privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்இந்து மக்கள் கட்சி எனும் கூலிப்படை – வீடியோ

இந்து மக்கள் கட்சி எனும் கூலிப்படை – வீடியோ

-

லகமயம் ஆக்கிரமித்திருக்கும் காலத்தில் பல்வேறு நிறுவன, தனிநபர் கட்டப் பஞ்சாயத்துகளுக்கு பெருமளவு கூலிப்படை தேவைப்படும் காலமிது. சொத்துக்களை கைப்பற்றவோ இல்லை ஒப்பந்த தொழிலாளிகளை வெளியேற்றவோ, மனிதர்களை கொல்லவோ என இக்கூலிப்படைகள் பல்வேறு சேவைகள் புரிந்து வருகின்றன.

கூலிப்படைக்கு தேவைப்படும் ஒழுங்கு வாங்கிய காசுக்கு ‘நேர்மை’யாக கொல்வதோ, குதறுவதோ சரியாக செய்து முடிக்க வேண்டும். படைகளின் தளபதி மற்றும் தாக்குதல் திட்டத்தை அறிவாளி கிரிமினல்கள் ஏற்றுக் கொண்டாலும் நடைமுறை ரவுடி வேலைகளுக்கு குடிசைப் பகுதிகளிலிருந்து உதிரியான இளைஞர்கள் தேவைப்படுவார்கள்.

பிரமோத் முத்தாலிக்
வானரப்படையின் தலைவர் பிரமோத் முத்தாலிக் காசு வாங்கிக் கொண்டு கலவரம் செய்வதாக ஒரு கேமராவில் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இதன்றி மேல்தட்டு, நடுத்தர வர்க்கங்களில் சொத்து மற்றும் இதர பண்பாட்டு பிரச்சினைகள், நுகர்வு கலாச்சாரங்களுக்காக நடக்கும் கொலைகள், வன்முறைகள் தனி. இத்தகைய கூலிப்படை சர்வீஸ்கள் மதத்திற்கும், அரசியல் கட்சிகளுக்கும் கூட பல்வேறு முறைகளில் தேவைப்படுகின்றன.

ஆர்.எஸ்.எஸ்-ஸும் இப்படித்தான் கூலிப்படை இந்துக்களை மட்டுமல்ல கூலிப்படை இந்து இயக்கங்களையும் பயன்படுத்தி வருகிறது. அவர்களது கலவரம், வெறுப்பு, பிரிவினை, தாக்குதல்…… பின்பு தேர்தல், அறுவடை எனும் தொடர்கதைக்கு இக்கூலிப்படைகள் தேவைப்படுகின்றார்கள். 1947-க்கு பிந்திய வரலாற்றில் இதற்கென ஏராளமான சான்றுகள் உள்ளன.

இதன் சமீபத்திய நிகழ்வுகளைப் பார்க்கலாம்.

கடந்த 2012 ஜனவரி ஒன்றாம் தேதி, கர்நாடக மாநிலம் சிந்தகியில் உள்ள தாசில்தார் அலுவலம் பக்கமாக வந்தவர்கள் திடுக்கிட்டார்கள். அங்கிருந்த கொடிக் கம்பத்தில் பாகிஸ்தானின் தேசிய கொடி, பட்டொளி வீசி பறந்துக் கொண்டிருந்தது. இந்திய நாட்டில், பாகிஸ்தான் கொடியை ஏற்றி, புத்தாண்டு கொண்டாடுபவர்கள் யார் என்று கேள்வி அனைவரது மனதிலும் எழுந்தது.

சரியாக, அப்போது பார்த்து, ‘இது இந்தப் பகுதியிலுள்ள இஸ்லாமியர்கள் செய்த செயல்…’ என்ற நச்சு தூவப்பட்டது. ஒளியை விட வேகமாக இந்த வாசகம் மக்களின் செவியை அடைந்தது. முதலில் நம்ப மறுத்தவர்கள் கூட, அடுத்தடுத்து வெவ்வேறு வார்த்தைகளுடன் இதே அர்த்தம் பொதிந்த சொற்களை எதிர்கொள்ள நேர்ந்ததும், ஒருவேளை அப்படி இருக்கலாமோ என நினைக்க ஆரம்பித்தார்கள். விளைவு, சில மணி நேரங்களில், சிந்தகி பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள் அனைவருமே குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டார்கள்.

ஆனால், இந்த அயோக்கியதனத்தை நிகழ்த்தியது, எந்த இஸ்லாமிய குழுக்களும் அல்ல; தனிப்பட்ட இஸ்லாமியரும் அல்ல. பதிலாக ஒரு மதக் கலவரத்தை உண்டாக்குவதற்காக அந்தப் பகுதியில் உள்ள ஸ்ரீராம் சேனா குண்டர்கள் நிகழ்த்திய நாடகம் இது. ராகேஷ் மத், என்ற ரவுடியின் தலைமையில் இந்தப் பித்தலாட்டத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்.

இப்படி இந்து வெறியர்களே பாகிஸ்தானின் தேசிய கொடியை இரவோடு இரவாக ஏற்றிவிட்டு, அந்தப் பழியை இஸ்லாமியர்கள் மீது சுமத்தியது அம்பலப்பட்டு போனதும், விழித்துக் கொண்ட காவல்துறை, ராகேஷ் மத் உட்பட ஆறு ஸ்ரீராம் சேனா குண்டர்களை கைது செய்து பிஜப்பூர் சிறையில் அடைத்தது. ஆனால், அந்த சிறையில் இருந்த மற்ற கைதிகள், ‘தேசத்தை துண்டாட முயற்சிப்பவர்களை எங்களுடன் அடைக்க வேண்டாம்’  என கோஷமிட்டதுடன், இந்த இந்துத்துவ பாசிஸ்ட்டுகளை நையப் புடைந்துள்ளனர்.

இதற்கு முன்பு ஜனவரி, 2009-ல் மங்களூரு பப்பில் குடித்துக் கொண்டிருந்த பெண்களைத் தாக்கி விரட்டியதில் இந்திய அளவில் ஒரே நாளில் பிரபலமானது ஸ்ரீராம் சேனா. அதற்கு முன் சிறுபான்மையினரை எதிர்த்து பல கலவரங்கள் செய்திருந்தாலும் மேட்டுக்குடி சீமாட்டிகளுக்கு ஏற்பட்ட அவமானமே பல தேசிய ஊடகங்களுக்கு கவலையாக இருந்தது. அந்தக் கவலையை சேனாவும் இலவசமான பிரபலமாக நன்கு அறுவடை செய்து கொண்டது.

சிவசேனா - பால் தாக்கரே
மராட்டிய மாநிலத்தில் இயங்கும் சிவசேனாதான் கூலிப்படை இந்துத்துவாவின் முன்னோடி.

அதன் பிறகு இவ்வானரப்படையின் தலைவர் பிரமோத் முத்தாலிக் காசு வாங்கிக் கொண்டு கலவரம் செய்வதாக ஒரு கேமராவில் ஒப்புக் கொண்டிருக்கிறார். தெகல்கா – ஹெட்லைன்ஸ் டுடே இணைந்து நடத்திய ஸ்டிங் ஆப்பரேஷனில் இந்த வானரங்கள் வகையாய் சிக்கியிருக்கின்றன.

இந்த நடவடிக்கையின் படி ஒரு நிருபர் டம்மி ஆர்ட்டிஸ்ட்டாக அதாவது ஓவியனாக நடித்து முத்தாலிக்கை அணுகியிருக்கிறார். அதன்படி அவரது ஓவியக் கண்காட்சியை முத்தாலிக்கின் ஸ்ரீராமசேனா வானரங்கள் அடித்து கலவரம் செய்தால் பிரபலமாகிவிடலாமென்றும், அதற்கு எவ்வளவு பணம் தரவேண்டுமென்பதே டீல். இதற்காக முத்தாலிக்கை மட்டுமல்ல அவரது இயக்கத்தின் மற்ற தலைவர்களையும் அந்த நிருபர் பார்த்திருக்கிறார். அவர்களும் அந்த கண்காட்சி முசுலீம்கள் இருக்கும் பகுதியில் இருந்தால் பிரச்சினையை பெரிதாக கொண்டு செல்லலாமென்று வழிகாட்டியிருக்கிறார்கள்.

மேலதிக விவரம் வேண்டுவோர் இணைப்பிலுள்ள கட்டுரைகள் படியுங்கள்.

மராட்டிய மாநிலத்தில் இயங்கும் சிவசேனாதான் இக்கூலிப்படை இந்துத்துவாவின் முன்னோடி. அதற்கு முன்பே சாவர்க்கர் புகழ் இந்து மகா சபை நேரடியாக பிரிட்டீஷ் காசில், தயவில் இயங்கியது என்றாலும் சிவசேனாதான் பரந்து பட்ட மக்களை கூலிப்படை அரசியல் நலனுக்காக அணிதிரட்டியது.

70களில் மும்பையிலுள்ள கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்களை கருவறுக்க முதலாளிகள் மற்றும் காங்கிரசு கட்சி, தாக்கரேவின் சேனாவுக்கு காசும், அரசு ஆதரவையும் அள்ளிக் கொடுத்து வேட்டை நாய் போல வளர்த்தது. ஆரம்பத்தில் மராத்திய இனவெறியும் பின்பு அதிலிருந்து பிரிக்க முடியாத படி இணைந்திருக்கும் ஆதிக்க சாதி + இந்துமதவெறியும் கொண்டு சிவசேனா மக்களை பிரித்தது. தொழிற்சங்களை கைப்பற்றியது. பின்னர் பாபர் மசூதி இடிப்பின்போது பெரும் கலவரம் நடத்தி முக்கிய கட்சியாக மாறியது. தற்போது பா.ஜ.க கூட்டணியோடு அங்கே ஆண்டு வருகிறது.

வெள்ளையப்பன் - ராமகோபாலன்
82 மண்டைக்காடு கலவரத்தை மூலதனமாக வைத்து இராம கோபாலன் எனும் பார்ப்பன வெறியர் ஆர்.எஸ்.எஸ் ஆசியுடன் இந்து முன்னணியை வளர்த்தார்

ஆர்.எஸ்.எஸ் எனும் வட இந்திய பருப்பு, பெரியாரின் தமிழகத்தில் வேகாத காரணத்தால் இங்கே இறக்கப்பட்ட வானரம்தான் இந்து முன்னணி. வடக்கே விஸ்வ ஹிந்து பரிஷத் செய்து வந்த பணிக்கு இங்கே தமிழ் ஃபிளேவரில் இ.முவாக இறக்கினார்கள். 82 மண்டைக்காடு கலவரத்தை மூலதனமாக வைத்து இராம கோபாலன் எனும் பார்ப்பன வெறியர் ஆர்.எஸ்.எஸ் ஆசியுடன் இந்து முன்னணியை வளர்த்தார். கோவையும், குமரியும் பின்னர் சிறுபான்மை மக்கள் கணிசமாக வாழும் பகுதிகளும் இ.முவின் வேட்டைக்காடானது.

என்ன இருந்தாலும் இந்து முன்னணி என்பதே பார்ப்பன முன்னணி என்பதை சில சூத்திர இந்துமதவெறியர்கள் புரிந்து கொண்டு ‘கலகம்’ செய்தார்கள். உடனே நீங்கள் இவர்கள் பார்ப்பனியத்தை புரிந்து கொண்டு எதிர்த்தார்கள் என்று பாஸ் மார்க் கொடுக்க கூடாது. இவர்கள் இந்து முன்னணியின் ‘இலட்சிய’ப் பயணத்தில் கிடைத்த அரசியல் செல்வாக்கு, பணம், புரவலர் வசதிகளில் பங்கு கிடைக்காததால் பிரிந்து போனவர்கள். கொள்ளைக்கூட்டத்தின் சில்லறை சண்டைகளுக்கான பிரிவினை இது.

போனவர்கள் சிவசேனா, அனுமன் சேனா, சுடுகாட்டு போண்டா என்று ஊருக்கு ஒன்றாய் பன்றி விட்டைகளாக பெருத்தார்கள். இந்த விட்டையில் அளவில் பெரிதான ஒன்று இந்து மக்கள் கட்சி. கோவையில் மார்வாடி, சேட்டுக்கள் சிலரின் நேரடியான கவனிப்பில் இக்கூட்டத்திற்கு பெரும் பண வசதிக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டது. மேலும் கோவையில் இக்கும்பல் தனக்கென்று ரியல் எஸ்டேட், கட்டப் பஞ்சாயத்து, கமிஷன் என்று வைட்டமீன் ப ரீதியாக நிலைநாட்டிக் கொண்டது. இதன் பயனாக ஊருக்கு ஒன்றோ இரண்டோ சில வானரங்கள் இக்கூட்டத்திற்கு கிடைத்தன. எலும்புகளுக்கு அலையாத பைரவர் யார்?

அர்ஜூன் சம்பத்
அம்பேத்கார் வாழ்க, பெரியாரை ஒழிப்போம், கம்யூனிசத்தை விரட்டுவோம் என்று பல்வேறு அஜெண்டாக்களை இக்கூலிப்படை காசுக்கேற்ற பேக்கேஜ்களாக எடுத்து விடுகிறது.

மேலும் இராம கோபாலனின் இந்து முன்னணி எங்கே வீக்காக இருக்கிறதோ அதை இக்கூட்டம் நன்கு பயன்படுத்திக் கொண்டது. முதலில் இந்துமதமே வட இந்திய சமாச்சாரம் எனும் உண்மையை மறைக்கும் முகமாக ஈழம், தமிழ், சாதி வேறுபாடு கூடாது என்றெல்லாம் பேசியது. இதை வெட்கம் கெட்ட தமிழின குழுக்கள் அனைத்தும் அங்கீகரித்து மேடையேற்றவும் செய்தன.

ஆனால் தமிழ் இன குழுக்களின் மேடையில் ஏறிய வானரங்கள் அதில் தமது இந்துமதவெறியை பகிரங்கமாகவே பேசினார்கள். தமிழ இன குழுக்களும் அடிப்படையில் தமிழ் ஆர்.எஸ்.எஸ் ஆக செயல்பட்ட படியால் இவர்களிடையே பங்காளி உறவு இயல்பாக ஏற்பட்டது.

தமிழகத்தில் பார்ப்பனியத்தின் எதிரியான பெரியார் – திராவிட இயக்கம் – பொதுவுடமை இயக்கங்களின் செல்வாக்கு பொதுவில் கருத்தளவில் இன்னமும் இருந்து வருகிறது. இதை முறியடிக்க பார்ப்பன ஊடகங்கள் இந்து மக்கள் கட்சி எனும் கூலிப்படையை பயன்படுத்திக் கொண்டன.

இதற்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டவர் தினமணி வைத்தி. மாதத்திற்கு ரெண்டு நடுப்பக்க கட்டுரையை அர்ஜுன் சம்பத் பெயரில் போட்டு அவரை தமிழ் இந்து சான்றோராக மார்கெட் செய்தார். பிறகு தந்தி டி.வி, புதிய தலைமுறை போன்ற ஊடகங்கள் இக்கூலிப்படை கூட்டத்திற்கு சிவப்பு கம்பளம் விரித்து விற்பனை செய்தன.

அம்பேத்கார் வாழ்க, பெரியாரை ஒழிப்போம், கம்யூனிசத்தை விரட்டுவோம் என்று பல்வேறு அஜெண்டாக்களை இக்கூலிப்படை காசுக்கேற்ற பேக்கேஜ்களாக எடுத்து விடுகிறது.

வழக்கமாக மெயின் ஸ்டிரீம் ஆர்.எஸ்.எஸ் கும்பலிலிருந்து வழி தவறிய ஆடுகளை பரப்பிரம்ம மேய்ப்பர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் தமிழகத்தில் முற்போக்கு மரபை முறியடிப்பதற்காகவே இக்கொள்கையை மாற்றி இந்து மக்கள் கட்சி எனும் இந்த வானரத்தை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தலைவர்கள் ஊக்குவிக்கிறார்கள்.

பெரியார் சிலை உடைப்பு, தீட்திதர் ஆதரவு ஊர்வலம் என இக்கூலிப்படை பல்வேறு கிரிமினல் செயல்களை காசு வாங்கிக் கொண்டு செய்கிறது.

மேலும் கர்நாடக ஸ்ரீராம் சேனா போல அவ்வப்போது முழுப்பொய்களை வதந்திகளாக, அதிரடி உண்மைகளாக பரப்பவும் செய்கிறது. இதற்கு பல்வேறு ஊடகங்கள் ஒத்துழைத்தும் வருகின்றன.

ராம ரவிக்குமார்
நியூஸ் 7 சேனலில் ஐ.ஐ.டி பிரச்சினை குறித்த விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட கூலிப்படை தலைவர் ராம ரவிக்குமார்

சமீபத்திய ஐ.ஐ.டி பிரச்சினையில் கூட இக்கூலிப்படை ஆஜராகி அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்ட தடை சரி என்று ‘போராடியது’. மேலும் இதை நியாயப்படுத்தும் வண்ணம் ஐ.ஐ.டி-க்கு அம்பேத்கர் பெயரை வைக்குமாறு ஒரு கோரிக்கையை அவிழ்த்து விட்டது. மராத்வாடா பல்கலைக் கழகத்திற்கு அம்பேத்கர் பெயர் வைத்தபோது சிவசேனா நடத்திய கலவரம், அம்பேத்கரின் சொந்த நூலகத்தை கொளுத்திய அயோக்கியத்தனம், மும்பையில் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை போட்டு அதை எதிர்த்த தலித் இளைஞர்களை போலிசால் சுட்டுக் கொன்றது, அம்பேத்கரின் ராமன் கிருஷண்ன புதிர் நூலை தடை செய்யக் கோரியது இவைதான் அம்பேத்கர் குறித்த இந்துமதவெறியரின் உண்மையான அக்கறை.

ஐ.ஐ.டி பிரச்சினை தொடர்பாக தமிழ் தொலைக்காட்சிகள் இக்கூலிப்படை தலைவர்களை வெட்கம் கெட்ட முறையில் அழைத்து அநாகரிகமாகவும், உளறலாகவும் பேசுவதை ரசிக்கின்றன. அவர்களும் கோவையில் பாகிஸ்தான் கொடி ஏற்றினார்கள், மோடி – ஸ்மிருதி இரானியை தவறாக இணைத்து பேசினார்கள் என்று கூசாமல் புளுகி அலறுகிறார்கள். இந்து மக்கள் கட்சி லும்பன்களை ஸ்டூடியோவில் ஏற்றும் போது பிக்பாக்கெட், ரவுடி, தாதா, மாஃபியா போன்றோரை மட்டும் புறக்கணிப்பது தர்மமாகாது.

சரி, இவர்கள் கூலிப்படை என்பதற்கு என்ன ஆதாரம்?

நியூஸ் 7 சேனலில் ஐ.ஐ.டி பிரச்சினை குறித்த விவாதம் ஒன்றில் இக்கூலிப்படையில் தலைவர் ராம ரவிக்குமார் எனும் வானரம் கலந்து கொண்டார். வடபழனி மேக்கப்பில் ஜொலிக்கும் சந்தனம், பொட்டு, காவி பட்டு என பார்ப்பதற்கே ஒரு மார்க்கமான மாமாவாக தென்பட்டார். மேற்கண்ட பாகிஸ்தான் கொடி ஏற்றம், தவறான உறவு செய்திகளை பாதி நேரம் பேசினார். மீதி நேரம் என்ன ஏசினார்?

உரையாடலை நடத்திய தொகுப்பாளர், “ஐ.ஐ.டியில் எதற்காக அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தை தடை செய்தார்கள்” என்று நூறு முறை கேட்கிறார். அந்த கூலிப்படை தலைவனோ எல்லா முறையும் கொட்டைப்பாக்கின் விலையை கூறுகிறார். ஆக வாங்கிய காசுக்கு கூவ வேண்டும் என்பதைத் தாண்டி என்ன மாதிரி கூவ வேண்டும் என்று கூட அந்த அடிமுட்டாளுக்கு தெரியவில்லை.

இது கூட பரவாயில்லை. “ஏன் அம்பேத்காரை ஆதரிக்கிறீர்கள், பெரியாரை எதிர்க்கிறீர்கள்” என்று கேட்ட போது அந்த ராம ரவிக்குமார் வழக்கமான ஆர்.எஸ்.எஸ் வானர பதிலை கூறுகிறார். அதாகப்பட்டது, ‘அம்பேத்கார் சீர்திருத்த வாதி, இந்து மதத்தின் உட்பிரிவான புத்த மதத்திற்கு மாறினார், பெரியார் பார்ப்பனர்களை வெறுத்தார், இந்துக்களை பிரித்தார், கைக்கூலி’ என்றெல்லாம் உருப்போட்டதை வெறுப்போடு வாந்தி எடுத்தார்.

அடுத்து நிகழ்ச்சி தொகுப்பாளர், “சரி அய்யா நான் இப்போது பெரியார் மேற்கோள் சிலவற்றை வாசிக்கிறேன், அதை ஏற்கிறீர்களா, எதிர்க்கிறீர்களா” என்று கேட்டு விட்டு படிக்கிறார். அந்த வாசிப்பின் போது இடையிடையே பெரியாரை முட்டாள் என்று ஏகத்துக்கும் திட்டுகிறது அந்த கூலிப்படை லூசு. இறுதியில் தொகுப்பாளர் வாசித்த பிறகு இதுவரை வாசித்தது பெரியாருடையது அல்ல அம்பேத்கருடையது என்ற உண்மையை தெரிவிக்கிறார்.

இது வரை தான் ஆடியது எல்லாம் போய் இப்போது அடி முட்டாளாக அம்மணமாக மாறிவிடுகிறார். அம்மணத்தை மறைக்க அந்த தாடி லூசு தாட் பூட்டென்று மீண்டும் கத்துகிறது. “நீங்கள் கருத்தை எதிர்க்கிறீர்களா, நபரை எதிர்க்கிறீர்களா என்று நிரூபிப்பதற்கே இப்படி பொய் சொன்னேன்” என்று தொகுப்பாளர் கச்சிதமாக முடித்தார். பிறகும் விவாதம் தொடர்ந்தாலும் இந்த காப்பிய தருணத்திற்கு இணை இல்லை. இதை நிலைய விவாதத்தில் கலந்து கொண்ட ஏனைய பெருமக்கள் ரசித்தார்களா தெரியவில்லை.

ஆக, அம்பேத்கார் சொன்னதை பெரியார் சொன்னதாக எதிர்த்த அந்த அற்பம் உண்மையில் அம்பேத்கரை ஆதரிப்பதாக சொன்னதற்கு என்ன பொருள்? பெரியரை அம்பேத்கருக்கு எதிராக நிறுத்தும் ஆர்.எஸ்.எஸ் சதி மற்றும் பெரியாரை வந்தேறி என்று நிறுத்தும் தமிழின பாசிஸ்டுகளின் சதியோடும் இந்த கூலிப்படை தலைவன் பேசுகிறார். இதனால்தான் இந்துமத்தை எதிர்த்து இருவரும் ஒரு போல சொன்னதை அவர்கள் விசமத்தனமாக மறைக்கிறார்கள்.

இப்பேற்பட்ட கூலிப்படை கூட்டத்தை ஊடகங்கள் அழைத்து அழகு பார்ப்பதன் அவசியம் என்ன? ஏனெனில் எந்த முதலாளிகள் கூலிப்படைகளை அமர்த்தி உலவ விடுகிறார்களோ அவர்களே ஊடகங்களுக்கும் கொட்டி அளக்கிறார்கள். மேலும் பா.ஜ.கவின் அதிகாரப்பூர்வமற்ற தமிழக அடியாளாக இந்து மக்கள் கட்சி தேவைக்கேற்ப செயல்படுகிறது. அந்த வகையில் இந்த முட்டாள்களை நிலையத்தில் அமர்த்தி பணிவோடு கேள்வி கேட்க வேண்டியதும் ஊடகங்களின் கடமையாகிறது.

அதை நியூஸ் 7 தொகுப்பாளர் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டு அம்பலப்படுத்தியிருக்கிறார். ஆனால் இதே கச்சிதத்தை அவர் மணற்கொள்ளையன் வைகுண்ட ராசனுக்கு பயன்படுத்த முடியாது என்பது ஒரு கசப்பான உண்மை.

அல்லது நாளையே வைகுண்டராசனின் கவனிப்பு பட்டியிலில் இந்து மக்கள் கட்சி வந்து விட்டால் இந்தக் கூலிப்படைக்கு இங்கேயும் சிவப்பு கம்பள வரவேற்பு நிச்சயம்.

இந்த வானரத்திற்கு ஈடு கொடுக்கும் விதத்தில் ஏதோ முனைவர் கலாநிதி, முன்னாள் அண்ணா பல்கலை துணைவேந்தர் என்று ஒரு சூட்டு கோட்டு போட்ட கனவானும் இருந்தார். சம்ஸ்கிருதத்தில் ஏகப்பட்ட விஞ்ஞான உண்மைகள் உள்ளன, கால்வாசி ஜெர்மனி மக்களுக்கு தேவபாஷை தெரியும் என்றெல்லாம் இதுவும் உளறியது. முன்னது கூலிப்படை என்றால் இதை என்னவென்று அழைப்பது?

அதற்குள் இந்த வீடியோவை பார்த்து விடுங்கள்! காலியாக வயிற்றை வைத்துக் கொண்டு பார்க்காதீர்கள்! சிரிப்பின் வலியில் செத்தே விடுவீர்கள்!

கூலிப்படை என்றால் கொடூரமாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை! ஆனால் கூலிப்படை குறித்து நாமும் இரக்கத்தோடு இருக்க வேண்டியதில்லை!!

  1. இந்து மக்கள் கட்சி ____ பயங்ககரவாத ஆதரவு கூட்டம்தான் பெட்ரோ டாலருக்காக கூலிவேலை செய்கிறது என்பதை அனைவரும் அறிவர்!!!

Leave a Reply to மு.நாட்ராயன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க