
கார்ப்பரேட்டுகளை விட்டுவிட்டு
சுள்ளிபொறுக்குபவர்களால்
சுற்றுச் சூழல் கெடும் எனில்
காடு சிரிக்கும்
மலைகள் சரியும்!
ஒரு
ஓணான் கூட
ஒத்துக் கொள்ளாது
மோடி
உயிரினச் சூழலைக் காப்பாற்றும்
திட்டமுள்ளவர் என்பதை!

மலைகளைத் தூக்க
காத்திருக்கின்றன
மோடியின் அனுமார்கள்
வனங்களின் குடலுருவ
வட்டமிடுகின்றன
மூலதன வல்லூறுகள்.

வனங்களின் வேர்கள்
எங்களிடம்
எங்களின் உறுதி
மலைகளிடம்
காடில்லையேல் நாங்கள் இல்லை
நாங்கள் இல்லையேல் காடு இல்லை

நன்றாக உணர்ந்த
கொடைக்கானலின் பிள்ளைகள்
கொண்டை ஊசி வளைவுகளை
போராட்டங்களிலும் காட்டுவார்கள்

– துரை.சண்முகம்

  1. “முதலமைச்சர் நாற்காலியில்
    மூட்டை’ பூச்சி.” சும்மா நச்சுனு தலைல கொட்டுற மாறி இருக்கு இந்த வரி

  2. தோழர் ஒவ்வொரு கவிதையிலும் சிவந்து சிறக்கிறார்…, தோழர்கள் ஒவ்வொரு வரியிலும் சினந்து சிவக்கிறார்கள்…,

  3. அற்புதக்கவிதை !
    உண்மையை அப்படியே உரைக்கும் கவிதை, !
    உள்ளதை உள்ளபடி சொல்லும் கவிதை !
    மனக்குமுறலை மறைக்காமல் சொல்லும் கவிதை !
    அவல நிலையை அருமையாய் உரைக்கும் கவிதை !
    புரையோடியதை புட்டு வைக்கும் கவிதை !
    மக்கள் பொங்கி எழுந்தால் முடிவு என்னாகும் என்று சொல்ல முடியாது.
    ராணுவமும் போலீசும் அஞ்சிய எகிப்து புரட்சி நாம் அறிந்தது தான்.

  4. இன்றைய சமூகத்தை காத்திரமாகத் தோலுரித்துக் காட்டும் கவிதைகளாக எழுதுகிறீர்கள் துரை.சண்முகம். கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழர்கள் கவனிக்கவேண்டிய ஒரு மிகச்சிறந்த கவிஞராகத்தான் உங்களை இனம்காணத் தோன்றுகிறது. பாராட்டுக்கள்.

  5. இயற்கையோடு இயைந்த காட்சிப் படிமங்கள்,
    அடித்தட்டு மக்களின் குரலாய் கொப்பளிக்கும் உவமைகள்.

    மண், மலை, காடு – இவற்றுக்கு
    முழு உரிமையுடைய மக்களின் வர்க்கக் கோபம்.

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

  6. இன்று கவிதை என்ற பெயரில் ஒருவர் முதுகை ஒருவர் சொறியும் நுகர்வு கலாசாரம் நிறைந்திருக்கும் மத்தியில், உழைக்கும் மக்களின் வர்க்க பிரச்சினையை முன்னிறுத்தும் கவிதை. கலை இலக்கியம் யாவும் ம்க்களுக்கே என்பதை உணர்த்துகிறது!

    வனங்களின் குடலுருவ வட்டமிடும் மூலதன வல்லூறுகளின் சதியை முறியடிப்போம்!

  7. அற்புதம். கோடை மக்கள் மட்டுமல்லாது அனைத்துமக்களின் மனக் குமுறலைப் படம் பிடிக்கும் கவிதை

    “வழியில் கிடக்கும்
    கொடியையும்
    எடுத்து படரவிட்ட
    கைகள்
    எங்கள் கைகள்….”

  8. மொகரக்கட்டையிலும் (Facebook) பங்கிட (Share) முடிந்தால் நன்றாக இருக்கும்.

Leave a Reply to அமுதவன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க