privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திசென்னையில் இராமன் எரிப்பு வெற்றி - தோழர்கள் சிறை வைப்பு !

சென்னையில் இராமன் எரிப்பு வெற்றி – தோழர்கள் சிறை வைப்பு !

-

burning ram effigy (2)ட நாட்டில் ஆண்டுதோறும் திராவிடர் மற்றும் இதர பழங்குடி மக்களை இழிவுபடுத்தும் நோக்கில், அசுர குலத்தைச் சேர்ந்த இராவணனின் உருவத்தை ராம லீலா என்ற பெயரில் எரித்து வருகின்றனர். பார்ப்பனியத்தின் ஒடுக்குமுறையை குறிக்கும் இதை எதிர்க்கும் விதமாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் “இராவண லீலா” நடத்தி ராமன் உருவ பொம்மையை மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி முன்பு 12.10.2016 அன்று மாலை 5.05 – க்கு எரிப்போம் என அறிவித்திருந்தனர்.

தபெதிக

இந்த போராட்டம் அறிவித்த நாள் முதல் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் காலிகள் மற்றும் இந்துமுன்னணி, பா.ஜ.க, மற்றும் இன்னும் இப் பரிவாரத்தின் துக்கடா கும்பல் பலரும் த.பெ.தி.க தோழர்களை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டலோடு தொலைபேசியில் பேசி வந்தனர். அவர்களிடம் சொன்ன நாளில் போராட்டம் நடக்கும் என த.பெ.தி.க தொழர்கள் பதில் சொல்லியுள்ளனர். அதைத் தொடர்ந்து 11.10.2016 அன்று நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது “இன்று காலைமுதலே நாங்கள் இப்போராட்டத்திற்கு தயாரிப்புகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டோம், சுவரொட்டிகள் சென்னை முழுக்க குறிப்பாக போராட்டம் நடைபெற இருக்கும் பேருந்து வழித்தடம் முழுக்க ஒட்டியுள்ளோம் என்ன நடந்தாலும் இப் போராட்டத்தை நடத்துவோம்” என தோழர் குமரன், சென்னை மாவட்ட செயலர் கூறினார்.

இந்து முன்னணி காலிகள்
வெறிக்கூச்சலிட்டுச் செல்லும் வானரப்படை

ஒருபுறம் மிரட்டி பார்த்து அது பலனிளிக்கவில்லை என்பதால் வானரக்கூட்டம் காவல் ஆணையரிடம் மனு கொடுத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் 12.10.2016 அன்று மாலை போராட்டம் நடத்தவிருந்த சமஸ்கிருத கல்லூரி முன்பு தடிக்கொம்புகளில் கொடிகளைக் கட்டிவைத்துக் கொண்டு குண்டர் படையுடன் நின்றிருந்தனர். நாலுபேர் நின்றாலே என்ன கூட்டம் என மிரட்டும் போலீசு இவர்களுடன் சமரசம் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் கலைவதாக இல்லை என்பதாலும் கோவையில் அம்பலப்பட்டது போல் சந்தி சிரிக்கக் கூடாது என்றும் வேறு வழியின்றி வானரக் குண்டர்களை பேலீசு வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இங்கு கோவை போல பெருங்கூட்டம் இல்லாததால் வாலைச் சுருட்டிக் கொண்டு வெறிக்கூச்சலிட்டவாறு சென்றுவிட்டது, வானரப்படை.

மறுபுறம் த.பெ.தி.க – விடம் நாங்களே உங்களுக்கு போராட இடம் ஒதுக்கித்தருகிறோம், ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு சென்றுவிடுங்கள் என நைச்சியமாக காய் நகற்த்தியது போலீசு. உருவப் பொம்மை எரித்தே தீருவோம் என அவர்கள் சொன்னதால் சரி தீ வைத்ததும் எங்களிடம் கொடுங்கள், நாங்கள் அணைத்து விடுகிறோம் எனப் பேசியுள்ளனர். இருப்பினும் போலிசின் வாக்குறுதியை மட்டும் தோழர்கள் நம்பிவிடவில்லை. அதன் பின்னர் போராட்டக்காரர்கள் அனைவரும் ராயப்பேட்டை அண்ணா சிலையருகில் மாலை 4.45 மணி வாக்கில் ஒன்றுகூடி புறப்படத் தயார் ஆனதும் அவர்கள் அனைவரையும் தடுப்பரண் அமைத்து நிறுத்திவிட்டது போலீசு.

சென்னை மாவட்ட செயலர் திருக்குமரன்
தோழர் .திருக்குமரன், சென்னை மாவட்ட செயலர், த.பெ.தி.க.

அந்த இடத்திலேயே சென்னை மாவட்ட செயலர் தோழர் திருக்குமரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. அதனால் பல த.பெ.தி.க –வினர் மற்றும் இப்போராட்டத்திற்கு ஆதரவளிக்க வந்த மற்ற கட்சியினர் சமஸ்கிருத கல்லூரி அருகே காத்திருந்து திரும்பச் சென்றனர். ஆனால் எப்படியும் இராமனை எரிப்பது என உறுதியுடன் நின்ற தோழர்கள், அண்ணா சிலை அமைந்துள்ள நான்கு வழி சந்திப்பில் வெவ்வேறு வழியாக வந்து இராமன் உருவ பொம்மைகளை வெற்றிகரமாக எரித்துள்ளனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள், குழந்தைகள் என 50 – பேரையும் கைது செய்து இராயப்பேட்டை நல்வாழ்வு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது போலீசு. இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மக்கள் கலை இலக்கியக் கழகம் தோழர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவிக்க முயன்றனர். அவர்களை மண்டபத்திற்க்குள் செல்லவிடாமல் தடுத்து அனுப்பியது போலீசு. மேலும் உருவ பொம்மை எரித்த தோழர்கள் அனைவரையும் கட்டாயம் சிறையில் அடைப்போம் என கொக்கரித்து வந்தது போலீசு. அதன்படி 11 தோழர்கள் மீது வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராமன் படத்தை எரிப்பது என்று இந்தியாவில் எங்கேயாவது கற்பனை செய்து பார்க்க முடியுமா? தமிழகத்தின் இது ஏன் முடிந்தது என்றால் இது பார்ப்பனிய எதிர்ப்பு மரபில் உருவான வரலாறு இருக்கிறது. தந்தை பெரியார் அந்த மரபை வரித்துக் கொண்டு மக்களிடையே பரப்பிய மண் இது. அந்த வகையில் பார்ப்பன இந்துமதவெறியர்களுக்கு தமிழகம் ஒரு கல்லறையாக இருக்கும் என்பது உறுதி.

த.பெ.தி.க ஆர்ப்பாட்டம்
த.பெ.தி.க ஆர்ப்பாட்டம்
burning ram effigy (1)
முச்சந்தியில் கொளுத்தப்படுகிறான், ராமன்!
பூட்ஸ் காலில் மிதிபடும் ராமன்
போலீசிஸ் பூட்ஸ் காலில் மிதிபடும் ராமன்
பூட்ஸ் காலில் மிதிபடும் ராமன்
தமிழகத்தின் பார்ப்பனிய எதிர்ப்பு தீயில் எரிக்கப்படும்  ராமன்
மகஇக தோழர்கள்
மண்டபத்திற்கு வெளியே ம.க.இ.க தோழர்கள்!

– வினவு செய்தியாளர்
படங்கள்: த.பெ.தி.க, சென்னை
.

  1. பகுத்தறிவின் மகத்தான் பரிணாமம், வீசி எறியபீபட்ட துணியாலும், வீணான பொருட்களாலும் செய்த பொம்மையை ராமன் என்று ஏற்கும் பகுத்தறிவு ஈ.வெ.ராவின் பக்தர்களுக்கு வந்திருக்கிறது!

    • தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்ற நம்பிக்கைக்கும் மேலாக ராமனின் சிக்ஸ்பேக் அல்ட்ரா மாடர்ன் படத்தை எரித்த பிறகும் ஒரு இந்து தெய்வத்தை எரித்தாயா, பொங்கி எழுவேன் என்று ஆர்.எஸ்.எஸ் கூட்டம் எழாமல், பயந்து, பணிந்து, தாழ்ந்து, ஒதுங்கி, ஒண்டி, வாய் மூடி இருப்பதை சாதித்ததில் இருக்கிறது பெரியாரின் கம்பீரம்!

      • Sakkadaiyil kallerindhal seru nammel padum endru othinginal Seru mel bayandhu alla, athan natram ottivida koodathu enbatharkaga. Periyar silayai sutri 10 kavalargal pathukappathil therigiradhu ungal 6bag periyarin Gambeeram

        • சிலை வழிபாட்டை எதிர்த்து பெரியாருக்கே சிலை வைக்கும் பகுத்தறிவாளிகள் , திராவிட சிகாமணிகள்

          • ஐயா சூரியன் அவர்களே நீர் கண்டிப்பாக ஒரு கிறிஸ்துவராக தான் இருக்கு வேண்டும் என்பது என் ஊகை. மண்ணிக்வும் மதம் மாறிய ஒரு கிரிஸ்துவர். ஏன் வேளாங்கண்ணி கோவிலுக்கு செல்பவர்கள் எல்லாம் விபத்தில் மரணமடையவில்லையா ? அப்படி என்றால் அந்த வேளாங்கண்ணி அன்னைக்கு இவர்களை காப்பாற்றும் சக்தி இல்லையா என்று நாங்களும் கேள்வி கேட்குலாம் ?

            • Mr Jayanth,I have asked Mr Seppusattai as to why big locks are there in temple gates if the Gods are powerful?Reply if you can.I am not here to answer your assumptions.It is a old trick of fundamentalists to brand the person who is asking inconvenient questions.For your information-I am a Hindu rationalist.Rationalists were recognized as part of Hindu from time immemorial.

              • ஐயா சூரியன் அவர்களே நான் உங்களிடம் கேட்க்கும்கேள்வி எல்லா கடவுளுக்கும் சக்தி உண்ட என்றால் ஏன் அவர்களை வழிபடும் பக்தர்களின் வாழ்க்கை துன்பத்தில் உள்ளது ? இது எல்லா மத கடவுளுக்கும் பொருந்தும் அல்லவா ?ஏன் நீர் குறிப்பாக இந்து கோவிலகளோடு மட்டும் தொடர்புபடுத்துகிறீர்கள ?

                • ஜெயந்த்….

                  இந்தியா ஒரு ஹிந்து நாடு என்பது தானே உங்கள் நிலைப்பாடு….பிறகு ஏன் மற்ற மதங்களை விமர்சிக்க வேண்டும்….இந்தியாவில் பெரும்பான்மை மதம் இந்து மதம், மேலும் இந்துக்கள் மட்டுமே இங்கு வாழத் தகுதியுள்ளவர்கள் என்று உங்கள் வகையறாக்கள் கூறி வரும்போது ஏன் மற்ற மதங்களைப் பற்றி பேச வேண்டும்?

                  • \\இந்தியா ஒரு ஹிந்து நாடு என்பது தானே உங்கள் நிலைப்பாடு…//
                    நான் எப்பப்பா அப்படி சொன்னேன். கற்பனையில் ஏதோ உளற வேண்டாம்.

                    \\பிறகு ஏன் மற்ற மதங்களை விமர்சிக்க வேண்டும்….//
                    விமர்சித்தால் என்ன நடக்கும் என்று நீங்கள் மட்டும் அல்ல எல்லோரும் நன்கு அறிவார்கள். இது பயத்தின் வெளிப்பாடு.

                    • MUDHALIL 87% MAKKALIN MUDHUGIN MELULLA AZHUKKAI AGATRUVOM.APPURAM 13% MAKKALAI PATRI PESALAAM.MUDHALIL AVANAI NIRUTTHA SOLLU,APPURAM NAAN NIRUTTHUGIREN YENBATHU INGU YEDUPADAATHU.

                    • சூரியரே ஏன் 13 சதவீத மக்களின் நம்பிக்கையை விமர்சித்தால் உங்களுக்கு ஏதாவது வருத்தமா ? இதில் கூட சதவீத அடிப்படையில்தானா ?

                  • இதே விமர்சனத்தை மற்ற மதங்களின் மீது வைத்தால் அதற்கான விடை கிடைத்துவிடும்

  2. ராமாயணம் ஒரு கற்பனை
    யார் சொன்னா ?
    பெரியார் சொன்னார்
    ராவணன் தமிழன்
    யார் சொன்னா
    பெரியாரே சொன்னார்

    • ஜெயந்து, ராமாயணம் கற்பனையானாலும் அதில் வரும் ஹீரோ ராமன் பார்ப்பன – ஷத்திரியர்களின் கொடுங்கோன்மைக்கு பிரதிநிதியாகவும், வில்லன் இராணவன் சூத்திர- பஞ்சம – பழங்குடி மக்களின் பிரதிநிதியாகவும் இருக்கிறான். ஆகவே கதை பொய் – கதையின் சமூகக் களம் உண்மை. ஆகவே நீங்கள் பொய்யின் பக்கம், நாங்கள் உண்மையின் பக்கம்.

      • கற்பனை என்ற முடிவுக்கு வந்த பிறகு யார் ஹீரோவா இருந்தா என்ன வில்லனா இருந்தா என்ன ?

        • உண்மை என்று நம்பிக் கொண்டு ஏமாறும் போது, கற்பனை என்று சொன்னதில் சரி தவறு ஆராய்ச்சி செய்தால் உங்கள் ஏமாற்றம் என்னாவது?

          • கற்பனையெனும்போது அதில் சரி தவறு ஆராய்ச்சி ஏன் ? கற்பனை கதாபாத்திரங்கல்லக்கு ஏன் இவ்வளுவு முக்கியத்தவும் கொடுக்கு வேண்டும்?

        • இராமாயணம் உண்மை தான் ஜெயந்த்! ஆனால் பாருங்க வால்மீகி இராமாயணத்தை மட்டும் பாருங்க! அது தான் உண்மையான ராமாயணம். ராமன் மாட்டுக்கறி சாப்பிட்டதில் இருந்து எல்லா உண்மைகளையும் அதில் இருந்து வெளிக்கொண்டுவரலாம். “பாய் பீப் பிரியாணி ஒரு பிளேட்!”

            • நன்றி சொன்னா மட்டும் எப்படி ஜெயந்த் ? வால்மீகி ராமாயணத்தில் ராமன் மாட்டு மாமிசம் சாப்பிடுவது பற்றி மது அருந்துவது பற்றிய செய்திகள் எல்லாம் அழகிய விவரணைகளுடன் இருக்கே ? அப்ப ராமனை நாமும் பின் தொடரலாமா?

                • ஜெயந்த் என்ன சொல்லவரீங்க? ராமனைப் போலவே நாமும் மது குடித்துகொண்டே மாமிசம் சாபிடலாம் என்று தானே? இப்படித் தானே ராமனை நாம் தொடரவேண்டும் ?

                    • ஜெயந்த் , தொளிவாகப் பேசுங்க பாஸ்!
                      அப்படி எனில் ராமனை பின்தொடரும் நீங்கள் குடிகாரராகவும் , விவசாயமாடுகளை அடித்து உண்ணும் பொருளாதார அறிவற்றவராகவும், ராமனைப் போலவே பல் வேறு பெண்களை புணரும் பெண் தாசனாகவும் இருக்கீன்றிர்களா ?
                      செத்தமாடுகளின் தொலை உரிப்பவருக்கே இந்த ஹிந்துமதவாதிகளால் நாடு முழுவதும் மரணம் தான் பரிசளிக்கப்படுகிறது என்ற நிலையில் விவசாயத்துக்கு உதவும் ஆற்றல் உடைய மாடுகளை வெட்டித் தின்ற ராமனுக்கு என்ன பரிசு கொடுக்கப்போகிறிகள் என்பதனையும் தெளிவா பேசுங்க பாஸ்…. மேலும் அடிமாடுகளை கூட தின்னக்கூடாது என்று சட்டம் போடும் பிஜேபி யின் மாநில அரசுகளை பற்றியும் கொஞ்சம் பேசுங்க சாமி…அடிமாடுகளை தின்பதற்கே தடை என்னும் நிலையில் ராமன் விவசாய மாடுகளை தின்றது எப்படி சரியாகும் ?

          • வால்மீகி ராமாயணத்தை எழுதிய போது பல ஆயிரம் வருடங்களுக்கு பிறகு ராமாயணத்தை வைத்து இப்படி கேடுகெட்ட அரசியல் செய்வார்கள் என்று கனவிலும் நினைத்து பார்த்து இருக்க மாட்டார், ராமாயணத்தின் முக்கிய நோக்கமே தனிமனித ஒழுக்கம் தான். ஆனால் அதை தவிர மற்ற அனைத்து விஷயங்களையும் வைத்து கொண்டு விவாதம் செய்கிறார்கள்.

            ராமர் மாட்டு கரி சாப்பிட்டாரா இல்லையா என்பது எல்லாம் முக்கியமா ? வினவு போன்ற வக்கர மனம் கொண்டவர்கள் வேண்டும் என்றே ஒரு மாட்டை கொன்று உணவாக்கி அதில் ஒரு அல்ப அடைகிறார்கள் அந்த ஒரு விஷயத்திற்கு தான் ராமர் மாட்டு கரி சாப்பிட்டாரா இல்லையா என்ற விஷயம் பயன்படுகிறது.

            என் பார்வையில் ராமாயணம் என்பது ஆங்கிலேயர்களுக்கு முன் இந்தியா என்ற தேசமே இல்லை என்று சொல்பவர்களுக்கு எதிரான ஒரு முக்கிய ஆவணமாகவே பார்க்கிறேன். ராமனின் ஆட்சியை இந்திய நாட்டின் (தமிழகம் உட்பட) அனைத்து பகுதிகளும் ஏற்று கொண்டது என்பதை ஒரு முக்கிய ஆவணமாக நான் பார்க்கிறேன்.

            • As already pointed out by Nandini,Raman was not depicted as “EKAPATNIVIRADHAN” by Vanmiki.Raman has committed wanton murders of Vaali and Samboogan.Raman has driven his pregnant wife to forest without any valid reasons.He uttered very harsh words to his wife,mostly insulting her and suspected her chastity,after defeating Ravanan.The same Raman,cried and described his intimate moments and beautiful body parts of Sita to Lakshnmanan when Sita was kidnapped by Ravanan.Poor Lakshmanan left Urmila in Ayodhya itself and was alone without his wife for 14 years.He was described as a sincere person safeguarding Raman and Sita without proper sleep at nights.He had to hear the descriptions of intimate moments of Raman with Sita when Raman was crying. But,the same Raman told Sita that he fought with Ravanan and won the war just for safeguarding his Kshatriya honour and that he has not fought the war for the sake of Sita.Then,where is the so called “THANI MANITHA OZHUKKAM”?Moreover,Ramayanam is just an imaginary epic and not history.

            • மணிகண்டன் எவ்வளவுத்தான் நீட்டி அகட்டி முழங்கினாலும் ஆட்ரா ராமா ஆட்ரா ராமா என்ற கதையாகத்தான் இருக்கு உங்க கத ! வினவுகாரர் மாட்டுக்கறி தின்றது இருகட்டும். ராமர் மாட்டை கொன்று நெய்யில் சமைத்து மாட்டுக்கறி உண்டார்…. மது அருந்தினார்… பெண்களுடன் லீலைகள் புரிந்தார்… இதுவெல்ல்லாம் வால்மீகி ராமாயணத்தில் இருக்குங்க… அப்ப இது வெல்லாம் தான் நீங்க சுட்டும் த னி ம னி த ஒழுக்கமா ?

            • எது கேடுகெட்ட அரசியல் என்று பார்கலாமா மணி? ராமனின் பெயரால் மக்களின் உணர்வுகளை தூண்டி ஓட்டு வாங்கிய பின் அதே மக்களை பொருளாதார ரீதியாக தன் கொள்கைகளால் வதைக்கும் பிஜேபி அரசின் மனநிலை தான் கேடுகெட்ட அரசியல். குடிகாரனாகவும் , விவசாயத்துக்கு தேவையான மாடுகளை வெட்டி நெய்யில் வதக்கி உண்டவனாகவும் (விவசாயத்துக்கு பயன் படாத அடிமாடுகளை உன்பதனை பற்றி நான் தவறாக பேசவில்லை) , பல்வேறு பெண்களிடம் லீலைகள் புரிந்தவனாகவும் இருந்த ராமனை முதன்மைப் படுத்தும் உங்கள் அரசியல் தானே நாறிப்போன கேடுகெட்ட அரசியல்.! மேலும் தனி மனித ஒழுக்கத்துக்கு வேறு ராமனை கடைபிடிக்கவேண்டும் என்று அறிவுரை கூருகிறிகள் ! குடிகாரன், விவசாய உற்பத்திக்கு உதவும் மாடுகளை கொல்வது , பெண்களுடன் லீலைகள் இவைகள் தானே நீங்கள் ராமனிடம் காணும் தனி மனித ஒழுக்கங்கள்?

              • நான் முன்பே சொன்னது போல் மனவக்கரம் கொண்ட உங்களை போன்றவர்கள் திட்டமிட்டு ராமரின் மீது அவதூறு பரப்பி கொண்டு இருக்கிறீர்கள். ராமன் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தவன் அதற்காக தான் ராமாயணம் என்ற காவியமே படைக்கப்பட்டது. ஆனால் உங்களை போன்ற மனவக்கரம் கொண்டவர்கள் ராமர் பல பெண்களிடம் தொடர்பு வைத்து இருந்தார் என்று அவதூறு பரப்பி character assassination செய்ய பார்க்கிறீர்கள், இந்த நாட்டின் காவியமான ராமாயணத்தை இழிவு படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு செயல்படுகிறீர்கள் இது புரியாமல் இல்லை. நிச்சயம் உங்களை போன்ற ஆட்கள் செய்வது தவறு. சம்பூகன் உங்களை போன்ற வக்கரம் கொண்ட ஆட்களால் கொண்டு வரப்பட்ட இடை செருகல் அதில் உண்மையில்லை.

                • மணிகண்டன் ,
                  கம்ப ராமாயணம் படிச்சிட்டு ஒரேயடியாக குதிக்காதிங்க சாமி! வால்மிகியின் ராமாயணம் படிங்க சாமி! ராமனின் குடி, பெண் லீலைகள் , மாமிச உணவு பற்றிய உண்மைகள் வெளிப்படும் .

                  ராம லீலைகளை பற்றி விவாதிக்க வழியில்லாமல் வக்கிரம் அப்படி இப்படி என்று பெனாத்துகிறிர்கள். உங்களின் “வக்கிர” வார்த்தைகளை உதறித்தள்ளிட்டு நான் தயார்.நீங்க?
                  நன்றி.

                • வால்மீகி இராமாயணம் கூறும் உண்மை பாகம் 1
                  மணிகண்டன் …, எதுங்க வக்கிரம்…. உண்மையைச் சொன்னால் அதனை ஏற்காமல் என்னை நீங்கள் வசைப்பாடுவது தானே உண்மையில் வக்கிரம். !
                  ராமன் ஏக பத்தினி விரதனா ?
                  இந்தக்கேள்விக்கு வால்மீகி என்ன பதில் அளிக்கிறார் என்று பார்கலாமா?
                  இராமன் ‘ஏக பத்தினி விரதன்’ என்பது ஒரு சிறப்பாக கூறப்படுகின்றது. இத்தகையதொரு அபிப்ராயம் எவ்வாறு பரவியது என்பது புரிந்துகொள்ள முடியாததாகவே உள்ளது. வால்மீகியே கூட தன் இராமாயணத்தில் இராமன் அநேக மனைவியரை மணந்து கொண்டதை குறிப்பிடுகிறார் (அயோத்தியா காண்டம், சருக்கம் 8, சுலோகம் 12). மனைவியர் மட்டுமல்ல வைப்பாட்டியர் பலரையும் இராமன் வைத்திருந்தான்.
                  நன்றி திரு அம்பேத்கார்.

                • மணிகண்டன்….,
                  குடிகாரன், ஸ்த்ரீலோலன் இராமன் : டாக்டர் அம்பேத்கர்
                  வால்மீகி இராமாயணம் : வால்மீகி இராமாயணம் கூறும் உண்மை பாகம் 2

                  இராமன் அரியணை ஏறிய பின் அவனுடைய அன்றாட நடவடிக்கைகளை மிகக் குறிப்பாகவும் தெளிவாகவும் வால்மீகி குறிப்பிடுகிறார் (உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 27). அதன்படி இராமனின் வாழ்வில் ஒரு நாள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. நண்பகலுக்கு முன்பு வரை ஒரு பகுதி என்றும், நண்பகலுக்கு பின் வேறொரு பகுதி என்றும் வரையறுக்கப்பட்டது. காலை முதல் நண்பகல் வரை இராமன் மத ஆச்சாரங்கள் மற்றும் சடங்குகளை நிறைவேற்றுவதிலும் பிரார்த்தனை செய்வதிலும் காலத்தைக் கழித்தான். நண்பகலுக்குப் பின் அரசவைக் கோமாளிகளுடனும் அந்தப்புரப் பெண்களுடனும் மாறி மாறி தன் நேரத்தைக் கழித்தான். அந்தப்புரப் பெண்களுடன் கூடிக் களித்து அயர்ந்திட்டால் கோமாளிகளுடன் பேசிக் கழிப்பான். கோமாளிகளுடன் பேசிக் களைப்புற்றால் அந்தப்புரப் பெண்களை நோக்கி ஓடுவான் (உத்தர காண்டம், சருக்கம் 43, சுலோகம் 1).
                  இராமன் அந்தப்புரப் பெண்களோடு அனுபவித்த களியாட்டங்களை வால்மீகியும் மிக விசாலமாகவே விவரிக்கிறார். அசோகவனம் எனும் அழகிய பூங்காவில் இந்த அந்தப்புரம் இருந்தது. அங்கு தான் இராமன் சாப்பிடுவது வழக்கம். இராமனின் உணவில் அருஞ்சுவை பொருட்கள் அனைத்தும் இடம்பெற்றன; மது, மாமிசம், பழ வகைகள் உட்பட. இராமன் மதுவை அறவே தொடாதவன் அல்ல. இராமன் அளவுக்கு அதிகமாகவே குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தான். அப்படிக் குடித்து விட்டு அவன் ஆடும் களியாட்டத்தில் சீதையையும் கலந்து கொள்ளச் செய்தான் (உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 8) என வால்மீகி குறிப்பிடுகிறார்.

                  நன்றி திரு அம்பேத்கார்.

                  • ராமாயணத்தில் வால்மீகி என்ன சொன்னார் என்பதை சரியாக புரிந்துகொள்ளாமல் சொல்லப்படும் அவதூறு இது. ராமர் அரசனாக பதவி ஏற்ற பிறகு அந்த காலகட்டத்தில் இருந்த வழக்கப்படி அரசர் பலரை திருமணம் செய்து கொள்வார்கள் (தசரத மன்னனும் அவ்வாறு பலரை திருமணம் செய்தவர் தான்), அதேபோல் ராமரும் பல பெண்களை திருமணம் செய்து கொள்வார் என்று சொன்னதை, ராமருக்கு பல பெண்களோடு தொடர்பு என்று உங்களை போன்ற ஆட்கள் சொல்லி கொண்டு திரிகிறீர்கள். அந்த கால வழக்கப்படி ராமர் பல பெண்களை திருமணம் செய்யும் வாய்ப்பு இருந்தும் அவ்வாறு செய்யவில்லை.

                    • மணிகண்டன் ,

                      இறந்த காலத்துக்கும் ,எதிர் காலத்துக்கும் உள்ள வேறுபாடுகளை உணராமல் பேசுகிறீர்கள் மணிகண்டன். அல்லது கல வேறுபாடுகளை உணர்ந்தும் நீங்கள் உண்மைக்கு புறம்பாக பேசுகின்றீர் நீங்கள். வால்மீகி ராமாயணத்தின் அயோத்தியா காண்டம், சருக்கம் 8, சுலோகம் 12 ல் வால்மீகி அவர்கள் எதிர் காலத்தில் நடக்கும் என்று எதனையும் எழுதவில்லை. ராமனின் கதையை இறந்தகாலத்தில் தான் எழுதியுள்ளார். திரு அம்பேத்கார் வால்மீகி ராமாயணத்தை படித்து எழுதியதை மேலே கொடுத்து உள்ளேன். அதில் ராமன் செய்த பாலியல் ரீதியான அசிங்கங்களைத் தான் அம்பேத்கார் பட்டியல் இட்டு உள்ளார்.
                      அதனை மீண்டும் கீழே கொடுத்துள்ளேன். நீங்கள் மீண்டும் படியுங்கள் சாமி!
                      “”வால்மீகியே கூட தன் இராமாயணத்தில் இராமன் அநேக மனைவியரை மணந்து கொண்டதை குறிப்பிடுகிறார் (அயோத்தியா காண்டம், சருக்கம் 8, சுலோகம் 12). மனைவியர் மட்டுமல்ல வைப்பாட்டியர் பலரையும் இராமன் வைத்திருந்தான்.””- திரு அம்பேத்கார்
                      “நண்பகலுக்குப் பின் அரசவைக் கோமாளிகளுடனும் அந்தப்புரப் பெண்களுடனும் மாறி மாறி தன் நேரத்தைக் கழித்தான். அந்தப்புரப் பெண்களுடன் கூடிக் களித்து அயர்ந்திட்டால் கோமாளிகளுடன் பேசிக் கழிப்பான். கோமாளிகளுடன் பேசிக் களைப்புற்றால் அந்தப்புரப் பெண்களை நோக்கி ஓடுவான் (உத்தர காண்டம், சருக்கம் 43, சுலோகம் 1).”- திரு அம்பேத்கார்

                      வால்மீகி ராமாயத்தின் கட்டமைப்பை அறியாமல் அல்லது அறிந்தும் பொய்யாக பேசிக்கொண்டு இருந்தால் நன்றாகவா இருக்கிறது நண்பரே? உண்மையை பேசவும் நீங்கள் கற்றுக்கொள்ளலாமே !
                      பொய்களை கணினியில் தட்டும் உங்கள் தட்டச்சு கைகளுக்கு உணவு கிடைக்காமல் போய்விடப் போகிறது. !

                    • MrKSK,do you think that Mr Manikantan is more scholarly than Ambedkar?If so,you have to accept his “deep understanding”of Valmiki Ramayanam.I already told that rationalists like Periyar and Ambedkar deeply studied Valmiki Ramayanam and then only wrote their books on Ramayanam.

                    • வால்மீகி சொன்ன கருத்தை தவறாக புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் அம்பேத்கார் தனது கற்பனைகளை சேர்த்து கதை காட்டியுள்ளார் அதை உங்களை போன்ற ஆட்கள் கண்மூடி தனமாக நம்பிக்கொண்டு பெரும்பான்மை மக்கள் வணக்கும் கடவுளை அவமதித்து கொண்டு இருக்கிறீர்கள்.

                    • மணிகண்டன் அல்லது ஜெயந்த் எங்கிருந்தாலும் விவாத மேடைக்கு வரவும்… வால்மிகியின் கருத்துகளுக்கு (பின்னுட்டம் 2.1.1.2.2.3.1.2, 2.1.1.2.2.3.1.3.1.1 மற்றும் 2.1.1.2.2.3.1.3 க்கு) பதில் அளிக்கவும்.

              • எப்போதும் ராமரை நினைத்துக்கொண்டிருக்கும் உங்களை மனமார வாழ்த்துகிறேன்.

                • அப்ப ராமனின் லீலைகளை பற்றி விவாதிக்க உங்களிடம் விஷயம் ஏதும் இல்ல அப்படித் தானே ஜெயந்த் ?

                  • என்னைவிட நீங்கள்தான் ராமரைப்பற்றி அதிகமாக விவாதிகிறீர்கள். மேலும் தாங்கள் அவரை பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறீர்கள்

                    • ஜெயந்த் அவர்களே.., ராமனை பற்றிய வால்மிகியின் சித்திரங்கலான இராமன் குடிகாரன், பெண் பித்தன், விவசாய உழைப்பு மாடுகளை அறுத்து மாட்டுக்கறி உண்டவன் ஆகிய கருத்துகளுக்கு மவுனம் சாதித்தால் எப்படி? இவனுக்கு ஏன் ராம லீலா நடத்துகின்றீர்கள் என்று விளக்கவும் அய்யா !

      • //இராணவன் சூத்திர- பஞ்சம – பழங்குடி மக்களின் பிரதிநிதியாகவும் இருக்கிறான்.//

        ஆக திராவிட மக்களின் பிரதிநிதி என்பதால் கொல்லப்படுவதாக கற்பனை கதை கூறுகிறதா ? இல்லை பிறன் மனை கவர்ந்ததால் கொல்லப்பட்டதாக கூறுகிறதா ?

        அவர் திராவிடராக எவ்வாறு உருவாக்கப்படுத்தப்பட்டு உள்ளார் . கற்பனை கதையில் , ராவணன் தமிழ் பேசினான் என்றோ , இல்லை ராவண ராஜ்ஜியத்தில் இருந்தவர்கள் பற்றிய வாழ்க்கை முறை திராவிடர்களின் முறையோடு ஒத்து போகிறதா ?

        பத்து தலை என்பது திராவிடர்களுக்கு பொருந்துகிறதா ?

        வீணை வாசிப்பது பொருந்துகிறதா ?

        நம் ஜாதியை சேர்ந்தவன் தப்பே செய்து இருந்தாலும் , நாம் விட்டு கொடுக்க கூடாது என்பது தான் நீங்கள் சொல்ல விரும்பும் கருத்தா ?

        • சீதையை இராமன் முன் கொண்டு வருகிறார்கள். அவளைப் பார்த்த போதாவது இராமன் சொன்னதென்ன?

          மனித மனம் படைத்த பாமர மனிதன் கூட துயரம் கவ்விய நிலையிலுள்ள மனைவியிடம் இராமன் சீதையிடம் நடந்து கொண்டதைப் போல நடந்து கொண்டிருப்பானா என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நிகழ்ச்சியாய்த் தோன்றுகிறது. இலங்கையில் சிறைப்பட்டிருந்த சீதையை இராமன் நடத்திய முறைமைக்கு வால்மீகி நேரடியாக ஏதும் ஆதாரம் அளிக்கவில்லை எனினும் அடியிற் காணும் பகுதியில் இராமன் தன் மனைவி சீதையிடம் சொல்கிறான் : (யுத்த காண்டம், சருக்கம் 115, சுலோகம் 1-23) “உன்னை சிறைப் பிடித்தானே அந்த எதிரியைக் கடும் போரில் தோற்கடித்து பணயப் பரிசாய் உன்னை மீட்டு வந்துள்ளேன். என் எதிரியை வீழ்த்தி தன் மதிப்பைக் காப்பாற்றியுள்ளேன். என் போர்த் திறத்தை மக்கள் கண்டு மெச்சினர். என்னுடைய உழைப்பு பலனளித்திருப்பது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இராவணனைக் கொன்றிடவும் அவனால் ஏற்பட்ட அவமானத்தை துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெருந் தொல்லையை மேற்கொள்ளவில்லை.”

          இராமன் சீதையிடம் இதைவிடக் கொடுஞ்செயல் வேறு என்ன செய்திருக்க முடியும்? இராமன் அதோடு நிற்கவில்லை, சீதையை நோக்கி மேலும் கூறுகிறான்: “உன் நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்க வேண்டும். உன்னைப் பார்க்க எனக்கு பெரும் எரிச்சலூட்டுகிறது. ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச் சேரலாம். உன்னோடு எனக்கு எந்தத் தொடர்புமில்லை. போரிட்டு உன்னை மீண்டும் மீட்டு வந்தேன். என்னுடைய நோக்கம் அவ்வளவே! உன்னைப் போன்ற அழகிய பெண்ணொருத்தியை இராவணன் சும்மா விட்டிருப்பானா என்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.”

          இப்படிப்பட்ட இராமனை சீதை அற்பத்தனமானவன் என இகழ்ந்திடுவது இயல்பே. தான் கவர்ந்து சென்ற சீதையை இராவணன் களங்கப்படுத்தியிருப்பான் என்ன எண்ணத்தை-சிறைப்பட்டிருந்த வேளையில் தன்னை சந்திக்க வந்த அனுமன் மூலம் சொல்லியனுப்பி-அதன் அடிப்படையில் சீதையை கை கழுவி விடுகிறேன்-என்று இராமன் புலப்படுத்தி இருந்தால் இவ்வளவு சிரமத்திற்கு இடமிருந்திருக்காது-“நானே தற்கொலை செய்து என்னை மாய்த்துக் கொண்டிருப்பேனே”-என்று சீதை வெளிப்படையாக சொல்கிறாள்.

          – அம்பேத்கர்

          • அம்பேத்கார் கூறியதை கண்டிப்பாக ஏற்று கொள்ளுகிறேன் .

            அப்படியென்றால் ராமன் புனிதமானவன் அல்ல என்ற விழிப்புணர்வு போராட்டம் தானே நடத்தப்பட வேண்டும் .

            தவறு இழைத்த ராவணன் என்னும் கதாபாத்திரம் எப்படி ஏற்றுக்கொள்ளத்தக்கதாக மாறுகிறது ?

            கீழ்கண்ட சொற்றொடர்கள் எனக்கு ஏற்புடையது :

            ராமன் என்னும் கதாபாத்திரம் நாம் என்னும் அளவிற்கு புனிதமானவன் அல்ல
            ராவணன் என்னும் கதாபாத்திரம் பிறர் மனை கவர்ந்ததால் தீயவனே . அவன் திராவிடனாய் இருந்தால் என்ன ,ஆரியனாக இருந்தால் என்ன ?

            • ஆக நீங்கள் பார்ப்பனர்களின் இராமாயணம் கூறும் கருத்தை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று புரிந்துகொள்கிறேன். இந்த அளவுகோல் படி பார்த்தால் மகிஷாசுரனையும் ஏற்றுக்கொள்ளமாட்டிர்கள். இது பழங்குடிமக்களின் பக்க சார்பிலான கருத்தை பரிசீலிக்காமலே தூக்கி வீசும் செயல். நீங்கள் பேசும் ஜனநாயப்படியே இது ஏற்புடையதாகாதே.

              இந்தியாவில் ஏறத்தாழ பல நூற்றுக்கணக்கான இராமாயணங்கள் வழங்கப்படுகின்றன. அதில இராவணனை நல்லவனாக சித்தரிப்பதும் அடக்கம். மகிஷாசுரனை வீரனாகவும், துர்க்கையை துரோகம் செய்பவளாக சித்தரிக்கிறது பழங்குடிகளின் கதைப்பாடல்.

              நீங்கள் எதை தேர்ந்தெடுக்கிறீர்கள், எந்த பக்கம் என்பதை பொருத்து நல்லவர்களும் கெட்டவர்களும் மாறுகிறார்கள்.

              • //நீங்கள் எதை தேர்ந்தெடுக்கிறீர்கள், எந்த பக்கம் என்பதை பொருத்து நல்லவர்களும் கெட்டவர்களும் மாறுகிறார்கள்.
                //

                இதனை பாமர கருத்தாக கூறினால்
                “நீங்க எந்தா சாதியை சேர்ந்தவரோ அந்த சாதியை சேர்ந்தவரை தப்பே செஞ்சு இருந்தாலும் நல்லவராக்கி கொண்டாட வேண்டும் ”

                “நம்ம சாதிக்காரன் என்ன செஞ்ச என்ன ? நாம சப்போர்ட் பண்ணனும் ”

                ராமாயணம் வரலாறு அல்ல , விருமாண்டி போல ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்ல .
                மூல “கற்பனை ” கதையான வாலமீகி ராமாயணம் தான் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் .

                ஒரு வாதத்திற்கு திராவிடர்களின் கம்ப ராமாயணத்தை எடுத்து கொண்டாலும் , ராவணன் பிறர் மனை கவர்ந்தவர் என்று தான் வருகிறது.

                • Raman,

                  //ராமாயணம் வரலாறு அல்ல , விருமாண்டி போல ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்ல .
                  மூல “கற்பனை ” கதையான வாலமீகி ராமாயணம் தான் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் .

                  ஒரு வாதத்திற்கு திராவிடர்களின் கம்ப ராமாயணத்தை எடுத்து கொண்டாலும் , ராவணன் பிறர் மனை கவர்ந்தவர் என்று தான் வருகிறது.//

                  //ராவணன் என்னும் கதாபாத்திரம் பிறர் மனை கவர்ந்ததால் தீயவனே //

                  //அப்படியென்றால் ராமன் புனிதமானவன் அல்ல என்ற விழிப்புணர்வு போராட்டம் தானே நடத்தப்பட வேண்டும் . ///

                  சில கேள்விகள்,
                  1) அந்தக் கதைப்படியே ராமன் அவதாரத்தின் நோக்கம் என்ன?

                  2) ராமன் என்னும் கதாபாத்திரம் நாம் என்னும் அளவிற்கு புனிதமானவன் அல்ல என்றும் அது வரலாறல்ல கதை என்று நீங்கள் ஒப்புக்குச் சொல்லிவிட்டால் சரியாகிவிடுமா, ராமன் அவதார புருசன், அது உண்மையாக நடந்த வரலாறு என்று சொல்பவர்கள், அதைக் கொண்டு நாடு முழுவதும் கலவரங்களை கட்டவிழ்த்தவர்கள் ஆட்சியதிகாரத்தில் இருக்கிறார்கள்.

                  • ஒரு பின்னூட்டத்தில் ராமாயணம் பழங்குடிகளின் கதை என்கிறீர் . இப்போது ராமன் அவதாரம் நோக்கம் என்ன என்கிறீர் ?

                    ஆரியர்களால் உருவாக்கப்பட்ட கதையா இல்லை திராவிடர்கல் இயற்றிய கதையா என்பதில் ஒரு முடிவுக்கு வந்து பிறகு இது போன்ற கேள்விகள் கேளுங்கள் .

                    எல்லாமே திராவிடத்தால் இருந்து வந்தது என்று நிறுவும் ஆசை, கதை எங்களோடது என்று நிறுவவும் ஆசை
                    அதில் உள்ள கதாபாத்திரத்திற்கு மட்டும் ஆரியர்கள் பொறுப்பு ?

                    //ராமன் அவதார புருசன், அது உண்மையாக நடந்த வரலாறு என்று சொல்பவர்கள், அதைக் கொண்டு நாடு முழுவதும் கலவரங்களை கட்டவிழ்த்தவர்கள் ஆட்சியதிகாரத்தில் இருக்கிறார்கள்.//

                    எல்லா மதங்களும் பொய் உரைப்பவை தான். மதவாதிகள் அதை வைத்து பிழைப்பு நடத்திகொன்டுதான் இருப்பார்கள் . மக்களிடம் விழிப்புணர்வு வேண்டுமானாலும் கொண்டுவரலாம் .

                    ஆனாலும் ராமாயணம் என்று கூறும் பொழுது ஒருவனுக்கு ஒருத்தி என்பதை தான் மக்கள் நினைவு கொள்கிறார்கள் . திராவிடர்களை கொல்ல வேண்டும் , திராவிடர்கள் பொறுக்கிகள் என்று பறைசாற்றவில்லை.

                    ஆனால் மதவாதிகள் பாபர் மசாவ்த்தி இடித்து அட்டூழியம் செய்ததை கண்டிக்கலாம்,
                    வரலாறு என்பதை, இல்லை இல்லை கற்பனை கதை என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் .

                    அதை விட்டுவிட்டு ராவணன் நல்லவன் என்றால் , ராமாயணம் கற்பனை கதை என்பது மக்களிடம் சென்று சேராது. உங்களின் சாதி பாசம் தான் சென்று சேரும்

                    • இராமன் ,நிதானமாக யோசிங்க…. நீங்கள் விரும்பும் அல்லது நம்பும் ராமாயணத்தின் மூல நூலான வால்மீகி இராமாயணத்தில் கூட அப்படி அவனை ஏக பத்தினி விரதனாக வால்மீகி சித்தரிக்கவில்லையே! அவனுக்கு பல பல்வேறு பெண்களுடன் உள்ள பாலியல் தொடர்புகளைக் கூட வால்மீகி தெளிவாகத் தானே எழுதியுள்ளார்.(அயோத்தியா காண்டம், சருக்கம் 8, சுலோகம் 12). பின்பு ஏன் இத்தகைய தேவையற்ற நம்பிக்கையை மக்களின் பெயரால் ராமனின் மீது ஏற்படுத்துகின்றிகள் ?

                      பொய் கூறும் உங்கள் வாய்க்கு போஜனம் கிடைக்குமா சகோ?.

                      //ஆனாலும் ராமாயணம் என்று கூறும் பொழுது ஒருவனுக்கு ஒருத்தி என்பதை தான் மக்கள் நினைவு கொள்கிறார்கள்..//

                • Raman,

                  ராமாயணத்தின் மூலம் வால்மீகி எழுதியது தான் என்று நீங்கள் தீர்ப்பு சொல்வதும் கூட ஜனநாயக விரோதமில்லையா?

                  மூலமான பழங்குடி மக்களின் வாய்மொழி கதைகளை – கதைப் பாடல்களை தொகுத்து திரித்து எழுதியது வால்மீகி – இப்படி ஒரு கோணத்தை பரிசீலிக்க தவறுவதும் மறுப்பதும், ‘நடுநிலை’யற்ற ஒரு பக்கச் சார்பான சர்வாதிகாரம் இல்லையா?

                  • //மூலமான பழங்குடி மக்களின் வாய்மொழி கதைகளை – கதைப் பாடல்களை தொகுத்து திரித்து எழுதியது வால்மீகி – இப்படி ஒரு கோணத்தை பரிசீலிக்க தவறுவதும் மறுப்பதும், ‘நடுநிலை’யற்ற ஒரு பக்கச் சார்பான சர்வாதிகாரம் இல்லையா?//

                    அப்படி என்றால் ராமாயணம் என்பது பழங்குடி மக்களின் கற்பனை கதை , வாலமீகி தொகுத்து இருக்கிறார் என்கிறீர் . எந்த ஆதாரமும் இல்லாமல் , உங்கள் மனதிற்கு தோணுவதை சொல்வதை எல்லாம் நடுநிலையோடு பரிசீலனை செய்து கொண்டு இருக்க முடியாது

                    அப்படியே உங்கள் வாதப்படி எடுத்து கொண்டால் , ராவணன் அதாவது திராவிடர்களின் உருவகம் வில்லனாக கூறுவது திராவிட பழங்குடி மக்கள் என்று தானே வருகிறது . அதை பழங்குடி வாலமீகி ஆரிய மொழியில் எழுதி உள்ளார் .

                    அப்படி என்றால் ராவணன் என்னும் கதாபாத்திரம் உருவாக்கி திராவிடர்களை ஆரியர்கள் இழிவுபடுத்தவில்லை என்றாகிறது , அப்புறம் எதற்கு ராவணனை கொண்டாடுகிறீர்கள் ?

              • \\ஆக நீங்கள் பார்ப்பனர்களின் இராமாயணம் கூறும் கருத்தை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று புரிந்துகொள்கிறேன்.//ராமாயணத்தை எழுதிய வால்மீகி என்ன பார்பனரா? என்னையா உங்களுடை வாதம்? இதுதான் பழங்குடிமக்களின் பக்க சார்பிலான கருத்தை பரிசீலிக்காமலே தூக்கி வீசும் செயல். மகிஷாசுரனை ஏற்றுக்கொளகிறர்கள், இராவணனை ஏற்றுக்கொளகிறர்கள் ராமாயணத்தை எழுதிய வால்மீகி என்னும் பழங்குடி இனத்தவரை ஏற்றுக்கொள்ள மறுக்குறீர்கள்.

              • Long back i had watched one tamil movie, I forgot the name.
                In that movie main character ( Unbeatable villain) was killed at last by the heroine by poisoning.
                I think the movie is based on this epic.

            • இராமன் , வடநாட்டில் ராவணனின் படத்தை ஆரியர்கள் எரிக்கும் போது அதன் எதிர்வினையாக தமிழ் நாட்டில் ராமனின் படத்தை தமிழ் மக்கள் எரிப்பதால் உங்களுக்கு என்ன பிரசனை அய்யா ? நீங்கள் கூறுவது போன்றே ராமன் ஒன்றும் புனிதன் அல்ல என்னும் நிலையில் அவனின் படத்தையோ உருவ பொம்மையையோ எரிப்பதால் அதில் என்ன தவறு? ராமன் குடிகாரன், விவசாயத்துக்கு பயன்படும் மாட்டை தின்றவன் (அடிமாடுகளை அல்ல), பெண் பித்தன் என்னும் உண்மைகள் நீங்கள் நம்பும் வால்மீகியே அவரின் ராமாயணத்தில் தெள்ளத் தெளிவாக கூறுகிறாரே! அப்படி இருக்க அவனின் உருவ பொம்மையை எரிப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை சகோதரா ?

        • piran manaiyai anubavittha indiranai raaman kadavul illai yendru odhukkividuvaaraa?poliyaana seval kural yendru gauthamar yen “gnanakannaal”ariyavillai? puraanangal yendra aabaasa kuppaigalaithaane navarathinangal yendru potrugiraar?rishi pungavargal yebndraal avargalukku sinam varakkoodaathu allavaa?thottadherkellaam saabam kodukkum ivargalai yeppadi rishigal yendru azhaikkindranar?yendha rishiyaavadhu ulaga makkal nanmaikkaaga thavam iyatriyadhu undaa?yedho oru suyanala kaaranathukkaagathaane(thanathu motcham udpada) thavam iyatri irukkiraargal?vishnuvin vaayilkaapporgalaaga kadamayai sariyaaga seithavargalai vishnuvai paarkka anumadhikkavillai yendra kaaranathukku sabithavar yellaam oru rishiyaa?mudai natram naarum puraanangalai potri yezhudha inge oru raaman.thalaividhi aiyaah!antha pakkathilum thanathu jaathiyai kaappaatrathaane varindhu varindhu vakkalathu vaangappadugirathu?

  3. ராமன் RSS க்கு மட்டும் கடவுள் அல்ல ஹிந்து மக்கள் அனைவரின் கடவுள் பெரும்பான்மை மக்களை நோகடித்துவிட்டோம், அவர்களின் மனதை வேதனைப்படுத்தி விட்டோம் என்று வினவு பெருமைப்பட்டு கொள்வது அவர்களின் வக்கிர புத்தியை தான் காட்டுகிறது

    • ராமன் RSS க்கு மட்டும் கடவுள் அல்ல ஹிந்து மக்கள் அனைவரின் கடவுள்

      எனக்கு இல்ல தமிழன் இராவணன்தன் கடவுள் திமிர் பிடித்த இந்திகாரன் கடவுலே இருந்தாலும் எனக்கு எதிரி

  4. ராமன் ஹிந்து மக்கள் அனைவரின் கடவுளா?ஹிந்து தர்மத்தில் ஹிந்துக்கள் அனைவரும் சமமாக பாவிக்கப் படுகிறார்களா? குஜராத் உனாவில் நடந்தது என்ன? ரோகித் வெமுலா,கன்னையன் குமார், நத்தம் காலனி இளவரசன் முதல் சில நாட்களுக்கு முன்னர் நெல்லை இலந்தைக் குளத்தில் படுகொலை செய்யப்பட்ட சிவகுருனாதன் வரை இவர்களெல்லாம் இந்துக்கள் என்றால் ஏன் கொல்லப்பட்டார்கள்?ராமாயணம் கற்பனைக் கதை என்றாலும் திராவிடர்கள், ஆரிய வந்தேரிகளால் ஒடுக்கப்பட்டதும் பொய் புனைசுருட்டுகளால் இழிவுபடுத்தப்பட்டதும் உண்மைதானே.கற்பனைக்கதையின் நாயகன் ராமன் பிறந்த இடம் இதுதான் என்று அயோத்தியில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் இருக்க பாப்ரி மஸ்ஜித் இருந்த இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்று இடித்தீர்களே அது என்ன?மணிகண்டன் போன்ற தமிழின விரோதிகளை விட்டுவைப்பது தவறு என்று அவர்களே அறிவுறுத்துகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

    • எந்த மதத்தில் அனைவரும் சமமாக பாவிக்கப் படுகிறார்கள் என்று உங்களால் கூற முடியுமா?
      \\நத்தம் காலனி இளவரசன் முதல் சில நாட்களுக்கு முன்னர் நெல்லை இலந்தைக் குளத்தில் படுகொலை செய்யப்பட்ட சிவகுருனாதன் வரை இவர்களெல்லாம் இந்துக்கள் என்றால் ஏன் கொல்லப்பட்டார்கள்?//ஏன் இதுதான் பெரியார் மண் ஆச்சே இந்த கேள்விகளை திராவிட கண்மணிகளிடம் கேட்கவேண்டியதுதானே?———-

    • இஸ்லாமிய படையெடுப்பினால் இந்தியாவில் பல ஆயிரம் ஹிந்துக்கள் இடிக்கப்பட்டன இது வரலாற்று உண்மை, இன்னும் சொல்ல போனால் டெல்லி ஜும்மா மசூதியில் பல தூண்கள் ஹிந்து கோவில்களை இடித்து கொண்டு வரப்பட்டவை, அதை இப்போதும் நீங்கள் ஜும்மா மசூதியில் நீங்கள் பார்க்கலாம். பாபர் மசூதியும் அப்படி ஹிந்து கோவில்களை இடித்து கட்டப்பட்டது தான். இதற்கான ஆதாரங்கள் எல்லாம் இஸ்லாமிய மததலைவர்களே தங்கள் புத்தகங்களில் எழுதியிருக்கிறார்கள்.

      • அமா இவருதான் கடப்பரை எடுத்த கொடுத்தார் கண் முன்னு இருந்த பாபர் சாமி கோவிலை இடித்தவன் நீங்கடா

    • வினவு போன்றவர்கள் எல்லாம் ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கிறோம் என்று சொல்லி கொண்டு இஸ்லாமிய தீவிரவாதிகள் நேரடியாக செய்வதை வினவு பிரச்சாரங்கள் மூலம் செய்கிறது. வினவு செய்யும் செயல்கள் அவர்களுக்கே மனசாட்சி என்று ஒன்று இருந்தால் உறுத்தி இருக்கும் ஆனால் மனசாட்சியை சாகடித்த சைக்கோ மனம் உடையவர்களால் தாம் செய்வது தவறு என்பதை கூட உணர முடியாது. வினவு போன்றவர்களின் நிலை அது தான்.

      • மணிகண்டன் பார்த்து கருத்தை பதிவு செய்வம் இல்லையென்றால் வினவு உன் கருத்தை வெட்டிவிடுவார்கள் சிலர் கழுத்தை வெட்டிவிடுவார்கள்

        • ஏற்கனவே மண்டையில்லாத கண்டன் களாக திரியுதுங்க இதுல இதுகள கழுத்தை வேற வெட்டுராங்களா என்னவோ அறிவுபூர்வமா பேசி கருத்து புரட்ச்சி பண்றவங்கன்னு நினைப்பு.முதல்ல இப்படி சலம்பி திரியிறதுங்களுக்கு பதில் எழுதுறதே பெரிசு.சகிச்சிக்கிட்டு தலைஎழுத்தேன்னுதான் எழுதுறோம்.இதுல இதுங்க கழுத்தை வேற அறுப்பாங்க…

  5. சைக்கோபுகழ் மணிகண்டனுக்கு சிகிச்சை அளிக்க யாருமே இல்லையா…மனசாட்சிபற்றியெல்லாம் பேசுகிறாரே மானஸ்தன்.மனசாட்சியை கொலை செய்து கொண்டே “மனசாட்சி மனசாட்சி”என்று அலறுவதாயிருந்தால் எவ்வளவு தூரம் மனப்பிற்ழ்வுக்கு ஆளாகி இருக்க வேண்டும் இவர்.பரிதாபப்படுவதைத்தவிர நம்மால் வேறு என்ன செய்ய முடியும் இவருக்கு.நல்ல சுகம் கிடைக்கட்டும்.

  6. ராமனின் உருவபொம்மையை எரிப்போம். ராமனுக்கு கோயில் கட்டினால் இடிப்போம்.

      • ஜெயந்த் உங்களைப் போன்று மாட்டு மூத்திரத்தை குடித்துகொண்டே சைடு டிஷ் ஆக ராமனின் மலத்தை தின்பதனை விட கலிச் சோறு தின்பது நல்லது தானே?

  7. மணிகண்டன், ஜெயந்த்

    இவங்க பேசறதுதான் மிரட்டறது மாதிரி இருக்கு. இராமனை கடவுளாக பாவிக்கறது ஒருவனுக்கு ஒருத்தி என்ற தகுதி மட்டும் தான் பேசுறாங்க ஆனா வால்மீகி இராமாயணத்துல ராமனுக்கு பல வப்பாட்டிகள் இருந்ததா அவரே சொல்லியிருக்காரு. எதை வைத்து ராமனை கடவுளாக வணங்கணும்னே தெரியல. ஆயிரணக்கான மக்களை ராமன் பேரை சொல்லி கொன்னுட்டு இருக்காங்க அதை பத்தி பேசினா மட்டும் பேசாதேன்னு மிரட்டறாங்க.

    • உங்களின் தனிப்பட்ட சுயநலத்திற்காக ராமனை பற்றி அவதூறாக பேசாதீர்கள் ப்ளீஸ்…

      ராமன் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தவன் தனி மனித ஒழுக்கம் என்பது சமூகத்திற்கு முக்கியம், அந்த ஒழுக்கம் தவறும் போது ஏற்படும் பின்விளைவுகள் தான் இராவணன்.

      இராவணன் என்ற மனிதனிடம் பல நல்ல குணங்கள் திறமைகள் கைலாய மலையையே தூக்கும் தவவலிமை இருந்தும் ஒழுக்கம் இன்மையால் அழிந்தான், அதனால் ஒழுக்கத்தோடு இருங்கள் என்று சொல்வது தான் ராமாயணத்தின் அடிப்படை.

      ராமன் இராவணன் என்பது எல்லாம் உண்மையா கற்பனையா என்பது எல்லாம் இரண்டாம் பட்சம் தான், ராமாயணம் சொல்லும் ஒழுக்கத்தோடு வாழ்வது என்பது இன்றைய வாழ்க்கைக்கும் பொருந்தும்… அதனால் ராமனின் வழி நடப்போம் ராவணனின் வழி வேண்டாம் நம் மனதில் உள்ள அழுக்குகளை அழிப்போம்.

      திராவிடன் என்று சொல்லி கொண்டு ராவணனை ஆதரிக்கிறோம் என்று சமூக ஒழுங்கீனத்தை கொண்டு வர பார்க்கிறார்கள்.

      • இராமன் குடிகாரன் மான் மாமிசம் உன்டான்; சுரா பானம் பருகியவன்; இதை கடைபிக்க வேண்டுமா நண்பரெ

  8. ஐயா (நந்தினி?)ஆம் நாங்கள் மறுத்து பேசுவது கூட உங்களுக்கு அப்படி தான் தோன்றும்.

  9. ஐயா (ஜெயந்த்)

    // மணிகண்டன் பார்த்து கருத்தை பதிவு செய்வம் இல்லையென்றால் வினவு உன் கருத்தை வெட்டிவிடுவார்கள் சிலர் கழுத்தை வெட்டிவிடுவார்கள் //
    // இப்படியே பேசிக்கிட்டுஇருந்த களி சோறு சாப்பிட வேண்டியதுதான் //

    இப்படி தான் மறுப்பார்களா?

    *ராமன் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை முதலில் தந்தையிடம் போராடி தன் ஒழுக்கத்தை உலகுக்கு நிருபிருபித்து இருக்கலாம்.
    *வால்மீகி இராமாயணத்திலே ராமன் ஏகபத்தினி விருதன் என்று கூறவில்லை. அப்படியிருக்க அதை நிருபிங்க. அதை விட்டுட்டு களி தின்ப சொல்லுவது மறுக்கற மாதிரி தெரியல

    • @நந்தினி

      சமுதாயத்தில் பொது கருத்தை எல்லோரிடமும் சென்று சேர்க்க ஹீரோக்கள் தேவைப்படுகிறார்கள் .இது சமுதாய கலாச்சாரத்தை கட்டமைக்க தேவைப்படுகிற விஷயம் . இதை கிரேக்க பிளாடோ உணர்ந்து எழுதி உள்ளார் . சமுதாயத்தின் பார்வையை மாற்ற வேண்டும் என்றால் ஹீரோக்களை மற்ற வேண்டும் என்று கூறியவர் அவர் .

      ராமன் என்கின்ற கதாபாத்திரத்தை ஹீரோவாக்கி வைத்து நல்லவர்கள் சமுதாயத்திற்கு “ஒருவனுக்கு ஒருத்தி” என்கின்ற கருத்தை சென்று சேர்த்துள்ளார்கள்.

      காந்தி என்பவரை வைத்து “அஹிம்ஸை” என்பதை பரப்பி உள்ளார்கள் .

      தெரசா என்றால் “மக்கள் சேவை” என்பதை பரப்பி உள்ளார்கள் .

      இவை எல்லாம் சமுதாயம் கட்டமைக்க தேவைப்படும் விஷயம் . இதில் உண்மை உள்ளதா இல்லையா என்பது வெகுஜன மக்களுக்கு தேவை இல்லை . அவர்களுக்கு கருத்து சென்று சேர்கிறதா என்பது தான் முக்கியம்

      அதே போல கண்ணகி என்றால் “கற்பு” என்கின்ற பெண்ணடிமைத்தனமும் பரப்பி உள்ளார்கள்

      இதில் தேவை இல்லாத கண்ணகி மாதிரி ஹீரோக்களை புறம் தள்ள வேண்டும். ராமன் என்றால் திராவிடர்களை கொல்பவன் என்று உருவகப்படுத்தி இருந்தால் புறம் தள்ளத்தான் வேண்டும் .

      இல்லை ராமன் சாதி வெறியை நிலை நாட்டுபவன் என்று இருந்தாலும் புறம் தள்ளத்தான் வேண்டும் .

      • Raman himself is saying that there is no truth in people’s belief about virtues in heroes mentioned by him.Periyar fought against this type of superstitions only.No one so far given satisfactory explanation about the reason for killing of Samboogan by Raman.The rationalists are constantly undertaking crusades against the misconception among the general public.

      • I happened to read Vinavu’s old article,”SAUDHIYIL NAATHIGAR GATHI YENNA?”dated 23-5-2014.There were 53 comments for this article.Our genius Raman wrote the last comment thus,”Vinavu has reported issues about common people but people spend more time analyzing,”How their religion is best and how Vinavu team failed to understand the greatness in their religion” and comment on these sections most.It is not the fault of Vinavu team rather our failure to come out of religious thought and our lack of willingness to spend time analyzing common man’s problem”
        I was really surprised to read such a matured comment from Raman.YEPPADI IRUNTHA RAMAN IPPADI MAARIVITTAAR?NAAN PADITHATHU RAMANIN UNMAIYAANA KARUTTHAA?ALLATHU MADHATHAI PORUTHU MAARUM KARUTTHA?

    • ஐயா (நந்தினி?) அவர்களே
      \\ராமனின் உருவபொம்மையை எரிப்போம். ராமனுக்கு கோயில் கட்டினால் இடிப்போம்.//
      “யாகாவாராயினும் நா காக்க காவாக்கால், சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு”
      இது தான் கருத்து சுதந்திரமா ?
      ஆங்கிலேயர் நாத்திகத்தை விட தமிழக நாத்திகவாதிகள் மிகவும் கொடுமையானவர்கள். கொடூரமானவர்கள். பெண்களின் தாலியை அறுப்பதும் இந்து கடவுளர் சிலைகளை காலில் போட்டு மிதிப்பதும் பூணூலை அறுப்பதும் ஒரு குறிப்பிட்ட இனத்தவர்களை மிகவும் இழிவாக பேசுவதும் தமிழக நாத்திகவாதிகளின் அன்றாட அடிப்படை வேலை.அதற்கு அரசியல் அமைப்பு சட்டம் இடமளித்துள்ளது. வெளிநாட்டில் உள்ள நாத்திகவாதிகள் தமிழக நாத்திக வாதிகள் போன்று தீவிர நாத்திகவாதிகள் இல்லை. அதை வலியுறுத்தவே அப்படி தெரிவித்தேன். தாங்கள் குறிப்பிட்டுள்ளவரின் கருத்து எப்படி உள்ளது என்று தாங்கள்தெரிவிக்கலாம் . இங்குள்ள நாத்திக வாதிகள் சுடுகாடு போகும் வரை திருந்தாதவர்கள். வெளிநாடு நாத்திகவாதிகள் அப்படி இல்லை. அவர்களில் பெரும்பாலோர் முதலில் நாத்திகவாதிகளாக இருந்து பின்னர் கால ஓட்டத்தில் கடவுள் நம்பிக்கைக்குள் வந்தார்கள். ரிச்சர்டு டாகின்ஸின் நாத்திகம் மற்ற நாத்திகரிடை வரவேற்பை பெற்றது,பேராசிரியர் ஆன்டனி புளு என்பவரும் நாத்திகவாதியாக இருந்து பின்னாளில் ராய் வர்கீஸ் என்பவருடன் இணைந்து வெளிக் கொண்டு வந்த புத்தகம் நாத்திகர்களிடையே மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அந்த புத்தகத்தின் பெயர் There is a God அதாவது இறைவன் இருக்கிறான் என்பதாகும். அதில் நாத்திகனாக இருந்தவர் எப்படி மனம் மாறி ஆஸ்திகரானார் என்பது பற்றி விரிவாக விளக்குகின்றார். அதை படித்து பாருங்கள். உலகின் முன்னணி நாத்திகர்களில் பேராசிரியர் ஆன்டனி புளுவும் ஒருவர் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் கடவுளை நம்பினார். ஆனால் இங்குள்ள நாத்திக குண்டர்கள் எதை அறிவு பூர்வமாகவும் ஆதாரத்துடனும் எடுத்து சொன்னாலும் நம்புவதில்லை. சந்தேக பகுத்தறிவாளர்கள். அடிவெட்டு அண்ணாசாமிகள்

      • Mr Jayanth,You also have not answered our(atheists’)question,”Why Raman killed Samboogan?”Raman(our genious friend)has not answered whether he consider Indira as worthy God or not since Indira violated Gauthama’s rishipathni Agaligai while all along he criticizes Ravana for kidnapping Sita.Neither Valmiki nor Kambar says that Ravanan violated Sita. It is also told that his head will break into pieces if he violate any lady without her consent.One more clarification needed.In Valmiki Ramayanam,it is stated that Ravanan lifted Sita bodily.But Ramabaktha Kambar says that Ravanan brought a vimanam to take away Sita.Sita,considered by believers as chaste underwent Agnipariksha also.But she was not believed by Raman as evident from the harsh words uttered by him after defeating Ravanan.Not only that,no worthy man will leave pregnant wife in the forest just on the wrong rumours.That too,the real reason for leading her to the forest was not disclosed to her by either Raman or Lakshmanan.No lady should encounter the fate of Sita because of the worst kind of male chauvenism displayed by Raman.The irony is that such a wild person(Raman)is called KARUNAMOORTHI by the believers.
        There is also a puranic story that Jayan and Vijayan,the guards at Vishnu’s abode Vaikuntam,have not permitted one rishi to meet Vishnu.That rishi cursed Jayan and Vijayan (for doing their duty faithfully)to take birth in three yugas as brothers ie Ravanan and Kumbakarnan,Iranyan and his brother,Narakasuran and his brother.All these persons (Ravanan,Iranyan and Narakasuran)were arch enemies of Vishnu during their respective births.But all of them got motcha after they were killed by Vishnu in different avathars.The believers say that these persons were thinking about Vishnu during their entire life time as a result of their hatred against Vishnu and that is why they got back their jobs as gate keepers to Vishnu.The theme of the story is that all the world is a stage and these persons including Ravanan played their role as per screen play written by Vishnu.After planting such a story,what justification these believers have got to blame Ravanan all the time.Mr Jayanth should give logical reply for the above questions,if he can.He should mind his words about his descriptions about atheists.Just because he and other believers could not answer the questions by rationalists,he should not show his incapacity and lack of stuff by calling the rationalists names.

        • வேடன் குகனோடு ஐவரான ராமன், குரங்கு சுக்ரீவனோடு அறுவரான ராமன், அரக்கன் விபீஷனனோடு எழுவரான ராமன் சூத்திரன் என்ற காரணத்துக்காக சம்பூகனை கொன்றான் என்பது ஏற்க முடியாத ஒரு வாதம். சம்பூகனை ராமன் கொன்றான் என்ற கதையை வினவு போன்ற மனவக்கரம் பிடித்தவர்களால் சேர்க்கப்பட்ட இடை சொறுகளாக இருக்கும்.

          • The killing of Shambuk appears in the Valmiki Ramayana, Book 7, the ‘Uttarakanda’ [Final Chapter], sargas 73-76, in the Adhyatma Ramayana version of Ramayana.
            you can believe what you want to believe.

          • One more half baked, frustrated person talks ill of rationalists.Rationalists in TN are the followers of Periyar.Periyar studied (not just reading)Valmiki Ramayanam very deeply and wrote a book by name,”RAMAYANA PAATHIRANGAL”.This book was translated in Hindi also. No one could answer the questions raised by Periyar in that book so far.Like Periyar,rationalists also study Valmiki Ramayanam deeply and then only raise queries to the believers.These so called believers who argue here are NUNIPPUL MEYBAVARGAL.Since they are half baked,they are not in a position to answer the queries raised by rationalists.Their lack of stuff make them frustrated.Instead of answering the queries,they call the questioners names.This is the typical reaction.”Why Raman killed Samboogan?”-I have raised this question to many believers in several web-journals since 2011.Some like late Malarmannan told that this heinous murder does not find a place in Ramayanam which is not true.No one believer gave satisfactory explanation.One more question to Manikantan.Why DRONA got the thumb of EKALAIVAN as GURU DAKSHINA?If you want to have healthy debate,answer me.

          • திரு மணிகன்டன் அவர்கள் நீங்கள் முதலில் இராமனின் அய்யோக்கியதனம் தெரிய வேன்டுமா சி,அர். சினிவாச அய்யங்கார் தமிழ் மொழிப்பெயர்ப்பு படியுங்கள் வால்மீகி இராமயனம் ப்ரதி பத அர்த்தம். ரமாநாம வெளீடு படியுங்கள். பிறகு யோசி இராமன் யார் என்று

        • நீர் யார் என்பதை முன்பே நான் பதிவு செய்துவிட்டேன். சூரியனுக்குள் எத்தனை நாட்கள் ஒளிந்துகொள்வீர். ஹிந்துமதத்தின் மீது உள்ள காழ்புனுற்சியும் வக்ரமும் இதை உம்முடைய கருத்துக்களால் உணர்த்திவிட்டன்.
          \\இங்குள்ள நாத்திக குண்டர்கள் எதை அறிவு பூர்வமாகவும் ஆதாரத்துடனும் எடுத்து சொன்னாலும் நம்புவதில்லை. சந்தேக பகுத்தறிவாளர்கள். அடிவெட்டு அண்ணாசாமிகள்//
          இது மேலே என்னுடை பின்னூட்டம்தான்.

          • I have also recorded the reasons for your frustration and how the persons with shallow knowledge will brand the questioners.I am involved in Vinavu debates for more than 4 years and hence Vinavu readers can judge both of us.I need not have MUGAMOODI.First of all cultivate the habit of deep study of any subject before starting the debate.If you do not have stuff,IPPADITTHAAN AMBALAPATTUPOVEER.UMAKKU YEN AAZHNTHA ANUTHAABANGAL.

                • என்னுடை கருத்தை நான் முன்பே பதிவுசெய்துவிட்டேன்.ஹிந்து மதத்தின் மீதுள்ள வக்கிரத்தை தனித்துக்கொள்வதற்கு நீங்கள் மட்டுமல்ல பலரும் என்னை ஒரு கருவியாக பயன்படுத்துவதை நான் அனுமதிக்கமாட்டேன்.

  10. இதற்கு பதிலடியாக பெரியார் படத்தை எரித்தார்களே அதை கட்டுரையாக நீங்கள் எழுதவில்லையே நல்ல நடுநிலைமை.

  11. ஜெயந்தி அவர்கள் தயவு செய்து இராமனின் அய்யோக்கியதனம் தெரிய வேன்டுமா சி,அர். சினிவாச அய்யங்கார் தமிழ் மொழிப்பெயர்ப்பு படியுங்கள் வால்மீகி இராமயனம் ப்ரதி பத அர்த்தம். ரமாநாம வெளீடு படியுங்கள். பிறகு யோசி இராமன் யார் என்று புரிந்துக்கொன்டு ஆதரத்தின் அடிப்படையில் விளக்குங்கள் முழுவதும் படியுங்கள்;நாங்கள் சொல்லவில்லை வால்மீகீ தான் சொன்னார்

  12. ஜெயந்த் , மணிகண்டன் , மற்றும் இராமன்..,

    இராமாயணம் கற்பனை அல்ல …, உண்மைக் கதை தான் என்று நீட்டி முழங்கிய ஜெயந்த் அவர்கள் ராமனின் அசிங்க வாழ்க்கையை வால்மிகியின் மூலமாக அறிந்த உடன் ஓடிப்போய் விட்டார். மணிகண்டனோ வால்மீகியின் ராமாயணத்தின் கட்டமைப்பையும் ,அதில் பயன்படுத்தபட்ட காலவெளியும் சிறிதும் அறியாமல் அல்லது அறிந்து பொய்யாக பேசிக்கொண்டு உள்ளார். நம்ம இராமனோ மக்களின் பெயரால் ராமனின் மீது “ஒருவனுக்கு ஒருத்தி“ தேவையற்ற காட்சி படிமங்களை பொய்யாக ஏற்றி வைத்துகொண்டு உள்ளார். (இந்த நிலையில் தீவாளிக்கு வாழ்த்து வேறு) . .

    மனதுக்குள் என்னத்தான் இவர்களுக்கு நினைப்பு. அவாள் கூறியதனை பாமர மக்கள் அப்படியே ஏற்க்கும் அந்த காலம் என்ற நினைப்புப் போலும்.இருக்கட்டும் இன்னும் எத்துணைக் காலத்துக்குத் தான் இவர்கள் பொய்யாக ,புரட்டாக அவர்களுக்கு அனுக்கமான நச்சுக் கருத்துக்களை பொதுவெளியில் பரப்புவார்கள் என்று பார்கலாம்.

    பொய் பேசும் இவர்கள் வீட்டுக்கு எல்லாம் பிரம்மராஷசன் வருவானாக !

    வந்து….?

    • \\இராமாயணம் கற்பனை அல்ல …, உண்மைக் கதை தான் என்று நீட்டி முழங்கிய //
      நாங்கள் ஒன்னும் நீட்டவும் இல்லை முழங்கவும் இல்லை.இராவண லீலா மற்றும் அசுர வார விழா நடத்தும் நீங்களே கொஞ்சம் எங்களை தெளிவுபடுத்தினால் நல்லது. இராவணன் தமிழன் திராவிடன் சூத்திரன் என்று எப்படி ஏற்றுக்கொளகிறீர்கள்?
      இப்போது லேட்டஸ்ட் டைட்டில் வேற இராவணன் அந்த காலத்து நக்ஸ்லைட்
      \\உடன் ஓடிப்போய் விட்டார்.//
      ஓடி ஒளிவதற்கு நான் என்ன நக்சலைட்டா
      மனதுக்குள் என்னத்தான் இவர்களுக்கு நினைப்பு. அவாள் கூறியதனை பாமர மக்கள் அப்படியே ஏற்க்கும் அந்த காலம் என்ற நினைப்புப் போலும்.இருக்கட்டும் இன்னும் எத்துணைக் காலத்துக்குத் தான் இவர்கள் பொய்யாக ,புரட்டாக அவர்களுக்கு அனுக்கமான நச்சுக் கருத்துக்களை பொதுவெளியில் பரப்புவார்கள் என்று பார்கலாம்.

      பொய் பேசும் இவர்கள் வீட்டுக்கு எல்லாம் பிரம்மராஷசன் வருவானாக !

      வந்து….?

      • என்ன ஜெயந்த் உளறிக் கொட்டிக்கொண்டு இருக்கிங்க….? விவாதம் என்றால் முழுமையானதாக இருக்கனும் அல்லவா? வந்து வந்து ஓடிட்டா எப்படி? குடிகாரன் ராமனுக்கு ,பெண் பித்தன் ராமனுக்கு , விவசாய உழைப்பு மாடுகளை அறுத்து மாட்டுக்கறி உண்ட ராமனுக்கு நீங்கள் நடத்தும் ராமலீலாவுக்கு எதிர் வினையாகத்தான் இராவன லீலா என்பது கூடவா உங்களுக்கு புரியில்லை?

        • தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் தான் பிடிவாதம் பிடிக்கும் உங்களை போன்றவர்களிடம் விவாதம் செய்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது. ராமாயணத்தை அம்பேத்கார் சரியாக புரிந்துகொள்ளாமல் அல்லது தெரிந்தே பொய்களை சொன்னால் அதை உங்களை போன்ற ஆட்கள் நம்பி கொண்டு அவதூறாக பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். அது தவறு என்று ராமாயணத்தை மேற்கோள் காட்டி பதில் சொன்ன பிறகும் இப்படி அவதூறாக பேசினால் யார் என்ன செய்ய முடியும்…

          ராமனுக்கு பட்டாபிஷேகம் நடந்தால் பரதனின் மனைவிகள் ராமனின் மனைவிகள் மீது கோபித்து கொள்வார்கள் என்று மந்தாரை கைகேயிடம் சொல்கிறார், ராமன் காட்டில் இருந்தவரையில் சீதை தான் அவருக்கு மனைவி, நாட்டிற்கு வந்த பிறகு அவருக்கு பட்டாபிஷேகம் நடந்தால் என்ன ஆகும் என்று மந்தாரை கைகேயிடம் சொல்கிறார் ஆனால் ராமர் சீதையை தவிர வேறு ஒருவரை திருமணம் செய்யவில்லை. அதற்கான ஆதாரம் இராமாயணத்தில் இருக்கிறது, ராமரின் பட்டாபிஷேகத்தை போது ஸ்ரீ ராமரை திருமணம் செய்து பலர் காத்து இருந்தாலும் இந்த பிறவியில் நான் ஒருவரை தான் மனம் செய்வேன் என்று ஸ்ரீ ராமர் சொல்கிறார்.

          • மணிகண்டன், முன்னே நிற்கும் முயலுக்கு கால்களே இல்லை என்று கூறும் உங்கள் நிலை தான் நகைப்புக்கு உரியது….! உங்களுக்கு அம்பேத்காரின் விளக்க உரையில் நம்பிக்கையில்லை என்றால் உத்தர காண்டம், எப்போது நடைபெறுகின்றது என்று அறிய வால்மிகியின் ராமாயணத்தை மீண்டும் ஒரு முறை படித்து சிந்திக்கலாமே! உத்தர காண்டம் ராமாயணத்தின் இறுதிப் பகுதி. இராமன் அயோத்திக்கு மீண்டு அரசனானதும், சீதை மீண்டும் காட்டுக்கு அனுப்பப்பட்டதையும் உள்ளடக்கிய கதைப் பகுதி அது. அதில் தான்

            “”இராமன் அரியணை ஏறிய பின் அவனுடைய அன்றாட நடவடிக்கைகளை மிகக் குறிப்பாகவும் தெளிவாகவும் வால்மீகி குறிப்பிடுகிறார் (உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 27). அதன்படி இராமனின் வாழ்வில் ஒரு நாள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. நண்பகலுக்கு முன்பு வரை ஒரு பகுதி என்றும், நண்பகலுக்கு பின் வேறொரு பகுதி என்றும் வரையறுக்கப்பட்டது. காலை முதல் நண்பகல் வரை இராமன் மத ஆச்சாரங்கள் மற்றும் சடங்குகளை நிறைவேற்றுவதிலும் பிரார்த்தனை செய்வதிலும் காலத்தைக் கழித்தான். நண்பகலுக்குப் பின் அரசவைக் கோமாளிகளுடனும் அந்தப்புரப் பெண்களுடனும் மாறி மாறி தன் நேரத்தைக் கழித்தான். அந்தப்புரப் பெண்களுடன் கூடிக் களித்து அயர்ந்திட்டால் கோமாளிகளுடன் பேசிக் கழிப்பான். கோமாளிகளுடன் பேசிக் களைப்புற்றால் அந்தப்புரப் பெண்களை நோக்கி ஓடுவான் (உத்தர காண்டம், சருக்கம் 43, சுலோகம் 1).
            இராமன் அந்தப்புரப் பெண்களோடு அனுபவித்த களியாட்டங்களை வால்மீகியும் மிக விசாலமாகவே விவரிக்கிறார். அசோகவனம் எனும் அழகிய பூங்காவில் இந்த அந்தப்புரம் இருந்தது. அங்கு தான் இராமன் சாப்பிடுவது வழக்கம். இராமனின் உணவில் அருஞ்சுவை பொருட்கள் அனைத்தும் இடம்பெற்றன; மது, மாமிசம், பழ வகைகள் உட்பட. இராமன் மதுவை அறவே தொடாதவன் அல்ல. இராமன் அளவுக்கு அதிகமாகவே குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தான். அப்படிக் குடித்து விட்டு அவன் ஆடும் களியாட்டத்தில் சீதையையும் கலந்து கொள்ளச் செய்தான் (உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 8) என வால்மீகி குறிப்பிடுகிறார். “”
            அந்த உத்தர காண்ட கதைப் பகுதியில் மந்தாரை கைகேயிடம் பேசும் காட்சிகள் எங்கே வருகின்றது என்று நீங்கள் தான் ஆதாரத்துடன் கூறவேண்டும்.

            முயல் மாதிரி ஓடாமல் பதில் அளிக்கவும் மணிகண்டன்.

  13. \\ ராமலீலாவுக்கு எதிர் வினையாகத்தான் இராவன லீலா என்பது கூடவா உங்களுக்கு புரியில்லை?//

    நீங்கள் தான் உளறிக்கொட்டிகொண்டு இருக்கிறீர்கள். என்னையா எதிர்வினை நேர்வினை?

    • ஜெயந்த் ,பள்ளிக்கூடம் போய் ஒழுங்கா எதிர்வினை ,நேர்வினை எல்லாம் படித்துவிட்டு அப்புறமாக விவாதத்துக்கு வாங்க சாமி…. ! குடிகாரன் ,பெண்பித்தன் ராமனுக்கு எதுக்கு அய்யா ராமலீலா ?

    • ஜெயந்த் , விவாதிக்க தக்க அறிவின்றி தானே ஆம் சாமி போடுறீங்க? ஆனாலும் என் கேள்விகள் அப்படியேத் தான் உங்களை நோக்கி நிற்கின்றன். குடிகாரன் ,பெண் பித்தன் இராமனுக்கு எதுக்கு ரமா லீலா நடத்துறீங்க ? முதலில் இதற்கு பதிலை யோசிங்க ஜெயந்த்!

  14. ஜெயந்த் மற்றும் மணிகண்டன்,

    தக்க ஆதாரங்களுடன் தான் என் வாதத்தை உங்கள் முன் வைத்து உள்ளேன். விதாண்டாவாதம், மூன்று கால் என்று உளறிக்கொண்டு ஓடவேண்டாம். என் ஆதாரங்கள் பிழையானவை எனில் அதனை நிருபணம செய்யவேண்டியது உங்கள் கடமை தானே? வினவு தளம் என்பது நாம் மூவர மட்டுமே களமாடும் ஆடுகளம் அல்ல. ஆயிரக்கணக்கான வாசகர்கள் படிக்கும் இடம் இது. உங்களின் ஓட்டத்தை கண்டு வாசகர்கள் எள்ளி நகையாடுவார்கள் என்ற உண்மையும் செல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

    புரிதலுக்கு நன்றி.

  15. உங்கள் மன வக்கிரத்தை எழுத்து வடிவத்தில் வினவில் கொட்டி தீர்த்துக்கொள்ளுங்கள். அதற்கு என்னை ஒரு கருவியாக பயன்படுத்துவதை நான் அனுமதிக்கமாட்டேன்.
    புரிதலுக்கு நன்றி.

    • என்னங்க ஜெயந்த் .., இப்படி சொல்லிட்டிங்க…..! ராமானின் மனவக்கிரங்களை தானே வால்மீகி அழகாக எடுத்துரைத்துள்ளார். வால்மீகி ராமாயணம் மற்றும் கம்பனின் ராமாயணத்தையும் ஒப்பாய்வு செய்த நூல் ஒன்றை நூலகத்தில் திங்கள் அன்று படித்தேன். உங்களை மாதிரி எல்லாம் அந்த நூலாசிரியர் பயந்து ஓடவில்லை…. வால்மீகி ராமாயணத்தில் உள்ள ராமனை கொச்சைப் படுத்தும் பகுதிகளை எல்லாம் கம்பர் எப்படி எல்லாம் ஒழுங்கு படுத்தி ராமனை நாயகனாகக் காட்டுகின்றார் என்று விளக்கும் ஆய்வு நூல் அது. எப்படியோ விவாதத்துக்கு வந்துட்டேள்…. நன்னா மாட்டிண்டு முழிபிதுங்குறேள்! என்ன செய்யறது நீங்க ராமனா வேஷம் போட்டா முழுசா அவனைப் போன்று நடிச்சித்தானே ஆவணும்… நடிக்காம ஓடனா எப்படி நல்லாகீதா?

Leave a Reply to sooriyan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க