privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஸ்டேட் வங்கி தலைமையகம் முற்றுகை - பு.மா.இ.மு போராட்டம்

ஸ்டேட் வங்கி தலைமையகம் முற்றுகை – பு.மா.இ.மு போராட்டம்

-

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி தலைமை அலுவலகத்தை  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் 21.11.16 காலை 11:30 மணிக்கு முற்றுகையிட்டனர்.

இந்த போராட்டம் அறிவித்த உடனே காவல் துறை நுங்கம்பாக்கம் பாரத ஸ்டேட் வங்கியைச் சுற்றி அரண் அமைத்து போராட்டத்தை தடுக்க முயன்றது. ஆனால் இவற்றை மீறி தோழர்கள் சாலையில் அமர்ந்து தங்கள் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

போராட்டத்தில் பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் . கணேசன் கூறியது :

Poster Mail“சமீபத்தில் மல்லையா உள்ளிட்ட 63 கருப்புப் பண முதலாளிகளின் 7016 கோடி ரூபாய் கடனை பாரத ஸ்டேட் வங்கி ரத்து செய்துள்ளது. ஆனால் சில ஆயிரங்களையும், ஒரு சில லட்சங்களையும் கடனாகப் பெற்ற மாணவர்களை குற்றவாளிகள் போல சித்தரிக்கிறது அரசு.

மேலும் தற்போது கடனை வசூலிக்கும் வேலையை ரிலையன்சு கந்துவட்டி கும்பலிடம் தந்துள்ளது. இதனால் மதுரையில் மாணவர் லெனின் என்பவர் தூக்கிட்டு மாண்டு போயுள்ளார். பல லட்சம் மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

ஆகவே மாணவர்கள் அனைவரின் கல்விக் கடனையும் உடனே ரத்து செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் மாணவர்களே கல்விக்கடனை செலுத்த மறுப்போம்! மேலும் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் அனைவரையும் இணைத்து இப் போராட்டத்தை எடுத்துச் செல்வோம் எனக் கூறினார்.”

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை போலீசார் தரதரவென இழுத்துச் சென்று வாகனங்களில் ஏற்றியது. இதனால் அரைமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து தடைபட்டது. இப்போராட்டத்தை வங்கிக்கு வந்த பொதுமக்களும், வாகனங்களில் சென்றவர்களும் கூர்ந்து கவனித்தனர்.

முழக்கம் :

கருப்புப் பண முதலைகளுக்கு 7000 கோடி தள்ளுபடியாம் !
கல்விகடன் கட்டமுடியாத மாணவர்கள் எல்லாம் குற்றவாளியாம் !
வெட்கக் கேடு! மானக் கேடு!

ரத்து செய்! ரத்து செய்! கல்விக்கடன்
அனைத்தையும் உடனடியாக ரத்து செய்!

சாராய முதலாளி மல்லையாவுக்கு பல்லாயிரம் கோடியைத்
தூக்கிக் கொடுத்து வழியனுப்புது SBI!

மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன் சில ஆயிரத்தை வசூலிக்க
அம்பானியின் அடியாள் படையை வீட்டுக்கு அனுப்பி மிரட்டுது!

வரி ஏய்ப்பு – வாராக்கடன் பலலட்சம் கோடியை ஏப்பம் விட்ட
ரிலையன்சை கொழுக்க வைக்க மாணவர்களை பலி கொடுக்குது!

கார்பரேட் முதலாளிகளின் பல லட்சம் கோடி வாராக் கடனை,
கருப்புப் பணமாக பதுக்கியுள்ள முதலீடுகளை, சொத்துகளை
பறிமுதல் செய்யத் துப்பில்லாத வங்கிகளுக்கு
கல்விக்கடனை நாம் ஏன் கட்டனும்!

இலவசமாக கல்வி கொடுக்க வக்கில்லாத மோடி
அரசுதான் மாணவர்களை கடன்காரர்களாக்குது!

கல்விக் கடனை கட்ட மறுப்போம்!
ரிலையன்சு கும்பலை விரட்டியடிப்போம்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

– வினவு செய்தியாளர்.