privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்தடுப்பூசி உதவியுடன் மக்கள் தொகையை குறைக்க விரும்பும் பில்கேட்ஸ்

தடுப்பூசி உதவியுடன் மக்கள் தொகையை குறைக்க விரும்பும் பில்கேட்ஸ்

-

நான்காவது தொழிற்புரட்சியும், தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசித் திட்டமும்- பாகம் 3

கேட்ஸ் ஃபவுண்டேஷன்உதவியா? நான்காவது தொழிற்புரட்சியின் வெற்றிக்காக உலகப் பெரும்பணக்காரர்கள் நடத்தும் மனிதத் தன்மையற்ற நிறவெறிப்படுகொலையா?

பில் மெலிண்டா கேட்ஸ் ஜோடி மூன்றாம் உலக நாடுகளை குறிவைத்து நடத்தும் அனைத்து மானுடவிரோத மனிதத்தன்மையற்ற குற்றங்களுக்குப் பின்னாலும் வெறும் வணிக நோக்கம் மட்டுமே இருப்பதாகத் தான் இதுவரை புரிந்து கொள்ளப்பட்டிருகிறது.  ஆனால் ஃபிலந்த்ரோபி (Philanthropy) என்ற பெயரில் மூன்றாம் உலக நாடுகளில் இவர்கள் நடத்தும் வெறியாட்டம் வணிக இலாபங்களைத் தாண்டிய நோக்கங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது வெள்ளிடை மலையாகத் தெரிய ஆரம்பித்துள்ளது.

4-வது தொழிற்புரட்சியின் மிகப் பெரிய விளைவோ வேலையின்மை.
4-வது தொழிற்புரட்சியின் மிகப் பெரிய விளைவோ வேலையின்மை.

தாராளமயம், தனியார்மயம், உலகமயத்தின் இறுதி இலக்கான ”உலக பேரரசை ஆளம் தகுதி யாருக்கு?” என்பது தான் 2017 ஜனவரியில் சுவிட்சர்லாண்ட் டாவோஸில் உலக பொருளாதார நிறுவனத்தின் நிகழ்ச்சிநிரல்.  உலகெங்கும் ஊழல்மயப்பட்ட, ஆளத்தகுதியிழந்த, எதிர்நிலை சக்தியாக மாறியுள்ள அரசியல் நிறுவனங்களின் மீது மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதாக பறைசாற்றும் டாவோஸ் பணக்காரர்கள், மாற்றுத் தலைமையை முன்வைக்கிறார்கள்.  ஏன் மாற்றுத் தலைமை தேவை? யார் அந்த மாற்று?

உலகின் மக்கள்தொகை கட்டுக்கடங்காமல் பெருகிக் கொண்டு போவதாக குறைபடும் உலக மீப்பெரு பணக்காரர்கள், இதனால் ஏற்படப் போகும் காலநிலை மாற்றத்தைப் பற்றி கவலைப் படுகிறார்கள்.  காலநிலை மாற்றத்தால் பூமி அழியாமல் பாதுகாக்க வேண்டுமென்றால் அதற்கு காரணமான நான்கு முக்கிய காரணிகளைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என TED மாநாட்டில் 2010-ல் பில்கேட்ஸ் கூறுகிறார்.  இதற்கு அவர் கண்டுபிடித்த வாய்ப்பாடு CO2 =P * S * E * C.  P என்றால் மக்கட்த் தொகை.

2010-இல் 700 கோடியாக இருந்தது 2050-இல் 900 கோடியாகும் என கணக்கிடுகிறார். S என்றால் ஒரு நபருக்கான சேவைகள். அதாவது உணவு, நீர், காற்று, இருப்பிடம், போக்குவரத்து, கல்வி, மருத்துவம், இணையம் போன்றவை அனைத்தும். E என்றால் ஒருசேவைக்கு தேவைப்படும் ஆற்றல்/ மின்சாரம்.  C என்றால் மின்சாரம் தயாரிக்கும் போது வெளிப்படும் கரியமில வாயு.  பூமியின் காலநிலை மாற்றத்திற்கு காரணமான கரியமில வாயுவை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வர வேண்டுமென்றால் சேவைகளையோ, மின்சாரத்தையோ குறைப்பதன் வழி செய்ய முடியாது.  ஏனென்றால் நான்காவது தொழிற்புரட்சியை  உலக மீப்பெரு பணக்காரர்கள் கடந்த ஆண்டே அறிவித்து விட்டார்கள். நான்காவது தொழிற்புரட்சியின் அடிப்படையே மின்சாரம் தான். செயற்கை நுண்ணறிவு (AI); ஐஓடி (IoT) எனப்படும் டிஜிட்டல் உலகம்-பருப்பொருள் உலகம்- உயிரியல் உலகம் ஆகியவற்றின் இணையம்; டிசைனர் பீயிங்ஸ் (Designer beings) எனப்படும் ஆய்வகங்களில் வடிவமைக்கப்பட்ட மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள், நுண்கிருமிகள்; 3டி பிரிண்டிங்; ரோபோர்டிக்ஸ் ஆகியவை தான் நான்காவது தொழிற்புரட்சியின் முக்கியமான கூறுகள். இவற்றை மின்சாரமில்லாமல் நிறைவேற்ற முடியாது.

கூடவே 4-வது தொழிற்புரட்சியின் மிகப் பெரிய விளைவோ வேலையின்மை. அனைத்து துறைகளிலும் ஆட்டோமேஷன் கொண்டுவரப்பட்டால் உழைக்க மனிதர்கள் தேவையில்லை.  இயந்திரங்களே உற்பத்தியை பார்த்துக் கொள்ளும். இதில் கீழ்மட்ட வேலைகளுக்கு மட்டும் தான் ஆப்பு என நடுத்தர வர்க்கம் நினைக்கலாம். ஏனென்றால் இரண்டாவது தொழிற்புரட்சி என முதலாளித்துவ உலகம் கொண்டாடும் 1910-இல் உற்பத்தியில் கன்வேயர் பெல்ட் புகுத்திய கார் தொழிற்சாலைகள், கூடவே ஊட்டி வளர்க்கப்பட்ட நடுத்தரவர்க்கத்தையும் உருவாக்கியது. அதைப் போலன்றி 4 –வது தொழிற்புரட்சி விவசாயிகளையும், தொழிலாளர்களையும், முறைசாராத் தொழிலாளர்களையும், முதலாளிகளின் ஒரு பகுதியனரை மட்டுமன்றி, டாக்டர், வக்கீல், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஐடி தொழிலாளர்கள், எழுத்தாளர்கள், பொறியியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள்  என அனைவரின் வேலைகளையும் பறித்து ஏதிலியாக்குமென நான்காவது தொழிற்புரட்சியின் தந்தை கிளாஸ் ஷ்வாப் எச்ச்சரிக்கிறார்.

காலநிலை மாற்றத்தால் பூமி அழியாமல் பாதுகாக்க நான்கு முக்கிய காரணிகளைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று பில்கேட்ஸ் முன் வைக்கும் வாய்ப்பாடு CO2 =P * S * E * C. P
காலநிலை மாற்றத்தால் பூமி அழியாமல் பாதுகாக்க நான்கு முக்கிய காரணிகளைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று பில்கேட்ஸ் முன் வைக்கும் வாய்ப்பாடு CO2 =P * S * E * C. P

உலகின் வெறும் 5% பேருக்கு மட்டும் தான் வேலை வாய்ப்பு. ஏதிலிகளாக மாறப்போகும் மிச்ச 95% பேருக்கு மாற்று வேலை வாய்ப்பை வழங்க 4-வது தொழிற்புரட்சியின் சிற்பிகள் தயாராக இல்லை.  மாற்றாக எதை முன்வைக்கிறார்கள் தெரியுமா? அடிப்படை வருமானம் (Basic Income) எனப்படும் நூறுநாள் வேலைத்திட்டம்.  வேலையிழந்தவர்கள் புரட்சி செய்ய வாய்ப்பிருகிறதல்லவா? அதைத் தடுப்பதற்குத் தான் ஆதார் மற்றும் ட்ரோன் மூலம் கண்காணிப்பு.  ஆனால் அது போதாது. இங்கு தான் பில் கேட்சின் சூத்திரத்திற்கு வேலை.

பருவநிலை மாற்றத்திற்கும் கரியமில வாயு வெளியேற்றத்துக்குமான உறவில் முக்கிய பங்கு வகிக்கும் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பருவநிலை மாற்றத்திலிருந்து மட்டுமல்ல, ஏகபோகங்களின் மீப்பெரு வளர்ச்சியை தொடங்கி வைத்திருக்கும் 4-வது தொழிற்புரட்சியின் முக்கிய சவாலான வேலையற்ற 95% உலக மக்களை எப்படி ஒழித்துக் கட்டுவது என்பதற்கான உத்தியும் ஒளிந்துள்ளது.   உலக மக்கட்தொகையைக் 10-15% ஆகக் குறைக்க சிறந்த வழி தடுப்பூசிகள், இனப்பெருக்கக் கட்டுப்பாடு மற்றும் சுகாதார பாதுகாப்பு என்கிறார் பில்கேட்ஸ்.  மூன்று வழியில் இதை செய்ய முடியும்.

(அ) எயிட்ஸ், எபோலா போன்ற சிதைவு நோய்க்கிருமிகளை ஒவ்வொரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிராந்தியங்களிலும் பரவச் செய்வது; (ஆ) கருத்தரிப்பு தடுப்பூசிகளை மூன்றாமுலக நாடுகளின் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போடுவதன் மூலம் அடுத்த ஐந்தாண்டுகளில் குழந்தைபெறும் வயதையெட்டும் ஒவ்வொரு மனிதனையும் மலடாக்குவது; (இ) டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்ற பெரும் பரவலாக தொற்றும் நோய்க்கிருமிகளை வெடித்துப் பரவ செய்வது போன்ற முறைகள் வழி உலகின் மக்கட்த் தொகையை வெறும் 10-15 % ஆகக் குறைக்கலாம்.  இது மாபெரும் நிறவெறிப் படுகொலையல்லவா?

இத்திட்டத்தை நம் நாட்டு அரசையே செய்ய வைக்க முடியுமா? ஆம். அதற்காக உருவாக்கப்பட்டது தான் கவி வாக்ஸின் அலையன்ஸ்.  இதில் ஐநாவின் உலக சுகாதார நிறுவனம், யூனிசெஃப், உலகவங்கி, ஐஎம்எஃப், மற்றும் ஏகாதிபத்திய மற்றும் மூன்றாம் உலக நாடுகளின் அரசுகள் ஆகியவை கேட்ஸ் ஜோடியின் தலைமையில் செயல்படுகின்றன. நமது அரசு இவர்களின் கைப்பாவை. ஏகாதிபத்தியத்தின் அடுத்த கட்ட நகர்விற்காக, நான்காவது தொழிற்புரட்சியின் சிற்பிகள், கவி வாக்ஸின் அலையன்ஸ் போலவே ஒவ்வொரு துறையிலும் உலகெங்கும் உள்ள நாடுகளை கட்டுப்படுத்த அரசு-தனியார் கூட்டு என்ற போர்வையில் ஆட்சிக் கூட்டணிகளை (governance alliance) உருவாக்கியுள்ளது. இது ஒவ்வொரு இறையாண்மையுள்ள நாட்டின் அரசையும் தனது கைப்பாவையாக்கி தனது போர்தந்திரத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இதே கேட்ஸ் ஜோடி தலைமையில் இயங்கும் பெட்டர் தான் காஷ் அலயன்ஸ் (better than cash alliance) எனும் கூட்டணியின் பங்களிப்பு பத்திரிகைகளில் அம்பலப்பட்டது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம்.  இவர்களைத் தான் இன்று அரசியல் மாற்றாக இவர்கள் முன்னிறுத்துகிறார்கள். ஆனால் உண்மையில் இந்தக் கூட்டணிகளெல்லாம் வெறும் தரகர்கள் தான். இவர்கள் பின்னாலிருந்து ஆட்டுவிப்பது விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசில உலகப் பெரும் பணக்காரர்களும், ஒட்டுமொத்த உலகையும் தனியே கபளீகரம் செய்யத்துடிக்கும் அவர்களின் பேராசை பிடித்த போர்தந்திரத் திட்டங்களும் தான்.

தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி இவர்களின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் பங்களிப்பை செலுத்தும். 2009-இல் கனடாவில் பன்றிக் காய்ச்சல் ஏற்பட்ட போது டெட்டனஸ் தடுப்பூசி பரந்த அளவில் போடப்பட்டதால் 65% பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.   தமிழ்நாட்டில் தற்போது பன்றிக் காய்ச்சல் பரவியுள்ள நேரத்தில் பாரிய அளவிலான தடுப்பூசி இயக்கம், பெரும்பான்மையான குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை பாதிக்கும்.  இதனால் பன்றிக்காய்ச்சல் தொற்று அதிகமாக ஏற்பட்டு மரண எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அது போல இதுவரை சந்தைப்படுத்தப்படாத தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசியில் hCG போன்ற கருத்தரிப்பு தடுப்பு ஹார்மோன்கள் கலக்கப்படவில்லை என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டியுள்ளது.  ஏனென்றால் கென்யாவிலும் இந்தியாவிலும் உலகின் பல்வேறு ஏழை நாடுகளிலும் கேட்ஸ்-கவி கும்பல் இதற்குமுன் இழைத்திருக்கும் மானுட விரோத மனிதத் தன்மையற்ற குற்றங்களின் அனுபவங்கள் நம் முன்னே நிற்கின்றன.

01-03-2017 அன்று பெற்றோரின் அனுமதியின்றி ரூபெல்லா தடுப்பூசியைப் போடப் போவதாக அறிவித்துள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர். இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தை காலடியில் போட்டு நசுக்கி, 15 வயதிற்குள்ளான பிஞ்சுக் குழந்தைகளுக்கு எதிராக ஒரு மீப்பெரு குற்றத்தை செய்யும் இதே அரசு, நெடுவாசலுக்கு ஆதரவாகப் போராடச் செல்லும் கல்லூரி மாணவர்கள் பெற்றோரின் அனுமதியைப் பெற்று தான் வரவேண்டும் என்ற வினோத சட்டத்தைக் கூறி போலீசை வைத்து விரட்டியடிக்கிறது.  பாங்க் வாசல், வாடி வாசல், நெடுவாசல், பள்ளிவாசல் எனத் தனித்தனியான போராட்டங்கள் தீர்வைத் தராது. தமிழினத்தை அழிக்கத் துடிக்கும் இக்குற்றக்கும்பலை தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடிக்காவிட்டால் நம் தமிழினமே அழிந்து போகும் அபாயம் தொலைதூரத்திலில்லை.

– முற்றும்.

கட்டுரை ஆக்கம்: ஆழிமதி

நான்காவது தொழிற்புரட்சியும், தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசித் திட்டமும்- பாகம் 1
நான்காவது தொழிற்புரட்சியும், தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசித் திட்டமும்- பாகம் 2

செய்தி ஆதாரம்:
ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொண்ட பள்ளி மாணவி பலி
தடுப்பூசியும் அதன் பின் இருக்கும் அரசியலும்…!
Gates Foundation may fund Pune institute
Bill & Melinda Gates Foundation Vaccine Empire on Trial in India
Calls in India for legal action against US charity
“Mass Sterilization”: Kenyan Doctors Find Anti-fertility Agent in UN Tetanus Vaccine
‘Can’t penalise US NGO for violating drug trial norms’
GAVI – The Vaccine Alliance
Gates Foundation continues to support national health mission, no links terminated: Govt
‘Conflict of interest’: NHM panel raises questions on Bill Gates Foundation
Nigeria: WHO Begins Vaccination of 4.7 Million Children in North-East