மெரினாவில் நடைபெற்ற போரட்டத்தை இன்று அனைவரும் பேச ஆரம்பித்து விட்டனர். டெல்லிக்கட்டை அடக்க எழுந்த மெரினா எழுச்சியைப் போன்று இந்தியாவிலும், உலகெங்கிலும் மக்கள் போராடி வருகின்றனர். நந்திகிராம் போராட்டம், நியாம்கிரி போராட்டம், கூடங்குளம் போராட்டம், முல்லைப் பெரியாறு போராட்டம், அரபு மக்கள் போராட்டம், அமெரிக்காவில் வால் வீதி போராட்டம் அனைத்தும் இத்தகைய எழுச்சிகளின் அங்கம் என்பதை இசையால் இணைக்கிறது இந்தப் பாடல்.
கவனியுங்கள் புரட்சியின் இசை உங்கள் செவிகளில் கேட்கும், சற்று நிமிர்ந்து பாருங்கள் புரட்சியின் புதிய உலகம் உங்கள் கண்களுக்கு தெரியும்.
புரட்சி… புரட்சி… உன் காதில் விழவில்லையா…?
புதிய உலகம் உன் கண்ணில் தெரியலையா…?அந்த போர்க்களத்தைப் பார் புரட்சி காதில் கேட்கும்.
சென்னை மெரினா போராட்டத்தில் தோழர் கோவன் பாடிய பாடல் பாருங்கள், பகிருங்கள்.
ஒடுக்கப்படும் மக்களின் ஓயாத அவலம்? செவிடன் காதில் ஊதிய சங்கும், கயவர்களின் ஆட்சியில் மக்களின் அவல குரலும் எடுபடுமா?
மெரினா பீச்சின் கரையோரத்தில் உழைக்கும் மக்களின் அரசாங்கம்
தேடி தேடி வருவொர்கெல்லாம் தினமும் கூடும் அரிவாற்றல்