privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கதலித் மாணவன் ரோகித் வெமுலாவைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ் !

தலித் மாணவன் ரோகித் வெமுலாவைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ் !

-

இந்துத்துவப் பாசிசம் கொன்று தீர்த்த தலித் மாணவன் ரோகித் வெமுலா!- நாம் செய்ய வேண்டியது என்ன?

ரோகித் வெமுலா
ரோகித் வெமுலா

ஹைதராபாத் பல்கலைக் கழகம், அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலா, பல்கலைக்கழகத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக 15 நாட்களுக்கும் மேலாக போராடிக் கொண்டிருந்த நிலையில் ஞாயிறு (17-01-2016) அன்று இரவு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இந்துத்துவக் காலிகளுக்கு எதிராக போராடியதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் நேரடி தலையீட்டின் கீழ், கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்புதான் இப்பல்கலையைச் சேர்ந்த அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த ஐந்து தலித் மாணவர்கள் விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக விடுதி, நூலகம், வகுப்பறை மற்றும் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

ஆர்.எஸ்.எஸ்-ஏ.பி.வி.பி-ஆல் வெளியேற்றப்பட்ட அம்பேத்கர் கூட்டமைப்பு மாணவர்கள்.
ஆர்.எஸ்.எஸ்-ஏ.பி.வி.பி-ஆல் வெளியேற்றப்பட்ட அம்பேத்கர் கூட்டமைப்பு மாணவர்கள்.

பல்கலைக்கழகத்தின் பாரபட்சமான இந்த பார்ப்பன பாசிச நடவடிக்கையை எதிர்த்தும் மாணவர்களை பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்கக் கோரியும் பாதிக்கப்பட்ட மாணவர்களும், ஜனநாயக சக்திகளும் பல்கலைக்கழகத்திற்கு வெளியே கொட்டகை அமைத்து பதினைந்து நாட்களுக்கு மேலாக போராடி வந்தனர். இந்நிலையில் தான் மாணவர் ரோகித் வெமுலாவின் மரணம் நாடெங்கிலும் ஜனநாயக சக்திகளை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியிருக்கிறது.

தலித் மாணவனின் மரணத்திற்கு எதிராக பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் தெலுங்கானாவைச் சேர்ந்த மத்திய மோடி அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை கைது செய்யுமாறும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடைசெய்யுமாறும் போராடி வருகின்றனர்.

பல்கலைக்கழக மாணவனின் தற்கொலையின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடி அரசின் பகிரங்க தலையீட்டுக்கான காரணம் என்ன?

முசாபர் நகர் தாக்குதலில் ஆர்.எஸ்.எஸ் காலிகளின் திட்டமிட்ட சதிச்செயலை அம்பலப்படுத்தும் “முசாபர்நகர் பாக்கி ஹே” எனும் ஆவணப்படத்தை இம்மாணவர்கள் கூட்டமைப்பு பல்கலைக்கழக வளாகத்திற்குள் திரையிட்டிருக்கின்றனர்.

முசாபர்நகர் பாக்கி ஹை ஆவணப்படத்தின் டீசர்

முன்னதாக, இந்த ஆவணப்படம் டெல்லிப் பல்கலைக்கழகத்தில் திரையிடப்படுவது இந்துத்துவக் கும்பலால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அச்சுறுத்தலுக்கு அஞ்சாத, நாடெங்கிலும் உள்ள ஜனநாயக முற்போக்கு மாணவர் அமைப்புகள் இந்துத்துவ பாசிசத்தை தனிமைப்படுத்தி வேரறுக்கும் விதமாக முசாபர்நகர் தாக்குதலில் ஆர்.எஸ்.எஸ்ஸின் சதிச்செயலை அம்பலப்படுத்துவதில் முனைப்பு காட்டினர். இதன் ஒரு பகுதியாகவே ஹைதராபாத் பல்கலைக்கழகத்திலும் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பு “முசாபர்நகர் பாக்கி ஹை” ஆவணப்படத்தை திரையிட்டனர். மேலும், யாகூப் மேமன் துக்கிலிடப்பட்டதில் அரசின் இந்துத்துவ முகத்தை தோலுரிக்கும் விதத்திலும் இம்மாணவர் கூட்டமைப்பின் பிரச்சாரம் அமைந்திருந்தது.

rohit-vemula-3இதனால் காவிக்கூட்டம் மாணவர்கள் மத்தியில் முழுக்கவும் அம்பலப்பட்டு போனது. பார்ப்பனிய இந்து மதத்தின் சேவகனாக தாழ்த்தப்பட்டவர்கள் இருக்க வேண்டும் என்று சொன்ன சாவர்க்கரின் ஆணையை தலித்துகள் மீறுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத காவிக்கும்பல் இம்மாணவர் கூட்டமைப்பு மீது தாக்குதலில் இறங்கியிருக்கிறது. அது தொடர்பான விசாரணையில் ஆர்.எஸ்.எஸ்-ஏ.பி.வி.பி குண்டாந்தடிகள் இம்மாணவர் கூட்டமைப்பிடம் மன்னிப்புக் கோர வைக்கப்பட்டனர்.

ஆனால், அரசு அடக்கு இயந்திரத்தை தன் கைகளில் வைத்திருக்கிற காவிக்கூட்டம் தனக்கே உரித்தான நைச்சிய பாணியில் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பை பல்கலையில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கத்துடன் தாங்கள் தாக்கப்பட்டதாக பொய்வழக்கை புனைந்தது. இந்த பொய் குற்றச்சாட்டை வைத்துக்கொண்டு மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருக்கும் பண்டாரு தத்தாத்ரேயா, “ஹைதராபாத் பல்கலைக்கழகம் தேசத்துரோக-சாதிய-பயங்கரவாதிகளின் கூடாரமாக இருக்கிறது” என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் ஸ்மிருதி இரானிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

ரோகித் வெமுலாவின் தற்கொலையை கண்டித்து முற்றுகை போராட்டம்
ரோகித் வெமுலாவின் தற்கொலையை கண்டித்து முற்றுகை போராட்டம்

இப்படித்தான் காவி வானரங்கள் சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் ‘மோடிக்கு எதிராக பேசுகிறது’; ‘இந்துமதத்தை கொடூரங்களின் கூடாரம் என்று சொல்கிறது’ (அம்பேத்கர் சொன்னது!!); ‘தேசத்துரோகச் செயல்களில் ஈடுபடுகிறது’ என்று ஸ்மிருதி இரானிக்கு மொட்டைக் கடுதாசி போட்டனர். அ.பெ.ப.வ முன்னணி மாணவர்களும் ரோகித் வெமுலா உள்ளாக்கப்பட்ட இதே உளவியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஆனால் அதே சமயம் ஜனநாயக சக்திகளின் வீச்சான போராட்டமும் தமிழ்நாட்டின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபுமும் புரட்சிகர இயக்கங்களின் இடையறாத தாக்குதலும் இந்தியாவெங்கும் மோடி கும்பலின் இந்துத்துவ பாசிசத்தை அம்பலப்படுத்தி காவிக்கும்பலை பின்வாங்க வைத்தது.

ஆனால், தெலுங்கானாவிலோ தலித் மாணவனை காவுவாங்கி இந்துத்துவம் தன் கோரப்பற்களைக் காட்டியிருக்கிறது. ஸ்மிருதி இரானியின் தலையீடு; அதற்குப் பிந்தைய துணைவேந்தரின் ஒருதலைபட்சமான நடவடிக்கை; தலித் பேராசிரியர்கள் என்று கூறிக்கொண்டவர்களே ஆர்.எஸ்.எஸ் ஊதுகுழலாக மாறிப்போய் மவுனம் சாதித்தது என டிசம்பர் 21 அன்று அம்பேத்கர் மாணவர் அமைப்பின் ஐந்து முன்னணியாளர்களும் பல்கலையில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.

ரோகித் வெமுலாவின் ஆராய்ச்சி உதவித்தொகை கடந்த ஜூலை மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இறுதியில், அவர் பல்கலைக் கழகத்தில் நுழைவதற்கே அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறாக, மத்திய, மாநில, பல்கலைக்கழக, ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத ஒடுக்குமுறை கருவிகள் ஒரு சேர இம்மாணவர்களின் மீது ஏவப்பட்டிருக்கிறது. இறுதியில் பார்ப்பனியம் நிலைநாட்டப்பட்டு மாணவர் ரோகித் வெமுலா தூக்கில் ஏற்றப்பட்டிருக்கிறார்.

சென்னைப் பல்கலைக்கழகத்திலும் டாஸ்மாக்கிற்கு எதிராக போராடிய மாணவர்கள் பல்கலைக்கழகத்தால் நீக்கப்பட்டது நினைவிருக்கலாம். இந்துத்துவத்தின் ஊதுகுழலாக இருக்கும் அ.தி.மு.க கட்சியின் அம்மா அடிவருடி துணைவேந்தர் தாண்டவனும் சென்னை மாணவர்களுக்கு ரோகித் வெமுலா அனுபவித்த அத்துணை கொடுமைகளையும் ஏவத்தான் செய்தார். இதனாலயே சென்னை மாணவர்கள் ஒருகட்டத்தில் பல்கலைக்கழக கட்டிடத்தில் ஏறி ‘பல்கலைக்கழகம் தங்களை மீண்டும் அனுமதிக்காவிட்டால் உயிர் துறப்பதாக’ பகிரங்கமாக அறிவித்தனர்.

சென்னைப் பல்கலையில் நடக்கவிருந்த படுகொலை ஹைதாராபாத் பல்கலையில் நடந்தேறியிருக்கிறது என்பதில் இருந்து என்ன தெரிகிறது?

மாணவர்கள் அரச பயங்கரவாதத்தை எதிர்க்கும் பணியில் தங்களை சமரசத்திற்கு இடமின்றி ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். இது எதைவிடவும் ஆபத்து என்பதை பாசிஸ்டுகள் உணர்ந்திருக்கின்றனர். மாணவர்களை மூர்க்கமாக ஒடுக்காவிட்டால், போராட்டத்தின் திசைவழி ஆளும்வர்க்க கும்பலை அச்சுறுத்தும் என்பதில் மரண பீதியுற்றிருக்கின்றனர்.

ஆகையால் தான், பொதுவெளியில் தலித் மாணவர்கள் அடையாள அரசியல் என்ற எல்லைக்குள் நின்று பேசுவதை அனுமதிக்கிற ஆளும் வர்க்கம், அதே மாணவர்கள் முசபார்நகர் தாக்குதலை அம்பலப்படுத்துவதில் நிற்கிற பொழுது என்ன செய்கிறது என்பதற்கு ரோகித் வெமுலாவின் தற்கொலை ஒரு வகைமாதிரியாக வந்து நிற்கிறது.

அது மட்டுமல்ல. இசுலாமியர்களுக்கு எதிராக தலித்துகளைத் திரட்டிவிட முடியும் என்று கனவு கண்ட ஆர்.எஸ்.எஸ் கும்பலின் திட்டத்தை சுக்கு நூறாக ஹைதராபாத் பல்கலைக் கழக தலித் மாணவர்கள் நடைமுறையில் உடைத்துக் காட்டியிருக்கின்றனர். இதை ஆளும் இந்துத்துவக் கும்பலால் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதும் ரோகித் வெமுலாவின் கொலையிலிருந்து தெரியவருகிறது.

ரோகித் வெமுலாவின் குரல் இந்துத்துவப் பாசிசத்தை எதிர்க்கும் கலகக் குரலாக வெளிப்பட்டு இந்துத்துவக் கயிற்றால் அவரது குரல்வளை கடைசியில் இறுக்கப்பட்டிருக்கிறது. ரோகித் வெமுலாவின் பலி நாடெங்கும் கோப அலைகளை கிளப்பி விட்டிருக்கிறது.

ஊர், சேரி என்று பிரித்து வைத்து தலித்துக்களை அடக்கி வைத்து அடிமையாக நடத்திய பார்ப்பனிய மதம் நவீன காலத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க மூலம் அதை தொடர்கிறது. அம்பேத்கர் துதி, தலித்துக்களின் மீதான ஓநாய் இரக்கம்  போன்ற ஊசிப்போன ‘கருணை’யால் மோடி அரசின் உண்மை முகம் தெரியாமல் போய்விடவில்லை. நாடெங்கும் கிளம்பும் மாணவர் போராட்டங்கள் மோடி அரசுக்கு வெறும் தலைவலியாக மட்டும் இருக்காமல் மரண அடியாக மாறவேண்டும்.

– இளங்கோ

  1. ஞாயிற்றுக்கிழமை மாலை தற்கொலை செய்து கொண்ட ரோஹித் வெமுலா ஆங்கிலத்தில் அவர் எழுதிய கடைசி கடிதத்தின் தமிழ் வடிவம்

    காலை வணக்கம்,

    இந்தக் கடிதத்தை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும்போது நான் இவ்வுலகை விட்டு நீங்கியிருப்பேன். என் மீது கோபம் கொள்ளாதீர். உங்களில் சிலர் என் மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தீர்கள், என்னை பரிபூரணமாக நேசித்தீர்கள், என்னை உரிய மரியாதையுடன் நடத்தினீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். பிரச்சினை எனக்குள்தான் இருக்கிறது. என் உடல் வளர்ச்சிக்கும் ஆன்ம வளர்ச்சிக்கும் இடையே நிறையே ஏற்றத்தாழ்வு இருப்பதாக உணர்கிறேன். அது என்னை விகாரப்படுத்திவிட்டது. ஓர் எழுத்தாளனாக வேண்டும் என்பதே என் விருப்பம். காரல் சாகன் போல ஓர் அறிவியல் எழுத்தாளனாக வேண்டும் என்பது எனது லட்சியம். ஆனால், என்னால் எழுத முடிந்தது என்னவோ இந்த தற்கொலை கடிதத்தை மட்டுமே…

    அறிவியல், நட்சத்திரங்கள், இயற்கை இவையெல்லாம் என் விருப்பத்துக்குரியவை. என் விருப்பப்பட்டியலில் மனிதர்களும் இருக்கின்றனர். அவர்கள் இயற்கையுடனான உறவை எப்போதோ துண்டித்துக் கொண்டனர் என்பதை அறியாமலேயே அவர்களை நான் நேசித்து வந்தேன். நமது உணர்வுகள் எல்லாம் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு நம்மிடம் கடத்தப்பட்டவை, நமது அன்பு கட்டமைக்கப்பட்டவை, நமது நம்பிக்கைகள் சாயம் பூசப்பட்டவை. நாம் என்ற சுயமான ரூபமே ஒரு செயற்கை வடிவமாகிவிட்டது. எள்ளளவும் காயமடையாமல் அன்பை பெறுவது என்பது மிகவும் கடினமாகிவிட்டது.

    ஒரு மனிதனின் மதிப்பு, அவனது பிறப்பு அடையாளங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. சில நேரங்களில் வாக்கு, சில நேரங்களில் எண் பலம், சில நேரங்களில் சில பொருட்கள்கூட அவனது அடையாளத்தை தீர்மானிக்கின்றன. ஒரு மனிதன் எப்போதாவது அவனது ஆன்மாவின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறானா என்றால்? நிச்சயமாக இல்லை.

    சில நட்சத்திர துகள்களால் ஒரு பிரம்மாண்டம் சமைக்கப்பட்டதுபோல், மனிதனின் மாண்பு சில அடையாளங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. கல்வி, அரசியல், சாலைகள், வாழ்வு, சாவு என எல்லாவற்றிலும் இத்தகைய நிர்ணயங்கள் வியாபித்துக் கிடக்கின்றன.

    இதுமாதிரியான கடிதத்தை நான் எழுதுவது இதுவே முதன்முறை. ஒரு கடைசி கடிதத்தின் முதல் முயற்சி என்று சொல்லலாம். இது ஒருவேளை அர்த்தமற்றதாக இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.

    இந்த உலகம் மீதான எனது புரிதல் தவறாக இருக்கலாம். அன்பு, வலி, வாழ்க்கை, மரணம் இவற்றின் மீதான என் புரிதல்கூட தவறானதாக இருக்கலாம். எனக்கு எந்த அவசரமும் இல்லை; ஆனால் நான் எப்போதுமே அவசரப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறேன். வாழ்க்கையை துவக்குவதற்கு வழி தெரியா தேடலுக்கான அவசரம்.

    சிலருக்கு வாழ்க்கை வெறும் சாப வடிவிலானதாக கிட்டுகிறது. எனது பிறப்பு ஒரு பயங்கர விபத்தின் விளைவு. எனது பால்ய பருவ தனிமையில் இருந்து என்னை எப்போதுமே விடுவித்துக் கொள்ள முடிந்ததில்லை. கடந்த காலங்களை திரும்பிப்பார்க்கும்போது யாராலும் போற்றப்படாத ஒரு குழந்தையாகவே எனது பிம்பம் மிஞ்சுகிறது. (நானே எனது வார்த்தைகளை அடித்துவிடுகிறேன்).

    இத்தருணத்தில் நான் வேதனைப்படவில்லை, துன்பப்படவில்லை. என்னுள் ஒரு வெற்றிடத்தை நான் உணர்கிறேன். அது பரிதாபத்துக்குரியது. பரிதாபத்தின் உந்துதலால் நான் இதைச் செய்கிறேன்.

    இதற்காக நான் கோழை என்று முத்திரை குத்தப்படலாம். சுயநலவாதி என்று சாடப்படலாம். ஏன், முட்டாள் என்று நிந்திக்கப்படலாம். என்னை எப்படி அழைத்தாலும் நான் கவலைப்படப் போவதில்லை. மறுபிறவி கதைகள், பேய்கள், பரிசுத்த ஆவிகள் இவற்றின் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது.

    எனக்கு ஒரே ஒரு நம்பிக்கை இருக்கிறது. என் நம்பிக்கையெல்லாம் தொடுவானத்தில் உள்ள நட்சத்திரங்களை அடைய முடியும், வேறு உலகங்களை அறிய முடியும் என்பது மட்டுமே.

    இந்தக் கடிதத்தை படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் எனக்காக இதை செய்ய முடியும். எனது கல்வி உதவித்தொகை 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடந்த 7 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த உதவித்தொகை என் குடும்பத்தினருக்கு எப்படியாவது கிடைக்க ஏதாவது செய்யுங்கள். ராம்ஜிக்கு நான் ரூ.40,000 தர வேண்டும். ராம்ஜி அந்தப் பணத்தை திருப்பித் தா என்று எப்போதுமே கேட்டதில்லை. இருந்தாலும், ராம்ஜியிடம் அதை கொடுத்துவிடுங்கள்.

    எனது இறுதி ஊர்வலம் அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெறட்டும். நான் தோன்றி மறைந்தேன். அவ்வளவே. அதை இயல்பாக எடுத்துக்கொள்ளுங்கள். எனக்காக கண்ணீர் சிந்த வேண்டாம். இவ்வுலகில் வாழ்வதைவிட மரணித்தல் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். “நிழவுலகிலிருந்து நட்சத்திரங்களை நோக்கிச் செல்கிறேன்.”

    உங்கள் அறையை நான் என் சாவுக்காக பயன்படுத்தியதற்கு என்னை மன்னித்துவிடுங்கள் உமா அண்ணா.

    அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பினர், என்னை பொருத்தருள வேண்டும். நீங்கள் என்னை மிதமிஞ்சிய அளவு நேசித்தீர்கள். தங்கள் எதிர்காலம் செழிக்க என் வாழ்த்துகள்.

    இறுதியாக இதை உதிர்க்கிறேன்… ஜெய் பீம்.

    : நன்றி http://tamil.thehindu.com/india/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article8123583.ece

  2. தற்கொலை செய்துகொண்ட ரோஹித் ஒரு மனநிலை பிறழ்ந்த நிலையில் பேசும் வீடியோக்கள் இருக்கிறது. அம்பேத்கருக்கும், நூற்றுக்கனக்கான இந்தியர்களை வெடிகுண்டு வைத்துவ்கொன்ற இஸ்லாமிய பயங்கரவாதி யாகூப் மேமனை தூக்கில் போட்டதை கருப்பு நாள் எனவும், விவேகானந்தரை கேவலமாக விமர்சித்தும், எழுதிய இந்த மனநிலை பிறழ்ந்தவர் இறப்பு மிக வருத்தமே. ஆனால், தலித், தலித் எனக்கூறி இதை திசை திருப்பி ரோஹித் எனும் குறுக்கனை தியாகியாக்கும் உங்களைப்போன்ற செய்வோர்களின் செயல் வாந்தியை வரவழைக்கிறது.

    • Yakoob Menon never involved in any criminal activities, SC hanged him that he born as a brother of Menon, it is clear in SC Verdict that Yakoob never involved in that Blast. Our LAWS always have two tongues – it is clear in the verdit of Actor Seran, For Actor Seran’s daughter and a farmer’s daughter the laws DIFFERS.

    • விவேகனந்தர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் இல்லயே ரவி அப்பிடி விவேகானந்தரை விமர்சித்தால் அவர் எப்பிடி மனநிலை பாதிக்கப்ப்ட்டவர் ஆகி விட்டார் ரவி அண்ணன் என்னைப்பொருத்தவரையில் விவேகானந்தர் என்பவர் ஒரு இந்து மத மூடநம்பிக்கைகளை ஒப்புக்கு கண்டித்து விட்டு அதே இந்து மதத்தை பரப்பிய சாமியார் அவ்வளவே இவர் சென்னை வந்த போது இவரை பல்லக்கில் பலர் சேர்ந்து தூக்கி சுமந்தார்களாம் அதையும் பல்லிளித்துகொண்டு ஏற்றுக்கொண்டாராம் முதலில் மனிதனை மனிதன் பல்லக்கில் சுமப்பதே தவறு இந்த தனி மனித மான்பு கூட தெரியாதவரக விவேகானந்தர் இருந்துருக்கிறார் அதனால் இவர விமர்சிப்பதில் ஒன்றும் தவறு இல்லை மாட்டிக்கொள்ளாத வரை நித்தி கூட விவேகனாந்தர்தான்…

      • Bro.Joseph you keep commenting about HINDU superstious alone, what about your ALELUYA groups doing in Gospel Meetings?Blind is seeing, Deaf is Hearing, Dumb is speaking and even CORPSE is also getting alive WOV!These all are not superstious?There are also too many nithis in christians.

        • கிறிஸ்தவ நித்திகள் ஏராளமாக வந்து கொண்டு இருக்கிறார்கள் மோகன் சி எஸ் ,பால் தினகரன் ,என்று நாம் மதத்தை தவிர்த்து மனிதனாக போராடுவோம் எல்லா மத நித்திகளையும் காயடிப்போம் அண்ணன் சிரினிவாசன் தலைமையில் நானும் போராட வருகிறேன் வாருங்கள் மத சாமியார்களின் திருட்டுதனத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து காயடிப்போம் எமாற்றும் சாமியாருக்கு பணம்தான் பெரிது மதம் அவர்களுக்கு ஊருகாய்தான் …

          • \\நாம் மதத்தை தவிர்த்து மனிதனாக போராடுவோம்// How Bro.Joseph you and Tipu when it happens to be HINDU you use மதவெறி,காவி பயங்கரவாதி etc but when it happens to be your Religion alone HUMANITY comes first? GREAT.

  3. மால்டா கலவறம், பதாஙன்கோட் தாக்குதல் பற்றி ஒரு முணுமுணுப்பு கூட காணும்.. போலி சான்றிதழ் குடுத்ததற்காக மாட்டப்போகிறோம் என்று தெரிந்து தற்கொலை செய்தவனுக்கு உடனே வக்காலத்து.. பேசாம உங்க தளத்தோட பேர முகமது ஆசிபெற்ற வினவுன்னு மாத்தினா பொருத்தமா இருக்கும்.

  4. காலை நக்கிப் பிழைப்போம். – ஒருசில தமிழக ஊடகங்கள்

    பதான்கோட்டில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் இறந்துபோனவர்கள் என்ன சாதி என்று யாரும் சொல்லவில்லை.

    மால்டாவில் முஸ்லிம்களின் வெறியாட்டத்தில் பாதிக்கப்பட்ட இந்துக்கள் என்ன சாதி என்று யாரும் கேட்கவில்லை.

    ஆனால்…ஆனால்…
    தற்கொலை செய்துகொண்ட ஹைதராபாத் நக்சல் ஆதரவாளன் மட்டும் “தலித்” சாதி என்று எப்படி தெரிந்தது?

    பிணத்தின் மேல் அரசியல் செய்ய வேண்டிய நிலையில் விபசார ஊடகங்கள்…

    @ மானம் கெட்ட ஊடக வேசிகள்.

  5. ரவி,
    யாகூப் மேனனைத் தூக்கிலிட்டதை கருப்பு நாள் என்றதையும் , விவேகானந்தரை கேவலமாக விமர்சித்ததையும் வைத்து அவரை மனநலம் பிறழ்ந்தவர் என்று கூறுவது கண்டு நகைப்பு தான் வருகிறது. இதே வினவு தளத்தில் யாகூப் மேனன் தூக்கிலிட்டதை எதிர்த்து கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது. எனக்கு என்னமோ உங்களுக்கு தான் மறை கழண்டு விட்டது போல தெரிகிறது.
    காவிக் கண்ணாடி போட்டுகிட்டா பாக்குறது எல்லாமே காவியாதான் தெரியுமாம்.என்னமோ போங்க.

  6. காவி பயங்கரவாதிகளின்நெருக்கடியால், ரொகித் அவர்களின் அரசியல்நிலைப்பாடுகளுக்காக அவரின் உதவி தொகைநிறுத்தப்பட்டதும் , தொடர்ந்து சாதி அடிப்படையில் அவரின் படிப்புக்கு முட்டுக்கட்டை போட்டதும் கேடுகெட்ட அரசியல்வாதி ஆர் எஸ் எஸ் வன்முறையாளர்களே ! அவர் திறந்த போட்டியில் வெற்றி பெற்று வந்தாலும், அவர் தலித் அல்ல என்று தூற்றுவது கேவலம்! அயொத்தி பற்றிய நீதிமன்ற தீர்ப்பை மீறித்தானே பாபர் மசூதியை இடித்தனர் இந்த தீவீரவாதிகள்? அதன் பிறகு நடந்த கோத்ரா சம்பவங்களால் இவர்களின் தேசபக்தி கோவணம் காற்றில் பறந்ததே! தில்லுமுல்லு செய்து தேர்தலில் வெற்றி பெறலாம் , அதனாலேயே அவர்கள் யோக்கியர்கள் என்றாகாது!

    • தூற்றுங்கள்…..நன்றாக தூற்றுங்கள்.
      ________
      நீங்களும் உங்கள் கேவலமாக கூச்சலிடும் கூட்டமும் ஜனத்தொகையில் < 0.1% தான்.

  7. மிகவும் வருந்த தக்க செய்தி . சினிமா கிரிகெட் தவிர மாற்று சிந்தனை கொண்ட இளைஞர்கள் மிகவும் குறைவு.
    அப்படி அரிதான சிந்தனை கொண்டவர்கள் இத்தகைய முடிவு எடுத்தது தவறு.

    படிப்பறிவு மறுக்கப்பட்டதால் கல்வி குறைந்த சமூகத்தை , இது போன்ற மாற்று சிந்தனை உள்ளவர்களால் தான் , நீண்ட கால நோக்கில் சிந்தித்து வழி நடத்த முடியும்

  8. தீண்டாமை ,சாதி ஒடுக்குமுறை கொடுங்கோன்மை எள்ளளவும் மாறாமல் தொடர்கிறது.

    அன்று உரிமைக்கு குரல் எழுப்பினால் தாழ்த்தப்பட்டோருக்கு ஊர்க்காரர்கள் கூலி வேலை தரமாட்டார்கள்.இன்று கல்வி உதவித்தொகை நிறுத்தப்படுகிறது.

    அன்று பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்க கூடாது.,ஊர் மந்தையில் உட்காரக்கூடாது.இன்று விடுதியில் நுழையக்கூடாது,நூலகத்தில் நுழையக்கூடாது,

    சாணிப்பாலும் சவுக்கடியும் இன்று ABVP குண்டர்கள் கையில்.

    மனு நீதி கொண்ட மன்னர்கள் இடத்தில் மோடியும் ஸ்மிருதி இராணியும்.

    ஆனாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமமாம்.இதற்கு பெயர் சனநாயகமாம்.

    ரோகித்-ன் தற்கொலை முடிவு நெஞ்சை உருக்குகிறது.அருமையான போராளியாக பரிணமிக்க வேண்டியவர் இப்படி பாதியிலேயே போராட்டத்தை விட்டு விலகி இருக்க கூடாது.அவரது வலியும் வேதனையும் புரிந்து கொள்ளக்கூடியதே.ஆனாலும் இப்படி ஒரு முடிவை அவர் எடுத்திருக்க கூடாது .பார்ப்பனியத்தின் கொடும் தாக்குதலால் ஏராளமான ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள்.அந்த வரிசையில் ரோகித்-ன் சாவே கடைசியாக இருக்கட்டும்.

    • \\இந்து மத விவகாரங்களில் கூட இசுலாமிய மதத்தை இழுக்காமல் இந்து மதவெறியர்கள் பேசுவதில்லை.உங்கள் கோவில்களில் எந்த ஆடை உடுத்துவது என்று முடிவு செய்வதில் இசுலாமியருக்கு என்ன பங்கு இருக்கிறது.நேர்மையாக அந்த பொருள் பற்றி மட்டும் பேசாமல் மற்ற மதங்களை இழுப்பதற்கு என்ன காரணம்.அதுதான் மதவெறி.மனிதன் என்ற மதவெறியர் கேட்கிறார்//.Tipu Baai this is the comment which you made in JEANS TERRORISM(?)Why you now unnecessarily comment against HINDU? who is religous funatic the world knows. You need not teach us morals.

      • சாதி அமைப்பை,அதன் கொடுங்கோன்மையை சாடியிருக்கிறேன்.அது கண்டு கொதித்தெழுந்து இந்து மதத்தை கேள்வி கேட்க நீ யார் என சீறுகிறார் சிறினிவாசன். [இவுக மட்டும் தமிழல்லாத சமத்கிருதத்தில் பெயர் வைத்துக்கொள்வார்களாம்.ஆனாலும் தமிழ் கலாச்சாரத்தை விட்டு விலகவில்லையாம்.நாங்க அரபுல பேர் வைச்சுக்கிட்டா தமிழ் கலாச்சாரத்தை விட்டு விலகி விட்டோமாம்.].ஆக சாதியும் வர்ணமுமே இந்து மதம் என பூடகமாக சொல்லி விட்டார். அதாவது மேல்சாதியினர் தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்குவதும்,அவர்களை தற்கொலைக்கு தள்ளுவதும் இந்து மத விவகாரம் என்கிறார்.அதனால் பிற மதத்தினர் தலையிடக்கூடாது என்கிறார்.நல்ல வாதம்தான்.

        அய்யா கனவானே,நான் உங்களுடைய வழிபாட்டு முறைகளையோ ,ஆடை அணிகலன்களையோ ,குறை கூறி எதுவும் எழுதி விடவில்லை.அநியாயமாக ஒரு உயிரை பறித்த கயவாளித்தனத்தை கண்டிக்க மதங்களை கடந்து அனைவருக்கும் உரிமை உண்டு.உரிமை என்பதை விட அது மனிதனாக வாழும் அனைவருக்கும் கடமை என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்.

        பங்காளி சண்டையில் சொத்தை அபகரிக்க சோற்றில் நஞ்சு வைத்து தம்பியை கொன்ற அண்ணன் ”எங்கள் குடும்ப விவகாரத்தில் பக்கத்து வீட்டுக்காரன் தலையிடக்கூடாது” என சொல்ல முடியாது.

        • \\அய்யா கனவானே,நான் உங்களுடைய வழிபாட்டு முறைகளையோ ,ஆடை அணிகலன்களையோ ,குறை கூறி எதுவும் எழுதி விடவில்லை.அநியாயமாக ஒரு உயிரை பறித்த கயவாளித்தனத்தை கண்டிக்க மதங்களை கடந்து அனைவருக்கும் உரிமை உண்டு.உரிமை என்பதை விட அது மனிதனாக வாழும் அனைவருக்கும் கடமை என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்.// Tipu Bai if you have right to condemn why cant manithan have that right? If I ask this you try to identify me with some community.This is the cheap and drity tactics you people handle to safeguard. so as per you only Muslims alone can speak against HINDUS. That is also true no one dares to talk against ISLAM as they all are aware what will happen to them.

          • இசுலாம்,முசுலிம்கள் குறித்த பதிவுகளில் அது பற்றி விமரிசனங்கள்,கருத்துக்கள் சொல்வது குறித்து நான் குறை கூறவில்லை.தாராளமாக சொல்லலாம்.சொல்லியும் வருகிறார்கள்.அவற்றுக்கு நாங்கள் பதிலும் சொல்கிறோம்.ஆனால் இசுலாமியர்களுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத செய்திகளில் கூட அவர்களை கோர்த்து விடுவது அப்பட்டமான தகிடுதத்தம்.தங்கள் மீதான விமரிசனங்களுக்கு முகம் கொடுக்க முடியாத கோழைகள் தங்களின் பதிலற்ற ஓட்டாண்டித்தனத்தை மறைக்க முசுலிம்களை இழுத்து விவாதத்தை மடை மாற்றுகிறார்கள்.இது யோக்கியர்கள் செய்யக்கூடிய வேலையா.

            இதைத்தான் சொல்கிறேன்.புரியாத மாதிரி நடிக்க வேண்டாம்.

            \\no one dares to talk against ISLAM as they all are aware what will happen to them.//

            அப்படியா.அப்ப நீங்க,மனிதன்,வியாசன் போன்றோர் எழுதுவதெல்லாம் இசுலாமிய ஆதரவு பரப்புரையா.இப்போது உங்களுடன் விவாதிக்கும் @HisFeet கூட இசுலாம் குறித்து கடும் விமரிசனங்களை இதே வினவு தளத்தில் பல முறை எழுதியிருக்கிறார்.நான் கூட அவருடன் விவாதித்திருக்கிறேன்.அவ்வளவு ஏன் ,வினவு தளமே இசுலாத்தை விமரிசிக்கும் பல கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது.ஆனாலும் இப்படி புளுகுகிறீர்கள்.உங்களுக்கெல்லாம் வெட்கமே இருக்காதா.

            • \\ஆனால் இசுலாமியர்களுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத செய்திகளில் கூட அவர்களை கோர்த்து விடுவது அப்பட்டமான தகிடுதத்தம்//.Tipu in which way this article is relevant to ISLAM for you to comment?\\not only you,many from other religion alone comments like this. \\கயவாளித்தனத்தை கண்டிக்க மதங்களை கடந்து அனைவருக்கும் உரிமை உண்டு.உரிமை என்பதை விட அது மனிதனாக வாழும் அனைவருக்கும் கடமை என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்//If this right and duty is exclusively for you why cant it be to manithan? This is the simple question I ask? If it comes for you it is BLOOD and if it comes for others is it THAKAALI CHUTNEY?

  9. These all are the handworks of Foreign (CHRISTIAN)Controlled Indian Medias which use this as a weapon to spill the VENOM of hatred among HINDUS, as they dont want HINDUS to be united under one fold. That is the reason they put the word DALIT as a prefix. TAMIL people have realized this as they have experience with PETA a foreign NGO which succeded in Banning JALLIKATTU.Their only one single motto is to indulge in conversion activites and destablize indian industrial growth when they failed to succeed they are indulging in CHEAP ways by Divide and Rule.

    • Radha Rajan, Menaka Gandhi etc are PeTA folks in India. Check their affiliation before commenting again. Also, who banned animal sacrifice in Hindu temples and why? You say Christians are running Indian media. Think again!

      நான்கு மிக முக்கியமான ஆங்கில நாளிதழ்களில் மூன்றை நடத்துவது வைசியர்கள். நான்காவது பார்ப்பன குடும்ப நிறுவனம்.

      டைம்ஸ் ஆஃப் இந்தியா, டைம்ஸ் நௌ போன்ற ஊடகங்களை நடத்தும் நிறுவனமான பெனட் கோல்மேன் நிறுவனம் ஒரு ஜெயின் குடும்பத்தால் (பனியா) நடத்தப்படுகிறது.
      இந்துஸ்தான் டைம்ஸை நடத்துவது பார்டியா (மார்வாரி பனியாக்கள்).
      இந்தியன் எக்ஸ்பிரசை நடத்துவதும் மார்வாரி பனியாக்களான கோயங்கா.
      தி இந்துவை நடத்துவது பார்ப்பன குடும்ப நிறுவனம்.

      • Rev @HisFeet:NDTV: A very popular TV news media is funded by Gospels of Charity in Spain that supports Communism. Recently it has developed a soft corner towards Pakistan because Pakistan President has allowed only this channel to be aired in Pakistan. Indian CEO Prannoy Roy is co-brother of Prakash Karat, General Secretary of Communist party of India.His wife and Brinda Karat are sisters.CNN-IBN: This is 100 percent funded by Southern Baptist Church with its
        branches in all over the world with HQ in US. The Church annually allocates
        $800 million for promotion of its channel. Its Indian head is Rajdeep
        Sardesai and his wife Sagarika Ghosh.Times group list: Times Of India, Mid-Day, Nav-Bharth Times, Stardust , Femina, Vijaya Times,Vijaya Karnataka, Times now (24- hour news channel) and many more. Times Group is owned by Bennet & Coleman. ‘World Christian Council’ does 80 percent of the Funding, and an Englishman and an Italian equally share balance 20 percent. The Italian Robertio Mindo is a close relative of Sonia Gandhi.Star TV: It is run by an Australian, Robert Murdoch, who is supported by St. Peters Pontificial Church Melbourne.The Hindu: English daily, started over 125 years has been recently taken over by Joshua Society, Berne, Switzerland. N.Ram’s wife is a Swiss national.Indian Express: Divided into two groups. The Indian Express and new Indian Express (southern edition) .ACTS Christian Ministries have major stake in the Indian Express and latter is still with the Indian counterpart. etc. etc.

        • Source? Where you got this info? Most of the TV channels show Hindu gods as cartoons! How can a Gospel Charity be a Communist supporter? I don’t know where you got this information. If this is the case, India will be a Christian nation by now. Most of the countries you have mentioned themselves are already atheistic.

          “Gospels of Charity” What a funny name! Any link to that group? Website/email/phone?

          //Indian CEO Prannoy Roy is co-brother of Prakash Karat, General Secretary of Communist party of India.His wife and Brinda Karat are sisters.//

          What about Su-swamy’s daughter Suhasini Hider (yes! she is married to a Muslim media mogul!)

          //CNN-IBN: This is 100 percent funded by Southern Baptist Church//
          Any proof or document links for this allegation? Southern Baptist Church is militant right-wing! Why does it support left-wing channel?

          //Bennet & Coleman. ‘World Christian Council’ does 80 percent of the Funding//

          Again, what is the proof? On which basis you are writing this? Where you got this information?

          Joshua Society is a US war veteran fund society. “Joshua Society, Berne, Switzerland” Any link to its site or address?

          Already Greenpeace is opposed by Conservative (Pentecostal) Christians in US.

          Whatever you have written are pure bullshit copy-pasted from some blogs or comments. Do you think people who are so powerful to control the entire nations media can’t block or censor the comments critical of them in Internet? Are you not ashamed to just eat and vomit whatever you read without checking the facts? Just google for each of your allegations. If you find valid sources to prove your claims, just post here. Else it is clear that you are a brainwashed RSS drone.

          • \\Source? //

            அதெல்லாம் கேக்கப்பிடாது.அவாள் சொல்லிட்டா அப்பீலே கெடயாது. மீறி யாராவது வாய திறந்தேள்,பாகிசுதானுக்கு போக சொல்லிடுவா.இல்லேன்னா கடல்ல குதிக்க சொல்லிருவா.ஜாக்கிரதை.

          • Rev@HisFeet VOW VOW when you commented I didnt suspect your credibility but when I made comments you started jumping to heaven and earth and started to lash at me SOURCE,PROOF, DOCUMENTS, BULLSHIT, VOMMITING etc atlast branded me as an RSS.GREAT. This is the difference between you and me. why is TRUTH is flaming you? If you have sources to comment I will also have one source. If you brand me as an RSS I can also brand you as an ANTI-NATIONAL. Instead of getting too much frustrated and nervous be calm and cool.

    • இந்தியாவில் மிக அதிகமாக விற்பனையாகும் ’தைனிக் ஜாக்ரன்’ இந்தி நாளிதழை நடத்துவது (கிட்டத்தட்ட 5.5 கோடி சர்க்குலேஷன்) கான்பூர் பனியாக்களான குப்தாக்கள்.
      1.75 கோடி சர்குலேஷன் கொண்ட தைனிக் பாஸ்கர் என்கிற செல்வாக்கான ஊடகத்தை நடத்துவதும் அகர்வால்கள் என்கிற பனியாக்கள்தான்.
      27 முக்கியமான தேசிய மற்றும் பிராந்திய தொலைகாட்சிகளில் அதிகாரம் செலுத்துமளவுக்கு பங்குகளை வைத்துக்கொண்டிருக்கிறது முகேஷ் அம்பானி என்கிற குஜ்ராத்தி பனியா நடத்தும் ரிலையன்ஸ் நிர்வாகம்.

    • இந்தியாவின் மிக பெரிய தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றான ’ஜீ’ தொலைக்காட்சியை நடத்துவதும் சுபாஷ் சந்திரா என்கிற பனியா.

      பெரும்பாலான ஊடகங்கள் பார்ப்பனர்கள், பனியாக்கள் அல்லது பிற செல்வாக்கான சாதிகளிலிருந்தே செய்தியாளர்களை பணிக்கு அமர்த்துவதாக தரவுகள் சொல்கின்றன. வெகுஜன ஊடகங்களில் பணிபுரியும் இஸ்லாமிய செய்தியாளர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். தலித்துகளும் ஆதிவாசிகளும் அந்த எல்லைக்குள்ளேயே இல்லை.

      • Rev.@HisFeet: Christians not only came in this picture please read the following also:A significant number of Indian NGOs (funded by some donors based in the US, the UK, Germany, The Netherlands and Scandinavian countries) have been noticed to be using people centric issues to create an environment which lends itself to stalling development projects,’ says the IB report marked to the Prime Minister’s Office (PMO).The report says that while caste discrimination, human rights and big dams were earlier chosen by international organisations to discredit India at global forums, the recent shift in the choice of issues was to encourage ‘growth-retarding campaigns’ focused on extractive industries, genetically-modified organisms and foods, climate change and anti-nuclear issues. According to the report, the funding for such campaigns came from foreign donors under charitable garb for issues ranging from protection of human rights, violence against women, caste discrimination, religious freedom etc or to provide a ‘just deal’ to the project-affected displaced persons or for protection of livelihood of indigenous people.The NGOs become the central players in setting the agenda, drafting documents, writing in the media, highlighting scholars-turned-activists and lobbying diplomats and government, it says. ‘These foreign donors lead local NGOs to provide field reports which are used to build a record against India and serve as tools for the strategic foreign policy interests of the Western government,’ adds the report.’In April 2015, the Home Ministry suspended Greenpeace India’s registration under FCRA thus disabling Greenpeace India from receiving any foreign funds.As was expected, Amnesty International India and the United Nations howled in protest. Placing stringent curbs on NGOs receiving foreign funds was to akin to cutting off oxygen supply and the Generic Church knew the implications.

        • I have asked about Manu! Asked about court cases against all caste memebers becoming archaks! No answers. About the dalit dead body denied entry to a road. No answer. Yet you are vomiting again from some RSS blogs.

          Mostly people in IB are upper caste fascists. Do you want us to trust them?

          • \\I have asked about Manu! Asked about court cases against all caste memebers becoming archaks! No answers. About the dalit dead body denied entry to a road. No answer//. If i comment are you going to trust? again you are going to brand me as RSS,Vomiting etc.\\Mostly people in IB are upper caste fascists. Do you want us to trust them?// whom you all are going to trust god knows.

  10. காவிக் காலிகளை எதிர்க்கிறவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்.ரவி போன்றவர்களின் எழுத்திலே சாதித் திமிரும் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வன்மமும் வழிந்தோடுகிறது.ரோஹித்தின் இறுதிக் கடிதத்தில் தன் உணர்வுகளை நகலெடுத்திருக்கிறார்.இது மன நோய் வெளிப்பாடு என்று யாரேனும் சொல்வார்களேயானால் சொல்பவரின் மன நிலையைச் சோதிக்க வேண்டும்.வன்கொடுமைகளைக் கட்டவிழ்த்து உயிர்குடிக்கும் இந்து வெறி ஓநாய்களை அம்பலப்படுத்தினால் தேசவிரோதிகள்.இது காவிப்பார்ப்பனீய பார்மூலா.ஆர்.எஸ்.எஸ்.பயங்கரவாதிகள் எல்லாவற்றிலும் அவதாரிகள்.தலித்துகளைக் கொல்வார்கள்.அம்பேத்கரைக் கொண்டாடுவார்கள்.எல்லோரும் இந்து என்பார்கள்.சாதிய ஏற்றத் தாழ்வைப் பாதுகாப்பார்கள்.இசுலாமியர்களுக்கு நண்பன் என்று சொல்வார்கள்.வீடு புகுந்து அவர்களைக் கொல்வார்கள்.கோ மாதா என்கிற போதே மாட்டிறைச்சி ஏற்றுமதியில் கோடிகளைச் சம்பாதிப்பார்கள்.இப்படிகாவி அவதாரங்களை எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம்.ரவி,மனிதன் போன்றவர்களுக்கும் தெரியும்.இருந்தாலும் அதை மறைத்துப் பேசுவார்கள்.இது என்ன மன நிலை.வள்ளுவர் விதிப்படி இதுதான் ”கயமை”.குணச்சித்திர நடிகர் தருண் விஜயைக் கேட்கலாமா?இசுலாமியத் தீவிரவாதிகளைப் பொருத்தவரை ஒரே அவதாரம் தான் “டெரர்”.

  11. இப்படி ஒரு கடிதத்தை ஒரு இளைஞன் எழுதி வைத்து விட்டு தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள யார் காரணமாக இருந்தார்களோ அவர்கள் எல்லாம் நிச்சயமாகத் தண்டிக்கப்பட வேண்டும். இவரைப் போன்ற எத்தனையோ ரோகித்துகள் இதே போன்ற அல்லது இதை விட மோசமான மன வேதனைகளைத் தாங்கிக் கொண்டு, சென்னையில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு என்று அமைக்கப்பட்ட அழுக்கு நிறைந்த. அடிப்படை வசதிகளேதுமற்ற, நாற்றமடிக்கும் ஹாஸ்டல்கள் என அழைக்கப்படும் முகாம்களில் அடைபட்டுக் கிடக்கின்றனர். அவர்களின் பக்கமும் கொஞ்சம் கவனத்தைத் திருப்ப வேண்டும்.

Leave a Reply to Manidhan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க