ரிச்சர்டும் பவுலாவும் தட்டில வச்சி – படக்கதை
கொடுத்து வச்சவங்க பற்றிய ஒரு சிறுசரிதை
ஆங்கில மூலம் : The Pencilsword: On a plate
தமிழ் மொழிபெயர்ப்பு : செழியன்
தமிழ் வசனங்கள் சேர்ப்பு : ஓவியர் முகிலன்
கொடுத்து வச்சவங்க பற்றிய ஒரு சிறுசரிதை
ஆங்கில மூலம் : The Pencilsword: On a plate
தமிழ் மொழிபெயர்ப்பு : செழியன்
தமிழ் வசனங்கள் சேர்ப்பு : ஓவியர் முகிலன்
இந்த வடிவம் சூப்பரா இருக்கு.
it is different.
கசப்பான உண்மை!
இதை முழுவதும் அப்படியே ஏற்று கொள்ள முடியாது . பணக்காரர்கள் ஜாதி மூலமாக தங்கள் குலக் கொழுந்துகளை மேலேற்றுவதை பற்றி குறிப்பிட வில்லை . . இப்படி வந்தவர்களையும் எனக்கு தெரியும். அந்த கம்பெனி ஓனர்கிட்ட பேசி விட்டு கம்பெனிக்குள்ள போனேன் , கம்பெனிக்குள் போய் அமர்ந்த பினர் ஹச்ஆர் கிட்ட போன் போட்டு சொல்லி , அவரே ஆர்டர் கொண்டு வந்து கொடுத்தாங்க என்று பெருமை அடிதுகொண்டார்
சோசியலிச காலத்தில் பணக்காரர்கள் கனெக்சன் மூலமாக வேலை வாங்கி கொடுத்து காரியம் சாதித்தார்கள் . இன்றைக்கும் இது சில இடங்களில் தொடர்கிறது . ஆனால் காற்பரட்டுகள் வந்த பின்னர் நிலைமை மாறி உள்ளது. பெரும்பான்மை நடுத்தர வர்க்கம் சிபாரிசு கடிதம் இல்லாமல் வேலை பெற்று வாழ்வில் வளம் பெறலாம் என்ற நிலா ஏற்பட்டு உள்ளது . அதனால் தான் நடுத்தர வர்க்கம் கல்விக்கு அதிகம் செலவழிக்கிறார்கள் , சுயமாக இருக்கலாம் யார் காலிலும் விழ வேண்டாம் என்னும் சிந்தனையில் தான்.
அடுத்து இப்படி கனேக்ஸ்சன் அதிகம் உள்ள ஆதிக்க சாதிகளுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கலாமா ?
தனியார் பள்ளிகளில் படித்து வருபவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கலாமா ?
ஏழைகள் முன்னேறலாம் என்று நினைத்தால் உனக்கு எதுக்கு இந்த வேலை என்று கேட்கிறது. பால்கார தொழிலாளி இளைஞன் ஐ எ எஸ் படிக்க ஆசைப்பட்டு கோச்சிங்கில் சேர்ந்து இருக்கிறான் . ஊக்கம் அளிக்க வேண்டியவர்கள் உனக்கு எதுக்கு அவ்வளவு ஆசை , தலையாரி பூசாரி மாதிரி லெவெலுக்கு எழுது என்று சொல்லி இருக்கிறார்கள்
ராமனின் கருத்துக்களையும் அப்படியே ஏற்றுக்கொள்வதிற்கில்லை! பணக்காரர்கள் , கார்பொரேட் முதலாளிகள் தங்கள் கொழுந்துகளை மேலேற்றிக்கொண்டுதான் உள்ளனர்! ஆர் எஸ் எஸ் காரர்களை தங்கள் ரோலில் சம்பளம் கொடுத்து, அரசியல் செய்ய கார்பொரேட் கம்பெனிகள், பொதுதுறை கம்பனிகள் பயன்படுத்தப்பட்டன! பிறர் செய்யும் வேலைகள், இந்த அம்பிகள் செய்வதாக புரொஜெக்ட் செய்யப்பட்டன! வேலை செய்ய ஒ ருவர், அதன் பலனைகொண்டு புரோமோஷன் வாங்குவது வேரொருவர் என்பது பலநிறுவனங்களில் கண்கூடு!
பார்ப்பனர்கள் சந்தடி சாக்கில் இட ஒதுக்கீடை எதிர்த்து சிண்டு முடிவது ஒன்றும் புதிதல்ல! ராமனும் சந்தடி சாக்கில் அதைத்தான் செய்கிரார்! யோக்கியர், அரசு உத்தியோகங்களிலும், அர்ச்சகர் பதவியிலும்,நீதிமன்ற பதவிகளிலும் அவாள் “இன ஒதுக்கீடு’ செய்து கொள்வதை அவர் கண்டுகொள்ளாமல்! 75% மக்கள் 7 சதவிகிதம் கூட அரசு பதவி பெற முடியவில்லையே ஏன்? பார்ப்பன யுக்தி தெரிந்தது தானே!
ராமரின் கூற்று அப்பன் குதிருக்குள் இல்லை என பறைசாற்றுகிறது!
பார்ப்பனர்கள் சந்தடி சாக்கில் இட ஒதுக்கீடை எதிர்த்து சிண்டு முடிவது ஒன்றும் புதிதல்ல! ராமனும் சந்தடி சாக்கில் அதைத்தான் செய்கிரார்! யோக்கியர், அரசு உத்தியோகங்களிலும், அர்ச்சகர் பதவியிலும்,நீதிமன்ற பதவிகளிலும் அவாள் “இன ஒதுக்கீடு’ செய்து கொள்வதை அவர் கண்டுகொள்ளாமல்! 75% மக்கள் 7 சதவிகிதம் கூட அரசு பதவி பெற முடியவில்லையே ஏன்? பார்ப்பன யுக்தி தெரிந்தது தானே!
தீண்டாமை கொடுமையினால் பாதிக்கப்பட்டோம் என்று ஆதிக்க சாதிகள் கூறி இட ஒதுக்கீட்டையும் பெற்று கொண்டு , பிற சாதியினரை தீண்டாமை செய்பவர்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும் என்கிறீர்களா ?
இல்லை தனியார் பள்ளிகளில் பல ஆயிரம் கொடுத்து படித்து , பதினொன்றாம் வகுப்பிலேயே பன்னிரெண்டாம் வகுப்பு பாடத்தை படித்து குறுக்கு வழியில் மதிப்பெண் பெற்றவர்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும் என்கிறீர்களா ?
இரண்டாஇய்ரம் வருடங்களாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு போக வேண்டிய சலுகையை , நானும் பாதிக்கபட்டவன் என்று கூறி ஆதிக்க சாதிகள் பெறுவது எனக்கு உடன்பாடு இல்லை. நடைமுறையில் இருக்கும் குறைகளை சுட்டி காட்டினால் உடனே இவன் பார்பனன் என்று ஜாதி பார்க்கும் நீங்கள் தான் பெரியாரிஸ்டா ?
//தீண்டாமை கொடுமையினால் பாதிக்கப்பட்டோம் என்று ஆதிக்க சாதிகள் கூறி இட ஒதுக்கீட்டையும் பெற்று கொண்டு , பிற சாதியினரை தீண்டாமை செய்பவர்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும் என்கிறீர்களா ?//
இதுதான் பார்ப்பன திரிபு வாதம்! தீண்டாமை கொடுமையினால், பார்பனர் தவிர அனைவரும் பாதிக்கப்பட்டாலும், எஸ் சி பிரிவினர் மட்டுமே அனைவராலும் ஒதுக்கி வைக்கப்பட்டனர்; காரணம் பார்ப்பன (ஆரிய) பண்பாட்டு மேலாண்மையை அவர்கள் ஏற்றுக்கொள்ளாததால் இருக்கலாம்! சாதிகள் பிளவுபட்டு நிற்பதற்கு காரணமே, வெவ்வேறு தொழில் சார்ந்த பிரிவுகள், அரச படைகளின் நாசகாரநடவடிக்கைகளுக்கு பின் , புதிய இடத்தில் அவைகள் குடியமர்த்தபடுவதால்தான்! ச்
ஆதிகளுக்கிடையேயான பகையுணர்வும், பண்டைய அவனம்பிக்கையும், பண்பாட்டு ஒற்றுமையிண்மையும் தான் காரணம்! இதை பார்பன சக்திகள் பயன்படுத்திக்கொண்டதுடன் பகைமையைநீரூற்றி வளர்க்கின்ற வேலையையும் செய்கின்றனர்! அர்த்தசாஸ்திரம் படைத்தவர்கள் அல்லவா?
//இரண்டாஇய்ரம் வருடங்களாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு போக வேண்டிய சலுகையை , நானும் பாதிக்கபட்டவன் என்று கூறி ஆதிக்க சாதிகள் பெறுவது எனக்கு உடன்பாடு இல்லை……//
அவரவர் சாதிக்குரிய அரசு வேலை வாய்ப்பு பெறாத அனைவரும் பார்ப்பனியத்தால் பாதிக்கப்படுபவர்கள் தான். இதில் கிரீமி லேயர் என்று குழப்பி, குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது பார்பனீயமே!
நான் பெரியாரிஸ்டா இல்லையா என்பது மற்றவர் கவலைப்படவேண்டாம்; குறிப்பாக பெரியாரை எதிரி என்று ‘சத்ரு சம்கார யாகம்’ நடத்தியவர்கள் !
பெரியாரின் வரலாற்று சிறப்புமிக்க போராட்டங்களுக்கு பின்னரும், அரசு வேலைகளும், அய் அய் டி நுழைவும் பார்பன ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியவில்லையே! பார்பனரல்லாதாருக்கென்று ஆரம்பிக்கப்பட்ட பச்சையப்பன் டிரஸ்ட் நிர்வாகம் பார்பனர் கைக்கு போய்விட்டதே, வ உ சி யின் சுதேசி கப்பல் கம்பனி போல! நாளை பெரியார் டிரஸ்டையும் அரசு எடுத்துக்கொள்ளலாம்- யார் கண்டது? உழுபவன் சம்மதமின்றியே நிலத்தை அபகரிக்க க் உறுக்கு வழியில் சட்டம் போடும் ஜனனாயக வாதிகளும், பொட்டி கொடுத்தால் சாதகமாய் தீர்ப்பெழுதும் நீதிவான்களும் இருக்கையில், எமெர்ஜென்சி என்று யோக்கியமாய் டெக்லேர் செய்யவும் வேண்டுமா என்ன?
//இதுதான் பார்ப்பன திரிபு வாதம்! தீண்டாமை கொடுமையினால், பார்பனர் தவிர அனைவரும் பாதிக்கப்பட்டாலும், எஸ் சி பிரிவினர் மட்டுமே அனைவராலும் ஒதுக்கி வைக்கப்பட்டனர்; காரணம் பார்ப்பன (ஆரிய) பண்பாட்டு மேலாண்மையை அவர்கள் ஏற்றுக்கொள்ளாததால் இருக்கலாம்! சாதிகள் பிளவுபட்டு நிற்பதற்கு காரணமே, வெவ்வேறு தொழில் சார்ந்த பிரிவுகள், அரச படைகளின் நாசகாரநடவடிக்கைகளுக்கு பின் , புதிய இடத்தில் அவைகள் குடியமர்த்தபடுவதால்தான்! ச்
//
பொதுவாக பேச வேண்டாம் , தீண்டாமை செய்யும் தேவர்களுக்கும் , வெள்ளாளர்களுக்கும் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்கிறீர்கள் ?
நிலவுடைமை வைதுகொண்டே, பார்பனர்களால் பாதிக்கப்பட்டோம் என்று பெற உரிமை இருக்கிறது என்கிறீர்கள் .
அதே பார்பனர்களால் கொடுமைபடுதபட்ட(?) இந்த சமுதாயங்கள் , தாளதபட்ட பிரிவினரை அதே பார்ப்பனீயம் துணை கொண்டு துன்புறுத்தி கொள்ள உரிமையும் இருக்கிறது என்கிறீர்கள் .
கேள்வி கேட்டால் ஆரிய பூச்சாண்டி கதை சொல்லுகிறீர்
//அவரவர் சாதிக்குரிய அரசு வேலை வாய்ப்பு பெறாத அனைவரும் பார்ப்பனியத்தால் பாதிக்கப்படுபவர்கள் தான். //
This will keep the caste system rather than abolish it
பார்பனர்கள்நில உடமையைவிட , அரசு வேலை மற்றும் கோவில் அரச்சகர் உரிமையை ஏன் விட மறுக்கிரார்கள்?
நில உடமை குற்றமல்லவே ! ஒரு வேலை ஜமீந்தாரி உடமையை ராமன் குறிப்பாரேயாகில், அதுவும் இப்போது ஒழிக்கப்பட்டு விட்டதே ! சுதந்திரத்திற்கு பின்னர் வந்த காங்கிரசு அரசுநில உடமையை 15 ஸ்டாண்டர்ட் ஏக்கர் அளவில் குறைத்து விட்டதே! அதிலும் மடங்களுக்கும், அதர்ம? ஸ்தாபனங்களுக்கும் முன் தேதியிட்டு ரெஜிஸ்டெர் செய்யப்பட்ட பார்பன யுக்தியை வெகு சிலரே அறிவார்கள்!
தற்போது தலித் மற்றும் முன்னேறிய? சமூகங்களுக்கும் இடையில் கலவரம்நடக்க தூண்டுவது யார்? குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம், தமிழ்னாட்டில் தலித்துகளுக்கு எதிரான கலவரம்- மகாராஷ்டிரத்தில் சிவசேனாவுடன் இந்துத்வா கூட்டு- தமிழ்னாட்டில் வன்னிய, தேவர் சாதியுடன் பிரிக்க முடியாத கூட்டு, ராஜாஜியால் ஆரம்பிக்கப்பட்டு, எம்ஜியார், ஜெயா வரை தொடரும் துரோக வரலாறுதானே “தீண்டாமை”! இந்த சாதிகள் அனைவரும் இந்துத்வா அமைப்பினால் ஊக்குவிக்கப்பட்டவர்தாமே! உழவர்-உழைப்பளிகள் கட்சி கண்ட ராமதாஸ் வழுக்கி மீண்டும் வன்னிய கட்சியானது எவ்வாறு?
மதுரை ஆலய பிரவேச போராட்டம் பெரியார் காமராஜர்நடத்த கோர்ட்டுக்கு சென்று தடையாணை கேட்ட தேவரும்-வைத்தியும் ஊரார் அறியாமல் கக்கனை வைத்து ரகஸ்ய பிரவேசம் செய்தது யாருடைய ஆலோசனையால்?
தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்றுமே எதிரியாக இருந்து காய்நகர்த்துவது எந்த சக்தி என்பது ராமனுக்கு தெரியாமலிருக்கலாம்-பெரியார்-அம்பேதகரிஸ்டுகளுடன் கேட்டாவது தெளிவடைக!
//அதே பார்பனர்களால் கொடுமைபடுதபட்ட(?) இந்த சமுதாயங்கள் , தாளதபட்ட பிரிவினரை அதே பார்ப்பனீயம் துணை கொண்டு துன்புறுத்தி கொள்ள உரிமையும் இருக்கிறது என்கிறீர்கள் …//
இந்த வரிகளை நீங்களே கற்பனையில் செர்த்துக்கொண்டது ஏன்? இது தான் ஆரிய புனைதல்! பூச்சாண்டிக்கு பயந்த மக்கள் இப்போது விழுப்படைந்து விட்டார்கள்! அதனால் ஆரியர் பூனை வேஷமிடுகிரார்கள்!
கடைசியில் ஆங்கிலத்தில் ஒரு வரி-தாங்கள் ஆங்கிலம் அறிந்த அறிவு ஜீவி என்றுதான் தெரிகிறதே!
சாதிகள் ஒழிய- சாதி அடிப்படையில் செய்யப்படும் இழிவுநீங்க- அதே அடிப்படையில் சமூகநீதியால் சமன் செய்யப்படல் வேண்டும் என்பதே “இட ஒதுக்கீடு” கோரும் மக்களின் விருப்பம்! அதை மறுப்பது பார்ப்பன சதியே!
“புரட்சி மனப்பான்மையுடையவன் போப் ஆகவே மாட்டான். இக்கருத்து இந்திய பார்ப்பனர்கட்கும் பொருந்தும் போப் ஆகிறவன் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்றால் பார்ப்பானாகப் பிறந்தவனும் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்பது உறுதி. பார்ப்பானாகப் பிறந்தவன் சமூகப் புரட்சிக்காரனாக இருப்பான் என்று எதிர்பார்ப்பது நல்லகண்ணுடைய குழந்தைகளை யெல்லாம் கொன்றுவிட வேண்டுமென ஆங்கில பாராளுமன்றம் சட்டம் இயற்றும் என்று எதிர்பார்ப்பதற்கு ஒப்பேயாகும் !”
-அம்பேகட் கர்
– சாதியை ஒழிக்க வழி எனும் நூலிலிருந்து.