privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமோடியின் கார்ப்பரேட் கல்விக் கொள்ளை ! செப் 8 தஞ்சை கருத்தரங்கம்

மோடியின் கார்ப்பரேட் கல்விக் கொள்ளை ! செப் 8 தஞ்சை கருத்தரங்கம்

-

ஆர்.எஸ்.எஸ் கிரிமினல்களுக்கும், கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கும் பிறந்த கள்ளக் குழந்தையே மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை!

pala-tnj-meeting-against-new-education-policy-notice-frontபுதிய கல்விக் கொள்கையின் சில நச்சுத்துளிகள்…

  • ஏழைக் குழந்தைகள் இனி அய்ந்தாம் வகுப்பைத் தாண்ட முடியாது. அதையும் தாண்டிவரும் ஒரு சிலரும் தொழிற்கல்வி என்ற பெயரில் பத்தாம் வகுப்பிலேயே கழித்துக் கட்டபடுவர்.
  • தொழிற்திறன் வளர்ப்பு என்ற பெயரில் பள்ளிக் கூடத்திலேயே குலக்கல்வித் திட்டம் அமல்படுத்தப்படும்.
  • 10,12 வகுப்புகளில் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தி உயர்கல்வி வாய்ப்புகள் அனைத்தும் தனியார் பள்ளி மேட்டுக்குடி மாணவர்களுக்குத் தாரை வார்க்கப்படும்.
  • கல்வி உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகள் கொள்ளைக்கு முற்றாகத் திறந்து விடப்படும்.
  • சமஸ்கிருதத்தைத் திணிப்பது, ஆர்.எஸ்.எஸ் ஆசிரமங்களை பள்ளிகளோடு இணைப்பது, நாடு முழுவதும் ஒரு பாடத்திட்டம் இவற்றின் மூலம் பல்வேறு மொழி, பண்பாட்டை அழித்து சாதி, மதவெறி, தேசவெறியைத் தூண்டுவது சிறுபான்மை மக்களை அச்சுறுத்துவது, சமூகப் பதட்டத்தை உருவாக்குவது இவற்றின் மூலம் மனுதர்மத்தை, பார்ப்பன மேலாதிக்கத்தை நிலை நாட்டும் சதித்திட்டம்.
  • கார்ப்பரேட் முதலாளிகளின் லாபவெறிக்காக உருவாக்கப்பட்டுள்ள மட்டுமீறிய சுயநலமும் நுகர்வுவெறியும் மனித மாண்புகள், வேற்றுமையில் ஒற்றுமை, சமூக அக்கறை, பகுத்தறிவு, மதச்சார்பின்மை, பொதுநல சிந்தனை ஆகியவற்றை அழித்து சமூகத்தையே கிரிமினல் மயமாக்கி வருகின்றன. இத்தகைய ஆபத்தான சூழலில் மோடி அரசு அறிவித்திருக்கும் புதிய கல்விக் கொள்கை ஆகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை தற்குறிகளாக, சாதிமத வெறியர்களாக கார்ப்பரேட் முதலாளிகளின் கொத்தடிமைகளாக மாற்றும் பேரபாயம் கொண்டுள்ளது. இந்தச் சதியை முறியடிப்பது உழைக்கும் மக்களின் உடனடி கடமையாகும்.

உழைக்கும் மக்களே,

பெரும்பான்மை உழைக்கும் மக்களின் கல்வி உரிமையை பறிக்கும்
புதிய கல்விக் கொள்கையை முறியடிப்போம்!

சமஸ்கிருத – வேத கலாச்சாரத் திணிப்பின் மூலம்
நாட்டை பார்ப்பனிய மயமாக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-ன்
இந்து ராஷ்டிர கனவை தகர்த்தெறிவோம்.

pala-tnj-meeting-against-new-education-policy-posterகருத்தரங்கம்

இடம் : பெசன்ட் அரங்கம், தஞ்சாவூர்
நாள் : செப்டம்பர் 8, 2016 மாலை 5.30

கருத்துரை

முனைவர் வெ.சிவப்பிரகாசம்
மேனாள் பேராசிரியர், திராவிட இயக்க ஆய்வுமையம்,
சென்னை பல்கலைக் கழகம்

தோழர் காளியப்பன்
இணைப் பொதுச்செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

தகவல்

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சை கிளை
தொடர்புக்கு: 94431 88285

  1. இஸ்லாமிய மதவெறியை ஆதரிக்கும் வினவு மதவெறியை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை.

    வினவும் ஜாதி அரசியலை தான் செய்து கொண்டு இருக்கிறது. ஜாதி எதிர்ப்பு என்ற பெயரில் பிராமண எதிர்ப்பு, தலித்துகளுக்கு ஆதரவு என்ற பெயரில் அவர்கள் எந்த வகையிலும் முன்னேற கூடாது என்பதற்காக கல்வி தரத்தை குறைக்கும் அதனை செயல்களையும் செய்வது. இதை தான் கம்யூனிஸ்ட்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

    உங்களை போல் தேசவிரோதியாக இருந்து நாட்டை பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் காட்டி கொடுப்பதை விட தேசாவேரியர்களாக இருப்பது ஆயிரம் மடங்கு மேலானதே.

    • என் கருத்தை பார்த்து தீவிரவாதிகள் திருந்த மாட்டார்களா என்ற ஆசையால் தான் வருகிறேன். 130 கோடி மக்களை ஒன்றிணைத்து முன்னேறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல, அந்த மக்களை இனம் மதம் மொழி என்று பிரித்து, நம் நாட்டை பலவீனப்படுத்தி அதில் குளிர் காய்வதற்கு என்று பலர் இருக்கிறார்கள் (வினவு உட்பட).

      130 கோடி மக்களை வினவை போல் வேற்றுமைகளை காட்டி வெறுப்பை தூண்டி பிரிப்பதை விட ஒற்றுமைகளை சொல்லி ஒன்றுபடுத்துவது மனித இனத்துக்கே நல்லது.

      ஆனால் நல்ல விஷயங்கள் எதுவும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு பிடிக்காது. அவர்கள் மாற வேண்டும்.

      • மணி சார்,

        மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற உங்கள் உயரிய எண்ணம் புரிகிறது. ஆனால் அதற்காக நீங்கள் நினைப்பதும், உங்களுக்குத் தெரிந்ததும் மட்டும் தான் சரியான கருத்து என்ற அடிப்படையில் மட்டுமே பேசிக் கொண்டிருப்பது சரியா ?

        எடுத்த எடுப்பில் சம்மந்தம் இல்லாமல் திட்டுகிறீர்களே தவிர, விவாதிக்கத் தயாராக நீங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

        உங்களுக்கு வினவின் கட்டுரையில் மாற்றுக் கருத்து இருந்தால், அந்தக் கட்டுரையில் ஒவ்வொரு பகுதியையும் குறிப்பிட்டு, உங்கள் மாற்றுக் கருத்துக்களை முன் வைக்கலாமே .. நானும் வந்து விவாதிப்பேன். ஏனெனில் எனக்கு என் கருத்து மட்டும் தான் சரி என்ற எண்ணம் கிடையாது. இந்து ஆன்மீகமும் இதையே வலியுறுத்துகிறது என்பதும் தாங்கள் அறியாதது அல்ல.’நான்’ என்ற அகந்தையை விட வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள் நமது சான்றோர்கள். ஆகவே, உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள், விவாதிப்போம். சரியானதை, ஆதாரப்பூர்வமானதை எடுத்துக் கொள்வோம்.
        என்ன மணி சார் , சரி தானே…

  2. உங்களுக்கு வினவு பற்றி தெரியவில்லை, இந்திய ஆதரவு, ஹிந்து ஆதரவு, இஸ்லாமிய தீவிரவாதம் பற்றிய கருத்துக்களை வினவு என்றுமே வெளியிடாது. ____ நேர்மை சிறிதும் இல்லாதவர்கள் வினவு.

    • பதற்றம், படபடப்பு, ஆதங்கம், எதையாவது சொல்லி எதிர்த்துவிடவேண்டுமெற்ற அவசரம்,அப்படி ஆதாரப்பூர்வமாக எதிர்ப்பதற்கு ஏதுமற்ற அவலம், ஒரு மனிதனை என்னவெல்லாம் பேசவைக்கிறது.

      என்ன மணிகண்டன்,

      //இஸ்லாமிய தீவிரவாதம் பற்றிய கருத்துக்களை வினவு என்றுமே வெளியிடாது. ____ நேர்மை சிறிதும் இல்லாதவர்கள் வினவு.//

      வினவ முழுசாப்படிங்க

      அதில தாலிபான்கள் பற்றியும், இஸ்லாமிய தீவரவாதம் பற்றியும் ஏராளமான கட்டுரைகள் வந்துள்ளன, அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டு தாலிபான்கள் என்று த.மு.மு.க வையும், தவ்ஹித் ஜமாத்தையும் எந்தவித சமரசமும் இன்றி கட்டுரை வெளியிடும் வினவை குறை சொல்வதற்குக் கூட கொஞ்சம் தகுதி வேண்டும்.

      அது உங்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

      • நான் வினவிற்கு புதியவன் சமீபத்தில் தான் வினவு இணையதளத்தை படிக்கிறேன்.

        நீங்கள் சொன்னது போல் தேடி பார்த்தேன், வினவு பற்றிய என் கணிப்பு மாறவில்லை, இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி பேசும் போது கூட வினவு அமெரிக்காவை தீட்டுவதில் தான் குறியாக இருக்கிறதே தவிர இஸ்லாமிய தீவிரவாதத்தை பற்றி பெரிதாக கவலைப்படவில்லை (இன்னும் சொல்லப்போனால் இஸ்லாமிய தீவிரவாதி வினவு ஆதரிக்கிறது என்று சொல்வது தான் சரியாக இருக்கும்).

        வினவை பற்றி தெரிந்துகொள்ள ஆரம்பத்தில் இருந்து அதன் கட்டுரைகளை படிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை, அவர்களின் சமீபத்திய கட்டுரைகளை படித்தாலே போதும்

Leave a Reply to அனானியன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க