privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கமெரினா வன்முறை - வழக்கறிஞர்களின் உண்மை அறியும் குழு அறிக்கை

மெரினா வன்முறை – வழக்கறிஞர்களின் உண்மை அறியும் குழு அறிக்கை

-

மெரினாவில் மாணவர்களின் போராட்டத்தில் வன்முறை செய்தது காவல்துறை தான்” – சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்களின் உண்மை அறியும் குழுவின் அறிக்கை !

ல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் வேண்டும்” என்ற கோரிக்கையோடு மெரினாவில் போராடிய மாணவர்கள் போராட்டத்திலும், மெரினாவை சுற்றியுள்ள பகுதிகளிலும் கடந்த 23/01/2017 அன்று  வன்முறை வெடித்தது.  நடந்த உண்மைகளை கண்டறிய, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் உண்மையறியும் குழுவாக மெரினாவை சுற்றியுள்ள பகுதிகளில் மக்களிடம் நேரடி ஆய்வு செய்து, அறிக்கையாக தொகுத்து 31/01/2017 அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிட்டார்கள்.

chennai-lawyers-press-meet
உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் உண்மையறியும் குழுவாக மெரினாவை சுற்றியுள்ள பகுதிகளில் மக்களிடம் நேரடி ஆய்வு செய்து, அறிக்கையாக தொகுத்து 31/01/2017 அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிட்டார்கள்.

வழக்கறிஞர்கள் சார்பாக வழக்கறிஞர் பாவேந்தன், மில்ட்டன் ML (செயலர், மக்கள் உரிமைப்  பாதுகாப்பு மையம், சென்னைக் கிளை) இருவரும் அறிக்கையின் சாரத்தை தொகுத்து பேசினர்.

”மெரினாவை சுற்றியுள்ள பகுதிகளான அம்பேத்கர் பாலம், நடுக்குப்பம், மாட்டங்குப்பம், ரோட்டரி நகர் பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டோம்.  ஆய்வின் முடிவாக, மாணவர்களின் போராட்டத்தை முறியடிப்பதற்காக, தமிழக அரசு தான் திட்டமிட்டு வன்முறையை கட்டவிழ்த்துள்ளது.

மெரினாவில் சமூகவிரோதிகள் தாக்கினார்கள்.  காவல்துறை தாக்குதல் நடத்தவில்லை என அரசு தரப்பில் திரும்ப திரும்ப சொல்லிவருகிறார்கள்.  மெரினாவில் இருந்து ரத்த காயங்களுடன் ஓடிவந்த மாணவர்களுக்கு மக்கள் அடைக்கலம் கொடுத்துள்ளனர்.  அதற்காக, காவல்துறை பல வீடுகளின் கதவை உடைத்துள்ளனர்.  65 வயது பெண்கள் முதல் 10 வயது குழந்தைகள் வரை தாக்கியுள்ளனர்.  அனைவர்களுடைய சாட்சியங்களையும் விரிவாக பதிந்துள்ளோம்.  ஆகவே, காவல்துறை தரப்பு வாதம் பொய். வன்முறைக்கு சமூக விரோதிகள் காரணமில்லை.  போலீசு தான் முழுமையான காரணம்.

வன்முறையில் ஈடுபட்டதாக ஒரே நாளில் 250 பேரை போலீசு கைது செய்திருக்கிறது.  200 எப்.ஐ.ஆர்களை பதிவு செய்துள்ளது.   250 பேரை எப்படி விசாரிக்காமல் கைது செய்யமுடியும்?

வன்முறைக்கு காரணம் போலீசு தான்.  அதனால் விசாரணையும் காவல்துறையிடமிருந்து தான் துவங்கவேண்டும்.  வன்முறை நடந்து ஒரு வாரம் கடந்தும். இன்றுவரை ஒருவர் கூட விசாரிக்கப்படவில்லை.  ஒரு வழக்கு கூட பதியப்படவில்லை.  இப்பொழுது தான் இரண்டு காவலர்களை அடையாளப்படுத்துகிறார்கள்.   மேலும் வன்முறை செய்த போலீசே எப்படி விசாரிக்கவும் முடியும்? தார்மீக ரீதியாகவே விசாரிக்கமுடியாது.   அதனால், விசாரணை செய்ய நடுநிலையான, நேர்மையான நீதிபதியை வைத்து நீதி விசாரணை செய்யவேண்டும், கிரிமினல் நடவடிக்கைகளை விசாரணை செய்ய சுதந்திரமான, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படவேண்டும்” என கோருகிறோம்.

விசாரணை செய்து  நடவடிக்கை எடுக்கும் வரை கைது செய்த அனைவரையும் எந்தவித நிபந்தனையுமின்றி சொந்த பிணையில் விடுதலை செய்யவேண்டும். காவலர்களின் வன்முறையை நியாயப்படுத்தி பேசிய ஆணையாளர் திரு. ஜார்ஜ், துணை ஆணையாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட உயரதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யவேண்டும்.

chennai-lawyers-press-meet3
வழக்கறிஞர்கள் சார்பாக வழக்கறிஞர் பாவேந்தன், மில்ட்டன் ML (செயலர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னைக் கிளை) இருவரும் அறிக்கையின் சாரத்தை தொகுத்து பேசினர்

இதுவரை கைது செய்யப்பட்ட பலரையும் பிணையில் எடுத்துள்ளோம்.  பலர் தங்கள், கை, கால்கள் பாதிப்படைந்தும், தலையில் தாக்கப்பட்டும் மருத்துவமனைகளிலும்,  உரிய சிகிச்சை இல்லாமல் சிறையிலும் வாடிக்கொண்டிருக்கிறார்கள்.  அவர்களை எல்லாம் பிணையில் எடுப்பதற்கு குழு அமைத்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.   காவல்துறையின் திட்டமிட்ட கலவரத்தை, அரசு தங்கள் மீது தொடுத்த போராக மக்கள் கருதுகிறார்கள். இந்த நிலை மாறவேண்டும்.  மக்களோடு வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக தான் தமிழக மக்களுக்கு இந்த அறிக்கையை சமர்ப்பிக்கிறோம். அறிக்கையில் ஒவ்வொரு சாட்சியங்களையும் விரிவாக பதிவு செய்துள்ளோம்.  எங்கள் குழு வந்தடைந்த முடிவுகளையும் மற்றும் பரிந்துரைகளையும் தெரிவித்துள்ளோம்.”

குறிப்பு: வழக்கறிஞர்களின் உன்மை அறியும் குழுவினரின்  அறிக்கை (PDF வடிவில்) தேவைப்படுவோர்  chennaiprpc@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.

***

ஜல்லிக்கட்டு போராட்டம் :  சென்னை : காவல்துறை வன்முறை

உண்மை அறியும் குழு அறிக்கை

I. மெரினா போராட்டத்தின் பின்னணி

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி மதுரை – அலங்காநல்லூரில் அமைதி வழியில் போராடியவர்கள் மீது காவல்துறை கடந்த 16.01.2017 அன்று தாக்குதல் நடத்தியது. இதனை கண்டித்து சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் 17.01.2017 அன்று கூடினர். சில நூறு பேராக இருந்தவர்களின் எண்ணிக்கை மிக விரைவிலேயே பல லட்சங்களானது

இந்த போராட்டம் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக தமிழக முதலமைச்சர் வேறு வழியில்லாமல் டெல்லிக்கு சென்றார். அங்கு பிரதமர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் மத்திய அரசால் ஒன்றும் செய்யமுடியாது என கைவிரித்தார். அதன்பிறகு 21.01.2017 அன்று தமிழக அரசு மிருக வதை தடை சட்டத்தில் உரிய திருத்தங்களை செய்து அவசர சட்டம் ஒன்றை இயற்றியது. மறுநாளே ஜல்லிகட்டை நடத்தலாம் என்றும், மதுரை அலங்காநல்லூரில் முதல்வரே தொடங்கிவைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டன. தமிழக அரசு அவசர சட்ட அறிவிப்பை  அறிவித்தாலும் மாணவர்களும், இளைஞர்களும் நிரந்த சட்டமே இதற்கு நிரந்த தீர்வு என கருதினர்.

அதனால் தமிழகம் முழுவதும் போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்ததோடு, ஜல்லிக்கட்டை நடத்தவும் முன்வரவில்லை. மதுரைக்கு முதல்வர் சென்றபோதுகூட அலங்காநல்லூரில் கூடியிருந்த மக்கள் நிரந்தர சட்டமில்லாமல் ஜல்லிக்கட்டை நடத்த முன்வரவில்லை. முதல்வரும் அவசர சட்டத்தை தொடர்ந்து 23ம் தேதி நிரந்தர சட்டம் சட்டமன்றத்தில் இயற்றப்படும் என்றும், மக்கள் என்று விரும்புகிறார்களோ அன்று ஜல்லிக்கட்டை நடத்திக்கொள்ளலாம் என்றும் அறிவித்தார். தமிழகம் முழுதும் போராட்டத்தில் உள்ள மக்கள் – மாணவர்கள் அனைவரும்  சட்டசபை கூடும்நாளான  23ம் தேதியை நோக்கி காத்திருந்தனர்.

22ம் தேதி வரை அமைதிகாத்த காவல்துறை அதிகாலை 4 மணியிலிருந்தே தங்களது படைகளை திரட்டி, மெரினாவில் உள்ள போராட்டக்காரர்களை வெளியேற்ற தொடங்கியது. அதற்கு முன்பாகவே மெரினாவிற்கு செல்லும் வழிகளை அடைக்கும் வேலைகளையும் மேற்கொண்டது. காவல்துறை மாணவர்களுக்கு எந்த அவகாசமும் கொடுக்காமல் பலவந்தமாக கூட்டத்தை கலைத்ததை ஊடகங்களில் பார்க்க முடிந்தது.

பின்னர் சென்னை, அலங்காநல்லூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் மாணவர்கள்மீதும், அவர்களை ஆதரித்த மக்கள்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.   பெரும் வன்முறை ஏற்பட்டது. போலிசாரே வாகனங்களை அடித்து நொறுக்குவது, வாகனங்களுக்கு தீ வைப்பது, கற்கள், பாட்டில்களை கொண்டு அடிப்பது, பெண்களை லத்தி, இரும்பு குழாய்களைக் கொண்டு ஆண் போலீசார் தாக்குவது, பொருட்களை சூறையாடுவது, காய்கறி கடைகளை சூறையாடுவது போன்ற வன்முறை செயல்களில் காவல்துறையினர் ஈடுபட்டது ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்த சூழலில் வழக்குரைஞரகளாகிய நாங்கள் முழு உண்மையை வெளிக்கொண்டுவரும் பொருட்டு குழுவாக சென்று 24, 25, 26 ஆகிய தேதிகளில் நடுக்குப்பம், வி.ஆர்.பிள்ளை தெரு, மாட்டாங்குப்பம், அனுமந்தபுரம், ஐஸ் அவுஸ், அம்பேத்கர் பாலம், ரூதர்புரம், மீனாம்பாள்புரம், ரோட்டரி நகர், கபாலி நகர், மாயாண்டி நகர்  ஆகிய இடங்களில் மக்களையும் காவல் துறை அதிகாரிகளையும்  சந்தித்தோம்.

எமது குழு உறுப்பினர்கள்

  1. கோ.பாவேந்தன்
  2. சா.ரஜினிகாந்த்
  3. சாரநாத்
  4. கார்கி வேலன்
  5. காந்தி குமார்
  6. பார்வேந்தன்
  7. பொற்கொடி
  8. முத்துக்குமரன்.ஜி
  9. கோகுல்ராம்
  10. செங்கொடி
  11. கு.பாரதி
  12. சுரேசு சக்தி முருகன்
  13. கேசவன்
  14. ஜாண்சன்
  15. மார்க்ஸ் ரவீந்திரன்
  16. மீனாட்சி
  17. சிவகுமார்
  18. குபேந்திரன்
  19. இளங்கோ
  20. ஜிம்ராஜ் மில்ட்டன்(வாழ்நாள் தடை)
  21. கயல் @ அங்கயர்கன்னி
  22. சண்முகம்
  23. வாசுதேவன்
  24. ராதிகா
  25. தமிழினியன்
  26. சு.ப.மனோகரன்
  27. சேல்முருகன்
  28. செல்வகுமார்
  29. பி.சரவணன்
  30. அதியமான்
  31. தாணு
  32. தாமரைக் கண்ணன்
  33. பாணு
  34. செந்தமிழ் செல்வன்
  35. திருமூர்த்தி
  36. ஹெமா

மேலும் சமூக ஆர்வலர்களான ஜாக்கிர் உசைன், காயத்ரி, சாரு நிவேதா, சங்கீதா, பேராசிரியர் லெனின் ஆகியோரும் நம்முடன் இணைந்து கொண்டனர்.

அந்த சந்திப்பின் ஊடாக இலவசமாக அவர்களுக்கு பிணை எடுப்பது போன்ற சட்ட பாதுகாப்பை வழங்கி வருவதோடு, ஒரு சிலரை மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடும் செய்தோம், அத்துமீறிய கைது நடவடிக்கைகளில் காவல்துறையினரிடம் பேசி முதல்நிலையிலேயே அதாவது விசாரணை நிலையிலேயே சிலரை விடுவிக்க உதவினோம். ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் முழுமையாக பிரச்சனையில் இருந்து விடுபட இவ்வறிக்கை பயன்படும் என கருதி வெளியிடுகிறோம்.

II. நேரடியான மக்களின் சாட்சியங்கள்

திருவல்லிக்கேணி வி.ஆர். பிள்ளை நகரைச் சேர்ந்த வீட்டு வேலை செய்யும் மீனா

”காலையில் டிவி பார்த்துனு இருந்தேங்க அப்ப பசங்கள போலீசு அடிச்சிட்டு இருந்தத பார்த்த ஒடனே என் கைகுழந்தைய பக்கத்து வீட்டில குடுத்துட்டு அந்த இடத்திக்கு (மெரினா) ஓடுனே. அங்க பாத்தா போலீசு பொம்பள பசங்களையும் ஆம்பள பசங்களையும் பயங்கரமா அடிச்சிட்டு இருந்தாங்க. அடி தாங்க முடியாத சில பசங்க போலீசு காரங்க கால விழுந்து சார் எங்களுக்கு 2 மணி நேரம் டைம் கொடுங்க நாங்க போயிறோனு கெச்சினாங்க அப்ப கூட போலீசு அவங்கள அடிச்சிகிட்டிருந்தாங்க. இன்னொரு இடத்தில 7 பசங்க கை கோத்துகின்னு நின்னுட்டிருந்தாங்க அவங்க கை மேலையே போலீசு லத்தியால அடிச்சிட்டுஇருந்தாங்க ஆனா அப்ப கூட அந்த பசங்க கைய விடவே இல்ல. கிட்ட போய் பாத்தா அந்த பசங்களுக்கு பின்னாடி இருந்த கர்பிணி பொண்ணு போலிசு வயத்து மேலேயே போலிசு எட்டி எட்டி ஒதைச்சாங்க. அந்த பொண்ணுக்கு அந்த இடத்திலேயே அபாசன் ஆயிடிச்சு. மயக்கம் போட்டு விழுந்திடிச்சு. பசங்க தான் அந்த பொண்ண துாக்கிட்டு யாராது ஒதவி பண்ணுங்கனு கத்திட்டே ஓடினாங்க. ஆனா போலீசு ரொம்ப அநியாயம் பண்ணாங்க. பசங்க எதுக்கு போராடினாங்க நியாயத்துக்கு தானே. தமிழர்களுக்கு தானே. ஏன் பிள்ளைக்கு நாளைக்கு நல்ல பாலு வேணுன்றதுக்காக தான் போராடினாங்க. அது நியாயம் தான. நாங்க அவங்களுக்கு உதவி செய்வோம்.

அடிபட்டு கை ஒடைச்சு கால் ஒடைச்சு மண்ட ஒடைச்சு ஓடி வந்து விழறாங்க. நாங்க எப்படி விடமுடியும். நாங்க அவங்கள பாதுகாப்போம். போலீசு கண்ணீர் பொகை ஏன் போட்டாங்க? யாருக்கு கண்ணே தெரியல அதுலேயே போட்டு அடிக்கிறாங்க. ஒரு பொண்ணோட பேண்டைய உருவிட்டாங்க. நான் என் துணிய கொடுத்தேன். போலிசு பண்ணது அராஜகம். பசங்க வந்தே மாதரம்னு சொன்ன பின்னாடியு அடிச்சாங்க. வந்தே மாதரம்னு சொன்ன அடிக்கலாமா? காந்தி தாத்தா போராட்டம் பண்ணாருனு சொல்லுவாங்க அத நான் பாத்தது இல்ல. ஆனா மாணவர் போராட்டத்த நான் பாத்தேன். வந்தே மாதரம்னு சொன்ன வெள்ளகாரன்தான் அடிச்சான்… ஆனா நம்ம பசங்கள இந்த போலீசு காரங்க அடிச்சாங்க. வந்தே மாதரம்னு சொன்ன போதும் அடிச்சது ரொம்ப தப்பு. ஆறு நாளா ரொம்ப அமைதியாக இருந்தது. போலீசு வேலைய அந்த பசங்கதான் செச்சாங்க. அவங்கள அனுப்பனுன்னு நெச்சிருந்த மொத நாளே அனுப்பியிருக்கனும். குழந்தைங்க, வயசானவங்க வெளியிலே போகனுனா டைம் ஆகும்ல. ஒடனே போகனுன்னு அடிச்சா எப்படி? கை குழந்த வைச்சிருந்தத கூட பாக்காம அடிச்சாங்க. அடி தாங்க முடியாம தான் கொஞ்ச பசங்க கடலு பக்கம் போனாங்க.   முக்கியமா இந்த பிரச்சனையே போலீசு வந்த பேசியிருக்க கூடாது. அதுக்குன்னு இருக்கும் ஆப்பிசர் வந்து பேசிருக்கனும். அடிச்சது கட்டகூட இல்ல. மச்ச கலர்ல இரும்பு பைப். கண்ணீர் பொகை ஏன் போட்டாங்க? போலீசு காரங்க பெரிய கல்ல எடுத்து ஒடைச்சு அதுல அடிக்கிறாங்க. அடி தாங்காம ஓடியாராங்கள ஏன் பாதுகாப்பு கொடுக்கிறீங்கனு எங்க அடிச்சாங்க. அவங்க எங்க போவாங்க. எல்லா பக்கமு சுத்தி போலீசு எல்லா பக்கத்திலேயும் சுத்தி சுத்தி அடிக்கிறாங்க. அப்ப இங்க தான ஓடியார முடியும். என் குழந்தைகாக போராட்றாங்க. நல்ல பாலுக்காக போராட்ராங்க எப்படி விட முடியும். போலீசுகாரங்க பொம்பளங்க எல்லாத்தையும் அசிங்க அசிங்கமா பேசராங்க. ஒருத்திய அடிச்சா எல்லாரும் ஓடிடுவாலுங்கனு சொல்லி அடிக்கிறாங்க. எல்லா ஆம்பளங்களையும் அரஸ்ட் பண்ணிடுவேன்னு மெரட்டிராங்க. நாங்க எல்லாம் துாங்கி 3 நாளாச்சு. ஒரு வீட்லயும் ஆம்பளங்க இல்ல. நானு வேலைக்கு போய் 3 நாளாட்சு. எங்க வீட்டுகாரு பெயின்டர் வேல செய்யாராரு. அவரு வேலைக்கு போல. கைகுழந்தைய வச்சிகிட்டு நான் கஷ்டபடுரன். ஆன எவ்லோ கஷ்ட பட்டாலு எப்போதும் போராட்டத்துக்கு ஆதரவா இருப்போம். அத நான் எங்க வந்தாலும் சொல்லு.

வண்டி எல்லாம் எரிச்சதா சொல்றாங்க. நீங்க டிவில பாத்திருப்பீங்க ஒரு பொம்பள போலீசு தான் மூச்சில கர்சீப் கட்டிகினு ஆட்டோவ எரிச்சா. கஷ்டப்பட்டு புள்ளைங்களுக்கு அப்பா அம்மா வண்டி வாங்கி கொடுத்திருகாங்க. அவங்க ஏன் அத ஒடைக்க போராங்க? போலீசு தான் வண்டிய ஒடைச்சுது.”

கிருஷ்ணாபேட்டையை சேர்ந்த செந்தாமரை இந்த பகுதி கலவரம் நடந்த இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் துாரத்தில் உள்ளது.

உண்மை அறியும் குழுவை பார்த்ததும் ஆவேசமாக துவங்கியவர் ”மீட்டிங் நடந்த இடத்திற்கு சம்மந்தமே இல்லாத 2 கிலோமீட்டர் தள்ளி இருக்கிற எங்க ஊருக்கு ஏன் போலீசு வரனு. பொம்பளங்க தனியா இருக்க கூடிய வீட்டுக்குள்ள போலீசு எப்படி நுழையலாம்.? ரவுடிங்க. போலீசு தான் ரவுடிங்க. வீட்டில துாங்கிட்டிருந்த என் தங்கச்சியோட மாராப்பு துணிய பிடிச்சு இலுத்து அவ கலுத்துல போட்டிருந்த 5 பவுன் செயின அருத்துட்டு போய்ட்டான் ஒரு ஆம்பல போலீசு. இவனுக தான் திருடனுங்க. திருடனுன்னு தான் அவனுங்க ஊருக்குள்ள நுழைச்சிருங்காங்க. அவனுங்களுக்கு பீச்சில தான வேலை. இங்க எதுக்கு வந்தாங்க?. இவ்லோ நாள நாங்க நகை போட்டிருந்தோம். நைட் சோ சினிமாக்கு போனோ ஆனா அப்போ எல்லாம் திருட்டு நடக்கல. போலீசு காரங்கதான் பாதுகாப்புனு சொன்னாங்க. அவனுங்க தான் இப்போ திருடிருக்காங்க. பொம்பளங்க தனியா தயிரியமா வீட்டில இருக்க முடியல. வன்முற பண்ணாங்கனு ஜெனங்கல சொல்றாங்களே அதுக்கு ஆதாரம் காட்ட சொல்லுங்க. அவன் வண்டிய ஒடைச்சதுக்கு, அடிச்சதுக்கு நாங்க வாட்சப்புல ஆதாரம் காட்டியிருக்கோம். போலீச அடிச்சதா சொல்றாங்க. போலீச பாத்தா பொம்பளங்க பயந்து தானே போவாங்க. எவ்ளோ பெஸ்ட்டா நடத்துனாங்க போராட்டத்த. எனக்கு 45 வயசு ஆகுது. இது மாதிரி ஒரு பெஸ்டா ஒரு போராட்டத்த பாத்தது கிடையாது. குடியரசு தினம் நடக்குது. நாங்க யாரும் போகல. இந்த மாதிரி குடியரசு தினத்திலே கூட சண்டை நடந்திருக்கு. பொம்பளய கிண்டல் பண்றது, திருட்டு எல்லாம் நடந்திருக்கு. ஆனா பசங்க நடத்தின ஜல்லிக்கட்டு போராட்டத்துல எதுவுமே நடக்கல. அவ்வளவு கண்ணியமா அந்த போராட்டம் நடந்தது. ஜல்லிகட்டு வேண்ணுறது எல்லாருக்கும் வேண்ணுறது தான். நம்ம பாராம்பரிய விளையாட்டு அது அதை எப்படி விட முடியும். மாணவர்கள் எல்லாத்தையும் அவ்வளவு பெஸ்டா நடத்தி காமிச்சாங்க. இவங்கனால எதுவு முடியாது. எங்க அடிச்சா அடங்கிடுவோம்னு நினைக்கிறாங்க. அடங்க மாட்டோம். இன்னும் எவ்ளோ இருக்கு. காவிரி பிரிச்சனை, விவசாயம் என கண்ணுக்கு தெரியாம எவ்ளோ இருக்கு. ஒரே நைட்ல 500 ரூபாய் 1000 ரூபாய நோட்டு செல்லாதுனு சட்டம் போட 2000 ரூபாய மாத்திரதுக்கு லைன்ல நின்னு ஆஸ்பத்திரிக்கு 2000 ரூபாய் செலவு பண்ணோம். பத்து நிமிஷத்துல அதுக்கு சட்டம் போட தெரிச்ச உனக்கு இதுக்கு சட்டம் போட தெரியாதா? எங்க உரிமைய உட்டு கொடுக்க மாட்டோம்.”

வி.ஆர். பிள்ளை தெரு, அனுமந்த புரத்தைச் சேர்ந்த ஹரீஷ் என்ற 16 வயது இளைஞர்

ஆம்புலன்ஸ் வண்டியில் உதவியாளராக வேலை பார்க்கிறார். அப்பா இல்லை. வேலைக்குச் சென்றால்தான் சோறு என்ற குடும்பம். வலது முழங்கை முழுவதும் கட்டு போட்டு கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்தது. கட்டுக்கு வெளியில் தெரிந்த விரல்களில் காய்ந்த ரத்தத்தை நம்மால் பார்க்க முடிந்தது. முதுகில் பட்டை பட்டையாக சூடியிருந்தது. தொடையில, மூஞ்சில், கண்ணுக்கு அருகில் இரத்தம் கட்டியிருந்தது.

“சாப்பிடுட்டு இருந்தேன். அப்போ ஓடு ஓடுன்னு சத்தம் கேட்டது, என்டான்னு பாக்கறதுக்குள்ள நெரைய போலீசுகாரங்க 10, 15 பேரு பயங்கரமா அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. வேண்ல தூக்கி போட்டாங்க. ஒடம்புல எல்லா இடத்திலேயும் கை, காலு, தலை என கண்ணு மண்ணு தெரியாம அடிச்சாங்க. வலி தாங்க முடியாம கத்தின. அப்பவும் விடல. என்னால நடக்கவோ கையால அசைக்கவோ முடியாம அப்படியே கிடந்தே. கொச்ச நேரம் வேன்லையே வைச்சு சுத்தினாங்க. வண்டிலே இருக்கும் போது அடிச்சிட்டே இருந்தாங்க. ஒவ்வொரு போலீஸ் ஸ்டேசனா கூட்டிட்டு போனாங்க. என்னோட சேந்து சில பசங்க இருந்தாங்க. அந்த ஸ்டேசன்ல இறக்கி விட கேட்டாங்க. எந்த ஸ்டேசன்லயும் ஒத்துக்கல. போலீஸ்காரங்க அடிக்கும் போது எல்லாரோட கை காலையும் ஒடைச்சறனுன்னு சொல்லியே அடிச்சாங்க. எனக்கு வலி தாங்கவே முடியல. செத்துடா நல்லாயிருக்கும் போல இருந்துது. தண்ணி கேட்டோம். தண்ணீயா கேக்கற. மூத்திரம் பேச்சுதரோம், குடிக்கிறியாடானு கேட்டாங்க. கடைசி வரைக்கும் தண்ணி குடுக்கவே இல்லை. மூனு மணிக்கு புடிச்சிட்டு போய் ஆறு இருக்கும் அப்போ சரியா தெரியல மயிலாப்புர் கிட்ட ஒரு இடத்தில இறங்கி ஓடுங்கடான்னு சொன்னாங்க. நடக்கவே முடியல, வண்டியிலே இருந்து எல்லாரையும் கீழே தள்ளிவிட்டுட்டு வண்டி போயிடிச்சி. அதுக்கப்பறம் போன் பண்ணி ஏறியாலேந்து எங்க அம்மா, அண்ணணுங்க எல்லா வந்து ராயபேட்ட ஆஸ்பத்திரிக்கு துாக்கிட்டு போனாங்க. டாக்டர் பாத்து எக்ஸ்ரே எடுத்தாங்க. கை பிரேக்சர் ஆயிடிச்சின்னு சொன்னாங்க. அங்க இருந்த போலீசுகாரங்க எஸ்ரே எல்லாம் வாங்கிட்டாங்க. எனக்கு மாவு கட்டு போட்டு அனுப்பிச்சிட்டாங்க. நைட்டு புல்லா துாங்க முடியாம இருந்ததாலே எங்க அம்மா பக்கத்துல இருக்கிற டாக்டர்கிட்டே கூட்டிட்டு போனாங்க. எனக்கு அப்பா இல்ல. எங்க அம்மாவையும், தம்பியையும் நான் தான் வேலைக்கு போயி காப்பாத்துர. வேலைமேல போன் பண்ணி சொன்னேன். ஓனரு நல்லான பிறகு வா பான்னு சொன்னாறு. வேலைக்கு போனா தான் சம்பளம். இப்போ சம்பளமு இல்லாம, டாக்டர்கிட்ட போயி பாக்க காசும் இல்லாம கஸ்ட படரோம்.

  • திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெருவைச் சேர்ந்த 22 வயது இளைஞர் பிரகாஷ், அவரது சகோதரர் விஸ்வநாதன் ஆகியோர் அவர்களின் வீட்டு வாசலில் அமர்ந்து இருந்தபோது சுமார் ஏழெட்டு அதிரடி படையைச் சேர்ந்த போலீசார் முழு கவசத்துடன் வந்து லத்தியால் வலது காலில் அடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. நாம் பார்க்கும்போது ரத்தம் கட்டி நடக்க முடியாத நிலையில் இருந்தார். தடுக்க வந்த அவரது சகோதரரை அந்த போலீஸ் கையால் அவரது முகத்தில் தாக்கியதில் முன்பற்கள் உடைந்து போனது. இதையொட்டி பகுதியில் சூழ்ந்திருந்த மக்களை பெண்கள் – குழந்தைகள் என்றும் பாராமல் அங்கு நின்றுகொண்டிருந்த பெண்களை “ஏன்டி தேவிடியா! இங்க என்னடி பண்ற! வீட்டுக்குள்ள ஓடிப்போ! இல்லன்னா மண்டைய ஒடச்சிடுவேன்“ என்று சொல்லி அடிக்க ஓடி வந்தனர் என்று அப்பகுதி இளைஞர் முருகவேல் என்பவர் நம்மிடம் தெரிவித்தார்.
  • தாக்குதலுக்கு உள்ளான மற்றும் ஒருவரான மணி, ஆட்டோ ஓட்டுனரை சந்தித்தோம். அவர் வீட்டில் நடக்க முடியாத நிலையில் அமர்ந்துகொண்டிருந்தார். நாம் வெளியில் அழைத்து பேசினோம். ஐந்து நிமிடம் அவரால் நிற்க முடியாமல் ஒரு  இருக்கை எடுத்துவரச்செய்து அவரிடம் பேசியதில் சுமார் பதினொன்னரை மணியளவில் தனது ஆட்டோவை நிறுத்துவதற்கு வந்தபோது விரைந்து வந்த அதிரடிப்படை போலீசார் அவரை சூழ்ந்துகொண்டு துப்பாக்கியை திருப்பி அடித்ததில் வலது கால் முட்டியில் பலத்த அடி ஏற்பட்டது. இவரிடம் பேசும்போது இதனால் நான்கு நாட்களாக ஆட்டோ ஓட்டும் வேலைக்கு போக முடியவில்லை. அதை வைத்துத்தான் பிழைப்பு நடத்துகிறோம் என்றார்.
  • பாதிக்கப்பட்ட துப்புரவு பணியாளர் குமார் என்பவரை சந்தித்ததில் வயது 40. வீட்டில் சும்மா உக்கார்ந்திருந்த என்னை போலீசார் ஓடிவந்து லத்தியால் அடிக்க வந்தனர். அதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்தேன். ஆனால் அந்த லத்தி என் கால் கட்டை விரலில் பட்டு நகம் பெயர்த்துக்கொண்டு வந்து இரத்தம் வந்தது. இதை நினைத்துப் பார்த்தால், “ஏதாவது பிரச்சினைன்னா போலீஸ் ஸ்டேஷனுக்கே போகக் கூடாதுன்னு தோனுது. ரொம்ப அராஜகம் செய்யராங்க சார்“ என்று கண்கள் கலங்கிய நிலையில் கூறினார்.

ரோட்டரி நகர்:

  • ரோட்டரி நகரைச் சோ்ந்த ராஜி (வயது 48) என்பவர் காவல் துறை உங்கள் நண்பன் என்று சொல்வதெல்லாம் பொய் என்றும். “என் கண்ணெதிரே பொம்பளங்கள பாத்து வாடி போடி தேவிடியான்னு திட்ரான். கேக்க போன என்னை லத்தியத் தூக்கி தலையில் அடிக்க வரும்போது நான் சென்னை மாநகராட்சியில் வேலை பாக்கிறவன் என்னை எதுக்கு அடிக்கிறிங்கன்னு கேட்டினுந்தப்ப பின்னாலருந்து வந்து போலீஸ் முதுகுல சரியான அடி. அடிச்சதுல தலையில ஆறு தையல். கை காலில் சரியான அடியும். முதுகில் பட்டை பட்டையா வீங்கியிருக்கிறது.
  • கே.சுரேஷ் என்ற (38 வயது). ஓட்டுனர் போலீஸ் கண்ணீர் புகைக் குண்டு வீசினர். எங்களை அடித்தனர். தொடர்ந்து பிரச்சினை தருகிறார்கள். எப்ப வீடு பூந்து தூக்குவாங்கன்னு தெரியல. வண்டிக்கு போகமுடியல. பெண் போலீசே அசிங்கமாக பேசுகிறார்கள். ஆண் போலீஸ் பெண்களை “வாங்கடி, வீட்டுக்குள்ள பூருவோம்“ என்று அசிங்கமா பேசுகிறார்கள். என்றார். முதுகில் அடித்த அடி இன்னும் மூச்சு விடமுடியல. ஊருக்குள்ள வரும்போது I.D Proof காட்டிட்டுத்தான் தெருவுக்குள்ள வரனும்னு சொல்லறாங்க. “நாங்க தீவிரவாதியா. நாங்க பிறந்து வளர்ந்த ஏரியாவில் நாங்க ஏன் ID proof காட்டனும். போலீஸ் திபு திபுன்னு ஓடிவந்தாங்க. பொம்பளங்கள மாராப்பு துணிய யெடுத்து அடிச்சாங்க என்றார்.
  • அனுமந்தபுரத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்ற 50 வயது பெண்மணி – போலீஸ்காரன் தமிழந்தான. எங்களுக்கு உணர்வு இருக்காதா? “தேவிடியாக்களா ஏன் உள்ள (போராட்டக்காரர்களை) விடுறீங்க“ என்று திட்டினர்“. அவர் ஆவேசமாக “உரிமைகளைப் பரிக்கக் கூடாது. எல்லோரும் இந்திய குடிமக்கள்தான்” என்றார்.
  • வி.ஆர்.பி தெரு, அனுமந்தபுரத்தைச் சார்ந்த பார்த்தசாரதி என்பவர் தனது உடைக்கப்பட்ட வீட்டுக்கதவைக் காட்டி. இங்க ஒரு பெண் வந்தார். அதுக்காக உள்ள பூந்து போலீஸ் அடித்தனர். பொம்பளங்கள வாடி போடின்னு போசினாங்க. காது கொடுத்து கேட்க முடியவில்லை என்றார்.
  • ஒரு Bike water wash கடையை முன்பு காய்ந்து கிடந்த ரத்தக்கரையை காண்பித்து அந்த கடையின் ஓனர் இந்த ரத்த கரைய பாருங்க. “எங்க கடையில வேலை செய்யர பையன் குகன், வாய் பேசத் தெரியாவனை அடி அடின்னு அடிச்சி மண்டைய உடைச்சிட்டாங்க. நான் அந்த சமயத்துல கடையில இல்ல. ஷட்டர இறக்கனவன இழுத்து போட்டு அடிச்சிருக்காங்க“ என்றார்.
  • விமலா என்ற 35 வயது பெண்மணி. எங்க வீட்டுல சோறு கொழம்பெல்லாம் கொட்டிடாங்க. வயசு பசங்க வந்து தண்ணி கேட்டாங்க. கொடுக்கரப்ப தண்ணி கொடுக்க விடாம, தண்ணி குடத்தை காலால் உடைத்துவிட்டு அந்த பசங்கள பிடித்துக்கொண்டு போய்விட்டனர். “வீட்டு கதவ ஒடச்சி, சோறு கொழம்பெல்லாம் கொட்டி நாசம் பன்னிடாங்க. குடிக்க தண்ணி குடுத்தது தப்புனா என்ன?” என்றார்.
  • அதே ஏரியாவைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க வசந்தி என்பவர் “இதுவரைக்கும் நான் பொறந்து வளந்த இந்த ஏரியாவுல போலீஸ் உள்ள வந்ததில்ல. ஆம்பள இல்லாத வீடு. ஏதோ நான் பொம்பள… பூ விக்கிறேன். பொம்பள பசங்கள விட்டுட்டு போறோம். நான் இல்லாத சமயத்துல வந்து தண்ணி குடத்தை உடைச்சி, டாய்லெட் கதவு என்ன பன்னுச்சி அதை உடைச்சி போட்டுட்டாங்க. (கழிப்பறை கதவு உடைத்து ஓரமாக வைக்கப்பட்டிருக்க கதவின்றி திறந்து கிடந்தது) வீட்டுக்கு செஞ்சி வச்ச சாப்பாடு கொழம்ப காலால தள்ளி ஊத்தியிருக்காங்க. பொம்பள பசங்கள இனிமே எப்படி நம்பி விட்டுட்டு போறது. வீட்டுக்குள்ள ஏன் வந்தானுங்க நாங்க என்ன பன்னோம். நியாயத்ததான கேட்டோம் என்றார்.
  • இரண்டு வீடு தள்ளியிருந்த செந்தாமரை என்பவர் என் தங்கச்சி வீட்டுல தணியா இருந்திருக்கா. வீட்டுக்குள்ள இருந்தவள மாராப்பு துணிய புடிச்சி தள்ளி அடிச்சி 5 பவுனு செயின அறுத்துகிட்டு போயிருக்கான் ஒரு ஆம்பள போலீஸ். அவளுக்கு appendix வலி தாங்க முடியாம கூடவே அதிர்ச்சி ஆகிவிட்டது. கோஷ் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம் என்றார். எங்க வீடுங்க சந்துல இருக்குது. பொம்பளங்க இப்படி பன்னலாமா. எவளாவது பொம்பளங்க கெடச்சிருந்தா போலீசு கெடுத்துட்டு போயிருப்பானுங்க என்றார்.
  • அருகில் நின்றிருந்த கண்ணியம்மாள் என்ற 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி காய்கறி கடை என்ன பன்னிச்சி அதை உடைச்சி நாசம் பன்னிடாங்க. ஷட்டரை இறக்கிவிட்டேன். அதுக்குள்ள காய்கறிகளை தூக்கி வீசி என்னை அடிச்சாங்க என்றார்.
  • சாந்தி என்ற பெண்மணி ”எங்க வீட்டில் நாலு பேருக்கும் அடி. போலீஸ்தான் தீவிரவாதி. போலிசில்ல ரவுடிங்க. ராவுல தூக்கமில்ல. இதோ வரான், அதோ வரான்னு பீதியா இருக்குது. என்னா பேச்சு… தேவிடியா எனன்னன்ட வாடின்றான். சொல்லமுடியல.. கிட்டவந்து உன்ன ஓப்பன்டின்றான் போலீசு”. அந்தம்மா பேசப் பேச நமக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

பள்ளி மாணவர்களையும் தாக்கிய போலிசு:

  • பெரியவர்கள் இப்படிப் கதற இந்து மேல்நிலைப் பள்ளியில் படிக்கும், மதன் என்பவரின் மகன், வசந்த் என்ற 11 வயதுச் சிறுவன், நான் கருப்பு கலர் T Shirt போட்டிருந்ததற்காக அடித்தார்கள். என் அப்பாவை அடித்தனர். எனக்கு வலிக்கிறது. வலதுபுற முதுகில் அடித்த காயம் காய்ந்திருந்தது. அந்தச் சிறுவனை இரத்தம் வர அடித்திருக்கிறார்கள். “எங்க அம்மாவை அடித்தார்கள் அசிங்கமா திட்டினாங்க என்றார். என்ன திட்டினார்கள் என்று கேட்டதற்கு “அப்படி பேசமுடியாது எங்க அப்பா அடிப்பார்” என்றார்.  ஜல்லி கல்லால அடிச்சாங்க. ரப்பர் புல்லட்டால் சுட்டனர். கண்ணீர் புகைக்குண்டு போட்டனர். நாங்க என்ன தீவிரவாதியா என்று கேள்வி எழுப்பினார்.
  • சுகுமார் என்பவரின் மகன் 13 வயதுடைய துஷ்யந்த் என்ற சிறுவன் வலது கையில் கட்டு போட்டு கழுத்தில் மாட்டியிருந்தார். அம்மா துணிகடையில வேலை செய்கிறார். அப்பா ஓட்டுனர். நான் ஸ்கூல் விட்டு வந்த வழியில பிள்ளையார் கோயிலில் நின்றிருந்தேன். லத்தியால புடிச்சி அடிச்சிட்டாங்க. “நான் கம்முன்னுதான் இருந்தேன். என்னை எதுக்கு அடிக்கனும். அடிச்சபிறகு ரொம்ப வலிக்குது. போலீசை சுத்தமா பிடிக்கல. திருப்பி அடிக்கனும்னு தோனுது” என்றார்.
  • பிரதாப் என்ற 11 வயது சிறுவன் போலீஸ் பாட்டிலால அடிச்சாங்க எம்மேல பட்டுச்சி என்றார்.
  • பிரகாஷ் என்ற 13 வயது சிறுவன் கடைக்கு போகலாம்னு போனேன் போலீஸ் கல்லு தூக்கி அடிச்சி கையில பட்டு காயமானது என்று கையிலிருந்த காயத்தை காட்டினார்.
  • காவ்யா என்ற 15 வயது சிறுமி கே.வி. பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். 30ம் தேதி தேர்வு இருக்கிறது. ஆனால் பள்ளிக்கு போக முடியவில்லை. அப்பாவைப் பார்த்தால் அடிப்பாங்களோ. பிடிச்சிகிட்டு போய்டுவாங்களோ என்று பயமாக இருக்கிறது. பாக்கெட்டில் செல்போன் வீடியோ எடுக்கறாங்க. எதுக்கு வீடியோ எடுக்கறாங்கன்னு கேட்டா திருட்டு கேஸ் போட்டுவோம்னு மிரட்டராங்க. மறுநாள் எங்களயெல்லாம் டிவியில காட்டினாங்க என்றார். நாங்க பசங்க வேடிக்கைதானே பார்த்தோம். முதலில் கல் எரிந்தது போலீஸ்தான். தீ வைத்தது போலீஸ்தான். இதை எப்படி பார்த்துக்கொண்டிருப்பது. அடித்தால் அடிப்போம். இது அரசியலா? ஜனநாயகமா? பசங்க வந்தே மாதிரம் என்று சொன்ன போது அடிச்சாங்க. காந்தி சுதந்திரம் வாங்குவதற்காக வந்தே மாதிரம்னு சொன்னாறு. அதையே பசங்க சொன்னபோது எப்படி அடிப்பார்கள். அந்த வார்த்தைக்கு மரியாதை தரவிலை. எனக்கு தேசப்பற்று இருக்கிறது. எங்க வீட்டில் போலீஸ் ஆகனும்னு ஆசை இருந்தது. தற்பொழுது ஆகமாட்டோம் என்றார்.
  • குரு வித்யா பள்ளியில் படிக்கும் 7 வயது கௌதம் போலீஸ் கல்லால் அடித்து முட்டியில் அடி என்று தனது முட்டியில் ரத்தம் காய்ந்திருந்த காயத்தை காட்டினார். “என்னை அடிச்சாங்க, எங்க அம்மாவையும் அடிச்சாங்க” என்றார். புவனேஷ் என்ற 8 வயது சிறுவன் ”நான் ஜல்லிக்கட்டுக்கு போகலன்னு சொல்லியும் கேக்காம எதையோ தூக்கி அடிச்சாங்க. கொண்ணுருவோம்னு சொன்னாங்க“. என்றார்.
  • குரு வித்யா பள்ளியில் படிக்கும் கல்யாணி என்ற 11 வயது சிறுமி பள்ளியிலிருந்து வரும்பொழுது கல்லால் அடித்தனர். தம்பி மேலும் கல் பட்டது. எங்க அப்பாவுக்கு காலில் அடி என்றார்.
  • கிருஷ்ணாம்பேட்டை, முனுசாமி நகரைச் சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் என்ற 40 வயதுடையவர் தன் கையில் இருந்த நீண்ட காய்ந்த இரத்தகோட்டினை காட்டி, எக்ரேயில் லேசாக கிராக் இருப்பதாகச் சொன்னாங்க. கே.வி. பள்ளியில் படிக்கும் தனது குழந்தைகளை அழைத்துவரச் சென்றபோது கண்ணகி சிலை அருகில் மடக்கி அடித்துவிட்டனர். பைக்க அடித்து உடைத்துவிட்டனர். சாவுக்கு வந்தவங்கள கூட விடல அடி அடியென்று அடித்துவிட்டனர் என்றார். அரசு மருத்துவமணைக்குப் போனால் கலவரக்காரர் என்று வழக்கு போட்டுவிடுவார்களோ என்று பயந்து தனியார் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார். அடிச்சி விரட்டினாங்க. போலீஸ் உள்ள பூந்த பிறகுதான் கலவரம். கொலுத்தன போலீஸ் பொம்பள. ஏட்டா இருக்கும்போதே இப்படி பன்னா மேல்பதவிக்குப் போனால் என்ன பன்னவாங்க. “ஜார்ஜ் மார்பிங் என்று சொல்கிறாரே. அரைமணிநேரத்தில் மார்பிங் செய்ய முடியுமா? ஒரு கமிஷனர் இப்படிப் பேசலாமா? 6 நாள் அமைதியாதான இருந்தது. மாணவர்களுடைய அறப்போராட்டத்தைத்தான பாத்தாங்க. அதிகாரத்தை கையில எடுத்தா என்ன செய்வாங்க தெரியுமா? வத்திபெட்டி வாங்கினாலும் வரி கட்டுறோம். குடியரசு தினம் எங்களுக்கு கருப்பு தினம் என்றார்.
  • அதன்பின் அவ்வூர் மக்கள் ஆனந்த் என்பரை அழைத்துவந்து காட்டியபோது தான் வேலைக்குப் போகும் போது வழியில் கண்ணீர் புகைகுண்டு போட்டார்கள். பயந்து ஒதுங்கி நிற்கும்போது போலீஸ் சுற்றி வளைத்து அடித்தார்கள். இடது முழங்கை உடைந்துவிட்டது. அதற்காக ஆப்பரேஷன் செய்திருக்கிறேன். நகைகளை அடமானம் வைத்து 45000 ரூபாய் செலவு செய்து வைத்தியம் பார்த்திருக்கிறேன். மூன்று மாத குழந்தை உள்ளது. அப்பா அம்மா கிடையாது. அக்காதான் பார்த்துக்கொள்கிறார். நான் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் போராட்டத்தை ஆதரிக்கிறேன். யாரும் சமூக விரோதியல்ல. எங்களை ரவுடி போல நடத்திய போலீஸ்தான் தீவிரவாதி. அதற்குமேல் அவரால் நிற்கவோ, உட்காரவோ முடியவில்லை. ஆகையால் அவரை ஓய்வெடுக்கச் சொல்லி அனுப்பிவிட்டோம்.

மாட்டாங்குப்பம்

  • பிரேம்நாத் நீச்சல் வீரர் இவர் பல நுாறு நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு பல நுாறு மெடல்களையும் சான்றிதழ்களையும், முதலமைச்சரிடம் விருதுகளையும் பெற்றவர். இதனால் இரயிவே துறையில் வேலை பெற்றவர். தற்போது சீனியர் டி.டி.ஆராக பணிபுரிந்து வருகிறார். இவரின் அம்மாவை சந்தித்த போது” சம்பவம் நடந்த அன்று வேளச்சேரி ரூட்டில் இரயில்களை நிருத்திவிட்டதால் மதியம் 1 மணிக்கே வீடு திரும்பி விட்டான். எப்போதும் போல் வீட்டின் வாசலில் நண்பனுடன் நின்று பேசிக்கொண்டிருந்தான்.  தீடீரென நுழைந்த போலீசு அடிக்க ஆரம்பிச்சுடாங்க. தலைய குறிபாத்து அடிக்க போனப்போ அவன் தலைய காமிக்காம முழுக்க இரண்டு கையையும் துாக்க இரண்டு கையையும் சரமாரியா அடிச்சு காவாகிட்ட துாக்கி போட்டுடாங்க. கை, கால் என மாறி மாறி அடித்ததில் கை, கால் எல்லாமே நொருங்கி போச்சு. அவனோட ID Card – யை காம்ச்சிருக்கா. Central Government Staff – னு சொல்லிருக்கு, ID Card ச்சி மயிராச்சுன்னு அவன்ட்ட இருந்த எல்லா காடையும், செல்போனையும் புடுங்கிகிட்டாங்க. ஏன் புள்ள இப்படி கை கால் நொறுங்கி இருக்குது ஆனா அவன ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணாம கொலை கேசு போட்டு ஜெயிலுக்கு அனுப்பிச்சுடாங்க. இரயில்வே ஸ்டாப்புன்னு வெளியே சொல்லகூடாது, எங்கேயும் கம்லைன்ட் கொடுக்ககூடாது அப்படி வெளியே சொன்ன, அவன் சட்டைய கலட்டாம விடமாட்டோன்னு, புழல் ஜெயிலே என்ன வேன்னாலும் நடக்குனு சொன்னாங்க. என் புள்ள பொருக்கி கிடையாது, ரவுடி கிடையாது அவன எதுக்கு ஜெயில வைக்கனும்? பெயில வெளில விடனுனா 10,000 ரூபாய் கட்டனுன்னு நேத்து டிவில சொல்ராங்க. ஏழைங்க எப்படி கட்ட முடியும்? எதுக்கு கட்டனு? டெயிலி கையெழுத்து போடனுமா? எப்படி வேலைக்கு போரது?  யாரும் எந்த பொறுக்கி தனமும் பண்ணல. எந்த ரவுடித்தனமும் பண்ணல. நாட்டுக்காக பாடுபட்ட என் புள்ளைய இப்படி நாசமாக்கிடாங்க. எம்புள்ளய அடிக்கும் போது எப்படி கத்தின கதறினேன். எதையுமே கேக்காம எதுக்கு அந்த பசங்கள சேத்துவைச்சீங்க தேவிடியாங்கள துணிய உருவிட்டு அடிப்போம். அவனுங்க போலிசே இல்ல பொம்பள பொறுக்கிங்க. ரவுடி வீரமணி இருக்கும் போது கூட இப்படி இல்ல. எனக்கு 18 வயசு இருக்கும். அப்போ மீனவ ஜெனங்க மேல குண்டடி நடத்தினாங்க. அப்ப கூட இப்படி இல்ல. போலீசு கார சொல்றா நாங்க அடிக்கும் போது உயிர் மட்டுதான் போகாதமாறி அடிப்போ எல்லா உடல் உறுப்பும் நாசமாயிடும். ஒரு ஆம்பள கூட வீட்ல இருக்க கூடாதுன்றான். ஊருல ஒரு ஆம்ள கூட இல்ல. நாங்க சொந்த வீடு வைச்சுட்டு அதுல இருக்க முடியல. நீங்க பீச்ல அனுமதி கொடுத்தீங்க… அது மாதிரி நாங்க வீட்ல பாதுகாப்பு கொடுத்தோம். மீனவங்க அந்த பசங்களுக்கு தையிரியம் கொடுத்திருக்கீங்க. மீனவர்களையும் முஸ்லீம்களையும் துாக்குவோம்னு எங்கள மிரட்டுராங்க.
  • சென்னை GPOவில் வேலை பார்க்கும் சேகர் என்பவர் வேலைக்குப் போய்விட்டு வந்தவரை மடக்கி அடித்து நொறுக்கி பாலத்தில் தூக்கிப் போட்டுவிட்டனர். யாரையும் அவரை தூக்கக் கூட விடாமல் அடித்தனர். போலீஸ் அடித்ததில் தலையில் பத்து தையல் போடப்பட்டுள்ளது. தொடைக்கு மேல் நரம்பு அறுந்துவிட்டது. கோஷ் மருத்துவமணையில் காலை எடுக்க வேண்டுமென்று சொல்லிவிட்டதால், மியாட் தணியார் மருத்துவமணையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும், அறுவை சிகிச்சைக்காக இதுவரையில் 75 ஆயிரம் வரை கட்டியுள்ளதாக அவரது மனைவி கல்பனா தெரிவித்தார்.
  • அதைத் தொடர்ந்து பக்கத்து தெருவில் அம்சா என்ற பெண்மணி போலீஸ் எங்களவிட பச்ச பச்சையாய பேசறாங்க. ராத்திரியெல்லாம் தூக்கமில்லாமல் புகையை போட்டுகொண்டு உக்கார்ந்துகிட்டிருக்கிறோம் என்றார். எதிர்வீட்டிலிருந்து நீங்கள்ளாம் உடனே வரக்கூடாதா? இப்பதான் வரீங்களா? என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவராகத் தென்பட்டது. ஒரு பெண் நண்பர் அருகில் சென்று என்ன பிரச்சினை என்றது மளமளவென கண்ணீர் கொட்ட உள்ளே அழைத்துப் போய் புடவையை தூக்கிக் காட்டினார் தொடைக்கு மேல் ஒரு கையளவு கருத்து கண்ணிப்போயிருந்தது. கால் தொடையில் பட்டை பட்டையாய் சூடியிருந்தது. இன்னும் சில பெண்களும் வந்து இது போன்ற காயங்களையும் காண்பித்தனர். இதை எப்படி வர்றவங்ககிட்ட நாங்க காட்ட முடியும். நாங்க என்ன பண்ணோம். “ஓட்டு கேக்க வரட்டும் பீய கரச்சி ஊத்தறோம்” என்று கண்ணீர் வழிய தேம்பினார். சில பெண்கள் நாங்கள வீட்டு மாடியில் இருந்தோம். எங்கள பார்த்து “வாங்கடி தேவிடியாக்களா என்று ஆண் போலீஸ்காரர்கள் கூப்பிட்டனர். “Bridge மேலயிருந்து ஜிப்ப அவுத்து உறுப்ப காட்டி வாங்கடின்னு காட்டி கூப்பிடுறானுங்க. பச்சை பச்சையா பேசறாங்க” என்றார்.
  • புவனேஸ்வரி என்ற பெண் ஓடிவந்து என்னுடைய அண்ணன் ராஜசேகர் என்பவரை அன்றைய தினம் போலீசார் சராமாரியாக தாக்கி பிடித்துக்கொண்டு போய்விட்டனர். அவர் இப்பொழுது ஜெயிலில் உள்ளார். அவர் தூய்மைப் பணி வேலை செய்பவர். அவருக்காக பிணை எடுக்கவும் எங்களிடம் எந்த பணமும் இல்லை. அதற்காக என்ன செய்வதென்றும் தெரியவில்லை என்று தன் கையறு நிலையைத் தெரிவித்தார்.
  • தேசிங்கு என்ற 57 வயது மதிக்கத்தக்கவர் – பேரப்பசங்கள வைச்சிகிட்டு நின்றிருந்தேன். போலீஸ் கல்லால் அடித்து இரண்டு தையல் போடுமளவுக்கு காயம் என்று காலில் தையல் போட்டிருந்த காயத்தைக் காட்டினார்.
  • விக்டோரியா ஹாஸ்டல் பின்புறம்  50 வயது மதிக்கத்தக்க வசந்தி என்ற பெண்மணி தலை முழுக்க கட்டு போட்டிருந்தார். பார்ப்பதற்கே மனம் பரிதவித்தது. நான் வீட்டுக்குள்ள இருந்தேன். ஒரு மாணவன் உயிருக்கு பயந்து ஓடிவந்து என் வீட்டில் ஒளிந்தார். 3 போலீஸ் என் வீட்டு கதவை உடைத்து என் மண்டையை உடைத்தனர் என்றார்.
  • வினோத் என்ற 29 வயதுடைய இளைஞரை 7 போலீசார் அடித்துள்ளனர். முகம் முழுக்க காயங்கள் மற்றும் வாய் திறக்க முடியாமல் தையல் போடப்பட்டிருந்தது. Staw வைத்து திறவ உணவு மட்டும் தான் அவரால் சாப்பிட முடிகிறது என்று அருகிலிருந்தவர்கள் தெரிவித்தனர்.
  • ஏலாயி என்ற பெண்மணி தனது சிறிய வீட்டை காண்பித்தார். கதவு தொடங்க ஒவ்வொரு பொருளும் நொருக்கப்பட்டு சிதறிக்கிடந்தது. அதனுடன் ஒரு போலீஸ் தொப்பியும் கிடந்தது. “2000 ரூபாய் வாட்ச்ச காணோம். நேத்து அண்ணாநகர் போலீஸ் வந்து தொப்பிய கேட்டார். நான் தரல. காச எடுத்கினு போயிட்டாங்க”. நாம் உள்ளே கால் வைத்தபோது பார்த்து கண்ணாடி துண்டுகள் கிடக்கின்றன என்று எச்சரித்தார். எங்க வீட்டுல இரண்டு மூனு பசங்க பயந்து பதுங்கியிருந்தாங்க. என்னை அடித்த அடியில் தாங்க முடியாமல் நான் ஓடிவிட்டேன். அந்த பசங்கள அடி அடின்னு அடிச்சாங்க என்ன ஆனாங்கன்னு தெரியல என்று வீட்டு வாசலில் திட்டு திட்டாக காய்ந்திருந்த அந்த மாணவர்களின் ரத்தக்கறைகளைக் காண்பித்தார். போலீஸ்காரங்க பேசறத கேக்க முடியவில்லை “முண்ட மவள, புண்டய அறுத்துடுவோம்“ னு எங்கள பாத்து கேட்டானுங்க. சும்மா விடமாட்டோம். யாருக்கும் ஓட்டு போடமாட்டோம்”. என்றார். 
  • முரளி என்ற 40 வயது மதிக்கத் தக்கவர் நல்ல உயரமான சிவந்த நிறமுடைய அவர் சட்டையை கழற்றி முதுகைக் காட்டினார். ஒரு இடம் விடாமல் பட்டை பட்டையாய் சூடியிருந்தது. அவருடைய அருகில் இருந்த ஒரு பெண்மணி அவரை அடிக்காதீர்கள் நாங்கள் மீன் வியாபாரம் செய்பவர்கள், யாருக்கும் தொந்தரவு கொடுப்பவர்கள் அல்ல என்று அவருக்காக போச வந்தபோது “அப்படியா மீன்கார கட்ட, செம கட்டயா மாட்டிகிச்சின்னு என்னையும் மானபங்கப்படுத்த வந்தார் ஒரு போலீஸ்” என்றார். உடல் முழுக்க ரத்தம் கட்டி சூடியிருந்தது. அந்தம்மா 24.01.2017 அன்றைய தினகரன் நாளிதழில் வெளிவந்த முரளியை போலீஸ் தாக்கும் படத்தை  நம்மிடம் காண்பித்தார்.
  • இதற்கிடையே வந்த கலா என்ற பெண்மணி காய்கறி வியாபாரம் செய்பவர். அந்த வழியாக வந்துகொண்டிருந்த என்னை மாரியம்மாள் என்ற பெண் போலீஸ் என்னை பிடித்து அடித்து வியாபாரம் செய்த பணமாகிய ரூபாய் 5,000 த்தை என்னிடமிருந்து பலவந்தமாக பறித்துக்கொண்டு போடி நாய என்று திட்டி அடித்து ஓடவிட்டார் என்றார்.
  • இரண்டு வீடு தள்ளியிருந்த துரை என்பவரை சந்தித்தோம். அவர் வி.ஜி.பி கோல்டன் பீச்சில் உள்ள கடையில் வேலை செய்பவர். 23.01.2017 அன்று ஒரு மாணவர் உயிர்பிழைத்து ஓடி வந்து எங்கள் வீட்டிற்குள் ஓடிவந்து அவரைத் துரத்தி வந்த 10-க்கும் மேற்பட்ட போலீசார் அவரை சராமாரியாக தாக்கி அவரது பிறப்புறுப்பில் பூட்ஸ் காலால் எட்டி எட்டி உதைத்தனர். போலீஸ்காரரை தடுக்கப்போன என் கையை பைப்பை வைத்து அடித்ததில் என் இடது முழங்கை உடைந்துபோனது. முழு கட்டுடன் நம்முடன் பேசிய அவர் தன் கை உடைந்ததை விட அந்த 20 வயது மாணவன் இங்கேயே தலை தொங்கி விழுந்துவிட்டான். மருத்துவமணைக்குப் போகும் போது அவன் இறந்துவிட்டான் என்று சொல்லி வருத்தப்பட்டார்.
  • லட்சுமி என்ற 70 வயதுப் பெண்மணி என்னை அடித்தார்கள். வீட்டு தாழ்பாளை உடைத்தார்கள் என்று உடைக்கப்பட்ட தாழ்ப்பாளை கையில் கொண்டுவந்து காண்பித்தார். அவருடைய கணவரை காண்பித்து பெரியவரை முதுகிலேயே அடித்துவிட்டனர். “இத்தன வயசாயி இப்படி பார்த்ததில்லை. ராவுல படுக்க முடியலஎன்றார். ஒரு வயதான பெண்மணி “நான் மீன் வித்து பொழக்கிறேன். பக்கத்தில் இருந்தவர் “ஒரு பையன் ஓடறப்ப பர்ஸ் கீழ விழுந்துடுச்சி அதை எடுத்துவச்சிகிட்டான் போலீசு“ என்றார்.

நடுக்குப்பம்:

  • சுமார் 384 கடைகள் கொண்ட மீன் மார்க்கெட் முழுவதுவதுமாக போலிசாரால் எரிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் நிறுத்திவக்கப்பட்டிருந்த கார் உட்பட இரு சக்கர வாகனங்கள் போலீசாரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியை சார்ந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கண்ணில் மறையாத மரண பயத்துடன் நம்முடன் பகிர்ந்து கொண்டது. ”போலிசு காரங்க அடிச்சதும் தாங்கமுடியாம பொம்பள பசங்கக்கூட சட்டை கிழிஞ்சி, காப்பத்துங்கனு ஓடிவந்தாங்க, 6 நாலா எந்த பிரச்சினையும் இல்லாம அமைதியா போராடினு இருந்தவங்கள போலிஸ்காரங்க ஏன் இப்படி பண்ணனும் ?   வேலியே பயிரை மேய்ஞ்சிடிச்சி. அவங்க தான் மக்களை பாதுகப்பாங்கனு சொன்னாங்க . ஆனா அவங்க பண்ணதுதான் பெரிய அராஜகம். பசங்கள எப்படி தங்க வைக்கலாம்னு சொல்லி அடிசாங்க, வீட்டுங மேல கல்லு, சோட [பாடில்லாம் அடிச்சாங்க . 20 கிலோ மீனை எடுத்துக்கினு போய்ட்டாங்க. லேடி வெலிங்டன்ல கேம்ப் போடிருக்காங்களே , அங்க சமைச்சி சாப்பிட எடுத்துனு போய்ட்டாங்க..   கண்ணீர் புகை குண்டு வீசினாங்க, என்னோட பேத்திக்கு ஒரு வயசு கொழைந்த . மூச்சு தெனரி அழுதது. செத்துபொய்டுமோனு பயந்தோம். மார்க்கெட்ட மட்டுமில்ல, இங்க  நின்னூகிட்டு இருந்த வண்டிங்க எல்லாத்தையும் அடிச்சாங்க ,அதோ நிக்கிரதே அந்த காரையும் எரிச்சாங்க. எதோ மருந்து பொடிய தூவிதான் எரிச்சாங்க, நல்ல வேலை நாங்க தண்ணிய ஊத்தி அணைச்சிட்டோம். இல்லானா நெருப்பி அப்படியே பரவி வீட்டுக்குள்ள புடிச்சி இருக்கும். கரண்டுல்லாம் பத்தியிருந்தா என்னா ஆவரது? நாங்க செத்து போயிருந்தா என்ன ஆவுரது?”
எண் பெயர்/பாலினம்/வயது உடல் ரீதியான பாதிப்பு உடமை இழப்பு
1 அஞ்சலை/பெ 50
க.பெ.முருகானந்தம் பிரசாந்த்
2, ரூதர் புரம்
கால் கையில் கடுமையானகாயங்கங்கள் ஜன்னல் உடைப்பு ஆட்டோ முற்றிலும் எரிப்பு TN 07BF4137 இரு சக்கர வாகனம் முற்றிலும் எரிப்புTNO96104
2 சக்தி வேல்
5, ரூதர் புரம்
ஆட்டோ கண்ணாடி உடைப்பு TN07 9787
3 லட்சுமி /பெ
27, ரூதர் புரம்
2 சக்கர வாகன சேதம்
4 ரீட்டா/பெ/47
27, ரூதர் புரம்
தலையில் லத்தி அடி வீக்கம் 2 சக்கர வாகன சேதம்TN 82 Z 8672
5 இன்ப ராஜ்/ஆ/30
27, ரூதர் புரம்
காலில் காயம்
6 சாந்த லிங்கம்/ஆ/39
27, ரூதர் புரம்
2 சக்கர வாகன சேதம்TN 22 CL 2932
7 சிவகாமி/பெ/34
27, ரூதர் புரம்
மகன் கைது (கிருபாகரன்) வீட்டின் மேற்கூறை சேதம்
8 ஈஸ்வரி/பெ/
26, ரூதர் புரம்
காலில் லத்தி அடியினால் காயம் மகன் மகேஷ் உடல்முழுவதும் காயம் மருத்துவமனையில் உள்ளார் கதவு உடைப்பு , இரு சக்கரவாகனம் எரிப்பு TVS 50
9 பாக்கியம்/பெ/36
22, ரூதர் புரம்
ஆட்டோ முற்றிலும் எரிப்பு TN 07 4342
10 ஆறுமுகம்/ஆ/48
22, ரூதர் புரம்
ஆட்டோ முற்றிலும் எரிப்பு TN 06 B9049
11 மங்கையரசி/பெ/35
22, ரூதர் புரம்
விக்கி ராஜா, தீபன், ராஜ் என்கிற நந்தகுமார் அடித்து கைது
12 ரவீந்திரன்/ஆ/31
22, ரூதர் புரம்
ஆட்டோ முழுமையான சேதம்
13 கௌரி /பெ/37
22, ரூதர் புரம்
தலையில் ரயில் பாதை கருங்கல்லால் தாக்கபட்டு காயம்
14 மலர் /பெ/
22, ரூதர் புரம்
கதவு.கண்ணாடி,ஓடு உடைப்பு
15 ராணி பெ/30
22, ரூதர் புரம்
கர்பிணி பெண்ணை அடித்து காயம் வீடு மேற்கூறை உடைப்பு
16 நளினி/பெ/45
14, ரூதர் புரம்
கதவு மேற்கூறை உடைப்பு
17 பரமேஸ்வரி/பெ/39
14, ரூதர் புரம்
கதவு மேற்கூறை உடைப்பு
18 சரண்யா பெ/31
ரூதர் புரம்
கதவு மேற்கூறை உடைப்பு
19 ஜெகதம்ப்பாள் /பெ/31
ரூதர் புரம்
கதவு மேற்கூறை உடைப்பு
20 நாகேஷ்வரி /பெ/25
16 ரூதர் புரம்
மேற்கூறை உடைப்பு
21 புஷ்பா /பெ/50
17, ரூதர் புரம்
மேற்கூறை உடைப்பு
22 சூர்யா /ஆ/22
32 ரூதர் புரம்
உடல் முழுவதும் பலத்த காயம்
23 சசிகலா /பெ/25
17 ரூதர் புரம
கதவு உடைப்பு
24 சுதாகரன் 24 மாஞ்சா கோவில் கைது
25 வைதீஸ்வரி/பெ/
18, ரூதர் புரம்
பாட்டில்கள் வீசி மேற்கூறை சேதம்
26 கனிமொழி/பெ/22
ரூதர் புரம்
உடலில் காயம் கதவுகள் உடைப்பு
27 தங்கமணி/பெ/10
ரூதர் புரம்
உடலில் காயம் கதவுகள் உடைப்பு
28 சுஜாதா/பெ
988442466055
ரூதர் புரம்
ஆட்டோ எரிப்பு TN07AZ2802
29 ஈஸ்வரி/பெ/33
10 ரூதர் புரம்
கார் சேதம் TN22CU8556
30 சாந்தி/பெ/35
ரூதர் புரம்
கதவுகள் சேதம்
31 கமலா
6 மீனாம்பாள் புரம்
கதவுகள் சேதம்
32 நாகம்மாள்/பெ/70
6 மீனாம்பாள் புரம்
லத்தியால் அடித்து கை, காலில் காயம்
33 மணிகண்டன்(எ)சுகுமார்/ஆ/47
மீனாம்பாள் புரம்
கைது செய்யப்பட்டுள்ளார்
34 செல்வக்குமார்/ஆ/24
43, மீனாம்பாள் புரம்
ராயப்பேட்டையில் அனுமதிக்கபட்டுள்ளார்
35 ராஜராஜன் 27
மீனாம்பாள் புரம்
கைது செய்யப்பட்டுள்ளார்
36 வாசுகி/பெ/45
45, மீனாம்பாள் புரம்
தலையில் 7 தையல் போடப்பட்டுள்ளது கையிலும் காயம்
37 ரமணி/பெ/48
33, மீனாம்பாள் புரம்
கதவுகள், மேற்கூரை சேதம்
38 கொல்லபுரி/ஆ/45
52, மாயாண்டி காலனி
காலில் தாக்கியுள்ளனர் 10 தையல் போடபட்டுள்ளது
39 முரளி/ஆ/27
122, மாட்டாங்குப்பம்
பலமாக தாக்கியுள்ளனர் தலை, முதுகில் காயம்
40 துரை/ஆ/40
1/3, மாட்டாங்குப்பம்
கையில் காயம்
41 வசந்தி/பெ/30
1/1, மாட்டாங்குப்பம்
தலையில் காயம்
42 முகமது பாசித் கான்
1/1, மாட்டாங்குப்பம்
உடலில் காயம்
43 கலா/பெ/55
மாட்டாங்குப்பம்
காலில் அடித்துள்ளனர்
44 லட்சுமி/பெ/37
மாட்டாங்குப்பம்
உடலில் அடித்துள்ளனர்
45 ராஜேஸ்வரி/34
மாட்டாங்குப்பம்
காலில் அடித்துள்ளனர்
46 ஜானகி/பெ/45
மாட்டாங்குப்பம்
காலில் அடித்துள்ளனர்
47 பழநி/ஆ/24
மாட்டாங்குப்பம்
தையல் போடப்ட்டுள்ளது
48 சங்கீதா/பெ/25
மாட்டாங்குப்பம்
காலில் அடித்துள்ளனர்
49 தமயந்தி/பெ/68
122, மாட்டாங்குப்பம்
காலில் அடித்துள்ளனர்

 

 1. கபூர் உசைன் ஆ/ 43 சண்முகம் பிள்ளை தெரு உடல் முழுதும் கடுமையாக தாக்கப்பட்டு , கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார்.
 2. தனலஷ்மி பெ/ 60 சண்முகம் பிள்ளை தெரு லத்தியால் அடித்ததால் 2 கால்களிலும் வீக்கம் TN05AD 4663 எண்ணுள்ள இரண்டு சக்கர வாகனம் போலிசாரால் உடைக்கப்பட்டது
 3. தமிழ்செல்வன்ஆண்/9 சண்முகம்பிள்ளை தெரு லத்தியால் வலது கரத்தில் தாக்கியதால் கை வீக்கம். வழக்கு போடப்பட்டுள்ளது. தடுக்க வந்த அம்மாவை ஆபாச வார்த்தைகளால் திட்டினர்.
 4. எட்டியப்பன் ஆ/35 சண்முகம்பிள்ளை தெரு வாகனம் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
 5. பிரபு ஆ / 20 சண்முகம் பிள்ளை தெரு மண்டை உடைப்பு, காலில் தையல் போடப்பட்டுள்ளது.
 6. சிவா ஆ/26 ஏகாம்பரம்பிள்ளை தெரு வாகனம் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
 7. சந்தோஷ் ஆ/26 ஏகாம்பரம்பிள்ளை தெரு உடல் முழுவதும் காயம் கொடுரமான தாக்குதல்
 8. சுப்பிரமணி ஆ/54 ஏகாம்பரம்பிள்ளை தெரு வீடு சேதப்படுத்தப்பட்டு நாசம் செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 9. சுரேஷ் ஆ/27 ஆறுமுகம்பிள்ளை தெரு கற்கலால் அடித்ததில் வீட்டின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டுள்ளன.
 10. தமிழ் செல்வி ஆறுமுகம்பிள்ளை தெரு தொடையில் பலமான அடி
 11. முத்துவேல் ஏகாம்பரம் பிள்ளை தெரு இடுப்பில் பலத்த அடி
 12. ராணி ஏகாம்பரம்பிள்ளை தெரு கை, கால்களில் ரத்தகட்டி பலமாக காயம் உள்ளது. வீடும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
 13. இந்திராணி ஏகாம்பரம்பிள்ளை தெரு பலமாக அடிப்பப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளார்
 14. சுரேஷ் ஏகாம்பரம்பிள்ளை தெரு ஆட்டோ கண்ணாடி சேதப்படுத்தப்பட்டுள்ளது.
 15. அருண் ஆறுமுகம்பிள்ளை தெரு உடல் முழுவதும் பலத்த அடிபெற்று புழல் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
 16. கலைச்செல்வி ஆறுமுகம் தெரு வண்டி சேதப்படுத்தப்பட்டுள்ளது.
 17. கோமதி ஆறுமுகம் தெரு காலில் இரும்பு கம்பியால் அடி வீட்டை சூறையாடியுள்ளனர்.
 18. முனியம்மாள் ஆறுமுகம் தெரு வீடு தாக்கப்பட்டுள்ளது
 19. ரேவதி ஆறுமுகம் தெரு காலில் காயம்
 20. கற்பகம் ஆறுமுகம் தெரு வீடு சேதப்படுத்தப்பட்டுள்ளது
 21. ரூபாவதி ஆறுமுகம் தெரு லத்தியால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

III.  எமது குழு வந்தடைந்த முடிவுகள்

  1. மேற்கண்ட வகையில் நாங்கள் சந்தித்த மக்கள் மிகவும் சொற்பமானவர்களே. தாக்குதலுக்கு ஆளாகி போலிசு கைது செய்துவிடும் என்ற அச்சத்தால் வீடுகளைவிட்டு பலநூறு மக்கள் வெளியேறியுள்ளனர். சிலநூறு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். மேலும் தாக்கல் கடற்கறை ஓரத்தில் உள்ள மீனவர்கள் மற்றும் தலித் மக்கள் குடியுருப்பிகளில் மட்டுமல்லாது நகரம் முழுக்க போலிஸ் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
  2. தமிழகத்தில் மாணவர்கள் – இளைஞர்கள் – பொது மக்கள் இணைந்து ஒரு கோரிக்கைக்காக ஒற்றுமையுடன் ஒரு மாபெரும் போராட்டம் நடத்திள்ளனர். ஆறு நாட்கள் எவ்விதமான சிறு பிரச்சனை கூட இல்லாமல் போராட்டத்தை மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையிலும் நடத்தினர். பல ஆயிரக்கணக்கில் கூடியிருந்த மாணவர்களை, இளைஞர்களை, மக்களை 23.01.2017 அன்று காலை 6 மனியளவில் ஒரே ஒரு அறிவிப்பு அறிவித்து கொஞ்சம் கூட அவகாசம் கொடுக்காமல் உடனே வெளியேற வேண்டும் என அறிவித்தது தான் பிரச்சனைக்கு மூல முதல் காரணம் ஆகும்.
  3. மெரினாவில் துாங்கிக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் விடப்பட்ட அறிவிப்பை அவர்கள் உணர்ந்து கொள்வதற்கே குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்பட்டுள்ளது. காவல் துறை அறிவிப்பு வந்தவுடன் மாணவர் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர சட்டம் வரும்வரை அனுமதியுங்கள் என கோரிக்கை விடப்பட்டது. பின்னர் 4 மணி நேரமாவது கொடுங்கள், எங்கள் வழக்கறிஞர்கள் வந்ததும் பேசிவிட்டு கலைந்து செல்கிறோம் என்று கெஞ்சியுள்ளனர். குறைந்த பட்சம் 2 மணி நேரமாவது வேண்டும், எங்களுக்குள் ஆலோசனை நடத்திவிட்டு சொல்கிறோம் என மீண்டும் தாழ்மையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் கொஞ்சம் கூட அவகாசம் கொடுக்க மறுத்ததுடன் வலுக்கட்டாயமாக அவர்களை அப்புறப்படுத்த துவங்கியுள்ளனர் காவல் துறையினர். குழுந்தைகள், வயதானோர், கர்ப்பிணி பெண்கள் என்று கூட பார்க்காமல் காவல்துறை அவர்களை நெட்டித்தள்ளி அவர்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது.
  4. மெரினாவில் போராட்டக்காரர்களை பலாத்காரமாக அப்புறப்படுத்த துவங்கிய மறுகணமே இச்செய்தி சென்னை மாநகர் எங்கும் காட்டுத்தீயாய் பரவியது. போலிசின் இந்த தாக்குதலை கண்டித்து சுமார் 200 இடங்களில் மறியல் போராட்டம் நடந்திருக்கிறது. இது எதுவும் அவர்கள் சொல்வதுபோல் எந்த ’சமூக விரோதிகளும்’ திட்டமிட்டு நடத்தவில்லை. அந்த போராட்டங்கள் சுமார் இரவு 9 மணி வரை தொடர்ந்துள்ளது. தடியடி, கண்ணிர் புகை வீச்சு என சென்னை நகரமே போர்களம் போல அன்று காட்சியளித்தது.
  5. மெரினாவில் தடியடி நடத்தவில்லை என போலிஸார் தெரிவிக்கின்றனர். ஆனால் மெரினாவில் போராடியவர்களில் ஒரு பிரிவினர் கடலை நோக்கி நெட்டி தள்ளப்பட்டனர். இன்னொரு பிரிவினரோ போலீசின் தாக்குதலுக்குள்ளாகி கடற்கரையெங்கும் உள்ள ராதாகிருஷ்ணன் சாலை, அவ்வை சண்முகம் சாலை, டாக்டர் பெசண்ட் சாலை ஆகிய சாலைகள் வழியாக மீனவ மக்களின் குப்பங்களிலும், தலித் மக்கள் குடியிருப்புகளிலும் தஞ்சம் புகுந்ததை நேரில் பார்த்த மக்கள் கூறுகின்றனர். விவரங்களிலிருந்து மெரினாவில் தடியடி நடத்தவில்லை என போலிஸார் தெரிவிப்பது முழுவதும் பொய் என்பது தெரியவருகிறது.
  6. அவர்கள் மீதான தாக்குதலை கண்ட மீனவ மக்கள் மற்றும் தலித் மக்கள் அவர்களுக்கு உறைவிடம் வழங்கியதோடு தாக்குதல் தொடுக்கும் காவல்துறையை கண்டித்து மெரினாவிற்கு செல்லும் அனைத்து சாலையிலும் தன்னெழுச்சியான ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை பொறுக்காத காவல்துறை மிக கொடூரமாக மீனவ மற்றும் தலித் மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என பார்க்காமல் தாக்குதல் நடத்தி அவர்கள் உடைமைகளை சூறையாடியுள்ளனர். இதன் சுவட்டை அனைத்து மீனவ குடியிருப்புகளிலும் காண முடிந்தது. போலீஸின் பயமுறுத்துதலுக்கு அஞ்சாமல் மாணவர்களை பாதுகாத்தார்கள் என்ற ஒரே காரணத்தினால் வன்மத்தோடு காவல்துறை வன்முறையை நடத்தியுள்ளது.
  7. அரசிடம் கோரிக்கை வைத்து போராடிய மாணவர்களின் போராட்டத்தை முடிக்க வேண்டும் என அரசு கருதினால் அரசின் பிரதிநிதிகளான அதிகாரிகள், அமைச்சர்கள்தான் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும். அந்த பொறுப்பை தட்டி கழித்து காவல்துறையை அனுப்பியதுதான் இந்த வன்முறைக்கு அடிப்படையாக உள்ளது.
  8. நீதிபதி அரிப்பரந்தாமன், மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்பு ஆகியோர் மாணவர்களை சந்தித்து  விளக்கியது போல ஜல்லிக்கட்டிற்காக அரசு எடுத்த முயற்சிகளை அவசர சட்டம் மற்றும் நிரந்தர சட்டம் பற்றி தெரிவித்து சட்ட நுணுக்கம் தெரியாத இளைஞர்களுக்கு புரிய வைத்திருக்க வேண்டும். அதில் முடிவெடுக்கும் கால அவகாசத்தையும் அவர்களுக்கு கொடுத்திருக்க வேண்டும்.
  9. மெரினாவை நோக்கி யாரும் வந்துவிட கூடாது என்பதற்காக திட்டமிட்டே இரயில்களையும், பேருந்துகளையும் நிறுத்தியுள்ளனர். இதன் மூலம் மக்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு போவதற்கோ, அலுவலகத்திற்கு போவதற்கோ முடியாமல் போனது. இந்த அசாதரண சூழல்நிலையால் பள்ளிக்கூடங்கள் பாதியிலேயே மூடப்பட்டன. ஆனால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு சென்று அழைத்துவர முடியவில்லை. இன்னொருபுறம் பள்ளியை விட்டு வந்த 10 வயது மாணவர்களை கூட காவல் துறை கடுமையாக தாக்கியுள்ளது. இந்த வகையில் போராட்டக்காரர்களை காரணம் காட்டி காவல்துறை ஒட்டு மொத்த மாநகர மக்களின் இயல்பு வாழ்க்கையையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
  10. கர்பிணி பெண்கள், பள்ளி குழந்தைகள் என்றும் பாராமல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது. வயோதிகத்தால் முடங்கிபோயுள்ள வயதானவர்கள் மீதும் வன்முறையை உபயோகித்து உள்ளது. மக்கள் வந்தே மாதரம், தேசிய கொடியை உயர்த்திக்காட்டியவர்களை கூட வாயை உடைத்து, கொடியை கிழித்து, ஆண் துணை இல்லாமல், பெற்றோர்கள் துணை இல்லாமல் வீடுகளில் இருந்த பெண்களை அடித்து ஆடைகளை கிழித்து, ஆபாச வார்த்தைகளை பேசி ஆபாசமாக நடந்து கொண்டதின்மூலம் போலிசு எதிரி நாடு மீது தாக்குதல் நடத்துவதுபோல மக்கள் மீது நடத்தியுள்ளது.
  11. நிராயுத பாணியாக இருந்த தங்களை உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தாக்கி கடுமையான இழப்பு உள்ளாகியுள்ளதால் நிர்கதிக்குள்ளான மனநிலையிலும், எப்போதும் ஒரு அச்சத்துடனும் மக்கள் காணப்படுகின்றனர்.

IV. பரிந்துரைகள்

  1. மெரினாவை ஒட்டியுள்ள மீனவர் மற்றும் தலித் மக்கள் குடியிருப்புகள் மீதும் மாணவர்கள் மீதும் மேலும் 23.1.2017 அன்று தமிழ்நாடு முழுக்க காவல் துறையால் நடத்தப்பட்ட தாக்குதலை விசாரிக்க வழக்குரைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் கொண்ட விசாரணை குழு நீதிபதி ஒருவர் தலைமையில் அமைக்க வேண்டும்.
  1. தாக்குதலுக்குண்டான மக்கள் அரசு மருத்துவமனைக்கு சென்றால் அவர்கள் பெயரையும் வழக்கில் சேர்த்து கைதுசெய்து சிறையலடைக்கிறது காவல்துறை. எனவே பல நூற்றுக்கணக்கான மக்கள் அரசு மருத்துவமனைகளுக்கு செல்லாமல் உள்ளனர். எனவே அனைவருக்கும் தரமான சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து பாதிக்கப்பட்ட இடங்களிலும் மருத்துவ கேம்ப் அமைத்து மக்கள் அச்சமின்றி சிகிச்சை பெற உடனடியாக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அதன் தொடர்ச்சியாக உள்நோயாளியாக அனுமதிக்க வேண்டியவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யவேண்டும். அப்படி சிகிச்சைக்கு வருபவர்கள் மீது பொய்வழக்கு போடப்படாது, கைது செய்யப்படமாட்டார்கள் என உத்திரவாதம் அளிக்க வேண்டும்.
  1. மக்களை தொடர்ந்து மிரட்டியும், கைது செய்தும்   ,அவர்களை மருத்துவ சிகிச்சைகூட எடுக்கவிடாமல் காவல்துறை ஈடுபட்டு வருகின்றது. மேலும் தங்களது உடைமைகளை இழந்தவர்கள் நட்டைஈடு கேட்டு, புகார் அளிக்க முன்வருபவர்கள்மீது வழக்குபோட்டு கைது செய்கின்றது காவல்துறை.  எனவே நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நியமிக்கப்படும் சிறப்பு விசாரணைக் குழுவை உடனே அமைத்து மக்களுக்கான நிவாரணத்தையும் , பாதுகாப்பையும் வழங்கவேண்டும்.
  1. நடுக்குப்பம் பகுதியில் எரிந்துபோன மீன் மார்க்கெட்டை உடனடியாக அரசே கட்டித்தர வேண்டும்.
  1. எரிந்து போன ஆட்டோக்கள், உடைந்து போன ஆட்டோக்கள், எரிந்து போன பைக்குகள், வீணடிக்கப்பட்ட வீட்டு பொருட்களை கணக்கிட்டு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.
  1. நடுக்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் மீண்டும் மீன் வியாபாரம் செய்யும்படியாக உடனடியாக இடைக்கால நிவாரணமாக ரூ. 50,000 இழப்பீட்டு தொகை அளிக்க வேண்டும்.
  1. காயம்பட்டவர்களுக்கு ஐம்பதினாயிரம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு இரண்டு லட்ச ரூபாயும் பொருளாதார மற்றும் மருத்துவ செலவை ஈடுகட்டும் வகையில் உடனடியாக வழங்க வேண்டும்.
  1. கைது செய்யப்பட்ட அனைவரையும் பத்தாயிரம் ரூபாய் பிணைய தொகைக் கட்ட வேண்டும் போன்ற எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும்.
  1. மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பவும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும் இனி கைது நடவடிக்கையை முற்றிலும் கைவிட வேண்டும்.
  1. வாகனங்களை, குடியிருப்புகளில் புகுந்து உடைமைகளை சேதப்படுத்திய, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள், வீடுகளுக்கு தீ வைத்த , அத்துமீறி வீடுகளுக்குள் புகுந்து பெண்களை மானபங்கம்படுத்திய, குழந்தைகள்,பெண்கள், முதியவர்களை தாக்கிய  காவலர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். பணிஇடைநீக்கம் செய்யபடவேண்டும். இவர்களுக்கு தலைவராக உள்ள , ஊடகங்களில் செய்திகள் வெளியானபோதும் அதனை மறுத்து காவலர்களின் வன்முறையை நியாயப்படுத்திய ஆணையாளர் திரு ஜார்ஜ் அவர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யவேண்டும்.. அவர்களின் சம்பளத்திலிருந்து மக்களுக்கு  நட்டஈடு வழங்கவேண்டும்.
  1. கொள்ளை அடிக்க போறவன் கொள்ளை அடிக்கும் போது மனசுல ஈவு இரக்கம் வராம இருக்குறதுக்கு கஞ்சா என்ற போதை இலையை பீடியில் போட்டு புகைத்து விட்டு செல்வார்களாம் வன்முறை செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டு கஞ்சா அடித்தால் அவன் மனசு பூராவும் கஞ்சா போதை இறங்கும் வரை வன்முறை எண்னம் இருந்து கொண்டே இருக்குமாம் இந்த கஞ்சாவை இரண்டாம் வகை இந்திய விசம் என் கிறார்கள் மருத்துவர்கள் முதல் வகை என்பது ஊமத்தம் காய் அது சாப்பிட்டால் மன நிலை பாதிக்கப்படும் போலிஸ் செஞ்ச அராஜக செயல்களை பார்க்கும் போது போலிஸ் ஸ்டேசனில் வைத்து கஞ்சாவோ இல்லை ஊமந்தக்காயோ அவர்களுக்கு குடுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றே தெரிகிறது எல்லா போலிஸிக்கும் பிளட் டெஸ்டும் மென்டல் கெல்த் செக்கப்பும் செய்ய வேண்டும் அரசுக்கு பரிந்துரைக்க வேண்டுகிறேன்

    • சரி சரி இதற்கு பதில் சொல்லுங்கள் அமைதி வழி போராட்டம் என்று சொன்ன இடத்தில் எப்படி பெட்ரோல் குண்டுகள் வந்தது ? ஏன் காவல் நிலையத்தை தாக்கினார்கள் ? ஒரு வேலை அதையும் காவல்துறையின் மீதே பழி போட போகிறீர்களா ? காவல்துறை களைந்து போக சொன்ன போது சட்டத்தை மதிப்பவர்களாக இருந்தால் களைந்து போக வேண்டியது தானே ஏன் இன்னும் 2 மணி நேரம் அவகாசம் என்று சொல்லிக்கொண்டு நீடித்து கொண்டே போனார்கள் ? ஜல்லிக்கட்டு போராட்டம் என்று சொல்லி கொண்டு அந்த இடத்தில் பிரிவினைவாதம் பேச வேண்டிய அவசியம் என்ன ? ஏன் இந்தியா குடியரசு தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க வேண்டும் என்று சொன்னிர்கள் ? உங்களின் நோக்கம் ஜல்லிக்கட்டு என்பதை விட இந்தியா குடியரசு தினத்தை குலைக்க வேண்டும் என்ற சதி திட்டம் தான் காரணமா ? பின் லடேனுக்கும் மெரீனாவிற்கும் என்ன சம்பந்தம் உங்கள் வாதப்படி பின் லாடன் படம் இப்போது பயன்படுத்தவில்லை என்று வைத்து கொண்டாலும் முன்பு எதற்கு பயன்படுத்தினார்கள் ?

      உண்மையில் ‘உண்மை’ அறியும் குழுவாக இருந்தால் மேலே நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம் பதில் சொல்லாமல் ஓடி ஒளியாதீர்கள்

      • 1. காவல்துறை என்ன பெரிய மயிரா.. அவன் வரச் சொல்லி தான் மாணவர்கள் போராட்டத்துக்கு வந்தாங்களா ?. அவன் போகச் சொன்னா என்ன மயித்துக்கு களையனும் ?. போராட்டத்தின் இலக்கு வெற்றி பெற்றால் தான் போராட்டத்தில் இருந்து களையனும்.
        2. மணி மாமாகிட்ட வந்து நாங்க ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தான் குரல் கொடுப்போம்னு உறுதி மொழி எழுதிக் கொடுத்துட்டு போனாங்களா மாணவர்கள் ?. பிரிவினைவாதம் பேசினால் கூட்டத்தில் எல்லாரையும் அடிப்பிங்களா ஆபிசர் ?.
        அப்போ சு.சுவாமி கூடத் தான் தமிழர்களைப் பொறுக்கின்னு சொன்னான். அவன எங்க பாத்தாலும் அடிச்சுப் பிரிக்கனும்னு மக்களுக்கு வெறி இருக்கு. அதுக்காக பாஜக காரன் எல்லாரையும் விட்டுப் பிரிச்சிரலாமா ?. சொல்லுங்க ஆபிசர்.
        3. ஏன் கருப்புதினமாக அனுசரிக்கக் கூடாது?. குடி அரசின் அர்த்தத்தை மறுக்கும் அரசிற்கு எதிராக வேறு எப்படி எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். மனுக்கள் எல்லாம் பல ஆண்டுகளாகக் கொடுத்தாகிவிட்டது. கறுப்பு தினமாக அனுசரித்தால் உங்கள் வீட்டில் சோறு பொங்காதா ?.. விட்டா குடியரசு தினத்தன்னைக்கு எவன் வீட்டுலயாவது எழவு வுழுந்தாலும் அழுவக் கூடாது சிரிக்கனும்ன்னு சொல்லுவீங்க போலயே மோடி பக்தாள்ஸ் ?.
        4. பின் லேடன் படம் எப்பவும் பயன்படுத்திட்டுப் போறாங்க .. உங்க இந்து முன்னணி காராளோட வண்டிதானாம்ல அது ?.. இந்து முன்னணிய தடை பண்ணிடலாமா மணிமாமா ?.

  2. அமெரிக்க ஜனாதிபதி கென்னடியைக் கொன்றது அதன் உளவுத் துறை என்பதும் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு உதவியது அமெரிக்க அரசு இயந்திரம் என்பதை நண்பர் மணிகண்டன் போன்ற கருத்துகளை பதிவு செய்பவரின் கவனங்களுக்கு தெரியப் படுத்துகிறேன். சஞ்சை காந்தியின் இந்திரா காந்தியின் கொலையும் வேறெங்கோ இருந்து வந்தவர்களால் செய்யப் பட்டவையா? ராஜீவ் காந்தியின் கொலையின் மர்மமும் இன்னமும் நீடிக்கிறதே. யாரிடம் போய் யார் இவற்றைப் பேச முடியும்?

    மெரினா கடற்கரையில் 7 நாட்களாக அமைதியாக அறப் போராட்டத்தை உலகமே மெச்சும்படியாக நடத்திய மாணவர் மீது இப்படியான அபாண்டப் பழி சுமத்துவது இடம் பெற்ற வன்முறைகளை விட மோசமான வன்கொடுமையான குற்றச் சாட்டு என்பேன். பொறுக்கிகள் பொது மக்களிடம் மட்டும் அல்ல பொலீஸிலும் அரசியல்வாதிகளிடமும் உள்ளனர் என்ற பொதுவான கசப்பான உண்மையை நாம் ஏற்றே ஆகவேண்டும். இப்படியான பொலிஸையும் அரசியல்வாதிகளையும் சொந்த பந்தங்களாக ஏற்க வேண்டிய அவமானம் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறதே என்கிற வருத்தம்தான் எனக்கு மேலிடுகிறது.

    • ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எப்படி சார் பிரிவினை பேச்சுக்கள் வந்தது ? இந்தியா விரோத பேச்சுக்கள் வந்த பிறகு தானே எல்லோரும் விலகினோம், தீவிரவாத கூட்டங்கள், போலீஸ் தடியடி நடத்த வேண்டும் என்றே திட்டமிட்டு செயல்பட்டார்கள் அப்போது தானே போலீஸ் அராஜகம் என்று சொல்லி தமிழகத்தில் தீவிரவாதத்தை தூண்டலாம், அமைதியான தமிழகத்தில் வன்முறையை தூண்ட பார்ப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

      மெரினாவில் காவல்துறை தடியடி நடத்த தேசவிரோதிகளால் நிர்பந்திக்கபட்டார்கள் என்பது ஏன் குற்றசாட்டு மறுக்க முடியும்மா உங்களால் ?

      • ஓ.. நீங்களும் அங்க தான் இருந்தீங்களா மகாபிரபு ?..

        மெரினாவில் ஞாயிறு இரவு வீட்டிற்குச் சென்று விட்டு திங்கள் காலையில் மீண்டும் வந்து போராட்டத்தைத் தொடரவே அனைவரும் மெரினாவில் இருந்து கிளம்பினரே அன்றி, போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது என சிறு பிள்ளை கூட நம்பவில்லை. ஆனால் திங்கள் கிழமையிலிருந்து மக்கள் விரோத ஆளும்வர்க்கக் கும்பல்களும், அதன் அடிவருடிகளான மணி மாமா போன்ற அல்லக்கைகளும் மீண்டும் மீண்டும் ஒரே பொய்யையே சொல்லி வருகின்றன. ஞாயிறு அன்று அங்கு கூடியிருந்த அனைவரின் ஒரே முழக்கமாக , நிரந்தரச் சட்டம் ஒன்றே தீர்வு என்பதே .. இதை மோடிக்கு மாமா வேலை பார்க்கும் எந்தத் தரகர்களாலும் மறுக்க முடியாது. நீங்களும் திரும்பத் திரும்ப ஒரே பொய்யையே சொல்லி தப்பிக்கலாம்னு பாக்குறீங்க .. மக்கள் மத்தியில் போயி பேசிப் பாருங்க மோடி பக்தாள்களே,,,நாயடி இலட்சியம் .. செருப்படி நிச்சயம்..

        ///மெரினாவில் காவல்துறை தடியடி நடத்த தேசவிரோதிகளால் நிர்பந்திக்கபட்டார்கள் என்பது ஏன் குற்றசாட்டு மறுக்க முடியும்மா உங்களால் ?////

        நீங்கள் குற்றச்சாட்டு வைக்கிறீர்களா மணிமாமா ?.. ஏதோ புதுசா கண்டுபிடிச்சது போல பீத்திக்காதீங்க.. உங்க பீ…ஜேபி காரள்க இருந்து தெருல போகுற மோடிபக்தாள் வரைக்கும் இதத் தான் பேசிக்கிறாங்கோ ..

        அதுக்கு பொது விவாதத்துலயும், தனிப்பட்ட விவாதங்களையும் சாதாரண ஆட்களே செருப்படியான பதில்களைக் கொடுத்திருக்காங்க … ஆனாலும் பாருங்க .. பொய்யையே திரும்பத் திரும்ப சொன்னா அதை உண்மைன்னு மக்கள் நம்பிருவாங்கன்னு நீங்க கனவு காண்றீங்க மணி மாமா.. இது பெரியார் சுயமரியாதைய வளர்த்து விட்ட பூமி. அதனால தான் இங்க உங்க அவாள்.. அது தான் ஆர்.எஸ்.எஸ், கும்பலால எந்தக் கலவரத்தையும் மக்கள் கலவரமா மாத்த முடியல. நாங்கல்லாம்(பார்ப்பன மலம் கலக்காத தமிழ்நாட்டு இரத்தம் ஓடுற தமிழ்மக்கள்) ஒரு விசயம் செய்யிறதுக்கு முன்னாடி யோசிச்சு தாம்ப்பு செய்வோம். மண்டைக்காட்டுல உங்க க்ரூப்பு செஞ்ச வேலையையே இன்னும் ஞாபகம் வச்சிருக்கோம். காவிரில எங்க கழுத்த அறுத்ததையும் ஞாபகம் வச்சிருக்கோம். கவலப்படாத மாமா … வச்சி செய்வோம் ..

Leave a Reply to அனானியன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க