பார்ப்பனிய சனாதன தர்மத்தையும், ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டைக் கூறு போட்டு விற்கும் தங்களது ’சேவை’யையும் எதிர்த்தால், ஒன்று கொன்றொழிக்கப்படுவீர்கள் அல்லது உளவியல் ரீதியான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு தற்கொலைக்குத் தூண்டப் படுவீர்கள் என்பது தான் கோவிந்த் பன்சாரே தொடங்கி ரோஹித் வெமுலா வரை நடத்தப்பட்ட கொலைகளின் மூலம் ஆர்.எஸ்.எஸ் கும்பல் உலகிற்கு உணர்த்த விரும்புப் பாடம். ரோகித் வெமுலாவையும் அப்படித்தான் தற்கொலை என்ற பெயரில் கொன்றிருக்கிறார்கள்.
ஆனால் இந்த அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம் என இந்தியா முழுவதும் மாணவர்கள் கொதித்தெழுந்து போராடுகிறார்கள். ரோகித் வெமுலாவின் தற்கொலை பார்ப்பனிய பாசிச கும்பலுக்கெதிரான கலகமாகவும், போராட்டமாகவும் உருவெடுத்திருக்கிறது. மோடி-பா.ஜ.க கும்பலின் கொட்டங்கள் இனி தங்கு தடையின்றி தொடர இயலாது என்பதற்கு இது ஒரு அறிகுறி. ஒரு ஒடுக்கப்பட்ட மாணவனின் தற்கொலை அவர்களை நிம்மதியிழக்கச் செய்திருக்கிறது. இந்த நிகழ்வை காட்சி வடிவில் ஆவணப்படுத்தியிருக்கிறோம். பகிருங்கள்!
– வினவு