privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விபச்சமுத்துவின் பயோரியா பல்பொடி பல்கலைக் கழகம் - தோழர் ராஜு

பச்சமுத்துவின் பயோரியா பல்பொடி பல்கலைக் கழகம் – தோழர் ராஜு

-

மோடி அரசின் புதியக் கல்விக்கொள்கைசமஸ்கிருத திணிப்புக்கு எதிராக, செப்டம்பர் – 1, 2016 அன்று சென்னைமதுரவாயலில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு அவர்களின் உரை:

comrade raju 2“எவ்வளவு நேரம் படம் பார்த்தாலும் கிளைமாக்ஸ் என்ன என்பதில் தான் விறுவிறுப்பு உள்ளது. அதை மாதிரி ரமேஷ் பட்னாயக் முடிந்தளவிற்கு கூர்மையாக புதிய கல்விக் கொள்கை பற்றி கூறினார். ஐந்தாவதிலேயே பாஸ் – பெயில் கொண்டு வர வேண்டும், இடஒதுக்கீடு கிடையாது, சமஸ்கிருதத்திற்கு வாத்தியாரைப் போடணும், அரசாங்க பள்ளிக்கூடம், கல்லூரிகளில் ஆசிரியர் –மாணவர்களின் யூனியன் எல்லாம் வைக்க முடியாது – இந்தியாவின் இறையாண்மையைப் பற்றி, மொழியைப் பற்றி, பேச்சுரிமையைப் பற்றி, சமத்துவத்தைப் பற்றி எந்த விதமான அறிவிப்பும் அதில் கிடையாது.

சின்ன வயதிலேயே பள்ளிக் கூடத்திலேயே அந்த மதவாதக் கருத்துக்களை பரப்பிவிட்டால் பத்தாண்டுகள் கழித்து பெரியார் – அம்பேத்கர் எல்லாம் மறந்து போய் ராமர் தான் இந்தியாவின் முன்னாள் பிரதமராக இருந்தாரு – மகாபாரதத்துல தசரதன் தான் இந்தியாவின் மனிதவள மேம்பாட்டிற்கு அடிப்படையே என ஒரு 50 வருடத்திற்குப் பிறகு வரலாற்றையே மாற்றி விடுவார்கள். அந்த தசரதனின் மனைவிகள் தான் இந்தியாவில் பெண்ணுரிமைக்காக போராடியவர்கள் என என்னென்னவோ எழுதி விடுவார்கள். இதெல்லாம் கொண்டு வரணும்-னு அவன் நினைக்கிறான், ஊருக்குள்ள ஒரு திருடன் வர்ரான்னா போலிசுக்காரன் அந்த ஒரு திருட்டுப் பயல பிடிச்சி உள்ள போடணும்னு நினைக்க மாட்டான், ஊருக்குள்ள எவனும் நடமாடக் கூடாது என்பான்.

அந்த மாதிரி பழைய கல்விக் கொள்கையே இங்க தடுமாறிக்கிட்டு இருக்கு, SRM பச்சமுத்து பற்றி பத்திரிக்கையில நிறைய எழுதுகிறாகள். 30 வருடம் முன்னால் அவர் 7 ரூபாய் சம்பளத்தில் இருந்தார், இன்றைக்கு 20,000 கோடி ரூபாய் சொத்து மதிப்பு, என பெருமையாக எழுதுகிறான், எப்படி வந்தது என புலனாய்வு செய்ராங்க. 84-ல் ஒரே ஒரு பாலிடெக்னிக், 2016 –ல் 130 நாடுகளில் எங்கெல்லாமோ கல்வி நிறுவனம் வைத்துள்ளார், டெல்லி, ஹாங்காங் என பயோரியா பல்பொடி விக்கிற மாதிரி முழுக்க பல்கலைக்கழகம் வைத்துள்ளார். இது காட்டுவது என்ன? ஒட்டுமொத்த கல்வி கட்டுமானமும் தோற்றுப் போனது என்பதைத்தான்.

நூற்றாண்டுகளாக இருக்கக் கூடிய ஆங்கிலத்தை இன்றைக்கு சொல்லிக் கொடுக்க ஆசிரியர்கள் கிடையாது என சொல்கிறார்கள். ஆங்கிலம் கற்றுக் கொடுப்போம்-னு தமிழ் பத்திரிக்கையில, டிவியில போடுறான், நெட்-ல போடுறான், LKG, UKG, ல மம்மி,டாடி, அது, இது சால்ட்,பெப்பர்னு என்னென்னவோ சொல்லிக் கொடுக்கிறான். ஆனால் சரியான ஆங்கில ஆசிரியர்கள் இல்லை. ஒரு மொழியைக் கற்றுக் கொள்வது, கற்றுக் கொடுப்பது, சிந்திக்க வைக்கணும், ஒரு கணக்கைப் போட்டு சொன்னா அதனுடைய அடிப்படையில நீ மற்ற கணக்கைப் போடனும், ஒரு திருக்குறளை சொல்லிக் கொடுத்தால் அந்த முறையில் நீ அடுத்தடுத்த குறளைப் படிக்கணும், கற்றல் – கற்பித்தல் என்பது ஜனநாயகம் உள்ளதாக – அறிவியல்பூர்வமாக இருக்கணும்.

ஒரு ஆர்.எஸ்.எஸ் காரன் என்ன செய்வான், அதிகாரி என்ன செய்வான், ஒரு போலீசுக் காரன் என்ன செய்வான்.. அதைத்தான் புதிய கல்விக்கொள்கை செய்ய உள்ளது. சமஸ்கிருதத்தையும் இந்துத்துவா கொள்கையையும் கார்ப்பரேட்டுக்கு ஆதரவான கல்வியை சரக்காக பண்டமாக விற்பதன் மூலம், திறந்து விடுகிறான்.

comrade raju 1நீ ஐந்தாவதில் பெயிலாக்கினால் என்ன நடக்கும்.ஐந்தாவது வரை நீ சொல்லிக் கொடுக்கக் கூடிய நமக்கு பயன்படாத அறிவியல்,ஜனநாயகத்துக்கு எதிரான பிற்போக்கு, பகுத்தறிவுக்கு எதிரான பாடத்திட்டத்திலிருந்து நீ ஒரு மாணவனை வெளியேற்றினால் அவன் அம்பேத்கரை படிப்பான், பெரியாரைப் படிப்பான், மார்க்சியத்தைப் படிப்பான், அவனுக்கு நீ பதில் சொல்ல முடியாது. இது தான் நடக்கப் போகிறது. நீ இந்து ராஷ்டிரமா ஆக்கிடலாம்னு நினைக்கிற, ஒரு 5 வருஷத்துக்கு பள்ளி, கல்லூரிகள் எல்லாம் மூடி பாருங்க, நாடு வெளங்கிரும், நாடு அப்ப தான் வளர்ச்சியடையும். கல்லூரியிலிருந்து வரக் கூடியவன் அறிவாளியாவதில்லை, ஜனநாயகப் பூர்வமாக வருவதில்லை, ஆற்றல் மிக்கவனாக இருப்பதில்லை, இது போன்ற புரட்சிகர அமைப்பில் இருப்பவன் தான் ஆற்றல் மிக்கவனாகிறான். அறிவாளியாக வர்ரான், ஜனநாயகமாக வருகிறான்,

பெரியார் சொன்னது போல, பார்ப்பானுக்கு முன்புத்தியும் கிடையாது, பின்புத்தியும் கிடையாது. அந்த மாதிரி வேலை தான் செய்றான் இப்ப. ஒரு ரயில்ல கொள்ளையடிச்சுட்டான்னு சொல்லி ஆய்வு பண்றானுங்க. ஐ.ஜி வர்ரான், உள்ள போறான், மேல பாக்குறான், ஓட்டை தெரியுது, அப்புறம் மேல ஏறி பாக்குறான், உள்ள இருக்குற கம்பார்ட்மெண்ட் தெரியுது – திரும்பிப் போயிடுறான் – அடுத்த 2 நாள் கழித்து எஸ்.பி வர்ரான் – அவன் கீழ பாக்குறான் – மேல ஓட்டை தெரியுது. இந்த மாதிரி இந்த ஓட்டையையே கிட்டத்தட்ட 10 தடவை நான் பார்த்துவிட்டேன். DIG, RPF வர்ரான். விருத்தாச்சலத்தில் வந்து ஆய்வு செய்றான், ஒன்னுமேயில்ல விருத்தாச்சலம் –னு பேர் போட்டுருக்கு. வெறும் தண்டவாளம் –அங்க என்னத்த ஆய்வு பண்றான்னு தெரியில.

இப்ப என்ன பண்றான் அந்த திருடன் யார், அந்த ஆங்கில பட கதாநாயகன் யார்னு தேடுறாங்க! எதையும் கண்டுபிடிக்கல, மத்திய தடயவியல் துறை வந்தது, கடைசியில வெறும் அட்டைப்பெட்டியைக் கொண்டு போய் கேஸ் property என கோர்ட்டில் கொடுத்துள்ளனர். ஒரு டி.எஸ்.பி தலைமையில 50 கோடி பணம் டிரெயின்ல வருது, அதுல துப்பாக்கியோட காவல் வேற. எங்க அடிச்சான்னே தெரியில, எப்படி அடிச்சான்னே தெரியில . இது தான் உன்னுடைய தோல்வி, அப்ப இந்த அரசு கட்டமைப்பில் தான் புதிய கல்விக் கொள்கை கொண்டு வர்ரான்.

இதுல புதிய கல்விக் கொள்கை – நல்லதாவே இருக்கட்டும், எப்படி நீ அமுல்படுத்துவ – அமுல்படுத்த முடியாது. தனியார் பள்ளிக் கூடத்தில LKG வைத்திருக்கிறான், 20,000 வாங்கு-ன்னு சொன்னா – 30,000 வாங்குகிறான் – என் இஷ்டம் என்கிறான். சொல்லிக் கொடுக்குற வாத்தியார எப்படி வச்சிருக்கிற – அவன கொத்தடிமையா வச்சிருக்கிறே – அவனோட – டிசி, கிசி எல்லாம் வாங்கிகிட்டா முடிஞ்சுப் போச்சு. கல்லூரி, பல்கலைக்கழகங்கள் எல்லாம் இன்று எங்க இருக்குது – பெரிய கிரிமினல் கும்பலாக இருக்கிறான் – கருப்புப் பணம் – நீங்க 20 கோடி, 30 கோடி, 40 கோடி கொடுத்தனா – எவனுக்காவது ரசீது இருக்கா – செக் போட்டு வசூல் பண்ண வேண்டியது தான?

comrade raju 3இப்படி படிக்கிற அந்த டாக்டர் கிட்ட போய் நாம வைத்தியம் பார்த்துக் கொள்ள முடியுமா – இப்படி படிக்கிறவன் கிட்ட ஒரு பாலம் கட்ட சொன்னா கட்டுவானா – இந்த கருப்புப் பணம் – ஆக்கிரமிப்பு – மாஃபியா – கிரிமினல் கும்பலு – இவனுங்க தான் கல்வி முதலாளிகள் – இவன் எப்படி சொல்லிக் கொடுத்து ஒரு அறிவாளிக் கூட்டத்தை உருவாக்க முடியும். இவன் பணம் சம்பாதிப்பதற்காக வர்ரானே தவிர – standard standard என்கிறான். உன் standard என்ன சொல்லு பார்ப்போம்

தரமான ஒரு பேராசிரியரை வெளிநாட்டிலிருந்து வரவைக்கிறேன் என்கிறான் – வெளிநாட்டிலிருந்து வரவைத்து என்ன பேச போகிறான் – விநாயகனுக்கு யானைத்தலை இருக்கு – அந்தக் கதை எல்லாருக்கும் தெரியும் – அப்பவே கண்டுபிடிச்சது – plastic surgery –க்கு அவர் தான் உதாரணம் என்கிறான். அப்பவே புஷ்பக விமானம் கண்டுபிடிச்சோம்னு சொல்றான். மெட்டல் எப்ப வந்தது, குண்டு எப்ப வந்தது?இந்தக் கல்வி முறை கிரிமினல் கும்பலிடம் இருக்கிறது. எஸ்.வி.எஸ் கல்லூரி தெரியும். நீதித்துறை பற்றி, கனிமவளக் கொள்ளை பற்றி தெரியும், ஸ்வாதி கொலை பண்ணது ரயில்வே ஸ்டேசன்ல – போலீசு எங்க போனான், ஏன் ரயில்வே ஸ்டேசன்ல சிசிடிவி வைக்கல – ஏன் ஏன் என கத்துறான்.

சேலத்தில் வினுப்பிரியா – என்னை ஆபாசமாக போட்டான் – என புகார் செய்தும் போலீசு எதுவும் செய்யவில்லை.  தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட ஆசிரியை மனு, புகார் கொடுத்துள்ளார், ஏன் பாதுகாக்கவில்லை போலீசு? எனக்கு கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்கக் கூடாது என பெண்ணைக் குத்திக் கொல்கின்ற அந்த கருத்தை என்ன செய்ய போகிறது அரசு. ஆணாதிக்க சாதி வெறி கருத்தை அழிக்காமல், குற்றவாளியை தண்டிப்பது பற்றி பேசுவதால் பிரச்சினை தீருமா?

இவர்களது தீர்வுக்கு அப்பாற்பட்ட வகையில் வெளியில் உண்மை இருக்கிறது. அதைத் தான் கட்டமைப்பு நெருக்கடி என சொல்கிறோம். அதை தீர்ப்பது என்பது இவர்களால் முடியாது. ஆடைக் கட்டுப்பாடு,ஆண்மை நீக்கம் தீர்வல்ல, தனித்தனி பிரச்சினைக்கு தனித்தனி தீர்வு கிடையாது.

அரசியல் அமைப்புச் சட்டமே ஃபெயிலியராகிவிட்டது. அடிப்படை உரிமைகள் அனைத்தையும் தூக்கி காற்றில் போட்டுவிட்டது. அனைத்தும் செயலிழந்து தோற்றுப்போய்விட்டது. நாடு முழுவதும் பிரச்சினை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. மக்கள் அதிகாரம் தான் மாற்று என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த பிரச்சினைக்கும், தனித்தனியாக தீர்க்க முடியாது. நாட்டிற்கு, மொழிக்கு எதிராக மோடி அரசு எப்படி செயல்படுகிறது என மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். குலக்கல்வி அறிவித்த ராஜாஜி ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இன்று பு.க.கொ. அமுல்படுத்தும் மோடி அரசை என்ன செய்வது என மக்கள் மத்தியில் கொண்டும் செல்ல வேண்டும். கருணாநிதி மதயானை உள்ளே வருகிறது என்கிறார். அவரால் களத்திற்கு வர முடியாது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மதயானையை – operation வேண்டும். புதிய கல்விக் கொள்கையை கொன்றே தீர வேண்டும் – செயல்பாட்டிற்கு வந்தாலும் வராவிட்டாலும் கருவிலேயே அதை சிதைக்க வேண்டும் என மக்கள், மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். தமிழகத்தில் நாம் எடுக்கும் போராட்டம் இந்தியாவிற்கே வழிகாட்ட கூடிய கலங்கரை விளக்கமாக இருக்க வேண்டும். மழையோ, வெயிலோ, காற்றோ, சிறையோ நமக்கு ஒரு நாளும் தடையாக இருக்க முடியாது”.