privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கரோகித் வெமுலா தற்கொலை : ஆர்.எஸ்.எஸ் கும்பலை துரத்தியடிப்போம் !

ரோகித் வெமுலா தற்கொலை : ஆர்.எஸ்.எஸ் கும்பலை துரத்தியடிப்போம் !

-

1. ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., ஏ.பி.வி.பி கும்பலை நாட்டை விட்டு துரத்தியடிப்போம்! – சென்னையில் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்.

ஹைதராபாத் மத்திய பல்கலைகழக மாணவர் ரோகித்தை போன்று இன்னொரு மாணவரை இழக்கக்கூடாது என்றால் ஆ.எஸ்.எஸ் பார்ப்பன பயங்கரவாத கும்பலை நாட்டு விட்டு விரட்டியடிக்கவேண்டும் என பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் தெரிவித்துள்ளார்.

rohit-vemula-suicide-rsyf-protest-08

ஹைதராபாத் மாணவர் தற்கொலையை கண்டித்து இன்று பகல் 12 மணி அளவில் சென்னை அண்ணாசாலை அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டனர் பு.மா.இ.மு.வினர். ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாரும், திரளான ஊடக நண்பர்களும் திரண்டு பரபரப்பான அண்ணா சாலைக்கு மேலும் பரபப்பூட்டியிருந்தனர். இந்நிலையில் பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் தலைமையில் முழக்கமிட்டவாறே வந்த பு.மா.இ.மு.வினரை கண்ணும் கருத்துமாக காத்து போராட்ட இடத்திற்கு அழைத்துவந்தது போலீசு. வழக்கம்போல் போராட்டம் பெரிய அளவில் வெடித்து சிதறிவிடக்கூடாது என்பதில் கூடுதல் அக்கறை செலுத்தியிருந்தது.

 

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. கும்பலுக்கெதிரான ஆவேசமான முழக்கங்களால் அண்ணா சாலை அதிர்ந்தது. தொடர்ச்சியாக சுற்றியிருந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடம் பு.மா.இ.மு.வினர் பிரச்சார நோட்டிசை வினியோகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய தோழர் கணேசன், “தலித் மாணவர் ரோகித் வெமுலா ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., ஏ.பி.வி.பி காலிகளால் திட்டமிட்டு இழிவுபடுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, டார்ச்சர் செய்யப்பட்டுதான் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இது தற்கொலை அல்ல, இது திட்டமிட்ட படுகொலை என்று நாங்கள் குற்றம் சாட்டுகிறோம். இந்த படுகொலைக்கு காரணமானவர்கள் அந்த பல்கலைகழகத்தினுடைய துணைவேந்தரான அப்பாராவ், மத்திய இணை அமைச்சரான பண்டாரு தத்தாத்ரேயா, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரான ஸ்மிரிதி ராணி. இவர்கள் மூன்று பேரும் கூட்டு சேர்ந்துதான் அம்பேத்கர் பெயரில் இயங்கும் அம்பேத்கர் மாணவர் அமைப்பை அங்கிருந்து அப்புறப்படுத்தி, தொடர்ந்து சித்திரவதைகள் செய்து அவர்களுடைய உரிமைகளை மறுத்து தற்கொலைக்கு தள்ளியிருக்கிறார்கள். இதனால்தான் நாங்கள் இதை திட்டமிட்ட படுகொலை என்கிறோம்.

rohit-vemula-suicide-rsyf-protest-10இதற்கு நாடு முழுக்க கண்டனம் தெரிவித்து ரோகித்தின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடக்கிறது. இதற்கு சரியான தீர்வை இந்த் போலிசும், நீதிமன்றமும் வழங்கமுடியாது என்று நாங்கள் கருதுகின்றோம். ஏனெனில் ஹைதரபாத் பல்கலைகழகத்தில் மட்டும் இதுவரை 18 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். சென்னை ஐ.ஐ.டி.யில் APSC அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் தடை செய்யப்பட்டது. அதற்கு முன்னால் ஏறக்குறைய 25 மாணவர்கள் துன்புறுத்தப்பட்டு தற்கொலை செய்யப்பட்டுள்ளனர். அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தின் தடை நீங்கியதற்கு காரணம் பத்திரிக்கை நண்பர்களும், எங்களை போன்ற புரட்சிகர அமைப்புகளும் பல்வேறு ஜனநாயக சக்திகளும், உழைக்கும் மக்களும் போராடியதன் விளைவே அங்கு தடை நீங்கியது. ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி தற்காலிகமாக பின்வாங்கியது. ஹைதராபாத்தில் அப்படியொரு நிலை இல்லாததால் ஆர்.எஸ்.எஸ் கும்பல் மாணவர் ரோகித்தை படுகொலை செய்துள்ளது. இன்றைக்கு கல்லூரி மாணவர்களை திரட்டவிடாமல் போலீசார் இன்னொரு ரோகித்தை உருவாக்கும் வகையில் மாணவர்களை வெளியில் விட அனுமதிக்கவில்லை. பிறகெப்படி மாணவர்களுக்கு நீதி கிடைக்கும்? இதை முறியடிக்க தமிழகம் முழுதும் RSYF தொடர்ந்து போராடும். இன்னொரு ரோகித்தை இழக்கக்கூடாது என்றால் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி கும்பல் இந்தியாவில் இருக்கக்கூடாது. அதனை வேரறுப்போம்” என பேசினார்.

rohit-vemula-suicide-rsyf-protest-12மேலும் பகிரங்கமாக, “ஆர்.எஸ்.எஸ் பர்ப்பன பயங்கரவாத கும்பலின் முதன்மை எதிரி எங்களை போன்ற புரட்சிகர அமைப்புகளும், கம்யூனிஸ்டு, கடவுள் எதிர்ப்பு அமைப்புகளும்தான்” என தெரிவித்தார். தோழர்கள் எழுப்பிய தொடர்ச்சியான முழக்கங்களுக்கிடையே சுமார் 40க்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்தது போலீசு.

முழக்கங்கள்:

தற்கொலையல்ல! தற்கொலையல்ல!
ரோகித் மரணம் தற்கொலையல்ல!
ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி
ஏ.பி.வி.பி கும்பலின்
திட்டமிட்ட படுகொலையே!

rohit-vemula-suicide-rsyf-protest-05விடமாட்டோம்! விடமாட்டோம்!
RSS காலிகளை
ABVP ரவுடிகளை
BJP காலிகளை
விடமாட்டோம்! விடமாட்டோம்!

வேரறுப்போம்! வேரறுப்போம்!
ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி
பார்ப்பன பாசிச கும்பலை
வேரறுப்போம்! வேரறுப்போம்!

தலித் மாணவரை கொன்று குவித்து
அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பை
தாக்குதல் நடத்தி அடக்கிஒடுக்கி
ஆர்.எஸ்.எஸ் ஆக்கிரமிக்குது!
ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி

பார்ப்பன பயங்கரவாத கும்பல்
நாடெங்கும் வெறியாட்டம் போடுது!
குஜராத் முசுலீம்களை கொன்றுகுவித்து
முசாஃபார்நகரில் கலவரம் நடத்தி
கல்புர்கியை கொலைசெய்த
ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத கும்பலை
நாட்டிலிருந்து விரட்டியடிப்போம்!
வேரோடு அறுத்தெறிவோம்!

வினவு செய்தியாளர்கள், சென்னை.

2. விருத்தாச்சலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் பு.மா.இ.மு கண்டன பிரச்சாரம்

rohit-vemula-virudhai-rsyf-poster

  • ஐதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் தலித் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை
  • மாணவர் தற்கொலைக்கு காரணமான துணைவேந்தர் அப்பாராவ், மத்திய அமைச்சர்கள் பண்டாரு தத்தாத்ரேயா, ஸ்மிருதி இராணி உள்ளிட்டவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையிலடை!
  • மாணவரை தற்கொலைக்குத் தள்ளிய BJP – ABVP ஜாதிவெறி, பாசிச குண்டர் படையை புறக்கணிப்போம்!
  • தலித்துகள் மீதான வன்கொடுமைகளை தகர்த்தெறிய புரட்சிப் பாதையில் இறங்குவோம்!

என்ற முழக்கங்களுடன் ரோகித் வெமுலா தற்கொலையை கண்டித்து மாணவர்கள் மத்தியில் துண்டு பிரசுரம் வினியோகித்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (RSYF),
கடலூர் மாவட்டம். தொடர்புக்கு : 96006 32017