அமெரிக்கா சென்றுள்ள இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரும், அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டரும், வாஷிங்கடனில் 30.08.2016 செவ்வாய் அன்று ஒரு இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இது இந்திய அமெரிக்க இராணுவத் தளவாட பகிர்வு ஒப்பந்தம் Logistics Exchange Memorandum of Agreement (LEMOA) என்று அழைக்கப்படுகிறது. இதன்படி இந்தியா சட்டப்படியே அமெரிக்காவின் அடியாளாக பணிபுரியப் போகிறது.
ஒப்பந்தத்தின் படி இரு நாட்டு இராணுவங்களும் மற்றவரின் ராணுவத் தளம் மற்றும் தளவாடங்களை பயன்படுத்த முடியும். மேலும் உணவு, நீர், பெட்ரோலியப் பொருட்கள், உடை, மருத்துவ சேவை, இதர தொழில் நுட்ப சேவைகள், இராணுவப் பயிற்சி உள்ளிட்டவைகளையும் இரு நாட்டு இராணுவங்களும் பகிர்ந்து கொள்ள முடியும்.
இரு நாட்டு நலன்கள், விருப்பம், சர்வதேச அமைதி, பாதுகாப்பு போன்ற வழக்கொழிந்த வார்த்தைகளை போட்டு இரு நாடுகளும் கூட்டறிக்கையில் இந்த ஒப்பந்தம் குறித்து தெரிவிக்கின்றன. உண்மையில் இதன் பயன்பாடு யாருக்கு என்னவாக பயன்படும்?
90-களில் நடந்த முதல் வளைகுடாப் போரின் போது இந்தியாவில் சந்திரசேகரைப் பிரதமராகக் கொண்ட ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது அமெரிக்க விமானங்கள் இந்தியாவில் எரிபொருட்களை நிரப்ப அனுமதிக்கப்பட்டன. அப்போது பலரும் இந்த நடவடிக்கைகளை விமரிசித்தனர்.
தற்போதைய ஒப்பந்தப்படி அப்படி ஒரு எரிபொருள் நிரப்பல் நடந்தால் யாரும் விமரிசிக்க முடியாது. ஏனெனில் தற்போது இது சட்டப்படியே சரி. உண்மையில் இவ்வொப்பந்தம் இருநாட்டு இராணுவங்களும் பொருட்களையும், சேவைகளையும் பகிரந்து கொள்ளும் என பேசினாலும் உண்மையில் இது ஆக்கிரமிப்பில் ஈடுபடும் அமெரிக்க இராணுவத்திற்குத்தான் நடைமுறையில் பயன்படும். இந்தியா என்ன வளைகுடாவிலோ இல்லை தென் அமெரிக்காவிலோ படையெடுக்கவா போகிறது?
இந்த ஒப்பந்தம் இந்தியாவில் அமெரிக்க ராணுவத் தளங்களை உருவாக்குவதற்கு அனுமதிக்கவில்லை என்று தேசபக்த பா.ஜ.க.வினர் ரீல் சுற்றுகின்றனர். உண்மையில் இந்த ஒப்பந்தப்படி இராணுவத் தளமே தேவைப்படாத வண்ணம் அமெரிக்க இராணுவத்திற்கு தேவையான எல்லா சப்ளையும் இந்தியாவால் செய்ய முடியும் என்பதை தெரிவிக்கிறது. இப்படி முழு அடியாள் வேலைகளுக்கு உதவும் இந்தியாவுக்கு பரிசாக ஆயுத வர்த்தகத்தையும், தொழில்நுட்ப பகிர்வையும் அளிக்க அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளதாம்.
இத்தகைய ஒப்பந்தத்தை 2003-ம் ஆண்டிலிருந்தே அமெரிக்கா வற்புறுத்தி வந்தாலும் தற்போதைய மோடி அரசுதான் இந்த அடிமை ஒப்பந்தத்தை விரும்பி நிறைவேற்றியிருக்கிறது. இந்திய இறையாண்மையை பகிரங்கமாக அமெரிக்காவின் காலடியில் சமர்ப்பித்திருப்பதால் இனி மோடியை “அடிமை கொண்டான்” என்று அழைக்கலாம்.
செய்தி ஆதாரம்:
ராணுவத் தளவாட பகிர்வு ஒப்பந்தம்: இந்தியா – அமெரிக்கா கையெழுத்து
India, US sign key defence pact to use each other’s bases for repair, supplies
இந்தியாவிற்கு எந்த நல்லதும் நடந்து விட கூடாது என்பதில் சீனா பாகிஸ்தானை விட கம்யூனிஸ்ட் கட்சி ரொம்ப ஆர்வமாக இருப்பது புரிகிறது.
முதுகெலும்போடு இருக்க வேண்டும் என்று சொன்னால், புழுக்களுக்கு கோவம் வரத்தானே செய்யும்.
“புழுக்களுக்கு கோவம் வரத்தானே செய்யும்” என்பது சரியல்ல. புழுக்கள நெலியத்தானே செய்யும் என்பதே சரி.
உண்மையான தேச பக்தர்கள் யாவரும் இந்த ராணுவ ஒப்பந்தத்தை வரவேற்பார்கள் . ஏனெனில்நம் அண்டைநாடான பாகிஸ்தான், மற்றொரு அண்டைநாடான சீனா இரண்டும் இந்தியாவிற்கு எதிராகவே எப்போதும் இருக்கிறார்கள்.இந்தியாவை அடிக்கடி எல்லை தாண்டிநடத்தப்படும் பயங்கர வாத தாகுதல்கள் மூலம் தொல்லை கொடுத்துவரும் பாகிஸ்தான் , இந்தத்தாகுதல்களை தொடர்ந்துநடத்திவருகிறது. பாகிஸ்தானத்தின் பலவீனம் பலூஷிஸ்தான்மற்றும் கில்கிட் பல்டிஸ்தான். இந்தப் பகுதிகளில் திருப்பி அடித்தால் தான் பாகிஸ்தானத்தின் கொட்டத்தை அடக்கமுடியும். சீனாவின் உதவியோடு 3200000 கோடி ரூபாய் முதலீட்டுடன் , கில்கிட் பல்டிஸ்தான் தொடங்கி, க்வாடர் பலூசிஸ்தான் வரை 1500 கி மி உள்ள பகுதிகளில் பல திட்டங்களை துவக்கி இருக்கும் இருநாடுகளும் இந்தியாவின் திருப்பி அடிக்கும் திட்டத்தைநிச்சயம் மூர்க்கத்தனமாக எதிர்க்கும். அமெரிக்காவின் ராணுவ உதவி இருந்தால் இந்தியா மிகவும் எளிதாக பாகிஸ்தானின் கொட்டத்தை அடக்கமுடியும். சீனாவும் தன் வாலைச் சுருட்டிக்கொண்டு பாகிஸ்தானை அடங்கிநடக்கவே புத்திமதி சொல்லும். கண்ணை மூடிக்கொண்டு அமெரிக்காவை எதிர்ப்பதை விட்டுவிட்டு , தேச பக்தியுடன் இந்த ராணுவ ஒப்பந்தத்தை ஆதரியுங்கள்.
இப்படி வெகுளியா இருக்கீங்களே மிஸ்டர் ஐயர். அமெரிக்காவோட ராணுவ உதவி வேணும்னு நாம் முக்கி முக்கி கேக்குறோம். ஏற்கனவே அங்கே பாகிஸ்தான்ல இந்தியாவோட நெருங்ங்ங்கிய நண்பன் அமெரிக்கா தான் ராணுவத் தளம் வெச்சுருக்கு. இனிமே இங்கே இந்தியாவிலும் ராணுவத் தளம் வைக்கும். இப்போ இந்தியாவும் பாகிஸ்தானும் யார் பக்கம் ?
பாகிஸ்தானுக்கு அமெரிக்காவும் ராணுவ உதவி செய்யுது. சீனாவும் ராணுவ, சிவில் உதவிகள் செய்யுது. இப்போ பாகிஸ்தான் யார் பக்கம் ? சீனா பக்கமா ? அமெரிக்கா பக்கமா ?
அமெரிக்கா கடந்த பத்து வருஷமா பாகிஸ்தானுக்கு வருஷா வருஷம் பில்லியன் டாலர்களை ராணுவ உதவியா வழங்குது. கவனிங்க. ராணுவ உதவியா வழங்குது.
இந்த வெங்காயம் அமெரிக்காவுக்கு நீங்க கால்பிடிச்சு என்ன பாதுகாப்பு வாங்கப் போறீங்க பாகிஸ்தான்கிட்டே இருந்து ?
ஆதாரம் வேணும்னா இங்கே பாருங்க..
https://en.wikipedia.org/wiki/Foreign_aid_to_Pakistan
நாங்கள் எல்லாம் ஒன்னும் தெரியாத பச்சை புள்ளைங்க பாருங்க அதனால நீங்க சொல்லுவதை எல்லாம் உடனே நம்பிடுவோம். ஏற்கனவே பாகிஸ்தானின் தீவிரவாத எதிர்ப்பின் போலித்தனத்தால் பாக்கிஸ்தான் அமெரிக்கா உறவு சிக்கலில் உள்ளது, தீவிரவாதிகள் மீது பாக்கிஸ்தான் நடவடிக்கை எடுக்காததால் அமெரிக்கா அரசு பாகிஸ்தானுக்கு செய்ய வேண்டிய உதவியை நிறுத்தி வைத்து இருக்கிறது.
அதேபோல் இந்தியா பாக்கிஸ்தான் போர் வந்தால் இந்தியா ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா ராணவு தளங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
அதேபோல் இந்தியா சீனா போர் வந்தாலும் சீனாவை சுற்றி இருக்கும் அமெரிக்கா தளங்களை இந்தியா பயன்படுத்தி கொள்ளலாம்.
சீனா பாகிஸ்தானுக்கு இந்த ஒப்பந்தம் ஒரு எச்சரிக்கை தான். ஆனால் நம் நாட்டில் உள்ள தேசவிரோதிகளுக்கு இந்த மாதிரி இந்தியா வாலுவடைவது பிடிக்காது அதனால் இதை எதிர்ப்பார்கள்.
டேய் நவாஸூ சும்மா இருக்கமாட்டியான்னு அமெரிக்கா பாகிஸ்தானை மிரட்டினா அவன் பாட்டுக்கு வாலை சுருட்டிட்டு நிக்கப் போறான் இல்லையா ? ஆனா அதை ஏன் அமெரிக்கா செய்யலை ? இங்கே மோடி டைரக்டா பாகிஸ்தானுக்கு சவுண்டு விட்டவர், ஏன் அமெரிக்காவைப் பாத்து பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி செய்றதை நிப்பாட்டுன்னு சொல்லலை?
நீங்க சொல்றத பச்சை புள்ளைங்க கூட நம்ப மாட்டாங்க, நவாஸ் ஷெரிஃக்கு இந்தியா விவகாரத்திலும் ஆப்கான் விவகாரத்திலும் முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை அந்த அதிகாரம் பாகிஸ்தான் ராணுவத்திற்கு மட்டுமே உள்ளது. மேலும் பாக்கிஸ்தான் ராணுவம் இந்தியாவிற்கு எதிராக மட்டும் தீவிரவாத செயலில் ஈடுபடாமல் இன்று சர்வதேச அளவில் செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள். சிரியாவில் ISIS தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்து அனுப்புகிறார்கள், ஆப்கானுக்கு தீவிரவாதிகள், இராஃக்கிற்கு தீவிரவாதிகள் என்று சர்வதேசளவில் அவர்கள் தீவிரவாத ஏற்றுமதியில் கொடிகட்டி பறக்கிறார்கள். உலகில் எங்கே தீவிரவாத செயல் நடந்தாலும் அதில் பாகிஸ்தானின் கை இருப்பதற்கு காரணம் இது தான்.
மாட்டுக்கறி திங்கறவாட்ட ஒப்பந்தம் போட்ரேளே!
அது வளர்ச்சி … வேற டிபார்ட்மெண்ட் ..
sabash! Sariyaana pooti. Mr. Manikandan, what are yu going to respond to @HisFeet’s comment ? Ah…….
ஏன்__ நீங்கலாம் யாரு__? எல்லாத்தையும் கேனத்தனமா தான் பாப்பிங்காளா?
அறிவாளித்தனமா கொஞ்சம் வெளக்கம் கொடுங்க பாலாசி அண்ணே …
நமக்கு நல்ல அடிமை…அதுவும் வாழ்நாள் அடிமை சிக்கிட்டான்….
அமெரிக்க அம்பி ஆனந்தம்
இந்தியா எந்த ஒரு அயல் நாட்டுடன் இந்த 70வருட காலத்தில் விசுவாசமாக இருந்துள்ளது?
அட அதை விடுங்க தனது மாநில அரசுகளையும் அவற்றின் மக்களுக்காகவேனும் உண்மயாக நடந்துள்ளதா?
ராஜீவ் காந்தியின் படு கொலையுடன் அமெரிக்க பினாமிகளிகளின் ஆட்சிதான் நடக்கிறது என்பதை அறியாத வரை எல்லாமே சரிதான்.