privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விமோடி அரசின் சமஸ்கிருத திணிப்பை முறியடிப்போம் !

மோடி அரசின் சமஸ்கிருத திணிப்பை முறியடிப்போம் !

-

  • பல்தேசிய இன அடையாளங்களை அழிக்கவே மோடி அரசின் சமஸ்கிருத – வேத கலாச்சார திணிப்பு!
  • திராவிட – தமிழ்மொழிக்கும், தமிழின பண்பாட்டிற்கும் எதிரியே ஆரிய – சமஸ்கிருதமும் வேத கலாச்சாரமும்!
  • தமிழினமே திரண்டெழு! ஆரிய – பார்ப்பன படையெடுப்பை முறியடிப்போம்!

28-06-2016 அன்று தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம்

சென்னையில்

29-06-2016 காலை 11.30 மணி வள்ளுவர்கோட்டம்
மாணவர் பிரதிநிதிகள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்கள்!
மாணவர்களே அணிதிரண்டு வாரீர்!

ன்பார்ந்த மாணவர்களே,

sanskrit domination
சமற்கிருத ஆதிக்கம்

இந்த கல்வி ஆண்டு (2016 – 17) முதல் சமஸ்கிருதத்தை மூன்றாவது மொழியாக கற்பிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உத்தரவிட்டிருக்கிறார். கல்வித்துறையில் காட்ஸ் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதையும், இந்துத்துவா கருத்துக்களை புகுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட தேசிய கல்விக்கொள்கைக்கான வரைவுத்திட்டம்- 2015 சமஸ்கிருதத்தை தனிப்பாடமாக கொண்டுவர வேண்டும் என்று கூறுகிறது.

தேசிய கல்விக்கொள்கையை வகுப்பதற்காக அமைக்கப்பட்ட 5 பேர் குழுவில் உள்ள ஜே.எஸ் ராஜ்புத் என்பவர் ஆர்.எஸ்.எஸ்-ன் தீவிர ஆதரவாளர். இக்கல்விக்கொள்கை மூலம் கல்வியை காவிமயமாக்க திட்டமிட்டு செயல்படுவதை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம். இதெல்லாம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கல்வி பிரிவான ‘பாரதிய சிக்சன் மண்டல்’ வழிகாட்டுதலின்படிதான் நடைபெற்று வருகிறது.

சமஸ்கிருத திணிப்பின் மூலம் பலதேசிய இனங்களின் இன, மொழி, பண்பாட்டு அடையாளங்களை அழித்து, ஒற்றை மொழி, ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றை தேசம் என்பதை அதாவது இந்தி – இந்து – இந்தியா என்ற இந்துத்துவா கொள்கையை நிறுவத் துடிக்கிறது, ஆர்.எஸ்.எஸ். இவர்கள் சொல்லும் இந்த இந்துராஷ்டிரத்தின் நோக்கம் என்ன? இயற்கைவளம், கனிமவளம், மனித வளம் என ஒன்றையும் விடாமல் நாட்டை சூறையாடி வரும் ஏகாதிபத்திய முதலாளிகள், அதானி, அம்பானி, டாடா போன்ற தரகு அதிகாரவர்க்க முதலாளிகள், நிலபிரபுத்துவ சக்திகளான ஆளும் வர்க்கங்களுக்கு, அதாவது பெருவாரியான உழைக்கும் மக்களின் எதிரிகளுக்கு சேவை செய்வதை நோக்கமாக கொண்டதுதான் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி யின் இந்துராஷ்டிரம்.

நாட்டின் கல்வித்துறையை உலகவர்த்தக கழகத்தின் காலடியில் அடகு வைத்துவிட்டது மோடி அரசு. அதன் விளைவாக கல்விக்கான மானியங்களை ஒழிப்பது, கல்வி உதவித்தொகைகளை நிறுத்துவது, வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்களை இறக்குமதி செய்வது; அரசுப் பள்ளி, கல்லூரிகளையே ஒழித்துவிட்டு ஆன்-லைன் கல்வி; தேர்வு என கல்வியை வியாபாரப் பண்டமாக்கி கார்ப்பரேட் முதலாளிகளின் கையில் தாரை வார்க்கப்படுகிறது. பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டம் சமூகத்தில் பெரும் நெருக்கடியை உருவாக்கி வருகிறது. மருத்துவம், பொறியியல் என படித்து முடித்தும் வேலை கிடைக்காத இளைஞர்கள், பன்னாட்டுக் கம்பெனிகள் ஆட்குறைப்பு செய்து வீதிக்குத் தள்ளியதால் விரக்தியடைந்த இளைஞர்களின் தற்கொலைகள் அச்சத்தை உருவாக்குகின்றன. விவசாயம், தொழில்துறை, சிறு தொழில்கள், இயற்கை வளங்கள் என அனைத்தையும் ஏகாதிபத்தியங்கள் சூறையாடி வரும் வேலையில், இதை எதிர்த்துப் போராடுவதில் இருந்து மாணவர்கள், இளைஞர்களை, மக்களை திசை திருப்புவதற்காக ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி அவ்வப்போது சாதி-மத வெறியைத் தூண்டி விடுகின்றன.

அமெரிக்காவில் குடியரசுக்கட்சி வேட்பாளரான டிரம்ப் எப்படி வெளியில் இருந்து குடியேறியவர்களுக்கு எதிராகவும், முஸ்லீம்களுக்கு எதிராகவும் வெறியைத் தூண்டி விடுகிறானோ அதைப் போல, மோடியின் பார்ப்பன பாசிச கும்பல் முஸ்லீம்களுக்கு எதிரான இந்துமதவெறியைத் தூண்டி விடுகின்றன. முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல பெருவாரியான உழைக்கும் மக்களுக்கும் எதிரானதுதான் ஆர்.எஸ்.எஸ்-ம், அதன் இந்துத்துவாக் கொள்கையும். இந்த அபாயங்களின் ஒரு பகுதிதான் சமஸ்கிருத – வேதகலாச்சார திணிப்பு. இதை அனுமதிக்கக் கூடாது. 1965 ல் இந்தித் திணிப்பை முறியடித்தவர்கள் நம் மாணவர்கள். மீண்டும் வீறுகொண்டெழுவோம் இன்று சமஸ்கிருத – வேதகலாச்சாரத்தை திணித்து வரும் ஆரிய – பார்ப்பன படையெடுப்பை முறியடிப்போம்!

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
நெ.41,பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல், சென்னை-95
போன்: 9445112675