privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்எழுந்தது மக்களின் அதிகாரம் - உணர்வூட்டும் போராட்டச் செய்திகள் !

எழுந்தது மக்களின் அதிகாரம் – உணர்வூட்டும் போராட்டச் செய்திகள் !

-

1. ஆனைவாரி

shutdown-tasmac-anaivari-siege-1005-05-2016 வியாழன் அன்று சுமார் காலை 10.30 மணி அளவில் ஆனைவாரி பகுதி சுற்று வட்டார மக்களை மக்கள் அதிகாரத்தின் சார்பாக அணி திரட்டி கொண்டு டாஸ்மாக் கடையை மூடுவதற்கு தோழர்கள் பொதுமக்களுடன் “ஆனைவாரி டாஸ்மாக் கடையை மூடு” என்ற விண் அதிரும் முழக்கத்துடன் தோழர்கள் டாஸ்மாக் கடை மூடுவதற்காக சென்றனர். கடை அருகாமையிலேயே காவல் துறையின் சுமார் 100-க்கு மேற்பட்டோர் தடுத்து நிறுத்தினர். கடை அருகில் போகாமலே 10 நிமிடத்திற்கு மேலாக முழக்கமிட்டனர். அப்போது மக்களிடம் பேசிய தோழர் முருகானந்தம், “காவல் துறையினருக்கு இங்கு வேலையில்லை, காவல் துறையால் டாஸ்மாக்கை மூட முடியாது. கடந்த 02-05-2016 அன்று சிதம்பரம் ஆர்.டி.ஓ-விடம் கடையை மூடுவதற்கு மனுகொடுத்தோம். இன்று வரை மூடவில்லை. ஆர்.டி.ஓ-வை இங்கு வரசொல்லுங்கள்” என்றதற்கு போலீசு, “அவருக்கு தேர்தல் வேலை இருப்பதாக” கூறினர்.

“சரி அவர் தேர்தல் வேலையை பார்க்கட்டும். நாங்களே மூடிக்கொள்கிறோம். டாஸ்மாக் கடையை உடனடியாக மூடாமல் இங்கிருந்து போவதில்லை” என்று கூறிவிட்டு தொடர்ந்து முழக்கமிட்டனர்.

உடனே காவல் துறை, “நீங்கள் சொல்லுவதை எல்லாம் கேட்க முடியாது. உங்களை கைது செய்கிறோம். உடன் வண்டியில் ஏறுங்கள்” என்று கூறி மிக வலுக்கட்டாயமாக தோழர்களையும், ஊர்மக்களையும் தள்ளியும் தூக்கிக்கொண்டும் கைது செய்து வண்டியில் ஏற்றினர்.

இந்த போராட்டத்தில் மக்கள் அதிகாரத்தோழர்கள் உட்பட 35 பேர் கைது செய்யப்பட்டனர். புவனகிரி தி.மு.க மாணவரணி நிர்வாகி பாலசுப்ரமணியன் இணைந்து கைதானார். அருகாமையில் உள்ள எறும்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்து உள்ளனர். அங்கு கடையை மூடாமல் சாப்பிட முடியாது என காவல் துறையினர் அளித்த உணவை மறுத்து தொடர்ந்து போராடி வருகின்றனர்.

உடன் மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் / PUSER நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர். கைது செய்யப்பட்ட தோழர்கள் காவல் துறையிடம் பெயர் ஏதும் தறாமல் மறுத்தனர். காவல் துறை வழக்கறிஞரை சந்தித்து, “உங்கள் தோழர்கள் பெயர் தர ஒத்துழைப்பு தறாமல் மறுக்கின்றனர். நீங்கள் தயவு செய்து பெயர் தர வேண்டும் சொல்லுங்கள்” போயி கெஞ்சுகிறது. மண்டபத்தில் உள்ள அனைத்து தோழர்களது போன்களை பறிமுதல் செய்து விட்டனர்.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
விருத்தாசலம்

2. ஒசூர்

சூர் : பாகலூர் அருகிலுள்ள சத்தியமங்கலம் கேட் அருகே 100 கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவ்வழியே செல்பவர்களை அச்சுறுத்தும் வகையில் ஒருவித பதட்டத்துடன் அந்தப் பகுதி முழுவதும் இருந்தது.

இந்நிலையில் சத்தியமங்கலம் கேட்டுக்கு அருகே இருக்கின்ற இரண்டு டாஸ்மாக் சாராயக் கடைகளையும் முற்றுகையிடப்போவதாக அறிவித்திருந்த மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள், சத்தியமங்கலம் கிராமத்தில் தெருத்தெருவாக சென்று பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என ஊர்வலமாக திரண்டு முழக்கமிட்டபடியே அணிதிரட்டிக்கொண்டிருந்தனர்.

தோழர்கள் அணிதிரட்டிக்கொண்டிருப்பதை அறிந்த போலீசு ஊருக்குள் வந்து தோழர்களையும், ஊர்மக்களையும் பிளவுபடுத்தும் சதிவேலைத்திட்டத்தோடே அணுகியது. குறிப்பாக, “தேர்தல் நேரம் என்பதால் இங்கே யாரும் கூட்டம் கூடக்கூடாது. சட்டம் ஒழுங்கு பாதிக்கும்” என்ற வழக்கமான அறிவிப்பை மிரட்டும் தொனியிலும், நைச்சியமான முறையிலும் கூடியிருந்த தோழர்கள் மக்களிடம் முன்வைத்தது.

அதற்கு தோழர்கள், “டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடுவது எங்களது உரிமை என்றும், நாங்கள் உழைக்கும் மக்கள்! எங்கள் ஊரில் டாஸ்மாக் வேண்டாம் என்றுதான் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். கடையை மூடினால் பிரச்சனை ஏதுமில்லை. எங்களால் எப்போதும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படுவதில்லை. கடையை மூடினால் நாங்கள் போராட்டத்தை விலக்கிக்கொள்கிறோம். இல்லையேல், டாஸ்மாக்கை மூடும் வரை நாங்கள் எங்களின் முற்றுகைப் போராட்டத்தை தொடர்வோம்” என்றனர்.

“கடையை மூடுவதற்கெல்லாம் எங்களுக்கு அதிகாரம் இல்லை, நீங்கள் போராட்டம் நடத்தினால் நாங்கள் கைது செய்து ரிமாண்ட் செய்வோம்” என்று அச்சுறுத்தியது போலிசு. போலீசின் மிரட்டலுக்கு பணியாமல் போராட்டத்தை தொடர்ந்தனர். ஊர்வலமாக முழக்கமிட்டபடியே முற்றுகையிட சென்றனர். சத்தியமங்கலம் கேட் அருகில் ஏற்கனவே குவிக்கப்பட்டிருந்த போலீசு ஊர்வலமாக வந்த மக்களை சுற்றி வளைத்தது. பெண்கள் போலீசை முற்றுகையிட்டு டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக் கோரினர். வாதாடினர்.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

உடனடியாக, அதிகார போதையேறிய போலீசு திமிராக அவர்களை தரதரவென இழுத்துச் சென்று வேனில் ஏற்றியது. உள்ளுர் மக்கள்,வேடிக்கை பார்த்தவர்கள் என எல்லோரையும் கைது செய்தது. மேலும் கைதாகாமல் ஒதுங்கிய பெண்கள், முதியவர்களை கேவலமான முறையில் விரட்டிச் சென்றது. மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், ரமேஷ் உள்ளிட்ட அணைவர்களையும் கைது செய்தது. அது மட்டுமில்லாமல், சாலையில் நிற்பவர்களையும் பேருந்து நிலையத்தில் நிற்பவர்களையும் கைது செய்வதாக மிரட்டி விரட்டியது. மேலும், போலீசுக்குத் துணையாக அ.தி.மு.க-வினர் இணைந்து கொண்டு உள்ளூர் மக்கள் யார், வெளியூர் மக்கள் யார் என காட்டிக் கொடுக்கும் வேலையை செய்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
ஒசூர்

3. அன்பில், திருச்சி

trichy-anbil-shutdown-tasmac-siege-21திருச்சி பகுதியின் புறநகர் பகுதியான லால்குடி வட்டத்தில் உள்ள அன்பில் கிராமத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மூட மே 5 கெடு விதித்து 2-ம் தேதி மாவட்ட ஆட்சியரின் உதவியாளரிடம் மக்கள் அதிகாரமும், ஊர்ப்பொதுமக்களும் இணைந்து மனுகொடுத்தோம். அதையொட்டி மக்கள் அதிகார தோழர்கள் அப்பகுதியில் உள்ள கிராமங்களில் தங்கி, மக்கள் கலை இலக்கியக் கழக கலைக்குழுவின் பாடல்களுடன் தெருமுனைப் பிரச்சாரமும், பரவலாக சுவரொட்டி விளம்பரமும் செய்தோம். கெடு விதித்து மக்கள் மத்தியில் தங்கி வேலை செய்ததால் பீதியடைந்த அரசு 04-05-2016 இரவு 9.30 மணி முதலே மக்களிடமிருந்து சாராயக் கடையை ‘பாதுகாக்க’ 2 போலீசை நிறுத்தியதுடன், அதிகாலை 6 மணி முதல் தீயணைப்பு வாகனம், 50-க்கும் மேற்பட்ட காவல்துறை வாகனங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சகிதமாக நிறுத்தியிருந்தனர். 3 கி.மீ முன்பே தடையரண்கள் அமைத்து போக்குவரத்தை மாற்றிவிட்டனர்.

உள்ளூர் பகுதியில் உள்ள முன்னணியாளர்களுக்கு அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்வது, உளவு பார்ப்பது போன்ற வேலைகளை செய்து வந்தது. மேலும், மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதை தடுக்க அப்பகுதியில் மக்களை அணிதிரட்டிய நம் தோழர்கள் உட்பட 4 பேரை கைது செய்து பீதியூட்டும் முயற்சியில் ஈடுபட்டதுடன், பல பகுதிகளிலிருந்து, 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாகனங்களில் வந்திறங்கியதை கண்டு, டாஸ்மாக் பாதுகாப்பு டியூட்டியில் ஈடுபட்ட போலீசாரை (போராடும்) மக்கள் கூடும் இடத்திற்கு 200 மீட்டருக்கு முன் வரவழைத்தது.

திருச்சி பகுதி மக்கள் அதிகார ஒருங்கிணைப்பாளர் தோழர் தர்மராஜ் போராட்டத்தை பற்றி விளக்கினார். தமிழக விவசாய சங்கத்தை சேர்ந்த மா.பா. சின்னதுரை, ஆதிதமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 [படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அதன் பின் ம.க.இ.க மைய கலைக் குழுவின் பாடல்கள் பாடப்பட்டது. இதற்கிடையே, காவல்துறை ஆய்வாளர் பாலாஜி, தாசில்தார் ஜெயக்குமார் ‘பேச்சுவார்த்தை’க்கு வந்தனர். அவரிடம் மக்களின் கோரிக்கைகளை தோழர் தர்மராஜ் விளக்கினார். “தற்போதைக்கு மூடுவது சாத்தியமில்லை” எனக் கூறியவர், “கலெக்டரை சந்திக்க 10 பேர் வாருங்கள்” என அழைத்தார். “மக்கள் முன்பு விவாதிக்கலாம்” எனக் கூறியதற்கு, “எப்படிங்க மக்கள் முன்னாடி பேச முடியும்” என்றார். மேலும், “என்னைப்பற்றி இப்பகுதி மக்களிடம் நல்லபெயர் உள்ளது” எனக் கூறியதும், அதற்கு காவல் ஆய்வாளர் சர்டிபிகேட் கொடுத்தார்!

“கோரிக்கையை மக்கள் முன்பு தான் விவாதிக்க வேண்டும்” என அவரை அழைத்து மக்கள் முன் நிறுத்தி தாசில்தார் கூறியதை மக்களிடம் சொன்னது தான் தாமதம், மக்கள் தங்கள் வேதனையை (குடித்துவிட்டு கணவன் அடிப்பது, வீட்டிலுள்ள பானைகளை உடைப்பது, தாய் முன்பே நிர்வாணமாக நிற்பது, உணவில் சிறுநீர் கழிப்பது) கொட்டித் தீர்த்தனர். ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல், “கடையை மூடவில்லையென்றால் பால் டாயிலை குடித்து இங்கேயே சாகப்போகிறோம், தீக்குளித்து சாகப்போகிறோம்” என தங்கள் கையறு நிலையை ஆத்திரமாக வெளிப்படுத்தினர். இதற்கு பதில் சொல்ல முடியாத தாசில்தார் பின்வாங்கினார்.

ஒரு மணி நேரத்திற்கு பின் ஏ.டி.எஸ்.பி நடராஜனுடன் வந்தவர், “கலெக்டரிடம் பேசியதில் ‘விதிமுறைப்படி’ அமைந்துள்ள கடையை உடனடியாக எடுப்பது சாத்தியமில்லை” என விளக்கம் கொடுத்தார்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள், குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CRPC) பிரிவு 133-ன் படி அமைதிக்குலைவு ஏற்படுத்தக் கூடிய தடைகளை நீக்க தாசில்தாருக்கு அதிகாரம் இருப்பதை சுட்டிக்காட்டியும் ஏற்க மறுத்து, கடையை மூடுவது பற்றி மூன்று நாள் கழித்து பதில் சொல்வதாகவும், இதை ஏற்கவில்லையென்றால் ‘சட்டவிரோதமாக’ கூடியுள்ளீர்கள் எனக் கலைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார். 3 நாளில் நடவடிக்கை எடுப்பது பற்றி எழுத்துப்பூர்வமாக கேட்டதற்கு சரி எனக்கூறி நழுவி காரில் ஏறி தப்பினார்.

அதன் பின் மக்களை அச்சுறுத்தும் வகையில் போலீசார் நெருங்கினர். இதை முன் கூட்டியே கணித்த நம் தோழர்கள், ஏற்கனவே மனிதச் சங்கிலித் தொடர் அமைத்து மக்களுக்கு அரணாக நின்றனர். மக்களிடம் நடந்ததை விளக்கியதில், “டாஸ்மாக்கை மூடவில்லையென்றால் நாங்கள் அனைவரும் கைதாகத் தயார்” என போர்க்குணமாக ஒரே குரலில் முழக்கமிட்டனர். அவர்கள் விருப்பத்திற்கிணங்க கைதாக முடிவெடுக்கப்பட்டு அனைவரும் கைதாகினர்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவை கையாள கடையை மூடுவது, கைது செய்வது என்ற இருவேறு வழிமுறைகளில் கைது செய்வதை தேர்ந்தெடுத்ததின் மூலம் இந்த அரசமைப்பு மக்களுக்கு எதிராக உள்ளதை நிரூபித்துள்ளது அதிகார வர்க்கம்! இனி அதிகாரத்தை கையிலெடுப்பதைத் தவிர மக்களுக்கு வேறு வழியில்லை என்பதை உணர்த்தியுள்ளது இப்போராட்டம்!

மண்டபத்தில் அடைக்கப்பட்ட பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தனர். மக்களை உற்சாகப்படுத்த போராட்ட அனுபவகள் மற்றும் ம.க.இ.க மையக் கலைக்குழு தோழர்களின் புரட்சிகர பாடல்கள் இடம் பெற்றன. டாஸ்மாக் கடையை மூடும் வரை போராடலாம் என கோரியதன் அடிப்படையில் உள்ளேயே கையெழுத்து போடாமல் எதிர்ப்பை பதிவு செய்தோம். காவல்துறை உயர்அதிகாரிகள் பலர் வந்து பேசியும் மக்கள் உறுதியாடு இருந்ததால் இறுதியில் சப்கலெக்டர் வந்து மக்களிடம் பேசியும் பயனில்லை மக்கள் அதிகாரத் தோழர்களும்,பொது மக்களும் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாத அதிகாரி, “என்னால் எதுவும் செய்ய முடியாது எனக்கு அதிகாரம் இல்லை” என தெரிவித்தனர். உடனே ஊர் மக்களில் இருந்த சாந்தி என்ற பெண்மணி சப்கலெடரிடம் “அப்போ அதிகாரம் இருப்பவர்களை வரச்சொல்லுங்க நீங்க கிளம்புங்க” என கூற அதிகாரிகள் அதிர்சியில் உறைந்தனர்.

பிறகு, “எவரும் கையெழுத்து கூட போட வேண்டாம் உங்களை கூட்டிட்டு வந்த வேனிலேயே கொண்டு போய் விட்டு விடுகிறோம். நாளை ஒரு வாரத்திற்குள் டாஸ்மாக்கை மூடுவதற்கான நகலை தருகிறேன். நீங்கள் தற்போது கிளம்புங்கள்” என காவல்துறை அதிகாரி கெஞ்சி நிற்க, “அதிகாரிகள் உரிய தேதிக்குள் சொன்னதை செய்ய மறுத்தால் நாம் இன்னும் மக்களை அதிகப்படியாக திரட்டி நாமே டாஸ்மாக்கை மூடுவோம்” என மக்களுடன் கூடி பேசி முடிவெடுத்து அறிவித்தோம்.

இரவு மண்டபத்தை விட்டு அனைவரும் போராட்ட குணம் குறையாமல் சென்றது காவல் துறையினரை வியப்பில் ஆழ்த்தியது.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
திருச்சி கிளை.

4. விழுப்புரம்


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

5. கோவை

கோவைப் பகுதியில் கோவை, உடுமலை, கோத்தகிரி என மூன்று இடங்களில் டாஸ்மாக் கடைகளை மூடும் போராட்டம் நடைபெற்றது.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

 

6. மதுரை

மதுரை, யா.ஒத்தக்கடையில் “டாஸ்மாக்கை மூடு” என மக்கள் அதிகாரம் முற்றுகை

மே 5 அன்று காலை 11 மணிக்கு, யா.ஒத்தக்கடை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை “நாமே மூடுவோம், அரசு மூடாது” எனக் கூறி1௦௦ க்கும் அதிகமான மக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக சென்று டாஸ்மாக் கடையை முற்றுகை இட்டனர்.

அதிகாலை முதலே, ஒத்தக்கடையில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளுக்கும் இரும்புத் தடுப்பரண்கள் அமைத்து பெரும் போலீசுபடையே காவல் காத்து வந்தது.

திடிரென பேரணியாக வந்தவர்களை பாய்ந்து வந்து மறித்தது போலீசு. மக்களோ, போலீசை தள்ளி விட்டு விட்டு டாஸ்மாக் கடையை நோக்கி விண்ணதிரும் முழக்கங்களுடன் முன்னேறினர். இரும்புத் தடுப்புகளின் பின்னே பாதுகாப்பாக நின்று கொண்டு சாராயக்கடையை மக்கள் நெருங்க விடாமல் தடுக்கப் பார்த்தது போலீசு.

அந்தத் தடுப்பரண்களையும் தள்ளிக்கொண்டு முன்னேற முயன்றனர் மக்கள். சுற்றி வளைத்த போலீசு, பின்னணியில் நின்றவர்களை அடித்தும், இழுத்துச் சென்றும் அப்புறப் படுத்தியது. எஞ்சியவர்கள் விடாது போலீசுடன் மல்லுக் கட்டினர். மக்களையும்தோழர்களையும் அடித்தும் இழுத்துச சென்றும் காவல் வாகனத்தில் ஏற்றியது போலீசு. ஒவ்வொரு நபரையும் கைது செய்ய மூன்று நான்கு போலீசார்போராடினர்.

பெண் தோழர்களையும் கூட அடித்து வேனில் தூக்கி எறிந்தனர் ஆண் போலீசார்.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.

மண்டபத்தில் அடைக்கப்பபட்ட உடன் அனைவரும் பாடல்கள் பாடுவது, உரைகள் நிகழ்த்துவது என முறையாக நிகழ்ச்சிகளை நடத்தத் துவங்கினர்.

பெயர், முகவரி கொடுக்க போலீசு அழைத்தபோது செல்லாமல், தலைமையிடம் கேளுங்கள் என போலீசிடம் கூறினர். தலைமையின் வழிகாட்டல் படி பெயர் முகவரி குடுக்க முடியாதென்றும், டாஸ்மாக் அதிகாரி வரவேண்டும் என்றும் கூறினர். அதுவரை போலீசு வழங்கிய உணவையும் ஏற்க முடியாது என கூறிவிட்டனர்.

பெயர் கொடுக்காவிட்டால் ரிமாண்டு செய்து விடுவோம் என மிரட்டிய போலீசை யாரும் கண்டு கொள்ளவே இல்லை.

மாலை 7.3௦ வரை அதிகாரிகள் யாரும் வரவில்லை. தோழர்களும் போராட்டக் கனலை அனையவிடவே இல்லை. இறுதியில், ஒத்தக்கடை வி.எ.ஓ மற்றும் ஆர்.ஐ. வந்தனர். குறிப்பிட்ட டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என கேட்ட போது, தற்போது தேர்தல் நேரம், பிறகு பார்க்கலாம் என கூறினர். தோழர்கள் ஏற்கமறுத்து உடனே மூட வேண்டும் என கூறினர். முற்றிலும் சட்ட விரோதமாக நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கடையை மூட என்ன தயக்கம் என கேட்டனர். உடன், எங்களுக்கு அதிகாரம் இல்லை என்றனர். எனில், அதிகாரம் உள்ளவரை வரச் சொல்லுங்கள் என கூறிவிட்டு, நிகழ்ச்சிகளில் மூழ்கினர் தோழர்கள்.

பெயர்,முகவரியும் வாங்க முடியவில்லை, பேச்சு வார்த்தையும் வெற்றியடையவில்லை, “என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை” என விழி பிதுங்கிய போலிசு, மொத்தமாக மண்டபத்தை விட்டு வெளியேறியது. தனக்கும் தான் கைது செய்தவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல ஒதுங்கிக் கொண்டது.

மீண்டும் முழக்கங்கள் அதிர் வேட்டுகளாக வெடித்துச் சிதறின. ஓடி வந்த வி.எ.ஒ. “டெபுடி கலக்டர் வருகிறார் பொறுமையாக இருங்கள்” என கெஞ்சினார். தூழர்களோ, அவருக்காக நாளெல்லாம் காத்திருக்க முடியாது. வேண்டுமானால் இன்னும் ஒரூ பத்து நிமிடம் இருக்கிறோம். அதற்குள் அவர் வந்தால் பேசலாம். இல்லாவிட்டால், இன்றைய போராட்டத்தை விட மிகச் சிறப்பான போராட்டம் விரைவில் நடத்துவோம். அப்போது பார்க்கலாம். என கூறிவிட்டனர்.

கூறிய நேரம் கடந்ததும், தோழர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி அவரவர்கள் குழுக்குழுவாக விவாதித்தபடி வெளியேறினார்கள்.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

7. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி பத்திரிகை செய்தி

டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது போலீசின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வண்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழகத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் கடந்த ஓராண்டிற்கும் மேலாக மக்களைக் கொல்லும் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி போராடி வருவது அனைவரும் அறிந்ததே.

சட்டமன்றத்திலேயே டாஸ்மாக் கடைகளை மூட முடியாது என்று அறிவித்த பாசிச ஜெயா, தேர்தலில் மக்களை ஏமாற்ற – மீண்டும் ஆட்சியைப் பிடிக்க, படிப்படியாக கடைகளை மூடுவதாக பசப்பினார்.

இன்று தமிழகம் முழுவதும் 25 இடங்களுக்கும் மேல் போராட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது கண்மூடித்தனமாக போலீசு அடித்து இழுத்துச் சென்று கைது செய்தனர். பெண்களையும், குழந்தைகளையும் கூட ஆண் போலீசார் வெறித்தனமாக அடித்தனர்.

தமிழக மக்கள் தொலைக்காட்சிகளில் இந்த கொடுமைகளைப் பார்த்து வெதும்புகின்றனர்.

டாஸ்மாக் கடைகளை மூடும் வரை இந்த போராட்டத்தை அனைத்து மக்களும் ஆதரிக்க வேண்டுமென கோருகிறோம்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனி, போராடும் தோழர்களை வாழ்த்துகிறது. எந்த அடக்குமுறைக்கும் அஞ்சாமல் போராட்டம் தொடரும் என மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் காளியப்பன் அறிவித்துள்ளார். அனைவரும் ஆதரவு தருங்கள்.

அ.முகுந்தன்,
தலைவர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தமிழ்நாடு

8. மக்கள் கலை இலக்கியக் கழகம் பத்திரிகை செய்தி

டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டுப் போடும் ‘மக்கள் அதிகாரம்’ போராட்டம்
தமிழகம் முழுவதும் 1000 பேர் கைது!
சென்னையில் நூற்றுக் கணக்கில் கைது

இன்று 05-05-2016 அன்று காலை சென்னையை அடுத்து பொன்னேரி நாப்பாளையம் மற்றும் மதுரவாயல் நொளம்பூரில் போராட்டம் நடத்தப்பட்டு மூன்று கடைகளுக்கு பூட்டு போடப்பட்டது. பெண்கள் மற்றும் சிறுவர் நூற்றுக்கணக்கானவர் மீது “ஜெ”வின் போலீஸ் தடிஅடி நடத்தியது. பெண்களின் சேலைகள் கிழிக்கப்பட்டன. மண்டை உடைத்து ரத்த காயத்தோடு தரதரவென்று இழுத்துச் சென்று வேனில் தூக்கி எறியப்பட்டனர்.

2. கொந்தளிப்பில் உள்ள உள்ளூர் மக்கள் நாளை மீண்டும் கடை திறக்கப்பட்டு நடக்குமானால் நிரந்தரமாக மூடப்படும் வரை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து போராடுவோம். கைது செய்யப்படுவதற்கு அஞ்சவும் மாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.

3. போராடியவரைத் தாக்குகின்ற ‘ஜெ’ அரசு, ‘படிப்படியாக மூடுவேன்’ என்று பேசுவது தேர்தல் பசப்பும் வெற்றுப் பேச்சுமே ஆகும்; ஜெயா அரசை தூக்கி எறியாமல் உழைக்கும் மக்களுக்கு வாழ்வு இல்லை; சாராய போதையில் இருந்து தமிழக மக்களுக்கு விடுதலையும் இல்லை. இச்செய்தியை தமிழகம் முழுவதும் எழுச்சியாக தீ பரவுவது போத அறிவித்துள்ள மக்கள் அதிகாரம் மற்றும் போராடிவரும் மக்களுக்கு எங்கள் ம.க.இ.க சார்பில் புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வே.வெங்கடேசன்,
செயலாளர்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
சென்னை மாவட்டம்

  1. மார்க்ஸ் பிறந்ததினத்தை சிறப்பாக கொண்டாடிய தோழர்களுக்கு வணக்கங்கள், நன்றிகள். இதை விட சிறப்பாக கொண்டாட முடியாது.
    போராட்டங்களே கொண்டாட்டங்கள்.

    • தோழர் மார்க்ஸ் பிறந்தநாளை, மே ,5, ஐந்தாம் நாள் 1818 , ”மூடு டாஸ்மாக்கை மூடு” மக்கள் அதிகாரத்தின் போராட்டத்தின் மூலம்,அந்த மூலதனத்தின் ஆசானுக்கு சிறப்புச் செய்த மக்களுக்கும்,அவர்களை வழிநடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.டாஸ்மாக்கை மூடுவது முற்றும் வரை தொடரட்டும் போராட்டம்.

  2. தேர்தலுக்குப் பின் படிப்படியாக டாஸ்மாக்கை ஜெயா மூடுவாரா?தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் போராடும் மக்களை இப்படி அடித்து நொறுக்கவேண்டிய தேவை என்ன? தேர்தல் ஆணையத்தின் கையில்தான் இப்போது அதிகாரம் இருக்கிறது என்பதை நம்புவது கேணைத்தனமில்லையா?14-ம் தேதியிலிருந்து மூடுவார்களாம்? அந்த 5 நாட்களுக்கும் தேவையான சரக்கை ஸ்டாக் செய்துகொள்ள மாட்டார்களா? ஜெயா கூட்டத்திற்கு வருகிற ரரக்கள் கூட்டத்திற்குள்ளேயே ரவுண்டு கட்டி சரக்கடிக்கிறார்கள்.அதற்காகத்தான் கூட்டத்திற்கே வருகிறார்கள்.அமைதியான,சுதந்திரமான தேர்தல் நடத்துவார்களாம்.தேர்தலின் போதோ,தேர்தல் முடிவுகள் வெளியாகும்போதோ சாராயம் இல்லாமல் இருக்கும் என்று தேர்தல் கமிசன் வேண்டுமானால் நம்பலாம்.குடிமகன்கள் நம்புவார்களா?அம்மா கைவிட மாட்டர் என்பது குடிமகன்களுக்கு நன்றாகவே தெரியும்.குடிமகன்களின் ஓட்டு யாருக்குத் தான் வேண்டாம்? இந்த நிலையைத் தோலுரித்துக்காட்டுகிற மக்கள் அதிகாரத்தின் தோலை உரிப்பது தான் அம்மா போலீசின் கடமை.இந்தக் கடமையைத்தான் அவர்கள் கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறார்கள்.டாஸ்மாக்கை மூடுவதில் போலீசுக்கு பெரிய இழப்பு அல்லவா?இப்போது போலீசை இயக்குவது உடன் பிறவா சகோதரி மிடாஸ் சசியாக இருக்கலாம்.தேர்தல் கமிசன் டம்மி பீஸ்.ராஜேஷ் லக்கானி வேளாண் துறை இயக்குனராக இருந்தபோது மிகப் பெரிய ஊழலுக்கு உடந்தையாக இருந்துள்ளார் என்று துறை சார்ந்தவர்கள் சொல்கிறார்கள்.ஐ.ஏ.எஸ்-ஐ மாற்றி என்ன?ஐ.பி.எஸ்-ஐ மாற்றி என்ன?தலைமையில் லக்கானி இருக்கிறாரே.யாராட்சிக்கு வந்தாலும் மக்கள் போராடாமல் நல்ல சாராயத்தையும் மூட முடியாது, கள்ள சாராயத்தையும் ஒழிக்க முடியாது. நேற்று இரவு நாகப்பட்டினம் மாவட்ட கிராமம் ஒன்றில் டாஸ்மாக் கடை தீ வைத்துக் கொளுத்தப்பட்டிருகிறது.மூடு டாஸ்மாக்கை.குடியினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் என்று மழலை மொழியில் சுவற்றில் எழுதப்பட்டுள்ளது.மக்கள் அதிகாரம் போர்க்குணமிக்கப் போராட்டத்தின் விளைவு இப்படிக் கிளைத்து மக்களின் விருப்பப்படி வேகமாக வளர்ந்து செல்ல வேண்டும்.தேர்தலை முந்திக் கொண்டு சாராய எதிர்ப்புப் போராட்டம் செல்லவேண்டும்.இதற்கு மக்கள் திரண்டெழுந்து களத்தில் இறங்க வேண்டும்.இதற்கு ரத்தத்தினால் வித்தூன்றி வரும் மக்கள் அதிகாரம் மற்றும் டாஸ்மாக் எதிர்ப்புப் போராளிகளுக்கு லால் சலாம்!காட்டுமிராண்டி காவல்துறையே இதற்குப் பதில்சொல்லவேண்டியகாலம் நெருங்கிவிட்டது!

  3. போராடும் தோழர்களுக்கும் போராட்டம் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்.

Leave a Reply to SUNDAR பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க