privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்சென்னையில் இராமன் எரிப்பு - இராவண லீலா ! அனைவரும் வருக !

சென்னையில் இராமன் எரிப்பு – இராவண லீலா ! அனைவரும் வருக !

-

திராவிடர்களை இழிவுபடுத்தும் இராமலீலாவைக் கண்டித்து இராவண லீலா ! இராமன் உருவ பொம்மை எரிப்பு !

 

ராவண லீலா அழைப்பிதழ்
ராவண லீலா அழைப்பிதழ்

நாள்    : 12.10.2016, புதன் கிழமை
நேரம் : மாலை 5.05 மணிக்கு
இடம் : சமஸ்கிருத கல்லூரி முன்பு மயிலாப்பூர்,சென்னை.

லகத்தின் மூத்த இனம் தமிழினம. தற்போதைய இந்தியாவில் அரப்பா, மொகஞ்சதாரோ என்ற பகுதிவரை பரவி வாழ்ந்தவர்கள் நாகர்கள் என்றழைக்கப்பட்ட திராவிடர்களான தமிழர்கள் தான் எனறும், உலகத்தின் மிகச்சிறந்த நாகரீகமடைந்த மனிதர்களாக வாழ்ந்தவர்கள் தமிழர்கள்தான் எனப் பல வெளிநாட்டு ஆய்வாளர்கள் இன்று ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளனர். ஆனால் இவ்வளவு பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழினம் இமயம் முதல் குமரி வரை பரவி வாழ்ந்த நம் தமிழினம் இன்று தமிழ்நாடு என்ற குறுகிய பகுதிக்குள் சுருங்கியது எப்படி என்பதை நாம் சிந்திக்க வேண்டாமா?

இமயம் வரை பரவி வாழ்ந்து வந்த நம் திராவிட இனம், ஆடு, மாடு மேய்த்துக் கொண்டு கைபர் போலன் கனவாய் வழியே துருக்கி பகுதியில் இருந்து புகுந்த ஆரிய இனத்தால் வீழ்ந்தது தமிழினம். உள்ளே புகுந்த ஆரிய இனம் மெல்ல மெல்ல நம்மை வஞ்சகமாக புராணம், இதிகாசம் என்ற பெயரில் வீழ்த்தியது. அப்படி ஆரியர், திராவிடர்களுக்கு இடையே நடந்த போரில் ஆரியர்கள் திராவிடர்களை வஞ்சகமாக வெற்றி கொண்டதின் குறியீடகாவே, நம் தமிழ் மன்னார்களான இராவணர், நரகாசுரர், இரணியர் போன்றோர்களை அரக்கர்களாக, அசுரர்களாக சித்தரித்தது வந்தேரி ஆரிய பார்ப்பனிய இனம். புராணங்களில் வரும் அரக்கர்கள் அசுரர்கள் ஆகியோர் கருப்பாக இருப்பது என்பது அவர்கள் தமிழர்கள் தான் என்பதற்கு எளிய உதாரணம்.

அப்படி ஒன்றுதான் ஆரியர்கள் தங்களுக்காக எழுதிக்கொண்ட இராமாயணம். ஆரிய திராவிட போரையே இராமாயணம எனறும், இராமாயணத்தில் சொல்லப்படும் அரக்கர்கள், குரங்குகள் என்பவை எல்லாம் திராவிடர்களைத்தான் என்றும் பண்டித ஜவர்களால் நேரு, விவேகானந்தர், பி.டி.சீனிவாசய்யங்கார் போன்ற வரலாற்று ஆசிரியர்களும் தெளிவாக கூறியுள்ளனர். அதில் தமிழ் மாமன்னராகிய இராவணன் அவர்களை அரக்கனாக, அசுரனாக சித்தரித்து, ஆரிய இராமனை கதாநாயகனாக சித்தரித்து மகிழ்ந்தது வந்தேரி ஆரிய இனம். இராவணன் கற்பனை பாத்திரம் என்றாலும், அவர் திராவிட இனத்தின் குறியீடாக உயர்ந்து நிற்க்கிறார். அத்தகைய இராவணனை அவரது குடும்ப உறுப்பினர்களான மேகநாதன், இந்திரஜித் ஆகியோரையும் உருவ பொம்மைகளாக செய்து, இந்த மாவீரர்களை நெருப்பில் போட்டுக் கெளுத்தும் இராமலீலாவை டெல்லியில் ஆண்டுதோறும்  உற்சாகமாக கொண்டாடி தென்னாட்டு மக்களை திராவிடர்களை பார்ப்பனர்கள் அவமதித்து வருகிறார்கள்.

முதன் முதலில் இராவணன் எங்கள் பாட்டன் என்ற குரல் பொது வெளியில் ஓங்கி ஒலித்தது தமிழகத்தில்தான். இராவணனை திராவிட மன்னன் என்று பெரியார், அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத்தலைவர்கள் சொன்னார்கள். இராமாயன எரிப்பு என்றளவில் போராட்டம் நீண்டது. இராம லீலாவுக்கு எதிராக இராவண லீலாவை நடத்தி1974ஆம் ஆண்டு இராமனின் உருவத்தை எரித்தது அன்றைய

திராவிடர் கழகம். 1996ஆம் ஆண்டில் அன்றைய பெரியார் திராவிடர் கழகம் தோற்றம் கொண்ட பிறகுதான் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அரசின் தடைகளை மீறி இராமன் உருவ பொம்மைகளை எரித்து ராமலீலாவுக்கு பதிலடி தரப்பட்டது. அதற்காக  தோழர்கள் கைது செய்யப்பட்டு வழக்குகளை சந்தித்தனர்.

பெரியார் பிறந்த மண்ணில் இராவணன் வாழ்க என்ற முழக்கத்தோடு ஆரிய இராமனுக்கு எதிராக தீமூட்டுவோம் !
பெரியார் பிறந்த மண்ணில் இராவணன் வாழ்க என்ற முழக்கத்தோடு ஆரிய இராமனுக்கு எதிராக தீமூட்டுவோம்

அதன் பிறகு 20 ஆண்டுகள் ஆரிய திமிருக்கு பதிலடிதராமல் விட்டுவிட்டோம். ஆனால் இன்று ஆரிய பார்ப்பன ஆர்.எஸ்.எஸ்சின் கைப்பாவையான ஆளும் மோடி அரசால் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பார்ப்பனர் அல்லாத மக்கள் ஆகிய அனைவரின் மீதான ஒடுக்கு முறைகள் தலை விரித்து ஆடும் சூழலில் இராமலீலாவுக்கு பதிலடியாக இராவணலீலாவுக்கு தயாராக வேண்டிய நிலையை பார்ப்பனர்களே உருவாக்கி உள்ளனர். ஆக தமிழர்களான நம்மை இழிவுபடுத்தும் நோக்கில் ஆரிய பார்ப்பனர்கள் வடநாட்டில் தசராவின் இறுதி நாளன்று இராம லீலா என்ற பெயரில் நடத்தி வருவதற்கு பதிலடிதரும் வகையில் அதே நாளில் இராவண லீலா நடத்தி நம் தமிழ் மாமன்னரான இராவணன் அவர்களை கொண்டு ஆரிய இராமனின் உருவத்தை எரிக்க உள்ளோம்.

ஆரிய பார்ப்பனியத்தை வீழ்த்திய பெரியார் பிறந்த மண்ணில் இராவணன் வாழ்க என்ற முழக்கத்தோடு ஆரிய இராமனுக்கு எதிராக தீமூட்டுவோம். அதில் இந்திய தேசிய பார்ப்பன வர்க்கத்தையும், துரோகத்தையும் சேர்த்து எரிப்போம்.

 ஆரிய இராமனை எரிப்போம் !!
திராவிடர் சுயமரியாதை மீட்போம் !!!

( தந்தை பெரியார் திராவிடர் கழக பிரசுரத்தில் இருந்து )

தகவல் :

தந்தை பெரியார் திராவிடர் கழகம்
சென்னை மாவட்டம்.
தொடர்புக்கு : 98417 09129,
98410 28111, 94440 11124

  1. ஜயா லகடபாண்டிகளா இராவணன் ஒரு பிராமணன் ராமன் ஒரு சத்திரியன், உங்களுக்கு எல்லாம் தமிழ் ஒழுங்காக படிக்க தெரிந்தால் கம்ப ராமாயணத்தை படிக்கவும். அடுத்தவன் மனைவியை அபகரிப்பவனை கொண்டாடும் அளவிற்கு இந்த திராவிட கழகத்தினர் தரம் தாழ்ந்து இருக்கிறார்கள்.

    இன்னும் எத்தனை வருடங்களுக்கு இந்த ஆரிய திராவிட பொய்களை வைத்து காலம் தள்ள போகிறார்கள் என்று தெரியவில்லை.

    • மணி அண்ணனுக்கு அய்யிரங்கள பேசுனதுல அடியில எரியுது…ஆனா எரியாத மாதிரி காண்பிக்கின்றார். ஆரிய திராவிட பொய்களாம். ஆனால் இராவணன் பிராமணன் ராமன் சத்திரியன் என்பது உண்மையாம். பரவாயில்லையேனு நினைச்சா…பாகிஸ்தான்ல அவன் சாமியை எதிர்ப்பியானு கொந்தளிக்கிறார்.(கக்கா வர்லனாலும் பாகிஸ்தான் பேர் சொல்லிதான் முக்குவாறு)…கடைசியா இராவணலீலா கொண்டாடறது வக்கிர புத்தியாம்…மணிண்ணா பூணூல் தெரியுது சட்டக்குள்ளவிட்டு மறைங்க……அடுத்தவன் பொண்டாட்டியை அபகரிச்சான் இராவணன் சொன்னது ஓ.கே. அப்படியே அந்த தசரதன் 60000 பொண்ட்டாடி பேர்களைச் சொல்லுங்க…..

  2. இது எல்லாம் இந்தியாவில் மட்டுமே நடக்க கூடிய கூத்து இதுவே பாகிஸ்தானுக்கு போய் அவர்கள் வழிபடும் கடவுளை இப்படி அவமதிக்க முடியுமா ? அதற்கு இவர்களுக்கு துணிவு உள்ளதா ? இந்தியாவில் மக்கள் வழிபடும் கடவுளை அவமதிக்க வேண்டும் என்றே hindu மக்களின் மனதை நோக்கடிக்க வேண்டும் என்றே திட்டமிட்டு செயல்படுகிறார்கள். வக்கர புத்தி உள்ளவர்கள் தான் இப்படி பெரும்பான்மை மக்களின் கடவுளை இப்படி அவமதிப்பார்கள்.

    • “வக்கர புத்தி உள்ளவர்கள் தான் இப்படி பெரும்பான்மை மக்களின் கடவுளை இப்படி அவமதிப்பார்கள்.” So, we can hurt minorities gods. Am I right.

      • நிச்சயம் இது வக்கர புத்தி தான்… இந்த நாட்டில் கொடுக்கப்பட்டு இருக்கும் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை தீவிரவாதிகளும், வினவு போன்ற தேசவிரோதிகள் தான் பயன்படுத்துகிறார்கள்.

  3. ஆயிரம் இருந்தாலும் ராமன் கடவுள் அவரை எரிப்பது மனம் வலிக்கிறது இருந்தாலும் என் இன தலைவனை அரக்கன் என்று செல்லும் போது ராமனை மட்டும் இல்லை அவன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் வைச்சி செய்யவேண்டும் என நினைக்கிறேன்

    இராவண லிலை வெற்றி பெற வாழ்த்துகள்

  4. சத்திரியன் பிராமணனைக் கொன்றானா விகட பாண்டி மணிகண்டா?அப்படியானால் ராமனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு அதனால்தான் தற்கொலை செய்துகொண்டானா?இசுலாமியர்களைக் கேவலப்படுத்தி இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தத் துடிக்கும் நீங்கள் தான் பாகிஸ்தானுக்குப் போய் பேசிப் பாருங்களேன் சூரப் புலிகளே,புலிப்பால் கொண்டு வந்த சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த மானாகண்டனே!

  5. Hi,

    I always appreciated Vinavu for alternative view. But to publish this ridiculous Ravan leela is going against any rationality whatsoever.

    1. Not sure why Vinavu is being a torch holder for fraud non existent Dravidam which has destroyed Tamil identify and TamilNadu – https://www.youtube.com/watch?v=zYK_I3BHWzA

    2. EveRa worked for upper caste hindus except of course Brahmins. His sole agenda (and yours also it seems) is anti brahminism – You can check with VCK Ravi Kumar perhaps? – http://www.countercurrents.org/dalit-ravikumar020306.htm

    3. You seem to be anti brahmin just for the sake of it. When untouchability was practiced by everybody (and is practiced ruthlessly using Aruval’s now), you are bent on riding anti brahmin bus that Dravidians ride. For you forgot without Brahmins there is a big dent on Tamil – http://swamiindology.blogspot.com/2012/01/no-brahmins-no-tamil.html. May be you can call Gounderyam/Devereyam/Pillaiarieyam for a change then?

    4. You are coloring everything in anti Brahminism, maybe science even won’t work with you ever – Harvard genetics study on aryan dravidian myth – http://timesofindia.indiatimes.com/india/Aryan-Dravidian-divide-a-myth-Study/articleshow/5053274.cms

    5. Ravan worship is fine and is being done in lot of places but to bash brahmins just for the sake of it makes no sense – http://swarajyamag.com/culture/beyond-the-binaries-understanding-the-veneration-of-ravana & http://swarajyamag.com/culture/ravana-tolerance-and-the-indian-left

    6. Ravan, most funnily, is half Brahmin (father was Brahmin) and these fraud Dravidians as usual have no clue.

    7. And more pointed research shows Ravan might originally be from North India who settled in Lanka and not even a tamil!! – http://timesofindia.indiatimes.com/city/varanasi/Ravana-was-a-Brahmin-from-Ghaziabad-Subramanian-Swamy/articleshow/45663447.cms & majority of temples of him is in North India http://www.walkthroughindia.com/festivals/religion/5-famous-temples-of-ravana-in-india-the-demon-king-of-lanka/

    8. In celebrating Ravan, you need not abuse the good which is Rama. And very funny Rama is a Ksthriya (warrior).

    9. But hey last 80 years, using non tamil fraud Dravidiam, entire tamil land, its agriculture, its western ghats mountains, its rivers, its coastal area’s, its temples have been looted. So why not have more fun.

    10. Last but not least, fraud dravidian has put financial situation of tamil land in doldrums why not have more fun. (93.8% revenue goes to Govt Salary/Benefits/Freebies/Interest on debt), http://www.ibtimes.co.in/tamil-nadu-budget-2016-17-jayalalithaa-govt-hikes-provision-salaries-employees-pensioners-687517

    11. And to cap it all, education from LKG to PhD is so commercialized by Liquor merchants who speak Dravidam in every turn, close to 60 to 75% of students in these institutions are non tamils!!

    Vinavu should be rational. If you don’t change, you remain fringe with no healthy discussions happening.

    • My sincere appreciations to VINAVU comrades for publishing this pamphlet/invitation, its the dire need of the time for the progressive and revolutionary organisations to join hands and put up a formidable opposition against the saffron forces.

      dear “Tamilian not Dravidian”,
      1. Your unshaken belief in the theory that Tamils have been ‘ditched by Dravidianism’ (திராவிடத்தால் வீழ்ந்தோம்) seems to be the funniest of all funny ideas. It is the convenient argument repeatedly taken up by the ‘Tamil Chauvinists’ to demerit all the good and progressive changes brought forth by Periyar and Dravidian political and cultural ideologies. Don’t willingly confuse the Dravidian ideology with DMK, especially with ADMK.
      2. your contention (from point 2-4) that Periyar and all others who support him and speak anti-brahminism are “Tamil-traitors” is again a funny idea which has been often told, but seldom substantiated. Ravikumar’s bashing of Periyar is an good old story, and he himself has withdrawn his statements in recent times. Dravidian movement, no doubt emerged as a coalition of non-Brahmin upper castes for their political and economic rights, but Periyar changed its course, goals, motives and ideological stature in a radical manner. discrediting this truth will do no good for “Tamilians” either!
      3. It is told that as many as 42 ramayanas exist in Tamil alone, and more than 300 versions in South India alone. each of them presents a different picture.
      Hailing Ravana as the Tamil Hero is based on the commonly held belief, and it well serves the purpose of resisting saffron forces and brahminical ideas. And you say “goodness in rama” need not be rejected? What ‘goodness”? can you substantiate?
      4. Don’t repeat the habit of linking political parties with Dravidian titles and Dravidian ideology.
      And above all, you are ready to trusst su.swamy rather than Periyar, don’t you?
      Find your partners in progressive elements, not in the bullshit ideas!

  6. எனக்கு என்னமோ இது எல்லாம் ஒரு சதி திட்டம் போல் தெரிகிறது ஒரு பக்கம் இஸ்லாமியர்களுக்கு ஆதரவு என்று சொல்லி கொண்டு இன்னொரு பக்கத்தில் ஹிந்து மக்களை இந்த மாதிரி சைக்கோத்தனமான காரியங்களை செய்து சீண்டி விட்டு… கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற தீய நோக்கத்தோடு இந்த மாதிரியான காரியங்களை செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

    • சைக்கோ முற்றியவர்களுக்கு எல்லாமே சைக்கோவாக தெரியுமோ? யாராவது மனநல மருத்துவர்கள் விளக்கினால் நல்லது.இது உண்மையானால் பிடித்துக்கொண்டு போங்கள் சார்.

      • சரி நீங்கள் கீழ்ப்பாக்கத்தில் சேர்ந்தவுடன் சொல்லி அனுப்புங்கள் நான் வந்து உங்களை பார்த்து மனநலனை விசாரித்து விட்டு செல்கிறேன்.

        • சாரி மிஸ்டர்மணிகண்டன் நான் மனோதத்துவ டாக்டர் இல்லை.ஒருவேளை நான் மனநல மருத்துவம் பயின்றிருந்தால் உங்களுக்கு இருக்கிற வியாதிக்கு கண்டிப்பாய் என்னை பார்த்து விசாரிக்க இலவசமாய் அனுமதியளித்திருப்பேன்.ஏனெனில் உங்களுக்கு இருக்கிற வியாதி மிகக்கொடியது.சாதாரணமாக இருக்கிற மனநல சிக்கல் என்றால் வீட்டில் உள்ளவர்கள் அல்லது உறவினர்கள் அண்டை அய்லார்தான் பாதிக்கப்படுவார்கள்.ஆனால் உங்களுக்கு இருப்பது ஒட்டுமொத்த நாட்டையும் பாதிக்க கூடிய ஆர் எஸ் எஸ்ஸோபியா என்ற மிக மோசமான மனநோய பாதித்திருக்கிறது.இதில் ஒட்டு மொத்த சமூகத்தையும் நீங்கள் வெறி கொண்டு பிராண்டி விடுவீர்கள்.வெளியில் செல்வதை தவிர்த்திடுங்கள்.சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்திவிடுங்கள்.நான் விசாரிக்கிறேன்.யாராவது மருத்துவர்கள் இருந்தால் விசாரித்து அனுப்ப பார்க்கிறேன்.

  7. அறிவுசால் செயல்பாடு, உணர்ச்சியின் அடிப்படையில் அமையாது பகுத்தறிவின் அடிப்படையில், அடுத்தவனுக்கு ஒரு கண் போகுமானால், எனக்கு இரண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை என்ற பகுத்தறிவின் அடிப்படையில் செய்யப்படும் செயல்…..

    பார்ப்பனன் ராவணனை, அடுத்தவன் மனைவியை அபகரித்தாலும், ஆதரிக்கும் இச்செயல் பாராட்டுக்கு உரியது. சூத்திரன் ராமனைக் (ஈ.வெ.ராவின் அகராதிப்படி பார்ப்பனர் அல்லாத அனைவரும் சூத்திரரே, சத்ரியனான தம்மையும் அவர் அப்படித்தான் காட்சிப்படுத்தினார்) கொளுத்தும் பகுத்தறிவு பாராட்டுக்கு உரியது.

  8. யெப்ப மனிகண்டா நடப்பது திராவிடன அல்ல ஆரியா பார்ர்பனா என்ற கூத்தில் எங்கிருந்து வந்தது இதில் இசுலாமிய ஆதரவு எதிர்ப்பு உன்னைபோல் கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பவனை கண்டறிய தான் இது போன்றநிகழ்வுகள் வருகின்றது, உன்னை போன்றோர்க்கு காவி கண்ணை மறைப்பதால் தான் வருகின்ற வினையே அவர்கள் பாட்டுக்கு தொழில் மற்றும் செயல் பாட்டில் ஈடுபகின்றனர் உன்னை போன்ற அரைவேக்கடுகள் குஜராத் – ஜெயின் குருப் கொடுக்கும் எச்சல் தொகைக்கு ஆசைப்பட்டு இந்து முண்ணனி சந்து முண்ணனி என்று கேவலமான கரியத்தில ஈடுபடுகின்றன உனது தலைமைகள் ஏனெனில் தொழில் முறையில் ஏற்ற்படும் போட்டியின் மறு உருவமே இந்த போலி இந்து பற்று அப்படிபார்த்தால் காதலித்து பிற சாதிய சில திருமணங்களை எல்லோரும் அல்ல அதையே பொருத்து கொள்ள முடியாமல் வெட்டி கொலை செய்வது இஸ்லாமியரா அல்லது கிருஸ்த்தவனா ? இதில் எங்கு உள்ளது சந்து முன்னனியின் சமூக பொறுப்பு? முட்டாள் போன்று எல்ல இடத்திலும் முசுலீம் எதிர்ப்பு என்று அறைகூவாமல் நம்முடைய இடத்தில் இருக்கும் அழுக்கை துடைக்க முயர்ச்சிப்போம் அவர்கள் நம் வழியில் வரமட்டார்கள்

  9. கூற்று : ராவணன் திராவிடன்
    விளக்கம் : ராமாயணம் உண்மை , ராமன் உண்மை , கற்பனை கதை அல்ல . கம்பன் ஒரு கோடாலி காம்பு, சிந்து சமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம்

    கூற்று : ராமாயணம் ஒரு கதை ஆனால் திராவிட ராவணனை அரக்கனாக்கி இழிவுபடுத்தி விட்டார்கள்
    விளக்கம் : ராவணன் பிறர் மனை கவர்ந்து இழி செயல் செய்ததாக காட்டினாலும் , நம்ம சாதியை சேர்ந்தவன் என்பதால் நாம் ஆதரிக்க வேண்டும் . நம்ம சாதி இன மக்கள் தவறு செய்தாலும் விட்டு தரக்கூடாது.

    கூற்று : ராமாயணம் ஆரியர்கள் வேண்டுமென்றே எழுதி இழிவுபடுத்திவிட்டார்கள்
    விளக்கம் : ஆரியர்களுக்கு பூகோள அறிவு இருந்தது , திராவிட புகழ்ச்சி கவிதைகளில் இது போல எதுவும் இல்லை

    கூற்று: சீதையை தொடாததால் ராவணன் நல்லவன்
    விளக்கம் : அடுத்தவர் மனைவியை வீட்டுக்கு கொண்டு வந்து அழகு பார்க்க யாருக்கும் உரிமை உண்டு

    கூற்று : அந்த காலகட்டத்தில் தசரதன் ஆயிரம் மனைவி வைத்து இருந்தான் , ஆகையால் இராவணன் நல்லவன்
    விளக்கம் : ஒருத்தன் நல்லவனா என்று கண்டு பிடிக்க அவரால் துன்பப்படுபவரின் யோக்கிதையை வைத்தே முடிவு செய்ய வேண்டும் . பரத்தையை அவள் விருப்பம் இல்லாமல்
    உறவாடினால் குற்றமாகாது ஏனென்றால் அவள் பரத்தை

    • வினவு போன்றவர்கள் எல்லாம் போலித்தனமானவர்கள், அவர்களின் நோக்கம் இது போன்ற விஷயங்களை வைத்து பிரச்சனைகளை தூண்ட வேண்டும் என்பதே.

    • RAMAYANA VIMARSANATHAI PURINTHUKOLLA RAMANUKKU VAYASUM PAKKUVAMUM PATTHATHU:RAMAN RAMAYANA VIMARSANATHAI PURINTHUKOLLA PERIYARIN “RAMAYANA PAATHIRANGAL” NOOLAI PORUMAYAAGA PADIKKAVENDUM.AANAAL IVAR PUTHAGAM PADIPPADHU ADHUVUM AAZHAMAAGA PADIKKUM VAZHAKKAM ILLAIYE YENNA SEYYA:IPPADITHAAN ULARUVAAR

  10. இந்துக்களை மட்டும் தான் எதிர்ப்பானுக… இராமனை எதிர்ப்பதை விட இராவணனுக்கு கோவில் கட்டி வழிபாடு செய்யலாமே…. குழப்பத்தை உண்டு பண்ணனும். இதான் அவர்களின் நோக்கம். இஸ்லாமியத்திலும் கிறிஸ்தவத்தில் எத்தனையோ மூட நம்பிக்கைகள் இருக்கின்றன. அதை பற்றி ஏன் வாய் திறக்க மாட்டேன் என்கிறீர்கள்? தாலியை அறுகிண்றீர்கள். திராவிட தலைவன் கருணாநிதி குடும்ப பெண்களின் தாள்களை அகற்றியதுண்டா? ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்ட இயேசு கிறிஸ்து போதித்தார். இன்று உலகில் பலநாடுகளில் குழப்பத்துக்கு காரணமே இந்த கிறிஸ்தவ நாடுகள். _______பைபிள் ஆபாசம் நிறைந்தது அதனை கொளுத்துவோம் என்று சொல்ல இந்த திராவிட _______ வக்கிருக்குகிறதா? ____ திராவிடர்களுக்கு எப்பவுமே இரண்டு முகங்கள் இருக்கும். ஒன்று இந்துக்களை எதிர்ப்பது… மாற்றத்து அந்நிய மதங்களை ஆதரிப்பது… இதான் இவர்களின் கபட வேடம்

    • Srikumaran,

      மற்ற மதங்களை ஆதரிக்கிறோமா? அது எங்கே எப்போது நடந்தது?

      பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினால், அந்த மக்கள் சார்ந்த மதத்தினை ஆதரிப்பதாக புரட்டிப் பேசுவதேன்?

      எல்லா மக்களையும் ஏதாவது ஒரு மதத்தில் இருத்தி வைத்திருக்கிறோம் என்பதால்தானே, இப்படித் திமிராகப் பேச முடிகிறது.

  11. ஏய்யா பலகாலமா இந்த கிறுக்கு கேள்வியையே கேக்கிறீங்களே..தி க வா இருக்கட்டும் தமிழ்நாட்டிலே இருக்கிற கம்னியூஸ்ட்டா இருக்கட்டும்.இவங்களெல்லாம் யார்? முஸ்லிகளா? ராமன் எரிப்பு என்று சொல்பவன் அப்துல்ரகீமாகவோ அப்துல்ரக்மானாகவோ இருந்தால் அவனிடம் போய் முட்டலாம்.ராமனை எரிப்பது பிள்ளையாரை உடைப்பது என்பதெல்லாம் செய்வது யார்?இந்து மதத்தில் பிறந்தவந்தானே இதை சொல்பவர் செய்பவர்களுடைய தாய் மார்களோ தமக்கையர்களோ மாமன் களோ மச்சான் களோ அதை வணங்குபவர்களாகவே இருப்பார்கள். உங்கள் தெய்வங்களின் தாத்பரியமும் அதன் சடங்குகளும் அதன் பின்னணியும் அடர்த்தியான தத்துவங்களை உள்ளடக்கியதென்றால் அவர்களிடம் போய் விளக்குங்கள்.அவர்களை மாற்றுங்கள்.அதை விட்டுவிட்டு உங்கள் மதத்திலேயே பிறந்த ஒருவன் அதை விமர்சித்தால் நேரே இங்கு வந்து ஏன் எங்களிடம் முட்டுகிறீர்கள். எங்களில் யாராவது என்றாவது உங்கள் கடவுளர்களை ஏசியோ பேசியோ கேவலப்படுத்தியோ இருக்கிறோமா?

    • கண்டிப்பா பாய் நீங்கள் சொல்வதும் உண்மை தான் . தி க வினர் இந்து மதத்தயும் இந்து கடவுள்களையும் மட்டுமே கேவலப்படுத்த முடியும் ஏன் என்றால் அவர்களுக்கு நன்றாக தெரியும் பிற மதங்களை விமர்சித்தால் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்ட வேண்டியது வரும்.

      • ஜெயந்த் இது கொஞசமும் அர்தமற்ற பேச்சு.திக வினர் என்போர் இந்து மதத்தில் பிறந்தவர்கள்தான்.அவர்களுடைய சொந்த மதத்தைத்தான் அவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.அவர்களின் விமர்சனத்திற்க்கு உங்களிடம் பதிலிருந்தால் வரிக்கு வரி விளக்கம் கொடுங்கள்.அதை விட்டு இஸ்லாத்தை கேவலப்படுத்தினியா கிறிஸ்த்துவத்தை கேவலப்படுத்தினியா என்பது அவர்களின் விமர்சனத்தை ஒப்புக்கொள்வதாகத்தான் ஆகும்.கடவுள் நம்பிக்கையைப்பற்றி பெரியாரின் கொள்கை அவரின் கருத்து அவரின் பரப்புரை இந்துக்களுக்கு மட்டும் உள்ளதா? முஸ்லிகளாகிய நாங்கள் உங்களை விட பன்மடங்கு அதிகமான கடவுள் நம்பிக்கையார்ளாச்சே. நீங்களாவது நாத்திகமும் இந்து மதத்தின் ஒரு அங்கம் என்று புது விளக்கம் கொடுப்பீர்கள்.நாங்கள் எங்களின் கடவுள் நம்பிக்கையை ஒரு போதும் விட்டுக்கொடுக்க மாட்டோமே.என்னை பெற்ற தாயாய் இருந்தாலும் அவளை மதித்தல் அவளுக்கு கீழ்படிதல் வேறு. ஆனால் வணங்குதல் என்பது வேறு என்று தாயை கூட வணங்காது கடவுளை மட்டும் வணங்குவதில் மிக உறுதி காட்டும் எங்களுக்கு பெரியாரின் கடவுள் மறுப்பும் அவரின் கடவுள் தூற்றும் வேதனை ஏற்படுத்தாதா? நாங்கள் அப்படி பார்க்கவில்லை.அவருக்கு இருந்தது சமூக அக்கறை.சமூகத்தின் மேல் இருந்த பரிவு.கடவுளின் பெயரால் பக்தியின் பெயரால் மக்கள் மக்கள் நசுக்ககப்படும்பொழுது மனித சிந்தனை அழுகிப்போகும்பொழுது அதை தாங்காது அவர் அரற்றினார். “கடவுளும் மதமும் தானடா இதற்க்கு காரணம் அதை அழிக்கிறேனடா” என்று கடவுளை தூற்றினார்.எங்களுக்கு அவரின் கடவுள் விமர்சனம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.”கடவுளின் பெயரால் நடக்கிற மெளட்டீகங்களுக்கு கடவுளையே இந்த மனிதர் இல்லை எஙிறாரே “என்ற பரிதாபம்தான் அவரிடம் ஏற்ப்பட்டது.இன்றும் கூட திகவினர் 786 என்பது அல்லாவின் போன் நம்பரா என்று கிண்டல் பண்ணி கூட்டம் போட்டார்கள்.அதற்க்கான விளக்கம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டதே தவிர அவர்கள் எங்களை நக்கல் பண்ணியதற்க்காக நாங்கள் இந்து மதத்தை நக்கல் பண்ணி கூட்டம் நடத்தவில்லை. கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டர் போடும் அளவிற்க்கு நாங்கள் இருக்க கூடியவர்களாக இருந்தால் அவர்கள் உங்க்ளோடு சேர்ந்து எங்களை இல்லாமலாக்குவார்களே அன்றி எங்களுக்கு அஞ்சி நடுங்கி எங்களை விமர்சிக்காமல் இருப்பார்களோ!? ஒன்றை சொவதற்க்கு விவஸ்த்தை வேண்டாம். எங்களுக்கு அஞ்சி நடுங்க நாங்களென்ன ராணுவத்தையா வைத்திருக்கிறோம்.அல்லது காவல் துறை எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதா ஆட்சி அதிகாரம் எங்களிடம் உள்ளதா? திமுக அதிமுக வையாவது ஓட்டுக்காக வாலாட்டுவார்கள் ஆகவே முஸ்லிகளை தாஜா செய்கிறார்கள் என்று ஒரு பேச்சிக்ககாக சொல்லலாம்.அதுவும் பேச்சிக்காகத்தான் இதுவரை மொத்தமாக ஓட்டுவாங்கி கொழுத்த கருணாநிதியே எங்களுக்காக ஒரு துரும்பையும் எடுத்து போட்டதில்லை.எங்கள் கையை கொண்டே நாங்கள் கர்ணம் பழ்கினோம்.இதில் திக காரர்கள் எங்களுக்காக அஞ்சிகிறார்கள் கெஞசிகிறார்கள் என்றால் கொஞ்சமாவது யோசனை வேண்டாமா?

        • பாய் நான் உங்களுடுன் விவாதித்து கொண்டியிருந்தாள் கடைசியில் எனக்குதான் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்ட வேண்டியது வரும். வாலைக்கும் ஸலாம் .

          • ஒரு சின்ன திருத்தம் ஜெயந்த்.நீங்கள் வளமோடும் மன அமைதியோடும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.எல்லோரும் ஒருநாள் மாண்டுதான் போக வேண்டும்.நாம் மரணித்தால் அஞ்சலி போஸ்டர் அடிக்க வேண்டும் என்பதில்லை.நம் வாழ்வும் நம்மால் சமூகம் பெற்ற பயன் களும், நம்மை சுற்றியுள்ள கண்களிலிருந்து மெய்யான கண்ணீரை வரவழைக்குமானால் அதுதான் உண்மையான அஞசலி.ஆனால் கண்டிப்பாய் அஞசலி போஸ்டர் அடித்து ஒட்டததான் வேண்டும்.எதற்க்கு என்றால் இப்போது நீங்கள் சார்ந்திருக்கிற காவி சிந்தனைகளுக்கு. மக்களை கூறு போட்டு பிரித்து ஒருவர் மீது ஒருவருக்கு வெறுப்பை ஏற்றி அவர்களுக்குள் விரோதத்தையும் குரோதத்தையும் உண்டாக்க துடிக்கும் அந்த காவி சிந்தனைகளுக்கு அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டத்தான் வேண்டும்.அது வெறும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அல்ல. ஆனந்த கண்ணீர் அஞசலி போஸ்டர்.கண்ணிப்பாக ஒட்டுவீர்கள்.உங்கள் கைகளால் ஒட்டுவீர்கள்.நாங்கள் ஆனந்த கண்ணீரோடு அதை பார்த்து பூரித்துக்கொண்டிருப்போம்.

  12. கொஞச காலத்திற்க்கு முன்பு சென்னையின் மிக முக்கிய பகுதியான தம்புசெட்டித்தெருவில ஒரு பொதுக்கூட்டம்.திக காரர்களுடையது.”கற்பில் சிறந்தவள் சீதையா மாதவியா”என்று பேனர் கட்டியிருக்கிறது.ஒருவர் ராமாயணத்தை வைத்து கடும் விமர்சனத்தோடு பேசிக்கொண்டிருக்கிறார்.அந்த மேடையிலும் எந்த முஸ்லிமும் இல்லை.கேட் கும் கூட்டத்திலும் முஸ்லிம்கள் தென்படவில்லை.நான் வேலையாக அதை கடந்து சென்று கொண்டிருக்கிறேன்.அதே இடத்தில் கொஞசநாள் கடந்து இந்துமுன்னணி பன்னாடைகள் அதற்க்கு பதிலடி கொடுக்க ஒரு பொதுக்கூட்டம் போடுகிறார்கள்.தலைப்பு “கற்பில் சிறந்தவள் கன்னிமேரியா கதீஜாநாயகியா”? இவர்கள் அறிவை என்ன சொல்ல? ராமாயாணத்தை சீதையை கேவலப்படுத்தியது யார்?முஸ்லிமா? எவன் சொல்கிறானோ அவனுக்கு பதிலடி கொடு.ஏன் இங்கு வந்து முட்டுகிறாய்.இவர்கள் காட்டுகிற எதிர்வினையிலேயே இவர்களிடம் பதில் இல்லை என்பதையும் இவர்கள் தோற்றுவிட்டார்கள் என்பதை அவ்ர்களே ஒத்துக்கொண்டார்கள் என்பதையும் காட்டவில்லையா?இதுதான் உங்கள் லட்சணம்.

    • வினவு மற்றும் திகவின் நோக்கமும் அது தான். இப்படி ஹிந்துக்களை சீண்டினால் பிறகு அவர்கள் இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவர்களை பற்றி பேசுவார்கள் அதன் மூலம் கலவரத்தை தூண்டலாம் என்பது தான் இவர்களின் சதி திட்டம்… இந்த நாடு நாசமாக வேண்டும் என்று இரவும் பகலும் வினவு திக போன்ற தேசவிரோதிகள் பெரும் முயற்சி செய்கிறார்கள். ஹிந்து மக்களின் சகிப்புத்தன்மை தான் இதுவரையில் இந்த மாதிரியான சதி திட்டங்கள் வெற்றி பெறாமல் இருக்கிறது.

      • சரிதான்…

        சாதி இந்துக்களை சீண்டினால், தங்களின் சொந்த மதத்தினை ஆராய முடியாதுதான். அதைக் கற்றுக்கொள்ளும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டுத்தானே இருந்தன. முதலில் அவர்களுக்கு அதைக் கற்றுக்கொடுங்கள். அதன்பிறகு பாருங்கள். உங்கள் முகத்தில் அவர்களே காறி உமிழும் கலவரங்கள் நிச்சயம் நடக்கும். வினவு போன்றவர்களின் தூண்டுதலுக்கு எந்த அவசியமும் இருக்காது.

      • நான் சொல்லலை இதுதான் அந்த நோயின் அறிகுறி.அறிவுக்கு சம்மந்தமே இல்லாமல் பேசுவார்கள்.நோய வந்துவிட்டால் ரொம்ப கஷ்டம்தான்.இது சிந்தனையை தாக்குகிற நோய்.இந்த நோய உருவான காலத்திலேயே பெரியார் இதற்க்கான தடுப்பு மருந்தை கண்டறிந்து தமிழ்ர்களுக்கு ஊட்டியதால் பெரும்பாலும் தமிழ்ர்கள் தப்பித்தார்கள். மணிகண்டன் போன்ற வெகு சிலர் பாவம் பாதிக்கப்பட்டு விட்டார்கள்.இதற்க்கு பெரியாருக்கு பின் வந்த அரசியலாளர்கள் தங்களின் அரசிய்ல் நலனில் மட்டும் குறிய்யாயிருந்து சற்று அச்ட்டையாக இருந்ததால் வந்த வினை மணிகண்டன் போன்ற அப்பாவிகள் நோயால் பீடிக்கப்பட்டுவிட்டார்கள்.

Leave a Reply to paaval பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க