privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விபோக்கத்த போலீசு வேலைக்கு போட்டி போடும் பொறியியலாளர்கள்

போக்கத்த போலீசு வேலைக்கு போட்டி போடும் பொறியியலாளர்கள்

-

கீழ் நிலை வனக் காவலர் பணி இடங்களுக்கு வந்த  விண்ணப்பங்களில் சுமார் 1.17 லட்சம் பேர் இளங்கலை பட்டதாரிகளாகவும், 23,416 பேர் முதுகலை பட்டதாரிகளாகவும், 34 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்களாகவும் இருந்துள்ளனர்.
கீழ் நிலை வனக் காவலர் பணி இடங்களுக்கு வந்த விண்ணப்பங்களில் சுமார் 1.17 லட்சம் பேர் இளங்கலை பட்டதாரிகளாகவும், 23,416 பேர் முதுகலை பட்டதாரிகளாகவும், 34 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்களாகவும் இருந்துள்ளனர்.

தாராளமய பொருளாதாரக் கொள்கை அமல்படுத்தப்பட்ட பின் மக்களின் வாழ்க்கைத் தரம் நம்ப முடியாத அளவுக்கு உயர்ந்து விட்டது என்கிறார்கள் அதன் ஆதரவாளர்கள். அதற்கு ஆதாரமாக எல்லோருடைய கைகளிலும் செல்போன், வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளமை, வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்கிறார்கள்.

உண்மை என்ன?

மத்திய பிரதேச மாநில காவல் துறையில் காலியாக உள்ள 14,000 காவலர் (Constables) பணி இடங்களுக்கான விண்ணப்பங்கள் ஜூன் 2016-த்தில் பெறப்பட்டன. சுமார் 9.24 லட்சம் பேர் இந்த வேலைக்காக விண்ணப்பித்துள்ளனர். +2 கல்விதான் இந்த வேலைக்கான தகுதி.

ஆனால் இதற்கு விண்ணப்பித்தவர்களில் 1.19 லட்சம் பேர் இளங்கலை பட்டதாரிகள், 14,562 பேர் முதுகலை பட்டதாரிகள், 9,629 பொறியியல் பட்டதாரிகள், 3,438 பொறியியல் பட்டையதாரிகள் அடக்கம். இது தவிர முனைவர் பட்டம் (PhD) பெற்ற 12 பேர்களும் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த வேலையின் சம்பளம், 5,200-ல் இருந்து 20,000 ரூபாய்கள் வரை நிர்ணயிக்கப்படும். இதே மாநிலத்தில் சென்ற ஆண்டு கீழ் நிலை காவலர்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட போது, மொத்தம் வந்த 6.1 லட்சம் விண்ணப்பங்களில் சுமார் 12,000 பேர் பொறியியல் பட்டதாரிகளாக இருந்தனர்.

மேலும், கீழ் நிலை வனக் காவலர் பணி இடங்களுக்கு வந்த  விண்ணப்பங்களில் சுமார் 1.17 லட்சம் பேர் இளங்கலை பட்டதாரிகளாகவும், 23,416 பேர் முதுகலை பட்டதாரிகளாகவும், 34 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்களாகவும் இருந்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் சதவீதம் அதிகரித்ததன் விளைவாகவோ, அதன் காரணமாக பட்டதாரிகள் அதிகரித்ததன் விளைவாகவோ இது நடக்கவில்லை. இன்றைக்கும் மத்திய பிரதேசம் இந்தியாவிலேயே கல்வியறிவில் பின் தங்கிய மாநிலமாக – 28ம் இடத்தில் – தான் உள்ளது.

கீழ் நிலைக் காவலர்களின் பணிச்சூழல் மிக கடுமையான ஒன்று. நேரத்திற்கு உறக்கம் இருக்காது, எந்த நேரம் அழைத்தாலும் ஓடிச் செல்ல வேண்டும், மணிக் கணக்கில் நிற்க வேண்டும். அரசியல்வாதிகளின் வாகன அணிவகுப்பு சென்று தீரும் வரை சல்யூட் அடிக்க ஓங்கிய கையை அப்படியே விறைப்பாக வைத்துக் கொண்டு நிற்க வேண்டும், சமூகத்தின் அடிப்படை வர்க்கங்களில் இருந்து வந்தாலும் அதே வர்க்கங்களைச் சேர்ந்த மக்களின் மேல் விழுந்து பிடுங்க வேண்டும், சுய மரியாதையை கழற்றி எறிந்து விட்டு மேலதிகாரிக்கு சேவகம் புரிய வேண்டும் இவற்றையெல்லாம் விட மேலதிகாரிக்குக் கப்பம் கட்ட மக்களிடம் அதிகாரப் பிச்சை எடுக்க வேண்டும். சுருக்கமாக சொன்னால் கூலி அடிமையின் வாழ்க்கை. மானம் மரியாதை மனசாட்சி நியாயம் போன்ற அடிப்படை மனித விழுமியங்களை உதிர்த்தாக வேண்டும் என்பது இந்த வேலைக்கான முன் நிபந்தனைகளின் ஒன்று.

police-2”போக்கற்றவன் போலீசாவான்” என்பது கிராமத்துப் பெரியவர்களின் பொன்மொழி. உயர்கல்வி பெறவோ, வேறு தொழில் வாய்ப்புகளோ கிடைக்கப் பெறாதவர்கள் இறுதியில் நாடுவது போலீசு வேலையைத் தான். சீருடையணிந்த அடியாள் வேலையை கணிசமானோர் உணர்வுப்பூர்வமாக செய்கிறார்கள் என்றாலும், சொந்த மக்களை ஒடுக்கும் குண்டாந்தடிகளாக இருப்பதன் வலியை பல காவலர்கள் வாழ்நாள் முழுக்கச் சுமந்து திரிகின்றனர்.

முதுகலை, இளங்கலை, பொறியியல் மற்றும் முனைவர் பட்டம் படிக்கும் அளவுக்கு வசதி வாய்ப்பு பெற்றவர்களே கூட அரசாங்கத்தின் அடியாள் வேலைகளுக்காக பன்னிரண்டாம் வகுப்புப் படித்தவர்களோடு போட்டி இட வேண்டிய நிலைதான் நமது பொருளாதார வளர்ச்சியின் ‘சாதனை’.

படித்த இளைஞர்களுக்கு வேலை அளிக்க வேண்டிய கடமையில் இருந்து அரசாங்கங்களை விடுவித்ததே தனியார்மயத்தின் சாதனை. தனியார் கார்ப்பரேட்டுகளோ படித்தவர்களில் தமக்குத் தோதானவர்களைப் பொறுக்கி எடுத்த பின் எஞ்சியவர்களை ஈவிறக்கமின்றி வீசி எறிந்து விடுகின்றனர். போக்கிடமற்ற இளைஞர்கள் இறுதியில் தாம் படித்துப் பெற்ற உயர் கல்விப் பட்டங்களை பரணில் போட்டு விட்டு இது போன்ற வேலைகளுக்குப் போட்டியிடுகின்றனர்.

தனியார்மயம் எண்ணற்ற வாய்ப்புகளை உருவாக்கியுள்ளத்தாக பீற்றிக் கொள்ளப்படுவதன் லட்சணம் இப்படித் தான் இருக்கிறது.

தமிழரசன்

  1. நல்ல கட்டுரை/////போக்கத்த போலீசு வேலைக்கு போட்டி போடும் பொறியியலாளர்கள்
    போக்கிடமற்ற இளைஞர்கள் இறுதியில் தாம் படித்துப் பெற்ற உயர் கல்விப் பட்டங்களை பரணில் போட்டு விட்டு இது போன்ற வேலைகளுக்குப் போட்டியிடுகின்றனர்.
    தாராளமய பொருளாதாரக் கொள்கை அமல்படுத்தப்பட்ட பின் மக்களின் வாழ்க்கைத் தரம் நம்ப முடியாத அளவுக்கு உயர்ந்து விட்டது என்கிறார்கள் அதன் ஆதரவாளர்கள். சீருடையணிந்த அடியாள் வேலையை கணிசமானோர் உணர்வுப்பூர்வமாக செய்கிறார்கள் என்றாலும், சொந்த மக்களை ஒடுக்கும் குண்டாந்தடிகளாக இருப்பதன் வலியை பல காவலர்கள் வாழ்நாள் முழுக்கச் சுமந்து திரிகின்றனர்.
    படித்த இளைஞர்களுக்கு வேலை அளிக்க வேண்டிய கடமையில் இருந்து அரசாங்கங்களை விடுவித்ததே தனியார்மயத்தின் சாதனை. தனியார் கார்ப்பரேட்டுகளோ படித்தவர்களில் தமக்குத் தோதானவர்களைப் பொறுக்கி எடுத்த பின் எஞ்சியவர்களை ஈவிறக்கமின்றி வீசி எறிந்து விடுகின்றனர். போக்கிடமற்ற இளைஞர்கள் இறுதியில் தாம் படித்துப் பெற்ற உயர் கல்விப் பட்டங்களை பரணில் போட்டு விட்டு இது போன்ற வேலைகளுக்குப் போட்டியிடுகின்றனர்.
    தனியார்மயம் எண்ணற்ற வாய்ப்புகளை உருவாக்கியுள்ளத்தாக பீற்றிக் கொள்ளப்படுவதன் லட்சணம் இப்படித் தான் இருக்கிறது./////
    கல்வியை கடைசரக்காக்கி மக்களின் எல்லா வித உழைப்பையும் உறிஞ்சி சமுதாயத்தையே அடிமை சங்கிலியால் பிணைத்துள்ள ஏகாத்தியபத்திய நலன் சார்ந்த பெரு முதலாளிகளின் கொள்ளை சிறக்க அரசின் ஆசியுடன் நடக்கும் இந்த சமூக அழிப்பை மக்கள் அறியாமல் பொருளாதார மாயையில் உள்ளவரை இவை தொடரவே செய்யும். வேறு வழியில்லை Aeronautical Engineering Degree முடித்த என் நண்பரின் மகன் சாதரண சிப்பாயக பட்டாளத்தில் சேர்ந்துள்ளார் இவை மாற்று அறியாதவரை மக்கள் எதிரிகளுக்கு சேவகம் தொடரவே செய்யும்….
    மாற்று என்ன?
    சமூக மாற்றம் ஆம் புதிய ஜன நாயக புரட்ச்சி அதுவரை…

  2. வாக்கு கற்றவன் வக்கீலாவான்

    போக்கு கற்றவன் போலீசாவான்

    இதுதான் அசல் பழமொழி

  3. //படித்த இளைஞர்களுக்கு வேலை அளிக்க வேண்டிய கடமையில் இருந்து அரசாங்கங்களை //

    அரசாங்கம் எப்படி மேஜிக்காக லட்சம் பொறியாளருக்கு வேலை கொடுத்திருக்கலாம் , அந்த நல்ல யோசனையை ஏன் 1991 இங்கு முன் செய்து காட்டவில்லை என்றும் யாராவது விளக்கினால் நல்லது .

    அனைவருக்கும் அரசாங்க வேலை கொடுத்த வெனிசூலா இப்போது எப்படி இருக்கிறது ? ஏன் அந்த இழி நிலை என்றும் விளக்குங்கள்

    இன்றைய தேதியில் பொறியியல் என்பது 16 ஆம் வகுப்பாக மாறி விட்டது . என்ன படிக்கிறோம் என்று புரியாமல் , மார்க் வாங்கி கேம்பஸ் இன்டர்வ்யூவில் வேலை வாங்க வேண்டும் என்பது தவிர ஏதும் தெரிவது இல்லை . அண்ணா யூனிவர்சிடியில் சேர்ந்த, கணிதத்தில் நூற்றுக்கு நூறு வாங்கிய மாணவன் ஒருவனோடு பேசும் வாய்ப்பு கிடைத்தது .

    கணிதத்தில் பேசிக்காக சில கேள்விகள் கேட்டால் , தெரியவில்லை அது எல்லாம் சொல்லி தரவில்லை என்று கூறினார் . ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் பேசினேன் . அதே கேள்விகள் கேட்டேன் . பதில் இல்லை . ஆக இன்றைக்கு இணையம் இருந்தும் தேடுதல் இல்லை .

    • ராமா ..

      ////”அரசாங்கம் எப்படி மேஜிக்காக லட்சம் பொறியாளருக்கு வேலை கொடுத்திருக்கலாம் , அந்த நல்ல யோசனையை ஏன் 1991 இங்கு முன் செய்து காட்டவில்லை என்றும் யாராவது விளக்கினால் நல்லது .”////

      1991க்கு முன்னாடி இங்க சோசலிசம் பொங்குச்சுன்னு யாராச்சும் சொன்னாங்களா ராமா ?.
      1990க்கு முன்னாடி ரஸ்யாவோட அடிமையா ஒட்டிக்கிட்டு இருந்தவனுங்க அதுக்குப் பிறகு அமெரிக்காவுக்கு அடிமையா மாறுனானுங்க .. 1991 ல அது தான் நடந்தது. அப்பவும் முதலாளி கையில தான் அதிகாரம். இப்பவும் முதலாளி கையில தான் அதிகாரம். முதலாளிகள மொத்தமா தூக்கிறலாமா ?.

      ///இன்றைய தேதியில் பொறியியல் என்பது 16 ஆம் வகுப்பாக மாறி விட்டது . என்ன படிக்கிறோம் என்று புரியாமல் , மார்க் வாங்கி கேம்பஸ் இன்டர்வ்யூவில் வேலை வாங்க வேண்டும் என்பது தவிர ஏதும் தெரிவது இல்லை .///

      இந்த அறிவார்ந்த ஆராய்ச்சிய அப்புறம் வச்சிக்கலாம். மொதல்ல அரசாங்கத்தோட வெங்காயக் கடமை என்னவோ அதைச் செய்யுதா உங்க அரசாங்கம் ?.

      வியாபரத்துக்கு கல்வியக் கொண்டு போய் விட்டுட்டு பையன் நல்லா படிக்கலன்னு நீலிக் கண்ணீர் வடிக்கக் கூடாது. ஒரு நாட்டுல எவ்வளவு வேலை வாய்ப்பு, எந்தத்துறைல இருக்குன்னும், இனி வரும் காலங்களில் எந்தத்துறைக்கு மனித வளம் தேவைன்னும் பார்த்து அதற்குத் தகுந்தாற் போல கல்வியை முறைப்படுத்துவது தான் அரசின் கடமை. உங்க அரசு இன்னா புடுங்குச்சு ?.

      இதெல்லாம் செய்யிறது அரசின் வேலையான்னு கேட்டா, அடுத்த கேள்வி “புடுங்*றதுக்கா எங்ககிட்ட இருந்து வரி வாங்குற ?”, “ அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்பேதிகளுக்கும் இதை விட என்ன புடுங்*ற வேலை?”

      ஒரு நிறுவனத்துல என்ன பொருள் சந்தைக்கு எவ்வளவு தேவையோ அதை சரியான அளவில கணக்கிட்டு உற்பத்தி செய்யிறது தான் அந்த நிறுவனந்த்தை முன்னேற்றும்.

      செருப்பு தயாரிக்கிற நிறுவனந்த்துல வெறும் இடது கால் செருப்பா தயாரிச்சு குமிச்சி வச்சா கம்பேனி ந*கிட்டுப் போயிடுமா இல்லையா ?.

      கல்வியில் அராஜத்தை தனியார் முதலாளிகளின் இலாபத்திற்காக கட்டவிழ்த்து விட்டிருக்கும் இந்த அரசு, உண்மையிலயே ஆளத் தகுதி இல்லாத அரசாங்கம்னு இப்பவாவது ஒத்துக்குவீகளா ராமா ….

  4. பாதி சாபாஷ் ராமா ! இன்றைய கல்வி உங்களது முக லட்சணம் தானே !வெனிசுலாவுக்கு என்ன வந்தது ? பேப்பரில் படித்ததா? போய் வந்ததா?

Leave a Reply to AdvocateRangarajan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க